Search This Blog

9.11.13

கேத்தன் தேசாயின் கதையைக் கேளீர்! -பார்ப்பனரைப்பற்றித் தெரிந்து கொள்ள ஈரோட்டுக் கண்ணாடி

கேத்தன் தேசாயின் கதையைக் கேளீர்! 


பலருக்கு மறந்து போயிருக்கலாம்; கறுப்புச் சட்டைக்காரர்களுக்கு மட்டும் எப்பொழுதும் மறதி இல்லை. அதுவும்  இந்தச் சமூகத்தைப் புற்று நோயாக அரித்துத் தின்று கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும், கடமையும் கண்டிப்பாக கழகத்திற்கு இருக்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த டாக்டர் இவர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டுமானால் இவரிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் - மிகப் பெரிய அதிகார பீடம் அது.

அந்த வகையில் அடிப்படை வசதிகள் - கட்டமைப்புகள் இல்லாத கட்டடங்களைக் கட்டிக் கொண்டவர்களாக இருந்தாலும் கவலையில்லை; இந்த தேசாயைச் சந்தித்தால் போதும்; அதிகம் இல்லை; அது மாதிரி கல்லூரி ஒவ்வொன்றுக்கும் ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை லஞ்சப் பணம் - அவ்வளவுதான் அனுமதி கிடைத்து விடுமாம்.

சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது அவரால் கொண்டு வரப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு என்ற ஆணைக்கு எதிராக மாணவர்களைக் கலவரத்தில் தூண்டியதில் இந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனருக்கு முக்கிய பங்குண்டு.

தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கு வதில் அடிக்கப்படும் கொள்ளை ஒருபுறம்; ஒவ் வொரு தனியார் கல்லூரியிலும் இவருக்கென்று அய்ந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமாம். 200 சுய நிதி மருத்துவக் கல்லூரிகள் என்றால் ஆண்டு ஒன்றுக்கு இதன் மூலம் இடங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையோ 300 கோடி ரூபாய்; 13 ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்திருக்கிறாரே - அவர் அடித்த கொள்ளையை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

ஒருகட்டத்தில் அவர் வீட்டில் சி.பி.அய். சோதனை போட்ட போது சிக்கிய பணம் எவ்வளவு தெரியுமா? 1800 கோடி ரூபாய் பணம், 1500 கிலோ தங்கம்; லாரிகளில்தான் ஏற்றிச் சென்றனர்.

இவ்வளவுக்கும் அகமதாபாத்தில் ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த ஆசாமி - அப்படிப்பட்டவர் இத்தனைக் கோடி பணத்தைச் சுருட்டியுள்ளார்.

இதற்குமுன் ஒருமுறை நீதிமன்றம், இவர் மீதான முறை கேடுகள் குறித்த வழக்கில் மருத் துவக் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து அதிரடி யாக நீக்கியதுண்டு; சிறிது காலத்திற்குப் பிறகு மறுபடியும் அந்தப் பதவியை பிடித்துக் கொண்டு விட்டார்.

ஒரு பார்ப்பனருக்கு அன்றி இதுபோல இன்னொருவர் இந்த  நிலைக்கு வர முடியுமா. ஆ. இராசா அவர்களைத்  தாழ்த்தப்பட்டவர் என்று கலைஞர் அவர்கள் சொன்னபோது துள்ளிக் குதித் தார்களே. இந்த கேத்தன் தேசாய் விஷயத்தில் உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தி போல, பார்ப்பன ஊடகங்கள் நடந்து கொள் கின்றனவே!

இந்தத் தேசாய்மீது 19 வழக்குகள் உள்ளன; ஆனாலும் எளிதாக ஜாமீன் கிடைக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

இப்பொழுது அவருடைய நிலை என்ன தெரி யுமா? அகில உலக மருத்துவக் கூட்டமைப்பின் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதை எல்லாம் எளிதில் நம்ப முடியாதது தான். ஆனால் பார்ப்பனர் விஷயத்தில் நம்ப முடியாத வைகளையும்  நம்பித்தான் ஆக வேண்டும். எல்லா இடங்களிலும் அவர்களைக் காப்பாற்ற ஆட்கள் தயாராகவே இருப்பார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ராமச்சந்திர அய்யர் தன் வயதை மோசடி செய்து பதவியை நீட்டித்துக் கொண்டாரே - அவர்மீது வழக்கு உண்டா? தண்டனை உண்டா?

குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதா கிருஷ்ணன் அவரைக் காப்பாற்றவில்லையா?

பார்ப்பனரைப்பற்றித் தெரிந்து கொள்ள ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

                          -----------------------------------"விடுதலை” தலையங்கம்  7-11-2013

47 comments:

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கோளுக்கு விண்கலம் ஏவியதில் பெரும் பங்காற்றிய பாராட்டுக்குரிய தமிழர்கள்!


கடந்த 05.11.2013 அன்று இந்தியாவிலிருந்து செவ்வாய்கோளை ஆராய மங்கள்யான் (செவ்வாய்கலம்) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையான இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை, எஸ்.அருணன், எம்.எஸ். பன்னீர்செல்வம் ஆகிய மூன்று விஞ்ஞானி களின் முக்கிய பங்களிப்பு இருக்கிறது என்பது தமிழர்களுக்குப் பெருமை தரக்கூடிய செய்தி.

விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது! விண்கலம் வெற்றிகரமாக அதன் வட்டப்பாதையில் சேர்க்கப்பட்டுவிட்டது! என்ற முதல் அறிவிப்பை வெளியிட்டவர் விஞ்ஞானி எம்.எஸ்.பன்னீர்செல்வம். மங்கள்யான் விஞ்ஞானிகள் குழுவில் ரேஞ்ச் ஆப்பரேஷன் இயக்குநராக இருக்கும் எம்.எஸ். பன்னீர்செல்வம் தருமபுரியை சேர்ந்தவர். சிறீஹரி கோட்டா ஏவுதள தலைமைப் பொது மேலாளராக இருக்கும் இவர், எந்த தடங்கலும் இல்லாமல் விண்கலத்தை விண்ணில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகளை பராமரித்து வந்தவர். மகிழ்ச்சிகரமான முதல் அறிவிப்பை வெளியிட்ட எம்.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களிடம், அந்த அறிவிப்பை வெளியிட்ட போது எப்படி உணர்ந் தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எங்களுக்கு எந்த தனிப்பட்ட உணர்வும் இல்லை, நாங்கள் எங்கள் கடமையை செய்து கொண்டிருக் கிறோம் என்று எந்தச் சலனமும் இல்லாமல் நிதானமாக பதிலளித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சாதனையை கூட இப்படி நிதானமாக எடுத்துக்கொண்டு பதிலளித்த எம்.எஸ்.பன்னீர்செல்வம், ஒரு சீரிய பகுத்தறிவாளர் என்பதும் அவரது தந்தையார் முருகேசன் திராவிடர் கழகத்தின் தருமபுரி நகரச் செயலாளராக இருந் தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

தமிழர்களின் நலன் கருதி மட்டுமல்ல - காங்கிரசின் எதிர்காலம் கருதியும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்


இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு உலகெங்கும் எதிர்ப்புகள் நாளும் பெருகி வருகின்றன

தமிழர்களின் நலன் கருதி மட்டுமல்ல - காங்கிரசின் எதிர்காலம் கருதியும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை

இங்கிலாந்து பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரிட்டனில் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள், பிரிட்டன் தமிழர்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரில் வலியுறுத்தினர்.

இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது தமிழர்களின் நலன் என்ற கண்ணோட்டத்தில் மட்டு மல்ல; காங்கிரசின் எதிர்காலம் என்ற கண்ணோட்டத்திலும்கூட முக்கியமானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

போர்க்குற்றம் புரிந்து, இனப்படு கொலையை கூசாமல் நடத்தி, பகிரங்க மாய் மனித உரிமைகளைப் பறித்து பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த நாடு இலங்கை.

அங்கு காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதே அநியாயம்; ஜனநாயக விரோதப் போக்கு ஆகும். அய்.நா. மனித உரிமை ஆணையத்தையோ அதன் தலைவரையோகூட அந்நாடு மதிக்காது; விசாரணை யின் போது நடந்து கொண்ட முறையே காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறாது தடுக்கப் பட வேண்டும் என்பதற்குப் போதுமான காரணமாகும்.

தமிழ் ஓவியா said...

போர்க்குற்றவாளி தலைமை வகிப்பதா?

போர்க் குற்றவாளியாக நிறுத்தப்படும் ஒரு நாட்டின் தலைமை இரண்டு ஆண்டுகளுக்குத் தலைமை தாங்கும் - காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கலாமா? அது போர்க் குற்ற விசாரணையை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு குறுக்கு வழியாயிற்றே! இலங்கை எப்படியோ இதில் முதல் கட்டமாக அம்மாநாட்டை அங்கே நடத்த ஏற்பாடு செய்த சூழ்ச்சி வென்று விட்டது!

இங்கிலாந்து நாட்டிலேயே அங்குள்ள குடிமக்கள் இதனை எதிர்த்து அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களைப் போக வேண்டாம் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்ற செய்தி வந்துள்ளது.

மாநாடு அங்கு நடைபெறுவதும் விரும்பத்தக்கதல்ல; பன்னாட்டுத் தலைவர்களும் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா வின் இன ஒடுக்கலை எதிர்த்து, அறவழியில் நெல்சன் மண்டேலாவின் தளகர்த்தர் - ஆலோசகர் போல் இருந்தவரும், உலக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவருமான அருட்தந்தை பெஸ்மாண்ட் டுட்டு என்ற முதுபெரும் அறிஞர் கூறியிருப்பது, இப்பிரச்சினை உலகத்தாரின் பார்வையில்பட்டு, உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் மனிதநேயப் பிரச்சினையாக மாறியுள்ளது என்பது தெளிந்த தெளிவாக விளங்குகிறது. ஊடகத் தமிழ்ப் பெண் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்முறை செய்து, கொன்றதை சேனல் - 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியதைக் கண்ட உலகத்தினரை இரத்தக் கண்ணீர் சிந்தச் செய்துள்ளது!

இலங்கை இராஜபக்சேவின் ஆதரவு அணியில் உள்ள டக்ளஸ் தேவானந்தாக்களால்கூட பொறுக்க முடியாமல், நீதி விசாரணை தேவை என்று கூறும் அளவுக்கு நிலைமை வளர்ந்துள்ளது.

வெளியுறவுக் கொள்கையில் பா.ஜ.க. - காங்கிரசின் ஒற்றுமை

இந்தக் கொதி நிலை நாளும் வலுத்து வருகிறது! தமிழகமே எரிமலையாகிப் பொங்கிக் கொண்டிருக்கிறது!!
பா.ஜ.க. கொள்கை, தலைமை உட்பட அனைத்து முடிவுகளும் ஆர்.எஸ்.எஸ்தானே செய்வது?

அது பிரதமர் போக வேண்டும்; கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாய் அறிவித்துவிட்டது எதைக் காட்டுகிறது? வெளியுறவுக் கொள்கையில் தற்போதுள்ள அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவ மான பா.ஜ.க.வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது!

இந்த உண்மையைப் பூசி மெழுகத்தானே இங்குள்ள தமிழ்நாட்டுப் பா.ஜ.க. குழு புறப்பட்டு போய் டில்லிக்குச் சென்றுள்ளது.

மோடி வந்தால் ஏதோ சூ மந்திரக் காளி போல் ஈழத் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடும் என்று செப்பிடு வித்தை போல வார்த்தை சித்தர்கள் கூறும் வக்கணைப் பேச்சு அர்த்தமற்றது என்பது விளங்கவில்லையா?

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் எடுப்பார் என்று இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் பேசுவது - அவர்களது நல்லெண்ணத்தைக் காட்டுவதாக இருக்கலாம். செய்வாரா பிரதமர்? இதுதான் முக்கிய கேள்வி.
காங்கிரசின் நலன்?

எனவே மத்திய அரசு தமிழ்நாட்டின் உணர்வுகளை மட்டுமல்ல; டுட்டு பாதிரியார் போன்ற பொது மனிதர் களின் கருத்துக்களையும் மதித்து, இலங்கையில் நடை பெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க முன்வருவது, தமிழர்களின் நலன் என்ற கண்ணோட்டத்தால் மட்டுமல்ல; தமிழகக் காங்கிரசின் எதிர்காலக் கண்ணோட்ட நலத்திலும் மிகவும் இன்றி யமையாதது!

குறிப்பு: இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே கட்சி கூட உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக் கணிக்கக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
8.11.2013

தமிழ் ஓவியா said...


சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டம்


வசாய், நவ.8-தானே மாவட்டம் விரார் கிழக்கு மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் உள் ளது. இந்த ஆசிரமத்தில் ஆசாராம் பாபுவின் கொள்கையை பின்பற்று பவர்கள் பஜனைகள் நடத்தி வந்தனர்.

அரசுக்கு சொந்த மான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இந்த ஆசி ரமம் கட்டப்பட்டிருந் தது. கடந்த 9 ஆண்டு களுக்கு முன்னதாக ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாய் தனது உதவியாளராக வேலை செய்து வந்த மகேந்திர சிங் சாவ்லா வின் பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமித்து அங்கு ஆசிரமம் கட்டி யதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் மகேந்திரசிங் சாவ்லாவிற்கு தெரியவந் ததும் அவர் நாராயண சாயிடம் உதவியாளராக வேலை செய்வதை நிறுத்தி விட்டார். மேலும் இது தொடர்பாக நாராயண சாய் மீது சட்டப்பூர்வ மாக நடவடிக்கை எடுக் குமாறு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து வசாய்- விரார் மாநக ராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகி யோர் ஆசிரமம் இருந்த இடத்தை ஆய்வு செய் தனர். ஆய்வில் ஆசிரமம் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரமத்தை காலி செய் யுமாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடந்த வாரம் ஆசிரம நிர்வாகிகளுக்கு நோட் டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஆசிரமத்தை காலி செய்ய வில்லை. இதனையடுத்து ஆசிரமத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலையில் வசாய்-விரார் மாநகராட்சி ஆக் கிரமிப்பு தடுப்பு துறை, வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் வட் டாட்சியர் ஆகியோர் பொக்லைன் எந்திரங் களுடன் சம்பவ இடத் திற்கு சென்றனர். இதை யொட்டி அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் ஆக்கிர மித்து கட்டப்பட்ட ஆசாராம் பாபுவின் ஆசி ரமம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. சுமார் 20-க்கும் மேற் பட்ட அறைகள், ஆசிர மத்தின் அருகே இடை வெளி விட்டு கட்டப் பட்ட அறைகள் அனைத் தும் சுமார் 2 மணி நேரத்தில் இடித்து தள்ளப்பட்டது.

ஆசிரமத்தை இடித்து தள்ளுவதற்கு முன்பாக உள்ளே இருந்த குளிர் சாதன பெட்டிகள், விலை மதிப்புடைய தொலைக்காட்சி பெட் டிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட் களை ஆசிரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் எடுத்துச்சென்றனர்.

தமிழ் ஓவியா said...


புதிய கருத்துகள்


மனித அறிவு நாளுக்கு நாள் மளமளவென்று மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதையொட்டி மக்களைக் கொண்டு போக வேண்டாமா? புதிய உலகத்திற்குப் புதிய உணர்ச்சிகள், புதிய கருத்துகளைக் கொண்டு செலுத்தவேண்டாமா?
(விடுதலை, 2.2.1959)

தமிழ் ஓவியா said...


அந்த சிவக்குமார் - இறந்த மனிதரல்ல! - சிறந்த மனிதர் அல்லவா?
-----------veramani

தொண்டறம் புரிவதில் எத்தனையோ பேர்கள் எந்த ஆரவாரமும் இன்றி, விளம்பர வெளிச்சத்தைக்கூட விரும்பாமல், இடது கை செய்தது வலது கைக்குத் தெரியாது என்பது போல் செய்து அடக்கத்தின் உச்சத் திற்கு சென்று, தங்களது மன நிறைவைத் தானே தேடிக் கொள்ளுகிறார்கள்!

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள் அவரது தன்னலம் துறந்த தொண்டைப் பாராட்டும்போது, நான் அதை செய்வது அப்பட்ட மான சுயநலத்திற்காகத்தான் - அதில் என்ன பெரிய தியாகம் அடங்கியுள்ளது? என்று கேட்டு ஒரு அரு மையான தத்துவ விளக்கத்தினையே தருவார்கள்.

நான் செய்யும் பணி - எனக்கு மன மகிழ்ச்சிக் கான ஒரு பணி; அதன் மூலம் நான் மனநிறைவை -மகிழ்ச்சியைப் பெறுகின்றேன் என்றால் அது என் சுயநலம் தானே!

எனவே பொதுநலம் என்று கருதி சிலரால் செய்யப்படும் செயல் எதுவும் ஆழ்ந்து சிந்தித்தால், அவர்களது சுயநலமே ஆகும்; அதுபோலவே சுயநலம் கருதிய அத்தகை யவர்களின் செயல்கள் அதனால் ஏற்படும் பயன் - விளைவுகளை வைத்து யோசித்துப் பார்த்தால் அது பொது நலமாகவே தான் அமையும்; முடியும் என்பார்கள்.

அசை போட்டுச் சிந்தித்தால் இது நன்கு புரியும்.

நேற்று ஒரு உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு செய்தி - நாளேடுகளில்.

திரு எம்.எஸ். சிவக்குமார் என்ற ஒருவர்; பாலக் காடு பகுதி ஆயலூர் என்ற ஊரைச் சார்ந்தவர், சென்னையில் வசித்தவர். 56 வயதுள்ளவர். ஒரு சமூக ஆர்வலர்.

காணாமற் போன பலரையும் கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரோடு சேர்ப்பது; அக் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உதவுவது மருத்துவ மனைகளில் அனாதைப் பிணங்களாகி தகவல் தெரியாத நிலையில் அவர்களை அடக்கம் செய்வ தற்கு முயற்சிகளை எடுப்பது, மருத்துவமனைகளில் சிசிச்சை முடிந்து குணமான ஆதரவற்றோர்களை, அனாதை இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்து அவர்களின் புது வாழ்வுக்கு உதவுவது - இப்படிப்பட்ட மனிதநேயத் தொண்டை தொடர்ந்து செய்வதில் இன்பங்கண்டு வாழ்ந்தவர் இந்த சிவக்குமார் அவர்கள் - சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து பதிவுகளை செய்து எளிய வாழ்வு நடத்திய எளிய ஆனால் உயர்ந்த மனிதர்!

தானே புயலில் சிக்கிய கப்பல் 2012-இல் அவதியுற்ற நிலையில் காணாமற்போன ஆறு மாலுமிகளுடைய குடும்பம் துயரத்தில் தந்தளித்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறி உதவிய தொண்டற மாமனிதர்!

ஆதரவற்ற மனிதர்களின் சவங்களைப் பெற்று அடக்கம் நடத்திய மகத்தான தொண்டறச் செம்மல்.

அவர் சில நாள்களுக்கு முன்னால் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே புகாரி ஓட்டல் முன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது அடிபட்டு கீழே விழுந்து தலைக்காயம் அடைந்தார்.

உடனே, அங்கிருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சேர்த்தார்கள்; அவருக்கு ஆசுஐ, மற்றும் ஊகூ. ஸ்கேன் செய்ததில் மண்டையில் மிகக் கடுமை யான காயம் ஏற்பட்டதால் செவ்வாய் இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்!

இந்த சிவக்குமார் ஒரு நோயுற்ற சகோதரியை கண்காணித்து வந்தவர் என்று இவரை அறிந்த நண்பர் நாராயணன் என்பவர் கூறியுள்ளார். மருத்துவமனை மருத்துவர்களும் இவரது தொண்டுபற்றி நினைவு கூர்ந்துள்ளனர்!

அவர் மருத்துவமனையில் இறந்தபோது அவர் அருகில் எவரும் இல்லை என்பதுதான் எத்தகைய கொடுமையான சோகம்!

இவரது மறைவு அறிந்து அவரது துணைவியார், மகள் பாலக்காட்டிலிருந்து வந்து, சென்னை மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை தரப்பட்ட நிலையில் உடனிருந்து, மரியாதை செலுத்தினர். அந்தப் படமும் இன்றைய நாளேடு ஒன்றில் வெளி வந்துள்ளது.

அந்த மனிதர் அதை அறிய மாட்டார். அவர் இறந்து விட்டார்!

ஆனால், இத்தகைய மனிதர்கள் உண்மையில் இறந்த மனிதர்களா?

என்றென்றும் நமது வீர வணக்கத்திற்குரிய சிறந்த மனிதர்களா - சொல்லுங்கள் நண்பர்களே!

அந்த சமூக ஆர்வலர் சிவக்குமாரின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர நடைபெறவில்லை என்றாலும், அவர் பல்லாயிரம் மனிதர்கள் செய்யாத, செய்யத் தவறிய பணியைச் செய்து இறந்தவர். அவரைவிடச் சிறந்த மனிதர் யார்? யார்?
வரலாற்றில் அடக்கமான தொண்டால் அடை யாளம் பெற்ற மனிதராக உயர்ந்து நிற்கிறாரே!

அவர் வாழுகிறார்! வாழுகிறார்! - பலர் உள்ளங்களில்! மனிதநேயம் மரித்துவிடவில்லை என்பதற்கு இவ்வாண்டே இதைபோன்று இன்னும் இரண்டு நிகழ்வுகள் நடந்ததை நான் வாழ்வியலில் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

ஓட்டி வந்த மின்சார ரயில் ஓட்டுநர் தனது இதய வலியைப் பொறுத்துக் கொண்டு, பாதுகாப்பாக ரயிலை நிறுத்தியபிறகு இறந்த, உள்ளம் உருக்கும் மனிதநேய நிகழ்ச்சி.

அதுபோலவே சில மாதங்களுக்குமுன் பேருந்தை ஓட்டிச் சென்றவர், ஓரமாக நிறுத்தி, மற்றவர்களை விபத்துக் குள்ளாக்காமல் காப்பாற்றி தான் மாரடைப்பால் மரணமடைந்தார்.
எனவே இப்படிப்பட்டவர்கள் நம் நெஞ்சில் நிழலாடி வாழுபவர்கள் அல்லவா!

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் ஓட்டம்!


புதுவை மாநிலம் திருநள்ளாற்றில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி சூரசம்ஹாரவிழா நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி என்ற சிலையோடு பல்லக்கில் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்களும் உட்கார்ந்து கொண்டனர்.

பல்லக்கைக் கோவிலில் இருந்து வெளியே தூக்கி வந்தவுடன், பல்லக்குத் தூக்கும் தோழர்கள், எங்கள் வேலை சாமியைத் தூக்குவதுதானே தவிர - அர்ச்சகப் பார்ப்பனர்களை அல்ல - அவர்கள் கீழே இறங்கிவிட வேண்டும் என்று கூறிவிட்டனர்.

பக்தர்கள் திரளாக கூடியிருந்தனர். பல்லக்கு கிளம்பவில்லை. இரவு 10 மணி ஆகியும் புறப்படவில்லை. வேறு வழியின்றிப் பார்ப்பன அர்ச்சகர்கள் கீழே இறங்கினர். பொதுமக்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆதரித்தனர். ஏற்கெனவே சங்கரன் கோயிலில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் தப்ளாம் புளியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் அண்மையில் போராட்டமே நடந்துள்ளது - அதன் காரணமாகத் தோழர்கள் சிறை ஏகினர். சாமி சிலையோடு பார்ப்பனன் பல்லக்கில் உட்கார்ந்து வரக்கூடாது என்று அண்மையில் திராவிடர் கழகம் தீர்மானம் நிறை வேற்றியது குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஓவியா said...

பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடை யவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி....

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகைக் கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்: ஆரிய நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டரெனச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா
திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டுமிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மருத்துவமனையில் கடவுள் இல்லை


திருப்பூர் மாவட்டம் நத்தக் காடையூர் பெரியார் பெருந் தொண்டர் புலவர் கு.தெய்வசிகா மணி அவர்கள் கடந்த 10 நாட்கள் உடல்நலமில்லாமல் ஈரோடு தனி யார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நலம்பெற்று வருகிறார்.

அவரை அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்ட தலைவர் ப.பிரகலாதன், மாவட்ட செயலாளர் இரா. நற்குணன், மாநகர தலைவர் கு.சிற்றரசு, பேராசிரியர் ப.காளிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் செபராசு செல்லதுரை, பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர் இரா.பார்த்திபன், பிரகாசன், தாராபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளக்கோவில் மணிகண்டன், ஈரோடு கோ.திருநாவுக்கரசு, நத்தக் காடையூர் திருஞானம் ஆகியோர் சென்று உடல்நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் ஒரு செவி லியர் அவரைப் பற்றித் தெரியாமல் சாம்பலை அவரது நெற்றியில் பூசிவிட்டார். உடனே அவர் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்பு வாசகம் கூறி அங்கு இருந்த செவிலியர்களிடம் பிரச்சாரம் செய்தார்.

அந்த நிலையிலும் பெரியார் தொண்டர்கள் கொள்கை உறுதியோடு இருப்பார்கள் என்பதற்கு நத்தக் காடையூர் புலவர் கு.தெய்வசிகாமணி எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

தகவல்: ஈரோடு சண்முகம்

தமிழ் ஓவியா said...

தீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்!

திங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.



சனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.

இதைக் கேள்: நடலை அறுந்
தாள் அருணை
நம்பனுக்கு அன்பில்லா
உடலை ஒறுத்தால்
ஆவதுண்டோ -
அடலைநூல்
ஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே
மோதினாற்
பாம்பு சாமோ.

இச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.

- புரட்சிக்கவிஞர்
குயில் 4-10-1960

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதே இலங்கை தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகும் - டாட்டு


தென் ஆப்பிரிக்க அமைதி ஆர்வலரும், அமைதிக் கான நோபல் பரிசு பெற்ற பெஸ்மாண்ட் டாட்டு வியாழனன்று தலைநகர் புதுடில்லியில் பத்திரிகை யாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாடு பற்றி பற்றி கூறும்போது இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளும் புறக்கணிக்க வேண்டும், இதன் மூலம் அங்கு சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்களுக்கும் அவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு நீதிகிடைக்கும் என்றார்.

மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிராக தனிநாடு கோரி சுமார் 30 ஆண்டுகளாக விடுதலைப்புலி என்ற அமைப்பின் மூலம் போராடி வந்தனர். 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அங்கு மனித உரிமைகள் அப்பாட்டமாக மீறப்பட்டன.

பொதுமக்கள் பெரிய அளவில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். சர்வதேசமுதாயம் இந்தப்படுகொலைக்குக் காரண மானவர்களை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்க அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இலங்கை அரசு தனது தவறுகளை திருத்திக் கொள்ளாததால் அனைத்து நாடுகளும் இலங்கை அரசின் மனித விரோதபோக்கிற்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காமன்வெல்த் மாநாட்டினை புறக்கணித்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயலை உலகிற்கு தெரிவிக்கவேண்டியது உறுப்பு நாடுகளின் கடமையாகும்.

கனடாவின் பிரதமர் ஸ்டீஃபென் ஹார்பர் நவம்பர் 15,17 தேதிகளில் நடக்கும் காமன்வெல்த மாநாட்டை புறக்கணிக்க முடி வெடுத்துவிட்டார். காமன்வெல்த் மாநாடு பற்றி உலகெங்கும் வாழும் தமிழர் சமுதாயம் என்ன நினைக்கிறது என்பது அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

82 வயதாகும் டாட்டு 1984ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவின் சிறுபான்மை வெள்ளை ஆட்சியை எதிர்த்து வெளிப்படையாக பேசி தென்ஆப்பிரிக் காவிற்கு எதிராக பொருளாதாரத்தடையை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர். இதற்காக நோபல் பரிசு கொடுத்துக் கவுரவிக்கப் பட்டார்.

மனித உரிமைகளுக்காக நெல்சன் மண்டேலாவால் துவங்கப்பட்ட அமைப்பிற்கு தலைவராக தற்போது பணியாற்றிவருகிறார். இலங்கைத்தீவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது என் றும் அப்படித்தேவைப்பட்டால் கீழ் நிலை ஊழியர் களை அனுப்ப வேண்டும் என்று பிரிட்டனும் அதன் காலனி நாடுகளும் மனித உரிமைகள் கண்கானிப்பு அமைப்பும் பன்னாட்டு மன்னிப்புசபையும் கேட்டுக்கொள்கிறேன்.

கனட பிரதமர் ஹார்பர் விடுத்த அறிக்கையில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது , பத்திரிக்கையாளர்களையும் கொடுமைப் படுத்துவது பற்றியும், சிறுபான்மை தமிழ் மக்களை சித்திரவதைச்செய்வது, காணாமல் போனவர்களைப் பற்றி செய்திகளும் அப்பாவிமக்கள் கொலை செய்வது போன்ற இலங்கை இராணுவத்தின் செயல்களும் ஆதாரத்துடன் வரும் செய்திகளும் தன்னை மிகவும் பாதித்ததாக சொல்லி இருக்கிறார். காமன்வெல்த மாநாட்டினை புறக்கணிக்கும் ஒரே தலைவர் கனட பிரதமராவார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமருன் அந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். பிரிட்டனில் உள்ள தமிழர்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தும் தான் அந்த மாநாட்டில் பங்கெடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.

பிரதமர் கேமருன் கூறும்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து இலங் கையில் நடந்த மனித உரிமைகள் பற்றி கேள்வி கேட்பதாக கூறினார்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்புக்குரல் கொடுத்ததால் பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை.

தமிழர்கள் மாநாட்டினை புறக்கணிப்பதையே விரும்புகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் முக்கிய அரசியல் கட்சி காமன்வெல்த் மாநாட்டில் பங்கு பெறமுடியாது என்ற கனடாவின் பிரதமர் முடிவை வரவேற்றுள்ளது. செப்டம்பரில் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 38 இடங்களில் 30 இடங்களை வென்றுள்ளது. அந்த கட்சியின் உறுப்பினரான என் ஏ சுமந்திரன் கூறும்போது மனித உரிமைகளை அப்பட்டமாக இலங்கை மீறி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை சுமத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவ தில்லை.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட் டைப் புறக்கணிக்கும் நாடுகள் மற்றும் அமைப்பு களின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். 2011 அய்.நா. குழு கூறியிருப்பதுபோல் போரின் கடைசி மாதங்களில் 40000 பேர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கு இலங்கை ராணுவத்தையும் புலிகளையும் காரண மாக காட்டினாலும் கூட அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

போர் குற்றச்சம்பவங்களை விசாரிக்க காமன் வெல்த் உறுப்பு நாடுகள் உதவவேண்டும். இலங்கை அரசோ ராணுவத்தின் செயல்பாடுகளை ஆராயும் சுதந்திரமான ஆய்வுக் குழுவை நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனுடைய நல்லிணக்கக் குழு பரிந்துரைகளின் படி பல செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுகின்றன என்று பெயரளவில் சொல்லி வருகிறது.

அதே வேளையில் இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் அரசியல் நிகழ்வுகளுக்கு விடிவு பிறந்ததாக சொன்னாலும் மனித உரிமைமீறல், ஆள்கடத்தல், ஊடகங்கள் மீதான தாக்குதல் மற்றும் அரசினை விமர்சிப் பவர்களை சித்திரவதை செய்வது போன்ற அப்பட்ட மான மனித உரிமை மீறல்கள் தொடர்கதையாக உள்ளன என்று சர்வதேச மனித உரிமைகள் மய்யம் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் டாட்டு கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பற்களுக்கும், இதயநோய்க்கும் உள்ள விசித்திர உறவு!
--veramani
மனிதர்களை திடீர் என்று மரணமடையச் செய்யும் ஆட்கொல்லி நோய் மாரடைப்பு (Heart attack) ஆகும். இதயநோய் மருத்துவர்கள் இதில் பலவகை உண்டு என்று விவரித்துச் சொல்வார்கள்!

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்த லான இந்த இதயநோய் - மாரடைப்பு பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும், மருத் துவ வட்டாரங்களிலும் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இதயநோய் சம்பந்தமான அமைப்பு (American Heart Association) அவ்வப்போது பல அரிய தகவல்களை அதன் வெளி யீட்டில் (Journal) தந்து கொண்டே வருகிறது.

சரியாக பல்துலக்குவது என்பதும், பற்களைப் பாதுகாத்து பராமரிப்பது என்பதும், மனிதர்களை மாரடைப்பு - இருதயநோயிலிருந்து காப்பாற்ற உதவும் என்ற அரிய தகவலை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த உண்மைகளை அண்மை யில் வெளியிட்டுள்ளார்.

அன்றாடம் சரியாக பிரஷ் மூலம் பல்துலக்குவதும், நூற்கள் போன்ற இழைகளைக்கொண்டு பல் இடுக்கு களில் புகுந்து தங்கும் உணவு எச்சங் களை அங்கிருந்து கிளப்ப (Flossing) முயலுதல், அதோடு ஆறு மாதங் களுக்கு ஒரு முறையாவது, பல் டாக் டரிடம் சென்று காட்டி பற்கள் பற்றி, பரிசோதித்து அவரது அறிவுரையைப் பெற்று நடப்பது, இதயநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

இது பலபேர்களுக்கு வியப்பாகக் கூட இருக்கும்! என்ன இதயநோய்க் கும், பல்துலக்குவதற்கும் என்ன சம்பந்தம்?, இருதயம் தான் தனியே இயங்குகிறதே என்றுகூட சிலர் மேலெழுந்தவாரியாக எண்ணக்கூடும் அது தவறு.

இருதயநோயில் ஒரு வகை, இரத் தக்குழாய் சுருங்கி, இரத்த ஓட் டத்தைத் தடைப்படுத்தி நாளாவட்டத் தில் மாரடைப்புக்கு அடிகோலும் ஒன்று (Artheroselerosis)

நமது இரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடச் செய்யும் சக்தி, பற்களி டையே உள்ள (Pleaque) பற்காறை களுக்கு உண்டு.
மாரடைப்பு வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று இதயநோய் மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

வாயில் உள்ள பற்களிலும் பக்கத் தில் உள்ள Gums என்ற பற்தசை களிலும் கிருமிகள் குடியேறினால் பல் வியாதி (Periodental disease) வந்த பலரை சுமார் 5008 சாம்ப்பிள்கள் - பற்களில் தங்கிய கறை துகள்களை எடுத்து அமெரிக்காவின் மருத்துவ மனை (Mailman school - Man hatten residents samples) டாக்டர் (Moise desvarilux M.D., Ph.D.) மொய்சி டெஸ்வரீயூக்ஸ் அவர்கள் இந்த பற் களுக்கும் இதயநோய் ஏற்படுவதற்கு மான ஆய்வினைச் செய்து அமெரிக்க இதயநோய் ஆய்வு ஏட்டில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்!

மியாமி பல்கலைக்கழகப் பேராசிரி யரும் இவ்வாய்வு கட்டுரையின் கூட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான டாக்டர் தட்சனா ரன்டெக் M.D., Ph.D. (Dr. Tatjana Rundeck) இதுபற்றி விளக்குகையில், இருதயத்திற்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களை இந்த பற்காறைகள் (Pleaque) பத்தில் ஒரு பாகம் மி.மீ. அளவைச்சுருக்கி ரத்த ஓட்டத்தை தடை செய்வதாக அமைந்து விடுகிறது என்று விளக்கியுள்ளாராம்!

இந்த பற்காறைகள் எவ்வளவு ஆபத்து பார்த்தீர்களா?

இதனால் மாரடைப்பு வரலாம் (ஸ்ட்ரோக்) - பக்கவாதம்(Stroke) அதன் காரணமாக மரணமும் ஏற்பட லாம்.

உங்களைப் பயமுறுத்த இதை எழுதவில்லை, எச்சரித்து எளிதாக அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக் கங்களில் நாம் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால், அபாயங்களை அணுக விடாமல் தடுக்க முடியுமே என்பதால் எழுதுகிறோம்.

எனவே பல்துலக்குவது என்பது காலையைவிட இரவில் படுக்கப் போகும் முன்பு செய்வது, Flossing செய்வது (இண்டு இடுக்குகளில் உணவு எச்சங்கள் தங்காமல் இருக்க அவைகளை வெளியேற்றுவது), அவசி யம். உணவு உண்டபின் நன்கு வாய்க்கொப்பளித்தல் மிக அவசிய மாகும். முள் கரண்டி, மூலம் சாப்பிடும் நவ நாகரிகமானவர்கள் பலரும் வாய்க்கொப்பளிப்பதே இல்லை. நமக்கு நல் வாய்ப்பு - கை கழுவும்போதே வாயை நன்றாகக் கொப்பளிப்பது என்பது இயல்பான வாய்ப்பாகும்.

வருமுன்னர் காத்து, வாழ்வைப் பெருக்குவோம்!

தமிழ் ஓவியா said...

கிடுகிடுக்க வைத்த பறை இசை

திராவிடர் எழுச்சி மாநாட்டில் மகிழினி - மணி மாறனின் புத்தர் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. 9.11.2013 சனி அன்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை தூள் கிளப்பியது.

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும், பறை இசைப் பயிற்சி புத்தர் கலைக் குழுவினரால் பயிற்சி அளிக்கப் பட்டது. கல்வி வளாகப் பிள்ளைகள் 46 பேர் பங்கேற்றனர்.

வெளியூர்களிலிருந்து பயிற்சிக்கு வந்தவர்கள் மூவர். புத்தர் கலைக் குழுவின் சார்பில் பங்கேற்பு 17 பேர். பெண்கள் சமமான எண்ணிக்கையில் இருந்தனர்.

மிகப்பெரிய மேடை முழுவதும் ஆக்கிரமித்து சின்னஞ் சிறுவர்களும் பறையடித்த காட்சி கண்கொள்ளாக் காட்சி!

குழந்தைகள் 7 அடிகளில் பறை இசைத்தனர். கால்கள் மாறி மாறி பத்து விதமான நடனம் ஆடினர்.

பறையடித்தல், ஆடுதல், கருத்துப் பகிர்தல், பாடுதல் என நால்வகை அம்சங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி மாநாட்டில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இந்தச் செல் வங்கள் பறையடித்தபோது எங்களை அறியாமலேயே எங்கள் கால்களும் ஆடின. ஒரு காலத்தில் பறையடித்த வர்கள் பறையர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டனர்.

அந்த ஜாதிச் சிறையிலிருந்து மீட்டெடுத்து அனைத் துப் பிரிவினரும் இந்தக் கலையை மீட்டும்படிச் செய்து தமிழனுக்குரிய இந்தக் கலையை இந்தத் திராவிடர் கழக மேடை மீட்டுக் கொடுத்துள்ளது (பலத்த கரவொலி) என்றார்.

சென்னை பெரியார் திடலிலும், திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்திலும் எங்கள் பயிற்சிக்கு இடமளித்து எல்லா வகைகளிலும் ஊக்கம் அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்குத் தோழர் மணிமாறன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடக்கத்தில் சினிமா பின்னணி புகழ் மகிழினி (தோழர் மணிமாறனின் இணையர்) தோழர் திருத்தணி பன்னீர்செல்வம், இராம.அன்பழகன், புவனகிரி திலீபன், மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் பாடல்களைப் பாடினர்.

நாட்டுப்புறக் கலை இசைக் குழுவினரைத் தமிழர் தலைவர் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டில் புரட்சித் திருமணம்!

நேற்று (9.11.2013) மாலை திருச்சி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் சுயமரியாதைத் திருமணத்தின் சார்பில் ஒரு புரட்சிகரமான வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் - குன்னூர் லிங்கப்பன் - மலர்க்கொடி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் பி.சி.ஏ. சென்னை மண் ணிவாக்கம் இரா. பத்மாசூரன் - சிவபாக்கியம் ஆகி யோரின் மகள் ப. அருணா எம்.எஸ்சி ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே மணவிழாவினை நடத்தி வைத்தார்.

மணமகன், மணமகள் ஆகியோர் மணமுறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி மணமகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், தாலி விலக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் திருமணத்தில் வழக்கம்போல உறுதிமொழி களைக் கூறச் செய்த கழகத் தலைவர் அவர்கள், மணமகனுக்குக் கூடுதலான சில உறுதிமொழிச் சொற்களையும் சேர்த்துக் கூறச் செய்தார்.

எந்த நிலையிலும் பழைய வாழ்க்கை நினைவுகளைக் சுட்டிக்காட்டுவதில்லை என்றும்; இந்தக் குழந்தையை, தன் சொந்த குழந்தையைப் போலப் பாவிப்பேன் என்றும் கூறச் செய்தார். இத்தகைய உறுதிமொழிகளைக் கூறச் சொன்னபோது வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் திரள் பெருத்த கரஒலி எழுப்பியது.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இதனைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டி - இது சாதாரண திருமணமல்ல - சமுதாயப் புரட்சித் திருமணம் என்று குறிப்பிட்டார்.

தன் பெற்றோர்களின் திருமணத்தை நேரில் பார்த்த பெருமை இந்தக் குழந்தைக்கு உண்டு என்று சொன்ன போது கூட்டத்தில் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. தொடக்கத்தில் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்புரை ஆற்றினார். அருள் தந்தை ஜெகத் கஸ்பர், பேராசிரியர் காதர்மொய்தீன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டனர்.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா


மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா
முடிவுக்கு வந்தது சாம்ராஜ் நகர் மூடநம்பிக்கை!
30 நாட்களுக்கு மேலாகியும் முதல்வராகத் தொடர்கிறார் சித்தராமையா

பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழை யும் எந்த முதல்வரும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 7-ஆம் தேதி அந்த மாநில முதல்வர் சித்தராமையா சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்துவைத்தார். இப்போது அவர் நுழைந்து ஒரு மாதமாகி விட்டது.

ஆனால், அவர் இன்றைக்கும் கருநாடக முதல்வராகத்தான் பவனி வருகிறார். மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் அவர் வென்றிருக்கிறார்.

சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தபோது அவர் கூறினார். தன்னம் பிக்கை அற்றவர்கள் மூடநம்பிக்கையை உருவாக்குகின்றனர். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்போதும் மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. மூட நம்பிக்கையை தகர்த்தெறியவே சாம்ராஜ் நகருக்கு வந்தேன் என்று இன்றைக்கு அவர் சொன்னதைச் செய்து காட்டி விட்டார்.

இன்னும் 30 நாட்களில் சித்தராமையா பதவி இழப்பார் என பல அரசியல் தலைவர்களும், ஜோதிடர்களும் கடந்த 30 நாட்களாக ஓயாமல் சொல்லி வந்தனர். இந்நிலையில் 30 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனால் முந்தைய முதல்வர்களின் நாற்காலிகளை காவு வாங்கியது சாம்ராஜ் நகரின் மூடு மந்திரங்கள் அல்ல. அவர்கள் செய்த தவறுகளும், ஊழலும்தான் என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

முதல்வராகப் பதவியேற்றதும் வீடு தேடிப்போய் எழுத்தாளர்களை சந்தித்தது. பத்திரிகையாளர்களை சந்தித்து ஆட்சி குறித்து ஆலோசித்தது. மூடநம்பிக்கைகள் நிறைந்த சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தது என கருநாடக அரசியலில் சித்தராமையா தனித்து நிற்கிறார்.

எப்படி வந்தது இந்த மூடநம்பிக்கை

இந்திய விடுதலைக்கு முன்பு வரை சாம்ராஜ் நகர் மாவட்டம் மதராஸ் ராஜ் தானியின் ஓர் அங்கமாக இருந்தது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கருநாடக மாநி லத்துடன் சேர்க்கப்பட்டது. தமிழக - கருநாடக மாநில எல்லையில் இருக்கும் சாம்ராஜ்நகர், மைசூரிவிலிருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிகளுக்காக வும் 1996 ஆம் ஆண்டு மைசூரிலிருந்து தனியாக சாம்ராஜ் நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடகருநாடகத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து கருநாடகத்தின் முதல்வராக ஆட்சி செய்வதால், அம்மாநிலத்தின் தென் எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கருநாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்தது. உழைக்கும் மக்களின் வறுமையையும், அறியாமை யையும் மூலதனமாக்கிக் கொண்டு புதுப் புது விதங்களில் மூடநம்பிக்கை கூடா ரங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

இதனால் சாம்ராஜ நகர் மந்திர தந்திர சித்து வேலைகளுக்கும், செய்வினை, ஆவியை ஏவி விடும் விளையாட்டு களுக்கும் மிகவும் பெயர் பெற்றது, இத னால் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர்கள் என்றாலே சூன்யம் செய்து விடுவார்கள் என்ற அச்சம் கருநாடக மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.

- நன்றி தி இந்து, 8.11.2013

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு வைகோ இரங்கல்


திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவன உறுப்பினரு மான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், 9.11.2013 அன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல்பட்டார்.

தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்படியாக உயர்ந்த கோ.சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். சாது என்ற புனைப் பெயரில் அவர் விடுதலையிலும், உண்மையிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும். அம்பேத்கர் பேசுகிறார் என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.

அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய்வற ஈடுபட்டார்.

தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ.சாமிதுரை அவர்களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவரது அன்புச் செல்வங் களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

அய்யா! பொருளாளரே! உமக்கு நன்றி!

தந்தை பெரியாரின் தொண்டரே!

அய்யா ஆசிரியரின் நண்பரே!

இயக்கத்தின் பெட்டகமாய்

கழகத்தின் கணக்கிருப்பாய்

கண்டிப்பின் மறு உருவாய்

தொண்டறத்தின் சிறப்பினிலே

சிக்கனத்தில் வாழ்ந்தவரே

சிந்தையிலே நிறைந்து விட்டீர்!

தள்ளாத உடலுடனே

தளிர் நடை போட்டே தான்

ஆசிரியரின் நிழல் போலே

உடன் பிறப்பாய் நின்றவரே!

உள்ளமெல்லாம் வலித்திடவே

சாமிதுரை வாழ்கவென்றே

நன்றியுடன் வாழ்த்திடுவோம் !

- சோம.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.

தமிழ் ஓவியா said...

இனமுரசு சத்யராஜ்

திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி யுற்றேன். தந்தை பெரியார் அவர்களின் காலத்தி லிருந்து திராவிடர் கழகத்தின் எளிய தொண்ட னாகத் தம்மை இணைத்துக் கொண்டவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பராக 50 ஆண்டுகளாக உடனிருந்து இயக்கப்பணி செய்த பெருமகனாக, பெரியார் பெரும் தொண்டராக அவர் திகழ்ந்துள்ளார்.

திராவிடர் கழகத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட காலத்திலிருந்து நான் சாமிதுரை அவர் களை நன்கு அறிந்து பழகியுள்ளேன்.``பெரியார் திரைப்படம் உருவானபோது அவருடன் பலமுறை உரையாடியது எனக்கு நினைவுக்கு வருகிறது. பெரியார் கொள்கையில் அடிபிறழாமல் வாழ்ந்த ஒரு முன்னணித் தலைவரை நாம் இழந்திருக்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் திராவிடர் கழகத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். - இவ்வாறு இனமுரசு சத்யராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து....

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் நேற்று (9.11.2013) காலை மறைவுற்ற செய்தி அறிந்ததும், அமெரிக்காவில் இருந்து தொலைப்பேசி வழியாக டாக்டர் சோம.இளங்கோவன், திரு.அசோக்ராஜ், திருமதி அருள், திரு.லட்சுமணன்தமிழ், பொறியாளர் சுந்தரராஜுலு, சிங்கப்பூரில் இருந்து திருமதி கவிதா மாறன், நடிகர் இனமுரசு சத்யராஜ், மும்பை இரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது இரங்கலை தமிழர் தலைவரிடமும், கழகப் பொருளாளரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே! - கி.வீரமணி

பேரிடி போன்றதோர் செய்தி!

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு இன்று (9.11.2013) காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு - இயக்கத்திற்கு இருந்தது!

ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.
ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று.

அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன்.

திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

சோதனைக் காலத்தில் துணையாக இருந்த இளைஞர்

இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று.

எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை - பிரிக்க முடியாதவை!
பாழும் சாவு பிரித்துவிட்டதே!

பாழும் சாவு - எங்களைப் பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81 ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!
அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

குளமான கண்களோடு பிரியாவிடை!

எனவே, நாம் அவருக்குப் பிரியாவிடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்து செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

9.11.2013

குறிப்பு: கழகக் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை குறிப்பு

பெயர் : கோ. சாமிதுரை

வயது : 81

பிறந்த ஆண்டு : 1934

பிறந்த இடம் : முடியனூர் (கள்ளக்குறிச்சி வட்டம்)

மாவட்டம் : விழுப்புரம்

பட்டம் : எம்.ஏ., பி.எல். - வழக்குரைஞர்

தந்தையார் பெயர் : கோவிந்தன்

தாயார் பெயர் : அய்யம்மாள்

துணைவியர் பெயர் : சரோஜா

மகன்கள் பெயர்

1. டாக்டர் ஜி.எஸ். குமார்
2. வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர்,

மகள்கள் பெயர் :

1. திருமதி சாந்தி சம்பத்
2. திருமதி டி. விஜயா
3. திருமதி செல்வி

மாணவர் பருவம் முதல் திராவிடர் கழகத்தில் இருந்து வருகிறார்.

திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

பொறுப்புகள் : பொருளாளர், திராவிடர் கழகம்

நிர்வாகக் குழு : பெரியார் சுயமரியாதைப் உறுப்பினர் பிரச்சார நிறுவனத் (அறக்கட்டளை)
துணைத் தலைவர், பெரியார் மணியம்மை

இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (அறக்கட்டளை)

எழுதிய நூல் : அம்பேத்கர் பேசுகிறார்

சாது என்ற புனைப் பெயரில் விடுதலையிலும், உண்மையிலும் கட்டுரைகள் எழுதி வந்தவர். கடலூரில் கி.வீரமணி, எம்.எஸ். ஜனார்த்தனம் (இன்றைய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர்) ஆகியோருடன் இணைந்து வழக்குரைஞர் தொழில் நடத்தினார். பிறகு கள்ளக்குறிச்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இப்பொழுது முழு நேரம் திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கோ. சாமிதுரை மறைவு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல்


சென்னை, நவ.9- திராவிடர் கழகப் பொரு ளாளரும், நீண்ட கால மாக திராவிடர் கழக வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவரும், திரா விடர் கழகத் தலைவர், இளவல் வீரமணிக்கு உற்ற துணையாக இருந்து வந்தவருமான - வழக் கறிஞர் திரு. கோ. சாமி துரை, எம்.ஏ., பி.எல்., அவர்கள் இன்று சென் னையில் திடீரென மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தன்னுடைய மாணவப் பருவம் முதலாக திரா விடர் கழகத்திலே ஈடுபாடு கொண்டவர் திரு. சாமிதுரை. திரா விடர் கழகத்தின் சார் பில் நடைபெற்ற அத் தனை போராட்டங்களி லும் ஆர்வத்தோடு சாமி துரை கலந்து கொண் டதை நான் நன்கறிவேன்.

திராவிடர் கழகத்தின் பொருளாளராக பணி யாற்றியதோடு, பெரி யார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக் கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பெரியார் மணியம்மை இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சயன்ஸ் அண்ட் டெக் னாலஜியின் துணைத் தலைவராகவும் விளங்கி வந்தார். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரு டைய மருமகன், தமிழ கச் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு உறுப்பினர், தம்பி குழந்தை தமிழரசனுக்கும், மற்றும் அவரு டைய குடும்பத்தினருக் கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும், குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


வென்றார் சித்தராமையா


கருநாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத் திற்குள் நுழையும் எந்த ஒரு முதல் அமைச்சரும் ஒரு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கமாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்ற ஒரு மூடநம்பிக்கை நிலவி வரும் நிலையில், இன்றைய முதல் அமைச்சர் சித்தராமையா அந்த மூடநம்பிக்கையை உடைத் துக் காட்டியது வரவேற்கத்தக்கது - பாராட்டத் தக்கது.

தன்னம்பிக்கையற்றவர்கள் மூடநம்பிக்கை களை வளர்க்கிறார்கள். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்பொழுதுமே மூடநம்பிக்கை களை நம்புவதில்லை. மூடநம்பிக்கையைத் தகர்த்தெறியவே இந்த சாம்ராஜ்நகருக்கு வந் துள்ளேன் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டாரே!

30 நாட்களுக்குள் சித்தராமையா பதவியை இழப்பார் என்று அரசியல்வாதிகளும், ஜோதிடர் களும் கூறினார்களே - சாம்ராஜ் நகருக்கு முதல் அமைச்சர் சித்தராமையா சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர் பதவி ஒன்றும் பறி போய் விடவில்லை; பலமாகவே கால் ஊன்றித்தான் நிற்கிறார்.

உத்தரப்பிரதேசத்திலே ஒரு சாமியார் தங்கச் சுரங்கம்பற்றி உளறினார். இந்த நாட்டு ஏடுகளும், அரசியல்வாதிகளும் அதனை நம்பி ஏமாந்தார்கள்.

இப்படி மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிடும் பேர் வழிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாத வரை - தங்கள் எத்து வேலைகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சாம்ராஜ் நகர் என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி, ஆட்சி எல்லைக்குள் அந்தப் பகுதி அடங்காதா? அந்தப் பகுதியில் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல் அமைச் சர் என்ற முறையில் செல்லுவது - கடமையின் பாங்கு அல்லவா!

சாம்ராஜ் நகரில் அப்படி என்னதான் இருக் கிறது? அந்தப் பகுதியைக் கடவுள் கேவலமாகப் படைத்து விட்டாரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த மேதாவிகளிடமிருந்தும், மூடத்தனத்தைப் பரப்பி வயிறு வளர்க்கும் ஊடகக்காரர்களிடமிருந்தும் அறிவு நாணயமான பதில் வருவது கிடையாது.

தங்களுடைய மூடநம்பிக்கை முற்றும் அம்பல மாகி விட்டது என்று தெரிந்த நிலையிலும் அடுத்த மூடநம்பிக்கையை அவிழ்த்துக் கொட்ட அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதே கிடையாது.

விஞ்ஞானம் தந்த அறிவுக் கொடையான ஊடகங்கள் அதற்கு மாறாக அஞ்ஞானத்தைப் பரப்புவதில் கட்டுக்கடங்கா வெறி கொண்டு அலைகின்றனவே - இந்த வெட்கக்கேட்டை எது கொண்டு சாற்ற?

இவ்வளவுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் மக்கள் மத்தியிலே விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகன் அல்லது குடிமகளின் கடமை என்று வலியுறுத்துகிறதே.

அத்தகைய அடிப்படைக் கடமையை அரசுகள் செய்கின்றனவா?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சி பீடத்தில், தலைமை இடத்தில் இருக்கும் முதல் அமைச்சர்களே, பிரதமர்களே, குடியரசுத் தலை வர்களே, ஆளுநர்களே மத மூடநம்பிக்கைக் கூண்டுக்குள் சிக்கிப் பரிதவிக்கிறார்களே!

என்ன கொடுமையென்றால் மகாராட்டிர மாநிலத்தில் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்றால், எவ்வளவுக் கேவலம்!

உடனடியாக மகாராட்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது போல மற்ற மற்ற மாநிலங்களிலும் இத்தகு சட் டங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசிய மாகும்.

கருநாடகத்தில் அத்தகையதொரு சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் அறிவித்துள்ளார் - வரவேற்கத்தக்கது.

எல்லாவற்றையும்விட இத்தகு சட்டம் ஒன்றை மத்திய அரசே கொண்டு வந்து அரசமைப்புச் சட் டத்தில் காணப்பட்ட சரத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டு கோளாகும்.

தமிழ் ஓவியா said...


அறிவை அடக்க புதிய சட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப் பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டும் என்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலாயிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நமது நாட்டுப்பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக் கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.

இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம், மதம் என்று சொல்வது ஒரு மனிதருடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல் அது உலகத்தில் உள்ள மனிதகோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடியதல்ல.

அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப்பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லை யென்பதே நமது அபிப்பிராயம். உலக மனிதர்களில் 100க்கு 99 பேர்களால் ஒப்புக்கொள்வதாகச் சொல்லப்படும் கடவு ளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்பதற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் செய்ததாகச் சொல்வதையும், சொன்னதாகச் சொல்வதையும் பற்றிய தர்க்கங்களும், மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவமாடிக் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது, ஒன்றை எதிர்ப்பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையும் கூட தூட்சிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டும் அனு மதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப்பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள் என்று சொல்பவர்களைப்பற்றி, கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்பவர்களைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?

எனவே இவ்விஷயங்கள் ஒருவருடைய அபிப்பிராயமேயல் லாமல் அதுவே சத்தியமாய் விடாது, உலகத்தில் ஏதாவது சீர்திருத்தம் என்பது ஏற்படவேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும், மறுப்பதும் ஒருவர் கொள்கையை அனுமதிக்கப்பட்டுதான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்து விட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியைத் தடுத்ததாகுமே யொழிய மற்றபடி அது எந்தவிதமான நன்மையையும் செய்ததாக ஆகாது.

அன்றியும், இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரிகமும் காட்டு மிராண்டித்தனமுமேயாகும் இப்பேர்ப் பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறு உள்ளனவைகளையெல்லாம் களைந்தெறிய வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவு நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப் படுவதும் அது நிலைபெறுவதும், அதற்குக் கோடிக் கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும், சகஜமான தேயல்லாமல் அதில் ஒன்றும் அதிசயமில்லை.

அதுபோலவே தற்காலத்தில் உள்ள மக்கள் அறிவு நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசய மில்லை. எனவே, மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில் மாத்திரம் முற்போக் கடைய வேண்டியது பாக்கியமில்லை, அறிவிலும், ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதிலும் முற்போக்கடைய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கி யிருக்கிறது.

அவைகளைக் கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகுசிறியதே யாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்குச் சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.

ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச் சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927

தமிழ் ஓவியா said...


சத்தியாக்கிரகமாகுமா?


சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல்துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு வருக்கும், மூன்று மூன்று மாதம் கடுங்காவலும் முன்னூறு ரூபாய் அபராதமும் அது செலுத்தப்படாவிட்டால் மேற்கொண்டு மூன்று மாதம் தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மனஉறுதியையும், அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதானாலும் இச்செய் கைக்குச் சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.

அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும் அனுபவிக்கத் தயாராயிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களைத் தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில் நடத்திப் பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கில்லாத காரியங்களை செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம்.

ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப் பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்யலாம். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு சிலையை விகாரமாக்குவது மகாத்மாவின் தத்துவப்படிப் பார்த்தால் எல்லை கடந்த பலாத்காரமாகும் என்றே நமக்குப் புலப்படுகிறது.

நல்ல விஷயங்களுக்கு ஏற்பட்ட பொருளை இம்மாதிரி விஷயங்களுக்குச் செலவு செய்வதை நாம் பாராட்ட முடியாததற்கு வருந்துகிறோம். நீல்துரை அக்கிரமக்காரர் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் செய்த அக்கிரமத்தைவிட அதிகமான அக்கிரமங்களும், கொடுமைகளும் செய்து வருகிறவர்களையெல்லாம் நாம் என்ன செய்து விட்டோம்?

அப்பேர்ப்பட்டவர்களையெல்லாம் பலாத்காரமில்லாமல் மனமாற்ற மடையும் படி நாம் அவர்களை வேண்டிக் கொள்கிறோமேயல்லாமல் அவர்களுடைய கையையும், காலையும் ஒடிக்கப் போகிறோமா? அல்லது ஒடிக்க எண்ணு கிறோமா? அந்தப்படியே இதிலும் நாம் நடந்து கொள்ளவேண்டியதாயிருக்க இம்மாதிரி நடக்கத் துணிந்ததானது வருத்தப்படத்தக்கதேயாகும்.

இம்மாதிரி ஒவ்வொரு காரியத்திற்கும் செய்ய ஆரம்பிப்போமானால், கடைசியாக அது எங்கு போய் நிற்கும் என்கிற ஒரு முடிவு கட்டவும் முடியாது. அன்றியும் நாம் நினைக்கிற காரியமும் கைகூடாததுடன் அது முறை அல்லவென்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28-08-1927

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொதுஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களைச் சில பொதுத் தெருக்களில் நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்த தும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

அதன் பிறகும் அதே ராஜ்யத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்கள் உபத்திரவப் படுவதும், சிற்சில இடங்களை அந்தச் சர்க்கார் அனு மதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற வருஷம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆகவேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்திய தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் எல்லோருக்கும் வழி திறந்து விடப்படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தைத் திடீரென்று நிறுத்தும்படி செய்துவிட்டார்கள்.

இம்மாதிரி மேற்படி சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் வருவதோடு, இப்போது சர்க்கார் வேறு ரோடு போட்டுக் கொடுப்பதாகவும், அதற்கு ரூபா பத்தாயிரம் வரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருப்ப தாகவும் தெரிய வருகிறது.

இம்மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்பந்தப்பட்டவர்களும், அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக்கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தியாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும், சுற்றுப் பக்கத்துப் பிரமுகர்களுடனும், தொண்டர்களுடனும் கலந்து, சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா கண்டு ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பிவிட்டு, அதற்குள் தேவையான பிரசாரம் செய்து தக்க ஆதர வைத் தேடிக்கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தைத் தொடங்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண்காரியத்தில் பிரவேசித்து அனாவசியமாய் சிறை சென்று வரு கிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்து கூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கபடி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 04.09.1927

தமிழ் ஓவியா said...

நேரத்தை புறம்தள்ளிய நீதிபதி

- மு.வி. சோமசுந்தரம்

நீதி கெட்டது யாரால்? தந்தை பெரியார் கேட்ட பொருள் பதிந்த பெரிய கேள்வி.

நீதி தேவன் மயக்கம் - விழிப்புடனும், தெளிவுடனும் இருந்து வாதத்தை கேட்டு, குவிந்துள்ள புராண குப் பையைக் கண்டு மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார் நீதிபதி என்பதை அறிஞர் அண்ணாவின் நாடகம் விளக்கும்.

ஒரு முக்கியமான வழக்கு, வழக் கறிஞர் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன் வைக்கிறார். மூச்சு விடாமல் தொடர்ந்து பேசுகிறார். நீதிபதி, பின்னே சாய்வதும், முன்னே குனிந்து கேட்பதுமாக இருக்கிறார் அசைந்து அசைந்து உட்காருகிறார். அலுப்புத் தட்டி விடுகிறது. உரத்த குரலில்பேசி வந்த வழக்கறிஞர் வாதத்தை முடித்துவிட்டார். நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மனித ஒலி ஓய்ந்தது.

குற்றவாளிக்கு மரண தண்டனை என்று நீதிபதி தீர்ப்பைக் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர், நான் தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப் போகிறேன் என்றார்.

எனக்குப்பிறகு, வேறு நீதிபதி இல்லாதபோது எவரிடம் மேல் முறையீடு? என்று நீதிபதி கேட்டார்.

தூங்கிய நிலையிலிருந்த நீதிபதியிட மிருந்து விழிப்பு நிலையில் உள்ள நீதிபதியிடம் மேல் முறையீடு செய்யப் போகிறேன் என்றார் வழக்கறிஞர். நீதி தூங்கக் கூடாது என்பதற்கான ஒரு துணுக்கு.

தாமதமாகும் தீர்ப்பு, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விடியலை எதிர் நோக்கி ஆண்டு பலவாக துவண்ட நிலையில் காத்திருக்கும் கட்சிக்காரர்கள் ஏராளம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அனைத்திலும் வழக்குகள் குவிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையை நீடிக்க விடக் கூடாது என்று நீதியரசர்கள் குரல் எழுப்பியும் முயற்சித்தும் வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


எண்ணியர் திண்ணியராகவும் இருக்க வேண்டுமல்லவா? செயல் திறம் படைத்த நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்குவதில் சாதனை நிகழ்த்திய செய்தி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கட்சிக்காரர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. அதனைக் காண்போம்.

மேற்கு வங்காளம் இஸ்லாம்பூர் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம், அக் டோபர் மாதம் 9ஆம் தேதி, புதன் கிழமை, காலை 11 மணிக்கு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. நீதிபதி முதலில், சாட்சிகள், சாட்சியம் அளிக்க வேண்டிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். அடுத்து, காவல் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு, சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை எடுத்துக் கொள்கிறார். மதியம் 2 மணிக்கு, பகல் உணவாக, சோறும், காய், கீரையை நீதிபதி உணவாக உட்கொண்டு வழக்கு விசாரணையைத் தொடர்கிறார். மாலை 4 மணிக்கு நீதிபதி, தன் அறையில் தேநீர் அருந்தி 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். வழக்குகளை நடத்துகிறார். இடை இடையே தேநீர் அருந்திக் கொண்டு மாலை நேரம் தொடர்கிறது. இரவு 11 மணிக்கு சிறிது இடைவேளை கொடுத்து 15 நிமிடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வழக்குகளை நடத்துகிறார். இரவு முழுவதும் வழக்குகள்நடத்தப்படுகிறது. இந்த வேளையில் பிணை வழங்குதல், மேல் முறையீடு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இடையே தேநீர் குடித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு மறுநாள், அதாவது வியாழன், 10ஆம் தேதி காலை 7 மணிக்கு, நீதிமன்றப் பணி வழக்கு விசாரணை முடிவடைகிறது.

தொடர்ந்து 20 மணி நேரம் செயல் பட்டு 393 வழக்குகள் விசாரிக்கப்பட் டன. அக்டோபர் 10 முதல், நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடு முறை என்பதால், மனிதநேய உணர் வுடன் கட்சிக்காரர்கள் மனக் கவலையைக் கவனத்தில் கொண்டு பணியாற்றிய நீதிபதியின், கடமை, பொறுப்புணர்வைக் கண்டு வியக்கா மலும், போற்றாமலும் இருக்க முடியாது.

இந்த சிறப்பான காரியத்தை நடத்தி முடிக்க நீதிமன்ற ஊழியர்களும், காவலர்களும், வழக்கு நடத்த வந்த 50 வழக்குரைஞர்களும் ஒத்துழைத்ததையும் மெச்ச வேண்டும். மாலை நீதிமன்ற வளாக உணவுக் கடைகளும் மூடப் பட்டதால் அனைவரும் தேநீர் குடித்து இரவைக் கழித்தனர்.

இந்நீதிபதியின் செயல்பாட்டை, வழக்குரைஞர்கள் எப்படி விமர்சித் துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

மூத்த வழக்குரைஞர் கீதாநாத் கங்குலி: எனக்குத் தெரிந்தவரையில், வங்காளத்திலோ, ஏன் இந்தியாவிலோ இதுபோன்ற முன்மாதிரி இருந்த தில்லை. 2008இல் ஜெக்மோகன் டால்மியா வழக்கை உச்சநீதிமன்றம் நள்ளிரவு வரை விசாரித்தது. மே மாதம் 2009இல் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி டி.பி. சென்குப்தா கோடை விடுமுறையில் இரவு 11 மணி வரை 201 பிணை வழக்குகளை விசாரித்தார்.

இஸ்லாம்பூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் முகமது ஃபெய்ஜ்யு ரிடீன் என்னுடைய தொழிற்காலத்தில், தொடர்ந்து இவ்வளவு நேரம் நீதி மன்றம் செயல்பட்டதை முதன் முறை யாகக் காண முடிந்தது.

அரசு துணை வழக்குரைஞர் கெய்சர் சவுத்ரி; நான் இரவு முழுவதும் இருந்தேன். நீதிபதியின் ஆற்றலும், பதட்டப்படாது செயல்பட்ட முறையும் மெச்சத்தக்கது, ஒவ்வொரு வழக்காக எடுத்து வழக்குரைஞர் வாதத்தைக் கேட்டு, எழுத்தர்கள் எழுத ஆணையை வழங்கி வந்தார். இவரின் செயல் முறையை, நீதித்துறை பாராட்ட வேண் டும்.

நீதித்துறையில் இத்தகைய சாதனையை பொது நல நோக்கோடு செயல்படுத்திய நீதிபதி ஜகாங்கீர் கபீர் என்பவர். 50 வயதானவர். பெக்ராம் பூரை சேர்ந்தவர். இஸ்லாம்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியில் உள்ளார்.

‘The Telegraph’ 11.10.2013 இதழில் வெளிவந்த செய்தி

தமிழ் ஓவியா said...


திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்


ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை.

முதல் உலகப் பெரும்போரில் போர்ப்படையில் பணி புரிந்தார். அப்பணியில் பெற்ற ஊதியத்தை இயன்றவரை சேமித்துச் சென்னை விலங்கின மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அவர் படித்த கல்லூரி மாணவர் விடுதியில் அக்கால நிலைக்கு ஏற்ப பார்ப் பனருக்குச் சிற்றுண்டி உணவருந்தத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அக்காலத்துப் பொது உணவு விடுதிகளிலும் இந்நிலை இருந்தது. அந்நிலை மாற கங்காதரக் கோனார் வெகுண்டெழுந்தார். உண்ணாநோன்பு மேற்கொண்டார். அக்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டிலும் இச்செய்தி வெளியிடப்பட்டது.

நன்னிலத்தில் அவர் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அஞ்சல் அலுவலகத் தலைவர். வட்டாட்சியர், விலங்கின மருத்துவர் இம் மூவரைத் தவிர மற்ற உயர் அலுவலகப் பணிகளில் பார்ப்பனரே இருந்தனர். அஞ்சல் ஊழியர் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவரே. இவர்கள் பார்ப்பனர் வாழும் இடத்துக்குச் செல்லும்போது வெயிலின் வெம்மையிலும் காலணி அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டனர். கங்காதார் அவர்களைக் காலணி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரை எதிர்க்கும் துணிவு பார்ப்பனருக்கு இல்லை. எனவே அக்கொடிய பழக்கம் ஒழிந்தது.

டாக்டர் கங்காதரனின் இளவல் திரு. கிருஷ்சாமிக்குச் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்.டாக்டர் க. முத்துபாபு (இணை இயக்குநர் கால் நடைப் பராமரிப்பு), பேரா. க. பாஸ்கரன் (கல்லூரி கல்வி இணை இயக்குநர்) ஆகியோர் அன்னாரது திருக்குமாரர்களாவர். நெஞ்சுரங்கொண்ட கங்காதரரை நினைவில் நிறுத்துவோமாக.

- சி.சி. செல்லம்,
யாதவர் களஞ்சியம், பக்327

தமிழ் ஓவியா said...


பிட்டி தியாகராயர்


சென்னை நகரை முதன் முதலாக 1867இல் 8 வார்டுகளாகப் பிரித்தார்கள். நகரில் குடியிருப்பவர்களிலிருந்து இரண்டு வார்டுகளுக்கு ஒருவர் வீதம் நான்கு கமிஷனர்களை நியமித்தனர்.

1878இல் 16 வார்டுகளுக்கு 32 கமிஷனர்கள் நியமிக்கப் பட்டார்கள். இவர்கள் நியமனம் வரி செலுத்துவோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாய் இருந்தது.

1919இல் வார்டுகள் டிவிஷன்களாக மாறின. நியமன கமிஷ னர்கள் கவுன்சிலர்களாக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு சென்னை நகரம் 1947இல் 50 வட்டங்களாகவும், (டிவிஷன்கள்) 1961இல் 100 வட்டங்களாகவும், 1967இல் 120 வட்டங்களாகவும், இன்று 155 வார்டுகளாகவும் மாறி உள்ளன.

இப்போது டிவிஷன், வட்டம் என்று சொல்லாமல் வார்ட என்றே மீண்டும் குறிப்பிடுகிறார்கள். டி.எம். நாயர் அவர்கள் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய காலம் வரை நகராட்சி, உறுப்பினர் பொறுப்பைக் கமிஷனர் என்றே கூறி வந்தனர்.

டாக்டர் நாயர் நகராட்சிப் பொறுப்பி லிருந்து விலகியதற்குப் பிறகு மனமாற்றம் ஏற்படக் கூடிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. டில்லி இம்பீரியல் சட்டமன்றத்துக்கு 1915ஆம் ஆண்டு சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இப்பொறுப்புக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினார் டாக்டர் நாயர். இந்த விருப்பத்தை தமது நண்பர்களிடம் தெரிவித்தார். டாக்டர் நாயரும் தேர்தலில் ஈடுபட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இறுதியில் டாக்டர் நாயர் தோல்வி அடைந்தார். அவருக்கு நான்கே வாக்குகள் கிடைத்திருந்தன. இத்தோல்விதான் நாயரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பிட்டி தியாகராயருக்கு வேறொரு வகையான அனுபவம் கிடைத் தது. பிட்டி. தியாகராயர் எவ்வளவுதான் சமூக நிலையில் உயர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பனர் ஒருவர் மேடைமீது ஏற்றாமல் சிறுமைப்படுத்தி, கீழே நாற்காலி போட்டு அமர வைத்து விட்டார். இத்தனைக்கும் அந்தப் பார்ப்பனர் அவரது அலுவலகத்தில் அவருக்குக் கீழே ஊதியம் பெறுபவராக இருந்தார்.

பார்ப்பனர் அல்லாதவராகப் பிறந்து விட்டார் என்பதற்காகவே சமூக நிலையில் தம்மைப் பார்ப்பனர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. பிட்டி தியாகராயர் கடவுள் நம்பிக்கை உடையவர்.

(திராவிட இயக்கம் தொகுதி - 1 நீதிக்கட்சி வரலாறு க. திருநாவுக்கரசு பக்கம் 163)

- க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


கொடிது கொடிது (ஈ.வெ.ரா)


கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது குழவிக்கல்லையும், செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல்.

- விடுதலை 21.10.1957

தமிழ் ஓவியா said...


கடவுளுக்குக் காணிக்கை ஏன்?


கடவுளை மற; மனிதனை நினை என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறியது கண்முன்னே உண்மையென காட்சியளிக்கும் செய்தி.

28.10.2013 தேதியன்று தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி. திருப்பதி கோயிலுக்கு ரூ.35 இலட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் காணிக்கை எல்லாம் வல்ல இறைவன் தன்னையும், குடும்பத்தினரையும், மக்களையும் காப்பான் என்று எண்ணிச் செல்லும் மக்களைக் காக்க ஏழுமலையான் மறப்பானா?

மலைமேல் செல்லும் பேருந்துகள் உருண்டன பக்தர்கள் மாண்டனர். புலி, கரடி, சிறுத்தை தாக்கின பக்தர்கள் பாதிப்பு அடைந்தனர். பக்தர்கள் ஏழுமலையான் சன்னதியில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

எதற்கும் பகவான் அசைந்து கொடுக்கவில்லை பக்தர்களை காக்கவில்லை. எந்த அவதாரமும் எடுக்கவில்லை. கடவுள் கைவிட்டார் மனிதன் கை கொடுத்தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கொடுத்து மக்களை காக்க அப்பல்லோ மருத்துவமனை அதிபர் வழங்கினார்.

(ஆண்டவன் காக்க மாட்டான் என அறிந்திருப்பாரோ) பச்சைக் குழந்தை பாலுக்கு அழுகையில் குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகம் செய்யும் நாடல்லவா?

ஆன்மிக நோக்கில் டாக்டர் பிரதாப் (ரெட்டி) அவர்கள் அளித்திருப்பினும் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரக் கிரீடம் தங்கத்தேர், தங்கப் பூணூல், உண்டியலில் பணம் என்று கொடுக்காமல் (ஏற்கெனவே கொடுத்திருந்தாலும்) உயிர் காக்கும் மருத்துவத்திற்கு தேவையான ஆம்புலன்ஸ் வாகனம் அளித்துள்ளார். அவரின் கடவுள் பற்றைவிட, மனிதநேயப் பற்று வென்று விட்டது. அவரின் மனிதநேயப் பற்றை நாமும் பாராட்டுவோம். என்ன பாராட்டத்தானே வேண்டும். ஏனெனில் வருத்தப்பட வேண்டியது நாமல்ல. நாமம் போட்ட பெருமாள்தானே!

- ச. மாரியப்பன், கோடம்பாக்கம், சென்னை

தமிழ் ஓவியா said...


சர்ச்சில் கூறியது ஒருமுறை


சர்ச்சிலை சொற்பொழிவு ஆற்ற அழைத்தார்களாம். எவ்வளவு நேரம்? என்று கேட்டார் சொற் பொழிவாளர். ஒரு மணி நேரம் பேசினாலும் மகிழ்ச்சியே! என்றனர். அப்படியானால் ஒரே நாளில் வந்து பேசி விடுவேன் என்றாராம்!

அரை மணி நேரம் என்ற போது, ஒரு வாரம் டைம் கேட்டாராம். பத்து நிமிடங்கள் பேச, இரண்டு வாரங்கள் வேண்டும் என்றார். குறுகிய காலத்திற்குள் பேசி முடிப்பது என்பது கடினமான காரியம். அதேபோல் சிறுகதை என்றால் கதை, தீம், இன்ட்ரெஸ்டிங் நடை, பஞ்ச் எல்லாம் இருக்க வேண்டும் என்பதால், நாவல் எழுதுவதைவிட சிறுகதை எழுதுவதே கடினம் நாவல் என்றால், ஒரு தீம் கிடைத்து விட்டால் மெல்ல மெல்ல கதையைக் கொண்டு வந்துவிடலாம்

தமிழ் ஓவியா said...


சூத்திரன் பாஞ்சாலிகள்


மணவறைப் பெண்ணின்

கூரைப் புடவையை மந்திரங்களால் அவிழ்த்து

முதலிலவளை சோமனுக்கு மணமுடித்து

பின் னவளை கந்தர்வனுக்கும் உத்திரனுக்குமென

நான்காவதாய் அக்னிக்கும் மனைவியாக்கி

மாற்றி மாற்றி மந்திரமோதும்

அந்தப் புரோகிதப் பார்ப்பான்

சூத்திரப் பாஞ்சாலியாய் அவளையாக்கி

அவளின் பதிவிரதத் தன்மையை

பலவாறாய்ப் பந்தாடி அழித்தபின்

பாவமந்த சூத்திரப் பையனை

அய்ந்தாவது கணவனாய் அவளுக்காக்கி

ஓதும் மந்திரத்தால் வெதும்பி

அந்த ஓமகுண்ட நெருப்பே

புகைவிட்டழுகிறது.

புரியாத ஜென்மங்களோ

அட்சதையை தூவுகிறது...

வைதீக திருமணங்களின் புரோகிதன் ஓதும் முக்கியமான மந்திரமீது: சோமசிறீ ப்ரதாமோ

- விவிதே கந்தர்வ விவிதே உத்ரஹ - த்ருதியோ அக்னிஸ்டே - பதிஸ துரியஸ்தே -

மனுஸ்ய ஜாஹா

இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர்

முறையே கந்தர்வனும், உத்தி ரனும், அக்னியும் அடைந்து அனுபவித் தார்கள். இப்போது

அய்ந்தாவதாக மணமகனாகிய உனக்கு இவளை தானம் செய்து கொடுக்கிறேன்.

- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்

தமிழ் ஓவியா said...


நூல் வெளியீடு

திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே! தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு எனும் தலைப்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டு, விழிகள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தில் வெளியிட்டார். ரூ.160 விலையுள்ள அந்நூல் வெளியீட்டு விழாவின்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, பேராசிரியர் அ. மார்க்ஸ், பகுத்தறிவாளர் பெரம்பலூர் ஓவியர் முகுந்தன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கழகத் தலைவரிடமிருந்து பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.

நூலைப்பற்றி கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது: இது பி.எச்.டி.க்குத் தகுதியானது. அறிவுக்கரசு பெயருக்கேற்ற அறிவுக்கு அரசாக இந்த நூலை எழுதியுள்ளார் என்று பாராட்டிய கழகத் தலைவர் நூலினைச் சிறப்பாக வெளியிட்ட விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால் அவர்களையும் பாராட்டினார். வேணுகோபால் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

தமிழ் ஓவியா said...


படித்தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை


இந்தியா குறைந்த செலவில் செவ் வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்க லத்தை அனுப்பியுள்ளது குறித்து ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் சற்று உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் படித்தவர்களின் மூடநம்பிக்கை கண்டு அவர்களின் தலை தரையை நோக்கியிருக்கும் என் பதிலும் அய்யமில்லை.

பாமரர்களின் மத்தியில் பரவலாக இருக்கும் மூட நம்பிக்கைகள் படித்த வர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக் கிறது.ஒவ்வொரு போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிகிள் என்னும் ஏவுகணை மூலமாக வானில் ஆராய்ச்சிக் கோள் கள் ஏவப்படும் போதெல்லாம் இன்றைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப் பின் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ் ணன் ஏவுகணையின் நகலுடன் திருப்பதி சென்று ஏழுமலையானின் காலில் அதை வைத்து வணங்கி விட்டு வந்த பின் தான் ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுகிறது என்ற தகவல் பகுத்தறிவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இது ஏவுகணை விஷயத்தில் மட்டும் அல்ல . புதிதாக கட்டப்பட்ட கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டு பின்னர் கடலில் முதல் முதலாக பணி நிமித்தமாக இறக்கப்படும் போது கூட தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்து பூஜைபுனஸ்காரம் செய்த பின் னரே கப்பல் கடலில் இறக்கப்படுகிறது.

இஸ்ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவ தில்லை என்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐஏஎன் எஸ் செய்தியாளரிடம் இஸ்ரோ விஞ்ஞானி கள் கூறியுள்ளனர். அப்படியென்றால் போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிக்கிள் - சி 13 என்ற ஏவுகணை என்ன ஆயிற்று என்று கேட்ட போது அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ பிஎஸ் எல்வி - சி 12 அய் ஏவிய பின்னர் ஓசன்சட்-2 மற்றும் ஆறு ஐரோப்பிய நாடுகளின் நானோ சாடிலைட்டுகளையும் அனுப்பிய ஏவு கணைக்கு பிஎஸ் எல்வி - சி 14 என்று பெயரிட்டனர்.

இது குறித்த கேள்விக்கு அது போன்ற எண்ணுடன் ஒரு ஏவு கணை இல்லை என்று இஸ்ரோ உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். எண் 13 ஐ ராசியில்லாத எண் என்று இஸ்ரோ கருதுகிறதா என்று கேட்ட போது அவர் மௌனம் சாதித்துள்ளார். ஆனால் அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுவரை செவ்வாய்க்கிழமையன்று ஒரு ஏவுகணை கூட ஏவப்பட்டதில்லை என்ப தற்கு செவ்வாய் வெறும் வாய் என்ற பழ மொழி உள்ளது போல் அது ஒரு ராசி யில்லா நாள் என்பதும் காரணமாகும்.

செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி செவ்வாய் ஏவுகணை அன்று ஏவப் பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. அந்த அதிகாரி தனது பெயரைக்கூற மறுத்துவிட்டார்.

செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். மதநம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக் கைகளுக்கும் எதிரானது அறிவியல். அதேபோல் அறிவியலுக்கு மதநம்பிக் கைகளும், மூடநம்பிக்கை களும் எதிரானவை.

உலகம் உருண்டை என்று கலிலியோ கூறிய போது அவருக்கு மதம் வாய்ப்பூட்டு போட்ட சம்பவம் வரலாறாகும். பின்னர் மதம் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் வரலாறாகும். மதநம்பிக்கையும், மூடநம்பிக் கையும் இந்தியாவை சீரழித்து வரும் சமூகப்பிரச்சனைகளில் முக்கியமான இரண்டாகும்.

படிக்காதவர்கள் மத்தியில் தான் மூடநம்பிக்கை பரவலாக இருக்கிறது என்பதெல்லாம் பழங்கதை. இன்று அவை படித்தவர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடப்பதை இது போன்ற சம்பவங்கள் சுட்டிக்காட்டு கின்றன. திருஷ்டி கழித்தலும், பூனை குறுக்கே ஓடினால் ஆகாது என்பதும், கழுதை கத்தினால் சுபம் என்று கூறு வதும் காலம் காலமாக கூறப்பட்டு வரும் மூடநம்பிக் கைகளாகும்.

மதவாதிகள் அரசியலில் வேரூன்ற ஆரம்பித்த பின்னர் இவற்றுக்கு மவுசு கூடிவிட்டது. இன்றும் சமூக தளங்களில் செயல் பட்டுவரும் அரசியல், ஜனநாயக, சமூகநீதி இயக் கங்கள் அனைத்தும் மக்களிடையே கடுமையான வலுவான மூடநம்பிக்கை எதிர்ப்பு பணியில் ஈடுபட வேண்டும். மூடநம்பிக்கைகளை தடைசெய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று இவை அரசுகளை வற்புறுத்த வேண்டும்.

நன்றி: தீக்கதிர் 9.11.2013

தமிழ் ஓவியா said...


எருமை போவதுபோல்...

எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல் கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.

_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என அறிவிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் கடிதம்

புதுடில்லி, நவ.11- இலங் கையில் சர்ச்சைக்குரிய காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க வில்லை என அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் ராஜபக் சேவுக்கு கடிதம் அனுப்பினார்.

உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, லட் சத்துக்கும் அதிகமான தமிழர் களை இனப்படுகொலை செய்த இலங்கையின் தலைநகர் கொழும் புவில், 54 நாடுகள் பங் கேற்கும் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி உயர்த்தின.

இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட் டங்களும் நடைபெற்றன.

பலத்த எதிர்ப்புக்கு மத்தி யில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்பது தொடர்பாக காங் கிரஸ் உயர்நிலைக்குழு இரண்டு முறை கூடியும், முடிவு எடுக்க முடியவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை பிரத மரின் முடிவுக்கே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் சையத் அக்பருதீன், இலங்கை காமன்வெல்த் மாநாட் டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சர்கள் அளவி லான கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்கிறார் என அறிவித்தார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோ கன்சிங் பங்கேற்கப்போவ தில்லை என்பது அதிகார பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரத மர் மன்மோகன் சிங் அவசரக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதம், கொழும்பு வில் உள்ள இந்திய தூதரகத் தின் மூலமாக ராஜபக்சேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விவ ரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான அந்தக் கடிதத்தில் தன்னால் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் என்ன கார ணங்களால் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்பதை பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழக அரசியல் கட்சி களின் கடும் எதிர்ப்பு, தமிழக சட்டப் பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானம், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பணிந்துதான் பிரதமர் மன்மோகன்சிங், காமன்வெல்த் மாநாட்டில் பங் கேற்காமல் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பக்....தீ!


நமது தமிழ் நாளேடுகள் ஒவ்வொரு நாளும் இணைப்புகளை (Supplementary) வெளியிடுகின் றன. வியாபார யுக்தியோடு போட்டி போட்டு இலவச இணைப்பாக அவை வெளியிடப்படுகின்றன.

ஆன்மீகம், சோதிடம் இளைஞர், மகளிர் என்ற தலைப்புகளில் வெளி வந் தாலும் - தப்பித் தவறிக்கூட அறிவியல் என்றோ பகுத் தறிவு என்றோ இணைப் புகளை வெளியிட்டு விட மாட்டார்கள். மக்களுக்குப் பகுத்தறிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவ் வளவு அக்கறை.

பகுத்தறிவு வளர்ந்து விட்டால் இந்தக் குப்பை களைச் சீந்த மாட்டார்களே - அதன் பின் பத்திரிகை வியாபாரம் படுத்துவிடுமே - கல்லாப் பெட்டி நிரம் பாதே!

இது தெரியாத பைத் தியக்காரர்களா அவர்கள்? அதே நேரத்தில் பகுத்தறிவு வாதிகள் தோலுரித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு நாளிதழ் வெளி யிட்ட ஆன்மிகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.

கோபியர்களின் ஆசை என்பது தலைப்பு..

கிருஷ்ணனின் வீரம்; அலங்காரம், அவனது குழலோசை, தூய்மையான மனம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவனிடம் தங்கள் மனதைப் பறி கொடுத்தனர் கோபிகள். கிருஷ்ணன் தனக்குக் கண வனாக வர மாட்டானா? என எண்ணத் துவங்கினர். அவனது புல்லாங் குழல் இசையால் ஈர்க்கப்பட்டு, தங்களை மறந்து நிற்பார் கள். திருமணமான பெண் களும்கூட கண்ணனைக் காதலித்தனர். அவன்மீது அன்பு கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் நடந்து செல்லும்போது, அவனது காலடிபட்டு அந்த மண் சிவந்து போகும். அந்த மண்ணை எடுத்துப் பெண் கள் மஞ்சளுக்குப் பதில் உடலிலும், முகத்திலும் பூசிக் கொள்வார்கள். அதன் காரணமாக அவர்களது காம இச்சைகள் அடங்கிப் போகும் என்பதுதான் அது.

இதற்கு ஆயிரம் ஆயிரம் விளக்கம் கூறி அச மடக்க முயற்சிப்பார்கள் பாகவதர்கள்.

யாராக விருந்தாலும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும் கடவுளைப் பார்த்தால் ஒரு பக்தைக்குப் பக்தி வருமா? காமம் வருமா என்பதுதான் அந்தக் கேள்வி.

காமம் வருகிறது என் றால் அது என்ன பக்தி? கண்ணனைக் கட்டிப் பிடிக்க முடியாவிட்டால் அவன் காலடி மண்ணை உடம்பெல்லாம் பூசி காம இச்சையை அடக்கிக் கொள்வது என்றால் இதற் குப் பெயர் பக்தியா? வக்கிரப் புத்தியா?

இதைச் சொல்லுவ தற்கு, தூண்டுவதற்குத் தான் ஆன்மிக இதழ்களா?

உள்ளதைச் சொன் னால் உபத்திரவமா? அறி வோடு சிந்திக்க வேண் டாமா?

- மயிலாடன் 12-11-2013

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதா?

பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட நல்ல உணர்வினை இது வீணடித்து விட்டது!

காலந் தாழ்ந்து விடவில்லை - மறுபரிசீலனை செய்திடுக! தமிழர் தலைவரின் வழிகாட்டும்
முக்கிய அறிக்கை

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட உணர்வை வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பதால் வீணடித்து விட்டது என்றும், இன்னும் காலந் தாழ்ந்துவிடவில்லை; வெளியுறவுத் துறை அமைச்சரும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இவ்வாரம் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; காரணம் அந்நாடு கொத்துக் குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மனித உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்ற பின்புகூட, அவர்களுக்கு எவ்வித உரிமைகளையும் தராது, இராணு வத்தை அங்கே இன்னமும் நிறுத்தி வைத்துள்ளது;

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை ஆய்வுக்கு வந்தபோதுகூட, அவமதிப்புச் செய்து கொச்சைப்படுத்தியது; கருத்துச் சுதந்திரம் எதுவும் கிடையாது;

சிங்களவர் ஆன போதிலும் - அது கிடையாது என்பதுபோல அங்கே தலைமை நீதிபதியான பெண்மணி ஒருவரையே பதவி நீக்கம் செய்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கு என்பதையெல்லாம் சுட்டிக் காட்டி, உலகத்தார் குரல், தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது - இவற்றையெல்லாம் உள்ளடக்கிய காரணிகளால்தான் தமிழ்நாட்டில் டெசோ தீர்மானம் மூலம் முதன்முதலாக குரல் கொடுத்து, நாடு தழுவிய அளவில் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு

தமிழக சட்டமன்றத்தில், தமிழக அரசு சார்பாக முதல் அமைச்சரால் முன்மொழியப்பட்ட காமன்வெல்த் மாநாட்டினை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானம், அனைத்துக் கட்சியினராலும் வழிமொழியப் பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாடே கொதி நிலையில் உள்ளது - இப்பிரச்சினையில் என்று காட்டும் வகையில், மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள் போன்ற அனைத்துப் பிரிவினர்களும் அறப் போர்கள் மூலம் இதே உணர்வை, மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர்!

மத்திய அரசும் மவுனத்தைக் கலைத்தது; பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறியது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்று ஆறுதல் கொள்ளும் வண்ணம் அமைந்தது.

பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலிகள்

ஆனால் வெளி உறவுத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் என்பவர் அதிகாரிகளுடன் கலந்து கொள்ளுவார் என்றுகூறி, அனுப்பி வைப்பதன் மூலம், எந்த நோக்கத் திற்காக பிரதமர் திரு. மன்மோகன் சிங் கலந்து கொள் வதைத் தவிர்த்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் - இருபுறத்தினரும் ஏற்காத ஒரு இரண்டுங் கெட்ட நிலையைத்தான் ஏற்படுத்தி விட்டது; இது ஒருபோதும் இராஜதந்திரம் ஆகாது, பாதிக் கிணறு தாண்டிய புத்திசாலித்தனமாக(?) தான் கருதப்படும்.

பாம்புக்குத் தலை, மீனுக்குவால் என்ற விலாங்குத் தன பாசாங்காகத்தான் உலகத்தார் கண்முன் இது தென்படக் கூடும்.

பிரதமர் கலந்து கொள்ளாத உணர்வை வீணடிப்பதா?

இன்று மாணவர்களின், மக்களின் அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, வெளி உறவுத்துறை அமைச்சரை அனுப்புவதன் மூலம், புறக்கணிக்கவில்லை என்று பதிவு செய்வது, பிரதமர் கலந்து கொள்ளாததன் காரணமாக ஏற்பட்ட உணர்வையே வீணடித்து விட்டதாகத்தானே ஆகும்!

எனவே, இன்னமும் காலந் தாழ்ந்து விடவில்லை; இதையும் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசரம் அவசியம். அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பும்கூட இதில் அடங்கியுள்ளது.

காலந்தாழ்ந்து விடவில்லை

புறக்கணிப்பு என்பது ஒருவகையான எதிர்ப்பு (Protest) என்னும்போது அதை முழுமையாகச் செய்து காட்டுவது தானே சரியானது?

எனவே இன்னமும் காலந்தாழ்ந்துவிடவில்லை; அதிகார வர்க்கம், உயர் ஜாதி ஊடக வர்க்கம் - இவை திட்டமிட்டே காங்கிரசைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க., பதவிக்கு வருவதற்கு இப்படி இந்திய அரசின் மூக்கைச் சொறியும் தந்திரத்தை - பழைய காக்கை - நரி வடை கதை போல் செய்கின்றன. ஏமாந்து விடக் கூடாது. உலகத் தமிழர்கள் உணர்வுகளும், டாட்டு பாதிரியார் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களை அலட்சியப் படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்து கிறோம்.


சென்னை
12.11.2013

வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


கழகக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! 13,500 மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்க உத்தரவு ரத்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை


புதுடில்லி, நவ.12-மக்கள் நலப்பணியாளர் கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல் லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப் புக்கு தடை விதித்த துடன், வழக்கை மீண் டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக் கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு கால தாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப் பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் தது.

அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் விசா ரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை நிவார ணமாக அளித்து, அவர் களை பணி நீக்கம் செய் யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங் கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின் வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மக்கள்நலப் பணி யாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதி வாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை உயர் நீதிமன்றம் தள்ளு படி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக் கள் நலப் பணியாளர் கள் சார்பில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய் யப்பட்டது.

இந்த மனுவை நீதி பதிகள் ஜெயின், மதன் லோக் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது, கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பணி யில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணி யாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவது மாக தொடர்ந்து நடந் துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக் கிறது. எனவே மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவை யில் இருந்தது. இந்நிலை யில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி பதிகள், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசா ரித்து தீர்ப்பளிக்க வேண் டும். 6 மாதத்தில் விசா ரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண் டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியி லிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவர் 5 மாதம் ஊதியம் கொடுத் தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தர விடப்பட்டுள்ளது சரி யான நடைமுறையா காது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் அமர்வு ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணி யாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமி ழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

எனவே, உயர்நீதிமன் றத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதா மதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் மதுவிலக்கு படும்பாடு

இந்தியாவிலேயே காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் தான் மதுவிலக்கு அமலில் உள்ளது என பெருமை பேசுவதுண்டு. ஆனால், அங்கு மதுவிலக்கு என்ன பாடுபடுகிறது தெரியுமா?

குஜராத்தில் குடிகாரர்கள் நல்லமுறையில் உபசரிக்கப்படுகிறார்கள். உள்ளூர் முறைகேடான சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் களுக்கு குஜராத் நகரங்களில் எந்த நேரமும் மதுபானம் கிடைக்கும்.

சட்டப்படி அனுமதி பெற்றுள்ள மதுபானக் கடை களும் உள்ளூர் சாராயத்திற்கு அதிக இடமளிப்ப தால் அரசுக்கு சேர வேண்டிய வரி, காவலர் கலால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் களுக்கு கிரிமினல் குற்றவாளிகள்மூலம் கிடைக் கிறது. சட்டத்துக்கு புறம்பான மதுபான விற்பனையால் அரசியல்வாதிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால் அங்கு ஒரு போதும் மதுவிலக்கு நீக்கப்படாது. அவர் களின் பாதுகாவலில் இந்த முழு வேலைகளும் நடப்பதால் மதுவிலக்கு அங்கு நீடித்து நிலைக்கும்.

இந்த சாராய விற்பனையால் குஜராத்தில் அரசுக்கு வருவதைவிட ஆளும் கட்சிக்கு அதிக பணம் கிடைக்கிறது. இதுதான் குஜராத் மது விலக்கு. இது நாட்டுக்கு தேவையா?
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா அக்.23 பக்.7 இதழிலிருந்து...

தமிழ் ஓவியா said...


மதக் குறி


மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.

(விடுதலை, _ 25.5.1950)

தமிழ் ஓவியா said...


மதவாதத்தை நிராகரிப்போம்!

திருச்சிராப்பள்ளியில் கடந்த 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட திராவிடர் எழுச்சி மாநாடு பல வகைகளிலும் சிறப்பையும், பெருமையையும் பெற்று விட்டது. காலங் கருதி நடத்தப்பட்ட அம்மாநாட்டில் காலத்தின் அவசியம் கருதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் தனித் தன்மையை மேலும் உயர்த்தி விட்டன. மதவாதத்தை நிராகரிப்போம் என்னும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே இப்படியாக இருக்கிறது.

பாரத தேசத்தை மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளதார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத் துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக் கொள் கிறோம் எடுத்த எடுப்பிலேயே மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படைக்கு விரோதமாக பாரதீய ஜனதா என்னும் கட்சி இந்து ராஜ்ஜியம் அமைப்பதாகக் கூறும் நிலையில், தேர்தலில் நிற்பதற்கே தகுதி உடையது தானா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

பா.ஜ.க.,வினால் பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருவாளர் நரேந்திரே மோடி என்பவர் தன்னைப் பற்றிக் கூறும்போது இந்து நேஷனலிஸ்ட் என்றே கூறியுள்ளார்.

திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு இதனை எடுத்துக்காட்டி, இப்படிச் சொல்லுகிற ஒருவரைப் பிரதமராக அறிவித்திருப்பது - இந்திய அரசமைப்புச் சட்டப்படி குற்றமானதல்லவா என்ற வினாவை எழுப்பியுள்ளது.

மதச் சார்பின்மை என்பதற்கு தங்கள் விருப்பம் போல வியாக்கியானம் செய்வது திசை திருப்பும் வேலையாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச் சார்பின்மை என்று கூறியுள்ளார் (துக்ளக் ஆண்டு விழாவில் மோடி பேசியது).

மதச் சார்பின்மை என்பதற்கான உண்மையான பொருளை எதிர் கொள்ள முடியாத நிலையில், அதனைத் திசை திருப்புவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

செக்குலரிசம் (மதச் சார்பின்மை) என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது? அந்த மொழியில் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சென்னைப் பல்கலைக் கழக முயற்சியால் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்களைத் தலைமை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம் என்ன கூறுகிறது?

செக்குலர் என்றால் இவ்வுலகுக்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ் சாராத என்று தெளிவாகவே வரையறை செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதி என்ன கூறுகிறது? Not Concerned with Religion மதம் சாராத - மதத் தொடர்பில்லாத என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மைக்கு மாறாக தன் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விளக்கம் கூறக் கூடியவர்தான் அடுத்த பிரதமருக்கான வேட்பாளரா?

ஏன் இப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் தேக்கி வைத் திருக்கும் இந்துத்துவாவுக்கு எதிரானதாயிற்றே அதனால்தான்!

உண்மையான மதச் சார்பின்மைமீது மோடிக்கு நம்பிக்கை இருக்குமானால், குஜராத்தில் சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு இருப்பார்களா?

காரில் போகும்போது அடிபடும் நாய்க்குச் சமம் என்று சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டதைக் கருதுகிறார் என்றால் அவரிடம் உண்மையான மதச் சார்பின்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மதவெறியைத்தான் எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலையில் தான், பிஜேபியின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி, மக்களையும் அரசியல் கட்சிகளையும் எச்சரிக்கை செய்திருக்கிறது திரா விடர் கழகம் நடத்திய திராவிடர் எழுச்சி மாநாடு