Search This Blog

22.11.13

பெரியார் வென்றாரா? ஆச்சாரியார் வென்றாரா?

88 ஆண்டுகளுக்குமுன் 

இதே நாளில் தான் 1925இல் காஞ்சீபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து தந்தைபெரியார் வெளி யேறினார்.

காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கப் புரியாகி விட்டது. பார்ப்பனர் அல்லாத மக்களின் பாதுகாப்பை, காங்கிரஸ் வசம் ஒப்படைக்க முடியாது; என்பதைத் துல்லியமாக உணர்ந்த தந்தை பெரியார். காங்கிரசுக்குள்ளிருந்து தொடர்ந்து போராடிப் பார்த்தும், பலன் இல்லை என்பதை உறுதியாகத் தெளிந்த - தெரிந்த நிலையில்தான், காங்கிரசிலிருந்து வெளியேறுவது என்ற முடிவுக்குவந்தார்.

தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி, ஒரு வருடம் வரைகூட, அவர் இடம் வேறொருவர் மூலம் நிரப்பப்படவில்லை என்பது, குறிப்பிடத் தக்கதாகும்.

காங்கிரஸ் என்பது இமயமலை - அதில் மோத வேண்டாம் நாயக்கரே என்று ஆச்சாரியார் (ராஜாஜி) எச்சரித்தார். தமக்கே உரித்தான முறையில், முடியைக் கட்டி மலையை இழுக்கிறேன், வந்தால் மலை, வராவிட்டால் முடியே போச்சு என்று பதிலடி கொடுத்தார், தந்தை பெரியார்.

இதில் பெரியார் வென்றாரா?  ஆச்சாரியார் வென்றாரா? என்பதை நாடு அறியும்.

எந்தக் காங்கிரஸ் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க மறுத்ததோ, அந்தக் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டே இடஒதுக்கீட் டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திய சாதனைக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார்.

அதற்குப் பிறகுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு வந்தது என்பதை நன்றி உணர்வோடு இந்நாளில் நினைவு கூர்வோம்.

கடந்த 20ஆம் தேதி திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், சென்னைப் பெரியார் திடலில் கொண்டாடப்பட்ட, நீதிக் கட்சி 97ஆம் ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு கருத்தை நிரல்பட எடுத்து விளக்கினார்.

நீதிக்கட்சி தலைவர்கள், தந்தை பெரியார் உள்ளிட்டோர் ஏந்திய அந்த சமூகநீதிக் கொடியைக் காங்கிரசால் கூட மறுதலிக்க முடியவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

1938இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் ஆட்சியானாலும் சரி, அதன் பின் வந்த ஓமாந்தூர் ராமசாமியார் (ரெட்டியார்) ஆட்சியானாலும் சரி, குமார சாமி ராஜா தலைமையில் அமைந்த ஆட்சியானாலும் சரி, காமராசர் ஆட்சியானாலும் சரி, இடஒதுக்கீட்டில் கை வைக்க முடியவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் எடுத்துச் சொன்னது - இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

எம்.ஜி.ஆர். அவர்கள் சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கப் பொருளாதார அளவுகோலைத் திணித்த நேரத்தில், அதனையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் படுதோல்வி அடைந்தார்.

தி.மு.க. ஆட்சி இடஒதுக்கீட்டில் எப்பொழுதுமே தெளிவாக இருந்து செயல்பட்டு வந்திருக்கிறது. செல்வி ஜெயலலிதா அவர்களைப் பொறுத்தவரை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் சட்ட அறிவால் தப்பித்துக் கொண்டார்.

இப்பொழுது ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூக நீதிக்கு எதிராகக் கோளாறுகளைச் செய்து வருகிறார். திராவிடர் கழகம் எவ்வளவோ எடுத்துக் கூறியும்  பார்ப்பனர்களின் ஆலோசனையால் தடம் மாறிக் கொண்டிருக்கிறார். அதன் பலாபலனை அவர் அனுபவிப்பார் என்பதில் எவ்வித அய்யப்பாட்டுக்கும் இடமில்லை.

சமூக நீதித்துறையில், இன்னும் எட்டப்பட வேண்டிய இலக்குகள் உண்டு; மத்திய அரசில், கல்வித் துறையில் விதிவிலக்கின்றி எல்லாக் கல்வி நிலையங்களிலும் (அய்.அய்.டி. உட்பட) மக்கள் தொகைக் கணக்குக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக தனியார்த் துறைகளிலும், இடஒதுக்கீட்டுக்குச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு என்பதும் முக்கியமாகும்.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில், மட்டுமல்ல; சட்டமன்றம், நாடாளுமன்றங்களிலும் ஆண்களுக்கு நிகராக 50 சதவீதம் உள் ஒதுக்கீட்டுடன் கூடியதாக அளிக்கப்பட வேண்டும்.

மார்க்கு அடிப்படையிலான கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது; என்ற வரையறை மற்றும் கிரீமிலேயர் போன்றவற்றை உடைத்தெறியும் வகையில் சட்டத் திருத்தம் தேவை. இவற்றிற்காக ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து, திராவிடர் கழகம் களம்  காணும். இந்த மிக முக்கிய நாளில் உரத்துச் சிந்தித்து உரத்த முறையில் போராடுவோம்! வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!

            ----------------------------------"விடுதலை” தலையங்கம் 22-11-2013

33 comments:

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது

பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


தெரியாதோ நோக்கு?
- ஊசி மிளகாய்

புதுக்கோட்டை - திருச்சி இடையில் உள்ள மாத்தூர் காவல் நிலையத்தில், அடிக்கடி அப்பகுதி யில் கொலை, கொள்ளைகள் நடைபெறுவதைத் தடுக்க அங்குள்ள காவல் துறை அதிகாரிகளான பிரகஸ்பதிகள் பார்ப்பன குருக்களைஅழைத்து, யாகம் செய்துள்ளதாக, இம்மாதம் 15ஆம் தேதி ஏடுகளில் வந்துள்ள செய்தியைவிட, நம் அரசு, மதச்சார்பின்மையை காப்பாற்றுவதிலும், அரசியல் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பான்மையைக் குடிமக்களிடம் வளர்க்க வேண்டிய அரிய பணியையும்விட அற்புதமான(?) செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மக்களுக்குத் திருடர் பயமோ, கொலை, கொள்ளை பீதியோ இனி ஏற்படவே ஏற்படாது; இது சத்தியம்! இது சத்தியம்!

பலே பலே, இவாளுக்கு தனியே பாராட்டு விழா நடத்தி முதல் அமைச்சரும், தமிழக அரசும் பண முடிப்பு அளித்து யாகாதிபதி. காவல் சுவாமிகள் பட்டங் களையும் வழங்கலாம்; குற்றத் தடுப்புக்கு இவ்வளவு எளிய வழியைக் கண்டுபிடித்த இவாளுக்கு டபுள் புரோமோஷன் அல்லவா அரசு வழங்க வேண்டும்! அடடா என்னே பக்தி! என்னே பக்தி!! மற்ற மாவட்டங்களிலும் இதையே கடைப்பிடிக்கலாம்; அவசர அரசு ஆணையையும் பிறப்பிக்கலாம்.

இனி டி.ஜி.பி. அய்.ஜி. பதவிகளுக்குப் பதிலாக, யாகாதிபதிகள், பர்ண சாலை பகவத் குஞ்சுகள் என்றெல்லாம் கூறி, எல்லா காவல் நிலையங்களையும், யாக சாலைகளாகவும், பர்ண சாலைகளாகவும், மாற்றி நித்தம் நித்தம் பூஜை, யாகம், நடத்தலாம்! நரபலி கூட கொடுத்தால் மேலும் யாகங்களின் பலன் குயிக்கா (ணுரஉம) கிட்டாதோ!

அப்புறம் பூணூல் குருஜிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட டிமாண்டோ டிமாண்டு ஏற்பட்டு விடும்!
அந்த யாகப் புகை மண்டலமே நல்ல ஆரோக்கிய சுற்றுச் சூழலை நன்னா பாதுகாக்கும்!

நம்ம பெரியவா கண்டுபிடிச்ச யாகமுன்னா மற்ற நாட்டுக்காராளெல்லாம்கூட வருவாளே?

ஏற்கெனவே நம் அய்யர் வாள்களை ராஜபக்சே அழைச் சுண்டு போய் யாகங்கள் நடத்தியல்லவா அந்த டெரரிஸ்ட் டுகளான புலிகளை அழிச் சாள் - தெரியாதோ நோக்கு?

இதைக்கேட்ட அந்த ஒபாமாகூட இந்த அல்கொய்தா தொல்லையை ஒழிக்க யாகத்தையே செய்யணும்னு சொல்லிண்டிருக்காராம்; நம்ம அடுத்தாத்து அம்புஜத்தின் ஒண்ணுவிட்ட சகலை யின் சம்பந்தியின் மருமா சொன்னார்! ஆமாம் ஏற்கனவே தீபாவளி கொண்டாடச் சொல்லி சாதிச்சுட்டோமே!

அவாளுக்கு ஸ்பெஷல் விசா கூட அதனால வருமாம்!

ஹூம் - நேக்குக் கிடைக்காத பாக்கியம் அவாளுக்கு அடிச்சுது யோகம்! ஒயிட் அவுஸ்போய் ஜாம் ஜாம்ன்னு உட்கார்ந்துண்டு யாகம் என்று40 நாள் பண்ணி ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிட யோசனையாம்!

பலே பலே! நம்ம வேத விற்பன சிகாமணி யாக சாலை யோகானந்த குருக்கள்தான் இனிமே ஒயிட்அவுஸ் அதிபர் கொஞ்ச நாளைக்குன்னு சொல்லு!

அதுசரி, இந்த மாத்தூர் போலீஸ்காரர் மேலே தி.க. கறுப்புச் சட்டைக்காரனுங்க, பி.அய்.எல் அது தானே பொது நல வழக்கு அது இதுன்னு எதுவும் போட்டு, ஏதாவது ஏடா கூடாமா தீர்ப்பு வாங்கிடப் போறா?

அதையும் நன்னா விசாரியுங்கோ. இப்படி சிறீரங்கத்திலே ஒரு உரையாடல் நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாதே!

தமிழ் ஓவியா said...


காவல் நிலையத்தில் சிறப்பு யாகமா? கலைஞர் கருத்து


கேள்வி: புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் செய்யப்பட்ட நிகழ்ச்சி புகைப்படத்தோடு ஏடுகளில் வெளிவந்திருக்கிறதே?

கலைஞர்: மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்த காரணத்தால், போலீசார் சேர்ந்து, காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் நடத்தியிருக்கிறார்கள். மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் மாத்திரமல்ல; தமிழகம் முழுவ திலுமே ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தலைமைச் செயலகத்திற் குள்ளேயே சிறப்பான யாகம் நடத்தலாம்! இப்போது முதலமைச்சர் நிகழ்ச்சிகளிலே உரையாற்றும்போது அண்ணா நாமம் வாழ்க! என்றும், எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்றும் சொல்கிறார் அல்லவா; இனி மேல் பெரியார் நாமம் வாழ்க! என்றும் சேர்த்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தை யாகசாலையாக மாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கலாம்! தமிழர்களே! இதற் காகத்தானே அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தீர்கள்!

தமிழ் ஓவியா said...


2ஜி' ஜெபிசி அறிக்கையை திருப்பி அனுப்புக! மீரா குமாருக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

புதுடில்லி, நவ.22- 2ஜி அலைக்கற்றை முறை கேடு தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) அறிக்கை முழுமையற்றது என்றும், அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மக் களவைத் தலைவர் மீரா குமாரிடம் நாடாளு மன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மீரா குமாருக்கு அவர் எழுதியுள்ள 3 பக்க கடி தத்தில், 2ஜி அலைக் கற்றை விவகாரம் தொடர்பான ஜேபிசி அறிக்கை அரசியல் சார் புடையதாக உள்ளது என்றும், அக்குழுவின் தலைவர் (சாக்கோ) ஒரு சார்பாக செயல்பட்டுள் ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு நெறிகளின் படி முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியு றுத்தியுள்ள அவர், ஒரு வேளை முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட் டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1998 முதல் 2009 வரை அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

மேலும், '2ஜி அலைக்கற்றை விவகா ரம் தொடர்பான ஆ. ராசாவின் விளக்கம் இறுதிகட்ட அறிக்கை யில் சேர்க்கப்படும் என்று ஜேபிசி தலைவர் உறுதி யளித்திருந்தார். ஆனால், அந்த அறிக்கையை முறையாக பரிசீலிக்கா மல் அவர் நிராகரித்து விட்டார். எந்தவொரு காலக்கட்டத்திலும் ராசாவின் விளக்கம் விவாதிக்கப்படவே இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நான் தாக்கல் செய்த ஆட்சேப அறிக்கையில் இருந்தும் ஆ.ராசாவின் விளக்கம் குறித்த பகுதி நீக்கப்பட் டுள்ளது. இது எனக்கும் ஆ.ராசாவுக்கும் இழைக் கப்பட்ட அநீதி. என்னு டைய ஆட்சேப அறிக் கையை நீர்த்துப் போக செய்யும் வகையில் தவறான பிரிவின் கீழ் அது சேர்க்கப்பட்டுள் ளது. சில உண்மைகளை ஜேபிசி குழு முழுமை யாக நிரந்தரமாக மூடி மறைத்துவிட்டது.

எனவே, ஜே.பி.சி. அறிக்கையை அந்தக் குழுவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். 2ஜி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி மறுஅறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜே.பி.சி. அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் எழுத்துப் பூர்வ விளக்கமும் சேர்க் கப்பட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் டி.ஆர். பாலு கோரியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடியின் அடுத்த உளறல்


துடு (ராஜஸ்தான்) ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தியா ரின் பெயரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தவறாக உச் சரித்தார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ப தற்கு பதிலாக மோகன் லால் கரம்சந்த் காந்தி என மோடி குறிப்பிட் டார்.

ராஜஸ்தானின் துடு பகுதியில் நரேந்திர மோடி பேசுகையில், தனது வாழ்வின் இறுதியில் மகாத்மா காந்திக்கு ஓர் ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. அதை நீங்கள் நிறை வேற்றுவீர்களா? மோகன்லால் கரம்சந்த் காந்தி... என நரேந்திர மோடி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்பதற்குப் பதிலாக மோகன்லால் கரம்சந்த் காந்தி என உச்சரித்த தனது தவறை உணராமல் தொடர்ந்து உரையாற்றினார்.
சில நாள்களுக்கு முன் புரட்சியாளர் சியா மாஜி கிருஷ்ணா வர்மா வின் பெயரை குறிப்பிடு வதற்குப் பதிலாக ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி யின் பெயரை மோடி குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மகிழ்ச்சியே!

செய்தி: செஞ்சி அருகே வகுப்பறை இல்லாததால் கோயில் வகுப்பறை ஆனது.

சிந்தனை: இந்த ஒரு நல்ல காரியத்துக்காவது கோயில் பயன்படுகிறதே -அந்த அளவில் மகிழ்ச்சியே!

தமிழ் ஓவியா said...


பித்தலாட்டத்தின் மறுபெயர் பிஜேபி இதோ இன்னொரு ஆதாரம்

நான் முதல் மந்திரி ஆவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவது பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன். என்னுடைய வாகனம் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது. இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப் பெரிய யாகம் செய்வதைப் போன்று பெரிய காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்...

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று...
இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பி.ஜே.பி. ஆட்சியால்.
உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும்; பித்தலாட்டமே உன் பெயர்தான் பிஜேபியா?

தமிழ் ஓவியா said...


ஜீவா பாடுகிறார்!


நல்லாரை உழைப்போரைப் பறையரென்றார், நயவஞ்சகமுடையோர் மேல்ஜாதி யென்றார்,

பொல்லாத கொடியவரை மன்னரென்றார்

பொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்

சொல்லாரும் தாயினத்தை அடிமையென்றார்

சூது மிகும் ஆசாரம் சமயம் என்றார்

இல்லாத பொய்வழியில் சொன்னதாலே

இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.

ப.ஜீவானந்தம்
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், குஜராத்

தமிழ் ஓவியா said...

தலை எழுத்து

பிரம்மனால் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலை எழுத்து தனித் தனியே எழுதப்படுமாயின், மருத்துவத் தால் பெண்ணாக மாறும் ஆணுக்கும் ஆணாக மாறும் பெண்ணுக்கும் எவ்வாறு பொருந்தும்?

- சாமி. சேகரன், புதுவை

தமிழ் ஓவியா said...

காந்தியார் புகுத்திய குழப்பம்

ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை. மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம்.

பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

(நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

தமிழ் ஓவியா said...


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...


பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞான முடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தி யாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விடு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருது கிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர் களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர்.

இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங் களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம்.

இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்bகைவரை என்ற நூல்)

ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

தமிழ் ஓவியா said...


வேலை இல்லாதோர் உதவித் தொகை பெற விண்ணப்பித்து விட்டீர்களா?


10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி, தோல்வி அடைந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 100 ரூபாய் வழங்குகிறது. அதுபோல் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 150 ரூபாயும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையைப் பெற கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

1) குடும்ப வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.

3) 40 வயதுக்கு மேற்பட்டவர்களா இருக்கக் கூடாது.

4) பள்ளி, கல்லூரிகளில் பயில்பவராக இருக்கக்கூடாது.

5) சுயதொழில் செய்பவராக இருக்கக் கூடாது.

6) தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதி படைத்தவர்கள் வேலை இல்லாதோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கிடப்பட்டு, வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களில் நிறையப் பேர் 10-ஆம் வகுப்புக்கு மேல் படித்துள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகளும் உள்ளன. அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில்லை. பதிவு செய்தவர்களும் இந்த வசதியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. (உணர்வு _ 2013 _ நவம்பர் (8-_-14), பக்கம் 14)

தமிழ் ஓவியா said...


தெரியுமா?


முதல் கலைக்களஞ்சியம் சீன மொழியில் வெளியானது.
கார்களுக்குப் பதிவு எண் வழங்குவதை அறிமுகப்படுத்தியது சுவீடன்.
கண்ணாடியில் சாலைகள் போட்டுள்ள நாடு ஜெர்மனி.
சீனாவின் புனித விலங்கு பன்றி.
டிராப்ட் தரும் முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.
ஒரு மயிலிறகில் ஒன்பது வண்ணங்கள் இருக்கின்றன.
ஒரு கிலோ குங்குமப்பூவைச் சேகரிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரம் செடிகள் வேண்டும்.
தாம் பிறந்த நாட்டை தந்தையர் நாடு என்று சொல்பவர்கள் அய்ரோப்பியர்கள்.
உலகில் அதிக தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கும் நாடு அமெரிக்கா.

தமிழ் ஓவியா said...


வலிப்பு வரும்போது சாவியை கொடுப்பதால் பயன் இல்லை


வலிப்பு வந்தவுடன், அவருக்கு சாவியை கொடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்று ராஜீவ்காந்தி மருத்துவமனைத் தலைவர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை நரம்பியல் துறை சார்பில் தேசிய வலிப்பு நோய் தினத்தை முன் னிட்டு, வலிப்பு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. மருத்துவமனைத் தலைவர் வி.கனகசபை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நரம்பியல் துறைத் தலைவர் கே.தெய் வீகன், பேராசிரியர்கள் கே.பானு, எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100_க்கும் மேற்பட்ட வலிப்பு நோயாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வி.கனகசபை பேசியதாவது:

மூளையில் உள்ள நரம்பு அணுக் களில் ஏற்படும் மின் அலை மாற்றங் களால், மூளையின் அனைத்து பாகங் களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.
வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர். வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதின் மூலம் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடன டியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும். அதன்பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயா ளிகள் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டும்.

இரண்டு மாதமாக வலிப்பு வர வில்லை என்பதால், மருந்து, மாத்திரை களை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 200 முதல் 250 வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 15 பேர் புதிய நோயாளிகள். ஆரம்பத் தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டது. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்படுகிறது. நோயின் தன்மையை பொருத்து ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான மாத் திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற் பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக் கூடாது. பதற்றம் அடையக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். திருமணம் செய்வதற்கோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடை இல்லை.
நன்றி: தி இந்து 19.11.2013


றீ குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

றீ பிரசவ காலங்களில் டாக்டரின் ஆலோசனைப்படி சில வலிப்பு மாத்திரைகளை சாப்பிடலாம்.

வலிப்பு நோய் அறிகுறிகள்:

றீ நினைவு இழந்து கை, கால், முகம் வெட்டி வெட்டி இழுக்கும்.

றீ திடீரென்று சுய உணர்வு இல்லாமல் போதல்.

றீ நினைவு இழந்து நின்ற இடத்திலேயே கீழே விழுதல்.

றீ சிறிது நேரத்திற்கு மாறுபட்ட விநோதமான செயல்களை செய்தல்.

றீ சில நிமிடங்கள் கண் இமைக் காமல் விழித்து பார்த்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர்,

துப்புதல், கைகளை பிசைதல்.

வலிப்பு நோய் காரணங்கள்:

றீ மூளையில் அடிபடுதல்,

றீ மூளைக் காய்ச்சல்.

றீ மூளையில் கட்டி.

றீ நாடா புழுக்களினால் ஏற்படும் கட்டிகள்.

றீ காசநோய் கட்டிகள்.

றீ புற்றுநோய் கட்டிகள்.

றீ மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல்

றீ பிரசவத்தில் குழந்தைகள் ஏற் படும் சுவாச அடைப்பு.

தமிழ் ஓவியா said...


நஞ்சருக்குப் பஞ்சணையா? நாட்டுக்கு மோடி தலைமையா?

மதச்சார் பற்றநாடு அரசு கட்சியென்று
மார்தட்டிக் கொள்கின்றார் நாளும்
மதவிலக்கம் செய்யாமல் மானுட மேட்டிமை
மனங்கொள் வாரிங் கில்லை
மதச்சார் பின்மையென்றால் மதம னைத்தையும்
சமமாய்ப் பாவிப்ப தென்றெண்ண
அதிகார வருக்கமோ ஆரியச் சார்பை
ஆட்சி யதிகாரத்தில் புகுத்தினர்!

பார்ப்பனர் பண்பாடு பச்சைப் படுகொலையும்
பயங்கர வாதமுமே இல்லையெனின்
கூர்ச்சரத்தைக் கொலைக்கள மாக்கிக் குருதி
குடித்த வெறியனுக்குக் கொம்புசீவி
மூர்க்கன் ஒருவனுக்கு முடிசூட்டி விட்டு
மோடி மஸ்தான் வேலையில்
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து இந்துவிய
அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் போடுகின்றார்!

ஊடக மென்பது உண்மை வெளிச்சமிட
நடுநிலை தவறாமல் நாட்டுவதாம்
ஊடகமெல்லாம் பார்ப்பனர் கையில்
பெரும்பான்மை இருப்பதால் ஊதிப்
பெருக்குகிறான் ஒரு சார்பாய் மோடிகுறித்து
மாயத் தோற்றத்தைக் காட்டியே
பெருக்கிக் கூட்டினும் பின்னடைவு பிஜேபிக்கே

என்பதை மறுக்க வேண்டாம்!

நஞ்சருக்குப் பஞ்சனையா? நரவேட்டை யாடிய
மோடிக்கு நாட்டுத் தலைமையா?
வஞ்சகவானர வரலாற்றைத் திரித்த
கூட்டத்துக்கு மீண்டும் ஆட்சியா?
அடிப்படைக்கே அல்லாடும் ஆயிரமா யிரவர்
ராமனுக்குக் கோயில் கேட்குதாம்
உடைப்புக்களும் வெடிப்புக்களும் நிறைந்த நாட்டில்
உழைக்கும் மக்களுக்கே ஆட்சி!
பார்ப்பன ரல்லாதார் மோடி யென்றாலும்
பார்ப்பனர் அடிவருடி யென்பதால்
பார்ப்பனர் பக்கம் படியாதீர்! மதச்சார்
பின்மையில் மனங்கொள் வீரே!
பெரும்பான்மை ஆள்வதும் சிறுபான்மை வாழ்வதே
மக்கள் நாயக மரபாகும்!
பெரும்பான்மை மக்களைப் பின்னுக்குத் தள்ளும்
சூழ்ச்சியை முறியடிப் பீரே!

பெரியார் மண்ணில் பார்ப்பன ஜனதாவின்
மோடிக்குத் திருச்சியில் என்னவேலை?
நரிக்குப் பாதுகாப்பு நம்தமிழர் தலைவர்க்கு
தாக்குதல் நாரீமணி ஆட்சியில்!
கிருஷ்ணன் என்பான் கீழ்மகன் பெண்ணை
வெண்ணெய் திருடியவன் பகவானா?
திருச்சி மாநாடு தக்கதோர் விடையளிக்கும்
திரண்டு வாரீர் தீரர்களே!

- கவிஞர் இனியன், திருச்சி -13

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவா? என்ன விலை?


- சிவகாசி மணியம்

கையிலே என்ன கயிறு என்று கேட்டால் நம்பிக்கை என்று பதில் வருகிறது. கழுத்தில் என்ன கொட்டை என்றால் அதே பதில் தான். மூடநம்பிக்கை என்ற சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களை முடக்குவதால் நம்பிக்கை என்றாகிறது. நம் அறிவை, ஆற்றலை முடக்குவதால் மூடநம்பிக்கை என்பதும் சரியே! அன்றாடம் செய்தித்தாளில், ஊடகங்களில் எத்தனை விதமான அறிவை இழக்கும் அசட்டு நிகழ்வுகள்! சில நெஞ்சைப் பதறவைக்கின்றன. வேறு சில சிரிப்பை வரவழைக்கின்றன.

இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு செய்தி: திண்டுக்கல் அருகே கோவிலூரில் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல் நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு ஆறாம் வகுப்பு படித்த, பழனியைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற பையன் பள்ளியின் செப்டிக் டேங்கில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். இது தொடர்பாக அதே பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவனைக் கைது செய்திருக்கிறது காவல் துறை.

பத்தாம் வகுப்பு படிக்கும் முருகனும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஹரிபிரசாத்தும் விடுதியில் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஹோமோ எனும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டுள்ளது. தொடர் தொந்தரவு பொறுக்க மாட்டாமல் இனிமே கூப்பிட்டா வார்டன் கிட்ட சொல்லிருவேன் என்று ஹரிபிரசாத் மறுத்திருக்கிறான். மீண்டும் உறவுக்கு வற்புறுத்திய போது வார்டன் கிட்ட சொன்னாதான் நீ திருந்துவே என்று செல்லிவிட்டு அதற்காகக் கிளம்பியவனைப் பார்த்து பயந்த முருகன், திறந்து கிடந்த செப்டிக் டேங்கருக்குள் தள்ளி மூடிவிட்டான். அவன் இப்போது மதுரை சிறுவர் காப்பகத்தில்!

இறந்துபோன சிறுவனின் தாய் பரிமளாதேவி அழுது கொண்டே சொன்னது: எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ஒரே ஆம்பளைப் பிள்ளைங்கிறதால ரொம்ப செல்லமா வளர்த்தோம். என் வீட்டுக்காரருக்கு திருப்பூர் பணியன் கம்பெனில வேலை. அஞ்சாவது வரை பழனி கான்வென்ட்லதான் படிச்சான். அங்கேயே படிக்க வச்சிருக்கலாம். உங்க பையனுக்கு நேரம் சரியில்லேனு சோசியர் ஒருத்தர் சொன்னதைக் கேட்டுத்தான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்தோம். அதுவே அவனுக்கு சவக்குழி ஆயிடுச்சே என்று கதறினாள். நெஞ்சை நெகிழச் செய்யும் இச்சம்பவம் ஒருபுறம்.

11.10.2013 விடுதலை படித்தவர்களுக்கு நினைவிருக்கும். கொட்டை எழுத்துச் செய்தியாக அதைக் கைப்பற்றினார் பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி. ஆனால் அவரது பதவியும் அடுத்த சில நாட்களிலேயே பறிபோனது. பிறகு அங்கே வைகைச் செல்வன் வந்தார். கிழக்கு நோக்கி இருந்த இருக்கையை மேற்கு நோக்கி மாற்றிக் கொண்டார். ஆனாலும் வைகைச் செல்வனின் பதவியும் தப்பவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றாலும் யாரும் அந்த அறையை எட்டிப்பார்க்கக்கூடத் தயங்குகிறார்கள்!

இப்போது அந்த அறையில் நூலாம் படை வாசம்!

பகுத்தறிவு அப்படினா என்ன? எங்கே கிடைக்கும்? கிலோ என்ன விலை? என்று கேட்டு உங்களை சுற்றி வளைத்துவிடப் போகிறார்கள்! எச்சரிக்கை!.

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம். அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான். அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா. (ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

தமிழ் ஓவியா said...


மனிதனிலிருந்து...


9.11.2013 நாளிட்ட விடுதலை ஞாயிறு மலரில் இடம் பெற்ற மனிதனி லிருந்து குரங்குக்குப் போகலாமா? என்ற மின்சாரத்தின் கட்டுரை அருமை யிலும் அருமை. தமிழகத்தில் ஜாதியை மய்யப்படுத்தி அரசியலில் சாதிக்க லாம் என மனப்பால் குடிக்கும் சிறுமதியாளர்களுக்கு, சிறுபிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது போல் பல்வேறு எடுத்துக்காட்டுக்களுடன் வரலாற்றுச் செய்திகளையும் சொல்லியிருக்கிறார் மின்சாரம்.

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசி, பிரபலமாகி, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடும் பதவிப் பித்தர்களின் கனவு ஒருக்காலமும் தமிழகத்தில் பலிக்காது என்பது திண்ணம்.

- சீ. தங்கத்துரை, மேலமெஞ்ஞானபுரம்

தமிழ் ஓவியா said...


கடவுள் பதில் சொல்வானா....?

ஏ..
இறைவா..!
நீ உலகத்தைப்
படைத்ததாக
சொல்கிறார்களே...
அந்த உலகம்
உருண்டையா..?
தட்டையா?
எவ்வாறு படைத்தாய்?
இதனை
தகவலறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ்
கேட்டால் சொல்வாயா?

@

குறும்பா

காசேதான்
கடவுளப்பா
ஏழைகளுக்கு...!
கடவுளேதான்
காசப்பா...!
பணக்காரன்களுக்கு!

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் யோக்கியதையைப் பாரீர்!

மதக் கலவரத்துக்குக் காரணமாகி கைது செய்யப்பட்ட இரு பி.ஜே.பி., எம்.எல்.ஏ.களுக்குப் பாராட்டாம்!

சரத் யாதவ், மாயாவதி கண்டனக் குரல்

புதுடில்லி, நவ.23- உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த வகுப்பு மோதலுக்கு துணைபோவதாக கைதான கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களைப் பொதுக் கூட்டத்தில் பாராட்டி கவுரவம் செய்ததற்காக தமது முந்தைய கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அய்க்கிய ஜனதா தளம் கட்சி இது தொடர்பாக செய்தியாளர்களி டம் வெள்ளிக்கிழமை கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறியதாவது:

கட்சியின் பிரதமர் வேட்பாள ராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதிலி ருந்தே பா.ஜ.க. வின் திசை மாறி விட்டது.

ஆக்ராவில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்துக்கு மோடி வந்து சேர்வதற்கு முன்னதாக தந்திரமாக அந்த2 எம்.எல்.ஏ.க்களையும் கவுர வப்படுத்தியுள்ளனர். பா.ஜ.க.வின் உண்மையான முகம் தெரிந்து விட்டது.

பொதுமக்களுக்கு முக்கியத் துவம் வாய்ந்த விவகாரங்களை விவாதிக்காமல் உதவாத விஷ யங்களை பற்றி அலசுவதே பா.ஜ.க.வுக்கு வேலையாகி விட்டது. தான் செல்ல வேண் டிய திசை என்னவென்பதே அதற்கு தெரிய வில்லை. கட்சி யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட திலிருந்தே பா.ஜ. க.வில் இத்தகைய நிலை வலுத்து விட்டது.

5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினை கள் தீவிர விவாதப் பொருளாக் கப்பட்டு பல்வேறு அமைப்புகளி லும், ஊடகங்களிலும் விவாதம் அரங்கேறுகிறது.

கட்சிகளுக்கு இடையே, தனி நபர் தாக்குதல் அதிகரித்துவிட் டது. இதற்கெல்லாம் விடை கொடுத்து ஏழைகள் பற்றியும், சமூகத்தில் பின்தங்கியோர் பற்றி யும் விவாதிப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்றார் சரத்யாதவ்.

மாயாவதி கண்டனம்! செய்தியாளர்களிடம் வெள் ளிக்கிழமை இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: ஆக்ரா வில் நடந்த நிகழ்ச்சியில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேரையும் கவுரவித்துள்ளது பா.ஜ.க. இதை பகுஜன் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த நிகழ்ச்சி காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பதற்றம் ஏற்படலாம். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு சமாஜ் வாதி கட்சியைத்தான் பகுஜன் சமாஜ் குற்றம் சாட்டும்.

இந்த கூட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனுமதி தந்திருக்கக்கூடாது. சமாஜ்வாதி, பா.ஜ.க. விஷயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது என்றார் மாயாவதி.

சமாஜ்வாதி கட்சியின் பரேலி பேரணியில் சர்ச்சைக்குரிய இஸ் லாமிய மத குரு தவுகீர் ரஸாகான் பங்கேற்றது பற்றி கேட்டதற்கு பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாதிக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது என் றார் மாயாவதி.

முசாபர்நகர் வகுப்பு கலவரத் தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜாதி பாகுபாடு பிரித்து பார்த்து நிவா ரண நடவடிக்கைகளை அறி வித்தது மாநில அரசு.

இந்து - முஸ்லிம் மோதலை தூண்டி விடுவதே மாநில அரசின் திட்டம். பா.ஜ.க. சமாஜ்வாதியின் கூட்டுத்திட்டம் தான் இது.

பகுஜன் சமாஜ் கட்சிஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப் பட்ட திட்டங்கள் பற்றி குறை கூற எதுவும் இல்லை என்பதால் அப் போது அமைக்கப்பட்ட நினைவி டங்கள், அருங்காட்சியகங்கள் பற்றி குற்றம் கண்டுபிடிக் கிறார்கள்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்துள்ளதால் அதிலிருந்து திசை திருப்பவே இப்படியெல்லாம் குறை கண்டு பிடிக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் ஆட்சி

மாநிலத்தில் ஏற்பட்ட வகுப்பு கலவரம் உள்ளிட்டவற்றை கருத் தில் கொண்டு ஆளுநர் நிலை மையை மதிப்பிட வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றார் மாயாவதி.

முசாபர் நகர் மதக் கலவர வழக்குகளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி பிணையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களான சுரேஷ் ராணா மற்றும் சஞ்சய் சோம் ஆகியோர் வியாழக்கிழமை ஆக்ரா நகரில் நடந்த கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உ.பி. மாநில பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் சட்டசபை தலைவர் லால்ஜி டண்டன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சி மோடி மேடையில் ஏறுவதற்கு சற்று முன்பாகவே செய்து முடிக்கப்பட்டது.
குற்றவாளிகளின் கூடார மாகவே பி.ஜே.பி. ஆகி விட்டதை இந்த நிகழ்ச்சி நிரூபித்து விட்டது.

தமிழ் ஓவியா said...


அவாளின் டேஸ்ட்டே அலாதிதான்!
எழுத்துரு அளவு Larger Font Sm

- ஊசி மிளகாய்

நேற்று தினமலர் ஏட்டின் அங்காடித் தெரு பற்றிய சுவையான, நாக்கில் (தண்ணீர் அல்ல), ஜலம் சொட்டச் சொட்ட ஒரு ருசியான பயணம் - வாங்க சாப்பிடலாம்ங்ற தலைப்பிலே
நம்மவா ஏடு என்றாலும், இந்த சூத்திராள், பஞ்சமாள் போன்றவர்களால்கூட இவ்வளவு நன்னா சுவையோடு நான்வெஜிட்டேரியன் என நம்ம மூதாதைகளின் சாப்பாட்டை பிரமாதமா படம் பிடிச்சு எழுதிட்டாள்! நோக்கு தெரியுமோ? அங்கே எழுதியிருப்பதை படியுங்கோ.

ஸ்டீம்டுபிஷ் (Steamed Fish Soup) நீராவியில் வேகவச்ச கொடுவா மீன் சூப், மசாலா வெல்லாம் சேர்த்தது; இதிலே கொழுப்பு கம்மி உடம்புக்கு நல்லது, இதை சூடா குடிச்சா ரொம்ப ருசியா இருக் கும் அருகில் அமர்ந்திருந்த பாட்டி பிடிவாதமாய் கொடுக்க, ருசித்தேன் - ஆஹா என்ன மணம், என்ன ருசி, அருமையான மீன்சூப்.

இட்லி, புரோட்டாவுக்குக் கொஞ்சம் கிரேவியும் வைத்தவரிடம், காரம் இல்லாமல் சிக்கனைப் போல வெந்திருந்த மட்டன்துண்டு; நாக்கில் வழுக்கி தொண்டையை அடைந்து, மோட்சம் பெற தொடங் குது இது காயல் களறி கறி காயல்பட்டினம் பக்கம் ரொம்ப பிரபலம். ரொம்ப நல்லாயிருக்கு

அடுத்து இன்னொரு முக்கியமான அயிட்டம் பற்றியும் எழுதுகிறார் தினமலர்காரர். இது நண்டு பெப்பர் பிரை நண்டு சாப்பிட்டா நெஞ்சு சளி கரைஞ்சு போகும். - சித்த மருத்துவர் போல விளக்கம் சொன்னாராம் தாத்தா (தாத்தா பாட்டி மேலே பழியைப் போட்டுட்டா..!)

நண்டு பொறியலின் காரமில்லாத ருசியில் மயங்கிக் கிடந்தது என் நாக்கு.

- இது அந்தக் கட்டுரையின் அருள்வாக்கு! அடுத்து எனக்கு சிக்கன் கார்டன் ப்ளூ ரொம்பப் பிடிக்கும். நீயும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு, குலாப் ஜாமூன் போல மென்மையாகவும், ஆலிவ், சீஸ் சுவையுடன் மொறுமொறுப்பாகவும் இருந்ததைப் பாட்டி நீட்ட..

இதற்கெல்லாம் விலை ஒன்றும் அதிகம் இல்லே; இவா சொல்லற நுங்கம்பாக்கம் ஓட்டல்ல!

ஸ்டீம்டுஃபிஷ் சூப் ரூ.750

நண்டு பெப்பர் ஃப்ரை ரூ360

காயல் களறி கறி ரூ.280

கடைசி இளநீர் புட்டிங் ரூ.140

படீச்சீங்களா? என்ன இதோடு உங்களுக்குத் தேவையானா சுரபானம், சோமபானம் இவைகளை எல்லாம் சேர்த்துக்கலாமே!

அவாள் யாகம் நடத்தும் ஸ்டைலும், அதில் அவிர்ப் பாகங்களை எப்படியெல்லாம் சுவைச்சு யாகம் நடத்தும் பிராமணோத்தமர்கள் சாப்பிட்டு, மோட்சத்திற்கு டிக்கெட் தருவான்னு விவரம் தெரியனும்ன்னா - ஞான சூரியன் சிவானந்த சரஸ்வதி எழுதியதை சமஸ்கிருத சுலோக விளக்கத்தோடு தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதுதான் புரிகிறது; நம் கிராமத்து ஜனங்க - இன்னிக்கு உங்க வீட்டிலே என்னா சமையல்? என்று கேட்பார்.

நம்ம கிராமத்துப் பெண்கள் பலரும் பதில் சொல்லுவார்கள் - இன்னிக்கு வெள்ளிக்கிழமை நாங்க அந்நிய பதார்த்தம் சமைக்கிறதில்லேன்னு.

இந்த அந்நியர்கள் - பதார்த்தச் சுவை இப்போ எவ்வளவு காஸ்ட்டிலியாகி விட்டது பார்த்தீர்களா?

ஆச்சாரம் அனுஷ்டானம், நம்ம புராதன கலாச்சாரம்பற்றி பேசுறது இதையெல்லாம் பரப்பத்தானோ? என்று கேட்கலாம்.

இதை ஒரு வேளை அந்த பத்திரிக்கை விளம்பரமாய் போடறாளோ?

இல்லை, நல்ல கட்டுரையாகவே!

ஆ/ஆம் சாப்பிடவாங்கோ என்று இன்விட் டேஷனா அல்லவா எழுதியிருக்கா?

அதனாலதானே இராமாயணத்தில இராமன் எல்லாம் மாமிசம், மது பயன்படுத்தினா என்று வால்மீகி இராமாயணம் என்ற ஒரிஜினல் ராம கதையிலேயே இருக்கிறதே - அதனால் தப்பில்லை. தப்பில்லைதான்!

தமிழ் ஓவியா said...


மகளிருக்கான தனி வங்கி


இந்தியா முழுமையும் பெண்களுக்கான வங்கிகள் திறக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சொத்துரிமை என்பதில் ஆணுக்கு நிகரான இடத்தில் இல்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை.

பெண்கள் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்ட குறுகிய காலத்தில், தங்கள் திறமையினை வெளிப்படுத்திக் கொண்டு விட்டனர்.

தேர்வுகளில் அவர்களின் சாதனைகள் ஆண்களை விஞ்சும் வகையில்தான் அமைந்து விடுகின்றன. வாய்ப்புக் கொடுக்காததுதான் சமு தாயக் குற்றம் என்பது இப்பொழுது உணரப்படுகிறது.

சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து ஆண்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டுத் தடுக்கப்பட்டு வருகின்றது. 1996 ஆம் ஆண்டு முதல் கடந்த 17 ஆண்டு காலமாக இது நிலுவையில் இருப்பது வெட்கக் கேடானது; ஜனநாயகம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி உள்ள பெண்களுக்கு வெறும் 33 விழுக்காடு கொடுக்கக் கூட மறுக்கப்படுகிறது என்றால் இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? அந்த ஜனம் என்பதில் பெண்கள் வர மாட்டார்களா?

மகிளா வங்கியைத் தொடங்கி வைத்த இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கூறினார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச அளவிலான முதல் 50 தொழில் அதிபர்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். எனினும் நம் நாட்டில் பெண் களுக்கு எதிரான பாகுபாடுகள் குறையவில்லை. பெண்களுக்குச் சம உரிமை கிடைப்பதில் நாம் எட்டாத தூரத்தில் இருக்கிறோம் என்றாரே பிரதமர்.

இந்த எட்டாத தூரத்தை எட்டும்படிச் செய்ய வேண்டாமா?

ஆண்களால், பெண்களுக்கு விடுதலை என்பது பூனைகளால், எலிகளுக்கு விடுதலை என்பதைப் போன்றது என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினைப் பெண்கள் ஒரு பாடப் புத்தகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் பெண்கள் உரிமையில் இரண்டு சாதனைகளைச் சுட்டிக் காட்டிட வேண்டும்.

ஒன்று குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகும். இதன் நோக்கம் உயர்ந்தது - உன்னதமானது.

ஆனாலும் இந்தச் சட்டத்தினை எந்தளவுக்குப் பெண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! இந்தச் சட்டத்தைப் பற்றிப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குப் பிரச்சாரம் செய்யப்படவில்லை.

விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லாத இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களை வெகு மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.


மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து ஒரு கால கட்டத்தில் விரிவாக விளம்பரம் செய்யப்பட்ட தில்லையா? அது போலவே பெண்கள் உரிமை தொடர்பான சட்டங்களும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இன்னொரு சிறப்பான சட்டம் என்பது பெண்களுக் கான சொத்துரிமைச் சட்டம். இதைப்பற்றியும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

பெண்களிடத்தில் ஒப்படைக்கப்படும் எந்தப் பணியும் சிறப்பாகவே அமையும் என்பதில் அய்யமில்லை. ஆனால் வாய்ப்பு கொடுப்பதில்தான் தயக்கம். அமைச்சரவையில்கூட (முதல் அமைச்சரே பெண் ணாக இருந்தாலும்கூட!) பெண்களுக்கு ஒதுக்கப் படும் துறைகள் மிக மிகச் சாதாரணமானதாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.

ஏன், நிதித்துறை, கல்வித்துறை, வருவாய்த் துறை, உள்துறை போன்றவற்றை அவர்களிடத்தில் ஒப்படைத்தால் சிறப்பாக நிர்வகிக்க மாட்டார்களா?

என்னதான் நாம் கரடியாய்க் கத்தினாலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடத் தயாராக வேண்டும்.

மயிலே மயிலே! என்றால் இறகு போடாது என்பது போல பெண்கள் நேரடியாகக் களத்தில் இறங்கினா லொழிய தங்களுக்குரிய உரிமைகளை முழுமையான அளவில் மீட்டிட முடியாது.

அதற்குத் தந்தை பெரியார் சொன்ன தத்துவங்களை, கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். முதலில் சிந்தனைத் தடைகளை உடைத்தறிந்து விட்டு வெளியில் வெளிச்சத்தில் தங்கள் உரிமைக் குரலைக் கொண்டு வர வேண்டும்.

எந்த ஒரு நியாயமான உரிமையாக இருந்தாலும் அதற்கொரு விலை கொடுக்க வேண்டுமே என்பார் தந்தை பெரியார்! பெண்கள் தயார் தானா?

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது.

- விடுதலை, 26.2.1968

தமிழ் ஓவியா said...


ஏகலைவா புரஸ்கார் விருதினை வழங்குகிறார் தமிழர் தலைவர்

சென்னை, நவ.23- மகாபாரத காவியத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக ஏகலைவனுக்கு வில்வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்து விடுகிறார் துரோணா சாரியார். ஆனால் ஏகலைவன் தன் மனஉறுதியினாலும் விடா முயற்சியி னாலும் சிறந்த வில் வீரானாகிறான். வரலாற்றில் ஏகலைவன் போன்ற எத்தனையோ திறமையானவர்கள் தாழ்த்தப்பட்டவன் என்ற அடிப்படை யில் நசுக்கப்பட்டார்கள். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாக நசுக்கப்பட்ட இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் இன்றளவும் தனது திறமைகளை வெளியே கொண்டு வர இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. எனினும் தனது விடா முயற்சியால் ஏகலைவன் சாதித்தது போல் இன்றும் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப் பட்ட சமூகம் விடா முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏகலைவா புரஸ்கார் என்ற விருதை வழங்க முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவ - மாணவிக்கு இந்த ஏகலைவா விருதுடன் ரொக்கப் பணம் ரூ.5000 வழங்கப்படும்.

இந்த விருது நாளை (24ஆம் தேதி) சென்னை, பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் மன்றத்தில் மாலை 5 மணியளவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார். மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ் மாயில், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்துவந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் சூத்திராள் என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்டதாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பல தனிப்பட்ட வாலிபர்களும் பெரியோர்களும் தங்களைச் சத்தியாக்கிரகிகளாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டும் தெரிவித்துமிருக்கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொழுது கேள்வியாயிருக்கின்றது,

சமீபத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல் லாத வாலிபர் மகாநாட்டில் யோசிப்பதாகவும் ஒரு கனவானால் கேள்விப்பட்டு மிகுதியும் சந்தோஷப்படு கின்றோம். ஆதலால் அப்படி ஏதாவது ஆலோசித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுமானால் மற்ற வெளியூர்களில் உள்ள பிரமுகர்களும் தொண்டர்களும் அவசியம் வந்து இதற்கு வேண்டிய ஆலோசனை சொல்லி உதவி செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு படகோட்டி தன்னை தாழ்ந்த ஜாதியென்று நினைக்கின்ற ஒருவனுக்கு தனது படகை ஓட்ட மாட்டேனென்று சொல்லி பட்டினியிருக்கத் தயாராய் இருக்கும் போது மற்றபடி பெரியோர்கள், பிரபுக்கள், சுயமரியாதை நமது பிறப்புரிமை என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்குப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லாமலிருக்கும்போதே இதற்குத் தக்க முயற்சி செய்யத் தகுந்த உணர்ச்சி இல்லையா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 16.10.1927

தமிழ் ஓவியா said...

சூத்திரன்

சூத்திரன் என்கிற வார்த்தையானது இழிவான அர்த்தத்தை புகட்டி வஞ்சனையாக ஏற்படுத்தப்பட்ட தென்றும், அது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் பார்ப்பன ஆதிக்கத்திற்காக உண்டாக்கப்பட்டதென்றும், அவ்வார்த்தை நமது நாட்டில் எந்த விதத்திலும் நம்ம தலையில் இருக்கக்கூடாது என்றும் கிளர்ச்சி செய்து அதில் ஒருவிதமான வெற்றிக்குறி காணப்படுகிற காலத்தில் சர்க்காராரே சூத்திரன் என்கின்ற பதத்தை உபயோகித்து வருகின்றார்கள் என்றால் இந்தச் சர்க்காருக்கு கடுகளவாவது மக்களின் யோக்கியமான உணர்ச்சியில் கவலை இருப்பதாக யாராவது எண்ணக்கூடுமா? பார்ப்பனர்களே இப்போது சூத்திரன் என்று சொல்லப்பயப்படு கிறார்கள். அவர்கள் எழுதிக் கட்டி தொங்கவிடப் பட்டிருந்த போர்டு, பலகைகளையெல்லாம் அவிழ்த்தெறி கின்றார்கள். வாழ்க்கையில் இப்போது சூத்திரன் என்கின்ற பதம் பார்ப்பனப் பெண்களிடையும் கோமுட்டி செட்டியார்கள் என்கின்ற ஒரு வகுப்புப் பெண்களிடையும், தான் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் நாளுக்கு நாள் மறைந்து கொண்டே போகின்றது.

அப்படி இருக்க, சர்க்காரில் அதுவும் ஒரு பார்ப்பனரல்லாதாராகிய ஒருவரின் ஆதிக்கத்தில் உள்ள இலாகாவில், அதுவும் நமக்கே முழு அதிகாரமும் கொடுத் திருப்பதாக பிரித்து விடப்பட்டதான மாற்றப்பட்ட இலாகாவாகிய ஸ்தலஸ்தாபன இலாகாவில், அதுவும் ஜாதி வித்தியாசமில்லை, பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற கொள்ளையை உடையவரும், அதை அமலில் காட்டும் முகத்தான் ஒரு பார்ப்பனப் பெண் மணியை மணந்தவருமான ஸ்ரீமான் டாக்டர் சுப்பராய கவுண்டர் அவர்களின் ஏகபோக ஆட்சியில் உள்ள இலாகாவில் பிராமணன், சத்திரியன், விஸ்வப் பிரா மணன், சவுராஷ்டிர பிராமணன், வைசியன், சூத்திரன், ஆதிதிராவிடன், ஒடுக்கப்பட்டவன், பிற்பட்டவன் என்று கலம் போட்டு பிரித்து சட்டசபைக்கு தெரிவிப்பாரானால், அவரது புத்திக் கூர்மையை என்னவென்று சொல்லக் கூடும். நமக்கு இதைப்பற்றி அதிகமாக எழுத பல ஆதாரங்களும், ஆத்திரங்களும் இருந்தாலும், அடுத்தாற் போல் கூடும் சட்டசபைக் கூட்டத்தில் இக் குற்றத்தை உணர்ந்து சூத்திரன் என்ற வார்த்தை உபயோகித்ததற்கு வருந்தி அவ்வார்த்தையை தாம் உபயோகித்திருக்கிற அரசாங்க ஆதரவிலிருந்து எடுத்துவிட நமது டாக்டர் சுப்பராயகவுண்டருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்து அதில் அந்தப்படி நடக்கா விட்டால் பிறகு மற்ற விவரங்கள் எழுதலாம் என்கிற எண்ணத்துடன் இதை இத்துடன் முடிக்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 30-10-1927

தமிழ் ஓவியா said...


விண்கலத்தைவிண்ணில்அனுப்புமுன் திருப்பதிக்குச்சென்றுபூஜைசெய்வதா?


பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என். ராவ் கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.என்.ராவ் பெங்களூரு வில் சனிக்கிழமை செய் தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்புவ தற்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவி லில் அதன் மாதிரி வடி வத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்குப் பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ்

அது மூடநம்பிக்கை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால், தாம் செய்கின்ற பணி வெற்றிபெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக் கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில் நுட்பத்திற்கு எதிரான வன் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதில் உண் மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தி யர்கள் எதையும் எளி தாக எடுத்துக் கொள் கிறார்கள். அறிவியல் துறையில் முதலீடு செய் வதை தவிர இந்தியா விற்கு வேறு வழி இல்லை. அறிவியல் துறையில் பின்தங்கிக்கொண்டு இந்தியா வல்லரசாக இருக்க வாய்ப்பில்லை. என்று கூறினார்.

இஸ்ரோவின் தலைவ ராக இருக்கக்கூடிய ராதா கிருஷ்ணன் இந்து மதச் சடங்கு ஆச்சாரங் களில் ஊறித் திளைத்தவ ராக இருக்கிறார். அவர் இந்தப் பதவியை ஏற்ப தற்குமுன் குருவாயூரப் பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க் கரை கொடுத்தார். அதன் பின் விண்ணில் விண் கலத்தைச் செலுத்தும் போதெல்லாம் ஒவ் வொரு முறையும் திருப் பதிக்கும், காளஹஸ்திக் கும் குடும்பத்தாருடன் சென்று ராக்கெட்டின் மாதிரி வடிவத்தைக் கொண்டு போய் வைத் துப் பஜனை செய்தார்.

இந்திய அரசமைப் புச் சட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் அது ஒவ்வொரு குடிமகனின் கடமை (குரனேயஅநவேயட சுபைவ) என்று வலியுறுத் தப்பட்டுள்ள நிலையில், அறிவியல் நிறுவனமான இஸ்ரோவிலேயே மூட நம்பிக்கை வளர்க்கப்படு வது கண்டிக்கத்தக்க தாகும்.

தமிழ் ஓவியா said...


புயல் மழையைக் கொடுக்கும் - பெரியார் நிதியைக் கொடுப்பார்!

ஒரு ஆறு மணி நேரத்தில் பெரியார் பேருருவச் சிலை அமைப்புக்கு ரூ.இரண்டரை இலட்சம் நிதி கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? பெரு மக்கள் பதின்மர் தங்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தினர் என்ற செய்தி உள்ளபடியே பெரியார் தொண்டர்களைப் பெரும் மகிழ்ச் சியின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.

நமது தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 40 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும், ஒவ் வொரு நொடியும் எப்படி எல்லாம் நம் மக்களால் நேசிக்கப்படுகிறார் - சுவாசிக்கப்படுகிறார் என்பதை எண்ணும் பொழுது நம்முடைய அணுக்கள் எல்லாம் சிலிர்க் கின்றன.

அய்யா எங்களுக்கு இன்று கிடைத்த இந்த வாழ்வு உங் களின் உழைப்பினால் கிடைத்த தான தர்மம் தானே! என்ற எண்ணம் நம் தமிழர்களிடத்திலே தழைத்திருக்கிறது என்பதன் அறிவிப்பே இது.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் - பெயர் ஆர். இராசேந் திரன், பெரியார் பேருருவச் சிலைக் கான வேண்டுகோள் விண்ணப்பப் பல வண்ண ஆவணத்தைக் கொடுத்தபோது, அவர் கண்களில் பட்ட வாசகம்.

தந்தை பெரியார் அவர் களால் ஒட்டு மொத்தமாகப் பயன் பெற்ற இந்தச் சமுதாயத் தில் நீங்களும் ஒருவர் அல்லவா! நன்றியுள்ள மக்கள் நாம் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? என்ற வாசகம்தான் மருத்துவரின் கண்களில் பட்டுள்ளது.

மறு வார்த்தை சொல்லவில்லை - மகிழ்ச்சியோடு - நன்றியுணர் வின் உந்துதலால் ஒரு சவரன் பவுனுக்கான தொகை ரூ.25 ஆயிரத்தை அளித்துள்ளார்.

அளித்தவரும் சரி, அதனைப் பெற்றுக் கொண்ட தோழர்களும் சரி, அந்த ஒரு நொடியில் வரு ணிக்கவே முடியாத நெகிழ்ச்சி கலந்த உணர்ச்சி வயப்பட்டனர் என்பது தான் உண்மை!

அதே வேகத்தில் 10 பெரு மக்களைச் சந்தித்து மளமள வென்று தேனீக்கள் போல நிதியைத் திரட்டியுள்ளனர் - ஒரு ஆறு மணி நேரத்துக்குள்! தமிழர் தலைவர் அறிவித்த போது ஆனந்தம் என்றால், நிதியை திரட்டும்போது உற்சாகம் - இதுதான் இன்றைய நிலை.

மற்ற மற்ற மாவட்டங்களில் உள்ள தோழர்களும் மலைக்காமல் வீதியில் இறங்கினால் விருப்ப மோடு நிதியை வழங்கிடத் தயா ராகவே உள்ளனர் - நன்றியுள்ள நம் தமிழினத்தார்! அதற்குப் பட் டுக்கோட்டை வழிகாட்டியிருக் கிறது. இன்னொரு தகவல், உள்ள படியே நெக்குருகச் செய்து விட்டது.

ஆர்.ஏ. சுப்பையா அவர்கள் மும்பை மாநகர திராவிடர் கழகத் தலைவராக நீண்டகாலம் இருந்து அரும் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பின் நெல்லை மாவட்டம் ராமா னுஜம் புதூர் என்ற தமது சொந்த ஊருக்குத் திரும்பினார் இணை யருடன்.

சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். அவர்தம் இணையர் மானமிகு முத்துவடிவு அவர்கள் நாள் தோறும் விடுதலை படிக்கக் கூடிய கொள்கையாளர்.

வளமையான சூழ்நிலை இல்லை. தந்தை பெரியார் அவர் களின் பேருருவச் சிலைக்காக நிதி அளிப்போர் பட்டியல் படத்துடன் விடுதலையில் வெளி வருவதை அன்றாடம் படித்த அம்மையார்- எப்பாடுபட்டேனும் அய்யா பேருருவச் சிலைக்கு அந்த நிதியைக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண் டார். (என்னே இலட்சிய உணர்வு!).

அந்தப் பகுதிக்கு நெல்லை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கள் காசி, இராசேந்திரன், இரத் தினசாமி ஆகியோர் சென்ற போது - அவர்களே அதிர்ச்சி அடையும் வண்ணம், தான் அணிந்திருந்த 9.7 கிராம் தங்க மோதிரத்தை எடுத்துக் கொடுத்து திக்கு முக்காடச் செய்துவிட்டார்.

வேண்டாம் என்றும் சொல்ல முடியாத நிலை! காரணம் அந்தத் தாயின் உணர்வையும் மதிக்க வேண்டுமே!

கொடுப்பதற்கு மனம் இருந் தால் போதும் என்பதற்கான இலக் கணத்தின் இலக்கியம் அல்லவா இது!

தோழர்களே, தந்தை பெரியார் என்ற சுடர் ஏந்திச் செல்லுவீர்!

கேட்பதற்கு மேலாகவே கிடைக் கும். உலகமே தந்தை பெரியார் பேருருவச் சிலையை நோக்கித் தன் கண்களைத் திருப்பப் போகிறது.

புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!

புயல் கொண்டு வரும் மழையைப் போன்று தந்தை பெரியார் உங்க ளிடம் நிதியைக் கொண்டு வந்து சேர்ப்பார்! செயல்படுவீர்!

தமிழ் ஓவியா said...


பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் : பஞ்சாயத்து தலைவர்களும் வழங்கலாம்


'பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கலாம்' என, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தலைவர்கள், பிறப்பு - இறப்பு சான்று வழங்கலாம். பிறப்பு - இறப்பு பதிவுகள் பராமரிக்கும், வி.ஏ.ஓ.,க்கள், அதன் நகலை மாதந்தோறும் ஊராட்சிக்கு அனுப்ப வேண்டும்.

சான்று வழங்கியது குறித்து, பஞ்., தலைவர், வி.ஏ.ஓ., அவ்வப்போது ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என, 2008 ஏப்ரல், 29இல் தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும், பஞ்சாயத்துகளில் பிறப்பு - இறப்பு சான்று வழங்கும் திட்டத்தை, தலைவர்கள் நடைமுறைபடுத்தவில்லை.

இந்நிலையில், தமிழக கிராம பஞ்., தலைவர் கூட்டமைப்பு சார்பில், பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கக் கோரி, பிப்ரவரி மாதம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் உத்தரவை, பஞ்., தலைவர்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பெண்கள் பாதுகாப்புக்கு நிர்வாகமே பொறுப்பு மக்களவைத் தலைவர் மீராகுமார் வலியுறுத்தல்

கொல்கத்தா, நவ. 24- வேலை செய்யும் இடங் களில் பெண்களின் பாது காப்புக்கு, நிர்வாக தலை மையில் உள்ளவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்க ளவைத் தலைவர் மீரா குமார் கூறினார். கொல் கத்தாவில், எம்சிசி சேம்பர் நடத்திய பெண் முன்னேற் றம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

நமது நாட்டில் இலக் கியத்திலும் கதைகளிலும் பெண்களை உயர்வாக வும் பெருமையாகவும் மதிக்கின்றனர். ஆனால் நிஜத்தில் பெண்களின் நிலை அதற்கு நேரெதிராக கீழாக இருக்கிறது. பெண் களுக்கு தகுந்த பாது காப்பு இல்லை.

அவர் களுக்கு கல்வி கற்க வாய்ப் புகள் இல்லை. நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இருக் கின்றன. ஆனால் அவை யெல்லாம் நடைமுறை யில் பலனளிப்பதில்லை.

ஒருவர் தான் என்ன வேலையில் பொறுப்பில் இருந்தாலும் பெண் களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தவேண்டும். நான் மக்களவை தலைவராக பொறுப்பேற்றுக் கொண் டதும் நாடாளுமன்றத் தில் பெண்களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஏற்படுத்தினேன். இதன் மூலம் பெண்களின் பிரச் சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது.

இதைப் போல ஒவ்வொரு கம்பெனியிலும் பெண் களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஏற் படுத்தி, அவர்களது பிரச் சனைகள் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பெண் களுக்கான பாதுகாப் புக்கு தலைமை நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர் கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்

தமிழ் ஓவியா said...

பெண் வேவுபார்ப்பு விவகாரம்: மோடி மீது சிபிஅய் விசாரணை கோரி அய்.ஏ.எஸ். அதிகாரி வழக்கு'

இளம்பெண் வேவு பார்க் கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப் புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையா டல்கள் அடங்கிய 150 பக்க அறிக் கையையும் அவர் இணைத் துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண் மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின் பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணைய தளங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், குஜராத் அரசால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரண மாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோப்ராபோஸ்ட் வெளி யிட்டுள்ள தொலைபேசி உரை யாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த அய்.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார்.

இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது:

2004ஆம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழா வில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங் களூரு பெண் பொறியாளரை முதல்வருக்கு, நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இரு வருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரு டைய தந்தை அறிக்கை வெளி யிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளி யிட்டிருக்கிறார் என்று தெரிவித் தார்.