Search This Blog

25.11.13

பாலியல் வன்முறை!என்ன தான் தீர்வு?


இன்று - பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான  பன்னாட்டு நாள். இப்படியொரு நாள் தேவைப்படும் அளவிற்குப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது, சர்வ சாதாரணமாகி விட்டது.

இந்தத் திசையில் சட்டங்கள் போட்டாயிற்று என்றாலும், அதனால் பெரும் பயன் விளைந்திடவில்லை. பின் என்ன தான் தீர்வு? பெண்கள் தங்களைத் தற்காத்து, தேவையானால் தம்மைத் தாக்கவரும் மனித மிருகங்களைத் தாக்கும் அள விற்குத் தங்களை வளர்த் துக் கொள்ள வேண்டியது தான் சரியான தீர்வு.

கொஞ்ச காலத்திற்காவது பெண்கள் அனைவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான வாய்ப் பினை உருவாக்கலாம்.

நாலு இடத்தில் நச்சென   துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்ற செய்தி வந்தது என் றால், இந்த வீராதி வீரர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விட மாட்டார்களா?

இன்றைக்கு 82 ஆண்டு களுக்கு முன்பே தந்தை பெரியார் கூறியுள்ளார்.

கும்மி, கோலாட்டங் களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலிய வைகளையும் சொல்லிக் கொடுத்து ஓர் ஆண் பிள்ளைக்குள்ள பலம் தைரி யம் உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டாகும் படியாகவும் செய்ய வேண் டும் என்று ஈரோடு கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் கள் பாடசாலையின் ஆண்டு விழாவில் பேசி இருக்கிறார் (குடிஅரசு 26.4.1931).

அன்று பெரியார் சொன்ன கைக்குத்து என்பதை இன்றைய கராத்தேயோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

பெண்களுக்கான காவல் நிலையங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. காவல்துறையில் பணியாற் றும் பெண்களுக்கே பாது காப்பு இல்லை என்பதுதான் இந்நாட்டின் வெட்கக் கேடான நிலை.

சடை பின்னிப் போட்டுக் கொள்வது, பொட்டு வைத் துக் கொள்வது, பூ வைத்துக் கொள்வது என்று காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் கடைப்பிடித்தால் அந்தப் பணிக்கான மிடுக்கும், கம்பீரமும் காணாமற் போய் சாதாரண பெண்கள் நிலைக்குத்தான் அவர்கள் தள்ளப்படும் நிலை! பெண் களின் மீதான வன்முறை என்பது வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல; பெண்கள்பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள பழைய பஞ்சாங்கக் குப்பைகளை, சாஸ்திரச் சழக்குகளை, நாள் ஒன்று குறிப்பிட்டு அவற்றைக் கொண்டு வந்து கொளுத்த வேண்டும். பெண்கள்  மத்தியில் சிந்தனை ரீதியான புரட்சி வெடிக்கும் பொழுது, ஆண்களேயே மலைக்க வைத்து, அச்சங் கொள்ளவும் செய்துவிடுமே!

வடமொழி சுலோகத்திலி ருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1990 டிசம்பர் 24 இந்தியன் எக்ஸ்பிரஸ் மெகசின் பகுதியில் ஒரு செய்தி.
“Only when fire will cool, the moon, or the ocean fill with tasty water will a women be pure”
எப்பொழுது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப்பொழுதுதான் ஒரு பெண்ணும் தூய்மையானவளாக இருப்பாள் என்கிறது அந்த சுலோகம்.

முதலில் இந்தக் கேவலக் குப்பைகளைக் கொளுத்த பெண்கள் முன் வரட்டும்! வரட்டும்!!

------------------------- மயிலாடன் அவர்கள் 25-11-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23 comments:

தமிழ் ஓவியா said...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய தகவல்

வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என்று விசாரணை அதிகாரியே ஒப்புக் கொண்ட நிலையில்

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

சந்தேகத்தின் பலனை சாந்தன், முருகனுக்குக் கொடுத்து அவர்களையும் விடுதலை செய்க!

தமிழர் தலைவரின் சட்ட ரீதியான அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது என்பதை விசாரணை அதிகாரியே கூறிவிட்ட நிலையில் பேரறிவாள னையும், சந்தேகத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளிப்பது என்ற முறையில் சாந்தன், முருகன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளி வரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்த கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

தமிழ் ஓவியா said...

உண்மையை ஒப்புக் கொண்ட விசாரணை அதிகாரி

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சு போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்கு சாதகமாக அமையும் வகையில், இந்த காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை - பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் - அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர் நான் தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் - மனசாட்சி உறுத்தியதால்!

மோசமான சட்டம் குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமை பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - பொறுப்பு, என்பதை தலைகீழாக மாற்றி - குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது - குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்த தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் - நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான். அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.
அவசர ஜோடனை!

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்த குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கி யங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்)

எனவே இந்தத் தகவல் - அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை (Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக் கோண லாகிப்போன நீதியை சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும்.

2. மேலும் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி. தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகிய வற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

மூவரையும் விடுதலை செய்க!

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப் படவே முடியாது - இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டு விடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்து குற்றவாளிகள் தப்பினாலும் கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை

25.11.2013

தமிழ் ஓவியா said...


பேரறிவாளனுக்கு நியாயம் வழங்கிடுக! கலைஞர் வேண்டுகோள்

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்கு மூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன்விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர்: சில குற்றவாளிகள் தப்பி னாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசா ரணையிலும், அதன் அடிப்படையில் வழங் கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக் குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரனை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே, தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

தமிழ் ஓவியா said...


கூறுவது கல்கி!

சென்னையைத் தவிர பிற நகரங்களில் அய்ந்து முதல் ஏழு மணி நேரம், மின்வெட்டு ஏற்படுவதாகச் செய்திகள் சொல்கின்றன. நடுவில் காணாமல் போயிருந்த மின் வெட்டு மீண்டும் ஆரம்பித்திருப்பது, நிர்வாகத் திறமையின்மை, திட்டமின்மையின் எடுத்துக்காட்டு. மின்வெட்டைக்கூட அனுபவித்து விட்டுப் போகலாம்; ஆனால், மின்வெட்டு இராது என்று ஆசை காட்டி மோசம் செய்வதைத் தாங்குவது ரொம்பக் கஷ்டம்.

####

மக்கள் நலப் பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்படுவதும், அ.தி.மு.க. அரசில் நீக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. மக்கள் நலப்பணியில் அவர்களுக்குப் போதிய வேலை இல்லையெனில் பயிற்சிகள் கொடுத்து வேறு துறைகளில் பணியமர்த்துவது ஒன்றே நல்ல தீர்வு; வீட்டுக்கு அனுப்பு வது அல்ல. உச்சநீதிமன்றம் இதற்கு வழிகாட்டியுள்ளது. (கல்கி டிசம்பர் 1, 2013 பக்கம் 34, 35)

தமிழ் ஓவியா said...


மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு அரசு தடுக்குமா?

மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) தலையிடுவாரா?


தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர் மற்றும் மகளிர் காவல் நிலைய வளாகத்துக்குள் கட்டப்பட்டு வரும் கோயில் இது - அரசு தலையிடுமா?

மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்ட விரோத செயலைத் தடுப்பார்களா?

தமிழ் ஓவியா said...



மோடி ஒருவர் போதும் பின்னடைவிற்கு!


டில்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், குஜராத் முதல் அமைச் சரும், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாள ருமான, திருவாளர் நரேந்திரமோடி மிகவும் நீட்டியே முழங்கி இருக்கிறார்.

டில்லியில் மாணவி கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதை மறக்காதீர்கள்! என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லி நிகழ்வு கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கண்டிக்கப்பட்டது. இதுபோன்ற கொடுமை நடைபெறக் கூடாது என்ற வகையில் புதிய சட்டம் வரை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஒன்று, இதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கான தார்மீக உரிமை மோடியின் நாக்குக்குக் கிடையாது.

டில்லியில் ஒரு பெண் சிறுமைப்படுத்தப் பட்டார் என்பதற்காகக் கசிந்துருகும் மோடி, அவர் முதல்வராக இருந்து ஆட்சி புரிந்த குஜ ராத்தில் என்ன நடந்தது? இப்பொழுதும்தான் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்வதில்லையா? அது மோடிக்கு, நூற்றுக்கு நூறு துல்லியமாகவே பொருந்தும். பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில், என்ன நடந்தது? 95 முஸ்லிம் மக்கள் ஆண், பெண், குழந்தைகள் (35) சகிதமாக அடித்துக் கொல்லப்பட்டனரே - யார் பொறுப்பு?

கர்ப்பிணிப் பெண்களைக்கூட விட்டு வைக்க வில்லையே - இந்தக் காலிகள்! நீதிமன்றம், மண்டையில் அடித்ததன் காரணமாக மறு விசாரணை நடத்தப்பட்டு, 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும், மோடியின் அமைச்சர வையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென்கோட் நானி என்னும் பெண் அமைச்சருக்கு (இந்த வெட்கக்கேட்டில் அவர் ஒரு டாக்டராம்) 28 ஆண்டு சிறைத் தண் டனையும் விதிக்கப்பட்டதே!

நியாயமாக குஜராத் கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பேற்று மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண் டாமா?

2000 பேருக்கு மேல் இவர் முதல் அமைச் சராக இருந்த குஜராத்தில் படுகொலை நடந்திருக்கிறது - இதற்கு யார் பொறுப்பு? அறிவு நாணயத்தோடு சொல்லட்டுமே பார்க்கலாம். முதல் அமைச்சர் மோடி, பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியுமா? தட்டிக் கழிக்கிறார் என்றால், இவரைவிட மோசமான, பொறுப்பற்ற மனிதனை உலகின் எந்த மூலையிலாவது கண்டுபிடிக்க முடியுமா?

நடந்தது என்ன தெரியுமா? பிஜேபியின் மூத்த தலைவர் அத்வானி போட்டு உடைத்து விட்டாரே!

என் நாடும் என் வாழ்க்கையும் எனும் நூலில் எல்.கே. அத்வானி என்ன எழுதியுள் ளார்? இதோ:

குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திரமோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார் என்று எல்.கே. அத்வானி குறிப் பிட்டுள்ளாரே!

அப்படி சொன்னபடி மோடி நடந்து கொண் டாரா? இல்லையே! மோடிக்கும், அறிவு நாணயத்துக்கும் என்ன ஒட்டு உறவு? பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டியவர் என்று பிஜேபியினர் கதைக்கிறார்களே அந்த வாஜ்பேயியின் விருப்பத்தையே நிறைவேற்ற முன்வராதவர்தான் இந்த மோடி என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்

மோடி என்ற ஒருவரை வைத்துக் கொண்டு பிஜேபியி-யானாலும் சரி, அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவோராக இருந்தாலும் சரி, அதைவிடப் பின்னடைவு வேறு ஒன்றும் இல்லை - இல்லவே இல்லை.

தமிழ் ஓவியா said...


நோக்கம்

சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்ற மடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

தமிழ் ஓவியா said...


காலம் என்ற அற்புத ஆயுதம்!
------------கி.வீரமணி
தனி வாழ்க்கையாக இருந் தாலும் பொது வாழ்க்கையாக இருந்தாலும், காலத்தை எப்படி பயனுறு வகையில் திட்டமிட்டு அன் றாட வாழ்வில் நேரத்தைக் கையா ளுவது என்பதைப் பொறுத்தே நாம் வெற்றி பெற முடியும்.

நாம் பல நேரங்களில், கடிதங் களுக்குப் பதில் போடத் தவறும் போதோ, நண்பர்கள் சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ளாதபோதோ, சில முக்கியப் பணிகளை தவிர்த்து விடும் போதோ, ஒரே வழமையான சமாதானமாக என்னங்க எனக்கு நேரமே இல்லைங்க; அவ்வளவு பிசி, பிசி - தலைக்கு மேலே வேலைங்க என்று கூறுவது சரியான விளக்கம் ஆகாது.

அது, நம்முடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே யாகும்.

உலகில் உள்ள மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும் பதவியாளர் களான அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற வரிசையில் உள்ளவர்களா னாலும், மிக எளிய ஊழியர்களான நமது நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்களானவர்களும் சரி, எல்லோருக்கும் 24 மணி நேரம் தானே!

உலக சாதனையாளர்களாக எப்படிப் பலர் உயருகின்றனர்? அவர்களும் இந்த 24 மணி நேர காலத்தை - நாளை - பயன்படுத்தித் தானே வளர்ந்துள்ளார்கள்? எனவே காலத்தைத் திட்டமிட்டுச் செலவிட்டு, அதன் மூலம் மிகு பயன் உண்டாகும் வண்ணம் உழைத்தல் வேண்டும். காலத்தைப் பயனுறு வகையில் திட்டமிட்டு செலவிடுவது பற்றி எண்ணற்ற அறிஞர்களின் வழிகாட்டும் கருத்துரைகள், அடங்கிய நூல்கள் ஏராளம் ஆங்கிலத்தில் வந்துள்ளன.

அண்மையில் ஒரு கையடக்க ஆங்கிலப் புத்தகம் ‘Managing the time of your Life’ என்ற மேக்கன் மேக் டொனால்டு (Machen Macdonald) என் பவர் தொகுத்த புத்தகம் படித்தேன்.

முற்றிலும் புதிய அணுகுமுறை; அலுப்புசலிப்பின்றி படித்துப் பயன் பெறும் வகையில் முதலில் ஒரு அத்தியாயத்தில் இவரது அறிமுகக் கட்டுரை போன்ற கருத்துக்கோவை.
அடுத்து உலகின் மிகப் பிரபல சிந்தனையாளர்கள், கருத்தாளர்கள் சிலரின் கருத்துரைகளின் தொகுப்பு களுடன்.

ஹாரிஹீப்ஸ், ஸ்டீபென் கோவி, ஸ்காட்டெயிலர், ரோபன் கன்சாலஸ், ஆலிசன் அர்னால்ட், பிரயன் டிரேசி, டெனிஸ் வெயிட்லே, போன்ற பல 13 அறிஞர்களின் சுருக்கமான கருத்துக் கட்டுரைகள் தொகுப்பாக அமைந்துள்ளன.

பணத்தைச் செலவு செய்தால், பிறகு சம்பாதித்துக் கொள்ள முடியும். உடல் நலக்குறைவுகூட சரி செய்து நோய் தீர்த்த ஆரோக்கிய வாழ்வு மீண்டும் மலர வாய்ப்புள்ளது; காரணம் மருத்துவத் தொழில் நுட்பமும் நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகளும், அதற்கேற்ற மருந்து வகைகளும், நாளும் பெருகி வருகின்றன; உலக மனித வாழ்வும் சராசரியை வளர்த்து, உயர்ந்து கொண்டே வருகின்றன.

ஆனால் இழந்த காலம் என்பது நம் வாழ்நாளில் மீண்டும் வராது; வரவே வராது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நொடி - வினாடியைக்கூட இப் போது பகுத்துப்பகுத்து, நானோ வினாடிகளாக்கி அணுவைத் துளைத்ததுபோல, காலத்தையும் அல்லவா துளைத்துப் பிரித்து வெற்றி கண்டு விட்டதே விஞ்ஞானம்!

இந்த நூலாசிரியர் ஒரு அருமை யான கருத்தைப் பதிய வைத் துள்ளார்.

கடந்த காலம் (Past)என்பது சென்று விட்டது. செலவாகி விட்டது.

சில அனுபவங்களைப் பெற வேண்டுமானால் அது ஓரளவுக்குப் பயன்படலாம்; மற்றபடி அதைப்பற்றி அளவுக்கு மீறிச் சிந்தித்து, காலத்தைச் செலவிடுவது பயனு றுவதாக அமையாது.

அதுபோலவே, வருங்காலம் என்பது இப்போது நம் கையில் இல்லாத ஒன்று. கற்பனையாக எதிர்பார்க்க வேண்டிய ஒன்று (அது எப்படி இருக்கும் என்று ராசி பலன் பார்ப்பது நம்மை உயர்த்தாது; வீணே வீழ்த்தவே செய்யும்) நிகழ்காலம் தான் கையில் உள்ள உணவு - அதைச் சுவைத்துச் சாப்பிட்டு அதிலிருந்து சத்துக் களை செரிமானம் செய்வது தானே முக்கியம்?

எனவே நிகழ் காலத்தைப் போற்றி திட்டமிட்டு பயனுறு வகையில் செலவழித்து செழிப்போம் நாம்!

தமிழ் ஓவியா said...


பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்

சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் ஒப்புதல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசா ரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து. பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஅய் முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித் துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:

9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.ஒரு விசா ரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லா மல், சதி திட்டம் அரங்கேறிய தாகத்தான் இதில் அர்த்தம் கொள் ளப்படும். இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந் துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறி வாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன.அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என் னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2ஆவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.

வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட தற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டு களுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்து வதற்கு காரணம், இப்போது இல்லா விட்டால் எப்போதும் முடி யாது என்பதால்தான்.

ராஜீவ் கொலை வழக்கு விசா ரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கெட்ட வாய்ப்பாக ராஜீவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஅய்யால் கண்டு பிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி மனைவி இருப்பதை மறைத்தாரா? தேர்தல் வழக்காக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடில்லி, நவ. 25- நரேந்திர மோடி, மனைவி இருப்பதை மறைத் தாரா என்பது பற்றி தேர்தல் வழக்கு தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பாரதீய ஜனதா பிரதமர் வேட் பாளரும், குஜராத் முதல் அமைச்ச ருமான நரேந்திரமோடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டி யிட்ட போது வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கொல்கத் தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சரோகி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நரேந்திரமோடி வேட்பு மனுவில் அவருக்கு மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். நரேந்திரமோடி மனைவி பெயர் ஜசோதா பென். இவர் 1951ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி பிறந்தார். இவருக்கும், நரேந்திர மோடிக்கும் 1968ஆம் ஆண்டு திரு மணம் நடந்தது. ஆனால் நரேந்திர மோடி இதை மறைத்துவிட்டார். பொது வாழ்க்கையில் இருப்பவர் இவ்வாறு உண்மையை மறைப்பது தவறு. இதுபற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியி ருந்தார்.

இந்த மனு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி சதாசிவம் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோலின் கான்சால் வேஸ் ஆஜராகி வாதாடுகையில், நரேந்திர மோடி வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பொய். மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை நிராகரித்து இருக்க வேண் டும். அவரது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ள தகவல்களில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என்றார்.

வழக்குரைஞர் வாதத்துக்குப் பின் தலைமை நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நரேந்திரமோடியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நன்கு சரிபார்த்துதான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் பங்கு என்ன இருக்கிறது. எனவே மனுதாரர் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவ குணம் நிறைந்த ஆரஞ்சு


உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும், சக்தியும் கிடைத்துவிடுகிறது. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

ஆரஞ்சு பழத்தை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதி களால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வைக் கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத் திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.

குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.

இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும்.

உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது.

உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல் படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.

வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.

தமிழ் ஓவியா said...


பெண்களை மிரட்டும் புது நோய்


பெண்களை புது நோய் ஒன்று மிரட்டத்துவங்கி உள்ளது. ஆம்... இத்தனை காலமாக சி.ஓ.பி.டி., நோய் (கிரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ்), புகைப்பிடிக்கும் ஆண்களின் நோயாகவே கருதப்பட்டது. தற்போது இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1959ஆம் ஆண்டு கணிப்புப்படி, சி.ஓ.பி.டி., ஆண்களிடமே அதிகமாக உள்ளது எனக் கூறுகிறது. ஆனால் 2000ஆம் ஆண்டில் ஆண்களைவிட, சி.ஓ.பி.டி., பாதித்த பெண்கள் அதிகம் இறப்பை சந்தித்துள்ளனர். பெண்களும் புகைப்பிடிக்கத் துவங்கிவிட்டதால், இந்த மாறுதல் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.ஓ.பி.டி., என்பது, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். இது நுரையீரல் சளி மற்றும் நாள்பட்ட நுரையீரல் காற்றுக்குழாய் வீக்கம் என்பதை கொண்டது. உலகின் இறப்பு விகிதத்திற்கு நான்காவது காரணமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டில் 3 ஆவது இடத்தை பிடிக்கும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், சி.ஓ.பி.டி., நோய், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதோரிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு புகை, மாசு, ரசாயன தூசு, வீட்டின் உள் மற்றும் வெளிப்புறம் உள்ள காற்றின் மாசு, நாள்பட்ட ஆஸ்துமா போன்றவை காரணம்.

அறிகுறிகள்: மூச்சிரைத்தல், நாள்பட்ட இருமல், சளி, பெண்களுக்குக் கூடுதல் அறிகுறிகளாக, அதிக மூச்சிரைத்தல், அதிகமனஅழுத்தம், மனச்சோர்வு, குறைந்த வாழ்க்கைத்தரம், அடிக்கடி மூச்சிரைப்பதால் ஏற்படும் சத்துக்குறைவு போன்ற வையாக வெளிப்படலாம். பொதுவாக பெண்களுக்கு, நுரையீரல் சிறிய அளவாக இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுகிறது என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சராசரியாக 2-3 மணி நேரம் சமைப்பதில் செலவிடும் ஒரு பெண், 25 மில்லியன் லிட்டர் மாசுபடிந்த காற்றை சுவாசிக்கிறார் என்பது வியக்கத்தக்க உண்மை. வீடுகளில் கொசுவிரட்டியாக பயன்படும் கொசுவத்தி சுருள் ஒன்று, 100 சிகரெட்டுகளை எரிப்பதற்கு சமமானது.

நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கும் பெண்கள், வெடிமருந்து தொழிற்சாலை, ரசாயனத் தொழிற்சாலைகள், அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பெண்கள், கழிவுகலந்த மாசுபடிந்த காற்றை சுவாசிக்கின்றனர். மேலும் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைப்பது, ஊதுபத்தி புகை, விறகு, நிலக்கரி, தாள், தேங்காய் ஓடு போன்றவற்றை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிப்பது, சிறிய வீட்டில் காற்றோட்டமில்லாத கழிவறையில் புகைப்பிடிப்பது போன்ற வையும் காரணம்.

ஸ்பைரோமெட்ரி என்ற செலவில்லாத ஒரு பரிசோதனை மூலம் சி.ஓ.பி.டி., நோயை கண்டறியலாம். இந்நோய் அதிகரிக்காமல் இருக்க, புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். நெருங்கிய நண்பர் புகைப்பிடித்தால் அவர்கள் அருகில் இருப்பதை தவிர்க்கவேண்டும்.

நுரையீரலை பாதிக்கும் தூசு, மாசுபடிந்த காற்று, பெயிண்ட் ஸ்பிரே போன்றவற்றில் இருந்து விடுவித்துக் கொள்ளவேண்டும். இது உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆரோக்கியமான உணவு, முழுமையான சுற்றுச்சூழல், காற்றோட்டமான சமையலறை என வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினாலே இந்த நோயை தவிர்க்கலாம். - மருத்துவர் எம்.பழனியப்பன், மதுரை. 94425 24147.

தமிழ் ஓவியா said...

அதிக நேரம் சைக்கிள் ஓட்டினால் இதயம் பாதிக்கும்!

உலகம் முழுவதும் மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளில் சைக்கிள் ஓட்டுவதும் ஒன்று. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும், இரவில் நல்ல உறக்கத்தைத் தரும், கொழுப்பைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்... இப்படி சைக்கிள் ஓட்டுவதில் நிறைய நன்மைகள்.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா? அப்படித்தான் தினமும் அதிக நேரம் ஓடுவதும் சைக்கிள் ஓட்டுவதும் ஆபத்து என்று சமீபத்தில் எச்சரித்துள்ளது அமெரிக்க மருத்துவக் கழகம். தொடர்ச்சியான சைக்கிளிங், நம் இதயத் தசைகளை பலவீனமாக்கி விடக் கூடும். இந்த உடற்பயிற்சியும் ஒரு விதத்தில் பவர்ஃபுல் மாத்திரை போன்றதுதான். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க மருத்துவக் கழகத்தின் இதய மருத்துவ நிபுணர் கார்ல் ஜே.லேவி.

இப்படிப்பட்ட கடுமையான உடற்பயிற்சிகளால் பலவீனமடையும் இதயம் வழக்கத்தை விட வேகமாகவோ, மெதுவாகவோ துடிக்கத் துவங்குகிறது. இதனை அரித்மியா என்கிறார்கள். பெரும்பாலும் ஆபத்தின்றி வந்து போகும் இந்த அரித்மியா, சில நேரங்களில் இதய செயலிழப்பிலும் கொண்டுபோய் விட்டுவிடும் என்கிறார்கள் அவர்கள்.!

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (2)

காலம் - நேரம் - பறக்கிறது (‘Time Flies’) என்பது கெட்ட செய்தி! அதில் நீங்கள் விமானியாக (Pilot) இருக்கிறீர்கள் என்பது நல்ல செய்தி!! என்றார் மைக்கேல் அல்ஷுலர்.

காலத்தை (நேரத்தை) நாம் மாற்ற முடியாது; மாறாக அக் காலத்தை நாம் பயன்படுத்திட சரியாக திட்டமிட்டுச் செயல்படுத் திட முடியும். அப்போது நேர மில்லையே எனக்கு என்ற பஞ்சப் பாட்டுக்கு போலி சமாதானங் களுக்கு இடமே ஏற்படாது.

ஆழமாக மனதில் பதிய வைத் துக் கொள்ளுங்கள்.

பறக்கும் காலம் என்ற விமானத் தில் நீங்கள் விமான ஓட்டியாக, விமானியாக, அமர்ந்து விமா னத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயணம் செய் யுங்கள் - இலக்கு நோக்கி!

உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் 1440 மணித் துளிகளும், ஒவ்வொரு ஆண்டிலும் 5,25,600 மணித் துளிகளும் உங்கள் கட்டுப்பாட்டிற் குள் உள்ளது என்று உணர்ந்து பறக்கும் விமானத்தை உற்சாகத் துடன் ஓட்டுங்கள்! இலக்கினை அடையும்போது இறக்குங்கள்!
சிலர் நேரத்தை எப்படி உருப்படி யான வகையில் செலவழிப்பது என்பதை நடைமுறைப்படுத்தி, அன்றாட வாழ்க்கையில் அனுபவ ரீதியாக கற்றுக் கொள்ள புத்தகம் புத்தகமாக புரட்டுவதில் அரிதினும் அரிதான காலத்தை நாம் வீணாக்கி விரயம் செய்து விடுகிறோம்.

உறுபயன் அதனால் உடன் விளைவது கிடையாது.

சமையலை வெறும் புத்தகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. அவை ஒரு வழிகாட்டி என்று மட்டுமே கருதிட வேண்டும். ஒவ்வொரு முறை சமையலிலும் வெறும் வரி வரியாகப் படித்து சமையலைச் செய்யத் துவங் கினால் சமையலும் முடியாது; சுவை யாகவும் இராது, பொருள்களும் வீணாகவே செலவாகும்!

உள்வாங்கிய கருத்துக்களும், நடைமுறை அனுபவங்களும், வார்ப்புப் பட்டறைகளாகி, மளமளவென கற்றுக் கொள்ள கவனத்துடன் திட்டமிடு தலும் - திறம்படச் செய்தலும் தேவை யாகும்.

சிலர் காலத்தை நிர்வகிக்க என்று கனத்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டே காலத்தை அதில் விரயம் செய்து விடுகிறார்கள்!

அனாவசிய செலவாளிகள் பலர் எத்தனைப் பேர் பணத்தை கணக்குப் பார்க்காமல் செலவழிக்கிறார்கள். சாப்பிட்டு எழும்போது, உணவு விடுதிகளில் - ஓட்டல்களில் டிப்ஸ் என்ற ஒரு வெகுமதிப் பணம் அளவ றிந்துகூட தராமல், ஜம்பத்திற்காக 50 ரூபாய் தர வேண்டிய இடத்தில் 500 ரூபாய் தருவது எப்படி ஒரு தவறான விரும்பத்தகாத செயலோ, அது போன்றதே 5 மணித் துளிகளை ஒதுக்க வேண்டிய பணிகளுக்கு 50 நிமிடங்களை - செலவிட்டு வீணாக் குவது ஆகும்!

புத்தகங்களை இதுபோன்ற செய் திகளை அறிய என்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு அதில் செலவழித்து விட்டு, ஏமாறுவது நியாயமா?

எடுத்துக்காட்டாக, தேர்வுக்கு விடை எழுதத் துவங்குமுன் நன்கு கேள்விகளைப் படித்துப் புரிந்து கொண்டு விடை எழுதத் துவங்கி னால் உங்களுக்கு நல்ல வெற்றி கிட்டும் என்று ஆசிரியர்கள் அறிவு றுத்துகின்றனர்.

உண்மைதான், அதற்காக கேள்வியைப் படித்து உள்வாங்கிடவே மொத்தம் உள்ள 2 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொள்ளலாமா? அது அபத்த மல்லவா? அதுபோலத்தான், இந்தக் காலத்தை, எப்படி நிர்வாகிப்பதில் வெற்றி பெறுவது பற்றியே சதா ஓர் ஆய்வு செய்கிறேன் என்று கூறி அந்த வழிகாட்டிகளைப் படித்துக் கொண்டே இருந்தால் எப்படி?

ரயில்வே டைம் டேபிள் வாங்கி ரயில் புறப்படும் நேரத்தைப் பார்த்து விட்டு சரியான நேரத்தில் (அதன்படி) சென்ற ரயிலில் ஏறி பயணம் செய்யாமல், டைம் டேபிளையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் உங்களுக்காக ரயில் நிற்குமா? அதுபோல எதற்கு எவ்வளவு நேர ஒதுக்கீடு - எப்பணிக்கு எம்மாத்திரம் அளவு என்ற நேர அளவீடும், முன்னுரி மையும் (Sense of Priority and Sense of Proportion) மிகவும் முக்கிய மாகும்.

ஆயுதத்தின் முனையை, சாணை பிடிப்பதுபோல் இந்தச் செயல்கள், பயன்பாடுகள் நமக்கு வெற்றியை ஈட்டித் தர முந்தும்!

நிறுவனங்கள், ஆய்வுக் கூட் டங்கள் என்ற பெயரில் தேவையற்ற விவாதங்கள் அடங்கிய கூட்டங் களால் பல பயனுறு பணிகள் தாமத மாகுமே தவிர, முழுப் பலன் தராது என்பது பல தலைமைப் பொறுப் பாளர்கள் அறிய மாட்டார்கள்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க அ.தி.மு.க. அரசு மேலும் ஒரு மனு தாக்கல் கலைஞர் கருத்து

சென்னை, நவ.26- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருப்பது குறித்து தி.மு.க. தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (26.11.2013) சென்னை பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

செய்தியாளர் :- சேது சமுத்திரத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசின் சார்பில் மேலும் ஒரு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்
கிறதே?

கலைஞர் :- சேது சமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தாரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

அண்ணா அவர்களுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற ஜெயலலிதா அரசு, ஏற்கென வே ஒரு முறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி யிருக்கிறது.

திரும்பவும் இப்போது நான் கேள்விப்படுகிறேன் - இரண்டாவது முறையாகவும், ஏற்கெனவே தாங்கள் சொல்ல விட்டுப் போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கை விட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திற்கு மேலும் ஒரு முறையீடு செய் திருக்கிறது.

அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ் நாட்டு மக்களுடைய தேவைகளை ஜெயலலிதாவும், அவர் தலைமையிலே உள்ள இந்த ஆட்சியும் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படு கிறார்கள் என்பதற்கு இதுவே தக்க அடையாளம்.

தமிழ் ஓவியா said...


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை


காஞ்சிபுரம் சங்கர்ராமன் படுகொலை வழக்கு:

சங்கராச்சாரியார்கள் உட்பட 25 பேரும் விடுதலையா?

81 பேர் பிறழ் சாட்சியானது எப்படி? காவல்துறை என்ன செய்தது?

தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்!

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழ்நாடு அரசின் முடிவைப் பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கர்ராமன் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).

சங்கராச்சாரியார்கள் கைது

இது தொடர்பாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார் (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப் பட்டு, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு -பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

81 பேர்கள் பிறழ்சாட்சியாம்!

இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான் -ஆக்கப்பட்டதுதான்.

இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சி (Hostile) யானது கிடையாது.

குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் (Prosecution) எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது.

இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு - இந்த வகையில் காவல்துறை ஏன்செயல்படவில்லை?
25 பேர்களும் விடுதலையாம்!

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டு விடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.

மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்து நமது நடவடிக்கை

ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம்.

அடுத்து தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

27.11.2013

தமிழ் ஓவியா said...


இன்று வி.பி.சிங் நினைவு நாள்

மண்டல் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரைச் சூட்டியவர்; பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறி வித்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த முறையை எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக் கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்களவையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்கு வோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளராக டாக்டர் பிறைநுதல் செல்வி

திராவிடர் கழக பொருளாளராக இருந்த வழக்கறிஞர் கோ.சாமி துரை அவர்கள் 9.11.2013 அன்று மறைவுற்றார்.

அவருக்குப் பதிலாக 26.11.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி (65) திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.

கல்வித்தகுதி: பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ.

உதகையில் மருத்துவத்துறையில் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர். விருப்ப ஓய்வு கொடுத்து திராவிடர் கழகத்தில் பணியாற்ற முன்வந்தவர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் திராவிடர் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் இணையர் இரா.கவுதமன் அவர்களும் மருத்துவர் ஆவார். ஒரு மகன் மருத்துவர்; ஒரு மகள் பொறியாளர். இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: அதிமுகவை மன்னிக்கவே முடியாது


சேது சமுத்திரத் திட்டம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய திட்டம் - வெகு காலமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் திட்டமாகும்.

அந்தத் திட்டம் கூடாது என்பவர்கள் யாராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களே - இது கல்லின் மேல் எழுத் தாகும். இந்தத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க.வும் - அதன் பெயரில் அமைந்த அரசும் எதிர்க்கிறது - எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது எந்த அடிப்படையில்? இப்பொழுது இரண்டாவது முறையும் எதிர்த்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மன்னிக்கத் தக்கதுதானா?

இதே அ.இ.அ.தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் அவசியமானது - வேண்டுமென்றே மத்திய அரசு, கால தாமதம் செய்கிறது என்று குறிப்பிட்டி ருந்ததே - அந்தத் தெளிவான நிலை இப்பொழுது ஓடி மறைந்த மர்மம் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி இப்பொழுது அ.இ.அ.தி.மு.க. இத்திட்டத்தை எதிர்க்கிறது என்றால் அதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதால் அதன் பெருமை அல்லது அரசியல் லாபம் தி.மு.க.வுக்குப் போய் விடுமே என்ற ஆற்றாமை தான் இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத் திற்குச் சென்றுள்ள காரணமாகும்.

அ.இ.அ.தி.மு.க.தான் இந்நிலையை எடுத் துள்ளது என்றால் பிஜேபி திடீரென்று எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? அய்யகோ இராமன் பாலத்தை இடிக்கிறார்களே! என்று சந்திரமதியின் மயானக் கூச்சலைப் போடுவானேன்?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தானே இந்தத் திட்டம் இப்பொழுதுள்ள பாதையில் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டது?

பிரதமர் வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, சு.திருநாவுக்கரசர் இவர்கள் எல்லாம் யார்? பிஜேபியின் மத்திய அமைச்சர்கள் தானே - இவர்கள் தானே அனுமதி அளித்து ஒப்புதல் கையொப்பமிட்டார்கள்.

இன்றைக்கு ஏன் சுருதிபேதம்? அவர்களையும் ஆட்டிப் படைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதானா?

இராமன் பாலம் என்றெல்லாம் பேசுவது அறிவியலுக்கு உட்பட்டதுதானா? அரசு, தனது திட்டத்தில் புராண நம்பிக்கைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் எந்த ஒரு திட் டத்தையும் உருப்படியாக நிறைவேற்றத்தான் முடியுமா?

இராமனையும், கிருஷ்ணனையும் அவரவர் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசுப் பணத்தை செலவழிக்கும் ஒரு திட்டத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக் கலாமா?

இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதே - அதன் நிலை என்னாவது? இவ்வளவுப் பெருந் தொகை செலவழிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை போட்டால் இதற்கான நட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யார்?

அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளுமா? அல்லது பிஜேபி என்ற கட்சிதான் ஏற்றுக் கொள்ளுமா?

தமிழ்நாட்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கட்சிகள் - இந்த நிலைகளுக்குப் பிறகும் மவுன சாமியார்களாக ஆன மர்மம் என்ன?

அரசியல்தானா? கூட்டணிதானா? கேவலம் ஒட்டுக்காகத் தானா?

பதவிப் பசி எடுத்தால் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்களா? வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...


ஏன்?



மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும் மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்பட வேண்டும்?
(குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (3)

நமக்குக் கிடைத்துள்ள காலம் என்பது அற்புதமான ஆயுதம்! மனித சமூகத்தின் தனித் தன்மை யான பகுத்தறிவின் பயன்பாட்டில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஆயுதத்தின் பயன்பாடே நம் வாழ்வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

இதுவரை சொன்ன கருத்துக் களை சற்று அசை போட்டு சிந்தித்து, பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள் ளுங்கள்.

1. காலத்தை நாம் நிர்வகித்து கூட்டவோ, குறைக்கவோ முடியாது; ஆனால் நமது அறிவு - ஆற்றல் காரணமாக நம்முடைய பணிகளை காலத்தை எப்படியெல்லாம் திட்ட மிட்டு பயனுறு வகையில் செலவழிக் கலாம் என்பதை நம்மால் நிர்ண யித்துக் கொள்ள முடியுமே!

2. அப்படி திட்டமிட்டு, நிர்ணயித் துப் பணியாற்றுகையில் எது மிக முக்கியமான, நெருக்கடியான உடனே தலையிட்டு தீர்வு காண வேண் டிய பிரச்சினை என்பதை அறிந்து (Critical tasks) அதற்கே முன்னுரிமை அளித்தல்.

3. திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக் கக் கற்றுக் கொள்ளுங்கள்; இன்றேல் எது உங்களால் தீர்வு காணப்பட வேண் டிய வெகு முக்கிய அவசரப் பிரச்சினை எது என்பதை எப்படி நீங்கள் கண்டறிய முடியும்?

4. மாதிரி வாரம் (Model Week) என்று அமைத்துக் கொண்டு செயல் படக் கற்றுக் கொள்ளுங்கள். இதில் பெரும் பகுதி நேரம், எது, முக்கியத் தீர்வு காண வேண்டிய நெருக்கடி தரும் பிரச்சினைகளோ அவைகளுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி, தீர்வு காண சிந்தித்து செய லாற்ற முன் வாருங்கள்; இப்படிப்பட்ட அணுகு முறையை நீங்கள் - கையாள வில்லை யென்றால், உங்களை நோக்கி வாழ்வின் வெற்றி என்பது வந்து ஒரு போதும் உங்கள் கதவைத் தட்டாது!

5. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டிய இந்த அவசரப் பிரச்சினை களின் பட்டியலை உங்களோடு பணி யாற்றும் சக பணியாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்து அவர் களுக்கும் அந்தப் பிரச்சினையின் தீர்வு அவசரமாகக் காண வேண்டியது என்பதைப் புரிய வையுங்கள்.

6. தேவைப்பட்டால், சிறிய, குறைந்த நேரத்தில் தோழர்களை - பணியாளர் களை அழைத்து ஒரு கலந் துரையாடலை நடத்தி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள் - பகிர்வு மிகவும் முக்கியம்.

7. ஏற்கெனவே வேறு வகையா கவோ, காலம் பறப்பதைப் பற்றிய கவலையோ இல்லாதவர்கள் இனியா வது இந்தக் கோணத்தில் புதிய சிந்தனைக்கு ஆளாகி, காலம் என்ற அற்புதக் கருவியை மிகவும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளரான ரால்ப்ஃவேல்டா எமர்சன் அவர்களது கவிதை வரிகளை இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்:

உங்களால் முடியும் அளவுக்கு செய்து முடிக்கக் கூடிய பணியை ஒவ் வொரு நாளும் செய்து முடியுங்கள்;

சில தவறுகளும், அபத்தங்களும் கூட அப்பணியில் ஊடுருவி நுழைந் திருக்கலாம். அவற்றை எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அதைச் செய்து விட்டு; நாளை என்ற புதிய நாளைத் துவங்கட்டும்; நீங்கள் அதை மிகவும் பெருமிதத்துடனும், பழைய அர்த்த மற்ற நிகழ்வுகளை புறந்தள்ளிய புத்துணர்வுடன் இந்நாளைத் துவக் குங்கள்

- ஒவ்வொரு புதிய நாளும் புதிய தோர் அத்தியாயமாகப் பொலிவுற, புத்தாக்கம் செய்யுங்கள்; காலத்தைப் போற்றி கணக்கிட்டு திட்டமிடுதலே நீங்கள் வாழ்க்கையில் வாகைசூட வழிகாட்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


காலம் என்னும் அற்புத ஆயுதம்! (3)

நமக்குக் கிடைத்துள்ள காலம் என்பது அற்புதமான ஆயுதம்! மனித சமூகத்தின் தனித் தன்மை யான பகுத்தறிவின் பயன்பாட்டில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஆயுதத்தின் பயன்பாடே நம் வாழ்வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.

இதுவரை சொன்ன கருத்துக் களை சற்று அசை போட்டு சிந்தித்து, பசை போட்டு மனதில் ஒட்டிக் கொள் ளுங்கள்.

1. காலத்தை நாம் நிர்வகித்து கூட்டவோ, குறைக்கவோ முடியாது; ஆனால் நமது அறிவு - ஆற்றல் காரணமாக நம்முடைய பணிகளை காலத்தை எப்படியெல்லாம் திட்ட மிட்டு பயனுறு வகையில் செலவழிக் கலாம் என்பதை நம்மால் நிர்ண யித்துக் கொள்ள முடியுமே!

2. அப்படி திட்டமிட்டு, நிர்ணயித் துப் பணியாற்றுகையில் எது மிக முக்கியமான, நெருக்கடியான உடனே தலையிட்டு தீர்வு காண வேண் டிய பிரச்சினை என்பதை அறிந்து (Critical tasks) அதற்கே முன்னுரிமை அளித்தல்.

3. திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக் கக் கற்றுக் கொள்ளுங்கள்; இன்றேல் எது உங்களால் தீர்வு காணப்பட வேண் டிய வெகு முக்கிய அவசரப் பிரச்சினை எது என்பதை எப்படி நீங்கள் கண்டறிய முடியும்?

4. மாதிரி வாரம் (Model Week) என்று அமைத்துக் கொண்டு செயல் படக் கற்றுக் கொள்ளுங்கள். இதில் பெரும் பகுதி நேரம், எது, முக்கியத் தீர்வு காண வேண்டிய நெருக்கடி தரும் பிரச்சினைகளோ அவைகளுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி, தீர்வு காண சிந்தித்து செய லாற்ற முன் வாருங்கள்; இப்படிப்பட்ட அணுகு முறையை நீங்கள் - கையாள வில்லை யென்றால், உங்களை நோக்கி வாழ்வின் வெற்றி என்பது வந்து ஒரு போதும் உங்கள் கதவைத் தட்டாது!

5. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டிய இந்த அவசரப் பிரச்சினை களின் பட்டியலை உங்களோடு பணி யாற்றும் சக பணியாளர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்து அவர் களுக்கும் அந்தப் பிரச்சினையின் தீர்வு அவசரமாகக் காண வேண்டியது என்பதைப் புரிய வையுங்கள்.

6. தேவைப்பட்டால், சிறிய, குறைந்த நேரத்தில் தோழர்களை - பணியாளர் களை அழைத்து ஒரு கலந் துரையாடலை நடத்தி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள் - பகிர்வு மிகவும் முக்கியம்.

7. ஏற்கெனவே வேறு வகையா கவோ, காலம் பறப்பதைப் பற்றிய கவலையோ இல்லாதவர்கள் இனியா வது இந்தக் கோணத்தில் புதிய சிந்தனைக்கு ஆளாகி, காலம் என்ற அற்புதக் கருவியை மிகவும் பயனுறு வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளரான ரால்ப்ஃவேல்டா எமர்சன் அவர்களது கவிதை வரிகளை இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்:

உங்களால் முடியும் அளவுக்கு செய்து முடிக்கக் கூடிய பணியை ஒவ் வொரு நாளும் செய்து முடியுங்கள்;

சில தவறுகளும், அபத்தங்களும் கூட அப்பணியில் ஊடுருவி நுழைந் திருக்கலாம். அவற்றை எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அதைச் செய்து விட்டு; நாளை என்ற புதிய நாளைத் துவங்கட்டும்; நீங்கள் அதை மிகவும் பெருமிதத்துடனும், பழைய அர்த்த மற்ற நிகழ்வுகளை புறந்தள்ளிய புத்துணர்வுடன் இந்நாளைத் துவக் குங்கள்

- ஒவ்வொரு புதிய நாளும் புதிய தோர் அத்தியாயமாகப் பொலிவுற, புத்தாக்கம் செய்யுங்கள்; காலத்தைப் போற்றி கணக்கிட்டு திட்டமிடுதலே நீங்கள் வாழ்க்கையில் வாகைசூட வழிகாட்டும்.

- கி.வீரமணி