Search This Blog

5.11.13

10 ஆவது அவதாரப் போராட்டம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போரே!--பெரியார்

பழங்காலத்திலேயே இன்றையப் போராட்டம்!


நம்மில் சமுதாய சீர்திருத்தத்திற்கு யார் பாடுபட்டாலும் அவர்களுக்கு பார்ப்பனர்கள் அளிக்கும் பட்டங்கள் என்னவென்றால் இராட்சதன், அரக்கன், அசுரன் என்கின்றதான பட்டங்களாகும்.
இந்தப் பெயர்களின் தத்துவம் என்னவென்று சிந்தித்துப் பார்த்தால் இன்று இந் நாட்டில் நடந்து வரும் சமுதாயப் (பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார்) போராட்டமானது 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் தொடங்கி நடந்து வந்திருக்கிறது என்பதுதான்.
அவதார கற்பனைக் கதைகள்:
கடவுள் (விஷ்ணு) அவதாரங்கள் என்கின்ற பார்ப்பன கற்பனைக் கதைகளைப் பார்த்தால், நமது அரசர்கள் அக்காலங்களில் பார்ப்பனர் விஷயங்களில் எப்படி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவற்றை பார்ப்பனர்கள் எப்படி எப்படி சமாளித்து இருக்கிறார்கள் என்பதும் விளங்கும். அந்த விஷ்ணு அவதார எண்ணிக்கை 10- என்றாலும் 10- க்கும் கதைகள் இல்லை.
அவற்றில் (1) மச்ச; (2) கூர்ம; (3) வராக; (4) நரசிம்ம; (5) வாமன; (6) பரசுராம; (7) ராம; (8) பலராம; (9) கிருஷ்ண என்பவையான 9 அவதாரங் களுக்குத்தான் கதைகள் இருக்கின்றன. 10-ஆவது அவதாரம் இனிமேல் ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அந்த அவதார காலத்தில் இன்ன இன்ன காரியம் நடக்கும்; மக்கள் இப்படி இப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதாகக் காணப்படுகிறது.
10ஆவது அவதாரப் போராட்டம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போரே!
அப்படிக் காணப்படுவதற்கு ஏற்ப இன்று காரியங்கள் நடக்கின்றன. அதாவது இன்றைய பார்ப்பனர்  பார்ப் பனரல்லாதார் போராட்டம்தான், 10ஆவது அவதாரப் போராட்டம்! அதுதான் இன்று நடைபெறுகிறது என்பதற்கு, அந்த அவதாரங்களுக்கு எதிரிகளாக இருந்த இராட்சதர்கள் முதலிய பெயர்களை இன்றும் பார்ப்பனர் நமக்குச் சூட்டுவதே ஆதாரமாகும். அதாவது ராஜாஜி நம் தலைவர்களை இராவணன், இரண்யன், சூரபத்மன், ஜாபாலி என்றெல்லாம் சொல்லுவதாகும். சத்தியமூர்த்தியும் பல தடவை சொல்லி இருக்கிறார்.
அன்றைய நிலைமை: நிற்க இந்த மேற்கண்ட அவதாரங்களின் மூலம் அன்றைய நிலையைக் கவனிப்போம்.
1. மச்சாவதாரம்: என்பது அக்காலத்தில் ஒழிக்கப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட வேத (சாத்திரம்)த்தை உயிரூட்டிப் பரப்புவதற்காக நடத்தப் பட்ட போராட்டம் என்று தெரிகிறது. இது, இன்று இராமாயண விளக்கம் தருபவர்களை இ.பி.கோ 292-ஆவது பிரிவின்படி தண்டிக்கச் சொல்லுவது போன்றதாகும்.
எப்படி என்றால் ஒரு இராட்சதன் வேதத்தைத் திருடிக்கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டான்! அவனைக் கொன்று வேதத்தைக் கைப்பற்றி நாட்டில் நிலை நாட்டினான் கடவுள்! அதாவது பார்ப்பனர்!
வேதம் என்பது ஒரு பண்டமல்ல, நூல் அல்ல-சுவடி அல்ல, சப்த ரூபமாய் இருப்பது. அதை (சப்தத்தை) யாராலும் கைப்பற்ற முடியாது.
வேதம் சப்த ரூபமாய் இல்லாமல் ஒரு வஸ்து ரூபமாகவோ, அதாவது புத்தக, நூல், சுவடி ரூபமாகவோ இருந்தாலும் அது பிரம்மாவால் சொல்லப்பட்டது, அல்லது கடவுளால் சொல்லப்பட்டது என்று இருந்தாலும், அதை வேறு நூல்களில் இருந்தோ அல்லது மறுபடியும் நம் பிரம்மாவோ, கடவுளோ சொல்லச் சொல்லவோ செய்து எழுதிக் கொள்ளலாம்! ஆகவே அந்த வேத நூலுக்காக கடவுள் அவதார மெடுத்து அதைக்கொண்டு போன இராட்சதனைக் கொன்று கொண்டு வரவேண்டுமென்கின்ற அவசியம் என்ன? அதற்கு கடவுள் மீன் உருவம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றும் கடவுளுக்கு மீறியவனல்ல இராட்சதன் (இதற்கு மேல் விரித்தால் இடம் போதாது.)
பார்ப்பனரல்லாதவர் வேதம் பற்றி பிரச்சாரம் செய்தலைத் தடுத்ததே
ஆகவே இதன் தத்துவம் என்னவென்றால் எவனோ ஒரு பார்ப்பனரல்லாத அரசன் வேதத்தைப் பறிமுதல் செய்து நாட்டில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று ஆணையிட்டு இருக்கிறான். அதை சமாளித்து பறிமுதல் உத்தரவை, நடத்தையை மாற்ற முயற்சித்து வெற்றி பெற்றிருக் கிறார்கள் என்பதாகத்தான் கொள்ள வேண்டும். உதாரணம் இன்றும் ரஷ்யா வில் பைபிள் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற உத்தரவு இருக்கிறது.
பார்ப்பனரல்லாதார் விகித உரிமைக்கு எதிர்ப்பு
2. கூர்மாவதாரம்: இது போலவே ஆமை அவதாரக்கதையான 2-ஆவது அவதாரக்கதை அதாவது பார்ப்பன ருக்கு வேண்டிய நலன்களை எல்லாம் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு செய்து கொள்ள வேண்டும். பங்கு  கேட்டால் ஏமாற்ற வேண்டும் என் பதைப் பார்ப்பனருக்கு விளக்குவதற் காகப் புனையப்பட்ட கதையே ஆகும்.
ஆனால் இக்கதை சுத்த முட்டாள் தனமாகப் புனையப்பட்டிருக்கிறது. சமுத்திரத்தில் மலை முழுகிப்போகாமல் இருப்பதற்கு ஒரு ஆமையை வைத்து அந்த ஆமைமேல் ஒரு பெரிய மலையை வைத்து, அந்த மலையை மத்தாக (தயிர் கடையும் மத்துபோல்) ஆக்கி அந்த (மலை) மத்துக்கு ஒரு பாம்பைக் கயிறாக ஆக்கி; அந்த பாம்பு என்ற கயிற்றை பார்ப்பனர் ஒரு புறமும் ராட்சதர் (பார்ப்பனரல்லாதார்) மற்றொரு புறமாக இருந்து கடைந்து அமிர்தம் எடுத்ததாகவும், அந்த அமிர்தத்தில் பார்ப்பனரல்லாதவரும் பங்கு கேட்க, அவர்களைப் பெண்களை விட்டு மயக்கி, ஏமாற்றியதாகவும் கதை! இது சாத்தியமோ அல்லவோ என்பது ஒரு புறமிருந்தாலும், பார்ப்பனர் காரியத் திற்கு நம்மைப் பயன்படுத்திக் கொண்டு காரியமானவுடன் நம்மை ஏய்த்து அடிமைப்படுத்த வேண்டும் என்ற இன்றைய பார்ப்பனர் போக்குக்கு வழிகாட்டியாக இருக்கிறது. (இவற்றில் காரியங்களைப் பற்றி பார்க்காமல் அதன் கருத்து என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்.)
3. வராகம் (பன்றி) அவதாரம்: இந்த அவதாரம் பூமியை (உலகத்தை) ஒரு இராட்சதன் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டான். கடவுள் பன்றி அவதாரமெடுத்து கடலுக்குள் பாய்ந்து அந்த இராட்சதனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து விரித்தார்! என்பது.
இது எப்படிச் சுருட்டினான்?- எங்கி ருந்து கொண்டு சுருட்டினான்? எதன் மேலே நடந்து கடலுக்குள் போனான்? கடல் எதன்மேல் இருந்தது? போன்ற பிரச்சினைகள் ஒரு புறம் இருந்தாலும், இக்கதையால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால் ஒரு பார்ப்பனரல் லாத அரசன் பார்ப்பனர்களை நாடு கடத்தி இருக்கின்றான். அதை சமா ளிக்க பார்ப்பனர் எவ்வளவு கீழ்த்தர மான (மலம் உண்ணும்) காரியத்தைச் செய்தாவது சமாளிக்க வேண்டும். என்பதைக் காட்டுவது தான் இதன் தத்துவமாகக் கொள்ள வேண்டும்.
பார்ப்பனரை மதிக்காதவனைக் கொன்றுவிடும் சூழ்ச்சி:
4. நரசிம்ம அவதாரம்: ஒரு இராட்சதன் கடவுளை மதிக்கவில்லை. பார்ப்பனர்களுக்குத் தொல்லை கொடுத்து அவர்களையும் அவர்கள் தர்மங்கள், கோயில்கள், வீடுவாசல் களையும் அழிக்க, ஒழிக்க நெருப் பிட்டுக் கொளுத்த பாடு பட்டிருக் கிறான். இவனை இவனது மகனைக் கொண்டே சூழ்ச்சி செய்து கொன்றி ருக்கிறார்கள் என்பதுதான் கதையில் காணப்படுவது.
இதன் தத்துவம் என்ன வென் றால் வேறு விதத்தில் எதிரி ஜெயிக்க முடியாதவனாக இருந் தால் எதிரியின் கூட்டத்திலேயே துரோகிகளைப் பிடித்து சூழ்ச்சி யாக எதிரியைக் கொன்று காரி யத்தை சாதித்துக் கொள்ள வேண் டும் என்பதைப் படிப்பினையாக் குவதுதான்.
ஆரியரல்லாதவரை உயரவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி:
5. வாமன அவதாரம்: அதா வது சூழ்ச்சி அவதாரம், வானம் என்ற சொல்லுக்கே அயோக்கியத்தனம் என்பதாக அகராதியில் பொருள் காணப்படுகிறது. அதற்கேற்ப வாமன அவதாரம் ஒரு அரசனை மூன்றடி நிலம் கேட்டு அளக்கும்போது பூ உலகம் முழுவதையும் ஒரு அடியாகவும், மேல் உலகம் முழுவதையும் இரண் டாவது அடியாகவும் அளந்து மூன்றா வது அடியை அந்த அரசன் தலையில் வைத்து, அவனை பாதாளத்தில் அழுத்தி விட்டதாகவும், அவதாரக் கதையில் காணப்படுகிறது. இதன் தத்துவம் பார்ப்பான் உயர்வாக வாழ மற்றவர்களை அழித்து ஒழிக்க எந்தவித இழிவான காரியத்தையும், அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்யலாம், செய்யவேண்டும், என்கிற தத்துவம் கொண்டதாகும். இந்த சூழ்ச்சி நடத்தைகளுக்கு ஆதாரம் அய்கோர்ட்டு நடத்தைகளைப் பார்த்தாலே பலவற்றில் விளங்கும். அரசியல் சட்டத்தை பார்த்தாலும் விளங்கும்.
மனுதர்ம ஆட்சி நீடிக்கும் திட்டம்
6. பரசுராம அவதாரம்: இது நேர்மையான அரசர்களை எல்லாம் கொன்று அழிப்பதற்கு எடுத்த அவதாரம்! அதாவது மனு தர்மத்திற்கு விரோதமான பார்ப்பன நலத்துக்கு ஆதிக்கத்திற்கு மாறான ஆட்சி நடத் தும் அரசர்களை எல்லாம் ஒழித்து மனு தர்மத்திற்கு அடிமைப்பட்ட ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இந்த அவதாரத்தின் தத்துவமாகும்.
பார்ப்பனர் உயர் வாழ்வுக்கான புரசிஜர் கோட்
7. இராம அவதாரம்: பார்ப்பனர் தமது உயர்வான வாழ்க்கை நடத்துவ தற்கு ஏற்படும், நேரிடும் கெடுதிகளில் இருந்து எந்த சந்தர்பங்களில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு நடவடிக்கை விதி நூலாகும். அதாவது ஆங்கிலத்தில் புரசிஜர் கோட் என்ற பதத்திற்கு ஏற்ற நூலாகும். இதில் இழிபிறப்பு முதல் விபச்சாரம், மிருகப்புணர்ச்சி, வலியத் தன்மனைவியை அனுப்பித் தகாத காரியம் செய்யச்செய்தாவது பழி போட்டு எதிரியை அழித்தல்;  கோழை யுத்தம் செய்து எதிரியைக் கொல்லுதல்; முதலிய உலகில் உள்ள எல்லா அயோக்கியத்தனங்களையும், இழிவான காரியங்களையும் செய்து பார்ப்பனர் வாழலாம் என்பதைக் காட்டும் ஒரு வழிகாட்டி அவதாரமாகும்.
பார்ப்பனர் உயர் வாழ்வுக்காக அயோக்கியத் தனங்களுக்கு லைசென்ஸ்
8, 9 பலராம, கிருஷ்ண அவதாரங்கள்: இவைகளின் தத்துவம் பார்ப்பனன் என்பவன் எந்தத் துறையிலும் ஒழுங்காக, ஒழுக்கமாக, நாணயமாக, நேர்மையாக, உண்மையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனது நலத்திற்கு எந்தத் தவறான காரியத்தையும் செய்யலாம். உயர் வாழ்வும், வெற்றியும் தான் முக்கியம் என்பதைக் பார்ப்பனருக்குப் படிப்பிக்கும் அவதாரங்களே யாகும். இவை ஏதோ ஒரு காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்று பார்ப்பனர் நடப்பில் இருந்து வரும் நடத்தைகளையும், குணங்களையுமே எடுத்துக் காட்டுகின்றன.
இந்த நூல்கள் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் எழுதப்பட்ட நூல்களாய் இருந்தாலும் அக் காலத்திலேயே பார்ப்பனர் தங் களுக்கு இருந்து வந்த எதிர்ப்புக்களை சமாளிக் கவும், மேலால் ஏற்படக்கூடும் என்று நினைத்து முன் எச்சரிக் கையாகவும், எக்காலத்துக்கும் பொருந்துமாறு பார்ப்பன மக் களுக்கு வழிகாட்டவும் எழுதப் பட்டவைகளாகும்.
இவைகளைத் துருவிப் பார்த்தால் கவனமாக சிந்தித்தால் பார்ப்பனரின் இன்றைய நிலை என்ன? அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது விளங்கும்.
மக்கள் மானமற்ற மவுடீகர்களாக இருப்பதன் விளைவே
அக்காலத்தில் இப்படி முட்டாள் தனமான கதைகள் எழுதி அவற்றை கடவுள் கதை ஆக்கியதற்குக் காரணம் அக்கால நம் மக்கள் அறிவும், மானமும் பெற மார்க்க மற்று மிருகப் பிராயத்தில் இருந்ததால் இப்படிச் செய்ய முடிந்தது.
இன்றும் இந்துமத வேத சாஸ்திர புராண, இதிகாச, தர்ம நம்பிக்கை உள்ள காட்டு மிராண்டிகள், மூடநம்பிக்கைக் காரர்கள், சுய நலத்திற்கு எதையும் விற்ப வர்கள், ஏராளமாக நம்மில் இருக்கும் போது, அக்காலத்தில் இருப்பது இருந்தது அதிசயமாகுமா?
இன்று நம் புலவர்கள் படித்த மேதாவிகள், பணம் படைத்த இலட்சப் பிரபுக்கள், எத்தனை பேர் மனைவி மக்களுடன் பார்ப்பான் காலில் விழுந்து கால் கழுவிய பாததீர்த்தத்தைப் பக்தியோடு வாங்கி குடிக்கிறார்கள்? இவர்களுக்கு மேல் முட்டாள்களை எங்கு காண முடியும்?

 ---------------- தந்தை பெரியார்  அவர்கள் எழுதிய கட்டுரை-மறுபிரசுரம் “விடுதலை” நரகாசுரன் மலர் 1-11-2013

24 comments:

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கான ராக்கெட்: சாதனையும் - வேதனையும்!

- ஊசி மிளகாய்

மங்கள்யான் என்ற பெயரில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி 38 நிமிடத்திற்கு, ஸ்ரீஹரிகோட்டா, சத்திஷ் தவான் பி.எஸ். எல்.வி.சி.-25 ராக்கெட் மூலம், ஏவுதளத்தில் விண்கலம் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் இந்த முயற்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முதற் கொண்டு பல நூற்றுக்கணக்கான விண்வெளி ஆய்வாளர் களான விஞ்ஞானிகளின் உழைப்பும், சாதனை யும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.

செவ்வாய்தோஷம் என்ற பெயரில் மூடநம்பிக் கைக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான பெண்களுக்குத் திருமணமே ஆகாமல் மன உளைச்சலில் சிக்கி மாண்டு கொண்டுள்ள மகளிர் உலகம் உள்ள ஒரு நாடு, செவ்வாய்க் கோளுக்குத் தனது விண்கலத்தை அனுப்ப ஒரு செவ்வாய்க்கிழமையையே தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சி சாதனை என்றாலும்,

ஆனால் விளக்கு அடியில் சூழ்ந்துள்ள இருட்டுப் போல, ஒரு வேதனையும் வெட்கப்பட வேண்டிய செய்தியும் உள்ளது!

கீழே உள்ள படத்தையும், செய்தியையும் படியுங்கள்:

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகப் பறக்க வேண்டி இஸ்ரோ தலைவர் இராதா கிருஷ்ணன் (நாயர்) தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். கோயில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அதி காரிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் கலந்து கொண்டு, இஸ்ரோ தலைவர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். அப்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதங் களில் வைத்து வழிபட்டார்; விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பறக்க வேண்டிக் கொண்டார்.

பின்னர் இஸ்ரோ தலைவர் தன் மனைவியுடன் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். (- தினந்தந்தி 5.11.2013)

- அங்கு உழைத்த விஞ்ஞானி களால் முடியாததை திருப்பதி ஏழுமலையானும், காளஹஸ்தி சிவனும் (இவரது கோபுர கலசம் இரு முறை வீழ்ந்ததை காப்பாற்ற முடியாதவர் இந்தச் சிவன்; ஏழுமலையான் உண்டியலுக்கே துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு - அவ்வளவு சர்வ சக்தி அவருக்கு!) - காப்பாற்றப் போகிறார்களா?

இஸ்ரோ தலைவர் நாயருக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதுபற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை; அது அவரது சொந்த விஷயம். ஆனால் விண்கலத்தின் மாதிரி வடிவத்தைக் கோயி லுக்கு எடுத்துச் செல்வது, வேண்டுவது எவ்வகையில் நியாயம்? யார் இவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள Secularism - - மதச் சார்பின்மையைக் காப்பதா இது?

எல்லா மதங்களையும் ஒன்று போல் பாவிக்க என்று ஒரு விளக்கம் என்றால் இவர் எந்த சர்ச்சுக்குப் போனார்? எந்த மசூதிக்குப் போனார்?

போனாலும் நியாயமாகுமா என்பது முக்கிய கேள்வி!

அதோடு அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகள் 51A(h) பிரிவின்படி -
இதுதான் அறிவியல் மனப்பான்மையை பரப்பும் முறையா? Scientific Temper
என்பது இஸ்ரோ தலைவரின் அகராதியில் இதுதானா?

மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய் பொத்தி, கைகட்டி இருக்க லாமா?

முன்பு ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்த போதும், அதற்குமுன் ஏழுமலையானைத் தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தித்தானே நடந்தது? அதற்கு என்ன சமாதானம் கூறப்பட்டது?

அறிவியல் மனப்பான்மைப் பரப்புதலின் லட்சணம் இதுதானா?

வெட்கம்! மகா வெட்கம்!! சாதனை ஒருபுறம் - வேதனை மறுபுறம்!

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியா


இசைப்பிரியா என்ற பெயர் இன்றைய தினம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிறது. என்னதான் சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்தாலும், என்னதான் உலகின் சில நாடுகள் இலங்கையின் பக்கம் நின்று அதன் அதிபர் ராஜபக்சேவின் முதுகுப் பக்கம் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் - ராஜபக்சே என்பவர் மனித குலத்தின் நாசகார சக்தி - ஹிட்லரே வெட்கப்படும்படியான குரூரர், நரமாமிசம் தின்னும் காட்டு மனிதன் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நோஃபயர் சோன் என்ற ஆவணப்படத்திலிருந்து பிரிட்டனின் 4ஆவது அலை வரிசை வெளியிட்ட இந்தப் படம் உலகில் மனச்சாட்சியைக் குலுக்கித் திகிலடையச் செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இசைப் பிரியா பலத்த காயங்களுடன் மரணம் அடைந்து கிடக்கும் அந்தக் காட்சி அசாதாரணமானது.

2010இல் இசைப்பிரியா காட்டப்பட்ட காட்சி யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இப்பொழுது வெளியாகி இருக்கும் காட்சி - அந்தப் பெண்ணை உயிருடன் பிடித்து நிர்வாண மாக்கி அரைகுறை உடையுடன் இராணுவத் தினர் இழுத்துச் செல்வதும், அந்தப் பெண் பிரபாகரனின் மகள் என்று கருதுவதும், அந்தப் பெண் மறுத்த நிலையில், பாலியல் வக்கிரத் துக்கு இரையாக்கிக் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல இலங்கை சிங்கள இனவாத அரசு அந்தக் காட்சிகள் போலியானவை என்று கூறுவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையிலும் சரி, வெள்ளைக் கொடியேந்தி சமாதானக் கோரிக்கையுடன் சென்ற போராளி களைச் சுட்டுக் கொன்ற போதும் சரி எதை அந்த வல்லூறுகள் ஒப்புக் கொண்டுள்ளன?

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ராஜபக்சேவுக்குத் தொண்டையில் குத்திய ஈட்டியாகி விட்டது இந்த ஒளிபரப்பு!
இதற்குப் பிறகும் ராஜபக்சே பக்கம் பேசுவதற்கு எவரும் கூச்சமும், வெட்கமும் படவே செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்ற குற்றங்களின்மீது உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட முழுத் தகுதியான பேர் வழிதான் ராஜபக்சே என்பதி லிருந்து தப்பிக்கவே முடியாத நிலை இன்று.

இந்திய அரசு இதற்கு முன் எந்த நிலை எடுத்திருந்தாலும் சரி, இதற்குப் பிறகு மறு சிந்தனைக்கும், முடிவுக்கும் உட்பட்டே தீர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு மேலும் செல்ல நினைத்தால், ராஜபக்சே பற்றி என்ன பொது அபிப்ராயம் ஏற்படுமோ அதில் பங்கு வாங்கிக் கொள்ளும் மானக்கேடு தான் மிஞ்சும்.

காங்கிரசைச் சேர்ந்த முக்கிய மத்திய அமைச்சர்களான ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்களே இந்த முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரசின் உயர் மட்டக் குழுவானாலும் சரி இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை;

வரலாற்றில் வீண் பழியையும், உலகத் தமிழர்களின், உலக மனித உரிமை யாளர்களின் நிரந்தர வெறுப்பையும் வலிய சம்பாதித்துக் கொள்ளவும் வேண்டாம் - வேண் டவே வேண்டாம் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!

சங்கரன்கோவிலில் கோயில்
ராஜகோபுரத்தை மின்னல் தாக்கியது

சங்கரன்கோவில், நவ. 5-சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமையான 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது நேற்று மின்னல் தாக்கியதில், ராஜாளி பொம்மை மற்றும் சிற்பங்கள் சேதம் அடைந்து நொறுங்கி விழுந்தன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மன்னரால் எழுப்பப் பட்ட சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் 9 நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைந் துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய் தது. அப்போது பலத்த ஓசையுடன் ராஜகோபுரத்தின் தென்பகுதியில் மின்னல் தாக்கி யது.

இதில் கோபுரத்தின் 9ஆவது நிலையின் கிழக்கு பகுதியில் இருந்த ராஜாளி பொம்மை சேதம் அடைந்தது. கோபுரத்தின் உச்சியில் பெரிய அளவில் அமைந்திருந்த கண் திருஷ்டியாளியின் கண்கள் சேதம் அடைந்தன. மேலும், கோபுரத்தின் பல பகுதிகளில் அமைந்திருந்த சிற்பங்களும் உடைந்தன.

கோவில் அருகே இருந்த வீடு களில் நூற்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் கணி னிகள் சேதமுற்றன.

தமிழ் ஓவியா said...

சாலை விபத்து : அய்யப்ப பக்தர்கள் நால்வர் சாவு

ரெட்டியார்சத்திரம், நவ.5- திண்டுக்கல் அருகே வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி யதில், பெங்களூருவைச் சேர்ந்த, அய்யப்ப பக்தர்கள் நால்வர் இறந் தனர்; 18 பேர் காயமடைந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த, 14 பேர், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, டெம்போ டிராவலர் வேனில் சபரிமலை சென்றனர். அங்கிருந்து மதுரை வந்து, மீனாட்சிஅம்மன் கோயிலில், சாமி தரிசனம் செய் ததும், பழநிக்குப் புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம், மாங்கரை, பிரிவு அருகே வேன் சென்ற போது, ஓட்டுநர் தூங்கியதால், கோவையில் இருந்து மதுரை சென்ற, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், வேன் ஒட்டுநர் உட்பட, பெங்களூருவைச் சேர்ந்த நான்கு பேர் இறந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயமுற்றனர். ரெட்டியார் சத்திரம் காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

பைக் மீது கார் மோதி
கோயில் பூசாரி பரிதாப பலி

புழல், நவ.5-புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வர் ஆனந்தன் (43). புழல் யாகாத் தம்மன் கோயில் பூசாரி. தீபாவளி யன்று பட்டாசு வாங்க தனது மகன் லோகேஷ் (16), மகள் தீபிகா (18) ஆகியோருடன் பைக்கில் புழலுக்கு புறப்பட்டார் ஆனந்தன்.

புழல் மத்திய சிறைச்சாலை ஜிஎன்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட் டனர். ஆனந்தன் படுகாயம் அடைந் தார். லோகேஷ், தீபிகா லேசான காயத்துடன் தப்பினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி னர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

தமிழ் ஓவியா said...

காளஹஸ்தி கோவிலில் தீ விபத்து: கலைப் பொருள் விற்பனைக் கடை எரிந்து சாம்பல்

காளஹஸ்தி, நவ. 5- காள ஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவி லில் முகப்பு கோபுரத்தின் உள்ளே பக்தர்கள் தங்கள் காலணிகளை விடும் கவுண்டர் அருகே வெங்கடே சன் என்பவர் கலைப்பொருள் விற்பனைக் கடை வைத்து உள்ளார்.
நேற்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 3.30 மணி அள வில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவிற்று.

தகவல் கிடைத்ததும் காளஹஸ்தி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த விலை உயர்ந்த கலைப் பொருட்கள், சுவாமி படங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. சேத மதிப்பு ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மக்களின் பகுத்தறிவுப் பூங்கா பெரியார் உலகம்!


திராவிடர் கழகப் பொதுக் குழுவில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக் கின்றன! ஆனால்.

எல்லாவற்றிற்கும் சிகரமாக... உலகத் தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்கி வழிய போடப்பட்ட தீர்மானம் தான். திண்டிவனத்தில் 20.10.2013 அன்று போடப்பட்ட தீர்மானம் எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி, வரவேற்ற தீர்மானம் என்ற செய்தியை இதோ ஒரு பெரியார் உலகம் என்ற விடுதலை தலையங்கத்தின் வாயிலாக (21.10.2013) படித்த உலகத் தமிழர்கள் மட்டுமல்ல. உலகப் பகுத்தறிவாளர்கள் அனைவருமே எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்திருப் பார்கள் என்பது உறுதி!.. காரணம்...

தூக்கு மேடையில் இருந்துகொண்டு நான் நாஸ்திகன்தான்,அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடு போட்டுச் சொல்லிக் கொள்ளத் தயாராயிருக்கிறேன் (குடியரசு 19.5.1929) என, 1929ஆம் ஆண்டிலேயே முழுக்க மிட்ட ஒரு நாத்திகப் பேரறிவாளருக்கு வைக்கப்படும் சிலையல்லவா, அதனால் தான்! அதோடு மட்டுமா?

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலேயே விடுதலை எனும் பெயரில் இதழ் நடத்தினார். நாடு வெள்ளையரின் முடியாட்சியின் கீழ் இருந்தபோதே குடியரசு என்ற ஏடு நடத்தினார். ஆகஸ்டு பரட்சிக்கு முன்பாகவே, சுடிஎடிடவ (புரட்சி) எனும் ஏடு நடத்தினார். அறியாமை இருளிலே மூழ்கி அடிமைத்தனத்திலே கட்டுண்ட கிடந்த தமிழினத்தை ஒளி உலகுக்கு அழைத்து வந்து அவர்களது பகுத் தறிவுக் கண்களைத் திறந்தார். அடிமை விலங்கை உடைத்து எறிந்து உரிமை உலகிலே நடமாட வைத்தார்... மொத்தத் தில் மனிதனை மனிதனாக வாழ வைத்தார்! இதனை எதிர்த்த பார்ப்பனீ யத்தின் ஆணிவேரையே அறுத் தெறிந்தார்! ஆம்.

இத்தகைய புரட்சியாளருக்குத்தான் சிலை! உலகிலேயே உயரமான வெண்கலச் சிலை 95 அடி உயரத்தில்! அதுவும் ஒரு எட்டாவது அதிசயமாக ஒர முழுமையான நாத்திகவாதிக்கு சிலை! உலகில் வேறு எந்த நாட்டிலுமே இல்லாத புதுமை! புரட்சி!!

சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில், கூடிய பெரியார் உலகம்! அதில், அய்யாவின் வரலாறு ஒலி - ஒளிக் காட்சியாக! அறிவும், அறிவியலும் கலந்த கோளரங்கம், பொழுது போக்குப் பூங்கா குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொழுதுபோக்கு.. எண் ணிப் பார்க்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடு கிறது!

பார்ப்பனியம் என்ற வெடி மருந்துக் கிடங்குக்குள் சுயமரியாதை எனும் தீப்பந்தத்தை ஏந்தி நடக்கும்...

மிகத் துணிவான காரியத்தில் ஈடு பட்டு வெற்றி கண்ட தந்தை பெரியா ருக்கு நன்றி மறவா, பெரியாரின் பெருந் தொண்டர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்... காலத்தாலழியாத.. வரலாற்றுச்சிறப்பு மிக்க நினைவுச் சின்னமே... பெரியார் உலகம்!...

அய்யாவின் சிலைக்காக.. அள்ளித் தருகிறது தமிழ்க் குடும்பங்கள்! ஆம்! உலகச் சுற்றுலாப் பயணிகளின் மையமாகி விளங்க இருக்கும் பெரியார் உலகம், 81வது பிறந்த நாள் காண இருக்கும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின்...

70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வரும் தொண்டறத்தின் சிகரம்! அவரு டைய பிறந்த நாளன்று தமிழினம் காட்டும் நன்றி 1000 பவுன் அன்பளிப்பு!

திராவிடர் கழகத் தலைவருக்கு அளிக் கப்படும் ஒவ்வொரு காசும் பல லட்சங் களாக தமிழினத்திற்கே பயன்பட்டிருக் கிறது என்பதுதான் கடந்த கால வர லாறு ஆகவேதான் அய்யாவுக்கு சிலை என்றால்... அள்ளி, அள்ளித் தருகிறார்கள்!
சிறுகனூர் விரைவில் உலக மக்களின் பகுத்தறிவுப் பூங்கா! பாரே போற்றும் பெரியார் உலகம்!!

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


தமிழை இங்கிலீஷ் வரிவடிவத்தில் எழுதலாம் என்பதா?


தமிழ் இந்து ஏட்டுக்குக் கடும் எதிர்ப்பு!

இந்து அலுவலகத்துக்கு நேரில் சென்று தமிழின உணர்வாளர்கள் கண்டனம்!

சென்னை, நவ.5- தமிழை இங்கிலீஷ் வரி வடிவத்தில் எழுதலாம் என்று மலையாள நாட்டைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற பார்ப்பனர் இந்து தமிழ் நாளேட்டில் எழுதிய கட்டுரையைக் கண்டித்து திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சி களை, இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதன் ஆசிரியரைச் சந்தித்து கண்டனங் களை நேரில் பதிவு செய்தனர்.

தமிழால் இணைவது தமிழை அழிப்ப தற்கா? எனும் தலைப்பில் கண்டனமும் எழுத் துப்பூர்வமாக இந்து ஆசிரியரிடம் அளிக்கப் பட்டது.

அதன் விவரம் வருமாறு:

இம்மடலின் இறுதியில் கையொப்ப மிட்டுள்ள, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர் களும், தமிழ் உணர்வாளர்களும் ஆகிய நாங்கள் தி இந்து நாளிதழில் (4.11.2013) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோக னின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் எதிரான அக் கட்டுரையை வெளியிட்டுள்ள தி இந்து நாளிதழுக்கும் எங்களின் கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதழியல் துறையில் மிக நீண்ட அனுபவம் உடைய ஒரு நிறுவனம் தமிழால் இணை வோம் என்னும் முழக்கத்தோடு தமிழ் நாளிதழ் ஒன்றைத் தொடங்கியபோது தமிழ் மொழிக் கும், இனத்திற்கும் வலிமை சேர்க்கும் முயற்சி என்று அதனை நம்பிய பலரின் தலையிலும் இடி விழுந்தாற்போல் இக்கட்டுரை அமைந் துள்ளது. தமிழ் மொழியை எவராலும் அழிக்க முடியாது, என்றாலும், எப்படியாவது அழித்து விடவேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர் களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும், ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையை தன் ஏட்டில் வெளியிட்டதன் மூலம் தமிழ்கூறு நல்லுலகை தி இந்து நாளிதழ் வேதனைப்படுத்தியுள்ள உண்மையை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வரு கின்றோம்.

எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழி யாகிய உயிர் அழியும் என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு மாமேதை இறங்கியுள்ளார். அதற்கு தி இந்து நாளிதழ் துணை போகலாமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என் பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெய மோகன்கள் புறப்படட்டும்.

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக் காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரி வடிவம் இல்லாத நேரத்தில், பிற வரி வடிவங்களைக் கையாள் வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாய் இக்கட்டுரை யாளர் சொல்கிறார். அது இலத்தீன் எழுத் துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத் துருவிலும் கூட எழுதப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து பிராமி என்பது தவறான கருத்து என்பதை மொழி யியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அத னால்தான் தமிழ் பிராமி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழி யியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது ஒலிப்பு முறை (உச்சரிப்பு) முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது?

கனத்த நெஞ்சுடன் மீண்டும், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக்கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பட்டியல் வருமாறு:

தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தலைமை இலக்கிய அணி, தி.மு.க.

க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்,

சைதை க.வ.சிவா, தமிழக வாழ்வுரிமை கட்சி,

மே.ப.காமராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி

தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

கீ.த.பச்சையப்பன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

வா.மு.சே.திருவள்ளுவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

பா.இறையெழிலன், உலகத் தமிழ்க் கழகம்

கோ.பாவேந்தன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

உதயன், தமிழக கலை இலக்கியப் பேரவை

முத்தையாகுமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி,

இரா.வில்வநாதன், தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

ஆகியோர் கையொப்பமிட்டுக் கொடுத் தனர்

தமிழ் ஓவியா said...


மோடியை வாரிசாக ஏற்பாரா படேல்? காந்தியாரின் பேரன் சாடல்

புதுடில்லி, நவ. 5- குஜராத் முதல் வர் நரேந்திர மோடியை தனது கொள்கை ரீதியான வாரிசாக நாட் டின் முதல் உள்துறை அமைச்ச ரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார் என்று காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சமீப காலமாக படேலை சொந் தம் கொண்டாடி புகழ்வதில் பாஜ கவின் பிரதமர் வேட்பாளரான மோடியும், காங்கிரஸ் கட்சித் தலை வர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ் மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி. என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கல வரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை மோடி கடைப்பிடிக் காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜ ராத்தைச் சேர்ந்த படேல், கலவ ரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்ப வத்தை கண்டும் மிகவும் வருந்தி யிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங் கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல்பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையை கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட் டமைப்பதில் வல்லவர். மற்றவர் களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதே போன்று மோடியும் செயல் பட்டால், அது பாராட்டுக் குரியதே" என்றார்.

அதே சமயம், கடந்த 63 ஆண்டு களாக படேலை காங்கிரஸ் மறந்து விட்டது.

அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்குப் பின், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் காங்கிரஸ் கட்சி யில் முக்கிய பங்கு வகித்தனர். அதே சமயம், படேலின் வாரிசுகள் கட் சியிலோ ஆட்சியிலோ பங்கேற்க வில்லை. நேருவை விட படேல் 14 ஆண்டுகள் மூத்தவர். அவரது உடல் நிலையும் சீராக இல்லை. அதனால்தான், படேலுக்கு பதிலாக நேருவை பிரதமராக்கினார் காந்தி யார். அவரின் இந்த முடிவை பின் னர் படேல் ஏற்றுக் கொண்டார். அதுதான் சரியானது என்றும் தெரிவித்தார். ஒரு காங்கிரஸ்கார ராக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார். 1947 ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். ஸின் பணிகளை பாராட்டி வந்த படேல், காந்தி படுகொலைக்குப் பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்" என்றார் ராஜ்மோகன் காந்தி.

தமிழ் ஓவியா said...

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தலைமை உரையாற்றினார்.

அவர் தமதுரையில்...

இன்றைய தினம் ஒடிசா மாநில அரசு, தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கொண்ட நூலை ஒடிசா மாநில மொழியில் வெளியிட்டிருக்கிறது. இதில் நமது கழகத்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ஒடிசா மாநிலம், புவனேஷ்வருக்குச் சென்றிருக்கிறார். நமக்கெல்லாம் பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்கிற பெருமை உண்டு. அய்யா அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அந்த வகையில் பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார். சிறீரங்கத்தை பார்த்த மக்கள் இனி சிறுகனூரைப் பார்க்கப் போகிறார்கள். மதமற்ற உலகமே மனித இனம் அமைதியாக வாழ நிரந்தரத் தீர்வாகும். இந்த வகையில் மதமற்ற உலகிற்கான கருத்துகள் பெரியாரின் கருத்துகள் ஆகும். இன்று (27.10.2013) காலையில் சென்னையில் மறைந்த பொறியாளர் மணிசுந்தரம் அவர்களது மறைவிற்கு சென்று வந்தோம். அவர்தான் நமது பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கு தமிழர் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். கல்லூரி தொடங்கப் போதுமான நிதி இல்லையே என்று வருத்தப் பட்டார். அப்போது ஆசிரியரிடம் மணி சுந்தரம், மிஸ்டர் வீரமணி, உலகில் யாரிடத்திலும் இல்லாத பெரும் மூலதனம் உங்களிடம் இருக்கிறது. அதுதான் பெரியார் எனும் டார்ச். அந்த டார்ச்சை எடுத்துக்கொண்டு நீங்கள் பாலைவனம் சென்றால் கூட அது சோலைவனம் ஆகும் என்று குறிப்பிட் டார். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அப்படிப் பட்ட ஆற்றல் நம் இயக்கத்துக்கு உண்டு. எனவே கழகத்தோழர்கள் புதிய நம்பிக்கை - உற்சாகத்துடன் நம்மால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுவோம் இவ்வாறு அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


நான் பெரியார் அவர்களை நன்கு அறிவேன்; அவர் கொள்கைகளைப் பின்பற்றி வருபவன் நார்வே நாட்டு அறிஞர் பெருமிதம்


நார்வே, நவ.6- நார்வே நாட்டுக்காரர் தமிழ் நாட்டுக்காரர் அறவழி என்று அறிந்தவுடன், ஓ, நீங்கள் பெரியார் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்று கேட்டு அசத்தினார் நார்வே நாட்டுப் பேராசிரியர்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அறவழி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பிய கடிதமும், தகவல்களும் வருமாறு: வணக்கம், என் பெயர் அறவழி. நான் நார்வே நாட்டின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றுகிறேன். பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலக பணி நிமித்தமாக நான் முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை; மறு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற போது பயிற்சியாளர் அர்லிட் நொர்டெ பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு என்னைப்பற்றி அனைவரிடமும் அறிமுகப் படுத்தும்படி கூறினார். அதில் நான் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றதும் அவர் வியப்படைந்தார். அவரது அடுத்த கேள்வி நீங்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். மேலும் அவர், தந்தை பெரியாரின் கருத்து களை பல காலங்களாக படித்து வருபவர் என் றும், அவரது கருத்து களை தவறாது பின் பற்றிவருவதாகவும், கூறினார்.



அதன் பிறகு நானும், அவரும் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் பற்றி பல கருத்துகளை பரிமாறிக் கொண் டோம். ஆனால் அவர் என்னைவிட பெரியா ரைப்பற்றி அதிகம் அறிந்துள்ளார். கருத் தரங்கம் முடிந்ததும் அவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் பேசியது மற்றும் தந்தை பெரியார் பற் றிய அர்லிட் நொர் டெவின் கருத்துகளை பெரியார் பகுத்தறிவு என்ற எனது சமூக இணைய தளத்தில் பதியவிட்டிருந்தேன். அது உடனடியாக பல அயல்நாட்டு நண்பர் களிடம் சென்றடைந் தது. உடனடியாக இதை செய்தியாக்கி நார்வே உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு தந்தை பெரி யார் மற்றும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நிழற்படத்துடன் அனுப்பி வைத்தேன்.

அதை அந்த பத்திரிகை அப்படியே மறுநாள் வெளியிட்டிருந்தது. தந்தை பெரியாரின் கருத்துகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சமுதாயப்பணிகள் கடல் கடந்து அய் ரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதை தமிழக மக்களுக்குத் தெரி விக்கும் விதமாக இந்தச் செய்தியை தெரிவிப்ப தில் பெருமையடைகி றேன். - இவ்வாறு அறவழி கிருபானந்தன் (பொறி யாளர் ரெனிஸெர்ச்ன் எஸ்லேவ் இரிக்ச்சன் செண்டர் நார்வே) அவர்கள் வெளியிட் டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின் றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...

படேலின் முதுகுக்குப்பின் ஒளியும் மோடி!


படேலை, நரேந்திர மோடி கையில் எடுத்துக்கொண் டாலும், எடுத்துக்கொண்டார்; எட்டுத் திசையிலிருந்தும் மோடியை நோக்கி மொத்துகள் மொத்தமாக வந்துகொண் டிருக்கின்றன.

காந்தியார் அவர்களின் பேரன் ராஜ்மோகன் காந்தி உள்பட கணைகள் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ்மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை, மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்பவத்தை கண்டும் மிகவும் வருந்தியிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங்கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல் பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையைக் கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட்டமைப்பதில் வல்லவர். மற்றவர்களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதேபோன்று மோடியும் செயல்பட்டால், அது பாராட் டுக்குரியதே! என்று காந்தியார் அவர்களின் பேரன் சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

தமது அமைப்பின் கொள்கைகளை, கோட்பாடுகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியாது என்பதை சந்தேகத் துக்கு அப்பாற்பட்ட முறையில் உணர்ந்துவிட்ட நிலையில், 450 அடி உயர வல்லபாய் படேலின் சிலையின் பக்கவாட்டில் நின்று கொண்டு தம் தோற்றப் பொலிவை (போஸ்) கொடுக்கிறார் என்பதுதான் உண்மை.

குஜராத் மாநிலத்துக்காரர் படேல் என்பதுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படுமேயானால், படேலுக்கும் தலைவரான காந்தியார் அவர்களும் அதே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே - அவருக்கல்லவா 450 அடி உயரத்தில் சிலையை நிறுவிட முன்வரவேண்டும்!

தமிழ் ஓவியா said...

காந்தியாரிடம் நெருங்கினால் பாமர மக்கள் மத்தியி லிருந்தும், சுனாமி புறப்பட்டுவிடுமே! அட பாவிகளா! காந்தியாரையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு, அவருக்குச் சிலை வேறா நிறுவுகிறீர்கள்? என்று பற்களை நரநரவென்று கடித்துக்கொண்டு சம்ஹாரம் செய்யப் புறப்பட்டுவிட மாட்டார்களா?

படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது டில்லியில் முசுலிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையை சரியாகக் கையாளாமல் இருந்துவிட்டார் என்று கூறி காந்தியார் அவர்களே உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்; அதனை வைத்துக்கொண்டு படேல் முசுலிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவா குணம் - கொண்டவர் என்ற அனுதாபம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இருக்கக்கூடும்.

அதேநேரத்தில், காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தடை செய்து, ஆணை பிறப்பித்தவர் உள்துறை அமைச்சரான படேல் என்பதை மறந்துவிட்டார்களா அல்லது மறைக்கிறார்களா?

அந்த ஆணையில் படேல் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்கள் நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. விரும்பத்தகாத அதே சமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. சட்ட விரோத ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித் துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுமாறும், ஆயுதங்களைச் சேகரிக்குமாறும், அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும், காவல் துறை, இராணுவம் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட மறுக்கு மாறும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் ரகசியமாக உள்ளன என்று தடை அறிக்கையில் காரணங் கள் சொல்லப்பட்டனவே - தடை அறிக்கையை வெளியிட் டவர் உள்துறை அமைச்சர் படேல் அல்லவா!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் எழுதியுள்ள கடிதமும் மிக முக்கியமானது.

இந்துத்துவாவாதிகளின் பேச்சுகள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவைகளாக உள்ளன. இந்துக்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அமைப்பாக்குவதற் காகவும் இப்படி விஷத்தைப் பரப்பவேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்கவேண்டியதாயிற்று. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

- இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் படேல் எழுதிய கடிதம் ஆகும் (செப்டம்பர் 11-1948).

படேலுக்கு 450 அடி உயரத்தில், 2500 கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்ப இருக்கும் - ஆர்.எஸ்.எஸின் பிரத மருக்கான வேட்பாளர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்?

இந்தக் கேள்வியை எழுப்பினால், அந்த 450 அடி உயர சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதைத் தவிர மோடிக்கு வேறு வழியேயில்லை.

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் ஒருவர் மீது ஒருவர் 'சாணி'யை அடிக்கும் விழாவாம்!

சத்தியமங்கலம், நவ. 6-ஈரோடு மாவட்டம், கர்நாடகா மாநில எல்லையையொட்டி சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது தாளவாடி. இதன் அருகே உள்ள கும்டாபுரத்தில் பீரேஸ்வரர் கோவில் உள்ளது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் சாணியடி திருவிழா நடைபெறுமாம்.

இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை உருண் டையாக பிடித்து வீசுவார்களாம்.

இந்தக் கோவிலில் உள்ள சிவலிங் கத்தை யாரோ ஒருவர் எடுத்து சாணம் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்து விட்டாராம். ஒரு சமயம் அந்த குப்பை மேட்டில் மாட்டு வண்டி ஒன்று செல் லும்போது ரத்தம் பீறிட்டதாம். இதைக் கண்ட மக்கள் என்னமோ... ஏதோ... என்று தோண்டி பார்த்த போது கோவிலில் காணாமல்போன சிவலிங்கம் இருப்பதை கண்டன ராம்.

அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சாமி, தீபாவளி முடிந்து 4 ஆவது நாள் சாணத்தில் இருந்து மீண்டெழுந்திருக்கிறேன். இதன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என்று கூறிற்றாம்.

இதையடுத்து இந்த பீரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவ ளிக்கு அடுத்த 4 ஆவது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெற்று வருகிறதாம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று இந்த சாணியடி விழா கொண் டாடப்பட்டதாம்.

சாமிக்கு காலை சிறப்பு பூஜை யுடன் விழா தொடங்கியதாம். முன் னதாக கும்டாபுரம் கிராம மக்கள் அனைத்து பசு மாட்டு சாணங் களைச் சேகரித்து கோவில் பின்புற மாக குவித்து வைத்திருந்தனராம்.

தொடர்ந்து அங்குள்ள ஊர்க் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்ததாம்.

இதைத் தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பீரேஸ்வர ருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததாம். கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும் சட்டை அணியாமல் கோவிலுக்கு வந்தனராம்.

பிறகு அங்கு குவித்து வைக்கப் பட்டிருந்த சாணத்தை அவர்கள் உருண்டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்தனர்.

ஒருவர் மீது ஒருவர் சாணியை அடித்த போது கூடி இருந்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள் கைதட்டி ரசித்து பார்த்தனராம்.

சாணியடி நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஊர்க் குளத்தில் குளித் தனராம். பிறகு அவர்கள் வரிசையாக நின்று பீரேஸ்வரரை வழிபட்டனராம்.

இந்த சாணியடி திருவிழாவை ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஏராளமான பக்தர்களும், மேலும் கர்நாடக மாநில பக்தர்களும் நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தனராம்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவு பொருந்துகிறது பார்த்தீர்களா...!

தமிழ் ஓவியா said...


திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!


ஜாதி-மதவாதங்களுக்குச் சம்மட்டி அடிகொடுக்க
திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு
விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, நவ. 6- ஜாதி - மதவாதங்களை எதிர்த்து வரும் 9ஆம் தேதி திருச்சியில் திரா விடர் கழகத்தின் சார்பில் கூட் டம் மற்றும் திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கு அனைவரும் வருகை தருமாரு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப் புக் கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் சார் பில் வரும் 9-11-2013 அன்று திருச் சிராப்பள்ளியில் 'திராவிடர் எழுச்சி மாநாடு' ஒருங்கிணைக் கப்படுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் தலைமையில் நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் ஜாதிய வாதமும், மதவாதமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. நிறைவாக, திருச்சி உழவர் சந்தை மைதா னத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

தமி ழக அளவிலும், அகில இந்திய அளவிலும் ஜாதியவாதமும் மத வாதமும் இருபெரும் ஆபத்து களாகச் சூழ்ந்துள்ளன. அப்பாவி உழைக்கும் மக் களுக்கிடையில் ஜாதிவெறியை யும் மதவெறியையும் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஜாதியவாதிகளும், மதவாதிகளும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவரிடை யேயும் இந்த நஞ்சைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய சூழ் நிலையில்தான் திராவிடர் கழ கம் மிகுந்த பொறுப்புணர் வோடு உடனடியாகக் களமிறங் கிச் சிறப்பாகச் செயலாற்றி வரு கிறது. தருமபுரியில் சேரிகளைச் சூறையாடிக் கொளுத்திய ஜாதி வெறியர்களைக் கண்டிக்கும் வகையில் உடனடியாக ஜாதி ஒழிப்பு மாநாட்டை தருமபுரி யில் திராவிடர் கழகம் நடத்தி யது. தற்போது நரேந்திரமோடி யின், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் ஸின் சமூக விரோத அரசிய லைக் கண்டிக்கவும், எதிர்க்கவும் ஏதுவாக, திருச்சிராப்பள்ளியில் திராவிடர் எழுச்சி மாநாட்டை ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார். இது இன்றைய சூழலில் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். திராவிடர் எழுச்சி மாநாடு என்பது தலித்துகள், பழங்குடி யினர் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்புக்கான மாநாடா கும். இந்த மாநாடு ஜாதி-மத வெறியர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பதாக அமைய வேண் டும். ஆகவே, இந்த மாநாட்டை முழுமையாக வெற்றி பெறச் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று யாவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

தமிழ் ஓவியா said...


மேரி கியூரி


விஞ்ஞானி மேரிகியூரி பிறந்த நாள் இந்நாள் (1867) நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரிய வர். இயற்பியல் (1903). வேதியியல் (1911) ஆகிய இரு துறைகளிலும் இரட்டை நோபெல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல; பாரிஸ் பல் கலைக் கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றிய முதல் பெண் என்ற மகு டமும் - இவருக்குண்டு. போலோனியம், ரேடியம் என்ற தனிமங்களைக் கண்டுபிடித்தவர்; கதிரி யக்கக் கோட்பாட்டை உரு வாக்கியவரும் இவரே!

விஞ்ஞானி மேரிகியூரி பிறந்த நாள் இந்நாள் (1867) நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரிய வர். இயற்பியல் (1903). வேதியியல் (1911) ஆகிய இரு துறைகளிலும் இரட்டை நோபெல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல; பாரிஸ் பல் கலைக் கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றிய முதல் பெண் என்ற மகு டமும் - இவருக்குண்டு.
போலோனியம், ரேடியம் என்ற தனிமங்களைக் கண்டுபிடித்தவர்; கதிரி யக்கக் கோட்பாட்டை உரு வாக்கியவரும் இவரே!

1914 - முதலாம் உல கப்போரின்போது ஆம்பு லன்ஸ் வாகனங்களில் எக்ஸ்கதிர் கருவிகளை பொருத்தி உயிர்களைக் காத்தார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் போலந்தில் பிறந்தவர் இவர். அவர் கண்டுபிடித்த அந்த ரேடி யம் கதிர் வீச்சின் காரண மாக ஏற்பட்ட ரத்த சோகை காரணமாக அதற்கே பலியான தியாகியானார்! (1934).

அவரைப்பற்றிய ஒரு முக்கிய தகவல்!

ரேடியம் கண்டுபிடித்த அம்மையாரிடம் அமெ ரிக்கப் பத்திரிகை ஆசிரியை ஒருவர் உங்களுக்கு வேண் டிய ஒன்றைக் கேட்கச் சொன்னால் எதைக் கேட் பீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கியூரி சொன்ன பதில்: எனக்கு ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது. ஆய்வுக்காக; ஆனால் அதன் விலையோ ஒரு லட்சம் டாலர் ஆயிற்றே! என்று பதில் சொன்னார் கியூரி. அந்தப் பத்திரிக்கை யாளரின் பண்பாடும், தொண்டறச் சிந்தனையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அந்தப் பத்திரிகையா ளர் அமெரிக்காவில் குழு ஒன்றை உருவாக்கி, பொது மக்களிடம் நிதி திரட்டி ஒரு கிராம் ரேடியத்தையும், வாங்கி மேரியை அமெரிக் காவுக்கே அழைத்து அமெ ரிக்கக் குடியரசுத் தலை வரின் கையாலேயே கொடுக்கவும் செய்தார்.

ரேடியத்தை வழங்கும் ஆவணத்தைப் பார்க்கும் பொழுது அது தன் பெய ருக்கு எழுதப்பட்டு இருந் ததைக் கவனித்து, அதைத் தம் ஆய்வு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி எழுதித் தரும்படிக் கூறினாரே பார்க் கலாம். தனக்குப் பிறகு அதற்கு தன் சந்ததியினர் உரிமை கொண்டாடி விடக் கூடாதல்லவா என்றார்.

இந்த நேரத்தில் ஒன்றை நினையுங்கள். தமக்காக தந்தை பெரியார் அளித்த சொத்துக்களை தனக்காக வைத்துக் கொள்ளாமல், அறக்கட் டளையாக்கி, அதன் பொறுப்பை நமது தமிழர் தலைவரிடம் ஒப்படைத் தாரே - அதையும் இவ்விடத் தில் நினைவூட்டுவது பொருத்தம் அல்லவா!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பல மொழிகளிலும் பெரியார் வலம் வருகிறார்


தஞ்சாவூர், நவ.7- பல மொழி களிலும் தந்தை பெரியார் வலம் வருகிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். இதுபற்றி இந்து ஏடு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

தந்தைபெரியாரைப் பற்றிய பாரதிதா சனாரின் பொன்னெழுத்துக்களான தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப பெரியாரின் கருத்துக்கள் இன்று உலகம் எங்கும் பரவியுள்ளது.

பிரென்சு, ஆங்கிலம் ஆகிய மொழி களில் பெரியாரின் சிந்தனைகள் மொழி பெயர்க்கப்பட்டு அய்ரோப்பிய கண்டங் களில் பலரைச்சென்றடைந்துள்ளது, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தரும் திராவிடர் கழக தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிரபல ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் பெரியாரின் சிந்தனைத்திரட்டு ஒரிய மொழியில் புகழ்பெற்ற ஒரிய மொழி எழுத் தாளரும் ஒரிய பல்கலைக்கழக தத்துவ யியல் பேராசிரியருமான தியானேஸ்வர் ஷாகு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் 29.10.2013 அன்று வெளியிடப்பட்டது.

ஒரிய மொழியை அடுத்து பெண்ணிய விடுதலையை மய்யமாக வைத்து பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூல் இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, கன்னடம், வங்க மொழி மற்றும் பிரென்சு மொழிகளில் பெரி யாரின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு பெருவாரியான மக்களை சென்றடைந் துள்ளது.

குஜராத்தியிலும் பெரியாரின் நூல்களை மொழிபெயர்க்க திட்டமிட்டு வருகிறோம், அகர்தலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரபல வங்கமொழி எழுத்தாளர்கள் பெரி யாரின் நூல்களை வங்கமொழியில் மொழி பெயர்க்க ஆவன செய்வதாக உறுதியளித் துள்ளனர், சிலர் தாங்கள் மொழிபெயர்த்த நூல்களையும் எங்கள் பார்வையில் கொணர்ந்தனர், ஏ.ஆர்.வெங்கடாசலபதி சென்னை கல்வி வளர்ச்சித்துறை பேரா சிரியர் பற்றி 1000 பக்கங்கள் அடங்கிய நூலை எழுதியுள்ளார், அதைப் பென் குவின் பதிப்பகம் வெளியிடுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


திராவிட நெருப்பை தின்னுமா ஆரியம்?


திருச்சி
கந்தக
மண்ணில்
தீர்மானிப்போம்
வாருங்கள்!

திராவிட
எழுச்சித் தோளின்
தீ(வி)ரத்தை
காட்டுவோம்
கூடுங்கள்!

யாரோ மோடியாம்
முண்டாதட்டி
சென்றாராம்
திருச்சியில்

பெரியார்
மண்ணென்று
சேதி சொல்ல
ஆளில்லையா
அவருக்கு?

அவருக்கும்
சேர்த்து
முரசடித்துக்
கூறுவோம்
புறப்படுக!

மனுதர்மம்
மண்மூடிப்
போன கதை
யெல்லாம்
புரியாதா?

கருஞ்சட்டை
மகளிர்ப்படை
வைத்த தீயில்
வெந்த கதைத்
தெரியாதா?

ஆச்சாரியார்
ஆட்சிக்கு
இருமுறை
வந்தாரே
தெரியுமா?

வாய்தா காலம்
ஆளாமல்
ஓடிப்போன
சங்கதி
புரியுமா?

பெரியார்
தடிதான்
அடித்து
விரட்டியது - இது
வரலாறு!

ஆட்சிக்குப்
போகாத
அய்யாவுக்கு
ஆட்சியே
காணிக்கை!

எந்த
நாட்டில்
நடந்தது
இந்த அதிசயம்?

இடம்
தெரியாமல்
கால்வைத்து
அவதிப்பட
வேண்டாம்!
ராமராஜ்ஜியமா?
இது என்ன
அயோத்தி
என்ற
நினைப்பா?

பெரியார்
கைத்தடியால்
வாங்கிய அடி
கொஞ்சமா
நஞ்சமா?

ராமனுக்கே
சாமி ராமசாமி
ஆயிற்றே
பெரியார்!

அழைத்துவா
பார்க்கலாம்
அந்த
ராமனை
இங்கு!

சேலம் என்று
சொல்லுங்கள்
பார்ப்போம்
ஒண்ணுக்கும்
போயிடுவான்

கால்வைத்துப்
பார்க்கிறார்
கருஞ்சட்டை
சேனையே
புறப்படு!

ஆழம் பார்க்க
ஆசையாம்
அரிமா
சேனையே
புறப்படு!

திருச்சி
பெரியாரின்
தலைமைப் பீடப்
பாசறை!

புயலே புறப்படு
புதுப்
புறநானூறு
படைத்திடவே!

தலைவர்
அழைக்கிறார்
தமிழகம்
திரளட்டும்!
திரளட்டும்!!

திராவிட நெருப்பை
தின்னுமா
ஆரியம்?
எங்கே பார்ப்போம்?

புறப்படு
புறப்படு
புலிநிகர்த்த
பாய்ச்சலோடு
புறப்படு! புறப்படு!!

தமிழ் ஓவியா said...


பஸ்வான்

வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி போட் டியிடவில்லை ஆர்.எஸ். எஸ்.தான் போட்டியிடுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மத ரீதியான பதற்றம் உட்பட, அனைத்துத் தந்திரங்களையும் அது கடைப் பிடிக்கும்.

- ராம்விலாஸ் பஸ்வான், தலைவர், லோசக்தி

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

புரியுது!

செய்தி: படேலை வகுப்புவாதி என்றார் நேரு.
- எல்.கே. அத்வானி

சிந்தனை: ஓகோ! அதனால் தான் பிஜேபி யினர் படேலைப் பிடித் துத் தொங்கிக் கொண் டுள்ளனரா?

தமிழ் ஓவியா said...


சிறப்பு

விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடையோர்க்கே சென்றவிட மெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)