Search This Blog

30.11.13

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்வும் - பாடமும்


இன்று நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களது பிறந்த நாள். 49 வயதே வாழ்ந்த நமது கலைவாணர், இளம் வயதில் நாடகக் கம்பெனியில் இணைந்து, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். திரையில் (சினிமா) அவர் செய்த அறிவுப் புரட்சி வேறு எவரும் செய்திராத ஒரு முன்னோடிப் புரட்சி.

இவையெல்லாவற்றையும்விட அவரது தனித் தன்மையும் தனிச் சிறப்பும் என்னவென்றால்,  சிறந்த பகுத்தறிவாளர்.

ஈரோட்டில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு வார ஏடுதான் அவரை இப்படி ஒரு ஒப்புவமையற்ற நகைச்சுவைத் தேனில் பகுத்தறிவு சீர்திருத்தக் கருத்துக் களைக் குழைத்துக் கொடுத்து, கலைத் துறையை அதற்குரிய களமாக் கிட அவரை பக்குவப்படுத்தியது.

இதைக் கலைவாணர் அவர்களே பல மேடைகளில் கூறியுள்ளார்! அவருக்கு அருமையான கலைத்துறை வாழ்விணையராகியவர் டி.ஏ. மதுரம் அம்மையார்.

இவரது குழு (NSK குழு) எந்த நேரத்திலும் இணை பிரியாது உடன் இருந்து ஒத்துழைத்தவர் என்.ஆர். சாமிநாதன், ஆழ்வார் குப்புசாமி, புளி மூட்டை இராமசாமி, காக்கா ராதா கிருஷ்ணன், வாத்தியார் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர் பாட்டுகள் எல்லாம் உடனுக்குடன் தயாராகும்!

பகுத்தறிவுப் பிரச்சாரம் இல்லாத நகைச்சுவை நடிப்பு, பாத்திரங்களே இல்லை இவர்களிடத்தில் என்பதே கலைவாணரின் நகைச்சுவை குழுவின் கலையுலகத் தொண்டு.

கலைவாணரின் நகைச்சுவைகளுக்கு வயது இப்போது 70, 80 ஆண்டுகளா கின்றன!

மூத்த தலைமுறைகளாகிய எங்களைப் போன்ற முதுகுடிமக்களால் மட்டும் அவை சுவைக்கப்படாமல், நான்கு தலைமுறை களுக்குப் பிறகு இன்றும்கூட இருபால் இளைஞர்களைகூட நம்மைப் போலவே ஈர்த் துள்ளது மிகப் பெரிய அதிசயம் ஆகும்.

எங்களது பேரன், பேத்திகளும்கூட கலைவாணர் என்எஸ்.கே. மதுரம் நகைச் சுவைகளைப் பார்த்து தொலைக் காட்சியில் சிரித்துச் சிரித்து மகிழ் கின்றனர்!
இப்போது இருப்பதைப் போல சென்சார் கடுமை யான கட்டுப்பாடு அதிகம் இல்லாத காலம் அது!

அவரே சிந்தித்து உரு வாக்கிடும் நகைச்சுவை பாத்திரங்களும், வசனம் பாட்டுகளும், பஞ்ச் என்ற நெற்றியடி பதில்களும் மிகவும் மறக்க முடியா தவை. ஒரு படத்தில் கலை வாணரைப் பார்த்து  அவர் நண்பர் டேய் தெரியுமா நான் ஒரு குத்துவிட்டால், என்றென்றும் உதை ஞாபகத்தில் இருக்கும்படியாக இருக்கும் என்பார்.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைவாணர் ஏய் நான் ஒரு குத்து விட்டேன்னா உனக்கு ஞாபக சக்தியே இருக்காது போய் விடும் ஜாக்கிரதை! என்பார்!

பூம்பாவை என்ற திருஞான சம்பந்தர் பற்றிய படத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நடித்ததில், கலைவாணரின் கிண்டல் கேலி, பலத்தசிரிப்பை உண்டாக்கிடும்.

இவரு (திருஞானசம்பந்தர்) குழந் தையாயிருக்கும்போது அழுதப்ப.. அந்த பார்வதியே வந்து முலைப்பால் கொடுத் தாராம் தெரியுமா? என்று ஒரு பக்தர் கேட்க, என்.எஸ்.கே. உடன்  எந்த பார்வதி? நம்ம பல சரக்கு கடை பரமசிவஞ் செட்டியார் சம்சாரம் பார்வதியா? என்பார்!

சின்ன வயசிலே... கன்னித் தமிழிலே..
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு
கல்வி கற்றுத் தேறாமுன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக்கதைகளை விட்டுத் தள்ளு
குட்டு வெளிப்படுமே! என்பார்

இப்படி எத்தனை எத்தனை அறிவுச் சொடுக்குகள்! அர்த்தமுள்ள கேள்விகள் ஏராளம் சரளமாக வந்து விழும்!

இவ்வளவு சிறப்பு, புகழ் வாய்ந்தவர் கொடுத்துக் கொடுத்தே கடனாளி யாகி வாழ்ந்து பிறகு அதை மறக்க ஏதோ ஒரு தீய பழக்கத்திற்கு எப்படியோ அடிமையாகி, 49 வயதில் புகழின் உச்சிக்கே சென்று வரலாறாகி வாழ்கிறார்!
மாமனிதர்களுக்கும்கூட இப்படி அடிச்சறுக்கல்கள் உண்டு! எனவே எச்சரிக்கையான வாழ்க்கை தேவை என்பதை கலைவாணர் வாழ்க்கை நமக்குத் தெரிவிக்கிறது!

என்றும் அவர்தம் சகாப்தம் ஈடு இணையற்றது!

                  ---------------- -----------------  வாழ்வியல்  சிந்தனைகள் பகுதில் கி.வீரமணி அவர்கள் எழுதிய  கட்டுரை - “விடுதலை” 29-11-2013

45 comments:

தமிழ் ஓவியா said...


சங்கரமடம்


காஞ்சிபுரம் ஏனத்தூரில் உள்ள சங்கர மடத்தின் நிர்வா கத்தில் நடைபெறும் சங்கரா ஆர்ட்ஸ் சயின்ஸ் கல்லூரி நிர்வாகமே! உங்களுக்கு ஓர் கேள்வி!

பெரியார் அறக்கட்டளை சார்பில் தஞ்சை வல்லத்தில் இயங்கும் பெரியார் மணியம் மைப் பல்கலைக் கழகம் தஞ்சை யிலுள்ள நகரப் பேருந்து நிலை யத்திலுள்ள பொது சுகாதார கழிப்பறையை சுத்தம் செய்து, தனது செலவில் இன்று வரை பராமரித்து வருகின்றது.

காஞ்சிபுரம் சங்கரமடம் நிர்வாகம், இம்மாதிரி காஞ்சியில் ஏதாவது ஒரு சமுதாயப் பொது நலன் கருதி செய்வது இல் லையே! ஏன் என்றால் சூத்திர னும், பஞ்சமர்களும் அதை பயன்படுத்துவர்கள் அல்லவா? என்று தஞ்சைக்குச் சென்று வந்த - காஞ்சிபுரத்தைப் பூர்வீக மாகக் கொண்ட - இப்பொழுது சென்னையில் வசித்துவரும் தோழர் அ.நா. பாலகிருஷ்ணன்; அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள் ளார்.

சங்கரமடமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் கர்மா தத்துவத் திலே முழு அளவு நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்.

தொழில் பாகுபாடும்; ஆசாரங்களை சாஸ்திரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்பொழுதுள்ள நிலைமை ஏற்பட்டு விட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்து கொள்ள வேண்டும் - என் கிறார் மறைந்த காஞ்சீபுரம் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல்).

இந்த நிலையில் உள்ளவர் கள் சமதர்ம சமத்துவச் சிந்த னையோடு செயல்பட முன்வரு வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஓர் அதிர்ச்சியான தகவல் - இப்பொழுது சொன்னால் எவரும் எளிதாக நம்பக் கூட மாட்டார்கள்.

1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதிலேகூட தீண்டத்தகாத வர்கள் அக்ரகாரத்துக்குள் நுழையக் கூடாது என்ற பாகுபாடு இருந்தது என்றால்; சங்கர மடம் நண்பர் பால கிருஷ்ணன் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல முதலில் சிந்திக் குமா? சிந்தித்தால் அல்லவா செயல் என்பது அடுத்த கட்டம்.

சிறைக்குச் சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மல ஜலம் கழிக்க வாழை இலை கேட்கிறார் - அவர்களுடைய புத்தி எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளம்.

இந்து மதத்தைச் சேர்ந்தவர் களுக்குக்கூட ஒரே சுடுகாடு கூடாது என்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். கேட்டால் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு சம்பிரதாயம் இருக்கிறதே என்கிறார். சமபந்தி போஜனம் என்பதைக்கூட சங்கரமடம் ஏற்றுக் கொள்வதில்லை.

போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களின் குணதோஷங்களில் பரமாணுக் களும் நாம் சாப்பிடும் அன்னத் தில் ஓரளவு சேருகிறது.

பரிசுத்தமாக இருக்கப்பட்ட வர்களைப் பங்கத்தி பாவனர் கள் என்று சொல்லியிருக் கிறது. அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தியைச் சுத்தப்படுத்தி விடுவார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆகாரம் உள்ளே போய் நம் மனத்தைத் தூய்மையதாக் கும்.

அதே மாதிரி பங்க்த்தி தூஷகர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ளவர்கள் - இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அவர்களுக்குப் பந்தி முழுவதும் அசுத்தமாகி விடுகிறது என் கிறார் சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சரஸ்வதி - இப்படி சொல்லுவது சாதா ரணக் குரல் அல்ல - தெய்வத் தின் குரலாம்.

நண்பர் பாலகிருஷ்ணன் போன்று நல்ல மனம் கொண்ட வர்கள் இத்தகு மனப்பான்மை கொண்டவர்களிடம் தாராள எண்ணத்தையும் மனிதநேயத் தையும், பண்பையும் எதிர்பார்க் கலாமா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு : சட்டம் கொண்டுவர உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.29-திருமணம் செய்து கொள் ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண் களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண் ணும் இணையர் களாக சேர்ந்து வாழும் நடைமுறை நாட்டில் இப் போது அதிகமாகி உள் ளது. சில ஆண்டுகளில் இவர்களில் பெரும்பா லோர் பிரிந்து விடுகின் றனர் அல்லது இறுதி வரை சேர்ந்து வாழ் கின்றனர். இதுபோன்ற பெண்களுக்கும், அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் சட்ட பாது காப்பு இல்லாமல் இருக் கிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ராதா கிருஷ்ணன் தலைமை யிலான அமர்வு விசாரித்து நேற்று வர லாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ கிடையாது. இதுபோன்ற உறவு முறை சட்டத்தால் அங்கீகரிக் கப்படாமல் இருப்பதா லும், இயற்கை திருமணத் துக்கு முரணாக இருப்ப தாலும், இந்த உறவுமுறை பிரிவுக்குப் பிறகு பெண் களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.

எனவே, இதுபோன்ற பெண்களுக்கும், இந்த உறவின் மூலம் அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் எதிர்காலத்தில் சட்டப் பாதுகாப்பு அளிக் கும் வகையில், நாடாளு மன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், இந்த உறவுமுறையையும் இயற்கை திருமண உறவு முறைக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நீதி பதிகள் தீர்ப்பு அளித்தனர்.

தமிழ் ஓவியா said...

சிதம்பரம் நடராஜன் கோயில் பிரச்சினை:

தீட்சதர்கள் அடித்த கொள்ளையை தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்றமும் தடுத்துள்ளன உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து வாதாட வேண்டும்
பக்தர்கள் உள்பட தமிழ்நாட்டின் உணர்வுக்குரிய பிரச்சினை இது
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தட்டும்! கவனம் செலுத்தட்டும்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டுக்குள் இருந்து வருகிறது. மீண்டும் தீட்சதர்கள் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிக்க உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர் - தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வழக்கில் வெற்றி காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:

சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் 2009 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வந்து சேர்ந்தது - தி.மு.க. ஆட்சியில். இதனை எதிர்த்துத் தீட்சதர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அவர்களுக்குப் பாதக மாகவே முடிந்தது. இப்பொழுது உச்சநீதி மன்றம் சென்றுள்ளார்கள்.

இம்மாதம் 25ஆம் தேதி முதல் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் ஓவியா said...

சுப்பிரமணியசாமி என்ற பார்ப்பனரும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இணைந்து கொண்டு தானே உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

சுப்பிரமணிய சாமியின் அடாவடித்தனம்!

திராவிடர் இயக்கத்தைப் பற்றி தேவையில் லாமல் உச்சநீதிமன்றத்தில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

சீரங்கநாதனையும், தில்லை நடராசனை யும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று பாரதிதாசன் பாடினார் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் (பாரதிதாசன் இந்தப் பாடலைப் பாடினாரா? ஆதாரம் காட்ட முடியுமா?)

உண்மை வரலாறு என்ன?

சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர் களுக்குச் சொந்தமானது தானா? உண்மை வரலாறு என்ன?

முதலாம் ராஜராஜன் முதலாவது ராஜேந் திர சோழன் ஆகியோரின் மனைவிகள், தங்கைமார்கள் 50 வேலி நிலங்களை சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். எதற்காகத் தெரியுமா? நடராஜன் கடவுள் முன் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்காகத்தான்.

அவ்வாறு அங்கு ஓதப்படுகிறதா? தேவாரம், திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்கிற முதியவரான ஓதுவாரை இதே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைக்கவில்லையா? நீதிமன்றம் உத்தரவுப்படியல்லவா தேவாரம் திருவாசகம் ஓதுவதற்கு அனுமதி கிடைத்தது (2.3.2008).

சிதம்பரம் நடராஜன் கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து சிதம்பரத்தில் தனிக் கூட்டம் போட்டு பொது மக்களுக்கு உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறினேன் (5.4.1982) அது சிதம்பர ரகசியம் எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்

1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுதே சிதம்பரம் தீட்சதர்கள் கூக்குரல் போட்டதுண்டு.

அப்பொழுது இந்து அற நிலையத்துறை தலைவராக இருந்து நீதிபதி சதாசிவ அய்யர் தீட்சதர்களின் மனுவின்மீது கீழ்க்கண்ட தீர்ப் பினை அளித்தது குறிப்பிடத்தக்கது (31.12.1925).

இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துக்கள் எதுவுமேயில்லை யென்று தீட்சதர்கள் சொல்லுவதும் சரி யல்ல. ஆகவே தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர். மேற் கண்ட ஆலயத்திற்கு எந்தவித வரவு - செலவு கணக்குகளையும் வைக்காமல், தீட்சதர்கள் நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கு உள்ளாகிறார்கள் என்று இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த சதாசிவ அய்யரே எழுத்துப் பூர்வமாகக் கூறிவிட்டாரே!

நீதிபதி டி முத்துசாமி அய்யர் என்ன சொன்னார்?

1883இல் இந்தக் கோயில் தீட்சதர் களிடையே இரு குழுக்கள்- பிளவுகள் ஏற் பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்குச் சம்பளம், ஆலய பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றில் செலவு செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிணக்கு அது. வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது (ஓ.எஸ்.எஸ்.7/1887) அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் சென்றது.

தமிழ் ஓவியா said...

1888இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி.முத்துசாமி அய்யர், ஷெப்பர்டு (Sheperd) என்ற வெள்ளைக்காரர் அடங்கிய அமர்வு (Division Bench) விசாரித்துத் தீர்ப்பும் கூறியது.

முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோ கப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்த சொத்து என்பதற் குச் சிறுதுளியும் ஆதாரம் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களே!

சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததே!

2009இல் திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறையின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், சிதம்பரம் தீட்சதர்களுடன் சுப்பிரமணிய சாமி இணைந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்; தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் மேல் முறையீடு செய்தனர்; இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிமன்றமும் நிராகரித்து விட்டது.

சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்ததும் அக்கோயிலின் உண்மையான வருமானம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒன்றரை ஆண்டுக்குப்பின் சிதம்பரம் கோயிலின் உண்டியல் வருமானம் (14.7.2010 வரை) ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தீட்சதர்கள் அடித்த கொள்ளை!

ஆனால் இதே கோயில் தீட்சதர்கள் இக் கோயிலின் மாத வருமானம் என்று உயர்நீதிமன்றத்தில் கணக்குக் காட்டியது எவ்வளவு தெரியுமா?

ஆண்டு வருமானம் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமேதான் என்றும். இத்தொகையில் 37 ஆயிரம் ரூபாய் செலவு என்றும் 199 ரூபாய் மிச்சம் என்றும் கணக்குக் காட்டினர் என்றால் - அரசு அதிகாரிகள் காட்டிய கணக்கோடு ஒப்பிடும்போது எவ்வளவு பெருந் தொகையைக் கொள்ளையடித்துள்ளனர், ஏப்பமிட்டுள்ளனர் தீட்சதர்கள் என்பது விளங்கவில்லையா?

அரசின் கைக்குக் கோயில் சென்றது என்றவுடன் தங்களின் பகற்கொள்ளைக்கு மூடு விழா செய்யப்பட்டதே என்ற ஆத்திரத் தின் காரணமாக, ஆற்றாமையின் காரணமாக உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர் - ருசிகண்ட பூனையால் சும்மா இருக்க முடியுமா?

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...

இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு நமது வேண்டுகோள்:

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை நியமித்து தீட்சதர்களின் பொய் வழக்கை முறி யடித்து, கோயில் சொத்துக்கள் தனிப்பட்டவர் களுக்குக் கொள்ளை போகாமல் காப்பாற்ற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஏதோ திராவிடர் கழகம் சொல்லுகிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது; பொது மக்கள். பக்தர்கள், பொது நல விரும்பிகள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டி வந்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த இரு செயலாளர்கள் நாக. வெங்கடேச தீட்சதர், நடராஜ் தீட்சதர் ஆகியோர் கையொப்பமிட்டு, தில்லை நடராஜன் கோயில் தீட்சதர்கள் செய்யும் அட்டூழியங்களை ஊழல் களைப் பட்டியல் போட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இந்தியப் பிரதமர், காஞ்சிபரம் சங்கராச்சாரியார் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.


சென்னை
29.11.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


மோடியின் மறுபக்கம்


மோடியைப் பற்றி இந்திரன் சந்திரன் என்று ஒரு பக்கம் திட்டமிட்ட வகையில் புகழ் புராணப் பட்டம் பறக்க விடப்பட்டாலும், அவரைப்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் மூலம் அவரது அந்தரங்கம் அசிங்கமானது என்பது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக பிரதீப் சர்மா என்னும் அய்.ஏ.எஸ். அதிகாரி சி.எஸ்.என். அய்.பி.என். ஆங்கில அலை வரிசையில் அளித்த பேட்டி ஒன்று போதும் - மோடி என்னும் விகார மனிதனின் முழு வடிவத்தைத் தெரிந்து கொள்வதற்கு.

இதில் ஒரு பெரிய வெட்கக்கேடு என்ன வென்றால், மோடியைப்பற்றி வெளிவரும் அசிங்கமான தகவல்களை இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், முதலாளித்துவ சக்திகளின் கைகளில் பதுங்கியுள்ள ஏடுகளும், இதழ்களும் அப்படியே மூடி போட்டு மறைக் கின்றன.

தெகல்கா ஆசிரியர் தேஜ்வால் பற்றிய தகவல்களைப் பெரிதாக்கி, மோடியின் பெண் தொடர்பான சங்கதிகளைக் கழுத்தைத் திருகிப் புதைத்து விட்டனர்.

மான்சி என்னும் கட்டடக் கலை பொறியாள ரான பெண்ணுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.அய். வசம் விசார ணையை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மான்சி என்ற அந்தப் பெண்ணுக்கும் மோடிக்கும் இடையில் நடைபெற்ற தொலைப் பேசி உரையாடல்களையும் பிரதீப் சர்மா அந்தப் பேட்டியில் கூறினார். ஒரு பெண்ணிடம் பேசத் தகாத இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களை உதிர்த்திருக்கிறார்.
நள்ளிரவில்கூட மோடியை, அந்தப் பெண் சந்தித்திருக்கிறார் என்கிற தகவல்கள் எல்லாம் வெளி வந்துள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி, விதிமுறை களை எல்லாம் தாண்டி, கட்டடக் கலை தொடர்பாக பெரிய பெரிய ஒப்பந்தங்கள் மோடி அரசால் அந்தப் பெண்ணுக்கு, அளிக்கப் பெற்று கோடிகளை வருவாயாகப் பெற்றிருக்கிறார்.

விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் அந்தப் பெண் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அந்தக் காரை பழைய விலைக்கு விற்றால்கூட அதை வாங்கும் தகுதி பலருக்கு இல்லை; காரணம் பழைய விலைகூட கோடிகளைத் தொடும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பேட்டியில் போட்டு உடைத்து விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு வரிகூட இதனை மோடியால் மறுக்க முடியவில்லை என்பதுதான். பதில் சொல்ல ஆரம்பித்தால் வசமாகச் சிக்கிக் கொண்டு விடுவோம் என்ற அச்சம்தான்.

பிரதீப் சர்மாவை அந்தப் பெண் சந்தித்து வந்ததால், அந்தப் பெண்ணை உளவு பார்க்க ஏற்பாடு செய்துள்ளார், முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அந்த அளவுக்கு அந்தப் பெண் ணின்மீது உரிமை கொண்டாடியிருக்கிறார் உள்ளத்தில் என்பதுதான், இதற்குள் குடி கொண்டிருக்கும் உண்மையாகும்.

ஒரு கட்டத்தில் பிரதீப் சர்மா அய்.ஏ.எஸ். கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளும் தள்ளப்பட் டுள்ளார். 27 ஆண்டு காலம் சிறந்த அய்.ஏ.எஸ். அதிகாரியாக பெயர் பெற்றவர்; இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் மோடியாலும் புகழப்பட்டவர்கூட!

அந்தப் பெண் விஷயத்தில் இவர் போட்டிக்கு வந்து விடுவார் என்ற நினைப்பில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர் இந்தமோடி; அவர் பேச்சை நம்பி அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் யெல்லாம் நட்டாற்றில் விடப்படவில்லையா?

இத்தகு குணாளர் தான் பாரதப் புண்ணிய பூமியின் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க ஆசைப்படுகிறார்.

நாட்டு மக்கள் அசிங்கப்படப் போகிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப் பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகத்திற்கு பெரியார் பெருந்தொண்டரின் நன்கொடை


தமிழர் தலைவர் மானமிகு முனைவர் கி.வீரமணி அவர்கள் 7.11.2013 விடுதலை இதழில் செல்வத்திற்கு நோய் வரும் - எச்சரிக்கை என்ற தலைப்பில் அருமை யான வாழ்வியல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரையில் எங்கள் செய்யாறு நகரைச்சேர்ந்த முதுபெரும் பெரியார் தொண்டர் 88-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் பா.அருணாசலம், பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ள நன் கொடையைப் பற்றி புகழ்ந்துள்ளார்.

பா.அருணாசலம் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள உத்தமர். முயற்சி திருவினை ஆக்கும் என்ற குறள் நெறிக்கு எடுத்துக் காட்டு அவர்.

தமிழர் தலைவர் திருக்குறளில் நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலாதான் (குறள் 1006)

என்ற குறளுக்கு அருமையான பொருளைக்கூறி இருக்கிறார். பெருஞ்செல்வம் படைத்த ஒருவன் தானும் நுகர மாட்டாதவனாய் தகுதி படைத்தவர்களுக்குக் கொடுத்து உதவும் பண்பும் இல்லாதவனாய் இருப்பானேயானால், அவன் தன் பெருஞ்செல்வத்திற்கே கேடு பயக்கும் ஒரு நோயாகக் கருதப்படுவான்.

தான் உழைப்பால் ஈட்டிய செல்வத்தை ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவரிடம் கழக வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கி வருபவர் அண்ணன் அருணாசலம் தக்கார்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப்பொருள் உண்டானாலும் அதனால் பயன் இல்லை என்பது வள்ளுவர் பொன்மொழி ... (குறள் 1005)

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களால் நிறுவப்பட்டு அவர்களை வேந்தராகக் கொண்டு தஞ்சை - வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பல்லாயிரம் மாணவர்கள் நாட்டிற்குப் பல்வேறு துறைகளில் சேவை புரிந்து வருகின்றனர்.

இரு மாதங்களுக்கு முன்னால் தமிழர் தலைவர் விடுதலையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். பெரியாரின் பரிந்துரையால் நன்மை அடைந்தவர்கள் தங்கள் நன்றிக்கடனாக விடுதலைக்கு சந்தா செலுத்தி இருப்பார்களானால் இன்று விடுதலை இதழ் 2 இலட்சத்திற்கு மேல் வாசகர்களைக் கொண்டு சிறப்புடன் விளங்கும் என்பதே அந்த செய்தி.

தந்தை பெரியார் ஒரு பொன்மொழியைக் கூறுகிறார். நாம் தண்ணீர்ப் பந்தல் வைத்துள்ளோம். தண்ணீர் குடித்து, தாகத்தை தீர்த்துக் கொண்டவர் களில் எத்தனை பேர் தண்ணீர்ப் பந்தல் வைத்தவர் களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணு கிறார்கள்? ஆயிரத்தில் ஒருவர் கூடக்கிடையாதே.

திருவள்ளுவர் இரு வகை மனிதர்களை இரு வேறு மரங்களுக்கு ஒப்பிடு கிறார். ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின் - (குறள் 216)

தக்கார்க்கு உதவாத காரணத்தில் ஒருவராலும் விரும்பப்படாதவ னுடைய செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது (குறள் 1008) பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம் போன்றோர் ஊரின் நடுவே உள்ள பயன் மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

தமிழர் தலைவர் தொடங்கியுள்ள பெரியார் உலகம் என்ற அரிய திட்டத்திற்கு அண்ணன் அருணாசலம் தன் குடும்பம் சார்பில் 10 பவுன் (இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார். நண்பர்களிடம் பெரியார் உலகம் நன்கொடை பெற்று பதினாறரை பவுன் வழங்கியுள்ளார்.

வாழ்க பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம்!
வளர்க அவர்தம் தொண்டு!

வாழ்க தமிழர் தலைவர் மானமிகு முனைவர் வீரமணியார்!
வெல்க அவர்தம் பகுத்தறிவுத் தொண்டு!

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


போலிக் கடவுள்கள்


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில்களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!

விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை. விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.

சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது. அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது.

சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின்டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.

(ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி



ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர் வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேதவாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்



மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம்பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங்கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப் பாரு!

-கி.கி.ஜின்னா

தமிழ் ஓவியா said...


உலகப் பகுத்தறிவாளர்கள்

பேரறிஞர் அண்ணா அவர் கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சியையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத் தைத் தட்டி எழுப்பினார்.

அறிஞர் அண்ணா கூறு கிறார்;

கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!

உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்

அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

முதலாளிகளின் கொடுமைகளை எடுத் துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்

துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்

மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்

சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா

உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண்டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்? (நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)

தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

அறிவியல் வளர்ச்சி



நீங்களெல்லாம் நன்றாக உணர்ந்துள்ள உண்மைதான் அறிவியல் வளர்ச்சி.

பொறியியல் துணைக் கொண்டு எத்தனை படிக்கட்டுகளைத் தாண்டி அந்த வளர்ச்சி வந்திருக்கின்றது என்பது முதன் முதல் சக்கரம் - உருளையைக் கண்டுபிடித்தானே, அது அறிவியலில் தொடக்கக் கால வளர்ச்சி. சக்கரம் கண்டுபிடிக்காமலிருந்திருப்பின் மகா விஷ்ணுவே கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். திருமாலுக்குக் கூடச் சக்கரம்தான் பெரிய ஆயுதம்.

அசோகர் காலத்தில் அதே சக்கரம் சமாதானத்திற்கு அடையாளம்; போருக்கு ஆயுதமன்று.

நூல்: பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன் -பக்கம் 132

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுவிக்கப்பட வேண்டும்: கலைஞர் கருத்து


கேள்வி :- பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந் தீர்கள்; அதை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்?

கலைஞர் :- புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.

29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.அய். அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன. அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது கூறும்போது, சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார்.

அதுதான், ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தார். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்தப் பேட்டரி மூலம், இயக்கப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் எனப் பொதுவாக பதிவு செய் திருந்தேன். எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதிவிட்டேன்.

வழக்கு விசாரணையில், இதுபோல் வாக்குமூலம் தரவில்லை என்று பேரறிவாளன் மறுத்தார். குறுக்கு விசாரணையில், தடா நீதி மன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக் கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதி விட்டதாகக் குற்றம் சாட்டினார், அவற்றை நான் மறுத்துவிட்டேன் என்று குறிப் பிட்டுள்ளார். தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்? காவல்துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


டிசம்பர் -2 மறவாதீர்! தஞ்சையைப் பற்றி தந்தை


எங்கும் இயக்கத் தோழர்கள் இருந் தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக் குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல. நான் காங்கிரசில் இருந்த காலத்திலும், தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத் திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள் ளது.

எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ, அதைத் தமிழ்நாடு முழுவதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும்

தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் - தமக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்ட விழாவில் தந்தை பெரியார் சொன்ன வடிகட்டிய சொற்கள்தான் இவை (3.11.1957).

ஆம்! இந்தத் தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கமும் அளிக்கப்பட்டது. (1.2.1998).

ஆம்! இதே தஞ்சையில்தான் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழர் தலைவரிடத்தில் 100 சவரன் தங்கமும் அளிக்கப்பட்டது. (7.10.1979).

ஆம்! இதே தஞ்சையில்தான் வரும் டிசம்பர் 2ஆம் தேதி பெரியார் பேருருவச் சிலைக்காக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதியை அளிக்கப் போகிறார்கள்.

நமது தலைவருக்கு மட்டுமல்ல; இந்த வரலாற்றுப் பொன் மணக்கும் விழாவில் நாமும் பங்கேற்றோம் என்ற பெருமையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுவோம் - வாருங்கள் தோழர்களே வாருங்கள்!

குடும்பம் குடும்பமாக வாருங்கள்!

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சர் ஆ. இராசா பதவி விலக காரணமான உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாலியல் புகாரில் சிக்கினார்!

தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து, உடனே சுப்ரீம்கோர்ட்டுக்கு - சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து உச்சநீதிமன்ற நீதிபதி யானவர் வங்காளப் பார்ப்பனர் கங்குலி.

இந்தப் பெரிய மனிதர் மீதுதான் பெண் வழக்குரைஞர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு; தன்னுடைய உதவியாள ரான பெண் வழக்குரைஞரிடம் (65 வயது உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - அந்தக் கால கட்டத்தில் (62 - 65 வயது) பாலியல் புகார்!

மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எச். டட்டு, ரஞ் சனா தேசாய் ஆகியோர் விசாரணை முடித்து தலைமை நீதிபதியிடம் அறிக் கையை தந்துள்ளனர்!

நீதிபதி கங்குலி கொடுத்த வாக்கு மூலத்தில் உள்ள வாக்கியங்கள். (ஏடுகளில் வந்துள்ளபடி)

நான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் நான் உடல் ரீதியாக அவருக்கு எந்த துன்புறுத் தலையும் செய்யவில்லை. (அப்படியா னால் மன ரீதியாக நடத்தினேன் என்று சொல்லுகிறாரா என்று இதைப் படித்த வாசகர் கேட்கிறார்).
அந்தப் பெண் பயிற்சிக்காக என்னிடம் அதிகார பூர்வமாக ஒதுக்கப் பெறாத நிலையில் பயிற்சி பெற்றார்

கேள்வி: ஓட்டல் அறைக்கு நீங்கள் அழைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டி உள்ளாரே?

கங்குலி: அப்போது நான் பணி நிமித்தமாக டில்லியில் இருந்தேன். அவரும் டில்லியில் இருந்தார். அவர் தான் என்னை நாடி வந்தார்!...

ஒரு பெரு நிலை நீதிபதி (இவருடைய அனுமதியின்றி அவர் எப்படி ஓட்டல் அறையில் சந்திக்க முடியும் என்று கேட்கிறார் மற்றொரு வாசகர்)

இந்த வங்காளப் பார்ப்பன நீதிபதி, ஊழலை, லஞ்சத்தை, ஒழுக்கக் கேட்டை ஒரு போதும் சகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்ஜித்து, மற்றொரு பஞ்சாப் பார்ப்பன நீதிபதி யுடன் இணைந்து 2ஜி வழக்கில் அமைச் சர் ராஜாவை, விசாரணையே துவங் காத நிலையிலேயே பதவிலக வேண்டி கடும் தாக்குதல்களைப் பொழிந்த நீதிமான்! இவர் கதை இப்போது இப்படி!

உலகமே அறிந்து அகல விழி களைத் திறந்து பார்க்கிறது!

பார்ப்பனரல்லாத பஞ்சாப் தலைமை நீதிபதியாக, உயிருக்குத் துணிந்து பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டீஸ் வி. இராமசாமி மீது, ஏதோ கூடுதல் விலை கொடுத்து மேஜை, நாற்காலி வாங்கி யதையும், அனுமதியோடு ஊருக்கு டெலிபோன் எடுத்துச் சென்றதை யெல்லாம் ஊழலோ ஊழல் என்று ஓங்காரக் கூச்சலிட்டவர்கள் கங்குலி புராணம் கண்டு என்ன சொல்லப் போகிறார்கள்?

நடவடிக்கை வருமா? இல்லையேல் மனுதர்ம முறைப்படி நீதி தானா? நாடே கேட்கிறது!

பார்ப்பனர்களின் தகுதி, திறமை, இதோபதேசத்தின் யோக்கியதை இப் போது புரியவில்லையா?

தமிழ் ஓவியா said...


நடராஜன் கோயில்: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!


சிதம்பரம் நடராஜன் கோயிலை மீண்டும் தீட்சதர் பார்ப்பனர்களிடத்தில் ஒப்படைக்கக் கூடாது (அவர்கள் அடித்த கொள்ளைகள் போதும்! போதும்!!) என்பதை வலியுறுத்தி 4.12.2013 புதன் காலை 11 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலையருகில் நகர மக்கள் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார்கள். தோழர்களே திரள்வீர்! திரள்வீர்!!

- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் அருள்மொழி

சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச் சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக பகுதி யில் நாளை (1.12.12003) இரவு 9 மணிக்கு நடைபெறும் விவாதத்தில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி பங்கேற்கிறார்.

தமிழ் ஓவியா said...




மோடியின்பிம்பத்தைப்பெரிதுபடுத்திக்காட்டும் இணையதளமோசடிகள்அம்பலம்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!

புதுடில்லி, நவ.30- தொழில் நுட்பத்தில் நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி இணைய தளங்களில் பொய்யான வற்றையும், கற்பனை களையும் கலந்து நரேந் திரமோடியைத் தூக்கி நிறுத்தும் முகத்திரை தில் லுமுல்லு அம்பலத்துக்கு வந்துள்ளது.

கோப்ரா போஸ்ட் எனும் இணையதள ஏடு 'ஆபரேசன் புளு வைரஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் செயல்பாடு களை ஆய்வுசெய்தது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் போலியாகப் புகுந்த இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில், 12 நிறுவனங்கள் மற்றவர்களின் முக வரிக்குள் கடுமையான முறையில் உருவாக்குகிற ஒவ்வொரு கருத்துக்கும், ஏராளமானோர் ஆத ரித்து கருத்து எழுதுவது போல் ஓர் அறையில் அமர்ந்துகொண்டே எழுதித்தள்ளுகிறார்கள் எனத் தெரியவந்ததாக, கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவிக்கிறார்.

அவதூறில் பா.ஜ.க.வே முன்னணி!

இத்தகைய அவ தூறுப் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருப்ப தாகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பிரபலப் படுத்துவதற் காக விடியவிடிய வேலை செய்வதாகவும், இதற் காக பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருப் பது தெரியவந்தது என் றும் அவர் கூறுகிறார்.

மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஏராள மான முஸ்லீம்கள் கருத் துச் சொல்வது போல் தோற்றத்தை ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் பெயரில் கணக்குகளைத் துவக்கி பின்னூட்டங்களை இடுவதாகவும் அனி ருத்தா தெரிவிக்கிறார்!

போலியான பெயர்களில்....

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன அய்.டி. அய் நிபுணர் ஒருவர் கூறும் போது, முக்கிய மாக முகநூல் மற்றும் டிவிட்டர் இதர உலக அளவிலான முக்கிய ஊடகங்கள் நடத்தும் பிளாக்குகளில் பல விதமான பெயர்களில் கணக்குகள் திறக்கப் படுகின்றன.

இதற்கு நிலை வட்டு (ஹார்டு டிஸ்குகள்) தேவையில்லை. மேலும் இண்டர்நெட் வழங்கனில் (சர்வர் களில்) இருந்து பல போலியான பெயரில் அய்.பி முகவரிகள் உரு வாக்கி கொள்ளும் தொழில் நுட்பம் போன் றவை பிரபல இணைய தள கண்காணிப்பு சாத னங்களை ஏமாற்றிவிடும் ஆகையால் அவை எல் லாக் கணக்குகளையும் வேறு வேறு நபர்கள் அனுப்பியதாக காட்டிக் கொள்ளும்,

இதன் காரணமாக ஒரு குறிப் பிட்ட நபரைப்பற்றிய பதிவுகளை பலர் கூறுவ தாக எடுத்துக்கொண்டு தானாகவே அந்த இணையதளம் அந்த நபருக்குமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும், இந்த வகையில் தற் போது முன்னணி பத் திரிகையான டைம்ஸ், மோடியை இந்த வருடத் தில் சிறந்த மனிதர்கள் பட்டியலில் சேர்த்து வாக்குப்பதிவிற்கு விட் டுள்ளது. இதில் விழும் ஓட்டுக்களின் நம்பகத் தன்மை தற்போது கேள் விக்குறியாக உள்ளது.

தன்னைப்பற்றிய செய்தியை மறைக்கும் தொழில் நுட்பம்

தற்போது ஊடகங் களை விலைக்கு வாங்கி யதன் மூலம் மான்சி/மாதுரி என்ற பெண் ணைத்தொடரும் விவ காரத்தை மறைத்து, தெகல்கா விவகாரத்தை இரவும் பகலும் ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள், அதே போல் இணையதளத்திலும் மோடிக்கு எதிரான செய்திகளை தேடும் தளத்தில் இருந்து மறைத்து விடும் தொழில் நுட் பத்தையும் கையாண்டு வருகிறார்கள்,

எடுத் துகாட்டிற்கு குஜராத் மாநிலம் குறித்து தேடும் பட்சத்தில் மோடியின் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே அவர்களின் தேடலில் கிடைக்கும், உண்மை நிலவரங்கள் எதுவும் தேடுதளத்தில் கிடைக்காது. இது மிகவும் மோசமான ஓர் உதாரணமாகும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அய் டி நிபுணர் ஒருவர் கோப்ரா போஸ் டிற்கு தெரிவித்தார்.

இந்த வகையில் தான் உலகில் உள்ள முக்கிய பத்திரிகைகள் நரேந்திர மோடியை இந்தியாவின் முக்கிய நபராக தவறா கக் கணித்து விடுகிறது, மோடியின் டுவிட்டர் அக்கவுண்டில் இணைந் துள்ள லட்சக்கணக் கான நபர்கள் என்பது சில நூறுகள் கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற போலி அய்.டி.கள் மூலம் ஒருவர் நூறு கணக்குகள் கூட உருவாக்கி மோடி யின் ஆதரவாளர்கள் என காட்டிக்கொள்ள லாம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி அலை வரிசையில் மோடியின் இந்த மோசடிதனத்தை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


பெரியார் நூலக வாசகர் வட்டத்திற்கு வாழ்த்துகள்!

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் நடத்திப் பெருஞ் சாதனையைச் செய்துள்ளது. அதற்கான இரு நாள் விழாக்கள் சென்னை பெரியார் திடலில் நேற்றும் இன்றும்; ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டு இடையில் தொய்வு இன்றி தொடர்ச்சியாக 2000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்றால் அது ஒன்றும் சாதாரண செயல் அல்ல!

புயல் வீசினாலும், சுனாமி ஏற்பட்டாலும், கடும் மழை பொழிந்தாலும், வியாழன் மாலை என்றால் சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலக வாசகர் வட்டம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கை எல்லோர் மத்தியிலும் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை உண்டாக் குவதற்கு இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயலாற்றியிருக்க வேண்டும் என்று நினைத் துப் பார்க்க வேண்டும்.

தொடங்கும்போது ஆர்வமாக வருவார்கள். அது தொடரும்போது தான் ஆயிரத்தெட்டுச் சிக்கல்; நிருவாகிகளுக்கிடையே கருத்து மோதல்; குழுக்களாகப் பிரிந்து செயலாற்றுதல் என்ற நோய்த் தாக்கி அந்தச் செடி பட்டுப் போய் விடும்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் அதற்கு விதி விலக்கு; ஓர் அமைப்பு கூட்டுப் பொறுப்போடு, நல்ல குடும்ப உறவோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டே பெரியார் நூலக வாசகர் வட்டம்.

1976 நெருக்கடி நிலை காலத்தில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் கைது செய்யப்பட்ட கால கட்டம் அது.

அந்த நேரத்தில் நண்பர்கள் சிலர் சேர்ந்து இப்படி ஒரு கரு உருவாக்கப்பட்டது. செவ்வாய் தோறும் பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்வது என்று ஆரம்பிக்கப்பட்டது.

நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பின்னர் அதிகார பூர்வமாக ஓர் அமைப்பாகத் தொடங் கப்பட்டது. திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகளுள் ஒன்றாக பெரியார் திடலில் இயங்கி வருகிறது. வியாழன் மாலை வாரந் தோறும் நடைபெறும் கூட்டத்தில் தமிழ் நாட்டில் குறிப்பாக தலைநகரில் பேசாத முக்கிய தலைவர்களோ, சிந்தனையாளர்களோ, பகுத் தறிவாளர்களோ அரிது என்றே கூறலாம்.

இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டு மானால் இந்த அமைப்பில் பேசுவது பெருமைக் குரிய ஒன்று என்று கருதும் அளவுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டம் வளர்ந் தோங்கியுள்ளது.

தமிழுக்கும், தமிழினத்துக்கும், முற்போக்குக் குத் தொண்டு செய்துள்ள பெரு மக்களுக் கெல்லாம் விழா எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் விழாவாம் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அய்யா அண்ணா பிறந்த நாள் விழாக்கள் கலை விழாக்களாகக் கொண் டாடப்பட்டு வருகின்றன - போட்டிகள் நடத்தப்படுவதும் உண்டு.

வெறும் கூட்டங்கள் என்பதோடு அல்லாமல், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வமைப்பில் ஆற்றப்பட்ட சிலரின் உரைகள் நூலாகவும் வெளி வந்துள்ளன. குறிப்பாக புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் சொற்பொழிவுகளை நடத்தி, அந்தவுரைகள் தொகுக்கப்பட்டன. பெரியாரியல் இராமா யண ஆய்வுச் சொற்பொழிவுகள் என்ற நூல்களாக வெளிவந்துள்ளன.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பார்வையாளராக வந்த சிலர் பிற்காலத்தில் எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், ஏன், அமைச் சர்களாகவும்கூட ஆகி இருக்கின்றனர்.

2000 நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பெரியார் நூலக வாசகர் வட்ட நிருவாகிகளைப் பாராட்டு கிறோம். மேலும் வளர்ந்து கின்னசில் இடம் பிடிக்கச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


உழைப்பு


எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.

(விடுதலை, 11.4.1947)

தமிழ் ஓவியா said...


சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு

சென்ற வாரம் 22, 23 ஆம் தேதிகளாகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட, நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு, பெங்களூர் சட்ட சபை மெம்பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சாஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது.

சுமார் ஆண், பெண் உள்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய் திருந்தார்கள். அவ்வாலிப சங்கத்தலைவரும், மகாநாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபன்யாசமும் வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களும், பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.

அவற்றை ஒவ்வொருவரும் கவனித்துப்படிக்க வேண்டியது அவசியம். தவிர, இம்மகாநாடானது அளவுக்குமேல் வெகுவிமரிசையாகவும் அதி ஊக்கமாகவும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்டதென்பதையே காட்டுகிறது.

அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உலகத்தையே மூட நம்பிக்கையிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளாகவே இருந்தன.

உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத் தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங் களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டும் என்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும், கசையடியும் கொடுக்கவேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்கு கிறது.

அன்றியும் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு உள்ளதுபோலவே பெண் களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண் களுக்கும் குடும்பச் சொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும்போது அனுபவித்து வந்த வாழ்க்கை யையே அளிக்கவேண்டுமே அல்லாமல்,

ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக்கொண்டு வக்கீல் வீடுகளிலும், கோர்ட்டுகளிலும் அலையா திருக்கச் செய்யவேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக் கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின்றன.

இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங் களுடன் திருப்தி அடைந்துவிடாமல் இவை அமலுக்கு வரத் தகுந்த அளவு வேலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிபர் மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மனங்களே நிறைவேறி இருக்கின்றன.

ஒரு நாடு விடுதலையடைய வேண்டுமானால், அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வரவேண்டும் என்கின்ற ஆப்தவாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறி குறிகள் காணப்படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்ற தானது இம்மகாநாட்டால் அறியலாம், ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் B.A.L.T.; ஊ.ஏ நாயகம் B.A.;பாரிஜாதம் B.A.; இந்திராணி பால சுப்ரமணியம், ஸ்கவுட் மாஸ்ட்டர், அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள் முதலிய ஸ்திரீ ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத் தாய்மார் களையெல்லாம் உறுதிப்படுத்தியது.

எனவே, வாலிப சங்கத்தையும், இம்மகா நாட்டையும், அதன் நிர்வாகிகளையும், அதற்கு ஆதரவளித்த பெரியோர்களையும் நாம் மனப் பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?

- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


வீரமணிபற்றி உலக இதழ்கள்


ஆனந்த விகடன் பார்வையில் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி போன்றவர் பேசும்போது குறுக்கே பேச மாட்டார் கவன மாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர் களைக்கூட வாங்க போங்க என்று தான் சொல்வார்.

நன்றி: ஆனந்த விகடன் 22.5.1983

சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறி பிசகாது, மலிவான விமர்சனங்களில் இறங்காது, தொய்வு தட்டாமல் பேசக் கூடிய நா. வல்லவர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.

நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு 1983

பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.

நன்றி: நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 3, 1982

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற இயக்கம் பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கையில் வலிமை மிக்கதாகவும், சக்தி வாய்ந்த இயக்கமாகவும் இருக்கிறது. அதன் தலைவர் கி.வீரமணி.

நன்றி: இந்தியா டுடே ஜனவரி 15, 1983.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கணிப்பு!

வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்சக் காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர்.

இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்-படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

- விடுதலை 6.6.1964)

தமிழ் ஓவியா said...


கண்மணி வீரமணியின் அரும்பணி


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர் களால் தமிழர்க்குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாது காக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல;

அவற்றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலைவனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர் களின் இசையில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத்திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன். அருவியில் குளித்தோர்க்கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை.

அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும் எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச்சியைத்தான் என் னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத் துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரம் மிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார்.

என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.

அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்ட மாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப் போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார் களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன் தான்.

(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்


இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக் கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டி ருக்கும் தமிழினத் தலைவர்களில் பகுத்தறிவுத் தமிழராகத் திகழும் அய்யா கி.வீரமணி அவர்கள், நீதி மன்றங்களில் திருக்குறள் தேசிய நூலாக வைக்கப்பட வேண்டும் என அனைவருக்கும் முகாமை யான வேண்டு கோளாக விடுத்திருப்பதை உலகத் தமிழர் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாகத் திகழும் லண்டன் த.மு.க. வழி மொழிந்து நெஞ்சார வரவேற் கின்றது.

திருக்குறள் நீதி நூல் நேர்மையில்லா செயலுக்கு நெற்றியடி கொடுத்து நீதியை (பக்க சார்பற்ற முறையில்) நிலை நிறுத்தும் ஒப்பற்ற அரிய நூல்.

உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி, தமிழ் செம்மொழி என அறிவிக்க ஆதாரமாக இருப்பவை திருக்குறளே. 2000 ஆண்டு களுக்கு மேலான வாய்மைச் சிறப்பு மிக்க நூல் என உலகமாந்த இனமே நெஞ்சார ஏற்றுச் சிறப்படையும் சிறந்த நூல் என்பதை தமிழக அனைத்து மக்களும் சமய வேறுபாடு களின்றி தர்க்க வாதங்கள் செய்திடாது, பகுத்தறிவுச் சிந் தனையோடு முழு ஆதரவு நல்கி அறிவு நூலான திருக்குறளை நீதி மன்றங்களில் வைத்துப் போற்றிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தமிழர்களின் எண்ணம் ஈடேறிட! வாழ்வு முன்னேறிட வாய்மை வெல்லும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!


லண்டன்
10.9.2004

- ம. தேவதாசு,
லண்டன் தமிழர்
முன்னேற்றக் கழகம்

தமிழ் ஓவியா said...


ஆதி திராவிடர் தனிப் பிரிவு உண்டா?


கேள்வி: திராவிடர் கழகத்தில் ஆதிதிராவிடர் பிரிவு என்று ஒன்று உண்டா?

பதில்: திராவிடர் கழகத்தில் அப்படி ஒரு பிரிவு நிச்சயம் இல்லை. இருக்க முடியாது. காரணம், திராவிடர் கழகம் என்ற அமைப்பில் உறுப்பினர் ஆனாலே ஆதிதிராவிடர், மீதித் திராவிடர் என்ற பேதம் தானே பறந்துவிட வேண்டுமே!

சென்னை மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் அவர்களிடம் திராவிட நாடு திராவிடருக்கானால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம்? என்று கேள்வி கேட்கப்பட்ட போது, அய்யா அவர்கள் சொன்ன பதில் லாபம் இல்லை. நட்டம்தான். ஆதி என்ற இரண்டு எழுத்துக்களை வெட்டியெறிந்து விடுவோம் என்றார்கள்.

அரசியல் கட்சிகளால் இப்படி ஒன்று வாக்குகளை வைத்தே உருவாக்கப்படுகிறது. உண்மையான சமுதாயப் புரட்சி இயக்கத்தில் எப்படி அது இருக்க முடியும்? அதே நேரத்தில், சமுதாயத்தில் அழுத்தப்பட்டு அடித்தளத்தில் கிடக்கும் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திராவிடர் கழகம் அன்று முதல் இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணியின் பதில்
(விடுதலை ஞாயிறு மலர் 21.8.1994)

தமிழ் ஓவியா said...


வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாதாம்! மசோதாவைத் தடுத்து நிறுத்துவீர்!


மத்திய மனிதவள அமைச்சக மான கல்வி அமைச்சு நாடாளு மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாகாணங்களில் OBC என்ற இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளது. அங்கே OBC பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வட கிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா?

இது சரியான தகவலாக இருப்பின் இது வன்மையான கண்டனத் திற்குரியதே!

சமூக நீதி, இட ஒதுக்கீடு இந்தியா முழுவதற்கும்தான். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப் பாடு எடுப்பது தவறான சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டு வதால், அதனைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார் களாம். இது ஓர் ஆபத்தான ஆரம்பமாகும்; முளையிலேயே இது கிள்ளி எறியப்படவேண்டும்.

உடனடியாக சமூக நீதிக்கான அனைத்து அமைப்புகளும், இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண் டும்.

- கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் (விடுதலை: 5.8.2011)

தமிழ் ஓவியா said...


குடும்பங்களின் வாழ்த்துக்கள்!


உள்ளமெல்லாம் நிறைந்தே தான்

நன்றியுடன் வாழ்த்துகின்றோம்!

உறவுக்குப் பலர் இருப்போர்

உங்களிடம் அன்பு பெற்று

குடும்பத்து மூத்தவர் போல்

உங்களிடம் கலந்து பேசி

தாங்கள் பெறும் ஆறுதலை

குடும்பம் குடும்பமாய்

நன்றியுடன் நினைத்தேதான்

வாழ்த்துகின்றோம் இன்றும்மை!

எப்படித்தான் உணர்வீரோ

ஆறுதல் தேவையுள்ளோர்

கேட்குமுன்னே அறிந்திடுவீர்

அன்பான வார்த்தைகளே

அருமருந்தாய் கவலைபோக்கக்

கனிவான கருத்துக்கள்

குடும்பங்கள் ஏற்றிடுமே!

எத்தனைத் தொண்டர்கள் எங்கெங்கோ இருந்திடினும்

அத்தனையும் அத்துபடி

அவர் பெயரை அழைத்திடுவீர்!

அவர் தொல்லை தீர்த்திடுவீர்!

அத்தனைக் குடும்பங்களும்

அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்

ஆசிரியர் வாழ்க வென்றே!

நூறாண்டு வாழவேண்டும்!

நூற்றாண்டு நாயகனின்

நிழல்போலத் தொடர்ந்திடுவோம்!

- சோம.இளங்கோவன்.

தமிழ் ஓவியா said...


உமை நினைப்பது இன்றா?

இல்லை இல்லை என்றும் எப்போதும்!

அஞ்சா நெஞ்சனே, எங்கள் அண்ணனே

பதவிக்கோட்டை தேடாத பட்டுக்கோட்டையே!

வளையாத லட்சியமே!

வரவு நாடா தியாகமே!

எதிர்ப்பில் சிலிர்க்கும் சிங்கமே

எங்கள் வழிகாட்டிக் கருவியே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

என்றும் எப்போதும் தான்!

எங்கள் லட்சிய நடையின் வேகமே

தொண்டறத்துக்கு ஏது சாவு? எம்

தொண்டுப் பழத்தின் துவளாத துணையே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

இல்லை என்றும் எப்போதும்!

எங்களின் குருதி ஓட்டமே, கொள்கைச்

சட்டாம்பிள்ளையே, உம் நினைவு

எமக்கு என்றும் எப்போதும் தான்

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அருண்ஷோரி நூலுக்கு மறுப்புரை: தோழரின் உணர்ச்சிக் காவியம்!


டாக்டர் அம்பேத்கர்பற்றி பார்ப்பன எழுத்தாளர் அருண்ஷோரி எழுதிய நூலை விமர்சித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையைச் செவிமடுத்த தோழர் ஒருவரின் உணர்ச்சிக் காவியம்!

அன்புத் தலைவ! ஆகஸ்ட் திங்கள் 5,6 தேதிகளில் (1997) பெரியார் திடலில் அருண்சோரிக்கு தங்களின் ஆணித்தரமான மறுப்பும், அவருக்கு ஆதரவு தருவோருக்கு, வெட்கித் தலைகுனிகின்ற வகையில் தங்களின் ஆழ்ந்த சிந்தனைத் துளிகளின் தெளிவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அண்ணல் அம்பேத்கரின் உண்மை உள்ளத்தை, தியாகத்தை, சேவையை உணர்ந்த எந்த சமுதாயத்து நல்லவர்களும், தங்களின் மறுப்பை பெருமை யுடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றனர்.

பத்திரிகை பலம் இல்லாத சமுதாயம் என உணர்ந்து வரும் துன்பங்களை, தாங்கள் ஏற்றுக் கொண்டு, உள்ளம் குமுற, ஆனால், எதிர்ப்பவர்களின் நெஞ்சம் பதற தங்களின் பேச்சும், எழுத்தும், நீண்ட காலத்திற்கு தேவை. இந்தப் பேச்சும், எழுத்தும் மற்ற மாநில பத்திரிகைகளிலும் வரச் செய்தால் மிகவும் நலம் பயக்கும்.

ஏனென்றால் ஒரு முறை ஹிந்து பத்திரிகையில் தாழ்த்தப்பட்டவருக்கு இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து கேலி செய்து, துணுக்கு வெளியிட, அதை வடபுலத்து கேரவான் பத்திரிகை மீண்டும் தமிழகத்து கல்கி பத்திரிகையும் வெளியிட்டது.

எனவே நீங்கள், இதை மற்ற மாநில மொழி பத்திரி கைகளுக்கு அனுப்புவதும் நேரம் இல்லையென்றால் அதையே சிறு புத்தகமாக ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வெளியிட்டால், உங்கள் அரிய கருத்துக்களை நிறைய பேர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். தங்களின் உயர்ந்த உள்ளத்தை, சமுதாய மக்கள் உணர இவை மேலும் வலுவூட்டும்.

நன்றி வணக்கம்.

- எம்.சீனிவாசன்
For the Scheduled Caste/Tribes REsidents Welfare Association Villivakkam, Madras - 600 049.

தமிழ் ஓவியா said...

நாம் பிறருக்கு உதவும்போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி அவரை மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.
பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே நன்றி என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப் படுத்திவிட வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -

பல்லாண்டு பாடுதும் பல்லாண்டு பாடுதும் .........பல்லாண்டு
மீனாட்சி மாண்பர் கிருட்டிண சாமியின்
தேனாட்சி நன்மகனாய்த் தென்கடலூர்த் தோன்றியார்க்குப் .........பல்லாண்டு

ஆசிரியர்

முன்னைப் பயிற்றிய மூத்தமணி ஆசானைப்
பின்னை மறவாமல் பேசி வரும் பண்பார்க்கு .........பல்லாண்டு

பெரியார் சந்திப்பு

திருப்பா திரிப்புலியூர் சந்திப்பில் தந்தை
தருமுரை தான்போற்றித் தானுயர்ந்த தோளார்க்கு .........பல்லாண்டு

அண்ணா பாராட்டு

அண்ணா புகழ் ஞான சம்பந்தன் ஆகிநிலம்
கண்ணாய் பரப்புரை செய் காதல் குறியார்க்கு .........பல்லாண்டு

விடுதலை வீரர்

பள்ளி வகுப்புமுதல் பல்கலை நாள்வரைக்கும்
துள்ளி விடுமுறையில் தொண்டு தொடர்ந்தார்க்கு .........பல்லாண்டு

வளர்ப்பு மகன்

வளர்பெரியார் நெஞ்ச வளர்ப்புமகன் என்ன
வளர்கேள்வி ஆளும் படிவளர்ந்த வீரர்க்கு .........பல்லாண்டு

பெரியார் பரிசு

வெல்ல விடுதலையும் மோகனாவும் தானளித்த
நல்ல பெரியாரின் நன்மதிப்பு நெஞ்சார்க்கு .........பல்லாண்டு

பொதுச் செயலாளர்

புதுமை செயவிரும்பிப் போர்ப் பெரியார் நல்கு
பொதுச் செய லாளர் பொறுப்பேற்ற பெற்றியார்க்கு .........பல்லாண்டு

மலர்மணம்

பிறந்த நாள் காண்பெரியார் பேசுமலர் எல்லாம்
சிறந்தார்க்கும் வண்ணத்தில் செய்தளித்த சீர்த்தியார்க்கு .........பல்லாண்டு

நினைவு மன்றம்

நல்ல நடிகவேள் நம் இராதா பேர்விளங்க
நல்ல நினைவுமன்றம் வார்த்தாள வைத்தார்க்கு .........பல்லாண்டு

பெரியார் திடல்

பெரியார் பெருந்திடலைப் பேரியக்கமாக்கி
உரியார் பணிபுரிய ஊக்கிவரும் ஒள்ளியார்க்கு .........பல்லாண்டு

வகுப்புரிமை

வகுப்புவாரிப் போரியற்ற வாழ்வுரிமை பாடி
மிகுவகுப்புத் தானூக்கும் மீட்சி மனத்தார்க்கு .........பல்லாண்டு

கடவுள் மறுப்பு

ஏறு திராவிடர்க் கில்லை மதம்சாதி
ஊறு கடவுளென ஓயா துழைப்பார்க்கு .........பல்லாண்டு

அறிவியல்

ஒவ்வா மடமூடம் ஓட்டும் அறிவியலால்
ஒவ்வும் வழிகூறி ஊக்கி ஒளிர்வார்க்கு .........பல்லாண்டு

தன்மானம்

பொய்மை உடைத்தாளப் போராடும் தன்மானம்
மெய்மை விடுதலைக்கு வேரென்னும் வீச்சார்க்கு .........பல்லாண்டு

தூண்டுதொண்டு

தீங்கு தகர்பெரியார் தேர்ந்த மணியம்மை
தாங்கு பணிதாங்கித் தானாளும் தூயார்க்கு .........பல்லாண்டு

தமிழ் ஓவியா said...


சிம்பதியா - எம்பதியா?


பிறர்க்கு உதவி செய்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

சிம்பதி (Sympathy) என்பதைவிட எம்பதி(Empathy) என்பது வாழ்வில் மிக முக்கியம்.

சிம்பதிக்கும் எம்பதிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிம்பதி என்பது மற்றொருவரிடம் நாம் காட்டக் கூடிய இரக்கம். எம்பதி என்பது மற்றொருவர் படுகிற துன்பத்தின் நிலையை அவர் நிலையில் நம்மை நிறுத்திக் கொண்டு உணர்வது ஆகும்.

சிம்பதியைவிட, எம்பதி என்பதே மனித நேயத்தின் முக்கிய அம்சம்.

_ கி.வீரமணி
(திண்டுக்கல் ரோட்டரிக் கிளப்பில் -_ 3.1.1998)

தமிழ் ஓவியா said...


நீங்கள் மாமனிதர்


கருப்புச் சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்கு சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக் காரர்
சமூக நீதிக் காவலர் - அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா

கடலூரின் கருத்துக் கனல் - என்றும்
அடங்கா எழுத்துப் புனல் -
எழுதிய நூல்கள் எழுபத்தைந்து
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி

அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன் முதலாய்
பாவையருக்கு தொழில் நுட்ப கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்குச் சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காண தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர் விருது - டாக்டர் கே.ஜி. பாலகிருஷ்ணன் படித்தளித்த புகழாரக் கவிதை இது - 25.2.20011).

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை கழகத் தலைவர் சந்தித்தார்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (1.12.2013) காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். கழகம் வெளியிட்ட 14 நூல்களையும் கலைஞர் அவர்களிடம் அளித்து ஒவ்வொரு நூலின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். சிறுகனூரில் நிறுவப்பட விருக்கும் தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை பற்றியும் பெரியார் உலகத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

முதலாவதாக நாளை 81ஆம் பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் அவர்களுக்கு முத் தமிழ் அறிஞர் சால்வை அணிவித்து வாழ்த் துக்கள்! வாழ்த்துக்கள்!! என்று கூறினார். கலைஞர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். நாளைய விழாவின் அழைப்பிதழை துணைத் தலைவர் கலி. பூங் குன்றன் கலைஞர் அவர்களிடம் அளித்தார்.

தமிழ் ஓவியா said...


பிறந்த நாள் விழா காணும் தலைவர் பதில் அளிக்கிறார்


2.12.2013 அன்று 81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்கள் அன்று முற்பகல் வல்லத்தில் நடக்கவிருக்கும் கருத் தரங்கின் முடிவில் 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்வி களுக்கு விடை அளிக்கிறார்.

வேக வினாக்களும் விரைவான பதில்களும்!
இது ஒரு புதிய அம்சமாகும்.

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருடன் சந்திப்பு



81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் சந்திப்பு - நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வல்லத்தில் நடைபெறும். கழகத் தலைவரை சந்திப்பவர்கள் சால்வைகளுக்குப் பதில் பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000ஆவது நிகழ்ச்சி
கேளுங்கள் தரப்படும் - புதிய அறிமுகம் கேள்விக்குப் பெரியார் பதில் சொல்லும்முறை
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு

சென்னை, டிச.1- கூட்டங்களில் கேள்விகளுக்குத் தந்தை பெரியார் பதில் சொல்லும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 - நிகழ்ச்சிகள் நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி 29.11.2013 வெள்ளி மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கப்பட்டது.

திராவிடர் கழக மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணியம்மை கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்ட செய லாளர் கி. சத்திய நாராயணன் வரவேற் புரை ஆற்றினார். வாசகர் வட்டம் தொடங் கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சிக்குத் திராவிடர் இயக்க ஆய் வாளர் க. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 25 சொற்பொழிவுகள் நடத்தியதை பெருமை யாகக் கருதுவதாகக் கூறினார்.

கேளுங்கள் தரப்படும்

வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் என்கிற முறையில் நிகழ்ச்சியில் புதுமை புகுத்தப்பட்டது. இவ்வமைப்பின் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் இந்தப் புது ஆலோசனையை வழங்கினார். அதன்படி முதல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறை போகிய அறிஞர் பெரு மக்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொருவரிடமும் வினாக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு வினாவிற்கும் அவர்கள் விடை அளித்தனர். மகளிர் உரிமை மற்றும் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி பதில் அளித்தார். அறிவியல் தொடர்பான வினாக்களுக்கு இயற்பிய லாளர் அ. பாலகிருஷ்ணன் பதில் அளித் தார்; வரலாறு தொடர்பான வினாக் களுக்கு வரலாற்றுப் பேராசிரியர் அ. கருணானந்தன் விடையளித்தார். பெரியா ரியல் தொடர்பான கேள்விகளுக்கு. பெரியார் பேருரையாளர் புலவர் முனைவர் மா. நன்னன் விடையளித்தார்.

இந்தப் புதிய முறை பார்வையாளர் களைப் பெரிதும் கவர்ந்தது. பல புதிய புதிய தகவல்களை அறிய முடிந்ததாகப் பார்வையாளர்கள் கூறினர். கேள்விகளை வாசகர் வட்ட மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அருணகிரி படித்தார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கேளுங்கள் தரப்படும் என்ற புதிய அறிமுகம் சிறப்பாக அமைந்ததற்கு தம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடக்கும் சொற்பொழிவுகள் 20 நிமிடம் உரை 20 நிமிடம் கேள்வி பதில் பகுதியை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆலோசனை யையும் தந்தார். பொதுக் கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியது திராவிடர் இயக்கமே என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தந்தை பெரியார், கேள்விக்குப் பதில் சொல்லும் முறையை எடுத்துக் கூறினார்.

நியாயமான கேள்விக்கு நேர்மையான பதிலையும், குறும்புத்தனமான கேள்விக்கு அதே முறையில் பதிலும் தந்தை பெரியார் கூறியதற்கு உதாரணமாக பொன்மலை யில் தந்தை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வியை நினைவூட்டினார்.

நேரு பிரதமராக இருந்தபோது இரயில்வே துறையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக இருந்ததால் அந்த வேலை நிறுத் தத்தைத் தந்தை பெரியார் எதிர்த்துப் பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் கேள்வி ஒன்றைப் பெரியாரிடம் அளித்தார். நேரு அரசாங்கத்திடம் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தானே நீ வேலை நிறுத்தத்தை எதிர்த்துப் பேசு கிறாய்? என்பது கேள்வி. பெரியார் கோபப் படவில்லை. சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார்.

நான் பணம் வாங்கிக் கொண்டு பேசக் கூடியவன் என்று நீங்கள் தெரிந்து கொண் டிருப்பதால், புத்திசாலியாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

காங்கிரஸ்காரன் பத்து லட்சம் ரூபாய் எனக்குப்பணம் கொடுத்தால் நீ 11 லட்சம் ரூபாய் எனக்கு கொடுத்து உன் பக்கம் பேசச் செய்திருக்க வேண்டாமா? என்று திருப்பிப் பதிலடி கொடுத்தார் - கேட்டவன் வாயடைத்துப் போனான்!

இதுபோன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வில் ஏராளம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.

தங்க தனலட்சுமி நன்றி கூறிட கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருமக் களுக்கு பெரியார் நூலக வாசகர் வட் டத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்கள் பயனாடைகள் அணிவித்து, நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


அன்பர்கள் இருவரின் கடிதங்கள்

திராவிடர் கழக தலைவரான தங்கள் 81ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டில் சாக்ரடீசா லெனினா, ரூசோவா அல்லது அந்த மூவரும் சேர்ந்த ஒரு புதிய வார்ப்படமா என்று சிந்தனையாளர்கள் எண்ணி ஆராயும் அற்புத தலைவர் தந்தை பெரியா ருக்கு 95 அடி உயர வெண்கல சிலையும் அவருடைய கருத்துக்களை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்தி பெரியார் பெயரில் ஒரு உலகத்தையே நிர் மாணிக்கும் மறக்க முடியாத பணிக்காக சேர்க்கப்படும் 1000 பவுன் நிதிக்கு நான் 1 பவுன் 8 கிராம் அன்பளிப் பாக அளிப்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

12 நல்ல கனமான இலாக்காக்கள் என் பொறுப்பில் இருந்தாலும் எனக்கு தலைநகர் சென்னையில் ஒரு வீட்டு மனைகூடக் கிடையாது எங்கும் எந்த சொத்தும் வருமானம் வரும் வேறு தொழிலும் கிடையாது. 88 வயதை நெருங்கும் நான் எம்.எல்.ஏ., எம்.பி. பென்ஷனில் தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம்.

- வி.வி. சுவாமிநாதன்
முன்னாள் அமைச்சர் எம்.பி., சிதம்பரம்
2.12.2013 தஞ்சையில் நடக்கும் விழா சிறப்பாக நடைபெறவும் நிறைந்த ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தாங்கள் பெற்று வாழ்வும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் கி.வீரமணி அவர்களுக்கு,

வணக்கம். தொண்டால் பொழுதளக்கும் என்று சொல்லுவார்களே அந்த வரிக்கு நூற்றுக்கு நூறு எடுத்துக்காட்டாக, பெரியார் ஏந்திப் பிடித்த சுயமரியாதைப் பெருஞ்சுடரைக் கடும் உழைப்பால் மேலும் பிரகாசமாக எரிய வைத்து, தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒளி ஏற்றிக் கொண்டி ருக்கும் தங்களைத் தங்கள் 81ஆம் பிறந்த நாளான இன்று மனமார வாழ்த்துகிறேன்.

இன்னும் நூறாண்டு காலம் முழு நலத்தோடு வாழ்ந்து, சுயமரியாதைச் சுடரொளியை எங்கும் பரப்புங்கள். தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலப் பேரு ருவச் சிலை அமைப்பது பெருமைக்குரியது. பெரியாரின் அறிவொளி மேலும் மேலும் நாடெங்கும் பரவ இந்தச் சிலை ஒரு நல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும்!

அருமையான விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் பெரு மக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். விழா புதிய வரலாறு சமைக்கும் நூறு பவுனுக்காக நிதி வழங்கும் சுயமரியாதை உள்ளங்கள் அனைத்தையும் வாழ்த் துகிறேன். வணங்குகிறேன். ரூ.1000 என்னுடைய எளிய பங்கையும் இத்துடன் அனுப்புகிறேன்.

- பொன்னீலன்
தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் சுப. திண்ணப்பன் வாழ்த்துகிறார்



பேரன்புமிக்க தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். பிறை ஆயிரம் கண்ட பெருநாள் - முத்துவிழா நாள் ஆகிய உங்கள் 81ஆம் பிறந்த நாள் அன்று வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் ஆகிய பெரியார் பெருமையையும், கொள்கைகளையும் பாரெங்கும் பரப்பும் பணி தொடர நீங்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்பதுதான் என் விழைவு. பெரியார் உலகம் காண விரும்பும் உங்கள் கனவு நனவாகட்டும்.

- சுப. திண்ணப்பன்
பேராசிரியர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்

தமிழ் ஓவியா said...


சு.சாமியின் வாய்க் கொழுப்பு!
t

காஞ்சி மடாதிபதி மீது பொய் வழக்கு போட்டதற்குப் பொறுப்பேற்றுத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சி சங்கரமடத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சனிக்கிழமை வந்தார். அங்கு மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய மடாதிபதி விஜயேந்திரர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சங்கரராமன் கொலை வழக்கில், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்து மதத்துக்குக் கிடைத்த வெற்றி; இந்த விவகாரத்தில் காஞ்சி மடாதி பதிகள்மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பொய் யானது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கு. இதற்குத் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்று மடத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும். தீர்ப்பு இப்படித் தான் வரும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.

சங்கரராமன் கொலை செய்யப்பட்டது உண்மை தான். உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திர லேகா உடன் இருந்தார்.

வழக்கு நடந்தது செஷன்ஸ் கோர்ட்டில் - அதுவும் புதுவையில், அது ஒருபுறம்!

2ஜி வழக்கில் சி.பி.அய். ஸ்பெஷல் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம்வரை நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இணைக்க வழக்குத் தொடர்ந்து, தோற்றுவிட்ட சு.சாமி, சிதம்பரத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?

பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!

தமிழ் ஓவியா said...


முதல்வரின் முக்கிய கவனத்திற்கு...


கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதியும், அவரது சார்பில் ஒரு பெண்ணும் நீதிபதியிடம் லஞ்சப் பணம் கொடுக்கக் கால அவகாசம்பற்றிப் பேசியதாகச் சொல்லப்பட்ட ஓர் ஒலிப்பதிவு ஆவணம் வெளியானதை இப்போது மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அது அசல் ஒலிப்பதிவுதானா, இல்லை போலியானதா என்பதை மூவரின் குரல் பதிவுகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைக் கண்டறியும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மாதங்கள் கழித்துக் காவல்துறை அளித்த பதிலின்படி, அந்த ஒலிப்பதிவு ஆவணம் கரெப்ட் ஆகிவிட்டதால் அதில் எதையும் கேட்க முடியவில்லை.

அதே ஒலிப்பதிவு துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றம், காவல்துறையைப் பொறுத்தமட்டில் அசல் ஆவணம் கரெப்ட் ஆகி விட்டதால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவே முடியாமல் விஷயமே காலாவதியாகிவிட்டது.

- ஞானி, இந்து, தமிழ்நாளேடு, 1.12.2013