Search This Blog

10.1.14

சங்கராச்சாரியார் அரசியல் பேசலாம் - பாதிரியார் அரசியல் பேசக் கூடாதா?


19.1.2014 நாளிட்ட விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடு, சற்குண துர்குணங்கள் என்ற தலைப்பிட்டு, சமூகநீதிப் போராளியான பேராயர் அருட்தந்தை எஸ்ரா. சற்குணப் பாதிரியாரைப்பற்றி, மிகவும் கடுமையாகத் தாக்கி, அவர்மீது சீறிப் பாய்ந்து, அவரை பிராண்டியுள்ளது!

அப்படி அவர் என்ன மாபெரும் தேசியக் குற்றத்தைப் புரிந்து விட்டார்?
அவர் என்ன சர்ச் வளாகத்தில் யாரையாவது கொலை செய்யத் தூண்டினாரா?
கொலை வழக்கு எதிலும் சிக்கி, ஜெயிலுக்கும் பெயிலுக்குமாக அலைந்தாரா?
மகளிர் எழுத்தாளர் எவராவது அவர் தன்னிடம் அதீதமாக நடந்து கொண்டார் என்ற புகாருக்கு ஆளானாரா?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் விழா நடத்தினாராம்! அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதிரியார் எஸ்ரா அவர்கள் பா.ஜ.க. அணியோடு கேப்டன் சேரக் கூடாது; மாறாக தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டும் என்று பேசி விட்டாராம்!

அரசியல் கட்சிகளிடையே கூட்டணி வருவதற்கு உருவாக்குவதற்கு - பாதிரியாரே இப்படி ஈடுபடலாமா? என்று ஆத்திரம் கொப்பளிக்க ஆவேசப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஏடு கணை தொடுக்கிறது - பாதிரியார் எஸ்ராமீது!
பாதிரியாரும் ஓட்டுரிமை பெற்றவர்தானே! அவர்களுக்கும் எப்படிப்பட்ட அரசுகள் நாட்டில் எதிர்காலத்தில் அமைய வேண்டும் என்று கருத்துக் கூறும் உரிமை இல்லையா?

ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டே!

காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் கலந்து கொண்டு பேசவில்லையா?

இதே பக்கத்தில் உள்ள செய்தியைப் படியுங்கள்.

முன்பு திருச்சியில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில், (பிரவீண்  தொகாடியா திரிசூலம் வழங்கிய மாநாட்டில்) காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திரர் கலந்து கொள்ள வில்லையா?

அவர்களுக்கு அந்த உரிமை அதுவும் வன்முறையைத் தூண்டிய திரிசூலம் வழங்கிய மதவெறி மாநாட்டில் கலந்துகொள்ள உரிமை  உள்ள போது எஸ்ரா பாதிரியாருக்கு மட்டும் இந்த உரிமை கூடாதோ!

பேசு நா இரண்டுடையாய் போற்றி! போற்றி!! என்று அறிஞர் அண்ணா ஆரியமாயை பற்றிக் குறிப்பிட்டது எப்படிப்பட்ட அருமையான ஒன்று என்பது இப்போது எல்லோருக்கும் விளங்குமே!

உலக அரங்கில்கூட பாதிரியார்கள் அரசி யலையே மாற்றி நாட்டு விடுதலையையும் வாங்கித் தந்துள்ள வரலாறு, ஆர்.எஸ்.எஸ். தேசீயங் களுக்கு ஏனோ வசதியாக மறந்துவிட்டது?

சைப்பிரஸ் தீவு - சுதந்தரமான நாடாக ஆவதற்கு முழு முதற் போராளியாக நின்று வென்று காட்டியவர்.

பாதர் அருட்தந்தை மக்காரீயோஸ் அல்லவா? அவரைத்தானே அந்த மக்கள் தலைவராக ஏற்று மகிழ்ந்தார்கள்!

அதுபோலவே தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் போராடியதில் பல பாதிரியார்கள் முன்னின்றுள்ளனரே!

நோபல் பரிசு பெற்ற ட்டூட்டு (Father Tutu) அவர்கள் நெல்சன் மண்டேலாவுக்குப் பெருந் துணையாக இருந்து போராடவில்லையா?

எனவே தங்களது முயற்சியில் இப்படி ஒரு குறுக்கீடா என்ற எரிச்சல்தான்!

அவர் பாதிரியார் அங்கியைக் கழற்றச் சொல்ல ஆர்.எஸ்.எஸ். எப்போது சர்ச்சுகளுக்கு CSI போன்றவைகளுக்கு தலைமைத்துவம் பெற் றார்கள்? மோடி வருவதற்கு முன்பே இப்படி ஒரு (தான்தோன்றி) தர்பாரா?

சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்பனருக்கு வேறு ஒரு நீதி
                                                                     ------------------- பாரதியார் பாட்டு

நரேந்திர மோடிக்குத்தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்

சென்னை, ஜூலை 24-நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டுமென்று  காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வரவேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாக திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியாவுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது. நரேந்திரமோடி -  ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர்.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் ஜெயேந்திரர்  கூறினார்.

                                            ------------------------(மாலை மலர் 24.7.2013)

சங்கராச்சாரியார் அரசியல் பேசலாம் - பாதிரியார் அரசியல் பேசக் கூடாதா?

             --------------------------10-01-2014 "விடுதலை” யில் ஊசிமிளகாய் எழுதிய கட்டுரை

35 comments:

Seeni said...

Kodumaithaan...

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள்! சித்திர புத்திரன்

எது நிஜம்?

இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டு மென்றால், இறந்து போனவர்களின் ஆத் மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.

1. இறந்து போகும் ஜீவனின் ஆத்மா, மற் றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுவிடுவதாக

2. இறந்து போன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்து போன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத் திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக.

ஆகவே, இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இது தவிர, ஆத்மா கண்ணுக்குத் தெரி யாதது என்றும், சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே; சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப் பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப் பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது.

குசேலர் பெண் ஜாதி குறைந்தது ஆண்டிற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு ஆண் டாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27ஆவது ஆண்டாவது இருக்கும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப் பார்கள்?

20 ஆண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளை களைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

இதிலென்ன தப்பு?

கேள்வி: என்னடா உனக்கு கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?

பதில்: அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன் னாயே. அவரை நான் உண்டு என்று சொன் னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயே! அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லிவிட்டேன்; இதில் என்ன தப்பு?

அரைகோடி ஆண்டு!

இராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். அதில் இராவணன் அரை கோடி வருஷம் (50 லட்சம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது.

அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லட்சத்து 96 ஆயிரம் வருஷங்களாகும். நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லட்சத்து 20 ஆயிரம் வருஷந்தான் ஆகிறது. ஆகவே இராவணன் எப்படி அரசாண்டிருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/73443.html#ixzz2q3DrTqnn

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணை உள்ளவரா?


ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?

மாணவன்: முடியும் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.

ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?

மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!

ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.

மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?

ஆசிரியர்: ? ? ?

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EMzIcn

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கரரின் அமரு சாதகம்!

ஆதி சங்கரர் தத்துவப் பொருள் பற்றி வாதிட்டுப் பலரை வென்று தமது கொள்கையை நிலைநாட்டினாராம். அவர் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும் போதே -வாதம் புரிந்து கொண்டிருக்கும் போதே - மாயமாய் மறைந்து மக்களின் ஆதரவைத் தம்பக்கம் திருப்பி விடுவாராம்.

ஒருநாள் தம்மோடு வாதிட்டுத் தோற்ற ஒரு எதிரியின் மனைவி ஆண் - பெண் உறவு பற்றிக் கேட்ட கேள்விக்கு அவருக்கு விடை கூறத் தெரியவில்லையாம்! காரணம், திருமணமாகும் முன்பே துறவு பூண்டவரல்லவா? வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆதிசங்கரர் ஆண்-பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடைசொல்ல சிறிது காலம் தவணை கேட்டு மறைந்தாராம்.

இறந்து போன அமரு என்ற ஒரு அரசனின் உடலில் தம் கலை மகிமையால் தம் உயிரை பாய்ச்சினாராம் ஆதிசங்கரர். இறந்த அமரு உயிர் பெற்றானாம். அழுது கொண்டிருந்த அவன் மனைவி ஆவலோடு ஓடி வந்து அணைத்தாளாம்! பிறகு..?

கொஞ்ச காலத்திற்கு பின்பு சங்கரர் தம் யோக சாதனைகளை முடித்து விட்டு, கேள்விக்குரிய விடையை நேரிடையாகப் பயின்று முடித்து கேள்வி கேட்ட பெண்ணிடம் வந்தாராம். திறமையாக விடையளித்து விவாதத்தில் வென்றாராம்.

இதுதான் ஆதிசங்கரரைப் பற்றிய அமரு சாதகம் என்ற நூல்.

ஆண் - பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடை சொல்லத் தெரியாதது துறவி ஆதிசங்கரருக்கு ஒரு குறையா? இதற்காக அமரு உருவம் பெறவேண்டுமா? அப்படியானால், உண்மைத் துறவியா? உண்மையாகவே வேற்றுருப் பெற்று அதற்குப் பின்புள்ள செயல் செய்தது பொய் என்றாலும் அப்படிப் பெற்றதாக பொய்யுரைத்து அமரு சாதகம் என்று ஒரு நூல் புனைய வேண்டுமா? சிந்தியுங்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EXQ4vh

தமிழ் ஓவியா said...


ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைமீது அமெரிக்கா மீண்டும் தீர்மானம் போர்க் குற்றப் படங்களையும் வெளியிட்டது


நியூயார்க் ஜன.10- அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் (ஜெனிவா) மூன்றாவது முறையாக அமெரிக்கா, இலங்கை அரசின்மீது போர்க் குற்ற தீர்மா னத்தைக் கொண்ட வர உள்ளது. அதற்குமுன் இலங்கை இராணுவத் தில் போர்க் குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமான படங்களை யும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங் களின் நிழற்படங்களை அமெரிக்கா பகிரங்க மாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத் தின் அதிகாரபூர்வ, ட்விட்டர் கணக்கில் அந்த நிழற்படங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதில் செயின்ட் அந்தோணி மீதான நிழற்படம் பிர தானமாக இடம் பெற்றுள்ளது. 2009-ஆம்ஆண்டில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும் பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த நிழற் படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணு வத்தால் பொதுமக்க ளின் புகலிடங்களாக அறிவிக்கப்பட்ட பாது காப்பு மண்டலங்களின் புகைப்படங்களும் அமெரிக்க தூதரக ட்விட் டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இந்தக் குற்றச் சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.

இந்நிலையில் அமெ ரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கையில் தமிழர் பகுதிகளை வியாழக் கிழமை நேரில் பார்வை யிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் ராணுவ போர்க் குற்றங் கள் தொடர்பான நிழற் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம் முன்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க தூதரும், அந்நாட்டின் குளோபல் கிரிமினல் ஜஸ்டிஸ் துறையின் தலைவரு மான ஸ்டீபன் ஜே ராப், ஒரு வார கால பயண மாக இலங்கை வந்துள் ளார். இவர் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று, தமிழ் தேசிய கூட்டணி யின் தலைவர்களை சந்தித்தார். பின்னர் அவர், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்ட மிட்டு வருகிறது என்றார்.

இந்நிலையில் கொழும்புவில் தேசிய அமைப்புகளின் கூட்ட மைப்பு சார்பில் அமெ ரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியும், பின்னர் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட் டத்தில், இலங்கைக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ராஜபக்சே புலம்பல்

இலங்கை குண்டு வெடிப்புகள் நடக்கா விட்டாலும், மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது, என, இலங்கை அதிபர், ராஜ பக்சே தெரிவித்து உள் ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ள, இலங்கை அதிபர், ராஜபக்சே, இஸ் ரேல் அதிபர், ஷிமோன் பெரசிடம் கூறியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்த சண்டை, 2009இல் தான் ஓய்ந்தது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பது தான், எங்கள் விருப்பம். பல ஆண்டு கால பயங்கர வாதத்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்தது.

தற்போது, பயங்கரவாதம் ஒழிந்து விட்டாலும், சர்வதேச சமூகத்தின் நெருக் கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெனி வாவில் ஆண்டுக்கு இரு முறை, மேற்கத்திய நாடுகள், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றன. இலங்கையில் குண்டு வெடிக்காத போதிலும், இந்த நாடுகள், எங்கள் அரசைக் கண்டிக்கின் றன. சர்வதேச நாடுகளின் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு, மூன்று, நான்கு ஆண்டுகள் போதாது. இன்னும் கால அவகாசம் தேவை.

இவ்வாறு, ராஜபக்சே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/73416.html#ixzz2q3Etrk3z

தமிழ் ஓவியா said...


புளுகோ புளுகு!


விண்வெளிக்கு பல்வேறு நாடுகள் தங்கள் செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளன. மேலும் தற்போது வரை விண்ணில் செயற்கைக் கோள்களை அனுப்பி வருகின்றன. வானிலை, செல்போன், ராணு வம் ஆகியவற்றின் பயன்பாட் டிற்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காகவும் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன.

இவ்வாறு பூமியைச் சுற்றும் ஒரு அமெரிக்க செயற்கைக் கோள் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் ஸ்தம் பித்து விடுகிறது. அதன் பின்னர் வழக்கம் போல செயல்படத் தொடங்குகிறது. சரி செயற்கைக் கோளில் தான் ஏதோ பழுது என்று நினைத்தால், அதன் கருவி களும் பாகங்களும் மிகத் தெளிவாக பழுது இல்லாமல் இருந்தன.

இது நாசா விஞ் ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி புதிய ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. அதில் எந்த ஒரு செயற்கைகோளும் நமது நாட்டின் புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண் யேசுவரர் கோயிலுக்கு (சனீஸ்வரன் கோயில்) நேர் மேலே உள்ள வான் பகுதியில் செல்லும்போது இந்த 3 விநாடிகள் ஸ்தம்பிப்பு ஏற் படுவது கண்டுபிடிக்கப்பட் டது.

இது நாசாவை மட்டு மல்ல; உலகத்தையே பிரமிக்க வைத்தது. அதற்குக் கார ணம் ஒவ்வொரு நாளும், விநாடியும் சனிக்கிரகத்தி லிருந்து கண்ணுக்குத் தெரி யாத கருநீலக் கதிர் அந்தக் கோவிலின் மீது விழுந்து கொண்டே இருப்பதுதான் (தினத்தந்தி தினம் ஒரு தக வல் நாள் 9.1.2014 பக்கம் 16).

இதைப் படிக்கும் பொழுது விலா நோக சிரிப்புதான் வந்தது. இன்னொரு வகை யில் தமிழர்களின் ஏடுகள் கூட தமிழர்கள் கெட்டுப் போக இப்படி மூடநம்பிக் கைகளை விதைக்கின்ற னவே என்ற வேதனை மற்றொருபுறம்.

தினத்தந்தி வெளியிட்டு இருப்பது புதிய சரக்கல்ல 2011ஆம் ஆண்டிலேயே இப்படி ஒரு புளுகை உலவ விட்டனர். பெரும்பாலும் திரு நள்ளாறு சனிஸ்வரன் கோயி லுக்கு ஒரு மகத்துவத்தைக் கற்பிப்பதற்காகப் பார்ப்பன அர்ச்சகர்கள் அவர்களின் வட்டாரம் கட்டி விட்ட கைச் சரக்கு தான் இது.

இந்தக் கோயிலைப் பொறுத்தவரை வட மாநிலங் களுக்குச் சென்று பெரிய பெரிய பணக்காரர்களிடம் இந்தக் கோயிலின் மகி மையை எடுத்துக் கூறி அவர் களை அழைத்து வரும் புரோக்கர்கள் இருக்கிறார் கள் - அதன் மூலம் இந்தத் தொழிலில் பெரும் பணம் பண்ணுகிறார்கள். பக்தி வந்தால் தான் புத்தியைப் பறி கொடுப்பது இயல்பு தானே!

2011ஆம் ஆண்டில் சனீஸ்வரன் கோயில்பற்றி இப்படி ஒரு பிரதாபம் கிளப்பி விடப்பட்டது. இதுபற்றி ஸ்ரீவிஜய் கண்டர் (Sri Vijay Kandar) Sir is it True? என்று சந்திராயன் புகழ் விஞ் ஞானியான - நமது தமிழ ரான மயில்சாமி அண்ணா துரையிடம் இதுபற்றி கேட்கப் பட்டபோது பளிச் சென்று அவர் பதில் சொன்னார்.

“To the Best of my knowledge it is not true”

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை இது உண்மை யில்லை என்று சொன்னாரே பார்க்கலாம் கூகுள் இணையதளத்தில் இது இடம் பெற்றுள்ளது (12.10.2011) ஒரு விஞ்ஞானியே இப்படி சொல்லி விட்டபிறகு இந்த அஞ்ஞானிகள் எப்படி சொல் கிறார்கள் பாருங்கள்!)

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73412.html#ixzz2q3F4DtC0

தமிழ் ஓவியா said...

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) செயற்குழுக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது
தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று வழிகாட்டுதல் உரை ஆற்றினார்

விஜயவாடா, ஜன.10- இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist Associations ) செயற்குழு கூட்டம் ஜனவரி 6ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் யு.கலாநாதன், செயற்குழு உறுப்பினர் அனை வரையும் வரவேற்று, கூட்டமைப்பின் அண்மைக் கால செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

குறிப்பாக டில்லியில் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தின் முன்பு நடத்தப்பட்ட அறப் போர் குறித்து விரிவாக விளக்கினார்.

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) பன்னாட்டு இயக்குநர் பாபு கோகினேனி சிறப்பு அழைப்பாளராக பங் கேற்றார்.

நடைபெற்ற அறப்போர் குறித்த கருத்துகளை கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்பினர் தெரிவித் தனர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரை யாடினர். கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப் பினர் ஒவ்வொருவரும் தங்களது அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய குறிப்பினை வழங்கினர். நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடிய அளவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை மய்ய அரசு வடிவமைக்க வேண்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டினை ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கூட்டமைப்பின் சிறப்பு அழைப்பினை ஏற்று தமிழர் தலைவர் கி.வீரமணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு, நாடு தழுவிய அளவில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு நிறுவப்பட்ட அமைப்பாகும். கூட்டமைப்பின் நிறுவனர் அமைப்புகளுள் ஒன்றான பகுத்தறிவாளர் கழகம் தமிழகத்தை பொறுத்தவரையில் பிரச்சார செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் ஆரம்பக்காலம் முதல் அழுத்தமாக செயல்பட்டு வருகிறது.

பகுத்தறிவாளர்களான நாம் முற்போக்கு கருத்தியல்களில் பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்களாகவே இருக் கிறோம். சிறுபான்மையினராக பகுத்தறிவாளர்கள் இருந்தாலும், சமுதாய நலனுக்கு உகந்த முற்போக்குக் கருத்துகளை பரப்புவதில், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறோம்.

கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் தங்களது செயல்பாடுகளை மேற் கொண்டாலும், நாடு தழுவிய அளவில் ஒருங் கிணைந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு.

நாடு தழுவிய அளவில் நடைபெற வேண்டிய செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உறுப்பினர் அமைப்பினரிடையே அணுகுமுறை வேறுபாடு ஏற்படுவது இயல்பே. உறுப்பினர் அமைப்பினர் விரிவாக தங்களது கருத்துகளை விவாதத்திற்கு உட்படுத்தி, அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவு களை செயல்படுத்துவதில், கருத்து மாறுபாடுகள் கொள்ளுதல் கூடாது.

எடுக்கப்பட்ட முடிவினை முழுமனதுடன் நிறைவேற்றுவதில் கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பும் முனைப்பாக தங்களது பங்களிப்பினை அளித்திட வேண்டும். எடுக்கப் பட்ட முடிவுகளின் வெற்றிக்கு கடுமையாக உழைத் திட வேண்டும்.

உறுப்பினர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில்தான், கூட்ட மைப்பின் பணிகள் சிறப்படைய முடியும். இந்த அடிப்படையில் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர் அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கூறுகிறோம்.

கருத்துப் பரிமாற்றம், கருத்தொத்த முடிவு, களப் பணி காணுதல் என்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தான் கூட்டமைப்பின் செயல்பாடு செம்மைப் பட முடியும்.

அதற்கு அத்துணை உறுப்பினர் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். - இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், மற்றும் பெரும்பாலான உறுப்பினர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/73426.html#ixzz2q3Fln3pX

தமிழ் ஓவியா said...


திருப்பதி தேவஸ்தானத்தில் உடலுறவுக் கேவலம்!
எழுத்துரு அளவு Larger Font

திருப்பதி, ஜன.11 திருமலையில், தேவஸ் தான அலுவலகம் ஒன் றில், பாலியல் உறவில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர், பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருமலையில் மது, மாமிசம், பீடி, சிகரெட், சீட்டு விளையாட்டு, விப சாரம், பிற மத பிரசாரம் போன்றவை, தடை செய்யப்பட்டுள்ளன.

திருமலை, சங்குமிட்டா துணை விசாரணை அலு வலகத்தில், குமாஸ்தா வாக பணிபுரியும் கோபி நாத், தன் பணி நேரத் தில், கடை நிலை ஊழிய ராகப் பணிபுரியும் பெண் ஒருவருடன், ஓராண் டாக, பாலியல் உறவில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அலுவலக அறையில், அவர்கள் இருவரையும், கையும் களவுமாக, விஜிலென்ஸ் அதிகாரி கள் பிடித்து, காவல் துறையில் ஒப்படைத் தனர். இதையடுத்து, இருவரும் நேற்று, பணி யில் இருந்து நீக்கப்பட் டனர்.

இத்தகைய குற்றத்திற் காக, தேவஸ்தான ஊழி யர் பணி நீக்கம் செய்யப் பட்டது, இதுவே முதல் முறை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73464.html#ixzz2q8h6DmZX

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க வழிகாட்டும் அறிவிப்பு


மும்பையில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கு விழாவில் அமைச்சர் புஜ்பால் பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார். நன்றி.

Read more: http://viduthalai.in/e-paper/73468.html#ixzz2q8hO1Cts

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/73469.html#ixzz2q8hq97uu

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?செயல்படுமா?


சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடங்கவிருக்கும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கான மருத்துவ பேராசிரியர்கள் தொடர்பான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்ததன் மூலம் அடிப்படைத் தவறினைச் செய்துவிட்டது; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டு இருக்கிறது.

இதுபற்றிக் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் சொல்லப்படாததிலிருந்தே ஒன்று தெளிவாகவே தெரிகிறது. தமது தரப்பில் தவறு நடந்திருக் கிறது என்று அரசுக்கு நன்கு தெரிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. இல்லாவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற முறையில் எதையாவது தெரிவித்திருப்பார்கள்.

சரி, தவறு நடந்து விட்டது என்று அறிந்த மாத்திரத்தில் விளம்பரத்தை மாற்றி வெளியிட வேண்டியதுதானே, அதில் என்ன தயக்கம்?

எந்த இடத்தில் இந்தத் தவறு நடந்திருக் கிறது என்று துறை ரீதியான விசாரணைகள் ஒரு பக்கம் நடத்தப்படட்டும், மற்றொரு பக்கம் சட்ட ரீதியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான அறிவிக்கையை விளம்பரமாகக் கொடுப்பதில் ஏன் தாமதம்?

நீதிமன்றம் சென்று அது தலையில் குட்டியதற்குப் பிறகுதான் திரு(ந்)துவது என்ற நிலைப்பாடு ஒரு நல்லரசுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (MRB) சார்பில்தான் விளம்பரம் வெளியிடப் பட்டது. அதன் சட்ட விதிகளிலேயே நான்காம் பகுதியிலேயே (Chapter- 4) கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Number of posts reserved for scheduled castes, scheduled tribes and other backward classes in a cadre having morethan 13 posts shall be determined by multiplying the cadre strength by the percentage of reservation prescriped for the respective categories while during so fraction if any shall be ignored” என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதே.

13 இடங்கள் காலியாக உள்ள எந்த ஒரு பணியிடத்துக்கும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கப் போனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசின் விளம்பர அறிக்கையில் மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants) 14 இடங்கள், இணை ஆலோச கர்கள் 13 இடங்கள், இளநிலை ஆலோசகர்கள் 23, நிலைய மருத்துவர்கள், 19 பதிவாளர்கள் 14 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் 13 இடங்களுக்கு மேற்பட்டது என்பதால் விதிமுறைகளின்படி கண்டிப்பாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

கட்சிகளைக் கடந்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கூட்டப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனைப் பேரும், ஒருமித்த எண்ணத்தோடு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு கட்சிகள் சமூக நீதி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 13ஆம் தேதி மாலை ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதியின் பக்கம் பெரும் அளவில் திரண்டு நிற்பர் என்பதில் அய்யமில்லை.

காலம் கடந்துவிடவில்லை - தமிழ்நாடு அரசு சமூக நீதித் திசையில் சிந்திக்குமா? செயல் படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/73470.html#ixzz2q8hzn8Wn

தமிழ் ஓவியா said...


இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது


பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரதராஜுலு போன்ற ஆசாமிகளைச் சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல் லாதாருக்குக் கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசுக்கும் தேசியத்திற்கும் விரோதமாய்ப் பொய்க்கால் மந்திரிகளைச் சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார் களுக்குக் கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம்.

இதற்கு சரியன ருசு கொடுக்க சமீபத்தில் சென்னை சட்ட சபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாதமுதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.

அவர் சொன்னதாவது 1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று.

அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், கமிட்டி களுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான், இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23.03.1928இல் சுதேசமித்திரனிலேயே இருக்கிறது.

இதைக் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை.

இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினாலேயே ஸ்ரீரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துத் தேசியமென்பதும், காங்கிரசென்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73483.html#ixzz2q8iZSZ80

தமிழ் ஓவியா said...


சங்கீதமும் பார்ப்பனியமும்

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பன ரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத் தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறை வாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்திய முடைய வர்களாயிருந்தாலும் அதை லட்சியம் செய்யா மல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள்.

நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள் தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும், பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லட்சியம் செய்யாமல் சுவாமிகளே என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனு சரித்தே ஒவ்வொரு ஊரிலும்.

பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும், அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை ஆதரிக்க வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவை யிலும் முதல் முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதைக் கவனித்து நடக்குமா?

சுழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணா மலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்குப் பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்ய வேண்டு மெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் ரேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கி விட்டார்கள்.

நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் இப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன.

பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்ற மடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்குப் போதுமான காரணம் இல்லை யென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய் விட்டது.

மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண் ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலி யாரும் போவார் என்றே தெரிகின்றது.

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாகத் தெரி கின்றது. 98 பார்ப்பனரல்லாத வாலிபர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்ட தாகவும் அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வரு கின்றது. திருவண்ணாமலைக் கேசுபோலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும்போல் தெரிகின்றது.

அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்ப னரல்லாத வக்கீல் போகவேண்டி யிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்தத் திருவண் ணாமலை கேசு செலவுக்குப் பொதுஜனங்கள் உதவியது போலவே உதவவேண்டும் என்று அப்பீல் செய்து கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.02.1928

Read more: http://viduthalai.in/page-7/73484.html#ixzz2q8ilWxS2

தமிழ் ஓவியா said...


அயல் பற்று


தமிழிசை ஆய்வாளரான மம்முது சொன்ன கருத்து புதிய தலைமுறை இதழில் (16.1.2014) வெளி வந்துள்ளது.

முத்தமிழ் என்று நாம் சொல்கிறோமே தவிர, இதில் இயற்றமிழ் தவிர்த்து இசை, நாடகத் தமிழ் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. ஒரு முறை அமெரிக்கா சென் றிருக்கும்போது, அங்குள்ள பல்வேறு நண்பர்களின் வீடு களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.

அங்கு எல்லா ருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இசைக் கருவியை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு இசைக்கருவி வாசிக்கத் தெரிந்திருக்கிறது. அங்கு இசையைக் கொண்டாடுகின் றனர். ஆனால் நம்மிடையே இந்தப் பழக்கம் தலைகீழாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழிசை அழியும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழிசையைக் காப் பாற்றுவது நம் ஒவ்வொரு வரின் கையில்தான் உள்ளது. இன்று திருமணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசைகள் இடம் பெறுவதில்லை.

வேறு மாநில இசைக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு தமிழர் களால் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண் டும். தமிழிசைக் கலைஞர் களுக்கான பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய் யப்பட்டாலே தமிழிசையை பெருமளவில் காப்பாற்ற முடியும். கர்நாடக சங்கீத சபாக்கள் போல தமிழிசைக் காக சபாக்கள் உருவாக் கப்பட வேண்டும். அங்கு நடக்கும் தமிழிசை நிகழ்ச்சி களில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மேலே கண்டுள்ள மம்முது அவர்களின் கருத்தில் பல உட் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.

தமிழர் வீட்டுத் திரும ணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசை காணப்படவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.

விவசாயம் போலத்தான் இந்தத் தமிழ் இசைக் கலை களும்; விவசாயம் உடலு ழைப்பைப் பெரிதும் சார்ந்தது என்பதால் அதனைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் ஒதுக்கி விடவில்லையா? அதன் விளைவை இன்று வரை கூட நம் மக்கள் அனு பவித்துக் கொண்டு தானி ருக்கிறார்கள்.

நாதஸ்வரம், தப்பட்டம் போன்ற கலைகள் உடலு ழைப்பைக் கூடுதலாக உறிஞ் சக் கூடியதாகும். அதனாலே ஆரியம் அதனை ஒதுக்கி விட்டது. தவில் போன்ற கருவிகள் பக்கம்கூட அவர் கள் நெருங்க மாட்டார்களே!

வேறு மாநில இசைக் கலைக்கு வழங்கப்படும் இசை வாய்ப்புகள்கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்று மம்முது அவர்கள் குறிப்பிட்டு இருப் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இப்பொழுது புதிதாக ஒரு வியாதி கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில். அது கேரளா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செண்டை மேளமாம். இது குறித்துத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களும் இ(அ)டித்துக் கூறி இருக்கிறார்.

தமிழர்கள் தங்களுக் குரிய மதிப்பைவிட அயல் வழக்குகளில் தங்களைப் பறி கொடுப்பது பல வகைகளி லும் நடந்து கொண்டு இருப்பதுதானே தமிழர்களின் இழப்புகளுக்குக் காரணம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/73522.html#ixzz2qEj5m5AX

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....



பகுத்தறிவுச் சிந்தனையாளர் திராவிடர் இயக்கத்தின் தீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் மறைவு (2000).

நாவலர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த புத்தாயிரம் தொடக்க விழாவில்தான் (31.12.1999 நள்ளிரவு).

Read more: http://viduthalai.in/e-paper/73520.html#ixzz2qEjoQalr

தமிழ் ஓவியா said...


முத்தமிழ்ப் பொங்கல்


பொங்கல் விழா! முத்தமிழ்ப் பொங் கல் விழா! முப்பால் பொங்கல் விழா! ஆரியத்தால் புராண மத மூட இதி காசத்தால், முதலாளித்துவத்தின் ஆணவ அடக்கு முறைகளால் தீண்டப் படாத, மங்காத தமிழர் பண்டைத் தனித் தமிழ் வாழ்வின் நந்தாத நறுஞ் சின்னம்! தனித் தமிழ் விழா! தன்மான விழா!

உழவர் விழா! நிலத்தின்மீது காத லற்று, அதனைப் பிறர் உழுவித்துத் தான் தன்மானமற்று, உழையா உழைப்பை உண்ணும் நில முதலாளி அல்லது ஜமீன், மிராசுதாரர் ஆகிய முதலாளித்துவக் கடவுளால் படைக் கப்பட்டு முன்னிருந்த, தானே தன் நிலத்தின் உரிமையாளனாய், தானே அதைத் தனித் தமிழ்க் காதலனாய் உழுது உழைத்துப் பயிரிடுபவனாய், தானே அதன் இன்பமும் பயனும் நுகர்பவனாய், தானே அதன் பண்டம் பரிமாறும் வணிகனாய், தானே ஊராளும் குடியரசன் குடிமொழிக்குரிய குடியாட்சி உரிமையாளனாய், தானே அக்குடியரசன் குடிப்படையின் வீரனாய், தன் குடும்பத்தின் தொழுகைக் கூட மாகிய கோயில் வீடு அல்லது அரங்கில் தானே தன் குடும்பத் தலைவனாய் வழிபாடாற்றும் வழிபாட்டுத் தலை வனாய் வாழ்ந்த பண்டைப் பொது வுடைமைப் பெருந்தமிழன் காலத் திலிருந்து இன்றுவரை பண்பு மாறாது கொண்டாடப்பட்டு வரும் உழவர் விழா! வேளாளர் விழுத் தமிழ் விழா! பொதுவுடைமைப் பண்பாட்டு விழா! தனித் தமிழர் திராவிடப் பெருவிழா!

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ் சேனைத் தலைவராய் வள்ளு வப் பெருமகன் தன் திண்டோள்கள் இரண்டும் புடைக்க, மகிழ்ச்சி முகத்தில் பெருக்கெடுத்து இருகண்வழி ஓடி ஒளிவீச, குன்றென நின்று கறங்கும் இரு முரசங்களை யானையின் இருபுறமும் ஞாற்றிக் கால்களால் அவற்றைத் தாங்கிக் கையிலுள்ள குணில்களால் புடைத்து, மன்னன் வளம் பாடி, மழை வளம், புகழ்பாடி, கொண்டல் வண் ணன் மழைவேந்தனுக்கு விழாவயர்வீர் மதுரை மன்னரீர்! என்று முழங்கி விழா வாட்டழைத்த பண்டைத் தமிழர் இந்திர விழா எங்கே! எங்கே! அது பொங்கல் விழாவின் பொங்கலில்தான் புதைந்து எஞ்சியுள்ளது! செஞ்சிலம்பார் சிலப்பதிகாரமும் பொன்மணியார்க்கும், வண்ண மணிமேகலையும் முழங்கும் இந்திர விழாவை நாம் இழந்தோம், இதனிற் கலந்தோம்!

வெள்ளைத் தீவைப் படையெடுத்து அதனில் வெண்கடப்பந் தார்சூடிக் கடம்பமரத் தடியிருந்து மேல்கட லாண்டு அக்கடலில் கலஞ்செலுத்திய மேல் நாட்டு வணிகரைச் சூறையாடிய கடம்பன் என்ற கடற்கொள்ளை இனத்தைத் தவிடுபொடியாக்கிய சேரரின் கடற்காவலனாய் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு தென் கன்னடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட வேளிர் கோமான் நன்னன் தன் பெயரிட்டு மதுரையில் நடத்திய திருவோண விழா எங்கே! எங்கே! அத்தமிழர் தமிழ் விழா மறைந் தது! அது இந்தப் பொங்கல் விழா வில்தான் எஞ்சி உறைந்து கிடக்கின் றது.

தமிழகத்தில் மறைந்த திருவோண விழா பண்டைச் செந்தமிழ்ச் சேரல நாடான கேரள நாட்டில் இன்றும் தேசியத் திருவிழாவாக, மலையாள நாட்டுத் திராவிடத் திருநாளாகக் கொண்டாடப்பட்டுத் தான் வருகிறது. இன்றைய தமிழ் நாட்டுத்திராவிட இயக்கத்தார் கண்களுக்கு இன்னும் புலப்படாமல்! அது மாவலி மன்னன் தென்னாடெங்கும் ஒரே சக்கரவர்த் தியாய், ஆரியம் தென்னாட்டில் புகுமுன், ஒரு மொழி வைத்து ஒரு முத்தமிழ் இலக்கியம் கொண்டு ஒரு குல மக்களாய் ஒரு பெருங்கடவுள் போற்றி ஆண்ட காலத்தின் நினைவு நாள். ஆரியம் புகுந்தது குள்ளமான வாமன முனி உருவில், சூழ்ச்சி செய்தது,தானங் கேட்கும் உருவில்!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்ற வள்ளுவர் பண்பின்படி, வஞ்சனை என்று தெரிந்த வாமனன் சூழ்ச்சியில் தானேசென்று சிக்கி அழிந்தான் ஆனால் அவன் மாவலி. சிரஞ்சீவி, அழியா அறிவுருவினன். அவன் கூறினான், தென்னாட்டவரே! நீவிர் இன்று சீர்குலைகிறீர். ஆனால் பின்னால் சீர்ப்படுவீர். அதுகாறும் என் நினைவாக ஓணவிழாக் கொண்டாடுக. ஒருகாலம் வரும், ஓண விழாத்தோறும் நாடு உலா வரும் யான் ஒரு ஓண நாளில்மீண்டுந் தென்னாட்டை ஆள வருவேன் என்று. அதனைப் பாடி ஆணும் பெண்ணும் ஆரியமின்றி, ஆரிய வினை முறையின்றிக் கொண்டாடி வருகின்றனர் மலையாளத் திராவிடர்.

மாவலியின்பின் அவன் பிள்ளைகள் ஐவர், பாண்டியன், சோழன், சேரன், கருநாடன், ஆந்திரன் போராடி அய்ந்தரசராய் நாளடைவில் ஐந்து மொழி நாடுகளாண்டனர். சாதி சமய மூடம் புகுந்தது.

இத்திராவிடத் திருநாளுக்கும் பொங்கல் நாள் உடன் பிறந்த தங்கை நாள். பொங்குக பால்! பொங்குக தேன்! பொங்குக வருங்காலத் திராவிடப் பொங்கல்!

(திராவிடத் திருநாள் கலைமன்றம் சென்னை-1)

Read more: http://viduthalai.in/page-2/73526.html#ixzz2qEk39uCK

தமிழ் ஓவியா said...

சுய விருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு! பெண் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!!

மதுரை, ஜன. 12- தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டினம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.

கீதா தனது மனுவில், எனது மகள் பவித்ராவை (வயது 19), தபிவீத் என்பவர் கடத்திச் சென்று கட்டாயப் படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்து திரு மணம் செய்து கொண்டார். மகளை மீட்க காயல் பட்டினம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண் டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை யினர் பவித்ராவை ஆஜர்படுத்தினர். அவரிடம் விசா ரித்த பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு. மனு தாரரின் மகள் பவித்ராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சட்ட விரோதமாக தங்கவைக் கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்துக்கு மாற யாரும் கட்டாயப்படுத்த வில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தனது பெற் றோருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

பவித்ரா திருமண வயதை அடைந்தவர் என்பதால் அவர் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. மேலும் ஒருவர், தான் விரும்பும் மதத்துக்கு மாறுவது என்பதும் சட்டப்பூர்வ உரிமை யாகும். எனவே திருமணம் மற்றும் மதமாற்றம் ஆகிய விஷயங்களில் தவறு காண அடிப்படைக் காரணம் ஏதுமில்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

- இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page-5/73527.html#ixzz2qElHot2d

தமிழ் ஓவியா said...


சிறகை விரி - செவ்வானமும் சிறிதாகும்!

நாள்தோறும்
தேதியைக்
கிழிக்கும்
நண்பனே, நண்பனே!

புதிய தேதியில்
புத்தாக்க
ஓவியத்தைத்
தீட்டு!

நேற்றைக்கு
விடுமுறை
இன்றைக்குப்
புதுநடை!

உன் வீட்டில்
பஞ்சாங்கம்
இருக்கிறதா?
போ(க்)கியில் எரி!

புராணப்
புத்தகங்கள்
உண்டா?
பொங்கலுக்கு
விறகைத் தேடாதே!

சாமிப் படங்கள்
உண்டா?
சவரம் செய்யத்
தேவைப்படும்!

மிக மிகப்
பழைமையா?
மிக மிகத் தேவை
திருத்தம் - இது
பெரியார் கொடுத்த
அழுத்தம்!


காகித ஊருக்குக் கரையானா
பேருந்து?

காலத்தை வெல்ல
கடவுளா
படை மருந்து?

சனி சரியில்லை
யென்று
வெள்ளியைத்
தேடினால்
நட்டம் அய்ந்து
நாட்கள்!

செவ்வாய்
தோஷமென்றால்
செவ்வாய்க்கிரகம்
செல்பவன்
சிரிப்பானே!

உன் காலை
உன் கையாலா
கட்டுவது?
உள்ளத்தில்கோழை
குடிகொண்டால்
உன் பகைவன்
நீயேதான்!

செவ்வாயன்று
பொங்கல்!
சிரித்தபடி
பொங்கலிடு!

சிறகைவிரி
செவ்வானமும்
சிறிதாகும்!
பொங்கலோ
பொங்கல்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/73563.html#ixzz2qJwYTlx5

தமிழ் ஓவியா said...


சிவத்தம்பி பார்வையில் திராவிடர் இயக்கம்


சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலைப்படைப்புக்கு முக்கியப் பங்குண்டு என்பதனைத் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். எனவே மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையாகவும் இலக்கிய மாகவும் படைக்க விரும்பினர்.

தாங்கள் கொண்ட கொள்கைகளைக் குறிப்பாக மேடைப் பேச்சின் வாயிலாகவே மக்களிடம் சேர்ப்பித்தனர். இருப்பினும் இவர்கள் திரைப்படம், கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வழியாகவும் கொண்டு சென்றனர். இவர்கள் மேற்கொண்ட சமூகச் சீர்திருத்தத்திற்கு இலக்கிய வடிவங்கள் பெரிதும் துணை நின்றன.

-கா. சிவத்தம்பி
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்கம் 83-90

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்!

தென்னிந்திய வரலாற்றில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறப்பான நிகழ்ச்சி, திராவிட இயக்கம் என்று கூறப்படுகின்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் எழுச்சியும் அதன் வளர்ச்சியுமாகும். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மதமோ, இனமோ அன்றிச் சாதியே பெருஞ்சக்தியாக அரசியலுள் நுழைந்தது.

திராவிட இயக்கம் இந்திய வரலாற்றில் ஓர் அண்மைக்கால அத்தியாயமெனினும் இவ்வியக்கத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்போது இதுஒரு வரலாற்று ஆய்வுப் பொருளாகவே ஆகிவிட்டது.

- ஏ.என். சட்டநாதன்,
தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், ப.3

Read more: http://viduthalai.in/page2/73564.html#ixzz2qJwvhiuP

தமிழ் ஓவியா said...

ரேகை சாஸ்திரம்



ரேகை சாஸ்திரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐயர் வேலப்பரை வேண்டினார். வேலப்பர், ஐயரை உள்ளே அழைத்துத் தெருக்கதவைச் சாத்திக் கொண்டு கைகழுவிக் கொண்டு வருவதாய் அறைக்குச் சென்று பின் ஐயர் எதிர் உட்கார்ந்திருந்தார்.

ஐயர்: கையை விரித்து நீட்டுங்கள்

வேலப்: நன்றாகப் பார்த்துப் பலன் சொல்லுங்கள் (உள்ளங்கையை வேலப் பர் காட்டினார். அதில் சுயமரியாதைக் காரன் என்று எழுதியிருந்தது)

ஐயர்: (அதைப் பார்த்ததும்) நீர் தெருக்கதவைச் சாத்திய காரணம் என்ன?

வேல்ப்: நான் காரணமில்லாமல் தெருக்கதவைச் சாத்துகிறவன் என்று ரேகை சொல்லுகிறதோ?

கடவுள் ஆவேச சக்தி

தாய்: என் மகளுக்கு வெகு நாளாகியும் பிள்ளை இல்லை.

சாமி: நீ ஒரு பொருளைப் பற்றிக் கேட்கின்றாய். ஒரு நாள் அல்லது ஒரு மாசம் அல்லது ஒரு வருஷத்தில் கிடைக்கும்.

தாய்: (சாமிக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யையை நோக்கி) இதென்ன! சாமி என்னமோ சொல்லுகிறதே!

சிஷ்யை: உரக்கச் சொல்ல வேண்டும். சாமிக்குக்காது செவிடு.

- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxZK0tI

தமிழ் ஓவியா said...

பிள்ளை வளர்க்கும் முறை



ஆஸ்திகர்: பிள்ளைகளைச் சிறுவய திலேயே ஒழுக்க முறையில் வளர்க்க வேண்டும்.

சுய.மரி: அதோ நிர்வாணமாக நிற் கிறானே. அவன் தான் உங்கள் பிள் ளையோ?

ஆஸ்திகர்: ஆம், பார்த்தீர்களா? பக்கத்திலுள்ள பையன் (தலை சீவி நன்கு உடுத்தி இருந்தவனைக் காட்டி) ஒரு நாளாவது நெற்றியில் நாமம் வைத்துக் கொள்வதில்லை.

ஆயிரம் வருடமாக அடித்துக் கொண்டு போகிறான்

மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்

(தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகின்றார்.

மே இந்தி: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.

மே. இந்: திரும்பவும் சலவை செய்து வந்து கொடுப்பாரா?

உள்: ஆமா!

மே. இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக் கொண்டு போகிறார்.

மே. இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா?

உள்: திரும்பிக் கொடுப்பதில்லை.

மே. இந்: அடித்துக் கொண்டா போகின்றான்?

உள்: ஆம்

மே. இந்: அடித்துக்கொண்டு போவ தைப் பார்த்துக் கொண்டா இருப் பார்கள்?

உள்: ஓய்! எத்தனை தரம் சொல் லுவது! அடித்துக் கொண்டு தான் போகின்றான்! 100 வருடமாக இப்படி.

சீக்கிரம் வெளுத்துவிடும்

புரோகிதன்: சென்ற தடவையில் திவசத்துக்கு வந்தேன். நீர் கொடுத்த அரிசி கறுப்பாக இருந்தது. இப்போதும் அதற்கு மேல் இருக்கிறது. என் மந்திர மும் உங்களுக்கு கறுப்பாக முடிந்துவிடும்.

வீட்டுக்காரர்: சீக்கிரம் எல்லாமே வெளுத்துவிடும். போய் வாருங்கள்.

- பாரதிதாசன் கதைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJy5mLsX

தமிழ் ஓவியா said...

படைத்தது யார்?



(ஒரு சிற்பி கோயிலில் வினாயகருக் கெதிரில் நின்று வணங்கிய வண்ணம்) அப்பனே! (ப்ரபூ)! என்னை ரக்ஷிக்க வேண்டும். கை, கால்கள் நோயில்லாமல் இருக்க கிருபை செய்ய வேண்டும். எல் லாவற்றையும் படைத்த கருணாநிதியே!

அண்மையிலிருந்த ஒருவன்: சிற்பியாரே! இந்த வினாயகரை யார் செய்தது? அமைப்பாக இருக்கிறது.

சிற்பி: நான்தான் செய்தேன்!

ஒருவன்: எல்லாவற்றையும் அது படைத்ததாய் சொன்னீர்களே! அதற் காகக் கேட்டேன்.

- பாரதிதாசன் கதைகள்

போலீஸ் காபந்து இல்லாமல் வைகுண்டத்திற்குப் போக வேண்டாம்

ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததின் பயனாய்ச் சர்க்காரால் தூக்கில் இடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி, அந்தக் கொலைகாரன் வைகுண் டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய வைகுண்டத்திற்கு எவரும் போக வேண்டாம்!

- பாரதிதாசன் கதைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyEkhgf

தமிழ் ஓவியா said...

வானலோகத்தில் காற்றே இல்லை

வானலோகம் சென்றுவிட்டால், ஊர்வசி, ரம்பை சகிதம் சுகமாய் இருக்க லாம் என்று நாம் சொல்லுகிறோம். அங்கு மூச்சுத் திணறும்படி காற்றே இல்லை என்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்!

குரு பூஜை தான் நடக்கிறது

புத்தர்களை ஒழிக்க கடவுள் சங்கரராக அவதரித்தாராம். சங்கரருக்கு இப்போது, குருபூஜைதான் நடக்கிறது. 40 - 50 கோடி புத்தர்கள் வாழ்கிறார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

என்ன அர்த்த புஷ்டி

வருந்தி அழைத்தாலும் வாராது வாரா!

பொருந்துவன போமின் என்றாற் போகா

என்ன அர்த்த புஷ்டி! இந்த வரிகளைப் பொன் தகட்டில்

செதுக்குமுன், ஈய எழுத்தால் அச்சடித்து விட்டார்கள்.

- பாரதிதாசன் கதைகள்

மோக்ஷ வழி காட்டுங்கள்

அடிகள்: பணம் கொடுங்கள், இதோ மோக்ஷம்.

குடிகள்:எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்த மாய் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலை யுங்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

அவர்கள் நினைப்பது சரி

சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பரிந்துகொண்டு கோபிக்கும் தொண் டர்கள். அந்தக் கடவுள் பேரால் நடக் கும் அட்டூழியங்களைக் கண்டிப்ப வரைப் பற்றிப் போலீஸின் உதவியை நாடுவதுண்டு. கடவுளைவிடப் போலீஸ் காரன் அதிக வல்லமையுடையவன் என்று அவர்கள் நினைப்பது சரி.

- சிரிக்கும் சிந்தனைகள்

அழிப்பது அரிது தான்

ஒன்றை ஆக்குதல் அரிது, அழித்தல் எளிது என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத் துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது.

- சிரிக்கும் சிந்தனைகள்

ஒற்றுமைக்கு வழியேது

பிற நாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம் நாட்டினர், சரக்குக் கேடாயிருந்தாலும் அதனுடைய டப்பி யை அழகு படுத்துவது போல் வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலி யவைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றார்கள்.

- சிரிக்கும் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyNzFhm

தமிழ் ஓவியா said...


தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள்


தை முதல் நாள் பொங்கல் என்று

கட்டியம் கூறுதற்கு ஆங்கிலப் புத்தாண்டு

கொட்டிய முழக்குடன் வரும் நாள் இன்று!

நன்முறைகள் நாளும் மேற்கொண்டு

வன்முறையை வெற்றி கொள்ளும் நாளாக,

பன்மொழி மாந்தர்க்கும் இந்நாள் அமையட்டும்!

எம்மொழி இனிதென்றும் அது எமக்கு உயிர் என்றும்,

எல்லோர்க்கும் பெருமை கொள்ள உரிமை உண்டு

வல்லோராயிருப்பதாலே பிற மொழி தாழ்த்தல் தீது!

ஆண்டவன் படைப்பிலே அனைவரும் சமமென்றுரைத்து

அறியாத மக்களை அடிமை கொள நினைத்தல் அதனினும் தீது!

கொள்கையொன்று உரைத்து, கொடியும் உயர்த்தி

கோடிப் பணம் எதிரே கண்டவுடன்

நாடி ஓடி நமஸ்கரித்து நல்ல விலைக்குத் தன்னை விற்று

நாளைக்கு ஒரு வேடமெனப் புனைந்தாடினால்

மனிதனே, அது உன் மானத்தை விற்பதற்குச் சமமான தீதாம்!

- முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1.1.2009
(குறிப்பு தமிழ்ப் புத்தாண்டு பிறக்குமுன் வரும் ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு வருகைக்குக் கட்டியம் கூறுகிறதாம்!)

Read more: http://viduthalai.in/page4/73566.html#ixzz2qJzKlVS6

தமிழ் ஓவியா said...

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் ஆண்டைப் போல சிந்துச் சமவெளி மக்களுக்கு ஆண்டுப் பிறப்பு தை மாதத்திலேயே தொடங் கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க. சிந்துச் சமவெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இத னால் சிந்துவெளி நாகரிகத்தின் பழைமை கி.மு. 5610 வரை எட்டு வதாக தெரிகிறது.

இது சுமேரிய நாகரி கம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மாகும். மனித நாகரிகத்தின் பிறப் பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல சிந் துவெளியும் தென்னாடுமே என்பதை, இது அறுதியிட்டுக் காட்டுகிறது

(தென்னாடு கா. அப்பாத்துரை பக்கம் 48)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0KfNyI

தமிழ் ஓவியா said...

கல்கி கூறும் மூடநம்பிக்கை

கேள்வி: இந்த வருஷம் தியாகராஜ ஆராதனை விழாவில் தங்களைக் கவர்ந்தது எது?

பதில்: டி.வி. ஒளிபரப்புக்கு சேட்டிலைட் கிடைக்கக் காத்திருந்து ராகு காலத்தில் பஞ்சரத்ன கிருதிகள் பாடியதுதான்; - மூடநம்பிக்கையை விஞ்ஞானம் வென்றது.

(நன்றி: கல்கி)

Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK0SF0rS

தமிழ் ஓவியா said...


பொங்குக பொங்கலே!

- வய்.மு. கும்பலிங்கன்

சாதி மதத் தீங்கொழியப் பொங்கட்டும் பொங்கல்!
சதிகாரர் செயல்மாயப் பொங்கட்டும் பொங்கல்!
வீதியிலே தமிழ்மணக்கப் பொங்கட்டும் பொங்கல்!
விடுதலை உணர்வோடு பொங்கட்டும் பொங்கல்!
இதிகாச இருளகலப் பொங்கட்டும் பொங்கல்!
இல்லாமை இல்லென்றே பொங்கட்டும் பொங்கல்!
வேதியக் கூட்டமது விளம்புகிற நூற்கள்
வீணென்றே வீரியமாய்ப் பொங்கட்டும் பொங்கலே!

தன்மான வாழ்வமையப் பொங்கட்டும் பொங்கல்!
தமிழரெலாம் ஒன்றென்றே பொங்கட்டும் பொங்கல்!
உண்மைநெறி சிறந்தோங்கப் பொங்கட்டும் பொங்கல்!
உழவர்உழும் உழவாலே பொங்கட்டும் பொங்கல்!
பெண்டிரெலாம் பண்பாடப் பொங்கட்டும் பொங்கல்!
பானையிலே பகுத்தறிவாயப் பொங்கட்டும் பொங்கல்!
கண்மூடித் தனமெல்லாம் மண்மூடிப் போக
கணக்கிலா வளத்தோடு பொங்குக பொங்கலே!

பெரியாரின் புகழ்விளங்கப் பொங்கட்டும் பொங்கல்!
பைந்தமிழர் வாழ்வெலாம் பொங்கட்டும் பொங்கல்!
நரிக்குணத்தார் நாணிடவே பொங்கட்டும் பொங்கல்!
நம்கொள்கை நாடாளப் பொங்கட்டும் பொங்கல்!
உரிமையுணர் வோடெங்கும் பொங்கட்டும் பொங்கல்!
உழைப்பறியார் உருண்டோடப் பொங்கட்டும் பொங்கல்!
ஆரியரின் கொட்டமதை அடிசாய மாய்த்து
அண்ணாவின் புகழ்விளங்கப் பொங்கட்டும் பொங்கலே!

Read more: http://viduthalai.in/page4/73570.html#ixzz2qK0ecQHm

தமிழ் ஓவியா said...

கம்பன் தொண்டு

பொன்னும் மாமணியும் புனை சாந்தமும்

கன்னி மாரொடு காசினி ஈட்டமும்

இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு

அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள்.

தன் மகன் இராமனுக்கு முடிசூட்டப் போவதைக் கேட்டுக் கோயிலுக்குப் போய்ப் பார்ப் பனர்க்குத் தானமாகப் பொன் னையும் பெருமை பெற்ற மணிகளையும், பூசுதற்குரிய சந்தனத்தையும், இளம் பெண் களையும், பல ஊர்களையும் இவை போன்றவைகளையும், சோற்றையும் ஆடை களையும் அளிக்கின்றாள்.

இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பன், தமிழ்ப் பண்பாடு கெடாமல் - தக்கவாறு மாற்றியமைந்துள் ளான் என்கின்றனர்.

எங்கே மாற்றியமைத்தான்? - பார்ப்பானுக்கு இளம் பெண்களையும் கொடுப்பதென்பது தமிழர் பண்பாடா? - அந்த இழி செயல் ஆரியர்க்கு ஏற்கும். அதை அப்படியே தமிழர் முன்வைக்கும் கம்பனின் செயல் எத்தகையது? எண்ணுக!

- புரட்சிக் கவிஞர் - (குயில் 28.10.1958)

Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK1JU2qH

தமிழ் ஓவியா said...


இன்பவீடு


தலைவி:

பொற்கோலப் பானையிலே மஞ்சள் கட்டிப்
பொங்கியநற் சோற்றினிலே நெய்யை யூற்றிக்
கற்கண்டு, தேன் பருப்பு, வெல்லம் இட்டுக்
கலந்துவைத்தேன் அத்தானே! உண்ண வாரீர்!

தலைவன்:

சொற்கரும்பே! என்னன்பே! மக்களைத்தான்
சோறுண்ண அழைத்தனையோ? அவர்க ளெங்கே?

தலைவி:

நற்கரும்பின் சுவைசுவைத்துக் கொண்டிருப்பார்
நானழைத்து வருகின்றேன்! இருங்க ளிங்கே!
(தலைவி மக்களை அழைத்து வந்தாள்)

பெண்:

அப்பா! நம் செந்தமிழில் வளரு கின்ற
ஆரியத்தை மறைமலையார், களையும் செய்கைக்(கு)
ஒப்பாக அண்ணனின்று கரும்பின் தோகை
ஒருவெட்டில் விழவைத்தார். மேலும் அந்தத்
தப்பான ஆரியத்தின் முதுகுத் தோலைத்
தாமுரித்தல் போற்கரும்பின் பட்டை நீக்கிக்
கைப்பகற்றித் தனித் தமிழைத் தருதல் போலே
கரும்புவெட்டித் தந்திடநான் சுவைத்திட்டேனே!

மைந்தன்:

தன்மானக் கொடிகட்டி வீட்டின் உச்சி
தனில்உயர்த்திப் பறக்கவிட்டேன்; வந்துபாரீர்!
என்மானங் காத்ததமிழ்த் தாய்க்கிந் நாளில்
என்படையல், எப்படிநீர் சொல்லும், அப்பா!

தலைவன்:

பொன்மானே! நம்மக்கள் இருவரும்தான்
புவிபுகழும் பாவரசி, வீர னென்று
பின்நாளில் இலங்கிடுவார் என்று காணப்
பெருமகிழ்வால் என்நெஞ்சம் விரிந்த தன்றே!

தலைவி:

தமிழ்ச்சுவையில் திளைத்திருக்கும் அத்தானே! நான்
தரும்பொங்கற் சுவைகாண எழுந்துவாரீர்!
எமதருமை மக்காள்நீவிர் எழுந்துவாரீர்!
இனியவெல்லச் சோறுண்டு மகிழலாமே!
(உணவுண்ணச் சென்றார்)

தலைவன்:

நமதருமைப் பிள்ளைகட்கும் படைத்துச் சற்று
நறுநெய்யும் ஊற்றிவிட்டு நீயும் உட்கார்!
(உண்ணும்போது)

மிகவினிது! மிகவினிது! வெல்லச்சோறு
மேலுமொரு சுரண்டியிட்டுக் கொள்ளுவோமே!
(உணவுண்டுகூடம் சென்றார்)

வாழ்வினியே சுவைதந்தாய்! இன்பந்தந்தாய்!
வடிவழகே! நல்லசுவைப் பொங்கலிட்டாய்!
யாழுடனே தமிழிசையைச் சேர்த்து நல்கின்
அதுதானே பேரின்பம்! தொடங்குவாயே!

தலைவி:

யாழுடனே தமிழிசைக்கும் முன்னர் என்றன்
அகத்தெழுமோர் அய்யத்தைத் தீர்த்துவைப்பீர்!
வாழ்வளிக்கும் பொங்கலினை மறந்துவிட்டு
வண்டமிழர் தீவாளி கொண்ட தேனோ?

தலைவன்:

ஆரியத்தின் சூழ்ச்சியினால் தமிழர் இந்நாள்
அவர்க்கிழிவு தருநாளைத் திருநாள் என்று
பாரினிலே கொண்டாடித் தம்மா னத்தைப்
பறிகொடுத்து பெறவுழைக்கும் இராம சாமிப்
பெரியாரின் தன்மான இயக்கம் இன்று
பேரியக்க மாய்வளர்ந்து செய்யுந்தொண்டு
பெரு நாட்டில் விழிப்பருளும்! பாடுவாயே!

தலைவி, யாழெடுத்துப் பாடினாள்:
பொன்னாய் விளைந்த நெல்லைக் குற்றி
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

இன்னா நீக்கிக் கைகள் நிறையப்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல், நன்னாள்
பொன்னாய்க் குவிக்கும் பொங்கல் நன்னாள்
என்னே நல்கிற் றின்பம் இன்பம்!

தமிழர் வாழ்வில் மகிழ்வே தோன்ற
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்
எமக்கே நல்கிற் றின்பம் இன்பம்!

- நாரா. நாச்சியப்பன்
(பொன்னி பொங்கல் மலர் 1948)

Read more: http://viduthalai.in/page4/73573.html#ixzz2qK1YLYLn

தமிழ் ஓவியா said...


கும்பகோணம் மகாமகம் ஓர் எச்சரிக்கை


கும்பகோணத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கேடிகள், பிக்பாக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்னரே கை அரிக்குதம்மா என்று பேசிக் கொள்வார்களாம். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் கை வரிசையைக் காட்டுவது சுலபமாயிற்றே...

மற்றும் கூட்டத்தைக் சாக்காக வைத்து பெண்களிடம் சில்விஷமம் செய்யும் இடி ராஜாக்கள்.

நன்றி: கல்கி 9.2.1992

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK20YMeN

தமிழ் ஓவியா said...

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

-பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

செங்கதிர் ஒளியில் திகழும் கீழ்த்திசை வங்கக் கடலலை வரிசையாய் வணங்கும்

பொங்கல் திருநாள்! பூமியின் பெருநாள்!

பசும்புல் குளிர்மை பாரெலாம் பரவச்

செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!

தமிழர் தம்மைத் தலைநிமிர்த் திடும் நாள்!

பெருமைக் குரியதாய்ப் பெரியார் உரைத்த

அமுதப் பொங்கல்! அனைத்துயிர்க் கெல்லாம்

இனியபுத் தாண்டின் இயற்கைப் பொங்கல்!

இன்பந் தரும்இப் பொங்கல் திருநாள்

உழவர் உழைப்பை உலகோர்க் குணர்த்திக்

கழனிச் செந்நெல் கரும்பு மஞ்சள்

விளைவைக் காட்டும் விடியல் பொங்கல்!

அழகுப் பெண்கள் குலவை ஒலிக்க,

பழகும் சிறுவர் முதியோர் பாட,

இளைஞர் வீரம் கவிஞர் வாழ்த்தக்

களைப்பெலாம் போக்கித் திளைத்திட வைத்தே

என்றும் மகிழ்வைத் தருவதால்

நன்றியின் பொங்கலை நாம்வாழ்த் துவமே!

Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK2BRjU4

தமிழ் ஓவியா said...


நல்ல பணியை...

மனிதர் செத்துப் போனார் என்றால், சத்துப் போனது என்பதுதான் பொருள். செத்துப் போனவர்-களைப்-பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு இல்லாமல், அவர் செய்த நல்ல பணியை, வழியை நாமும் மேற்-கொள்ள -வேண்டும் என்பதுதான் முறை.

- (விடுதலை, 23.1.1964)

Read more: http://viduthalai.in/page-2/73611.html#ixzz2qK3OhzLl

தமிழ் ஓவியா said...


பொங்கற் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன?

பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன்.

அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு. மற்றவர்கட்கு இல்லை.

தி.க. தொண்டன் தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டு வரும் தமிழ்த் தன்மைகளைக் கறை நீக்கி, நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான்.

தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ்மொழி வாழ வேண்டும். இந்தி தொலைய வேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க எவன் முன் வருகின்றான்?

சாதி ஒழிய வேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனைவிட வேறு எவன் உள்ளான்? எங்கே பார்க்க முடிகின்றது?

பொங்கற் புது நாளைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில் தான் விழுந்துள்ளது.

தமிழர் திருநாளைத் தமிழன் சிறப் பிப்பது என்றால் என்ன? தமிழர் திரு நாளைத் தமிழன் கொண்டாடுவதென் றால் என்ன? தமிழர் எண்ணத்தைத் தமிழர் செயல்களைத் தமிழர் ஆசை களைச் சிறப்புறச் செய்வதே அன்றோ?

இனித் தி.க. தோழர்களை, தி.க.. தலைவர்களை நான் கேட்கின்றேன். பொங்கல் நாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று.

நேற்றுத் தி.க. கொள்கைகளை ஆய்ந்தீர்கள்; நேற்றுச் சொற் பெருக்காற் றினீர்கள், நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப் பாட்டு. பொங்கல் புதுநாளில் - உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின் றீர்கள் சிறப்பாக?

மாவட்டத் தலைவர்கட்குக் கூறு கின்றேன்; ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழகக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயி ரம் விடுதலை பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழக நூற்கள் பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு செய்க!

சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாள் தரும் பேரின்பத்தை.

- புரட்சிக் கவிஞர்
(குயில், கிழமை இதழ், 30.12.1958 ப.2)

Read more: http://viduthalai.in/page-2/73615.html#ixzz2qK3ZByWV

தமிழ் ஓவியா said...


பாலியல் தொழில்


பண்டையக் கால அரசர்கள், மகாராஜாக்களின் காலங்களில் அரசின் குருமார்களாக விளங்கிய உயர்ஜாதி எனப்படுபவர்களால் அமல்படுத்தப்பட்டு வந்த, ஏழைப் பெண்களை கோவில்களில் பணிபுரியும் பொருட்டு நியமித்து அவர்களை தேவனுக்கு அடியாள்கள் என்றும் தேவதாசிகள் என்று பட்டம் கட்டி கொத்தடிமைப் பணியாளர்களாக்கினர்.

இந்த நடைமுறையினை எதிர்த்து நீதிக்கட்சியினரும், சுயமரியாதை இயக் கத்தவர்களும் போராடினர். நீதிக்கட்சி அமைச்சரவையால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் பாலியல் தொழி லாளர் முழுமையாக விடுதலை பெறவும் சுயமாகத் தொழில் தொடங்கி வாழ்க் கைக்கு வழிவகை கண்டிட நபர் ஒருவ ருக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.1000/- வழங்க வேண்டும்.

தனி வட்டாட்சியர் மூலம் தேவதாசி முறை இங்கு ஒழிக்கப்பட்டுள்ளது என கோவில் வாயில்களில் எழுதி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் அரசு நிதி நிலையில் (பட்ஜெட்) கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தும், அனைவருக்கும் குடியிருப்புகள் கட்டித் தரப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கால் நடைகள் வளர்ப்புத் தொழில் செய்திட வங்கிகளும் அரசும் தாராளமாய் உதவித் தொகையுடன் கூடிய கடன் வசதி செய்து தர வேண்டுமென கருநாடகத் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

- மு. சானகிராமன், பெங்களூர்

Read more: http://viduthalai.in/page-2/73618.html#ixzz2qK41DJMb

தமிழ் ஓவியா said...


ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமையானது-தேசத்துக்கு ஆபத்தானது! செய்தியாளர்களிடையே தொல்.திருமாவளவன்

சென்னை, ஜன.13- ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமை யானது, தேசத்திற்கே ஆபத்தானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னையில் நேற்று (12.1.2014) செய்தியாளர் களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலில் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எனது பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் திரு நாளில் தமிழக மக்கள் யாவரும் ஓர் உறுதி மொழியை ஏற்க வேண் டும். அதாவது, நடை பெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் சாதிய வாத சக்திகளை, மதவாத சக்திகளைப் புறக்கணிப் போம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண் டும்.

ஊழல், வறுமையை விட வகுப்புவாதம் கொடுமையானது. தேசத் திற்கே ஆபத்தானது. இதையே நேற்று தே.மு. தி.க. தலைவர் விஜய காந்தை சந்தித்து வேண் டுகோள் விடுத்தேன். ஏற் கெனவே, தி.மு.க.வுக்கு இதே வேண்டுகோளை வைத்தேன். மேலும், ம.தி. மு.க.வும் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

பாதுகாப்பு இருக்காது

நரேந்திரமோடி பிரத மரானால், அரசியல் அமைப்பு சட்டத்தையே அடியோடு மாற்றி விடு வார்கள். சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள். சிறுபான் மையினருக்கும், பின்தங் கிய மக்களுக்கும் பாது காப்பு இருக்காது. ஆகவே, இந்தக் கோரிக் கையை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி முன்வைக் கிறது.

தமிழகத்தில் பிப்ர வரி 20 ஆம் தேதி சிங் கள மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக கூறுகி றார்கள். சிங்கள அர சுக்கும், இந்திய அரசுக் கும் இடையே நடை பெற வேண்டிய பேச்சு வார்த்தையை மீனவ பிரதிநிதிகளை வைத்து நடத்துவது எந்த பய னும் தராது. மீனவ பிர திநிதிகளுக்கு வேண்டு கோள் ஒன்றை வைக்கிறேன்.

மீனவர்கள் இடையே முரண் பாட்டை உருவாக்க இரு நாட்டு ஆட்சியா ளர்களும் திட்டமிட் டுள்ளனர். எனவே, மீன வர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மார்ச் 7 ஆம் தேதி ஜெனிவாவில் அய்.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டம் கூடு கிறது. அதில், அமெ ரிக்கா சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய இருக் கிறது. போர்க் குற்றம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது. இந்த நிலை யில், இந்திய அரசு சிங் கள அரசுக்கு எதிராக போர் குற்ற விசார ணையை நடத்த மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் முன் மொழிய வேண்டும்.

- இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.

Read more: http://viduthalai.in/page-5/73591.html#ixzz2qK4Pc4SE