Search This Blog

1.1.14

பெரியார் தத்துவம் என்பது உயரிய தத்துவம்

பெரியார் தத்துவம் என்பது நம் கண் முன்னே உள்ள உயரிய தத்துவம்
மலேசியா, டிச. 31- தந்தை பெரியாரின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மலேசியாவின் ஈப்போ நகரில்  சிறப்புடன் நடைபெற்றது. பேராக் மாநிலம், ஈப்போவில் 23.12.2013 அன்று, கின்டா ரிவர் பிராண்ட் விடுதியில் இரவு 7 மணியளவில், குழந்தை இலக்கியாவின் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது.  பேராக் மாநில திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கூத்தரசன் தலைமை வகித்தார். மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேருரை நிகழ்த்தினார்.

தமிழர் தலைவர் உரை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஈப்போவில் உங்களைச் சந்திப்பதிலே அளவு கடந்த மகிழ்ச்சி. ஈப்போ கழகம் முன்பைவிட சிறந்த புத்துருவாக்கம் பெற்றுள்ளதை நேரில் காண்கிறேன். இளைஞர்கள் ஏராளம் வந்துள்ளனர். பேராக் மாநிலத் தலைவர் கூத்தரசன் பேசும்போது, என்னை ஈப்போ மாப்பிள்ளை என்று கூறினார், உண்மைதான்! அதற்காக நான் அடிக்கடி மாமியார் வீடு வருவ தில்லை. எங்களைப் போன்றோருக்கு உண்மையான மாமியார் வீடு என்பது, பாரதிதாசன் சொன்னதைப் போல, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலைதான். பொது வாழ்க்கையில் இருப்ப வர்களுக்குச் சிறை என்பது இயல்பு. அது இலட்சியத் திற்குக் கொடுக்கப்படும்  விலை. ஈப்போ நகரில் பழைய தோழர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்க வரலாற்றில் ஈப்போ நகருக்குச் சிறப் பான வரலாறு உண்டு. தந்தை பெரியார் 1929 இல் முதன்முதலில் மலேசியா வந்தபோது ஈப்போ நகரில்தான் வந்திறங்கினார். அப்போது நம்மில் பலரும் பிறந்திருக்கக்கூட மாட்டோம். பெரியார் வருகையின்போது ஈப்போ வில் பலத்த எதிர்ப்பு இருந்தது. அதை முறியடித்து, வெற்றி முரசுக் கொட்டியவர் பெரியார். ஈப்போவில் அந்தக் காலத்தில் ஜாதி சங்கங்கள் இருந்தன. தந்தை பெரியார் முதலில் ஈப்போ வந்த போது, அவருக்கு யார் வரவேற்பு கொடுத்தார்கள் தெரியுமா?  ஈப்போ நாடார் ஜாதி மக்கள். அந்தக் கூட்டத்தில் பெரியார் ஒரு மணி நேரம் பேசி யுள்ளார்.

அதைத் தொடர்ந்து மலேசியாவின் ஈப்போ நகருக்குப் பெரியார் இரண்டாவது முறையும் சென்றார். அப்போது அவரை வரவேற்றவர்கள் ஈப்போ தமிழர் சங்கம். இந்த இடத்திலே ஒன்றை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். முதல்முறை வந்த போது ஜாதியின் பெயரால் வரவேற்றவர்கள், அடுத்தமுறை தமிழராய் இணைந்து வரவேற்றார் கள். அதுதான் பெரியாரின் வெற்றி. (பலத்த கைத் தட்டல்). அப்போது பெரியாருக்கு ஒரு வரவேற்புக் கவிதை வாசித்தார்கள். அந்தக் கவிதையை எழுதியது யார் தெரியுமா? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  அதாவது மலேசியத் தோழர்கள் பெரியாரை வாழ்த்தி கவிதை எழுதித் தரும்படி, தமிழ்நாட்டில் இருந்த பாரதிதாசனை தொடர்பு கொண்டு எழுதி வாங்கியுள்ளனர். எப்பேர்ப்பட்ட வரலாற்று நிகழ்வு கள் எல்லாம் இம்மண்ணில் நடந்துள்ளன. பெரியார் இல்லாவிட்டால் தமிழ்நாடு மட்டு மின்றி, மலேசியாவிலும் வளர்ச்சி இல்லை. நம் மக்கள் அறிவு, ஆற்றல், கல்வி எல்லாவற்றிலும் பின்தங்கியே இருந்திருப்பார்கள். மலேசியத் தமிழர்களுக்கு இதுபோன்ற விசயங்களைச் சொல்வதற்கு யாருமே இல்லை. பெரியார்தான் வந்து சொன்னார். மாற்றியும் காண்பித்தார். அதனால்தான் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என அய்.நா. மன்றம் புகழாரம் சூட்டியது.

மனித சமுதாயம் எனக்கு முக்கியம். அறிவுப்பற்று, மனிதப்பற்றுதான் எனக்கு முக்கியம். எல்லோரும் சமம் என்பதற்காகவே உழைத்தவர் பெரியார்.  இந்தியாவில் ஜாதிதான் இன்றைக்கும் பெரிய நோயாக உள்ளது. அது பெரியளவில் குறைந்துள்ளது என்பது ஒருபுறம். எனினும் அரசியல்வாதிகள் அதற்குப் புத்துயிர் கொடுக்க நினைக்கிறார்கள். அதனால்தான் பெரியார் பணி மேன்மேலும் தேவைப்படுகிறது.  மலேசியச் சமுதாயத்தில் இன்றைக்குத் தமிழர்கள் நல்ல வண்ணம் வாழ்ந்து வருகிறார்கள். தோட்டங் களில் கூலி மனிதர்களாக இருந்தவர்கள், இன்றைக் குச் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் உரிமை பெற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். அதேநேரம் இன்றைக்கும் பக்தியின் பெயரால் நம் மக்கள் நேரம், உழைப்பு, பொருளை இழந்து வாடுகிறார்கள். முப்பத்து முக்கோடி கடவுள்கள் இருப்பதாக மலேசியத் தமிழர்களும் நினைக்கிறார்கள். அந்த முப்பத்து முக்கோடி பேர்களில் ஒருவனுக்காவது மின்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா? சிவசிவ என்றால் அபாயம் இல்லை என நம்பு கிறார்கள். அப்படிச் சொல்லிக் கொண்டே மலேசிய நாட்டில் மின்சார வயரில் கைவைத்துப் பாருங்கள். அபாயம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். அறிவியல் வளர்ந்த நிலையிலும் முன்பு போலவே இருப்பது அறியாமை அல்லவா? இன்றைக்கு எல்லோரும் சதா கைப்பேசியுடனே இருக்கிறீர்கள். ஆனால் பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே கைப்பேசி வந்துவிடும் எனச் சொன்ன விஞ்ஞானி. அறிவியல் வளர்ச்சி குறித்தும் பேசினார்; சமுதாய வளர்ச்சி குறித்தும் பேசினார். இனிவரும் உலகம் என்ற நூலைப் படித்தால் தெரியும், அவர் ஏன் பகுத்தறிவுப் பகலவன் என்பது. பெண்கள் படிக்க வேண்டும் என்றார். பின்னர் அவர்களுக்குத் தொழில் கல்வி வேண்டும் என்றார். அதன் விளைவு தான் தஞ்சையில் பெண்களுக்கு என்றே பெரியார் மணியம்மை கல்லூரி தொடங்கி, அது இன்றைக் குப் பல்கலைக் கழகமாக உயர்ந்தோங்கி நிற்கிறது. 

மலேசியாவிலும் நம் பிள்ளைகள் மிகப்பெரிய நிலைக்கு வந்துவிட்டனர். மலேசியாவுக்கு பெரியார் ஏன் தேவை? எனச் சிலர் கேட்கின்றனர். அவர்கள் வரலாறு அறியாதவர்கள். நோய் கிருமி ஒரு நாட்டில் உருவாகி, எப்படி உலகம் முழுவதும் பரவுகிறதோ, அப்படி வந்ததுதான் இந்த ஜாதிக் கிருமியும். நம் நாட்டிலிருந்து வரும்போது எல்லாவற்றையும் அங்கு போட்டுவிட்டு  வந்தனர். ஆனால் ஜாதியை மட்டும் தூக்கிக் கொண்டு வந்தனர். மலேசியாவில் கூட ஜாதி அரசியல் எட்டிப் பார்க்கும் நிலை உள்ளதாக அறிகிறோம். நம் இளைஞர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அதற்குப் பெரியார் கொள்கை ஒன்றுதான் மாமருந்து. அறிவியல் வளர்ந்த நாட்டில் மூட நம்பிக்கை தொடரலாமா ?

அறிவியலின் உச்சம்!

அறிவியலின் உச்சம் செல்போன் கண்டுபிடித்துக் கொடுத்தால், அதில் நம்மவர் ஜாதகம் பார்த்து வருகின்றனர். பண்பாட்டுப் படையெடுப்பில் சிக்கி மீளாமல் இருக்கின்றனர். அரசியல் படையெடுப்பு என்பது கைவிலங்கு மாதிரி. பொருளாதாரப் படையெடுப்பு கால் விலங்கு மாதிரி. பண்பாட்டுப் படையெடுப்பு மூளை விலங்கு மாதிரி. இந்த மூளை விலங்கை உடைக்கும் போராட்டம் தான் நாம் செய்து வருவது.

ஜாதியைப் பற்றி...

சிங்கப்பூர் அறிஞர் லீ குவான் யூ என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். ஒரு தனி மனிதனின் பார்வையில் நாடுகள் எப்படி இருக்கின்றன என ஆராய்ச்சி செய்துள்ளார்.

அதில் இந்தியா குறித்து எழுதும்போது, இந்தியா உயர்வது கடினம். காரணம் அங்குள்ள ஜாதிகள். ஜாதிகளை ஒழிக்கும் வரை அந்நாட்டில் முன்னேற்றம் இல்லை.

அதேபோல நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் குன்னர் பில்டன்  ஆசிய நாடகம் (1973) என்ற தம் நூலில், இந்தியாவில் ஜாதியை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

எனவே அப்பேர்ப்பட்ட ஜாதியை மலேசியாவில் இருந்தாலும் அகற்றவேண்டும். பெரியார் கொள்கை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை என்று பார்க்காதீர்கள். அது உங்களுக்கான கொள்கை. உங்களின் வாழ்க்கை, உரிமை தொடர்புடையது. பெரியாரின் கொள்கை யைப் பெரியாருக்காக யாரும் ஏற்க வேண்டாம். நோய் வருகிறது. மருந்து சாப்பிடுகிறோம். நான் மருந்து சாப்பிடுவது மருத்துவருக்காக என்றா சொல்வோம்? அல்லது மருந்து தயார் செய்பவர்கள் எங்களுக்குத் தெரிந்தவர்கள் என்றா சாப்பிடு கிறோம்? அல்லது மருந்துக் கடைக்காரர் விற்பனை இல்லாவிட்டால் வருந்துவார் என்பதற்காகச் சாப்பிடுகிறோம்? யாருக்காகவும் அல்ல.

 

உங்கள் நோய் தீரவும், நீங்கள் ஆரோக்கியமாய் வாழவுமே மருந்து சாப்பிடுகிறீர்கள். அதேபோலத்தான் பெரியார் கொள்கையும். பெரியார் கொள்கையைக் கடைப் பிடித்தால் மூடநம்பிக்கை நோய், பெண்ணடிமை நோய், அறியாமை நோய், புரியாமை நோய் என எல்லாம் நீங்கி விடும். மருந்து வாங்கினால் சிறிது காலத்திற்குப் பிறகு அது காலாவதி ஆகிவிடும். அதற்கான தேதியும் அதில் இருக்கும். ஒரு சாதாரண மருந்துக்கே காலாவதி தேதி பார்த்துச் செயல்படு கிறோம். ஆனால் நல்ல நேரம், ராகுகாலம், விதி, ஜாதகம் இவை எல்லாம் தோன்றி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் காலாவதியான விசயங் களை இன்னும் கடைப்பிடித்து வருகிறோம். மலேசி யாவில் 3 பேர் சேர்ந்து நிழற்படம் எடுத்தால், ஏதாவது ஆகிவிடும் என நம்புகிறார்கள். வளர்ந்த நாட்டில் இவையெல்லாம் தகுமா?

இதுபோன்ற விசயங்களை எடுத்துச் சொல்வதற்கு இந்த இயக்கத்தை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?  எனவே எதையும் துணிச்சலோடு சிந்தியுங்கள். வெற்றி பெற்ற மனிதராக நீங்கள் மாறலாம். நம் தமிழ்ப் பிள்ளைகள் உலகம் முழுவதும் உயர்ந்த நிலைகளில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அவர்களின்  ஜாதி, மத நம்பிக்கைகள். இருட்டும், வெளிச்சமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. எனவே மூடநம்பிக்கை இருட்டை விரட்டும்போது, உங்களின் வாழ்வில் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். ஏதோ ஒரு உலகத்தை நினைத்துக் கொண்டு நீங்கள் வாழக் கூடாது. பெரியார் தத்துவம் என்பது கண் முன்னே உள்ள உண்மையான வாழ்வியல். அதைப் பின்பற்றி நடக்கும் போது, உங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதுஎனத் தமிழர் தலைவர் பேசினார்.
 

இதே நாளில்தான்...
ஓர் அற்புதமான வரலாற்றுச் செய்தியை இந்த நேரத்திலே உங்களுக்குச் சொல்லப்போகிறேன். அதாவது 23.12.1929 அன்று பெரியார் முதன்முதலில் மலேசியாவின் ஈப்போ நகருக்கு வந்தார். நான் பேசிக் கொண்டிருக்கிறேனே, இன் றைய தேதி என்ன தெரியுமா? இன்று 23.12.2013. அதாவது 84 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் தந்தை பெரியார் அவர்கள் ஈப்போவில் பேசினார். அதே தேதியில் பெரியாரின்  கொள்கை களை அவரின் தொண்டராக இருந்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன் (பலத்த கைத்தட்டல்).
ஓர் இயக்கத்திற்குத்  தொய்வில்லாத தொடர்ச்சி என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இடையில் எவ்வளவோ துன்பங்கள், பிரச்சினை கள், பூகம்பங்கள் எல்லாம் வந்தன. அதையெல்லாம் தாண்டி உங்கள் முன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள நிற்கிறேன். இது ஒரு நெகிழ்ச்சியான நாள். வரலாற்றுத் தொடர்ச்சியான நாள். (தமிழர் தலைவரின் ஈப்போ பேச்சிலிருந்து- 23.12.2013)

                      --------------------------”விடுதலை”  31-12-2013

58 comments:

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் அவர்களின் 2014-புத்தாண்டுவாழ்த்து!


பிறக்கும் புத்தாண்டு (2014) - மனித நேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி வாழ வைக்கும் புது உலகப் புத்தாண்டாக அமையட்டும்!

அனைவருக்கும் நமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

31.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72872.html#ixzz2p6Np262c

தமிழ் ஓவியா said...


கலைஞர் புத்தாண்டு வாழ்த்து


2014ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்க ளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனப் பொய் கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது.

அனைத்து வகைத் தொழில்களும் முடங்கி விட்டன; புதிய தொழில்களும் இல்லை.

தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது; வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். ஆளுவோரின் தவறான கொள்கை யால் மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது.

ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள். செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன.

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்கள் உண்மைகளைக் கட்டிப் போட்டு விட்டு; பொய்களுக் குச் சாமரம் வீசி - ஜனநாயகக் கடமையாற்று வோர்க்குச் சிறைகளைக் காட்டி, ஏறி வா நீதிமன்றப் படிகளை என இழுத்தடிக்கும் எதேச்சாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகிறது.

விலைவாசி உயர்வு எல்லா வகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது. வேதனை யைத் தீர்க்க வேண்டியவர்கள் - மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின் றனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை நிலையை உரைத்தால் அரசின் அடக்கு முறைக்கு ஆளாவோம் என்று அஞ்சுகின்றன.

இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத் திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு - இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும், பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட - களம் கண்டிட - புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி ஒன்றுபட்டு உழைத்திடுவோம்! புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/72877.html#ixzz2p6NycGmS

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் தமிழ்நாடு அரசின் அறிவிக்கை


அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்படும் மருத்துவமனைக்கு

பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு அறவே கிடையாதாம்!

தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தமிழ் மண்ணே எழுந்து நின்று போராடும்!

அறிவிக்கையை உடனடியாக முதலமைச்சர் வாபஸ் வாங்கட்டும்! தமிழ்நாடு அரசு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கும் புதிய மருத்துவமனைக்கான பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அறவே பின்பற்றப்படாது என்று வெளியிட்ட அறிவிக்கையைக் கண்டித்தும், இதனை வாபஸ் வாங்காவிட்டால் தமிழ்நாடு கொந்தளித்து எழும் என்று அறிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவத் துறை பணி நியமன அமைப்பு (Medical Services Recruitment Board-MRB) கடந்த 27 ஆம் தேதி ஒரு அறிவிக்கையை (Notification-10, date 27.12.2013) இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

அபாய அறிவிக்கை!

சென்னையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டமன்றத்திற்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில் சிறப்பு மருத்துவமனை ஒன்றை (Super Speciality Hospital) உருவாக்குவது தொடர்பாக மருத்துவப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர் போன்ற 83 பதவிகளுக்குப் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கை அது (12 பக்கங்கள் கொண்டது).

தமிழ் மண்ணில் தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் இவற்றின் காரணமாக 1928 முதல் நடைமுறையில் இருந்துவரும் சமூகநீதிக்கு மரண அடி கொடுக்கும் அபாயகரமான அறிவிப்பு அது.

இட ஒதுக்கீடு அறவே கிடையாதாம்!

அறிவிக்கையின் நான்காம் பக்கத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

1. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்றப்படாது என்று மிகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியா முழுவதும் இருந்தும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

3. ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

4. சம்பள விகிதம் - தற்போது அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் தொகையைவிட மிகவும் கூடுதலாக அளிக்கப்படும்.
சம்பளத்திலும் வேறுபாடு

எடுத்துக்காட்டாக,

தற்போது அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூ.70 ஆயிரம்; ஆனால், புதிதாகத் தொடங்கப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் உருவாகும் மருத்துவமனையில் பணியாற்றும் அதே கல்வித் தகுதியுடைய பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லட்சம்; தற்போது உதவிப் பேராசிரியருக்கு சம்பளம் ரூ.40 ஆயிரம்; ஆனால், புதிய மருத்துவமனை உதவிப் பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒரு லட்சம்.

டிசம்பர் 27 அறிவிக்கை வெளியிடப்பட்டு, அவசர அவசரமாக விண்ணப்பிக்கப்படுவதற்கான கடைசி தேதி ஜனவரி 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (ஏற்கெனவே உரியவர்களைத் தேர்வு செய்துவிட்டார்களோ...?)

சமூகநீதிபிறந்த தமிழ் மண்ணில் இப்படியொரு கொடுமையா!

சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்து, அரசு விளம்பரம் செய்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

அதுவும், இந்த முறை ஆட்சிப் பொறுப்புக்கு (2011 இல்) வந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சமூக அநீதிக்கொடியை ஏற்றியே தீருவது என்கிற ஒரு முடிவோடு செயல்படுவதாகத் தெரிகிறது.

தகுதிதான் அதிமுக அரசின் கொள்கை முடிவாம்!

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியமனத்தில் ஆசிரியர் கல்விக்கான தேசிய ஆணையம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான தகுதி மதிப்பெண்ணில் தளர்வு அளித்திருந்தும், அதனைப் பயன்படுத்தாமல், திறந்த போட்டி, ஒதுக்கீடுப் பிரிவு அனைத்திற்கும் தகுதி மதிப்பெண் 60% என்று அறிவித்ததோடு அல்லாமல், சட்டமன்றத்திலேயே தகுதி அடிப்படை (Merit) என்பது அரசின் கொள்கை முடிவு என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த அரசு சமூகநீதிக்கு எதிரான ஒரு வழியில் பயணிக்க முடிவு எடுத்துள்ளது தெரிய வந்தது. (பார்ப்பன சங்க மாநாடுகளில் தொடர்ந்து கூறப்பட்டுவரும் கோரிக்கை இது!).

அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இப்படி பேரிடி போன்ற சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது!

இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த முடிவை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது.

கட்சிகளைக் கடந்து தமிழ்நாடு ஒன்றுபட்டு கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு அல்லாமல், அதற்கான போராட்டக் களங்களை உருவாக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

திராவிடர் கழகம் இதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்று எம்.ஜி.ஆர். செய்த தவறும் - பாடமும்!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இட ஒதுக்கீட்டில் வருமானவரம்பு விதியைப் புகுத்தினார். திராவிடர் கழகம் கடுமையான பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். தோல்விக்குப் பின், தன் தவறினை உணர்ந்து அந்த ஆணையை ரத்து செய்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்பது வரலாறு.

இப்பொழுதும் அதே சூழ்நிலை - மக்களவைத் தேர்தல் வரும் ஒரு காலகட்டத்தில், சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

உடனடியாக ரத்து செய்க!

தற்போது வெளியிடப்பட்டுள்ள (MRB) அறிவிக்கையை ரத்து செய்து, தமிழ்நாட்டில் 85 ஆண்டுகாலமாகப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை, குறிப்பாக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.

ஒப்பந்த அடிப்படை என்பது போன்ற குறுக்குச்சால் (முறைகேட்டுக்கு இது ஒரு வழி) ஓட்டுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.



கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்.

முகாம்: சிங்கப்பூர்

31.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72866.html#ixzz2p6OJWrDz

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 31 (1993)



சமூகநீதி வரலாற்றில் இந்நாளையும் மறக்க முடி யாது. இந்த நாளில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 31(சி) சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாள்.

அ.இ.அ.தி.மு.க. ஆட் சியே உருவாக்கிய சட்டமா என்றால், அதுதான் இல்லை;

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றில் (25.8.1993) இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்குமேல் போகக் கூடாது என்று கூறியதால் தமிழ்நாட்டில் நாம் போராடிப் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்த நிலையில், அந்த விபத்திலிருந்து தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட, தனக்கே உரித் தான சட்ட ஞானத்தால் மசோதா ஒன்றை உருவாக்கிக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31 (சி) பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டு, 9ஆவது அட்டவணையில் இணைக்கப் பட்டால் நீதிமன்றம் தலை யிடவே முடியாது என்ற முறையில் சடடத்தின் நக லைத் தயாரித்துக் கொடுத் தவர் திராவிடர் கழகத் தலைவர்.

அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட குறிப் பிடத்தக்க நாள்தான் டிசம்பர் 31 (1993).

பிறகு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப் பட்டது (19.7.1994).

முதல்வர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களைச் செயல்பட வைத்து வரலாற் றில் வெற்றி கண்டவர் நம் தலைவர்.

இன்றைக்கு இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்டத்தில் (ACT) அடிப்படையில் வலிவாக இருப்பது தமிழ் நாட்டில் தான்; மற்ற மற்ற மாநிலங்களில் அரசு ஆணை (G.O.) யால்தான் நின்று கொண்டு இருக்கிறது என் பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலாகும்.

அன்றைக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெய லலிதா இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது ஒருபுறம்; அப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்து 69 சதவீதம் காப்பாற்றப்படவில்லையானால் அம்மையாரின் ஆட்சி காப் பாற்றப்பட்டு இருக்காது என் பதும் கசப்பான உண்மை யாகும்.

அதே அம்மையார் ஜெய லலிதா இப்பொழுது எப்படி இருக்கிறார்? பட்டதாரி ஆசிரியர்களின் பணி நிய மனம், இடைநிலை ஆசிரியர் கள் நியமனங்களிலும், ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கொடுத்த மதிப்பெண் தளர்வினைக் கூட கொடுக்காமல் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டி விட்டாரே!

சமூகநீதிக்கு எதிராக செயல்பட முடியாத அளவுக் குத் தடுப்பு அரணாக திராவிடர் கழகத் தலைவரும், திராவிடர் கழகமும் அன்று இருந்த காரணத்தால்தான் 1993இல் அப்படியொரு சட்டம் வர வாய்ப்பு இருந்தது என் பதுதான் உண்மை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72871.html#ixzz2p6OSqkP5

தமிழ் ஓவியா said...


2013 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்


2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

ஜனவரி

ஜன.17: வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6 இல் இருந்து 9 ஆக உயர்த்தவும், டீசல் விலையை மாதந்தோறும் 50 காசு உயர்த்தவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

ஜன.18: பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களில் சிலைகள் வைக்க தடை விதித்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிருவாகங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஜன.20: அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் பதவி ஏற்றார்.

ஜன.31: ஆள் மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய புதுவை மாநில முன்னாள் கல்வித் துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிப்ரவரி

பிப்.1: பாலியல் வன்முறை செய்து கொலை செய்யும் குற்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிப்.4: காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை 20 ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்தது.

பிப்.7: காவிரியில் உடனடியாக 2.44 டி.எம்.சி தண்ணீர் திறக்க கருநாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பிப்.12: உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா சக்தி வாய்ந்த அணுகுண்டை வெடித்தது. இதனால் 5.1 ரிக்டர் அளவில் பூமி குலுங்கியது.

பிப்.19: இலங்கை போரின்போது பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது அம்பலமானது. இதுபற்றிய படங்களை சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

பிப்.20: காவிரி நீரில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்யும் வகையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் நகலை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. பிப்.20: புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு நவீன மருத்துவமனையாக மாற்றத் தடை யில்லை என்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

பிப்.25: ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு தொடங்கியது. இலங்கையின் போர்க் குற்றத் திற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்தது.

பிப்.28: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங் களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஆளும் கட்சிகளே மீண்டும் வெற்றி பெற்றன. திரிபுராவில் 5 ஆம் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. மேகாலயாவில் காங்கிரசும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணியும் மீண்டும் வெற்றி பெற்றன.

மார்ச்

மார்ச் 11: டில்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பாலியல் வன்முறை செய்து கொன்ற 6 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 11: இலங்கைத் தமிழர் பிரச்சினையை வலியுறுத்தி டெசோ சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் 5 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

மார்ச் 15: இலங்கை தமிழர் பிரச்சினையில் மாண வர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால், தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட தோடு, விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டது.

மார்ச் 15: தகாத உறவில் பிறந்தது, குழந்தையின் தவறு அல்ல; அந்தக் குழந்தைக்கும் அனைத்து உரிமை களும் உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மார்ச் 18: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பாலுறவு இசைவு வயது 16 ஆக குறைப்பு இல்லை என்றும், 18 வயதே நீடிக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

மார்ச் 19: இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால், மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகியது. ஆளும் கூட் டணியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விலகுவதாக திருமா வளவன் அறிவித்தார்.

தமிழ் ஓவியா said...

மார்ச் 19: அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானம் தாக்கல் ஆனது. மார்ச் 21: அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்பட 25 நாடுகள் ஆதரித்தும் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன.

மார்ச் 22: பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.

மார்ச் 27: இலங்கை போர்க்குற்றம் குறித்து புலன் விசாரணை, பொருளாதார தடை விதித்தல் மற்றும் தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.

மார்ச் 29: தமிழ் ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்தது.

மார்ச் 30: நச்சுவாயுவை வெளியேற்றியதால் தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தர விட்டது.

ஏப்ரல்

ஏப். 8: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணமடைந்தார்.

ஏப். 11: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகளில் குவியல், குவியலாக தங்க, வைர நகைகள் மற்றும் மூட்டை, மூட்டையாக தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏப். 15: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஏப். 30: நிலக்கரி ஊழல் அறிக்கையை மத்திய சட்ட அமைச்சரிடம் காண்பித்த சி.பி.அய்.க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மே

மே 1: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முத லீட்டுக்கு எதிராக தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மே 3: கச்சத்தீவை மீட்க முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறை வேறியது.

மே 6: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மே 8: நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை அறிக் கையை திருத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சி.பி.அய்.,க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மே 10: லஞ்ச ஊழல் புகார்களில் சிக்கிய மத்திய ரயில்வே அமைச்சர் பன்சால், நிலக்கரி ஊழல் பற்றிய சி.பி.அய். அறிக்கையை திருத்திய விவகாரத்தில் சிக்கிய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ஆகியோர் பதவியி லிருந்து விலகினர்.

மே 10: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த தற்காலிக கண்காணிப்புக் குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மே 12: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அந்த நாட்டில் 13 ஆண்டு களுக்குப் பிறகு நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சியை பிடித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் எதிர்க்கட்சித் தலைவரானார்.

தமிழ் ஓவியா said...

மே 13: மருத்துவப் படிப்பிற்குப் பொது நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப் பளித்தது.

மே 15: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசே ஏற்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

மே 28: கலை - அறிவியல் கல்லூரி தேர்வுகளை ஆங் கிலத்தில் எழுதுமாறு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப் போவதாகவும், தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதலாம் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

மே 30: தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா வுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

மே 30: தமிழகத்தில் எடுக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடந்த 10 ஆண்டு களில் 97 லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந் துள்ளது. தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் என்ற தகவலும் வெளியானது.

ஜூன்

ஜூன் 3: தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஜூன் 3: தி.மு.க. தலைவர் கலைஞர் தமது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

ஜூன் 5: பாகிஸ்தானில் 3 ஆவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.

ஜூன் 17: தமிழக அமைச்சரவையில் இருந்து செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோர் நீக்கம், புதிய அமைச்சர்களாக சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஜூன் 17: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய் யப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உள்பட 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மல்லிகார் ஜுன கார்கேவுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டது.

ஜூன் 21: தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி என்.எல்.சி.யின் 5 சதவிகித பங்குகளை விற்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

ஜூன் 29: உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டார்.

ஜூலை

ஜூலை 3: உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தமிழ் ஓவியா said...

ஜூலை 7: முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று என்.எல்.சி.யின் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசுக்கு விற்பனை செய்ய செபி ஒப்புதல் அளித்தது.

ஜூலை 11: விசாரணை கைதிகளும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பினை வழங்கியது.

ஜூலை 14: 160 ஆண்டுகள் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய தந்தி சேவைக்கு மக்கள் பிரியாவிடை கொடுத் தனர். இறுதி நாளில் ஏராளமான பேர் தங்களது உறவினர் களுக்கு தந்தி அனுப்பி நெகிழ்ந்தனர். இழப்பில் இயங்கிய தால் தந்தி சேவையை நிறுத்திக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்தது.

ஜூலை 18: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூலை 19: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் பதவி யேற்றார். டில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 23: நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த 65 எம்.பி.,க்கள் கடிதம் எழுதினர்.

ஜூலை 30: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை யில் கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அணை பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டு கண்டித்தது.

ஆகஸ்ட்

ஆக. 1: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தமிழ் ஓவியா said...


ஆக. 5: இந்தியாவில் எந்த இடத்திலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது.

ஆக. 13: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டத் திருத்தம் கொண்டுவர அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆக. 24: சென்னையில் ஆட்டோக்களுக்குக் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயம் செய்து முதலமைச்சர் அறிவித்தார்.

ஆக. 26: உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன் றத்தில் நிறைவேறியது. அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆக. 27: அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழர் களின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நவநீதம் பிள்ளைக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செப்டம்பர்

செப். 2: டில்லி மாநிலங்களவைத் தேர்தலில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது.

செப். 13: டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அக்ஷயகுமார், வினய்சர்மா, பவன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செப். 17: ஈரான் சிறையில் 9 மாதங்களாக வாடிய 16 தமிழக மீனவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை வந்தனர்.

செப். 21: இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. விக்னேஸ்வரன் புதிய முதலமைச்சரானார்.

செப். 23: பொதுமக்கள் சமையல் எரிவாயு மற்றும் குடிநீர் இணைப்பு, திருமணப் பதிவு போன்ற அத்தியா வசிய சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப். 25: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 ஆவது ஊதிய நிர்ணய ஆணையம் அமைப்பு.

செப். 27: தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்பதை பதிவு செய்ய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனி பொத்தான் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அக்டோபர்

அக். 1: மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூதுக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அக். 2: அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிப் பிரச்சினையால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்டதால், அரசு ஊழியர்கள் வீடுகளில் முடங்கி னர்.

அக். 7: இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேசுவரன், அதிபர் ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றார்.

தமிழ் ஓவியா said...

அக். 21: லஞ்ச வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான ரஷீத் மசூத்தின் பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இது.

அக். 22: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டது. முதல் கட்டமாக தயாரான 160 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டது.

அக். 24: இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

நவம்பர்

நவ. 1: விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவில் பணி யாற்றிய இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூர மாக கொலை செய்த வீடியோ ஆதாரத்தை இங்கிலாந் தின் சானல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

நவ. 5: செவ்வாய்க் கோள் ஆய்வுக்காக மங்கள்யான் விண்கலத்துடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

நவ. 8: கருநாடக அரசு ஜனவரி மாதம் வரை காவிரியில் 26 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்குத் திறந்துவிடவேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.

நவ. 9: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

நவ. 9: சி.பி.அய். சட்ட விரோதம் என்ற தீர்ப்புக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நவ. 11: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத் திற்குக் கூடுதலாக பொதுப்பணித் துறை வழங்கப்பட்டது.

நவ. 15: யாழ்ப்பாணம் பகுதியை பார்வையிடச் சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காரை வழி மறித்த தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவ. 16: இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து மார்ச் இறுதிக்குள் நம்பத் தகுந்த சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ராஜபக்சே வுக்கு, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்தார்.

நவ. 23: இந்தியா முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் மெகா லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில் 31 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் மட்டும் பதிமூன்றரை லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1041 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது.

டிசம்பர்

டிச. 4: பாலியல் புகாரில் சிக்கிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலிமீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

டிச. 5: தனித் தெலங்கானா அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்தது.

டிச. 6: நிற வெறிக்கு எதிராகப் போராடியதால் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணமடைந்தார்.

டிச. 9: மிசோராம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங் கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. லால்தன் காவ்லா அய்ந்தாம் முறையாக முதலமைச்சரானார்.

டிச. 11: ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் என்றும், இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில் டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

டிச. 13: வேலைக்காரப் பெண் விசா மோசடி குற்றச் சாட்டு காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ராகடேவை அமெரிக்க காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

டிச. 21: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச் சர் பதவியிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகினார்.

Read more: http://viduthalai.in/page-7/72908.html#ixzz2p6PIeG1N

தமிழ் ஓவியா said...



மத்திய அரசே, மாநில அரசே!
பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்று! கடன்களை ரத்து செய்! இழப்பீடு வழங்குக!
திருவாரூரில் தி.க. விவசாய சங்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர், டிச.31- எல்லா வகையிலும் பாதிப்புக்கும், இழப்பிற்கும் ஆளாகும் ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றுமாறும், கடன்களை ரத்து செய்யுமாறும், இழப்பீடுகளை வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்து, கீழத்தஞ்சை திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் இன்று (31.12.2013) காலை 10 மணியளவில் எழுச்சியுடன் நடை பெற்றது.

ஆயிரக்கணக்கான தோழர்கள் (ஆண்களும், பெண்களும்) ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள் வருமாறு:

போராட்டம் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம்
திராவிடர் விவசாயிகளின் போராட்டம்
போராட்டம் போராட்டம்
வஞ்சிக்கப்படும் வஞ்சிக்கப்படும்
விவசாயிகளின் விவசாயிகளின்
போராட்டம், போராட்டம்
தமிழக அரசே, தமிழக அரசே!
வழங்குக வழங்குக!
நஷ்டப்படும் நஷ்டப்படும்
விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு
இழப்பீடு இழப்பீடு
வழங்குக வழங்குக!
ஏக்கருக்கு ஏக்கருக்கு
25 ஆயிரம் ரூபாய்
25 ஆயிரம் ரூபாய்
இழப்பீடு இழப்பீடு
வழங்குக வழங்குக!
தள்ளுபடி செய், தள்ளுபடி செய்!
விவசாயிகளின் கடன்களை
விவசாயிகளின் கடன்களை
தள்ளுபடி செய் தள்ளுபடி செய்!
வழங்குக வழங்குக! சென்றாண்டுக்கான
சென்றாண்டுக்கான பயிர் காப்பீடுத் தொகையினை பயிர் காப்பீடுத் தொகையினை
வழங்குக வழங்குக!
கடைக்கோடி பகுதிகளுக்கு
கடைக்கோடி பகுதிகளுக்கு
நீர்ப்பாசனம் கிடைத்திட
நீர்ப்பாசனம் கிடைத்திட
தூர்வாருக, தூர்வாருக!
கால்நடைக் கிளை நிலையங்களை
கால்நடைக் கிளை நிலையங்களை
கிராமம் தோறும் கிராமம் தோறும்
ஏற்படுத்துக, ஏற்படுத்துக!
கோமாரி நோயால் கோமாரி நோயால்
இறந்து போன இறந்து போன
கால்நடைகளுக்கு கால்நடைகளுக்கு
இழப்பீடு தருக, இழப்பீடு தருக!
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒடுக்கப்பட்ட மக்களின்
உயிர் போன்ற விவசாயத்தை
உயிர் போன்ற விவசாயத்தை
சாகடிக்காதீர், சாகடிக்காதீர்!
பாவப்பட்ட தொழிலா?
பாவப்பட்ட தொழிலா?
ஏழை எளிய மக்களின்
ஏழை எளிய மக்களின்
விவசாயத் தொழில், விவசாயத் தொழில்
பாவப்பட்ட தொழிலா? பாவப்பட்ட தொழிலா?
வேண்டும் வேண்டும்
வேலை வாய்ப்புப் பெற்றிட
வேலை வாய்ப்புப் பெற்றிட
தொழிற் சாலைகள், தொழிற் சாலைகள்
வேண்டும், வேண்டும்.
மாநில அரசே, மத்திய அரசே!
காப்பாற்று, காப்பாற்று
விவசாயிகளை விவசாயிகளை
காப்பாற்று, காப்பாற்று!
போராடுவோம், போராடுவோம்!
வெற்றி கிட்டும் வரை, வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!

மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்தனர். ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, தி.மு.க. மாவட்ட செயலாளர் கலைவாணன், மாநில விவசாய தொழிலாள ரணி செயலாளர் குடவாசல் கா.கணபதி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் இராயபுரம் கோபால் முதலியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட முடிவில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவி யாளர் ரவிச்சந்திரனைச் சந் தித்து கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/72897.html#ixzz2p6PfXaVd

தமிழ் ஓவியா said...


2014-ஆம் ஆண்டு துவக்கத்தில்...! விடுதலை வாசக நேயர்களுக்கு அரிய பகுத்தறிவுப் போட்டி

திராவிடர் கழகமும், அதன் தலைமையும் இந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 10 பணிகள் என்பதை 1,2,3 என்று வரிசைப்படுத்தி வாசக நேயர்கள் ஒரே பக்கம் (டெம்மிசைஸ்) ஒன்றின்பின் ஒன்றாக 10 பணிகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.

அதில் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1,000/- முதல் பரிசாகவும், இரண்டு, மூன்றாம் இடம் பெறுவோர்க்கு ரூ. 500/-, ரூ. 300/- பரிசுகளும் வழங்கப்படும்.

விடுதலை அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2014 ஆகும். அவசரப் பணிகள் 10 என்று உறையில் தலைப்பிட்டு எழுதவும்.

- ஆசிரியர், விடுதலை

Read more: http://viduthalai.in/page-8/72889.html#ixzz2p6PpDCDx

தமிழ் ஓவியா said...


கோவிலாம்!

சமீபத்தில் கோவி லுக்குச் சென்றிருந்தேன். பிரபலமான கோயில் என்பதால் அன்று மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக என் நண்பனைக் கண்டேன். அவன் அவனுடைய காதலி யுடன் வந்தான். நான் அவனிடம் என்னடா சாமி தரிசனம் முடிஞ் சாச்சா... எனக் கேட்க, பதிலுக்கு, தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா.. பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத் தான் பாக்க முடிஞ்சது. பீச்சுக்குப் போனா, போலீஸ் தொல்ல.. அதுதான் இங்கு வந்தோம். இங்க, யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க... எனக் கூறி காதலியுடன், தனியிடம் தேடி நகர்ந்தான்.

அவன் சென்றதும், ஒரு முறை கோயிலைச் சுற்றிப் பார்த்தேன். மெரீனா பீச்சைப் போல, ஆங்காங்கே காதல் ஜோடிகள். இவர்கள் கட வுளைத் தரிசிக்க வரா மல், கோயிலை காதலர் கள் சந்திக்கும் இடமாக பயன்படுத்துவது வருத்த மளிக்கிறது.

இன்றைய வாழ்க் கைச் சூழலில், மனதில் அமைதி இழந்து, நிம் மதியைத் தேடி வரும் ஒரே இடம் கோவில் அங்கே யும் இப்படியென்றால், நிம்மதியை தேடி எங்கே தான் போவது?

- தி. சந்திரசேகர் அம்பத்தூர்

இந்தக் கடிதம் வெளி வந்த இதழ் எது தெரியுமா? அது தான் முக்கியம். சாட் சாத் தினமலர் - வாரமலர் (22.12.2013 பக்கம் 4)

பகுத்தறிவாளர்களையும், திராவிடர் கழகத்துக்காரர் களையும் இல்லாதது - பொல்லாதது எல்லாம் சொல்லி, கேலியும் கிண்ட லும் செய்யும் தினமலர் பார்ப்பன ஏடு தான் தன் னையும் அறியாமல் கோயில் என்பது மெரீனா பீச் மாதிரி காதலர்கள் உறவாடும் இடம் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறது.

நாம் சொன்னால் இவர்களுக்கு இதுதான் வேலை என்று சொல்லும் பக்த சிகாமணிகள் இதற்கு என்ன தான் பதில் சொல் லுவார்கள்?

இந்த இடத்தில் இன் னொரு இதழில் பல ஆண்டு களுக்கு முன் வெளி வந்த ஒரு தகவலையும் கொண்டு வந்து காட்டினால் மீத மிச்சம் இருக்கும் கடவுள் - கோயில் - பக்தியின் வண்ட வாளங்கள் தண்டவாளத் தில் ஏறிடும் வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களி டம் பக்தி இருக்கிறதா இப்போது? புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணா வது? கோவிலுக்கு வர்ற வன் சாமி தரிசனத்துக்கா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனைச்சிக் கிறா!

- இந்த செய்தி எதில் வந்துள்ளது தெரியுமா? சோ ராமசாமி அய்யர் வாளின் துக்ளக்கில் (1.6.1981 பக்கம் 32).

கருப்புச்சட்டைக்காரர்கள் சொன்னால் மூக்கின்மேல் கோபம் புடைக்கும் சங்பரி வார் உட்பட்ட பக்தர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில், சொல்லுவார்களாம்? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72507.html#ixzz2p6RP4iwp

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


ஊழலோ ஊழல்!

செய்தி: ஊழலைப் பற்றிப் பேச காங்கிரசுக் குத் தகுதியில்லை.
- மும்பையில் மோடி பேச்சு

சிந்தனை: ஆமாம் பிஜேபிக்கே ஒட்டு மொத்தமாக சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அபகரிக்க அனு மதிக்கலாமா?

(கருநாடக மாநில பிஜேபி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரெட்டி சகோ தரர்களுக்கு உபயம்!).

ம்ம்ம் தர்மம்

செய்தி: இளைஞர் களிடையே தர்மம் பற்றிய சிந்தனையை வளர்க்க வேண்டும். - ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி

சிந்தனை: அவர் கூறினால் அந்தத் தர்மம் கண்டிப்பாக வர்ணா சிரம தர்மமாகத்தான் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page1/72509.html#ixzz2p6RbEfA4

தமிழ் ஓவியா said...


பெண்களைஇழிவுப்படுத்திசொற்பொழிவு நடத்துவதுநீதிமன்றங்களின்வேலையல்ல! டில்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


புதுடில்லி, டிச.23- வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்குக்குள் நின்று தீர்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர வழக்குக்கு அப்பால் சென்று பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மையிலும் தேவை யில்லாத சொற்பொழிவு களை நீதிமன்றங்களில் நிகழ்த்தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லியில் பாலியல் வன்கொடுமை தொடர் பான ஒரு வழக்கின் தீர்ப்பில், "19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களு டைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடு கின்றனர்' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந் தார்.

விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத் தீர்ப்பை அறிந்த டில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை யின் முடிவில் அந்த நீதி பதியின் கருத்துகளுக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ர ஜோக், வி.கே.ராவ் ஆகி யோர் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.

"வழக்கில் முன் வைக் கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்க ளது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது' என்று நீதிபதி கள் தெரிவித்தனர்.

தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரி வித்த கருத்துகள் பொது வான தன்மையிலானவை.

பெண்களுக்கு எதிரான கருத்துகள்

பெண்களுக்கு எதி ரான கருத்துகளையும், அலட்சியமான விமர் சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள் ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்ராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது.

மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப் பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவ னத்துடனும் கருணை யுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற் பொழிவு போன்ற அறி வுரைகளைத் தரக் கூடாது.

இந்த வழக்கின் தீர்ப் பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், "அப் பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல.

சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்துவிடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், "உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப் படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது' என்று சொல்லக் கூடாது.

அலட்சியமான பார் வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல் நிலையங்களில் பெண்களைத் துன்புறுத் தவே உதவும். மேலும், அலட்சியமான முறை யில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற் றச்சாட்டுகளுக்குப் போது மான, முழுமையான சாட் சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.

காவல்துறையினருக்குப் புது வசதி!

நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழி வகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக் கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர் கள் வாதிடக் கூடும்' என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6Rk8KnG

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ரயிலில் அய்யப்பப் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக் கப்பட்டுள்ளது. மீறி ஏற்றினால் உடனே ரயில்வே காவல் துறையினருக்குத் தெரிவிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6RtRQMh

தமிழ் ஓவியா said...


இராம ராஜ்ஜியமா?


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடி - ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் - அதன் பின்னர்தான் விசுவ ஹிந்து பரிஷத் தன் ஆதரவு பற்றி தெரிவிக்கும் என்று வி.எச்.பி.யின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியிருந்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி மோடி ஏன் பேசவில்லை? என்ற வினாவையும் தொகாடியா எழுப்பியிருந்தார்.

அதன் எதிர்வினையாகத்தான் நரேந்திரமோடி, தன் வாயைத் திறந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப்பிரதேச மக்களின் பங்களிப்பில் ஏற்பட்ட குறைதான் காரணம்; (அம்மாநிலத்திற்கான 80 மக்களவை உறுப்பினர்களைத்தான் மறைமுக மாகச் சுட்டிக் காட்டுகிறார்).

நீங்கள் மட்டும் ஒரு சரியான அரசைத் தேர்வு செய்வீர்களேயானால் அன்றுதான் ராம ராஜ்ஜியம் நடைமுறைக்கு வரும் - என்று மோடி பேசி இருக்கிறார்.

ராமராஜ்ஜியம் பற்றியும், ராமன் கோயில் கட்டுவது குறித்தும் நரேந்திர மோடி வாய்த் திறக்காது இருந்ததுகூட ஒரு வகை அரசியல் தந்திரம்தான். அதை முன் வைத்தால் மக்களின் தீர்ப்பு வேறுவிதமாக இருக்கும் என்று தெரிந்து தான் தந்திரமாக அதனைத் தவிர்த்து வந்திருக் கிறார். அவர் வாய் திறக்கா விட்டாலும், அந்த வட்டாரத்தின் உள்ளக் கிடக்கை என்ன என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். வெளிப்படையாகப் பேசப்பட்டால் எதிர்ப் பிரச்சாரம் சுனாமியாக வீறு கொண்டு எழும் - ஏன் வீண் வம்பு என்று தவிர்த்து வந்தார்.

அயோத்தியில் சங்பரிவார்க் கும்பல், பிஜேபி தலைவர் அத்வானி தலைமையில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில் இதே மோடி என்ன கூறினார்? இந்துக்கள் கோழைகள் அல்ல - ஆண்மை உள்ளவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள் என்று சொன்னவர்தானே இந்த மோடி!

அதே நேரத்தில் மிகப் பெரிய மனிதர் என்று சித்தரிக்கப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது என்ன பேசினார்?

அதுவும் அமெரிக்கா சென்றிருந்தபோது ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டிலேயே பேசினாரே - நினைவிருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ். என்பது என் ஆன்மா; பிரதமர் பதவியைவிட ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல் லிக் கொள்வதில்தான் நான் பெருமைப்படுகிறேன். நமக்குப் பெரும்பான்மை இடம் நாடாளுமன்றத்தில் கிட்டுமேயானால், அயோத்தியில் ராமன் கோயிலைக் கண்டிப்பாகக் கட்டுவோம்! என்று பேசினாரா இல்லையா?

இந்த நேரத்தில் பிஜேபி வட்டாரமாக இருந் தாலும்சரி, சங்பரிவார் வட்டாரமாக இருந்தாலும் சரி - அவர்கள் அறிவு நாணயம் உள்ளவர்களாக இருப்பார்களேயானால் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அவர்கள் மக்கள் முன் வைக்கவிருக்கும் தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம்! என்று குறிப்பிடட்டுமே பார்க்கலாம்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது தாமதத்தைத் தவிர்த்து, வழக்கினை முறையாக, நடத்தியிருக் குமேயானால் பி.ஜே.பி. சங்பரிவார்த் தலைவர்கள் எல்லாம் இந்நேரம் சிறைக்குள் தானிருப்பார்கள்; தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டச் சிக்கலும் ஏற்பட்டிருக்குமே.

செய்ய வேண்டியதைக் காலத்தால் செய்யாத ஓர் ஆட்சியாகத்தான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இந்தப் பிழையை பி.ஜே.பி. தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதும் உண்மை.

தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டு வது குறித்துக் குறிப்பிடாவிட்டாலும், இவர்கள் இந்து ராஜ்ஜியம் கோருபவர்கள் என்ற உண்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டியது மதச் சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page1/72515.html#ixzz2p6S83Ywr

தமிழ் ஓவியா said...


இன்று தந்தை பெரியார் நினைவு நாள்


தந்தை பெரியார் கொள்கைகள் - இலட்சியங்கள் ஓங்கி உலகாள உறுதி எடுப்போம்!

2013 டிசம்பர் 24ஆம் நாளாகிய இன்று அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்த 40ஆம் ஆண்டு ஆகும்!

டிசம்பர் 24 தந்தை பெரியாரின் நினைவு நாள் என்பது நமக்கெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பை பதிவு செய்யும் நாள் தான்; மற்றபடி ஒப்பாரும் மிக் காரும் இல்லாத ஒரே தலை வரான நம் அய்யாவை நினைக் காத நாளோ, மணித் துளியோ ஏது?

அவர்தம் பெருமைகளை - பயன்களைப் பேசா நாட்கள் எல்லாம் நமக்குப் பிறவா நாட்களே!

கடந்த சில நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகம் மூன்றாண் டுகளுக்கு ஒரு முறை நடத்தும் தேசிய மாநாடு மிகச் சிறப்பாக, கடந்த 21,22 ஆகிய தேதிகளில் நடந் தேறியபோது, தற்போதுள்ள மத்தியக் கூட்டரசின் அங்கமான மலேசிய இந்தியக் காங்கிரசின் அமைச் சர்களும், பொறுப்பாளர்களும், தந்தை பெரியார் இல்லாவிட்டால் நாம் இந்நிலைக்கு - மலேசியாவில் - உயர்ந்திருக்க முடியாது; பெரியார் தம் கருத்துக்கள் இன்றும் தேவை; காரணம் அது ஒரு சமூக விஞ்ஞானம்.

விஞ்ஞானத்தை என்றும் ஒதுக்க முடியாது என்பது எப்படி உண்மையோ, அது போன்றதே பெரியார் கொள்கைகள்? என்பதை இரண்டு நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசியதைக் கேட்ட பொழுது பெரிதும் உவந்தோம்! உலகப் பெரியார் அய்யா பெரியார் ; அனைத்து மக்களுக்கும் உரியார். காரணம் அவர் உயர் நெறியார், நரியார்களை விரட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பது; அந்தத் தலைவரின் மண்டை சுரப்பு என்பதை அகிலமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

நேற்று (23.12.2013) மலேசியாவின் முக்கியப் பெரு நகரங்களில் ஒன்றான ஈப்போ நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் கொள்கைப் பிரச்சார சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

பிரபல ரிவர்வியூ ஓட்டல் சிறப்பு மண்டபத்தில், விந்தை யான ஒரு வரலாற்று நிகழ்வு! இதே நாளில் 1929இல் தந்தை பெரியார் ஈப்போ நகரில் (23.12.1929) உரையாற்றியதை, நம் வெளியீடான மலேசியா, சிங்கப்பூரில் பெரியார் என்ற நூலில் இருந்து எடுத்துக் காட் டினேன். அம் மக்கள் வியந்தனர். பெரியார் அவர்கள் வருகை தந்து 84 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்தம் கொள்கைக் குரல் மலேசிய திராவிடர் கழகத்தின் மூலம் இங்கே முழங்குகிறது. பெரியாரின் கொள்கைகள் காலத்தை வென்றவை.

புத்தாக்கத்திற்கான புதிய தேவையும்கூட; அய்யா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகை அக்கொள்கை ஆளுகிறது.

எனவே வரும் ஆண்டுகளில் திருச்சி - சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைய இருக்கும் 95 அடி உயர தந்தை பெரியார் பேருருவச் சிலை 40 அடி பீடம், 135 அடி உயரத்தில் செம்மாந்து நிற்கப் போவது போல அவர்தம் கொள்கைகளும், லட்சியங் களும் சிறப்புடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பது உறுதி. அவை உலகாள வழி வகுப்போம்.

அதற்கான உறுதியைச் சூளுரையாக புதுப்பிப்பது பெரியார் தொண்டர்களின் தலையாய கடமை.

வெல்க பெரியாரியம், வருக பெரியார் உலகம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


முகாம்: பினாங்கு (மலேசியா)
24.12.2013

தமிழ் ஓவியா said...


தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல் லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.

- (குடிஅரசு, 19.2.1944)

தமிழ் ஓவியா said...


காளஹஸ்தி கோயிலில் கோடிக்கணக்கில் ஊழல்

சிறீகாளஹஸ்தி, டிச. 24- காளஹஸ்தி கோயிலில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து அறநிலை யத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பல கோடிக்கு ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநில அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறீகாள ஹஸ்தி கோயிலுக்கு பல்வேறு நிவாரண தோஷங்களுக்காக நாடு முழுவதும் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பக்தர் களின் வருகைக்கேற்ப வருமானமும் அதிகமாக இருப்பதால் இக்கோயி லில் நடைபெறும் ஊழலும் அதிக மாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் வெளி வரத் தொடங்கின.

இங்கு ஊழல் மலிந்துள்ளதாக புகார்கள் வரவே, அறநிலையத்துறை அதிகாரிகள் சுமார் 20பேர் கொண்ட குழுவினர் இக்கோயிலில் அண்மை யில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், ஊழல்கள் தொடர்பான பைல்கள் ஒரு மினி வேனில் அய்தராபாத் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் அந்த பைல் களை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் ஊழல்கள் நடைபெற் றுள்ளது தெரியவந்துள்ளது.

இக்கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.75 கோடியாகும். தோஷத்திற்கான வெள்ளி நாகங்களை அறநிலையத் துறை விற்பனை செய்கிறது. இதற் கான வெள்ளிகள் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. குறைந்த விலைக்கு பொருள்களை வாங்குவ தும், அதிக அளவிற்கு கணக்கு காட் டுவதும், உரிய டெண்டர் விடாமல் பொருட்கள் தரம் குறைந்ததாக வாங்கப்பட்டதும் தெரிய வந்தது.

அதே போல் பக்தர்கள் நிவர்த் திக்காக வழங்கும் வெள்ளி நாகங் களை விற்பனை செய்ததிலும் ஊழல் நடந்துள்ளது. சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவற்றுக்காக பக்தர்களிடம் வசூலிக்கும் தொகைக்கு ரசீது வழங்காமல் முறை கேடு நடைபெற்றுள்ளது. கோயிலில் விற்பனை செய்யும் ஆர்ஜித சேவை டிக்கெட், உண்டியல் காணிக்கை ஆகியவற்றை மொத்தமாக வங்கியில் செலுத்துவதற்காக பல நாள்கள் கைகளில் வைத்திருந்து அதிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான 6 விடுதிகளிலுள்ள 100-க்கும் மேற்பட்ட அறைகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருமானம் வர வேண்டும் ஆனால், அதில் பாதி யளவு கூட கணக்கில் காட்டப்படா மல் முறைகேடு நடந்துள்ளது.

கோயில் வளாகத்திலுள்ள கடை களை குத்தகைக்கு விடுவதிலும் கடைக்காரர்கள், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அறநிலை யத்துறைக்கு மாதத்திற்கு லட்சக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ராகு, கேது பூஜைக்காக போலி டிக்கெட் விற்பனை மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் அளவிற் காக ஊழல் நடந்துள்ளது. 2008-09ஆம் ஆண்டிலிருந்து 2011 12 வரையில் சிவராத்திரியில் மட்டும் அறநிலையத்துறைக்கான வருமானம் ரூ.1 கோடி முதல் ரூ.2.2 கோடியாகும். ஆனால், 2013ஆம் ஆண்டில் மட்டும் ரூ.70லட்சமே கணக்கில் காட்டப் பட்டுள்ளது. சிறப்பு உற்சவங்கள் என்ற பெயரில் அறநிலையத்துறை யின் அனுமதி இல்லாமல் லட்சக் கணக்கில் பணம் செலவிடப்பட்ட தாக வும் கணக்கு காட்டப்பட் டுள்ளது.

இந்த ஊழல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநில அறநிலை யத்துறை ஆணையர் முக்கேஷ்வர ராவ் அரசுக்கு அறிக்கை அளித்துள் ளார். அதில், ஏராளமான அதி காரிகள் மீது துறை ரீதியான நடவடிக் கையும், சில அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/72596.html#ixzz2p6UdpmUu

தமிழ் ஓவியா said...


மூன்றாவதுஅணியா? கலைஞர் பேட்டி

சென்னை, டிச.26- தி.மு.க. தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் சொன்னார் செய்தியாளர்கள் பேட்டியில் (25.12.2013) அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே? கலைஞர் :- அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்க வில்லையே!

செய்தியாளர் :- ஒரு கூட்டத்தில் பேசும் போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமை யில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு.கழகக் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியி ருப்பதால், அப்படிஅமையவாய்ப்பு இருக்கிறதா?
கலைஞர்:- அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

செய்தியாளர் :- காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதைப் போன்றமாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறதே, இது தேர்தலுக்காகச் செய்யப்படும் மாயையா?

கலைஞர் :- தெரியாது.

ஜெயலலிதா கொடநாடு செல்வது
வழக்கமான ஒன்றுதான்!

செய்தியாளர் :- தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நிலவு கின்றன. இந்தப் பிரச்சினைகளை யெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜெயலலிதா கொட நாட்டிற்குச் சென்றுவிட்டாரே?

கலைஞர் :- கொட நாட்டிற்கு அந்த அம்மையார் செல்வது என்பது வழக்கமான ஒன்று.
மீனவர் பிரச்சினை செய்தியாளர் :- நாகப்பட்டி னத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கைராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர் களை வஞ்சிக்கின்ற காரியமாகஇதைக் கருதலாமா?

கலைஞர் :- தி.மு.கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப் பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடை பெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சி களை மேற்கொள்ளும் என்றுநம்பு கிறேன்.

செய்தியாளர் :- அ.தி.மு.க. பல் வேறு பொதுக் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும், இன்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலும் உங்களைப் புறக் கணிக்க வேண்டுமென்றும், தீயசக்தி என்றும் கடுமையாக விமர்சிக் கிறார்களே?

கலைஞர் :- அ.தி.மு.க.வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைக் கடுமையாகத் தாக்கி பஜனை பாடி யிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/page1/72619.html#ixzz2p6VfAm6L

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்கு...
26-12-2013
இன்று தாத்தா பாட்டி தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர்களை மதிப் பதும், அன்பு செலுத்து வதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை! நன்றி உள்ளவர்களாக மனிதாபிமானம் உள்ள வர்களாக இருக்கி றோம் என்பதற்கான அடையாளம். முதியோர் இல்லம் என்பது இளை யோரின் மனிதாபிமான மற்ற நிலையை விளக் கும் நிலையமாகும்.

தமிழ் ஓவியா said...


ஆதி திராவிடர் பள்ளிகளில் வருகைக் குறைவா?



ஆதி திராவிடர்களுக்காக தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பள்ளிகள் சரிவரப் பராமரிக்கப்படாததால் 50 சதவீதமாக வருகை குறைந்து விட்டது என்கிற ஒரு செய்தி அதிர்ச்சியை அளிக்கக் கூடியது.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற சமூக நீதி நோக்கோடு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இப்படியொரு நிலை என்றால் அது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதாகும்.

அதற்கென்று தனித் துறையே இருக்கிறது. அந்தத் துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, இதற்கான காரணத்தை உள்ளபடியே கண்டறிந்து அந்தக் குறைபாடுகளை நீக்கி நூறு சதவீதம் இருபால் மாணவர்களும் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்வி என்பது அடிப்படை உரிமையாகும். அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதுவாக கிராமங்களில் நடைபெறும் தொடக்கப் பள்ளிகளாக இருந்தாலும் சரி உயர்நிலைப்பள்ளிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு நகர்ப்புறப் பள்ளிகளில் உள்ள கட்டடம் மற்றும் கட்டுமான வசதிகள்போல் இருப்பதில்லை.

தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், நகர்ப்புறம் என்றால் பிராமணன், கிராமப்புறம் என்றால் பஞ்சமர், சூத்திரர் என்னும் நவீன வருணா சிரமத் தன்மையுடையது என்பதை அனுபவத்தில் நாம் பார்க்கக் கூடிய நிதர்சனமான உண்மையாகும்.

பொதுவாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகூட அவர்களுக்குப் பயன் படுத்தப்படாமல், மற்ற மற்ற துறைகளுக்குச் செலவழிக்கப்படுகிறது என்ற குற்றச் சாற்றுண்டு.

தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் எப்படியும் நடந்து கொள்ளலாம் - நடத்தலாம் என்ற மனோபாவம் அதிகாரிகளிடமும், ஆட்சியாளர் களிடமும் இருப்பது தான் இவற்றிற்குக் காரணமா?

கிராமப்புறங்களில் இப்படி கல்விக் கூடங்களை வைத்துக் கொண்டு, அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்காமல் தகுதி - திறமை பேசுகிறார்கள் என்றால் அதைவிட சமூக அநீதி வேறு ஒன்று இருக்க முடியுமா?

சம வாய்ப்பும், வசதிகளும் செய்து கொடுக்காமல் தகுதி திறமை பேசுவது மோசடியல்லாமல் வேறு என்ன?

ஆதிதிராவிடர் பள்ளிகள் மட்டுமல்ல; ஆதி திராவிடர் மாணவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள விடுதிகள்கூட அவல நிலையில்தான் சீரழிந்து காணப்படுகின்றன. அந்தக் கட்டடத்தைப் பார்த்தவுடனேயே சொல்லி விடலாம்; இது ஆதி திராவிடர் பள்ளியாக இருக்க வேண்டும் அல்லது ஆதி திராவிடர் விடுதியாக இருக்கவேண்டும் என்று சொல்லி விட முடியுமே.

தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சதவீத அடிப்படையில் இடங்கள் அளித்தால் மட்டும் போதாது, அவர்கள் படிப்பதற்கான சூழலை, அடிப்படை வசதிகளைச் செய்து தருவதும் மிக முக்கியமானதாகும்.

சமச்சீர்க்கல்வி எவ்வளவு அவசியமோ, சமச்சீரான வசதிகளும் மிகவும் அவசியமாகும். சீருடை மட்டும்போதாது - எல்லோருக்கும் ஒரே சீராகக் கல்வி கற்பிக்கப்படுவதற்கான சீர்மிகு வசதிகளும் அவசியம்; இதற்கு முன்னுரிமை கொடுத்து அரசு செயல்படட்டும்!

Read more: http://viduthalai.in/page1/72621.html#ixzz2p6Wifr47

தமிழ் ஓவியா said...


ஜாதகம்


கேள்வி: பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு பெண் பார்க்கச் செல்வது நல்லதா? பெண்ணை முதலில் பார்த்து விட்டு ஜாதகம் பார்ப்பது நல்லதா?

பதில்: தயவு செய்து ஜாதகப் பேச்சை எடுக்கா தீர்கள். இந்த ஜாதகம் என்ற காகிதம் எத்தனைப் பெண்களை இன்னும் கன்னியாகவே வைத் திருக்கிறது என்பதை அறிவீர்களா? ஓரம் கட் டுங்கள் ஜாதகத்தை. பொருத்தம் மனதில் இருக்கிறதா பாருங்கள். ஜாம் ஜாமென மேளம் கொட்ட ஏற்பாடு செய் யுங்கள்.

இப்படி ஒரு கேள்வி பதில் உண்மை இதழில் வெளி வந்தால் அது இயல்பு. ஆனால் தினமலர் வார மலரில் (22.12.2013 பக்கம் 10) வெளி வந்திருக்கிறது என்று படிக்கும் பொழுது, நமது பகுத்தறிவுப் பிரச் சாரம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று பெருமைப்படலாம்.

பிறந்த நேரத்தை மய்யப்படுத்தி - அந்த நேரத்தில் கிரகங்களின் நிலையை வைத்து ஜாத கத்தைக் கணிக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் தான் அருமை யாக ஒரு வினாவை எழுப்பினார்.

பிறந்த காலம் என்பது கருப்பைக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அப்படிப்பிறக்கும் காலத் தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல் லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழா மல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி, நிலத்தில் பட்டு கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண் டிருக்கும் காலமா? அல் லது கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவார் (குடிஅரசு 6.7.1930) இக்கேள்விகளுக்கு எந்தப் பிரசித்தி பெற்ற சோதிடராலும் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தை கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த தென்றால் அதற்கு ஜாத கம் கணிக்கிறார்களே - அதை நினைத்தால் வயிறு வெடித்து விடும் அளவுக்குச் சிரிப்புதான்!

410 ஒளியாண்டுத் தொலைவில் அந்த நட் சத்திரம் சுற்றிக் கொண்டி ருக்கும் சுய ஒளி கொண் டது. சூரியனைப் போல 1200 மடங்கு ஒளியுடை யது. அதிலிருந்து புறப் பட்ட ஒளி பூமிக்கு வர வேண்டும் என்றால் 410 ஆண்டுகள் ஆகுமாம்.

இந்த நிலையில் கிருத் திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பூமி யில் ஜாதகம் கணிப்பதை என்ன சொல்ல!

இந்த ஜாதகப் பொருத்தக் கோளாறுகளினால் திருமணம் ஆகாத பெண்கள் எத் தனை எத்தனைப் பேர்! இதனைத்தான் தினமலரும் ஒப்புக் கொள்கிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72674.html#ixzz2p6oKu8aG

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!

(விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


பணம் - காமம் - இவைகளும் இரட்டையர்களே!

பணமும் - காமமும் இரட்டைப் பிள்ளைகள்!

என்ன வித்தியாசமான ஒப்புவமை யாக உள்ளதே என்று வியக்கின் றீர்களா?

சற்று ஆழ்ந்து, அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள்; அதன் உண்மை அப்போது உங்களுக்குப் புரியும்! இரண்டும் மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகள்தான்.
ஒன்றும் மற்றொன்றும் ஒட்டிப் பிறப்பவைதான் என்றாலும் காமம் இருக்கிறதே, அது பணத்தோடு மட்டும் வருவதில்லை; பணம் இல்லாத ஏழைகளிடையே கூட இலவசமாக விலையில்லாப் பொருள்களாக, தங் களுக்குரிய கவலைகள் தீர்க்கும் மருந்தாக, பலருக்கும் பயன்படுவ தாகும்.

பணம் பல நேரங்களில் சரியில்லாத பார்வையோடுதான் இருக்கும்!

காமமும்கூட கண்ணற்று, சிந்தனை யற்று நடந்து கொள்ளவே தூண்டும்!

பணமும், குணமும் ஒரு சில இடங்களில், ஒரு சில மனிதர்களிடமே சிறப்பாக இயங்கும்.
அதுபோலவே காமமும் அளவான, முறையான வாழ்க்கை இன்பத்திற்கு அடித்தளமாக ஒரு வரைமுறைக்குள்ளே இயங்கி, வாழ்வை வளர்க்கும்; எனவே தான் திருவள்ளுவர் காமத்துப்பால் என்ற ஒரு பகுதியை - முப்பால் நூலில் - திருக்குறளில் - அறத்துப்பால், பொருட் பால், அடுத்து காமத்துப் பால் என்று வைத்துள்ளார்!

காமம் என்பது உடல் இன்பம், என்பது மட்டுமல்ல; மன மகிழ்ச்சியினால் பீறிட்டுக் கிளம்பும் இன்பத்திற்கும் காரணமாகும். காமம் என்ற சொல் லாட்சியை உடல் இன்பம் என்ற குறுகிய பொருளில் அடங்காது, உள மகிழ்ச்சி - உள்ளத்தின் ஏற்றம் என்ற வகையிலும் விரிவான பொருள் தந்து, பயன் படுத்தி மக்களுக்குக் காட்டியுள்ளார் - திருவள்ளுவர்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று அறவழிச் சிந்தனைகளை எழுதிய புலவர்கள், அதனை விரிந்த பொருளில் தானே பயன்படுத்தியுள்ளனர்! இல்லையா?

கற்றவரைக் காமுறுதல் என்றால் அது உடல் இன்பத்தையா குறிக்கும்? அல்ல அல்ல; மாறாக மிகுந்த விருப்பத் துடன் கருத்துரையாடி மகிழ்வர்; இவர்தம் நட்பு காலத்தால் கிடைத்தற்கரிய செல்வம் என்று கருதுவர்.

பணம் சம்பாதிப்பதில் இன்பம் கொள்பவரின் ஒரு குறிப்பிட்ட நிலைக்குச் செல்லும்போது, அவர்கள் வரைமுறை - அறநிலைதானா இது? என்று ஆராய்ச் சியா செய்கின்றனர்?
பணம் சம்பாதித்து விட்டால் பிறகு எல்லாம் தானே வந்து விடும் - பதவி - பட்டம் - புகழ் இவையனைத்தும் என்று தானே எண்ணுகின்றனர்?

பணம் சேர்க்கும் ஆசை பல நேரங் களில் வெறியாக மாறி விடுகிறதோ - எல்லையைத் தாண்டுகிறோமோ என்றா நினைக்கின்றனர்? இல்லையே!

அதுபோலவே காமத்திற்குக் கண் இல்லை என்ற பழமொழியைப்போல பண வெறியும் காமவெறிபோல - பற்பல நேரங்களில் கண்மண் தெரியாமல் - ஏன் வரன்முறைகூடப் பார்க்காமல் நடந்து கொள்ளச் செய்கிறதே!

அளவோடு இருக்கும்போது, அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவோடு நிற்கையில், இரண்டும் (பணமும், காமமும்) வாழ்க்கையில் மிக நன்றாகப் பயன்படுகிறது.

இயற்கையின் தேவையை நிறைவேற் றிடும் கருவிகளாக அவை அமைந்து, வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றுகின்றன.

ஆனால், இவ்விரண்டும் எல்லை தாண்டி முறைகளைப் பற்றிக் கவலைப் படாத மனக் குரங்குகள் மரத்திற்கு மரம் தாவும்போது, மிருக மனமாகவும் மனிதர்களாக, மாறி, மனிதத்தை இழந்து - மரியாதையைத் துறந்து வாழும் அவலத்திற்கு ஆளாக்கப்படு கிறார்களே!

இரட்டையர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை; - நீரும் நெருப் புமாக - எதிரும் புதிருமாகவும்கூட இருப்பார்கள்.

அது இந்த விசித்திர இரட்டைக் குழந்தைகளின் இயல்பு ஆகும்!

பணத்திற்காக - வருவாய்க்காக - தான் முறையாகப் பெற்று வாழும் இருபாலரும், உடல் இன்பத்தை விலை கொடுத்து வாங்குவதும், இயந்திரமாகி - தந்திரங்களைச் செய்து பணத்தைக் கறப்பதும் இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று அறைகூவல் விடுவது போன்றதல்லவா?

துவக்கத்தில் தேவையாகி, பின் அவைகளே சுமையாகி, இன்பந் தந்தவை, மக்களை துன்பக் கடலில் தள்ளி விடுகின்றனவே!

எனவே, கண்டிப்புடன் குழந்தை களைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க விரும்பும் பெற்றோர்களைப் போல - இவ்விரண்டையும் (பணம், காமம்) மனிதர்கள் கையாண்டால், வாழ்வு சிறக்கும் வளர்ச்சி பளிச்சுறும்; வானம் வசப்படும்!
veramani

Read more: http://viduthalai.in/page1/72693.html#ixzz2p6olRBk1

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவருக்கு விஞ்ஞானி ஆ. சிவதாணுப்பிள்ளை நன்றிக் கடிதம்


பெருமதிப்பிற்குரிய அய்யா,

ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் (டீசனநச டிக குசநைனேளாயீ) விருதை பெற்ற மைக்கான தங்களின் வாழ்த்துச்செய்தி கிடைக்கப் பெற்றது. தமிழினத்தலைவராகிய தங்களிடமிருந்து இத்தகைய வாழ்த்துச் செய்தி கண்டு மிகப்பெருமையடைகிறேன். தமிழுக்காகவும், தமிழின மேன்மைக்காகவும் பாடுபடும் தங்களிடம் இத்தனை ஆண்டுகளான என்னுடைய நட்புறவை நான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன்.

இந்த விருது இந்திய - ரஷ்ய கூட்டமைப்பான ப்ரம் மோஸ், டி.ஆர்.டி.ஓ. என்.பி.ஓ.எம் ஆகிய நிறுவனங்களில் பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பாலும், இருநாட்டின் அரசாங்கத்தின் ஆதர வாலும் மேலும் தங்களைப் போன்ற நலம் விரும்புவோர்களின் நல்லாசிகளின் மூலமும் 60 ஆண்டுகால இந்திய - ரஷ்ய நட்புறவை, ப்ரம்மோஸ் நிறுவனத்தின் மூலம் மென்மேலும் வலிமை பெறு முடிந்தது.

தங்களுடைய பல வேலைகளுக்கு இடையில், சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய இந்த வாழ்த்து, மேலும் சாதிக்கத் தேவையான மனத்திட்பத்தையும் உறுதியையும் தருகிறது.
வாழ்க தமிழ், வளர்க திராவிடர் இனம்.

நன்றியுடன்
ஆ.சிவதாணுப்பிள்ளை

Read more: http://viduthalai.in/page1/72694.html#ixzz2p6p6HQg2

தமிழ் ஓவியா said...


மதுரை வீரா! காத்தவராயா!!


ஜாதி உணர்வு நம் நாட்டில் செய்திருக்கிற கொடுமைகளுக்கு, உயிர்ப்பலிகளுக்கு அளவே இல்லை. அதில் இன்னும் என்ன வேடிக்கை என்றால், ஜாதி வெறிக்குப் பலியான வீரர்களை இன்றைக்கும் நாம் குலதெய்வமாக ஆடு வெட்டி, கோழி வெட்டிப் படைத்துக் கொண்டி ருக்கிறோமே தவிர, அந்த மனித உயிர்ப்பலி களால் நாம் பெற வேண்டிய பாடத்தைப் பெறத் தவறிவிட்டோம்.

அந்த வீரர்கள் பலியிடுவதற்கு - கழுமரம் ஏறுவதற்கு காரணமாக இருந்த ஜாதி உணர் வைப் பழிவாங்காமல் அந்த வீரர்களை ஜாதிக் கடவுளாக்கி வழிபாடு செய்து வருகிறோம். அந்த வீரர்களைக் கடவுளாக்கிய நோக்கமே ஒருக்கால் அந்த உணர்வு நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தாலேயே இருக்கும்.

காத்தான் என்ற ஆதித் திராவிடன் அப்பாப் பட்டர் மகள் ஆரியமாலாவைக் காதலித்தான். ஆரிய மாலாவும் அவனைக் காதலித்தாள். காத்தான் ஆரியமாலாவைச் சிறை எடுத்தான். (தாலி கட்டிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்)

ஜாதி கெட்டுப் போனதென்றும், ஆசாரங் குலைந்ததென்றும் ஆறாயிரம் வேதியர்கள், ஆரியப்பூ ராஜனிடம் முறையிட்டார்கள். அரசன் காத்தானைப் பிடித்து இழுத்து வந்து கழுவேற்றிக் கொன்றான். வீரன் என்ற சக்கிலியர் குலத்திலே பிறந் தவன் மதுரை மன்னன் மகள் வெள்ளையம் மாளையும், பொம்மியம்மாளையும் நேசித்தான்.

அரசிளங் குமாரிகளும் காவல்காரனான வீரனை உயிராகக் காதலித்தார்கள்.

வீரன் இருவரையும் சிறை எடுத்துச் சென்றான்.

காலையில் செய்தி தெரிந்தது. நாடே கிடுகிடுத்தது. ஆட்கள் பறந்தனர்.

வீரனைக் கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்தனர். ஆம்! வீரன் துடிக்கத் துடிக்க மாறுகை மாறுகால் வாங்கப்பட்டான்.

கழுவேற்றிக் கொல்லப்பட்ட காத்தான் காத்தவராயன் சாமியாகி, மாறுகை, மாறுகால் வாங்கப்பட்ட வீரன் மதுரை வீரனாகி, அவர்கள் ஜாதியினரால் இன்றைக்கும் குலதெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறார்கள்.

காத்தவராயன் சரித்திரமும் மதுரை வீரன் சரித்திரமும் இன்றைக்கும் சேரிகளிலே பாட்டாய்ப் படிக்கப்படுகிறது.

அந்தோ! அந்தப் பாட்டுக்குள் இருக்கும் கருவை உணர்ந்து அவர்கள் விழிப்புறும் நாள் எந்நாளோ!

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6pyqntV

தமிழ் ஓவியா said...

ஜாதி

புதிய தமிழகத்தின் முதல் சீர்திருத்தம் ஜாதி ஒழிப்பே! அந்தணர், வீரர், வைசியர், தொண்டர் என்ற பாகுபாடு கூட எனக்கு உடன்பாடில்லை.

இப்படிப் பிரித்தே வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர், பிறகு வருணபேதம் ஏற்படுத்தி, அது ஜாதியாகி, நாலு ஜாதி நாலாயிரம் ஜாதியாகி, நமது நாட்டையே வாழ வொட்டாமல் அடித்தது. ஜாதி என்ற மொழியே நமது அகராதியில் தேவை இல்லை.

- சுத்தானந்த பாரதியார்

Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6qCyzLp

தமிழ் ஓவியா said...


29ஆண்டுகளுக்கு முன்....


இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பு இந்தநாடு எப்படி இருந்தது. ஜாதி வெறியின் தாண்டவம் எப்படி எப்படி எல்லாம் கொடூரமாக இருந்தது என்பது இன்றைய இளைஞர்களுக்கு அதிகம் தெரியாது. சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகத்தின் தன்மையை உணர்ந்தமாத்திரத்தில்தான் அறியமுடியும். இதோ ஒரு எடுத்துக் காட்டு: 29.12.1947 அன்று விடுதலையில் வெளியான ஆசிரியர் கடிதம்.

மருத்துவத் தோழருக்கு சுயமரியாதை

அய்யா, நான் நேற்று மாலை இவ்வூரில் காப்பி கிளப் வைத்திருக்கும் அய்யர் ஒருவர் கடையில் காப்பி சாப்பிடச் சென்றிருந்தேன். நான் மருத்துவ வகுப்பினைச் சேர்ந்தவன்.

நான் அக்கடையில் பலகாரம் வாங்கி டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, மரியாதைக்காக நின்று கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் பார்ப்பனர் ஒருவர் என்ன நீ டேபிள் மேலேயே உட்கார்ந்து கொண்டாற் போலிருக்கிறதே! நீ தரையில் அல்லவா உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு நான் மற்றவர் மேஜைமேல் சாப்பிடும் போது நான் மட்டும் தானா சாப்பிடக்கூடாது? என்று கேட்டேன். அதற்குள் தமிழர் ஒருவர் மரியாதை இல்லாமல் இப்படி நீ சாப்பிடுவதால், மற்றவர்களுக்குச் கூச்சமாய் இருக்காதா? என்று கேட்டார். உடனே நான், மற்றவர்களுக்காக நான் சாப்பிடவில்லை, மரியாதைக்காகத் தான் நின்று கொண்டு சாப்பிட்டேன்.

இல்லாவிட்டால் உட்கார்ந்து சாப்பிட எனக்குத் தெரியும் என்று கூறி மேஜை மேல் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தேன். திராவிடர் கழகம் நன்றாக வேலை செய்கிற இந்த ஊரிலேயே இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்றால் மற்ற ஊர்த் தோழர்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் நடக்கும்?

கே.டி.பெரியசாமி, லால்குடி - 29.12.1947

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qJpRz8

தமிழ் ஓவியா said...

கண்ணன் எங்கே போனான்?

திரவுபதையின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண் டாடுகிறோம். கவிகள் அவனைப் பற்றி காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவதாரம் என்கிறார்கள்.

ஆனால், அந்தக் காலத் தில் ஒரு திரவுபதையின் மானத்தைக் காப்பாற்ற ஓடி வந்த கண்ணன், இன்றைய தினம், உடுக்க ஒரு முழக்கந்தலுமின்றித் தவிக்கின்ற லட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குருடாகிவிட்டது என்று எனக்குக் தோன்றுகிறது?

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qQLijm

தமிழ் ஓவியா said...


தனி மனித தத்துவம் கூடாது...



வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே, கூடாது.
(பகுத்தறிவு, 1.11.1938)

Read more: http://viduthalai.in/page-2/72920.html#ixzz2p9d9QxQG

தமிழ் ஓவியா said...

பழையன கழிதலும்...
2013 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. பழையன கழியட்டும்! 2014 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. புதியன பூத்து மலரட்டும்! பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, புரட்டுகளை எழுதிக் குவிக்கும் அஞ்ஞானமும் ஒருபுறத்தில் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள வாசகக் கருத்துகள் மிக முக்கியமானவை.

மனிதநேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி, வாழ வைக்கும் புதுஉலகப் புத்தாண்டாக அமையட்டும்! என்பவை மிகமிகச் சிறப்புக்கும், வரவேற்புக்கும் உரியவை.

இந்தச் சொற்களில் அடங்கியுள்ள மகரந்தங்கள் புதிய ஒப்புரவுச் சமனிய சமுதாயத்தை மலர்விக்கும் என்பதில் அய்யமில்லை.

பெற்றோர்களைப் பராமரிக்காவிட்டால், அவர்களுக்குத் தண்டனை என்று ஓர் அருமையான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது - வரவேற்கத்தக்கதேயானாலும், இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட நேர்ந்தமைக்கு, எல்லோரும் வெட்கப்படவேண்டாமா?

கைநிறைய சம்பாதிக்கிறோம் என்ற அகந்தையில் அதற்குக் காரணமான தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றனரே - எங்கே போயிற்று மனிதநேயம்?

சமத்துவம், சம வாய்ப்பு என்று தமிழர் தலைவர் கூறியுள்ளதில் சமதர்ம மணம் கமழ்கிறது, இன்னும் மாத வருவாய் ரூ.20 ஈட்டக்கூடியவர்கள் நாட்டில் 70 விழுக்காடு என்றால், வெட்கப்படவேண்டாமா?

நாடு சுதந்திரம் அடைந்தால் தேனாறும், பாலாறும் கரைபுரண்டு ஓடும் என்றார்களே - அதற்கான மறுப்புதான் மேற்கண்ட சென்குப்தா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரம்.


இந்தியாவில் விவசாயம் என்பது மிக முக்கியமான உயிர்நாடித் தொழில். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் ஆண்களும், பெண்களுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வயிற்றுக்குச் சோறு போட்டு உயிரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அந்தத் தொழில் பாவப்பட்ட தொழிலாகத்தானே கருதப்படுகிறது - ஆக்கப்படுகிறது.

இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து,கடனிலே சாகிறான் என்ற வாசகங்களை இன்னும் எவ்வளவுக் காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் விவசாயிகள் வளமையாக வாழ்கிறார்கள் எனும் நிலை, நிலை நிறுத்தப்பட்ட நாள்தான் இந்தியா பொருளாதாரத்தில் - சமத்துவத்தில் புன்னகை பூக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.


இந்தியாவின் பெருங்குடி மக்களான விவசாயிகள் வறுமைக்கோட்டுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். ஆக முடியும்; உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியும் என்று கனவுகூடக் காண முடியாதே!

மாநில, மத்திய அரசுகள் வருணாசிரமக் கண் ணோட்டத்தில் பாவப்பட்ட தொழிலாக நசுங்கிப்போன வேளாண் மக்களின் வாழ்வுக்கு வளமைகூட்ட அனைத்து முயற்சிகளையும் முனைந்து, மும்முரமாக செய்யட்டும்! செய்யட்டும்!!

சமவாய்ப்புப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உரிய சதவிகிதத்தில் கிடைக்கப் பெறவில்லை.

மண்டல் குழு பரிந்துரைக்காக, திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியுள்ளது. வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் இன்னும் எட்டு சதவிகிதத்தைக் கூடத் தாண்டவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு, இன்னும் சட்ட வலிமை அளிக்கப்படவில்லை.

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது வெறும் ஏட்டுச் சர்க்கரையாகவே இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இந்திய அளவில் பெரும் விழிப்புணர்ச்சி ஊட்டப்படவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.

அனைத்துத்துறைகளிலும் விதிவிலக்கின்றி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்; குறிப்பாக உடனடியாக நமது கவனம் - தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் செய்வதே!

இந்தியாவில் ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 44.6 சதவிகிதம் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 3.5 சதவிகிதம்.

சம வாய்ப்புத் தேவை என்று தமிழர் தலைவர் கூறியிருப்பதன் பொருள் இதன்மூலம் வெளிப்படும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது 2014 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் உள்ளதாக அமையும்.
பகுத்தறிவுச் சிந்தனை பெருகவேண்டும் என்றும் கூறியுள்ளார்; மனி

தன் என்பதற்கே அடையாளம் பகுத்தறிவுச் சிந்தனைதானே! மதவாத சக்திகளை மக்கள் மனதிலிருந்து வேரோடு கெல்லி எறிந்திடவும் வேண்டும்.

நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது தொடர்புண்டா? வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்சாகத்தானே நம் கல்வி உள்ளது.

இந்த நிலையில் பெரியாரியலை உலக மயமாக்கும் பணி - பெரியார் உலகம் பணியை முன்னெடுப்போம்!

வருக புத்தாண்டே, வளமுடன்!

Read more: http://viduthalai.in/page-2/72921.html#ixzz2p9dMwQ4t

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சி


தொலைக்காட்சி என் றாலே, அறிவியல் மனப் பான்மை - பகுத்தறிவு மனப் பான்மை உள்ளவர்களுக்கு ஒரு குமட்டல் உண்டு.

விஞ்ஞான சாதனம் ஒன்றில் அஞ்ஞானத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டி யாக ஆக்கிவிட்டார்களே என்ற சமுதாயக் கவலை அவர்களுக்குண்டு.

விஞ்ஞான சாதனத்தில், அஞ்ஞானத்தைப் பரப்புவது அறிவு நாணயம்தானா? என்ற வினாவையும் எழுப்பி வருகிறோம்.

பெரும்பாலான மனித நேரத்தை இந்தத் தொலைக் காட்சி என்னும் கரையான் தின்று அழிக்கின்றதே என்ற ஆதங்கம் கண்டிப்பாக உண்டு.

குறிப்பாக சிறுவர்களைச் சீரழித்துக் கொண்டிருக் கிறது. சக்திமான் என்ற ஒரு நபர் ஆபத்துக் காலத்தில் வந்து உதவுவான் என்கிற முறையில் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகிக் கொண் டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, பார்த்துக் கொண்டிருந்த திருவாரூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், வீட்டு மாடியிலி ருந்து சக்தி மான் என்று குரல் கொடுத்துக் கீழே குதித்தவன் பரிதாபகரமாக மரணமடைந்தான்.

அமரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் போர்டு பல்கலைக் கழக மருத்துவர் டான் ராபின்சன் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக் காட்சிகள் முடிவு செய்கின் றன என்றார். எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பத்து வருடங்களுக்குள் இரண்டு இலட்சங்களுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளைக் காண்பதாக ஆய்வுகள் கூறு கின்றன.

அந்த ஆய்வாளர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள் ளார். இரு பள்ளிக்கூடங் களைத் தேர்வு செய்தார்; முதல் பிரிவில் 105 மாண வர்கள், மாணவிகள்; இவர் கள் தொலைக்காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார் கள். இன்னொரு பிரிவில் 120 இருபால் மாணவர்கள்; இவர் கள் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படவில்லை; இதற்காக, ஆறு மாதம் ஒதுக்கப்பட்ட பின் ஆய்வுகள் செய்யப்பட்டன.

தொலைக்காட்சி பக்கம் தலை வைக்காத இருபால் மாணவர்களிடம் இயல்பான போக்குகளும், நாகரிகமான நடவடிக்கைகளும் இருந்த தைக் காண முடிந்தது. எப் பொழுதும் தொலைக்காட்சி யைப் பார்த்தவர்களோ, கேலி செய்வது, தகாத சொற் களைப் பயன்படுத்துவது, வன்முறை என்ற நிலையில் இருந்தனர் என்பதை பெற் றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மூட நம்பிக்கையை எடுத் துக்கொண்டால், இராமாய ணம், மகாபாரதங்களை ஒளி பரப்பும் வேலை சரியானது தானா?

இன்று கலைஞர் தொலைக் காட்சியில் மக்களைப் பெரிதும் மயக்குவது மூட நம்பிக்கைகளா? திரைப் படங்களா? என்ற அருமை யான பட்டிமன்றம் நடை பெற்றது.

இதற்காகக் கலைஞர் தொலைக்காட்சியைப் பாராட் டுகிறோம். இந்த நிலை தொடரட்டும்! மற்ற மற்ற தொலைக்காட்சிகளும் இத னைப் பின்பற்றுமா? தொலைக்காட்சிகளுக்கு ஒரு நினைவூட்டல்! ஒரு சித்திரம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை உணர்ந்து கொண் டால், அவர்களின் பொறுப்பு கத்தி முனையில் நடப்பது என்பதை உணர முடியும்.

2014 புத்தாண்டிலாவது புதிய சிந்தனைகள் பூக் கட்டுமே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72917.html#ixzz2p9dUmzAP

தமிழ் ஓவியா said...


நாம் மனிதர்களை மாற்றுபவர்கள்! மூளைக்குள் நுழைந்து பணி செய்பவர்கள்!!


மலேசிய திராவிடர் கழக மாநாட்டில் தமிழர் தலைவரின் சிறப்புரை தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. அருகில் மலேசிய இந்திய காங்கிரசின் தேசிய உதவித் தலைவர் டத்தோ சி.பாலகிருஷ்ணன், மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம், துணைத் தலைவர் காந்தராஜ், பொதுச் செயலாளர் மு.சு.மணியம், தோழர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். (மலேசியா - 21.12.2013)

கோலாலம்பூர், டிச.28- நமது பணியின் களம் மனித மூளை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் சார்பில் 67 ஆவது மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு 21.12.2013 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராகத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று, ஆற்றிய சிறப்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு இம்மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து பல வரலாற் றுச் சாதனைகளை நிகழ்த்தி வரும் மலேசியத் திராவிடர் கழகத்திற்கு தமிழகத் திராவிடர் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் கருத்துகளை எடுத்துரைத்து, மனிதர்களை மனிதர்களாக்கி, அவர்களை மாமனிதர்களாகவும் ஆக்குவதே திராவிடர் கழகத்தின் பணி. மற்றவை எல்லாம் பிரிக்கும், நம் அமைப்பு ஒன்றுதான் இணைக்கும். உங்களைச் சந்திப்பதிலே எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. உங்களைப் பார்த்து நாங்களும், எங்களைப் பார்த்து நீங்களும் புத்துயிர் பெற்று வளர்வோம்.

உலகெங்கும் பெரியார்

மலேசியா மட்டுமின்றி, பர்மாவில் சுயமரியாதை இயக்கம், அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, சிங்கப்பூரில் பெரியார் சேவை மன்றம், துபாயில் மனிதநேய அமைப்பு, கானாவில் பெரியார் ஆப்பிரிக்கப் பவுண்டேசன் என நம் இயக்கம் உலகளாவிய அளவில் விரிந்து வருகிறது. தனிப்பட்ட மனிதர்களுக்காக இந்த அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. மாறாக உலகில் எந்த மனிதரும், இன்னொரு மனிதருக்குக் கீழானவர் அல்ல என்பதை வலியுறுத்தவே தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை அடி வாங்கினாலும் எழுந்து நிற்கும் பந்து போல, இந்த இயக்கமும் உலகில் வளர்ந்து செழிக்கும். நாம் அரசியல்வாதிகள் அல்ல; சமூக மாற்றத்திற்கான மனிதநேய அமைப்பில் பணி செய்பவர்கள். அவர்களுக்குத் தேர்தல் குறித்தும், நமக்குத் தலைமுறைகள் குறித்தும் கவலைகள் உள்ளன. மலேசியாவில் பெரியார் எனப் பகுத்துப் பார்த்தால் இந்நாட்டின் வரலாற்றை நாம் அறியலாம். கல்வியற்று, உரிமைகளற்று, தோட்டத் தொழிலாளர்களாக, வெறும் கூலி மக்களாகவே தமிழர்கள் நிலை இருந்தது. மலேசியாவிற்குப் பெரியார் 1929 இல் வந்து, ஒவ்வொரு தோட்டத்திற்கும் சென்று, கருத்துகளை விதைத்தார். அந்த விதை நாளடைவில் பகுத்தறிவு மரமாக வளர்ந்தது. பெரியார் வருகை தந்த பலன் என்ற தலைப்பில் தமிழ்முரசு பத்திரிகை ஆசிரியர் திருநாவுக்கரசர் ஒரு நூலே எழுதினார். மலேசிய மக்களின் மூடநம்பிக்கை களுக்குப் பெரியாரின் கருத்து மருந்தாக இருந்தது. அதுமட்டுமின்றி, தமிழர்கள் மலேசியக் குடியுரிமைப் பெறவும் இந்த இயக்கம்தான் காரணம். சீனர்களுக்கு நிக ராக வரவேண்டும் எனப் பெரியார் நம்பிக் கையை வளர்த்தார். அதன் விளைவாய் முத்தன் மகன் முனியனும், குப்பன் மகன் சுப்பனும் மலேசியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரந்து விரிந்தார்கள். விஞ்ஞானிகள் நாம்

அரசியலில் உள்ளவர்கள் இன்னது செய்தோம் எனக் கூறி தங்களை அளவிட்டுக் கொள்வார்கள். திராவிடர் கழகத்திற்கு என்ன அளவுகோல்? நமக்கு நம் தரம்தான் அளவுகோல். உண்மைகளைக் கண்டு பிடித்துச் சொல்பவர்கள் நாம். இங்கு எண்ணிக்கைப் பொருட்டல்ல. தரம் முக்கியம். சமூக விஞ்ஞானத்தை எடுத்துச் சொல்கிற நாம் ஒவ்வொருவரும் ஒரு விஞ்ஞானி. பாலம் கட்டியதையும், சாலை அமைத்ததையும் அவர்கள் கணக்கில் வைப்பார்கள். ஆனால் நாம் மனிதர்களை மாற்றுபவர்கள். இதைச் செய்வது அவ்வளவு சுலபமல்ல. மற்றப் போராட்டங்கள் போல் கைகளிலும், கால்களிலும் நடப்பவை அல்ல இது, மூளையில் நடக்கும் போராட் டம். அதை உடைத்தெறியும் ஈரோட்டுச் சம்மட்டியை நாம்தான் வைத்திருக்கிறோம். இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறிக்க வேறு யாரும் வரமாட்டார்கள். நாம்தான் தொடர்ந்து போராட வேண்டும்.

மானம் பொது வாழ்வில் தேவையில்லை

எனவே மூடநம்பிக்கை இருட்டில் யாரையும் இருக்க விடாதீர்கள். வெளிச்சத் திற்கு அழைத்து வாருங்கள். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். இயக்கத்திற்குச் சோதனைகள் வரும். அதைச் சாதனைகளாக மாற்றுங்கள். மானம் பாராது தொண்டு செய் யுங்கள்.

மானம், தனி வாழ்வில் பாருங்கள்; பொது வாழ்வில் வேண்டாம். நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். மனிதத்துவமும், சமத் துவமும் கொண்ட சமூகத்தை நாம் உருவாக் குவோம். உங்களுக்கு என் வாழ்த்துகள் எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

Read more: http://viduthalai.in/page1/72739.html#ixzz2pCPmzlct

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் இரட்டை வேடம் : கிழிக்கிறார் கபில்சிபல்


வேவு பார்ப்பு விவகா ரத்தில் பாஜக இரட்டை நாக்குடன் இருவேறு விதமாக பேசி வருகிறது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரிக்க முதல்வர் நரேந்திர மோடி, நானாவதி ஆணையத்தை நியமித்தார். அந்த ஆணை யம் 4 மாதங்களில் விசா ரணை அறிக்கையை தாக் கல் செய்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 11 ஆண்டு கள் ஆகிவிட்டன. இன் னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகா ரம் தொடர்பாகவும் முதல்வர் மோடி விசா ரணை ஆணையம் நியமித்துள்ளார். இந்த ஆணையமும் நானா வதி ஆணையம் போல் தான் செயல்படும்.

பெண் பொறியா ளர் வேவு பார்க்கப் பட்டதில் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம், டெலிகிராப் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப் பட்டுள்ளன. ஒரு இளம்பெண்ணின் தனிப்பட்ட உரிமை யும் பாதிக்கப்பட்டி ருக்கிறது.

இதன் காரண மாகத் தான் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையம் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட் லியின் தொலைப்பேசி உரையாடல் விவரங்கள் வெளியான விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.

மேலும் இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது தொலைப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.

மாறி மாறி பேசும் பா.ஜ.க.

அருண் ஜேட்லியின் தொலைப்பேசி உரை யாடல் விவரம் வெளி யானபோது, அதுதொடர் பாக விசாரணை ஆணை யம் அமைக்க வேண்டும் என்று பாஜக தலை வர்கள் குரல் எழுப்பினர். அதேநேரம் இளம் பெண் வேவு பார்ப்பு விவகாரம், இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங்கின் தொலைப் பேசி உரையாடல் ஒட் டுக் கேட்பு ஆகியவை குறித்து ஆணையம் அமைக்க பாஜக தலை வர்கள் எதிர்ப்பு தெரி விக்கின்றனர்.
இது, மாறி மாறி பேசும் அந்தக் கட்சியின் இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது. ஒரு மாநில முதல்வர் மக்களின் அந்தரங் கத்தை எட்டிப் பார்ப் பதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது என்று கபில் சிபல் கூறி யுள்ளார். -பி.டி.அய்.

Read more: http://viduthalai.in/page1/72740.html#ixzz2pCQ5KkzS

தமிழ் ஓவியா said...


விண்வெளித் துறை எட்டாத துறையா?


1975 ஆம் ஆண்டு முதற் கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு (i s r o) மற்றும் விண்வெளித் துறையும் நாடுமுழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது, ஆராய்ச்சி அல்லாத முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முதல் தர நேரடிப் பணிகளுக்கான இட ஒதுக்கீடு ஆணைகள் பின்பற்றப்படுவதில்லை. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டில்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விண்வெளித் துறைக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதன் அடிப் படையில் 23-06-1975 தேதியிட்ட நிர்வாக சீர்திருத்த துறையின் O.M.No.9.02.1973ESST (SCT) தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக் கீட்டாணையை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தேசிய தாழ்த்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும், ஆனால் டில்லியில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு கீழ்ப்படியாமல் விண்வெளித் துறை புறக் கணிக்கிறது, இந்த அறிக்கை அனுப்பி 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், டில்லி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையின் படி விண்வெளித் துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த இந்த விவரத்தை அகில இந்திய அளவில் விளம்பரம் கொடுத்து தாழ்த்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டினை அமல் செய்ய ஆவன செய்யவேண்டும் என்ற குரல் எழுந் துள்ளது. திராவிடர் கழகம் தொடர்ந்து விதி விலக்கின்றி அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. விதி விலக்கு என்று குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கி வைத்தால், நாளடைவில் விதி விலக்குப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கைதான் விரிவடைந்து போகும்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதில் குறிப்பிட்ட உயர் ஜாதி வட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் இடம் பெற முடியும்என்ற நிலை இருப்பது நியாயமாகாது; தகுதி, திறமை என்ற தந்திர வலையை உருவாக்கி, குறிப்பிட்ட உயர் ஜாதி யினர் மட்டுமே ஏக போகக் குத்தகை தாரர்களாக இருந்து வருவதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் அனுமதிக்க முடியும்?

மின்னஞ்சலைக் (E-Mail) கண்டுபிடித்த சிவ. அய்யாதுரை என்பவர் திருவில்லிப்புத்தூரை யடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

ஆனாலும் இந்தியப் பார்ப்பன ஊடகத்தார் அவரின் அருஞ் சாதனையை மூடி போட்டு மறைத்து விட்டனரே!

மும்பையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பார்ப்பன ஆங்கில இதழின் ஆசிரியர் தன்னைப் பற்றி சொன்னதை சென்னை நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை எடுத்துக் கூறிக் குமுறினாரே!

பார்ப்பனர் அல்லாத சிவ அய்யாதுரை எப்படி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்க முடியும் என்று கூறினாராம். இதுதான் இன்றைக்கும் இருக்கும் பார்ப்பன மனப்பான்மை.
தகுதி திறமை எல்லோருக்கும் பொது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் நிருபித்து வருகிறார்கள். எனவே விண்வெளித்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீடு தேவை - இத்திசையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.

Read more: http://viduthalai.in/page1/72745.html#ixzz2pCQsvU88

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்


திருப்பதி சென்று திரும்பிய பக்தர்கள் இருவர் சாவு

சென்னை, டிச.28-திருத்தணி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் குழந்தை உள்பட இருவர் இறந்தனர். நால்வர் படுகாய மடைந்தனர்.

சென்னை கீழ்கட்டளை அருள் முருகன் நகர் திருப்பரங்குன்றம் தெருவைச் சேர்ந்தவர் ராமாச்சாரி. இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர்களது மகன் பாலாஜி (46). இவரது மனைவி நாகமணி (34). இவர்களுக்கு விக்னேஷ் (16), நந்த குமார் (1) என்ற மகன்கள் இருந்தனர்.

கடந்த 25ஆம் தேதி குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டனர். காரை, பாலாஜி ஓட்டி வந்தார். திருத்தணி அருகே கார் வந்துகொண்டு இருந் தது. அப்போது ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு பாமாயில் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம், கார் மோதியது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விக் னேஷ், நந்தகுமார் ஆகியோர் பரி தாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்த திருத்தணி ஆய்வாளர் சிகாமணி, எஸ்அய் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந் தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப் பினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது.

திருத்தணி காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்டம், அரூர், அக்ரஹாரம் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (36) கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/page1/72750.html#ixzz2pCRXfLfh

தமிழ் ஓவியா said...

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு

இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவேண்டு மென்று எண் ணினேனோ, அதை மறக்கச் செய்தது. அவர் களுக்கு என்னிடமும், எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன் மையும், அளவுக்கு மீறி என்னைப் புகழச்செய்தது. அப்புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல, ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும் இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.

இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இட மில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும், இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவதைக் கண்டு, மிக தைரியங்கொண்டு, அந்த ஆசையின்மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டி ருக்கிறேன். குடிஅரசைப்பற்றி மிக அதிக மாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்ற மெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின, வல்லினம் போன்ற பல இலக் கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக் கணம் கற்கப்போவதில்லை. இவ்வாண்டு விழாவுக்கு எனக்குக் கடிதம் அனுப்பா விட் டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமே யாகும். சிறந்த கல்வியாளர்களும், பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லா வாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங் களுடன் போட்டியிட்டு தங்கள் சுய மரியாதையை நிலைநிறுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டு மென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளு கிறேன்.

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை

சுயமரியாதை இயக்க மென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால், இப்பொழுதோவெனில், இவ்வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடிய தாயும், மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற் போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம் நாடு, வெளிநாடு தேசியவாதிகளும்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுயமரியாதை யைப்பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத்திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்சகாலமாய் நமது நாட்டில் நடந்துவரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல்கூட சுயமரியாதைக் காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.

இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள் கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லை யென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்தவில்லை யென் பதையும் உங்களுக்கு நினைப்பூட்டு கின்றேன். ஆனால் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்றனர். இது அக்கூட்டத்தாரின் யோசனையின்மை யாலும், பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படு கிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர் களுக்கும் பயனுண்டு.

பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தி வைக்கப் பட்டிருக்கின் றோமோ, அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படு கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர் களுக்கு நன்மையாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல், பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக, கடைசியாக இவ்வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால், அரசாங்கத் தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத்திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில், நாம் எவ்வளவு தூரம் சுயமரியாதையற்றிருக்கின் றோமோ, அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்குங் கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்து விடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத் துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப் படையானது. இதைப்பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது என்பதுபோல், மனிதனும் மானமிழந்து வாழ விரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மை யோடிசைந்த வாழ்க்கை நடத்தவேண்டு மென்றால் சுயமரியாதைதான் வேண்டற்பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூடவேண்டியிருப்ப தால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக் கிராசனப் பதவியை அளித்த அன்பர் களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1927

Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCSFNtjY

தமிழ் ஓவியா said...


இருக்கின்றபல்கலைக்கழகங்களைஊக்கப்படுத்தாமல் புதியபல்கலைக்கழகங்களைதொடங்குவதா?

மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி- குழப்பங்களை நீக்க
பிரதமர் மன்மோகன்சிங், திருமதி. சோனியா காந்தி தலையிடவேண்டும்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இருக்கின்ற பல்கலைக் கழகங்களை ஊக்கப்படுத்தாமல், புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பா? மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி, குழப்பங்களை நீக்க பிரதமர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அவசர - அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) ஆட்சியில் மிகவும் குளறுபடிகளுக்கு ஆளான ஒரு துறை இருக்கிறது என்றால் அது, மனித வள மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்படும் மத்தியக் கல்வித் துறையாகும். (மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் கல்வித் திட்டங்கள் செயற்பாடுகள் அதற்குச் சற்றும் சளைத்ததல்ல. அது ஒருபுறம் இருக்கட்டும்).

மிகப் பெரிய தவறு

கல்வித்துறையை கபில்சிபல் அவர்களிடம் கொடுத்ததைவிட மிகப் பெரிய தவறு வேறு இல்லை. மக்கள் தொடர்போ, சமூகநீதிக் கொள்கை பற்றிய புரிந்துணர்வோ அறவே இல்லாத மேல்தட்டு வர்க்கத்தவர் அவர்.

அவர் சில கல்வியாளர்கள் என்பவர்களிடம் பல விஷயங்களை விட்டு, அவர்களது விருப்பு வெறுப்புக்கேற்ப தத்தம் இஷ்டத்திற்கு உயர் கல்வித் துறை தொடங்கி, பல வகையிலும் பிரச்சினைகளை உருவாக்கும் நிலவரங்களையும், குழப்பங்களையுமே உருவாக்கி விட்டனர்!

அவருக்கு அடுத்து வந்த திரு. பல்லம்ராஜூ அவர்கள் மேல்தட்டு அறிஞர். அவரது தெலங் கானா பிரிவினை பிரச்சினை காரணமாக அவர் கல்வி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி கோப்புகளைப் பார்த்து, அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறாரா இல்லையா என்பதே நாட்டு மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

மத்தியப் பட்டியலில் ஒன்றான பொதுப் பட்டியல் (Concurrent List) என்பதில் 1976இல் நெருக்கடி காலத்தில் கல்வியை இணைத்ததின் விளைவு, *(மாநிலப் பட்டியலிலிருந்து எடுத்து அதில் இணைப்பு).

குழப்பங்களும், குளறுபடிகளும்!

பல்வேறு குழப்பங்களும், முரண்பாடுகளும், குளறுபடிகளும் மத்திய கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி தலைவலியை மக்களுக் கும், ஆட்சியாளருக்கும் ஏற்படுத்தவே செய் துள்ளன!

எடுத்துக்காட்டாக, உயர்கல்வி என்பது சீனாவில் 20 விழுக்காடு என்றால், நம் நாட்டில் 6 முதல் 8 விழுக்காடுதான் என்ற பரிதாப நிலை!

ஒருபுறத்தில் பல்கலைக் கழகங்கள் புதிதாக 1500 உருவாக வேண்டும் நம் நாட்டில் என்று அறிவுசார் கமிஷன் (Knowledge Commission)பரிந்துரை,

1500-க்கு மேல் தேவை என்று 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் மதிப்பீடு - பரிந்துரை,
ஆனால், தேவையற்று வெளிநாட்டில் போணி யாகாத சில பல்கலைக் கழகங்களை இங்கே நுழைப்பது என்ற தன்னிச்சையாக முடிவு செய்து மத்திய மனித வளத்துறை அமைச்சர், வேண்டு மென்றே இங்கே துவக்கப்பட்ட நிகர் நிலைப் பல்கலை கழகங்கள்மீது வீண்பழி தூற்றி, வழக்கு மன்றம் வரை சென்று கடந்த 4 ஆண்டுகளாக அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட் டுள்ள வேதனையான நிலையில் இவ்வாண்டு மேலும் 269 புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்க அறிவிப்பு!

இதில் உள்ள சுய முரண்பாட்டைக் கவனிக்க வேண்டும்; இருப்பதை - வளருவதை ஊக்கப்படுத் தாமல் மூடி, புதியதைத் துவக்குவார்களாம்! என்னே விசித்திரம்!

கண்டனத்திற்குரியது

இந்த நிலையில் பல்கலைக் கழகங்களோ, கல்லூரிகளோ வெளிநாட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எது செய்தாலும் மத்திய கல்வித் துறையின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதாக 2010 புதிய மசோதாவில் இணைத்து, புதியதாக அறிவிப்புகள் வந்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியதாகும்.

பல்கலைக் கழகங்களின் சங்கத் தலைவர் ஏ.ஐ.கூ வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களும், கல்வி யாளர்களும் இதனைக் கண்டித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்கள். (செய்தி கீழே காண்க)

தான்தோன்றித்தன முடிவை திரும்பப் பெற...

அவர்தம் கருத்து மத்திய கல்வித்துறைக்கு காலத்தால் தரப்பட்ட சரியான அறிவிப்பு ஆகும். கல்வியாளர்கள் எவரையும் கலந்து ஆலோசிக் காமல், தான் தோன்றித்தனமாக எடுத்த முடிவு இது. இது தவறானதாகும். திரும்பப் பெற காரணங்கள் வருமாறு:

1. 2010 விதிகள் பற்றிய வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.

2. சில பேர் தடையாணையும் வாங்கியுள் ளனர்.

3. பல்கலைக் கழகங்கள் என்றால் அவை தன்னாட்சி (Autonomous) உரிமை படைத் தவை. அதில் தேவையற்ற அரசியல் தலை யீடுகளோ, குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது.


தமிழ் ஓவியா said...

தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட உரிமையும், அதிகாரமும் உண்டு.

சமூக முன்னேற்றத்திற்கு உதவி

எனவே தேவையில்லாத அடுத்த தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலை யில், இருப்பவைகளை மாற்றி குழப்பங்களை கோலோச்ச செய்யும் முடிவுகளை கைவிட்டு, இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை வளர்ச்சி யடைய வழி காட்டினால் அது சமூக முன்னேற்றத் திற்கு மத்திய அரசு உதவியதாகும்!

அவசர அவசியம்!

எனவே, மத்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் இதில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, குளறுபடிகளைத் தவிர்ப்பது அவசரம் - அவசியம்.



கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72810.html#ixzz2pCTL8kQX

தமிழ் ஓவியா said...


தமிழ் பிரபாகரனை கைது செய்ததற்கு தமிழர் தலைவர் கண்டனம்



ஜூனியர் விகடன் வார ஏட்டின் செய்தியாளர் திரு. தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு அங்கே அவர் ஏதோ நிழற்படம் எடுத்தார் என்ற சாக்கைக் காட்டி கைது செய்து நடவடிக்கை எடுக்க முனைந்ததை, நாம், வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதுபற்றி நமது நாடாளுமன்ற உறுப்பினர், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி, ஜனநாயக உரிமைப்படி பத்திரிகையாளர் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டு அவரை விடுவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ஏற்கெனவே அங்கே பல பத்திரிகையாளர்கள் காணாமற் போனதாக தகவல்கள் உண்டு. அவர்கள் சிங்களவர்கள் ஆன போதிலும்கூட!

பிரபாகரன் என்ற பெயரேகூட அந்த ஆட்சியினருக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கக் கூடும்!

உடனடியாக இதற்குரியவைகளைச் செய்து அவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருப்பது நமது மத்திய அரசின் முதற் கடமையாகவே கருதுகிறோம்!

பத்திரிகையாளருக்கு, தூதுவரைப் போல சில தனி உரிமைகளும் உண்டு அவர்கள் கடமையாற்றும்போது என்பது விளக்கப்பட வேண்டியதில்லையே!


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

29.12.2013

Read more: http://viduthalai.in/page1/72811.html#ixzz2pCTtSs6p

தமிழ் ஓவியா said...


எது ஹிந்து மதம்?



கேள்வி: ஹிந்து மதத்தின் பலம் என்ன? பலவீனம் என்ன?

பதில்: பெரும் கூட் டத்தைச் சேர்ந்து அதன் மூலம் மதத்தின் பலத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வழி வகைகளைக் கூற வேண் டும் என்ற நினைப்பில் அமைந்துள்ளது ஹிந்து மதம். ஒவ்வொரு மனித னும் உயர்ந்தால் சமூகம் தானாக உயரும். அது ஹிந்து மதத்தின் வலு. ஆனால் இப்படிச் செய் தால் எந்தவொரு அமைப்போ, எந்தவொரு தலைமையோ இல்லாமல் பல்வேறு உபதேசங்கள் பல்வேறு ஸந்நியாசிகள், பல்வேறு போதகர்கள் எல்லாம் தங்கள் அமைப் புகளை உருவாக்கிக் கொள்ள ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. அது அதனுடைய பலவீனம். அதாவது எது பலமோ அது பலவீனமாகவும் திகழ்கிறது. -(துக்ளக் 1.1.2014 பக்கம் 25)

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்? பலத்தைப் பல வீனமாகவும் பலவீனத் தைப் பலமாகவும் கருது கிறதா ஹிந்துமதம்? அவர் கருத்துப்படியே இதன் மூலம் உணரப் படுவது என்ன?

ஹிந்து மதத்தின் அடிப்படையே தவறானது என்று ஆகி விட்டதா இல்லையா?

தவறு என்று தெரிந்த பிறகும், அதனைத் திருத் துவது தானே? ஏன் அதற்கான முயற்சியில் பார்ப்பனர்கள் - சங்க ராச்சாரியார்கள் ஈடுபட வில்லையாம்? பதில் சொல்லுவாரா திருவாளர் சோ?

அப்படி கை வைத்தால் வைக்கப்பட்ட கை துண் டாகி விடும் என்பதால் தானே?

ஆதி அந்தமில்லா. ஆண்டவன் படைத்த மதமாயிற்றே - அதில் கை வைக்க முடியுமா?

சரி, கடவுளால் கற்பிக் கப்பட்ட வழி என்பதை ஒரு வாதத்துக்காகவே ஒப்புக் கொள்வோம். அப் படி பகவானால் உற்பத்தி செய்யப்பட்ட மதம், பலத் தைப் பலவீனமாகவும், பலவீனத்தைப் பலமாக வும் எப்படி இருக்க முடி யும்? அப்படியானால் ஹிந்து மதத்தைப் படைத்த பக வானையே குறை கூறு கிறாரா திருவாளர் சோ?

உண்மை என்னவென் றால் ஹிந்து மதம் என்ற பெயரில் யார் எதை வேண்டுமானாலும் கூற லாம், உளறலாம். நாத்தி கனும் ஹிந்துவாக இருக் கலாம்; ஆத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம் என்றால் இதற்குப் பெயர் என்ன? கட்டுக்கோப்பும், கருத்துத் தெளிவும் இல்லாத, தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்ற புறம்போக்கு மதம் தான் ஹிந்து மதம் என்று விளங்கிடவில்லையா? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/72822.html#ixzz2pCVTS6VA

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை தோழர்களே, கவனம்! கவனம்!!

கழகத் தோழர்களே! நமது நெஞ்சங்களில் ஒவ்வொரு நொடியும் உசுப்பி விட்டு இருப்பது பெரியார் உலகம்! பெரியார் உலகம்!! பெரியார் பேருருவச் சிலை! பெரியார் பேருருவச் சிலையே!!

முதற்கட்டமாக தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2013) தஞ்சையில் நமது இலக்கை விஞ்சியும் தங்கத்திற்கான நிதியைத் தந்து மகிழ்ந்தோம்.

அந்த இலக்கு என்பது குறைந்தபட்சமே தவிர - அதுதான் முடிந்த இலக்கு அல்ல! தேவைக்கான அய்ந்து விழுக்காடே அது!

பல மாவட்டங்கள் இலக்கை விஞ்சி இலச்சினை பதித்து விட்டன. சில மாவட்டங்கள் இன்னும் கணக்கையே தொடங்க வில்லை; வேறு சில மாவட்டங்கள் பாதிக் கிணறு தாண்டி யுள்ளன.

வெளி நாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நமது தலைவர் ஜனவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்ப உள்ளார்கள்.

அதற்குள் அவசர அவசரமாக, கச்சையை இறுக்கிக் கட்டி, கடமையைச் சக்கரமாக்கிச் சுழன்று சுழன்று; மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதைச் செயலில் காட்டும் வகையில் கட்சிகளைக் கடந்து, தமிழ்ப் பெருமக்களை அணுகிப் பெரும் பொருள் திரட்டி, தந்தை பெரியார் தம் பெரும் பணிக்கு ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு மூச்சுப் பிடியுங்கள் - நீங்கள் எதிர்ப் பார்ப்பதைவிட தந்தை பெரியார் அவர்களுக்காக அளப்பரிய அன்புடனும், ஆர்வத்துடனும் நிதியினை அளித்திடக் காத்திருக் கிறார்கள், அஞ்சல் துறை ஊழியரைப் போல அதனை பெற்றுக் கொள்வதுதான் நமது வேலை.

வெளிநாடு சென்று பிரச்சாரப் பணி ஆற்றி வருகை தரவிருக் கின்ற நமது தலைவரை வெறுங்கையோடு சந்திப்பதைவிட, 135 அடி உயரத்தில் (பீடத்தோடு) செம்மாந்து நிற்கவிருக்கும் சகாப்தத் தலைவருக்குச் சிலை எழுப்பும் - பெரியார் உலகம் படைக்கும் - பெரும் பணிக்கான நிதியோடு வருவீர்களேயானால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்! தலைவருக்கும் எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

எண்ணிப் பார்ப்போம் - இலக்கை முடித்து இறும்பூ தெய்துவோம்!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
பெரியார் உலகம் நிதி ஒருங்கிணைப்பாளர்

சென்னை
30.12.2013

Read more: http://viduthalai.in/page1/72839.html#ixzz2pCVu9wJ3

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/72838.html#ixzz2pCW5uqAL

தமிழ் ஓவியா said...

இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்


டெஸ்மாண்ட் டுடு

நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இன அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் சக வாழ்வு நிலைமையை மாற்றி அமைப்பதற்கான போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே, வெளிப்படையாகவே அந்தந்த நாட்டின் செல்வாக்கும் சக்தியும் மிக்கவர்களை நாடிப்போக வேண்டியதாயிற்று என்று கூறினார்.

டுடு, இன வேற்றுமை பாராட்டும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கர்களுடன் ஜாதி வெறுப்புகளுக்கு எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டு வைத்துக்கொள்வது இயற்கைதான் என்று குறிப்பிட்டார்.

நாம் எல்லோரும் ஜாதி வேற்றுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் மற்றொரு பாதியினருக்கு நாம் ஏன் இந்தக் கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும், அது எல்லாம் எல்லோருக்கும் என்று எண்ணம் கொண்டு இருந்தால் உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.

ஆர்ச்பிஷப், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றி இந்தியச் சமுதாயம் சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம், அது மனிதத் தன்மையைப் பாதிப்பதுதான் என்றும் கூறினார்.

நன்றி: தி இந்து 8.11.13

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எம்மதமும் சம்மதம் இல்லை


நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே... ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?- புகழேந்தி, கள்ளக்குறிச்சி

என்னைப் போன்ற உண்மையான பகுத்தறி வாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!

அமாவாசை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை? - பாஸ்கரன், திருப்பூர்

எனக்குனு ஒரு சமூகப் பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும். உதாரணத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லைனு நான் சொல்லமுடியுமா? உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்குங்க சார்னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக் கிட்டதாலதான் நான் அரசியலுக்கு வரலை!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? - சங்கர் குமார், நாசரேத்

நண்பா சங்கர்... அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்க வேண்டிய மூணாவது மொழி எது?னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால் சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!

நன்றி: ஆனந்த விகடன், 18.12.2013

தமிழ் ஓவியா said...

கருத்து


அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாகக் கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது. ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.



- பி. சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி



திருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால் சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல்துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. எங்களுக்குக் குடும்பம் என்ற ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்.

- அனுசியா சிறீ, திருநங்கை

மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம். சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக் கொள்கிறோம்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...

காலத்தை வீணடிக்கும் இந்து மதம்


நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 33x24=792 மணி

ஆக, மொத்தம் 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

இந்து மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை உடை. சாதனை படை. காலம் பொன் போன்றது,

-கடமை கண் போன்றது.

வேர்ல்டு தமிழ் எம்பசி,
வழி: கோபால் கிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

சட்டம் கடமையைச் செய்யட்டும்


உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற _- மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே.கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.



இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.

இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்தவருக்கு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டியது _- நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.

டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.

வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட _ துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால்கூட -_ சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!

நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.

இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

தனது பேத்தி வயதுள்ள _- பயிற்சி வழக்குரைஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருவதைக் கேட்கும்போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!

இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.

16.12.2013 அன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்துள்ளார்!

மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது பாயாமல் அவர் ராஜநடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்!

நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.

வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதிகளின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?

அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப்பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!

இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?

நாட்டில் மனுதர்ம ஆட்சியா பச்சையாக நடைபெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவடிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடத்தியுள்ளனர்.

ஆங்காங்கே தொடர் பிரச்சாரம் நடைபெறும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?


தி இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள்.

ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே மக்களிடம் கற்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது. ஜோதிடம் மதம் சார்ந்தது; மதச் சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் ஜோதிடத்தைப் பாடமாக _ பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .

எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஜோதிடக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். பித்தலாட்ட ஜோதிடம், கல்வி அன்று. ஜோதிடம் அறிவியல் அன்று.

ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர். பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது, ஜோதிடம் எப்படி உண்மையாகும்? பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் என்று குறிக்கின்றனர்; பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர்.

ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். எல்லாப் பொருத்தங்களும் உள்ளது என்று சொல்லித் திருமணம் செய்கின்றனர். சில நாட்களில் சண்டை வந்து மணவிலக்குக் கேட்கின்றனர். சிலர் எந்தப் பொருத்தமும், ஜோதிடமும் பார்க்காமல் திருமணம் செய்கின்றனர். பல்லாண்டுகள் சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்களிடம் கொடுத்து ஜாதக பலன்களைத் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. மூன்றும் மூன்று மாதிரியாகவே இருக்கும்.

நாளிதழ்களில் வரும் ராசி பலனைப் படித்துப் பாருங்கள். ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதானே வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா?

சுனாமி வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே! ஜோதிடர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்வார்கள்.

கண்ணன் என்ற ஜோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுள்ளார். அவர் ஜாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே. இப்படித்தான் பல சாமியார்கள் ஜோதிடம் சொல்லி பித்தலாட்டம் செய்து வருகின்றனர். ஜோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தியாக வருகின்றது.

ஜோதிட பட்டயப் படிப்பு வேறு படித்துவிட்டால் நாட்டில் பித்தலாட்ட ஜோதிடர்கள் பெருகி விடுவார்கள். நாட்டில் தொல்லை இன்னும் அதிகமாகி விடும் பணத்தாசை காரணமாக.

பல்கலைக்கழகத்தினர் பித்தலாட்ட ஜோதிடத்தைப் பாடமாக கற்பிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்டுப் பாருங்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது:

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.

- இரா.இரவி, மதுரை

தமிழ் ஓவியா said...

மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது.... உலகின் முதல் செயற்கை இதயம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம் டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.

உயிரிப் பொருள்களுடன் மாட்டின் திசுக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால் உடல் ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரத்தம் உறைந்து கட்டியாவதையும் தடுக்கும் சிறப்பம்சத்துடன்கூடிய செயற்கை இதயம் 5 ஆண்டுகள் இயங்கும் செயல்திறன் கொண்டது.

ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை (250 கிராம் முதல் 300 கிராம்)யுடன் ஒப்பிடும்போது செயற்கை இதயம் மூன்று மடங்கு அதிகமாகும் (ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறைவு). இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


கோபம் வராதது - ஏன்?

செய்தி: மக்களவைத் தேர்தலில் பிஜேபியோடு மதிமுக நிபந்தனையில்லாக் கூட்டணி - ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும். - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

சிந்தனை: ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே மீது ஏற்படும் நியாயமான கோபம், சிறுபான்மை மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த நரேந்திர மோடியின் மீதும் ஏற்படாதது - ஏன்? தம்பிகளே பார்த்து ஓட்டுங்கப்பா!

Read more: http://viduthalai.in/e-paper/72989.html#ixzz2pFU029I8

தமிழ் ஓவியா said...


பெருமை



மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/72990.html#ixzz2pFUrnz5O