Search This Blog

20.1.14

பெரியார் வாழ்வில் இது போல எத்தனை எத்தனையோ பொன்னேடுகள்!

அன்றைய பன்னீர்செல்வங்கள் இன்றும் தேவை! தேவை!!



 

காலஞ் சென்ற பன்னீர்செல்வமே! காலஞ் சென்று  விட்டாயா? நிஜமாகவா? கனவா? தமிழர் சாந்தி பெறுவரா? -என்று எதற்கும் அஞ்சா ஏறு நிகர் பெரியாரின் நெஞ்சைமே பதறப் பதற மறைந்தார் பெருமகன் திராவிடர் தளபதி ஏ.டி. பன்னீர்செல்வம்


வெறும் 51 ஆண்டுகளே வாழ்ந்து தமிழர்கள்  எந்நூற்றாண்டினும் ஏங்கும் எச்சங்களை விட்டுச் சென்ற இனவுணர்வின் நாயகன் அவர்.


அவர்தம் நூற்றாண்டு விழாவினை திராவிடர் கழகத்தின் சார்பில் கொட்டும் மழையில் மிகப் பெரிய பேரணியுடன் திராவிடர் கழகம் கொண்டாடியது (1.6.1988) திருவாரூரில்.


தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் நீதிக்கட்சி வழி வந்த டாக்டர் ஏ. இராமசாமி முதலி யார் அவர்க்ளின் அருமை மகன் லிபரேட்டர் ஆசிரியர் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி அவர்களும் அவ் விழாவில் பங்கேற்றனர்.
25 ஆண்டுகள் சிறகடித்துப் பறந் தோடிய நிலையில், திராவிடர் கழகம் அவர்தம் 125ஆம் ஆண்டினை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் கொண் டாடியது (17.1.2014).


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து நல்லதோர் உரை நிகழ்த்தினார்.


பன்னீர்செல்வம் என்று சொல்லு கிறபோது அவரின் பன்முகத் திறன் பளிச்சிடுகிறது. அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று பார்-_அட்_லா ஒருவர் படித்து வந்தார் என்பதும், அந்தப் படிப்பைக் கொண்டு பணம் சம்பாதித்துப் பளபளப்பான பங்களா வில் ஜொலித்து வாழலாம் என்று கருதாமல் சமுதாயப் பணிக்காக ஒருவர் முற்றிலும் ஒப்படைத்தார் என்பது அசாதாரணமானதுதான்.
பார்-_அட்_லா படித்த மகன் 5 ஆம் வகுப்பைக்கூட முழுவதுமாக படிக்காத ஒரு தலைவரின் தொண்டர் என்று தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்வதிலே பெருமை கண்டார்.


அதனால்தான் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்க மாநாட்டுக்குத் தலைமை வகித்த ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் (பெரியார் சிறையில்இருந்ததால் அவரின் தலைமை உரையைப் படித்தார் பன்னீர்செல்வம்).


என் தோளுக்குப் போட்ட மாலையை என் தலைவர் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன் என்று சொல்லி, சிறை சென்ற கோலத்தில் தீட்டப்பட்ட அந்த பெரியார் படத்திற்கு அணிவித்து தன் குரு பக்தியைக் காட்டிக் கொண்டார். (29.12.1938).


சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலைவராக (பெரியார் மற்றொரு துணைத் தலைவர்) நீதிக் கட்சியின் துணைத் தலைவராகவும் விளங்கினார்.
மாவட்டக் கழகத் தலைவராக (Chairman - District Board)  தஞ்சை நகராட்சித் தலைவராக, உள்ளாட்சி அமைச்சராக எத்தனை எத்தனையோ பதவிகளை எல்லாம் அவர் அலங் கரித்தார்.


ஆனால் அவை மகாகனம் பொருந்திய பதவிகளாக, சொகுசு ஆசனத்தில் அமர்ந்த சுகமாக அவர் என்றும் கருதியதில்லை; பார்ப்பனர் அல்லாத மக்களின் உயர்வுக்கு அவற்றையெல்லாம் கடைக்காலாக்கிய கடமை வீரர் அவர்.


தஞ்சை உரத்தநாட்டிலே உறையுளுடன் (சத்திரம்) கூடிய பள்ளி என் றால் அது முழுக்க முழுக்க பார்ப் பனர்களுக்கென்றே தாரை வார்க் கப்பட்டிருந்தது. அதனை அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்படும் பள்ளியாக மாற்றிய பார்ப்பனர் அல்லாதாரின் பாதுகாவலர் அவர்.


திருவையாற்றிலே ராஜா கல்லூரி - முற்றிலும் பார்ப்பனர்கள் தங்கி படிக்க சமஸ்கிருதக் கல்லூரியாக இருந்தது! அதன் ஆணிவேரையே அசைத்து தமிழ் வித்துவான் படிக்கும் பாசறை யாக மாற்றப்பட்டது என்றால் அது என்ன சாதாரணமா?


அவருடைய தமிழ் உணர்வு _- இனவுணர்வு எத்தகையது! வேலூரில் நடைபெற்ற (27.12.1938) சென்னை மாநிலத் தமிழர் மாநாட்டிற்குத் தலைமை வகித்து இதோ அவர் பேசுகிறார்: வெளிநாட்டிலிருந்து நம்மிடத்தில் குடியேறுகிறவர்கள் எவ்வளவு காலங்களுக்கு முன் நம்மிடம் வந்து சேர்ந்தர்களாயினும் இந்நாட்டிலேயே எப்போதும் இருக்கும் நோக்கத்துடன் உள்ளவர்களாயினும் நம் தமிழ் மொழியைக் கொள்ளாமலிருப்பின் அவர்கள் தமிழர்கள் ஆக மாட் டார்கள்.


சமஸ்கிருதமே நம் பொது மொழியாகிய தமிழ்மொழியை விட மேன்மைப்பட்டதென்றும், அது ஒரு தெய்வீக மொழியென்றும் அம் மொழியே கடவுள் வணக்கத்திற்கும் மற்றுமுள்ள அவர்களுடைய சடங்கு களுக்கும் பொருத்தமானதென்றும், தமிழ் மொழி இக்காரியங்களுக்குப் பொருத்தமற்றதென்றும் அதை இழிவுபடுத்தி பேசுபவர்கள் எவ்விதத் தில் தமிழரென்று அழைக்கப்பட பொருத்தமுள்ளவர்களென்று எனக்கு விளங்கவில்லை; ஆகவே பார்ப் பனர்கள் தமிழர் ஆக மாட்டார் களென்று சொல்வது மிகையாகாது.


தமிழ்நாடென்பது எந்த நாடென்று நிர்ணயிப்பதற்கு ஆராய்ச்சி வேண் டியதில்லை. சென்னை நகரிலிருந்து குமரி வரையில் மலையாளத்திற்குக் கிழக்கே உள்ள நாடே தற்காலத்தில் தமிழ் நாடென்று சந்தேகத்திற்கிட மில்லாமல் கூறலாம்.


அசோக சக்ரவர்த்தி காலத்தில் அவருடைய  ஆட்சி ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் இன்னும் வெளிநாட்டிலும் பரவியிருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் அக்காலத்திலும் கூட நம் நாட்டில் நம் மூவரசர்களாகிய சேர _- சோழ _பாண்டிய மன்னர்களே அரசு புரிந்து வந்ததாகவும் தெரிகிறது.


மொகலாய ஆட்சியில்கூட நாம் அந்த ஆதிக் கத்திற்கு உட்படாமல் தனிப்பட்ட வகையிலேயே நம்முடைய காரியங்களை நடத்தி வந்திருக்கிறோம்.
ஆங்கில ஆட்சி நம் நாட்டில் நிலை பெற்ற பிறகே நாமும் வடநாட்டினரும் ஒரே ஆதிக்கத்திற்கு உட்பட்டி ருக்கிறோமேயொழிய அதற்குமுன் எந்தக் காலத்திலும் நமக்கும் வடநாட்டினருக்கும் யாதொரு கலப்புமிருந்த தாகத் தெரியவில்லை என்றார் பன்னீர்செல்வம்.


பார்ப்பனர்களும் தமிழர்களே என்று பல்லவிப் புராணம் படிக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இன் றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு சவுக்கடி கொடுத்திருக்கிறாரே சர்.ஏ.டி.

பார்ப்பானாவது தமிழனாவது, ஆரியனாவது திராவிடனாவது என்று பேசும் திருவாளர்கள் இதனைப் படிக்க வேண்டும்.

இன்றுகூட தமிழ் செம்மொழியா னால் வீட்டுக்கு வீடு மட்டன்! பிரி யாணி கிடைக்குமா? என்று தினமலர் (13.6.2004) பார்ப்பனர் எழுதவில்லையா? (பிரியாணிமீது அவாளுக்கு அவ்வளவு மோகம்!)

விளம்பரப் பலகைகளில் தமிழ் முதலிடத்தில் இடம் பெற வேண்டும் என்ற சொன்னால் மொழி நக்சலிசம் என்று எழுதும் துக்ளக் பார்ப்பனர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். (துக்ளக் 15.9.2010) இவர்களைபற்றி 1938களில் பன்னீர் செல்வம் பேசினார் என்றால் என்னே அம் மாமனிதரின் தொலைநோக்கு!

தை முதல்  நாள் தமிழ்ப் புத் தாண்டு என்றால் ஒப்பாதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.


தமிழ்நாடு தமிழருக்கே! என்று தந்தை பெரியார் சொல்கிறார் அவர் ஏன் அப்படி சொல்லுகிறார்?

இதோ காரணம் சொல்கிறார் ஏ.டி. பன்னீர்செல்வம்.

திரு. பனகல் அரசர் காலத்தில் தான் மருத்துவ இலாக்கா வெள்ளை யர்களிடம் இருந்து பிடுங்கி தமிழர் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதன் பயன் என்ன ஆயிற்று என்றால் டாக்டர் ராஜன் (அய்யங்கார்) என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா மந்திரியாக வந்தவுடன் கவுரவ டாக்டர்களை நியமிக்கின்றேன் என்ற பெயரால் ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பதவிகளில் 125 பதவிகளை பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததுடன், 85 பதவிகளை மாத்திரம் தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு 15 பதவிகளை இந்துக்கள் அல்லாதவர்கள் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டார். 100-க்கு 3 விகிதம் பேர் உள்ள பார்ப்பனர்களுக்கு 125 உத்யோகத்தைக் கொடுத்திருக்கின்றார்! இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்ன வென்றால் ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியாக்கி விட்டு, அவருக்குப் பதிலாக என்று 3 பார்ப் பனர்களைத் திணித்து இருக்கின்றார். எப்படி இருக்கின்றது ஆட்சி? இவ்வித ஆட்சியை இனி நடத்த விட மாட் டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் கூறும் தமிழ்நாடு தமிழ ருக்கே என்பது ஆகும்.

நான் இப்படிச் சொல்வதை ஆச்சாரியார் முதன் மந்திரி கொடுமை என்கின்றார். ஆனால் தமிழர்களை இப்படி நடத்துவது எங்களுக்குக் கொடுமையாக இல்லையா? என்று உரையாற்றினார் திராவிடர் தளபதி பன்னீர்செல்வம்.

குறிப்பு: மேற்கண்ட விஷயங்கள் 1939ஆம் வருஷம், பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியில் ஆச்சாரி யார் ஆட்சி பெரியாரை சிறைப்படுத்தியதற் காக சென்னை எழும்பூர் ஏரியில் கூட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொண்ட கண் டனப் பொதுக் கூட்டத்தில் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பேசிய பேச்சாகும்.
இன்றைய தினமும் இடஒதுக்கீடு கூடாது என்று சூழ்ச்சி வலைகளைப் பின்னிக் கொண்டிருக்க வில்லையா பார்ப்பனர்கள்?

சமூக நீதி விளைந்த பெரியார் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணிலே ஆரியம் தலை தூக்கப் பார்க் கிறதே!

பல்நோக்கு உயர் சிறப்புப் பணிமனை என்று நாம கரணம் சூட்டியதும், ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்று நிபந்தனைகளைக் கொண்டு வந்து புகுத்துவதும் எல்லாம், சட்டத்தின் சந்து பொந்து களில் நுழைந்து சமூக நீதிக்குச் சாவுக் குழி தோண்ட வேண்டும் என்ற சூழ்ச்சி யல்லாமல் வேறு என்ன?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு ஈராண்டு கடுங்காவல் தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது (விடுதலை 7.12.1938).

அப்பொழுது ஒரு காட்சி ஒப்பரிய காட்சி- மயிர்ச் கூச்செறிவும் நிகழ்ச்சி அது - _ நெஞ்சை குலுக்கும் நெகிழ்ச்சி அது!

சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் (17.1.2014 - சென்னை - பெரியார்திடல்)

நீதிபதி அவர்களால்  தண்டனை யளிக்கப்பட்டவுடன் கோர்ட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் வணக்கத்தை பெரியார் அவர்கட்கு தெரிவித்துக் கொண் டார்கள். சிலர் பெரியார் அவர்களின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தும், சிலர் பெரியாரவர்களின் கரங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டும், வணக்கம் தெரிவித்தனர். கோர்ட்டிலே கூடியிருந்தவர்களில் பலரும் கண்ணீர் வடித்தார்கள். சர்.ஏ.டி. பன்னீர் செல் வமும் பெரியாரைத் தழுவி கண்ணீர் விட்ட காட்சி மிகவும் உருக்கமாய் இருந்தது. விளம்பர மந்திரியாரின் தம்பி 8ஆவது சர்வாதிகாரி தோழர் சம்பந்தம் அவர்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் விட்ட காட்சி மிகவும் பரிதாபமாயிருந்தது. ஆனால், பெரியார் அவர்கள் எல்லோருக்கும் மலர்ந்த முகத்துடன் சமாதானம் கூறி இயக் கத்தை நேரிய முறையில் தொடர்ந்து நடத்திக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டு எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள்.

தந்தை பெரியார் வாழ்வில் இது போல எத்தனை எத்தனையோ பொன்னேடுகள்!

திடுக்கிட வைக்கும் தீப்பொறிகள் உண்டு! உண்டு!!

பல தளபதிகளை தன் கண் முன்னே - தன்னை விட வயது குறைந்தவர்களை எல்லாம் பறி கொடுத்துக் களத்தில் கடைசிவரை கண் துஞ்சாமல் எதிரிகளை சம்ஹாரம் செய்து கொண்டு தானிருந்தார்.

பன்னீர்செல்வம் தொடங்கி அஞ்சா நெஞ்சன் அழகிரி என்ற வரிசையில் அறிஞர் அண்ணாவரை எத்தனையோ தளபதிகளை இழந்தவர் பெரியார்.

பன்னீர்செல்வம் எந்தளவு பெரியார் என்ற இமயத்திடம்  மதிப்பும் ஈடுபாடும் வைத்திருந்தார் என்பதற்கு ஒரு தகவல்: 

தனது வீட்டில் தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் பெரியார் படம் தென்பட வேண்டும் என்று ஏற்பாடு செய்து வைத்திருந்தார்  என்றால் அதைவிட வேறு எதைச் சொல்ல வேண்டும்? 

பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாக இருந்தது பெரியாரிடத்தில் மட்டும்தான் -_ அதனால்தான் அவர் பெரியார்!



பெரியாரை பாராட்டுகிறார் பன்னீர்செல்வம்!

நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்ல. ஆனால் தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய கருத்துக்கள் ஆணித் தரமானவை. ஆனால் அவர் பிடிவாதக்காரர் அல்ல; தம் காரியத்தைச் சாதித்துக் கொள் வதற்காக அவர் பட்டினி கிடப் பதில்லை. சாகும் வரை உண்ணா விரதம் போன்ற வழிகளில் செல்வதில்லை நேர்மையான இயற்கையான வழிகளிலேயே பாடுபடுவார்
-_ -சர். ஏ.டி. பன்னீர்செல்வம்
 
                                                                                                                                             -------------------கலி. பூங்குன்றன் அவர்கள்  19-1-2014                                  ”விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

61 comments:

தமிழ் ஓவியா said...


குழப்பமே! குழப்பம்! மதத்தினால் குழப்பமே!

- மு.வி.சோமசுந்தரம்

மதம் என்ற தலைப்பில் ஒருவர் கட்டுரை எழுத நினைத்தால், ஒரு வகையான அச்ச உணர்வு ஏற்படு கிறது. பெரும்பாலான இந்தியர்கள் மனம் திறந்து மதத்தைப் பற்றி விவாதிப்பதில்லை. காரணம், தவறான விளக்கங்களைக் கூறிவிடு வோமோ என்ற பயம், உணர்ச்சியின் உச்ச நிலையில் உள்ளவர்கள் தான் மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். அதன் விளைவாக நம் சமூகத்தில் உணர்வுப் பெருக்கில் உள்ளவர் கையில் மதம் இருப்பதான நிலை உள்ளது, அரசியல் இதற்குத் துணை போவதாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மதசம்பந்தப்பட்ட கருத்துகள் முக்கியத்துவம் பெறாமல் போய் விடுகிறது. ஒரு கருத்து என்ன வென்றால், இளைஞர்களிடையே, அவர்களுடைய மதத்தைப்பற்றிய விளக்கங்கள் குழப்பத்தை ஏற் படுத்துவதுடன், இன்றைய நவீன சமூகத்தில் மதத்தின் பங்கு என்ன என்ற வினாவையும் எழுப்புகிறது.

இந்துயிசத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். இந்துக்களில் ஒரு பகுதி யினர், கடவுளை திருப்திபடுத்துவ தற்காக சுய சித்திரவதைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். அலகு குத்திக்கொள்கிறார்கள். உடலில் கொக்கிமாட்டி வாகனங்களைக் கயிறு கட்டி இழுக்கிறார்கள். இந்து சந்நியாசிகள் துறவு வாழ்க்கை வாழ்வதாகச் சொல்கிறார்கள்.

இதற்கிடையில், பல லட்சம் இந்துக்கள் ஏதோ ஒரு வேளையில் கோயிலுக்குச் செல்கிறார்கள், அவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ள வர்கள், இருந்த போதிலும், இவர்கள் இந்து சமய நூல்களில் கூறப்பட் டுள்ளபடி நடப்பதுமில்லை. அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது பற்றி யும் தெரியாது. பல இந்துக்கள் புலால் உண்கிறார்கள். மதுப் பிரியர்களாக உள்ளனர். அதே நேரத்தில் கடவுளை வழிபடுகிறார்கள். சிறப்பான மத விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.

எனவே ஒரு கேள்வி எழுகிறது. ஒரு இந்து என்பவர் எப்படி இருக்க வேண்டும்? அலகு குத்திக் கொள்வது தான் இந்து என்பதற்கு அடை யாளமா? ஒரு சாதுதான் இந்துவுக்கு அடையாளமா? நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வங்கியில் பணி யாற்றுகிறார், கோழிக்கறி உண்கிறார். பீர் குடிக்கிறார். எப்போதாவது கோயிலுக்குச் செல்கிறார் இவரும் ஒரு இந்துவா?

இதற்கெல்லாம் விடை இல்லை என்பது வெளிப்படை. மேலே எடுத்துக்காட்டப்பட்டவர்கள் எல்லாம் இந்துக்களே. எனவே இந்தியாவில் இந்து என்பதற்கு அளவுகோல் என்ன? ஒரு ஊகம் தான் தேவைப்படுகிறது. ஒரு இந்தியனின் இந்துமத நவீன மதிப்பீட்டைப் பற்றிய ஒரு பட்டியலைக் காண்போம்.

தற்கால இந்து, இந்து கடவுள் களை வழிப்படுகிறார் சில இந்து விழாக்களை கொண்டாடுகிறார். இந்துக்கள் பின்பற்றும் குறைந்தபட்ச ஒரு சில பழக்கங்களைப் பின்பற்று கிறார். இந்த பழக்கங்கள் ஆளுக்கு ஆள் மாறுபட்ட ஒன்றாகும்.இவர் தன் நம்பிக்கையையோ, சடங்கு களையோ, கொள்கையையோ மற்றவர் மீது திணிப்பது கிடையாது. மற்றவர் நம்பிக்கையை சகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டவர் நம் முடைய சமய நூல்களில் கூறப்பட் டுள்ள ஆண், பெண் வேற்றுமை, சாதிப்பிரிவு, வன்முறை போன்ற பழமைக் கொள்கைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை.


தமிழ் ஓவியா said...

மேலே பட்டியலில் கூறப்பட்டவை முழுமை பெற்றதும் இல்லை, துல்லியமானதுமல்ல, ஏனென்றால் 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் இந்து என்றால் பொருள் என்ன என்பதை, அறிவு பூர்வமாக நாம் விவாதிப்பதில்லை, சரியான விவாதத் திற்குப் பிறகு தான் முழுமையான பட்டியலிட முடியும். நம்முடைய சமூகத்தில், மதத்தினால் ஏற்படும் நடைமுறை பிரச்சினைகளை அறிய இத்தகைய பட்டியல் ஒன்று உதவியாக இருக்கும்.

இந்த பட்டியல் தயாரிப்பதில் ஒன்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மதம் எதையெல்லாம் குறிப்பிட்டுள்ளது என்பதோடல்லா மல், ஒட்டு மொத்த நாட்டுக்குத் தேவைப்படும் முன்னேற்றத்தையும், எதிர்பார்ப்பையும் தொடர்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 16-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த பழமை சார் இந்தூயிசத்தை நோக்கிச் சென்றால், உலகளாவிய இன்றைய வாழ்க்கை முறைக்கு நம்மை அய்க்கியப்படுத்திக் கொள்வது இயலாது போகும்.

இதைப் போன்றே, ஏனைய மதங்களைப் பற்றிய விவாதமும், மதிப்பீட்டுப் பட்டியலும் தேவை, குறிப்பாக இந்தியாவின் முக்கிய அடுத்த மதமான இஸ்லாம் மதத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

உலகில் ஏறத்தாழ 50 நாடுகளுக்கு மேல் முஸ்லீம் மக்கள் பெரும் பான்மையானவர்களாக உள்ளனர். ஆனால், இஸ்லாமுக்கு ஒரு பொருள் விளக்கம் கூற முடியாத நிலை உள்ளது, எடுத்துக்காட்டாக, சவுதி அரேபியாவில் உள்ளவர்களில் 97 சதவிகிதம் முஸ்லீம் மக்கள்; சவூதி அரேபியாவின் சட்ட திட்டம், தனியான அரசியல் அமைப்பில் அமைந்ததில்லை மாறாக மத அடிப்படையிலான ஷாரியா என்ற பழமை தோய்ந்த சட்ட அடைப் படையில் அமைந்துள்ளது. சவுதிப் பெண்கள் முழுவதும் உடலை மூடி பொது இடங்களில் காணப்பட வேண்டும் என்பது சட்டம் சட்டத்தை மீறியவர்களுக்கு அங்கு கொடுக்கப்படும் தண்டனைகளாவன! தலையை வெட்டுதல், சாட்டையடி, கல்லால் அடித்தல், தண்டனைகள் உறுதியுடன் நிறைவேற்றப்படும்.

சவுதி அரேபியப் பள்ளி ஒன்றில் தீப் பிடித்துவிட்டது. தீயணைப்புப் படையினர், பள்ளியில் இருந்த பெண்களை வெளியில் வர அனு மதிக்கவில்லை. காரணம் அவர்கள் உடலை முழுவதுமாக மூடவில்லை. பெண்கள் அனைவரும் மடிந்தனர். பலர் சவுதி திட்டத்தைக் குறை கூறினாலும், குற்றங்கள் குறைய காரணமாக உள்ளது என்று வரவேற்கவும் செய்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

அடுத்து துருக்கியில் உள்ள நிலையைப் பார்ப்போம். அய்ரோப்பிய யூனியனில் உறுப்பினர் தகுதியைப் பெற துருக்கி மக்களுக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்கியது. மதமும் அரசியலும் தனித்தனியாக இயங்கின. துருக்கி அரசியலமைப்பு மதச்சார்பின்மை தத்துவத்தில் சட்டமுறை செயல்படும் வகையில் அமைந்துள்ளது. 99% முஸ்லீம் மக்கள் இருப்பினும், பல்கலைக்கழகங் களில், பொது இடங்களில், அரசு கட்டடங்களில் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது பெரிய வியப்பை அளிப்பதாக உள்ளது. (தற்போது சிறிது தளர்த்தப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது) ஹிஜாப் மத அடையாளமாகக் கருதப்படுவதால் அரசு நிர்வாகத்தில் அதன் தொடர்பு இருப்பது கூடாது.

பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் நாடுகள் நடுப்பாதை நிலை யில் செயல்படுகின்றன. மலேசியா பரந்த நோக்குடன் உள்ளது. ஈரான் அப்படி இல்லை. பாகிஸ்தான் நடுப் பாதை கொள்கையை கடைப் பிடிக்கிறது. நம்மை மீண்டும் அதே கேள்விக்கு அழைத்துச் செல்கிறது. மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளுள் எவர் முஸ்லீம் என்று கூறத்தக்கவர்? சரியான ஒரு விடை இல்லை என்பதுதானே உண்மை. ஒரு துருக்கி முஸ்லீம், சவுதி முஸ்லீம் நடத்தையிலிருந்து மாறுபட்டுள்ளார் என்பதைத் தானே அறிய முடிகிறது.

தமிழ் ஓவியா said...

எனவே, இந்த ஒரு கேள்வியைக் கேட்போம். இந்திய முஸ்லீம் எந்த முஸ்லீம் முறையை பின்பற்ற விழைகிறார்? துருக்கி முஸ்லீமையா? சவுதி முஸ்லீமையா? அல்லது காணும் முயற்சியில் ஈடுபடமாட்டேன். இது என்னுடைய வேலை இல்லை. முஸ்லிம் சமூகத்திலிருந்து விடை வரவேண்டும்.

இனி எழக்கூடிய கேள்விகளாவன: இந்திய சமூகம் எந்த திக்கில் செல்ல விரும்புகிறது? நாம் முன்னேற்றம் அடைய விரும்புகிறோமா? நம் முடைய இளைஞர்களின் எதிர் பார்ப்புகளை எட்டும் வகையில் நாட்டை உருவாக்க விரும்புகிறோமா? நம்முடைய சமய நூல்களில் உள்ள பழமையான, கொடுமையான விதி முறைகளை நமக்கு வசதியானவை என்று ஏற்றுக்கொள்ள போகி றோமா? அல்லது நமக்கு ஏற்றதான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது சரியான ஒன்றா?

இந்த வகையில் ஒரு விவாதம் தேவைப்படுகிறது. ஆனால் இது நடை பெறுவதில்லை. பிளவுபட்டு உள்ள நம் அரசியல்வாதிகள் இதை ஊக்குவிப்பதில்லை. இந்தியாவின் நலம் விரும்பிகள், அறிவு ஜீவிகள், நம் சமூக நலனில் மதம் கடந்த அக்கறை உள்ளவர்கள் கலந்து பேச வேண்டும். இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டவேண்டும். இது நடைபெறவில்லையென்றால், தீவிரவாதிகள், மத விவாதத்தைக் கடத்திச் செல்லும் செயல் தொடரும். பிளவுபட்ட அரசியல்வாதிகள், குழப்ப நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வர். இது நாட்டிற்கு அழிவைத் தேடித்தரும்.

(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா (2.11.2013) புதினம் ஆசிரியர் செட்டன் பகத் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

கட்டுரைத் தொடர்பான கருத்து

கட்டுரையாளர், இந்து மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் காணப்படும் பிரிவுகளையும், தனித்தனி அணுகு முறைகளையும் எடுத்துக்கூறி, இதனால் இந்திய சமூகம், சரியான பாதையில் இயங்காமல், தடம் பெயர்ந்த நிலையில் உள்ளதை விளக்கி, இந்த அவல நிலை நீங்க பல கோணங்களில் விவாதம் தேவை என்று கூறுகிறார். இவர் வைக்கும் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், கை கண்ட மருந்தாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் பார்வையும், பரிகாரமும் ஆகும், தந்தை பெரியார் கண்ட தீர்வு:

பகுத்தறிவைப் பெரிதாகப் போற்றாத, மதத்தை கண்மூடி நம்பாமல் இயற்கையோடு ஒன்றிய உள்ளத்தின் இயல்பான உணர்வு காட்டும் வழியில் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும், தேசம் தேசம் என்று கூக்குர லிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று, மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும், உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நம் நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் ருப்புக்கு நெய் (மே மாதம் 1925 குடியரசு).

சமுதாய இயலில் சாதி மத பேதங் களை அகற்றுவது, மூட நம்பிக்கை களை ஒழிப்பது பொருளியலில் சமதர்மம் தழைக்க வேண்டும் (10.3.1935 - குடியரசு)

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிபடுத்திக் கொள்ளும் (17.2.1929, குடியரசு)

இத்தகைய வலுவான பெரியாரின் கருத்துகள் சென்று சேராத இடத்திலும் சேர்வதற்கு வழிவகுப்பது தான் சிறுகனூரில் எழ இருக்கும் பெரியார் உலகம்


பெரியார் ஒரு மூச்சுக்காற்று -அவரை விட்டுவிட்டு எதுவும் செய்ய முடியாது. மூச்சுக் காற்றின் பெருமை எப்பொழுது விளங்கும் என்று சொன்னால் மூச்சு திணறும் போது தான் விளங்கும். தமிழர் தலைவர் 7.10.2012 காவேரிப்பட்டணம். அந்த மூச்சுக்காற்றின் ஊற்று தான் சிறுகனூர்.

Read more: http://viduthalai.in/page2/73725.html#ixzz2qta77R6g

தமிழ் ஓவியா said...


இப்படியும் மூடநம்பிக்கைகள்


பசுமாட்டின் 5வது காலைத்தொட்டு கும்பிட்டால் ஆண் குழந்தை உறுதியாம்!

இந்தியாவில் உள்ள சட்டீஸ்கார் என்ற மாநிலத்தின் தலைநகர் ராஜ்பூரில் மூன்று வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு பசுமாட்டிற்கு ஐந்து கால்கள் உள்ளது. தலைப் பகுதியின் அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஐந்தாவது காலை கருவுற்ற பெண்கள் தொட்டுக்கும்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பப்பட்டு வருகிறது

ராஜ்பூர் நகரில் ராஜ் பிரதாப் என்ற இளைஞர் வளர்த்து வரும் பசுமாடு ஒன்றிற்கு ஐந்து கால்கள் உள்ளன. ஐந்து மில்லியன் கால் நடைகளுக்கு ஒன்று இதுபோன்று ஐந்து கால்களுடன் பிறக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த 5ஆவது காலை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்யலாமா? என்று இந்த இளைஞர் யோசித்து வந்த வேளையில், ஒரு கருவுற்ற பெண் பசுமாட்டின் ஐந்தாவது காலைத் தொட்டுக்கும்பிட அனுமதி கேட்டுள்ளார். பின்னர் தொட்டுக் கும்பிட்டவுடன் வீட்டுக்கு சென்ற அவருக்கு பிரசவ வலி ஏற்பட் டுள்ளது. அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பசுமாட்டின் 5ஆவது காலைத் தொட்டுக்கும்பிட்டதால்தான் தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று அந்தப் பெண் நம்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் பக்கத்து ஊர்களில் இருந்தும் கருவுற்ற பெண்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என எண்ணி, அந்த வித்தியாசமான பசுமாட்டை தொட்டுக்கும்பிட வருகை தருகின்றனர். இதற்காக ராஜ் பிரதாப் ஒவ்வொரு பெண்ணிடமும் ரூ.500 வரை பணம் வாங்குகிறார்.

Read more: http://viduthalai.in/page4/73730.html#ixzz2qtbmyCQE

தமிழ் ஓவியா said...


கருப்புச்சட்டை இல்லாத ஊர் எப்படியிருக்கிறது பாருங்கள்


கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்பார்கள். ஊருக்கு நன்று; கருப்புச்சட்டைக்காரர்கள் இருந்தால் அந்த ஊரில் ஒரு துன்பமும் இருக்காது என்பதுதான் உண்மை. கருப்புச்சட்டைக்காரர்கள் இருந்தால் அந்த ஊருக்கு ஒரு காவல் நிலையம் இருக்கிறது மாதிரியாகும். ஒரு தீயணைப்பு நிலையம் இருக்கிறது மாதிரியாகும். ஒரு மருத்துவமனை இருக்கிறது மாதிரியாகும். அந்தள வுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பது நாம் சொல்வதைவிட ஆங் காங்கே கருப்புச்சட்டைக்காரர்களின் சேவை இருக்கும்.
எந்தப் பகுதிகளில் கருப்புச்சட் டைகள் குறைவாக இருக்கின்றனவோ அந்தப் பகுதிகளில் சாதிச்சண்டை களும் மதப்பூசல்களும் மற்ற பிரச் சினைகளும் அதிகமாக இருந்து வருகிறது என்பது நடைமுறையில் உள்ள உண்மையாகும். கோவை மதக்கலவரம் முதற்கொண்டு எத் தனையோ உதாரணங்கள் உள்ளன. இப்போது அந்த வரிசையில் புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...


கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள கருக்காக்குறிச்சி என்ற ஊர். கடந்த காலங்களில் ஒரே ஊராக இருந்த போதிலும் பல காரணங்களுக்காக வும் நிர்வாக வசதிக்காகவும் கரு.தெற்குத்தெரு கரு.வடதெரு என்று பிரிக்கப் பட்டு அதன்படி நிர்வாக மும் உள்ளாட்சியும் நடந்து வரு கின்றன. இந்த ஊருக்குள் கருப்புச் சட்டைக்காரர்கள் யாருமில்லை. அதற்காக மற்ற ஊர்களில் உள்ளவர்கள் போய் அங்கு குடியேறி காவல் காக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிவிட முடியாது. கருப்புச்சட்டையின் பணி என்ன? கொள்கை என்ன என்பதையெல்லாம் அறிந்து கொண்டு சித்தாந்த ரீதியில் கற்றுணர்ந்து தந்தை பெரியார் வழியில் செயல்படுத்தினால் மட்டுமே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க முடியும். அதுவும் அந்தந்த ஊர்க்காரர்களே முன்வந்து செயல் படுத்தினால் மட்டுமே அது சாத் தியம்.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில் கருக்காக்குறிச்சி வடக்குத் தெருவில் உள்ள தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேரந்த இளை ஞர்கள் 31.12.2013 அன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடியிருக் கிறார்கள். சாலைகளில் ஹேப்பி நியூ இயர் என்று எழுதியிருக்கிறார்கள். அப்போது கருக்காக்குறிச்சி தெற்குத் தெரு பட்டத்திக்காடு இலைகடி விடுதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வேறு இனத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து தகராறு செய்திருக்கிறார்கள். இரு தரப்புக்கும் வந்த தகராறில் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருக்கு கைமுறிந்திருக்கிறது. அதனால் ஆவேசப் பட்டவர்கள், வந்தவர்களின் வாகனங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் கைப்பற்றி, விரட்டி விட்டிருக்கிறார்கள். பாதிக்கப் பட்டவர்கள் 85-குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.உடையப்பன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்திமதி ஊராட்சி மன்ற உறுப் பினர் ரெங்கசாமி மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் புதன் கிழமை யன்று அடுத்த நாள் 1.1.2014- காலை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு லாரியில் வந்து இறங்கியிருக் கிறார்கள். தாங்கள் ஊருக்குள் இருக்க முடியாது என்றும் பாது காப்புக் கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே குடியேறப் போவதாக அறிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை ஊருக்குள் போகச் சொன்னதோடு பாது காப்புக்காக ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சொக்க நாதன் தலைமையில் காவல் துறையை அனுப்பி வைத்ததோடு அங்கேயே முகாமிட்டு வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

இச்சம்பவம் குறித்து அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாதுரை கூறும்போது இந்த ஊருக்குள் காலம் காலமாக இதே அச்சுறுத்தலோடுதான் வாழ்ந்து வருகிறோம். பலவகையிலும் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இப்போது எந்த நாட்டில் வசிக்கி றோம் என்பதே எங்களுக்குச் சந்தேக மாக இருக்கிறது. வெளியில் தெரியும் சுதந்திரம் எங்களுக்குக் கிடையாது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிராமத்துக்காரர்கள் எல்லோரும் தான் வேலை செய்கிறோம். அதில் கையெழுத்துப் போட தாழ்த்தப் பட்ட இனத்தவர்களுக்கு அனுமதி யில்லை. பறையர்கள் கைநாட்டுத் தான் வைக்க வேண்டும் என்கிறார் கள். யாரும் படிக்கக் கூடாது என்கி றார்கள். இந்தக் காலத்தில் படிக் காமல் இருக்க முடியாது. கடந்த ஆண்டு கரு.தெற்குத்தெருவில் உடல் நலக் குறைவால் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் கட்டிலில் படுத்திருந்திருக்கிறார்.

அந்த வழியாக ஊராட்சி மன்றத் தலைவர் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். திரும்பி அதே வழியில் வந்திருக்கிறார். அப்போதும் அந்தப் பெண் படுத்திருந்ததைக் கண்ட அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வந்து செருப்பால் அடித்து விட்டார். அதைத் தடுத்த தந்தைக்கும் செருப்படி விழுந்திருக் கிறது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் எடுத்த நடவடிக்கை யால் செருப்பால் அடித்த ஊராட்சி மன்றத் தலைவர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இத் தனைக்கும் அந்தச் செயலைச் செய்த ஊராட்சி மன்றத் தலைவர் பொது வுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் செய்த குற்றச் செயலால் அவர் கட்சியை விட்டு நீக்கப் பட்டார். கட்சியோ சித்தாந்தமோ கொள் கையோ செயல்படுவதைவிட சாதி ஆதிக்கம்தான் இப்பகுதியில் உயர்ந்து நிற்கிறது. அதை மீறிச் செயல்படுபவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சிலர் கொலை செய்யப்படுகிறார்கள் என்றார்.

இச்சம்பவங்கள் குறித்து பெயர் கூற விரும்பாத காவலர் ஒருவர் கூறுகையில் இந்தச் சம்பவம் மட்டுமல்ல. பள்ளியில் கொடியேற்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது. செருப்படி விழுந்திருக்கிறது. அது குறித்து முதலில் புகார் கொடுத்த வர்கள் பல கட்ட விசாரணைக்குப் பின் சில தினங்களில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று திருப்பி எழுதிக் கொடுத்து விட் டார்கள். அந்த நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்த வர்கள் முகத்தில் கரி புசிவிட்டது போல் ஆகி விட்டது. அந்தளவுக்கு நாளுக்கு நாள் தாழ்த்தப் பட்ட இனத்தவரான அவர்களுக்கு கொலைமிரட்டல் வந்து கொண்டி ருக்கிறது. உயிருக்குப் பயந்த அவர் கள் ஓடி ஒழிந்து கொண்டிருக் கிறார்கள். இப்போது கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்துக்கு வந்து விட் டார்கள் என்றார்.

- ம.மு.கண்ணன்,

Read more: http://viduthalai.in/page5/73733.html#ixzz2qtcVZXBU

தமிழ் ஓவியா said...


அங்கும் இங்கும்


மனிதாபிமானம்: மகன் பிறந்த நாளில் பயணிகளுக்கு காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக ஆட்டோ இயக்கினார், தச்ச நல்லூர் சீனய்யா தெருவைச் சார்ந்த என். பாலசுப்பிரமணியன் (40).

வீண் செலவு: ஜனவரி 1ஆம் தேதி ஆஞ்சநேயர் பிறந்த நாளை முன்னிட்டு ஆஞ்ச நேயருக்கு அபிசேகம் -சந்தனம், பன்னீர், தயிர், பால் மட்டும் 15,000 லிட்டர். நடந்தது குமரி மாவட்டம் சுசீந்திரத்தில்.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page5/73734.html#ixzz2qtcpTVLZ

தமிழ் ஓவியா said...


சேதுக்கால்வாய் - இராமனுக்கே உடன்பாடானது!


இராமாயணமும் சேதுக்கால் வாயும் என நான் எழுதிய விரிவான ஆய்வுக் கட்டுரை 12.10.07 நாளிட்ட விடுதலை நாளிதழிலும், அக்டோபர் 2007 பிற்படுத்தப்பட்டோர் குரல் திங் களிதழிலும் வெளி வந்துள்ளது. கடவுள் நம்பிக்கையும், நாட்டுப் பற்றும் உடைய மகாகவி

சுப்பிர மணிய பாரதியார்

கடலினைத் தாவும் குரங்கும் - வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும்
வடமலை தாழ்ந்த தனாலே - தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியினுள்ளே முழுகிப் போய் - அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம் !
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்று பொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் -

கவிதை மிக நல்லதேனும் - அக்கதைகள் பொய்யென்று
தெளிவுறக் கண்டோம் என உண்மையை உரக்கச் சொன்ன பாரதி,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்றும் சூளுரைத்துப் போய்விட்டார். ஆகவே, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காலம் வரை இராமர் பாலம் என்ற சொல்லப்பட இல்லை; சேதுக்கரை என்ற சொல்லாட்சிதான் பழக்கத்தில் இருந்தது என்பதுவும், அது வழிபாட்டுத்தலமாக விளங்கவில்லை என்பதுவும் தெளிவாகின்றது.


தமிழ் ஓவியா said...

வால்மீகி இராமாயணம், தமிழ் மொழி பெயர்ப்பில் (1963) சமுத்திர ராஜன் தெரிவித்தப்படி விஸ்வகர்மா வின் மகன் நளன், வானர சேனை களினால் கொண்டு வரப்பட்ட மலைகள், மரங்களினால் அணையை அமைத்தான் என்று குறிப்பிடுகின் றது. சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என பாரதி பாடினான், அந்தச் சேதுவை, ஆழப்படுத்தி, கடல்வழிப்பாதை அமைத்தால் இராமனுக்கு என்ன இழுக்கு வரும்? என்ற வினாவை எழுப்பி, கீழ்க்கண்ட விவரத்தையும் எழுதியுள்ளேன்.

தமிழ் ஓவியா said...


கம்பராமாயணத்தில் பழைய பதிப்புகளில் (வை.மு.கோபாலகிருஷ் ணய்யர் உரை 1932) மீட்சிப்படலத் தில் 171ஆம் பாடல் மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் தருக்கிய விடத்து... எனத் தொடர் கின்றது. அதாவது, போர் முடிந்த பின்னர், இராமன் புஷ்பக விமானத் தில் திரும்பிச் செல்கையில், கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இனிது செல்லுதற் பொருட்டு, தனது வில்லின் நுனியாற் சேதுவை கீறி உடைத்து வழிவிட்டார் என்ற உரை யுடன் காணப்படுகிறது என்பதாகும்.

அதாவது, தனது படைவீரர்களின் படகுகள் செல்ல வசதியாக, சேதுவைக் கீறி, உடைத்து, வழி ஏற்படுத்திக் கொடுத்தான் இராமன் என்று பொருள்பட எழுதப்பட்டுள்ளது. ஆகவே, இன்றய சூழ்நிலையில், படகுகள் செல்ல வசதியாக, ஏற்க னவே இராமனால் உடைக்கப்பட்ட சேதுக்கரையை, கப்பல்கள் செல்லத் தக்க வகையில் ஆழப்படுத்தினால் என்ன? இராமனுக்கு உடன்பாடான கருத்துதானே என அறிவியலாளர் களுக்குத் தோன்றும்!

ஆனால் மறுபக்கம், கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்லது மதவாதிகளுக்கு ஏன் முன் கதைகள் தெரியவில்லை என்ற வினாவும் எழும். 2007இல் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்லாயிரக்கணக்கான படித்த பக்தர்களைக் கூட்டி, வழிபாட்டுக் கூட்டம் நடத்திய நம்பிக்கையாளர் யோகி ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பிய போது, இதனை பொரு ளாதார சுற்றுப்புற மற்றும் பாரம்பரிய கலாச்சார வல்லுநர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என பதிலளித்த செய்தியை 29.09.07 இந்து நாளிதழ் மிக விரிவாக வெளியிட்டுள் ளது. அவர், இங்கே, மதவாதிகள் மற்றும் நம்பிக்கையாளர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும், அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பு, அடிப்படை கடமைகளையும் வலியுறுத்துவதை நம்மில் பலரும் மறந்து விடுகின்றோம், அவை பின் வருமாறு : -

தமிழ் ஓவியா said...


பிரிவு 51 (எ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை கடமை களாவன

(எச்) அறிவியல் மனப்பான்மை, மனிதத் தன்மை, ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் மற்றும் சீர்திருத்தங்களை வளர்த்தல். (அய்) மிகச் சிறப்பான இடத்தை நோக்கி முன்னேறுதல்.

வரலாற்றுத்துறை அறிஞர் ரோமிலா தாபர் எழுதிய ஆழமான கட்டுரையை 26.09.07 நாளிட்ட இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆய்வு நோக்கில், இது நாள் வரை இராமனின் வரலாற்றை முழுமையாக நிலைநாட்ட தட யங்கள் எதுவும் இல்லை என இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை கூறியுள்ளது சரியே எனக் குறிப் பிட்டுள்ளார். இராமனைப் பற்றிய வரலாற்றுத் தடயங்கள் இந்தியாவில் தான் இல்லை, வெளிநாட்டில் அதுவும் தெற்காசிய நாட்டில் கிடைத்துள்ளது என 20.07.1998 நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளேடுகளில் வரலாற்று நாயகன்தான் இராமன் -_ நிபுணர் கருத்துரை என கட்டு ரைகள் வெளி வந்துள்ளன.

ஆதலால், ஆய்வாளர்கள் அரசியலமைப்புப் பிரிபு 51ன் கீழ் விதிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்சினைகளை முழுமையாக ஆராய்ந்து, குறிப்பாக வால்மீகி ராமாயணத்தின் மூல நூலையும் ஆராய்ந்து, உரிய ஆதாரங்களை, காய்தல் உவத்தல் இன்றி, வெளிக்கொணர வேண்டும். ஆனால், பழைய நாட்களில் பெரியார் ஈ.வெ.ரா சொன்னது தான், என் நினைவில் இன்றளவும் ஓங்கி நிற்கின்றது. அதாவது பாமரர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று படிக்காத பாமரர்கள், பாவம் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இரண்டாவது வகை படித்த பாமரர்கள் என்ப தாகும். இன்றய பிரச்சினையே படித்த பாமரர்கள் மிகுந்திருப்பதால் தான்! புதைக்கப்பட்டுள்ள உண்மைகள் வெளிவந்தால் தானே நியாயங்கள் முழுமையாகப் பிறக்கும்!

ஆனால், உண்மைகளைப் புதைப் பதில் படித்த பாமரர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். தெற் காசியாவின் பல்வேறு வட்டாரங் களில் பழக்கத்தில் உள்ள முன் னூற்றுக்கும் மேற்பட்ட இராம காதைகளைத் தொகுத்து, தனது விரிவான புத்தகத்தை, ஆய்வாளர் ஏ.கே. இராமாநுஜன் வெளியிட்டு, அதனை டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயும் சேர்க்கப் பட்டிருந்தது. ஆனால் பல்கலைக் கழகத்தின் படித்த பாமரர்கள் இப் புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்தும் நீக்கி விட்டனர். இதனைக் கண்டித்து, புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் கே.ஏ. பணிக்கர் தெரிவித்த கருத்துக்களை, 23.11.11 நாளிட்ட இந்து நாளிதழ் விரிவான கட்டு ரையாக வெளியிட்டிருந்தது, படித்த பாமரர்களின் நோக்கம், இளம் தலைமுறையினருக்கு உண்மைகள் தெரிந்துவிடக் கூடாது என்பதாகும்.
ஆகவே, ஆய்வாளர்களே விழித் தெழுங்கள்! அடிப்படைக் கட மையை நிறைவேற்றுங்கள்!! இருட் டறையில் வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள்!!!


- ந. சேதுராமசாமி

Read more: http://viduthalai.in/page7/73735.html#ixzz2qtd9Vmw6

தமிழ் ஓவியா said...


மன்னர் காலத்தில் பயன்படுத்திய சுவர் விளக்கு


புதுக்கடை அருகே ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சூசைபாக்கியம் (வயது 65). இவரது உறவினர் ஒருவர் புதிதாக வீடு கட்ட நிலத்தில் இருந்து மண் தோண்டப்பட்டது. அப்போது, கல்லினால் செய்யப்பட்ட சுவர் விளக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்த விளக்கு சிற்பியின் கைவண்ணத்தில், கருங்கல்லில் குடைந்து எடுக்கப்பட்டு இருந்தது. மின்சார விளக்குகள் இல்லாத காலக்கட்டத்தில் வசதியானவர்கள் வீடுகளிலும், கோயில்களிலும் இந்த விளக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி, துணியை திரியாக பயன்படுத்தி பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது. - தினத்தந்தி (21-10-2013)

Read more: http://viduthalai.in/page8/73738.html#ixzz2qtdtwxoS

தமிழ் ஓவியா said...


சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான். அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

Read more: http://viduthalai.in/page8/73737.html#ixzz2qte6Dadq

தமிழ் ஓவியா said...


திராவிடர் திருநாள் விழாவில் (18.1.2014) பெரியார் விருது பெற்றவர்களின் விவரக் குறிப்புகள்


பல்இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி

இளையோர் முதல் முதியோர் வரை உள்ளம் மகிழ உற்சாகத்துடன் ரசிக்கும் ஓர் இசை தோல்கருவி இசை தென்னிந்திய பாரம்பரியமே தோல்கருவியில் இருந்து தோன்றியது தான்.

பெரியார் திடலில் பறையோசை ஒளிக்கும் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் செல்பவர்களின் செவிகளை அந்த இசை கவர்ந்திழுக்கும், அந்த தோல்கருவியில் எத்தனை வகை இசைக்கருவிகள் உள்ளதோ அத்தனையும் இவரின் விரல்களில் நர்த்தன மாடி மயக்கும் இசையைக் கொண்டுவரும், பாரம்பரிய இசையில் எழும் எந்த ஓசையும் இவரின் கைவண்ணத்தில் எழும்போது உலகையே கவர்ந்திழுக்கும்.

சென்னை கடற்கரையில் நடந்த விழா ஒன்றில் இவரது இசையை கேட்பதற்காக காலை முதல் பெரும் கூட்டம் காத்திருந்ததும், அந்த இசை ரசிகர்களின் விருப்பத்திற் கேற்ப வீட்டு பயன்பாட்டுப்பொருளில் கூட இசையை கொண்டு வந்தவர்.

சென்னையின் வீதிகளில் ஆரம்ப காலத்தில் தன் இசை மழையால் நனைத்த சிவமணி அவர்களின் இசை இன்று சர்வதேச எல்லையை கடந்து அதிர்வலைகளை உலகெங்கிலும் பரப்பிக் கொண்டு வருகிறது, திராவிடர்களின் இசைக்கருவியான தோல்கருவி இசையின் பரிணாமம் தான் இன்று உலகெங்கிலும் பல்வேறு வகையில் உருவத்தில், ஓசையில் மாற்றம் கண்டு இசைக்கிறது.

ஆகையால் தான் சிவமணி அவர்களின் கரம் ஆப்பிரிக்க டிரம்ஸ் என்றாலும் சரி, தென் அமெரிக்க கரீபியன் மத்தள இசை என்றாலும் சரி, சீனர்களின் ஒரு முக மத்தளமும், மெற்குலகின் ஜாஸ் டிரம்ஸ் என்றாலும் சரி இவரது கையில் சிக்கினால் எவர்க்கும் ஈடு கொடுக்காமல் தேக்கி வைத்திருக்கும் இசையைக்கூட வலிய வெளிக்கொண்டு வந்துவிடும். மேற்குலகின் இசையே இவரது கையில் சிக்கி இசைரகசியம் அவிழ்கிறதென்றால், இடையில் வந்த கர்நாடக இசை எம்மாத்திரம்.

என்ன ராகம்! என்ன தாளம்! என்று தன்னுடைய இசையிலேயே கர்நாடக இசையை விரல்களுக்குள் அடக்கிவிடுவார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற தபேலா மாஸ்டர் ஜாகிர் உசேன் மாத்திரமல்ல உலக அளவில் புகழ்பெற்ற தோல் கருவி இசைக்கலைஞர்கள் அனைவருமே தன்னுடைய இசைச் சங்கமத்தில் சிவமணி என்னும் இசை நதியுடன் சேர்ந்த பிறகுதான் ஆர்ப்பரித்து ஓடும் இசைப் பெரு நதியாக மாறுவார்கள், ஏ.ஆர்.ரகுமானின் புகழ் சேர்த்த வந்தே மாதரம் ஆல்பம் வெற்றியடைந்தற்கு இவரும் முக்கிய காரணம் இது இயக்குநர் பரத்பாலாவின் வார்த்தை,

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் உலக இசைப் பயணத்தில் சிவமணி இணையாமல் இருந்தால் அங்கு பயணம் இருக்கும் ஆனால் இசை இருக்காது, இது தமிழக நடிகர் பார்த்திபன் அமீரகத்தில் நடைபெற்ற வந்தேமாதரம் என்னும் இசை நிகழ்ச்சியில் கூறியது. ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்தில் சிவமணியின் இசைப் பங்களிப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்தது என்றால் அது மிகையாகாது, இது இந்தி நடிகர் அனில்கபூர் கூறியது.

சிவா என்று அன்போடு அவரது அன்னையால் அழைக்கப்படும் சிவமணி அவர்கள் கைக்கு எந்தப்பொருள் கிடைத்தாலும் அதனை இசைக் கருவியாக்கி ஓர் இசை ஆல்பத்தையே உருவாக்கி விடுவார். உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய தோல்கருவி இசைவல்லுநர்களின் வரிசையில் முதலிடம் இவருக்கு என்றும் உண்டு. தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதை கே.வி.மஹாதேவன் அவர்களின் இசைக் குழுவில் சிவமணியின் தந்தை பணியாற்றினார்.


தமிழ் ஓவியா said...

தன்னுடைய தந்தையின் கரங்களில் விளையாடும் டிரம்ஸ் ஸ்டிக்கை தன்னுடைய விரலில் எடுத்தபோது இவருக்கு வயது ஏழு அன்று பிடித்த கரங்கள் தன்னுடைய 12ஆவது வயதில் மேடையேற்றம் கண்டது, முதல் மேடையேற்றமே பிரபலங்களை கவர்ந்தது. 13-ஆவது வயதில் எஸ்.பி பாலசுப்பிரமணியனின் குழுவில் இடம் பெற்றார்.

அதன் பிற்கு எல்லாமே இவருக்கு ஏறுமுகம் தான், மேல்நாட்டு இசைக்கலைஞர்களான நியோல் கிராண்ட், மற்றும் பில்லிகொபன் போன் றோருடன் இணைந்து மும்பை ரங்பவனின் இவரது இசை நிகழ்ச்சி சர்வதேசத்தையும் ஈர்த்தது.

தமிழகத்தில் புகழ்பெற்ற வயலின் வித்துவான் குன்னக்குடி வைத்திய நாதன், டி.வி.கோபாலகிருஷ்ணன், தவில் இசைக் கலைஞர் வலையப்பட்டி சுப்பிரமணியம், பழனிவேல் மற்றும் எல்.சங்கர் போன்றவர்களுடன் இணைந்து இவரது இசைப் பய ணத்தைத் தொடர்ந்தார்.

இசைஞானி இளையராஜா இசையில் இவரது இசைப்பயணம் நமக்குச்சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை, தற்போது இரண்டு திரைபடங்களுக்கு இசை அமைத்துக்கொண்டு இருக்கிறார். பாரனும் ரசித்த திராவிட பாரம்பரிய இசையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற மண்ணின் மைந்தரான சிவமணி அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

நிழல் திருநாவுக்கரசு

புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்களைத் தமிழ்த் திரைப்பட உலகிற்குத் தந்த தஞ்சைத் தரணியே திரைத்துறை சாராத ஆனால் மிகுந்த திரை ரசனையும், அது தொடர்பான தொண்டுகளைக் கணிசமான அளவிற்கு வழங்கிய திரைத்துறை நேசிப்புக் கலைஞன் நிழல் திருநாவுக்கரசையும் நமக்கு அளித்துள்ளது.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற அளவில் நின்றுவிடாமல் மக்களுக்கான வாழ்வியலைச் சொல்லித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.

16.10.1962இல் பிறந்த இவருக்கு தொடக்கத்தி லிருந்தே திரைப்படத்தின்மீது ஆர்வம் ஆர்ப்பரிக்க துவங்கியது.

சிறு வயதில் படச் சுரு துண்டுகளை அட்டைப் பெட்டியைச் சீரமைத்து பொருத்தி, முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாக சூரிய ஒளியை பீய்த்து இருட்டறை யில் வெள்ளைத் துணியைத் திரையாகக் கட்டி குவி அடி மூலம் படம் காட்டியவர். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டும் எனச் சுட்டிக்காட்டியவர்.

கும்பகோணம் ஆடவர் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

அரங்கேற்றம், தினப்புரட்சி, போர்வாள், இன் டாட்காம் முதலிய இதழ்களில் உதவி ஆசிரியராகவும் மற்றும் மித்ரா பதிப்பகத்திலும் பணியாற்றினார்.

தாமரைசெல்வி, ரிஷபம், நிழல் முதலிய பதிப்பகங்கள் மூலம் 118 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இசைத் துறையில் மறைக்கப்பட்ட வரலாறாய் தொலைந்துபோன இசைத் தொண்டர்களைப் பற்றி சோழநாடன் என்ற பெயரில் நாதசுர சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளை வரலாறு, தமிழிசைத் தவமணி மதுரை மாரியப்ப சாமிகள் வரலாறு, வீணை அதன் பேர் தனம், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு முதலியவற்றை வெளியிட்டுள்ளார்.

இதில் கொடுமுடி கோகிலம் கே.பி சுந்தரம்பாள் வரலாறு தமிழக அரசு விருது பெற்றது. தமிழில் இல்லாத பல துறைப் புத்தகங்களைத் தமிழில் கொண்டு வந்துள்ளார்.

மூன்றாம் உலக இலக்கிய வரிசை என்று தொடங்கி 15 உலக இலக்கியங்களை வெளியிட்டார். இன்றுள்ளவர் களைப் போல காசு மட்டுமே குறியாக இல்லாமல் செயல்பட்டார் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லமுடியும்.

தமிழ் ஓவியா said...

இவரது சொல்லப்படாத சினிமா புத்தகம், குறும்பட - ஆவணப் படங்களைப் பற்றி, இந்திய அளவில் முதன்முதலில் தமிழில் இவரால் வெளியிடப்பட்டது.

திரைத்துறை சார்ந்து, சினிமா சட்டகமும், சாளரமும், சொல்லப்படாத சினிமா, தமிழ் சினிமாவின் பரிணா மங்கள், நவீன கன்னட சினிமா, ஈரானிய சினிமா, பெர்க்மன் மாயவிளக்கு, பேட்டில் ஷிப் பொட்டம்கின் போன்ற 20 நூற்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

நவீன சினிமாவுக்காக நிழல் என்ற இதழை 14ஆண்டுகளாக நடத்திவருகிறார். பல்வேறு இழப்புகளையும் தாங்கிக்கொண்டு நிழல் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. இதில் திரைப்பட வரலாறு, தொழில் நுட்பக் கட்டுரைகள், விமர்சனம், பயிற்சி, திரைக்கதைகள், பழைய நடிகர்கள் பற்றிய கட்டுரைகள், நேர்முகங்கள், கலந்துரையாடல்கள், உலக திரைப்பட விழாக்கள் பற்றிய செய்திகள் வெளியிடபடுகின்றன.

நிழல் பதிப்பகத்தின் மூலம்...

சொல்லப்படாத சினிமா (குறும்பட, ஆவணப்பட வரலாறு), மக்களுக்கான சினிமா, ஈரானிய சினிமா, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், மாயவிளக்கு (பெர்க்மன் வாழ்க்கை வரலாறு), போர்க்கப்பல் பொடம்கின் (திரை விமர்சனம்) போன்றவற்றை வெளியிட்டவர்.

நிழல் நிறுவனம் தமிழகத்தில் பல கிராமங்களில், கிராமப்புற திரைப்படச் சங்கங்களைத் தோற்றுவித்து உள்ளது.

புத்தகம், தொலைக்காட்சி, இணையம் மற்றும் பத்திரிகை மூலம் குறும்படங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்.

தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்தி, சாதாரண கிராமப்புற இளைஞனுக்கும் திரைப்பட தொழில் நுட்பத்தைக் கற்றுத் தந்தவர்.

நடிப்பு, திரைக்கதை, மேக்கப், கேமரா, எடிட்டிங் முதலியவற்றைக் கற்பித்து, 4500க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். இப்பட்டறை கல்லூரி சென்று கற்க முடியாத, பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பட்டு வருகிறது. வெளிநாட்டு, வெளிமாநிலக்காரர்களும் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

பலர் இன்று திரைப்படத் துறையிலும் / குறும்படத் துறையிலும் பணி ஆற்றி வருகின்றனர். இந்தப் பட்டறை குறும்படம் மற்றும் ஆவணபடத் துறை பற்றிய புரிதலை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கொண்டு சென்றுள்ளது. தமிழக இளைஞர்கள் தயாரித்த குறும்படங்களை உலக அளவில் எடுத்து சென்று பரிசுகளும், விருதுகளும் பெற நிழலே முதன் முதலில் வழி வகுத்தது.

தமிழ் ஓவியா said...

திரைப்படத் துறையைப் பற்றிய ஆவணக் காப்பகம் ஒன்றை நிழல் நிறுவி உள்ளார். இதில் உலக திரைப்படங்கள் / குறும்படங்கள் / ஆவணப்படங்கள் / திரைப்பட புத்தகங்கள் / இதழ்கள் / நிழற்படங்கள் / இசைத் தட்டுகள் / பாட்டுப் புத்தகங்கள் முதலியவற்றை நிழல் விரும்பி சேகரித்து வருகிறார்.

விருதுகள்

செம்மொழி மாநாட்டில் பதிப்பாளர் விருது.

திருப்பூர் தமிழ் சங்கம் (1995) சிறந்த பதிப்பாளர் விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பாக சதத்ஹசன் மண்டோ கதையை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக சிறப்பு பதிப்பாளர் விருது.

கலகம், சிந்தனையாளன் மற்றும் மாற்றத்திற்கான ஊடக படைப்பாளிகள் தமிழ் அமைப்பினரால் சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

பிரியாபாபு

தமிழ் ஓவியா said...

வலி, மனவலி இதனை அனுபவிப்பவருக்குத்தான் வேதனைதெரியும் எனக்கு ஏன் இந்த கொடுமை! என்று மூலையில் ஒடுங்காமல் மூன்றாம் பாலினம் நாங்கள். முன்னுக்கு வருவதில் ஆணுக்கும் பெண்ணிற்கும் சளைத்தவர்கள் இல்லை, சாதனைப் படைப்பதற்கு சான்றாக இதோ நானே இருக்கிறேன், என மன வலியை மனவலிமையால் வென்று விருதுபெற மேடையில் வீற்றிருக்கும். பிரியா பாபு படித்தது பன்னிரெண்டு பட்டயப்படிப்பாக குளிர்சாதன தொழில்நுட்பக் கல்வி. வேலை பார்க்கலாம். தான் மேலும் வளரலாம், என்றில்லாமல் என் பாலினத்தைச் சேர்ந்த அனைவரும் மேன்மை பெறவேண்டும் என தொண்டறம் செய்ய புறப்பட்ட இவர்......

1998இல் மும்பையில் முக்தாம்பர் சேவை மய்யத்தில் பணிபுரியும் போது சிவப்பு விளக்குப்பகுதியில் சமூக விரோதிகளால் சிக்கிக்கொண்ட 50-க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க பேருதவியாக இருந்தவர். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஆதிவாசிப்பெண்களின் நலனுக்காக போராடியவர். தாய் சமூகநலப்பணிக் குழுவில் 1999 முதல் 2000 வரை பணிபுரிந்தவர். இவரின் பணிக்காலத்தின் போது திருநங் கைகளுக்கான தினம் முதல் முதலாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது. எயிட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய் பற்றிய விழிப்புணர்வை திருநங்கைகளின் மத்தியில் ஏற்படுத்தியவர்

தமிழ் நாடு திருநங்கைகள் புனர்வாழ்வு அமைப்பிலும் தென் இந்திய திருநங்கைகளின் உரிமைகள் அமைப்பிலும் பணியாற்றி அவர்களின் நல்வாழ்விற்காகவும் அவர்களு டைய உரிமைகளுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக் காகவும் பெரிதும் பங்காற்றிவருகிறார்.

6 மார்ச் 2004 ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த தலித் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் ராகினி அவர்களுடன் மற்றும் இவரும் இணைந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருநங்கைகளுக்காக ஓட்டுரிமை குறித்து அரசை நிர்ப்பந்திக்க வழக்கு ஒன்றை தொடுத்தவர். கலைத்துறையில் சுடர் அமைப்பில் இணைந்து திருநங்கைகள் பற்றிய குறும்படங்களை இயக்கியவர்.

தமிழ் ஓவியா said...

மற்றும் கண்ணாடிக் கலைக்குழு என்ற கலைக்குழுவினருடன் இணைந்து இதயத்தின் குரல் (மனசினால் லயிப்பு) மற்றும் நினைவுகள் (உயிர்த்த நினைவுகள்) போன்ற மேடை நாடகங்களை பள்ளி, கல்லூரி மற்றும் வீதிகளில் என 75 தடவைகளுக்கு மேலாக நடத்தியவர்.

இந்நாடகங்களின் மூலமாக திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியவர். தன்னுடைய உறுதியான போராட்டத்தின் மூலமாக காஞ்சீபுரத்தில் திருநங்கைகளுக்கென மாவட்ட ஆட்சியரின் நிதி ஒதுக்கீடு மூலம் 15 இலவச வீட்டுமனை களில் வீடுகளை கட்டித்தந்தவர்.

2007ஆம் ஆண்டு யூத் இந்தியா என்ற ஆங்கிலப் பத்திரிகையில் அர்த்தநாரீஸ் வரம் என்ற பெயரில் திருநங்கைகளின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சமூக களத்தில் பொது இடங்களில் திருநங்கைகள் நடத்தப்படும் முறைகள் குறித்தும் பல கட்டுரைகள் எழுதியவர்.

தமிழ் நாடு திருநங்கைகள் நலவாழ்வு மய்யத்தின் உறுப்பினராக 2008-2011 வரை பணியாற்றினார். அப்போது திருநங்கைகளுக்கான அரசு உதவித்திட்டங் கள் திருநங்கைகளுக்கு போய்ச்சேர பல்வேறு வகையில் உதவியாக இருந்தார்.

காவல் துறையின் நல்லிணக்க குழுவின் மூலம் காவல் துறையினர் வழக்குரைஞர் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழுவுடன் இணைந்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் திருநங்கைளுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர்.

வானவில் அமைப்பில் ஆலோச கராக இருந்து வருகிறார். வானவில் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். இந்த அமைப்பின் குடும்பம் மற்றும் எதிரொலிக்கும் கர வொலிகள் போன்ற மேடை நாடகங்கள் நடத்தியுள்ளார். திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிபட்டறை ஒன்றையும் நடத்தினார்.

ஆராய்ச்சி மற்றும் ஆவணங்கள்

மருத்துவர் திரு வெங்கடேசன் சக்ரபாணி அவர்க ளோடு இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள திருநங்கைகளுக்கான புனர்வாழ்வு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கான மருத்துவ உதவி, பாலியல் நோய்களுக்கான ஆலோசனை, மற்றும் அவர்களின் புனர்வாழ்விற்காக பல்வேறு ஆய்வுகள் நடத்தி அவற்றைச் செயல்படுத்தி வருகிறார். நாட்டுப்புற இசைப்பாடல்களின் மூலம் திருநங்கைகளின் வாழ்க்கைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தேசிய நாட்டுப்புற கலைக்குழுவினருடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

இவரின் படைப்புகள்

திருநங்கை சமூக வரைவியல் என்ற தன்னுடைய முதல் நூலை 2007 எழுதியுள்ளார். மூன்றாம் பாலின் முகம் என்னும் நாவலை 2008இல் எழுதிவெளியிட்டார். 2009இல் திருநங்கைகளும் அவர்களின் சமூக உரிமைகளும் என்ற நூலை எழுதினார்.

2010இல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளின் வாழ்வு பற்றிய நூலை எழுதினார். 2012இல் தமிழகத்தில் திருநங்கைகளின் சமூக வரலாறு என்ற நூலை எழுதினார்.

இவர் பெற்ற விருதுகள்

விருது 2008-ஆம் ஆண்டு அரிமா சங்கத்தின் திருநங்கைகளில் சிறந்த சமூக சேவகர் என்ற விருதை பெற்றவர். 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த எழுத்தாளருக்கான சு.சமுத்திரம் நினைவு விருதைப் பெற்றவர்.

2011ஆம் ஆண்டு தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் வாழ்நாள் சிறப்பு எழுத்தாளர் விருதைப் பெற்றவர். 2011இல் ஏப்ரல் திருநங்கைகளின் வாழ்க்கை வழிகாட்டி என்ற நூலின் மூலம் திருநங்கைகளுக்கான அரசு சலுகை மற்றும் உதவித்திட்டங்களை விவரமாக அறிந்து கொள்ளும் வகையில் எழுதினார்.

2012 - திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் விருதைப்பெற்றவர். ஆனந்தவிகடன் வார இதழ் தேர்வு செய்த தமிழ் நாட்டில் சிறந்த 10 பேர் பட்டியலில் இவரும் ஒருவர்.

Read more: http://viduthalai.in/page-6/73788.html#ixzz2qtegX2Zc

தமிழ் ஓவியா said...


இதுதான் மதச் சார்பின்மையா? இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயங்களால் சர்ச்சை

புதுடில்லி, ஜன. 19- மாதா வைஷ் ணவ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகை யில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தங்களது மத உணர்வை புண் படுத்துவதாகவும், மதச்சார்பின் மைக்கு இது எதிராக இருப்பதாகவும் முஸ்லிம் மத குருமார்கள் குறிப்பிட் டுள்ளனர்.

இந்திய நாணயத்தில் ஒரு இந்துமதக் கடவுளின் உருவம் வரும் போது தங்களின் பிறைச்சந்திரனும் நாணயங்களில் கொண்டுவரப்பட லாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

நேற்று பழைய டில்லியில் உள்ள முஸ்லிம் வர்த்தகப் பகுதியில் உள்ள ஒரு கடைக்காரரான முகமது அப்சல்கான் 500 ரூபாய்க்கு 5 ரூபாய் நாணயங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் கடவுளின் உருவத்தைக் கண்டதும் முதலில் இவை போலி யானவை என்று நினைத்துள்ளார்.

அதன்பின்னரே அவருக்கு அரசு அச்சடித்துள்ள புதிய நாணயங்கள் இவை என்று தெரியவந்துள்ளது. தான் எந்த மதத்திற்கும் ஆதரவு அளிப்பவர் அல்ல என்றபோதிலும் இவ்வாறான நாணயங்களை அரசு வெளியிடுவது வித்தியாசத்தைத் தோற்றுவிக்கும் என்று கான் குறிப்பிட்டார்.

இத்தகைய நாணயங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்துவது தவிர்க்கப் படவேண்டும். இத்தகைய நாணயங் கள் பிரச்சினைகளைத் தூண்டும் விதத்தில் பயன்படுத்தப்பட முடியும். தேச நலனுக்காக அரசு இவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று பதேபூர் மசூதியின் இமாமான முப்டி முகமது முகரம் அகமது கூறியுள்ளார்.

இதுபோன்ற நினைவு நாணயங்கள் வெளியிடப்படுவது சாதாரண நடைமுறை என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பாளர் அல்பனா கிள்ளவலா, மத்திய அரசின் வெளியீட்டை தாங்கள் விநியோகம் மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார்.

ஹோமிபாபா, செயின்ட் அல் போன்சோ, கதர் கிராமத் தொழில், இந்தியன் ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, லால்பகதூர் சாஸ்திரி, தண்டி யாத் திரை, சுவாமி விவேகானந்தா, மோதி லால் நேரு, மதன் மோகன் மாளவியா, மத்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் கு.க இயக்கம் போன்ற நினைவு நாணயங்கள் இந்தியாவில் வெளி யிடப்பட்டுள்ளன.

ஆயினும், வைஷ் ணவி தேவியின் உருவம் இந்து மதத்தை மட்டுமே குறிப்பிடுவதால் அரசு இதுபோன்ற முடிவுகளில் கவன மாக இருக்க வேண்டும் என்று வர்த்த வணிகரான கான் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/73769.html#ixzz2qtgHFrIr

தமிழ் ஓவியா said...


கடவுள் நம்பிக்கை இன்னமும் தேவையா?


மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓரணுவும் அசையாது

கடவுள் கருணையே வடிவானவன்; சர்வதயாபரன்

கடவுள் ஆபத்பாந்தவன் அகிலத்தையும் அறிந்தவன்

அவனே வழி நடத்துபவன்; அவனே ஆட்டி வைப்பவன்!

- இப்படியெல்லாம் நாளும் மதப் பிரசங்கிகளும், மதத் தலைவர்களும், அர்ச்சகர்களும், மதத்தின் மூலம் பக்தி வியாபாரம் செய்யும் கடவுள் தரகர்களும் கூறி, காலங் காலமாக பக்தி வியாபாரத்தைச் செழுமையுடன் நடத்தி, உழைப்பின்றி உண்டு கொழிக்கின்றனர்.

ஆனால், உண்மையாக நடக்கும் நடப்புகள் இக்கூற்றுகளைப் பொய்யாக்கவல்லோ செய்கின்றன!

எடுத்துக்காட்டாக இன்று வெளிவந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் 9ஆம் பக்கத்தில் ஒரு செய்தி கடவுள் காப்பாற்றினாரா? பாதுகாத்தாரா?

கூடிய திருவிழாக் கூட்ட காலத்தில் ஆண்டுவாரி யாக எவ்வளவு பக்த கோடிகள் விபத்தில் நெரிசலில் சிக்கி உயிர் விட்டுள்ளனர் என்ற கோரச் செய்தியைப் பாருங்கள். கடவுள் காப்பாற்றி உதவினாரா இல்லையே!

1. 2003 ஆகஸ்ட் 27 நாசிக் (மகராஷ்டிர மாநிலம்): அருகில் நடந்த கும்பமேளாவில் கோதாவரி ஆற்றுக்கு அருகில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழந்த வர்கள் சுமார் 40 பேர்.

2. 2005 ஜனவரி 25 (ராஜஸ்தான்): மந்தார் தேவிகோயில் திருவிழா நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்கள் சுமார் 300 பேர்.

3. 2008 மார்ச் 27 (மத்திய பிரதேசம்): கரில்லா கிராம திருவிழாவில் நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை எட்டு (8) பேர்.

4. 2008 ஆகஸ்ட் 3 (இமாச்சல் பிரதேசம்): மழைக்காகப் போட்டிருந்த பாதுகாப்புக் கூரை உடைந்து திருவிழாவுக்கு வந்தவர்கள் - நைனாதேவி கோயில் திருவிழா - இறந்தோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 140 பேர் ஆகும்!

5. 2008, செப்டம்பர் 30 (ராஜஸ்தான்): ஜோத்பூர் சாமுண்டிதேவி இந்து கோயில் திருவிழா நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை - கோயிலுள்ளே! (ஜோத்பூர் மேரங்கங்கார் கோட்டை அருகில்).

6. 2010 மார்ச் 4 (உத்தரப்பிரதேசம்): ராம் ஜானகி கோயில் திருவிழாவில் கட்டி முடிக்கப்படாத மேல் கூரைக் கட்டடம் விழுந்து 63 பேர் செத்தனர்!

7. 2011 ஜனவரி 14 (கேரளா): சபரிமலை அய்யப்ப பக்தர்கள் விழா முடிந்து திரும்பிடும் நிலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தோர் 100 பேர்களுக்கு மேல் அய்யப்பப் பக்தர்கள்!

8. 2011 - நவம்பர் 8 (உ.பி.): ஹரித்துவார் அருகில் கங்கை ஆற்றில் 22 பேர் படகு கவிழ்ந்து இறந்தனர்.

9. 2012 பிப்ரவரி 19 (குஜராத் மாநிலம்): ஜுனாகாத் பவ்நாத் கோயில் மஹா சிவராத்திரி திருவிழா நெரிசலின்போது இரவு 6 பேர் உயிரிழந்தனர்!

10. 2013 அக்டோபர் 13ஆம் தேதி (மத்தியப் பிரதேசம்): தத்தியா மாவட்டம் அருகே உள்ள கோயில் திருவிழாவுக்கு ஒரு பாலம் வழியே செல்லும்போது பாலம் முறிந்து இறந்தவர் எண்ணிக்கை 89 பேர்.

மேலே காட்டிய வெறும் நெரிசலால் உயிர் இழந்த பக்த கோடிகள் மட்டுமே!

உத்திரகாண்ட் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இதில் காட்டவில்லை!

கோயில்களுக்குச் சென்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்துக்களால் மறைந்த உயிர்களை இதில் குறிப்பிட வில்லை. நடுநிலையோடு, இப்போது சொல்லுங்கள் கடவுள் (கற்பனை) கருணை உள்ளது தானா?

போதைப் பொருளில் மூழ்கியவன் அதை மீண்டும் மீண்டும் எப்படித் தேடுவானோ அப்படி கடவுள் கடவுள் என்று கதறி கைப் பொருளையும், மானத்தையும், இழந்து கொண்டே இருக்கிறார்கள்! என்னே கொடுமை!!

சிந்தியுங்கள் பக்தர்களே!

கடவுளை மற; மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் அறிவுமொழியினைப் பின்பற்றி மாமனித ராகா விட்டாலும்கூட குறைந்தபட்சம் ஆறறிவு மனிதர் ஆகுங்கள். மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற சையதினா முகமது புர்ஹானுதீனின் (உள்படம்) இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தாவூதி போரா சமூகத்தினர் - நெரிசலில் 18 பேர் பலி!

Read more: http://viduthalai.in/e-paper/73767.html#ixzz2qtgjTC4i

தமிழ் ஓவியா said...


பிழிவுகள்... பிழிவுகள்...

ஒத்தி வைப்பு

சென்னையில் நாளை (20.1.2014) நடைபெற விருந்த தமிழ்நாடு - இலங்கை மீனவர் பேச்சு வார்த்தை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. (ஒத்தி வைக்கப்பட்டாலும் தேவை - நிரந்தரத் தேர்வு!). வழக்கமானது தான்

சென்னை - நந்தம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டது. (வானிலை அறிக்கைபோல இது தமிழ்நாட்டின் அன்றாட செய்தி தானே!)

கோயிலுக்கு

திண்டிவனம் - தீர்த்தக்குளம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின் மனைவி கிருட்டின வேணி கட்டி வைத்திருந்த கோயிலிலேயே அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

(காத்தல் தொழில் கடவுள் எங்கே போனதாம்?)

நீதிபதி கேட்கிறார்

சென்னையில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நீலாங்கரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதி என்ன எழுது கிறார்? சைவ மதத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக் கறி படைத்தவர்) சிறுத் தொண்டர் நாயனா ருக்கும் (பிள்ளைக் கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்து விட்டு, கடவுளை சைவமாக்க முயற்சிப்பது எவ்விதத்தில் சரி என்ற வினாவை தம் கட்டுரையில் எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி சந்துரு. (கடவுளேகூட மீன் அவதாரம் (மச்ச அவதாரம்) எடுத்தவர்தானே?)

பதற்றம்

மோடி பிரதமரானால் இந்திய அமெரிக்க உறவில் பதற்றம் அதிகரிக்கும் என்று டைம்ஸ் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது. (இந்தியாவுக்குள்ளேயே நாளும் பதற்றம் வெடித்துக் கொண்டே இருக்குமே - முதலில் அதைப்பற்றித் தானே கவலைப்பட வேண்டும்)

ஒத்தி வைப்பு

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்தியா முறியடித்தது.
(இது என்ன ஓடி விளையாடு பாப்பா என்ற கதையாக அல்லவா அடிக்கடி நிகழ்கிறது!)

Read more: http://viduthalai.in/e-paper/73768.html#ixzz2qtgxmLqf

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா
திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா

திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதாயத்தை தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம் பெரியார் விருது வழங்கி தமிழர் தலைவர் எழுச்சியுரை

சென்னை, ஜன.19- திராவிடர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாச கர் வட்டம், பகுத்தறி வாளர் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தி வரும் தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திரா விடர் திருநாளை பண் பாட்டுத் திருவிழாவாக வும், தமிழ்ப்புத் தாண்டு - பொங்கல் விழாவாகவும் மிகுந்த சிறப்புடன் நடத்தி வருகின்றன.

இவ்விழாவின் இரண் டாம் நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை விருந்து என பெரியார் திடலே களை கட்டியது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலை மற்றும் இசைக் கலைஞர்களை பாராட்டியும், பெரியார் விருது வழங்கி சிறப் பித்து பேசுகையில்:- திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதா யத்தை தகர்த்த இயக்கம் தான் திராவிடர் இயக் கம் என பெருமிதம் கொண்டார்.

நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள்


தமிழ் ஓவியா said...

திராவிடர் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு -பொங்கல் விழா பண் பாட்டுத் திருவிழாவாக சென்னை பெரியார் திடலில் நேற்று (18.1.2014) இரண்டாம் நாள் நிகழ் வாக மாலை 4 மணியள வில் பெரும் திரளாக கூடியிருந்த மக்களி டையே, து.பாப்பம்பாடி எம்.முனுசாமி வழங்கும் பெரியமேளம் கலைக் குழுவின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத் திக் காட்டப்பட்டன.

பெரியார் திடலில் செயற்கைக் கடல் - மீனவர் குடில்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிறு வர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள், பொது மக்கள் கழகத் தோழர் கள் தோழியர்கள் இக் கலை நிகழ்ச்சிகளை வெகுவாக பார்த்து ரசித்து பாராட்டினர்.

மூன்று நாள்களுக்கு நடைபெறும் இவ்விழா விற்காக பெரியார் திடல் முழுவதும் திராவிடர் திருநாளையொட்டி, 5 வகை நிலங்களில் ஒன் றான நெய்தல் நிலத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வளாகத்தின் நுழை வாயில் முதல் பகுதியில், கடல் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் செயற்கை கடல் ஒன்றும், அதன் அருகில் மீனவர் குடில் ஒன்றும் கட்டப் பட்டிருந்தது.

மீனவர் குடில் அருகே, கடல் சார் உணவுகளான பல்வேறு வகை மீன்கள் பொறித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததால் பொங்கல் விழாவை காண வந்த மக்கள் அதை ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலைக் குறிக்கும் தமிழ் பெயர்களான, அரவல், அரி, உவர், உவரி, கயம், சுழி, தாழி, திரை உள்பட 65 பெயர்கள் பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழர்களின் சிறப்புகள்

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களின் பண்டைய துறை முகங்கள், தமிழர்கள் கப்பல் கட்டப் பயன்படுத்திய அளவைகள் போன்றவையும் குறிப்பிடப்பட்டிருந் தன.

நிழல் திருநாவுக்கரசு, டிரம்ஸ் சிவமணி, பிரியா பாபு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கினார்.

கடலில் பயணம் செய்யும் மரக்கலம் செய்வதில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஆதாரமாக இன்னும் தமிழிலே வழங்கப்படும் கப்பல் தொடர்பான ஆங்கிலச் சொற்கள் மற்றும் தமோய் இன மக்கள் பயன்படுத்தும் கட்டு மரங்களின் அடித்தளங்களில் இன்றும் அம்மா, அக்கா வக்கா என்று தமிழ் சொற்கள் உள்ளதுடன், நியூசிலாந்தில் அவர்கள் வசிக்கும் பகுதியின் பெயரும், வான்கரை என தமிழில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், லெப்டினன்ட் வாக்கர் என்னும் ஆங்கிலேய மாலுமி ஒருவர், கி.பி.1811இல் நமது கப்பல்களைக் கண்டு, ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும். ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அரிய தகவலும் வைக்கப்பட்டுள்ளது.

உணவுத் திருவிழா

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழாவை திரா விடர் பெருங்குடி மக்கள் கொண்டாடும் வகையில் இம்மூன்று நாள் விழாவையொட்டி, பெரியார் திடலில் உணவுத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

தமிழ் ஓவியா said...

இதில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, சிறீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி காராசேவு, மணப்பாறை முறுக்கு, கீழக்கரை கலகலா, விருதுநகர் வீச்சு புரோட்டா போன்ற உணவுப் பொருள்களும், மதுரை, நினைவில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் தேவசகாயம் அவர்களை நிறுவனராக கொண்டு செயல்பட்டு வரும் வணிக நிறுவனமான தமிழக எண்ணெய் பலகாரங்களான மிக்சர், ஓமப்பொடி, சீவல், முறுக்கு வகைகள், அதிரசம் போன்ற பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் மிகுந்த விருப்பத்துடன் வாங்கிச் சாப்பிட்டனர்.

ட்ரம்ஸ் மைக்கேல் வழங்கிய எதிலும் இசை பிறக்கும் நிகழ்ச்சி

பெரியார் திடலில் மாலை து.பாப்பம்பாடி எம்.முனுசாமி வழங்கிய பெரிய மேளம் கலைக்குழு வின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் ட்ரம்ஸ் மைக்கேல் வழங்கிய எதிலும் இசை பிறக்கும் நிகழ்ச்சியும், பிளாக்பேர்ல் குழுவினரின் இசை விருந்தும் காண்போர் மெய் சிலிர்க்கும் வகையில் நடைபெற்றது.

பெரியார் விருதுகளை தமிழர் தலைவர் வழங்கினார்

இதைத் தொடர்ந்து பெரியார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி அறிமுக உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றினார். வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பெ.செல்வராசு, மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், சென்னை கழக மண்டல தலைவர் தி.இரா.இரத்தின சாமி, ப.உதயகுமார், புழல் ஆனந்தன், செ.ர.பார்த்த சாரதி, செ.கனகா, க.வனிதா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து பெரியார் விருது பெறும் பெருமக்களான தோழர் மாற்றுப் பாலினத்தை சேர்ந்த பிரியா பாபு அவர்களின் தன்விவரக் குறிப்பை தோழியர் மரகதமணி வாசித்தார். இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்களின் தன் விவரக்குறிப்பை தோழர் இசையின்பன் வாசித் தார். இதழாளர் நிழல் திருநாவுக்கரசு அவர்களின், தன் விவரக்குறிப்பை மயிலாடுதுறை கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வாசித்தார். பெரியார் விருது பெறும் இம்மூவரின் சாதனை களைப் பாராட்டி அரங்கில் கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.

இதையடுத்து இம்மூன்று சாதனையாளர் களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, பெரியார் விருது (சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகில் வைக்கப்படும் பெரியார் சிலையின் மாதிரி) வழங்கி அவர்களின் சாதனையை பட்டியலிட்டு எடுத்துக் கூறி வாழ்த்தி பாராட்டி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக பெரியார் விருது பெற்ற பெருமக்க ளான தோழர் பிரியாபாபு, டிரம்ஸ் சிவமணி, இத ழாளர் நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் ஏற்புரை யாற்றினர்.

குறிப்பாக பிரியாபாபு பேசுகையில்: - தந்தை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திரு நாளில், பெரியார் விருது பெறும் முதல் திருநங்கை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். திருநங்கைகளை மாற்றுப் பாலின இனத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட வேண்டும் என்று பிரியா பாபு கூறினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

இவ்விழாவில் பெரியார் விருது வழங்கி சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுகையில்:- பெரியார் விருது பெற்ற இம்மூவரும் அற்புதமான புதையலாக நம்மினம் பெருமிதம் பெறக்கூடிய ஆற்றலாளர்களாக இருக்கிறார்கள். திருநங்கை பிரியாபாபு அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கலாம், ஆனால் பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாக பிரியாபாபுவை நாங்கள் பார்க்கிறோம். திருநங் கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த இந்த சமுதாயத்தை மாற்றி தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.

அதே போன்று நாம் எல்லாம் நாவால் பேசு கிறோம். இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்கள் விரல்களால் பேசுகிறார். அவரின் சாதனைகளை நாமும், அவரின் தாயாரும் பார்த்து மகிழ்கிறோம். புதை பொருள்களை வெளியே கொண்டு வரும் பணியை மிகவும் போற்றத்தக்க வகையில் செய்து வருபவர் இதழாளர் நிழல் திருநாவுக்கரசு அவர்கள். எனவே அவரைப் பாராட்டி சிறப்பிப்பது மிகவும் மகிழ்ச்சியானது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும் தொண்டுமாகும்.

அந்த வகையில் சாதனையாளர்களான தோழர் பிரியாபாபு, டிரம்ஸ் சிவமணி, இதழாளர் நிழல் திருநாவுக்கரசு ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் அளித்தால் உலக அளவில் புகழ் பெறுவார்கள். எனவே இந்த விருது அவர்கள் கையில் வழங்கப் பட்ட வாளாக இருக்கும் என தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய து.பாப்பம்பாடி எம்.முனுசாமி அவர்களின் பெரிய மேளம் கலைக்குழுவினருக்கும், ட்ரம்ஸ் மைக்கேல் குழுவினருக்கும், பிளாக் பேர்ல் குழுவி னருக்கும் தமிழர் தலைவர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மற்றும் கழகத் தோழர்கள் - தோழியர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73773.html#ixzz2qthFkuQg

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தேவையற்ற வாசகங்களைப் புறந்தள்ளி இடஒதுக்கீட்டை அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?

தமிழர் தலைவரின் சமூகநீதிப் பாதுகாப்பு அறிக்கை நீதிமன்றங்கள் தம் கருத்தாகச் சொல்லும் சொற் களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகநீதியைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட்டால் கொடுக்கப்பட்ட டில்லி AIIMS FACULTY -பேராசிரியர்கள் போட்ட வழக்கில் 18.7.2013 தீர்ப்பில் - மண்டல்கமிஷன் வழக்காகிய இந்திரா சஹானி வழக்கு என்ற வழக்கில் வெறும் கருத்துரையாக,OBSERVATION- (OBITER-DICTA) சொல்லப்பட்ட ஒன்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு (Super Speciality) மருத்துவத்துறையில் இட ஒதுக்கீடு கொடுப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் கருதலாம் என்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெரும்பான்மை தீர்ப்பில் பாரா 861இல்

“..... Be that as it may, we are of the opinion that in certain services and in respect of certain posts, application of the rule of reservation may not be advisable for the reason indicated hereinbefore
என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்: முக்கியமான உயர்நிலை பதவிகளில் சேருவதற்கான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவது உகந்ததாக இருக்காது என்று கூறப்பட்டது. இது தீர்ப்புரை அல்ல; வெறும் கருத்துரை - பொதுவாகச் சொல்லப்பட்ட கருத்து.

இதன்படி இது சட்டக்கட்டாயத்தன்மை (MANDATORY LAW) அல்ல. நீதிபதியின் ஆலோசனை போன்ற ஒரு கருத்து.

அரசமைப்புச் சட்டம் 16 ஆவது பிரிவு கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தருவது பற்றிய 16 ஆவது பிரிவில், போதிய அளவு பிற்படுத் தப்பட்டவருக்குத் தருவது என்பதும், பிற்படுத்தப்பட்டவரை அடையாளம் கண்டறிந்து பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றியுமான உரிமையை அரசுக்குத்தான் அளித்துள்ளதே தவிர, நீதிமன்றங்களுக்கு அல்ல. In the opinion of the State என்றுதான் குறிப்பிடுகிறது.

நீதிமன்றங்கள் கருத்துக்கள் கூட கூற இயலாது என்பது இதன் மூலம் திட்டவட்டம்!

இந்திரா சஹானி (மண்டல்) வழக்கில் மேலே குறிப்பிட்ட பத்தியிலேயே இக்கருத்து முடிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டுள்ளது. “It is the Government of India to consider and specify the service and posts to which the rule of reservation shall not apply (but on that account the implementation in the impugned office Memorandum dated 13th August 1990 can not be stayed or with held)”

இதன் தமிழாக்கம்: இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாத சேவைகள் மற்றும் பணியிடங்கள் எவை என்பதை இந்திய அரசுதான் குறிப்பிட வேண்டும். (ஆனால் இந்த காரணங்களுக்காகவே குறிப்பிடப்பட்ட ஆகஸ்டு 13, 1990 நாளிட்ட அலுவலக குறிப்பினை நடைமுறைக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது).

தமிழ் ஓவியா said...

இதன்படி, - அண்மையில் அய்ந்து நீதிபதிகள் மறு சீராய்வில் குறிப்பிட்டபடி, பந்து மத்திய அரசின் கோர்ட்டுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது டில்லி மத்திய அரசுக்குத்தான் எவை எவை தெளிவாக இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறவேண்டிய பொறுப்பு என்று கூறிவிட்டு கடைசியில் தேவையற்ற ஒரு கருத்துரையைப் போட்டு ஒரு புதுக் குழப்பத்தை தீர்ப்பின் மூலம் எடுத்துக்காட்ட முயன்றுள்ளார்கள்.

தேவையற்ற கருத்து

அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய கருத்தே அது!

மத்திய அரசு குறிப்பிட்டுச் சொன்னாலே போதுமானது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேவையற்ற ஒன்று- இந்திரா சஹானி வழக்கின் பாரா 861 வாக்கியங்கள் அதை தெளிவாக்குகின்றன.

டில்லி எய்ம்ஸ் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று அளித்த தீர்ப்புரைக்குப்பிறகு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்றத்தில் தெளிவாகவே குறிப்பிட்டார்: We are ignoring the Judgement என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தொடருவோம் - நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் நிறுவனத்துக்கு தாக்கீது பிறப்பித்தது. அதன் அடிப் படையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனம் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யும் ஒரு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு உண்டு என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது. துவக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும், அதன்பிறகு புதிய சட்டத்திருத்தம், ஆணைகளை, அரசுகளும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், ஆட்சி மன்றமும் கொண்டு வந்து செயல்படுத்துவதும் நமது சமூகநீதிப் போராட்டத்தில் பல்வேறு மைல்கற்கள் அல்லவா?

வேகத்தடையும்- சமூகநீதிப் பயணமும்

எனவேதான் இந்த வேகத்தடைகளைப் பொருட்படுத் தாது சமூகநீதிப் பயணம் தடையின்றித் தொடரவேண்டும்.

தவறான வியாக்கியானங்களைப் புறந்தள்ளி ஆட்சிகள் செயல்படுவதுதான் நமது ஜனநாயகத்தில் சமூகநீதியை கடைக்கோடி மகனுக்கும், மகளுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதாகும்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 18.1.2014

Read more: http://viduthalai.in/page1/73739.html#ixzz2qthmCL86

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page1/73742.html#ixzz2qtiT0O1E

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page1/73742.html#ixzz2qtiT0O1E

தமிழ் ஓவியா said...


திராவிடர் திருநாள் விழாவில் (17.1.2013) பெரியார் விருது பெற்றவர்களின் தன்விவரக் குறிப்பு


இதழாளர் ஏ.எஸ் பன்னீர் செல்வன்

தமிழ் ஆங்கில பத்திரிகைகளை வாசிப்பவர்களுக்கு, சுவாசிப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானபெயர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் சொல்லாட்சி செய்துவரும் தமிழர்

பார்ப்பன பத்திரிகைகளில் ஊடுருவிய திராவிட இயக்க சிந்தனையாளர்.

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு திராவிட இயக்கமே காரணம் என்பதை உலகிற்கு தன் எழுத்துவன்மையால் பறைசாற்றிய உணர்வாளர்.
இவருடைய எழுத்துப்பயணம் திசைகள் என்ற தமிழ் பத்திரிகையின் மூலம் துவங்கியது.
அதே காலகட்டங்களில் ஆங்கில பத்திரிகைக்ளுக்கும் எழுதத் துவங்கினார். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்திய வரலாற்றில் மிகவும் கொடுமையான மனித ஆற்றலால் நடந்த விபத்தான போபால் விஷவாயுக் கசிவு குறித்து பல்வேறு பரபரப்பான கட்டுரைகளை எழுதியவர்.

இதேகால கட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஃப்ரண்டுலைன் போன்ற பத்திரிக்கைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதி இலங்கைத்தீவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துணர்த்தியவர்.
1987இல் இந்தியா இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் முதல் ஆண்டு கொண்டாட்டம் 88இல் நடந்த போது43 நாட்கள் ஈழப்போர் பகுதிகளில் தங்கி இருந்தார். பின்னர் ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் போஸ்ட் இதழில் யுத்த பூமியில் 43 நாட்கள் என்னும் தலைப்பில் தொடராக ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளை தமிழகத்தின் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்த்தவர். 1988 நவம்பரில் பிசினஸ் இந்தியா ஏட்டில் செய்தியாளராக முழுநேரப்பணியில் இணைந்தார். . 1995ஆம் ஆண்டு அவுட் லுக் இதழில் இணைந்து பொருளாதாரம், அரசியல் மற்றும் அயலகத்துறை தொடர்பான செய்திப்பிரிவு தலைவராகவும் பதவி வகித்தார். தன்னுடைய பதவிக் காலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட சமுக பொருளாதார, அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அணு ஆற்றல் தொடர்பான நன்மை தீமைகளை ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். 1998இல் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு அணுக்குண்டு பரிசோதனை செய்த போது அது குறித்து பன்னாட்டு ஊடக நிறுவனங்களில் விளக்கமாக எழுதி உலகை, தன் எழுத்தின் பக்கம் ஈர்த்தவர்.


தமிழ் ஓவியா said...

2001 முதல் தமிழகத்தின் முன்னனி ஊடக நிறுவன மாக சன் குழுமத்தின் தலைமை பொறுப்பாசிரியராக பணியாற்றினார். நிர்வாக ஆசிரியராக 2004 வரை பணியாற்றினார். இவர் பணியாற்றிய காலங்களில் ஆசிரியர் குழுவில் புதிய உத்திகளை கையாண்டு செய்தியாசிரியர்கள், செய்தி சேகரிப்பவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு இடையே எழும் பல்வேறு சிக்கல் களை திறம்படக் கையாண்டு புதிய உத்திகளை வகுத்து கொடுத்தார். சன் குழுமத்தின் பல்வேறு மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி களில் உள்ள செய்திகளை ஒருமுகப்படுத்தி அனைத்து செய்திகளுக்கும் ஒரே மாதிரியாக விரைவாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் புதிய முறையை சன் குழு மத்தில் அறிமுகபடுத்தினார். 2004-ஆம் ஆண்டு முதல் பனோஸ் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவிற்கு தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் 5 நாடுகளில் உள்ள பனோஸ் நிறுவனத்தின் செயல் பாடுகள் வருகிறது. சர்வதேச ஊடக செயல்பாடுகள் அமைப்பு என்ற குழுமத்தின் ஆலோசனை உறுப் பினராகவும், மற்றும் சர்வதேச ஊடக மையத்தின் பல்வேறு அமைப்புகளின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். எழுத்துறையில் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் தன்னுடைய கருத்தாக்கத்தை வெளிப்படுத்த விநாயகர் சதூர்த்தி தொடர்பான வன்முறைகள் பற்றிய பிரச்சினை இல்லாத இடம் எங்கே என்ற ஆங்கில குறும்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். ஆசியன் இதழியல் கல்லூரியில், ஊடகத்துறை பேராசிரியராகவும், ஊடகத்துறை பேராசிரியர் அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார். பன்னீர் செல்வன் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஊடக வியல் தொடர்பான முதுகலைப் பட்டம் வென்றவர். அமெ ரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு அயல்நாடுகளில் ஊடகத்துறை கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராக இருந்துள்ளார்.

நக்கீரன் இதழிலும் புகழ்பெற்ற சுற்றும் முற்றும் கட்டு ரைத் தொடரை எழுதியுள்ளார். அவை நூல்களாகவும், வெளிவந்துள்ளன. இவ்வளவு பெருமைமிக்க ஊடகவிய லாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

எழுத்தாளர் பாமரன்

பாமரன் என்னும் புனைப்பெயர் கொண்ட எழிற்கோ, கோவையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். அவர் பிறந்த பகுதிக்கே உரித்தான கேலியும் கிண்டலும் சேர்ந்த வகையில் சமுதாய அவலங்களைப் பொதுக்கடிதங்கள் (Open Letters) மூலமாக விமர்சிப்பதில் பெயரெடுத்தவர்.

அவர் எழுதிய சில புத்தகங்கள்: அன்புத் தோழிக்கு - 1988; புத்தர் சிரித்தார் - 1990; வாலி + வைரமுத்து = ஆபாசம் - 1996; பகிரங்க கடிதங்கள் - 1997 (குமுதம் சிறப்பு தொடராக வெளிவந்தது); தெருவோரக் குறிப்புகள் - 2001 (குமுதம் வார இதழ் மற்றும் தீராநதி மாத இதழ்களில் தொடராக வெளி வந்தது)

தமிழ் ஓவியா said...

சாட்டிலைட் சனியன்களுக்கு - 2003 (நக்கீரன், தினமணி, ஆனந்த விகடன் இதழ்களில் வந்த கட்டுரை களின் தொகுப்பு); ஆரிய உதடுகள் உன்னது - 2006 (புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்தது); அகிம்சா மூர்த்தி அமெரிக்கா - 2005; தற்போது ஒரு நாளிதழில் தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதழ்களில் கட்டுரைகள்: பல பொதுமக்கள் நாளிதழ்களில் அவருடைய விமர்சனக் கட்டுரைகளும், பொதுக்கடிதங்கள் மற்றும் விவாதங்களும் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் சில: குமுதம், நக்கீரன், புதிய சனநாயகம், மற்றும் பல சிற்றிதழ்கள், தற்போது பல இணைய தளங்களிலும் எழுதி வருகிறார்.

செயல்பாடுகள்: 1983இல் உருவான உலக மனிதாபிமான கழக நிறுவனர்; 2006இல் உருவான கோவை நாய்வால் திரைப்பட இயக்க முன்னோடி; - 1987 - 1991 வரையான செயல்பாடுகள் (ஹஅநேளவல ஐவேநசயேவடியேட); ஈழ நண்பர் கழகம் - 1985 - 1990 வரையான செயல்பாடு கள்; வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றவர்; கோவை குண்டு வெடிப்பு குறித்து ஆராய போடப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்
பேட்டிகள்: சன் தொலைக்காட்சி - வணக்கம் தமிழகம்; விஜய் தொலைக்காட்சி - நையாண்டி தர்பார் மற்றும் நீயா நானா?; ராஜ் தொலைக்காட்சி - டேக் இட் ஈஸி ஊர்வசி; மக்கள் தொலைக்காட்சி - சரக்கு பாதி கிறுக்கு மீதி; தீபம் தொலைக்காட்சி - சிறப்பு பேட்டி.

எழுத்தாளர் இமையம்

தொழில்: நாவலாசிரியர், கட்டுரையாசிரியர்; நாடு: இந்தியாவின் கொடி இந்தியர்; குறிப்பிடத்தக்க படைப்பு(கள்): கோவேறு கழுதைகள்; இமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை (பிறப்பு: மார்ச் 10, 1964) நன்கறியப்பட்ட தமிழக எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார்.

1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் ஆசிரியரே.

நூல்கள்: தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார்.

இதுவரை எழுதிய புதினங்கள்: 1. கோவேறு கழுதைகள் (நாவல்) - 1994; 2. ஆறுமுகம் (நாவல்) - 1999; 3. செடல் (நாவல்)-2006; 4. மண்பாரம் (சிறுகதைத் தொகுப்பு) -2002; 5. வீடியோ மாரியம்மன் (சிறுகதைத் தொகுப்பு) - 2008; 6. கொலைச்சேவல்; 7. பெத்தவன் -நெடுங்கதை.

இதுவரை மொழிப் பெயர்க்கப்பட்ட நூல்கள்: 1. கோவேறு கழுதைகள் என்ற புதினம், 2001 இல் பீஸ்ட் ஆஃப் பர்டன் (BEAST OF BURDEN) என்ற பெயரில் East West Books என்ற பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே புதினம் 2009இல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் பெற்றுள்ளது. (2.) ஆறுமுகம் என்ற புதினம் கதா நிறுவனத் தால் அதே பெயரில் ஆங்கிலத்தில் 2006இல் வெளியிடப் பெற்றுள்ளது

இதுவரை பெற்றுள்ள பரிசுகள்: 1. அக்னி அஷ்ர விருது - 1994; 2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது - 1994; 3. அமுதன் அடிகள் இலக்கிய விருது - 1998; 4. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1999; 5. Best millinium face of India விருது-2000; 6. தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது -2010; 7. இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு நல்கையை 2002இல் வழங்கியது.

Read more: http://viduthalai.in/page1/73753.html#ixzz2qtj3lPDy

தமிழ் ஓவியா said...


வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -


குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.

சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.

சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?

குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?

குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!

சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?

குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!

சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.

சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.

சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?

குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.

சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?

- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjOohab

தமிழ் ஓவியா said...

தர்மத்தின் நிலை

நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பனரல் லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப் பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ் வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும், பார்ப்பனரல்லாதார் நன்மையையும், நமது நாட்டின் நன்மையையும், உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928

Read more: http://viduthalai.in/page1/73748.html#ixzz2qtjXKHfv

தமிழ் ஓவியா said...


பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய 400 பாதிரியார்கள் பதவி நீக்கம் வாடிகன் தகவல்


வாடிகன்சிட்டி, ஜன.20- முன் னாள் போப் 17ஆவது பெனடிக்ட் கடந்த ஆண்டு இவர் தானாகவே முன் வந்து பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய போப்பாக பிரான் சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெனடிக்ட் போப் ஆக இருந்த போது அய்ரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பாதிரியார்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை புகார்கள் கூறப்பட்டன.

எனவே, பாலியல் புகாரில் சிக்கிய 400 பாதிரியார்களை அவர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவர் பதவி விலகுவதற்கு முன்பு 2 ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளார். அதில் 2011ஆம் ஆண்டில் 300 பேரும் 2012ஆம் ஆண்டில் 100 பேரும் அடங்குவர். இந்த தகவலை வாடி கனின் செய்தி தொடர்பாளர் பெடரி கோலாம் பார்டி தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/73828.html#ixzz2qzbsHhHS

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

- (விடுதலை,3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/73825.html#ixzz2qzcACUgj

தமிழ் ஓவியா said...


மாற்றம் ஒரு வழிப் பாதையா?


சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் அமைந்துள்ள ஹால்ஸ் சாலை தமிழ்ச் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது குறித்து இந்து முன்னணியின் நிறுவனர் இராம. கோபாலன் அறிக்கை வருமாறு:

தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு அடிமைத் தனத்தின் அடையாளமாக இருந்த சாலை, ஊர்ப் பெயர்களை படிப்படியாக மாற்றி, தமிழ்ப் பெயர்கள், தேசப் பக்தர்கள் பெயர்களைச் சூட்டியிருக்க வேண்டும்.

இன்னமும் நம்மை அடிமைப்படுத்தி, ஆக்ரமிப்பு செய்தவர்களின் பெயர்களை சாலைகள், ஊர்கள் தாங்கி நிற்பது நமக்கு அவமானம், இதனைத் துடைத்தெறிய வேண் டும் என்று இந்து முன்னணி நிறுவனர் திருவாளர் இராம. கோபாலன் தன் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாமும் நன்றாகவே வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவர் கூறுவது தமிழின்மீது கொண்ட பற்றுதலாலா? என்ற கேள்வி நியாயமாக எழத் தான் செய்யும்.

ஹால்ஸ் என்ற பெயர் ஆங்கிலேய கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் அது மாற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரே தவிர, உண்மையிலேயே தமிழ்மீது கொண்ட ஆர்வமும், பற்றுதலும் அவரிடம் கரை புரண்டு ஓடுவதால் அல்ல- என்பது நினைவிருக்கட்டும்!

கோயில்களில் சமஸ்கிருதம் அர்ச்சனை மொழியாக இருப்பதை மாற்றி தமிழில்தான் அது நடக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அப்பொழுதுதான் அவாளின் உண்மை உருவம் வெளிவரும்.

கோயில்களில் உள்ள கடவுள்களின் சமஸ்கிருதப் பெயர்களை மாற்றினால் ஏற்றுக் கொள்வார்களா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் பெரு முயற்சியினால் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கொண்டு வரப்பட்ட போது இதே பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் கேலி செய்தன? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி வரப் போகிறது பாருங்கள் என்று தினமலர் எழுதிய போது இந்த ராம. கோபாலன்களின் வாய்கள் கோணி ஊசியால் தைக்கப்பட்டுக் கிடந்தனவா?

சென்னைப் பெரு நகரில் வணிக விளம்பரங்களில் தமிழுக்கு முதலிடம் என்று அந்நாள் மேயர் மா. சுப்பிரமணியம் அவர்களே களத்தில் இறங்கி அந்தப் பணியைச் செய்த போது, துக்ளக்கில் இது மொழி நக்சலிசம் என்று எழுதியபோது இந்த அய்யர்வாள் எங்கே முடங்கிக் கிடந்தார்?

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நீண்ட காலமாக தமிழ் அறிஞர் பெரு மக்கள் கூறி வந்த கருத்தினை ஏற்று தனிச் சட்டம் செய்தாரே - அதனை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி யில் செல்வி ஜெ. ஜெயலலிதா மாற்றினாரே - அப்பொழுது இவர் போர்க் குரல் கொடுத்த துண்டா?

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கின்றனவே; அவற்றைத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இதே இந்து முன்னணித் தலைவர் அறிக்கை வெளியிடத் தயாரா?

சிற்றம்பலம் சிதம்பரம் என்றும் திருமரைக் காடு வேதாரண்யம் என்றும் திருமுதுகுன்றம் விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை கபிஸ் தலம் என்றும் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட் டுள்ளதே - அவற்றை மீண்டும் தமிழ் மயப் படுத்த இந்து முன்னணி வகையறாக்கள் போராட்டம் நடத்துவார்களா?

ஹால்ஸ் என்பது கிறித்தவரின் பெயராக இருப்பதால்தான் மதவெறி இந்துக் கண்ணோட் டத்தோடு அது மாற்றப்படுவதற்காக ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார் - இந்த மதவெறி யர்களை அடையாளம் காண வேண்டாமா? மாற் றம் என்பது வெறும் ஒரு வழிப் பாதை தானா?

Read more: http://viduthalai.in/page-2/73821.html#ixzz2qzcInc7a

தமிழ் ஓவியா said...


திராவிடர் திருநாள் விழாவில் (19.1.2014) பெரியார் விருது பெற்றவர்களின் விவரக் குறிப்புகள்


பேராசிரியர் அ.மார்க்ஸ்

தலைசிறந்த பெரியாரியவாதியாக இருந்துகொண்டு ஜாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை செய்து வருபவர். இவரது தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளி யாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். இவருடைய தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.

ராமதாஸ் என பொதுவுடமை இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். போராட்டக்காரரின் மகனாகப் பிறந்த அ.மார்க்ஸ் அவர்கள் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்று படித்ததில்லை. அதன்பின் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவர். மார்க்ஸ் அவர்கள் 37 ஆண்டுகள் அரசு கல்லூரி களில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற வர். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி.

ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பங்கு பெற்றவர். இலக்கியம், அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். நாட்டில் கலவரங்கள் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் நேரடியாக களத்திற்கே சென்று உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொணர் வதில் இவருடைய செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கும்.

அறிவாற்றல் மிகுந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் 77 பெரிய நூல்களையும் 27குறு நூல்களையும் 25க்கு மேற் பட்ட சிறு வெளியீடுகளையும் எழுதியுள்ளார். பல்வேறு ஏடுகளில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், ஏற்றதொரு கருத்தை மனதிற்குப் பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறார். இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளர்.

அவரது குறிப்பிடத்தக்க சில நூல்கள்:

1. நமது கல்விப் பிரச்சனைகள் 2. குணா -பாசிசத்தின் தமிழ் அடையாளம் 3. இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு (3 தொகுதிகள்)

4. பெரியார் யார்?

5. ஆட்சியில் இந்துத்துவம் 6. குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும் 7. பெரியார் - தலித்கள் - முஸ்லிம்கள் 8. ஆரியக் கூத்து

9. பெரியாரின் கல்விச் சிந்தனைகள் 10. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் 11. இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச் சுவடு ஓர் ஆள்காட்டி அரசியல் 12. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் போன்ற ஆய்வுத்தர நூல்களைப் படைத்த தலைசிறந்த சிந்தனை யாளர்களில் ஒருவரான மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdBHzft

தமிழ் ஓவியா said...

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக் காட்சியில் நகைச்சுவைத்தொடராக வந்த சின்னபாப்பா பெரியபாப்பா என்ற தொடரில் காதின் மீது கைவைத்த படியே அச்சு அசலாக பாப்பார பாஷையில் பேசி அல்லல் படும் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு தலைப்பெற்ற எம்.எஸ் பாஸ்கர் என்று அழைக்கப்படும் மு.சோ.பாஸ்கர்.

தன்னிகரற்ற கலைஞர்களைத்தந்த தஞ்சை மாவட்டமே இவரையும் திரை உலகிற்கு தந்துள்ளது. முத்துப்பேட்டை சோமு என்பவரின் மகனாகிய மு.சோ. பாஸ்கர் அவர்களின் நடிப்பாற்றலைக்கண்ட சினிமாத் திரை சின்னத்திரையிடமிருந்து சுவீகரித்துக் கொண்டது.

பச்சையப்பர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் பல நடிகர்களுக்கு பின்னணி பேசியவர்.

தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஹாலிவுட் நடிகர் களுக்கும் தமிழில் பின்னணி பேசியுள்ளார். பின்னணி பேசியதில் சிறப்பாக, குறிப்பாக கர்மவீரர் காமராஜ் படத்தில் காமராஜராக நடித்தவருக்கு பின்னணி பேசிய தைக் குறிப்பிடலாம். பெரியார் திரைப்படத்தின் தொடக்க காட்சிலும், பெரியார் பற்றி கருத்துருவை சிறப்பாக தனது குரலில் வழங்கியுள்ளார்.

என்னதான் நடிப்பைக் கற்றுக்கொடுத்தாலும் அது எல்லோருக்கும் வருவதில்லை. அதிலும் குணசித்திர வேடங்களில் நடிப்பவர்களும் நகைச்சுவைப் பாத்திரங் களை ஏற்று நடிப்பவர்களும், அந்த நடிப்பிலிருந்து வேறுபட்ட நடிப்பை வழங்குவதென்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது.

ஒரு சிலர் மட்டுமே அதில் மேன்மை பெற்றவர்கள். அந்த ஒருசிலரில் மிக முக்கியமானவர் இன்று விருது பெற வீற்றிருக்கும் பாஸ்கர். இவருடைய நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், தர்மபுரி, சிவகாசி, திருப்பாச்சி மாசிலாமணி, அழகியதீயே, சாது மிரண்டால், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களைச் சொல்லலாம்.

எங்கள் அண்ணா படத்தையும், குரு என் ஆளு படத்தையும் பார்த்தவர்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பைப் பார்த்து இன்றும் கூட மனதில் நினைத்தால் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். இவருடைய குணசித்திர நடிப்புக்கான படங்களாக மொழி, பயணம், அஞ்சாதே, சூது கவ்வும் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக 2007-இல் வெளிவந்த மொழி என்ற திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்த விருதைப்பெற்ற இவரை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளை அறிந்தவர்.

இவ்வளவு பெருமைகள் பெற்ற திராவிட இனத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான மு.சோ.பாஸ்கர் அவர் களுக்கு பெரியார் விருது வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-4/73815.html#ixzz2qzdLxV2X

தமிழ் ஓவியா said...


வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்


வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது. வாழைப் பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக் கூடியவையே. இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம். மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

ரஸ்தாளி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும்.

தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/73802.html#ixzz2qzeb66uE

தமிழ் ஓவியா said...


இன்னும் திருந்தவில்லையா?


உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே நியமனங்கள் நடைபெறும் என விரிவாகவும், விளக்கமாகவும் நம் பேரறிவுத் தாய் எடுத்துரைத்ததற்குப் பிறகும், இட ஒதுக்கீடு என்று கருணாநிதி ஓலமிடுவது மோசடி அரசியலே!

- அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (21.1.2014, பக்கம் 8)

இன்னும் இவர்கள் திருந்தின பாடில்லை என்று தெளிவாகவே தெரி கிறது. பல்நோக்கு உயர் மருத்துவமனை களில் இட ஒதுக்கீடு செய்வது குறித்து அரசே முடிவு செய்யலாம் என்று சொன்னதற்குப் பிறகும், அ.இ.அ.தி.மு.க. ஏடு மாற்றி யோசிக்கிறது என்றால், இன்னும் இவர்கள் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இட ஒதுக்கீட்டில் கைவைத்தவர்கள் வாழ்ந்ததாகத் தமிழ்நாட்டு வரலாற்றில் கிடையவே கிடையாது!

ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே தோல்வி கண்ட இடம் இது - எச்சரிக்கை! எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/73846.html#ixzz2r58RhCkO

தமிழ் ஓவியா said...


நீதிபதிகள் நியமனக் குளறுபடிகள்: கலைஞர் பதில்


சென்னை, ஜன.21-நீதிபதிகள் நியமனத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி - பதில் பகுதியில் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கள் நியமனத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பற்றி குறை கூறி வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதோடு, நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டமும் நடை பெற்றுள்ளதே?

கலைஞர்: அண்மைக் காலத்தில் நீதிபதிகள் பற்றியும், அவர்கள் நியமனம் குறித்தும் வெளிவருகின்ற செய்திகள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டு கூறப் படுகிறது. உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற நீதிபதிகள் நியமனத்திலேகூட, யாரோ ஒரு பெண்மணி ஆளுங்கட்சி கூட்டங்களிலும், ஆளுங் கட்சிக்குரிய தொலைக்காட்சி நிறுவனத்திலே நேரத் தைக் கழித்தவர் என்றும் என்னிடம் கூறினார்கள்.

நீதிமன்றத்தில் வாதாடிப் பழக்கமே இல்லாதவர்கள் பெயர்கள் எல்லாம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவர்களை பரிந்துரை செய்திருப்பவர்கள் இதற்கான விளக்கத்தைத் தந்தால் புரிந்துகொள்ள முடியும். நீதிபதிகள் நியமனத்திற்கு முன்பே இப்படிப்பட்ட புகார்களுக்கு ஆளாவார்களானால், அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பிறகு வருகின்ற விளைவுகளை வழக்காடும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே, தற்போது செய்யப்பட்டுள்ள நியமனம் சரியில்லை என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு, அந்த நீதிபதி உச்சநீதிமன்றம் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்று கூறியிருக் கிறார். தற்போது இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி மீது குற்றச்சாட்டு வெளி வந்திருக்கிறது.

ஒரு சில நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் இவ்வாறு கூறப்படுகின்ற காரணத்தால், நீதித் துறையின் மீதே களங்கம் ஏற்பட்டுவிடும்! மங்கை சூதகமானால் கங்கை யில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்று தேவர் திருமகன்தான் அடிக்கடி கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழைய முடியாதா? என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேடு தலையங்கம் எழுதியுள்ளதே?

கலைஞர்: அந்த வழக்கை அ.தி.மு.க. அரசு எவ்வாறு நடத்தியது என்பதுபற்றியோ, அரசு வழக்குரைஞர் எவ்வாறு செயல்பட்டார் என்பதுபற்றியோ, அந்தத் தலையங்கத்தில் குற்றமாகக் கூறாமல், வழக்கை நடத் துவதில் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது என்று மட்டும் எழுதியிருப்பதோடு, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதன்மூலம் நீதியையும், சமூகநீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது. அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியின் இந்த வேண்டுகோளையாவது அ.தி.மு.க. அரசு ஏற்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/73845.html#ixzz2r58n6xmR

தமிழ் ஓவியா said...


தியாகம் என்பது...


தியாகம் என்பது சுயநலத்துக் கான பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும்; எவ்வித மான அவமானங்களையும் இலட்சியம் செய்யாமல் பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதாகும்.

(விடுதலை, 11.1.1966

Read more: http://viduthalai.in/page-2/73848.html#ixzz2r592n6Qr

தமிழ் ஓவியா said...

அய்யா இல்லாத வெற்றிடம்...!


- கவிஞர் விக்ரமாதித்யன்

அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை.

சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான்.

திரளான கூட்டம்; கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழகத் தொண்டர்கள்; பொதுமக்கள்; பெரியார் பேச ஆரம்பித்ததுமே நிசப்தமாகிவிட்டது சூழல்; பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை; எதிரில் இருப்பவர்களுடன் உரையாடுவது போன்ற எதார்த்தம்; சுயமரியாதை என்ற சொல்லையே முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்; வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் தெரியும்; சரளமான பேச்சு.

எண்பதுகளின் தொடக்க ஆண்டொன்றில் நானும் நண்பர் துரையும் சேர்ந்து, ஒரு பத்திரிகைக்கு நேர்காணல்கள், மேட்டர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், வித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரைப் பேட்டி எடுத்துத் தந்திருந்தோம்; ஆனால் வெளியிடப்படவில்லை; தகவலாக இருக்கிறது, பத்திரிகை சுவாரஸ்யம் இல்லை என்பதனாலோ என்னவோ தெரியாது (பாவாணர் மறைவையொட்டி, பாவாணர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற செய்தியை மட்டும் துணுக்காகப் போட்டிருந்தார்கள்.)

கா.அப்பாதுரையாரிடம் கேட்ட ஒரு கேள்வி:

நாகர்கோவில் பக்கம் ஹிந்தி பண்டிட்டாக இருந்த நீங்க எப்படிச் சென்னை வந்தீர்கள்?

பதில்: பெரியார், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன் ஹிந்தி பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; தெரியாமல் எதிர்க்கக் கூடாதென்று எண்ணினார்; இதற்காகவே என்னை அழைத்து வந்தார்.

காமராஜர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததும், பச்சைத்தமிழன் என்று புகழ்ந்ததும் ஏன் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும்.

யாராவது கூற முடியுமா, தமிழ், காட்டுமிராண்டி பாஷை என்று.

அய்யா பெரியார் அவர்களுக்கு இனம்தான் முதல்; பிறகுதான் மொழி.

திராவிடர் கழகத்தை ஏன் அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக வைத்திருந்தார் அவர்?

தமிழ்க் கவிதையைப் பெரிதாகப் பொருட்படுத்தாத அந்த உள்ளத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியுமா, என்ன.

சினிமாவைக் கடுமையாகக் கண்டனம் செய்து வந்ததை எவ்விதம் விளங்கிக் கொள்வீர்கள்?

மகத்தான ஆளுமைகளைச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது; அதனால்தான் காலம் முழுக்க விமர்சனங்களும் விவாதங்களும்.

செயல்கள், அவற்றின் விளைவுகள் _ இவைதான் ஆக்கம்; எதிர்வினைகள் என்னவாகும்.

தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழவைத்த தலைவர் அவர்; வணக்கத்துக்குரிய வன்றொண்டர்.

நான் அறிவு ஜீவியல்லன்; உணர்வு வழிப்பட்ட கவிஞன்; என்னதான் ஆன்மிகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக் கொள்கிறேன்; பெரியார் மீதான பிரியமும் இந்த விதம் வந்ததுதான்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது; அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம், அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்துக்கு வெகுவாக வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் உய்வடைவது தள்ளிப் போவதைக் காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; வேறென்ன சொல்ல.

நன்றி: குமுதம் தீராநதி டிசம்பர் 2013

தமிழ் ஓவியா said...

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்று புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள்
உழவரே என்றுவிழா ஒப்பி மகிழ்ந்தாரே

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய்! - பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம் புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ்உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகு தாய்! வளர்ப்புப் பாலே பயன்!நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடைஎல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடைஎனப் பாலும், உயர்குன் றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுக உண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல் எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!





- புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

ஊழ்

--------------கலைஞர்
புயலும் மழையும் ஓய்ந்து ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும், படுகை மண்ணோடு தூக்கியெறியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோவிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள் ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன. கிழங்கள் நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில் குறும்பு செய்யும் இளைஞர் கூட்டம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்த வண்ணமிருந்த நெற்கதிர்களை உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில் பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு; நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்! இலைதழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாண்மைக்காரரும், அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன் ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.

ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?

ஆமாங்க! அவனே தான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!

என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான் வைத்த விழி வாங்காமல்?

சாமி! சாமி! அடடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து! என்று அவர் கூச்சல் போட்டார்!

இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும் என்றார் உதவியாளர்.
அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று வள்ளுவர் சொன்ன வாக்குப் பொய்யாகப் போகாது பார்! ஊழைவிட மிக்க வலிமையுள்ளது எதுவுமில்லை! அதை விலக்குவதற்காக மற்றொரு வழியைப் பின்பற்றினாலும் அங்கேயும் ஊழ்தான் முன்வந்து நிற்கும். எனவே, இப்போது சிங்கனைவிட ஊழ் வலிமையாக நிற்கிறது! அதோ, அவன் திண்டாடுகிறான் பார்! அவன் கைகள் ஓய்ந்துவிட்டன பார்! மான்குட்டியை வேறு தோளிலே போட்டுக் கொண்டு நீந்துவது எளிதா? தொலைந்தான் சிங்கன்!

இவ்வாறு நாட்டாண்மைக்காரர் துள்ளிக் குதித்தார். உதவியாளர் விளக்கினார்:

சாமி! ஊழை வெல்ல முடியாது என்பது சரிதான். ஒன்று நம்மை வெல்லும்போது ஊழ் வென்றுவிட்டது என்கிறோம்! மாறாக, நாம் வெற்றி பெறும்போது ஊழ்தான் அந்த வெற்றியை நமக்குத் தந்தது என்கிறோம். எனவே, ஏற்படுகிற ஒரு விளைவுக்கு நாம் கற்பிக்கிற காரணம்தான் ஊழ் என்பதாகும். அதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்.

உதவியாளரின் விளக்கத்தைக் கேட்டு நாட்டாண்மைக்காரர் வியந்து போனார். அதற்குள் சிங்கனும் ஆற்றுச்சுழல்களை எதிர்த்து வெற்றி கண்டு மான் குட்டியுடன் கரையை வந்து அடைந்தான். நாட்டாண்மைக்காரருக்கு மேலும் வியப்பு! சிங்கன்மீது கொண்டிருந்த பகையைக்கூட மறந்துவிட்டு அவன் வீரத்தையும், மன உறுதியையும், இரக்கமுள்ள இதயத்தையும் பாராட்டி, ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டார்.

எப்படியப்பா உன்னால் இந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முடிந்தது? என்று அவர் முகமலர்ச்சியுடன் கேட்ட கேள்விக்குச் சிங்கன் அளித்த பதிலும் ஒரு திருக்குறள்தான்.

அய்யா! சோர்வின்றி உறுதியுடன் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் ஊழையும் தோல்வி காணச் செய்து விடுவார்கள்! இதோ அதற்குக் குறள்! என்று உரக்கப் பாடினான் சிங்கன்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

நன்றி : கலைஞரின் குறளோவியம்

தமிழ் ஓவியா said...

கருப்பு என்பது வெறும் நிறமல்ல!


கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம். மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective).

கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு கலைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை கவின் கலைக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 9 பேர் இணைந்து இந்தக் குழுமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஓவியக் காட்சியுடன் இதன் தொடக்க விழா 2013 டிசம்பர் 15ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் -_ அனிதா இல்லத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியாவை மதவாதம் ஆளத்துடிக்கும் நிலையில் அதற்கெதிரான ஆயுதமாக கலைவடிவங்கள் இருக்க வேண்டும். தான் விரும்புவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாசிசம். தான் விரும்புகிற கலையும் கலாச்சாரமும் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் இந்துத்வாவும் பாசிசம்தான். அதற்கு எதிரான குரலாக கலைஞர்கள் செயல்பட வேண்டும். வளர்ந்து உலகச் சூழலில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும், புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்றார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்துரு, கலை விமர்சகர் சதானந்த் மேனன், லலித்கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் இராம.பழனியப்பன் ஆகியோர் சென்னைக்குரிய கலை பாரம்பரியத்தையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களையும்

இன்று ஏற்பட்டுள்ள தொய்வினையும் சுட்டிக்காட்டி அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வரைதல், செதுக்குதல், உருவாக்குதல் மட்டுமல்லாமல், எங்கள் படைப்புகளையே திரும்பத் திரும்பச் செய்யும் இயந்திரத்தனத்தில் விழுந்துவிடாமல் இருக்கும் சவால்களைக் குறித்தும்

நாங்கள் விவாதிப்போம். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொள்கை விளக்கங்களோடு வெளிப்பட்ட எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டு விழுந்த குழிகளை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதே வேளை அரசியல், பண்பாடு, பொருளாதாரம், பாலியல் சமன்பாடு, சூழலியல் மற்றும் தத்துவம் போன்றவை குறித்த அக்கறையும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது, பத்தாண்டுகளில் எங்கள் வெளிப்பாடு கொள்கை விளக்கமாகக் கூட இருக்கும் என்று கூறும் கருப்பு குழுவினர் செயலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.

கல்வி, எழுத்து, ஆய்வுப் புலம், கலை, ஊடகம் போன்றவற்றின் நிகழ்கால நிலை குறித்து பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் இமையம், நிகழ்த்து கலைஞர் ப்ரீத்தி ஆத்ரேயா, இயக்குநர் ரமணி ஆகியோர் பங்கேற்ற கருத்துப் பகிர்வோடு டிசம்பர் 28-ஆம் தேதி நிறைவுற்றது கருப்பு கண்காட்சி.

அபராஜிதன் ஆதிமூலம், சந்துரு, எபினேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப் பிரியா, மரிய அந்தோணி ராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசுவாமி, நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் ஆகியோர் படைப்புகளில் கருப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைக் கலைக்காட்சியில் ஒரு பகுதியாக கருப்பும் இவ்வாண்டு பங்கேற்கிறது என்று தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த அனிதா. கருப்பு புரட்சியின் நிறம்; புதுமையின் நிறம். மக்கள் பிரச்சினைகளிலிருந்து விட்டுக் கலை விலகியிருக்கிறதோ என்ற எண்ணத்தை அகற்றும் இந்தக் கருப்பு கலைக் குழுமம், இருளில் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்கிறது.

- ஓவியம்

தமிழ் ஓவியா said...

காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்....


நரையாய் பூமுகத்தில் - புன்னகை
நரம்பின் நார்களா
இடிமின்னலைப் புடம்போட்ட - இல்லை
எரிமலையின் வேர்களா

மூடத்தனக் காய்கள் - உச்சி
மலையேற எத்தனிக்க
ஒற்றுதலின்றிக் கருவறுத்த - நீ
ஒற்றைத்தாயம் நாயகரே

கைபர் போலன் - சிறு
கணவாய் வழிபுகுந்த
ஆரிய முகத்திரையை - கிழித்தீர்
அறிவொளிப் பெரியோனே

நாத்திக பூமியை - உன்
நெற்றிக்கண்ணில் சுழலவிட்டு
ஆத்திகக் குடுமியவிழ - அவா
ஆத்திரத்தில் தீயிட்டாய்

தூபக்கால் தீபக்கால் - கண்டு
தொப்பென்று விழுந்தவனுக்கு
யானைக்கால் பயணமிட்டீர் - எழுப்பி
ஞானப்பால் புகட்டத்தான்

ஆலிங்கன லீலைகளால் - இங்கே
ஆகுதி புகையெரிக்கும்
விபூதி பூதங்களுக்கு - அதன்
விலாவொடிய உடுக்கடித்தீர்

நெய்யிலும் நீரிலும் - பேதமா?
நியாய வாதமிட்டு
பொய்யின் புரவலருக்கு - நூல்
பெய்யும் புலவரானீர்

கையிருந்தும் களவா - உயர்
கற்பிதம் சொல்லி
மெய்யது உள்ளவரை - உயிர்
மெய்யாய் வாழ்ந்தீர்

சமத்துப் பேச்சில் - உனது
சமத்துவ வீச்சிருக்க
கரையேறும் கலப்புமணம் - நீதான்
கலங்கரை விளக்கிருக்க

பாட்டாளி மகனுனக்கு - தைப்
புத்தாண்டு பொங்கலா
பட்டுடுத்த தொகையில்ல - பொருமுறேன்
புதுப்பானை கலங்கலா

கல்லைத் தொழுதே - ஒரு
கல்லாமைப் பிண்டமா
மண்டூகமா நிற்பதென்ன - இன்னும்
மண்டியிட்ட முண்டமா

மந்திர எந்திரங்கள் - அட
மாந்திரிக அனுசரணையா
விஞ்ஞான யுகாந்திரத்தில் - சூன்யத்துக்கு
வெஞ்சாமர உபசரணையா

வயற்காட்டு மகசூல் - நூறு
விழுக்காடாம் போடா
தன்னலமென்ற ஊழலிருக்க - ஆகாது
தன்னிறைவு நாடா

தொடுத்தாரே கேள்விகளை - ஏதும்
தோனலையா காரணமா
எழாத பிணத்துக்கு - அடே
ஏழடுக்குத் தோரணமா

எருதுபூட்ட உழுமோ - கேளீர்
எங்கேனும் நுகத்தடி
பார்ப்பனியத்தைக் களையெடுக்க - நின்
போர்வாளே கைத்தடி

வீதியில்லா ஊரும் - உந்தன்
விதிநின்று பாடும்
காதில்லாப் புராணம் - அன்று
காததூரம் ஓடும்.

- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...

சிந்தனை


மனித மூளை சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது, இச்சிந்தனை சக்தி மூலம் கடவுள் என்று அவனே உருவாக்கிக் கொண்டான். அது அவன் மூளைத்திறனை வலுவிழக்கச் செய்துவிட்டது.

நமது சிந்தனையைச் செயலாக்க முயலுவோம். இதற்குத் தடையாக இருப்பது மனிதனே உருவாக்கிய கடவுள் கொள்கைகள் தான்.

மனிதன் பறக்கவேண்டுமென்றால் இறக்கையுடன் படைத்திருப்பான் என்பது மதவாதிகளின் மடத்தனமான விவாதம்.

சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினால் மனிதன் வானத்தின் எல்லைகளையும் மீறி பறந்துவிடுவான்...

- லியானர்டோ டா வின்சி

தமிழ் ஓவியா said...

தமிழனா-தெலுங்கனா? தமிழனா-உருது இஸ்லாமியனா?


தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.

கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.

கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் முடியுமா?

தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துரை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.
தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான்.

தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டப்பன் முகத்தில் காறி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.

தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டப்பனும் ஓர் இனம்.

தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.

துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.

வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன்தான் நமது முன்னோர். அவன் காலத்திலே வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப்பும், ஹைதராபாத் நிஜாமும்.

எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.

- முகநூலில் வே. மதிமாறன்

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வளர்ந்தோம்

திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்:

1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்
2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்
3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்
4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்
5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்
6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்
7. இவன் சேனியன்_துணி நெய்கிறான்
8. இவன் பறையன்_தப்படிக்கிறான்
9. இவன் சக்கிலியன் _ செருப்புத் தைக்கிறான்
10. இவர் அய்யர்_வேதம் ஓதுகிறார்!

2010 முதல் தமிழகப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் பின்வருமாறு:

1. உழவர் _ பயிர்களை வளர்ப்பவர்
2. ஆசிரியர் _ பாடம் கற்பிப்பவர்
3. மீனவர் _ கடலில் மீன்பிடிப்பவர்
4. வணிகர் _ பொருள்களை வாங்கி விற்பவர்.
5. மருத்துவர் _ நோயிலிருந்து காப்பவர்
6. தூய்மைப் பணியாளர் _ துப்புரவு செய்பவர்
7. சலவைக்காரர்_துணிகளைச் சலவை செய்பவர்
8. நெசவாளர் _ துணிகளை நெய்து தருபவர்
9. காவலர் _ சட்டம் ஒழுங்கைக் காப்பவர்
10. கட்டடக் கலைஞர் _ வீடு கட்டித் தருபவர்

ஆதாரம்: (வளரும் இளமை, 4ஆம் வகுப்பு 2ஆவது பாடம் _ பக்கம் 6)

இந்திய மக்கள் அறிவில்லாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்களே காரணம் என்று இந்தியத் தாய் புத்தகத்தில் மிஸ் மேயோ எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும். - பொன்.வெங்கடேசன், இராணிப்பேட்டை

தமிழ் ஓவியா said...

பாவேந்தர்


இதழுலகில் பாவேந்தர்

பாரதிதாசன் அவர்கள் தாமே உரிமையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்திய ஏடுகள் 3. இதில் குயில் ஏடு மட்டும் 6 முறை வெவ்வேறு வடிவில் வெளியானது.

அதாவது 1946 முதல் 1962 வரை புத்தகமாக, மாத இதழாக, மாதமிருமுறை இதழாக, வார இதழாக, நாளிதழாக வெளியானது. இதற்கு முன் புதுவை முரசு(1930) மற்றும் ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்(1935) ஆகிய இதழ்கள் வெளிவந்தன.


திரையுலகில் பாவேந்தர்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் எழுதியுள்ளார். இவற்றில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(1947) என்ற படத்திற்கு அவர் எழுதியது பலருக்கும் தெரிந்திருக்கும். பாலாமணி(எ)பக்காத் திருடன் (1937), இராமானுஜர் (1938), கவிகாளமேகம் (1940), சுலோசனா (1944), பொன்முடி(1949), வளையாபதி(1952)ஆகிய படங்களும் பாவேந்தர் எழுத்தில் வெளிவந்தவை. சிவாஜி நடிக்க தயாரிப்பதாக இருந்த பாண்டியன் பரிசு மற்றும் மகாகவி பாரதியார் ஆகிய படங்கள் தயாரிக்கப்படவில்லை.

1937 தொடங்கி 1960 வரை 22 திரைப்படங்களில் பாவேந்தர் பாடல்கள் எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பின் ஏறத்தாழ 25 படங்களில் பாவேந்தர் எழுதிய கவிதைகள் பாடல்களாக இசைவடிவம் பெற்றுள்ளன.



பாவேந்தரின் குறள் உரை

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 85 குறட்பாக்களுக்கு உரை எழுதியிருக்கிறார். இவற்றில் கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஒன்று. ஆனால், இதற்கு உலகின் தோற்றம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 13 பள்ளிகளில் 1907 முதல் 1944 வரை பாவேந்தர் பாரதிதாசன் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்


தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலைப் பட்டம் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மய்யத்தில் மேலாளர் பணியில் 1965ஆம் ஆண்டு சேர்ந்து, பசுமைப் புரட்சித் திட்டத்தினை அமல்படுத்தியவர். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயன் தராதவை என்று கூறி பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர்.

இயற்கை வேளாண் முறையினை வலியுறுத்தி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகளை நடத்தியதுடன் வானகம் என்ற இயற்கை விவசாயப் பண்ணையினை உருவாக்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டவர். அண்மையில், மத்திய அரசின் காவிரிப் படுகையின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிப் போராடி வந்த நம்மாழ்வார் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 30 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ் ஓவியா said...


சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியம். - (குடிஅரசு, 3.3.1929)

தமிழ் ஓவியா said...


24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!


சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாகத் தேர்வு செய்யப்படுவதற்கான 12 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; ஏற்கெனவே மூன்று பேர் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில், ஒரு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை மேலும் நிலை நிறுத்துவது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இந்தப் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை; தாழ்த்தப்பட் டோரில் அருந்ததியர் போன்றவர்களுக்கு வாய்ப்பு, காலங்காலமாக மறுக்கப்பட்ட பிரிவினருக்கும்கூட இடம் இல்லை; அதுபோலவே, மீனவர், சலவையாளர், முடிதிருத்துவோர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பிரதிநிதியாக எவரும் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார் (விடுதலை, 17.1.2014).

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை உணர்வை வெளிப்படுத்தவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக் காலி இடங்களை நிரப்புவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்யவும் கோரி 24.1.2014 அன்று தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவ்வறிக்கையில் அறிவித்திருந்தார்கள்.

அதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் செவ்வனே செய்துகொண்டுள் ளனர். இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரையும் இணைத்துக் கொள்ள ஆவன செய்யுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூகநீதியும், சுயமரியாதையும் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர் தோழர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாளான பொங்கல் விழாவில் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார் (17.1.2014).

திராவிடர் கழகத்தின் தொடர் பணியாகவும் அது அமைந்தே வந்திருக்கிறது என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த ஒன்றே! இதே சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் அருகேகூட நீதித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில், பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு. அதற்கான நல் விளைவுகளும் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது.

நாளை மறுநாளும் இதே சமூகநீதி நோக்கத் தோடே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், மதுரைக் கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் கூட இதே காரணத்திற்காக நீதிமன்ற வளாகத் துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மூத்த வழக்குரைஞர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இது தொடர்பாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் கர்ணன் அவர்களும் தானே முன்வந்து ஆர்ப்பரித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கே உரித்தான இந்த மண்ணின் மனப்பான்மையை (Soil Psychology)
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மூத்த நீதி பதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மக் களுக்குத் தேவையான சட்டங்களை இயற்று கிறார்கள்; அந்தச் சட்டங்களைக்கூட செல்லாது என்று தடை செய்யும் அளவுக்கு உயர் அதிகாரம் படைத்த மய்யங்களாக உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட மய்யத்தில் வருணாசிரம உணர்வு, ஜாதீய உணர்வு நிலவும் ஒரு நாட்டில் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி (Justice Social) என்பதுதான் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது நீதித்துறையிலிருந்து தொடங்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகம் கொடுக்கும் இந்தக் குரல் சட்ட ரீதியானது; சமூகத் தளத்தில் முதன்மையாக எழுப்பும் இன்றியமையாத சமூகநீதிக்கானது.

இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல், ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக் கிறோம்!!!

Read more: http://viduthalai.in/page-2/73918.html#ixzz2rArbUogj

தமிழ் ஓவியா said...


நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் (24.1.2014) முழக்கங்கள்


1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே

3. வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

4. தேவை தேவை
நீதித்துறையிலும் நீதித்துறையிலும்
தேவை தேவை
சமூக நீதி சமூக நீதி
தேவை! தேவை!!

5. ஆதிக்கம் ஆதிக்கம்
நீதித்துறையில், நீதித்துறையில்
ஆதிக்கம் ஆதிக்கம்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்

6. வழக்குரைஞர் தொழிலில்
வழக்குரைஞர் தொழிலில்
அனுபவமே இல்லாத
அனுபவமே இல்லாத
பார்ப்பனர்களை பார்ப்பனர்களை
நீதிபதியாக்குவதா? நீதிபதியாக்குவதா?


7. பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம்
சமூகநீதிக்காக சமூகநீதிக்காக
குரல்கொடுத்த குரல்கொடுத்த
நீதியரசர் கர்ணன் அவர்களை
நீதியரசர் கர்ணன் அவர்களை
பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம்

8. மத்திய அரசே, மத்திய அரசே
அனைத்துத் துறைகளிலும்
அனைத்துத் துறைகளிலும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
கொண்டு வா! கொண்டு வா!!

9. நீதித்துறையில் நீதித்துறையில்
வாய்ப்பு மறுக்கப்பட்ட
வாய்ப்பு மறுக்கப்பட்ட
ஜாதிப் பிரிவினருக்கு
ஜாதிப் பிரிவினருக்கு
இடம் கொடு! இடம் கொடு!!

10. நீதித் துறையில் நீதித் துறையில்
பெண்களுக்கு பெண்களுக்கு
வாய்ப்பு கொடு! வாய்ப்பு கொடு!

11. தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
மிகவும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட
பெண்களுக்கு பெண்களுக்கு
இடம் கொடு, இடம் கொடு!

12. மாற்றுக! மாற்றுக!!
நீதிபதிகளே நீதிபதிகளை
நியமனம் செய்யும்
நியமனம் செய்யும்
கொலிஜியம் முறையை
கொலிஜியம் முறையை
மாற்றுக! மாற்றுக!!

13. போராடுவோம், போராடுவோம்!
வெற்றி கிட்டும்வரை வெற்றி கிட்டும்வரை
போராடுவோம் போராடுவோம்!

14. வென்றெடுப்போம்
வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
சமூக நீதியை சமூக நீதியை
வென்றெடுப்போம்!
வென்றெடுப்போம்!!

15. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!!

- திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-4/73899.html#ixzz2rArvEUp1

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!


புரிந்துகொள்வீர்!

பா.ஜ.க.வின் இராமர் கோவில் திட்டம் கைவிடப்படவில்லை!

Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?

Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.

இதன் தமிழாக்கம் வருமாறு:

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?

அருண்ஜேட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர் பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்கவேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73915.html#ixzz2rAuAe8te