Search This Blog

28.11.13

ஜாதி ஒழிப்பே எனது லட்சியம்!


இன்றைய தினம் எனது பிறந்த நாள் பேரால் பாராட்டு உரையும், பட்டயம் அளிப்பு விழாவும் நடத்தியுள்ளீர்கள். இந்த ஊர் 500- வீடுகளே உள்ள சிறிய ஊராக இருந்தாலும், 56000- வீடுகள் நிறைந்துள்ள ஊர்களில் கூடுவது போல் பல்லாயிரம் பேர்கள் கூடியுள்ளீர்கள்.

எனது கழகம் அரசியல் இலட்சியம் உள்ள கழகம் அல்ல. நானும் அரசியல்காரனும் அல்ல. சமூதாய நலன் காக்க விரும்புபவன். சந்நிதானம் கூறியது போல் ஜாதிக் கொடுமையை ஒழிப்பதற்கு 2000- ஆண்டுகளாக எவரும் முன் வரவில்லை. யாராவது எண்ணினார்கள் என்றால் திண்ணையில் உட்கார்ந்து நாலு வார்த்தை பேசி இருப்பார்கள். இறங்கி வந்து பாடுபட எவரும் முன் வரவே இல்லை. நாங்கள் தான் அதற்காக முனைந்து பாடுபடுகிறோம்.

100-க்கு 97- பேராக உள்ள மக்கள் ஈனஜாதி. 100-க்கு 3- பேராக ஜாதி உயர்ந்த ஜாதி. பாடுபடுபவன் இழிஜாதி. பாடுபடாத சோம்பேறி உயர்ஜாதி. இந்த அக்கிரமத்தை ஏன் என்று கேட்க எந்தக் கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ, அவதார புருஷர்களோ, மகான்களோ, முன்வரவே இல்லையே! நாங்கள் தான் இவற்றை ஒழிக்க வெளிவந்து பாடுபடுகின்றோம்.

இழிஜாதி மக்களாகிய 100-க்கு 97-பேராக உள்ள மக்களில் 50-க்கு மேற்பட்டவர்கள் சாதியை ஒழித்து தான் ஆக வேண்டும் என்று எண்ணும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள். ஆனால் 100-க்கு 3- பேராக உள்ளவர்கள் ஜாதி ஒழியக் கூடாது என்று கூறி ஒழிய விடாமல் பாதுகாக்கும் முயற்சியிலும் இன்று முனைகின்றார்கள்.

நான் ஏன் கடவுள், மதம், சாஸ்திரங்கள், ஒழிய வேண்டும் என்கிறேன் என்றால் இவை ஜாதியைப் பாதுகாக்கின்ற காரணத்தினால் தான். இல்லாவிட்டால் நான் ஏன் இதில் இறங்க வேண்டும்?

தோழர்களே! ஜாதியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காகவே காங்கிரசில் இருந்து வெளிவந்தவன்; காங்கிரசினை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டவன்.

அப்படிப்பட்ட நான் தான் இன்று ஜாதி ஒழிப்பு அவசியத்துக்காகவே காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியத்துக்கு வந்து இருக்கிறேன்.

தோழர்களே! கடவுளை ஒழித்து, மதத்தை ஒழித்து, சாஸ்திரத்தை ஒழித்து, ஜாதியை ஒழிக்க முடியாவிட்டாலும், மனிதனை ஒழித்தாவது ஜாதியை ஒழிக்க மக்கள் முன்வந்து விடுவார்கள்.

தோழர்களே! இன்று நாட்டில் இரண்டே கட்சி தான். ஒன்று ஜாதி ஒழிய வேண்டும் என்ற கட்சி. மற்ற ஒரு கட்சி ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்சி.

ஜாதி ஒழிய வேண்டும் என்கிற கட்சிக்குக் காமராசர் தலைவர். அவருக்கு நாங்கள் எல்லாம் ஆதரவு கொடுக்கின்றோம்.

ஜாதி ஒழியக் கூடாது, காப்பாற்ற வேண்டும் என்ற கட்சிக்கு இராஜாஜி தலைவராக இருந்து பாடுபட்டு வருகிறார்.

ஜாதி ஒழிப்புக்காகக் காமராசர் பாடுபட்டு வருகிறார் என்றால் சமூதாயக் குறைப்பாடுகளைக் களைந்து எறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பாடுபடும் என் போன்றவர்கள் கடமை என்ன? காமராசரை ஆதரிப்பது தானே.

சமீபத்தில் தேர்தல் வருகின்றது. ஓட்டர்கள் (வாக்காளர்கள்) ஒவ்வொருவரும் முடிவு செய்து கொள்ள வேண்டும். நான் தகுதி இல்லாத மக்களுக்கு ஓட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது என்று குறை கூறிவந்தவன். இப்படிப்பட்ட மக்களை ஓட்டுக்குத் தகுதி உள்ளவர்களாக ஓரளவுக்காவது இந்த ஆட்சி மாற்றி உள்ளது. இப்படி அளிக்கப்பட்டு உள்ள ஓட்டானது நல்ல வழியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களது கவலையாகும்.

எனவே உங்கள் கையில் இருக்கும் ஓட்டினைத் தகுந்த வண்ணம் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஓட்டினைச் சாதியை ஒழிக்கக் கூடிய காமராசர் ஆட்சி ஏற்படக் காங்கிரசுக்கு அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சாதி ஓழிப்புக்குக் கேடு விளைவிக்கும் ஆட்சிகளுக்கு அளிக்கக் கூடாது.

-------------------------- 16.10.1961- அன்று குளித்தலைக்கு அடுத்த கட்டளையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு.-"விடுதலை"  - 27.10.1961

39 comments:

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை - பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
(குடிஅரசு, 25.3.1944)

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர் படுகொலை குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் லண்டன் பத்திரிகைக்கு கேமரூன் பேட்டி



லண்டன், நவ. 28- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண் டார். அப்போது, தமிழர்கள் பகுதி யான வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

அப்போது, தமிழர்கள் போரின் போது பட்ட அவதிகளையும், கொடு மைகளையும், ராணுவ அத்துமீறல் களையும் கதறியபடி அவரிடம் எடுத் துரைத்தனர். காணாமல் போன தங்களது குடும்பத் தினர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கண்ணீர் வடித்தனர்.

அதை தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பேசிய கேமரூன், இறு திக்கட்ட போரின் போது நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து இலங்கை அரசு நம்பகமான விசா ரணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தினார். அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. போரின் போது அத்துமீறல்கள் நடைபெறவில்லை என கூறியது.

இந்த நிலையில், தற்போது லண் டன் பத்திரிகைக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:

நான் இலங் கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனா லும், அங்கு பார்த்த காட்சி கள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் அய்.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

இலங்கையில் மனித உரிமை விஷ யத்தில் முன்னேற்றம் வேண்டும். உண் மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர் சிங்களர் இடையே நல்லிணக் கம் வேண்டும்.

நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது. - இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மின்னஞ்சலில்...



ராமர் பாலம் மிதக்கும் பாலமே! சுக்ரீவனின் சேனை சேது கரையோரமாக இருந்த கற்களையும், பாறைகளையும் பெயர்த்தெடுத்து விஸ்வகர்மாவின் மகன் நளன் கையில் கொடுக்க, அவன் அதைக் கடலில் தூக்கிப் போட்டான். நளன் கையில் பட்ட அனைத்தும் மிதக்கும் என்ற அவன் பெற்ற வரத்தின் காரணமாக அவை அனைத்தும் மிதந்தன. ஆகவே அது மிதக்கும் பாலமே, அது கடலின் அடிபகுதிக்கு எப்படி சென்றது? சிந்திப்பீர்!

- பெரியார்மணி

தமிழ் ஓவியா said...


இடையில் மூன்றே நாட்கள்!
எழுத்துரு அளவு Larger Font

கழகத் தோழர்களே, தோழியர்களே!

டிசம்பர் 2 - இடையில் மூன்றே நாள்கள்!

தந்தை பெரியார் பிறந்த நாள்,

தமிழர் தலைவர் பிறந்த நாள்,

பெரியார் பேருருவச் சிலை - பெரியார் உலகம் உருவாக்கத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி வழங்கும் விழா -

தோழர்களே, உங்கள் மாவட்டத்திற்கான இலக்கினை முடித்து விட்டீர்களா?

நிலுவையிருந்தால், இந்த மூன்று நாள்களிலும் முடுக்கோடு முனைப்பாகச் செயல்படுவீர்!

செயல்படுவீர்!!

டிசம்பர் 2 - தஞ்சை கண்கொள்ளாக் காட்சி - களேபரமான ஏற்பாடுகள் - கழகத் தோழர்களின் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பெரியார் பேருருவச் சிலை இப்பொழுதே அங்கு நிற்பது போன்ற உணர்ச்சி அலைகள்!

வாழ்விலோர் திருநாள்!

வாருங்கள் தோழர்களே,

குடும்பம், குடும்பமாய்!

மறக்கவேண்டாம் - உங்கள் மாவட்ட இலக்கினை நிறைவு செய்த நிறைவோடு வாருங்கள் - கூடுதல் மகிழ்ச்சி உங்களுக்கும், தமிழர் தலைவருக்கும்!

என்ன சரிதானே!

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏற்காடு இடைத்தேர்தல் அத்துமீறல்: கலைஞர் பேட்டி


சென்னை, நவ.28- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
செய்தியாளர் :- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விதி முறை மீறல்களையெல்லாம் உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?

கலைஞர் :- தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக் கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்தியாளர் :- எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?

கலைஞர் :- விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன். செய்தியாளர் :- உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டு மென்று நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர் :- வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.
செய்தியாளர்:- புதுச்சேரி நீதிமன்றம் சங்கரராமன் கொலைவழக்கு குறித்து அளித்துள்ள தீர்ப்பு பற்றி.

கலைஞர்:- நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.

செய்தியாளர் :- உங்களுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்

கிறார்களே? கலைஞர் :- கண்ணகி சிலை யையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும் பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக் கட்டும். செய்தியாளர் :- தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற் பட்டுள்ள திடீர் பழுது கள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருக் கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதம அமைச்சருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!


எண்பத்தியொன்னில்
எடுத்தடி வைக்கும் எங்கள்
தொன்மைத் தமிழ்க்குடியின்
உண்மையான காவலனே!

அண்ணாவே வந்தழைத்தும்
அசைந்திடாத மன உறுதி!
அய்யாவின் கணக்கில் நீ;
ஆயுட்கால வைப்பு நிதி!

வாலிபங்கள் மைனராய்
திரியும் வயதிலேயே
பெரியார் மடியில் வந்து விழுந்த
கோகினூர் வைரம் நீ!

வாலிபமும், வருவாயும்
வருங்கால வசந்தம் காண
ஆசைகாட்டி அழைத்தபோதும்
மோசம் போகாமல்
ஆசையை அறுத்துவிட்டு
அய்யா அழைத்தவுடன்
அனைத்தையும் துறந்து வந்தாய்!

ஈரோட்டுக் கிழவரின்
கரம்பற்றி; கைத்தடியாய்
பகுத்தறிவுப் பாட்டையில்
பத்தியமாய் பயணித்தவன் நீ!

மேடையில் உன் பேச்சோ
போர் முழக்கம்!
ஆதாரங்கள் அதில் வந்து
அணிவகுக்கும்!
எதிரிகளுக்கு எடுக்கும்
குலை நடுக்கம்!
எங்கள் செவிகளிலோ
தேன் இனிக்கும்!

மக்கள் கூடும்
மாலை நேர வகுப்புகளில்
பெரியாரியலைப் போதிக்கும்
பேராசிரியனும் நீதான்!
பெரியாரை இன்னமும்
பயிலும் மாணவனும் நீதான்!

பெரியாரும், அண்ணாவும்
பச்சைத் தமிழர் காமராஜரும், கலைஞரும்
பேணிவளர்த்த சமூக நீதிக்கு
பார்ப்பனப் பெரும்புள்ளிகளை வைத்தே
பாதுகாப்பு வேலி போட்ட
அசகாய சூரன் நீ!
அசுரகுலத் தலைவன் நீ!
நீதி மன்றங்களுக்கும்
நீதி சொல்லிக் கொடுக்கும் பாடசாலை நீ!

அண்ணா அழைத்தபோதே சென்றிருந்தால்
அரசியலின் அதிசயமாய் ஆகியிருப்பாய்!
அய்யாவிடமே நின்றுவிட்டதால்
அரசியலே அதிசயக்கும்
அதிசயமாய் ஆகிவிட்டாய்!

சேர, சோழ, பாண்டியரும்
சரிநிகர் உனக்கில்லை!
அவர்களெல்லாம் வெறும்
அந்தப்புரத்துப் பொலிகாளைகள்!
சோற்றுத் துருத்திகள்;
சோம்பேறிகள்!

பார்ப்பனப் பாதந்தாங்கிகள்;
பெண் பித்தர்கள்!
மன்னர் மரபில் மட்டும்
நீ பிறந்திருந்தால்...
புத்தருக்கு ஒரு அசோகன்போல்
பெரியாருக்கு நீயும் ஆகியிருப்பாய்!

சாமானியனாய்
நீ பிறந்திட்டாலும்....
பெரியாரியலை உலகமயமாக்கும்
பெரும் பணியைத் தலைமேற்கொண்டு
சக்கரம் கட்டி உலகைச் சுற்றி
சரித்திரம் படைக்கின்றாய்!

புவியின் சுழற்சி
நிற்கும் மட்டும்; நின் புகழும்
மங்காது; மறையாது!
மாறாது நிலைத்திருக்கும்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட, தமிழகம் முதல் டெல்லி வரை 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்பதும், அதன் விளைவாக மண்டல் சூறாவளி வடபுலத்தில் வீசி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து, மண்டல் அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பட்டு வருகிறார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஒப்பிட முடியாத வாழ்க்கை


எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர்.

குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை.

அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் பள்ளிகள், தங்கள் விடுதிகளில் (Hostel அமல்படுத்தின. ஒரு மாணவனை முழு மனிதனாக ஆக்கும்பொருட்டு, பெற்றோர்கள் அங்கு வளர்த்தெடுக்க விரும்பினார்கள். எனினும் அவைகூட, கால ஓட்டத்தில் கரைந்து போயின. இப்படியான பொதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, சுயக்கட்டுப்பாடுகளுடன், பெரியார் கொள்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வளர்ந்து, மிளிர்ந்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதருக்கான சராசரி இன்பங்களைக் கூட அனுபவிக்காமல் வளர்ந்தவர். இன்றைக்கு உலகளவில் அவர் புகழ்பெற்று, இயக்கத்தையும் அப்படியே வளர்த்து, உச்ச நிலையில் இருக்கிறார் என்றால், அதற்காக அவர் வழங்கியது தம் வாழ்வு முழுவதையும்! இப்படியான ஒரு உழைப்பை, ஒரு தொழில் அல்லது அரசியல் கட்சியில் வழங்கியிருந்தால், அதன் பலனே வேறு. பத்து வயதுச் சிறுவன் வீரமணிக்கும், இன்றைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குமான இடைப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்த்தாலே நம் நெஞ்சம் சிலிர்க்கிறது. காரணம், அப்படியான ஒரு வாழ்வை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது; வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது. திராவிடர் கழக வரலாறு என்பது நெடிய பாதை மட்டுமல்ல; அது ஓர் கொடிய பாதை! விஷத்தை விடவும் கொடிய பார்ப்பனியத்தோடு மோதுகிற பாதை. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பாதை. எனினும், இன்றைய சூழலில் நிறைய மாறியிருக்கலாம். கொடிய பாதைகள், பெரியார் பாதைகளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், அன்றைய சூழலில் அதனோடு வாழ்ந்து, உழன்று, போராடியவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை மறந்துவிடக் கூடாது. பொதுவாக இந்த உலகம், முதலீட்டு உலகமாகவே இருந்து வந்திருக்கிறது. எதில் முதலீடு செய்தால் இன்பம் காணலாம் என்பதாகவே மனிதனின் கணக்கு இருக்கிறது. ஒரு அய்ந்து ஆண்டு உழைப்பை முதலீடாகக் கொடுத்தால், அரசியல் அள்ளித் தரும் என்பது ஒரு கணக்கு. இது உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல்வரை நீள்கிறது. இதுதவிர, உண்மையான சமூகச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது செயல்படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் எழுதுவதும், பேசுவதுமாக அவர்களின் சமூகப் பணி இருந்து வந்திருக்கிறது. உறவின் வெறுப்பு, சமூக எதிர்ப்பு, வாழ்வின் வெறுமை, உயிருக்கு மிரட்டல், மன உளைச்சல், உடல் சோர்வு என்பதெல்லாம் அவர்களுக்கு மிக மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை. இதை நாம் குறையாகப் பதிவு செய்யவில்லை. மாறாக, அவர்களின் சமூகச் சூழல் அப்படி. ஆனால், நம் சூழலோ வேறு. உலகில் எங்குமே ஏற்பட்டுவிடக் கூடாத, பார்ப்பனக் கருத்துகள் நிறைந்த நாடு நம் நாடு.

உலகில் நிறைய விசயங்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்கிறார்கள். அதைப் போல உலகின் கொடுமைகள் என வரிசைப்படுத்தினால் அதில் பார்ப்பனக் கொடுமைகள்தான் முதலிடம் பிடிக்கும். மற்றக் கொடுமைகளுக்கு அடுத்தடுத்த இடமே கிடைக்கும். காரணம், எல்லாக் கொடுமைகளும் ஒரு சேரப் பெற்றதுதான் பார்ப்பனியக் கொடுமை. கொடுமைகளின் பிறப்பிடம் பார்ப்பனியம், கொடுமைகளின் தாய் வீடு பார்ப்பனியம் என்றெல்லாம் நாம் வர்ணித்தால் அதில் கடுகளவும் பொய் இருக்க முடியாது; மிகை இருக்க முடியாது. இதை வெறும் எழுத்து வடிவிலோ, உணர்ச்சி விளிம்பிலோ நின்று எழுதவில்லை. மாறாக, அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக இவற்றை நாம் உறுதி செய்ய முடியும்.

அப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த, வலிமை பொருந்திய ஒரு கூட்டத்தை நேரெதிர் நின்று களம் கண்ட இயக்கம் திராவிடர் கழகம். அந்தக் கழகத்தில் தம் வாழ்வையே அவர் அர்ப்பணித்திருக்கிறார். இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையில் அல்லது பொதுவான சில கருத்துகளில் மாறுபட்டவர்கள் இருக்கலாம். எனினும், ஆசிரியர் கி.வீரமணி என்கிற மனிதரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தமிழ்நாட்டின் அத்தனை பூமித் தடத்திலும் நிரவிக் கிடக்கிறது என்பதை எந்த நியாயாவாதியும் மறுக்கமாட்டார். தனக்கான சௌகரியத்தை மனிதன் தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பதும், தனக்காக மற்றும் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் மனிதர்களையும் மனதில் வைத்துச் சேர்த்து யோசித்தால், மேலே கூறியவை அனைத்தும் ஒப்பிட முடியாத சாதனைகள் என்பதை எளிதில் அறிய முடியும். அச்சாதனைகளை அவர் தொடர்ந்து செய்வார். அதனால்தான் கி.வீரமணியாய் இருந்தவர் தமிழர் தலைவரானார்!

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் அய்.நா.மனித உரிமை ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

- டேவிட் கேமரூன்,
பிரிட்டிஷ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டுள்ளதே காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரிஷியஸ், காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையில், காமன்வெல்த் விவகாரத்தில் எங்கள் அரசு தற்போது எந்த முடிவைக் கொண்டுள்ளதோ அதே நிலைதான் நீடிக்கும்.

- நவீன் சந்திரராம் கூலம்,
மொரிஷியஸ் பிரதமர்

தமிழ் ஓவியா said...

நீ சொல்லு - நான் சொல்றேன்

(இன்றைய காலத்தில் கழிப்பறைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுப்புக் கழிப்பறைகள்தான் இருந்தன. நகரங்களில் சிலர் தெரு ஓரங்களையே கழிப்பிடமாக ஆக்கிவிடுவார்கள். அந்த மலத்தை அள்ளும் தொழிலாளர்கள் அதன் மீது முதலில் சாம்பலைப் போடுவார்கள்; பின்பு அள்ளிச் செல்வார்கள். இந்த நடைமுறை இருந்த காலத்தில் பின்வரும் நகைச்சுவை உரையாடலைப் பெரியார் எழுதியுள்ளார்.)

வைணவ தாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படிச் சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்குச் சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மைக் கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

(9.11.1930 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது.)

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்


இந்து மதம் ஒழிவதே நல்லது!

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து...)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்

(1929 இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்...)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில், இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

நேர்மை + நாணயம் = ஆசிரியர்


ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.

ஆசிரியர் சென்னைக்கு - அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.

கல்லக்குறிச்சியில் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அதாவது, பங்காளிகள் இருவருக்குள் கொடுக்கல், -வாங்கலில் தகராறு. அதனால் எனது கட்சிக்காரர் மற்றவரின் எருது மாடுகளை அவரது பட்டியில் இருந்து ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அதனால் காவல்துறையில் மாடுகள் திருடியதாக வழக்குத் தொடுத்து, அது விசாரணைக்குப் பின் எனது கட்சிக்காரர் மீது 379 இ.பி.கோ.படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் எனது கட்சிக்காரருக்கு நான் வழக்காடினேன். கடைசியில் எனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டு மாடுகளும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவாகி, காவல்துறையும் மாடுகளை எனது கட்சிக்காரரிடம் கொடுத்துவிட்டது.

மாடுகளுக்குச் சொந்தக்காரர், கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு மறுபரிசீலனைக்கு (Revision) மனுபோட்டார். கடலூரில் இருந்து அந்த அழைப்பாணை (Summons) யை எனது கட்சிக்காரர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் நம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் கொடுத்து, இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படிச் சொன்னேன்.

அவரும் ஒப்புக்கொண்டு வழக்கு நகல்களைப் பெற்றுக்கொண்டு, வழக்கைப் பற்றி என் கட்சிக்காரரிடம் கேட்டிருக்கிறார். அவர் மாடுகள் தனக்குச் சொந்தமல்லவென்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, ஆசிரியர் வழக்கு நகல்களைத் திருப்பிக் கொடுத்து அவரையே (என்னையே) வந்து வாதாடச் சொல். நான் பொய் சொல்லி வழக்கை நடத்த மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

எனது கட்சிக்காரர் என்னிடம் வந்து நடந்ததைச் சொன்னார். வழக்குத் தேதிக்கு வரும்படி அவரை அனுப்பிவிட்டு நான் கடலூர் போய் ஆசிரியரிடம் ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்றேன். மாடுகள் தனக்குச் சொந்தமில்லை என்று சொல்கிறார். நான் எப்படிப் பொய் சொல்வது? என்றார்.

எனக்கு வியப்பாகப் போய்விட்டது. அவன் விடுதலையாக வேறு வழியில்லை. நீங்கள் வழக்கு நகலில் உள்ளபடி வாதாடுங்கள். அவன் சொன்னதை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்றேன். அதெப்படி முடியும். மன்னிக்கவும், நான் வழக்காட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் வழக்கு நடத்த உள்ள தொகையை நான் பெற்றுக்கொண்டு நான் வாதாடினேன். அவரும், என்னருகில் நீதிமன்றத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அந்த வழக்கு என் கட்சிக்காரருக்குச் சாதகமாக முடிந்தது. இதைப் போல ஏராளம் சொல்லலாம் என்றாலும், இதை நான் எடுத்துக்காட்டாகத் தான் சொல்கிறேன்.

அடுத்து, அவருடைய நாணயத்தைச் சொல்ல இது ஒரு சம்பவம். ஒருமுறை அவருக்குப் பணமுடை வந்தது. ஆசிரியர், சென்னையில் ஊதியம் வாங்காமல் விடுதலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அய்யாவுக்குச் செய்தி தெரிந்து ஆசிரியரைக் கூப்பிட்டு ரூ.10,000/- (பத்தாயிரம்) கையில் கொடுத்தார். மிகவும் நன்றி சொல்லிவிட்டு அந்தத் தொகைக்கு, ஒரு கடன் உறுதிச்சீட்டு (Promissory Note) எழுதிக் கொடுத்தார்.

அய்யா, இதென்ன நான் கேட்கவில்லையே என்று சொல்லி திருப்பிக் கொடுத்ததை ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார். அது அய்யாவிடமே இருந்தது. சில நாட்கள் கழித்து தொகையை அய்யாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். கடன் உறுதிச் சீட்டை இவர் கேட்கவில்லை. அய்யாவிடமே இருந்ததா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் அப்போது சென்னையில் இல்லை.

அய்யாவிடம் எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

(தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007-இல் ஆசிரியருடன் சட்டக் கல்லூரியில் படித்து திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து அண்மையில் மறைந்த திரு. கோ.சாமிதுரை எழுதியது.)

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும், அவரது பெற்றோர் செய்த வேலையையே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

பிறவியிலேயே உருவாகும் ஹிர்ஸ்பரங்க் என்னும் குடல் நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முறையினை சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கையினால் தொடாமலேயே மின் சாதனங்களை இயங்கச் செய்யும் அகச் சிவப்புக் கதிர் (இன்பிராரெட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்விட்சினை பொறியாளர் ஹரிராம் சந்தர் கண்டுபிடித்துள்ளார்.

செல்பேசி மூலமாக பயனாளிகள் மணியார்டர் தொகையினைப் பெறும் வசதி நவம்பர் 16 முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறைச்சாலை மற்றும் காவல்துறையின் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 19 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் அனைத்து மகளிர் வங்கி (பாரதிய பெண்கள் வங்கி) நவம்பர் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பண்பாளர் - பேரா.நம்.சீனிவாசன்

கி.வீரமணி பழகுவதற்கு இனிமையானவர்; எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அவரது பண்பாகும். வணக்கம் செய்வோருக்குத் தலையாட்டும் கர்வம் இல்லை; முகம் மலர்ந்து இரு கரம் கூப்பிப் புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்றார். தம்மிடம் வருபவர்களை அமரச் சொல்கின்றார்; யாரையும் நிற்க வைத்துப் பேசும் பழக்கம் அவரிடம் இல்லை. வாகனத்தில் பயணம் செய்கின்றபோது தனித்துப் பயணிப்பது இல்லை; தோழர்களை ஏற்றிக் கொண்டு உரையாடியவாறே செல்கின்றார்.

ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பண்பினை கி.வீரமணியிடத்தில் காணமுடிவதில்லை. கூட்டத்திற்குக் கால தாமதமாக வரும் பழக்கமும் அவரிடம் இல்லை. முன்கூட்டியே வந்திருந்து காத்திருக்கின்றார். கழகத் தோழர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கின்றார். குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிகின்றார்.

மணவிழா அழைப்பிதழ் தருவோரிடம் திருமணத்தைச் சிக்கனமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றார். சுவரொட்டி விளம்பரங்கள், அழைப்பிதழ்களில் தன் பெயர் சிறிய எழுத்தில் இருக்கிறதா -_ பெரிய எழுத்தில் இருக்கிறதா? என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் நட்புறவாகப் பழகுகின்றார். ஒருமுறை சந்தித்து உரையாடினாலே ஈர்த்து விடுகின்றார். வயது முதிர்ந்த பெரியார் தொண்டர்களை மேடையில் ஏற்றிக் கௌரவிக்கின்றார். உடல் நலம் குன்றிய தோழர்களை மருத்துவமனையிலும் அவர்களது இல்லத்திலும் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை ஊட்டுகின்றார்.

இயக்கத் தோழர்கள் அன்பின் மிகுதியால் உணவை அதிகமாகப் பரிமாறிவிடுகின்றபோது அருகில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, உணவை விரயமாக்காமல் உண்கின்றார். கட்சித் தோழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்கின்றார்; செய்த உதவிகளை யாரிடமும் சொல்லாமல் மௌனம் காக்கின்றார்.

தமக்கு வருகின்ற அன்பளிப்புப் பொருட்களை இயக்கத்திற்குக் கொடுத்து விடுகின்றார். கி.வீரமணியைச் சந்தித்துப் பேசுவதற்கு எவ்விதத் தடையும் யாருக்கும் கிடையாது. யாரையும் காக்க வைக்காமல் உடனே சந்தித்து அனுப்பி வைக்கின்றார். சுற்றுப் பயணத்தின்போது கி.வீரமணி ஆடம்பர விடுதிகளில் தங்குவதில்லை. கட்சித் தோழர்கள் கூட்டம் கூட்டமாக அறைகளில் வந்து சந்திப்பதைத் தடுப்பதில்லை.

கி.வீரமணி தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லும்போது உடனே பணத்தைக் கொடுத்து விடுகின்றார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதிலும் தீவிர சுற்றுப் பயணம் செய்து சுறுசுறுப்புடன் இயங்குகின்றார். உடல் நலமில்லை; சோர்வாக இருக்கின்றேன் என்றெல்லாம் கி.வீரமணி கூறுவதே இல்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், நீதிபதி, உயர் அதிகாரி, கல்வியாளர் என்று பலரிடமும் செல்வாக்குடன் திகழும் கி.வீரமணி அதனைப் பற்றி எவரிடமும் பெருமையாகக் கூறுவது இல்லை. திராவிடர் கழகத்தின் செல்வாக்குக்கும், பல அரிய சாதனைகளை நிகழ்த்தியதற்கும் கி.வீரமணியே காரணமாக இருக்கின்றார் என்றாலும், நான் என்று சொல்லாமல் நாம் என்றே கூறுகின்றார்.

கி.வீரமணி பாராட்டப்பட வேண்டியவர்களை மனம் திறந்து பாராட்டுகின்றார். ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை கூறுவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதை வீரமணியிடத்தில் காண முடிவதில்லை. எப்போதும் கொள்கையாளராகவே இருக்கின்றார்.

பொய் சொல்லுவதில்லை; மது அருந்துவதில்லை; மறைமுகமாகக் காரியம் ஆற்றுவதில்லை; வாக்கு மாறிப் பேசுவதில்லை; பிழைகளைப் பொறுத்துக் கொள்கின்றார். நெருக்கமானவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துகின்றார். நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர்; கலகலப்பானவர்; ஒளிவு மறைவு இல்லாதவர்; காலந்தவறாதவர்; எளிய உணவை மேற்கொள்பவர்; சேர்ந்து உண்பதை விரும்பக் கூடியவர்.

தமிழ் ஓவியா said...

பாராட்டி வரவேற்கிறேன்


வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

- பெரியார் ஈ.வெ.ரா.
விடுதலை, 10.8.1962

தமிழ் ஓவியா said...

பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன? கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளிவரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்தக் கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சுப் போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்குச் சாதகமாக அமையும் வகையில், இந்தக் காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை _ பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் -_ அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர், நான்தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் -_ -மனசாட்சி உறுத்தியதால்!

குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம் அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமைப் பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை - -_ பொறுப்பு, என்பதைத் தலைகீழாக மாற்றி - -_ குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது -_ -குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்தத் தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் -_ நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான் அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்தக் குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கியங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்).

எனவே இந்தத் தகவல் -_ அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை ((Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக்கோணலாகிப் போன நீதியைச் சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும். 2. மேலும் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகியவற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப்படவே முடியாது --_ இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது. எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு - நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும்கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

- கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பொன்மொழி


நாம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, பிறர் பேசுவதை அதிகம் கேட்க வேண்டும். அதன் பொருட்டே குறைவாகப் பேசுவதற்கு ஒரு வாயும் அதிகம் கேட்பதற்கு இரு காதும் இயற்கை வழங்கி இருக்கிறது.

- இந்தியா

தமிழ் ஓவியா said...


சங்கரமடம்


காஞ்சிபுரம் ஏனத்தூரில் உள்ள சங்கர மடத்தின் நிர்வா கத்தில் நடைபெறும் சங்கரா ஆர்ட்ஸ் சயின்ஸ் கல்லூரி நிர்வாகமே! உங்களுக்கு ஓர் கேள்வி!

பெரியார் அறக்கட்டளை சார்பில் தஞ்சை வல்லத்தில் இயங்கும் பெரியார் மணியம் மைப் பல்கலைக் கழகம் தஞ்சை யிலுள்ள நகரப் பேருந்து நிலை யத்திலுள்ள பொது சுகாதார கழிப்பறையை சுத்தம் செய்து, தனது செலவில் இன்று வரை பராமரித்து வருகின்றது.

காஞ்சிபுரம் சங்கரமடம் நிர்வாகம், இம்மாதிரி காஞ்சியில் ஏதாவது ஒரு சமுதாயப் பொது நலன் கருதி செய்வது இல் லையே! ஏன் என்றால் சூத்திர னும், பஞ்சமர்களும் அதை பயன்படுத்துவர்கள் அல்லவா? என்று தஞ்சைக்குச் சென்று வந்த - காஞ்சிபுரத்தைப் பூர்வீக மாகக் கொண்ட - இப்பொழுது சென்னையில் வசித்துவரும் தோழர் அ.நா. பாலகிருஷ்ணன்; அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள் ளார்.

சங்கரமடமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் கர்மா தத்துவத் திலே முழு அளவு நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்.

தொழில் பாகுபாடும்; ஆசாரங்களை சாஸ்திரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்பொழுதுள்ள நிலைமை ஏற்பட்டு விட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்து கொள்ள வேண்டும் - என் கிறார் மறைந்த காஞ்சீபுரம் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல்).

இந்த நிலையில் உள்ளவர் கள் சமதர்ம சமத்துவச் சிந்த னையோடு செயல்பட முன்வரு வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஓர் அதிர்ச்சியான தகவல் - இப்பொழுது சொன்னால் எவரும் எளிதாக நம்பக் கூட மாட்டார்கள்.

1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதிலேகூட தீண்டத்தகாத வர்கள் அக்ரகாரத்துக்குள் நுழையக் கூடாது என்ற பாகுபாடு இருந்தது என்றால்; சங்கர மடம் நண்பர் பால கிருஷ்ணன் அவர்கள் எதிர் பார்ப்பதுபோல முதலில் சிந்திக் குமா? சிந்தித்தால் அல்லவா செயல் என்பது அடுத்த கட்டம்.

சிறைக்குச் சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மல ஜலம் கழிக்க வாழை இலை கேட்கிறார் - அவர்களுடைய புத்தி எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளம்.

இந்து மதத்தைச் சேர்ந்தவர் களுக்குக்கூட ஒரே சுடுகாடு கூடாது என்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். கேட்டால் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு சம்பிரதாயம் இருக்கிறதே என்கிறார். சமபந்தி போஜனம் என்பதைக்கூட சங்கரமடம் ஏற்றுக் கொள்வதில்லை.

போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களின் குணதோஷங்களில் பரமாணுக் களும் நாம் சாப்பிடும் அன்னத் தில் ஓரளவு சேருகிறது.

பரிசுத்தமாக இருக்கப்பட்ட வர்களைப் பங்கத்தி பாவனர் கள் என்று சொல்லியிருக் கிறது. அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தியைச் சுத்தப்படுத்தி விடுவார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆகாரம் உள்ளே போய் நம் மனத்தைத் தூய்மையதாக் கும்.

அதே மாதிரி பங்க்த்தி தூஷகர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ளவர்கள் - இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அவர்களுக்குப் பந்தி முழுவதும் அசுத்தமாகி விடுகிறது என் கிறார் சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சரஸ்வதி - இப்படி சொல்லுவது சாதா ரணக் குரல் அல்ல - தெய்வத் தின் குரலாம்.

நண்பர் பாலகிருஷ்ணன் போன்று நல்ல மனம் கொண்ட வர்கள் இத்தகு மனப்பான்மை கொண்டவர்களிடம் தாராள எண்ணத்தையும் மனிதநேயத் தையும், பண்பையும் எதிர்பார்க் கலாமா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு : சட்டம் கொண்டுவர உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, நவ.29-திருமணம் செய்து கொள் ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண் களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண் ணும் இணையர் களாக சேர்ந்து வாழும் நடைமுறை நாட்டில் இப் போது அதிகமாகி உள் ளது. சில ஆண்டுகளில் இவர்களில் பெரும்பா லோர் பிரிந்து விடுகின் றனர் அல்லது இறுதி வரை சேர்ந்து வாழ் கின்றனர். இதுபோன்ற பெண்களுக்கும், அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் சட்ட பாது காப்பு இல்லாமல் இருக் கிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ராதா கிருஷ்ணன் தலைமை யிலான அமர்வு விசாரித்து நேற்று வர லாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ கிடையாது. இதுபோன்ற உறவு முறை சட்டத்தால் அங்கீகரிக் கப்படாமல் இருப்பதா லும், இயற்கை திருமணத் துக்கு முரணாக இருப்ப தாலும், இந்த உறவுமுறை பிரிவுக்குப் பிறகு பெண் களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.

எனவே, இதுபோன்ற பெண்களுக்கும், இந்த உறவின் மூலம் அவர் களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் எதிர்காலத்தில் சட்டப் பாதுகாப்பு அளிக் கும் வகையில், நாடாளு மன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், இந்த உறவுமுறையையும் இயற்கை திருமண உறவு முறைக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நீதி பதிகள் தீர்ப்பு அளித்தனர்.

தமிழ் ஓவியா said...


மோடியின் மறுபக்கம்


மோடியைப் பற்றி இந்திரன் சந்திரன் என்று ஒரு பக்கம் திட்டமிட்ட வகையில் புகழ் புராணப் பட்டம் பறக்க விடப்பட்டாலும், அவரைப்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் மூலம் அவரது அந்தரங்கம் அசிங்கமானது என்பது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக பிரதீப் சர்மா என்னும் அய்.ஏ.எஸ். அதிகாரி சி.எஸ்.என். அய்.பி.என். ஆங்கில அலை வரிசையில் அளித்த பேட்டி ஒன்று போதும் - மோடி என்னும் விகார மனிதனின் முழு வடிவத்தைத் தெரிந்து கொள்வதற்கு.

இதில் ஒரு பெரிய வெட்கக்கேடு என்ன வென்றால், மோடியைப்பற்றி வெளிவரும் அசிங்கமான தகவல்களை இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், முதலாளித்துவ சக்திகளின் கைகளில் பதுங்கியுள்ள ஏடுகளும், இதழ்களும் அப்படியே மூடி போட்டு மறைக் கின்றன.

தெகல்கா ஆசிரியர் தேஜ்வால் பற்றிய தகவல்களைப் பெரிதாக்கி, மோடியின் பெண் தொடர்பான சங்கதிகளைக் கழுத்தைத் திருகிப் புதைத்து விட்டனர்.

மான்சி என்னும் கட்டடக் கலை பொறியாள ரான பெண்ணுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து சி.பி.அய். வசம் விசார ணையை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மான்சி என்ற அந்தப் பெண்ணுக்கும் மோடிக்கும் இடையில் நடைபெற்ற தொலைப் பேசி உரையாடல்களையும் பிரதீப் சர்மா அந்தப் பேட்டியில் கூறினார். ஒரு பெண்ணிடம் பேசத் தகாத இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களை உதிர்த்திருக்கிறார்.
நள்ளிரவில்கூட மோடியை, அந்தப் பெண் சந்தித்திருக்கிறார் என்கிற தகவல்கள் எல்லாம் வெளி வந்துள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி, விதிமுறை களை எல்லாம் தாண்டி, கட்டடக் கலை தொடர்பாக பெரிய பெரிய ஒப்பந்தங்கள் மோடி அரசால் அந்தப் பெண்ணுக்கு, அளிக்கப் பெற்று கோடிகளை வருவாயாகப் பெற்றிருக்கிறார்.

விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் அந்தப் பெண் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அந்தக் காரை பழைய விலைக்கு விற்றால்கூட அதை வாங்கும் தகுதி பலருக்கு இல்லை; காரணம் பழைய விலைகூட கோடிகளைத் தொடும் என்று அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பேட்டியில் போட்டு உடைத்து விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு வரிகூட இதனை மோடியால் மறுக்க முடியவில்லை என்பதுதான். பதில் சொல்ல ஆரம்பித்தால் வசமாகச் சிக்கிக் கொண்டு விடுவோம் என்ற அச்சம்தான்.

பிரதீப் சர்மாவை அந்தப் பெண் சந்தித்து வந்ததால், அந்தப் பெண்ணை உளவு பார்க்க ஏற்பாடு செய்துள்ளார், முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அந்த அளவுக்கு அந்தப் பெண் ணின்மீது உரிமை கொண்டாடியிருக்கிறார் உள்ளத்தில் என்பதுதான், இதற்குள் குடி கொண்டிருக்கும் உண்மையாகும்.

ஒரு கட்டத்தில் பிரதீப் சர்மா அய்.ஏ.எஸ். கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளும் தள்ளப்பட் டுள்ளார். 27 ஆண்டு காலம் சிறந்த அய்.ஏ.எஸ். அதிகாரியாக பெயர் பெற்றவர்; இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் மோடியாலும் புகழப்பட்டவர்கூட!

அந்தப் பெண் விஷயத்தில் இவர் போட்டிக்கு வந்து விடுவார் என்ற நினைப்பில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர் இந்தமோடி; அவர் பேச்சை நம்பி அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் யெல்லாம் நட்டாற்றில் விடப்படவில்லையா?

இத்தகு குணாளர் தான் பாரதப் புண்ணிய பூமியின் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க ஆசைப்படுகிறார்.

நாட்டு மக்கள் அசிங்கப்படப் போகிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப் பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகத்திற்கு பெரியார் பெருந்தொண்டரின் நன்கொடை


தமிழர் தலைவர் மானமிகு முனைவர் கி.வீரமணி அவர்கள் 7.11.2013 விடுதலை இதழில் செல்வத்திற்கு நோய் வரும் - எச்சரிக்கை என்ற தலைப்பில் அருமை யான வாழ்வியல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரையில் எங்கள் செய்யாறு நகரைச்சேர்ந்த முதுபெரும் பெரியார் தொண்டர் 88-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் பா.அருணாசலம், பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ள நன் கொடையைப் பற்றி புகழ்ந்துள்ளார்.

பா.அருணாசலம் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள உத்தமர். முயற்சி திருவினை ஆக்கும் என்ற குறள் நெறிக்கு எடுத்துக் காட்டு அவர்.

தமிழர் தலைவர் திருக்குறளில் நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலாதான் (குறள் 1006)

என்ற குறளுக்கு அருமையான பொருளைக்கூறி இருக்கிறார். பெருஞ்செல்வம் படைத்த ஒருவன் தானும் நுகர மாட்டாதவனாய் தகுதி படைத்தவர்களுக்குக் கொடுத்து உதவும் பண்பும் இல்லாதவனாய் இருப்பானேயானால், அவன் தன் பெருஞ்செல்வத்திற்கே கேடு பயக்கும் ஒரு நோயாகக் கருதப்படுவான்.

தான் உழைப்பால் ஈட்டிய செல்வத்தை ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவரிடம் கழக வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கி வருபவர் அண்ணன் அருணாசலம் தக்கார்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப்பொருள் உண்டானாலும் அதனால் பயன் இல்லை என்பது வள்ளுவர் பொன்மொழி ... (குறள் 1005)

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களால் நிறுவப்பட்டு அவர்களை வேந்தராகக் கொண்டு தஞ்சை - வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பல்லாயிரம் மாணவர்கள் நாட்டிற்குப் பல்வேறு துறைகளில் சேவை புரிந்து வருகின்றனர்.

இரு மாதங்களுக்கு முன்னால் தமிழர் தலைவர் விடுதலையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். பெரியாரின் பரிந்துரையால் நன்மை அடைந்தவர்கள் தங்கள் நன்றிக்கடனாக விடுதலைக்கு சந்தா செலுத்தி இருப்பார்களானால் இன்று விடுதலை இதழ் 2 இலட்சத்திற்கு மேல் வாசகர்களைக் கொண்டு சிறப்புடன் விளங்கும் என்பதே அந்த செய்தி.

தந்தை பெரியார் ஒரு பொன்மொழியைக் கூறுகிறார். நாம் தண்ணீர்ப் பந்தல் வைத்துள்ளோம். தண்ணீர் குடித்து, தாகத்தை தீர்த்துக் கொண்டவர் களில் எத்தனை பேர் தண்ணீர்ப் பந்தல் வைத்தவர் களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணு கிறார்கள்? ஆயிரத்தில் ஒருவர் கூடக்கிடையாதே.

திருவள்ளுவர் இரு வகை மனிதர்களை இரு வேறு மரங்களுக்கு ஒப்பிடு கிறார். ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின் - (குறள் 216)

தக்கார்க்கு உதவாத காரணத்தில் ஒருவராலும் விரும்பப்படாதவ னுடைய செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது (குறள் 1008) பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம் போன்றோர் ஊரின் நடுவே உள்ள பயன் மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

தமிழர் தலைவர் தொடங்கியுள்ள பெரியார் உலகம் என்ற அரிய திட்டத்திற்கு அண்ணன் அருணாசலம் தன் குடும்பம் சார்பில் 10 பவுன் (இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார். நண்பர்களிடம் பெரியார் உலகம் நன்கொடை பெற்று பதினாறரை பவுன் வழங்கியுள்ளார்.

வாழ்க பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம்!
வளர்க அவர்தம் தொண்டு!

வாழ்க தமிழர் தலைவர் மானமிகு முனைவர் வீரமணியார்!
வெல்க அவர்தம் பகுத்தறிவுத் தொண்டு!

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


போலிக் கடவுள்கள்


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில்களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!

விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை. விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.

சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது. அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது.

சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின்டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.

(ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி



ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர் வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேதவாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்



மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம்பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங்கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப் பாரு!

-கி.கி.ஜின்னா

தமிழ் ஓவியா said...


உலகப் பகுத்தறிவாளர்கள்

பேரறிஞர் அண்ணா அவர் கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சியையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத் தைத் தட்டி எழுப்பினார்.

அறிஞர் அண்ணா கூறு கிறார்;

கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!

உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்

அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

முதலாளிகளின் கொடுமைகளை எடுத் துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்

துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்

மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்

சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா

உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண்டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்? (நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)

தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

அறிவியல் வளர்ச்சி



நீங்களெல்லாம் நன்றாக உணர்ந்துள்ள உண்மைதான் அறிவியல் வளர்ச்சி.

பொறியியல் துணைக் கொண்டு எத்தனை படிக்கட்டுகளைத் தாண்டி அந்த வளர்ச்சி வந்திருக்கின்றது என்பது முதன் முதல் சக்கரம் - உருளையைக் கண்டுபிடித்தானே, அது அறிவியலில் தொடக்கக் கால வளர்ச்சி. சக்கரம் கண்டுபிடிக்காமலிருந்திருப்பின் மகா விஷ்ணுவே கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார். திருமாலுக்குக் கூடச் சக்கரம்தான் பெரிய ஆயுதம்.

அசோகர் காலத்தில் அதே சக்கரம் சமாதானத்திற்கு அடையாளம்; போருக்கு ஆயுதமன்று.

நூல்: பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன் -பக்கம் 132

தமிழ் ஓவியா said...


பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுவிக்கப்பட வேண்டும்: கலைஞர் கருத்து


கேள்வி :- பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந் தீர்கள்; அதை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்?

கலைஞர் :- புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.

29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.அய். அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன. அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது கூறும்போது, சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார்.

அதுதான், ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தார். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்தப் பேட்டரி மூலம், இயக்கப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் எனப் பொதுவாக பதிவு செய் திருந்தேன். எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதிவிட்டேன்.

வழக்கு விசாரணையில், இதுபோல் வாக்குமூலம் தரவில்லை என்று பேரறிவாளன் மறுத்தார். குறுக்கு விசாரணையில், தடா நீதி மன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக் கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதி விட்டதாகக் குற்றம் சாட்டினார், அவற்றை நான் மறுத்துவிட்டேன் என்று குறிப் பிட்டுள்ளார். தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்? காவல்துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


டிசம்பர் -2 மறவாதீர்! தஞ்சையைப் பற்றி தந்தை


எங்கும் இயக்கத் தோழர்கள் இருந் தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக் குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல. நான் காங்கிரசில் இருந்த காலத்திலும், தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத் திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள் ளது.

எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ, அதைத் தமிழ்நாடு முழுவதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும்

தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் - தமக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்ட விழாவில் தந்தை பெரியார் சொன்ன வடிகட்டிய சொற்கள்தான் இவை (3.11.1957).

ஆம்! இந்தத் தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கமும் அளிக்கப்பட்டது. (1.2.1998).

ஆம்! இதே தஞ்சையில்தான் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழர் தலைவரிடத்தில் 100 சவரன் தங்கமும் அளிக்கப்பட்டது. (7.10.1979).

ஆம்! இதே தஞ்சையில்தான் வரும் டிசம்பர் 2ஆம் தேதி பெரியார் பேருருவச் சிலைக்காக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதியை அளிக்கப் போகிறார்கள்.

நமது தலைவருக்கு மட்டுமல்ல; இந்த வரலாற்றுப் பொன் மணக்கும் விழாவில் நாமும் பங்கேற்றோம் என்ற பெருமையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுவோம் - வாருங்கள் தோழர்களே வாருங்கள்!

குடும்பம் குடும்பமாக வாருங்கள்!

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சர் ஆ. இராசா பதவி விலக காரணமான உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாலியல் புகாரில் சிக்கினார்!

தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து, உடனே சுப்ரீம்கோர்ட்டுக்கு - சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து உச்சநீதிமன்ற நீதிபதி யானவர் வங்காளப் பார்ப்பனர் கங்குலி.

இந்தப் பெரிய மனிதர் மீதுதான் பெண் வழக்குரைஞர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு; தன்னுடைய உதவியாள ரான பெண் வழக்குரைஞரிடம் (65 வயது உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - அந்தக் கால கட்டத்தில் (62 - 65 வயது) பாலியல் புகார்!

மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எச். டட்டு, ரஞ் சனா தேசாய் ஆகியோர் விசாரணை முடித்து தலைமை நீதிபதியிடம் அறிக் கையை தந்துள்ளனர்!

நீதிபதி கங்குலி கொடுத்த வாக்கு மூலத்தில் உள்ள வாக்கியங்கள். (ஏடுகளில் வந்துள்ளபடி)

நான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் நான் உடல் ரீதியாக அவருக்கு எந்த துன்புறுத் தலையும் செய்யவில்லை. (அப்படியா னால் மன ரீதியாக நடத்தினேன் என்று சொல்லுகிறாரா என்று இதைப் படித்த வாசகர் கேட்கிறார்).
அந்தப் பெண் பயிற்சிக்காக என்னிடம் அதிகார பூர்வமாக ஒதுக்கப் பெறாத நிலையில் பயிற்சி பெற்றார்

கேள்வி: ஓட்டல் அறைக்கு நீங்கள் அழைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டி உள்ளாரே?

கங்குலி: அப்போது நான் பணி நிமித்தமாக டில்லியில் இருந்தேன். அவரும் டில்லியில் இருந்தார். அவர் தான் என்னை நாடி வந்தார்!...

ஒரு பெரு நிலை நீதிபதி (இவருடைய அனுமதியின்றி அவர் எப்படி ஓட்டல் அறையில் சந்திக்க முடியும் என்று கேட்கிறார் மற்றொரு வாசகர்)

இந்த வங்காளப் பார்ப்பன நீதிபதி, ஊழலை, லஞ்சத்தை, ஒழுக்கக் கேட்டை ஒரு போதும் சகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்ஜித்து, மற்றொரு பஞ்சாப் பார்ப்பன நீதிபதி யுடன் இணைந்து 2ஜி வழக்கில் அமைச் சர் ராஜாவை, விசாரணையே துவங் காத நிலையிலேயே பதவிலக வேண்டி கடும் தாக்குதல்களைப் பொழிந்த நீதிமான்! இவர் கதை இப்போது இப்படி!

உலகமே அறிந்து அகல விழி களைத் திறந்து பார்க்கிறது!

பார்ப்பனரல்லாத பஞ்சாப் தலைமை நீதிபதியாக, உயிருக்குத் துணிந்து பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டீஸ் வி. இராமசாமி மீது, ஏதோ கூடுதல் விலை கொடுத்து மேஜை, நாற்காலி வாங்கி யதையும், அனுமதியோடு ஊருக்கு டெலிபோன் எடுத்துச் சென்றதை யெல்லாம் ஊழலோ ஊழல் என்று ஓங்காரக் கூச்சலிட்டவர்கள் கங்குலி புராணம் கண்டு என்ன சொல்லப் போகிறார்கள்?

நடவடிக்கை வருமா? இல்லையேல் மனுதர்ம முறைப்படி நீதி தானா? நாடே கேட்கிறது!

பார்ப்பனர்களின் தகுதி, திறமை, இதோபதேசத்தின் யோக்கியதை இப் போது புரியவில்லையா?

தமிழ் ஓவியா said...


நடராஜன் கோயில்: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!


சிதம்பரம் நடராஜன் கோயிலை மீண்டும் தீட்சதர் பார்ப்பனர்களிடத்தில் ஒப்படைக்கக் கூடாது (அவர்கள் அடித்த கொள்ளைகள் போதும்! போதும்!!) என்பதை வலியுறுத்தி 4.12.2013 புதன் காலை 11 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலையருகில் நகர மக்கள் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார்கள். தோழர்களே திரள்வீர்! திரள்வீர்!!

- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் அருள்மொழி

சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச் சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக பகுதி யில் நாளை (1.12.12003) இரவு 9 மணிக்கு நடைபெறும் விவாதத்தில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி பங்கேற்கிறார்.

தமிழ் ஓவியா said...




மோடியின்பிம்பத்தைப்பெரிதுபடுத்திக்காட்டும் இணையதளமோசடிகள்அம்பலம்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!

புதுடில்லி, நவ.30- தொழில் நுட்பத்தில் நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி இணைய தளங்களில் பொய்யான வற்றையும், கற்பனை களையும் கலந்து நரேந் திரமோடியைத் தூக்கி நிறுத்தும் முகத்திரை தில் லுமுல்லு அம்பலத்துக்கு வந்துள்ளது.

கோப்ரா போஸ்ட் எனும் இணையதள ஏடு 'ஆபரேசன் புளு வைரஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் செயல்பாடு களை ஆய்வுசெய்தது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் போலியாகப் புகுந்த இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில், 12 நிறுவனங்கள் மற்றவர்களின் முக வரிக்குள் கடுமையான முறையில் உருவாக்குகிற ஒவ்வொரு கருத்துக்கும், ஏராளமானோர் ஆத ரித்து கருத்து எழுதுவது போல் ஓர் அறையில் அமர்ந்துகொண்டே எழுதித்தள்ளுகிறார்கள் எனத் தெரியவந்ததாக, கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவிக்கிறார்.

அவதூறில் பா.ஜ.க.வே முன்னணி!

இத்தகைய அவ தூறுப் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருப்ப தாகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பிரபலப் படுத்துவதற் காக விடியவிடிய வேலை செய்வதாகவும், இதற் காக பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருப் பது தெரியவந்தது என் றும் அவர் கூறுகிறார்.

மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஏராள மான முஸ்லீம்கள் கருத் துச் சொல்வது போல் தோற்றத்தை ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் பெயரில் கணக்குகளைத் துவக்கி பின்னூட்டங்களை இடுவதாகவும் அனி ருத்தா தெரிவிக்கிறார்!

போலியான பெயர்களில்....

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன அய்.டி. அய் நிபுணர் ஒருவர் கூறும் போது, முக்கிய மாக முகநூல் மற்றும் டிவிட்டர் இதர உலக அளவிலான முக்கிய ஊடகங்கள் நடத்தும் பிளாக்குகளில் பல விதமான பெயர்களில் கணக்குகள் திறக்கப் படுகின்றன.

இதற்கு நிலை வட்டு (ஹார்டு டிஸ்குகள்) தேவையில்லை. மேலும் இண்டர்நெட் வழங்கனில் (சர்வர் களில்) இருந்து பல போலியான பெயரில் அய்.பி முகவரிகள் உரு வாக்கி கொள்ளும் தொழில் நுட்பம் போன் றவை பிரபல இணைய தள கண்காணிப்பு சாத னங்களை ஏமாற்றிவிடும் ஆகையால் அவை எல் லாக் கணக்குகளையும் வேறு வேறு நபர்கள் அனுப்பியதாக காட்டிக் கொள்ளும்,

இதன் காரணமாக ஒரு குறிப் பிட்ட நபரைப்பற்றிய பதிவுகளை பலர் கூறுவ தாக எடுத்துக்கொண்டு தானாகவே அந்த இணையதளம் அந்த நபருக்குமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும், இந்த வகையில் தற் போது முன்னணி பத் திரிகையான டைம்ஸ், மோடியை இந்த வருடத் தில் சிறந்த மனிதர்கள் பட்டியலில் சேர்த்து வாக்குப்பதிவிற்கு விட் டுள்ளது. இதில் விழும் ஓட்டுக்களின் நம்பகத் தன்மை தற்போது கேள் விக்குறியாக உள்ளது.

தன்னைப்பற்றிய செய்தியை மறைக்கும் தொழில் நுட்பம்

தற்போது ஊடகங் களை விலைக்கு வாங்கி யதன் மூலம் மான்சி/மாதுரி என்ற பெண் ணைத்தொடரும் விவ காரத்தை மறைத்து, தெகல்கா விவகாரத்தை இரவும் பகலும் ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள், அதே போல் இணையதளத்திலும் மோடிக்கு எதிரான செய்திகளை தேடும் தளத்தில் இருந்து மறைத்து விடும் தொழில் நுட் பத்தையும் கையாண்டு வருகிறார்கள்,

எடுத் துகாட்டிற்கு குஜராத் மாநிலம் குறித்து தேடும் பட்சத்தில் மோடியின் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே அவர்களின் தேடலில் கிடைக்கும், உண்மை நிலவரங்கள் எதுவும் தேடுதளத்தில் கிடைக்காது. இது மிகவும் மோசமான ஓர் உதாரணமாகும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அய் டி நிபுணர் ஒருவர் கோப்ரா போஸ் டிற்கு தெரிவித்தார்.

இந்த வகையில் தான் உலகில் உள்ள முக்கிய பத்திரிகைகள் நரேந்திர மோடியை இந்தியாவின் முக்கிய நபராக தவறா கக் கணித்து விடுகிறது, மோடியின் டுவிட்டர் அக்கவுண்டில் இணைந் துள்ள லட்சக்கணக் கான நபர்கள் என்பது சில நூறுகள் கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற போலி அய்.டி.கள் மூலம் ஒருவர் நூறு கணக்குகள் கூட உருவாக்கி மோடி யின் ஆதரவாளர்கள் என காட்டிக்கொள்ள லாம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி அலை வரிசையில் மோடியின் இந்த மோசடிதனத்தை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


பெரியார் நூலக வாசகர் வட்டத்திற்கு வாழ்த்துகள்!

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் நடத்திப் பெருஞ் சாதனையைச் செய்துள்ளது. அதற்கான இரு நாள் விழாக்கள் சென்னை பெரியார் திடலில் நேற்றும் இன்றும்; ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டு இடையில் தொய்வு இன்றி தொடர்ச்சியாக 2000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்றால் அது ஒன்றும் சாதாரண செயல் அல்ல!

புயல் வீசினாலும், சுனாமி ஏற்பட்டாலும், கடும் மழை பொழிந்தாலும், வியாழன் மாலை என்றால் சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலக வாசகர் வட்டம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கை எல்லோர் மத்தியிலும் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை உண்டாக் குவதற்கு இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயலாற்றியிருக்க வேண்டும் என்று நினைத் துப் பார்க்க வேண்டும்.

தொடங்கும்போது ஆர்வமாக வருவார்கள். அது தொடரும்போது தான் ஆயிரத்தெட்டுச் சிக்கல்; நிருவாகிகளுக்கிடையே கருத்து மோதல்; குழுக்களாகப் பிரிந்து செயலாற்றுதல் என்ற நோய்த் தாக்கி அந்தச் செடி பட்டுப் போய் விடும்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் அதற்கு விதி விலக்கு; ஓர் அமைப்பு கூட்டுப் பொறுப்போடு, நல்ல குடும்ப உறவோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டே பெரியார் நூலக வாசகர் வட்டம்.

1976 நெருக்கடி நிலை காலத்தில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் கைது செய்யப்பட்ட கால கட்டம் அது.

அந்த நேரத்தில் நண்பர்கள் சிலர் சேர்ந்து இப்படி ஒரு கரு உருவாக்கப்பட்டது. செவ்வாய் தோறும் பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்வது என்று ஆரம்பிக்கப்பட்டது.

நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பின்னர் அதிகார பூர்வமாக ஓர் அமைப்பாகத் தொடங் கப்பட்டது. திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகளுள் ஒன்றாக பெரியார் திடலில் இயங்கி வருகிறது. வியாழன் மாலை வாரந் தோறும் நடைபெறும் கூட்டத்தில் தமிழ் நாட்டில் குறிப்பாக தலைநகரில் பேசாத முக்கிய தலைவர்களோ, சிந்தனையாளர்களோ, பகுத் தறிவாளர்களோ அரிது என்றே கூறலாம்.

இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டு மானால் இந்த அமைப்பில் பேசுவது பெருமைக் குரிய ஒன்று என்று கருதும் அளவுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டம் வளர்ந் தோங்கியுள்ளது.

தமிழுக்கும், தமிழினத்துக்கும், முற்போக்குக் குத் தொண்டு செய்துள்ள பெரு மக்களுக் கெல்லாம் விழா எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் விழாவாம் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அய்யா அண்ணா பிறந்த நாள் விழாக்கள் கலை விழாக்களாகக் கொண் டாடப்பட்டு வருகின்றன - போட்டிகள் நடத்தப்படுவதும் உண்டு.

வெறும் கூட்டங்கள் என்பதோடு அல்லாமல், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வமைப்பில் ஆற்றப்பட்ட சிலரின் உரைகள் நூலாகவும் வெளி வந்துள்ளன. குறிப்பாக புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் சொற்பொழிவுகளை நடத்தி, அந்தவுரைகள் தொகுக்கப்பட்டன. பெரியாரியல் இராமா யண ஆய்வுச் சொற்பொழிவுகள் என்ற நூல்களாக வெளிவந்துள்ளன.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பார்வையாளராக வந்த சிலர் பிற்காலத்தில் எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், ஏன், அமைச் சர்களாகவும்கூட ஆகி இருக்கின்றனர்.

2000 நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பெரியார் நூலக வாசகர் வட்ட நிருவாகிகளைப் பாராட்டு கிறோம். மேலும் வளர்ந்து கின்னசில் இடம் பிடிக்கச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


உழைப்பு


எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.

(விடுதலை, 11.4.1947)

தமிழ் ஓவியா said...


சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு

சென்ற வாரம் 22, 23 ஆம் தேதிகளாகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட, நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு, பெங்களூர் சட்ட சபை மெம்பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சாஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது.

சுமார் ஆண், பெண் உள்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய் திருந்தார்கள். அவ்வாலிப சங்கத்தலைவரும், மகாநாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபன்யாசமும் வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களும், பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.

அவற்றை ஒவ்வொருவரும் கவனித்துப்படிக்க வேண்டியது அவசியம். தவிர, இம்மகாநாடானது அளவுக்குமேல் வெகுவிமரிசையாகவும் அதி ஊக்கமாகவும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்டதென்பதையே காட்டுகிறது.

அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உலகத்தையே மூட நம்பிக்கையிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளாகவே இருந்தன.

உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத் தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங் களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டும் என்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும், கசையடியும் கொடுக்கவேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்கு கிறது.

அன்றியும் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு உள்ளதுபோலவே பெண் களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண் களுக்கும் குடும்பச் சொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும்போது அனுபவித்து வந்த வாழ்க்கை யையே அளிக்கவேண்டுமே அல்லாமல்,

ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக்கொண்டு வக்கீல் வீடுகளிலும், கோர்ட்டுகளிலும் அலையா திருக்கச் செய்யவேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக் கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின்றன.

இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங் களுடன் திருப்தி அடைந்துவிடாமல் இவை அமலுக்கு வரத் தகுந்த அளவு வேலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிபர் மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மனங்களே நிறைவேறி இருக்கின்றன.

ஒரு நாடு விடுதலையடைய வேண்டுமானால், அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வரவேண்டும் என்கின்ற ஆப்தவாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறி குறிகள் காணப்படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்ற தானது இம்மகாநாட்டால் அறியலாம், ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் B.A.L.T.; ஊ.ஏ நாயகம் B.A.;பாரிஜாதம் B.A.; இந்திராணி பால சுப்ரமணியம், ஸ்கவுட் மாஸ்ட்டர், அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள் முதலிய ஸ்திரீ ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத் தாய்மார் களையெல்லாம் உறுதிப்படுத்தியது.

எனவே, வாலிப சங்கத்தையும், இம்மகா நாட்டையும், அதன் நிர்வாகிகளையும், அதற்கு ஆதரவளித்த பெரியோர்களையும் நாம் மனப் பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?

- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927