Search This Blog

18.11.13

பார்ப்பனரின் பலமிக்க ஆயுதம் கடவுளும் - மதமுமே!




தோழர்களே! நான் பொதுத் தொண்டு பேரால் பிழைக்க வேண்டிய நிலையில் இல்லாது, போதுமான அளவு வசதி உள்ளவன் - பொதுத் தொண்டுக்கு வந்தேன் என்றாலும் பொதுத் தொண்டால் நான் பெருமை பெற்றேன் என்று கூறுவதைவிட, பொதுத் தொண்டு என்னால் பெருமை பெற்றது என்று எண்ணும்படியே இருந்து வந்துள்ளது. நான் ஒன்றும் கிணற்றுத் தவளையாக எதையம் எடுத்துச் சொல்லவில்லை. உலகின் பல பாகங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து நாட்டில் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன்.
 
நாட்டில் ஒருவன் திருடனாகவோ, ஒழுக்கக் கேடாகவோ நடந்து கொண்டாலோ நான் அதுபற்றிக் கவலைப்பட மாட்டேன். ஏதோ ஏமாந்தவன் இருந்தான். இவன் அடித்துக் கொண்டான் என்று எண்ணுவேன். ஒருவன் ஒழுக்கக்கேடாக நடந்தான் என்றால் அவனுக்குப் பொதுமக்கள் புத்தி கொடுப்பார்கள் என்று கருதிக் கொள்வேன்.

ஆனால், பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கேடாக, வஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் நாம் விட்டு வைக்கக் கூடாது.


தோழர்களே! நாம் (திராவிடர்) இப்படி இழி மக்களாகக் காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம் என்றால், இந்தப் பார்ப்பன ஜாதி இந்த நாட்டில் இருப்பதால்தான். வெளிநாடுகளில் பார்ப்பான், பறையன் - ஜாதி இழிவுகள் இல்லை என்றால் - அங்குப் பார்ப்பான் இல்லாததுதான் காரணம்.


தோழர்களே! சிலர் நினைக்கலாம் 'என்ன இந்தப் பெரியார் 100-க்கு 3-பேர் உள்ள பார்ப்பானையே சும்மா ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கூறித் திரிகின்றாரே' என்று. துப்பாக்கிப் பிடித்த 3-பேர் முன்பு 97-துப்பாக்கி இல்லாத நிரபராதிகள் என்ன செய்ய முடியும்? துப்பாக்கி கண்டு ஓடவேண்டும் அல்லது அடிபணிய வேண்டும். இதுதானே நடக்கக் கூடியது. அதுபோலவே, பார்ப்பனர்களின் கையில் கடவுள், மதம், சாஸ்திரங்கள், அரசியல் என்ற துப்பாக்கிகள் உள்ளன. இதற்குப் பயந்து, அடிபணிந்துதான் 97- பேராக உள்ள நாம் அடிமையாக இருந்து வருகின்றோம்.

எனவே, நமது இழிநிலை மாற - நாம் வாழ்வு பெற - மானம் உள்ள மனித இனமாக ஆக, இந்தப் பார்ப்பனர்களின் ஆயுதங்களான - கடவுள், மதம், சாஸ்திரம், அரசியல் ஆகிய ஆயுதங்களை எல்லாம் ஒடிக்க வேண்டியதை ஒடித்து எறிய வேண்டும். ஒடிக்க முடியாததைக் கூர் மழுங்கும்படியாவது செய்ய வேண்டும். அவர்கள் கையில் இருந்து பிடுங்க முடிகின்றதைப் பிடுங்கி ஆகவேண்டும். புராணக் காலத்தில், பார்ப்பனர்களின் எதிரிகளான இரணியன், இராவணன், சூரபத்மன் முதலியவர்களை ஒழிந்ததுபோல இன்று  - இந்தப் பார்ப்பனர்களால் எங்களை ஒன்றும் அவ்வளவு எளிதில் ஒழித்து விட முடியாது. எந்த முயற்சி செய்தாலும் தோல்வியே அடைவார்கள்.

தோழர்களே! இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வருகின்றது. இதில் பார்ப்பனர்கள் எல்லாரும் காங்கிரசை ஒழிக்க வேண்டும், காமாசரை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். மற்றக் கட்சிக்காரர்களையும் தங்கள் காலடியில் விழும்படிச் செய்து, அவர்களையும் கூட்டிக் கொண்டு பிரயத்தனப்படுகின்றனர்.

நாங்கள், காமராசர் அரசாங்கம் நம் மக்களுக்குச் செய்து வந்து இருக்கும் சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் காமராசரும், காங்கிரசும் வெற்றி பெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

உண்மையிலேயே இந்தப் பார்ப்பனர்கள் காமராசரையும், காங்கிரசையும் ஒழிக்க வேண்டும் என்றுக் கூப்பாடு போடுகிறார்களே! இவர்கள் "காங்கிரசை மக்கள் தேர்தலில் ஆதரிக்க வேண்டும், காமராசர் அமைச்சரவை ஏற்பட வேண்டும்" என்று கூறிவரும் எனக்கு அல்லவா பதில் சொல்ல வேண்டும்? நான் பேசுவது தவறு; இந்த இடத்தில் தவறு என்று அல்லவா எடுத்துக் காட்ட வேண்டும்? ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் என்னிடம் ஒன்றும் பேச முடியாமல், எனக்குப் பதில் சொல்லாமல், நான் காங்கிரசை ஆதரிக்கிறேன் என்ற காரணத்திற்காகக் காங்கிரஸ்காரனிடம் போய் முட்டிக் கொள்கின்றனர். காமராசரையும், காங்கிரசையும் அழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.


"காங்கிரஸ்காரனை எப்படி இராமசாமி ஆதரிக்கலாம் அவனை ஆதரித்துப் பேச ஏன் இந்தக் காமராஜர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்? இந்தக் காமராஜர் ராமசாமியுடன் அல்லவா சேர்ந்து கொண்டது. எனவே, ஒழித்தாக வேண்டும்" என்று கூப்பாடு போடுகின்றனர் - பத்திரிகையில் எழுதுகின்றனர்.

இந்தப் பார்ப்பனர்களும், பத்திரிகைகளும் என்னை எதிர்த்துப் பார்த்து முனை மழுங்கிவிட்டனர். என்னிடத்தில் அவர்கள் ஆயுதங்களைச் செலுத்த முடியவில்லை. எனவே காமராசர் மீதும், காங்கிரஸ் மீதும் தங்கள் ஆயுதங்களைச் செலுத்தி ஒழிக்கப் பாடுபடுகின்றனர்.

நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். நான் ஆதரித்து எவரின் வேண்டுகோளும் இன்றிப் பிரச்சாரம் செய்கின்றேன் என்றால், அதற்காகக் காங்கிரஸ் மீதும், காமராசர் மீதுமா முட்டிக் கொள்வது?

தோழர்களே! எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. எங்கள் பக்கத்தில் வேளாளக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர் என்ற இரண்டு சாதிகள் உண்டு. வேட்டுவக் கவுண்டர்கள் கொஞ்சம் முரடர்கள்; வேளாளக் கவுண்டர்கள் சற்றுப் பயந்த சுபாவம் உடையவர்கள். ஓர் இடத்தில் வேளாளக் கவுண்டனுடைய பிள்ளையார் இருந்தது. ஒரு வேட்டுவக் கவுண்டன் அந்தப் பிள்ளையார் தலையில் கால் பாடுபடிக் காலை நீட்டிப் படுத்து இருந்தான். அந்தப் பிள்ளையார், அந்த வேட்டுவக் கவுண்டனை "ஏண்டா இப்படிச் செய்கின்றாய்?" என்ற கேட்பதை விட்டு விட்டு, வேளாளக் கவுண்டனிடம், "கவுண்டா! கவுண்டா! இந்த வேட்டுவக் கவுண்டன் என் மூஞ்சில் கால்படும்படிக் காலை நீட்டிக் கொண்டு படுத்து இருக்கின்றான். நீ அந்த வேட்டுவக் கவுண்டன் காலை எடுக்கச் சொல்லுகின்றாயா இல்லையா? இல்லாவிட்டால் உன் கண்ணைக் குத்திவிடுவேன்" என்ற மிரட்டியதாம்.

நீங்கள் சிந்திக்கணும். காலை நீட்டி இருக்கும் வேட்டுவக் கவுண்டன் காலை மடக்கச் சொல்லச் சக்தியற்ற இந்தப் பிள்ளையார், பயந்த சுபாவம் உடைய வேளாளனை எப்படி மிரட்டுகின்றதோ, அதுபோலத்தான் இந்தப் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனமும் உள்ளது. கடவுள், மதம், சாஸ்திரங்கள் முதலியவற்றை ஒழிக்க நான் பார்ப்பனர்களை வெளுத்து வாங்குகின்றேன். இவைகளின் புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் அம்பலப்படுத்திக் கொண்டு வருகின்றேன். காமராசர் ஆட்சியின் காரணமாக நாம் அடையும் நன்மைகளை எல்லாம் எடுத்துக்காட்டிக் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று கூறிவருகின்றேன்.

இதற்காக என்னை எதிர்க்கத் தைரியமில்லாத இந்தப் பார்ப்பனர்கள் பயந்து சுபாவம் உடைய காங்கிரஸ்காரனையும், காமராசரையும் பார்த்துக் கூறுகின்றார்கள். "இராமசாமி நாய்க்கன் ஏன் உன்னை ஆதரித்துப் பேசுகின்றான்? அவனை நிறுத்தச் சொல்லுகின்றாயா? அல்லது அவனுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விடுகின்றாயா? என்ன? இல்லையானால் உன்னை ஒழித்துவிடுவேன்" என்று மிரட்டுகிறார்கள். பத்திரிகையில் நாள் தவறாமல் எழுதியும் கேலிச் சித்திரங்கள் தீட்டியவண்ணமும் ஆகவே இருக்கின்றனர். காமராசர் கூறுகின்றார். "அவரை எங்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யச் சொல்லி நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. அவராகவே ஆதரித்தால் நான் என்ன செய்யட்டும்?"

"நான் செய்யும் காரியங்கள் எல்லாம் அவருடைய கருத்துக்கு - அவருக்குச் சரி என்று படுகின்றன. ஆகவே அவைகளை எல்லாம் புகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றார். அதற்கு நான் என்ன செய்யட்டும்?" என்கிறார். அவ்வளவு தான் அவரால் சொல்ல முடியும். ஆதரித்தால் என்னடா தப்பு என்று அவரால் சொல்ல முடியாது?
என்னைப் பார்த்து, "நீ தான் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியவன் ஆயிற்றே, ஏன் இன்று அந்தக் காங்கிரசை ஆதரிக்கின்றாய்?" என்று எவனுமே கேட்க மாட்டான். எங்கோ சந்திலோ பொந்திலோ புரியாத மக்களிடம் உளறுவான். என்னைக் கேட்கமாட்டான். கேட்டால் பட்டென்று கூறுவேன்.

"ஏன்டா, இராஜாஜீ, அன்று காங்கிரஸ் வாழவேண்டும் என்று பாடுபட்டாரே; காங்கிரசில் யாருமே வகிக்காத கவர்னர் ஜெனரல் முதலிய பதவிகள் பெற்றாரே; அவர் ஏன் அந்தக் காங்கிரசை இப்போது ஒழிக்க வேண்டும் என்று அவரைப் போய்க் கேட்டு விட்டு வா; பிறகு, நான் ஒழிக்க வேண்டும் என்ற முதலில் கூறிய காங்கிரசை, ஏன் இன்று ஆதரிக்கின்றதற்கான காரணங்களைச் சொல்லுகின்றேன்" என்று தான் கூறுவேன்.


-------------------------- 06.02.1961- அன்று திருச்சி கீரனூரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் சொற்பொழிவு.  “விடுதலை” 17.02.1961

27 comments:

தமிழ் ஓவியா said...

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

தொடர்ந்து ஈழத் தமிழர்கள் அச்சத்தின் பிடியில்! - கனடா

நெஞ்சை உலுக்கும் போர்க் குற்றம் - டேவிட் கேமரூன்

ஈழப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு தேவை! - தெ. ஆப்பிரிக்கா

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கொழும்பு, நவ.18- இலங்கையில் ஈழத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகள் - அடக்கு முறைகள் இன்று உலகில் பல நாடுகளி லும் எட்டப்பட்டுள்ளன.

கனடா

தமிழர்கள் தொடர்ந் தும் இலங்கையில் அச் சத்துடன் வாழ்ந்து வருவ தாக கனடா அறிவித் துள்ளது.

நாட்டின் தலைமைத் துவம் தொடர்பில் தமிழ் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் அச்சத்து டன் வாழ்ந்து வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமை விவகாரச் செயலாளர் தீபக் ஓபராய் தெரிவித் துள்ளார்.

பொதுநலவாய நாடு கள் அமைப்பின் கொள் கைகளுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட வேண் டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட் டியுள்ளார்.

உறுப்பு நாடுகளில் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட் பாடுகள் அமுல் படுத்தப் படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள் ளார்.

இலங்கை பயணத் தின் போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக் களை சந்திக்க வாய்ப்பு கிட்டியதாகவும் இந்த பயணத்தின் போது கனடாவின் இலங்கை தொடர்பான நிலைப் பாட்டை மேலும் உறுதி செய்து கொள்ள வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்ன ரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை யின் யதார்த்தமான முயற் சிகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டி யுள்ளார்.

இதயத்தை உறைய வைக்கும் கொடூர போர் குற்றம் இலங்கையில் - இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கொதிப்பு!

இலங்கையில் நடை பெற்ற காமன்வெல்த் மாநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அய்க் கிய அரபு எமிரேட்டுக்கு புறப்பட்டார். முன்ன தாக அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழ் ஓவியா said...


இலங்கையில் வடக்கு பகுதியில் சில இடங் களில் கண்ணி வெடி பிரச்சினை இருக்கிறது. இவற்றை அகற்றும் பணிகளுக்காக அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ. 21 கோடி நிதி உதவி வழங் கப்படும்.

ஆபத்து நிறைந்த கண்ணி வெடிகளை அகற்றி விட்டு அந்த நிலங்களை உள்ளூர் மக் களிடம் ஒப்படைக்கப் படும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் கண்ணி வெடிகளை அகற்ற இந்த நிதி பயன் படுத்தப்படும்.

கண்ணிவெடி அகற் றப்பட்ட நிலங்களை பொது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தலாம். இறுதி கட்ட போருக்கு பிறகு பிரிந்து கிடப்போர் மத் தியில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சி களுக்கும் ஆதரவாகவும் இந்த நிதி வழங்கப் படுகிறது.

இறுதி கட்ட போரின் போது இந்த பகுதிகளில் கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர். இவற்றை அகற்றுவது சிக்கல் நிறைந்த பணி.

இந்த நிதி உதவி மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முழுமையாகவும், கிளி நொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஓரள வும் அகற்ற முடியம் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த சுமார் 70 ஆயிரம் பேரை மறு குடியமர்த்த ஏற்கெ னவே இங்கிலாந்து அரசு அறக்கட்டளை மூலம் 30 லட்சம் பவுண்டு நிதி உதவி செய்துள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது நடந்த தாக சேனல்4 வெளி யிட்ட வீடியோ ஆவண படம் காட்டும் இத யத்தை உறைய வைக்கும் கொடூர போர்க் குற்றம், மனித உரிமை மீறல் சம் பவங்கள் இந்த பகுதியில் நடந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறி னார்.

இனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் - தெ.ஆப்பிரிக்கா

இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென்ஆப்ரிக்கா கோரியுள்ளது.

போருக்கு பின்ன ரான காலத்தில் இலங் கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆப்ரிக்கா தயா ராகவுள்ளது என்று அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள் ளார். தொடர்புடைய விடயங்கள் ஆப்பி ரிக்கா, காமன்வெல்த் உச்சி மாநாடு, அதிகாரப் பரவல், மனித உரிமை, பயங்கரவாதம் தமது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களை சந்தித்துள் ளது என்றும், பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு வழிமுறையை கையாண்டு பிரச்சினைகளை தீர்த் துள்ளதாக இலங்கை அதிபருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் கள் கூட்டத்தில் ஜேக்கப் ஜூமா சுட்டிக்காட்டி யுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது உயர்ந்த மட் டத்தில் பேச்சுகள் நடை பெற்று வருவதாகவும் ஜூமா தெரிவித்தார்.

அவகாசம் தேவை மஹிந்த ராஜபக்சே

எனினும் தமது நாட் டில் இனப்பிரச்சினைக் கான தீர்வு காண்பதற்கு சிறிது காலமாகும் என் றும், அதற்கான அவ காசம் தேவை எனவும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள் ளார். இதனிடையே, தென் ஆப்ரிக்க அதிபரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென் ஆப்ரிக்கா காட்டும் ஆர்வம் தமது தரப்பில் கவனத்தில் எடுக்கப்பட்டு, வரும் நாட்களில் பரிசீலிக்கப் படும் எனவும், நீண்ட காலமாக இந்த விஷயம் தொடர்பில் ஈடுபட்டு வரும் இந்தியாவுடனும் மற்ற நாடுகளுடனும் இந்த முன்னெடுப்பு ஆலோ சிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


நமது நாட்டில் அறிவியல் மனப்பான்மை இல்லை விஞ்ஞானி ராவ் வருத்தம்

பெங்களூரு, நவ.18- அறிவியலுக்குப் போது மான நிதி ஒதுக்காததால், அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் விமர்சித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண் டும். அரசு அளித்துள்ள நிதியைக் காட்டிலும், அளவுக்கு அதிகமாக அறிவியல் ஆராய்ச்சிகளை அறிவியல் துறை செய்து காட்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசியல்வாதிகள் போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால், அவர்கள் முட்டாள்கள்.
எங்களுக்கு கிடைத்த நிதிக்குத் தகுந்தவாறு பணி செய்துள்ளோம். இந்தியாவில் அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது மட்டுமல்லாமல், காலதாமதமாகவும் அளிக்கப் படுகிறது.

சீனாவின் வளர்ச்சிக்கு நம்மைத்தான் காரணம் காட்ட வேண்டியுள்ளது. சீனர்களைப் போல இந்தியர்கள் கடுமையாக உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம். தேசியவாதிகளைப் போல நாம் செயல்படுவ தில்லை. நமக்குக் கூடுதலாகப் பணம் கிடைத் தால், வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பத்திற்கும், அறிவிய லுக்கும் சம்பந்தமில்லை. நமது நாட்டில் அறிவியல் உணர்வு இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி யாற்றுவோர் அனைவரும் மகிழ்ச்சியில்லாமல் வேலை செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் அடிக்கடி தற் கொலை செய்து கொள்ளும் செய்தியைப் படிக் கிறேன்.

என்னைப் பாருங்கள், 80 வயதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் குறை கூற எதுவுமில்லை. நாம் செய்வதில் திருப்தி கிடைத் தால், அதுதான் மகிழ்ச்சி என்று கருதுகிறேன் என்றார் ராவ்.

தமிழ் ஓவியா said...


உலகமயமாகும் பெரியார் தத்துவங்கள்!

அமெரிக்காவில் சுயமரியாதை வாழ்க்கை ஒப்பந்தங்கள்

2013 நவம்பர் 2 - அட்லாண்டா நகரில்!

அமெரிக்காவில் இப்போதெல்லாம் மதச் சடங்குகள் இல்லாத பல பகுத்தறிவு வாழ்க்கை இணை விழாக்கள் நடந்து வருகின்றன.

எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் வாழ்விணை யர்கள் தாங்களே தயாரிக்கும் ஒப்பந்தங்களைப் படித்தோ அல்லது நீதி அரசர்கள் சொல்வதைச் சொல் லியோ, அல்லது பதிவு செய்து கொண்ட வாழ்விணை ஒப்பந்தங்கள் நடத்துவோர், அல்லது நீதிமன்றங்களில் பதிவு செய்து கொண்டு என்று நடத்திக் கொள் கின்றனர். இன்று அமெரிக்க இளைஞர்களில் பலர் விரும்பிச் செய்து கொள்ளப் பெற்றோர்களும் இணைந்து கொள்கின்றனர். இரண்டு மதங்களில் இருந்து இணைவோருங்கூட இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றனர்.

தமிழர்களில் முதலாவதாக மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது செல்வி அருள், பாலகுரு வாழ்க்கை ஒப் பந்த விழா நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட் டது இப்போது பல தமி ழர்கள் பல நகரங்களில் செய்துள்ளனர். (அடுத்து ஆசிரியர் தலைமையில் சிகாகோவில் எனது மூத்த மகள் கனிமொழி வாழ்விணையர் ஏற்பு இப்படி எல்லாம் ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திரு மணங்களாகவே நடந்தது.

அட்லாண்டா நகரிலே நவம்பர் 2ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தர்மபுரி பெரியார் பெருந் தொண்டர் எம்.என். நஞ்சையா அவர்களது பெயர்த்தியும், மருத்துவர் நல்லதம்பி - மீனா இவர்களது செல்வியுமான கவிதாவிற்கும், ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவர் நாராயண், சித்ராராத் அவர்களின் செல்வன் பிரகாஷ் அவர்கட்கும், நீதியரசர் வெஸ்லிசேனன், வாழ்க்கை ஒப்பந்த உரையைச் சொல்லி மணமக்கள் மோதிரங்கள் அணிந்து கொள்ளச் சிறப்பாக நடந்தது. தமிழகத்தி லிருந்தும், பிரான்சிலிருந்தும் மற்றும் அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தினரும், நண்பர்களும் வந்து வாழ்த்தி சிறப்பு செய்தனர். ஆசிரியர் அவர்களும், அவருடைய வாழ்விணையரும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அட்லாண்டாவின் புகழ் பெற்ற எமரி பல்கலைக் கழக அறிவரங்கத்தில் 250 பேர் என்று மிகவும் ஆடம்பர மில்லாத மணமக்கள் விருப்பப்படியே ஆனால் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளுடன் விழா நடந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மணமகன் ஒடிசா மாநிலத்தவர் ஆகையால் தந்தை பெரியார் கருத்துரைகள் கொண்ட ஒடிசா மொழி புத்தகத்தையும், ஆங்கில நூல்களையும் மணமக் களுக்கு ஆசிரியர் அனுப்பி, மணப் பரிசு வழங்கினார்.

- சோம இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணையோ!

திருவண்ணாமலையேறிய பக்தர் மாரடைப்பால் சாவு

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மலையேறிய பக்தர் ஒருவர் திரும்பி வரும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த குணசேக ரன் (62). இவர் தனது நண்பர் நாகராஜுடன் தீபத் திருவிழாவைக் காண வந்தார். திருவண்ணாமலை யில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கியிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை, மலையேறிச் சென்றார்.
மீண்டும் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். தீயணைப்பு வீரர்கள் குணசேகரனை அழைத்து வந்து, 108 ஆம்பு லன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் மாலை 6.30 மணிக்கு சேர்த்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

திருவண்ணாமலை சென்று திரும்பிய பக்தர்கள் 4 பேர் விபத்தில் சாவு

தருமபுரி, நவ.18- தருமபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று தீபத்தை தரிசித்து விட்டு வந்த பக்தர்கள் நால்வர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தனர். தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணையில், விபத்தில் கார்த்திகை தீபமான நேற்று திருவண்ணாமலை சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


உலகளவில் இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன யுனிசெப் தகவல்


சென்னை, நவ.18-உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடப்பதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித் துள்ளது.
18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணுக்கும், 21 வயது நிறைவ டையாத ஒரு ஆணுக்கும், திருமணம் நடத்தி வைப்பது தான் குழந்தைத் திருமணம். இந்தியாவில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் நடை முறையில் இருந்தாலும் மாநிலம் முழுவதும் ஏதாவது ஒரு மூலையில் குழந்தைத் திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெரும் பாலும் கிராமப்புறங்களில் தான் இது அதிகளவில் அரங்கேறி வருகிறது.

கிராமங்களில் வாழும் பெண்கள் குடும்ப வறுமை, ஆணாதிக்கம், அடி மைத்தனம், ஆகிய காரணங்களினால் கட்டாய குழந்தைத் திருமணத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு சில ஊர்களில் சமுதாய ரீதியாகவும் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. பெரும் பாலான கிராமங்களில் பெண்கள் பருவத்துக்கு வந்ததும், திருமணம் செய்து வைக்க பெற்றோர் அவசரப் படுகின்றனர். மாறி வரும் சமூகத்தில் நடக்கும் பாலியல் கொடூரங்களை கண்டு பயந்துதான் குழந்தைகளின் பெற்றோர் இதுபோன்ற அவசர முடிவு எடுக்கின்றனர்.

அதற்காக 15 வயதுக்குள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைத் திருமணத்தால் பெண்கள் வறுமை, பாலியல் தொல்லை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொள்வதால் சிறுவயதிலே கருவுறுதல், கருச்சிதைவு ஆகிய பிரச்சினை களால் பாதிக்கப் படுகிறார்கள். மேலும் 15 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் கருத்தரித்தல், பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சினைகளால் பெண் களின் இறப்பு விகிதம் அதிகரிக்கப் பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரி விக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் அதிகப்படியாக 45 சதவீதம் குழந்தைத் திருமணம் நடப் பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதேபோல் வடமாநிலங்களில் 40 சதவீதமும் தமிழகத்தில், 45 சதவீதமும் குழந்தைத் திருமணம் நடக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 40 சதவீதம் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. கோவை மாவட் டத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டு களில் 15 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் 20 நிமிடத்திற்கு 20 குழந்தைத் திரு மணம் நடக்கிறது.

குழந்தைத் திருமணம் புதிய தடுப்பு சட்டத்தை மத்திய அரசு 2006ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் இன்று வரை இந்த சட்டம் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. குழந்தைத் திருமணம் சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான் குழந்தைத் திருமணத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குழந் தைத் திருமணத்தால் பெரும்பாலான பெண்களின் கல்வி பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை களின் அடிப்படை உரிமை, சுதந்திரம் ஆகியவை மறுக்கப்படுகிறது.
போதாக்குறைக்கு குழந்தைத் தொழிலாளர்கள் முறையும் இந்தி யாவில் அதிகரித்துள்ளது. இந்தியா வில் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்பு சட்டம் 1986ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டமும் பெயரளவில் தான் நடைமுறையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் நாடு முழு வதும் குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக 18 வயதுக்கு உட் பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் இதுபோன்ற பல்வேறு துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது. இதன் விளை வாக தேசிய அளவில் ஆரம்ப கல்வி நிலையில் 40 சதவீதம் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் குழந்தைகள் கொலையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

சட்டத்தை கடுமையாக்க மக்கள் கோரிக்கை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்டத்தை பெயரளவில் நடைமுறை படுத்துவதை விட்டுவிட்டு அனைத்து கிராமங்களிலும் குழந்தைத் திருமண தடுப்பு சட்டம் குறித்து மக்களி டையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எனவே குழந்தை களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதுபோன்று சட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்து கடு மையான முறையில் நடைமுறை படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


டெசோவின் தீர்மானங்கள்

சென்னையில் நேற்று (17.11.2013) கூடிய டெசோ கூட்டத்தில் சிறப்பான அய்ந்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் டெசோ இத்தகு தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது - உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும்.

மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் - பாதிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்புக்கு ஆளான தமிழர்களின் உள்ளக் குறைகளை நேரில் தெரிந்து கொண் டுள்ளார். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் சென்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையை உலக நாடுகளின் கண்களில் படாமல் தப்பிக்கச் செய்யலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ராஜபக்சேவின் கபட முகத் திரையை ஒரு பயணத்தின் மூலம் கிழித்து ராஜபக்சே என்னும் மிகப் பெரிய இனப் படுகொலையாளியைச் சர்வதேச நாடுகளின் முன் குற்றவாளியாக நிறுத்தி விட்டார்.

இலங்கைக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டி ருந்த நாடுகள்கூட, உலகின் மிக முக்கிய நாடான இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தம் மனந்திறந்த பேட்டியைச் செவி மடுத்த நிலையில், தங்கள் கண்களைக் கழுவிக் கொண்டு, அகல விரித்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பிரகாசமாகி விட்டது.

ஏற்கெனவே பிரிட்டன் 4 அலைவரிசை வெளியிட்ட படங்கள் பேரதிர்ச்சி அலைகளை உலகம் முழுவதும் தட்டி எழுப்பின. இப்பொழுது அந்தப் பிரிட்டன் பிரதமர் அலைவரிசை நான்கின் நம்பகத் தன்மையை நன்கு வெளிப்படுத்தி விட்டார்.

இதற்காக உலகத் தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமையாளர்கள், மனிதநேயவாதிகள் ஒரு முறை நன்றி உணர்ச்சியுடன் மிகப் பெரிய வணக்கத்தைத் (ளுயடரவயவடி) தெரிவிக்க வேண்டும்.

அவருடைய கருத்து எந்த அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அளவுகோல் - ராஜபக்சேவின் மிகப் பெரிய அலறலில் இருந்து அறிய முடிகிறது.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இங்கிலாந்து எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டை - பாத்திரத்தை நியாயமாக இந்தியா அல்லவா செய்திருக்க வேண்டும்; இந்தியா ஆற்ற வேண்டிய கடமையை இங்கிலாந்து ஆற்றிய பிறகாவது இந்தியாவின் மனசாட்சி உலுக்கப்பட்டு, புதிய சிந்தனைச் சாளரம் திறந்தால், இதுவரை அது நடந்து வந்துள்ள பழிகளுக்குக் கழுவாய்த் தேடிக் கொள்ள முடியும்.

இங்கிலாந்து பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற போராட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதனைப் பொருட் படுத்தாமல் பிரதமர் டேவிட் கேமரூன் செல்லு கிறாரே என்ற மனக் குறை இருந்ததுண்டு.

ஆனால், அவர் அதில் கலந்து கொண்டு, அவர் மேற்கொண்ட அணுகுமுறை அவர் கலந்து கொண்டதற்கான மிகப் பெரிய அர்த்தத்தை, நியாயத்தை ஏற்படுத்தி விட்டது.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செயல்பட்டதுபோல செயல்பட்டு இருந்தாலாவது ஆறுதல் பெற்றிருக்க முடியும். அந்தக் கூட்டத்தில் அவர் எடுத்து வைத்த கருத்தென்ன? இலங்கை அரசை எந்த வகையிலாவது வலியுறுத்தி ஈழத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு நல்லது நடக்க வழி செய்தாரா?

மாநாட்டில் கலந்து கொண்டால்தானே ஈழத் தமிழர்களுக்குப் பயன் ஏற்பட வலியுறுத்த முடியும் என்று அரசனை விஞ்சிய விசுவாசிகளாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு வார்த்தை ஜாலங்களை வண்ண வண்ணமாகக் குழைத்துச் சொன்னவர்கள், இப்பொழுது தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியா சார்பில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு இருப்பதை டெசோ கண்டித்தது மிகவும் சரியான நடவடிக்கையே!

தமிழ் ஓவியா said...


பெரியார், அம்பேத்கர் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



கோரிக்கடவு, நவ. 18- தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் சிலை களை அமைக்க கோரிக் கடவு ஊராட்சி மன்றத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பழனி கழக மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் ச. திராவிடச் செல்வன் தெரிவித்திருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டம், பழனி கழக மாவட்டம், கோரிக்கடவு கிராமத் தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத் கர் ஆகியோர்களின் சிலைகளை அமைக்க கோரிக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

கழக விண்ணப்பத் தினை ஏற்று 24.10.2013-ஆம் தேதி ஊராட்சி மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகரிக்கப்பட்டது.

தந்தை பெரியார் சிலை வைக்க அங்கீகரிக் கப்பட்ட தீர்மான எண்: 137, புரட்சியாளர் அம் பேத்கர் சிலை வைக்க அங்கீகரிக்கப்பட்ட தீர்மான எண் 138 என் பதை பெருமகிழ்ச்சியு டன் தெரிவித்துக் கொள் கிறேன்.

அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களின்படி கோரிக்கடவு திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் ஆகி யோரின் சிலைகளை அமைத்து பராமரித்துக் கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுமதி வேண்டி 13.11.2013 அன்று விண்ணப்பித்துள்ளோம் என்று திராவிடச் செல் வன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!

முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!

சென்னை, நவ.18- தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர்களை இடித்த தமிழக அரசே அதனைத் திரும்ப கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.

மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப் பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்காப் பகுதியைக் கைப்பற்றியிருப்ப தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டு மானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.

காலக்கெடு வேண்டாமா?

சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப் படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரிய வர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினை விடத்தை எழுப்பியவர்களுக்குப் போதிய காலக்கெடு வையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக் கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற வேளையில், இந்திய அரசை எதிர்த்துத் தமிழகமே கொதித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக மக்களின் எழுச்சியைத் திசை திருப்பும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருப்பது, தீர்மானம் நிறைவேற்றியதையே கேள்விக்குள்ளாக்குவ தோடு, தமிழக அரசின் நம்பகத்தன்மையின் மீதும் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த முற்றம் தமிழ் மக்களின் இனம்சார்ந்த உணர்வுகளோடு தொடர்புடையதாகும். அத்தகைய சிறப்பைப் பெற்ற நினைவு மண்டபத்தை இடித்ததன் மூலம் தமிழக அரசு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது.

அதிமுக அரசு, ஈழத் தமிழர்களுக்கு உற்ற துணையாய் நிற்கும் என்று நம்பியவர்களுக்குப் பெரும் ஏமாற்றத் தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் முற்றம், தனியார் இடத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் சொந்தமான நினைவிடமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்த மான முள்ளிவாய்க்கால் முற்றத்தில், தமிழக அரசு மீண்டும் சுற்றுச்சுவரை எழுப்பவும் பூங்காவை அமைக்கவும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான பொய் வழக்கு களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டு மெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொள்ளின் பலன்கள்

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சினைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவ தாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்-குன்யா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சினைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.

உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

தமிழ் ஓவியா said...


நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?


நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவுகளா? துரித உணவுகளா? என்பது பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி, எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கமளிக்கிறார்.

உணவே மருந்து என்பது நமது சித்தர்களின் கோட்பாடு. நம் நாட்டு உணவு முறையானது நமக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருவதாகும். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிப்பாக கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்ற தானியங்கள் மற்றும் பலவகை பயிறு வகைகளும் அன்றாட உணவில் பெரும் பங்கு வகித்தன.

சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையே உண்டனர். விழாக்காலங்களில் மட்டுமே அரிசியை சமைத்து உணவாக உண்டனர். அவர்களது உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்ல திடகாத்திரமாகவும் இருந்தது.

தங்களது உடல் உழைப்பினால் உணவு உற்பத்தியினைப் பெருக்கி உலகிற்கு சத்தான உணவளித்து வந்தனர். மக்கிப்போன இலை தழைகள், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்கள் நச்சுத்தன்மை இல்லாமலும், வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள் நிறைந்தும் காணப்பட்டன. அதனால் அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தனர்.

உணவில் பயன்படுத்தும் கடுகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, மிளகு, தானிய வகைகள் போன்றவை மருத்துவகுணம் மிகுந்தவை. அப்போது உணவே மருந்தாக இருந்தது. காலப்போக்கில் அதிக மற்றும் விரைவான உணவு உற்பத்திக்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருவதால் தானியங்கள், காய்கறிகள், பழவகைகள், கீரைகள் போன்ற அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலட்டு விதைகளை பயன்படுத்துவதால் விளை நிலத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

அதனால் உணவு உற்பத்தி குறைந்து பிறகு அந்நிலங்கள் உற்பத்திக்கான பயன்பாட்டிற்குத் தகுதி இல்லாத நிலங்களாக ஆகிவிடுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்களான விளை நிலங்கள் உணவு உற்பத்திக்குப் பயனற்றுப் போகின்றன. அண்மைக்காலம் தொட்டு பாரம்பரிய உணவுமுறைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து மேற்கத்திய உணவு முறைகள் நம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளன.

நுகர்வு கலாச்சாரத்தினாலும் கவர்ச்சியான விளம்பரங்களினாலும் பீசா, பர்கர் போன்ற ஜங்க் புட்ஸ் என்றழைக்கப்படும் குப்பை உணவுகள் சிறியோர் மற்றும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து அத்தகைய உணவுகளை உண்ணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலின் எடையை மிக விரைவாக அதிகரிப்பதுடன் தன்னோடு பல கொடூரமான நோய்களையும் கொண்டு வருகின்றன. நீரிழிவு நோய், இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழ் ஓவியா said...

ரத்த உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்

உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசிய மாகும்.

இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் ரத்தம் அதிகமாக ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணாவின் கவிதை


ஆரிய மாயை போற்றி!

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய், போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டுவித்தை கற்றோய், போற்றி!
உயர் அநீதி உணர்வோய், போற்றி!
எமதுஇனம் கெடுத்தோய், போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரைஇதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

(திராவிடநாடு - 03.10.1943)

('ஆரியமாயை' எனும் தோடர்கட்டுரையின் தொடக்கம். ஆரியர்பற்றிப் பிரஞ்சுப் பாதிரியார் குறிப்பிடும் சில ஆங்கிலச் சொற்களின் கருத்தோவியம் இது)

Unknown said...

http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_18.html இதைப் பற்றி கருத்துரையை எதிர்ப்பார்க்கிறேன்

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...



சி.என்.ஆர்.ராவின் குற்றச்சாற்று


பாரத ரத்னா விருது இருவருக்கு அறிவிக்கப்பட் டுள்ளது. ஒருவர் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் இன்னொருவர் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

முதலாமவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டதில், எந்தவித சர்ச்சையும் கிடையாது. ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைப் புயலைக் கிளப்பி விட்டன.

அறிவியலுக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப் படாததால், அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணம்; பிறகு இதுபற்றி சிந்தாமணி நாகேச இராமச்சந்திரராவ் விளக்கம் அளித்துச் சமாதானம் சொல்லியுள்ளார். அது ஒருபுறம் இருந்தாலும், அவர் சொன்ன வேறு சில கருத்துக்கள் தள்ளுபடி செய்யப்பட முடியாதவை. அறிவியல் துறைக்குப் போதுமான அளவு நிதி அளிக்கப்படுவதில்லை என்பதில், தமது கோப நெருப்பைக் காட்டியுள்ளார்.

இத்துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, ராவ் சொன்ன கருத்து சரியானது தான் - உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

நிதி உதவி குறைவானதாக உள்ளது என்பதோடு மட்டுமல்ல, கால தாமதமாகவும் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார். இது நமது நாட்டுக்கே உரித்தான சிகப்பு நாடா முறையாகும்.

சீனாவைப் போல நாம் உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம் (சோம்பேறிகள் என்று சொல்லலாமல் சொல்லுகிறார் என்பதைப் புரிந்து கொண்டால் சரி) என்று கூறியுள்ளார்.

ராவ் கூறியதில் இன்னொரு முக்கியமான கருத்து; நம்மிடையே அறிவியல் மனப்பான்மை இல்லை என்பதுதான், நூற்றுக்கு நூறு துல்லியமான கருத்து இது. இந்த ராவ் கூறிய மற்ற மற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ் ஏடுகள் இந்தக் கருத்தை மட்டும் திட்டமிட்டு இருட்டடித்து விட்டன. குற்றமுள்ள மனம் குத்தியதோ என்னவோ!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A என்பதில் உட்பிரிவு (h) என்பதில் தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனப்பான்மை மனிதாபிமானம், ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவைகளை ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின், அடிப்படைக் கடமையாகும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது நியாயமான வினாவாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி நாற்காலியில் அமர்பவர்களில் எத்தனைப் பேர் இந்தச் சரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு கணமாவது நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள்?

மற்றவர்களுக்கு இந்த உணர்வை ஊட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் மத்திய அமைச் சர்கள், ஏன் குடியரசுத் தலைவர்; துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட இதன்படி ஒழுகுபவர்கள் எத்தனைப் பேர்!

அதையும்விட இன்னொரு உச்சக்கட்ட கொடுமை என்ன தெரியுமா? அறிவியல் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளிடம் முதலில் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அந்த விஞ்ஞான மனப்பான்மை உண்டா?

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் விண் கலத்தை ஏவும் போதெல்லாம் அதனுடைய இயக்கு நராக இருக்கக் கூடிய ராதாகிருஷ்ணன் என்ன செய்கிறார்?

அந்த அறிவியல் ஆவணத்தைக் கொண்டு போய் திருப்பதி ஏழுமலையான் பாதத்திலும், காளஹஸ்தி சென்று அங்குள்ள கோயில் சன்னதியிலும் வைத்துப் பூசை செய்து வருகிறாரே - வெட்கப்பட வேண்டாமா?

விண்கலம் ஏவப்படுவது ஏழுமலையான் சக்தி யாலா? ஏழுமலையான் எத்தனை ஆண்டுகாலமாக அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளான்? அப்பொழு தெல்லாம் மங்கள்யான் பறக்க விடப்படவில்லையே - ஏன்?

இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்களுக்கே விஞ் ஞான மனப்பான்மை இல்லாதிருந்தால், இளை யோர்கள் எத்தகைய தாக்கத்திற்கு ஆளாவார்கள்? படிக்கும் மாணவர்களின் மத்தியில் மூடத்தனத்தைத் தானே ஏற்படுத்தும்.

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லு வதுபோல விஞ்ஞானிகளே! முதலில் நீங்கள் விஞ் ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்பதுதான் நமது வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


வாயைத் திறக்காதீர் குர்ஷித்!


சிலர் வாயைத் திறப்பதை விட திறக்காமல் இருந்தாலே உத்தமம். வாயைத் திறந்து எதையாவது கொட்டி வாங்கிச் சுமப்பதில் இந்தியாவின் வெளி யுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அடித்துக் கொள்ள வேறு ஒருவரும் இல்லை.

இலங்கை சென்ற இவர், திருவாய் மலர்ந் தருளியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மட்டுமே இந்தியா வழங்க முடியும். அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு அந்நாட்டு அரசும், மக்களும்தான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்கா புறக்கணிக்கப்பட்டபோது இந்தப் புத்தி அப் பொழுது வேலை செய்யவில்லையோ! வங்காள தேசம் உருவாக்கப்பட்டபோது - இந்த ஞானோதயம் எங்கே போயிற்றாம்! இவர் சொல் கிறபடி பார்த்தால் அய்.நா. மன்றம், மனித உரிமை ஆணையம் இவையெல்லாம்கூட வெட்டி அமைப்புகள்தானோ!

தமிழ் ஓவியா said...


கழகத்தின் முயற்சிக்கு வெற்றி!


பெரியார் சிலையை மூடிய தேர்தல்

ஆணையமே மூடிய துணியை அகற்றியது

சேலம், நவ.19- ஏற்காட்டில் நடைபெற உள்ள இடைத் தேர்தலையொட்டி அத்தொகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகளை தேர்தல் ஆணையம் துணி போட்டு மூடியது தந்தை பெரியார் சிலையையும் இரவோடு இரவாக மூடினார்கள்.

இந்தத் தகவல் தலைமைக் கழகத்திற்கு வந்தது. இதற்கு முன் 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் இதே தவறைச் செய்த நேரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதியரசர் திரு பி. ஜோதிமணி அவர்கள் தலைவர்களின் சிலைகளை மூடியதை உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த ஆணையைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, உடனே மூடப்பட்ட பெரியார் சிலையைத் தேர்தல் ஆணையமே நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டது. அதன்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர் களின் சிலைகளை மூடியிருந்த துணிகளை தேர்தல் ஆணையமே நேற்று அகற்றிவிட்டது.

தேர்தல் ஆணையம் மூடிய சிலையைத் திறந்ததற்குப் பிறகு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே. ஜவகர், துணைத் தலைவர் சி.பூபதி, செயலாளர் அரங்க இளவரசன் மாநகரக் கழகத் தலைவர் பி. வடிவேல் ஆகியோர் இன்று காலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் ஜவகர், சி. பூபதி அரங்க இளவரசன், அ.க. இளவழகன் கடவுள் இல்லை சிவகுமார், பரமசிவம் ஆகிய கழகத் தோழர்கள் அதிகாரி களைச் சந்தித்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தமிழ் ஓவியா said...


சீனாவின் முதல் குரல்: இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்!


பீஜிங், நவ.19- இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று இலங்கை யின் நட்பு நாடான சீனா திடீர் அறிவுரை வழங் கியுள்ளது.

இலங்கையில் சமீபத் தில் நடந்த காமன் வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் நட்பு நாடான சீனாவும் முதன்முதலாக இலங்கை மனித உரிமை பிரச் சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியின் காங் செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகிய வற்றோடு ஒப்பிடும் போது, இலங்கையில் மனித உரிமைகள் பாது காப்பு மாறுபட்டதாக இருக்கிறது.

எனவே இதில் முக்கி யமானது என்னவென் றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு சாதகமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இங்கிலாந்து நாட் டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அந்த மாநாட் டில் எழுப்பிய பிரச்சினை களின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசா ரணை நடத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச் சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருது கிறேன்.

மனித உரிமைப் பிரச் சினைகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் நல்ல புரிதல் ஏற் பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமை களை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போ தும் கூறிவருகிறோம் என்று கியின் கூறினார்.

இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து கூறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இலங்கைக்கு சீனா பில் லியன் டாலர் கணக்கில் உதவிகள் புரிந்து வரு கிறது.

இலங்கையில் நடை பெற்ற இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அய்.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித் தது. ஆனால் இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

காமன்வெல்த் அமைப் பில் உறுப்பினராக இல் லாதபோதும், கொழும் பில் நடந்த காமன் வெல்த் மாநாட்டு கட் டமைப்பு வசதிகளுக் கான நிதியை சீனா வழங் கியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இன்றும் பார்ப்பனீயம் படம் எடுத்து ஆடும் கொடூரம்!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!

பெங்களூரூ, நவ. 20- கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

தட்சிண கருநாடக மாவட்டத்தில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் மாதே ஸ்நானா பிரார்த்தனை நடை பெறும். பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைமீது கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு நேர்த்திக்கடன் செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று நம்பப் படுகிறதாம்.

இந்தப் பிரார்த்தனை முறை கீழ்தட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று தட்சிண கருநாடக கல்லியா தாலுகாவைச் சேர்ந்த கருணாகர் என்னே மஜல், மங்களூரு தாலுகாவைச் சேர்ந்த ஜெயக்குமார் கிரேமத், கே.நாராயண செட்டி ஆகியோர் மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு கொடுத் தனர். எச்சில் இலை மீது கீழ்தட்டு மக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

மதவழிபாட்டுத் தலங்களில் எல்லோரும் சமமே. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. ஆனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு தெருவில் போட்ட எச்சிலை மீது பார்ப்பனர் அல்லாத பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆகவே இதற்கு தடை விதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநில முதலமைச்சரின் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான எந்த உத்தரவும் தர வில்லை என்று கோவில் நிர்வாக அதிகாரி எம்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கேவலமான பிரார்த்தனையை மாற்றி அமைக்கக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஒருசில பக்தர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு தடை விதித்தது. (என்ன கேவலம்!) இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையின் பாதுகாப்புடன் வழக்கம்போல் இந்தக் கேவலமான பிரார்த்தனை நடத்தப்பட்ட தாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தமிழ் ஓவியா said...


மங்கள்யான் விண்கலம்: டிசம்பர் 1-இல் செவ்வாய்க்கோளை நோக்கிப் பயணிக்கும் இஸ்ரோ தலைவர் தகவல்


ஆலந்தூர், நவ.20- பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு மங்கள்யான், செவ்வாய்க்கோளை நோக்கி டிசம்பர் ஒன்றாம் தேதி பயணம் மேற்கொள் ளும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க் கிழமை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

செவ்வாய்க்கோளுக்கு கடந்த 5 ஆம் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வருகிறது.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு செவ்வாய்க்கோளுக்கு தனது பயணத்தைத் தொடங்கும்.

மங்கள்யான் விண்கலப் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆனால், இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ராக்கெட் உள்நாட்டு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி டி-5 முழுமையாக தயாராகிவுள்ளது. இதை டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளோம் என்றார் ராதாகிருஷ்ணன்.

தமிழ் ஓவியா said...


பாரத ரத்னா படும்பாடு!


கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல் கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுத்தாலும் கொடுத் தார்கள் - அது பெரிய சர்ச்சைப் புயலை நாடு தழுவிய அளவில் எழுப்பிவிட்டது.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டதில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அப்படிப் பார்க்கப்போனால், இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஹாக்கிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மற்றவற்றில் எல்லாம் தேசியம் பேசுவோர்களின் சிந்தனையில் இந்த மின்னல் இழை தொனிக்காமல் போனது ஏன்?

ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கத்தை வாங்கிக் கொடுத்த ஹாக்கிக்குக்கு அல்லவா முதல் மரியாதை செய்திருக்கவேண்டும்.

மற்ற மற்ற பிரச்சினைகள் என்று வரும்போது மட்டும்தான் வெள்ளைக்காரன் அந்நியனா? அவன் விட்டுச் சென்ற மிச்ச சொச்சங்களில் இந்தக் கிரிக்கெட்டும் ஒன்று.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்காத ஒன்று என்று சொல்லப்படுவதுண்டு; அவன் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் உண்டு.

மற்றபடி உலகின் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ருசியா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளில் இந்த விளையாட்டைச் சீந்துவார் இல்லை.

அதிகம் போனால் கிரிக்கெட் விளையாட்டு பத்து நாடுகளைத் தாண்டாது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய, வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சுவீ காரம் செய்து கொண்ட விளையாட்டு இது. அதனால் தான் இதற்கு இவ்வளவு மரியாதை - ஊடகங்கள் எல்லாம் அவர்களின் கைகளில் என்பதால் மற்ற மற்ற விளையாட்டுகள் எல்லாம் மக்கள் மத்தியில் புறந்தள்ளப்பட்டு, கிரிக்கெட் மட்டும் குதிரைச் சவாரி செய்துகொண்டு இருக்கிறது.

அறிஞர் பெர்னாட்ஷா சொன்னதுபோல, 11 மடை யர்கள் விளையாடுகிறார்கள்; 11 ஆயிரம் மடையர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நினைவிற்கு வருகிறது.

கிரிக்கெட் என்பது பணம் காய்த்துத் தொங்கும் மரம் போன்றது. ஒவ்வொரு முறை விளையாடும்பொழுதும் அளிக்கப்படும் பணம் போதாது என்று ஆண்டு சம்பளம் வேறு சுளை சுளையாக - மேலும் பலவகையான மாநில, மத்திய அரசுகளின் சலுகைகள் வேறு.

இவ்வளவும் போதாது என்று கிரிக்கெட் சூதாட்டம் வேறு - விளையாட்டு என்கிற வீரியத்தைக் காயடித்த ஆட்டம் ஒன்று உண்டு என்றால், அது கிரிக்கெட்தான்.

சச்சின் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, தன் சாதனைக்காக ஆடக் கூடியவரே தவிர, தான் சார்ந் திருக்கும் குழு வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கக் கூடியவரும் அல்லர்.

பொதுவாக ஒரு விமர்சனம் அவரைப் பொறுத்து உண்டு. அவர் அதிக ஓட்டம் எடுத்த ஆட்டம் வெற்றி பெற்றதில்லை என்று கூறப்படுவதுண்டு. அவர் சந்தித்த பந்துக்கும், ஓட்டத்திற்கும் உள்ள விகிதாச்சாரமும் அதனை நிரூபிக்குமே!

இவர் தனது 79 ஆவது ஆட்டத்தில்தான் முதல் சதமே போட்டார்.

இவர் அணித் தலைவராக இருந்து ஆடிய 5 நாள் போட்டிகள் 25; அதில் வெற்றி 4; தோல்வி 9. சரி சமம் (ட்ரா) 12.

ஒரு நாள் ஆட்டங்கள் 73; அதில் வெற்றி 23; தோல்வி 43. சரி சமம் 2; முடிவு இல்லாதது 5.
இதுதான் சச்சினின் சாதனையா? இவர்தான் கிரிக்கெட் கடவுளாம்!

இவர் தலைமையில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இல்லை. கபில்தேவ், தோனி தலைமையில்தான் இந்திய அணி உலகக் கோப்பையைத் தட்டிப் பறித்ததுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், 2011 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வென்றது; அதன் பெருமை இந்திய அணியின் தலைவர் தோனிக்குத் தானே போய்ச் சேரவேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது? அந்தப் பதினோரு பேரில் ஒருவராக இருந்த சச்சினைத் தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் வலம் வந்தனர். வெற்றிக் குரிய நாயகனான தோனியோ அமைதியாக ஒதுங்கி நின்றார்.

கிரிக்கெட்மூலம் சச்சின் கோடிகோடியாக சம்பாதித் தாரே தவிர, சமுதாயத்துக்கு அவரின் உதவி என்ன என்பது முக்கிய வினாவாகும்.

சச்சின் சாதனை என்பதைவிட, அவர் ஒரு பார்ப்பனர் என்ற எண்ணம் கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் இவ்வளவுக் களேபரம், கித்தாப்பு, விளம்பரங்களுக்கு எல்லாம் அடிப்படை!

தமிழ் ஓவியா said...


எனது ஆசை


எனக்கு ஆசை எல்லாம் - மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. (விடுதலை, 28.8.1972)

தமிழ் ஓவியா said...


கழிப்பறைகளும், நம் கவனமும்!


உலகக் கழிப்பறை நாள் நேற்று (19.11.2013, செவ்வாய்)!

பல்வேறு பிரச்சினைகளை முன் னிறுத்தி முக்கியமான பிரச்சாரத்திற் காக இப்படி ஆண்டில் பெரும்பாலான நாள்களைக் கொண்டாட முடிவு செய்து, உலக அளவில் இதற்குரிய முக்கியத் துவம் ஏற்பட்டு, நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது!

சிலர் இதனை மேலெழுந்தவாரி யாகப் பார்த்து கேலியாகக்கூட நினைக்கக்கூடும்.

அது சரியான கண்ணோட்டம் ஆகாது.

காரணம், கழிப்பறை என்பது மிகமிக முக்கிய தேவை வீடுகளில்.

வீடுகளில் மட்டுமா? உடலின் ஆரோக்கியத்திற்குக்கூட, கழிப்புகள் - அவை மலக்கழிப்பானாலும், சிறுநீர்க் கழிப்பாக ஆனாலும், மிக முக்கிய மல்லவா?

மருத்துவரிடம் நாம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்று, சிகிச்சைக் காக உடலைக் காட்டிடும்போது, அவர் கேட்கும் சில முக்கிய கேள்விகள்:

பசி எடுக்கிறதா?

தூக்கம் சரியாக உள்ளதா?

மலக்கழிப்பு சரியாக நடைபெறு கிறதா?

சிறுநீர் கழிப்பு அதற்கும் உள் ளதா? என்பது போன்ற கேள்விகளும், முதல் கேள்விகளாக சரியாக மூச்சு விட முடிகிறதா? காய்ச்சல் (ஜூரம்), இருமல் உள்ளதா? என்ற கேள்வி களுக்கு முன்னுரிமை அளித்த நிலை யில், அடுத்து இவைதான் கேட்கப்படும் கேள்விகள்.
முதுமையில் மலச்சிக்கல் வெகு பலரையும் அல்லல்படுத்தும் அவதி நோய்களில் ஒன்று. எனவே, கழிப்பறை கள் மிகவும் உடல்நலப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியம்.

திறந்தவெளியிலும், தெருக்களிலும் குழந்தைகளை மலம், சிறுநீர் கழிக்க அனுப்பும் பெற்றோர் முன்பு அதிகம்; சிறுநகரங்களில்கூட முன்பு இருந்த கொடிய பழக்கம் அது! ஆனால், இப் பொழுது அது வெகுவாகக் குறைந்து விட்டது. மாறிவருவது நல்ல திருப்பம்.
பொதுவாக நமது கிராமப்புறங்களில் திறந்தவெளிகளில், பெண்கள்கூட மலங்கழிக்க ஒதுங்கும் பரிதாப நிலை இருந்தது; காரணம், அங்கே போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது; அதனால் அந்தப் பழக்கமும் அவர்கள் பதியவில்லை; இப்போது பெரிதும் அந்நிலை மாறிவிட்டது!

ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதிய ஒரு ஆங்கில நூலில், நமது வினோத மான பழக்கத்தை நன்கு சுட்டிக்காட்டி, சம்மட்டி அடி தந்துள்ளார்!

இந்தியாவில் ஒரு விசித்திர பழக்கத்தைக் கண்டு அதிர்ந்து போனேன்; மலங்கழிப்பது மனிதர்களின் தனியே நடக்கவேண்டிய (ரகசிய) நிகழ்வு ஆகும். இதை ஒரு சங்கிலித் தொடர் வண்டிபோல் அமர்ந்துகொண்டு (தள்ளித் தள்ளி உட்கார்ந்து) கூச்ச நாச்சமில்லாமல் செய்கிறார்கள்!

ஆனால், அதேநேரத்தில் மத உணர்வு காரணமாக சடங்காச்சாரத் தைக் காப்பாற்றுவதற்காக, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்துப் பேசி மகிழ்ந்து கலந்து உண்ணும் உணவுப் பழக்கத்தை - சாப்பிடும்போது - தனியே திரைபோட்டதுபோல - மறைத்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள்!(Private) (மனுதர்ம சாஸ்திரத்தில் இது ஜாதிய - வருணாசிரமப்படி வற்புறுத்தப்பட் டுள்ளது).

எதைத் தனியாகச் செய்யவேண் டுமோ, அதைக் கூச்சமின்றி பொதுவாக -பப்ளிக்காக திறந்தவெளி அரங்கில் செய்கின்றனர்; எது பொதுவாக ‘Socially’ நடத்தப்படவேண்டுமோ அந்த உண்ணும் பழக்கத்தை ஒரு தனியே திரை போட்டு மறைத்துவிட்டுச் செய் கின்றனர் என்று எழுதியுள்ளார்!

- இது சரியான சுட்டிக்காட்டல் தானே! மறுக்க முடியாதே!

இப்போது அது வெகுவாக மாறி வருகிறது. வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கை இப்போது படித்த தற் குறிகளையும்கூடப் பிடித்தாட்டுகிறதே! அந்த வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டுக் குள் கழிப்பறை கட்டுவதற்கு அனுமதி யில்லையே!

ஆனால், இன்றுள்ள நவீன வீடுகளில் ‘Bath Attached’ குளியல் - கழிப்பறை உள்ளடங்கிய அறைகள் தானே 2 முதல் 3, 4 என்று உள்ளதே!

எனவே, இது உடல்நலக் கண் ணோட்டத்தில் மட்டும் முக்கியமல்ல நண்பர்களே, அறிவுநலக் கண் ணோட் டத்திலும், பகுத்தறிவின்படி கழிப் பறைகள் எங்கும் தேவை.
அதேநேரத்தில், அவைகள் நன்றாக, சுத்தமாக உள்ளனவா என்ற கண் காணிப்பு மிகமிக அவசியமாகும்; நோய்க் கிருமிகளின் வாசமே அங்கு தான்!

வீடுகளில் வரவேற்பறையை அழகு படுத்துவதைவிட, கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துதல் மிகமிக இன்றியமை யாதது!

எனவே, கழிப்பறை என்றால் முகம் சுழிக்கவேண்டாம்; கவனம் தேவை!

அதுபோலவே, பூஜை அறை முக்கி யத்தைவிட, கழிப்பறை மிக முக்கியம். veramani

தமிழ் ஓவியா said...


சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

தஞ்சையில் டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவிருக்கும் நமது அருமைத் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவில், உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் நிறுவ இருக்கும் 95 அடி உயர பேருருவச் சிலைக்காக முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை தஞ்சையில் அளிக்க இருக்கிறோம்.

நாள்தோறும் தோழர்கள் நன்கொடைகளை ஆர்வத்துடன் வழங்கி வருவதை விடுதலையின் வாயிலாக அறிந்து இருப்பீர்கள்.

சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்கள் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய்க் காலை சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் நமது அருமைக் கழகப் பொருளாளர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து கழகத் தலைவரிடம் நிதியை அளிக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடையில் நாட்கள் குறைவு - வேகமும், விவேகமும் காட்டுவீர்! தோழர்களே!

சென்னை
20.11.2013

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்