Search This Blog

31.1.14

காந்தியார் எதற்காகப் பலியானார்? அவரைக் கொன்றொழித்த கூட்டம் எது?


கோட்சே உயிருடன் இல்லை - கோட்சேயிசம்
உயிருடன்தான் இருக்கிறது! அதுதான் இந்துத்துவா!

சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவரின் படப்பிடிப்பு


சென்னை, ஜன.31- கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கோட்சேயின் தத்துவமான இந்துத்துவா இன்றும் இருக்கிறது - எச்சரிக்கையாக இருந்து முறியடிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னைப் பெரியார் திடலில் மாணவர் இந்தியா எனும் அமைப்பில் நேற்று (30.1.2014) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் வரைந்த கருத்தோவியம் வருமாறு:

1. காந்தியார் சுடப்பட்டது ஏன்?

காந்தியார் சுடப்பட்டது ஏன்? என்பதுபற்றி தந்தை பெரியார் தனது நாட்குறிப்பிலே குறித்து வைத்திருந்தார். அது இதோ:

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947 இல்; காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல். காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது அவர் நம் நாடு மத சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கிய மானது.

(ராமராஜ்ஜியம் அமைக்கப் போகிறேன் என்று சொன்னபோது காந்தியாரை மகான் ஆக்கினார்கள். நான் சொன்ன ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்று சொன்னபோது, அவரை துர் ஆத்மா ஆக்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை).

2. காந்தியாருக்குப் பார்ப்பனர்கள்மீது ஏன் கோபம்?

சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) இருந்தார். பொது வாழ்க்கையில் மிகவும் தூய்மையானவர்; பக்த சிரோன்மணிதான்; மாதம் தவறாமல் திருவண்ணாமலை ரமண ரிஷியைத் தரிசிப்பவர்தான். அவரிடம் சமூக நீதிப் பார்வை இருந்தது. முழுக்க முழுக்கப் பார்ப்பனர்கள் - கல்வி, உத்தியோகங் களைத் தாங்களே அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதனால் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம்; விளைவு காந்தி யாரிடம் காவடி எடுத்தார்கள். ஓமந்தூர் ராமசாமி தாடி யில்லாத ராமசாமி நாயக்கர் என்று புகார் சொன்னார்கள்; எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர் அல்லா தாருக்குத்தான் கொடுக்கிறார். பார்ப்பனர்கள் வஞ் சிக்கப்படுகிறார்கள் என்று குற்றப்பத்திரிகை படித் தார்கள். காந்தியார் அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

அதற்குப்பின் முதலமைச்சர் ஓமந்தூரார் காந்தி யாரைச் சந்தித்து உண்மை விவரங்களைக் கூறினார். பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்குமேல் எத்தனைப் பங்கு அனுபவிக்கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். காந்தியாருக்கு உண்மை நிலவரம் புரிந்துவிட்டது.

அதற்குப்பின் தங்களைச் சந்திக்க வந்த பார்ப் பனர்களிடம் சொன்னார், உங்கள் பங்குக்குமேல் அதிகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்

பார்ப்பனர்களைப் பார்த்து, பிராமணர் களுக்குத் தர்மம் வேதம் ஓதுவதுதானே? உங்களுக்கு ஏன் பிணம் அறுக்கும் டாக்டர் வேலை? உங்களுக்கு ஏன் டி ஸ்கொயர்? போய் உங்கள் வருணத் தொழிலைச் செய்யுங்கள் என்று காந்தி யார் கூறியதுதான் தாமதம், பார்ப்பனர் கள் ஒரு புள்ளி வைத்துவிட்டனர் அப்பொழுதே!

சரி இனிமேல் காந்தி நமக்குச் சரி வரமாட்டார். அவர் செல்வாக்குப் பார்ப் பனர்களுக்கு இனிப் பயன்படப் போவ தில்லை என்று தீர்க்கமாக முடிவு செய்து, காந்தியாரை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டிவிட்டனர்.

3. வானொலியில் என்ன பேசினார் பெரியார்?

உலக மக்கள் எல்லோராலுமே போற்றப்படும் பெரியார் காந்தியார் முடிவெய்திய சேதியானது எல்லா மக்களுக்குமே துக்கத்தைக் கொடுக்கக் கூடிய சேதியாகும். இவரது முடிவு இந்த நாட்டுக்கு பரிகரிக்க முடியாத நஷ்டம் என்பதோடு, இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் மறைய நேரிட்டது எந்த விதத்திலும் சகிக்க முடியாத சம்பவம். அவர் உலகத்தில் உயிர் வாழும் பிரபலஸ்தரான மாபெரும் பெரியார்கள் வரிசையில் ஒரு பெரியாராய் இருந்தார். அவரைப் போல் பொதுத் தொண்டையே தனது வாழ்நாள் தொண்டாகக் கொண்ட வர்களையும், தனக்கென எதுவுமே இன்றி ஒரு லட்சியத்திற்கே வாழ்ந்து வந்தவர் களையும் காண்பது மிகவும் அரிதான காரியமாகும். தென் ஆப்பிரிக்காவில் அவர் பெற்ற வெற்றியே இந்திய மக்களின் மதிப்பையும், பின்பற்றுதலையும் அவருக்கு வலியக் கிடைக்கச் செய்தது.

கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரே லட்சியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பதும், அதில் ஏற்படும் எப் படிப்பட்ட கஷ்ட நஷ்டங்களையும், வெற்றி தோல்விகளையும் லட்சியம் செய்யாமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், எப்படி நினைப்பார்கள் என்பதைப்பற்றியும் கவலை இல்லாமல் தொண்டாற்றுவது என்பதும் எல்லோராலும் ஆகும் காரியம் அல்ல. 

இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்தக் கோரமான முடிவு ஏற்பட்டது. இந்த நாட்டின் மதிப்பைக் கெடுக்கக்கூடியதும், இயற்கைக்கு விரோதமானதுமான வாய்ப்பு என்பதில் சிறிதும் அய்யமில்லை. அதிலும் காந்தியார் யாருக்காக, எந்த மக்களுக்காக உயிர் வாழ்ந்தாரோ, அல்லும் பகலும் இடையின்றி பாடுபட் டாரோ, அவர்களாலேயே இந்த முடிவு ஏற்பட்டதென்றால், இது வெகுவெகு வெறுக்கத்தக்க காரியம். இவ்விழிதர மான காரியத்துக்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை.

பொதுவாகவே இந்நாட்டில் பொது ஒழுக்கம்  மோசமான தன்மை அடைந்து விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு நாகரிக நாட்டில் இப்படிப்பட்டவருக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்படுவதென்பது சிறிதும் ஏற்க முடியாத காரியமாகும்.

எனவே, இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப்பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பேராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும் கருத்து வேற்றுமைக்காக கலவரங்களும், கேடுகளும், நாசங்களும் மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லாமல் அறிவுடைமையோடும் வாழுபவர்களாக மக்கள் நடந்து கொள் வார்களேயானால் அதுவே பரிதாபகர மானதும், வெறுக்கத்தக்கதுமான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும். திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப் பட்ட நிலையிலும் அமைதியுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டு மென்பது எனது விண்ணப்பம்.

(நெருக்கடியும், பதற்றமும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியார் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொண்டுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும்).

காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று பரப்பிவிட்டார்கள். இதன் காரணமாக நாட்டின் பல பாகங் களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் மூண்டன. வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியாரின் வானொலி உரை அமைதியை ஏற்படுத்தியது. வட மாநிலத்தில் குறிப் பாக பம்பாயில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டனர். தீ வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொரார்ஜி தேசாய் தனது வாழ்க்கை வரலாறு நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

4. பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

காந்தியாரை பார்ப்பன சக்திகள், இந்துத்துவா வெறியர்கள் கொன்றது ஒரு திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான். கோட்சேயின் பின்னணியில் இருந்தவர் வி.டி.சவர்க்கார்தான்.

இதுபற்றி காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் ஏ.காந்தி என்பவர் ‘‘Let’s Kill Gandhi’’

என்ற நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அதில் தெளிவாகவே குறிப்பிட் டுள்ளார் காந்தியாரைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள் என்று.

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சென்னை, பெரியார் திடல், 30.1.2014)

இந்து மகாசபையிலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பார்ப்பனர்களே நிறைந் திருந்தனர். அவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வகுப்புகளற்ற, ஜாதியில்லாத ஓர் இந்தியச் சமுதாயத்தை உருவாக்குவதற்காக காந்தியார் ஓர் இயக்கத்தைத் தொடங்கியமைக்காகப் பார்ப்பனர்கள் அவர்மீது கடுஞ்சினம் கொண்டிருந்தனர். காந்தியார் விடுதலை பெற்ற கீழ்ஜாதி மக்களின் புத்தெழுச்சியும், அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அவர்களது புரிதலும் ஆங்கிலேய ஆட்சியில் ஆட்சித் துறையிலும், நீதித் துறையிலும் நீக்கமற நிறைந்து இவற்றைத் தங்களின் தனி உடைமையாக்கி வைத் திருந்த உயர்ஜாதியினரின் குறிப்பாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அச் சுறுத்திக் கொண்டிருந்தன. 1947-க்கு முன்பு இந்தியாவில் ஒரே ஒரு பார்ப்பன அரசுதான் இருந்தது. மராட்டியத்தில் பூனாவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் மராத்தா பேரரசு மட்டும்தான் பார்ப்பன அரசாக இருந்தது. பூணூல் பார்ப்பனர் கள் பிரிட்டானியாவில் இந்தியாவை விட்டு வெளியேறிய அடுத்த நொடியே இந்த நிலத்தின் ஆட்சி அதிகாரம் மீண்டும் தங்கள் கைகளிலேயே வந்து விழும் என்று எப்போதும் கருதிக் கொண் டிருந்தார்கள். பேஷ்வா (பார்ப்பனர்) மரபினரின் இந்தக் கனவு காந்தியாரால் தகர்த்தெறியப்பட்டு விட்டது என்று காந்தியாரின் பேரன் எழுதியுள்ளார்.

மற்றொரு தகவலையும் காந்தியாரின் பெயரன் துசார் காந்தி தம் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையைப்பற்றியது அது. இதோ காந்தியாரின் பெயரன் எழுதுகிறார்:

கோட்சேயின் அறிக்கை உறுதியாக அவனால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் மொழி ஆளுமையை அவன் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. அந்த அறிக்கை இளகிய மனம் கொண்டவர்களையும் உணர்ச்சிவயப்படச் செய்து மாற்றும் வகையில் மிகத் திறமையாக எழுதப் பட்டிருக்கிறது. சதிகாரர்களில் ஒருவரான வி.டி.சவர்க்கார்தான் அந்த அறிக்கை யினை உருவாக்கியவர். அவர் அனல் வீசும் எழுத்தாளர். இணையற்ற பேச் சாளர். அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட காலத்திலும், விசாரணையின்போதும் கோட்சே சவர்க்காரோடு மிக நெருங்கிய உறவாடினான். கோட்சேயின் பெயரில் வெளியான அந்த அறிக்கையில் சவர்க் கார் எழுதுகோலின் உயிர்த் துடிப்பைக் காண முடிந்தது என்று காந்தியாரின் கொள்ளுப் பெயரன் எழுதியுள்ளார்.
உண்மையில் இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிச் சொன்ன வர்தான் இந்த சவர்க்கார் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்று முதலில் பிரிவினையை உருவாக்கியதே சவர்க்காரே தவிர முஸ்லிம்கள் அல்ல. ஆனால், முஸ்லிம்கள் தான் பிரிவினைவாதிகள், இந்தியாவைத் துண்டாடிவிட்டனர் என்று பழிபோடு வதும் இந்த இந்துத்துவா பார்ப்பனர் கூட்டம்தான்.

தேசியம் என்று சொல்லி அதன் பலாபலன் முழுவதையும் அனுபவத்த வர்கள் பார்ப்பனர்களே!

முதல் இந்தியர் நீதிபதி யார் என்றால் முத்துசாமி அய்யர்தான். முதல் துணை வேந்தர் யாரென்றால் சுப்பிரமணிய அய்யர்தான்.

திராவிடர் கழகக் கூட்டங்களில் எல்லாம் அப்பொழுது சொல்லப்படுவது மூன்று பி (‘B’ )க்கள்.

பிரிட்டீஷ், பிராமின், பனியா இந்த மூன்றும்தான்.

அந்த ‘B’ கள்! அதில் ஒன்று தொலைந்தது. இன்று மீதி இரண்டும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக் கின்றன.

5. தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எதுவாக இருந்தது?

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரை தனி மனிதர்மீது பகையல்ல - தத்துவத்தின்மீதுதான் பகை! காந்தி யாரைப் படுகொலை செய்தபோது தந்தை பெரியார் தூண்டிவிட்டிருந்தால், இங்கு என்னவெல்லாம் நடந்திருக்கும் . மகா ராட்டிரத்தில் பார்ப்பனர்கள் தாக்கப் பட்டதுபோல இங்கு நடக்காமல் தடுக்கப் பட்டு விட்டதே!

கோட்சே என்பவன் ஒரு துப்பாக்கி - துப்பாக்கி ஒரு கருவிதானே தவிர, மூலமல்ல. அதனை இயக்கும் சக்தி எது? தத்துவம் எது? நம் கோபம் அதன்மீது தான் திரும்பவேண்டும்; அதனைக் கண்டு பிடித்து அறிவித்தவர்தான் தந்தை பெரியார்.

என் மதம், என் ஜாதி என்பதுதான் ஹிந்துத்துவா என்பது. எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் தந்தை பெரியார் தத்துவம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே வித்தியாசம் இல்லாமல் தான் பழகி வருகிறோம். மார்க்கத்தால் முஸ்லிம்கள் என்றாலும், இனத்தால் திராவிடர்களே. அண்ணன், தம்பிகளாக, மாமன் மச் சானாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் பண்பாடு இங்கு - இதற்குக் காரணம் திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா? (பலத்த கைதட்டல்)!

இளைஞர்களின் கடமை என்ன?

கோட்சே இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம்; அந்தக் கோட்சேயிசம் என் பது வேறு ஒன்றும் இல்லை. இந்துயிசம் தான். அதன் ஒரு வடிவம்தான் நரேந்திர மோடி.

அவர்தான் பிரதமராக வேண்டுமாம்; காரணம் அவர் குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்துவிட்டாராம்.

உண்மையிலே அது ஒரு திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரமே!

மேற்கு வங்காளத்தில் மம்தா விரட் டினால் டாட்டாவுக்குப் புகலிடம் குஜராத் தில்தான். ஏழை - எளிய மக்களை விரட்டி விட்டு நிலங்கள் எல்லாம் தாரை வார்க்கப் படுகின்றன.

வளர்ச்சி என்றால் யாருக்கு வளர்ச்சி? மேல்தட்டு மக்களுக்குத்தானே அங்கு வளர்ச்சி.

பணக்காரர்கள் பார்ப்பனர்கள் இவர் கள்தானே மோடியின் பின்புலமாக பலமாக இருக்கிறார்கள். அடையாளம் காண வேண்டாமா?

நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் பிரச்சார வாகனமாக மாற வேண்டும். அவர்கள் முகநூலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்றால், அதற்கு மேலும் நாம் செல்லவேண்டும் - அவர் களின் அகநூல் வரை ஆராய்ந்து வெளிப் படுத்தவேண்டும்.

பயங்கரவாதிகள் என்றால் ஒரு தொப்பி, ஒரு குறுந்தாடி என்று சித்தரிக் கிறார்கள். நாம் திருப்பிப் பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் என்றால் ஒரு உச்சிக்குடுமி ஒரு பூணூல், ஒரு காவி என்று அடையாளப்படுத்தவேண்டும்.

அவர்கள் பாசிசத்தைப் பரப்பக் கூடியவர்கள். நாமோ பகுத்தறிவை, சமூகநீதியை, சமத்துவத்தை, சமதர்மத்தை எடுத்து முன்வைக்கவேண்டும்.
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்கும் நமது முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

காந்தியார் எதற்காகப் பலியானார்? அவரைக் கொன்றொழித்த கூட்டம் எது? சக்தி எது? அதன் கொள்கை என்ன? என்று பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கிட வேண்டும்.

----------------------------- சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை மாணவர் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை (30.1.2014).

நிகழ்ச்சி

மாணவர் இந்தியா மாநிலச் செய லாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் என்.தைமிய்யா, திருமங்கலம் ஷமீம், தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த அருள் மதிவர்மன், இளையராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

காஞ்சி வடக்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் அன்சாரி நன்றியுரையாற் றினார்.





கோட்சே யார்? மகாவிஷ்ணு அவதாரம்!

முன்பு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில், சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர் சி.சாமிநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடகம் ஒன்று வெளியிடப்பட்டது.

காந்தியார் மிக அதிக அளவில் தொண்டு செய்து வந்தாராம் - அதனால் பூபாரம் தாங்கவில்லையாம். அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்பதற்காக மகாவிஷ்ணு கோட்சே அவதாரம் எடுத்து வந்து காந்தியாரை வதம் செய்ததாக எழுதப்பட்ட நாடகம் இது. (மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியின்போது மை நாதுராம் கோட்சே என்ற நாடகத்தை முக்கிய நகரங்களில் வட மாநிலங்களில் சங் பரிவார்க் கூட்டம் அரங்கேற்றியது). நான்தான் கோட்சே பேசுகிறேன் - கோட்சே காந்தி என்ற தனி மனிதனைக் கொல்லவில்லை. மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து கோட்சே, காந்தி என்ற அரக்கனைக் கொன்றதாக நடித்துக் காட்டப்பட்டது. 

 (ஆக, அவதாரம் என்பது பார்ப்பனர் அல்லாதாரை வதம் செய்வதற்குத்தான். அந்த நிலை இன்றுவரை தொடர்கிறது).

-------------------- மாணவர் இந்தியா கூட்டத்தில்  தமிழர் தலைவர்

யார் சிறுபான்மையினர்?

1. சிறுபான்மையினர் என்றால் இரண்டு வகை உண்டு. ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மையினர் அவர்கள்தான் பார்ப்பனர்கள்.

2. இரண்டாவது சிறுபான்மை யினர் நாங்களும் வாழவேண்டும் என்று உரிமைக்காகப் போராடும் - குரல் கொடுக்கக் கூடியவர்கள்.

-------------------------------- மாணவர் இந்தியா கூட்டத்தில் தமிழர் தலைவர்

மூன்று அப்பன்கள்!


நாட்டில் மூன்று கறுப்புகள் உண்டு.

ஒன்று கறுப்புச் சட்டை அணியும் பெரியார் தந்த கறுப்பு - மெய்யப் பன்கள்

இரண்டாவது கறுப்பு அய்யப் பன் பக்தர்கள் அணிவது

மூன்றாவது கறுப்பு - - கறுப்புத் துண்டு அணிந்து கொள்கைக்கு விரோதமான பொய்யப்பன்கள்.

--------------------------------- மாணவர் இந்தியா கூட்டத்தில் தமிழர் தலைவர்
 
                   ----------------- நமது சிறப்புச் செய்தியாளர்--  “விடுதலை” 31-1-2014

16 comments:

தமிழ் ஓவியா said...


சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது


பிரதிநிதித்துவத்தாலும், ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சாதிகாரத் தினாலேயே செய்தாகவேண்டும்.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/74455.html#ixzz2s1eQMTv1

தமிழ் ஓவியா said...


கயிறு கட்டாதே - திரிக்காதே!




ஏடுகளில் இரண்டு தக வல்கள் வெளிவந்துள்ளன. கையில் சாமிக் கயிறு கட்டுபவர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டலடித் துள்ளார்; மூடநம்பிக்கைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அப்படியா னால் சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் அணிவிக்கப் படும் ராக்கிக் கயிற்றையும் சரத்பவார் சாடுகிறாரா? - என்ற வினாவை எழுப்பி யுள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே.

இராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாண வர்கள் கழுத்து, கைகளில் அணிந்திருந்த கயிறுகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் (இப்படியும் ஓர் அருமை யான மாவட்ட ஆட்சியரா? சபாஷ்!) கூறி விட்டாராம். பொறுக்குமா இந்து மக்கள் கட்சி என்னும் மூடநம்பிக் கைக் கூட்டத்துக்கு? எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

உண்மை நிலை என்ன? கழுத்திலோ, கையிலோ கயிற்றைக் கட்டினால் அழுக்குகள் சேர்வதில்லையா? கிருமி கள் ஏற்பட வாய்ப்பு ஏற் படாதா? கிருமிகள் குடி யிருக்கும் குளுகுளு மாளி கையல்லவா? இது சாதார ணமாகக் கேட்கப்பட வேண் டிய பொது அறிவு வினா.

அறிவியல் ரீதியான பதில் இதோ: தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் கோடைக் காலத்தில் பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. சில குழந்தைகளின் கைகளில் கயிறுகள் கட் டப்பட்டு இருந்தன. அந்தப் பிள்ளைகளை அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டுமே என்பதற்காக திருச்சிராப்பள்ளியில் பெரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பெரியார் மருந்தியல் கல் லூரிப் பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சிறுமியின் கையிலிருந்த அந்தக் கயிற்றை அவிழ்த்து இரசாயனப் பரிசோத னைக்கு அது உட்படுத்தப் பட்டது.

அதன் முடிவு (சுநளரடவ) என்ன தெரியுமா? கீழ்க் கண்ட கிருமிகள் அதில் குடி கொண்டு இருந்தன.

1) ஸ்டப்பை லோகாக் கஸ் (Staphy Lococcus)

2) ஆல்பஸ் ஸ்டப் பைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphyco Coccus Aureus).

3) எஸ்செரிக்கியா கோலி (Escherichia Coli (E.co21)

4) ஃப்யூஃபிளமென் டஸ் ஸ்டரக்சர்ஸ் (Few Filamen Tous Structures)
இந்தக் கிருமிகள் பல் வேறு நோய்களுக்குக் காரணமாகி வருகின்றன.

இத்தகு கயிறுகளைக் கட்டினால் பேய் அண்டாது என்ற நம்பிக்கையும், பெண்களுக்குச் சீக்கிரம் திருமணம் ஆகும் என்றும் மூடத்தனத்தைப் பரப்பி ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டு இருக்கிறது. படித்த முட் டாள்கள்கூட கயிற்றைக் கட்டிக் கொண்டு திரிகிறார் களே-சிந்திக்கவேண் டாமா?

கயிறும் கட்டக் கூடாது - கயிறும் திரிக்கக் கூடாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74448.html#ixzz2s1eYmQCp

தமிழ் ஓவியா said...

வெத்தா?

செய்தி: மோடி பிரதம ரானால் கச்சத் தீவு மீட்கப்படும்.
- இல. கணேசன்

சிந்தனை: அப்படியா னால் வாஜ்பேயி பிரதம ராக இருந்தாரே - அப் போது ஏன் அது நடக்க வில்லை? அவர் என்ன வெத்து வேட்டா?

Read more: http://viduthalai.in/e-paper/74453.html#ixzz2s1etySsm

தமிழ் ஓவியா said...


கிருத்துவ மயக்கம்


கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிருத்தவ மதப் போதகர்களே.

1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது; நம்பினர்.

2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிருத்துவ மதப் போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.

3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் பேச்சுக்களால் கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம் (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல்களையும், கர்த்தரின் குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் சொல்லி கிருத்துவ மதத்தைப் பரப்பினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல் கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர்.

-பாணன்

Read more: http://viduthalai.in/page-7/74413.html#ixzz2s1fhIsHv

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்....

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/page-7/74413.html#ixzz2s1fp6KB0

தமிழ் ஓவியா said...


கணவர் வருமானத்தை விட மனைவிக்கு அதிக வருவாய் இருப்பதால் ஜீவனாம்சம் தேவையில்லை: கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பெங்களூரு, ஜன.31- கருநாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ரஷ்மிக்கும் 2003இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டு களுக்கு பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனைவியிடம் இருந்து மணவிலக்கு கோரி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ராகவேந்திரா கொடுத்த மனு நிராகரிக் கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் திருமணம் முடிந்த பின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள எனது பெற்றொர் வீட்டில் வசித்தோம்.

எனது மனைவி மேல்படிப்பு படிப்பதற்காக தாவணகெரெ சென்றார். நான் மைசூரில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்தியதுடன், அங்கு வீடும் வாடகை எடுத்து வசித்து வருகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற எனது மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனிடையில் வரதட்சணை கேட்டு நானும், எனது பெற்றொரும் துன்புறுத்துவதாக எங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்தார்.

இவ்வளவு தொல்லை கொடுத்த வருடன் வாழ் விரும்பவில்லை என்று கூயிருந்தார். கணவர் ராகவேந்திராவின் புகாருக்கு பதில் மனுதாக்கல் செய்த ரஷ்மி, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் ரூ.20 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி தொல்லை கொடுத்தனர்.

கணவருடன் நான் வாழ மாமனார், மாமியார் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தனர். என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தெரிவித் திருந்தார்.

இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியது. அப்போது எனது பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மைசூரில் நான் வாடகைக்கு எடுத்து வசித்து வரும் வீட்டிற்கு வரும்படி ராகவேந்திரா கேட்டார்.

அதற்கு ஒப்புகொள்ளாத ரஷ்மி, பெங்களூரில் வீடு வாடகை எடுத்தால் வசிப்பதாக கூறினார். ஆனால் அதை ராகவேந்திரா ஏற்றுகொள்ளவில்லை. எங்கு வசிப்பது என்ற விஷயத்தில் கணவன் மனைவி இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியாக ராகவேந்திரா மணவிலக்கில் உறுதியானார். ரஷ்மி ஜீவனாம்சம் கேட்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வழக்கில் தொடர் புடைய கணவர், மனைவி இருவரும் சமூகத்தில் மருத்துவம் படித்த பட்டதாரியாக உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இருவரில் ஏற்பட்ட மனக்கசப்பை போக்கி சுமுக வாழ்வுக்கு நீதிமன்றம் பல வாய்ப்புகள் கொடுத்தும் இருவரும் பயன்படுத்தி கொள்ள வில்லை. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மேலும், மணவிலக்கு பெற்றுள்ள ரஷ்மி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ரஷ்மியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கணவர் ராகவேந்திராவை விட கூடுதல் வருமானம் (மாதம் ரூ.1.30 லட்சம்) இருப்பதால், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அதே சமயத்தில் மகனுக்கு 7 வயது நிரம்பியுள்ளதால், தாயின் அரவணைப்பில் வசிப்பது அவசியம். குழந்தைக்கு தரமான கல்வி, உணவு, ஆடை உள்பட அவர் தேவைக்கான செலவுகளை ராகவேந்திரா வழங்க வேண்டும் என்று கூறி மணவிலக்கு வழங்கி தீர்ப்பளித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/74410.html#ixzz2s1gCMzpv

தமிழ் ஓவியா said...


குடிஅரசு கருவூலத்திலிருந்து திராவிட மாணவர் மாகாண மாநாடு


திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம்.

மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள்சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும்.

இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டி ருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநாடு, சேலம் காலேஜ் பிரின்சிபால் அறிஞர் எ. இராமசாமி கவுண்டர் அவர்கள் தலைமையில் நடந்தது என்பதோடு மற்றும் பல ஆசிரியர்களும் வந்து கலந்து கொண்டதானது மாநாட்டுக்கு மிகவும் பெருமையும், உற்சாகமும் ஊக்கமும் அளித்தது.

இரண்டு நாளும் மாநாடு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலோர் நம் நாடும் இனமும், இன்று இருக்கும் நிலையில், நாம் நம் வாழ்நாளில் நல்ல நாட்களை பயனற்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கழித்து அடிமைத்தனம் கற்றுக் கொண்டு இருப்பது பெரியதொரு நாட்டுத் துரோகமும், இனத் துரோகமுமான செய்கை என்று கருதித் துயருற்ற வண்ணம் காணப்பட்டதானது மிகவும் குறிப்பிட வேண்டிய காரியமாகும்.
அடுத்தாற் போல் அங்கு தாண்டவமாடிய உணர்ச்சி என்னவென்றால் இந்த மாநாடு முடிந்த வுடனே தங்களுக்கு ஏதாவது ஒரு பணி ஆற்றத் தலைவர் அனுமதி அளிக்க மாட்டாரா? என்கின்ற ஆர்வமும் எழுச்சியும் பொங்கி வழிந்ததேயாகும்.
(குடிஅரசு தொகுதி 34 பக்கம் 79)

மத விடுமுறை மதமில்லாத சர்க்காரிலா?

மதமில்லாத சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் இந்திய யூனியன் சர்க்கார் மத சம்பந்தமான நாட்களுக்காக விடுமுறை விடுவதானது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறபடியால், மத சம்பந்தமான நாட்களுக்கு விடுமுறை விடுவதை நிறுத்த வேண்டுமாய் இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

இராமாயண எதிர்ப்பைத் தீவிரமாகச் செய்!

இராமாயணம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணம். ஆதலாலும், மதத்தின் பேரால் மக்களிடையே புகுத்தப்பட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பல விதங்களிலும் தடையேற்படுத் தியதோடு, மூடப் பழக்கங்கள் மக்களிடையே வளருவதற்கு இராமாயணமே காரணமாயிருப்பதனால் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாட்டில் தீவிரமாக நடத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. - (குடிஅரசு தொகுதி 40 131ஆம் பக்கம்)

பகுத்தறிவும், சுயமரியாதையும்!

திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளைவிட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம்.


தமிழ் ஓவியா said...

சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம்.

காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ நெருங்கக்கூட பயப்படும் ஆத்மார்த்தத்த் துறையில் நாங்கள் அஞ்சாது குதிக்கிறோம்.

ஆத்மார்த்தக்காரர்கள் நம்மைக் கண்டு அஞ்சும் அளவுக்கு மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டி வருகிறோம்.

புராணக்காரனுக்கு மேலாக தத்துவார்த்தம் பேசுகிறோம்.

அவன் தத்துவார்த்தம் பேசினால் அவனுக்கும் மேலாக வேதாந்தம் பேசுவோம்.

அவன் வேதாந்தத்தை விட்டு ராமகிருஷ்ணரின் சிஷ்யன் என்றால், நாங்கள் அவருக்கும் மேலான இராமலிங்கரின் சிஷ்யர்கள் என்போம்.

அவன் மோட்சத்தைப்பற்றிப் பேசினால், அதற்கும் நாங்கள் குறுக்குவழி காட்டியனுப்புவோம்.

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமே என்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளா தார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத் துவ சுதந்திரம் வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆகவே, எங்களைச் சற்று தீவிரவாதிகள் என்று யாராவது கூறலாமே தவிர, எங்களைப் பிற்போக்கானவர்கள் என்றோ, மத துவேஷி என்றோ கூற இயலாது.
குடிஅரசு தொகுதி 39 207ஆம் பக்கத்தில் இருப்பது

புண்ணிய ஸ்தலங்கள்

இதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் தனித்தனி மகுடமிட்டு குடிஅரசில் எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.

அவற்றை எழுதி வருவதன் நோக்கமெல்லாம், ஒரு சில சயநலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவைகளையும், அசம்பாவிதமானவைகளையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி,

அவற்றையே மதம் என்றும், பக்தி என்றும், மோட்சத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும், சுதந் திரத்தையும், சுயமரியாதையையும், ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி, மக்கள் யாவரும் சமம் என்பதை யுணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டு மென்பதுதான்.

மேற்படி சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து, அவற்றிற்கு ஏராளமான யோக்கிய தைகளைக் கற்பித்திருப்பதை, பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு வருகின்றனர்.
தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page2/74468.html#ixzz2s7XOs1nK

தமிழ் ஓவியா said...


வீதியில் நீதி தேவதை!



பார்ப்பான்
சூத்திரனைக் கொன்றால்
சிகைச்சேதம்!
பார்ப்பானை
சூத்திரன் கொன்றால்
சிரச்சேதம்!
பார்ப்பானை
பார்ப்பானே கொன்றால்?
மனுதர்மம்
என்ன சொல்லுவதோ!
நம் நீதிமன்றம்
சொன்ன தீர்ப்பால்...
கையிலிருந்த நியாயத் தராசு
களவாடப்பட்டு...
கருப்புத் துணியால்
கண்கள் கட்டப்பட்டு...
நினைவிழந்து
நிர்வாணமாய்...
வீதியில்
நீதி தேவதை!

- சீர்காழி கு.நா. இராமண்ணா

Read more: http://viduthalai.in/page3/74470.html#ixzz2s7Y9LnfY

தமிழ் ஓவியா said...


பெரியார்



- கவிஞர் கலிகாலன், ஈரோடு

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தனைநீ! எனினும்
பகுத்தறிவுக் கனல் பரப்பும்
சூரியனாய் உருவெடுக்கத் தவறவில்லை!
உனைக் கண்டு -
சாத்திரம் பேசும் சனாதனப் பூனைகள்
பூணூல் மறைத்தே புதுநூல் படித்தன!

சாதிமதப் பேய்கள் தடுமாறி ஒளிந்தன!
ஒளிவது போதாது வேரடி மண்ணோடும்
அழிவது வேண்டுமென,
அல்லும் பகலும் நீ அயராது உழைத்தாய்!
பகுத்தறிவுத் தேரேறி அஞ்சாமை வாள் சுழற்றி
அரும்பாடு பட்ட அய்யாவே
நின்புகழ் நிலைத்தோங்குக!

சூத்திரன், தாழ்த்தப்பட்டவன்,
தீண்டத்தகாதவன் எனப்பலவும் சுமக்கும்
கழுதைகளாய்க் காரிருளில்
அடிமைப்பட்டுக் கிடந்த எம்
கைவிலங்கு அறுத்தனை நீ!

சனாதனச் சகுனிகளின் பொய்முகம்
கிழித்திட்டு அரியென முழங்கிய
அடலேறே! வெண்தாடி வேந்தனே!
திக்குத் தெரியாது தவித்திட்ட எங்களுக்கு
வழிகாட்ட ஈரோட்டில் வந்துதித்த
பகுத்தறிவுப் பகலவனே!

மனிதநேயமற்ற மனுதர்மக் கதிர்வீச்சால்
ஆண்டுபலவாக அடிமை விலங்கேந்திக்
கூனிக்குறுகி கும்பிட்டே வாழ்ந்திருந்தோம்!
நோய் போக்கும் வழியறியோம்
நொந்து நொந்து வெந்தழிந்தோம்
வந்தனை நீ! எங்கட்கும் புதுவாழ்வு
தந்தனை! எம் தலைநிமிர வைத்திட்டாய்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும்
பெருநீதி நாட்டினாய்!

ஏழையரும் கல்விபெற
வேலை முதல் அனைத்தும்பெற
இடஒதுக்கீட்டால் ஏற்றம் பெறச் செய்திட்டாய்
நீருள்ளளவும் நிலம் நெருப்புள்ளளவும்
வானுள்ளளவும் வளியுள்ளளவும்
பெரியார் எனும் பெயர் உனக்கே,
உனக்கே பொருந்தும் ஒப்பிலான் நீயே!

Read more: http://viduthalai.in/page6/74478.html#ixzz2s7Yi2M69

தமிழ் ஓவியா said...


அய்.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் அவசியம் இந்தியா வலியுறுத்தல்


அய்.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க கண்டம் இடம் பெறாதது அய்.நாவின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் வரலாற்று அநீதிகளை ஒழிக்க அந்த சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அய்.நா.வில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு நியூயார்க் சென்றுள்ளது. இக்குழுவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுரும் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அய்.நா., பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான புதிய தோழமை என்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிரினீத் கவுர் பேசினார். அப்போது 75 சதவீத பணிகள் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் அய்.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லாதது இந்த அவையின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். மேலும் அவர் பேசியதாவது: உலக மயமாக்கல் நடைமுறையை வலுப்படுத்தவும் பல்வேறு நிலைகளில் ஜனநாயக வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் ஆப்பிரிக்காவுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ற பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அய்.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். 2015-இல் அய்.நா பாதுகாப்பு சபையின் 70-ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் 2005-இல் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி பத்து ஆண்டுகளில் எந்தெந்த நாடுகள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதை காணலாம். இது உலக நாடுகள் தங்களது சாதனைகளை எடுத்துரைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும். ஆப்பிரிக்காவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அது ஒட்டு மொத்த வளர்ச்சியும், செழிப்பும் அடைய ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கடும் வறட்சி, பசி, -பட்டினி ஊட்டச்சத்து பற்றாக்குறை, மோதல் போன்றவையே ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாகவும் பிரினீத் கவுர் தெரிவித்தார்.

- சட்டக்கதிர் - ஜனவரி 2014 - பக்கம் 62

Read more: http://viduthalai.in/page6/74480.html#ixzz2s7ZJlzB0

தமிழ் ஓவியா said...


கோயில்களில் நடக்கும் கொள்ளைகள்


வைஷ்ணவ தேவி கோவில் காணிக்கையில் 43 கிலோ போலி தங்கம்

ஜம்மு, பிப்.1- வைஷ் ணவ தேவி கோவிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கைகளில், 43 கிலோ தங்கமும், 57 கிலோ வெள்ளியும் போலி யானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 5,300 அடி உயரத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில், கடந்த ஆண்டு, ஒரு கோடி பக்தர்கள், தரி சனம் மேற்கொண்டுள்ள னர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலுக்கு, தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கை யாக அளிப்பர். இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு வுக்கு, கோவில் வாரிய நிர்வாக அதிகாரி அளித்த பதிலில் கூறியிருப்பதா வது: கடந்த, அய்ந்தாண் டுகளில், 193 கிலோ தங்கம் மற்றும் 81 ஆயிரம் கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத் துள்ளது. இதில், 43 கிலோ தங்கம், 57 கிலோ வெள்ளி போலியானது என்பது தெரிய வந்துள் ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.போலி தங்கத்தை, உண்மை யான தங்கம் என, பக் தர்கள் நினைத்து கோவி லில் காணிக்கையாக அளித்தார்களா... என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை.

பூசாரிகள் குற்றச்சாட்டு சிவகங்கை, பிப்.1- தமிழகத்திலுள்ள இந்து கோயில்கள் உண்டியல் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாயில், ரூ.41 கோடியை மட் டுமே அரசு கணக்கு காட்டுவதாக , கிராமக் கோவில் பூஜாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந் தரம் குற்றம் சாட்டியுள் ளார்.

சமீபத்தில், சென்னை யில் கிராம கோயில்கள் பூஜாரிகள் சங்க நிறு வனர் வேதாந்தம் மீது சில சமூக விரோத கும் பல் தாக்குதல் நடத் தியது. இதனை கண்டித் தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத் தியும், சிவகங்கையில் நேற்று, கிராம கோயில் பூஜாரி சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கிராம கோயில் பூஜாரி கள் சங்க மாநில இணைச் செயலாளர் சோமசுந்த ரம் பேசியதாவது: தமி ழக இந்துக் கோவில் களில் இருந்து ஆண் டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக் கிறது. ஆனால், அரசு ரூ.41 கோடியை மட் டுமே கணக்கு காட்டு கிறது. இதில், 36 கோடி கோயில் சார்ந்த அதி காரி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படு கிறது என்ற புள்ளி விவ ரங்களை நம்ப முடிய வில்லை.

தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கென நாலரை லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற் போது, சில அரசியல் வாதி மற்றும் அவர் களது பினாமிகளின் கைவசம் உள்ளன. ஏக் கருக்கு ஆண்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200க்கான வாடகை ரசீதை மட்டும் செலுத்தி விட்டு, கோடிக்கணக்கில் சம்பா தித்து, அரசை ஏமாற்று கின்றனர். கோயில் நிலங் கள் மீட்கப்பட வேண் டும். கோயில்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரு வாய் கிடைக்கும் நிலை யில், கிராமப்புறத்தில் பெரும்பாலான இந்துக் கோயில்களில் ஒரு கால பூஜை, விளக்கு போடுவ தற்கு கூட, வழியின்றி, கிராமக்கோயில் பூஜாரி கள் சொந்த செலவில் பூஜை செய்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும், என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/74490.html#ixzz2s7a0mzlY

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!



இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


கண்ணோட்டம்: வைகோவின் வாயை அடைத்த மோடி அலை!


கருவாட்டுப் பானையை சுற்றி வரும் கபட பூனையைப் போல தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் நரேந்திர மோடி. ஏற்கெனவே திருச்சிக்கு வந்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தில் முழங்கிவிட்டுப் போனார். வேதாரண்யத்திற்கு வ.உ.சி. உப்பு காய்ச்சப்போனார் என்பன உள்ளிட்ட தவறான தகவல்களை கூறி பல ருக்கும் பீதி யூட்டினார். பின்பு அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்தார். இப்போது மீண்டும் சென்னை வர இருக்கிறாராம். அவரை வரவேற்க வரவேற்புக்குழு ஒன்றை புரட்சி புயல் வைகோ அமைத்துள்ளாராம். பாஜக கூட இப்படியொரு வரவேற்புக் குழுவை அமைத்ததாக தகவல் இல்லை. ஆனால் இன்னமும் எத் தனை இடம் என்று கூட முடிவாகாத நிலையில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ வர வேற்புக் குழுவை அமைத்திருக்கிறார்.

விட்டால் இவரே கூட அன்றைக்கு புலி வேசம் போட்டு ஆடுவார் போலி ருக்கிறது. பாஜக விரித்த வலையில் தமிழ கத்தை பொறுத்தவரையில் மதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை சிக்கவில்லை. தாயகத்தில் ஒருமுறை, கமலாலயத்தில் ஒருமுறை என்று இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. எனினும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகளில் காந்திய மக்கள் இயக்க தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழருவி மணியனும் பங்கேற்றாராம், திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள். ஆனால் இவரோ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார். அந்தளவுக்கு மோடியின் மீது `பாசம் பொங்கி வழிகிறது. நான் சென்னையில் கூட்டிய கூட்டத்தில்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் உறுதியளித்தார். என்னைத் தவிர இந்த திட்டத்திற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று முழங்குவார் வைகோ. ஆனால் பாஜக பக்கம் இவருடைய பாசப்பார்வை திரும்பிய வுடனேயே சேது சமுத்திரத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாக பேசத் தொடங்கிவிட்டார். இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். அண்மைக் காலமாக மோடியை நினைக்கும் பொழுதெல்லாம் வைகோவுக்கு, ஆவேசம் அதிகமாகி வியர்த்துக் கொட்டத் தொடங்கி விடு கிறது. நாடெங்கும் மோடி அலை, வீடெங்கும் மோடி அலை, டீக் கடை கள், காடுகள், கழனிகள், எங்கெங்கும் மோடி அலை வீசுகிறது என்று புல் லரித்து, போர்வையை எடுத்து போர்த்திக் கொள்கிறார். தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதற்குள் இவ் வளவு புல்லரிப்பு என்றால் இன்னும் போகப்போக என்னாகுமோ தெரிய வில்லை. டீக்கடை பாய்லரில் அடிக்கும் ஆவி கூட இவருக்கு மோடி அலை யாகத் தெரிகிறது.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா என்பவர் தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம் முழங்கும் வைகோ பெரியாரைப் பழித்ததை, இழித்துரைத்ததை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? நாகரிகமான அரசியலுக்காகவே பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதாக கூறிக்கொள்ளும் தமிழருவியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போதைக்கு இவர்களுக்கு பெரி யாரால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதிகாலை வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப் பாருங் கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.

- மதுரை சொக்கன்
(நன்றி: தீக்கதிர் 29.1.2014

Read more: http://viduthalai.in/page-2/74497.html#ixzz2s7bQ1HJr

தமிழ் ஓவியா said...

தர்மத்தின் நிலை

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக் காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத் தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலி யவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர் களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாய மிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழி யிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார் களோ அந்த சமுகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்ப னரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத் தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு துணைத்தலையங்கம், 08.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cGncE4

தமிழ் ஓவியா said...

ரிவோல்ட்

ரிவோல்ட் என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை யின் பதிப்பாளராகவும், வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.04.1928இல் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு போலீசார் ரிவோல்ட் என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங் களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவ தாகத் தெரிகிறது. ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக் கப்பட்டிருக்கின்றது.

ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:- இப்பவும் மேற்படி பிரசில் ரிவோல்ட் என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் குடிஅரசு என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுநஎடிடவ என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலி லானாலும் சரி, முதலாளி இயலிலானா லும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளி லானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற் கைக்கும் அறி வுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல் லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார். இதன்மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரிய வில்லை.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928

Read more: http://viduthalai.in/page-7/74522.html#ixzz2s7cPz0M5