Search This Blog

9.1.14

பொங்கலன்று பொங்குக புதுமை! - பேரறிஞர்அண்ணா



Annadurai_and_Periyar
பொங்குக புதுமை! - பேறிஞர்அண்ணா
ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர் வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பித் தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுகிறோம்.

தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டால், வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்று உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை! தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால், நாம் நமது அன்பையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.

சென்ற ஆண்டும் பொங்கல் வந்தது. இவ்வாண்டு வருவது போன்றே! ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தாடை உடுத்தி, பூரித்த உள்ளத்துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழரோடு, தமிழர் இருத்தலே முறை.

ஆனால், சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது? இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக் காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தரையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைவெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான். ஆனால், திரேகம் அப்படியல்லவே! அவர்கள் பெற்றோரும், ‘பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு’ என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால், தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் – படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ்செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.

எத்தனை எத்தனை பிரிவுகள்! எங்கெங்கு வாட்டம்! இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.

அந்த ஆண்டு போயிற்று! அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டுப் பொங்கலில், இல்லம் தோறும் இன்பம் இருக்கவே மார்க்கம் கிடைத்தது.
ஆனால் இன்பம், பூரணமானதா? இல்லை! தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா? இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் தழைக்கவா மார்க்கமிருக்கிறது! இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன? இல்லை! இல்லை! ஆட்சி தமிழரிடமா? காணோம்! தமிழ்நாடு தமிழருக்கா? இல்லை! இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனத்திருப்தி ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா? காணோம் அதுவும்!
எனவே, பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு. ஆனால், சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.
ஆனால், சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.

எங்கு நோக்கினும் தமிழர் வாழ்க! தமிழ் வெல்க! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பேரொலி கேட்கிறோம்.

யாரைக் கேட்பினும் —“ஆம்! நான் தமிழனே!” எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோ-றும் ஊர்தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரணி, தமிழர் முழக்கம் நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கி விட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் பிறனுக்கு ஆதிக்கமேன் எனக் கேட்கத் துணிந்து விட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும். அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டு விட்டனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்து விட்டனர்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.
அந்த நம்பிக்கையே நமது இன்பத்துக்குக் காரணம்.

பொங்கல் புது நாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விட்டதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள்; பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பயன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்ற நாள் அது.

காட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து, வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.

உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்பொங்கலிட்டு, “பொங்கலோ! பொங்கல்!” எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.

அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிறுத்துவர் என நம்புகிறோம்.

திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப் படாதிருக்க வேண்டித் தன்மானம் எனும் வரம்பு கட்டத் தவறியதால் இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.

உழுது நீர்ப்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனியம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும், கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவை போக்கப்படா முன்னம், பயிர் எது? இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.

எனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்கவேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையாக உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.

ஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும், மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதிலே சந்தேகமில்லை.
ஒழிந்து போன காங்கிரஸ் ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
உழவரையே பெரிதும் ஏய்த்து ஒட்டுப்பெற்ற ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.

வரி எல்லாம் போகும் என்று கூறியவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரிவஜா விஷயத்தில் ஏதோதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர். மருத்துவ சௌகரியத்தை மாய்த்தனர். பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெருகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா! அவர்கள் ஆட்சி! “இன்னும் எத்தனை நாள்?” இன்னும் எத்தனை நாள்?” என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள்! ஒழிந்தது அந்த ஆட்சி! தீர்ந்தது அவர்களின் தர்பார்! நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழாக் கோண்டாடி, “போனாயா, ஒழிந்தாயா” என்று கூறி விட்டது.

எனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.
பொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அம்மட்டோ? அந்நாள், ‘இழந்த இடத்தை’ மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டாம் எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் துன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.

அதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர், “எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு” “தமிழ்நாடு தமிழருக்கே” என முழக்கம் செய்கிறார்.
ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் கூறியபடி, “அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள்” என்று நாம் கூறுகிறோம்.

பொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்.
தமிழ்நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.

தமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்று சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்’ என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.

காங்கிரஸ் ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காந்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ்நாட்டைத் தாண்டிச் சென்று, பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.

“காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூடி முடியாது, நம்பமாட்டோம்” என முஸ்லிம் லீகும், ஆதி திராவிடர்களும் கூறி விட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி கூறி, அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவும், ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் டாக்டர் அம்பேத்கரும் வாக்குக் கொடுத்தனர்.

புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.
எனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க மார்க்கமேற்பட்டு விட்டது.
தமிழர்கள் யாவருக்கும் இனிப் புத்துலக வாழ்வு நிச்சயம். அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்க வேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.

உமது இல்லந்தோறும், உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க தமிழர்!
வாழ்க தமிழ்நாடு!!
புதுமை பொங்குக!!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!!

-------------------------------அண்ணாதுரை "விடுதலை", 13-1-1940 ப.2

18 comments:

தமிழ் ஓவியா said...


மாபெரும் துரோகமே!


மத்திய அரசே தமிழ்நாட்டுக்குத் திட்டங் களை நிறைவேற்று! நிறைவேற்று!! என்று சொல்லப்பட்ட காலம் போய், மத்திய அரசே தமிழ்நாட்டுத் திட்டத்தை நிறைவேற்றாதே - நிறைவேற்றாதே! என்று கூறும் ஒரு விசித்திர நிலையை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கிறது!

அது அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாயிலிருந்து புறப்பட்டு இருக்கிறது.

ஏனிந்த நிலை? இதில் அரசியல் குறுகிய நோக்கம் புகுந்து புறப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா 2011இல் ஆட்சிக்கு வந்த முதற்கொண்டு அவர் எடுத்து வரும் நடவடிக்கையைக் கவனித்தால் ஓர் உண்மை இமயமலை போல கண்ணுக்கும், கருத்துக்கும் தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற் காக சட்டமன்றப் புதிய கட்டடத்தை அதற்குப் பயன்படுத்தாமல், பல் நோக்கு உயர் மருத்துவ மனை என்று அறிவித்து விட்டார்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்றார், உயர்நீதிமன்றத்தின் தடையால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் பாலம், மதுரவாயிலிலிருந்து துறைமுகம் வரை உருவாக்கப்பட இருந்த மிக முக்கியமான திட்டத்தை முடக்கினார்.

கலைஞர் ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் - இந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதனையும் திட்டமிட்டு நீதிமன்றத்தின் வாயிலாக தோற்கடித்துக் காட்டி விட்டார்.

அதனுடைய தொடர்ச்சிதான் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல் அமைச்சரால் அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகும்.

பிஜேபி கூட திட்டமே கூடாது என்று சொல்லவில்லை; இப்பொழுது நிறைவேற்றப்பட உள்ள ஆறாவது தடத்தில் செயல்படுத்தாமல் வேறு வழித் தடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறது.

ஆனால், முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களோ திட்டமே கூடாது என்று அடம் பிடிப்பது எந்த அடிப்படையில்?

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதிலும் குறிப்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுவாக இருப்பதால் அதன் அரசியல் லாபம் திமுகவுக்குப் போய் விடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, குறுகிய நோக்குடன் இந்தத் திட்டமே கூடாது என்கிறார் என்பதுதானே பச்சையான உண்மை.

இத்தகு மனப்பான்மை உள்ள முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தளவு உறுதுணையாக இருப்பார் - ஆர்வம் காட்டுவார்?

மத்திய அரசை நோக்கி வேறு திட்டங்களை எப்படி முன் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியும்?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய - கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய ஒன்று இருக்கிறது. இலங்கை அரசைப் பொறுத்த வரையில் சேது சமுத்திரத் திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானம் அடிபட்டுப் போய் விடும்.

சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று முதல் அமைச்சர் அடம் பிடிப்பது இன்னொரு வகையில் இலங்கை சிங்கள அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பேருதவி செய்ததாகி விடும் என்பதையும் மறுக்க முடியாது.

எந்த வகையில் பார்த்தாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நினைப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் இழைக்கும் பெருந் துரோகமாகும்; வரலாறு அவர்களை நிந்தித்துக் கொண்டே இருக்கும் - இது கல்லின் மேல் எழுத்தாகும்.

Read more: http://viduthalai.in/page-2/73362.html#ixzz2px8uuOck

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை


பதவியிலிருக்கும் நீதிபதியே ஆஜரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற புது நீதிபதிகள் பட்டியல் வெளியிட மத்திய அரசுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.9-சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன பட்டி யலைத் திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகை தந்து வாதிட்டதால் நீதி மன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி ஆஜரானது இதுவே முதல்முறை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 13 நீதிபதிகள் பதவி இடங்கள் உள்ளது. இதற்கு 12 பேரின் பெயரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்து அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த பட்டியல் நியாயமான முறையில் தயாரிக்கப்படவில்லை என்றும் பட் டியல் தயாரிப்பில் வெளிப்படையான நிலை பின்பற்றப்படவில்லை என்றும் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற வர லாற்றில் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி மற்ற நீதிமன்றத்தில் விசா ரணை நடந்துகொண்டிருக்கும்போது வருகை தந்து வாதிடுவது இதுவே முதல் முறை என்று நீதிபதி கர்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த பட்டியலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித் துவம் தரப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப் படையான நிலை இல்லை என்றும் அதனால் இந்த பட்டியலை திருப்பப் பெற வேண்டும் எனக் கோரி மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக் கையுடன் வழக்குரைஞர் எஸ்.துரை சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அகர் வால், சத்தியநாராயணன் முன்னிலை யில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி பால்வசந்த குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தனர். இதனால் வழக்கு நீதிபதிகள் ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் எஸ்.பிரபா கரன் ஆஜராகி புதிய நீதிபதிகள் பட்டியலைத் திரும்பப் பெற வேண் டும் என்று வாதிட்டார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இந்த டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கக் கூடாது என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நீதிபதி கள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி சார்பாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

பிரபாகரன் வாதிடும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. தற்போது 12 பேரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். குறிப் பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும். தற்போது சிபாரிசு செய் யப்பட்டவர்களில் பலர் நீதிமன்றத் தில் அதிகமான அளவில் வருகை தந்ததில்லை. நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றவில்லை. எனவே திறமையான வழக்குரைஞர் கள் பெயரை சிபாரிசு செய்ய வேண் டும். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய பட்டியலைத் திரும்ப பெற வேண்டும்.

இந்த பட்டியல் சமூக நீதியை கவனிக்கத் தவறிவிட்டது. நீதிபதிகள் குழு பட்டியலைத் தயாரிக்கும் முன் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யவில்லை. பரிந் துரை செய்யப்பட்டவர்களில் ஒரு வரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவு களைப் பெறவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இந்த நடைமுறை மிக வும் அத்தியாவசியமாகும் என்றார்.

தமிழ் ஓவியா said...

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏராளமான வழக்குரை ஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்டனர். அப்போது, நீதிபதி சி.எஸ். கர்ணன் திடீரென நீதிமன்றத்துக்குள் தனது உதவியாளர்களுடன் வந்தார். அவரைப் பார்த்த வழக்குரைஞர்கள் ஆச்சரியப்பட்டனர்.

நீதிமன்றத்துக் குள் வந்த நீதிபதி கர்ணன், நீதிபதிகள் தனபாலன், கே.கே.சசிதரன் ஆகி யோரிடம், நீதித்துறையில் நானும் ஒரு அங்கம். நீதிபதிகள் பட்டியல் தயா ரிப்பு சரியாக, நியாயமான முறையில் நடைபெறவில்லை. இதை எதிர்த்து நான் தனியாக எனது பெயரில் மனு தாக்கல் செய்து வாதிடப்போகிறேன். நான் கூறியதை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்களின் அடிப்படையில் புதிய நீதிபதிகள் பட்டியல் மீதான மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை நாளை பிற்பகல் 2.15க்கு தள்ளி வைக்கப் படுகிறது. அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/73364.html#ixzz2px9HznDB

தமிழ் ஓவியா said...


எம்.ஜி.ஆர். ஆதரித்த சேது திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா? கலைஞர் கேள்வி


சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கூறிவிட்டு தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியு றுத்துகிறார் என்றால் அதிமுக வின் கொள்கைகளை அவர் ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். ஆதரித்த திட் டத்தை மறுக்கிறாரா என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர் பான அவரது கேள்வி - பதில்.

கேள்வி :- சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?

கலைஞர் :- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறி ஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க. அரசுதான் சேது திட்டத்தை எந்த வழி யிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்சநீதிமன்றத் தில் மனு கொடுத்திருக் கிறது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும்,

நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்ற விருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறை வேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி,

ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும் என்று குறிப்பிட்டிருந் தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு,

தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அ.தி.மு.க.வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட் டத்தை இப்போது ஜெயலலிதா மறுக் கிறாரா?

முரசொலி 9.1.2014

Read more: http://viduthalai.in/page-2/73367.html#ixzz2px9WzvLV

தமிழ் ஓவியா said...


அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம்!


கொழும்பு, ஜன. 9- அய்.நா. மனித உரிமை கவுன் சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசா ரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ் மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்க வில்லை.

அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அய்.நா. புள்ளிவிவரம் கூறு கிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டு களில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர் மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களி டையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை களை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத் தின.

ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை. இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாள் கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர் கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டணி யின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற் படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கெஹ லிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/73401.html#ixzz2pxAsc7wc

தமிழ் ஓவியா said...


லஞ்சப் புகாருக்கு ஹெல்ப் லைன்: டில்லியில் அறிமுகம்


புதுடில்லி, ஜன.9-அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை முடி வுக்குக் கொண்டு வரும் வகையில், லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169 என்ற ஹெல்ப் லைன் தொலைபேசி எண் டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பாக டில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டில்லிவாசிகள் அனைவரையும் ஊழல், லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பாளர்களாக மாற்றும் வகையில், இந்த "ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்பு வோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புகார் தெரி விக்கும்போது, புகார்தாரரின் பெயர், எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.

இத் தகவல்களின் அடிப்படையில் டில்லி யூனியன் பிரதேச கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு, லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைப் பொறிவைத்து பிடிக்க உதவி செய்வார்கள். இத் தொலைபேசி எண் காலை 8 மணி இரவு 10 வரை செயல்பாட்டில் இருக்கும்.

சாதாரணக் குடிமக்களும் லஞ்சம் ஒழிப்பில் ஈடுபட வேண்டும். அவர்களைக் கண்டு அரசு அதிகாரிகள் அச்சமடைந்து, தனது பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே இத் தொலைபேசி எண் அறிவித்திருப்பதன் நோக்கம்மாகும்.

லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்த ஹெல்ப் லைன்' குறித்து டில்லி முழுவதும் விரிவாக விளம்பரம் செய்யப்படும் என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Read more: http://viduthalai.in/page-8/73397.html#ixzz2pxBAGjQq

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள்! சித்திர புத்திரன்

எது நிஜம்?

இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டு மென்றால், இறந்து போனவர்களின் ஆத் மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.

1. இறந்து போகும் ஜீவனின் ஆத்மா, மற் றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுவிடுவதாக

2. இறந்து போன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்து போன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத் திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக.

ஆகவே, இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இது தவிர, ஆத்மா கண்ணுக்குத் தெரி யாதது என்றும், சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே; சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப் பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப் பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது.

குசேலர் பெண் ஜாதி குறைந்தது ஆண்டிற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு ஆண் டாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27ஆவது ஆண்டாவது இருக்கும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப் பார்கள்?

20 ஆண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளை களைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

இதிலென்ன தப்பு?

கேள்வி: என்னடா உனக்கு கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?

பதில்: அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன் னாயே. அவரை நான் உண்டு என்று சொன் னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயே! அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லிவிட்டேன்; இதில் என்ன தப்பு?

அரைகோடி ஆண்டு!

இராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். அதில் இராவணன் அரை கோடி வருஷம் (50 லட்சம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது.

அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லட்சத்து 96 ஆயிரம் வருஷங்களாகும். நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லட்சத்து 20 ஆயிரம் வருஷந்தான் ஆகிறது. ஆகவே இராவணன் எப்படி அரசாண்டிருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/73443.html#ixzz2q3DrTqnn

தமிழ் ஓவியா said...


கடவுள் கருணை உள்ளவரா?


ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?

மாணவன்: முடியும் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.

ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?

மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!

ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.

மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?

ஆசிரியர்: ? ? ?

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EMzIcn

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கரரின் அமரு சாதகம்!

ஆதி சங்கரர் தத்துவப் பொருள் பற்றி வாதிட்டுப் பலரை வென்று தமது கொள்கையை நிலைநாட்டினாராம். அவர் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும் போதே -வாதம் புரிந்து கொண்டிருக்கும் போதே - மாயமாய் மறைந்து மக்களின் ஆதரவைத் தம்பக்கம் திருப்பி விடுவாராம்.

ஒருநாள் தம்மோடு வாதிட்டுத் தோற்ற ஒரு எதிரியின் மனைவி ஆண் - பெண் உறவு பற்றிக் கேட்ட கேள்விக்கு அவருக்கு விடை கூறத் தெரியவில்லையாம்! காரணம், திருமணமாகும் முன்பே துறவு பூண்டவரல்லவா? வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆதிசங்கரர் ஆண்-பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடைசொல்ல சிறிது காலம் தவணை கேட்டு மறைந்தாராம்.

இறந்து போன அமரு என்ற ஒரு அரசனின் உடலில் தம் கலை மகிமையால் தம் உயிரை பாய்ச்சினாராம் ஆதிசங்கரர். இறந்த அமரு உயிர் பெற்றானாம். அழுது கொண்டிருந்த அவன் மனைவி ஆவலோடு ஓடி வந்து அணைத்தாளாம்! பிறகு..?

கொஞ்ச காலத்திற்கு பின்பு சங்கரர் தம் யோக சாதனைகளை முடித்து விட்டு, கேள்விக்குரிய விடையை நேரிடையாகப் பயின்று முடித்து கேள்வி கேட்ட பெண்ணிடம் வந்தாராம். திறமையாக விடையளித்து விவாதத்தில் வென்றாராம்.

இதுதான் ஆதிசங்கரரைப் பற்றிய அமரு சாதகம் என்ற நூல்.

ஆண் - பெண் உறவு பற்றிய கேள்விக்கு விடை சொல்லத் தெரியாதது துறவி ஆதிசங்கரருக்கு ஒரு குறையா? இதற்காக அமரு உருவம் பெறவேண்டுமா? அப்படியானால், உண்மைத் துறவியா? உண்மையாகவே வேற்றுருப் பெற்று அதற்குப் பின்புள்ள செயல் செய்தது பொய் என்றாலும் அப்படிப் பெற்றதாக பொய்யுரைத்து அமரு சாதகம் என்று ஒரு நூல் புனைய வேண்டுமா? சிந்தியுங்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/73444.html#ixzz2q3EXQ4vh

தமிழ் ஓவியா said...


ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைமீது அமெரிக்கா மீண்டும் தீர்மானம் போர்க் குற்றப் படங்களையும் வெளியிட்டது


நியூயார்க் ஜன.10- அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் (ஜெனிவா) மூன்றாவது முறையாக அமெரிக்கா, இலங்கை அரசின்மீது போர்க் குற்ற தீர்மா னத்தைக் கொண்ட வர உள்ளது. அதற்குமுன் இலங்கை இராணுவத் தில் போர்க் குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமான படங்களை யும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடை பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங் களின் நிழற்படங்களை அமெரிக்கா பகிரங்க மாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத் தின் அதிகாரபூர்வ, ட்விட்டர் கணக்கில் அந்த நிழற்படங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதில் செயின்ட் அந்தோணி மீதான நிழற்படம் பிர தானமாக இடம் பெற்றுள்ளது. 2009-ஆம்ஆண்டில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக் கணக்கான தமிழ்க் குடும் பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த நிழற் படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணு வத்தால் பொதுமக்க ளின் புகலிடங்களாக அறிவிக்கப்பட்ட பாது காப்பு மண்டலங்களின் புகைப்படங்களும் அமெரிக்க தூதரக ட்விட் டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இந்தக் குற்றச் சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.

இந்நிலையில் அமெ ரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கையில் தமிழர் பகுதிகளை வியாழக் கிழமை நேரில் பார்வை யிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் ராணுவ போர்க் குற்றங் கள் தொடர்பான நிழற் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம் முன்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க தூதரும், அந்நாட்டின் குளோபல் கிரிமினல் ஜஸ்டிஸ் துறையின் தலைவரு மான ஸ்டீபன் ஜே ராப், ஒரு வார கால பயண மாக இலங்கை வந்துள் ளார். இவர் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று, தமிழ் தேசிய கூட்டணி யின் தலைவர்களை சந்தித்தார். பின்னர் அவர், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்ட மிட்டு வருகிறது என்றார்.

இந்நிலையில் கொழும்புவில் தேசிய அமைப்புகளின் கூட்ட மைப்பு சார்பில் அமெ ரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியும், பின்னர் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட் டத்தில், இலங்கைக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ராஜபக்சே புலம்பல்

இலங்கை குண்டு வெடிப்புகள் நடக்கா விட்டாலும், மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது, என, இலங்கை அதிபர், ராஜ பக்சே தெரிவித்து உள் ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ள, இலங்கை அதிபர், ராஜபக்சே, இஸ் ரேல் அதிபர், ஷிமோன் பெரசிடம் கூறியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்த சண்டை, 2009இல் தான் ஓய்ந்தது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பது தான், எங்கள் விருப்பம். பல ஆண்டு கால பயங்கர வாதத்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்தது.

தற்போது, பயங்கரவாதம் ஒழிந்து விட்டாலும், சர்வதேச சமூகத்தின் நெருக் கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெனி வாவில் ஆண்டுக்கு இரு முறை, மேற்கத்திய நாடுகள், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றன. இலங்கையில் குண்டு வெடிக்காத போதிலும், இந்த நாடுகள், எங்கள் அரசைக் கண்டிக்கின் றன. சர்வதேச நாடுகளின் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு, மூன்று, நான்கு ஆண்டுகள் போதாது. இன்னும் கால அவகாசம் தேவை.

இவ்வாறு, ராஜபக்சே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/73416.html#ixzz2q3Etrk3z

தமிழ் ஓவியா said...


தனிமைப்படுத்தப்படும் அதிமுக அரசு


தமிழ்நாடு மருத்துவத் துறை பணி நியமன அமைப்பு (Medical Services Recruitment Board - MRB) விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்டு நடைபெற்று வந்த சட்டப் பேரவைக் கட்டடத்தில் தொடங்கவிருக்கும் பல் நோக்கு உயர் சிறப்பு மருத் துவமனைக்கு மூத்த மருத்துவத்துறை ஆலோச கர்கள், இணை ஆலோசகர்கள், இளநிலை ஆலோச கர்கள், பதிவாளர்கள், நிலைய மருத்துவர்கள் என்று 83 இடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப் பட்டுள்ளன.

அப்படி செய்யப்பட்ட விளம்பரத்தில்

1) இடஒதுக் கீடு அறவே கிடையாது

2) இந்தியா முழுவதிலி ருந்தும் விண்ணப்பிக்கலாம்.

3) தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சம தகுதி உடையவர்களைவிட மிகக் கூடுதலான சம்பளம்.

4) ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது அரசின் விளம்பரம்.

சமூக நீதிக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது இந்த அரசின் விளம்பரம் என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார் (விடுதலை 31.12.2013).

தமிழ்நாடு அரசின் விளம்பரம் சமூக நீதிக்கு விரோதமானது - ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விரோதமானது; இதனை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கை களிலும் சமூக நீதியாளர்களை ஒருங்கிணைத்துத் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று அவ்வறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள் ளனர். அது தந்தை பெரியார் உழவு செய்து வளர்த்த சமூக நீதிக்கான அடையாளமாகும்.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகார பூர்வமாக எந்தவித சமிக்ஞையும் காட்ட வில்லை; இது தனது தவறான முடிவை மாற்றிக் கொள்ளாத சமூக அநீதிப் போக்கை வெளிப்படுத் துவதாகும்.

இந்த நிலையில் திராவிடர் கழகம், அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் தனது சமூகநீதிக் கடமையைச் செய்துள்ளது.

அதுதான் நேற்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக நீதி அமைப்புகளின் சமூக நீதிப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டமாகும். பி.ஜே.பி., அ.இ.அ.தி.மு.க. தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

இடதுசாரிகள் உள்ளிட்ட சிலர் வரத் தவறி இருந்தாலும், அதற்கான காரணங்கள் என்னவாக விருந்தாலும், அவர்களும் சமூகநீதிக்கு ஆதரவான வர்களே என்பது - இந்தப் பிரச்சினையில் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் மூலம் அறியப்படு கின்றன.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகயிருந்த போது 1979இல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருமானம் ரூ.9000 என்று நிர்ணயித்து, அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இடஒதுக்கீட்டின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

அப்பொழுதுகூட திராவிடர் கழகம்தான் அந்தப் பிரச்சினையை முன்னெடுத்து, தமிழ்நாட்டிற்கே கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றும், வீதிக்கு வந்து போராடி, இறுதி வெற்றி சமூக நீதியாளர்களுக்கே எனும் நிலை உறுதிப்படுத்தப்பட்டது.

அதே அணுகுமுறையை இந்தப் பிரச்சினையிலும் திராவிடர் கழகத் தலைவர் பின்பற்றினார் என்பதற்கு அடையாளம்தான் நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக நீதி அமைப்புகளின் ஆலோ சனைக் கூட்டமாகும்.

கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் 1) முதலில் அனைத்து அமைப்புகளின் சார்பில் பொதுக் கூட்டம் 13.1.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறும். 2) மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். 3) நீதிமன்ற வாயிலான நடவடிக்கைகள்.

இந்தப் பிரச்சினையில் சரியான முடிவை அதிமுக ஆட்சி எடுக்கவில்லையென்றால் அது தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தப்படும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/73425.html#ixzz2q3FTVJtO

தமிழ் ஓவியா said...

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) செயற்குழுக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது
தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று வழிகாட்டுதல் உரை ஆற்றினார்

விஜயவாடா, ஜன.10- இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist Associations ) செயற்குழு கூட்டம் ஜனவரி 6ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் யு.கலாநாதன், செயற்குழு உறுப்பினர் அனை வரையும் வரவேற்று, கூட்டமைப்பின் அண்மைக் கால செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

குறிப்பாக டில்லியில் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தின் முன்பு நடத்தப்பட்ட அறப் போர் குறித்து விரிவாக விளக்கினார்.

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) பன்னாட்டு இயக்குநர் பாபு கோகினேனி சிறப்பு அழைப்பாளராக பங் கேற்றார்.

நடைபெற்ற அறப்போர் குறித்த கருத்துகளை கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்பினர் தெரிவித் தனர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரை யாடினர். கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப் பினர் ஒவ்வொருவரும் தங்களது அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய குறிப்பினை வழங்கினர். நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடிய அளவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை மய்ய அரசு வடிவமைக்க வேண்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டினை ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கூட்டமைப்பின் சிறப்பு அழைப்பினை ஏற்று தமிழர் தலைவர் கி.வீரமணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு, நாடு தழுவிய அளவில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு நிறுவப்பட்ட அமைப்பாகும். கூட்டமைப்பின் நிறுவனர் அமைப்புகளுள் ஒன்றான பகுத்தறிவாளர் கழகம் தமிழகத்தை பொறுத்தவரையில் பிரச்சார செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் ஆரம்பக்காலம் முதல் அழுத்தமாக செயல்பட்டு வருகிறது.

பகுத்தறிவாளர்களான நாம் முற்போக்கு கருத்தியல்களில் பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்களாகவே இருக் கிறோம். சிறுபான்மையினராக பகுத்தறிவாளர்கள் இருந்தாலும், சமுதாய நலனுக்கு உகந்த முற்போக்குக் கருத்துகளை பரப்புவதில், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறோம்.

கூட்டமைப்பின் உறுப்பினர் அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் தங்களது செயல்பாடுகளை மேற் கொண்டாலும், நாடு தழுவிய அளவில் ஒருங் கிணைந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு.

நாடு தழுவிய அளவில் நடைபெற வேண்டிய செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உறுப்பினர் அமைப்பினரிடையே அணுகுமுறை வேறுபாடு ஏற்படுவது இயல்பே. உறுப்பினர் அமைப்பினர் விரிவாக தங்களது கருத்துகளை விவாதத்திற்கு உட்படுத்தி, அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவு களை செயல்படுத்துவதில், கருத்து மாறுபாடுகள் கொள்ளுதல் கூடாது.

எடுக்கப்பட்ட முடிவினை முழுமனதுடன் நிறைவேற்றுவதில் கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர் அமைப்பும் முனைப்பாக தங்களது பங்களிப்பினை அளித்திட வேண்டும். எடுக்கப் பட்ட முடிவுகளின் வெற்றிக்கு கடுமையாக உழைத் திட வேண்டும்.

உறுப்பினர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில்தான், கூட்ட மைப்பின் பணிகள் சிறப்படைய முடியும். இந்த அடிப்படையில் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர் அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கூறுகிறோம்.

கருத்துப் பரிமாற்றம், கருத்தொத்த முடிவு, களப் பணி காணுதல் என்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தான் கூட்டமைப்பின் செயல்பாடு செம்மைப் பட முடியும்.

அதற்கு அத்துணை உறுப்பினர் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். - இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், மற்றும் பெரும்பாலான உறுப்பினர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/73426.html#ixzz2q3Fln3pX

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!

வெளியேறியது - ஏன்?

செய்தி: மக்கள் நலனைப் பாதுகாக்கவே பா.ஜ.க.வில் இணைந்தேன்.
- எடியூரப்பா

சிந்தனை: அப்படியா னால் மக்கள் நலனைக் குலைப்பதற்காகவா பிஜேபியை விட்டு வெளி யேறினார்?

நம்புங்கள்

செய்தி: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தச் சந்திப்பு முக்கியமானது.

- தினமணி செய்தி

சிந்தனை: ஆமாம் நம்புங்கள்! தேர்தல் அரசி யல் மற்றும் பி.ஜே.பி. உள் விவகாரத்தில் ஆர்.எஸ். எஸ். தலையிடுவதே கிடை யாது.

கடவுளை மற!

செய்தி: அய்யப்பப் பக்தர்களுக்காக பம்பையில் 6 இடங்களில் மருத்துவ முகாம்கள்.

சிந்தனை: அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல் லையோ? கடவுளை மற - மனிதனை நினை! - என்றார் தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/73466.html#ixzz2q8gjMeSk

தமிழ் ஓவியா said...


திருப்பதி தேவஸ்தானத்தில் உடலுறவுக் கேவலம்!
எழுத்துரு அளவு Larger Font

திருப்பதி, ஜன.11 திருமலையில், தேவஸ் தான அலுவலகம் ஒன் றில், பாலியல் உறவில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர், பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருமலையில் மது, மாமிசம், பீடி, சிகரெட், சீட்டு விளையாட்டு, விப சாரம், பிற மத பிரசாரம் போன்றவை, தடை செய்யப்பட்டுள்ளன.

திருமலை, சங்குமிட்டா துணை விசாரணை அலு வலகத்தில், குமாஸ்தா வாக பணிபுரியும் கோபி நாத், தன் பணி நேரத் தில், கடை நிலை ஊழிய ராகப் பணிபுரியும் பெண் ஒருவருடன், ஓராண் டாக, பாலியல் உறவில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அலுவலக அறையில், அவர்கள் இருவரையும், கையும் களவுமாக, விஜிலென்ஸ் அதிகாரி கள் பிடித்து, காவல் துறையில் ஒப்படைத் தனர். இதையடுத்து, இருவரும் நேற்று, பணி யில் இருந்து நீக்கப்பட் டனர்.

இத்தகைய குற்றத்திற் காக, தேவஸ்தான ஊழி யர் பணி நீக்கம் செய்யப் பட்டது, இதுவே முதல் முறை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/73464.html#ixzz2q8h6DmZX

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/73469.html#ixzz2q8hq97uu

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?செயல்படுமா?


சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடங்கவிருக்கும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கான மருத்துவ பேராசிரியர்கள் தொடர்பான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்ததன் மூலம் அடிப்படைத் தவறினைச் செய்துவிட்டது; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டு இருக்கிறது.

இதுபற்றிக் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் சொல்லப்படாததிலிருந்தே ஒன்று தெளிவாகவே தெரிகிறது. தமது தரப்பில் தவறு நடந்திருக் கிறது என்று அரசுக்கு நன்கு தெரிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. இல்லாவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற முறையில் எதையாவது தெரிவித்திருப்பார்கள்.

சரி, தவறு நடந்து விட்டது என்று அறிந்த மாத்திரத்தில் விளம்பரத்தை மாற்றி வெளியிட வேண்டியதுதானே, அதில் என்ன தயக்கம்?

எந்த இடத்தில் இந்தத் தவறு நடந்திருக் கிறது என்று துறை ரீதியான விசாரணைகள் ஒரு பக்கம் நடத்தப்படட்டும், மற்றொரு பக்கம் சட்ட ரீதியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான அறிவிக்கையை விளம்பரமாகக் கொடுப்பதில் ஏன் தாமதம்?

நீதிமன்றம் சென்று அது தலையில் குட்டியதற்குப் பிறகுதான் திரு(ந்)துவது என்ற நிலைப்பாடு ஒரு நல்லரசுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (MRB) சார்பில்தான் விளம்பரம் வெளியிடப் பட்டது. அதன் சட்ட விதிகளிலேயே நான்காம் பகுதியிலேயே (Chapter- 4) கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Number of posts reserved for scheduled castes, scheduled tribes and other backward classes in a cadre having morethan 13 posts shall be determined by multiplying the cadre strength by the percentage of reservation prescriped for the respective categories while during so fraction if any shall be ignored” என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதே.

13 இடங்கள் காலியாக உள்ள எந்த ஒரு பணியிடத்துக்கும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கப் போனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசின் விளம்பர அறிக்கையில் மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants) 14 இடங்கள், இணை ஆலோச கர்கள் 13 இடங்கள், இளநிலை ஆலோசகர்கள் 23, நிலைய மருத்துவர்கள், 19 பதிவாளர்கள் 14 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் 13 இடங்களுக்கு மேற்பட்டது என்பதால் விதிமுறைகளின்படி கண்டிப்பாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

கட்சிகளைக் கடந்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கூட்டப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனைப் பேரும், ஒருமித்த எண்ணத்தோடு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு கட்சிகள் சமூக நீதி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 13ஆம் தேதி மாலை ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதியின் பக்கம் பெரும் அளவில் திரண்டு நிற்பர் என்பதில் அய்யமில்லை.

காலம் கடந்துவிடவில்லை - தமிழ்நாடு அரசு சமூக நீதித் திசையில் சிந்திக்குமா? செயல் படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/73470.html#ixzz2q8hzn8Wn

தமிழ் ஓவியா said...


சங்கீதமும் பார்ப்பனியமும்

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பன ரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத் தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறை வாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்திய முடைய வர்களாயிருந்தாலும் அதை லட்சியம் செய்யா மல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள்.

நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள் தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும், பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லட்சியம் செய்யாமல் சுவாமிகளே என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனு சரித்தே ஒவ்வொரு ஊரிலும்.

பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும், அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை ஆதரிக்க வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவை யிலும் முதல் முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதைக் கவனித்து நடக்குமா?

சுழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணா மலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்குப் பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்ய வேண்டு மெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் ரேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கி விட்டார்கள்.

நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் இப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன.

பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்ற மடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்குப் போதுமான காரணம் இல்லை யென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய் விட்டது.

மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண் ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலி யாரும் போவார் என்றே தெரிகின்றது.

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாகத் தெரி கின்றது. 98 பார்ப்பனரல்லாத வாலிபர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்ட தாகவும் அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வரு கின்றது. திருவண்ணாமலைக் கேசுபோலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும்போல் தெரிகின்றது.

அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்ப னரல்லாத வக்கீல் போகவேண்டி யிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்தத் திருவண் ணாமலை கேசு செலவுக்குப் பொதுஜனங்கள் உதவியது போலவே உதவவேண்டும் என்று அப்பீல் செய்து கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.02.1928

Read more: http://viduthalai.in/page-7/73484.html#ixzz2q8ilWxS2

தமிழ் ஓவியா said...


யார் வார்த்தைகள் கடினம்?


பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.

இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர் களாவது கண்டித்தார்களா என்று கேட் கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர் களுடைய இம் மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்க வில்லையா?

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ் வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.

தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவை களில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்ட தானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண்டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.

ஆகவே யாரு டைய வார்த்தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யா னதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனு கூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரி கைகள் என்ன வேலை செய்து யார் நடத்தி னாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

- குடியரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/73485.html#ixzz2q8iwV2DX