Search This Blog

3.11.13

சூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன? - கி.வீரமணி



தீபாவளி கதை - நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணன் - அவன் மனைவி யரை ஏவி தந்திரத்தால் கொன்றதுபற்றி விடுதலை வாசகர்கள் அறிவார்கள்.
உடனே அது முடிந்தவுடன் சூரசம் காரம் என்ற கந்தர் சஷ்டி விழா திருச் செந்தூர் முதல் பல ஊர்களில் நடை பெறவிருக்கிறது. நாளேடுகள், தொலைக் காட்சிகள், வானொலி முதலிய நவீன அறிவியல் சாதனங்களில் இதுபற்றிய விளக்கங்கள்!
சங்கராச்சாரிகளும், மத வியாபாரிகளும், பக்தி வியாபாரம் செய்து, பாமரத் தனமான பக்தர்கள், (இதில் படித்தவர்கள் , பதவியாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அடக்கம் தான்.) சுரண்ட, செய்யவேண்டிய வேலையை மேலே காட்டிய விஞ்ஞான சாதனங்களுமா செய்வது?
வெட்கம்! மகா வெட்கம்!!
காற்றில், நீரில் தொத்து நோய்க் கிருமி கள் பரவுவதுபோல இந்த மூடநம்பிக்கை நோய்களும் பரவுகின்றன இந்த ஒலி, ஒளி, அச்சு அலைகள் மூலமாக.
சூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன?
ஒரு பார்ப்பன தமிழ் நாளேடு ஒன்றில் (தமிழர்களின் நாளேடுகளும் இந்த மூடத்தன வியாபாரத்தில் சளைத்தவை அல்ல) இன்று சூரபத்மன் வீழ்ந்த கதை என்ற தலைப்பில் அக்டோபர் 30-இல் சூரசம்காரம் பற்றிய ஒர் கட்டுரை வெளிவந்துள்ளது.
கட்டுரையைக் கீழே தந்துள்ளோம்.
பக்தியில் சிறந்தவன் தட்சன் என்ற மன்னன். பெரிய தபஸ்வி. அம்பிகையை தன் நெஞ்சில் வைத்து பூஜித்தான்.
அவளைத் தன் குழந்தையாகவே பாவித்தான். அம்மா பராசக்தியே, உன்னை என் குழந்தை போலவே கருதி விட் டேன். உன்னைப் பிரிந்திருக்கும் சக்தி எனக்கில்லை. நீ என் மகளாகப் பிறக்க வேண்டும். உன்னை நான் பாராட்டி, சீராட்டி வளர்க்கவேண்டும். மணாளனான சிவபெருமானை நீ பூமியில் மீண்டும் ஒருமுறை மணம் செய்து, உலக மக்களை உய்யச் செய்யவேண்டும் என வேண்டி னான். அவன் கேட்ட வரத்தை அன்னை பராசக்தி அப்படியே கொடுத்தாள்.
பாலில் குளிப்பாட்டு!
பூவுலகில் தட்சனின் மகளாகப் பிறந்தாள். தட்சனின் மகள் என்பதால், தாட்சா யிணி என பெயர் சூட்டப்பட்டது. குழந்தை இல்லாத தட்சனுக்கு பிறந்த இந்த மகள் பாலில் குளிப்பாட்டி வளர்க்கப்பட்டாள். இதனால்தான் அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்யும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
தாட்சாயிணி வளர்ந்து பெரியவள் ஆனாள். சிவபெருமானின்மீது உளப் பூர்வமான அன்பு கொண்டிருந்தாள். அவரையே நினைத்து தவமிருந்தாள். தன் தவ வலிமையால், சிவலோகம் சென்று மாப்பிள்ளையை தங்கள் இல்லத்திற்கு எழுந்தருளி தன் மகளை திருமணம் செய்துகொள்ளவேண்டினான் தட்சன்.
சிவபெருமானும் தன் தேவியை அடையும் காலம் நெருங்கிவிட்டதால், தட்சனின் அரண்மனைக்கு வருவதாக வாக்களித்தார். அவர் அய்ந்துமுகம் கொண்டவர் என்றும். மூன்று கண்கள் உடையவர் என்றும், புலித்தோல் உடுத்தி யானைத் தோலை மார்பிலே அணிந்தவர் என்றும் புராணங்கள் சொல்கிறதே, அதே நிலையில் தட்சனின் அரண்மனை நோக்கி வந்தார்.
இந்தக் கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளையை யாராவது விரும்புவாரா? தன் வருங்கால மருமகனைப் பார்த்த தட்சனின் மனைவி அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள். கொடிய வடிவமுடைய இவனுக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க சம்மதிக்கவே மாட்டேன் என தட்சன்  மனைவி கூறினாள்.

 தாட்சாயிணி அழுது புரண்டாள். அவள் முன் பிரசன்னமானார் சிவபெருமான்.
தாயே, அழகு நிரந்தரமானதல்ல. நான் பல வடிவங்கள் எடுக்கக் கூடியவன். என் உண்மை வடிவத்தை பார்க்கிறாயா? எனக் கூறி தன் சுயரூபத்தைக் காட்டினார். கோடி சூரியர்களும் கோடி சந்திரர்களும் ஒன்று சேர்ந்தது போன்ற அதிபிரகாச தோற்றத்தில் அமைந்திருந்தது அவரது உருவம்.
மலைத்துப்போனாள் மகாராணி. திருமணம் இனிதே முடிந்தது. பார்வதி என அழைக்கப்பட்டாள் தாட்சாயிணி. இந்நேரத்தில் யாகம் ஒன்றை நடத்த விரும்பினான் தட்சன். கடவுளே எனக்கு மருமகன் என்ற மமதை அவன் உள்ளத்தில் எழுந்தது. இதன் விளைவாக யாரையும் மதிக்காமல் திரிந்தான்.
மாமனாரை அவமதித்த மருமகன்!
யாகத்திற்கு மருமகனை அழைக்க வந்தான். அவர் கடவுள் அல்லவா? மாம னாரை எழுந்து வரவேற்கவில்லை. இது தட்சன் மனதை நெருடியது. மாமனாருக்கு மரியாதை கொடுக்காத இவனை ஏன் யாகத்திற்கு அழைக்கவேண்டும் எனக் கருதி, மகளைப் பார்க்க வந்ததாக பொய் கூறி, மகளையும் யாகத்திற்கு அழைக் காமல் சென்றுவிட்டான். ஆனால், மற்ற லோகங்களுக்குச் சென்று பிரம்மா, திருமால் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை யாகத்திற்கு வர அழைப்பு விடுத்தான். ஈசன் வீட்டு மாமனார் இல்ல விழா அல்லவா! ஒருவர் விடாமல் அங்கு சென்றுவிட்டனர். சென்ற பின்தான் ஈசனும் ஈஸ்வரியும் அழைக் கப்படவில்லை என்பது தெரிந்து பயந்து போயினர். இந்த விஷயம் பார்வதியின் கவனத்துக்கு வந்தது. தந்தைக்கு புத்தி புகட்டுவதற்காக பூலோகம் செல்ல கணவனிடம் அனுமதி கேட்டாள் - மறுத் தார் ஈசன். அவரது சொல்லையும் மீறி, பூலோகம் சென்று தந்தையிடம் நியாயம் கேட்டாள்.
அவனோ, மகளை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டான். அவள் ருத்ரகாளியாக மாறினாள். சிவனோ வீரபத்திரராக உருவெடுத்தார். இருவரும் யாக சாலையை அழித்தனர். தன் மாமனாருக்கு சாபம் ஒன்றைக் கொடுத்தார் சிவன்.
என் பக்தனாயினும் நீ ஆணவத்தால் என்னை அவமதித்தாய். எனவே நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக. மறு ஜென்மத்தில் அசுர குணங்களே தலை தூக்கும் உன்னை அடக்க என்னில் பிறக் கும் ஒரு சக்தி உன்னிடம் வரும். சுப்பிர மணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய்.
நீ சூரபத்மன் என்றும், பத்மாசுரன் என்றும் பெயர் பெறுவாய். நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் உனக்கு கட்டுப் பட்டிருக்கும். உன் இறுதிக் காலத்தில் சுப்பிரமணியன் உன்னை வதம் செய்வான் என்றார்.
இதன்படி மறு ஜென்மத்தில் சூரபத் மனாக பிறந்தான் தட்சன். அழகுக் கோலத்தில் இருந்த பெண்மணி மீது ஒரு சமயம் ஆசை கொண்டார். காசியப முனிவர். அதன் விளைவாக அவர் பத்மாசுரன், சிங்கமுகன் என்ற மகன் களையும் அஜமுகி என்ற மகளையும் பெற்றார். அதன்பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார். இந்த பத்மாசுரனே உலகை அடக்கி ஆண்டான். அவனை திருச்செந்தூர் கடற்கரையில் முருகன் வதம் செய்தார்.
தான் இறக்கும் நிலையில் சூரபத்மனுக்கு தன் முன் ஜென்ம நினைவு வந்தது. எதிரே நிற்பது தன் பேரன் என்பதைப் புரிந்துகொண்டான். மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.
முருகா! என் முற்பிறவிப்படி நீ என் பேரனா கிறாய். உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படு கிறேன். நான் உன் மடியில் எந்நாளும் இருந்தால், என்னை மீண்டும் ஆணவம் ஆட்கொள்ளாது! என்றான்.
தாத்தாக்கள் பேரன்களை முதுகில் சுமந்து செல் வது இப்போதும் எப்படி வழக்கமோ, அதேபோல அந்த ஆசையை சூரபத்மனும் வெளியிட்டான். இதன்படி சூரனின் ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார். முருகன் ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.
--------------------------------------------------------தினமலர் -வாரமலர் 26-.10.-2003
இராமாயணமும் - கந்தபுராணமும்!
இராமாயணம் என்பது கந்தபுராணத்தைக் காப்பி யடித்து உருவாக்கப்பட்ட கற்பனைதான் என்பதை தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு குடிஅரசு வார ஏட்டில் ஆதாரங்களில் உள்ளபடி தொகுத்தளித் துள்ளனர்.
அதே கருத்தை தமிழ்க்கடல் மறைமலை அடி களார் அவர்கள் மாணிக்கவாசகர் "வரலாறும் கால மும்" என்ற அவரது மிகப்பெரிய (2 தொகுதிகள் கொண்ட ஆராய்ச்சி நூலிலும் குறிப்பிட்டுள்ளார் என்பது தந்தை பெரியாருக்குத் தெரியாத நிலையில் மேலே அவர்கள் அதை எழுதினார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ரா.பி. சேதுபிள்ளை அவர்கள் "வேலும் வில்லும்" என்ற ஓர் நூலில் மனித சமூக வளர்ச்சியில், உலோகக் காலத்திலும் கூட முதலில் கண்டு பிடிக்கப்பட்டது வேல் - (மிரு கங்களிடமிருந்து, மனிதன் காட்டில் வேட்டையாடு கையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கண்டுபிடித்த முதல் கருவி வேல். அறிவு வளர்ந்த பிறகு நாணேற்றி வெகுதூரம் வேகமாக பாயக்கூடிய வில் என்ற ஆயுதம் கண்பிடிக்கப்பட்டது. கந்த புராணம் வேல் கதை! இராமாயணம் வில்கதை என் பதை இலக்கிய நயத்துடன் எடுத்துக்காட்டினார்!)
இக்கதைக்கும் பகுத்தறிவுக்கும் 21-ஆம் நூற் றாண்டில் வளர்ச்சி பெற்றுள்ள அறிவியல் கணினி புரட்சியுகத்திற்கு கடுகளவு சம்பந்த முண்டா?
கோபமும் - சாபமும் கடவுள் குணங்களா?
(1) கடவுளுக்குப் பக்தன் திருமணம் செய்து வைத்தானாம்.
(2) எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த கடவுள் சராசரி மனிதனை விட தன் முனைப்பினால் (யாகத்திற்கு) அழைக்காமல் சென்றதால் கோபப் பட்டான் என்பது நியாயமா?
(3) மனைவி பார்வதி காளியாகிட, சிவன் வீரபத் திரனானான். யாக சாலைகளை அழித்தான் என்பது நம்ப முடியுமா?
(4) என் பக்தனாயினும் நீ என்னை அவமதித்த குற்றத்திற்காக மறு ஜென்மத்தில் ஆட்டுத் தலை யுடன் அசுர குணங்கள் கொண்டவனாகப் பிறப்பது என்று சாபமிட்டார். அதோடு என்னில் பிறக்கும் சக்தி உன்னிடம் வரும். சுப்பிரமணியன் என்ற சக்தி யிடம் நீ தோற்றுப் போவாய் என்று சாபம் இட்டார். கோபம் - சாபம் இவைதான் கடவுளுக்கு அழகோ!
(5) சூரபத்மன், பத்மாசுரன் என்று பெயர் நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் கட்டுப்பட்டிருக்கும் உன் இறுதிக் காலத்தில் சுப்பிர மணியன் உன்னை வதம் செய்வான் என்றது எவ் வகையில் நியாயம்? நற்செயலால் உலகப் புகழ் வாய்ந்தவனை ஒழிப்பதற்கு ஒரு பிறப்பா - அதுவும் கடவுள்களிடம்?
(6) காசிப முனிவர் என்பவரின் தனி மனித ஒழுக்கம் எப்படி? பார்த்தீர்களா?
அழகாக இருந்த பெண்மீது ஆசை கொண்டு இரு மகன்கள் ஒரு மகளையும் (பத்மாசூரன் - சிங்கமுகன், அஜமுகி) பெற்றுப் போட்டு விட்டு, கைவிட்டு தவம் செய்யப் போய்விட்டாராம்!
இதேபோல் அழகிய கல்லூரி மாணவிகளை டில்லியில் ஜனாதிபதியின் மெய்க்காவல் படையைச் சார்ந்தோர் கற்பழித்து கொலை செய்து ஓடி விட்டனர். அதே டில்லியில் உலக திரைப்பட விழா விற்கு வந்த சுவிஸ்நாட்டு பெண் அதிகாரியைக் கற்பழித்தனர். காசிப முனிவர் செயல், இவர்கள் செய்த செயலினின்று எவ்வகையில் வேறுபட்டது? தண்டனைக்குரியவர்கள் எல்லாம் ஆச்சாரி யார்களா? ரிஷிகளா? முனிபுங்கவர்களா?
(7) இறுதிப் பகுதி நரகன் கதைபோல தீபா வளியை தான் செத்ததைக் கொண்டாடச் சொன் னான் என்ற டூப் போலவே. இதிலும் பேரனைச் சுமக்க ஆசைப்பட்டானாம்; மயிலும் சேவலும் வந்தனவாம்.
பஞ்சமர், சூத்திரர் முதுகுகளில் பார்ப்பனரா?
பஞ்சமர் சூத்திரர் முதுகில் இன்னமும் பார்ப் பான் சவாரி செய்வதன் உருவகம் போலும் இது!
வாசக நேயர்களே, உணருங்கள்! ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எப்படியெல் லாம் திராவிட இனத்தை அழித்து பழி சுமத்தி அழித்ததோடு இல்லாமல், பாதிக்கப்பட்ட அந்த இனத்தின் சந்ததி யையே அதைக் கொண்டாட வைத்து மூளைச் சாயம் ஏற்றி, மூளைக்கு விலங் கிட்ட முப்புரி நூல் கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டுதான் தந்தை பெரியார், திராவிடர்கள் அறிவும் மானமும் பெறவேண்டுமென்றார்.
நியாயப்படி சம்ஹாரம், உண்மையில் எந்தச் சக்திகள்மீது நடத்தப்படவேண்டும்?

------------------------ கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை - மறுபிரசுரம் “விடுதலை” 1-11-2013

9 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

கடவுளா? நதியா?

செய்தி: வரும் காலங்களில் வெள்ளப் பெருக்கிலிருந்து கோதார்நாத் சிவன் கோவிலைக் காப்பாற்ற வேண்டுமானால் நடுவே ஓடும் மந்தாகினி ஆற்றின் வழியை மாற்றியமைக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. சிந்தனை: ஆமாம், நாட்டுக்கு நதியைவிட குத்துக் கல்லுக் கடவுள்தானே முக்கியம்? ஆமாம் கடவுள் தான் சர்வசக்தி வாய்ந்தவரா யிற்றே - அவரைக் காப்பாற்றிக் கொள்ள அவராலேயே முடியாதா?

தமிழ் ஓவியா said...


கணக்கு மேதை ராமானுஜமும், கற்க வேண்டிய உண்மைப் பாடங்களும்!


- ஊசி மிளகாய்

விஜயபாரதம் மலரில் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் என்பவர் கணித மேதை (கும்பகோணம்) ராமானுஜன்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை எழுதியுள்ளார்.

(ராமானுஜன் வாழ்க்கைப்பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்கள் தயாரித்து முடித்துள்ளார்).

இந்த ராமானுஜன் ஒரு ஏழை பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர்; திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். அய்ந்தாம் வகுப்பு (பொதுத் தேர்வு அப்போது உண்டு) தஞ்சை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வாகி, ஸ்காலர்ஷிப் பெற்றுப் படித்தவர்.

பள்ளிப் பருவத்தில் கணக்கில் ஆர்வம் கொண்டு சிறந்தவராகத் திகழ்ந்த இவர் அங்கும் கணக்குப் புலி என்றால் கும்ப கோணம் அரசுக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து ஒரு முறை அல்ல; மூன்று முறை (இருமுறை கும்பகோணம் கல்லூரி, ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில்) தோல்வி அடைந்தார்.

பிறகு குமாஸ்தா வேலையில் சேர்ந்து குடும்ப வாழ்வை நடத்தினார்.

இவருக்கு வாழ்வளித்தவர்கள் பச்சை யப்பன் கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலு, கேம்ப் பிரிட்ஜ் பல்கலைக் கழக ஹார்டி என்ற கணிதப் பேராசிரியர், லிட்டில்வுட் என்ற பேராசிரியர் மற்றும் கில்பர்ட்டி வாக்கர்.

1916ஆம் ஆண்டு இராமா னுஜத்திற்கு அவரின் கணித அறிவைப் பாராட்டி கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அவருக்கு பி.ஏ. பட்டம் வழங்கியது. (சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது அங்கே கிடைக் காத பட்டம் கேம்பிரிட்ஜில் கிட்டியது).

தகுதி, திறமை முதல் வகுப்பு தேர்வு மார்க்குகளே அறிவின் எல்லை என்பவை போலித் தனங்கள் என்பதை இந்த சம்பவங்கள் காட்டவில்லையா?

வெள்ளைக்காரர்களுக்கு - இருந்த மனிதநேயம், சொந்த நாட்டு ஜாதிக்காரர் களுக்கோ, பணம், நிலபுல வசதி படைத்த வர்களுக்கோ இல்லையே! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அதன் பேராசிரியர் களும் காட்டிய பரிவு, கொடுத்த அங்கீகாரத் தின் முன்பு சுய ஜாதி அபிமானம், தேசாபிமானம் எம்மாத்திரம்?

அது மட்டுமா?

லண்டன் புறப்படுவதற்கு முன்னால் ராமானுஜன் குடுமியை எடுத்துவிட்டு கிராப்புத் தலையாக மாற்றிக் கொண்டார்! ஆங்கிலேயரைப் போல் கோட்டும், சூட்டும், டையும் அணிந்தார்!

பூஜை, புனஸ்காரங்களைவிடவில்லை (அதையும் இவர் எழுதியுள்ளார்)

அப்படியெல்லாம் இருந்து வாழ்ந்த அவருக்குரிய இறுதி மரியாதை அவர் சாவின் போது அந்த ஜாதி யினர், சொந்த உறவுகளால் கிடைத்ததா? அதுதான் வேதனை - வெட்கம்!

1920ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் இராமனுஜன் மறைந்தார். ராமானுஜன் இறுதிச் சடங்குகளில் அவர் உற வினர் வரவில்லை; காரணம் கடல் கடந்தார் (இராமன் கடல் கடந்துதானே இராவ ணனிடம் சண்டை போட்ட தாக இராமாயணம் கூறுகிறது; அது தோஷ மில்லையா? அதனால்தானோ என்னவோ இராமன் சரயு நதியில் வீழ்ந்து மாண்டான் போலும்!) என்பதற்காக யாரும் கலந்து கொள்ளவில்லை. ஜாதி வெறி - சனாதனம் படுத்திய பாட்டைப் பார்த்தீர்களா?

கட்டுரையாளர் எழுதுகிறார்:

நம் பெருமாள் செட்டியார் என்பவரும், சென்னை கலெக்டரும் (வெள்ளைக்காரர்) இறுதிக் கடன்களை இயற்றினர்!

நாடே இன்று போற்றுகின்ற இராமானு ஜத்தை உலகறியச் செய்தது அவரது ஜாதியல்ல; மதமல்ல, அறிவுதான் என்பதும், அதனை அங்கீகரித்து உதவியவர்கள் வெள்ளைக்காரர்கள் - அந்நியர்கள் என்பதும், இறுதி மரியாதை செலுத்தக் கூட ஜாதியும், சனாதனமும் முன் வராமல் இதயமற்ற முறையில் நடந்து கொண்டன என்பதும்தான் கற்க வேண்டிய பாடம் அல்லவா?

தமிழ் ஓவியா said...


தமிழா எது புனிதம்?


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் என்றார் வள்ளுவனார்!

பிறக்கின்ற மனிதரிலே ஜாதி என்ற அடையாளம் இருப்பதுண்டா?

ஆதியிலே தொழில் முறையில் ஜாதி எனும் குறிப்பைத் தந்தார்.

பின்னாளில் ஜாதியிலே பேதம் தந்தார்

நால் வருண பேதமதை சுய நலத்தால்

மனுதர்மமெனும் பெயரில் எழுதி வைத்தார்.

பிரம்மாவின் சிரசினிலே தோன்றி னோம் என்று

பிறவியிலே தாங்கள் தான் உயர்ந் தோரென்றார்

உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு

தான் உயர்ந்தோர் என்பதிலே நியாயம் உண்டோ?

மற்றவரை சூத்திரராய் தீண்டாதாராய்

நடத்துவதில் கடுகளவும் தர்மம் உண்டா?

கோவில்களை கட்டுபவன் சூத்திரனா?

சிலை வடிக்கும் சிற்பியும் சூத்திரனா?

சூத்திரர்கள் வெட்டாத குளங்களுண்டா?

உழைப்பதற்கு மட்டும்தான் சூத்திரர்கள்

உழைக்காமல் எப்பொருளும் எமக்கு சொந்தம்

என்கின்ற பார்ப்பனனை அழைத்து வந்து

நம் வீட்டின் நடுவினிலே அமர வைத்து

அவன் வேண்டுகின்ற பொருளனைத்தும் வாரித் தந்து

அவன் காலில் சாஷ்டாங்கதெண்டனிட்டு

புரியாத அவன் மொழியை காதில் கேட்டு

புனித மென்று குடியுங்கள் கோமியத்தை

என்கின்ற அவன் சொல்லை நம்பி நாமும்

கோமியத்தை குடிப்பதனால் புனிதம் உண்டா?

இதை நன்கு சிந்திப்பீர் தமிழர்களே!

நம் வீட்டில் நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம்

பார்ப்பனன் வந்தால் தான் புனிதமென்று நினைப்பீரானால்

நாம் நம்மை சூத்திரராய் ஏற்பதாகும்.

இனியேனும் நமக்கு சுய மரியாதை வேண்டுமானால்

நம் வீட்டு நிகழ்ச்சிகளை நாமே செய்வோம்!

க.ஜெயராமன் (எ) பெரியார் தாசன்
ஜீ.மூக்கனூர்பட்டி.

தமிழ் ஓவியா said...

தீபாவளி: பட்டாசால் விபரீதம்!

கூரை வீடுகள் சாம்பல்

கெங்கவல்லி, நவ.3- கெங்கவல்லி அருகே, பட்டாசு விழுந்ததால், இரண்டு கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் வடக்கு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில், கூரை கொட்டகை அமைத்து குடியிருந்து வந்தார்.

நேற்று பகல், 12.10 மணியளவில், பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து வெளியான தீப்பொறி, கூரை கொட்டகையின் மீது விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நாகராஜ் தலைமையிலான, கெங்கவல்லி தீயணைப்பு அலுவலர்கள், விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் தடுத்தணைத்தனர்.

எனினும், தீ விபத்தில், கூரை வீடு எரிந்து சாம்பலானது.அதேபோல், வீரகனூர், நல்லூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது குடியிருப்பு வீட்டின் அருகில், ராக்கெட் பட்டாசு வெடித்தபோது, அதன் தீப்பொறி கூரைவீட்டின் மேல் விழுந்து, மேற்கூரை தீயில் கருகியது.

மூன்று வீடுகள் சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம், நவ.3- நாகையில் நேற்று முன் தினம் இரவு பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலானது.

நாகை, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (60); கூலித் தொழிலாளி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்தனர். ராக்கெட் வெடி ஒன்று திருநாவுக்கரசு வீட்டின் கூரை மீது விழுந்ததில், வீடு தீப்பற்றி எரிந்தது. தீ, அருகில் இருந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.

மூன்று வீடு களிலும் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் தீயில் சேதமடைந்தன. நாகை, தீயணைப்பு நிலைய கோட்ட அலுவலர் துரை மாணிக்கம் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், தலா 5 ஆயிரம் ரூபாய், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, சேலைகளை நிவாரணமாக வழங்கினார். சம்பவம் குறித்து நாகை டவுன் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாக்குக் கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் குறிஞ்சி நகர் மெயின் வீதியில் உள்ள தனியார் சாக்குக் கிடங்கில் நேற்று இரவு திடீரெனத் தீப்பிடித்தது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அருகில் இருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்த தீய ணைப்புத் துறையினர் வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

அப்பகுதியில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு சாக்குக் கிடங்கில் தீப்பிடித்ததாகக் கூறப் படுகிறது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தமிழ் ஓவியா said...


பதிப்பாளர் பார்வையில் பெரியார்



இத்தனை ஆண்டுகள் பதிப் பாளர் வாழ்வில் வர்த்தகரீதி யாக வெற்றிகரமானவராக இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

வியாபாரத்துக்கு எந்தப் புத்தகம் உதவும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கிராமத்தி லிருந்து தனது முதல் புத்தகத்தை யாரும் போடுவதற்கு வழியில்லாமல் யார் எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களது புத்தகங்களைப் போடவேண்டும் என்பதே எனது கொள்கை. இதுவரை ஆயிரத்துக்கும் மேல் தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுள்ளேன். நூல்களை ஒரு ரசிகனாக, ஒருவனாகவே வெளியிட்டு வருவ தால் நான் ஒரு வியாபாரியாக ஆக முடிய வில்லை. ஒரு எழுத்தாளனின் முதல் எழுத்தை எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். எல்லாரும் போடும் நூல்களைப் போடுவதில்லை என் பதை நான் குறிக்கோளாகவே வைத் துள்ளேன். திரு.வி.கவையும், பெரி யாரையும், காந்தியையும் படிப்பவன், பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்.

சிலப்பதிகாரம், தொல்காப் பியம் மற்றும் திருவாசகத்தின் காலம் குறித்து தமிழுணர்வாளர் களின் உணர்வுகளுக்கு எதி ரான கருத்துகள் உங்களிடம் உள்ளனவே?

திருவாசகத்தின் காலம் குறித்த ஒரு விவாதத்தில் மறைமலை அடிகள் அப்போது மூன்றாம் நூற்றாண்டுதான் என தொடர்ந்து வலிந்து எழுதி வந்தார். அதைப்பற்றி அப்பாதுரையிடம் விவாதித்தபோது, அவர் தமிழ்க் கடலையே குற்றம் சொல்கிறாயா என்றுதான் என்னிடம் கேட்டார். அவருக்கு ஒரு கருத்து இருந்தும் அதை அவர் வெளிப் படுத்தவே இல்லை. அறிஞர்களுக்குள்ளும் பக்தி உணர்வு உண்டு என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

ஒரு புதிய கருத்தைக்கேட்டால் அதைப் பரிசீலிக்க வேண்டும். அதை நான் பெரியார் வழியாகவே கற்றுக்கொண்டேன். மனிதனை உயர்த்தாத எதையும், மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்காத எதையும் அவர் எதிர்த்தார். அவர் வழியில் வந்ததால் எந்தப்புதிய கருத் துக்கும் என்னிடம் ஆதரவுண்டு. பெரியார் யாரையும் மேற்கோள் காட்டியதில்லை. சிக்கலுள்ள ஆயிரம் சமூகச் சிக்கல்களைப் பெரியார்தான் எடுத்துக்கொண்டார். மகாத்மா காந்தி அச்சப்பட்ட இடத்தில் பெரியார் நுழைந்தார். பெரியாரின் சிந்தனை கள் இன்னும் புதுமையாகவே இருக்கின்றன. அவரிடம் எதன்மீதும் கண்மூடித்தனமான பக்தி இல்லை. பக்தி இருக்கும் இடத்தில் ஆய்வுகள் உண்மையாக இருக்காது என்பதே எனது எண்ணமும்கூட.
- வெள்ளையாம்பட்டு சுந்தரம்

(தமிழில் வரலாறு, தொல்லியல் சார்ந்த நூல்களை பதிப்பித்தவர் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்)

நன்றி: தி இந்து 2.11.2013

தமிழ் ஓவியா said...

கேள்வி: சிற்றுந்தில் இரட்டை இலை அரசு தவிர்த்திருக்கலாம்தானே?

பதில்: அது இரட்டை இலை இல்லை. பசுமையைக் குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் நான்கு இலைகள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தில் இரட்டை இலை, பிகாஸஸ் குதிரையின் உயரே எழும் சிறகுகளாக மாற முடியுமென்றால் சிற்றுந்தில் இரட்டை, இரட்டை இலைகள் பசுமையைக் குறிப்பதில் வியப் பில்லைதான்! அமைச்சர் காணும் கலைநயம் பலருக்கு ஜனநாயகப் பண்புகளின் கொலைக் களமாகத் தோன்றுவதிலும் வியப்பில்லை!
(நன்றி: கல்கி 10.11.2013)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்



நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

தமிழ் ஓவியா said...


போலிக் கண்ணீர் மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே; காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் - காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்ல வேண்டுமா?


சென்னை, நவ. 4-இசைப்பிரி யாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதிநிதிகள் செல்ல வேண்டுமா? என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (3.11.2013) வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். 27 வயதே நிரம்பியவள்! அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம் விடுதலைப் புலிகளின் ஊட கப் பிரிவில் அவளும் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டது தான். விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன், பாலச்சந்திரனை சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண் களையும், முதியோர்களையும் கொன்ற கொடுமைகளுக்கு ராஜபக்சே பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணு வத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப் பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர் பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சி களை, அதே சேனல் 4 நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக் கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது. இந்தக் கொடுமையான காட்சியை, நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ள வேண் டுமென்று இன்னமும் குரல்கொடுத்து கொண்டிருப்பவர்களும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணு கிறார்களா? அதில் இந்தியா கலந்து கொண்டால், நாமெல்லாம் தமிழர் கள் தானா என்று சரித்திரம் சாப மிடாதா?

ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமான தும், நம்பகமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத் தமிழர் களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்; என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ் வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியா வுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா? இவ்வாறு கலைஞர் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.