Search This Blog

7.1.14

பொங்கல் கொண்டாடவேண்டும் ஏன்? - பெரியார்


பொங்கல் கொண்டாடவேண்டும் ஏன்?

பொங்கல்  என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சி களுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப் பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை சங்கராந்திப் பண்டிகை என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கை களைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் துஷ்ட தேவதையின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக் களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலி களாக ஆக்கிவிட்டார்கள். மற்றும் இப்பண் டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப் படுகின்றது. இந்த போகி என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.
இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே, இந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ் (பார்ப்பனரல்லாதார்) பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க்கு அழகு!

---------------------------------தந்தை பெரியார்- "விடுதலை" - 14-1-1972

11 comments:

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

- (விடுதலை, 23.1.1968

Read more: http://viduthalai.in/page-2/73275.html#ixzz2plA8tsTM

தமிழ் ஓவியா said...


நீதிபதிகளை மை லார்ட்' என அழைக்க வேண்டியது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம்


புதுடில்லி, ஜன.7- நீதிமன்றங் களில் நீதிபதிகளை மை லார்ட், யுவர் ஆனர், யுவர் லார்ட்ஷிப் என அழைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகி யோர் அடங்கிய அமர்வு திங்கள் கிழமை கூறியதாவது:

மை லார்டு என்றுதான் அழைக்க வேண்டியது கட்டாயம் என நாங்கள் எப்போது கூறினோம்? நீதிபதிகளை "ஸார்' என்று அழைக்கலாம். "யுவர் ஆனர்', "லார்டுஷிப்' என்று அழைத் தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும், இதுபோன்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறும், நீதிபதிகளை இது போன்ற பாரம்பரிய முறைப்படி அழைக்கக் கூடாது என்றும் மனு தாரர் கோருவதை ஏற்க முடியாது.

நீதிபதிகளை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. அது வழக்குரைஞரின் விருப்பம் என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.

சிவசாகர் திவாரி என்ற 75 வயது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் "நீதிமன்றங்களில் நீதிபதிகளை மைலார்டு, கனம் கோர்ட்டார் அவர் களே என்று அழைப்பது காலனி ஆதிக்க சகாப்தத்தின் அடையாள மாகும். எனவே இவ்வாறு அழைப்ப தற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, நீதிபதி கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

Read more: http://viduthalai.in/page-2/73281.html#ixzz2plAsyRUg

தமிழ் ஓவியா said...


நோய்களை வரும்முன்பே கண்டுபிடித்து தடுக்கும் ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் அப்துல்கலாம்

சென்னை, ஜன. 7- நோய்கள் வரும் முன்பே கண்டுபிடித்து தடுக்கும் ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

சென்னை, அப்போலோ மருத் துவமனையில், டெலிரேடியாலஜி தொலைதூர கலந்தாலோசனை மற்றும நோயறிதல் சேவையை முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று துவக்கி வைத் தார். அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ப்ரீதாரெட்டி வரவேற்றார். மருத்துவமனை சேர்மன் பிரதாப் சி.ரெட்டி சிறப்புரையாற் றினார்.

டெலிரேடியாலஜி தொலைதூரச் சேவையை அப்துல் கலாம் துவக்கி வைத்து பேசியதாவது:

கிராமங்களில் இருந்து எளிதில் நகரத்தில் உள்ள மருத்துவமனை களுக்கு வர முடியாத நோயாளிகள், அவசர சூழ்நிலையில் எக்ஸ்ரே, சிடி மற்றும் எம்ஆர்ஸ்கேன் போன்ற ரேடி யாலஜி ரிப்போட்டை அப்போலோ மருத்துவமனையில் புதியதாக துவங் கப்பட்டுள்ள மய்யத்துக்கு அனுப்பி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் உலகத்தின் எந்த பகுதியில் இருக்கும் வல்லு நர்களையும் தொடர்பு கொண்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தியாவில் குறிப்பாக மருத்து வத்தில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. இப்போது யாரும் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல தேவை இல்லை. அதிகளவில் வெளிநாட்டில் இருந்து நோயாளிகள் சென்னை வருகிறார்கள். அப் போலோ மருத்துவமனையில் உலக தரத்துக்கு இணையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 45 வயதானவர் களுக்கு இதயநோய் வருவதற்கு மியோட்டின் பைன்டிங் புரோட்டீன் சி என்ற ஜீன் அதிக காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற நோய்கள் வரும் முன்னே கண்டு பிடித்து தடுக்க வேண்டும். அதற்கான ஆய்வுகளில் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும். அந்த ஆய்வுகள் நோய்களை முற்றிலும் தீர்ப்பதற்கான தீர்வாக இருக்க வேண்டும். நோய் களை முற்றிலுமாக ஒழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-2/73280.html#ixzz2plB8SAB9

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தமிழர்கள் தானே!

செய்தி: தமிழக மீனவர்கள் 125 பேரின் காவலை ஜனவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. சிந்தனை: அன்றாட வானிலை அறிவிப்புப் போல வரும் செய்திதான் இது. தமிழர்கள் என்ன மலை யாளிகளா? இரு கேரள மீனவர்களை இத்தாலியைச் சேர்ந்த கப்பல் படையினர் சுட்டுக் கொன்றபோது எப்படியெல்லாம் மத்திய அரசு துள்ளிக் குதித்தது - நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது என்பதைக் கவனித்தால் இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குப் பளிச் சென்று புரியுமே!

சமுதாயக் கூட்டணி அம்போவா?

செய்தி: பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு (கொ.மு.க.) மாநில மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 51 பேர் கொண்ட உயர்நிலை தேர்தல் நிர்வாகக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

சிந்தனை: ஏன் 50 கட்சி சமுதாய (ஜாதி) கூட்டணி என்னவாயிற்றாம்?

படிப்பும் - பகுத்தறிவும்

செய்தி: ஜி.எஸ்.எல்.வி. டி5 ராக்கெட் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ள இஸ்ரேல் தலைவர் ராதா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார்.

சிந்தனை: ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பெல்லாம் ராக்கெட்டை ஏவுவதற்கு முன், அது குறித்த மாதிரியைக் கொண்டு போய் ஏமுமலை யானின் பாதங்களிலும், காளகஸ்தி கோயிலிலும் வைத்து வழிபடுவார்.

அதுகுறித்து கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், இப்பொழுது ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பிறகு இந்தத் தரிசனங்கள் நடந்துள்ளன.

ஒரு கேள்வி: ராக்கெட் விண்ணில் பறந்தது - விஞ்ஞான சாதனையா? குழவிக்கல்லு ஏழுமலையான் சாதனையா? (நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத் தறிவுக்கும் சம்பந்தமில்லை - தந்தை பெரியார்)

ஓம் முருகா!

செய்தி: திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்கள் 3 பேர் விபத்தில் பலி! சிந்தனை: ஒம் முருகா ஓம் முருகா, வேல்! வேல்!! என்று பக்தர்கள் கத்துவதன் பலா பலன் இதுதானோ!
அர்ச்சகப் பார்ப்பனர்கள் தன்னை (சிலையை) சுரண்டுவதையே தடுக்க முடியாத முருகனா பக்தர்களைக் காப்பாற்றப் போகிறான்?

ஓவர் ஜனநாயகம்!

செய்தி: காஷ்மீரில் இராணுவம் நீடிப்பது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷன் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு அக்கட்சியின் அகில இந்திய அமைப்பாளரும், டில்லி மாநில முதல் அமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் மறுப்புத் தெரிவித்தார். சிந்தனை: எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் கருத்தைக் கேட்பது என்ற நிலைப்பாட்டை உண்டாக் கியதே கெஜ்ரிவால் தானே! இன்னும் என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ!

சுறுசுறுப்பு தான்!

செய்தி: இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடியின்மீது விசாரணை ஆணையம் அமைப்பதில் - நீதிபதிகள் நியமனத்தால் தாமதம். சிந்தனை: அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த விடயத்தில் துரித கதியில் செயல்பட்டு இருக்கிறது - பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைத் தவிர?

பேராசையே போற்றி!

செய்தி: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களிடம் ஏமாறாதீர்கள் - செபி (பங்கு பரிவர்த்தனை வாரியம்) எச்சரிக்கை! சிந்தனை: மோசடி நிறுவனங்கள் பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் பேராசை யாரை விட்டது?

(கடவுள் நம்பிக்கையிலிருந்து பணப் பிரச்சினை வரை எல்லாம் பேராசைதான்!)

Read more: http://viduthalai.in/e-paper/73273.html#ixzz2plBIwTA7

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


லாரி மோதி அய்யப்பப் பக்தர் பலி

நெல்லை, ஜன.7- நெல்லை அருகே சபரி மலைக்கு பயணம் சென்ற அய்யப்ப பக்தர்களில் ஒருவர் லாரி மோதி பலியாகினார். விருதுநகர் மாவட்டம் முகவூரைச் சேர்ந்த ராமன் மகன் ராகவன் (41), பக்தர்கள் சிலருடன் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்கள் தென்காசி சாலையில் உள்ள திரிகூடபுரம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் ராகவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் முக வூரைச் சேர்ந்த பாண்டி கனகராஜ் என்பவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அய்யப்பப் பக்தர்கள் ஆறு பேர் காயம்

உடுமலை, ஜன.7 அய்யப்ப பக்தர்கள் பயணம் செய்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆறு பேர் காயமடைந்தனர். மதுரை கொச்சைக்காலான் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேலு,33; வேன் ஓட்டுநர். இவர் நேற்றுமுன்தினம் இரவு மதுரையில் இருந்து, தனது சுற்றுலா வேனில், அய்யப்ப பக்தர்கள் 12 பேருடன் சபரிமலைக்கு புறப்பட்டார். நேற்று காலை 6.30 மணிக்கு, உடுமலை- பழநி ரோடு அண்ணா குடியிருப்பு அருகே சென்று கொண்டி ருந்தபோது, மொபட் வாகனத்தில் ஒரு சிறுவன் ரோட்டை கடக்க முயன்றான். மோதுவதை தவிர்க் கும் முயற்சியில் வேன் சாலையோர சிறு பள்ளத்தில் கவிழ்ந்தது. மொபட்டில் வந்த பள்ளி மாணவன் கீழே விழுந்து காயமடைந்தான். இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் குழந்தைவேலு உள்பட ஆறு பேர் காய மடைந்தனர். உடுமலை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73266.html#ixzz2plBXcLTI

தமிழ் ஓவியா said...


மதக் குறி என்பதுமாட்டுக்குறியே!


மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.

(குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/e-paper/73309.html#ixzz2prAswES4

தமிழ் ஓவியா said...


இராமன் பாலம் என்பது ஆர்.எஸ்.எஸின் குரலே!


தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை அறவே கூடாது என்ற நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா அம்மையார்.

திருவாளர் சுப்பிரமணியசாமியும், இதில் சங்கமமாகி உள்ளார்.

இனம் இனத்தோடு சேர்கிறது என்றாலும், அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட இனக் கலாச்சாரப் பெயரையும் பயன் படுத்திக் கொண்டு இதனைச் செய்வது சரிதானா? அறிவு நாணயமா? என்பதுதான் நமது கேள்வி.

இதே அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும், ஆதாம் பாலம் என்றும், மணல் திட்டு என்றும் சொல்லப்படவில்லையா?

சந்தர்ப்பவாதம் என்பது நாகரிகமான ஒன்றல்ல; கொள்கையில்லாத வெறும் கூட்டைத்தான் இந்த வார்த்தைகளால் அழைப்பது வழக்கம். அதன்படி செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ. அ.தி.மு.க. என்பது கொள்கைக்கோட்பாடுகள் இல்லாத ஒரு கூடாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவுக்கு அம்மையார் சென்றார் தெரியுமா?

தான் உருவாக்கிய ராமர் பாலத்தை, ராமபிரான்தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை. ராமபிரானைப்பற்றிய அனைத்து அம் சங்களையும் மக்கள் நம்பலாம்; ஆனால், ராமர் பாலம் மட்டும் நம்பிக் கைகளுக்கு அப்பாற்பட்டதா?

காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத் தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள் மீட்கப்பட்டது போன்றும், வின்ஸ்கோட் திரைப்படம், கிறிஸ்தவர்களின் மன தைப் புண்படுத்துகிறது எனத் தடை செய்யப்பட்டது போன்றும், ராமர் பாலம் நம்பிக்கையையும் நம்பவேண்டும்.

இறைத் தூதர் முகம்மது நபிகளின் புனிதப் பொருள் மதிப்புக்குரியது என்றும், கிறிஸ்துவப் பெருமக்களின் விசுவாச விஷயங்களை மதித்துப் போற்றுவது போன்றே இந்துக்களின் இறை நம்பிக்கையையும் புராதனச் சின்னங்களையும் மதிக்கிறேன்.

ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்கள் ராமர் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங் கள் ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும்.

(அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., நாள்: 26.7.2008).

இந்து முன்னணி ராமகோபாலனும், பி.ஜே.பி. இல.கணேசனும் கூறுவதுபோல இல்லையா?

அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும், தம் கட்சியில் வைத்துக்கொண்டுள்ள ஜெ.ஜெய லலிதா கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட ஊடுருவல் திராவிட இயக்கத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?

ராமர் பாலம் - மதக் கலவரம் என்றெல்லாம் ஒருவர் பேசுகிறார் என்றால், அவரின் மனப் பான்மை எத்தகையது என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.

அண்ணாவின் கொள்கையை இவர் காப் பாற்றுவார் - திராவிட இயக்கத்தின் கொள்கை இவரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று உள்ள படியே நம்புகின்றவர்கள் யாராவது ஒருவர் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவர்கள் அறிவு நாணயத்தோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள் ளார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73310.html#ixzz2prB8lRCb

தமிழ் ஓவியா said...


சன் டி.வி. வீரபாண்டியனுக்கு அச்சுறுத்தல்: கண்டனம்


சென்னை, ஜன. 8- மத வாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடக வியலாளர் சன் டிவி வீரபாண்டியன் மீது பாஜக தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் சமூகச் செயல்பாட்டா ளர்களும் கண்டித்து செவ்வாயன்று (ஜன. 7) வெளியிட்ட கூட்ட றிக்கை:

மதவாதத்திற்கு எதி ராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீர பாண்டியனை பணியிலி ருந்து நீக்க வேண்டுமென மதவாத சக்திகள் வலி யுறுத்தியுள்ளதை மதச் சார்பின்மை மீது நம் பிக்கை கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசா பர் நகரில் சிறுபான்மை யினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரபாண்டி யன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் மாநில அலுவலகச் செயலாளர் திரு.கி.சர்வோத்தமன் சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்கு நருக்கும் டிசம்பர் 23 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், வீரபாண்டியன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக் காது எனவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக் கும்படி கோரியுள்ளார்.

அவர் முன்நின்று நடத்தும் விவாத நிகழ்ச் சிகளில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித் துள்ளதாக தெரிய வரு கிறது.

இதன்பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படவில்லை. இந்த அணு குமுறை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண் டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடு நிலையாக இருந்து கருத் துரைக்க வேண்டுமென் பதுதான் அறம். அதனா லேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அர சியல் பார்வையோ இருக் கக் கூடாது என்பது தவ றானது. இதர குடிமக்க ளுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.

பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக் களின் கருத்துகளுக்கும் இடமளித்து வரும் சன் தொலைக்காட்சி நிர்வா கம் வீரபாண்டியன் நடத் தும் அரசியல் விவாத நிகழ்ச்சி தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு தொடர்ந்து மதிப்பளித்திட வேண் டும் என கேட்டுக் கொள் கிறோம்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து செயல்பட்டு வரும் மத வாதக் கட்சிகள் இது போன்று ஊடகவிய லாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த கூட்ட றிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அறிக்கையில் கி.வீர மணி (தி.க.), ஞானதேசி கன் எம்.பி. (காங்.), மத் திய அமைச்சர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன், தா.பாண்டியன் (சிபி அய்), தொல்.திருமாவள வன் (விசிக), எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., (மமக), கே.எம்.காதர் முகைதீன் எம்.பி., (முஸ் லீம் லீக்), சுப.வீரபாண் டியன் (திஇதபேரவை), தமஎகச மாநிலத் தலை வர் ச.தமிழ்ச்செல்வன், கவிக்கோ, அப்துல் ரஹ் மான், பேரா.அ.மார்க்ஸ், கவிஞர் மனுஷ்யபுத்தி ரன், ஜே.எஸ்.ரிபாயி (தமு முக), பேராயர்கள் எஸ்றா.சற்குணம், தேவ சகாயம், பத்திரிகையா ளர்கள் அ.குமரேசன், ஞாநி, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73343.html#ixzz2prBHvfZS

தமிழ் ஓவியா said...


மக்கள் குறைகளைத் தீர்க்க வக்கில்லை மத விழா நடத்துவதில் மட்டும் குறைச்சல் இல்லை மக்கள் குறை தீர்ப்பு எங்கே?


தாராபுரம் தாலுக்கா, நாவிதம்புதூர் பொதுமக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி காலிக் குடங்களை தலையில் வைத்தபடி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

திருப்பூர், ஜன. 8- எல்லை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச் சார்பின்மை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மார் கழி சிறப்புப் பூஜை கூத்துகள் அரங்கேறி வருவது அரசு என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை மதச்சார்பின்மையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் பல்லடம் சாலையிலுள்ள பஞ்சு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் (Cotton Regulated Marketing Committee) செயல்பட்டு வருகிறது.

இங்கு பஞ்சு விற்பனை, கொள்முதல் சம்பந்தமாக வந்து செல்லும் திருப்பூரைச் சார்ந்த வியாபாரிகளால் சிறீகற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டு 8.9.2011இல் திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மா.மதி வாணன் தலைமையில் கும்பாபி சேகம் நடைபெற்று, இதற்குச் சான்றாக ஒரு கல்வெட்டும் அமைக்கப்பட்டு ஏற்கெனவே மதச்சார்பின்மை குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் சாலையை மறிக்கும் கோவில்கள், அரசு அலுவலக வளாகங்களில் கட்டப்படும் புதிய கோவில்கள் மற்றும் கோவில்களால் ஏற்படு கின்ற வன்முறைச் சம்பவங்கள், தீண்டாமைக் கொடுமைகள் என கோவில்களால் ஏற்படும் சட்ட, ஒழுங்கு பாதிப்பு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் கட் டப்பட்டுள்ள மேற்கண்ட கோவி லில் மார்கழி சிறப்புப் பூஜை கூத்துக்கள், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட அன்னதானத்து டன், 6.1.2014 திங்களன்று அரங்கே றியும், அரங்கேறிய வண்ணமு மாக தொடர்கின்றன.

ஆகவே, அரசு அலுவலகங்க ளைப் பஜனை மடமாக மாற்றி மதச்சார்பின்மையை எள்ளி நகையாடும் இதுபோன்ற செயல் களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சம் பந்தப்பட்ட அலுவலக அதிகாரி கள் பேரில் கடும் நடவடிக்கை களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண் டுமென்று மதச்சார்பின்மையா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73348.html#ixzz2prBWcxC0

தமிழ் ஓவியா said...


தீக்கதிர் தலையங்கம் சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?


சிதம்பரம் நடராசர் கோவில் நிர் வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது செல்லாது என்றும், நிர் வாகம் பொது தீட்சிதர்களின் கைகளில்தான் இருக்கவேண்டு மென்றும் உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மெச்சத்தக்கதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கத்தில்தான் இந்தக்கோவில் இருக்க வேண்டும் என்று நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பு கூறியுள்ளது சமூகநீதி சக்திகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றுபோற்றப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலின்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட, சிவனடியாரான ஆறுமுகசாமிக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து பலஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப் படுத்தியது. இதை எதிர்த்து தீட்சி தர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமான்கள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரி செய்ய கோவில் நிர் வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார் வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை.

சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பரிந்துரை வழங்கலாம். ஆனால் அதை ஏற்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் தீட்சிதர்களுக்கு இல்லை என்றாகிறது. சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார் கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படவும் இல்லை.

தமிழகத்தில் ஏராளமான கோவில் கள் பல்வேறு ஜாதியினரால் நிர்வகிக் கப்பட்டு வந்தநிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்போதைய தீர்ப்பு அனைத் துக் கோவில்களும் மீண்டும் ஜாதி களின் கையில் செல்லவும், அறநிலை யத்துறையே அர்த்தமற்றுப் போகவும் வழிசெய்யும் ஆபத்து உள்ளது.

தேவாரப் பாடல்களை பதுக்கி வைத்தது, நந்தனாரை தீயில் தள்ளிக் கொன்றது, வள்ளலாரை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது, சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து நொறுக் கியது நகைகள் திருட்டு என்று சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வரலாற்று காலந் தொட்டு ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவில் சொத்தை நிர்வகிப்பதிலும் வெளிப்படையான கணக்கு வழக்கு இல்லை. இந்த கோவில் நிர்வாகத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை நடத்து வதில் உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது. சேது சமுத்திர திட்ட வழக்கிலும் கூட நம்பிக்கை என்பதற்கு கொடுத்த அழுத்தத்தை வளர்ச்சிப்பணி என்பதற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.

இந்த வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (மறு சீராய்வு) செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும்.

நன்றி: தீக்கதிர், தலையங்கம், 8.1.2014

Read more: http://viduthalai.in/e-paper/73311.html#ixzz2prBt86JK

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

அகமதாபாத்,ஜன.8- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதி ராக துப்புரவுத் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினார்கள்.

குஜராத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து மோடி அரசு மறுத்து வருகிறது.

இஎஸ்அய், பிஎஃப் உள்ளிட்ட சட்ட சலுகைகளையும் அமல்படுத்த குஜராத் அரசு மறுத்து வருகிறது. தொடர்ந்து சமூகத்தில் பின் தங்கியிருக்கும் துப்புரவு தொழிலா ளர்களை கொத்தடிமைகள் போலவே மோடி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை மோடி அரசு மிரட்டி பணிய வைக்கவும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். அல்லது துப்புரவுப் பணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவோம்.

வேறு நபர்களுக்கு வேலை வழங்கி விடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தொடர்ந்து தொழிலாளர்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். தொடர்ந்து 8 ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மோடி அரசை கண்டித்து அகமதாபாத் நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினர்.

சிலைக்குப் பல்லாயிரம் கோடியா?

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்காமல் படேல் சிலை அமைக்க பல கோடி ரூபாய்களை அரசு வீணடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏழை மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக நாடு முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் துப்புரவுத் தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை.இதனால் ஏமாற்றம் அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம சாலையில் அவர்கள் பேரணியாக சென்றார்கள். வழியில் உள்ள காந்தியார் சிலைக்கு அவர்கள் பாலபிஷேகம் நடத்தினார்கள். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசின் அசுத்தத்தை கழுவும் வகையில் பாலபிஷேகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பேரணியில் நகராட்சி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், குஜராத் தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். காந்தியார், சர்தார் வல்லபாய் பட்டேல் மீது தேர்தலுக்காக போலி அன்பு காட்டும் மோடிக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட் டனர்.பேரணி காந்தியாரின் சபர்மதி ஆசிரமம் அருகில் சென்று முடிவடைந்தது.

அங்கு அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள், பட்டேல் சிலை அமைப்பதற்காக குஜராத் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது. அந்த பணத்தை குஜராத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடலாம் என்று வலியுறுத்தினர்.

Read more: http://viduthalai.in/e-paper/73308.html#ixzz2prCM3pSQ