Search This Blog

7.11.13

ஏன் இந்த காட்டுமிராண்டிக் கோலம்?



மனிதன் மற்ற மிருகங்களைவிட உயர்ந்தவன் என்பது அவனது பகுத்தறிவின் ஆற்றலால் தானே! ஆம், அந்த ஆறாவது அறிவுதான் அவனை உயர்த்தியது மாத்திரம் அல்லாது அவன் வாழும் உலகத்தை - சமூகத்தை - நாளும் முன்னேற்றப் பாதையில் வேக நடை போட வைத்தது!

மேலும், வில்லும், வாளும் பிடித்த மனிதன் தனது அறிவு ஆற்றலால், சிந்தனைத் திறத்தால், இன்று அவன் கண்டு நடுங்கிய கோள்களுக்குப் பயணம் செய்து, அங்கு மனிதன் வாழும் வசதி உள்ளதா என்று தகவல் தர, விண்கலத்தை ஏவுகிறான்!

20 கோடி மைல் தூரம் பயணித்து, தகவல் அனுப்ப அந்த ராக்கெட் விண்வெளிப் பயணத்தை நிகழ்த்திய செய்தி - அதுவும் செவ்வாய்க் கோளுக்கு, செவ்வாய் நாளே அனுப்பும் வெற்றிகர விஞ்ஞான சாதனை - நம்நாட்டு அறிவியலாரின் அதிஅற்புத பாராட்டத்தகுந்ததல்லவா?

இது ஒருபுறம்; மற்றொரு புறம் அந்த அறிவியல் வளர்ச்சி எங்களை எவ்வகையிலும் எங்கள் காட்டு மிராண்டி எண்ணம் - பழக்க வழக்கத்திலிருந்து மாற்றவே மாற்றாது; மாறவே மாட்டோம் என்று பிரகடனப்படுத்துவது போல ஒரு கொடுமையான நிகழ்வும், அறியாமை நோயினால் - பக்தி போதையினால் நிகழ்ந்த இந்தப் படத்தைப் பாருங்கள்:

கோவர்தன் பூஜை என்ற பெயரால் பசுமாடு கள் வளர்க்கப்படுகின்றன. அதற்கு பூஜை, புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன; அதைவிடக் கொடுமை கீழே படுத்துள்ள ஆறறிவு படைத்த மனிதர்கள்மீது அய்ந்தறிவுள்ள பசு மாடு மிதித் தால் புண்ணியம் என்று கருதி தரையில் படுத்து, மாடு நடந்துசெல்லும் மடத்தனம் அரங்கேறி யுள்ளது!

கோமாதா - குலமாதா என்று கூறுகின்றனர்; அதுதான் ஹிந்துத்துவாவில் முக்கியம் என்போரி டம், விவேகானந்தர் கேட்டார்: அந்த மாதா இறந்தால், அதைத் தூக்கிப் போய் குழிவெட்டிப் புதைக்க மட்டும் ஏனப்பா, நீ இழிந்த ஜாதி என்று ஆக்கியுள்ள மற்றொரு சகோதரனைத் தேடு கிறாய்? இதுதான் நீ உன் மாதாவுக்குச் செய்யும் மரியாதையா? என்று ஒரு போடு போட்டார்; கப்-சிப் தான் பதில்!

முன்பு ஒருமுறை நண்பர் ஈ.வெ.கி.சம்பத்தும் (தி.மு.க.), கோபி கே.எஸ்.இராமசாமி (காங்கிரஸ்) எம்.பி.,க்கள் சோவியத் ரஷ்யா சென்று பல தொடக்கப் பள்ளிகளைப் பார்த்த போது, ஒரு வகுப்பில் உள்ள ரஷ்ய மாணவி என்ற இளம்பெண் (குழந்தை) நீங்கள் உங்கள் நாட்டில் பசுமாட்டை கடவுளாகக் கும்பிடுகிறீர்களாமே - ஒரு புத்தகத்தில் - நூலகத்தில் படித்தேன்; அது உண்மையா? அது ஏன்? என்று கேட்டதாம்! உடனே சம்பத், இவர் பதில் சொல் வார் என்று கே.எஸ்.இராமசாமி எம்.பி. யைக் கைகாட்டி விட்டாராம்!
அவர், ஆம், அது பால் தருகிறதல் லவா? அதனால் கடவுளாகக் கும்பிடு கிறோம் என்று பதில் கூறி, வாயடைக்க முயன்றாராம்!

அக்குழந்தை விடவில்லை, அப்படியானால், எருமை மாடு அதைவிட அதிகம் பால் கொடுக் கிறதே - அதை ஏன் கும்பிடவில்லை? என்று கேட்டு திணற அடித்துவிட்டதாம்!

இதை பெரியாரிடம், சம்பத் தனது ரஷ்யப் பயண அனுபவம்பற்றிக் கூறியபோது குறிப்பிட்டார்.

மாட்டை மிதிக்கச் செய்வது மட்டுமா? மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், நெய் எல்லாவற்றையும் கலந்து பஞ்சகவ்வியம் என்று கலக்கிப் பார்ப்பான் கொடுத்தால், வாங்கிக் குடித்து மோட்சத்திற்கு ரிசர்வேஷன் தேடு கிறார்கள்.
இவர்களை காட்டுமிராண்டிகள் என்று தந்தை பெரியார் கூறியதில் தவறு இல்லை அல்லவா!

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி - தந்தை பெரியார் மொழி

 
------------------------- ஊசிமிளகாய் --6-11-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

44 comments:

தமிழ் ஓவியா said...


மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


நான் பெரியார் அவர்களை நன்கு அறிவேன்; அவர் கொள்கைகளைப் பின்பற்றி வருபவன் நார்வே நாட்டு அறிஞர் பெருமிதம்


நார்வே, நவ.6- நார்வே நாட்டுக்காரர் தமிழ் நாட்டுக்காரர் அறவழி என்று அறிந்தவுடன், ஓ, நீங்கள் பெரியார் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்று கேட்டு அசத்தினார் நார்வே நாட்டுப் பேராசிரியர்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அறவழி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பிய கடிதமும், தகவல்களும் வருமாறு: வணக்கம், என் பெயர் அறவழி. நான் நார்வே நாட்டின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றுகிறேன். பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலக பணி நிமித்தமாக நான் முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை; மறு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற போது பயிற்சியாளர் அர்லிட் நொர்டெ பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு என்னைப்பற்றி அனைவரிடமும் அறிமுகப் படுத்தும்படி கூறினார். அதில் நான் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றதும் அவர் வியப்படைந்தார். அவரது அடுத்த கேள்வி நீங்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். மேலும் அவர், தந்தை பெரியாரின் கருத்து களை பல காலங்களாக படித்து வருபவர் என் றும், அவரது கருத்து களை தவறாது பின் பற்றிவருவதாகவும், கூறினார்.



அதன் பிறகு நானும், அவரும் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் பற்றி பல கருத்துகளை பரிமாறிக் கொண் டோம். ஆனால் அவர் என்னைவிட பெரியா ரைப்பற்றி அதிகம் அறிந்துள்ளார். கருத் தரங்கம் முடிந்ததும் அவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் பேசியது மற்றும் தந்தை பெரியார் பற் றிய அர்லிட் நொர் டெவின் கருத்துகளை பெரியார் பகுத்தறிவு என்ற எனது சமூக இணைய தளத்தில் பதியவிட்டிருந்தேன். அது உடனடியாக பல அயல்நாட்டு நண்பர் களிடம் சென்றடைந் தது. உடனடியாக இதை செய்தியாக்கி நார்வே உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு தந்தை பெரி யார் மற்றும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நிழற்படத்துடன் அனுப்பி வைத்தேன்.

அதை அந்த பத்திரிகை அப்படியே மறுநாள் வெளியிட்டிருந்தது. தந்தை பெரியாரின் கருத்துகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சமுதாயப்பணிகள் கடல் கடந்து அய் ரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதை தமிழக மக்களுக்குத் தெரி விக்கும் விதமாக இந்தச் செய்தியை தெரிவிப்ப தில் பெருமையடைகி றேன். - இவ்வாறு அறவழி கிருபானந்தன் (பொறி யாளர் ரெனிஸெர்ச்ன் எஸ்லேவ் இரிக்ச்சன் செண்டர் நார்வே) அவர்கள் வெளியிட் டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின் றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...

படேலின் முதுகுக்குப்பின் ஒளியும் மோடி!


படேலை, நரேந்திர மோடி கையில் எடுத்துக்கொண் டாலும், எடுத்துக்கொண்டார்; எட்டுத் திசையிலிருந்தும் மோடியை நோக்கி மொத்துகள் மொத்தமாக வந்துகொண் டிருக்கின்றன.

காந்தியார் அவர்களின் பேரன் ராஜ்மோகன் காந்தி உள்பட கணைகள் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ்மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை, மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்பவத்தை கண்டும் மிகவும் வருந்தியிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங்கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல் பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையைக் கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட்டமைப்பதில் வல்லவர். மற்றவர்களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதேபோன்று மோடியும் செயல்பட்டால், அது பாராட் டுக்குரியதே! என்று காந்தியார் அவர்களின் பேரன் சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

தமது அமைப்பின் கொள்கைகளை, கோட்பாடுகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியாது என்பதை சந்தேகத் துக்கு அப்பாற்பட்ட முறையில் உணர்ந்துவிட்ட நிலையில், 450 அடி உயர வல்லபாய் படேலின் சிலையின் பக்கவாட்டில் நின்று கொண்டு தம் தோற்றப் பொலிவை (போஸ்) கொடுக்கிறார் என்பதுதான் உண்மை.

குஜராத் மாநிலத்துக்காரர் படேல் என்பதுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படுமேயானால், படேலுக்கும் தலைவரான காந்தியார் அவர்களும் அதே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே - அவருக்கல்லவா 450 அடி உயரத்தில் சிலையை நிறுவிட முன்வரவேண்டும்!

காந்தியாரிடம் நெருங்கினால் பாமர மக்கள் மத்தியி லிருந்தும், சுனாமி புறப்பட்டுவிடுமே! அட பாவிகளா! காந்தியாரையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு, அவருக்குச் சிலை வேறா நிறுவுகிறீர்கள்? என்று பற்களை நரநரவென்று கடித்துக்கொண்டு சம்ஹாரம் செய்யப் புறப்பட்டுவிட மாட்டார்களா?

படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது டில்லியில் முசுலிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையை சரியாகக் கையாளாமல் இருந்துவிட்டார் என்று கூறி காந்தியார் அவர்களே உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்; அதனை வைத்துக்கொண்டு படேல் முசுலிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவா குணம் - கொண்டவர் என்ற அனுதாபம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இருக்கக்கூடும்.

அதேநேரத்தில், காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தடை செய்து, ஆணை பிறப்பித்தவர் உள்துறை அமைச்சரான படேல் என்பதை மறந்துவிட்டார்களா அல்லது மறைக்கிறார்களா?

தமிழ் ஓவியா said...

அந்த ஆணையில் படேல் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்கள் நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. விரும்பத்தகாத அதே சமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. சட்ட விரோத ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித் துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுமாறும், ஆயுதங்களைச் சேகரிக்குமாறும், அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும், காவல் துறை, இராணுவம் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட மறுக்கு மாறும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் ரகசியமாக உள்ளன என்று தடை அறிக்கையில் காரணங் கள் சொல்லப்பட்டனவே - தடை அறிக்கையை வெளியிட் டவர் உள்துறை அமைச்சர் படேல் அல்லவா!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் எழுதியுள்ள கடிதமும் மிக முக்கியமானது.

இந்துத்துவாவாதிகளின் பேச்சுகள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவைகளாக உள்ளன. இந்துக்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அமைப்பாக்குவதற் காகவும் இப்படி விஷத்தைப் பரப்பவேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்கவேண்டியதாயிற்று. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

- இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் படேல் எழுதிய கடிதம் ஆகும் (செப்டம்பர் 11-1948).

படேலுக்கு 450 அடி உயரத்தில், 2500 கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்ப இருக்கும் - ஆர்.எஸ்.எஸின் பிரத மருக்கான வேட்பாளர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்?

இந்தக் கேள்வியை எழுப்பினால், அந்த 450 அடி உயர சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதைத் தவிர மோடிக்கு வேறு வழியேயில்லை.

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் ஒருவர் மீது ஒருவர் 'சாணி'யை அடிக்கும் விழாவாம்!

சத்தியமங்கலம், நவ. 6-ஈரோடு மாவட்டம், கர்நாடகா மாநில எல்லையையொட்டி சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது தாளவாடி. இதன் அருகே உள்ள கும்டாபுரத்தில் பீரேஸ்வரர் கோவில் உள்ளது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் சாணியடி திருவிழா நடைபெறுமாம்.

இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை உருண் டையாக பிடித்து வீசுவார்களாம்.

இந்தக் கோவிலில் உள்ள சிவலிங் கத்தை யாரோ ஒருவர் எடுத்து சாணம் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்து விட்டாராம். ஒரு சமயம் அந்த குப்பை மேட்டில் மாட்டு வண்டி ஒன்று செல் லும்போது ரத்தம் பீறிட்டதாம். இதைக் கண்ட மக்கள் என்னமோ... ஏதோ... என்று தோண்டி பார்த்த போது கோவிலில் காணாமல்போன சிவலிங்கம் இருப்பதை கண்டன ராம்.

அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சாமி, தீபாவளி முடிந்து 4 ஆவது நாள் சாணத்தில் இருந்து மீண்டெழுந்திருக்கிறேன். இதன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என்று கூறிற்றாம்.

இதையடுத்து இந்த பீரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவ ளிக்கு அடுத்த 4 ஆவது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெற்று வருகிறதாம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று இந்த சாணியடி விழா கொண் டாடப்பட்டதாம்.

சாமிக்கு காலை சிறப்பு பூஜை யுடன் விழா தொடங்கியதாம். முன் னதாக கும்டாபுரம் கிராம மக்கள் அனைத்து பசு மாட்டு சாணங் களைச் சேகரித்து கோவில் பின்புற மாக குவித்து வைத்திருந்தனராம்.

தொடர்ந்து அங்குள்ள ஊர்க் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்ததாம்.

இதைத் தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பீரேஸ்வர ருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததாம். கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும் சட்டை அணியாமல் கோவிலுக்கு வந்தனராம்.

பிறகு அங்கு குவித்து வைக்கப் பட்டிருந்த சாணத்தை அவர்கள் உருண்டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்தனர்.

ஒருவர் மீது ஒருவர் சாணியை அடித்த போது கூடி இருந்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள் கைதட்டி ரசித்து பார்த்தனராம்.

சாணியடி நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஊர்க் குளத்தில் குளித் தனராம். பிறகு அவர்கள் வரிசையாக நின்று பீரேஸ்வரரை வழிபட்டனராம்.

இந்த சாணியடி திருவிழாவை ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஏராளமான பக்தர்களும், மேலும் கர்நாடக மாநில பக்தர்களும் நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தனராம்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவு பொருந்துகிறது பார்த்தீர்களா...!

தமிழ் ஓவியா said...


திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!


ஜாதி-மதவாதங்களுக்குச் சம்மட்டி அடிகொடுக்க
திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு
விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, நவ. 6- ஜாதி - மதவாதங்களை எதிர்த்து வரும் 9ஆம் தேதி திருச்சியில் திரா விடர் கழகத்தின் சார்பில் கூட் டம் மற்றும் திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கு அனைவரும் வருகை தருமாரு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப் புக் கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் சார் பில் வரும் 9-11-2013 அன்று திருச் சிராப்பள்ளியில் 'திராவிடர் எழுச்சி மாநாடு' ஒருங்கிணைக் கப்படுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் தலைமையில் நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் ஜாதிய வாதமும், மதவாதமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. நிறைவாக, திருச்சி உழவர் சந்தை மைதா னத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

தமி ழக அளவிலும், அகில இந்திய அளவிலும் ஜாதியவாதமும் மத வாதமும் இருபெரும் ஆபத்து களாகச் சூழ்ந்துள்ளன. அப்பாவி உழைக்கும் மக் களுக்கிடையில் ஜாதிவெறியை யும் மதவெறியையும் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஜாதியவாதிகளும், மதவாதிகளும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவரிடை யேயும் இந்த நஞ்சைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய சூழ் நிலையில்தான் திராவிடர் கழ கம் மிகுந்த பொறுப்புணர் வோடு உடனடியாகக் களமிறங் கிச் சிறப்பாகச் செயலாற்றி வரு கிறது. தருமபுரியில் சேரிகளைச் சூறையாடிக் கொளுத்திய ஜாதி வெறியர்களைக் கண்டிக்கும் வகையில் உடனடியாக ஜாதி ஒழிப்பு மாநாட்டை தருமபுரி யில் திராவிடர் கழகம் நடத்தி யது. தற்போது நரேந்திரமோடி யின், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் ஸின் சமூக விரோத அரசிய லைக் கண்டிக்கவும், எதிர்க்கவும் ஏதுவாக, திருச்சிராப்பள்ளியில் திராவிடர் எழுச்சி மாநாட்டை ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார். இது இன்றைய சூழலில் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். திராவிடர் எழுச்சி மாநாடு என்பது தலித்துகள், பழங்குடி யினர் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்புக்கான மாநாடா கும். இந்த மாநாடு ஜாதி-மத வெறியர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பதாக அமைய வேண் டும். ஆகவே, இந்த மாநாட்டை முழுமையாக வெற்றி பெறச் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று யாவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

தமிழ் ஓவியா said...


மேரி கியூரி


விஞ்ஞானி மேரிகியூரி பிறந்த நாள் இந்நாள் (1867) நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரிய வர். இயற்பியல் (1903). வேதியியல் (1911) ஆகிய இரு துறைகளிலும் இரட்டை நோபெல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல; பாரிஸ் பல் கலைக் கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றிய முதல் பெண் என்ற மகு டமும் - இவருக்குண்டு. போலோனியம், ரேடியம் என்ற தனிமங்களைக் கண்டுபிடித்தவர்; கதிரி யக்கக் கோட்பாட்டை உரு வாக்கியவரும் இவரே!

விஞ்ஞானி மேரிகியூரி பிறந்த நாள் இந்நாள் (1867) நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரிய வர். இயற்பியல் (1903). வேதியியல் (1911) ஆகிய இரு துறைகளிலும் இரட்டை நோபெல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல; பாரிஸ் பல் கலைக் கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றிய முதல் பெண் என்ற மகு டமும் - இவருக்குண்டு.
போலோனியம், ரேடியம் என்ற தனிமங்களைக் கண்டுபிடித்தவர்; கதிரி யக்கக் கோட்பாட்டை உரு வாக்கியவரும் இவரே!

1914 - முதலாம் உல கப்போரின்போது ஆம்பு லன்ஸ் வாகனங்களில் எக்ஸ்கதிர் கருவிகளை பொருத்தி உயிர்களைக் காத்தார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் போலந்தில் பிறந்தவர் இவர். அவர் கண்டுபிடித்த அந்த ரேடி யம் கதிர் வீச்சின் காரண மாக ஏற்பட்ட ரத்த சோகை காரணமாக அதற்கே பலியான தியாகியானார்! (1934).

அவரைப்பற்றிய ஒரு முக்கிய தகவல்!

ரேடியம் கண்டுபிடித்த அம்மையாரிடம் அமெ ரிக்கப் பத்திரிகை ஆசிரியை ஒருவர் உங்களுக்கு வேண் டிய ஒன்றைக் கேட்கச் சொன்னால் எதைக் கேட் பீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கியூரி சொன்ன பதில்: எனக்கு ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது. ஆய்வுக்காக; ஆனால் அதன் விலையோ ஒரு லட்சம் டாலர் ஆயிற்றே! என்று பதில் சொன்னார் கியூரி. அந்தப் பத்திரிக்கை யாளரின் பண்பாடும், தொண்டறச் சிந்தனையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அந்தப் பத்திரிகையா ளர் அமெரிக்காவில் குழு ஒன்றை உருவாக்கி, பொது மக்களிடம் நிதி திரட்டி ஒரு கிராம் ரேடியத்தையும், வாங்கி மேரியை அமெரிக் காவுக்கே அழைத்து அமெ ரிக்கக் குடியரசுத் தலை வரின் கையாலேயே கொடுக்கவும் செய்தார்.

ரேடியத்தை வழங்கும் ஆவணத்தைப் பார்க்கும் பொழுது அது தன் பெய ருக்கு எழுதப்பட்டு இருந் ததைக் கவனித்து, அதைத் தம் ஆய்வு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி எழுதித் தரும்படிக் கூறினாரே பார்க் கலாம். தனக்குப் பிறகு அதற்கு தன் சந்ததியினர் உரிமை கொண்டாடி விடக் கூடாதல்லவா என்றார்.

இந்த நேரத்தில் ஒன்றை நினையுங்கள். தமக்காக தந்தை பெரியார் அளித்த சொத்துக்களை தனக்காக வைத்துக் கொள்ளாமல், அறக்கட் டளையாக்கி, அதன் பொறுப்பை நமது தமிழர் தலைவரிடம் ஒப்படைத் தாரே - அதையும் இவ்விடத் தில் நினைவூட்டுவது பொருத்தம் அல்லவா!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பல மொழிகளிலும் பெரியார் வலம் வருகிறார்


தஞ்சாவூர், நவ.7- பல மொழி களிலும் தந்தை பெரியார் வலம் வருகிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். இதுபற்றி இந்து ஏடு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

தந்தைபெரியாரைப் பற்றிய பாரதிதா சனாரின் பொன்னெழுத்துக்களான தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப பெரியாரின் கருத்துக்கள் இன்று உலகம் எங்கும் பரவியுள்ளது.

பிரென்சு, ஆங்கிலம் ஆகிய மொழி களில் பெரியாரின் சிந்தனைகள் மொழி பெயர்க்கப்பட்டு அய்ரோப்பிய கண்டங் களில் பலரைச்சென்றடைந்துள்ளது, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தரும் திராவிடர் கழக தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிரபல ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் பெரியாரின் சிந்தனைத்திரட்டு ஒரிய மொழியில் புகழ்பெற்ற ஒரிய மொழி எழுத் தாளரும் ஒரிய பல்கலைக்கழக தத்துவ யியல் பேராசிரியருமான தியானேஸ்வர் ஷாகு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் 29.10.2013 அன்று வெளியிடப்பட்டது.

ஒரிய மொழியை அடுத்து பெண்ணிய விடுதலையை மய்யமாக வைத்து பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூல் இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, கன்னடம், வங்க மொழி மற்றும் பிரென்சு மொழிகளில் பெரி யாரின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு பெருவாரியான மக்களை சென்றடைந் துள்ளது.

குஜராத்தியிலும் பெரியாரின் நூல்களை மொழிபெயர்க்க திட்டமிட்டு வருகிறோம், அகர்தலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரபல வங்கமொழி எழுத்தாளர்கள் பெரி யாரின் நூல்களை வங்கமொழியில் மொழி பெயர்க்க ஆவன செய்வதாக உறுதியளித் துள்ளனர், சிலர் தாங்கள் மொழிபெயர்த்த நூல்களையும் எங்கள் பார்வையில் கொணர்ந்தனர், ஏ.ஆர்.வெங்கடாசலபதி சென்னை கல்வி வளர்ச்சித்துறை பேரா சிரியர் பற்றி 1000 பக்கங்கள் அடங்கிய நூலை எழுதியுள்ளார், அதைப் பென் குவின் பதிப்பகம் வெளியிடுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


திராவிட நெருப்பை தின்னுமா ஆரியம்?


திருச்சி
கந்தக
மண்ணில்
தீர்மானிப்போம்
வாருங்கள்!

திராவிட
எழுச்சித் தோளின்
தீ(வி)ரத்தை
காட்டுவோம்
கூடுங்கள்!

யாரோ மோடியாம்
முண்டாதட்டி
சென்றாராம்
திருச்சியில்

பெரியார்
மண்ணென்று
சேதி சொல்ல
ஆளில்லையா
அவருக்கு?

அவருக்கும்
சேர்த்து
முரசடித்துக்
கூறுவோம்
புறப்படுக!

மனுதர்மம்
மண்மூடிப்
போன கதை
யெல்லாம்
புரியாதா?

கருஞ்சட்டை
மகளிர்ப்படை
வைத்த தீயில்
வெந்த கதைத்
தெரியாதா?

ஆச்சாரியார்
ஆட்சிக்கு
இருமுறை
வந்தாரே
தெரியுமா?

வாய்தா காலம்
ஆளாமல்
ஓடிப்போன
சங்கதி
புரியுமா?

பெரியார்
தடிதான்
அடித்து
விரட்டியது - இது
வரலாறு!

ஆட்சிக்குப்
போகாத
அய்யாவுக்கு
ஆட்சியே
காணிக்கை!

எந்த
நாட்டில்
நடந்தது
இந்த அதிசயம்?

இடம்
தெரியாமல்
கால்வைத்து
அவதிப்பட
வேண்டாம்!
ராமராஜ்ஜியமா?
இது என்ன
அயோத்தி
என்ற
நினைப்பா?

பெரியார்
கைத்தடியால்
வாங்கிய அடி
கொஞ்சமா
நஞ்சமா?

ராமனுக்கே
சாமி ராமசாமி
ஆயிற்றே
பெரியார்!

அழைத்துவா
பார்க்கலாம்
அந்த
ராமனை
இங்கு!

சேலம் என்று
சொல்லுங்கள்
பார்ப்போம்
ஒண்ணுக்கும்
போயிடுவான்

கால்வைத்துப்
பார்க்கிறார்
கருஞ்சட்டை
சேனையே
புறப்படு!

ஆழம் பார்க்க
ஆசையாம்
அரிமா
சேனையே
புறப்படு!

திருச்சி
பெரியாரின்
தலைமைப் பீடப்
பாசறை!

புயலே புறப்படு
புதுப்
புறநானூறு
படைத்திடவே!

தலைவர்
அழைக்கிறார்
தமிழகம்
திரளட்டும்!
திரளட்டும்!!

திராவிட நெருப்பை
தின்னுமா
ஆரியம்?
எங்கே பார்ப்போம்?

புறப்படு
புறப்படு
புலிநிகர்த்த
பாய்ச்சலோடு
புறப்படு! புறப்படு!!

தமிழ் ஓவியா said...


பஸ்வான்

வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி போட் டியிடவில்லை ஆர்.எஸ். எஸ்.தான் போட்டியிடுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மத ரீதியான பதற்றம் உட்பட, அனைத்துத் தந்திரங்களையும் அது கடைப் பிடிக்கும்.

- ராம்விலாஸ் பஸ்வான், தலைவர், லோசக்தி

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

புரியுது!

செய்தி: படேலை வகுப்புவாதி என்றார் நேரு.
- எல்.கே. அத்வானி

சிந்தனை: ஓகோ! அதனால் தான் பிஜேபி யினர் படேலைப் பிடித் துத் தொங்கிக் கொண் டுள்ளனரா?

தமிழ் ஓவியா said...


சிறப்பு

விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடையோர்க்கே சென்றவிட மெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கோளுக்கு விண்கலம் ஏவியதில் பெரும் பங்காற்றிய பாராட்டுக்குரிய தமிழர்கள்!


கடந்த 05.11.2013 அன்று இந்தியாவிலிருந்து செவ்வாய்கோளை ஆராய மங்கள்யான் (செவ்வாய்கலம்) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையான இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை, எஸ்.அருணன், எம்.எஸ். பன்னீர்செல்வம் ஆகிய மூன்று விஞ்ஞானி களின் முக்கிய பங்களிப்பு இருக்கிறது என்பது தமிழர்களுக்குப் பெருமை தரக்கூடிய செய்தி.

விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது! விண்கலம் வெற்றிகரமாக அதன் வட்டப்பாதையில் சேர்க்கப்பட்டுவிட்டது! என்ற முதல் அறிவிப்பை வெளியிட்டவர் விஞ்ஞானி எம்.எஸ்.பன்னீர்செல்வம். மங்கள்யான் விஞ்ஞானிகள் குழுவில் ரேஞ்ச் ஆப்பரேஷன் இயக்குநராக இருக்கும் எம்.எஸ். பன்னீர்செல்வம் தருமபுரியை சேர்ந்தவர். சிறீஹரி கோட்டா ஏவுதள தலைமைப் பொது மேலாளராக இருக்கும் இவர், எந்த தடங்கலும் இல்லாமல் விண்கலத்தை விண்ணில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகளை பராமரித்து வந்தவர். மகிழ்ச்சிகரமான முதல் அறிவிப்பை வெளியிட்ட எம்.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களிடம், அந்த அறிவிப்பை வெளியிட்ட போது எப்படி உணர்ந் தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எங்களுக்கு எந்த தனிப்பட்ட உணர்வும் இல்லை, நாங்கள் எங்கள் கடமையை செய்து கொண்டிருக் கிறோம் என்று எந்தச் சலனமும் இல்லாமல் நிதானமாக பதிலளித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சாதனையை கூட இப்படி நிதானமாக எடுத்துக்கொண்டு பதிலளித்த எம்.எஸ்.பன்னீர்செல்வம், ஒரு சீரிய பகுத்தறிவாளர் என்பதும் அவரது தந்தையார் முருகேசன் திராவிடர் கழகத்தின் தருமபுரி நகரச் செயலாளராக இருந் தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டம்


வசாய், நவ.8-தானே மாவட்டம் விரார் கிழக்கு மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் உள் ளது. இந்த ஆசிரமத்தில் ஆசாராம் பாபுவின் கொள்கையை பின்பற்று பவர்கள் பஜனைகள் நடத்தி வந்தனர்.

அரசுக்கு சொந்த மான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இந்த ஆசி ரமம் கட்டப்பட்டிருந் தது. கடந்த 9 ஆண்டு களுக்கு முன்னதாக ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாய் தனது உதவியாளராக வேலை செய்து வந்த மகேந்திர சிங் சாவ்லா வின் பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமித்து அங்கு ஆசிரமம் கட்டி யதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் மகேந்திரசிங் சாவ்லாவிற்கு தெரியவந் ததும் அவர் நாராயண சாயிடம் உதவியாளராக வேலை செய்வதை நிறுத்தி விட்டார். மேலும் இது தொடர்பாக நாராயண சாய் மீது சட்டப்பூர்வ மாக நடவடிக்கை எடுக் குமாறு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து வசாய்- விரார் மாநக ராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகி யோர் ஆசிரமம் இருந்த இடத்தை ஆய்வு செய் தனர். ஆய்வில் ஆசிரமம் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரமத்தை காலி செய் யுமாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடந்த வாரம் ஆசிரம நிர்வாகிகளுக்கு நோட் டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஆசிரமத்தை காலி செய்ய வில்லை. இதனையடுத்து ஆசிரமத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலையில் வசாய்-விரார் மாநகராட்சி ஆக் கிரமிப்பு தடுப்பு துறை, வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் வட் டாட்சியர் ஆகியோர் பொக்லைன் எந்திரங் களுடன் சம்பவ இடத் திற்கு சென்றனர். இதை யொட்டி அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் ஆக்கிர மித்து கட்டப்பட்ட ஆசாராம் பாபுவின் ஆசி ரமம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. சுமார் 20-க்கும் மேற் பட்ட அறைகள், ஆசிர மத்தின் அருகே இடை வெளி விட்டு கட்டப் பட்ட அறைகள் அனைத் தும் சுமார் 2 மணி நேரத்தில் இடித்து தள்ளப்பட்டது.

ஆசிரமத்தை இடித்து தள்ளுவதற்கு முன்பாக உள்ளே இருந்த குளிர் சாதன பெட்டிகள், விலை மதிப்புடைய தொலைக்காட்சி பெட் டிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட் களை ஆசிரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் எடுத்துச்சென்றனர்.

தமிழ் ஓவியா said...


புதிய கருத்துகள்


மனித அறிவு நாளுக்கு நாள் மளமளவென்று மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதையொட்டி மக்களைக் கொண்டு போக வேண்டாமா? புதிய உலகத்திற்குப் புதிய உணர்ச்சிகள், புதிய கருத்துகளைக் கொண்டு செலுத்தவேண்டாமா?
(விடுதலை, 2.2.1959)

தமிழ் ஓவியா said...


அந்த சிவக்குமார் - இறந்த மனிதரல்ல! - சிறந்த மனிதர் அல்லவா?
-----------veramani

தொண்டறம் புரிவதில் எத்தனையோ பேர்கள் எந்த ஆரவாரமும் இன்றி, விளம்பர வெளிச்சத்தைக்கூட விரும்பாமல், இடது கை செய்தது வலது கைக்குத் தெரியாது என்பது போல் செய்து அடக்கத்தின் உச்சத் திற்கு சென்று, தங்களது மன நிறைவைத் தானே தேடிக் கொள்ளுகிறார்கள்!

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள் அவரது தன்னலம் துறந்த தொண்டைப் பாராட்டும்போது, நான் அதை செய்வது அப்பட்ட மான சுயநலத்திற்காகத்தான் - அதில் என்ன பெரிய தியாகம் அடங்கியுள்ளது? என்று கேட்டு ஒரு அரு மையான தத்துவ விளக்கத்தினையே தருவார்கள்.

நான் செய்யும் பணி - எனக்கு மன மகிழ்ச்சிக் கான ஒரு பணி; அதன் மூலம் நான் மனநிறைவை -மகிழ்ச்சியைப் பெறுகின்றேன் என்றால் அது என் சுயநலம் தானே!

எனவே பொதுநலம் என்று கருதி சிலரால் செய்யப்படும் செயல் எதுவும் ஆழ்ந்து சிந்தித்தால், அவர்களது சுயநலமே ஆகும்; அதுபோலவே சுயநலம் கருதிய அத்தகை யவர்களின் செயல்கள் அதனால் ஏற்படும் பயன் - விளைவுகளை வைத்து யோசித்துப் பார்த்தால் அது பொது நலமாகவே தான் அமையும்; முடியும் என்பார்கள்.

அசை போட்டுச் சிந்தித்தால் இது நன்கு புரியும்.

நேற்று ஒரு உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு செய்தி - நாளேடுகளில்.

திரு எம்.எஸ். சிவக்குமார் என்ற ஒருவர்; பாலக் காடு பகுதி ஆயலூர் என்ற ஊரைச் சார்ந்தவர், சென்னையில் வசித்தவர். 56 வயதுள்ளவர். ஒரு சமூக ஆர்வலர்.

காணாமற் போன பலரையும் கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரோடு சேர்ப்பது; அக் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உதவுவது மருத்துவ மனைகளில் அனாதைப் பிணங்களாகி தகவல் தெரியாத நிலையில் அவர்களை அடக்கம் செய்வ தற்கு முயற்சிகளை எடுப்பது, மருத்துவமனைகளில் சிசிச்சை முடிந்து குணமான ஆதரவற்றோர்களை, அனாதை இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்து அவர்களின் புது வாழ்வுக்கு உதவுவது - இப்படிப்பட்ட மனிதநேயத் தொண்டை தொடர்ந்து செய்வதில் இன்பங்கண்டு வாழ்ந்தவர் இந்த சிவக்குமார் அவர்கள் - சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து பதிவுகளை செய்து எளிய வாழ்வு நடத்திய எளிய ஆனால் உயர்ந்த மனிதர்!

தானே புயலில் சிக்கிய கப்பல் 2012-இல் அவதியுற்ற நிலையில் காணாமற்போன ஆறு மாலுமிகளுடைய குடும்பம் துயரத்தில் தந்தளித்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறி உதவிய தொண்டற மாமனிதர்!

ஆதரவற்ற மனிதர்களின் சவங்களைப் பெற்று அடக்கம் நடத்திய மகத்தான தொண்டறச் செம்மல்.

அவர் சில நாள்களுக்கு முன்னால் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே புகாரி ஓட்டல் முன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது அடிபட்டு கீழே விழுந்து தலைக்காயம் அடைந்தார்.

உடனே, அங்கிருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சேர்த்தார்கள்; அவருக்கு ஆசுஐ, மற்றும் ஊகூ. ஸ்கேன் செய்ததில் மண்டையில் மிகக் கடுமை யான காயம் ஏற்பட்டதால் செவ்வாய் இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்!

இந்த சிவக்குமார் ஒரு நோயுற்ற சகோதரியை கண்காணித்து வந்தவர் என்று இவரை அறிந்த நண்பர் நாராயணன் என்பவர் கூறியுள்ளார். மருத்துவமனை மருத்துவர்களும் இவரது தொண்டுபற்றி நினைவு கூர்ந்துள்ளனர்!

அவர் மருத்துவமனையில் இறந்தபோது அவர் அருகில் எவரும் இல்லை என்பதுதான் எத்தகைய கொடுமையான சோகம்!

இவரது மறைவு அறிந்து அவரது துணைவியார், மகள் பாலக்காட்டிலிருந்து வந்து, சென்னை மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை தரப்பட்ட நிலையில் உடனிருந்து, மரியாதை செலுத்தினர். அந்தப் படமும் இன்றைய நாளேடு ஒன்றில் வெளி வந்துள்ளது.

அந்த மனிதர் அதை அறிய மாட்டார். அவர் இறந்து விட்டார்!

ஆனால், இத்தகைய மனிதர்கள் உண்மையில் இறந்த மனிதர்களா?

என்றென்றும் நமது வீர வணக்கத்திற்குரிய சிறந்த மனிதர்களா - சொல்லுங்கள் நண்பர்களே!

அந்த சமூக ஆர்வலர் சிவக்குமாரின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர நடைபெறவில்லை என்றாலும், அவர் பல்லாயிரம் மனிதர்கள் செய்யாத, செய்யத் தவறிய பணியைச் செய்து இறந்தவர். அவரைவிடச் சிறந்த மனிதர் யார்? யார்?
வரலாற்றில் அடக்கமான தொண்டால் அடை யாளம் பெற்ற மனிதராக உயர்ந்து நிற்கிறாரே!

அவர் வாழுகிறார்! வாழுகிறார்! - பலர் உள்ளங்களில்! மனிதநேயம் மரித்துவிடவில்லை என்பதற்கு இவ்வாண்டே இதைபோன்று இன்னும் இரண்டு நிகழ்வுகள் நடந்ததை நான் வாழ்வியலில் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

ஓட்டி வந்த மின்சார ரயில் ஓட்டுநர் தனது இதய வலியைப் பொறுத்துக் கொண்டு, பாதுகாப்பாக ரயிலை நிறுத்தியபிறகு இறந்த, உள்ளம் உருக்கும் மனிதநேய நிகழ்ச்சி.

அதுபோலவே சில மாதங்களுக்குமுன் பேருந்தை ஓட்டிச் சென்றவர், ஓரமாக நிறுத்தி, மற்றவர்களை விபத்துக் குள்ளாக்காமல் காப்பாற்றி தான் மாரடைப்பால் மரணமடைந்தார்.
எனவே இப்படிப்பட்டவர்கள் நம் நெஞ்சில் நிழலாடி வாழுபவர்கள் அல்லவா!

தமிழ் ஓவியா said...

பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடை யவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி....

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகைக் கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்: ஆரிய நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டரெனச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா
திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டுமிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மருத்துவமனையில் கடவுள் இல்லை


திருப்பூர் மாவட்டம் நத்தக் காடையூர் பெரியார் பெருந் தொண்டர் புலவர் கு.தெய்வசிகா மணி அவர்கள் கடந்த 10 நாட்கள் உடல்நலமில்லாமல் ஈரோடு தனி யார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நலம்பெற்று வருகிறார்.

அவரை அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்ட தலைவர் ப.பிரகலாதன், மாவட்ட செயலாளர் இரா. நற்குணன், மாநகர தலைவர் கு.சிற்றரசு, பேராசிரியர் ப.காளிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் செபராசு செல்லதுரை, பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர் இரா.பார்த்திபன், பிரகாசன், தாராபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளக்கோவில் மணிகண்டன், ஈரோடு கோ.திருநாவுக்கரசு, நத்தக் காடையூர் திருஞானம் ஆகியோர் சென்று உடல்நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் ஒரு செவி லியர் அவரைப் பற்றித் தெரியாமல் சாம்பலை அவரது நெற்றியில் பூசிவிட்டார். உடனே அவர் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்பு வாசகம் கூறி அங்கு இருந்த செவிலியர்களிடம் பிரச்சாரம் செய்தார்.

அந்த நிலையிலும் பெரியார் தொண்டர்கள் கொள்கை உறுதியோடு இருப்பார்கள் என்பதற்கு நத்தக் காடையூர் புலவர் கு.தெய்வசிகாமணி எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

தகவல்: ஈரோடு சண்முகம்

தமிழ் ஓவியா said...

தீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்!

திங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.



சனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.

இதைக் கேள்: நடலை அறுந்
தாள் அருணை
நம்பனுக்கு அன்பில்லா
உடலை ஒறுத்தால்
ஆவதுண்டோ -
அடலைநூல்
ஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே
மோதினாற்
பாம்பு சாமோ.

இச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.

- புரட்சிக்கவிஞர்
குயில் 4-10-1960

தமிழ் ஓவியா said...


பற்களுக்கும், இதயநோய்க்கும் உள்ள விசித்திர உறவு!
--veramani
மனிதர்களை திடீர் என்று மரணமடையச் செய்யும் ஆட்கொல்லி நோய் மாரடைப்பு (Heart attack) ஆகும். இதயநோய் மருத்துவர்கள் இதில் பலவகை உண்டு என்று விவரித்துச் சொல்வார்கள்!

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்த லான இந்த இதயநோய் - மாரடைப்பு பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும், மருத் துவ வட்டாரங்களிலும் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இதயநோய் சம்பந்தமான அமைப்பு (American Heart Association) அவ்வப்போது பல அரிய தகவல்களை அதன் வெளி யீட்டில் (Journal) தந்து கொண்டே வருகிறது.

சரியாக பல்துலக்குவது என்பதும், பற்களைப் பாதுகாத்து பராமரிப்பது என்பதும், மனிதர்களை மாரடைப்பு - இருதயநோயிலிருந்து காப்பாற்ற உதவும் என்ற அரிய தகவலை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த உண்மைகளை அண்மை யில் வெளியிட்டுள்ளார்.

அன்றாடம் சரியாக பிரஷ் மூலம் பல்துலக்குவதும், நூற்கள் போன்ற இழைகளைக்கொண்டு பல் இடுக்கு களில் புகுந்து தங்கும் உணவு எச்சங் களை அங்கிருந்து கிளப்ப (Flossing) முயலுதல், அதோடு ஆறு மாதங் களுக்கு ஒரு முறையாவது, பல் டாக் டரிடம் சென்று காட்டி பற்கள் பற்றி, பரிசோதித்து அவரது அறிவுரையைப் பெற்று நடப்பது, இதயநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

இது பலபேர்களுக்கு வியப்பாகக் கூட இருக்கும்! என்ன இதயநோய்க் கும், பல்துலக்குவதற்கும் என்ன சம்பந்தம்?, இருதயம் தான் தனியே இயங்குகிறதே என்றுகூட சிலர் மேலெழுந்தவாரியாக எண்ணக்கூடும் அது தவறு.

இருதயநோயில் ஒரு வகை, இரத் தக்குழாய் சுருங்கி, இரத்த ஓட் டத்தைத் தடைப்படுத்தி நாளாவட்டத் தில் மாரடைப்புக்கு அடிகோலும் ஒன்று (Artheroselerosis)

நமது இரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடச் செய்யும் சக்தி, பற்களி டையே உள்ள (Pleaque) பற்காறை களுக்கு உண்டு.
மாரடைப்பு வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று இதயநோய் மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

வாயில் உள்ள பற்களிலும் பக்கத் தில் உள்ள Gums என்ற பற்தசை களிலும் கிருமிகள் குடியேறினால் பல் வியாதி (Periodental disease) வந்த பலரை சுமார் 5008 சாம்ப்பிள்கள் - பற்களில் தங்கிய கறை துகள்களை எடுத்து அமெரிக்காவின் மருத்துவ மனை (Mailman school - Man hatten residents samples) டாக்டர் (Moise desvarilux M.D., Ph.D.) மொய்சி டெஸ்வரீயூக்ஸ் அவர்கள் இந்த பற் களுக்கும் இதயநோய் ஏற்படுவதற்கு மான ஆய்வினைச் செய்து அமெரிக்க இதயநோய் ஆய்வு ஏட்டில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்!

மியாமி பல்கலைக்கழகப் பேராசிரி யரும் இவ்வாய்வு கட்டுரையின் கூட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான டாக்டர் தட்சனா ரன்டெக் M.D., Ph.D. (Dr. Tatjana Rundeck) இதுபற்றி விளக்குகையில், இருதயத்திற்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களை இந்த பற்காறைகள் (Pleaque) பத்தில் ஒரு பாகம் மி.மீ. அளவைச்சுருக்கி ரத்த ஓட்டத்தை தடை செய்வதாக அமைந்து விடுகிறது என்று விளக்கியுள்ளாராம்!

இந்த பற்காறைகள் எவ்வளவு ஆபத்து பார்த்தீர்களா?

இதனால் மாரடைப்பு வரலாம் (ஸ்ட்ரோக்) - பக்கவாதம்(Stroke) அதன் காரணமாக மரணமும் ஏற்பட லாம்.

உங்களைப் பயமுறுத்த இதை எழுதவில்லை, எச்சரித்து எளிதாக அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக் கங்களில் நாம் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால், அபாயங்களை அணுக விடாமல் தடுக்க முடியுமே என்பதால் எழுதுகிறோம்.

எனவே பல்துலக்குவது என்பது காலையைவிட இரவில் படுக்கப் போகும் முன்பு செய்வது, Flossing செய்வது (இண்டு இடுக்குகளில் உணவு எச்சங்கள் தங்காமல் இருக்க அவைகளை வெளியேற்றுவது), அவசி யம். உணவு உண்டபின் நன்கு வாய்க்கொப்பளித்தல் மிக அவசிய மாகும். முள் கரண்டி, மூலம் சாப்பிடும் நவ நாகரிகமானவர்கள் பலரும் வாய்க்கொப்பளிப்பதே இல்லை. நமக்கு நல் வாய்ப்பு - கை கழுவும்போதே வாயை நன்றாகக் கொப்பளிப்பது என்பது இயல்பான வாய்ப்பாகும்.

வருமுன்னர் காத்து, வாழ்வைப் பெருக்குவோம்!

தமிழ் ஓவியா said...

கிடுகிடுக்க வைத்த பறை இசை

திராவிடர் எழுச்சி மாநாட்டில் மகிழினி - மணி மாறனின் புத்தர் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. 9.11.2013 சனி அன்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை தூள் கிளப்பியது.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும், பறை இசைப் பயிற்சி புத்தர் கலைக் குழுவினரால் பயிற்சி அளிக்கப் பட்டது. கல்வி வளாகப் பிள்ளைகள் 46 பேர் பங்கேற்றனர்.

வெளியூர்களிலிருந்து பயிற்சிக்கு வந்தவர்கள் மூவர். புத்தர் கலைக் குழுவின் சார்பில் பங்கேற்பு 17 பேர். பெண்கள் சமமான எண்ணிக்கையில் இருந்தனர்.

மிகப்பெரிய மேடை முழுவதும் ஆக்கிரமித்து சின்னஞ் சிறுவர்களும் பறையடித்த காட்சி கண்கொள்ளாக் காட்சி!

குழந்தைகள் 7 அடிகளில் பறை இசைத்தனர். கால்கள் மாறி மாறி பத்து விதமான நடனம் ஆடினர்.

பறையடித்தல், ஆடுதல், கருத்துப் பகிர்தல், பாடுதல் என நால்வகை அம்சங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி மாநாட்டில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இந்தச் செல் வங்கள் பறையடித்தபோது எங்களை அறியாமலேயே எங்கள் கால்களும் ஆடின. ஒரு காலத்தில் பறையடித்த வர்கள் பறையர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டனர்.

அந்த ஜாதிச் சிறையிலிருந்து மீட்டெடுத்து அனைத் துப் பிரிவினரும் இந்தக் கலையை மீட்டும்படிச் செய்து தமிழனுக்குரிய இந்தக் கலையை இந்தத் திராவிடர் கழக மேடை மீட்டுக் கொடுத்துள்ளது (பலத்த கரவொலி) என்றார்.

சென்னை பெரியார் திடலிலும், திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்திலும் எங்கள் பயிற்சிக்கு இடமளித்து எல்லா வகைகளிலும் ஊக்கம் அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்குத் தோழர் மணிமாறன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடக்கத்தில் சினிமா பின்னணி புகழ் மகிழினி (தோழர் மணிமாறனின் இணையர்) தோழர் திருத்தணி பன்னீர்செல்வம், இராம.அன்பழகன், புவனகிரி திலீபன், மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் பாடல்களைப் பாடினர்.

நாட்டுப்புறக் கலை இசைக் குழுவினரைத் தமிழர் தலைவர் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டில் புரட்சித் திருமணம்!

நேற்று (9.11.2013) மாலை திருச்சி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் சுயமரியாதைத் திருமணத்தின் சார்பில் ஒரு புரட்சிகரமான வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் - குன்னூர் லிங்கப்பன் - மலர்க்கொடி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் பி.சி.ஏ. சென்னை மண் ணிவாக்கம் இரா. பத்மாசூரன் - சிவபாக்கியம் ஆகி யோரின் மகள் ப. அருணா எம்.எஸ்சி ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே மணவிழாவினை நடத்தி வைத்தார்.

மணமகன், மணமகள் ஆகியோர் மணமுறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி மணமகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், தாலி விலக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் திருமணத்தில் வழக்கம்போல உறுதிமொழி களைக் கூறச் செய்த கழகத் தலைவர் அவர்கள், மணமகனுக்குக் கூடுதலான சில உறுதிமொழிச் சொற்களையும் சேர்த்துக் கூறச் செய்தார்.

எந்த நிலையிலும் பழைய வாழ்க்கை நினைவுகளைக் சுட்டிக்காட்டுவதில்லை என்றும்; இந்தக் குழந்தையை, தன் சொந்த குழந்தையைப் போலப் பாவிப்பேன் என்றும் கூறச் செய்தார். இத்தகைய உறுதிமொழிகளைக் கூறச் சொன்னபோது வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் திரள் பெருத்த கரஒலி எழுப்பியது.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இதனைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டி - இது சாதாரண திருமணமல்ல - சமுதாயப் புரட்சித் திருமணம் என்று குறிப்பிட்டார்.

தன் பெற்றோர்களின் திருமணத்தை நேரில் பார்த்த பெருமை இந்தக் குழந்தைக்கு உண்டு என்று சொன்ன போது கூட்டத்தில் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. தொடக்கத்தில் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்புரை ஆற்றினார். அருள் தந்தை ஜெகத் கஸ்பர், பேராசிரியர் காதர்மொய்தீன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டனர்.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா


மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா
முடிவுக்கு வந்தது சாம்ராஜ் நகர் மூடநம்பிக்கை!
30 நாட்களுக்கு மேலாகியும் முதல்வராகத் தொடர்கிறார் சித்தராமையா

பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழை யும் எந்த முதல்வரும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 7-ஆம் தேதி அந்த மாநில முதல்வர் சித்தராமையா சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்துவைத்தார். இப்போது அவர் நுழைந்து ஒரு மாதமாகி விட்டது.

ஆனால், அவர் இன்றைக்கும் கருநாடக முதல்வராகத்தான் பவனி வருகிறார். மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் அவர் வென்றிருக்கிறார்.

சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தபோது அவர் கூறினார். தன்னம் பிக்கை அற்றவர்கள் மூடநம்பிக்கையை உருவாக்குகின்றனர். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்போதும் மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. மூட நம்பிக்கையை தகர்த்தெறியவே சாம்ராஜ் நகருக்கு வந்தேன் என்று இன்றைக்கு அவர் சொன்னதைச் செய்து காட்டி விட்டார்.

இன்னும் 30 நாட்களில் சித்தராமையா பதவி இழப்பார் என பல அரசியல் தலைவர்களும், ஜோதிடர்களும் கடந்த 30 நாட்களாக ஓயாமல் சொல்லி வந்தனர். இந்நிலையில் 30 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனால் முந்தைய முதல்வர்களின் நாற்காலிகளை காவு வாங்கியது சாம்ராஜ் நகரின் மூடு மந்திரங்கள் அல்ல. அவர்கள் செய்த தவறுகளும், ஊழலும்தான் என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

முதல்வராகப் பதவியேற்றதும் வீடு தேடிப்போய் எழுத்தாளர்களை சந்தித்தது. பத்திரிகையாளர்களை சந்தித்து ஆட்சி குறித்து ஆலோசித்தது. மூடநம்பிக்கைகள் நிறைந்த சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தது என கருநாடக அரசியலில் சித்தராமையா தனித்து நிற்கிறார்.

எப்படி வந்தது இந்த மூடநம்பிக்கை

இந்திய விடுதலைக்கு முன்பு வரை சாம்ராஜ் நகர் மாவட்டம் மதராஸ் ராஜ் தானியின் ஓர் அங்கமாக இருந்தது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கருநாடக மாநி லத்துடன் சேர்க்கப்பட்டது. தமிழக - கருநாடக மாநில எல்லையில் இருக்கும் சாம்ராஜ்நகர், மைசூரிவிலிருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிகளுக்காக வும் 1996 ஆம் ஆண்டு மைசூரிலிருந்து தனியாக சாம்ராஜ் நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடகருநாடகத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து கருநாடகத்தின் முதல்வராக ஆட்சி செய்வதால், அம்மாநிலத்தின் தென் எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கருநாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்தது. உழைக்கும் மக்களின் வறுமையையும், அறியாமை யையும் மூலதனமாக்கிக் கொண்டு புதுப் புது விதங்களில் மூடநம்பிக்கை கூடா ரங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

இதனால் சாம்ராஜ நகர் மந்திர தந்திர சித்து வேலைகளுக்கும், செய்வினை, ஆவியை ஏவி விடும் விளையாட்டு களுக்கும் மிகவும் பெயர் பெற்றது, இத னால் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர்கள் என்றாலே சூன்யம் செய்து விடுவார்கள் என்ற அச்சம் கருநாடக மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.

- நன்றி தி இந்து, 8.11.2013

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு வைகோ இரங்கல்


திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவன உறுப்பினரு மான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், 9.11.2013 அன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல்பட்டார்.

தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்படியாக உயர்ந்த கோ.சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். சாது என்ற புனைப் பெயரில் அவர் விடுதலையிலும், உண்மையிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும். அம்பேத்கர் பேசுகிறார் என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.

அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய்வற ஈடுபட்டார்.

தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ.சாமிதுரை அவர்களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவரது அன்புச் செல்வங் களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு வைகோ இரங்கல்


திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவன உறுப்பினரு மான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், 9.11.2013 அன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல்பட்டார்.

தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்படியாக உயர்ந்த கோ.சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். சாது என்ற புனைப் பெயரில் அவர் விடுதலையிலும், உண்மையிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும். அம்பேத்கர் பேசுகிறார் என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.

அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய்வற ஈடுபட்டார்.

தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ.சாமிதுரை அவர்களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவரது அன்புச் செல்வங் களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

அய்யா! பொருளாளரே! உமக்கு நன்றி!

தந்தை பெரியாரின் தொண்டரே!

அய்யா ஆசிரியரின் நண்பரே!

இயக்கத்தின் பெட்டகமாய்

கழகத்தின் கணக்கிருப்பாய்

கண்டிப்பின் மறு உருவாய்

தொண்டறத்தின் சிறப்பினிலே

சிக்கனத்தில் வாழ்ந்தவரே

சிந்தையிலே நிறைந்து விட்டீர்!

தள்ளாத உடலுடனே

தளிர் நடை போட்டே தான்

ஆசிரியரின் நிழல் போலே

உடன் பிறப்பாய் நின்றவரே!

உள்ளமெல்லாம் வலித்திடவே

சாமிதுரை வாழ்கவென்றே

நன்றியுடன் வாழ்த்திடுவோம் !

- சோம.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.

தமிழ் ஓவியா said...

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே! - கி.வீரமணி

பேரிடி போன்றதோர் செய்தி!

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு இன்று (9.11.2013) காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு - இயக்கத்திற்கு இருந்தது!

ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.
ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று.

அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன்.

திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

சோதனைக் காலத்தில் துணையாக இருந்த இளைஞர்

இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று.

எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை - பிரிக்க முடியாதவை!
பாழும் சாவு பிரித்துவிட்டதே!

பாழும் சாவு - எங்களைப் பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81 ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!
அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

குளமான கண்களோடு பிரியாவிடை!

எனவே, நாம் அவருக்குப் பிரியாவிடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்து செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

9.11.2013

குறிப்பு: கழகக் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை குறிப்பு

பெயர் : கோ. சாமிதுரை

வயது : 81

பிறந்த ஆண்டு : 1934

பிறந்த இடம் : முடியனூர் (கள்ளக்குறிச்சி வட்டம்)

மாவட்டம் : விழுப்புரம்

பட்டம் : எம்.ஏ., பி.எல். - வழக்குரைஞர்

தந்தையார் பெயர் : கோவிந்தன்

தாயார் பெயர் : அய்யம்மாள்

துணைவியர் பெயர் : சரோஜா

மகன்கள் பெயர்

1. டாக்டர் ஜி.எஸ். குமார்
2. வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர்,

மகள்கள் பெயர் :

1. திருமதி சாந்தி சம்பத்
2. திருமதி டி. விஜயா
3. திருமதி செல்வி

மாணவர் பருவம் முதல் திராவிடர் கழகத்தில் இருந்து வருகிறார்.

திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

பொறுப்புகள் : பொருளாளர், திராவிடர் கழகம்

நிர்வாகக் குழு : பெரியார் சுயமரியாதைப் உறுப்பினர் பிரச்சார நிறுவனத் (அறக்கட்டளை)
துணைத் தலைவர், பெரியார் மணியம்மை

இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (அறக்கட்டளை)

எழுதிய நூல் : அம்பேத்கர் பேசுகிறார்

சாது என்ற புனைப் பெயரில் விடுதலையிலும், உண்மையிலும் கட்டுரைகள் எழுதி வந்தவர். கடலூரில் கி.வீரமணி, எம்.எஸ். ஜனார்த்தனம் (இன்றைய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர்) ஆகியோருடன் இணைந்து வழக்குரைஞர் தொழில் நடத்தினார். பிறகு கள்ளக்குறிச்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இப்பொழுது முழு நேரம் திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கோ. சாமிதுரை மறைவு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல்


சென்னை, நவ.9- திராவிடர் கழகப் பொரு ளாளரும், நீண்ட கால மாக திராவிடர் கழக வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவரும், திரா விடர் கழகத் தலைவர், இளவல் வீரமணிக்கு உற்ற துணையாக இருந்து வந்தவருமான - வழக் கறிஞர் திரு. கோ. சாமி துரை, எம்.ஏ., பி.எல்., அவர்கள் இன்று சென் னையில் திடீரென மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தன்னுடைய மாணவப் பருவம் முதலாக திரா விடர் கழகத்திலே ஈடுபாடு கொண்டவர் திரு. சாமிதுரை. திரா விடர் கழகத்தின் சார் பில் நடைபெற்ற அத் தனை போராட்டங்களி லும் ஆர்வத்தோடு சாமி துரை கலந்து கொண் டதை நான் நன்கறிவேன்.

திராவிடர் கழகத்தின் பொருளாளராக பணி யாற்றியதோடு, பெரி யார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக் கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பெரியார் மணியம்மை இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சயன்ஸ் அண்ட் டெக் னாலஜியின் துணைத் தலைவராகவும் விளங்கி வந்தார். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரு டைய மருமகன், தமிழ கச் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு உறுப்பினர், தம்பி குழந்தை தமிழரசனுக்கும், மற்றும் அவரு டைய குடும்பத்தினருக் கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும், குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


வென்றார் சித்தராமையா


கருநாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத் திற்குள் நுழையும் எந்த ஒரு முதல் அமைச்சரும் ஒரு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கமாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்ற ஒரு மூடநம்பிக்கை நிலவி வரும் நிலையில், இன்றைய முதல் அமைச்சர் சித்தராமையா அந்த மூடநம்பிக்கையை உடைத் துக் காட்டியது வரவேற்கத்தக்கது - பாராட்டத் தக்கது.

தன்னம்பிக்கையற்றவர்கள் மூடநம்பிக்கை களை வளர்க்கிறார்கள். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்பொழுதுமே மூடநம்பிக்கை களை நம்புவதில்லை. மூடநம்பிக்கையைத் தகர்த்தெறியவே இந்த சாம்ராஜ்நகருக்கு வந் துள்ளேன் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டாரே!

30 நாட்களுக்குள் சித்தராமையா பதவியை இழப்பார் என்று அரசியல்வாதிகளும், ஜோதிடர் களும் கூறினார்களே - சாம்ராஜ் நகருக்கு முதல் அமைச்சர் சித்தராமையா சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர் பதவி ஒன்றும் பறி போய் விடவில்லை; பலமாகவே கால் ஊன்றித்தான் நிற்கிறார்.

உத்தரப்பிரதேசத்திலே ஒரு சாமியார் தங்கச் சுரங்கம்பற்றி உளறினார். இந்த நாட்டு ஏடுகளும், அரசியல்வாதிகளும் அதனை நம்பி ஏமாந்தார்கள்.

இப்படி மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிடும் பேர் வழிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாத வரை - தங்கள் எத்து வேலைகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சாம்ராஜ் நகர் என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி, ஆட்சி எல்லைக்குள் அந்தப் பகுதி அடங்காதா? அந்தப் பகுதியில் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல் அமைச் சர் என்ற முறையில் செல்லுவது - கடமையின் பாங்கு அல்லவா!

சாம்ராஜ் நகரில் அப்படி என்னதான் இருக் கிறது? அந்தப் பகுதியைக் கடவுள் கேவலமாகப் படைத்து விட்டாரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த மேதாவிகளிடமிருந்தும், மூடத்தனத்தைப் பரப்பி வயிறு வளர்க்கும் ஊடகக்காரர்களிடமிருந்தும் அறிவு நாணயமான பதில் வருவது கிடையாது.

தங்களுடைய மூடநம்பிக்கை முற்றும் அம்பல மாகி விட்டது என்று தெரிந்த நிலையிலும் அடுத்த மூடநம்பிக்கையை அவிழ்த்துக் கொட்ட அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதே கிடையாது.

விஞ்ஞானம் தந்த அறிவுக் கொடையான ஊடகங்கள் அதற்கு மாறாக அஞ்ஞானத்தைப் பரப்புவதில் கட்டுக்கடங்கா வெறி கொண்டு அலைகின்றனவே - இந்த வெட்கக்கேட்டை எது கொண்டு சாற்ற?

இவ்வளவுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் மக்கள் மத்தியிலே விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகன் அல்லது குடிமகளின் கடமை என்று வலியுறுத்துகிறதே.

அத்தகைய அடிப்படைக் கடமையை அரசுகள் செய்கின்றனவா?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சி பீடத்தில், தலைமை இடத்தில் இருக்கும் முதல் அமைச்சர்களே, பிரதமர்களே, குடியரசுத் தலை வர்களே, ஆளுநர்களே மத மூடநம்பிக்கைக் கூண்டுக்குள் சிக்கிப் பரிதவிக்கிறார்களே!

என்ன கொடுமையென்றால் மகாராட்டிர மாநிலத்தில் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்றால், எவ்வளவுக் கேவலம்!

உடனடியாக மகாராட்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது போல மற்ற மற்ற மாநிலங்களிலும் இத்தகு சட் டங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசிய மாகும்.

கருநாடகத்தில் அத்தகையதொரு சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் அறிவித்துள்ளார் - வரவேற்கத்தக்கது.

எல்லாவற்றையும்விட இத்தகு சட்டம் ஒன்றை மத்திய அரசே கொண்டு வந்து அரசமைப்புச் சட் டத்தில் காணப்பட்ட சரத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டு கோளாகும்.

தமிழ் ஓவியா said...


அறிவை அடக்க புதிய சட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப் பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டும் என்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலாயிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நமது நாட்டுப்பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக் கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.

இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம், மதம் என்று சொல்வது ஒரு மனிதருடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல் அது உலகத்தில் உள்ள மனிதகோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடியதல்ல.

அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப்பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லை யென்பதே நமது அபிப்பிராயம். உலக மனிதர்களில் 100க்கு 99 பேர்களால் ஒப்புக்கொள்வதாகச் சொல்லப்படும் கடவு ளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்பதற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் செய்ததாகச் சொல்வதையும், சொன்னதாகச் சொல்வதையும் பற்றிய தர்க்கங்களும், மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவமாடிக் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது, ஒன்றை எதிர்ப்பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையும் கூட தூட்சிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டும் அனு மதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப்பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள் என்று சொல்பவர்களைப்பற்றி, கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்பவர்களைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?

எனவே இவ்விஷயங்கள் ஒருவருடைய அபிப்பிராயமேயல் லாமல் அதுவே சத்தியமாய் விடாது, உலகத்தில் ஏதாவது சீர்திருத்தம் என்பது ஏற்படவேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும், மறுப்பதும் ஒருவர் கொள்கையை அனுமதிக்கப்பட்டுதான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்து விட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியைத் தடுத்ததாகுமே யொழிய மற்றபடி அது எந்தவிதமான நன்மையையும் செய்ததாக ஆகாது.

அன்றியும், இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரிகமும் காட்டு மிராண்டித்தனமுமேயாகும் இப்பேர்ப் பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறு உள்ளனவைகளையெல்லாம் களைந்தெறிய வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவு நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப் படுவதும் அது நிலைபெறுவதும், அதற்குக் கோடிக் கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும், சகஜமான தேயல்லாமல் அதில் ஒன்றும் அதிசயமில்லை.

அதுபோலவே தற்காலத்தில் உள்ள மக்கள் அறிவு நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசய மில்லை. எனவே, மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில் மாத்திரம் முற்போக் கடைய வேண்டியது பாக்கியமில்லை, அறிவிலும், ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதிலும் முற்போக்கடைய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கி யிருக்கிறது.

அவைகளைக் கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகுசிறியதே யாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்குச் சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.

ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச் சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927

தமிழ் ஓவியா said...


சத்தியாக்கிரகமாகுமா?


சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல்துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு வருக்கும், மூன்று மூன்று மாதம் கடுங்காவலும் முன்னூறு ரூபாய் அபராதமும் அது செலுத்தப்படாவிட்டால் மேற்கொண்டு மூன்று மாதம் தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மனஉறுதியையும், அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதானாலும் இச்செய் கைக்குச் சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.

அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும் அனுபவிக்கத் தயாராயிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களைத் தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில் நடத்திப் பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கில்லாத காரியங்களை செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம்.

ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப் பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்யலாம். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு சிலையை விகாரமாக்குவது மகாத்மாவின் தத்துவப்படிப் பார்த்தால் எல்லை கடந்த பலாத்காரமாகும் என்றே நமக்குப் புலப்படுகிறது.

நல்ல விஷயங்களுக்கு ஏற்பட்ட பொருளை இம்மாதிரி விஷயங்களுக்குச் செலவு செய்வதை நாம் பாராட்ட முடியாததற்கு வருந்துகிறோம். நீல்துரை அக்கிரமக்காரர் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் செய்த அக்கிரமத்தைவிட அதிகமான அக்கிரமங்களும், கொடுமைகளும் செய்து வருகிறவர்களையெல்லாம் நாம் என்ன செய்து விட்டோம்?

அப்பேர்ப்பட்டவர்களையெல்லாம் பலாத்காரமில்லாமல் மனமாற்ற மடையும் படி நாம் அவர்களை வேண்டிக் கொள்கிறோமேயல்லாமல் அவர்களுடைய கையையும், காலையும் ஒடிக்கப் போகிறோமா? அல்லது ஒடிக்க எண்ணு கிறோமா? அந்தப்படியே இதிலும் நாம் நடந்து கொள்ளவேண்டியதாயிருக்க இம்மாதிரி நடக்கத் துணிந்ததானது வருத்தப்படத்தக்கதேயாகும்.

இம்மாதிரி ஒவ்வொரு காரியத்திற்கும் செய்ய ஆரம்பிப்போமானால், கடைசியாக அது எங்கு போய் நிற்கும் என்கிற ஒரு முடிவு கட்டவும் முடியாது. அன்றியும் நாம் நினைக்கிற காரியமும் கைகூடாததுடன் அது முறை அல்லவென்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28-08-1927

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொதுஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களைச் சில பொதுத் தெருக்களில் நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்த தும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

அதன் பிறகும் அதே ராஜ்யத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்கள் உபத்திரவப் படுவதும், சிற்சில இடங்களை அந்தச் சர்க்கார் அனு மதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற வருஷம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆகவேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்திய தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் எல்லோருக்கும் வழி திறந்து விடப்படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தைத் திடீரென்று நிறுத்தும்படி செய்துவிட்டார்கள்.

இம்மாதிரி மேற்படி சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் வருவதோடு, இப்போது சர்க்கார் வேறு ரோடு போட்டுக் கொடுப்பதாகவும், அதற்கு ரூபா பத்தாயிரம் வரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருப்ப தாகவும் தெரிய வருகிறது.

இம்மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்பந்தப்பட்டவர்களும், அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக்கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தியாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும், சுற்றுப் பக்கத்துப் பிரமுகர்களுடனும், தொண்டர்களுடனும் கலந்து, சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா கண்டு ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பிவிட்டு, அதற்குள் தேவையான பிரசாரம் செய்து தக்க ஆதர வைத் தேடிக்கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தைத் தொடங்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண்காரியத்தில் பிரவேசித்து அனாவசியமாய் சிறை சென்று வரு கிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்து கூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கபடி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 04.09.1927

தமிழ் ஓவியா said...

நேரத்தை புறம்தள்ளிய நீதிபதி

- மு.வி. சோமசுந்தரம்

நீதி கெட்டது யாரால்? தந்தை பெரியார் கேட்ட பொருள் பதிந்த பெரிய கேள்வி.

நீதி தேவன் மயக்கம் - விழிப்புடனும், தெளிவுடனும் இருந்து வாதத்தை கேட்டு, குவிந்துள்ள புராண குப் பையைக் கண்டு மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார் நீதிபதி என்பதை அறிஞர் அண்ணாவின் நாடகம் விளக்கும்.

ஒரு முக்கியமான வழக்கு, வழக் கறிஞர் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன் வைக்கிறார். மூச்சு விடாமல் தொடர்ந்து பேசுகிறார். நீதிபதி, பின்னே சாய்வதும், முன்னே குனிந்து கேட்பதுமாக இருக்கிறார் அசைந்து அசைந்து உட்காருகிறார். அலுப்புத் தட்டி விடுகிறது. உரத்த குரலில்பேசி வந்த வழக்கறிஞர் வாதத்தை முடித்துவிட்டார். நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மனித ஒலி ஓய்ந்தது.

குற்றவாளிக்கு மரண தண்டனை என்று நீதிபதி தீர்ப்பைக் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர், நான் தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப் போகிறேன் என்றார்.

எனக்குப்பிறகு, வேறு நீதிபதி இல்லாதபோது எவரிடம் மேல் முறையீடு? என்று நீதிபதி கேட்டார்.

தூங்கிய நிலையிலிருந்த நீதிபதியிட மிருந்து விழிப்பு நிலையில் உள்ள நீதிபதியிடம் மேல் முறையீடு செய்யப் போகிறேன் என்றார் வழக்கறிஞர். நீதி தூங்கக் கூடாது என்பதற்கான ஒரு துணுக்கு.

தாமதமாகும் தீர்ப்பு, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விடியலை எதிர் நோக்கி ஆண்டு பலவாக துவண்ட நிலையில் காத்திருக்கும் கட்சிக்காரர்கள் ஏராளம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அனைத்திலும் வழக்குகள் குவிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையை நீடிக்க விடக் கூடாது என்று நீதியரசர்கள் குரல் எழுப்பியும் முயற்சித்தும் வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

எண்ணியர் திண்ணியராகவும் இருக்க வேண்டுமல்லவா? செயல் திறம் படைத்த நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்குவதில் சாதனை நிகழ்த்திய செய்தி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கட்சிக்காரர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. அதனைக் காண்போம்.

மேற்கு வங்காளம் இஸ்லாம்பூர் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம், அக் டோபர் மாதம் 9ஆம் தேதி, புதன் கிழமை, காலை 11 மணிக்கு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. நீதிபதி முதலில், சாட்சிகள், சாட்சியம் அளிக்க வேண்டிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். அடுத்து, காவல் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு, சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை எடுத்துக் கொள்கிறார். மதியம் 2 மணிக்கு, பகல் உணவாக, சோறும், காய், கீரையை நீதிபதி உணவாக உட்கொண்டு வழக்கு விசாரணையைத் தொடர்கிறார். மாலை 4 மணிக்கு நீதிபதி, தன் அறையில் தேநீர் அருந்தி 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். வழக்குகளை நடத்துகிறார். இடை இடையே தேநீர் அருந்திக் கொண்டு மாலை நேரம் தொடர்கிறது. இரவு 11 மணிக்கு சிறிது இடைவேளை கொடுத்து 15 நிமிடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வழக்குகளை நடத்துகிறார். இரவு முழுவதும் வழக்குகள்நடத்தப்படுகிறது. இந்த வேளையில் பிணை வழங்குதல், மேல் முறையீடு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இடையே தேநீர் குடித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு மறுநாள், அதாவது வியாழன், 10ஆம் தேதி காலை 7 மணிக்கு, நீதிமன்றப் பணி வழக்கு விசாரணை முடிவடைகிறது.

தொடர்ந்து 20 மணி நேரம் செயல் பட்டு 393 வழக்குகள் விசாரிக்கப்பட் டன. அக்டோபர் 10 முதல், நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடு முறை என்பதால், மனிதநேய உணர் வுடன் கட்சிக்காரர்கள் மனக் கவலையைக் கவனத்தில் கொண்டு பணியாற்றிய நீதிபதியின், கடமை, பொறுப்புணர்வைக் கண்டு வியக்கா மலும், போற்றாமலும் இருக்க முடியாது.

இந்த சிறப்பான காரியத்தை நடத்தி முடிக்க நீதிமன்ற ஊழியர்களும், காவலர்களும், வழக்கு நடத்த வந்த 50 வழக்குரைஞர்களும் ஒத்துழைத்ததையும் மெச்ச வேண்டும். மாலை நீதிமன்ற வளாக உணவுக் கடைகளும் மூடப் பட்டதால் அனைவரும் தேநீர் குடித்து இரவைக் கழித்தனர்.

இந்நீதிபதியின் செயல்பாட்டை, வழக்குரைஞர்கள் எப்படி விமர்சித் துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

மூத்த வழக்குரைஞர் கீதாநாத் கங்குலி: எனக்குத் தெரிந்தவரையில், வங்காளத்திலோ, ஏன் இந்தியாவிலோ இதுபோன்ற முன்மாதிரி இருந்த தில்லை. 2008இல் ஜெக்மோகன் டால்மியா வழக்கை உச்சநீதிமன்றம் நள்ளிரவு வரை விசாரித்தது. மே மாதம் 2009இல் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி டி.பி. சென்குப்தா கோடை விடுமுறையில் இரவு 11 மணி வரை 201 பிணை வழக்குகளை விசாரித்தார்.

இஸ்லாம்பூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் முகமது ஃபெய்ஜ்யு ரிடீன் என்னுடைய தொழிற்காலத்தில், தொடர்ந்து இவ்வளவு நேரம் நீதி மன்றம் செயல்பட்டதை முதன் முறை யாகக் காண முடிந்தது.

அரசு துணை வழக்குரைஞர் கெய்சர் சவுத்ரி; நான் இரவு முழுவதும் இருந்தேன். நீதிபதியின் ஆற்றலும், பதட்டப்படாது செயல்பட்ட முறையும் மெச்சத்தக்கது, ஒவ்வொரு வழக்காக எடுத்து வழக்குரைஞர் வாதத்தைக் கேட்டு, எழுத்தர்கள் எழுத ஆணையை வழங்கி வந்தார். இவரின் செயல் முறையை, நீதித்துறை பாராட்ட வேண் டும்.

நீதித்துறையில் இத்தகைய சாதனையை பொது நல நோக்கோடு செயல்படுத்திய நீதிபதி ஜகாங்கீர் கபீர் என்பவர். 50 வயதானவர். பெக்ராம் பூரை சேர்ந்தவர். இஸ்லாம்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியில் உள்ளார்.

‘The Telegraph’ 11.10.2013 இதழில் வெளிவந்த செய்தி

தமிழ் ஓவியா said...


திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்


ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை.

முதல் உலகப் பெரும்போரில் போர்ப்படையில் பணி புரிந்தார். அப்பணியில் பெற்ற ஊதியத்தை இயன்றவரை சேமித்துச் சென்னை விலங்கின மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அவர் படித்த கல்லூரி மாணவர் விடுதியில் அக்கால நிலைக்கு ஏற்ப பார்ப் பனருக்குச் சிற்றுண்டி உணவருந்தத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அக்காலத்துப் பொது உணவு விடுதிகளிலும் இந்நிலை இருந்தது. அந்நிலை மாற கங்காதரக் கோனார் வெகுண்டெழுந்தார். உண்ணாநோன்பு மேற்கொண்டார். அக்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டிலும் இச்செய்தி வெளியிடப்பட்டது.

நன்னிலத்தில் அவர் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அஞ்சல் அலுவலகத் தலைவர். வட்டாட்சியர், விலங்கின மருத்துவர் இம் மூவரைத் தவிர மற்ற உயர் அலுவலகப் பணிகளில் பார்ப்பனரே இருந்தனர். அஞ்சல் ஊழியர் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவரே. இவர்கள் பார்ப்பனர் வாழும் இடத்துக்குச் செல்லும்போது வெயிலின் வெம்மையிலும் காலணி அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டனர். கங்காதார் அவர்களைக் காலணி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரை எதிர்க்கும் துணிவு பார்ப்பனருக்கு இல்லை. எனவே அக்கொடிய பழக்கம் ஒழிந்தது.

டாக்டர் கங்காதரனின் இளவல் திரு. கிருஷ்சாமிக்குச் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்.டாக்டர் க. முத்துபாபு (இணை இயக்குநர் கால் நடைப் பராமரிப்பு), பேரா. க. பாஸ்கரன் (கல்லூரி கல்வி இணை இயக்குநர்) ஆகியோர் அன்னாரது திருக்குமாரர்களாவர். நெஞ்சுரங்கொண்ட கங்காதரரை நினைவில் நிறுத்துவோமாக.

- சி.சி. செல்லம்,
யாதவர் களஞ்சியம், பக்327

தமிழ் ஓவியா said...


பிட்டி தியாகராயர்


சென்னை நகரை முதன் முதலாக 1867இல் 8 வார்டுகளாகப் பிரித்தார்கள். நகரில் குடியிருப்பவர்களிலிருந்து இரண்டு வார்டுகளுக்கு ஒருவர் வீதம் நான்கு கமிஷனர்களை நியமித்தனர்.

1878இல் 16 வார்டுகளுக்கு 32 கமிஷனர்கள் நியமிக்கப் பட்டார்கள். இவர்கள் நியமனம் வரி செலுத்துவோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாய் இருந்தது.

1919இல் வார்டுகள் டிவிஷன்களாக மாறின. நியமன கமிஷ னர்கள் கவுன்சிலர்களாக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு சென்னை நகரம் 1947இல் 50 வட்டங்களாகவும், (டிவிஷன்கள்) 1961இல் 100 வட்டங்களாகவும், 1967இல் 120 வட்டங்களாகவும், இன்று 155 வார்டுகளாகவும் மாறி உள்ளன.

இப்போது டிவிஷன், வட்டம் என்று சொல்லாமல் வார்ட என்றே மீண்டும் குறிப்பிடுகிறார்கள். டி.எம். நாயர் அவர்கள் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய காலம் வரை நகராட்சி, உறுப்பினர் பொறுப்பைக் கமிஷனர் என்றே கூறி வந்தனர்.

டாக்டர் நாயர் நகராட்சிப் பொறுப்பி லிருந்து விலகியதற்குப் பிறகு மனமாற்றம் ஏற்படக் கூடிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. டில்லி இம்பீரியல் சட்டமன்றத்துக்கு 1915ஆம் ஆண்டு சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இப்பொறுப்புக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினார் டாக்டர் நாயர். இந்த விருப்பத்தை தமது நண்பர்களிடம் தெரிவித்தார். டாக்டர் நாயரும் தேர்தலில் ஈடுபட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இறுதியில் டாக்டர் நாயர் தோல்வி அடைந்தார். அவருக்கு நான்கே வாக்குகள் கிடைத்திருந்தன. இத்தோல்விதான் நாயரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பிட்டி தியாகராயருக்கு வேறொரு வகையான அனுபவம் கிடைத் தது. பிட்டி. தியாகராயர் எவ்வளவுதான் சமூக நிலையில் உயர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பனர் ஒருவர் மேடைமீது ஏற்றாமல் சிறுமைப்படுத்தி, கீழே நாற்காலி போட்டு அமர வைத்து விட்டார். இத்தனைக்கும் அந்தப் பார்ப்பனர் அவரது அலுவலகத்தில் அவருக்குக் கீழே ஊதியம் பெறுபவராக இருந்தார்.

பார்ப்பனர் அல்லாதவராகப் பிறந்து விட்டார் என்பதற்காகவே சமூக நிலையில் தம்மைப் பார்ப்பனர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. பிட்டி தியாகராயர் கடவுள் நம்பிக்கை உடையவர்.

(திராவிட இயக்கம் தொகுதி - 1 நீதிக்கட்சி வரலாறு க. திருநாவுக்கரசு பக்கம் 163)

- க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


கொடிது கொடிது (ஈ.வெ.ரா)


கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது குழவிக்கல்லையும், செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல்.

- விடுதலை 21.10.1957

தமிழ் ஓவியா said...


கடவுளுக்குக் காணிக்கை ஏன்?


கடவுளை மற; மனிதனை நினை என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறியது கண்முன்னே உண்மையென காட்சியளிக்கும் செய்தி.

28.10.2013 தேதியன்று தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி. திருப்பதி கோயிலுக்கு ரூ.35 இலட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் காணிக்கை எல்லாம் வல்ல இறைவன் தன்னையும், குடும்பத்தினரையும், மக்களையும் காப்பான் என்று எண்ணிச் செல்லும் மக்களைக் காக்க ஏழுமலையான் மறப்பானா?

மலைமேல் செல்லும் பேருந்துகள் உருண்டன பக்தர்கள் மாண்டனர். புலி, கரடி, சிறுத்தை தாக்கின பக்தர்கள் பாதிப்பு அடைந்தனர். பக்தர்கள் ஏழுமலையான் சன்னதியில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

எதற்கும் பகவான் அசைந்து கொடுக்கவில்லை பக்தர்களை காக்கவில்லை. எந்த அவதாரமும் எடுக்கவில்லை. கடவுள் கைவிட்டார் மனிதன் கை கொடுத்தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கொடுத்து மக்களை காக்க அப்பல்லோ மருத்துவமனை அதிபர் வழங்கினார்.

(ஆண்டவன் காக்க மாட்டான் என அறிந்திருப்பாரோ) பச்சைக் குழந்தை பாலுக்கு அழுகையில் குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகம் செய்யும் நாடல்லவா?

ஆன்மிக நோக்கில் டாக்டர் பிரதாப் (ரெட்டி) அவர்கள் அளித்திருப்பினும் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரக் கிரீடம் தங்கத்தேர், தங்கப் பூணூல், உண்டியலில் பணம் என்று கொடுக்காமல் (ஏற்கெனவே கொடுத்திருந்தாலும்) உயிர் காக்கும் மருத்துவத்திற்கு தேவையான ஆம்புலன்ஸ் வாகனம் அளித்துள்ளார். அவரின் கடவுள் பற்றைவிட, மனிதநேயப் பற்று வென்று விட்டது. அவரின் மனிதநேயப் பற்றை நாமும் பாராட்டுவோம். என்ன பாராட்டத்தானே வேண்டும். ஏனெனில் வருத்தப்பட வேண்டியது நாமல்ல. நாமம் போட்ட பெருமாள்தானே!

- ச. மாரியப்பன், கோடம்பாக்கம், சென்னை

தமிழ் ஓவியா said...


சர்ச்சில் கூறியது ஒருமுறை


சர்ச்சிலை சொற்பொழிவு ஆற்ற அழைத்தார்களாம். எவ்வளவு நேரம்? என்று கேட்டார் சொற் பொழிவாளர். ஒரு மணி நேரம் பேசினாலும் மகிழ்ச்சியே! என்றனர். அப்படியானால் ஒரே நாளில் வந்து பேசி விடுவேன் என்றாராம்!

அரை மணி நேரம் என்ற போது, ஒரு வாரம் டைம் கேட்டாராம். பத்து நிமிடங்கள் பேச, இரண்டு வாரங்கள் வேண்டும் என்றார். குறுகிய காலத்திற்குள் பேசி முடிப்பது என்பது கடினமான காரியம். அதேபோல் சிறுகதை என்றால் கதை, தீம், இன்ட்ரெஸ்டிங் நடை, பஞ்ச் எல்லாம் இருக்க வேண்டும் என்பதால், நாவல் எழுதுவதைவிட சிறுகதை எழுதுவதே கடினம் நாவல் என்றால், ஒரு தீம் கிடைத்து விட்டால் மெல்ல மெல்ல கதையைக் கொண்டு வந்துவிடலாம்