Search This Blog

11.11.13

ஜாதி மனித சமூகத்தை அரிக்கும் புற்று நோய் - ஆரியப் பார்ப்பனீயத்தின் கூறுபோடும் சூழ்ச்சி!

திசை காட்டும் திராவிடர் எழுச்சி மாநாடு 


திருச்சியில் நடைபெற்ற (9.11.2013) திராவிடர் எழுச்சி மாநாடு - மக்களுக்குத் திசை காட்டும் அரும் பெரும் மாநாடாகும்.

மனித குலத்தை ஜாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் பார்த்து கூறு போடும். பிற்போக்குச் சக்திகளை அடையாளம் காட்டி எச்சரிக்கையாக இருக்குமாறு திசை காட்டிய விளக்குதான் திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு.
இலட்சியங்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் அடிப்படையில் திட்டங்களை வகுக்க முடியாதவர்கள் பதவி நாற்காலியில் அமர வேண்டும் என்ற சுயநலப் பேராசை வெறி பிடித்த நிலையில், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற வறட்டுத்தனத்தில் ஜாதி என்னும் துடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர்.

ஜாதி என்னும் மனித சமூகத்தை அரிக்கும் புற்று நோய் - ஆரியப் பார்ப்பனீயத்தின் கூறுபோடும் சூழ்ச்சி! பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஏற்பாடு.

இந்த வருண திட்டத்தில் பிறப்பால் உயர்ந்தவன் பிராமணன், அவனுக்காகவே இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது; மற்றவர்கள் அவனுக்குத் தொண்டூழியம் செய்யும் பிறவி அடிமைகள்.

இந்த அமைப்பை உடைத்து மனிதகுலத்தில் ஓர்மையை உண்டாக்கப் புத்தர் புறப்பட்டார் 2500 ஆண்டுகளுக்கு முன்,அதில் ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்த பார்ப்பனீய வருணா சிரமம், மீண்டும் தலை எடுத்தது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கமும் மீண்டும் இந்தப் பார்ப்பனீய சமூக அமைப்புக்கு மரண அடி கொடுத்து, சிதலம் அடையச் செய்தது.
எந்த ஜாதி, உயர் ஜாதி கூட்டத்திற்குக் கூடுதல் வசதிகளையும், உரிமைகளையும் வாரி வழங்கியதோ, அந்த ஜாதியையே அவர்களுக்கு எதிராகத் திருப்பி, அதன் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கச் செய்த இரசாயன மாற்றம்(Chemistry) தான் இடஒதுக்கீடு.

இந்த இடஒதுக்கீட்டால் பலன் பெற்றவர்களில் ஒரு சிறு குழுவினர், பதவி நாற்காலிகளைப் பிடிக்க ஜாதியைப் பயன்படுத்தத் தொடங்குவதும், ஜாதியின் மூல கர்த்தாக்களான பார்ப்பனர்களைத் துணைக் கழைத்துக் கொண்டு இருப்பதும், கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் என்பதைவிட கேவலமான நம் இனத்திற்குச் செய்யும் பெரும் துரோகமாகும்.

ஜாதியை ஒழித்து ஓரினக் கோட்பாட்டை தந்தை பெரியார் ஒருமுகப்படுத்தினார் என்றால்;  அந்த இனத்தைச் சிதைத்து ஜாதிகளாக்கிக் குளிர் காயும் கேவலத்தை என்ன சொல்ல!

இதன் மூலம் அவர்கள் பதவிகளைப் பெறப் போவதில்லை என்பது உறுதி, அதே நேரத்தில் ஜாதி உணர்வைக் கூர்தீட்டி, அதன் நிகர பலனைப் பார்ப்பனர்களுக்குக் கொண்டு சேர்க்கும் விபீடணத் தனத்தை எது கொண்டு சாற்றுவது!

"இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான்!"

                      --------- (தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969). 

என்று தந்தை பெரியார் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

இதில் சுட்டிக் காட்டத் தகுந்த ஆபத்து என்னவென்றால், வெறும் பதவி நாற்காலிக்காக இப்படி ஜாதிக்குத் தண்ணீர் ஊற்றி, உரம் போடும் வேலையைச் செய்பவர்கள் இன்னொரு பக்கத்தில் தந்தை பெரியார் அவர்களையும் துணைக்கழைப்பது தான். இது மேலும் அவர்கள் செய்யும் அறிவு நாணயமற்ற மோசடித்தனமாகும்.

இந்த நிலைகளை எல்லாம் சுட்டிக் காட்டி, தந்தை பெரியார் அவர்களால் இனவுணர்ச்சி பெற்ற நம் மக்களைப் பார்ப்பனர் வெட்டி வைத்த  படுகுழியில் விழாமல் தடுத்து, பகுத்தறிவு வெளிச்சம் தந்து, இனநலப் பாதையைக் காட்டும், திசை காட்டும் ஒளி விளக்கு தான் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாடும் ஜாதியவாத - மதவாத எதிர்ப்புக் கருத்தரங்கமும் ஆகும்.

வெற்றிகரமாக அவை நடந்தேறியதன்மூலம் திராவிடர் கழகம் காலத்தாற் மேற்கொள்ளப்பட வேண்டிய மகத்தான கடமையைச் செய்திருக்கிறது. அந்த மாநாட்டின் தீர்மானங்களைப் பட்டிதொட்டி யெல்லாம் கொண்டு போய்ச் சேர்ப்பது திராவிடர் கழகத்தின் கடமை மட்டுமல்ல; மதவாத, ஜாதீய வாதத்தை எதிர்க்கும் அனைத்து முற்போக்குச் சக்திகளின் கடமையும் ஆகும் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

              ------------------------”விடுதலை”  தலையங்கம் 11-11-2013

17 comments:

தமிழ் ஓவியா said...


நூல் வெளியீடு

திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே! தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு எனும் தலைப்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டு, விழிகள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தில் வெளியிட்டார். ரூ.160 விலையுள்ள அந்நூல் வெளியீட்டு விழாவின்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, பேராசிரியர் அ. மார்க்ஸ், பகுத்தறிவாளர் பெரம்பலூர் ஓவியர் முகுந்தன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கழகத் தலைவரிடமிருந்து பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.

நூலைப்பற்றி கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது: இது பி.எச்.டி.க்குத் தகுதியானது. அறிவுக்கரசு பெயருக்கேற்ற அறிவுக்கு அரசாக இந்த நூலை எழுதியுள்ளார் என்று பாராட்டிய கழகத் தலைவர் நூலினைச் சிறப்பாக வெளியிட்ட விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால் அவர்களையும் பாராட்டினார். வேணுகோபால் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

தமிழ் ஓவியா said...


படித்தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை


இந்தியா குறைந்த செலவில் செவ் வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்க லத்தை அனுப்பியுள்ளது குறித்து ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் சற்று உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் படித்தவர்களின் மூடநம்பிக்கை கண்டு அவர்களின் தலை தரையை நோக்கியிருக்கும் என் பதிலும் அய்யமில்லை.

பாமரர்களின் மத்தியில் பரவலாக இருக்கும் மூட நம்பிக்கைகள் படித்த வர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக் கிறது.ஒவ்வொரு போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிகிள் என்னும் ஏவுகணை மூலமாக வானில் ஆராய்ச்சிக் கோள் கள் ஏவப்படும் போதெல்லாம் இன்றைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப் பின் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ் ணன் ஏவுகணையின் நகலுடன் திருப்பதி சென்று ஏழுமலையானின் காலில் அதை வைத்து வணங்கி விட்டு வந்த பின் தான் ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுகிறது என்ற தகவல் பகுத்தறிவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இது ஏவுகணை விஷயத்தில் மட்டும் அல்ல . புதிதாக கட்டப்பட்ட கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டு பின்னர் கடலில் முதல் முதலாக பணி நிமித்தமாக இறக்கப்படும் போது கூட தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்து பூஜைபுனஸ்காரம் செய்த பின் னரே கப்பல் கடலில் இறக்கப்படுகிறது.

இஸ்ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவ தில்லை என்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐஏஎன் எஸ் செய்தியாளரிடம் இஸ்ரோ விஞ்ஞானி கள் கூறியுள்ளனர். அப்படியென்றால் போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிக்கிள் - சி 13 என்ற ஏவுகணை என்ன ஆயிற்று என்று கேட்ட போது அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ பிஎஸ் எல்வி - சி 12 அய் ஏவிய பின்னர் ஓசன்சட்-2 மற்றும் ஆறு ஐரோப்பிய நாடுகளின் நானோ சாடிலைட்டுகளையும் அனுப்பிய ஏவு கணைக்கு பிஎஸ் எல்வி - சி 14 என்று பெயரிட்டனர்.

இது குறித்த கேள்விக்கு அது போன்ற எண்ணுடன் ஒரு ஏவு கணை இல்லை என்று இஸ்ரோ உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். எண் 13 ஐ ராசியில்லாத எண் என்று இஸ்ரோ கருதுகிறதா என்று கேட்ட போது அவர் மௌனம் சாதித்துள்ளார். ஆனால் அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுவரை செவ்வாய்க்கிழமையன்று ஒரு ஏவுகணை கூட ஏவப்பட்டதில்லை என்ப தற்கு செவ்வாய் வெறும் வாய் என்ற பழ மொழி உள்ளது போல் அது ஒரு ராசி யில்லா நாள் என்பதும் காரணமாகும்.

செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி செவ்வாய் ஏவுகணை அன்று ஏவப் பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. அந்த அதிகாரி தனது பெயரைக்கூற மறுத்துவிட்டார்.

செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். மதநம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக் கைகளுக்கும் எதிரானது அறிவியல். அதேபோல் அறிவியலுக்கு மதநம்பிக் கைகளும், மூடநம்பிக்கை களும் எதிரானவை.

உலகம் உருண்டை என்று கலிலியோ கூறிய போது அவருக்கு மதம் வாய்ப்பூட்டு போட்ட சம்பவம் வரலாறாகும். பின்னர் மதம் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் வரலாறாகும். மதநம்பிக்கையும், மூடநம்பிக் கையும் இந்தியாவை சீரழித்து வரும் சமூகப்பிரச்சனைகளில் முக்கியமான இரண்டாகும்.

படிக்காதவர்கள் மத்தியில் தான் மூடநம்பிக்கை பரவலாக இருக்கிறது என்பதெல்லாம் பழங்கதை. இன்று அவை படித்தவர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடப்பதை இது போன்ற சம்பவங்கள் சுட்டிக்காட்டு கின்றன. திருஷ்டி கழித்தலும், பூனை குறுக்கே ஓடினால் ஆகாது என்பதும், கழுதை கத்தினால் சுபம் என்று கூறு வதும் காலம் காலமாக கூறப்பட்டு வரும் மூடநம்பிக் கைகளாகும்.

மதவாதிகள் அரசியலில் வேரூன்ற ஆரம்பித்த பின்னர் இவற்றுக்கு மவுசு கூடிவிட்டது. இன்றும் சமூக தளங்களில் செயல் பட்டுவரும் அரசியல், ஜனநாயக, சமூகநீதி இயக் கங்கள் அனைத்தும் மக்களிடையே கடுமையான வலுவான மூடநம்பிக்கை எதிர்ப்பு பணியில் ஈடுபட வேண்டும். மூடநம்பிக்கைகளை தடைசெய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று இவை அரசுகளை வற்புறுத்த வேண்டும்.

நன்றி: தீக்கதிர் 9.11.2013

தமிழ் ஓவியா said...


எருமை போவதுபோல்...

எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல் கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.

_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என அறிவிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் கடிதம்

புதுடில்லி, நவ.11- இலங் கையில் சர்ச்சைக்குரிய காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க வில்லை என அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் ராஜபக் சேவுக்கு கடிதம் அனுப்பினார்.

உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, லட் சத்துக்கும் அதிகமான தமிழர் களை இனப்படுகொலை செய்த இலங்கையின் தலைநகர் கொழும் புவில், 54 நாடுகள் பங் கேற்கும் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி உயர்த்தின.

இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட் டங்களும் நடைபெற்றன.

பலத்த எதிர்ப்புக்கு மத்தி யில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்பது தொடர்பாக காங் கிரஸ் உயர்நிலைக்குழு இரண்டு முறை கூடியும், முடிவு எடுக்க முடியவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை பிரத மரின் முடிவுக்கே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் சையத் அக்பருதீன், இலங்கை காமன்வெல்த் மாநாட் டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சர்கள் அளவி லான கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்கிறார் என அறிவித்தார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோ கன்சிங் பங்கேற்கப்போவ தில்லை என்பது அதிகார பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரத மர் மன்மோகன் சிங் அவசரக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதம், கொழும்பு வில் உள்ள இந்திய தூதரகத் தின் மூலமாக ராஜபக்சேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விவ ரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான அந்தக் கடிதத்தில் தன்னால் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் என்ன கார ணங்களால் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்பதை பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழக அரசியல் கட்சி களின் கடும் எதிர்ப்பு, தமிழக சட்டப் பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானம், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பணிந்துதான் பிரதமர் மன்மோகன்சிங், காமன்வெல்த் மாநாட்டில் பங் கேற்காமல் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு மற்றும் மந்திரமல்ல; தந்திரமே விளக்கப் பயிற்சிப் பட்டறை துவங்கியது!

அய்ந்து நாள் நடைபெறும் அறிவியல் மனப்பான்மை பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். உடன் அகில இந்திய பகுத்தறிவாளர் கழக கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் பொறுப்பாளர் பாபு கோகினேனி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உள்ளனர் (சென்னை-11.11.2013)

சென்னை, நவ. 11- சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு மற்றும் மந்திரமல்ல தந்திரமே விளக்கம்(Development of Scientific Temper and Demystification of Miracles) பற்றிய 5 நாள் பயிற்சிப் பட்டறை (நவ. 11 முதல் 15 முடிய) துவங்கியது.

மய்ய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் பெங்களூரு கர்நாடகா அறிவியல் கழகம் உதவியுடன் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் நடத்திடும் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டுப் பயிற்சிப் பட்டறையின் தொடக்க விழா அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்தோரை வரவேற்று திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார். தொடக்க விழாவிற்கு தலைமை வகித்த பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது உரையில், அரசமைப்புச் சட்டம் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை குடிமக்களின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக வலியுறுத்துகிறது. ஆனால் அரசே சில சமயம் அறிவியல் மனப்பான்மையுடன் நடந்து கொள்வ தில்லை.

அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர் கண்ட கனவின் அடிப்படையில் 1000 டன் தங்கப் புதையல் கிடைப்பதாக அரசுத் துறையினரே மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டது, அறிவியல் மனப்பான்மை சார்ந்ததாக இல்லை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை, விழிப்புணர்வு இருந்தால் அரசு இத்தகைய செயல் களில் ஈடுபடாது. அத்தகைய விழிப்புணர்வுக்கு, பிரச்சாரத்திற்கு இந்தப் பயிற்சிப் பட்டறை பயன்பட வேண்டும். பயிற்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடக்க உரை - கவிஞர் கலி.பூங்குன்றன்

பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்த திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை, அறிவியல் சார்ந்த அணுகுமுறையினை கடைப்பிடிப்பதை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டிலிருந்து அமைப்பு ரீதியாக பிரச்சாரம் செய்தார். அவர் நிறுவிய சுயமரியாதை இயக்கமும் தொடர்ந்து அறிவியல் மனப்பான்மையினை மக்களிடம் பெருக்கிட பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாமர மக்களும் புரிந்து கொள்ளும் முறையில் பிரச்சாரம் செய்வது பெரியார் இயக்கத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

அறிவியலை ஒருவர் படிப்பது என்பது ஒன்று, அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வது என்பது வேறு. அறிவியல் படிப்பவர்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மையுடன் நடந்துகொள்வ தில்லை.

மூடநம்பிக்கை பலவற்றை பழக்கத்தின் காரண மாகக் கடைப்பிடித்து மனித வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்து தங்களது முன்னேற்றத்திற்கும் தடை விதித்துக் கொள்கின்றனர். அறிவியல் மனப்பான்மையுடன் மக்கள் அனைவரும் நடந்து கொண்டால் மானிடம் வளர்ச்சிப் பாதையின் பல்வேறு சிகரங்களை எட்டமுடியும்; வெற்றிகளை குவித்து மனித சமுதாயம் இணக்கமுடன் வாழ்ந்திட வழி ஏற்படும்.

இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண் டுள்ள அனைவரும் அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கின்ற பிரச்சாரகர்களாக மாறிட வேண்டும் என்று தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (IHEU) பொறுப்பாளர் பாபு கோகினேனி மற்றும் அகில இந்திய பகுத்தறிவாளர் கழகக் கூட்டமைப் பின் (FIRA) தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் உரையாற்றினர்.

பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து பல தோழர்கள், மகளிர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். அறி வியலாளர்கள் பலர் உரையாற்றிட உள்ளனர். நவம்பர் 15ஆம் நாள் வரை பயிற்சிப் பட்டறை நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள், எடுத்துக்காட்டு விளக்க முறைகள் மூலம் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.

பயிற்சி யாளர்களுக்கு உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் குறிப்புகள், புத்த கங்கள், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. பயிற்சிப் பட்டறை பற்றிய விளக்கத்திற்கு 94442 10999 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.

தமிழ் ஓவியா said...


பக்....தீ!


நமது தமிழ் நாளேடுகள் ஒவ்வொரு நாளும் இணைப்புகளை (Supplementary) வெளியிடுகின் றன. வியாபார யுக்தியோடு போட்டி போட்டு இலவச இணைப்பாக அவை வெளியிடப்படுகின்றன.

ஆன்மீகம், சோதிடம் இளைஞர், மகளிர் என்ற தலைப்புகளில் வெளி வந் தாலும் - தப்பித் தவறிக்கூட அறிவியல் என்றோ பகுத் தறிவு என்றோ இணைப் புகளை வெளியிட்டு விட மாட்டார்கள். மக்களுக்குப் பகுத்தறிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவ் வளவு அக்கறை.

பகுத்தறிவு வளர்ந்து விட்டால் இந்தக் குப்பை களைச் சீந்த மாட்டார்களே - அதன் பின் பத்திரிகை வியாபாரம் படுத்துவிடுமே - கல்லாப் பெட்டி நிரம் பாதே!

இது தெரியாத பைத் தியக்காரர்களா அவர்கள்? அதே நேரத்தில் பகுத்தறிவு வாதிகள் தோலுரித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு நாளிதழ் வெளி யிட்ட ஆன்மிகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.

கோபியர்களின் ஆசை என்பது தலைப்பு..

கிருஷ்ணனின் வீரம்; அலங்காரம், அவனது குழலோசை, தூய்மையான மனம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவனிடம் தங்கள் மனதைப் பறி கொடுத்தனர் கோபிகள். கிருஷ்ணன் தனக்குக் கண வனாக வர மாட்டானா? என எண்ணத் துவங்கினர். அவனது புல்லாங் குழல் இசையால் ஈர்க்கப்பட்டு, தங்களை மறந்து நிற்பார் கள். திருமணமான பெண் களும்கூட கண்ணனைக் காதலித்தனர். அவன்மீது அன்பு கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் நடந்து செல்லும்போது, அவனது காலடிபட்டு அந்த மண் சிவந்து போகும். அந்த மண்ணை எடுத்துப் பெண் கள் மஞ்சளுக்குப் பதில் உடலிலும், முகத்திலும் பூசிக் கொள்வார்கள். அதன் காரணமாக அவர்களது காம இச்சைகள் அடங்கிப் போகும் என்பதுதான் அது.

இதற்கு ஆயிரம் ஆயிரம் விளக்கம் கூறி அச மடக்க முயற்சிப்பார்கள் பாகவதர்கள்.

யாராக விருந்தாலும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும் கடவுளைப் பார்த்தால் ஒரு பக்தைக்குப் பக்தி வருமா? காமம் வருமா என்பதுதான் அந்தக் கேள்வி.

காமம் வருகிறது என் றால் அது என்ன பக்தி? கண்ணனைக் கட்டிப் பிடிக்க முடியாவிட்டால் அவன் காலடி மண்ணை உடம்பெல்லாம் பூசி காம இச்சையை அடக்கிக் கொள்வது என்றால் இதற் குப் பெயர் பக்தியா? வக்கிரப் புத்தியா?

இதைச் சொல்லுவ தற்கு, தூண்டுவதற்குத் தான் ஆன்மிக இதழ்களா?

உள்ளதைச் சொன் னால் உபத்திரவமா? அறி வோடு சிந்திக்க வேண் டாமா?

- மயிலாடன் 12-11-2013

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதா?

பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட நல்ல உணர்வினை இது வீணடித்து விட்டது!

காலந் தாழ்ந்து விடவில்லை - மறுபரிசீலனை செய்திடுக! தமிழர் தலைவரின் வழிகாட்டும்
முக்கிய அறிக்கை

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட உணர்வை வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதால் வீணடித்து விட்டது என்றும், இன்னும் காலந் தாழ்ந்துவிடவில்லை; வெளியுறவுத் துறை அமைச்சரும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இவ்வாரம் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; காரணம் அந்நாடு கொத்துக் குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மனித உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்ற பின்புகூட, அவர்களுக்கு எவ்வித உரிமைகளையும் தராது, இராணு வத்தை அங்கே இன்னமும் நிறுத்தி வைத்துள்ளது;

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை ஆய்வுக்கு வந்தபோதுகூட, அவமதிப்புச் செய்து கொச்சைப்படுத்தியது; கருத்துச் சுதந்திரம் எதுவும் கிடையாது;

சிங்களவர் ஆன போதிலும் - அது கிடையாது என்பதுபோல அங்கே தலைமை நீதிபதியான பெண்மணி ஒருவரையே பதவி நீக்கம் செய்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கு என்பதையெல்லாம் சுட்டிக் காட்டி, உலகத்தார் குரல், தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது - இவற்றையெல்லாம் உள்ளடக்கிய காரணிகளால்தான் தமிழ்நாட்டில் டெசோ தீர்மானம் மூலம் முதன்முதலாக குரல் கொடுத்து, நாடு தழுவிய அளவில் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு

தமிழக சட்டமன்றத்தில், தமிழக அரசு சார்பாக முதல் அமைச்சரால் முன்மொழியப்பட்ட காமன்வெல்த் மாநாட்டினை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானம், அனைத்துக் கட்சியினராலும் வழிமொழியப் பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாடே கொதி நிலையில் உள்ளது - இப்பிரச்சினையில் என்று காட்டும் வகையில், மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள் போன்ற அனைத்துப் பிரிவினர்களும் அறப் போர்கள் மூலம் இதே உணர்வை, மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர்!

மத்திய அரசும் மவுனத்தைக் கலைத்தது; பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறியது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்று ஆறுதல் கொள்ளும் வண்ணம் அமைந்தது.

பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலிகள்

ஆனால் வெளி உறவுத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் என்பவர் அதிகாரிகளுடன் கலந்து கொள்ளுவார் என்றுகூறி, அனுப்பி வைப்பதன் மூலம், எந்த நோக்கத் திற்காக பிரதமர் திரு. மன்மோகன் சிங் கலந்து கொள் வதைத் தவிர்த்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் - இருபுறத்தினரும் ஏற்காத ஒரு இரண்டுங் கெட்ட நிலையைத்தான் ஏற்படுத்தி விட்டது; இது ஒருபோதும் இராஜதந்திரம் ஆகாது, பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலித்தனமாக(?) தான் கருதப்படும்.

பாம்புக்குத் தலை, மீனுக்குவால் என்ற விலாங்குத் தன பாசாங்காகத்தான் உலகத்தார் கண்முன் இது தென்படக் கூடும்.

பிரதமர் கலந்து கொள்ளாத உணர்வை வீணடிப்பதா?

இன்று மாணவர்களின், மக்களின் அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, வெளி உறவுத்துறை அமைச்சரை அனுப்புவதன் மூலம், புறக்கணிக்கவில்லை என்று பதிவு செய்வது, பிரதமர் கலந்து கொள்ளாததன் காரணமாக ஏற்பட்ட உணர்வையே வீணடித்து விட்டதாகத்தானே ஆகும்!

எனவே, இன்னமும் காலந் தாழ்ந்து விடவில்லை; இதையும் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசரம் அவசியம். அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பும்கூட இதில் அடங்கியுள்ளது.

காலந்தாழ்ந்து விடவில்லை

புறக்கணிப்பு என்பது ஒருவகையான எதிர்ப்பு (Protest) என்னும்போது அதை முழுமையாகச் செய்து காட்டுவது தானே சரியானது?

எனவே இன்னமும் காலந்தாழ்ந்துவிடவில்லை; அதிகார வர்க்கம், உயர் ஜாதி ஊடக வர்க்கம் - இவை திட்டமிட்டே காங்கிரசைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க., பதவிக்கு வருவதற்கு இப்படி இந்திய அரசின் மூக்கைச் சொறியும் தந்திரத்தை - பழைய காக்கை - நரி வடை கதை போல் செய்கின்றன. ஏமாந்து விடக் கூடாது. உலகத் தமிழர்கள் உணர்வுகளும், டாட்டு பாதிரியார் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களை அலட்சியப் படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்து கிறோம்.


சென்னை
12.11.2013

வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


கழகக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! 13,500 மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்க உத்தரவு ரத்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை


புதுடில்லி, நவ.12-மக்கள் நலப்பணியாளர் கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல் லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப் புக்கு தடை விதித்த துடன், வழக்கை மீண் டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக் கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு கால தாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப் பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் தது.

அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் விசா ரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை நிவார ணமாக அளித்து, அவர் களை பணி நீக்கம் செய் யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங் கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின் வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மக்கள்நலப் பணி யாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதி வாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை உயர் நீதிமன்றம் தள்ளு படி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக் கள் நலப் பணியாளர் கள் சார்பில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய் யப்பட்டது.

இந்த மனுவை நீதி பதிகள் ஜெயின், மதன் லோக் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது, கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பணி யில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணி யாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவது மாக தொடர்ந்து நடந் துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக் கிறது. எனவே மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவை யில் இருந்தது. இந்நிலை யில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி பதிகள், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசா ரித்து தீர்ப்பளிக்க வேண் டும். 6 மாதத்தில் விசா ரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண் டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியி லிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவர் 5 மாதம் ஊதியம் கொடுத் தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தர விடப்பட்டுள்ளது சரி யான நடைமுறையா காது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் அமர்வு ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணி யாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமி ழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

எனவே, உயர்நீதிமன் றத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதா மதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் மதுவிலக்கு படும்பாடு

இந்தியாவிலேயே காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் தான் மதுவிலக்கு அமலில் உள்ளது என பெருமை பேசுவதுண்டு. ஆனால், அங்கு மதுவிலக்கு என்ன பாடுபடுகிறது தெரியுமா?

குஜராத்தில் குடிகாரர்கள் நல்லமுறையில் உபசரிக்கப்படுகிறார்கள். உள்ளூர் முறைகேடான சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் களுக்கு குஜராத் நகரங்களில் எந்த நேரமும் மதுபானம் கிடைக்கும்.

சட்டப்படி அனுமதி பெற்றுள்ள மதுபானக் கடை களும் உள்ளூர் சாராயத்திற்கு அதிக இடமளிப்ப தால் அரசுக்கு சேர வேண்டிய வரி, காவலர் கலால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் களுக்கு கிரிமினல் குற்றவாளிகள்மூலம் கிடைக் கிறது. சட்டத்துக்கு புறம்பான மதுபான விற்பனையால் அரசியல்வாதிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால் அங்கு ஒரு போதும் மதுவிலக்கு நீக்கப்படாது. அவர் களின் பாதுகாவலில் இந்த முழு வேலைகளும் நடப்பதால் மதுவிலக்கு அங்கு நீடித்து நிலைக்கும்.

இந்த சாராய விற்பனையால் குஜராத்தில் அரசுக்கு வருவதைவிட ஆளும் கட்சிக்கு அதிக பணம் கிடைக்கிறது. இதுதான் குஜராத் மது விலக்கு. இது நாட்டுக்கு தேவையா?
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா அக்.23 பக்.7 இதழிலிருந்து...

தமிழ் ஓவியா said...


மதக் குறி


மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.

(விடுதலை, _ 25.5.1950)

தமிழ் ஓவியா said...


மதவாதத்தை நிராகரிப்போம்!

திருச்சிராப்பள்ளியில் கடந்த 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட திராவிடர் எழுச்சி மாநாடு பல வகைகளிலும் சிறப்பையும், பெருமையையும் பெற்று விட்டது. காலங் கருதி நடத்தப்பட்ட அம்மாநாட்டில் காலத்தின் அவசியம் கருதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் தனித் தன்மையை மேலும் உயர்த்தி விட்டன. மதவாதத்தை நிராகரிப்போம் என்னும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே இப்படியாக இருக்கிறது.

பாரத தேசத்தை மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளதார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத் துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொள் கிறோம் எடுத்த எடுப்பிலேயே மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படைக்கு விரோதமாக பாரதீய ஜனதா என்னும் கட்சி இந்து ராஜ்ஜியம் அமைப்பதாகக் கூறும் நிலையில், தேர்தலில் நிற்பதற்கே தகுதி உடையது தானா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

பா.ஜ.க.,வினால் பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருவாளர் நரேந்திரே மோடி என்பவர் தன்னைப் பற்றிக் கூறும்போது இந்து நேஷனலிஸ்ட் என்றே கூறியுள்ளார்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு இதனை எடுத்துக்காட்டி, இப்படிச் சொல்லுகிற ஒருவரைப் பிரதமராக அறிவித்திருப்பது - இந்திய அரசமைப்புச் சட்டப்படி குற்றமானதல்லவா என்ற வினாவை எழுப்பியுள்ளது.

மதச் சார்பின்மை என்பதற்கு தங்கள் விருப்பம் போல வியாக்கியானம் செய்வது திசை திருப்பும் வேலையாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச் சார்பின்மை என்று கூறியுள்ளார் (துக்ளக் ஆண்டு விழாவில் மோடி பேசியது).

மதச் சார்பின்மை என்பதற்கான உண்மையான பொருளை எதிர் கொள்ள முடியாத நிலையில், அதனைத் திசை திருப்புவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

செக்குலரிசம் (மதச் சார்பின்மை) என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது? அந்த மொழியில் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சென்னைப் பல்கலைக் கழக முயற்சியால் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்களைத் தலைமை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம் என்ன கூறுகிறது?

செக்குலர் என்றால் இவ்வுலகுக்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ் சாராத என்று தெளிவாகவே வரையறை செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதி என்ன கூறுகிறது? Not Concerned with Religion மதம் சாராத - மதத் தொடர்பில்லாத என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மைக்கு மாறாக தன் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விளக்கம் கூறக் கூடியவர்தான் அடுத்த பிரதமருக்கான வேட்பாளரா?

ஏன் இப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் தேக்கி வைத் திருக்கும் இந்துத்துவாவுக்கு எதிரானதாயிற்றே அதனால்தான்!

உண்மையான மதச் சார்பின்மைமீது மோடிக்கு நம்பிக்கை இருக்குமானால், குஜராத்தில் சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு இருப்பார்களா?

காரில் போகும்போது அடிபடும் நாய்க்குச் சமம் என்று சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டதைக் கருதுகிறார் என்றால் அவரிடம் உண்மையான மதச் சார்பின்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மதவெறியைத்தான் எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலையில் தான், பிஜேபியின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி, மக்களையும் அரசியல் கட்சிகளையும் எச்சரிக்கை செய்திருக்கிறது திரா விடர் கழகம் நடத்திய திராவிடர் எழுச்சி மாநாடு

தமிழ் ஓவியா said...


தீண்டாமைக்குப் பதில் ஜாதி!



மற்ற மற்ற கட்சிகள் மாநாடு நடத்தித் தீர்மானங் களை நிறைவேற்றுவதற்கும், திராவிடர் கழகம் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் அடிப்படை யிலே வேறுபாடு உண்டு.

அடிப்படைப் பிரச்சினைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சூறாவளியாக இருக்கக்கூடியவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்கள்.

சமூகத்தைப் பீடித்த பெருநோய் ஜாதி என்பதை மறுக்கவும் முடியுமா? மனித சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்டு, மாண்புக்குரிய மனிதத்தை - பகைப் புலமாக மாற்றிக் கேட்டினைச் செய்தது ஜாதிதானே!

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற கொடுமை - மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்புவது திராவிடர் கழகம்தானே!

மனித சக்தி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக திசை திருப்பி, ஒருவருக்கொருவர் மோதலை உண்டாக் குவது எவ்வளவுப் பெரிய கேடு!

இந்தச் சமூகம் சீர்குலைந்து போனதற்கும், வறுமைக்குழியில் வீழ்ந்ததற்கும் முக்கிய காரணமே இந்த ஜாதி முறை சமூக அமைப்புதானே!

வறுமைக்கோட்டுக்குக் கீழே பெரும் அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆளாக்கப்பட்டதற்குக் காரணம், பிறவியின் அடிப்படையில் அவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதுதானே!

இந்தத் தீண்டாமை ஒழிக்கப்படவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை ஒழிந்துவிடுமா?

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவுதானே! ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்துவது போல இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு (9.11.2013) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஜாதி ஒழிக்கப்பட்டால் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் என்ற நிலைப்பாடும் நிர்மூலம் ஆகிவிடாதா?

கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாமா? இது ஜாதியை வளர்க்காதா? என்று ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டாசு கட்டி முண்டா தட்டும் பேர்வழிகள், சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படுவதற்குக் கைதூக்கட் டுமே பார்க்கலாம்.

இதுபற்றி 70 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கருத்துக் கூறி இருக்கிறார் என்றால், சிலருக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.

சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத்தின்மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல (திராவிட நாடு, 30.5.1943) என்று கருத்துக் கூறியுள்ளாரே!

இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு தம்ளர் கள், இன்னும் ஜாதி அடிப்படையில் சுடுகாடுகள், ஜாதியின் அடிப்படையில் திருமணங்கள் என்கிற மனிதத்துவத்திற்கு விரோதமான நடவடிக்கை களை அனுமதிப்பது கேவலம் அல்லவா? மனிதன் பகுத்தறிவுவாதி என்ற அடையாளத்துக்கு இது அழகல்லவே!

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மற்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் கொண்டு செல்லுவதைவிட தமிழ்நாட்டிலிருந்து செல்லுவது தானே சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.

காரணம், இங்குதானே சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திக் காட்டினார். பத்தாயிரக் கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டின் இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் கட்சிகளைக் கடந்து சிந்திப்பார்களாக!
13-11-2013

தமிழ் ஓவியா said...


ஒ, அப்படியா


பா.ஜ.க. ஆட்சிக்கு வந் தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு.

- எச். ராஜா (தமிழக பா.ஜ.க., துணைத் தலைவர்)

காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா போகலாமா - போகக் கூடாதா என்று முடிவு செய்யக் கூடிய கூட்டத்தில் எந்தவித மான முடிவையும் எடுக்க முடியாமல் கூடிக் கலைந்த வர்களா இப்படியெல்லாம் பேசுவது?

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த்: பெரும்பாலான நாடுகள் புறக்கணிப்பு

இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பொதுநலவாயத்தின் அரைவாசி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ஜோன் பேயர்ட் குறிப்பிடடுள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்களில் 23 நாட்டுத் தலைவர்களே இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரின் தீர்மானங்களை தாம் வரவேற்பதாக பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, தாம் மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை பொதுநலவாய மாநாட்டின் மூலம் மறைத்து வெள்ளையடித்துக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே கனடா நாட்டுப் பிரதமர் அதில் பங்கேற்கவில்லை என்று பேயர்ட் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடி மீது அமெரிக்க அமைப்பின் பகிரங்கக் குற்றச்சாற்று!


வாஷிங்டன், நவ.14- கலவரத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல் வர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட் பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. வருத்தத்திற்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறி யுள்ளனர்.

அந்த ஆணைய உறுப்பினர்கள் கத்ரினா லன்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளவுன்டான் ஆகியோர் ஊட கம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த காந்தியார், பல மதங்கள் நிலவும் சமூகத் தில் சகிப்புத் தன்மை யுடன் கூடிய தொலை நோக்குப் பார்வை, பரந்த மனப்பான்மைக்கு முக்கி யத்துவம் அளித்தார். வரும் 2014-ஆம் ஆண்டு (மக்களவைப் பொதுத் தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறது? மதச் சுதந் திரத்திற்கா? மத சகிப்புத் தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்குப் பதிலளிக்கும்.

கலவரத்தைத் தடுப்பதில் இந்தி யாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திரமோடி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர் தான் முதல்வராக இருந்தார்.

மோடி தலைமையி லான நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததை, குஜராத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழி பாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித் துள்ளது. சர்வதேச மதச் சுதந்திரத் துக்கான அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெ ரிக்க வெளியுறவுத்துறை 2005ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது.

எம்.பி.க்கள் கடிதம்

மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பில் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடியை அறி வித்துள்ளது. வருத்தம் தருவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, _ 22.6.1973)

தமிழ் ஓவியா said...


குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.14- வெளிப்படை யான குற்ற வழக்குகளில், உடனடியாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காஜியா பாத்தை சேர்ந்த லலிதகுமாரி என்ற பெண், தனது மகள் கடத்தப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை சீர்திருத்தம் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண் டும் என்று மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப் பட்டது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரம் வருமாறு:

ஒரு குற்றம் தொடர்பான புகாரில், குற்றம் நடந்திருப்பதை வெளிப்படை யாக உணர்ந்து கொண்டாலே, காவல் துறையினர் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியமாகும்.

அப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத்தவறும் காவல்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை. மற்ற புகார்கள் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற புகார்களில், ஆதாரங் களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

குற்ற புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. எனவே இனி காவல் நிலையங் களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது, இரு தரப்பினரையும் காவல் நிலையங்களிலேயே அழைத்துப் பேசி தீர்வு காண்பது (கட்ட பஞ்சாயத்து) போன்ற செயல்களில் இனி ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.