Search This Blog

11.4.09

பிரபாகரன்பற்றி விஷமத்தனமாகக் கூறியது யார்?




பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் என்று ஜெயலலிதா கூறியது விஷமத்தனமா?
மாவீரன் பிரபாகரன் வீரனாக நடத்தப்படவேண்டும் என்று கலைஞர் உவமானமாகக் கூறியது விஷமத்தனமா?


தமிழர் தலைவர் அறிக்கை

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வீரனாக நடத்தப்படவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூறியது விஷமத்தனமானது என்று அறிக்கை விடுபவர்களைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர் வாழ்வுரிமை என்பது திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பூர்வமான இலட்சிய இரத்த ஓட்டம்.

இவ்விரு இயக்கங்களும் அனுபவித்த இழப்புகளும், செய்த உதவிகளும் யாராலும் மறுக்கப்பட முடியாதவை.

ஈழத் தமிழர் வாழ்க்கை, தேர்தலுக்குத் தேடும் திடீர் மூலதனம் அல்ல இது; அவர்களுக்காகச் சிந்தும் கண்ணீர் - நமது ரத்தக் கண்ணீர் - ஜெயலலிதா போன்றவர்கள் சிந்தும் முதலைக் கண்ணீர் அல்ல!

ஈழத் தமிழர்களுக்காக - விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா (Pota) சட்டத்தைப் பயன்படுத்தி பலரை, ஓர் ஆண்டுக்குமேல் சிறையில் தள்ளிய ஜெயலலிதா, இன்றைக்கு ஈழத் தமிழர் பாதுகாவலராம்!


இளைஞர்களைத் திசை திருப்புவதா?

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ உள்பட மற்றவர்களும் விடுதலை செய்யப் படவேண்டும் என்று வாதாடி முதல் கையெழுத்திட்டவர்கள், அறிக்கை விடுத்தவர்கள், ஈழத்தமி ழருக்கு இன்று விரோதிகள் போல் - தேர்தலில் அப்பாவி இளைஞர்களை, அறிவுக்கு வேலை தராமல் வெறும் உணர்ச்சியை மட்டுமே முன் னிறுத்தி அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கும் சில தடுமாறும் இளைஞர்களை, மாணவர்களை - திசை திருப்பலாம் என்று தப்புக் கணக்குப் போடும் தப்பிலிகளுக்குச் சொல்கிறோம்:

ஓநாய் ஒருபோதும் சைவமாகி விடாது; இனம் இனத்தோடு தான் சேரும் என்பதை பொறுமையுடன் பொறுத்திருந்து பாருங்கள்.

தன்மான உணர்வோடு உவமை கூறியது தவறா?

ஈழ உரிமைப் போரில், ஒரு தமிழ்ச்செல்வன் களத்தில் சுடப்பட்டு மாண்டார் என்றவுடன் துடியாய்த் துடித்து, கவிதை வரிகளின் மூலம் தனது கண்ணீர்த் துளிகளால் வீர வணக்கம் கூறியவர் முதல்வர் கலைஞர்; மனச்சாட்சியின்றி தேர்தல் வெற்றிக்காக ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை இன்றும், நாளையும் ஏற்றுக்கொள்ளாத, கொள்ள முடியாத ஒருவரை சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டி, அன்று கலைஞர் அனுதாபம் காட்டியதற்காகவே அவரது ஆட்சி யைக் கலைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவரிடம் சரணாகதி அடைந்து விட்ட மாவீரர்கள் இன்று கலைஞர் பேச்சுக்காக குறை கூறி அறிக்கை விடுகிறார்களே, என்ன கொடுமை! கைது செய்யச் சொல்லி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கோரியவர் நல்லவர். அப்படி ஒரு நிலையே ஏற்பட்டாலும் என் சகோதரன் - என் தமிழன் - வீரனாகத்தான் நடத்தப்பட வேண்டும் என்று தன்மான உணர்வோடு உவமைக்காக கூறியவர் கெட்டவரா?

ஆம்! தேர்தல் ஓட்டு வேட்டையாடிட இந்த ஆயுதத்தைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லையே. அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்? இவ்வாட்சியின்மீது - முதல்வர் கலை ஞர் மீது வேறு எதைத்தான் கூறுவது என்ற ஏக்கத்தினால், ஏமாற்றத்தால், இப்படி விஷமத்தனம் என்று தூண்டிலைத் தூக்கித் திரிபவர்களைக் கேட்கிறோம்!

எது விஷமத்தனம்?

இதுவே விஷமத்தனம் என்றால், அந்தப் பிரபாகரனைக் கைது செய்து இங்கே கொண்டு வரவேண்டும் என்று வெளியில்கூட அல்ல; சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற் றியது பாராட்டா? சீராட்டா? அவர்கள்தான் இன்று ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாவலரா? விஷமத்தனம் என்று சொல்லும் வீரருக்கு அந்த அம்மையார் விஷத்தனம் என்ற ஆலமுண்ட நீலகண்டத்தில் தங்கி விட்டதோ? வெட்கம்! வேதனை! கண்ணாடி வீட்டில் நின்று கற்கோட்டையில் கல்லெறிதல் வேண்டாம்!

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, அய்.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஏற்கெனவே இந்திய அரசு, அதன் கூட்டணிக் கட்சியிலிருந்த தலைவராக இருப் போர் போர் நிறுத்தம் கூறி வலியுறுத்தியும், சோனியா முதல் அனைவரும் கூறியும், இதோ வென்று விட்டோம் - அதோ பிடித்துவிட்டோம் என்று காட்டி உலகத்தை ஏமாற்றும் இராஜ பக்சேக்களை, சிங்கள இராணுவத்தை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டியவர்கள், ஆதரவு திரட்டவேண்டியவர்கள் - உண்மையில் அப்பிரச்சினையில் அக்கறை கொண்டவர் களானால், கலைஞரைத் தாக்கியா அறிக்கை கொடுத்து, அம்மாவை அகமகிழ வைப்பார்கள்?

தேர்தலோடு முடிவதல்ல!

அணிகளாகப் பிரிந்த பிறகும்கூட, கத்தரிக்கோலின் இரு பிளேடுகள் என்று கூறி எதிரிக்கும் தமிழர்கள் பலவீனம் தெரிய வேண்டாம் என்று கருதி, நாளும் - அரசியலுக்கும் அப்பால் நின்று சிந்திக்கும் கலைஞரைத் தாக்குவதால், என்ன உருப்படியான பலன் ஏற்படும்? தேர்தலோடு முடிவதல்ல, ஈழப் பிரச்சினை - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை - மறவாதீர்கள்!


--------------- "விடுதலை"11.4.2009

24 comments:

Unknown said...

//ஈழத் தமிழர்களுக்காக - விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா (Pota) சட்டத்தைப் பயன்படுத்தி பலரை, ஓர் ஆண்டுக்குமேல் சிறையில் தள்ளிய ஜெயலலிதா, இன்றைக்கு ஈழத் தமிழர் பாதுகாவலராம்//

சீட்டுக்காக தமிழினத்தை சீரழிக்கும் வை.கோ. தா.பா. டொக்டர் ராமதாஸ் களை புரிந்து கொள்வீர்

Unknown said...

//கத்தரிக்கோலின் இரு பிளேடுகள் என்று கூறி எதிரிக்கும் தமிழர்கள் பலவீனம் தெரிய வேண்டாம் என்று கருதி, நாளும் - அரசியலுக்கும் அப்பால் நின்று சிந்திக்கும் கலைஞரைத் தாக்குவதால், என்ன உருப்படியான பலன் ஏற்படும்? தேர்தலோடு முடிவதல்ல, ஈழப் பிரச்சினை - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை - மறவாதீர்கள்!//

ஜெயலலிதா பின்னால் அணிவகுக்கும் நம்மவர்கள் இந்த அருமையான, உண்மையான அறிவுரையை ஏற்பார்களா?

ttpian said...

மடாதிபதி வீரமனி சுவாமிகளின் பெரியார் மடம்...
ஆளும் கட்சிக்கு ஜால்ரா(காது கிழியும் வரை) அடிப்பது
பொருக்கி தின்பது(சானியில் கிடந்தாலும்)

தோழமை - உரிமைக்கான வளம் said...

TAMIL OVIYA YOU ARE SLAVERY OF IDIOT VEERAMANI, THINK ABOUT 80S YOUR LEADERS FORCE, NOW HE IS ONLY FOR MAINTAINING ENGAL AYYA ASSERTS, DONT WRITE ABOUT YOUR IDIOT LEADER, HE IS THE ONE ONLY ENEMY TO ALL OF OUR TAMIL PEOPLE, HE IS TH TAMIL NADU KARUNA, DONT WRITE MORE ABOUT EELAM ISSUE, YOU ARE PELAIPUVATHI, YOUR LEADERS ORIGINAL FACE WILL COME OUT SOON, THE TAMIL PEOPLE WILL DESTROY YOUR LEADER OK,

சவுக்கடி said...

தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording. i agree 101% ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording. i agree 101% ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording. i agree 101% ...

bala said...

// தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!///

Very Nice wording. i agree 101% ...

இரா.சுகுமாரன் said...

//ஈழத் தமிழர்களுக்காக - விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா (Pota) சட்டத்தைப் பயன்படுத்தி பலரை, ஓர் ஆண்டுக்குமேல் சிறையில் தள்ளிய ஜெயலலிதா, இன்றைக்கு ஈழத் தமிழர் பாதுகாவலராம்!//

அன்று பொடா,
இன்று தேசிய பாதுகாப்பு சட்டம். அன்று செயலலிதா
இன்று கருணாநிதி அவ்வளவுதான்.


இன்று பொடா இல்லை. இப்போது தேசிய பாதுகாப்புச்சட்டத்தை பயன்படுத்தி கருணாநிதி ஈழ ஆதரவாளர்களை கைது செய்கிறார். கருணாநிதிக்கு மட்டும் ஈழத்தமிழர்கள் மீது அக்கரை உண்டா?.

இவரது வேடம், இரட்டை வேடம்.

செயலலிதா எதிரி!
கருணாநிதி துரோகி!!

இருவருமே தமிழின எதிரிகள் தான்.


எனவே நீங்கள் இவர்களுக்கு ஆதரவாக பேசுவது சரியல்ல.
கருணாநிதி ஆட்சியை இழந்தால் மீண்டும் செயலலிதாவை நோக்கி உங்கள் தலைவர். போகலாம்.

தமிழ் ஓவியா said...

//கருணாநிதி ஆட்சியை இழந்தால் மீண்டும் செயலலிதாவை நோக்கி உங்கள் தலைவர். போகலாம்.//

கொள்கைக்கு மாறாக யார் செயல்பட்டாலும் எதிர்க்கத்தான்ன் செய்வார்.

அப்போது கலைஞர் பி.ஜி.பி யுடன் கூட்டணி அமைத்த போது எத்ர்த்தார். அதுதான் சரியான நிலைப்பாடு.


யாருக்கு ஆதரவு என்பது கொள்கைப்பார்வையின் அடிப்படையில்தான் தோழர்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்ம் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா

unearth.com said...

Inthiya mannail Inthiya pirathamarai konru, aatharavukkaha anuppappatta inthiya amaithippadaiyai konru kuviththu, Inthiya uthaviye thamakku thevaiyillai, ilankai thamilarum sinkalavarum sahothararhal, emakkulnaam adipaduvathil thalaiyid Inthiyaavitku enna arukathai ullathu enru ilivupaduthiya pirapakaranukku vakkalaththu vaankum inthiyan oruvanum maanamulla thesa pakthanaaha irukka mudiyaathu.

சவுக்கடி said...

ஐயா 'அனெர்த்து',

அந்த ஆள் (ராசிவ்) அனுப்பியது அமைதிப் படை அன்று.

அப்பாவி மக்களைக் கொல்லும் படை (IPKF: Innocent People killihg Force) என்று அப்போதே வெட்ட வெளிச்சமானது அனைவரும் அறிந்த செய்தி.

அந்தப்படை அம்மண்ணில் புரிந்த படுகொலைகளையும் அருவருப்பான, முறையற்ற இழிவான கொடுமைமிக்க
திருவிளையாடல்களையும் இந்திய ஆங்கில இதழ்களும் உலகிலுள்ளள நடுநிலை ஊடகங்களும் தோலுரித்துக் காட்டியதை நீங்கள் படித்ததில்லையா?
அவற்றை யாரால் மறுக்கமுடியும்?

அத்தோடு,
அமைதிப் பேச்சுக்கென மாமறவன் பிரபாகரனை அழைத்து, சுட்டுக் கொன்றுவிடும்படி அந்த ஆள் (ராசிவ்) ஆணையிட்டதை தூதன் தீட்சித் வலியுறுத்தினார் என்று படைமேல்நர் கர்கிரத்சிங் எழுதிய நூலில் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதையாவது படித்ததுண்டா?

அம்மண்ணில் தமிழருக்கும் சிங்களருக்கும் இடையிலான சிக்கலில் பா.ச.க. ஆட்சியில் நடந்து கொண்டதைப் போல் தலையிடாமலாவது இருந்து தொலைத்திருக்க வேண்டும்.

மாறாக, இங்கே, இருபது கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடி வதங்கிக் கொண்டிருக்கையில்,
கோடிக்கணக்கில் தொகையும், பல்லாயிரங் கோடி மதிப்பிற்கு ஆய்தங்களும் கதுவீக்களும் நுட்பமான உளவறி கருவிகளும் படையாளரும்
பிறரும் யார் அப்பன் வீட்டுச்சொத்தில் இருந்து கொடுங் கொலைவெறி கொண்ட இனழிப்புச் சிங்களருக்கு எடுத்துக் கொடுத்தார்கள்?

அண்மையில் "ஆம் கொடுத்தோம்" என்று பிரணாப்பு ஒப்புக் கொண்டுள்ளதைப் படிக்கவில்லையா?

ஒரு புட்டில் தேறலுக்கு (பீர்) நாட்டின் முகன்மையான பாதுகாப்பு ஆவணங்களைத் திருடிக் கொடுத்த பயல்களிடம் போய் நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசுக!

உங்கள் நாட்டுப் பற்றைப் பற்றிய உண்மைகளை எழுதினால் நாண்டு கொண்டுச் சாகவேண்டி வரும்!