Search This Blog

30.11.13

பார்ப்பான் மிரட்டலுக்கு நடுங்காதீர்! - பெரியார்


என் மீது கேஸ் (வழக்கு) உள்ளது; பெரிய கேஸ் 5, 6-வருடம் வரை சிறையிலிடும்படி தண்டிக்கலாம். 2-வருடமாவது தண்டிப்பார்கள். அதுவும் தண்டிக்கவில்லை விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்; 3000- பேருக்கு மேல் உள்ளே வைத்துவிட்டு நான் வெளியே இருக்க மனம் வருமா? மற்றவர்கள் என்னைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை; எனக்கே திருப்தி இருக்குமா? 3000-உடன் 3001-என்று இருக்க வேண்டும். எங்காவது இந்த அக்கிரமம் உண்டா? சாதி ஒழிய வேண்டும் என்பதற்காக எவ்வளவு கொடுமை!

திருட்டுப்பயல்கள் 4-பேர் சேர்ந்து நடத்துகிற அரசாங்கமாக இருந்தால் கூட இந்தக் கொடுமை நடக்குமா?

நீங்கள் கவனிக்க வேண்டியது இதுதான்; சிறை உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் எப்படி அங்குப் போவது என்று நினைக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? அவர்கள் எல்லோரும் அவர்களுக்காகவேதான் சிறை சென்றார்களா? அவர்கள்தான் மனிதர்களா? நாமும் நமது பங்குக்குச் செல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி ஏற்பட்டு மளமளவென்று காரியம் ஆக வேண்டும். அதுதான் உண்மையான சமுதாயக் கொந்தளிப்பு ஆகும். அதற்குத் தான் உண்மையான சமுதாயப் புரட்சி என்று பெயர்.

வருத்தத்தோடு சொல்கிறேன். அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள்! ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய்விடும். இக்கிளர்ச்சி அடிக்க அடிக்க பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக்கூடியதல்ல! அத்தனை பேருக்கும் சம்பந்தமான காரியம்! மந்திரிகளுக்கே சாதி ஒழியவேண்டாம் என்ற எண்ணம் இருக்காது. எனக்குத் தெரியும் அடக்குமுறையை நம்பாதீர்கள்! அடக்கு முறையை நம்பிப் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விடாதீர்கள்! இந்த உணர்ச்சியை ஒருக்காலும் அடக்குமுறை மூலமே நசுக்கிவிட முடியாது. இன்று மந்திரிகள் என்னைப் பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஏன்? அவர்கள் இருக்கும் இடம் அப்படிப்பட்டது. 100-க்கு 97-பேர் ஆக உள்ள ஒரு இனத்திற்கு அவர்கள் மனம் புண்படும் காரியம் நடந்தால் நாட்டை இராணுவம்தானே ஆளவேண்டும்?

வடநாட்டான் விடாதே பிடி, அடை என்கிறான்! யாரைச் சொல்கிறான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? உன்னைச் சொன்னால் என்ன? என்னைச் சொன்னால் என்ன?

அரசாங்க மரியாதை போய்விடும் என்று கருதினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதையாவது சொல்ல வேண்டுமே! நான் இப்போது விட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்றுதானே பார்ப்பான் என்னைச் சொல்லுவான்? அரசாங்கத்தின் கடமை, புத்திசாலித்தனம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டம் கொண்டு வந்து அடக்கிவிடலாம் என்பதே போதுமா? ஒரு சட்டம் பண்ணினால் போதாதே? அடுத்த ஒவ்வொரு காரியத்திற்கும் சட்டம் செய்ய வேண்டுமே?


நேரு படத்தை எரித்தால், சிலையை உடைத்தால் இப்போதுள்ள சட்டம் ஒன்றும் செய்ய முடியாதே! காந்தியாவது செத்துப் போனவர். அவர் பெயரை இழுப்பதால் நாமும் அவரை இழுக்கவேண்டியுள்ளது. உயிரோடு இருக்கிற நேரு படத்தைக் கொளுத்தினால் இனிமேல் அதற்கும் சட்டம் கொண்டு வருவார்களா? எதற்கு இவற்றையெல்லாம் செய்கிறோம்? பதவிக்குவரவா? அல்லது அரசாங்கத்தைக் கைப்பற்றவா? அரசினரைக் கவிழ்க்கவா?

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000-போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்திருந்த சில இடங்களுக்குப் போலீசே (காவல் துறையே) போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பகுதிப் பேரைக்கூடப் பிடிக்கவில்லை. அதற்கே அங்கிருந்து லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருச்சிராப்பள்ளி வந்து திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால்குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்ப திருச்சிக்குக் கொண்டுவந்து இப்படிப் பந்து விளையாடியிருக்கிறார்கள்!

3000-பேருக்கு மேல் போயிருக்கிறார்கள் என்று பெருமைப் படவுமில்லை. 1000- பேர் போனாலும் வெட்கப்பட்டிருக்கவும் மாட்டேன்; ஏன் ஓட்டுக்கு, பதவிக்கு, விளம்பரத்திற்காகவா இந்தக் காரியத்தைச் செய்கிறோம்.

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது. இன்னுமா பரீட்சை பார்க்க வேண்டும்?

சிலபேர் "இந்தக் காரியத்திற்கு இணங்கிவிட்டால் இன்னொரு காரியம் ஆரம்பிப்பார்" என்று யோசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரியம் ஆரம்பிப்பதாயின் முக்கியம் என்று கருதி ஆரம்பிப்போமே தவிர விளையாட்டுக்கா செய்வோம்?

அடுத்த காரியம் திராவிட நாடு இல்லையென்றாலும் தமிழ்நாடு தமிழருக்கு வரவேண்டுமா வேண்டாமா? அடுத்த காரியம் அதுதான்!

இந்தச் சட்டம் என்றால் என்ன? வடநாட்டான் தூண்டுதல் தானே? என் மீது வழக்கு எப்படி வந்தது? 2-நாள் முந்தி 'ஹோம் மினிஸ்டர்' (உள்துறை அமைச்சர்) சி.அய்.டி ரிப்போர்ட்டைப் பார்த்தோம் பத்திரிகைக்காரர்கள் சொல்வதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்கிறது. (பத்திரிகைக்காரர்களைப் பார்த்து) "உங்கள் ரிப்போர்ட்டைக் கொண்டு வாருங்கள்! ஒத்திட்டுப்பார்க்கலாம்; அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை" என்று சொல்லி விட்டாரே!

இந்த மாதிரியெல்லாம் சொல்லி விட்டு திடீரென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஆச்சாரியார் சொல்கிற மாதிரி வடநாட்டான் உத்தரவு வந்தது நடவடிக்கை எடுக்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்று டெல்லியில் நேரு பேசியிருக்கிறார்; பத்திரிகையில் பார்த்தால் தெரியும்! "இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனம்; சிலபேர் அவர்களுக்கு உள் ஆளாக இருக்கிறார்கள் (அதாவது இந்த மந்திரிகள் உள் ஆளாக இருக்கிறார்களாம்) நானே நடவடிக்கை எடுக்க வேண்டுமா" என்று பேசியிருக்கிறார்.

இவர்களைக் தவறாக நினைத்துப் பயனில்லை. இந்த நாட்டை வட நாட்டான் ஆள்கிறான்; அவன் உத்தரவு போடுகிறான்; அதன்படி நடக்கிறார்கள்!


வடநாட்டுப் பத்திரிகையெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலறுகின்றன. படம் போடுகிறார்கள் இது 'சங்கர்ஸ் வீக்லி' என்ற பத்திரிகை. இதில் படம் போட்டிருக்கிறான்; நான் பார்ப்பானை வெட்ட கையில் கோடாரி வைத்துக் கொண்டு ஓங்கிக் கொண்டு நிற்கிறேன். கருப்புச் சட்டைக்காரர்கள் பார்ப்பானைப் பிடித்து இழுக்கிறார்கள் பார்ப்பான்கள் மூலைக்கு மூலை ஓடுகிறான்கள். காமராசரை போலீஸ்காரன் போல போட்டிருக்கிறான். அவரைப் பார்த்து ஒரு பார்ப்பான் அய்யோ என்று கத்துகிறான். அவர் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு இதெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டது என்கிறாராம். இப்படிப் படம் போடுகிறான்.

இன்னொரு படம்: நான் நிற்கிறேன். வட நாட்டு மந்திரி - போலீஸ் மந்திரி பந்த் என் மீது நடவடிக்கை எடுக்க காமராசரைப் பிடித்தத் தள்ளுகிறார். அவர் அப்போதும் என்னிடம் நெருங்கப் பயப்படுகிறார். இப்படி ஒரு படம் போட்டிருக்கிறான். மந்திரிகள் நடுங்குகிறார்கள். மாஜிஸ்திரேட்டும் இந்த மந்திரி தயவை எதிர் பார்ப்பவர்கள். ஜில்லாதாஜிஸ்ரேட் மாத்திரமல்ல, அய்க்கோர்ட் ஜட்ஜ் கூட (உயர் நீதிமன்ற நீதிபதி) இப்போது மந்திரிகள் தயவை எதிர்பார்த்து ஆகவேண்டும்.

என் வழக்கில் முதலில் அவர்களேதான் சொந்த மூச்சலிகாவில் நீங்கள் போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி மூச்சலிக்காவை ரத்து செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத்தால் கஷ்டமாகத்தான் உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; கூட்டமுமில்லை நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி 'குத்து வெட்டு என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். என்னிடம் கையொப்பம் வாங்கி கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக்கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாதே போதே 22-ஆம் தேதி சம்மன் வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', 'சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சிகளுக்குத் துன்பம் கொடுப்பார் அதாவது காயப்படுத்துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக்கிறான்.

ஜட்ஜே (நீதிபதி) கேட்டாராம். என் காதில் விழவில்லை. சாட்சியைக் கலைப்பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள்தானே? அதுவும் ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்டதற்கு அந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த உணர்ச்சி உள்ளவர்கள்; அதாவது என் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதி கெடுத்துவிடுவார் என்கிறான்; நான்தான் எதிர் வியாஜ்ஜிமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிறபோது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த தேதியில் பேசினார்? ஆதாரமென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே? என்னைக் கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.

என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேசவில்லை என்று எழுதிக்கொடு என்கிறீர்களே என்றால் "உனக்கு நான் சொல்வது புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதையாவது எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.

இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் "எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிக்கைக்காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடியாக 'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழுதித் தருகிறேன் என்றேன். 'உடனடியாக' என்று போட்டிருக்கிறாயே அந்த வார்த்தையை எடுத்துவிடு என்றார்.

"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, குத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை முடியும் வரையில் அதுபோலச் சொல்லவில்லை. அதற்குமேல் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு வந்துவிட்டேன்; என்னைத் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்; நிம்மதியாக இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் செய்து கொண்டு விட்டார்கள்.

நான் 23-ஆம் தேதி இருக்கக்கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான் திரும்ப சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் பார்ப்பான் மிரட்டினால் எல்லாம் நடுங்குகின்றன. ஒரு மந்திரி நினைக்க வேண்டாமா?


ஆகவே வடநாட்டு தென்னாட்டை அடிமை மாதிரி நடத்துகிறது; எதுவும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை; எனவே தென்னாட்டைத் தென்னாடே ஆளவேண்டும். அடுத்து இந்தக் காரியம் தான் செய்யப்போகிறோம்.

இந்திய ராஜ்ஜிய - இந்திய யூனியன் ராஜ்யப் படத்தைக் கொளுத்தப் போகிறேன். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவர தடுப்புக்காவல் சட்டத்தின்படி பிடித்துப்போடுவேன் என்கிறான். அதாவது முத்துராமலிங்கத் தேவரைப் போட்ட மாதிரி எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் யாருக்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் அமைதியாக நடத்திக் கொண்டு வருகிற எனக்கும் அதுவா? நடக்கட்டுமே!

ஓர் அதிசயமான சம்பவம்! நான் சிறையிலிந்து வந்ததும் சொன்னார்கள்: சிறையிலிருந்து வரும் போதே போலீஸ்காரர்களைக் கேட்டேன். காரில் வரும்போது சொன்னார்கள் - ஏதோ நாலுபேர் குடுமி பூணூல் வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்; செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றார்கள். இங்கு வந்ததும் சிலர் சொன்னார்கள். சேர்ந்து பார்ப்பனர் தாங்களே இப்படிச் செய்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஒரு பார்ப்பன மிராசுதாரர் தூண்டிவிட்டிருக்கிறார். தன் ஆட்களை வைத்தே இதுபோல ஒரு காரியம் செய்து இருக்கிறார்.

நம் தோழர்கள் மீது பழி சுமத்த முயற்சி நடக்கிறது; (காவல்துறையினர்) போலீஸ்காரர்கள் இதற்குக் குப்பைக்கூளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இது போலச் செய்து கொள்கிற நிலை வந்துவிட்டது என்றால் மகிழ்ச்சிதான்.

இன்றும் சொல்கிறேன். கழகக்காரர்கள் அதுபோல நடந்திருப்பார்களானால், வெட்கப்படாமல் சொல்கிறேன், அது தவறு. அவர்கள் கழக்கக்காரர்கள் அல்ல; கழகக்காரர்கள் அதுபோல நடந்திருக்க மாட்டார்கள், பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை; ஆனால் அதை இப்போது செய்தால் அது தவறுதான்.

உயர்ந்த சாதிக்காரன் என்பதற்காக அதைக் காட்டிக் கொள்ளத்தானே உச்சிக்குடுமி, பூணூல். அதைப் பார்க்கும்போது எங்கள் இரத்தம் தொதிக்குமா இல்லையா?

ஆகவே ஓட்டல் போர்டுகளில் (உணவகப் பெயர்ப் பலகைகளில்) பிராமணாள் என்பதை அழிக்க வாய்தா கொடுத்ததுபோல் இதற்கும் வாய்தா கொடுப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது கழகத் தோழர்களால் என்று சொல்வது தப்பு உங்களுக்குத் தெரியாது. சென்னையில் பார்ப்பான் முகத்தில் தார் ஊற்றியதாகப் புகார் வந்தது. அவனே ஊற்றிக் கொண்டானா? யார் ஊற்றினார்கள் என்பது தெரியாது. போலீஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். "எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையாவது ஒருவரை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்கள். எச்சரிக்கை செய்து விட்டுவிடச் சொல்கிறோம். இல்லாவிட்டால் எங்களுக்குக் கஷ்டமாகும் என்றார்கள்" நானும் ஏமாந்துதான் போய்விட்டேன். தோழர்களிடம் சொல்லி ஒருவரை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லச் செய்தேன். ஒரு குற்றமும் அறியாத ஒருவர் ஒத்துக் கொண்டார். அபராதம் போட்டார்கள். அதைக்கூட போலீஸ்காரர்கள் தான் தந்தார்கள். ஆனால் அது என்ன ஆயிற்று என்றால் அதை வைத்துத்தான் தடையுத்தரவு போட்டார்கள்; போட முடிந்தது.


-------------------------- 28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு.-"விடுதலை" 30.11.1957

40 comments:

தமிழ் ஓவியா said...


டிசம்பர் -2 மறவாதீர்! தஞ்சையைப் பற்றி தந்தை


எங்கும் இயக்கத் தோழர்கள் இருந் தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக் குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல. நான் காங்கிரசில் இருந்த காலத்திலும், தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத் திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள் ளது.

எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ, அதைத் தமிழ்நாடு முழுவதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும்

தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் - தமக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்ட விழாவில் தந்தை பெரியார் சொன்ன வடிகட்டிய சொற்கள்தான் இவை (3.11.1957).

ஆம்! இந்தத் தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கமும் அளிக்கப்பட்டது. (1.2.1998).

ஆம்! இதே தஞ்சையில்தான் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழர் தலைவரிடத்தில் 100 சவரன் தங்கமும் அளிக்கப்பட்டது. (7.10.1979).

ஆம்! இதே தஞ்சையில்தான் வரும் டிசம்பர் 2ஆம் தேதி பெரியார் பேருருவச் சிலைக்காக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதியை அளிக்கப் போகிறார்கள்.

நமது தலைவருக்கு மட்டுமல்ல; இந்த வரலாற்றுப் பொன் மணக்கும் விழாவில் நாமும் பங்கேற்றோம் என்ற பெருமையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுவோம் - வாருங்கள் தோழர்களே வாருங்கள்!

குடும்பம் குடும்பமாக வாருங்கள்!

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சர் ஆ. இராசா பதவி விலக காரணமான உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாலியல் புகாரில் சிக்கினார்!

தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து, உடனே சுப்ரீம்கோர்ட்டுக்கு - சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து உச்சநீதிமன்ற நீதிபதி யானவர் வங்காளப் பார்ப்பனர் கங்குலி.

இந்தப் பெரிய மனிதர் மீதுதான் பெண் வழக்குரைஞர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு; தன்னுடைய உதவியாள ரான பெண் வழக்குரைஞரிடம் (65 வயது உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - அந்தக் கால கட்டத்தில் (62 - 65 வயது) பாலியல் புகார்!

மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எச். டட்டு, ரஞ் சனா தேசாய் ஆகியோர் விசாரணை முடித்து தலைமை நீதிபதியிடம் அறிக் கையை தந்துள்ளனர்!

நீதிபதி கங்குலி கொடுத்த வாக்கு மூலத்தில் உள்ள வாக்கியங்கள். (ஏடுகளில் வந்துள்ளபடி)

நான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் நான் உடல் ரீதியாக அவருக்கு எந்த துன்புறுத் தலையும் செய்யவில்லை. (அப்படியா னால் மன ரீதியாக நடத்தினேன் என்று சொல்லுகிறாரா என்று இதைப் படித்த வாசகர் கேட்கிறார்).
அந்தப் பெண் பயிற்சிக்காக என்னிடம் அதிகார பூர்வமாக ஒதுக்கப் பெறாத நிலையில் பயிற்சி பெற்றார்

கேள்வி: ஓட்டல் அறைக்கு நீங்கள் அழைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டி உள்ளாரே?

கங்குலி: அப்போது நான் பணி நிமித்தமாக டில்லியில் இருந்தேன். அவரும் டில்லியில் இருந்தார். அவர் தான் என்னை நாடி வந்தார்!...

ஒரு பெரு நிலை நீதிபதி (இவருடைய அனுமதியின்றி அவர் எப்படி ஓட்டல் அறையில் சந்திக்க முடியும் என்று கேட்கிறார் மற்றொரு வாசகர்)

இந்த வங்காளப் பார்ப்பன நீதிபதி, ஊழலை, லஞ்சத்தை, ஒழுக்கக் கேட்டை ஒரு போதும் சகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்ஜித்து, மற்றொரு பஞ்சாப் பார்ப்பன நீதிபதி யுடன் இணைந்து 2ஜி வழக்கில் அமைச் சர் ராஜாவை, விசாரணையே துவங் காத நிலையிலேயே பதவிலக வேண்டி கடும் தாக்குதல்களைப் பொழிந்த நீதிமான்! இவர் கதை இப்போது இப்படி!

உலகமே அறிந்து அகல விழி களைத் திறந்து பார்க்கிறது!

பார்ப்பனரல்லாத பஞ்சாப் தலைமை நீதிபதியாக, உயிருக்குத் துணிந்து பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டீஸ் வி. இராமசாமி மீது, ஏதோ கூடுதல் விலை கொடுத்து மேஜை, நாற்காலி வாங்கி யதையும், அனுமதியோடு ஊருக்கு டெலிபோன் எடுத்துச் சென்றதை யெல்லாம் ஊழலோ ஊழல் என்று ஓங்காரக் கூச்சலிட்டவர்கள் கங்குலி புராணம் கண்டு என்ன சொல்லப் போகிறார்கள்?

நடவடிக்கை வருமா? இல்லையேல் மனுதர்ம முறைப்படி நீதி தானா? நாடே கேட்கிறது!

பார்ப்பனர்களின் தகுதி, திறமை, இதோபதேசத்தின் யோக்கியதை இப் போது புரியவில்லையா?

தமிழ் ஓவியா said...


நடராஜன் கோயில்: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!


சிதம்பரம் நடராஜன் கோயிலை மீண்டும் தீட்சதர் பார்ப்பனர்களிடத்தில் ஒப்படைக்கக் கூடாது (அவர்கள் அடித்த கொள்ளைகள் போதும்! போதும்!!) என்பதை வலியுறுத்தி 4.12.2013 புதன் காலை 11 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலையருகில் நகர மக்கள் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார்கள். தோழர்களே திரள்வீர்! திரள்வீர்!!

- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பாலிமர் தொலைக்காட்சியில் அருள்மொழி

சங்கர்ராமன் படுகொலை வழக்கில் காஞ்சி சங்கராச் சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக பகுதி யில் நாளை (1.12.12003) இரவு 9 மணிக்கு நடைபெறும் விவாதத்தில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி பங்கேற்கிறார்.

தமிழ் ஓவியா said...




மோடியின்பிம்பத்தைப்பெரிதுபடுத்திக்காட்டும் இணையதளமோசடிகள்அம்பலம்!
தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தில்லுமுல்லுகள்!

புதுடில்லி, நவ.30- தொழில் நுட்பத்தில் நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி இணைய தளங்களில் பொய்யான வற்றையும், கற்பனை களையும் கலந்து நரேந் திரமோடியைத் தூக்கி நிறுத்தும் முகத்திரை தில் லுமுல்லு அம்பலத்துக்கு வந்துள்ளது.

கோப்ரா போஸ்ட் எனும் இணையதள ஏடு 'ஆபரேசன் புளு வைரஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் செயல்பாடு களை ஆய்வுசெய்தது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் போலியாகப் புகுந்த இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில், 12 நிறுவனங்கள் மற்றவர்களின் முக வரிக்குள் கடுமையான முறையில் உருவாக்குகிற ஒவ்வொரு கருத்துக்கும், ஏராளமானோர் ஆத ரித்து கருத்து எழுதுவது போல் ஓர் அறையில் அமர்ந்துகொண்டே எழுதித்தள்ளுகிறார்கள் எனத் தெரியவந்ததாக, கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருத்தா பஹல் தெரிவிக்கிறார்.

அவதூறில் பா.ஜ.க.வே முன்னணி!

இத்தகைய அவ தூறுப் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருப்ப தாகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பிரபலப் படுத்துவதற் காக விடியவிடிய வேலை செய்வதாகவும், இதற் காக பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருப் பது தெரியவந்தது என் றும் அவர் கூறுகிறார்.

மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஏராள மான முஸ்லீம்கள் கருத் துச் சொல்வது போல் தோற்றத்தை ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் பெயரில் கணக்குகளைத் துவக்கி பின்னூட்டங்களை இடுவதாகவும் அனி ருத்தா தெரிவிக்கிறார்!

போலியான பெயர்களில்....

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன அய்.டி. அய் நிபுணர் ஒருவர் கூறும் போது, முக்கிய மாக முகநூல் மற்றும் டிவிட்டர் இதர உலக அளவிலான முக்கிய ஊடகங்கள் நடத்தும் பிளாக்குகளில் பல விதமான பெயர்களில் கணக்குகள் திறக்கப் படுகின்றன.

இதற்கு நிலை வட்டு (ஹார்டு டிஸ்குகள்) தேவையில்லை. மேலும் இண்டர்நெட் வழங்கனில் (சர்வர் களில்) இருந்து பல போலியான பெயரில் அய்.பி முகவரிகள் உரு வாக்கி கொள்ளும் தொழில் நுட்பம் போன் றவை பிரபல இணைய தள கண்காணிப்பு சாத னங்களை ஏமாற்றிவிடும் ஆகையால் அவை எல் லாக் கணக்குகளையும் வேறு வேறு நபர்கள் அனுப்பியதாக காட்டிக் கொள்ளும்,

இதன் காரணமாக ஒரு குறிப் பிட்ட நபரைப்பற்றிய பதிவுகளை பலர் கூறுவ தாக எடுத்துக்கொண்டு தானாகவே அந்த இணையதளம் அந்த நபருக்குமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும், இந்த வகையில் தற் போது முன்னணி பத் திரிகையான டைம்ஸ், மோடியை இந்த வருடத் தில் சிறந்த மனிதர்கள் பட்டியலில் சேர்த்து வாக்குப்பதிவிற்கு விட் டுள்ளது. இதில் விழும் ஓட்டுக்களின் நம்பகத் தன்மை தற்போது கேள் விக்குறியாக உள்ளது.

தன்னைப்பற்றிய செய்தியை மறைக்கும் தொழில் நுட்பம்

தற்போது ஊடகங் களை விலைக்கு வாங்கி யதன் மூலம் மான்சி/மாதுரி என்ற பெண் ணைத்தொடரும் விவ காரத்தை மறைத்து, தெகல்கா விவகாரத்தை இரவும் பகலும் ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள், அதே போல் இணையதளத்திலும் மோடிக்கு எதிரான செய்திகளை தேடும் தளத்தில் இருந்து மறைத்து விடும் தொழில் நுட் பத்தையும் கையாண்டு வருகிறார்கள்,

எடுத் துகாட்டிற்கு குஜராத் மாநிலம் குறித்து தேடும் பட்சத்தில் மோடியின் பொய் பிரச்சாரங்கள் மட்டுமே அவர்களின் தேடலில் கிடைக்கும், உண்மை நிலவரங்கள் எதுவும் தேடுதளத்தில் கிடைக்காது. இது மிகவும் மோசமான ஓர் உதாரணமாகும் என்று பெங்களூருவைச் சேர்ந்த அய் டி நிபுணர் ஒருவர் கோப்ரா போஸ் டிற்கு தெரிவித்தார்.

இந்த வகையில் தான் உலகில் உள்ள முக்கிய பத்திரிகைகள் நரேந்திர மோடியை இந்தியாவின் முக்கிய நபராக தவறா கக் கணித்து விடுகிறது, மோடியின் டுவிட்டர் அக்கவுண்டில் இணைந் துள்ள லட்சக்கணக் கான நபர்கள் என்பது சில நூறுகள் கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற போலி அய்.டி.கள் மூலம் ஒருவர் நூறு கணக்குகள் கூட உருவாக்கி மோடி யின் ஆதரவாளர்கள் என காட்டிக்கொள்ள லாம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி அலை வரிசையில் மோடியின் இந்த மோசடிதனத்தை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


பெரியார் நூலக வாசகர் வட்டத்திற்கு வாழ்த்துகள்!

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் நடத்திப் பெருஞ் சாதனையைச் செய்துள்ளது. அதற்கான இரு நாள் விழாக்கள் சென்னை பெரியார் திடலில் நேற்றும் இன்றும்; ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டு இடையில் தொய்வு இன்றி தொடர்ச்சியாக 2000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்றால் அது ஒன்றும் சாதாரண செயல் அல்ல!

புயல் வீசினாலும், சுனாமி ஏற்பட்டாலும், கடும் மழை பொழிந்தாலும், வியாழன் மாலை என்றால் சென்னை பெரியார் திடலில், பெரியார் நூலக வாசகர் வட்டம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கை எல்லோர் மத்தியிலும் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை உண்டாக் குவதற்கு இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயலாற்றியிருக்க வேண்டும் என்று நினைத் துப் பார்க்க வேண்டும்.

தொடங்கும்போது ஆர்வமாக வருவார்கள். அது தொடரும்போது தான் ஆயிரத்தெட்டுச் சிக்கல்; நிருவாகிகளுக்கிடையே கருத்து மோதல்; குழுக்களாகப் பிரிந்து செயலாற்றுதல் என்ற நோய்த் தாக்கி அந்தச் செடி பட்டுப் போய் விடும்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் அதற்கு விதி விலக்கு; ஓர் அமைப்பு கூட்டுப் பொறுப்போடு, நல்ல குடும்ப உறவோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டே பெரியார் நூலக வாசகர் வட்டம்.

1976 நெருக்கடி நிலை காலத்தில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் கைது செய்யப்பட்ட கால கட்டம் அது.

அந்த நேரத்தில் நண்பர்கள் சிலர் சேர்ந்து இப்படி ஒரு கரு உருவாக்கப்பட்டது. செவ்வாய் தோறும் பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் கருத்துகளை பரிமாறிக் கொள்வது என்று ஆரம்பிக்கப்பட்டது.

நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பின்னர் அதிகார பூர்வமாக ஓர் அமைப்பாகத் தொடங் கப்பட்டது. திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகளுள் ஒன்றாக பெரியார் திடலில் இயங்கி வருகிறது. வியாழன் மாலை வாரந் தோறும் நடைபெறும் கூட்டத்தில் தமிழ் நாட்டில் குறிப்பாக தலைநகரில் பேசாத முக்கிய தலைவர்களோ, சிந்தனையாளர்களோ, பகுத் தறிவாளர்களோ அரிது என்றே கூறலாம்.

இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டு மானால் இந்த அமைப்பில் பேசுவது பெருமைக் குரிய ஒன்று என்று கருதும் அளவுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டம் வளர்ந் தோங்கியுள்ளது.

தமிழுக்கும், தமிழினத்துக்கும், முற்போக்குக் குத் தொண்டு செய்துள்ள பெரு மக்களுக் கெல்லாம் விழா எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் விழாவாம் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அய்யா அண்ணா பிறந்த நாள் விழாக்கள் கலை விழாக்களாகக் கொண் டாடப்பட்டு வருகின்றன - போட்டிகள் நடத்தப்படுவதும் உண்டு.

வெறும் கூட்டங்கள் என்பதோடு அல்லாமல், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வமைப்பில் ஆற்றப்பட்ட சிலரின் உரைகள் நூலாகவும் வெளி வந்துள்ளன. குறிப்பாக புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் சொற்பொழிவுகளை நடத்தி, அந்தவுரைகள் தொகுக்கப்பட்டன. பெரியாரியல் இராமா யண ஆய்வுச் சொற்பொழிவுகள் என்ற நூல்களாக வெளிவந்துள்ளன.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பார்வையாளராக வந்த சிலர் பிற்காலத்தில் எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், ஏன், அமைச் சர்களாகவும்கூட ஆகி இருக்கின்றனர்.

2000 நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பெரியார் நூலக வாசகர் வட்ட நிருவாகிகளைப் பாராட்டு கிறோம். மேலும் வளர்ந்து கின்னசில் இடம் பிடிக்கச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறோம்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


உழைப்பு


எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.

(விடுதலை, 11.4.1947)

தமிழ் ஓவியா said...

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக்கு இடமில்லையெனில் திராவிடர் கழகம் கிளர்ந்து எழும்! - தமிழர் தலைவர் கி.வீரமணி

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்! - நீதியரசர் ஏ.கே. ராஜன்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதிக்கு இடமில்லையெனில் திராவிடர் கழகம் கிளர்ந்து எழும் என்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், தற்போதுள்ள நீதிபதி கள் தேர்வு முறையில் கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும் என்று நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் அவர் களும் பேசினார்கள். உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன ஆணையம் 2013 (Judges Appointment Commission - 2013) பற்றிய ஆய்வரங்கம் திராவிடர் கழக கூட்டத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் (28.11.2013) நடைபெற்றது.

முற்றிலும் புதிய நோக்கில் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மசோதாவில் (Bill) சேர்க்கப்பட வேண்டிய கருத்துக் கள் இந்த ஆய்வரங்கில் அலசி ஆராயப் பட்டது. தமிழர் தலைவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டதைப் போல புதிய சிந்தனையை சமூகநீதி வெளிச் சத்தை நீதிபதிகள் நியமனத்தில் பாய்ச்ச வேண்டும் என்பதை தொட்டுத்தான் காட்டி இருக்கிறோம் என்றார்.

பனிப்பாறையின் முனைதான் தெரிந்திருக்கிறது. இனி மேல் தான் முழுமையாகத் தெரியவரும். சென்னை பெரியார் திடலில் நீதிபதிகள் நியம னத்தில் சமூகநீதிக்கு இடமளிக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற முழக் கம் எழுப்பப்பட்டு இருக்கிறது. இக் குரல் இந்தியாவெங்கும் ஒலிக்க வேண் டும்.

தமிழ் ஓவியா said...

ஒலிக்கும் என்கிற நம்பிக்கையை தமிழர் தலைவரின் கடந்த கால செயல்திட்டங்கள் - சிந்தனைகள் நமக்குக் காட்டுகின்றன. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கழக வழக்குரைஞர் அணியின் தலை வர் வழக்குரைஞர் த.வீரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

இந்த ஆய்வரங்கத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் நீதிபதிகளை நியமிக்கும்போது சமூகநீதி கண் ணோட்டத்தில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

புதிய நீதிபதிகளை நியமிக்கும் ஆணையம் (Judges Appointment Commission - 2013) மசோதாவினை மாநி லங்களைவையில் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்தது போல கொண்டு வந்திருக்கிறார்கள். அடுத்து மக்கள வையில் (Lokshaba) நிறைவேற்றிட வேண்டும். பல பிரதமர்களைக் கண்ட, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைப் போல இது ஆனாலும் ஆகலாம்.

நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்திட அரசியல் சட்டத்தின்படி அதி காரம் உண்டா? புதிய மசோதாவில் எப்படிப்பட்ட மாற்றங்கள் தேவை? என்பனவற்றை ஒரு பெரியார் தொண் டன் - சமூகப் போராளி, சமூகநீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் (Equality for law) எல்லாருக்கும் எல்லா மும் என்கிற ஆழ்ந்த சிந்தனையுடன் இந்த இயக்கம் களத்தில் நிற்கிறது.

அரசியலமைப்பை உருவாக்கும் போது ஒவ்வொரு சொல்லையும் கவனமாக எடுத்துப் போட்டிருக் கிறார்கள். அவ்வாறு விடுபட்டுப் போனால் அரசியலமைப்பின் உறுப்பு 368-அய் பயன்படுத்தி திருத்தமும் கொண்டு வந்துவிடலாம். அரசியல மைப்பின் முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால் தான் ஏற் பட்டது. எனவே தலைக்குத் தான் குல் லாயே தவிர; குல்லாய்க்காகத் தலை அல்ல, அதைப்போல மக்களுக்காகத் தானே சட்டமே ஒழிய, சட்டத்திற்காக மக்கள் அல்ல.

சட்டமியற்றும் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை இம்மூன்றும் அரசியலமைப்பின் அங்கங்கள். இதில் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட அதி காரங்கள் உள்ளன, (Separation of powers) எனவே இப்போதுள்ள கொலி ஜியம் முறைக்குப் பதிலாக பழைய முறையே வரவேண்டும். அதில் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது விரிவாக்கப்பட வேண்டும். நமது அரசி யலமைப்பு கூட முதலில் சமூகநீதி, பொருளாதாரம், அரசியல் என்றே சமூக சமத்துவத்தை வலியுறுத்து கின்றது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்தம் 31 இடங்களில் 30 இடங்கள் நிரப்பப்பட்டு ஒரு இடம்தான் காலி யாக வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் ஒருவர் கூட தாழ்த்தப் பட்டவர் இல்லை என்றால் இதில் சமூகநீதிக்கு எங்கே இடம் இருக் கிறது?

சட்ட அமைச்சகம் அண்மை யில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முழுவதும் 906 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இடங்களுக்கு அனு மதியளித்திருப்பினும் தற்போது 650 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக் கின்றன. 256 இடங்கள் காலியாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு காலியிடங்களை உயர்நீதிமன்றங் களில் வைத்துவிட்டு லட்சக்கணக் கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி இருக்கின்றன என்றால் தேங்காமல் என்ன செய்யும்?

கொலிஜியம் முறைதானே தற் போது நடைமுறையில் உள்ளது? அப்புறம் ஏன் - இவ்வளவு காலி யிடங்கள்? எனவே கொலிஜியம் முறை வேகமான நடைமுறைகளைக் கொண்டது என்கிற வாதம் செய லிழந்து விடவில்லையா?

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்விலும் அகில இந்திய அளவி லான மூத்தோர் பட்டியல் முறையை (All India Seniority)
மாற்றிட வேண்டும். நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பிற்படுத்தப்பட்ட நீதிபதியாவார். எனவே ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

நம்முடைய சகோதரர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் தகுதி, திறமையில் குறைந்தவர்கள் அல்ல. வெளிமாநிலங் களில் இருந்து இங்கு வருபவர்களுக்கு தமிழும் தெரியாது, தமிழ்நாடும் தெரியாது. எனவே தலைமை நீதிபதியாக தமிழர்களையே நியமிக்க வேண்டும். தலைமை நீதிபதிக்கு தமிழ் தெரியவில்லை என்றால் இரண் டாவது நீதிபதியைத் திரும்பிப் பார்க்கிறார். அவருக்கு தெரியவில்லை எனில் மூன்றாவது நீதிபதியைக் கேட்க வேண்டும்.

Soil Psycology

எனவே நமது நாட்டில் நாவிதர், சலவைத்தொழிலாளி, மீனவர் சமு தாயங்களில் நீதிபதிகள் இல்லையே ஏன்? நூற்றுக்கு 97 விழுக்காடு உள்ள நம்மவர்கள் நீதிபதிகளாக இல்லையே. மாறாக 2.5% வீதமே உள்ள, அதிக பட்சம் 3% விழுக்காடு உள்ள பார்ப் பனர்கள் அவர்களின் எண்ணிக்கைக் கும் மேலாக முழுமையாக ஆக்கிர மித்தது ஏன்? அடுத்த பட்டியலில் நமக்கான வாய்ப்பு மறுக்கப்படு மானால் திராவிடர் கழகம் கிளர்ச் சியில் ஈடுபடும் என்பதை பகிரங்க மாகவே தெரிவிக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதி பதியாக ஒரு வடநாட்டுப் பார்ப்பனர் வந்தார்.

6 இடங்களுக்கு 6 பார்ப் பனர்களை சிபாரிசு செய்தார்; அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியது - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் நாட்டின் மண்ணின் மனப்பான்மை Soil Psycology என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்பதையும் நினைவூட்டுகிறேன். எனவே புதிய நீதிபதிகள் நியமன மசோதாவில் சமூகநீதியோடு கழக மாற்றங்கள் தேவை. அம்மாற்றங்கள் ஏமாற்றங் களாகி விடக்கூடாது என்று குறிப் பிட்டார்.

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக வரதராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூறு ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் நீதிபதியாக வரவில்லையே ஏன் என்ற வினாவை பெரியார் எழுப்பினார். கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த நிலையில் கடலூர் மாவட்ட நீதிபதியாக இருந்த வரதராசன் அவர் களை சென்னை உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தார். அதே வரதராசன் தான் உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியும் ஆவார்.

ஏ.கே. ராஜன்

முன்னதாக சிறப்புரை ஆற்றிய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் பல்வேறு சட்ட நுணுக்கங்களுடன் புதிய நியமன மசோதாவில் (Bill) சேர்க்க வேண்டிய விவரங்களை விளக்கி தெளிவுபடக்கூறினார்.

அவரது உரையில்...

பெரியார் திடலில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் பேசுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய அரசியலமைப்புச் சட்டமே அவச ரத்தில் இயற்றப்பட்டது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. பல சட்டப்பிரிவுகள் ஆழ்ந்த நுணுக்கங் களை - ஆராய்ச்சி செய்து வைத்திருக் கிறார்கள். ஆனால் சில சட்டப் பிரிவுகள் அவ்வாறு இல்லை. அதே போல உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் நிறைய வித்தி யாசம் உண்டு. தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய முடியாது. இதற்கு அரசியலமைப்பு சட்டத்திலும் இடமில்லை.

உறுப்பு 217-இல் கூட சாதாரண நீதிபதிகளின் பணியிட மாற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக் கிறதே ஒழிய தலைமை நீதிபதியைப் பற்றி சொல்லப்படவில்லை. இதனை முதன்முதலில் சொன்னவர் நீதியரசர் இஸ்மாயில் தான். உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியை தேர்வு செய்ய மத்திய அரசின் அமைச்சரவை தலைவரும் குடியரசுத் தலைவரும், உயர்நீதி நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ் ஓவியா said...

1993 வரை இருந்த முறையில் ஒரு பொதுநல வழக்கின் மூலம் (Public interest Litigation - PIL) உச்சநீதிமன்றம் இப்போதுள்ள கொலிஜியம் முறையை வகுத்தது. அதில் தலைமை நீதிபதி என்றால் தலைமை நீதிபதி ஒருவரை மட்டும் குறிப்பதல்ல. தலைமை நீதிபதி யுடன் மேலும் நான்கு நீதிபதிகளையும் சேர்த்து அமர்வைக் குறிப்பதாகும்.

இவர்கள் தேர்வு செய்து அனுப்பும் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசியலமைப்பினை திருத்துவதற்கு உறுப்பு 368 வாய்ப்பளிக்கிறது. இதில் இரண்டு முறைகளில் இத்திருத்தங்கள் நடைபெறலாம். ஒன்று மக்களவையின் பெரும்பான்மையின் மூலம் திருத்தம் செய்வது. மற்றொன்று உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பின் மூலம் திருத்தம் செய்வது ஆகும்.

நீதிபதிகள் தாங்களே தங்களை நியமித்துக் கொள்ளுவது தவறானது என்று திராவிடர் கழகம் தொடக்கம் முதலே கண்டித்து வந்திருக்கின்றது. வேறு மாநில நீதிபதிகளை நியமிக்கும் போது உயர்நீதிமன்றங்களில் மாநில அரசுகள் எவ்வித எதிர்பையும் காட்டுவதில்லை ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றன.

தற்போது புதிதாக கொண்டு வரப்பட உள்ள நியமன ஆணையத் தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் வெளியிலிருந்து சமூக ஆர்வலர்கள் இருவர் என நியமிக்க இருக்கிறார்கள். இக்குழுவின் ஆலோச கராக மத்திய சட்டத்துறை செய லாளர் இருப்பார்.

புதிய மசோதாவின் சட்டப்பிரிவு 8(1)ன்படி மத்திய சட்ட செயலாளர் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங் களை நிரப்ப மாநில தலைமை நீதிபதிகளுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பட்டியல் அனுப்பிட வேண்டுகோள் விடுப்பார். அவ்வாறான பட்டியலைப் பெற்று அதிலிருந்த தேர்வு செய்வார்கள் என்று குறிப் பிடுகிறது. இதில் அந்த பட்டியலில் உள்ளவர்களை எதன் அடிப்படை யில் தேர்வு செய்வது என்பது தெளி வாகக் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

அதேபோல ஜேஏசி (JAC) யின் பரிந்துரை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு சென்று விடுமா? அல்லது இவர்களே தெரிவு செய்து ஒப்புதலை மட்டும் குடியரசுத் தலைவரிடம் பெறுவார்களா என்பது பற்றியும் இந்த மசோதாவில் தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை.

அதேபோல புதிய மசோதாவில் நீதிபதிகளை கேண்டிடேட் (Candidate) என்ற சொல்லினால் பயன்படுத் துகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியலமைப்பின் மூலம் பதவிக்கு வருபவர்கள், அவர்களை கேண்டி டேட் என்ற சொல்லினைப் பயன் படுத்துவது மிகுந்த ஆட்சேபத்துக் குரியது ஆகும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூட பல திருத்தங்களில் பல தவறான சொற்களைப் பயன்படுத்தியிருக்கி றார்கள். உறுப்பு 243-இல் கூட பஞ் சாயத்து நகராட்சிகள் பயன்பாட்டின் பிழையான சொல்லினை பயன் படுத்தியிருக்கிறார்கள். எனவே இது போன்ற சொற்களைப் பயன்படுத்தி சட்டத்தின் தரத்தினை குறைக்கக் கூடாது. அதே போல நீதிபதிகள் நியமனத்தில் அகில இந்திய பதவி மூப்பு முறையினை (All Inda Seniority System) கைவிட வேண்டும்.

மேலும் நம்முடைய நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்தால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேஷ், சிக்கிம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குத்தான் மாற்று வார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தலைமை நீதிபதிகளாக மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரசேதம் மகாராட் டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வர்களை நியமிப்பார்கள்.

ஏன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நீதிபதிகளை பம்பாய், அலகாபாத், கல் கத்தா ஆகிய மாநிலங்களில் நியமிப்ப தில்லை? அரசு ஊழியர்களைப் போல நீதிபதிகளை மாற்றக்கூடாது. உச்ச நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் அனைத்து அதிகாரமும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உண்டு.

வயதில் வேறுபாடு

தமிழ்நாட்டில் 50 வயதிற்கும் மேற் பட்டவர்கள்தான் உயர்நீதிமன்றத் திற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் 36 வயதில் கூட தேர்வு செய்யப்படுகிறார்கள் இதன் காரணமாக அகில இந்திய மூப்புப் பட்டியலில் நம்மாநிலத்தவர்கள் பின் தங்கிடும் நிலை.

கொலிஜியம் முறையில் எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. இந்த முறையை மாற்றி புதிய திருத்தங் களைச் சேர்த்து சமூகநீதிக்கு பயன்படும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் இவ்வாறு நீதி யரசர் ஏ.கே.ராஜன் தனது கருத்து களைத் தெரிவித்தார்.

முடிவில் கழக சட்டத்துறை துணைச்செயலாளர் வழக்குரைஞர் வீரமர்த்தினி நன்றி கூறினார்.

இதில் ஏராளமான கற்றறிந்த வழக் குரைஞர்கள், சட்ட வல்லுநர்கள், சட் டக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்துறையைச் சார்ந் தோரும் பங்கேற்றிருந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், வரியியல் அறிஞர் எஸ்.ராஜ ரத்தினம் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் தியாகராஜன்,

வழக்குரைஞர்கள் மாவட்ட நீதிபதி (ஓய்வு) இரா.பரஞ்சோதி, மாநில மாணவரணி துணைச்செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன், கரூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.இராஜசேகரன், வழக்குரைஞர்கள் பழனிமுத்து, குணசேகரன், சுரேஷ், மோகனவேல், கோவிந்த், கொரட்டூர் பன்னீர்செல்வம், பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் கி.சத்தியநாரா யணசிங், வழக்குரைஞர்கள் க.காயத்ரி, ப.கவிநிலவு, இரா.சீனிவாசராவ் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு

சென்ற வாரம் 22, 23 ஆம் தேதிகளாகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட, நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு, பெங்களூர் சட்ட சபை மெம்பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சாஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது.

சுமார் ஆண், பெண் உள்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய் திருந்தார்கள். அவ்வாலிப சங்கத்தலைவரும், மகாநாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபன்யாசமும் வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களும், பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.

அவற்றை ஒவ்வொருவரும் கவனித்துப்படிக்க வேண்டியது அவசியம். தவிர, இம்மகாநாடானது அளவுக்குமேல் வெகுவிமரிசையாகவும் அதி ஊக்கமாகவும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்டதென்பதையே காட்டுகிறது.

அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உலகத்தையே மூட நம்பிக்கையிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளாகவே இருந்தன.

உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத் தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங் களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டும் என்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும், கசையடியும் கொடுக்கவேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்கு கிறது.

அன்றியும் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு உள்ளதுபோலவே பெண் களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண் களுக்கும் குடும்பச் சொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும்போது அனுபவித்து வந்த வாழ்க்கை யையே அளிக்கவேண்டுமே அல்லாமல்,

ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக்கொண்டு வக்கீல் வீடுகளிலும், கோர்ட்டுகளிலும் அலையா திருக்கச் செய்யவேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக் கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின்றன.

இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங் களுடன் திருப்தி அடைந்துவிடாமல் இவை அமலுக்கு வரத் தகுந்த அளவு வேலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிபர் மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மனங்களே நிறைவேறி இருக்கின்றன.

ஒரு நாடு விடுதலையடைய வேண்டுமானால், அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வரவேண்டும் என்கின்ற ஆப்தவாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறி குறிகள் காணப்படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்ற தானது இம்மகாநாட்டால் அறியலாம், ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் B.A.L.T.; ஊ.ஏ நாயகம் B.A.;பாரிஜாதம் B.A.; இந்திராணி பால சுப்ரமணியம், ஸ்கவுட் மாஸ்ட்டர், அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள் முதலிய ஸ்திரீ ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத் தாய்மார் களையெல்லாம் உறுதிப்படுத்தியது.

எனவே, வாலிப சங்கத்தையும், இம்மகா நாட்டையும், அதன் நிர்வாகிகளையும், அதற்கு ஆதரவளித்த பெரியோர்களையும் நாம் மனப் பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927

தமிழ் ஓவியா said...

ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?

- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927

தமிழ் ஓவியா said...


வீரமணிபற்றி உலக இதழ்கள்


ஆனந்த விகடன் பார்வையில் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி போன்றவர் பேசும்போது குறுக்கே பேச மாட்டார் கவன மாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர் களைக்கூட வாங்க போங்க என்று தான் சொல்வார்.

நன்றி: ஆனந்த விகடன் 22.5.1983

சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறி பிசகாது, மலிவான விமர்சனங்களில் இறங்காது, தொய்வு தட்டாமல் பேசக் கூடிய நா. வல்லவர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.

நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு 1983

பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.

நன்றி: நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 3, 1982

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற இயக்கம் பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கையில் வலிமை மிக்கதாகவும், சக்தி வாய்ந்த இயக்கமாகவும் இருக்கிறது. அதன் தலைவர் கி.வீரமணி.

நன்றி: இந்தியா டுடே ஜனவரி 15, 1983.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கணிப்பு!

வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்சக் காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர்.

இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்-படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

- விடுதலை 6.6.1964)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கணிப்பு!

வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்சக் காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர்.

இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்-படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

- விடுதலை 6.6.1964)

தமிழ் ஓவியா said...


கண்மணி வீரமணியின் அரும்பணி


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர் களால் தமிழர்க்குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாது காக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல;

அவற்றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலைவனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர் களின் இசையில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத்திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன். அருவியில் குளித்தோர்க்கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை.

அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும் எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச்சியைத்தான் என் னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத் துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரம் மிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார்.

என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.

அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்ட மாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப் போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார் களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன் தான்.

(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்


இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக் கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டி ருக்கும் தமிழினத் தலைவர்களில் பகுத்தறிவுத் தமிழராகத் திகழும் அய்யா கி.வீரமணி அவர்கள், நீதி மன்றங்களில் திருக்குறள் தேசிய நூலாக வைக்கப்பட வேண்டும் என அனைவருக்கும் முகாமை யான வேண்டு கோளாக விடுத்திருப்பதை உலகத் தமிழர் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாகத் திகழும் லண்டன் த.மு.க. வழி மொழிந்து நெஞ்சார வரவேற் கின்றது.

திருக்குறள் நீதி நூல் நேர்மையில்லா செயலுக்கு நெற்றியடி கொடுத்து நீதியை (பக்க சார்பற்ற முறையில்) நிலை நிறுத்தும் ஒப்பற்ற அரிய நூல்.

உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி, தமிழ் செம்மொழி என அறிவிக்க ஆதாரமாக இருப்பவை திருக்குறளே. 2000 ஆண்டு களுக்கு மேலான வாய்மைச் சிறப்பு மிக்க நூல் என உலகமாந்த இனமே நெஞ்சார ஏற்றுச் சிறப்படையும் சிறந்த நூல் என்பதை தமிழக அனைத்து மக்களும் சமய வேறுபாடு களின்றி தர்க்க வாதங்கள் செய்திடாது, பகுத்தறிவுச் சிந் தனையோடு முழு ஆதரவு நல்கி அறிவு நூலான திருக்குறளை நீதி மன்றங்களில் வைத்துப் போற்றிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தமிழர்களின் எண்ணம் ஈடேறிட! வாழ்வு முன்னேறிட வாய்மை வெல்லும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!


லண்டன்
10.9.2004

- ம. தேவதாசு,
லண்டன் தமிழர்
முன்னேற்றக் கழகம்

தமிழ் ஓவியா said...


ஆதி திராவிடர் தனிப் பிரிவு உண்டா?


கேள்வி: திராவிடர் கழகத்தில் ஆதிதிராவிடர் பிரிவு என்று ஒன்று உண்டா?

பதில்: திராவிடர் கழகத்தில் அப்படி ஒரு பிரிவு நிச்சயம் இல்லை. இருக்க முடியாது. காரணம், திராவிடர் கழகம் என்ற அமைப்பில் உறுப்பினர் ஆனாலே ஆதிதிராவிடர், மீதித் திராவிடர் என்ற பேதம் தானே பறந்துவிட வேண்டுமே!

சென்னை மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் அவர்களிடம் திராவிட நாடு திராவிடருக்கானால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம்? என்று கேள்வி கேட்கப்பட்ட போது, அய்யா அவர்கள் சொன்ன பதில் லாபம் இல்லை. நட்டம்தான். ஆதி என்ற இரண்டு எழுத்துக்களை வெட்டியெறிந்து விடுவோம் என்றார்கள்.

அரசியல் கட்சிகளால் இப்படி ஒன்று வாக்குகளை வைத்தே உருவாக்கப்படுகிறது. உண்மையான சமுதாயப் புரட்சி இயக்கத்தில் எப்படி அது இருக்க முடியும்? அதே நேரத்தில், சமுதாயத்தில் அழுத்தப்பட்டு அடித்தளத்தில் கிடக்கும் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திராவிடர் கழகம் அன்று முதல் இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணியின் பதில்
(விடுதலை ஞாயிறு மலர் 21.8.1994)

தமிழ் ஓவியா said...


வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாதாம்! மசோதாவைத் தடுத்து நிறுத்துவீர்!


மத்திய மனிதவள அமைச்சக மான கல்வி அமைச்சு நாடாளு மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாகாணங்களில் OBC என்ற இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளது. அங்கே OBC பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வட கிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா?

இது சரியான தகவலாக இருப்பின் இது வன்மையான கண்டனத் திற்குரியதே!

சமூக நீதி, இட ஒதுக்கீடு இந்தியா முழுவதற்கும்தான். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப் பாடு எடுப்பது தவறான சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டு வதால், அதனைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார் களாம். இது ஓர் ஆபத்தான ஆரம்பமாகும்; முளையிலேயே இது கிள்ளி எறியப்படவேண்டும்.

உடனடியாக சமூக நீதிக்கான அனைத்து அமைப்புகளும், இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண் டும்.

- கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் (விடுதலை: 5.8.2011)

தமிழ் ஓவியா said...


குடும்பங்களின் வாழ்த்துக்கள்!


உள்ளமெல்லாம் நிறைந்தே தான்

நன்றியுடன் வாழ்த்துகின்றோம்!

உறவுக்குப் பலர் இருப்போர்

உங்களிடம் அன்பு பெற்று

குடும்பத்து மூத்தவர் போல்

உங்களிடம் கலந்து பேசி

தாங்கள் பெறும் ஆறுதலை

குடும்பம் குடும்பமாய்

நன்றியுடன் நினைத்தேதான்

வாழ்த்துகின்றோம் இன்றும்மை!

எப்படித்தான் உணர்வீரோ

ஆறுதல் தேவையுள்ளோர்

கேட்குமுன்னே அறிந்திடுவீர்

அன்பான வார்த்தைகளே

அருமருந்தாய் கவலைபோக்கக்

கனிவான கருத்துக்கள்

குடும்பங்கள் ஏற்றிடுமே!

எத்தனைத் தொண்டர்கள் எங்கெங்கோ இருந்திடினும்

அத்தனையும் அத்துபடி

அவர் பெயரை அழைத்திடுவீர்!

அவர் தொல்லை தீர்த்திடுவீர்!

அத்தனைக் குடும்பங்களும்

அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்

ஆசிரியர் வாழ்க வென்றே!

நூறாண்டு வாழவேண்டும்!

நூற்றாண்டு நாயகனின்

நிழல்போலத் தொடர்ந்திடுவோம்!

- சோம.இளங்கோவன்.

தமிழ் ஓவியா said...


உமை நினைப்பது இன்றா?

இல்லை இல்லை என்றும் எப்போதும்!

அஞ்சா நெஞ்சனே, எங்கள் அண்ணனே

பதவிக்கோட்டை தேடாத பட்டுக்கோட்டையே!

வளையாத லட்சியமே!

வரவு நாடா தியாகமே!

எதிர்ப்பில் சிலிர்க்கும் சிங்கமே

எங்கள் வழிகாட்டிக் கருவியே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

என்றும் எப்போதும் தான்!

எங்கள் லட்சிய நடையின் வேகமே

தொண்டறத்துக்கு ஏது சாவு? எம்

தொண்டுப் பழத்தின் துவளாத துணையே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

இல்லை என்றும் எப்போதும்!

எங்களின் குருதி ஓட்டமே, கொள்கைச்

சட்டாம்பிள்ளையே, உம் நினைவு

எமக்கு என்றும் எப்போதும் தான்

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அருண்ஷோரி நூலுக்கு மறுப்புரை: தோழரின் உணர்ச்சிக் காவியம்!


டாக்டர் அம்பேத்கர்பற்றி பார்ப்பன எழுத்தாளர் அருண்ஷோரி எழுதிய நூலை விமர்சித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையைச் செவிமடுத்த தோழர் ஒருவரின் உணர்ச்சிக் காவியம்!

அன்புத் தலைவ! ஆகஸ்ட் திங்கள் 5,6 தேதிகளில் (1997) பெரியார் திடலில் அருண்சோரிக்கு தங்களின் ஆணித்தரமான மறுப்பும், அவருக்கு ஆதரவு தருவோருக்கு, வெட்கித் தலைகுனிகின்ற வகையில் தங்களின் ஆழ்ந்த சிந்தனைத் துளிகளின் தெளிவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அண்ணல் அம்பேத்கரின் உண்மை உள்ளத்தை, தியாகத்தை, சேவையை உணர்ந்த எந்த சமுதாயத்து நல்லவர்களும், தங்களின் மறுப்பை பெருமை யுடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றனர்.

பத்திரிகை பலம் இல்லாத சமுதாயம் என உணர்ந்து வரும் துன்பங்களை, தாங்கள் ஏற்றுக் கொண்டு, உள்ளம் குமுற, ஆனால், எதிர்ப்பவர்களின் நெஞ்சம் பதற தங்களின் பேச்சும், எழுத்தும், நீண்ட காலத்திற்கு தேவை. இந்தப் பேச்சும், எழுத்தும் மற்ற மாநில பத்திரிகைகளிலும் வரச் செய்தால் மிகவும் நலம் பயக்கும்.

ஏனென்றால் ஒரு முறை ஹிந்து பத்திரிகையில் தாழ்த்தப்பட்டவருக்கு இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து கேலி செய்து, துணுக்கு வெளியிட, அதை வடபுலத்து கேரவான் பத்திரிகை மீண்டும் தமிழகத்து கல்கி பத்திரிகையும் வெளியிட்டது.

எனவே நீங்கள், இதை மற்ற மாநில மொழி பத்திரி கைகளுக்கு அனுப்புவதும் நேரம் இல்லையென்றால் அதையே சிறு புத்தகமாக ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வெளியிட்டால், உங்கள் அரிய கருத்துக்களை நிறைய பேர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். தங்களின் உயர்ந்த உள்ளத்தை, சமுதாய மக்கள் உணர இவை மேலும் வலுவூட்டும்.

நன்றி வணக்கம்.

- எம்.சீனிவாசன்
For the Scheduled Caste/Tribes REsidents Welfare Association Villivakkam, Madras - 600 049.

தமிழ் ஓவியா said...

நாம் பிறருக்கு உதவும்போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி அவரை மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.
பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே நன்றி என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப் படுத்திவிட வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -

பல்லாண்டு பாடுதும் பல்லாண்டு பாடுதும் .........பல்லாண்டு
மீனாட்சி மாண்பர் கிருட்டிண சாமியின்
தேனாட்சி நன்மகனாய்த் தென்கடலூர்த் தோன்றியார்க்குப் .........பல்லாண்டு

ஆசிரியர்

முன்னைப் பயிற்றிய மூத்தமணி ஆசானைப்
பின்னை மறவாமல் பேசி வரும் பண்பார்க்கு .........பல்லாண்டு

பெரியார் சந்திப்பு

திருப்பா திரிப்புலியூர் சந்திப்பில் தந்தை
தருமுரை தான்போற்றித் தானுயர்ந்த தோளார்க்கு .........பல்லாண்டு

அண்ணா பாராட்டு

அண்ணா புகழ் ஞான சம்பந்தன் ஆகிநிலம்
கண்ணாய் பரப்புரை செய் காதல் குறியார்க்கு .........பல்லாண்டு

விடுதலை வீரர்

பள்ளி வகுப்புமுதல் பல்கலை நாள்வரைக்கும்
துள்ளி விடுமுறையில் தொண்டு தொடர்ந்தார்க்கு .........பல்லாண்டு

வளர்ப்பு மகன்

வளர்பெரியார் நெஞ்ச வளர்ப்புமகன் என்ன
வளர்கேள்வி ஆளும் படிவளர்ந்த வீரர்க்கு .........பல்லாண்டு

பெரியார் பரிசு

வெல்ல விடுதலையும் மோகனாவும் தானளித்த
நல்ல பெரியாரின் நன்மதிப்பு நெஞ்சார்க்கு .........பல்லாண்டு

பொதுச் செயலாளர்

புதுமை செயவிரும்பிப் போர்ப் பெரியார் நல்கு
பொதுச் செய லாளர் பொறுப்பேற்ற பெற்றியார்க்கு .........பல்லாண்டு

மலர்மணம்

பிறந்த நாள் காண்பெரியார் பேசுமலர் எல்லாம்
சிறந்தார்க்கும் வண்ணத்தில் செய்தளித்த சீர்த்தியார்க்கு .........பல்லாண்டு

நினைவு மன்றம்

நல்ல நடிகவேள் நம் இராதா பேர்விளங்க
நல்ல நினைவுமன்றம் வார்த்தாள வைத்தார்க்கு .........பல்லாண்டு

பெரியார் திடல்

பெரியார் பெருந்திடலைப் பேரியக்கமாக்கி
உரியார் பணிபுரிய ஊக்கிவரும் ஒள்ளியார்க்கு .........பல்லாண்டு

வகுப்புரிமை

வகுப்புவாரிப் போரியற்ற வாழ்வுரிமை பாடி
மிகுவகுப்புத் தானூக்கும் மீட்சி மனத்தார்க்கு .........பல்லாண்டு

கடவுள் மறுப்பு

ஏறு திராவிடர்க் கில்லை மதம்சாதி
ஊறு கடவுளென ஓயா துழைப்பார்க்கு .........பல்லாண்டு

அறிவியல்

ஒவ்வா மடமூடம் ஓட்டும் அறிவியலால்
ஒவ்வும் வழிகூறி ஊக்கி ஒளிர்வார்க்கு .........பல்லாண்டு

தன்மானம்

பொய்மை உடைத்தாளப் போராடும் தன்மானம்
மெய்மை விடுதலைக்கு வேரென்னும் வீச்சார்க்கு .........பல்லாண்டு

தூண்டுதொண்டு

தீங்கு தகர்பெரியார் தேர்ந்த மணியம்மை
தாங்கு பணிதாங்கித் தானாளும் தூயார்க்கு .........பல்லாண்டு

தமிழ் ஓவியா said...


சிம்பதியா - எம்பதியா?


பிறர்க்கு உதவி செய்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

சிம்பதி (Sympathy) என்பதைவிட எம்பதி(Empathy) என்பது வாழ்வில் மிக முக்கியம்.

சிம்பதிக்கும் எம்பதிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிம்பதி என்பது மற்றொருவரிடம் நாம் காட்டக் கூடிய இரக்கம். எம்பதி என்பது மற்றொருவர் படுகிற துன்பத்தின் நிலையை அவர் நிலையில் நம்மை நிறுத்திக் கொண்டு உணர்வது ஆகும்.

சிம்பதியைவிட, எம்பதி என்பதே மனித நேயத்தின் முக்கிய அம்சம்.

_ கி.வீரமணி
(திண்டுக்கல் ரோட்டரிக் கிளப்பில் -_ 3.1.1998)

தமிழ் ஓவியா said...


நீங்கள் மாமனிதர்


கருப்புச் சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்கு சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக் காரர்
சமூக நீதிக் காவலர் - அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா

கடலூரின் கருத்துக் கனல் - என்றும்
அடங்கா எழுத்துப் புனல் -
எழுதிய நூல்கள் எழுபத்தைந்து
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி

அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன் முதலாய்
பாவையருக்கு தொழில் நுட்ப கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்குச் சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காண தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர் விருது - டாக்டர் கே.ஜி. பாலகிருஷ்ணன் படித்தளித்த புகழாரக் கவிதை இது - 25.2.20011).

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை கழகத் தலைவர் சந்தித்தார்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (1.12.2013) காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். கழகம் வெளியிட்ட 14 நூல்களையும் கலைஞர் அவர்களிடம் அளித்து ஒவ்வொரு நூலின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். சிறுகனூரில் நிறுவப்பட விருக்கும் தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை பற்றியும் பெரியார் உலகத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

முதலாவதாக நாளை 81ஆம் பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் அவர்களுக்கு முத் தமிழ் அறிஞர் சால்வை அணிவித்து வாழ்த் துக்கள்! வாழ்த்துக்கள்!! என்று கூறினார். கலைஞர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். நாளைய விழாவின் அழைப்பிதழை துணைத் தலைவர் கலி. பூங் குன்றன் கலைஞர் அவர்களிடம் அளித்தார்.

தமிழ் ஓவியா said...


பிறந்த நாள் விழா காணும் தலைவர் பதில் அளிக்கிறார்


2.12.2013 அன்று 81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்கள் அன்று முற்பகல் வல்லத்தில் நடக்கவிருக்கும் கருத் தரங்கின் முடிவில் 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்வி களுக்கு விடை அளிக்கிறார்.

வேக வினாக்களும் விரைவான பதில்களும்!
இது ஒரு புதிய அம்சமாகும்.

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருடன் சந்திப்பு



81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் சந்திப்பு - நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வல்லத்தில் நடைபெறும். கழகத் தலைவரை சந்திப்பவர்கள் சால்வைகளுக்குப் பதில் பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000ஆவது நிகழ்ச்சி
கேளுங்கள் தரப்படும் - புதிய அறிமுகம் கேள்விக்குப் பெரியார் பதில் சொல்லும்முறை
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு

சென்னை, டிச.1- கூட்டங்களில் கேள்விகளுக்குத் தந்தை பெரியார் பதில் சொல்லும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 - நிகழ்ச்சிகள் நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி 29.11.2013 வெள்ளி மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கப்பட்டது.

திராவிடர் கழக மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணியம்மை கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்ட செய லாளர் கி. சத்திய நாராயணன் வரவேற் புரை ஆற்றினார். வாசகர் வட்டம் தொடங் கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சிக்குத் திராவிடர் இயக்க ஆய் வாளர் க. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 25 சொற்பொழிவுகள் நடத்தியதை பெருமை யாகக் கருதுவதாகக் கூறினார்.

கேளுங்கள் தரப்படும்

வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் என்கிற முறையில் நிகழ்ச்சியில் புதுமை புகுத்தப்பட்டது. இவ்வமைப்பின் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் இந்தப் புது ஆலோசனையை வழங்கினார். அதன்படி முதல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறை போகிய அறிஞர் பெரு மக்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொருவரிடமும் வினாக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு வினாவிற்கும் அவர்கள் விடை அளித்தனர். மகளிர் உரிமை மற்றும் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி பதில் அளித்தார். அறிவியல் தொடர்பான வினாக்களுக்கு இயற்பிய லாளர் அ. பாலகிருஷ்ணன் பதில் அளித் தார்; வரலாறு தொடர்பான வினாக் களுக்கு வரலாற்றுப் பேராசிரியர் அ. கருணானந்தன் விடையளித்தார். பெரியா ரியல் தொடர்பான கேள்விகளுக்கு. பெரியார் பேருரையாளர் புலவர் முனைவர் மா. நன்னன் விடையளித்தார்.

இந்தப் புதிய முறை பார்வையாளர் களைப் பெரிதும் கவர்ந்தது. பல புதிய புதிய தகவல்களை அறிய முடிந்ததாகப் பார்வையாளர்கள் கூறினர். கேள்விகளை வாசகர் வட்ட மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அருணகிரி படித்தார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கேளுங்கள் தரப்படும் என்ற புதிய அறிமுகம் சிறப்பாக அமைந்ததற்கு தம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடக்கும் சொற்பொழிவுகள் 20 நிமிடம் உரை 20 நிமிடம் கேள்வி பதில் பகுதியை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆலோசனை யையும் தந்தார். பொதுக் கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியது திராவிடர் இயக்கமே என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தந்தை பெரியார், கேள்விக்குப் பதில் சொல்லும் முறையை எடுத்துக் கூறினார்.

நியாயமான கேள்விக்கு நேர்மையான பதிலையும், குறும்புத்தனமான கேள்விக்கு அதே முறையில் பதிலும் தந்தை பெரியார் கூறியதற்கு உதாரணமாக பொன்மலை யில் தந்தை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வியை நினைவூட்டினார்.

நேரு பிரதமராக இருந்தபோது இரயில்வே துறையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக இருந்ததால் அந்த வேலை நிறுத் தத்தைத் தந்தை பெரியார் எதிர்த்துப் பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் கேள்வி ஒன்றைப் பெரியாரிடம் அளித்தார். நேரு அரசாங்கத்திடம் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தானே நீ வேலை நிறுத்தத்தை எதிர்த்துப் பேசு கிறாய்? என்பது கேள்வி. பெரியார் கோபப் படவில்லை. சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார்.

நான் பணம் வாங்கிக் கொண்டு பேசக் கூடியவன் என்று நீங்கள் தெரிந்து கொண் டிருப்பதால், புத்திசாலியாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

காங்கிரஸ்காரன் பத்து லட்சம் ரூபாய் எனக்குப்பணம் கொடுத்தால் நீ 11 லட்சம் ரூபாய் எனக்கு கொடுத்து உன் பக்கம் பேசச் செய்திருக்க வேண்டாமா? என்று திருப்பிப் பதிலடி கொடுத்தார் - கேட்டவன் வாயடைத்துப் போனான்!

இதுபோன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வில் ஏராளம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.

தங்க தனலட்சுமி நன்றி கூறிட கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருமக் களுக்கு பெரியார் நூலக வாசகர் வட் டத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்கள் பயனாடைகள் அணிவித்து, நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


அன்பர்கள் இருவரின் கடிதங்கள்

திராவிடர் கழக தலைவரான தங்கள் 81ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டில் சாக்ரடீசா லெனினா, ரூசோவா அல்லது அந்த மூவரும் சேர்ந்த ஒரு புதிய வார்ப்படமா என்று சிந்தனையாளர்கள் எண்ணி ஆராயும் அற்புத தலைவர் தந்தை பெரியா ருக்கு 95 அடி உயர வெண்கல சிலையும் அவருடைய கருத்துக்களை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்தி பெரியார் பெயரில் ஒரு உலகத்தையே நிர் மாணிக்கும் மறக்க முடியாத பணிக்காக சேர்க்கப்படும் 1000 பவுன் நிதிக்கு நான் 1 பவுன் 8 கிராம் அன்பளிப் பாக அளிப்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

12 நல்ல கனமான இலாக்காக்கள் என் பொறுப்பில் இருந்தாலும் எனக்கு தலைநகர் சென்னையில் ஒரு வீட்டு மனைகூடக் கிடையாது எங்கும் எந்த சொத்தும் வருமானம் வரும் வேறு தொழிலும் கிடையாது. 88 வயதை நெருங்கும் நான் எம்.எல்.ஏ., எம்.பி. பென்ஷனில் தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம்.

- வி.வி. சுவாமிநாதன்
முன்னாள் அமைச்சர் எம்.பி., சிதம்பரம்
2.12.2013 தஞ்சையில் நடக்கும் விழா சிறப்பாக நடைபெறவும் நிறைந்த ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தாங்கள் பெற்று வாழ்வும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் கி.வீரமணி அவர்களுக்கு,

வணக்கம். தொண்டால் பொழுதளக்கும் என்று சொல்லுவார்களே அந்த வரிக்கு நூற்றுக்கு நூறு எடுத்துக்காட்டாக, பெரியார் ஏந்திப் பிடித்த சுயமரியாதைப் பெருஞ்சுடரைக் கடும் உழைப்பால் மேலும் பிரகாசமாக எரிய வைத்து, தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒளி ஏற்றிக் கொண்டி ருக்கும் தங்களைத் தங்கள் 81ஆம் பிறந்த நாளான இன்று மனமார வாழ்த்துகிறேன்.

இன்னும் நூறாண்டு காலம் முழு நலத்தோடு வாழ்ந்து, சுயமரியாதைச் சுடரொளியை எங்கும் பரப்புங்கள். தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலப் பேரு ருவச் சிலை அமைப்பது பெருமைக்குரியது. பெரியாரின் அறிவொளி மேலும் மேலும் நாடெங்கும் பரவ இந்தச் சிலை ஒரு நல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும்!

அருமையான விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் பெரு மக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். விழா புதிய வரலாறு சமைக்கும் நூறு பவுனுக்காக நிதி வழங்கும் சுயமரியாதை உள்ளங்கள் அனைத்தையும் வாழ்த் துகிறேன். வணங்குகிறேன். ரூ.1000 என்னுடைய எளிய பங்கையும் இத்துடன் அனுப்புகிறேன்.

- பொன்னீலன்
தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் சுப. திண்ணப்பன் வாழ்த்துகிறார்



பேரன்புமிக்க தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். பிறை ஆயிரம் கண்ட பெருநாள் - முத்துவிழா நாள் ஆகிய உங்கள் 81ஆம் பிறந்த நாள் அன்று வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் ஆகிய பெரியார் பெருமையையும், கொள்கைகளையும் பாரெங்கும் பரப்பும் பணி தொடர நீங்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்பதுதான் என் விழைவு. பெரியார் உலகம் காண விரும்பும் உங்கள் கனவு நனவாகட்டும்.

- சுப. திண்ணப்பன்
பேராசிரியர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்

தமிழ் ஓவியா said...


சு.சாமியின் வாய்க் கொழுப்பு!
t

காஞ்சி மடாதிபதி மீது பொய் வழக்கு போட்டதற்குப் பொறுப்பேற்றுத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சி சங்கரமடத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சனிக்கிழமை வந்தார். அங்கு மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய மடாதிபதி விஜயேந்திரர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சங்கரராமன் கொலை வழக்கில், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்து மதத்துக்குக் கிடைத்த வெற்றி; இந்த விவகாரத்தில் காஞ்சி மடாதி பதிகள்மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பொய் யானது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கு. இதற்குத் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்று மடத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும். தீர்ப்பு இப்படித் தான் வரும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.

சங்கரராமன் கொலை செய்யப்பட்டது உண்மை தான். உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திர லேகா உடன் இருந்தார்.

வழக்கு நடந்தது செஷன்ஸ் கோர்ட்டில் - அதுவும் புதுவையில், அது ஒருபுறம்!

2ஜி வழக்கில் சி.பி.அய். ஸ்பெஷல் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம்வரை நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இணைக்க வழக்குத் தொடர்ந்து, தோற்றுவிட்ட சு.சாமி, சிதம்பரத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?

பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!

தமிழ் ஓவியா said...


முதல்வரின் முக்கிய கவனத்திற்கு...


கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதியும், அவரது சார்பில் ஒரு பெண்ணும் நீதிபதியிடம் லஞ்சப் பணம் கொடுக்கக் கால அவகாசம்பற்றிப் பேசியதாகச் சொல்லப்பட்ட ஓர் ஒலிப்பதிவு ஆவணம் வெளியானதை இப்போது மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அது அசல் ஒலிப்பதிவுதானா, இல்லை போலியானதா என்பதை மூவரின் குரல் பதிவுகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைக் கண்டறியும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மாதங்கள் கழித்துக் காவல்துறை அளித்த பதிலின்படி, அந்த ஒலிப்பதிவு ஆவணம் கரெப்ட் ஆகிவிட்டதால் அதில் எதையும் கேட்க முடியவில்லை.

அதே ஒலிப்பதிவு துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றம், காவல்துறையைப் பொறுத்தமட்டில் அசல் ஆவணம் கரெப்ட் ஆகி விட்டதால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவே முடியாமல் விஷயமே காலாவதியாகிவிட்டது.

- ஞானி, இந்து, தமிழ்நாளேடு, 1.12.2013

தமிழ் ஓவியா said...

பெரியார் பேருருவச் சிலைக்கு ரூ.25,000 நன்கொடை

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்களை நேற்று (1.12.2013) மாலை 6.15 மணிக்கு சந்தித்து இயக்கம் வெளி யிட்ட 14 நூல்களை வழங்கினார். பேராசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களுக்குச் சால்வை அணிவித்து அய்யா போல நீண்ட காலம் வாழ்க! என்று கூறி பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினார். பேரா சிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்தார்.

ரூ.25,000 நன்கொடை

சிறுகனூரில் அமையவிருக்கும் தந்தை பெரியார் பேருருவச் சிலைக்குத் தமது சார்பில் பேரா சிரியர் ரூ.25 ஆயிரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார் கழகத் தலைவர் நன்றி கூறினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)