Search This Blog

7.6.15

பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில் முன்னேற்றம் காண முடியாது-பெரியார்

ஜாதி காரணமாகவே ஒருவன் உழைக்காதிருக்கவும் மற்றொருவன் உழைக்கவும் ஏற்படுகிறது
 தந்தை பெரியார்


ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அவர்களுக்கு இந்த வார்த்தை வாயில் நுழைய மாட்டேன் என்கிறது. அந்த நாடுகளிலே என்னதான் அடக்கு முறைகள் இருந்ததாகச் சொல்லப் பட்டாலும் அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது; இந்த நாட்டைப்போல் அதை நினைத்தாலே கடவுள் கண் ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

இங்கத்திய மகன் அறிவு பெற்ற வனாக இல்லை; கிணற்றுத் தவளை களாகத்தான் அவன் வளருகிறான். இந்த  நாட்டு மக்களிலே 100க்கு 85 பேர்கள் கல்வியறிவில்லாத தற்குறி மக்கள். இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம் அடையும்படியாக ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டால் தான் முடியுமே தவிர, அதை  விட்டு விட்டு இதெல்லாம் பிற்போக்கு  சக்தி என்ற பல்லவி பாடிக் கொண்டு திரிவதில் எந்தவித பலனும் இல்லை; ஏற்படவும் ஏற்படாது.
மார்க்ஸ் லெனின், ஏஞ்செல்ஸ் முதலியவர்கள் இந்தப்படி தான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்முடைய வாதம் என்ன வென்றால் இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏஞ்சல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், இருக்கிற சமுதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது தெரியாது. அவர்கள்தங்களுடைய நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்புகளுக்கும், அவற்றின் குறைகளுக்குப் பரிகாரம் ஏற்படுகிற மாதிரியில் கொள்கைகள், திட்டங்கள் ஏற்படுத்தினார்களே தவிர, இந்த நாட்டைப் பற்றி அவர்கள் நினைக்கவுமில்லை; தெரியவும் தெரி யாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைமுறையோ இச்த நாட் டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.
ஸ்டாலின் இறப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஒருமுறை சொன்னார், அதாவது, நாம் நினைக்க முடியாத, அறிந்திருக்க முடியாத சமுதாயக் கஷ் டங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. எனவே அந்தச் சமுதாயக் கஷ்டங்களை ஒழிக்காமல் வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவதால் இந்தியாவில் கம்யூனி சத்தைக் கொண்டுவந்து விடமுடியாது, என்பதாகச் சொல்லியிருக்கிறார். இது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அப்படி அவர்களுக்கு இந்த நாட்டின் நிலைமை, கஷ்டம் அமைப்புகள் தெரியாது. அவர்களுக்கு  இந்த மாதிரியான ஒரு அமைப்பு ஒரு நாட்டிலே இருக்கும் என் பதே அதிசயமாக இருக்கிறது. அறிந்த பிற் பாடுதான் அவர்களும் சொல்லுகிறார்கள் நம்மைப்போலவே.

உண்மையாக இந்த நாட்டுக் கம்யூனிஸ் டுகள் நினைக்க வேண்டும்: அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும்; முதன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரசாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான் என்பதை. 30 வருடமாக இந்த அடிப் படையில் தானே  நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொரு ளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லு கிறார்கள். நாங்கள் பொருளாதாரத் துறை யிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியது தான். ஆனால் சமுதாயத் துறையிலே இருக்கிறபேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேத மொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல; ஆனால் சமுதாயத் துறை பேத ஒழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக்கொள்வதில்லை. இதைப் பற்றிப் பேசுவதே பாபம் என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று கருதுகிறார்கள். பிற்போக்குச்சக்தி என்று சொல்லுகிறார்கள்.

மற்றும் சொல்லுகிறேன்; தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்குச் சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றி யமைத்தாக வேண்டும்; ஆனால் சமுதாயப் புரட்சியைச் சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும், மக்கள் உள்ளத்திலே. இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி பிரத்தியட்ச நிலையை மக்களுக்கு உணர்த் தினால் போதும்.  நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமுதாய அமைப்பை, இன்றைய அமைப்பு சர்க்கார் இருக்கும் போதே மாற்றிவிட முடியும், மக்கள் பகுத்தறிவு பெறும்படி செய்வதன் மூலமாக. 30 வருடங்களுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம் திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவமும், திமிரும்? 30 வருடங்களுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! 30 வருடங் களுக்கு  முன் எவ்வளவு தேர், திருவிழா நடைபெறும்! சாமிக்கு எவ்வளவு கூட்டம் சேரும்! இன்றைய தினம் சாமி ஊர்வலத் தின் போது பார்ப்பான், தூக்குகிறவர்கள், தீவட்டி பிடிப்போரைத் தவிர வேறு யாரும் காணுவ தில்லையே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத் தறிவு உணர்ச்சி ஏற்படும் படியாகச் செய்த தன் காரணமாக நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எதற்குச் சொல் லுகிறேன், சர்க்காரைக் கவிழ்க்காமலேயே ஒழிக்காமலேயே மக்கள் உள்ளத்திலே உணர்ச்சியை அறிவை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த சமுதாயப் புரட்சியைச் செய்யமுடியும் என்பதற்கு  ஆகவே சொல்லுகிறேன்.
முதலில் இந்தக் காரியத்தைச் செய் வோம்; பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட  முடியும்; பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவராமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போ மானால், தானாகவே பொருளாதார உரிமை வந்து விடும். ஆகவே இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.
இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே (மாவட்டத்தையே) எடுத்துக் கொள்ளுங்களேன்; யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன்  பார்ப்பான்; அதற்கடுத்த படியாக பணக்காரன், நிலைமுடையோன் - சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படு கிறவர்கள். அதற்கடுத்த படி தூக்கியவன் தர்பார் என்பது போல  இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லை யென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற வனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே யில்லை. இப்போது சொல்லுங்கள்: பணக் காரன் - ஏழை என்கிற பாகுபாடு உயர்ஜாதி தாழ்ந்தஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா இல்லையா?......... என்று.
இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின்  எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத் திலும், பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால் தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம்.
இன்னமும் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன் னேற்றம் காண முடியாது என்று உறுதி யாகக் கூறுவேன்.
---------------------------------மன்னார்குடியை அடுத்த வல்லூரில் 27-4-1953 -ல் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: "விடுதலை"  5-5-1953


Read more: http://www.viduthalai.in/page-2/102860.html#ixzz3cN5kHU2O

48 comments:

தமிழ் ஓவியா said...

கடல் சூழ் உலகு (ஜூன் 8 உலக கடல் நாள்)

இவ்வுலகு நான்கில் மூன்று பாகம் கடலால் நிரம்பியுள்ளது. மனித இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடலை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன. கடலை நாம், சாதாரணமாக பார்க்கும் போது நீல வண்ணம் பவளம் போர்த்தியது போல் காட்சி தரலாம், கடலின் உள்ளே மனிதன் இதுவரை கண்டறியாத பல அறிவியல் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. நமது அறிவியலாளர்கள் ஹப்பில் தொலைநோக்கி மூலம் நமது பால்வெளியையும் தாண்டி வேற்று பால்வெளியை (ஆண்டிரோமீடா) கண்டுவிட்டனர். ஆனால் தினசரி காணம் கடலில் வெறும் 30 விழுக்காடு மட்டுமே அறிந்துள்ளோம். அதே வேளையில் 70 விழுக்காடு கடலை நாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படி இருக்கலாம் என்று அறிந்து வருகிறோம். கடலில் தோன்றும் சிறிய மாற்றங்கள் கூட நிலப்பகுதியில் மிகப்பெரிய் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜூன் மாதம் துவங்கியதும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதி முனையில் உள்ள தார்ப்பாலைவனத்தில் மழையே காணாத மாற்றங்களும் கடலில் ஏற்படும் மாற்றங்களால்தான் உருவாகிறது. மேற்குதொடர்ச்சி மலைதான் இந்தியாவின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கிறது. ஓர் ஆண்டு மேற்குதொடர்ச்சி மலை மழை தருவதை நிறுத்திவிட்டால் இந்தியாவில் மிகபெரிய பஞ்சம் ஏற்பட்டுவிடும். 2013-ஆம் ஆண்டு ஜூலை வார இறுதியில் தார்ப் பாலைவனப்பகுதியில் கடுமையான மழைபெய்தது, இது குறித்து தார்ப்பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் 79 -வயது முதியவர் ஒருவர் கூறும் போது எனது தாத்தா தந்தை மற்றும் என்னுடைய காலத்தில் இதுபோன்ற மழையை கேள்விப்பட்டது மில்லை, கண்டதுமில்லை என்றார். அதே நேரத்தில் மற்றொரு மாற்றம் மத்திய இந்திய பகுதிகளில் வெறும் 30 விழுக்காடு மழைமட்டுமே பெய்துள்ளது. இது தொடர்ந்தால் இந்தியாவில் 50 விழுக்காடு மக்கள் பஞ்சத்தால் வாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்தத் திடீர் மாற்றம் இந்தியப்பெருங்கடலின் உள்ளே உருவாகிவரும் மிகபெரிய மாற்றத்தின் ஆரம்பக் கட்டம்தான். ஆகையால்தான் தார்ப் பாலைவனத்தில் வெள்ளம் வரும் அளவிற்கு மழையும் ஆயிரம் ஆண்டுகளாக நல்ல மழைபெய்துவரும் பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியும் கொடுக்கிறது. கடலுக்கடியில் தேங்கும் வெப்பம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக புவியில் இயற்கையாக தோன்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை மெல்லுடலிகள் உறிஞ்சி அதை சுண்ணாம்புப் பாறையாக தொடர்ந்து மற்றிக்கொண்டு வருகின்றன. ஆனால் கடந்த சில நூற்றாண்டாக தொழில்வளர்ச்சி காரணமாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு, கடலின் அடியில் அளவுக்கு அதிகமாக தேங்கிக்கொண்டு வருகிறது, இப்படி தேங்கியிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இதை எடுத்துக்கொள்ளும் மெல்லுடலிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. ஒருபுறம் கார்பன் தேக்கம் என்றால் மனிதன் உருவாக்கும் கழிவுகளும் கடலை மெல்ல மெல்ல நாசம் செய்துவருகின்றன.

உலகின் குப்பை கூடமாக மாறும் இந்தியப்பெருங்கடல் முக்கியமாக இந்தியப்பெருங்கடல் உலகின் வியாபாரப் பாதையாக மாறிவிட்ட சூழலில் மற்ற எந்த கடலையும் விட அதிக அளவு மாசுபடுகிறது. இந்திய பெருங்கடல் நாடுகளில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரைத் தவிர மற்ற நாடுகள் இந்தியா உட்பட அனைத்தும் வறுமை தாண்டவமாடும் நாடுகள்தான், இந்தியப்பெருங்கடலில் ஏற்படும் மாசுக்கள் இந்த ஏழை நாடுகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் நெருங்கி வருகிறது. மேலை நாடுகள் தங்கள் கடற்பகுதிகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கும் போது கடல்மாசை கட்டுபடுத்தவேண்டிய இந்தியா போன்ற நாடுகள் மேலை நாடுகளின் கூலியாளாக செயல்பட்டு தங்கள் கடலை குத்தகைக்கு விடும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டது. மேலைநாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் அரசுக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களின் பணத்தாசை, இந்தியா போன்ற நாடுகளின் வாழும் மக்களில் வாழ்வாதாரத்தையே பாதித்துவிடும். கடல்மாசடைவதை தடுப்பதோடு மேலை நாடுகள் இந்தியப் பெருங்கடலை ஆக்ரமிப்பதையும் தடுத்து நிறுத்தவேண்டிய சூழல் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய கடல்தினத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமை அதிகமுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.



Read more: http://www.viduthalai.in/page-4/102883.html#ixzz3cNEQpuZM

தமிழ் ஓவியா said...

மழைக்காக சிறப்பு பூஜைகள் செய்வதா?
மூடநம்பிக்கையை தமிழக அரசு பரப்புவதா!
ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜூன் 7_ தமிழக அரசின் நீர்வளத் துறை மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழைக் காக சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்வ தற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில்:_ தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட் டிக் கொண்டிருக்கும் நிலை யில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப் பணித்துறையின் நீர்வளப் பிரிவு செயற்பொறியாளர் கள் அனைவரும் சிறப்பு பூஜைகளை நடத்த வேண் டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரி விக்க வேண்டும் என்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற் றறிக்கை அனுப்பியுள்ளார்.
வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச் சியடைந்துள்ள இக்காலத் தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந் தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக் கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண் டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய தாகும்.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார் கள். அதேபோல், ஜெயலலி தாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்ட தன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழி யில் செல்லத் தொடங்கி யுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும். பகுத்தறிவுக்கும், அறிவிய லுக்கும் ஒவ்வாத இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்ப தற்கு தலைமைப் பொறியா ளர் முயல வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடைவிதித்துவிட்டு
சமகிருத மொழித் திணிப்பை மத்திய அரசு செய்து வருகிறது



சென்னை, ஜுன் 7_ ஒருபுறம் அய்.அய்.டி. கல்வி நிலை யத்தில் அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதித்துவிட்டு, மறுபுறம் இந்துத்துவ அரசியலை, நகர்த்துவதற்கேற்ப, சமஸ்கிருதத் திணிப்பைச் செய் வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகி றது என தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (6.6.2015) அவர் கேள்வி _பதில் வடிவில் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித் திருப்பதாவது:

கேள்வி:- மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து சமஸ்கிருதத் தைத் திணிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறதே?

தமிழ் ஓவியா said...

கலைஞர்:- கடந்த 1ஆம் தேதி கூட இதைப் பற்றி நான் விரிவாகத் தெரிவித்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உள்ளக் கருத்து என்ன என்பதையே உறுதி செய்து கொள்ளாமல், அவருக்குக் கீழே உள்ளவர்கள் சமஸ்கிருதத்தைத் திணிக்கின்ற முயற் சியில் தொடர்ந்து ஈடுபட்டுத் தான் வருகிறார்கள்.

என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களின் கல்வித் துறைக்கும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக் கிறதாம். அதில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக என்.சி.இ.ஆர்.டி. இந் தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களில் சமஸ் கிருதக் கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு முன்னோட்ட ஆய்வை மேற்கொள்வதாகவும் கூறப் பட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ் கிருதம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த சமீபத் திய நிலை குறித்த புள்ளிவிவரத்தை உடனடியாக அனுப்ப வேண்டுமென உத்தரவி டப்பட்டுள்ளது.

இதை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்தத் தகவல்களைச் சேக ரித்து விரைவில் அனுப்ப வேண்டுமென்றும் வற்புறுத்தப் பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையை முன்மொழிந்து தமிழ்நாடு அரசின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும், மாநில பள்ளிக் கல்வித் துறைக்கும், மெட்ரி குலேஷன் பள்ளிகள் இயக்குனருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதிலிருந்து மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளுக்கு, தமிழக அரசும் உடன் பாடாகச் செயல்படுவது நன்கு புலனாகிறது.
ஒரு புறம் அய்.அய்.டி. கல்வி நிலையத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை விதித்து விட்டு, மறுபுறம் இந்துத்துவ அரசியலை, நகர்த்துவதற்கேற்ப, சமஸ்கிருதத் திணிப்பைச் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருவதையும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத சமஸ்கிருத மொழித் திணிப்புக்கும், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் தடைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, அதைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ் ஓவியா said...

மேட்டூர் அணைத் திறக்க இயலாதாம்!

கேள்வி :- குறுவைச் சாகுபடிக்கு இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- இந்தப் பிரச்சினை குறித்து கடந்த மாதம் 10ஆம் தேதியன்றே விரிவான ஓர் அறிக்கை யைக் கொடுத்திருந்தேன். அந்த அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சி 2011ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளுக்கு எந்த அளவுக் குப் பாதகங்களையும், தொல்லைகளையும் தர முடியுமோ அந்த அளவுக்குத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது என்பதை விவசாயிகள் நன்குணர்வார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12இல் திறப்பு இல்லை என்றும் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்றும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. தி.மு. கழக ஆட்சி யில் ஓரிரு ஆண்டு களில் தவிர்க்க இயலாமல் மேட்டூர் அணை திறப்பு ஜூன் 12 அன்று நடக்காவிட்டாலும், குறுவைச் சாகுபடி பாதிக்காத அளவுக்கு ஒரு சில நாட்களில் திறந்து விடப்பட்டு விடும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2001ஆம் ஆண்டில் மட்டுமே, ஜூன் 12 அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2002 இல் 6.9.2002 அன்றும், 2003 இல் 7.10.2003 அன்றும், 2004 இல் 12.8.2004 அன்றும், 2005 இல் 4.8.2005 அன்றும் காலதாமதமாகத்தான் தண்ணீர் திறக்கப் பட்டது. 2011இல் மீண்டும் அ.தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு, அந்த ஆண்டு மே மாதம் வரை தி.மு.க. ஆட்சி இருந்த காரணத்தால், 2011இல் ஜூன் மாதத்தில் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டிய தற்குப் பதிலாக முன் கூட்டியே ஜூன் 6ஆம் தேதியே குறுவைச் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.
அதற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவதே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியின் போதுதான் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவையை மறந்திட வேண்டிய கொடுமை நிகழ்ந்தது என்றால் அது மிகையல்ல.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 3 இலட்சம் ஏக்கரில் ஆண்டுதோறும் குறு வைச் சாகுபடி நடைபெறும். அதற்கு உதவியாகத்தான் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில், அ.தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்ட காரணத்தினால் குறுவைச் சாகுபடி பொய்த்துப் போனது. பம்ப் செட் வைத்திருக்கும் ஓரளவு வசதியுள்ள விவசாயிகள் மட்டும் குறுவைச் சாகுபடி செய்தனர். அ.திமு.க. ஆட்சியில் 2012ஆம் ஆண்டு 17-9-2012 அன்றும், 2013ஆம் ஆண்டு 2-8-2013 அன்றும், 2014ஆம் ஆண்டு 10-8-2014 அன்றும் தான் மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப் பட்டது. இந்த ஆண்டாவது மேட்டூர் அணை முறை யாக ஜூன் 12 அன்று திறக்கப்பட்டு விடுமா? குறு வைச் சாகுபடி செய்ய இந்த ஆண்டு தயாராகலாமா என்று இலட்சோப இலட்சம் விவசாயிகள் அடுக்கடுக்காக எழுப்புகின்ற கேள்வி களுக்கு உடனடியாக அ.தி.மு.க. அரசு விடையளித்தாக வேண்டும் என் றெல்லாம் கூறியிருந்தேன்.

நான் கடந்த மாதம் கேட்டதற்குத்தான், இப்போது ஜெயலலிதா மேட்டூர் அணையை வழக்கம் போல ஜூன் 12 அன்று திறக்க இயலாது என்று தாமதமாகத் தெரிவித் திருக்கிறார். மேலும் குறுவைச் சாகுபடி இல்லாத நிலையில் ஏதோ உதவி வழங்கப் போவதாகவும் ஜெயலலிதா அறிவித் திருக்கிறார். அவர் அறி வித்துள்ள உதவிகள், அவருடைய கட்சியினருக்குத்தான் பயன்படுமே தவிர விவசாயி களுக்கு உதவாது. எனவே குறுவைச் சாகுபடி செய்ய இயலாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்குப் போதுமான குறிப்பிட்ட நிவாரணத் தொகையினை அரசே நேரடி யாகக் கொடுப்பதுதான் அவர்களுடைய துன்பத்தை ஓரளவுக்கேனும் குறைக்கும் என்பதை மனதிலே கொண்டு, வேதனை யில் உழலும் விவசாயிகளுக்கு உதவிக் கரம் நீட்டிட, அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

- இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.



Read more: http://www.viduthalai.in/page-8/102878.html#ixzz3cNExccNx

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!



அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).
அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம்விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
5.6.2015 திராவிடர் கழகம்



Read more: http://www.viduthalai.in/page-8/102880.html#ixzz3cNFasNCB

தமிழ் ஓவியா said...

ஜூனியர் விகடன் - 10 Jun, 2015

இந்துத்வா சிந்தனைக்கு எதிரானவர் அம்பேத்கர் !
வெடிக்கும் புனித பாண்டியன்

“இந்துத்வா சக்திகள் திடீரென இப்போது அம்பேத்கரை தூக்கிப்பிடிக்கிறார்கள். அம்பேத்கரை மட்டுமல்ல, இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்ட பலரையும் இவர்கள் தங்களுக்குத் தேவையான சமயத்தில் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள். இப்போது, அவர்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் போயிருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள இந்துத்வா சக்திகளுக்கு தலித் மக்களின் ஓட்டு வங்கி தேவைப்படுகிறது. ஆகவே, அதைக் குறிவைத்து அம்பேத்கரை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்கிறார், ‘தலித் முரசு’ புனித பாண்டியன்.

சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. அத்துடன், தடைக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடக்கின்றன. தடையை ஆதரிக்கிற இந்துத்வா அமைப்புகள் பெரியாரை எதிர்த்தும் அம்பேத்கரை ஆதரித்தும் கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள். இது தொடர்பான கேள்விகளோடு புனித பாண்டியனைச் சந்தித்தோம்.



“ஐ.ஐ.டி பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் பல இடங்களில் மறுக்கப்பட்டே வருகிறது. உயர் கல்வித் துறை, நீதித் துறை, ஊடகம் போன்றவற்றில் தலித் மக்களின் பிரதிநிதித்துவம் சொற்ப அளவிலேயே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை வளரவிட்டால், அவர்கள் கேள்வி கேட்கும் நிலையை அடைந்துவிடுவார்கள் என்கிற பயம்தான் காரணம். ஐ.ஐ.டி உட்பட மத்திய அரசின் எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் உயர் சாதி இந்துக்கள். காலச் சூழ்நிலை மாற்றத்தால், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு சிலர் அங்கு படிக்கும் நிலையை அடைந்து இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான், அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம். சிறு குழுவாக இயங்கி வந்த அவர்களை தடைசெய்து இருக்கிறார்கள். அந்த சிறு பொறி இப்போது பெரு நெருப்பாக மாறி, இந்தியா முழுவதும் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் தொடங்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.”

தமிழ் ஓவியா said...

“அம்பேத்கரை இந்து மத இயக்கங்கள் முன்னிலைப்படுத்துவது ஏன்?”

“பிரித்தாளும் சூழ்ச்சிதான் மதவாத சக்திகளின் கொள்கை. அதன்படி, இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களும் ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து இருக்கிறார்கள். தங்களை எதிர்ப்பவர்களை அழிக்க முடியாவிட்டால், அவர்களை தங்களுக்கான அடையாளமாக மாற்றிக்கொள்வதுதான் இந்துத்வவாதிகளின் தந்திரம். இப்படித்தான், ஒரு காலத்தில் புத்தரையும் உள்ளிழுத்தார்கள். இப்போது அம்பேத்கரை உள்ளிழுக்கப் பார்க்கிறார்கள்”

“அம்பேத்கர் பெளத்த மதத்துக்கு மாறியதையே மாற்றி, அதுவும் இந்துமதத்தின் ஓர் அங்கம்தான் என்று சொல்கிறார்களே?”

“இது அம்பேத்கர் சிந்தனையை மறைக்கும் தந்திரம். ‘இந்து மதம் மிகக்கொடூரமாக மாறியிருக்கிறது. அதில் சமத்துவம் இல்லை. கெடுவாய்ப்பாக நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால், இந்துவாக சாகமாட்டேன்’ என்று பிரகடனப்படுத்தி பெளத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். அவர் ஏன் கிறிஸ்தவ, இஸ்லாம் மார்க்கங்களை தழுவவில்லை என்பதற்கும் காரணம் தெரிவித்திருக்கிறார். அவை இரண்டும் இந்தியாவில் தோன்றியவை அல்ல. எனவே, அவற்றுக்கு சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பெளத்தம் என்பது வேத மதத்தை முற்றாக நிராகரித்து, சமத்துவ நெறிகளின் மீது கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்து மதத்தில் இருக்கும் சாதி, மத வேறுபாடுகளைக் களைய சமத்துவம்தான் சரியான கொள்கை என்று சொல்லி 10 லட்சம் மக்களுடன் பெளத்தத்தைத் தழுவினார்.”

தமிழ் ஓவியா said...

“அம்பேத்கர் சமஸ்கிருதத்தைப் படிக்கச் சொன்னதாக சொல்கின்றனரே?”

“எப்போது அவர் அப்படிச் சொன்னார் என்பதை இந்துத்வா வாதிகளால் காட்ட முடியுமா? அவரது ‘தீண்டத்தகாதோர் யார்?’ நூலில், ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தமிழ்தான் அன்றைய காலத்தில் பேசப்பட்டது. அப்போது வாழ்ந்தவர்கள் நாகர்கள். அவர்கள்தான் திராவிடர்கள். அன்று மதம் என்ற ஒரு கருத்தே தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில் இருந்தது.ஆனால், ஆரியர்கள் வந்தபிறகு அவர்கள் சமஸ்கிருதத்தில் வேத, உபநிடதங்கள் எழுதி மதத்தை வளர்த்தார்கள். சமஸ்கிருத ஆதிக்கத்தால் தமிழ் அதன் எல்லையை சுருக்கிக்கொண்டு தென்னிந்தியாவில் மட்டும் பேசப்படும் மொழியாயிற்று’ என்று அம்பேத்கர் சொல்லி உள்ளதை இவர்கள் ஏற்பார்களா?”

“தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் இல்லையா?”

“நிச்சயமாக இல்லை. பிரம்மாவின் தலை, தோள், வயிறு, கால்களில் இருந்து பிறந்தவர்கள்தான் பிராமண, வைசிய, சத்ரிய, சூத்திரர்கள் என்கிறது சதுர்வர்ணம். அப்படிப்பார்த்தால், தலித் என்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கு பிறந்தார்கள் என்ற குறிப்பு எங்குமே இல்லை. அதனால்தான், அவர்கள் எல்லா காலங்களிலும் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், தலித் எப்படி இந்துவாக முடியும்? சூத்திரர்கள் பிரம்மனின் காலில் இருந்து தோன்றியவர்கள். அவர்களையும் தங்கள் உடலுழைப்பு வேலைகளுக்காக மட்டுமே இந்து மதம் பயன்படுத்திக்கொண்டது. ஆக, அவர்களும் இந்துக்கள் அல்ல. ஆனால், இந்தியாவில் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் தாங்கள் மதச் சிறுபான்மையினராகப் போய்விடக்கூடாது என்பதற்காக உயர்சாதி இந்துக்கள், மற்ற மதத்தை எதிர்க்க தலித்களையும் இந்துக்கள் என்று மாற்றி பெரும்பான்மை இந்து நாடு என்று திரிபு வாதம் செய்கிறார்கள்.”



“பெரியாரை, அம்பேத்கருடன் இணைத்துப் பேசுவதே தவறு என்று சொல்கிறார்களே?”

“பெரியாரை ‘தலித் விரோதி’ என்றும் அம்பேத்கரை ‘தேசியவாதி’ என்றும் பிரிப்பதே மிகமோசமானது. அவர்கள் இருவரும் சாதி ஒழிப்பு என்ற லட்சியத்துக்காகப் போராடியவர்கள். அம்பேத்கரை உள்ளிழுத்து பெரியாரை புறந்தள்ள முடியாது. ஏனெனில், அம்பேத்கர் நூறு பெரியாருக்கு சமம். தலித் மக்களுக்கான சுயமரியாதைப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். ‘தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிந்ததால்தான் துணி விலை ஏறியது’ என்று பெரியார் எங்குமே சொல்லவில்லை. அவர்கள் ரவிக்கை அணிய எங்கள் போராட்டமே முக்கியக் காரணம் என்று பெருமையாகச் சொன்னார். ஆனால், வழக்கம் போல ஆதிக்க சக்திகள் அதைத் திரித்து கதை கட்டிவிட்டார்கள். தமிழகம், பெரியாரின் மண். அந்த வெறுப்புதான் அவரைப் பற்றி இப்படி எல்லாம் பேசவைக்கிறது. இதன்மூலம் பெரியாரும் அம்பேத்கரும் தமிழ் மண்ணின் கனல் குறையாத நெருப்புத் துண்டங்கள் என்பதை உணர முடிகிறது!”

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்

தமிழ் ஓவியா said...

மழைக்கு யாகம் வளர்க்க சொன்ன பொறியாளருக்கு அறிவிக்கை


சென்னை, ஜூன் 8 தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. அதன் படி இந்தாண்டு குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே திறந்து விட முடியும். ஆனால், தற் போது மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 72.64 அடியாக உள்ளது. இத னால், குறுவை சாகு படிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் மண்டலத்திற்குட்பட்ட 30 உபகோட்ட அலுவல கத்திற்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பிலும் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயி லில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில் களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அரசே அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கை பரப்பும் வகையில் அரசு அதிகாரி களே யாகம் நடத்திய தற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொதுப் பணித்துறை தலைமை அறிவுரை இல்லாமல் தலைமை பொறியாளர் தன்னிச்சையாக யாகம் நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த அதி காரியிடம் விளக்கம் கேட்டு பொதுப்பணித் துறை தலைமை அறி விக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை திருச்சி மண்டலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகு படிக்கு, தண்ணீர் திறக் கப்படவில்லை. இந் நிலையில், திருச்சி மண் டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களில் யாகம் நடத்த கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது. இதற்கு 15 நாட் களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப் பது குறித்து ஆலோசிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102907.html#ixzz3cThqSR9C

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ள லாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத் துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரி யராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட தடையை நீக்க இணையத்தின் வாயிலாக வலியுறுத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள்


சென்னை ஜூன் 8 கல்வியாளர்களாக, ஆராய்ச் சியாளர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக் களாக உள்ள ஏராளமானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி. இயக்குநருக்கு பன்னாட் டளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி இயக்குநருக்கு கோரிக்கையை விளக்கி கடிதம் அனுப்பினார்கள். www.change.org எனும் தளத்தின் வாயிலாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் 100, 200 எனத் தொடங்கி பன் னாட்டளவில் உள்ள சமூக நீதிப் பற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய் 7.597பேர் என்கிற அளவிலான எண்ணிக்கையினர் இணை யத்தில் இந்தத் தளத்தில் மட்டும் பதிவு செய் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் ஏராளமானவர்கள் அவரவர் முகநூல் பக்கம் மட்டுமன்றி புதிதாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்று டில்லி, மகாராட்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது. டிவிட்டரிலும் சென்னை அய்.அய்.டி. பக்கத்தில் அவ்வப்போதைய தகவல்கள் பரிமாற்றம் இருந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊண் உறக்கம் இன்றி சமூக நீதிக்களத்தில் இறங்கிய மறவர்கள் ஏராளமானவர்கள் களம் கண்டனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102908.html#ixzz3cTiHBBtz

தமிழ் ஓவியா said...

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?



மோடி செய்த 20 சாதனைப் பணிகள் என்ன என்று தகவல் உரிமைஅறியும் சட்டத்தில் கேட்டபோது பிரதமர் ஆற்றிய பணிகுறித்த எந்த விவரமும் எங்களிடம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஒர் ஆண்டு முடிந்துவிட்டது, பாஜக தலைவர் களும் அமைச்சர்களும், நாடெங்கும் கூட்டம் போட்டு ஏழைமக்களுக்காக 20 சாதனைத் திட்டங்கள் நாங்கள் கொண்டுவந்துவிட்டோம். இதுதான் மோடியின் சாதனைகள் என்ற பெயரில் பல்வேறு பொய் கதைகளைப் பேசி தேர்தல் பிரச்சாரங்கள் போல் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்; மே மாதம் 26-ஆம் தேதி மதுராவில் நடந்த கூட்டத்தில், மோடியும், தன் பங்கிற்கு தனது முதுகில், தானே தட்டிக்கொண்டார். அப்படி மோடி என்னதான் செய்துவிட்டார் என்ற உண்மையை அறிந்துகொள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு, மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டு ஆகிவிட்டது, மக்களுக்காக பிரதமர் செய்த பணிகள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டுத்தாருங்கள் என்று கேட்டிருந்தார். அதற்குப் பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் பிரதமர் பணி குறித்த விவரம் இதுவரை எங்களிடம் வர வில்லை. பிரதமர் பணிகள் குறித்த விவரங்களை எல்லாம் சேகரித்து வைப்பது எங்கள் பணியல்ல, அதேபோல் பிரிவு 6(3)-ன் கீழ் தனிப்பட்ட ஒருவருக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் கிடையாது என்று பதில் அனுப்பி இருந்தது. இதுகுறித்து அகமதாபாத்தைச் சேர்ந்த, தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு அனுப்பிய நபர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, பிரதமரின் ஓராண்டு நிறைவை ஒட்டி அவர் மக்களுக்காக என்ன என்ன பணிகளைச் செய்துள்ளார்? இனிமேல் எது மாதிரியான திட்டங்களை நிறைவேற்ற உள்ளார்? என அறிந்து கொள்ள விவரம் கேட்டு பிரதமர் அலுவலகத் திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதியிருந்தேன்.

ஆனால், பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதிலோ ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தது, மே 5 ஆம் தேதியிட்டு வெளிவந்த பிரதமர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி அம்புஜ் சர்மா என்பவர் எழுதிய பதில் கடிதத்தில் உங்களின் கேள்விகளுக்கான பதில்கள் எங்களிடமில்லை என்று வந்துள்ளது. மோடியின் ஓராண்டு ஆட்சி குறித்து ஊடகங்கள் புகழ்ந்துகொண்டு இருக்கும் போது பிரதமர் அலு வலகமே எங்களிடம் விவரம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது, மோடியின் ஆட்சியின் நிலை என்ன என்பதைத் தெளிவாக காட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலகத்திற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை, பிரதமர் எந்த நாட்டிற்குச் செல்கிறார் என்பது கூட தெரியாமல் பத்திரிகை செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றன. பிரதமர் தனது அலுவலக வேலைகளைத் தவிர மற்ற அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பதையே முக்கியமான பணியாகக் கொண்டு இருக்கிறார். இதனால் கேபினெட் அமைச்சரவையின் பணியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன என்று கூறியிருந்தார். இதே போல் லண்டனில் இருந்து வெளிவரும் தி எகனாமிஸ்ட் என்ற இதழும் பிரதமர் தன்னுடைய பணியை விட்டுவிட்டு மற்ற எல்லா அமைச்சர்களின் பணியிலும் தலையிடுகிறார் என்று எழுதியிருந்தது. இவர்களின் கூற்றை பிரதமர் அலுவலகமும் உண்மை தான் என்று குட்டை உடைத்துவிட்டது. மோடி நிருவாகத்திற்கு ஈடு இணை ஏது? இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களிலேயே தலை சிறந்தவர் என்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இது அர்ப்பணம்!

சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும்? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? குறிப்பிடத்தகுந்த சாதனைகளை மோடி அரசு செய்திருந்தால், கண்டிப்பாக பிரதமர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்திருக்க மாட்டாரா?

அந்த அதிகாரி அதற்காகத் தானே பிரதமரின் அலுவலகத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்! ஓராண்டில் சாதனை என்பதெல்லாம் மக்களுக்கு வேதனைப் பரிசே தவிர வேறு என்னவாம்?

குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்த கதை போல நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் தீவிர கவனத்தை செலுத்தி விவசாயி மக்களின் வாழ்வில் விளையாடிப் பார்க்க அல்லவா ஆசைப் படுகிறது. பலன் விவசாயிகளின் தற்கொலைப் பட்டியல் தான் நீண்டு கொண்டே போகிறது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் அதிகம்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே மானியங்களும், கடனுக்கான வட்டி விகித குறைப்புகளும். எல்லாம் தலைகீழ் தான் நரேந்திரமோடி ஆட்சியில்; வேதனைப் பட்டியல் உண்டே தவிர சாதனைப் பட்டியலுக்கு எங்கே போவது?

இதில் ஜனநாயகத்தின் நேர்த்தி இழையைக் காண முடியவில்லை - சர்வாதிகாரத்தின் நெடி அல்லவா அனல் கக்குகிறது.



Read more: http://www.viduthalai.in/page-2/102915.html#ixzz3cTihZ8q8

தமிழ் ஓவியா said...

நல்லா கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

- குடந்தை கருணா

மத்திய அரசின் தலைமை பீடாதி பதியான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும்:

நியாயம் தானே. இந்த நாட்டில், மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவருக்கு இந்த அளவிற்குக்கூட பாதுகாப்பு தர வில்லை என்றால், அதுவும் அவரின் சுண்டுவிரலில் அசையும் அரசில் செய்யவில்லை என்றால், பின் எப்போது யார் செய்வார்கள்?

என்ன மாதிரியான பாதுகாப்பு? இசட் பிளஸ் எனும் பாதுகாப்பு. இந்த பாதுகாப்பில் ஈடுபடும் 190 கமாண் டோக்கள், ஆயுதப்பயிற்சியிலும், ஆயுதம் இல்லாமலும் சண்டையிட பயிற்சி பெற்றவர்கள். இத்தகைய பாதுகாப்பை பெறுவது அரசின் உயர்ந்த பதவியிலிருக்கும் இருவர் மட்டும்தான். அதாவது நமது நாட்டின் குடிஅரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் மட்டும்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படுகிறது.

அரசில் இல்லாத, எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத ஒருவருக்கு இசட் பிளஸ் தரப்படுவது ஒரே ஒருவருக் குத்தான்.அந்த ஒருவர் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்.

எந்த ஆர்.எஸ்.எஸ்.? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே எனும் பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன் என்கிற முறையில் தடை செய்யப்பட்ட அமைப்பு.

அவசர நிலை பிரகடனத்தின்போது தடை செய்யப்பட்ட அமைப்பு.

முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பாபர் மசூதி இடிப்பின் பின் னணியில் செயல்பட்டது ஆர். எஸ்.எஸ். என்கிற முறையில் தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவின் அனைத்து மத போராட்டங்களின் பின்னணியில் இயங்குகிற ஓர் தீவிரவாத அமைப்பு; இதை தடை செய்யவேண்டும் என அமெரிக்காவில் வழக்கு தொடரப் பட்டுள்ள ஓர் அமைப்பு.

இந்த அமைப்பின் தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.

இவருக்கு யாரால் எதிர்ப்பு? ஏன் எதிர்ப்பு? ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார நிறுவனம் என்கிற நிலைப் பாட்டில் அந்த அமைப்பு இருக்கிறது என்று சொன்னால், அந்த அமைப்புக்கு எப்படி அச்சுறுத்தல் இருக்கமுடியும்?

நாம் பழைய வரலாற்று நிகழ்வு களுக்குச் சென்று மிகவும் சிரமப்பட வேண்டாம். நம் காலத்தில் நம் கண்முன் நடந்த நிகழ்வு.

2006-ல் மாலேகானின் நடைபெற்ற குண்டு வெடிப்பு, 2007-ல் சம்சவுதா ரயில் வண்டியில் குண்டு வெடிப்பு, 2007-ல் அஜ்மீர் செராப் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பு என பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்து சிறையில் வைக்கப்பட் டிருந்த சுவாமி? அசீமானந்தா, தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடு பட்டதற்கு எப்படி ஆர்.எஸ்.எஸ்சின் முழு ஆசிர்வாதமும் ஒத்துழைப்பும் இருந்தன; இனியும் இருக்கும் என காரவன் இதழுக்கு அளித்த பேட்டியில் தைரியமாகச் சொன்னாரே. அந்த பேட்டியை முழுக்க படிக்க விரும்புவோர், http://www.caravanmagazine.in/swami-aseemanand-interviews என்ற இந்த இணைய இணைப்பில் தெரிந்து கொள்ள லாம். அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்; இந்த குண்டுவெடிப் பில் அசீமானந்தாவுடன் 31 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதில் பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரத வித் யார்த்தி பரிசத்தின் தேசிய குழு உறுப்பினர் பிரக்யாசிங் தாக்கூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோரும் அடங்குவர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன் பகவத்தின் ஆசியுடந்தான் இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன என பகிரங்கமாக சுவாமி அசீமானந்தா சொன்னதை ஆதாரமாக காரவன் இதழ் வெளி யிட்டது.

மக்களை மதரீதியாக துவேசப் படுத்தி, மத வெறியை ஊக்கப்படுத்தி, இந்தியா என்கிற பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு நாட்டை, ஹிந்து ராஷ்டிரம் எனும் பார்ப்பன மேலாதிக்க பூமியாக மாற்ற திட்டமிடும் அமைப் பின் தலைவர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வருகிறது என்று சொல்லி, தற்போதைய ஆர்.எஸ்.எஸ். ஆசிர் வாதத்துடன் இயங்கும் மோடி அரசு, நாட்டின் உயர்பட்ச பாதுகாப்பை வழங்குவதில் என்ன வியப்பு உள்ளது?

சிறுபான்மை மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால், தன் வீட்டின் கதவை நள்ளிரவிலும் தட்டலாம் என தட் டுங்கள் திறக்கப்படும் பாணியில் சென்ற வாரம் சொன்னவரும் மோடி தான்.

இப்போது அவர்களுக்கு யாரால் ஆபத்து எனக் கருதும் ஓர் அமைப்பின் தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படும் என சொல்பவரும் மோடி தான்.

நல்லா கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்.



Read more: http://www.viduthalai.in/page-2/102920.html#ixzz3cTiqv0MO

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)



Read more: http://www.viduthalai.in/page-2/102914.html#ixzz3cTjAQt00

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம்: கலைஞர் வரவேற்பு



சென்னை, ஜூன் 8_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் _ பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று இன்று (8.6.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:_

31.-5.-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - மொட்டைக் கடிதத்தின் காரணமாக,மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறு வனம் தற்போது போராட் டக் களமாக மாறியுள்ளது. எனவே இந்தப் பிரச் சினையில் உடனடியாக பிரதமர் அவர்கள் நேரடி யாகத் தலையிட்டு, சென் னையில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் அமைதி யையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலை நாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். என் னைப் போலவே தமிழகத் தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்க ளும் இது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந் தனர். மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி அந்த நிறுவன இயக்குனருக்கு நேரடியாகக் கடிதமே எழுதியிருந்தார். தி.மு. கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. இவைகளின் விளைவாக நேற்றைய தினம் அய்.அய்.டி. நிர்வா கம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையினை நீக்கியதோடு, சுயேச்சையான அமைப் பாக அது செயல்பட அனு மதி அளித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அய்.அய்.டி. நிர்வாகத்தின் இந்த முடி வினை தி.மு. கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த, போராடிய அனைவருக்கும் நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



Read more: http://www.viduthalai.in/page-4/102941.html#ixzz3cTja2LN8

தமிழ் ஓவியா said...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்



உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப் படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அ

வர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரை யானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந் திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம், இதை உறுதி செய்ய வேண்டு மானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே தக்காளியை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.



Read more: http://www.viduthalai.in/page-7/102921.html#ixzz3cTjquTRn

தமிழ் ஓவியா said...

எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை



பச்சைக்கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதை யர்கள். கீரை வகைகளில் இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக்கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கைமரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேக வைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம் , உடல் சூடு, கண் நோய் , பித்த மூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக்கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது.

இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவே தான், இக்கீரைக்கு விந்துகட்டிஎன்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளிசேர்த்தோ சமைப்பது நலம்.முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு , தாமிரம்,சுண்ணாம்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப்பட்டை, உலோகச்சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்து. முருங்கைக்காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே.

இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ முருங்கைகாயை உணவாக உபயோகித் தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.

வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.

இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கைவிதைக்கு முதலிடம் தரலாம். முருங்கைமரத்தி லிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. இந்த மரத்தின் வேர் மற்றும்பிசின் சம் பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல்தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப்பூ வெப்பத்தை உண்டு பண்ணக் கூடியது தான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப்பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப்பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப் பிணி களுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத்தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும்ப தார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.



Read more: http://www.viduthalai.in/page-7/102922.html#ixzz3cTjyHsWw

தமிழ் ஓவியா said...

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

மனிதன் ஆரோக்கி யமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

தமிழ் ஓவியா said...

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப்பில் பகுத்தறிவுப் பணிகளை விரைவுபடுத்தவேண்டும்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜூன் 8_ பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2015 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு பகுத்தறிவாளர் கழகத் தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர்கள் தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, தஞ்சை மா.அழகிரிசாமி, மாநில துணைத்தலைவர்கள் வட சேரி வ.இளங்கோவன், கோ.ஒளிவண்ணன், அண்ணாசரவணன், பேரா.திருமாவளவன், ச.குரு சாமி(கே.டி.சி), மாநில பொருளாளர் சி.தமிழ்ச் செல்வன்,

மாநில அமைப்புச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட ப.க.தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் தங்களது பங்களிப்பும் குறித்தும் எடுத்துரைத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தனது வழிகாட்டுதல் உரையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மதச்சார்பின் மைக்கு எதிராக நடக்கும் மத்திய_ மாநில அரசு களின் போக்குகளைக் கண்டித்தும் கருத்தரங்கு களை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பல் வேறு இடங்களில் நடத்தவேண்டும்.

நமது இயக்க கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்ல, பெரியார் நகர்வு புத்தகச் சந்தைகளை ஊர்தோறும் நடத்துகின்றோம். இந்த நகர்வு புத்தகச் சந்தைகள் நல்ல முறையில் நடைபெற திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பு களையும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கள் செய்தல்வேண்டும்.

பெரியார் ஆயிரம் வினா_ விடைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பாக ஆக்க நடவடிக்கை (core) குழு ஏற்படுத்தி, அப்போட்டிகள் செம்மையாக நடைபெறச் செய் யுங்கள். நமது புத்தக வெளியீடுகள் - புத்தக அறிமுக நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி கணக்குகளை இந்த மாத (ஜூன் 30) இறுதிக்குள் ஒப்படையுங் கள்.

அறிவியல் மனப்பான்மை வளர நமது தொடர் பிரச்சாரங்கள்தான் அடிப்படை, அதனைத் தொடர்ந்து நிகழ்த்துங்கள் என்று அறிவுறுத்தி னார்.

கீழ்க்கண்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரை யாடலில் விவாதிக்கப்பட்டன.

1) பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப் பாளர்கள் மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும். மண்டல அளவில் நாலைந்து மாவட்டங்களை இணைத்து கலந்துரை யாடல் நடத்தி அமைப்புப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். அமைப்புகள் இல்லாத கழக மாவட் டங்களில் அமைப்புகள் ஏற்படுத்தவேண்டும்.

2) உறுப்பினர் சேர்க்கை பணி மேற்கொள் ளப்படவேண்டும். உறுப்பினர் படிவங்கள் மாவட் டப் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு உறுப் பினர் சேர்க்கை முழுமைப்படுத்தப்படவேண்டும்.

3) இணையதளப் பிரச்சாரத்தில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்_அப் போன்றவற்றில் பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணி இன்னும் அதிகளவில் விரைவுபடுத்தப்படவேண்டும்.

4) மாநிலப் பொறுப்பாளர்களின் பொறுப்புகள், பணிகள் வரையறுக்கப்படல் வேண்டும். செய்யப் பட்ட பணிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்படல் வேண்டும்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுத லில் மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டன.

பகுத்தறிவாளர் கழக அமைப்புக் குழு

மா.அழகிரிசாமி _ இரா.தமிழ்ச்செல்வன்

ஊடகம், செய்தி ஊடகம் - இணையதளம்

வீ.குமரேசன் _ கோ.ஒளிவண்ணன்,

புத்தகங்கள் அறிமுகக்குழு

தகடூர் ஜெ.தமிழ்ச்செல்வி, வடசேரி வ.இளங் கோவன், அண்ணா சரவணன்.

அறிவியல் மனப்பான்மைக்குழு

டாக்டர் சி.தமிழ்ச்செல்வன், மு. ந. நடராசன்

உறுப்பினர் சேர்க்கைக்குழு

வா.நேரு _ வீ.குமரேசன்

பெரியார் ஆயிரம் ஆக்கக் குழு

வா.நேரு, மா.அழகிரிசாமி, பேரா. திருமாவளவன், க.நல்லதம்பி, ச.குருசாமி (கே.டி.சி)

தகவல் தொடர்பு குழு

மா.அழகர்சாமி, ஆ.முனியன்

மாவட்டங்கள் கலந்துரையாடல் கூட்டம்

இடம்: மத்தூர், நாள்: 28.06.2015 காலை 10 மணி- கலந்துகொள்ளும் மாவட்டங்கள்: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு

இடம்: சேலம் நாள்: 28.06.2015 மாலை 5 மணி- பங்கேற்கும் மாவட்டங்கள் : சேலம், ஆத்தூர், மேட்டூர், நாமக்கல், ஈரோடு, கோபி.



Read more: http://www.viduthalai.in/page-8/102929.html#ixzz3cTkPprea

தமிழ் ஓவியா said...

மேகி விற்பனை அதிகரிப்புக்கு சோம்பல் மிகுந்த இளம் தாய்மார்களே காரணமாம் பாஜக பெண் எம்.எல்.ஏ-வின் பேச்சால் பரபரப்பு

புதுடில்லி, ஜூன் 8_ மேகி விற்பனை அதி கரிக்க சோம்பலான தாய் மார்களே காரணம் என்று கூறிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பேச்சு சர்ச்சை யாக வெடித்துள்ளது.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட ரசாயனம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இந்தி யாவில் பல்வேறு மாநி லங்களில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த நட வடிக்கையை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ உஷா தாகூர் வரவேற்றுள்ளார்.

இன்றைய தலைமுறை தாய்மார்கள் சோம்பல் காரணமாக விரைவு உணவு நூடுல்ஸ்களை குழந்தைகளுக்குத் தருவ தாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே மேகி போன்ற உணவு பொருள் களின் விற்பனை அதி கரித்து இருப்பதாக தெரி வித்தார்.

மக்கள் மீதான அக் கறை காரணமாகவே மேகிக்கு பாஜக அரசு தடை விதித்திருப்பதாக கூறிய உஷா தாகூர், மேகி போன்ற விரைவு உணவு களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் இத்தகைய பேச்சு சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள்  சட்டமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து ஏதா வது உளறி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நட வடிக்கை தொடர்கதை யாகி வருகிறது.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்மீது புதிய கரிசனம் ஏன்?

செவ்வாய், 09 ஜூன் 2015


அம்பேத்கரின் மீதான காவிகளின் கரிசனம் மிகவும் வஞ்சகமானது.

கொஞ்சம் பழைய கதை. 11ஆம் நூற்றாண்டு வரை அதாவது `பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் சுப்பிரமணியன் கிடையாது முருகன் மட்டுமே உண்டு. வேலவன் என்றும் அவனை அழைப்பர். குறிஞ்சி நிலக்கடவுள் அவர். அவருக்கு ஒரே மனைவி வள்ளிக்குறத்தி. பின்னர் வடநாட்டு சுப்பிரமணியனையும் முருகனையும் இணைத்து கதையுண்டாக்கி; சுப்பிரமணியன் மனைவி தெய்வானையை முருகனுக்கும் மனைவி யாக்கி; வள்ளிக்குறத்தியை சக்களத்தி ஆக்கி விட்டார்கள்; அரவணைத்தும் தோளில் கைப் போட்டும் அழித்தொழிப்பதில் அவர்கள் வல்லவர்கள். சரி ! நாம் ஏமாளியானால்; தூங்கினால் அவர்கள் தொடையில் கயிறென்ன வடமே திரிப்பார்கள். அம்பேத்கர் பெயரை மகாராஷ்டிர பல்கலை.க்கு வைத்தபோது கொந்தளித்த காவிக்கூட்டம் இன்று திடீரென உரிமை கொண்டாடுவது ஏன்?

வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி எனும் பிராமணிய அறிவுஜீவி பெரியாரும் - அம்பேத்கரும் தவறான தலைவர்கள் எனப் பேசியும் எழுதியும் வந்தார். கீஷீக்ஷீலீவீஜீஜீவீஸீரீ திணீறீமீ நிஷீபீ என அம்பேத்கரை அசிங்கப்படுத்தி ஒரு நூலே எழுதினர். தலித் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. முற்போக்காளர்கள். இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். சங்பரிவார் அந்நூலைத் தூக்கிச் சுமந்தது. இப்போது திடீரென அதையெல்லாம் நாம் மறந்திருப்போம் எனக் கருதி வாயினிக்கப் பேசி வஞ்சக நாடகமாடுகின்றனர். அம்பேத்கரை ஒரு சாமியாக்கி விட்டு அவரது கொள்கைகளைப் புதைப்பதுதான் நோக்கம். இதை உணர்க! சரி! வைதீகத்தை - சனாதனத்தை எதிர்த்துக் கிளம்பிய சமணத்தையும், புத்தத்தையும் தனது ஒரு பகுதி என இந்துத்துவா வாதிடுகிறது. நம் கேள்வி சீனா, பர்மா, ஜப்பான் உள்ளிட்ட நாடு களில் புத்தமதத்தை பின்பற்றுவோரே அதிகம்; அப்படியானால் அவர்கள் இந்துக்களா? அப்படிச் சொன்னால் உலகம் கைக்கொட்டிச் சிரிக்காதோ?

அம்பேத்கர் நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன் என சபதமிட்டு புத்தமதத்துக்கு மாறினாரே! அவரை இந்துத்துவ சக்திகள் இப்போது உரிமை கொண்டாடுவது வஞ்சக நோக்கின்றி வேறென்ன?

அம்பேத்கர் சிலை இந்தியா முழுவதும் ஊருக்கு வெளியேயும் - சேரிப்புறத்திலும் மட்டும் அமைக்கப்பட்டு இருப்பதேன்? ஆதிக்க வெறியும் மேல்சாதி ஆணவமும் இன்னும் நீடிப்ப தால்தானே? பெரியாருக்கும் - அம்பேத்கருக்கும் மார்க் சிஸ்ட்டுகளுக்கும் கோட்பாடு ரீதியாக சில மாறுபாடு உண்டு ஆனால் அவை முரண்பாடல்ல; பகையல்ல; ஒருவருக்கொருவர் எதிரியல்ல; இன்னும் வலுவாக இந்துத்துவாவை எதிர்ப்பது என்பதில்தான் இவர்களுக்குள் போட்டி; இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை விரைந்து கைதூக்கிவிடுவது என்பதில்தான் போட்டி; ஆகவே மித்தரபேதம் கற்பித்து இவர்களை மோதவிட கனவுகாணும் சங்பரிவார் முயற்சி பலிக்காது.

- சுபொஅ

நன்றி: தீக்கதிர் 9.6.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102961.html#ixzz3cZcdMyzb

தமிழ் ஓவியா said...

ராமன் கோயிலைக் கட்டா விட்டால்
அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

மோடியை மிரட்டுகிறது சிவசேனா




மும்பை, மே 9_ ராமர் கோவில் விவகா ரத்தை வைத்து தான் இந்துக்களின் நம்பிக் கையைப் பெற்று ஆட் சிக்கு வந்தீர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ராமர்கோவில் கட்ட காலம் தாழ்த்தினால் மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கிடுவார்கள், ஆகவே மன்கி பாத் நிகழ்ச்சியில் ராமர் கோவில் விவகாரத் திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும் என்று சிவசேனா அதி காரப் பூர்வ ஏடான சாம்னா தனது தலை யங்கத்தில் குறிப்பிட் டுள்ளது. மோடி தன்னுடைய ஓராண்டு ஆட்சியில் நடந்த தோல்விகளை மறைக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் தனது ஆட்சியின் மிக முக்கிய பிரச்சனை யான இந்துத்துவா மற் றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித் தும் பேசியிருந்தார். அதில் எனது ஆட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள பாதையில் தான் செல் கிறது. சிறுபான்மையின ருக்கு எந்த வடிவில் பாதிப்பு நிகழ்ந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டேன். சிறுபானையினர் இரவு 2 மணிக்குக் கூட என்னை நேரில் சந்தித்து தங்களது பிரச்சனை களைக் கூறலாம் என்று தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போல் பேசியிருந்தார். மோடியின் சிறுபான்மையினர் மீதான இந்தக் கரிசனப் பார்வை பலரது புருவங்களை உயர்த்தியது. ஆனால் மோடியின் பேச்சு எல் லாம் நடிப்பு தான் என்று சிவசேனா தலைமை தங்களது நாளிதழான சாம்னா மூலமாக மறை முகமாக காட்டிக் கொடுத்துவிட்டது. சாம்னாவின் தலை யங்கத்தில் எழுதியதன் விபரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கான மோடியின் பேச்சு குறித்து பலர் வியப்படைந்துள் ளனர். ஆனால் மோடி யின் பேச்சில் உள்ளார்ந்த விளக்கம் இந்துத்துவாதி களுக்கு மாத்திரமே தெரி யும், மோடி மறைமுகமாக மதம்மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சிறு பான்மை மதத்தலைவர் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். இது இந்து நாடு; இங்கு வேறுமதத் தலைவர்களுக்கு வேலை யில்லை, வேறு மதத்தலை வர்களுக்கு மோடி கசப் பான மருந்தைக் கொடுத் துள்ளார். முக்கியமாக பிரிவினை பேசும் காஷ்மீர் தலைவர்களுக்கும், இங் குள்ள ஒவைசி போன்ற வர்களுக்கும் தான் மோடியின் இந்த பேச்சு கசப்பான மருந்தாகும். அவர்கள் தான் கவலைப் படவேண்டும், இந்துக் களின் மடியில் கன மில்லை ஆகையால் இந் துக்கள் மோடியின் பேச்சால் பாதிக்கப்படப் போவதில்லை, பொதுச் சிவில் சட்டம் குறித்த சரியான பாதையில் மோடி சென்று கொண்டு இருக்கிறார். இது அவரது தற்போதைய நடவடிக்கை யில் தெரியவராது ஆனால் அவர் இதைச் செய்வார் என்று சிலருக்கு மாத்தி ரம் (சங்கப் பரிவாரத் தலைவர்கள்) தெரியும். காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் மோடிக்கும் பாஜக தலை வர் அமித்ஷாவிற்குமி டையே கருத்துவேறுபாடு கிடையாது. எதை எப் போது செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கத் தான் பாஜக தலைமையி னால் ஆன ஆட்சிக்கு முழு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். ராமர் கோவில் விவ காரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பத்துவங்கி யுள்ளது. இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மக்கள் ராமர்கோவில் கட்ட முழு விருப்பம் தெரிவித்து மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மோடிக்கு மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது நன்கு தெரியும், ஆகவே ராமர் கோவில் விவகாரத்தை வாஜ்பாய் அரசைப் போல் பரணில் தூக்கிப் போட முடியாது. அல்லது அதை மீண்டும் பேச்சு வார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்க முடியாது. ஒராண்டில் மோடிக்குப் பழைய தவறுகளைத் திருத்தவே நேரம் சரியாகப் போய் விட்டது. இனிவரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களின் எண்ணம் ராமர் கோவில் தான்; அதை மோடி தலைமையினால் ஆன அரசு விரைவில் கட்டித் தர வேண்டும். அதே நேரத்தில் மோடி வானோலியில் பேசும் நிகழ்ச்சியான மன் கி பாத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்துப் பேசவேண்டும் காலம் தாழ்த்தினால் மக்கள் மோடியை வெறுக்கத் துவங்கிவிடுவார்கள், அதன் பிறகு வாஜ்பாய் அரசுக்கான அதே நிலைதான் மோடிக்கும் ஏற்படும் என்று அந்த தலையங்கத்தில் எழுதி யுள்ளார்கள்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102957.html#ixzz3cZcuZg4w

தமிழ் ஓவியா said...

தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.
(குடிஅரசு, 19.2.1944)



Read more: http://www.viduthalai.in/page-2/102951.html#ixzz3cZdNOIL4

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் பற்றிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை


விடுதலை நாளிதழில் 25.5.2015இல் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையான சர்க்கரை நோய் பற்றிய சில புரட்டுகளுடன் உண்மை களும் என்ற கட்டுரை மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தது. முழு வதுமாக படித்த போது சிறந்த மருத்துவர் கூட தர முடியாத அருமையான அறிவுப்பூர்வமான குறிப்புகளாக இருந்தது. இன்றையக் காலக்கட்டத்திலே பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் தவிர்க்க முடியாததாகி விட்ட சூழ்நிலையில் அது வந்த பின் எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது குறித்தும் - சர்க்கரை நோய் பற்றிய புரட்டுகளை விளக்கமாக புரட்டு எண் 1 முதல் 5 வரை புரட்டு - உண்மை என்று அருமையான விளக்கமாக தெளிவுரை கிடைத்தது. எனக்கும் type-2 சர்க்கரை இருந்தாலும் மருத்துவரின் மாத்திரைகள், நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய வற்றால் கட்டுக்குள் வைத்திருந்தாலும், ஆசிரியர்கள் கட்டு ரைகள் எனக்கு மட்டுமல்ல பல்லா யிரக்கணக்கான வாசகர்களுக்கும் இன்றைய கால கட்டத்தினை பயன் தரத்தக்கதாய் அமைந்துள்ளது.

விடுதலை 26.5.2015 ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந் தனைக் கட்டுரையில் மவுனம் அமைதி யின் விழுமிய சிந்தனையும் பயனும் என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. அருமையான நூல் கிருஸ்டோபர் அன்சார்டு என்பவர் எழுதியThe Tibetan Art of Living  புத்தகத்திலிருந்து அருமை யான விளக்கங்களை நமக்கு தருகிறார் ஆசிரியர்.

Wise body -- புத்திசாலித்தனமான உடல்
Wise mind -புத்திசாலித்தனமான மனம்

Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை என்ற தலைப்பில் பல செய்திகள் - அதில் மன அமைதி ஷிவீறீமீஸீநீமீ  என்பது அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய மானது என்பதற்கான அரிய விளக்கம் குறித்தும் கட்டுரை முழுவதும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள். ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் மக்களின் - மன இருளைப் போக்கும் பகுத்தறிவுச் சூரியனாக பிரகாசிக்கிறது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- தி.க.பாலு
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3)

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.யில் தடை நீக்கம்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 9_ அய்.அய்.டியில் அம்பேத் கர், பெரியார் மாணவர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டதை கட்சித் தலைவர்கள் வரவேற்றுள் ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தி யில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி

இதற்கு தனது மகிழ்ச் சியை தெரிவித்தார் ராகுல் காந்தி. இந்த விஷ யத்தில் மோடி அரசு, பின் வாங்கியுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் கில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி. சென்னை யில் மீண்டும் அம்பேத்கர்_- பெரியார் மாணவர்  வட் டம் சுதந்திரமான மாண வர் அமைப்பாக செயல் படுவதற்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன். விவா தங்களுக்கும், கருத்துப்  பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

ஆட் சேபணைக்குரிய கருத்துக் கள் பற்றி  விவாதிப்பதற் குக் கூட கல்வி நிறுவனங் களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கவேண் டும். சட்டத்திற்கு உட் பட்டும், கல்வி நிறுவனத் தின்  விதிமுறைகளுக் குட்பட்டும் கருத்துக் களைப் பரிமாறிக் கொள் வதற்கு மாணவர் அமைப்பு களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும்.

நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இளைய தலைமுறைதான். எனவே, அவர்கள் ஆக்கப்பூர்வ மான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது  வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என் பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க  விரும்புகிறேன்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் (த.மா.கா): மாணவர்களின் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் அய்அய்டி  நிர்வாகத்துக் கும் அய்அய்டி அம்பேத்கர் -_பெரியார் வாசகர் வட்ட  நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை யின் முடிவில் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட் டிருந்த தடை   நீக்கப்பட் டுள்ளது. உடன்பாடு ஏற்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும் மாண வர்கள் இனிமேல் படிப் பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற  வேண்டும்.

முத்தரசன்

முத்தரசன் (இந்திய கம் யூனிஸ்ட் மாநில செயலா ளர்): சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த 6 ஆம் தேதி மாணவர் அமைப்பு டன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை  நடத்தி, தடையை விலக்கி, அம் பேத்கர்-_பெரியார் வாசகர் வட்டத்தை மீண்டும் அங்கீகரித்துள்ளது. கருத் துரிமை பாதுகாப்புக்கான ஒன்றுபட்ட போராட்டத் திற்கு கிடைத்த குறிப்பிட் டத்தக்க வெற்றியாகும்.

இப்போராட்டத்தை ஆத ரித்தவர்களுக்கும், பங் கேற்றோர்களுக் கும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது டன், அய்அய்டி நடவடிக் கையை வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. எம்.பி.,யின் மதத் திமிர்வாதப் பேச்சு

சூரிய நமஸ்காரம் பிடிக்கவில்லையா? கடலில் போய் விழுங்கள்!



வாரணாசி, ஜூன் 10_- பிரதமர் நரேந்திர மோடி யின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21- ஆம் தேதி, சர்வதேச யோகா நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது, நாடு முழு வதும் பல இடங்களில் யோகா மற்றும் சூரிய நமஸ் காரம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், சூரிய நமஸ்காரத்துக்கு சில சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதனால், சூரிய நமஸ்கார பயிற்சியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், யோகா பயிற்சியில் ஈடுபடுவது கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள லாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பெயர் போன உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத், சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்களை விமர்சித்து புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாம் வாழ்வதற்கான சக்தியின் ஆதாரமே சூரியன்தான். ஜாதி, மதம், இனம் பார்க்காமல், எல்லோருக்கும் சூரிய கடவுள் ஒளியை அள்ளி வழங்கி வருகிறது. அத்தகைய சூரியனை மதத் துடன் தொடர்புபடுத்தி பார்ப்பவர்களின் மன நிலையை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் சூரிய ஒளியையோ, வெப்பத்தையோ பயன்படுத்தக்கூடாது. வாழ்நாள் முழுவதும் இருட்டறையில் அடைந்து கிடக்கவேண்டும் அல்லது கடலில் போய் விழுந்து மூழ்க வேண் டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

யோகி ஆதித்யநாத், மத பாகுபாட்டை உரு வாக்க முயல்வதாகவும், பேசும்போதெல்லாம் நஞ்சை கக்குவதாகவும் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா தெரிவித்துள்ளார்.

யாரும் தங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என்று சமாஜ்வாடி கட்சி பிரமுகர் கவுரவ் பாட்டியா கூறியுள்ளார்.

இந்தியாவில் நெரிசல் மிகுந்துள்ளதற்கு தீர் வாக நம்மில் பலரை மூட்டை கட்ட பார்க்கிறார் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103013.html#ixzz3cekLoYVK

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற நாட்டில் கல்விக் கூடங்களில் கீதை, சூரிய நமஸ்காரமா?
நீதிமன்றம் செல்லுகின்றன இஸ்லாமிய அமைப்புகள்

புதுடில்லி, ஜூன் 10_  அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பகம் மற் றும் சில சிறுபான்மை அமைப்புகள் ஒன்றி ணைந்து மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனைத்து மத மக்கள் மீதும் கீதை, சூரிய நமஸ் காரம், யோகா மற்றும் வேத சுலோகங்களை நெட்டுரு செய்ய வற்புறுத் துவதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.    அரியானா, மகாராஷ் டிரா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வரு கிறது. இந்த மாநில அரசுகள் ஆட்சிக்கு வந்த உடனேயே இளம்வயதின ரின் கல்வித்திட்டத்தில் இந்துத்துவக் கொள்கை களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றன.    அரியானா மாநில அரசு, தான் ஆட்சிக்கு வந்த உடனேயே அரி யானா மாநிலத்திலுள்ள பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்த்தது. இதனைத் தொடர்ந்து யோகா, சூரிய நமஸ்காரம், மற்றும் வேதங்களில் உள்ள சுலோகங்களை எல்லாக் குழந்தைகளும் கட்டாயம் படிக்கவேண் டும் என்று உத்தரவிட்டி ருந்தது. அரியானாவைத் தொடர்ந்து மகாராஷ் டிராவில் அனைத்து மாந கராட்சிகளுக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதை, ஒரு பாட மாக கட்டாயமாக்கப் பட்டது. மெல்ல மெல்ல அனைத்துப் பள்ளிகளுக் கும் கொண்டு செல்லும் திட்டத்தையும் முன்வைத் துள்ளது.

மகாராஷ்டிரா வில் உள்ள தனியார் பள்ளிகள் அனுமதியின் போது கட்டாயம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத் திற்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப் பட்டது. மேலும் யோகா சூரியநமஸ்காரத்திற்கான தனி வகுப்புகளும் கட்டா யப்படுத்தப்பட்டன. இந்த இரு மாநிலங்களைத் தவிர ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களி லுள்ள பள்ளிகளில் பகவத் கீதை சூரியநமஸ்காரம் கட்டயமாக்கப்பட்டது. இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில் குறிப் பிட்ட மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தாலும் மதம் சார்பான கட்சி ஆட்சியமைந்ததாலும் அரசியல் சட்டம் கூறிய மதச்சார்பின்மை குப்பை யில் தூக்கி எறியப்பட்டது.  இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு மற்றும் சிறு பான்மையினர், மாநில அரசுகளின் இந்த அரா ஜகப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து முஸ்லிம் சட்ட ஆணையத்தின் பேச்சாளர் அப்துல் ரகீம் குரோஷி கூறியதாவது, இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தவரும் அவர்களின் நம்பிக்கைப்படி வாழ உரிமை உள்ளது, முஸ்லிம் கள் அல்லாவை மட்டுமே வணங்குகின்றனர். இது அவர்களின் மதநம்பிக்கை தொடர்பான விவகாரம், ஆனால் சில மாநில அர சுகள் பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்வதையும், பகவத் கீதைப் படிப்பதை யும் கட்டாயமாக்கியுள் ளார்கள்.  இந்தப் பள்ளி களில் முஸ்லிம் கிறிஸ்தவ மற்றும் இதர மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் கல்விகற்கின்றனர். இதைக் கருத்தில் கொள்ளாது மத உணர்வுகளை வேண்டு மென்றே புண்படுத்தும் செயல்களைச் செய்துவரு கிறது.  மாநில அரசுகளின் இந்த செயல்கள் தேசியத் தின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் விதமாக உள் ளது. தேச ஒற்றுமையை யும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல உள்ளோம். நீதி மன்றம் செல்லாமல் இதற் குத் தீர்வு காணமுடியாது. மேலும் நாடு தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்சிந்தனையும்

இதற்குப் பிறகாவது...

செய்தி: திராவிடக் கட்சிகளை யாராலும் அழிக்க முடியாதுதான்; ஆனால், அவர்களே அவற்றை அழித்து விடுவார்கள்.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிறகாவது எந்த ஒரு திராவிடர் கட்சியாவது பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக்கொள்ள நினைத்தால், அவர்கள் தானாகவே அழிந்து விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: தமிழ்நாட்டில் பி.ஜே.பி. பிறக்கும்போதே இறந்துதானே பிரசவமானது.

தமிழ் ஓவியா said...

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் மோடி அரசு: சோனியா குற்றச்சாற்று


புதுடில்லி, ஜூன் 10_ நாட்டு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்துவதற் காக, தனது அமைச்சரவை சகாக்கள்மூலம் அச்சம், பீதி கலந்த சூழலை உரு வாக்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். டில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற காங் கிரஸ் ஆளும் முதல்வர் கள் மாநாட்டில் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: நல்ல நிர்வாகத்தை அளிப்பதிலும், அரசியல் சாசன விதிகளை மதிப் பதிலும் தான் முதன்மை யானவர் என முன்னி லைப்படுத்திக் கொள்ள பிரதமர் மோடி விரும்பு கிறார். அதே வேளையில், வகுப்புவாத வன்முறை களைத் தூண்டும் இழி வான கருத்துகளை தனது அமைச்சரவை சகாக்கள் பலர் பேசுவதை மோடி அனுமதிக்கிறார். இத னால், நாட்டின் மதச் சார்பற்ற கட்டமைப்பு ஏற்கெனவே பாதிக்கப்பட் டுள்ளது. அச்சம், பீதி கலந்த சூழல் திட்ட மிட்டே உருவாக்கப்படு கிறது. மாநிலங்களில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுகள் உருவாக்கி வைத் துள்ள வளர்ச்சிக்கான கட்டமைப்பை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட தாக்குதல் நடத்துவதன் மூலம் பயங்கரமான இரட் டைவேட விளையாட்டு களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. நாடாளுமன்ற விதி முறைகளை ஓரங்கட்டி விட்டு, கற்பனைக்கு எட் டாத அளவுக்கு அதிகாரத் தைக் குவிக்கும் நடவடிக் கையில் மோடி ஈடுபட்டுள் ளார். இதனால், சமூகத் துக்கும், நீதித்துறைக்கும் அச்சுறுத்தல் எழுந்துள் ளது. கல்வி, சுகாதாரம், குடிநீர், கிராமப்புறச் சாலை கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன், தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங் குடியினர் நலன் ஆகிய வற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர் என்ற வகையில், மாநில நலன் தொடர்பான விவ காரங்களில் மத்திய அரசுடன் இணைந்து பணி யாற்றுங்கள். அதேவேளை யில் மக்கள் நலனுக்கு எதிராக மோடி அரசு செயல்படுமானால், காங் கிரஸ்காரர் என்ற வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். திட்டக் குழு கலைக்கப் பட்டதால் காங்கிரஸ் ஆளும் 7 மாநிலங்கள் உள்பட சிறப்புத் தகுதி நிலையில் உள்ள 11 மாநிலங்களுக்குப் பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்குப் போது மான நிதியை ஒதுக்காமல் அவர்கள்மீது சுமைகளை ஏற்றும் அதே வேளையில் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச் சலுகை வழங்குகிறது. உள்நாட்டு அரசியலை வெளிநாடுகளில் பேசுவ தில்லை என்ற பாரம்பரியத் தையும் மோடி உடைத்து விட்டார். 2013- ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு, சேவை வரி மசோதா உள்பட பல்வேறு விவ காரங்களில் தனது முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது என்றார் சோனியா காந்தி.



Read more: http://www.viduthalai.in/e-paper/103018.html#ixzz3cel1D1j9

தமிழ் ஓவியா said...

சங் பரிவார்களுக்குப் பொருந்துமா?


வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறும் 4470 அரசு சாரா நிறுவனங் களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்பது செய்தி.

இது சங்பரிவார் வகை யறாக்களுக்குப் பொருந்துமா?



Read more: http://www.viduthalai.in/e-paper/103015.html#ixzz3celCCQe0

தமிழ் ஓவியா said...

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும், ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது அரிச்சுவடி படிக்காமல், பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.

_ (குடிஅரசு, 9.2.1936)



Read more: http://www.viduthalai.in/page-2/103022.html#ixzz3celQRcYX

தமிழ் ஓவியா said...

செல்லக்கிளி (எ) சு.அறி வுச்செல்வன் _ வ.சந்தியா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்து பேசியதாவது:_ மணமகன் செல்லக்கிளி பழகுமுகாம் மாணவர் அவர் இரண்டு முறைதான் வாய் திறப்பார் ஒன்று கொட்டாவி விடும் போது இரண்டாவது சாப் பிடும்போது. பழகு முகாம் நிறைவில் அவருடைய பேச்சை நிறுத்த முடியாத அளவு பேசும் திறனை பழகு முகாம் வளர்த்தது என் பதை நினைவுபடுத்தி தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் உழைப்பால் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகளை தொடங்கி வைத் ததால் நாம் இன்றைக்கு நமது செல்லக்கிளி (எ) அன்புச்செல்வன் - மண மகள் வ.சந்தியா ஆகியோர் பட்டயப்படிப்பை முடித்து உள்ளனர். இந்த அளவுக்கு நாம் உயரக் காரணம் தந்தை பெரியார் பெற்று தந்த இடஒதுக்கீட்டால் என்பதை மறக்கக்கூடாது. இது சுயமரியாதைத் திரும ணம் இதுவே புரோகிதத் திருமணமாக இருந்தால் பார்ப்பான் சொல்லும் மந்திரம் நமக்கு ஒன்றும் புரியாது. மணமக்களுக்கும் ஒன்றும் புரியாது. தீ குண் டம் வளர்த்து எண்ணெயை ஊற்றி புகை கிளப்பி மண மகள் கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கு எற்பாடு செய்வார். மணமகளை கேவலப்படுத்தும் வகையில் மந்திரங்களை கூறுவார். இது போன்ற சுயமரியாதை திருமணத்தில் அனைவருக் கும் புரியும்படியான நமது தாய் தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்து மணமக்கள் உறுதிமொழி கூறி மாலை மாற்றி கொண் டனர். இது போல ஒவ் வொரு தமிழன் இல்லத்தி லும் நடைபெறும் விழாக் களை நம்முடைய பெரி யோர்கள், பெற்றோர்கள் முன்னின்று நடத்துங்கள் தமிழன் இல்ல நிகழ்ச்சிக்கு பார்ப்பனனை அழைக் காதீர்கள் என்று கூறி மண மக்கள் எக்காரணத்தை கொண்டும் பெற்றோர் களை புறந்தள்ளக்கூடாது நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறி நிறைவுரையாற்றினார்.

குறிப்பு: மணவிழா நிகழ்ச்சி நடந்துகொண் டிருக்கும்போது உற்றார் _ உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பு அளிக்க மேடையை நோக்கி வருகை தந்தபோது மணமகன் செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் எழுந்து வந்து மைக்கை வாங்கி அனைவ ரும் தயவு செய்து இருக்கை யில் அமருங்கள் நமக்கு தெரிந்த மொழியில்தான் தமிழில்தான் பேசுகிறார் கள். நமக்கு புரியாத சமஸ் கிருத மொழியில் என்ன பேசுகிறார் என்பதை தெரி யாத நாம் மணிகணக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்கள் நமக்கு தெரிந்த மொழியில் கருத்துக்களை கூறுகிறார் கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தயவு செய்து அமைதியாக உட்கார்ந்து கருத்துகளை தெரிந்து கொண்டு சொல்ல வேண் டும் என்று மணமகன் அன் புச்செல்வன் கேட்டுக்கொண் டதால் அனைவரும் இருக் கையில் அமர்ந்து கொண்ட னர்.

கழக மாநாடு போல பையூர் பெரியார் சிலை அருகிலிருந்து மணமகன் செல்லக்கிளி இல்லம் வரையும், காவேரிப்பட் டணம் பெரியார் சிலையி லிருந்து தருமபுரி சாலை எஸ்.எம்.கல்யாண மகால் மண்டபம் வரை நூற்றுக் கும் மேற்பட்ட கழகக் கொடி கட்டியும், டிஜிட் டல் பேனர்கள் வைத்தும், பையூர் தந்தை பெரியார் சிலைக்கு மணமகன் மாலை அணிவித்து சிறப்பித்தார். மாநாடு போல சிறப்பாக செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் _ வ.சந்தியா இணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் மாநாடுபோல நடைபெற் றது. இறுதியாக பையூர் திமுக பேச்சாளர் தி.க. இளைய ராசா நன்றி கூறினார்.

10-06-2015

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரையும், பெரியாரையும் பிரித்தாளத் துடிக்கும் காவிகள் - பார்ப்பனர்கள்!
இந்து ஏடு திரட்டி வெளியிட்ட கருத்துகள்

சென்னை, ஜூன் 10_ சென்னை அய்.அய்.டி. விவகாரத்தில் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் சங் பரிவார்க ளும், பார்ப்பனர்களும் மேற் கொள்ளும் சூழ்ச்சிபற்றி இந்து ஏடு பலரிடம் கருத் துகளைக் கேட்டு வெளி யிட்டுள்ளது.

விவரம் இதோ:
சென்னை அய்.அய்.டி யில் புயலடித்து ஓய்ந்த  அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை தொடர்பான சர்ச்சை அர சியல் கட்சிகளின் ஒரு மித்த போராட்டத்தின் விளைவால் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒரு முகமாக அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத்தின் பேச் சுரிமை சுதந்திரத்திற்கு குரல் கொடுத்து அதில் வென்றுள்ளனர்.

அவ்வி ரண்டு தலைவர்களின் கருத்துக்கள் மேலும் மக்களிடையே கொண்டு செல்ல புதிய பாதை உரு வாகியுள்ளது.   பாஜக மற்றும் அதன் துணை அமைப்புபோல் செயல்படும் உதிரிக் கட்சி, அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையைக் கொண்டாடி யுள்ளது.

அதேபோல் முக் கியமாக உதிரிக் கட்சி ஒன்று அம்பேத்கர் இந்து மத பாதுகாவலர் போல வும், பெரியார் தாழ்த்தப் பட்டவர்களின் விரோதி கள் போலவும் சித்தரித்து வருகிறார்கள். மத்தியிலும் தொடர்ந்து அம்பேத் கருக்கு இந்து மதச்சாயம் பூசும் உள்ளார்ந்த வேலை கள் நடந்துவருகின்றன.

சங்பரிவார்களின் இந்த நரித்தந்திரத்தை தமிழகத் தில் உள்ள உதிரிக்கட்சி ஒன்று தமிழக மண்ணில் செயல்படுத்த முனைந் துள்ளது. இதற்கு அம்பேத் கர்_ பெரியார் வாசகர் வட் டத்திற்கான தடையை சாத மாக எடுத்துகொண்டது.

கலி.பூங்குன்றன்

அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக் கங்கள், இதை உடைக்க தமிழ்நாட்டில் உள்ள சில சில்லறைக் காவி அமைப்பு கள் முனைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்கள் அம்பேத்கர்_ பெரியார் இருவரின் சமூக போராட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர்.

இருவ ருமே ஜாதிய வேறு பாட்டை உடைத்தெரிய வேண்டுமென்றால் முத லில் பார்ப்பனர்கள் வகுத்த வர்ண முறையை வேரோடு பிடுங்கி எரித்து சாம்ப லாக்கவேண்டும், இதையே தான் பெரியாரின் திரா விட இயக்கமும், அம்பேத் கரின் போராட்டங்களும் தெற்கிலும் வடக்கிலும் வலியுறுத்தி வந்தன.

அம்பேத்கர் மற்றும் பெரியார் இருவருக்குமே ஒரே இலக்குதான், இந்து மதத்தை ஒழித்தாலொழிய இந்தச் சமூகத்தில் புரை யோடிக்கிடக்கும் ஜாதீயக் கொடுமைகளை நீக்க முடியாது.

இந்த வர்ண பேத ஒழிப்புப் போராட் டத்தில் இருவரின் அணுகு முறைகளும் வேறாக இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, ஆனால் தற்போது இருவரின் கருத் துக்களிடையே பிளவை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க பார்ப்பன நரித் தந்திரம் சூழ்ச்சி செய்து வருகிறது, என்று விடு தலை பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிய தாவது,

அய்.அய்.டி சென்னை முழுவதுமே பார்ப்பனர் களால் ஆக்கிரமிக்கப் பட்ட நிறுவனமாக மாறி விட்டது. உயர் ஜாதியினர் அந்த நிறுவனத்தின் அனைத்து முக்கிய பதவிக ளிலும் 95 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர். பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்கள் முதல் உதவிப் பேராசிரியர்கள் வரை எங்கும் பார்ப்பன மயம்தான். அங்கு இருந்து கொண்டு இட ஒதுக்கீட் டின் மூலம் வாய்ப்புப் பெற்று நுழைந்தவர்கள் சமூகநீதிபற்றி பேசும் போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது என்று கலி. பூங்குன்றன் கூறினார்.

தமிழ் ஓவியா said...

ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் குறிப்பிடும்போது, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித் தும் சில எதிர்மறைக் கருத் துக்களை கூறியிருந்தாலும், இந்துத்துவா சக்திகளிட மிருந்து பாதுகாப்பது பெரியார் மற்றும் பெரி யாரின் கருத்துகள்தான் என்று தனது நிலைப் பாட்டை கூறினார்.

புனிதபாண்டியன்

தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் குறிப் பிடும்போது, சங்கபரிவார் அமைப் புகள் இந்தியா முழுவது முள்ள தலித்துகளின் வாக்குவங்கி மீது நீண்ட நாட்களாகவே ஒரு பார் வையை வைத்துள்ளன.

சங்கபரிவார் அமைப்புகள் வட இந்தியாவில் உள்ள தலித்துகளை மூளைச் சலவை செய்து அம்பேத்கா ரின் இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான எதிர் மறைக் கருத்துக்களை மறைத்து அம்பேத்கர் சங் பரிவாருக்கு ஆதரவான வர்; அவர்களின் கொள் கைகளை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்ற போலி யான கருத்துகளை தலித் துகளிடையே பரப்பி வரு கிறனர்.

அம்பேத்கர் வலி மையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அதே நேரத்தில் பார்ப் பனக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார்.   பெரியார் தனி திரா விட நாட்டை வலியுறுத்தி வந்தார், மேலும் பார்ப் பனீயத்தை எதிர்த்து பார்ப் பனரல்லாத மக்களை ஒன்றுதிரட்டினார். இந்த அமைப்பு அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு கொள்கையை முற்றிலும் ஆதரித்து ஒன் றாக செயல்பட்டு வந்தது.

சென்னை அய்.அய்.டி. யின் அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதன் எதிர் விளைவாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவது அம்பேத்கர்_பெரியார் பெயரில் அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னையின் அம்பேத் கர்_பெரியார் வாசகர் வட்டம் துவக்கவிழா ஒன் றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன், பெரியாரிய கருத்துகள், அம்பேத்கரிய கருத்துகள், இடதுசாரி சிந் தனைகள் கொண்டவர் கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்படவேண் டிய தருணம் வந்துவிட் டது. காரணம் மூவருக்கும் பொதுவான எதிரி ஒரு வரே என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பான் என்னைக் கொல்ல மாட்டான்//
நானும் பிரான்சிசும் அய்யாவை வழக்கம் போல சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, நாளைக்கு திருச்சி கடை வீதியில் உண்டியல் வசூல் செய்ய வேண்டும். நானும் வருகிறேன் , நோட்டீஸ் போடுங்கள் என்றார் அய்யா. என் கையைப் பிடித்துக் கொண்டு, சாதி ஒழிப்பு போராட்ட நிதிக்காக திருச்சி நகரில் ஈ.வெ.ரா பிச்சை எடுப்பார்" என்று நோட்டீஸ் அடிக்க வேண்டும் என்றார் அய்யா.
மறுநாள் 01.08.1957 அன்று காலை சைக்கிள் ரிக்‌ஷாவில் அய்யா உட்கார்ந்து வர, மார்க்கெட்டில் உள்ள மளிகைக் கடைக்காரர்கள் அனைவரும் உண்டியலில் பணம் போட்டனர். நேராக மலைவாசல் திரும்பினோம். இப்போது "மங்கள் &மங்கள் " கடை இருக்கும் இடத்திற்கு முன்பு அப்போது பார்ப்பனர் ஓட்டல் ஒன்று இருந்தது.
சற்று தூரத்தில் அய்யா வரும் போதே, சைக்கிள் ரிக்‌ஷாவைப் பார்த்த பார்ப்பன முதலாளி, கையில் ரோஸ் மில்க்குடன் ஓடிவந்ந்தார். அய்யாவும் அதை வாங்கிக் குடித்தார்.டம்ளரை வாங்கிக் கொண்டு உண்டியலில் 100 ரூபாய் போட்ட விட்டு சென்றார் அந்தப் பார்ப்பனர். எனக்கு கோபமாக இருந்தது.
அம்பீஸ் கபே தாண்டி, சாமி ஆர்ட்ஸ் ஸ்டூடியோ தாண்டி தெப்பக்குளம் அருகே போகும் போது ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார் அய்யா. என்ன பழனி? என் மேல் கோபமா? என்றார்.
ஆமாம் என்று சத்தமாகவே கூறினேன்.பார்ப்பான் கொடுத்ததை நீங்கள் வாங்கிக் குடிக்கிறீர்கள். ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது? இந்த நகரத்துக்கு நான் பொறுப்பு.நான் நகரச் செயலாளர் என்று கோபமாகவே பேசினேன்.

அய்யா சிரித்துக் கொண்டே, "என்னப்பா நீ, பார்ப்பான் என்றைக்கும் என்னைக் கொல்ல மாட்டான்.என்னைக் கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவனுக்கு தெரியும். நான் உயிரோடு இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி விட்டு வேனில் ஏறி மாளிகைக்கு சென்று விட்டார்..
--பெரியார் தொண்டர் திருசி வீ.அ பழனி வாழ்வும் போராட்டமும் என்ற நூலில் இருந்து,,

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பூக்குழி

செய்தி: பழநியையடுத்த கே. வேலூர் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பூக்குழி (நெருப்பில்) இறங்கி நேர்த்திக் கடன் கழித்தனர்.

சிந்தனை: விரதம் இருக் காமலேயே கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று கூறி திராவிடர் கழகத் தோழர்கள் பூக்குழி இறங் கியதுண்டே! கே.கே. பட்டி யில் (தேனி மாவட்டம்) கோயில் திருவிழா பூக்குழி யிலேயே கடவுள் மறுப்புக் கூறி கருஞ்சட்டைத் தோழர் கள் பூக்குழி இறங்கிக் காட்டி பக்தர்களை மலைக்க வைத் தனரே பூக்குழியில் ஓடும் பக் தர்கள் சிறிது நேரம் தீக்குழி யில் நின்று காட்டுவார்களா?

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குத்துக் கல்லு

கோயில் திருவிழா வில்  பக்தர்களிடையே மோதல்  சாவு -காயம் என்று செய்திகள் வரு கின்றனவே - அந்தக் கோயிலுக்குள் குடியிருக்கும் கடவுள் என்ன செய்து கொண்டு இருக்கிறதாம்?

கடவுளாவது வெங் காயமாவது - அது வெறும் குத்துக்கல் தான் என்று ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

யாரிந்த ஆணையர்?

முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்

POWER CORRUPTS;
ABSOLUTE POWER CORRUPTS ABSOLUTELY

அதிகாரம் பிழைபடுத்திவிடும்;
முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்.

எங்களது ஓராண்டு ஆட்சியில் ஊழல் இருந்ததா? என கேள்வி எழுப்பினார் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் பதவி நிரப்பப் படாமல் இருந்தது. இதனை அனைவரும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.

இப்போது இந்த உயரிய பதவிக்கு கே.வி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பரிந்துரையில் மோடி இதனை ஏற்றுக் கொண்டு  குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அவரும் நேற்று பதவியேற்றார்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சரும், வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி, மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு கே.வி. சவுத்ரியை நியமிக்கக்கூடாது என்றும், அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், அதற்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டும் மோடிக்கும், குடிஅரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி யுள்ளார்.

அரசின் சார்பில் இந்த நியமனம் செய்யப்பட்டி ருப்பதை உறுதி செய்து அரசின் அட்டார்னி ஜெனரல், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்ட நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருப்பதாக வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் நேர்மையும், யோக்கியதையும் விரைவில் அம்பலமாகும்.

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டுவோம்!


தமிழ்நாட்டில் மழை பொழியவேண்டி தமிழ்நாடு அரசுத் துறையான நீர்வளத்துறை - அதன் தலைமைப் பொறியாளர் திருச்சிராப்பள்ளி மண்டலத்துக்குட்பட்ட 30 உட்கோட்ட அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைப் போல் ஒன்றை அனுப்பினார்.

ஒவ்வொரு உட்கோட்டம் சார்பிலும் ஆங்காங்கே உள்ள கோவிலில் சிறப்பு யாகம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டது.

இது ஒரு பிற்போக்குத்தனமான - விஞ்ஞானத்திற்கு எதிரான பழைமை வாய்ந்த இந்து மத மூடநம்பிக்கையைச் சேர்ந்த பழங்குப்பையாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே அழுத்தமாக வரையறுத்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை தனக்குரிய அதிகாரத்தையும், மக்களின் மூடத்தனத்தையும் பயன்படுத்தி அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்திருப்பது அசல் அத்துமீறிய - அப்பட்டமான சட்ட மீறலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்தியுள்ளது.

அதன்படிப் பார்த்தால் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்ட குற்ற வாளியாவார்.

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள்மீது திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார் (விடுதலை, 6.6.2015).

சம்பந்தப்பட்ட அதிகாரியின் சட்ட மீறலோடு அந்த நடவடிக்கை முடிந்து விடவில்லை. கோவில்களில் யாகங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்துவது என்பது அதிகாரிகளின் சொந்த செலவில் அல்ல; அரசுப் பணம்தான் அரசுக் கொள்கைக்கும், சட்டத்திற்கும் விரோதமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாகும்.

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கையின் எதிரொலியாக பொதுப் பணித்துறையின் உயர்நிலை அதிகாரியான மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்த சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு இருப்பதாகத் தகவல் வெளிவந் துள்ளது. 15 நாள்களுக்குள் பதிலை அளிக்கவேண்டும் என்று அதில் வலியுறுத்தவும் பட்டுள்ளது. அது ஒரு அரசுத் துறை நடவடிக்கையாக இருக்கக்கூடும்.

அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டுவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை போடுவது, ஆயுத பூஜை கொண்டாடுவது, காவல் நிலையங்களில் ஒலி பெருக்கி வைத்தே தடபுடலாக ஆயுத பூஜை நடத்துவது, அதற்காக வசூல் வேட் டைகளில் ஈடுபடுவது, வேலியே பயிரை மேய்வது போல நீதிமன்ற வளாகங்களுக்குள்ளேயே கோவில் களைக் கட்டுவது - இன்னோரன்ன அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிக் கிடைத்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் தாக்கல் செய்ய இருக்கும் இந்த வழக்கு பல வகைகளிலும் ஒரு சரியான பாதையை - வழிகாட்டுதலை அரசுத் துறைகளுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் காட்டும் வகையில் அமையும்.

நடைபாதைக் கோவில்களை உடனே அகற்றிட வேண்டும். அப்படி அகற்றாத மாநில அரசுகளின் (தமிழ்நாடு உள்பட) தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டும், அப்படிச் செயல்படாத அரசுகளுள் ஒன்றுதான் தமிழ்நாடு அரசு.

மக்கள் மத்தியில் உரிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமையாகும். ஒரு பக்கத்தில் பொதுக்கூட்டங்களின் வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற பணியை எழுச்சியோடு செய்துகொண்டுள்ளது.

இன்னொரு கட்டமாகத்தான் நீதிமன்றத்தின் கதவையும் தட்டுகிறது கழகம். மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அப்படி விழுமேயானால், பிரச்சினைகள் மிக எளிதாகவே தீர்க்கப்பட்டு விடும் அல்லவா?

யாகத்தாலும், பூஜை புனஸ்காரங்களாலும் விரும்பியதை எட்ட முடியும் என்றால், அரசாங்கம் கூடத் தேவைப்படாதே! எல்லாவற்றையும் பூஜைகள், புனஸ்காரங்கள், யாகங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாமே!

மெத்தப் படித்தவர்கள்கூட, பொறியியல் பட்டம் பெற்றவர்களே கூட பகுத்தறிவைச் செலுத்தாமல், பக்திப் போதைக்கு அறிவைப் பலி கொடுத்து, தாங்கள் நாசமாவதுடன், மற்றவர்களையும் அந்த மூடப் படுகுழியில் தள்ளுவது - மன்னிக்கவே பட முடியாத பெருங்குற்றமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனானால், அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருத்தை எண்ணிப் பாருங்கள் - அறிவின்மீது அவர் வைத்துள்ள மதிப்பையும், சீர்தூக்கிப் பாருங்கள், பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

புதுமைத் தென்றல் : வி.ஸ. காண்டேகரின் கருத்து மழை


மராத்திய புதுமை எழுத்தாளர் - புதினம் புனையும் பொலிவு மிக்க கருத்தாளர் வி.ஸ. காண்டேகர் அவர்கள் ஆவார்கள்.

மராத்தியில் அவர் எழுதிய புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - இவைகளை தமிழில் சுவை குன்றாமல் தரும் பணியை - அரும்பணி செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்கு புது உலகம் தேடுவோர் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறும் முன்னரும், பெற்ற பின்னரும் எனக்குத் தேவையான மெல்லியப் பூங்காற்றை  (சுவாசிப்பதைப்போல) வாசிப்பது அவசியம் - நேரமும் பறந்து விடும். வலியை மறந்து விடுவோம் என்ற வகையில் காண் டேகர்தான் எனக்குத் துணையாக இருந்தார் - முழு நேரப் பணி பெரியார் சிந்தனைகளை பரப்புவதுதான் என்றாலும்கூட!

வி.ஸ.காண்டேகர் கதைகள் என்ற நூலில் மூன்று உருவகங்களைக் கொண்ட யதார்த்தத்தை கற்பனை வண்ணம்பூசி அருமையாக தந்துள் ளார் நந்தவனம் என்ற  தலைப்பில் ஒரு சிறுகதையில்; அதைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்த போதும்) நவில்தொறும் நூல் நயம் கண்டேன்!

அதனை உங்களைப் போன்ற பயில்தொறும், படிக்கும் வாசக நண்பர் களுடன் பகிர்ந்து கொண்டு, யான் பெற்ற இன்பத்தை எனது வாசக உலகமும் பெறட்டும் என்பதாக இதனைத் தருகிறேன்.

அடிவானம்
புதுயுகம்
மரத்தின் வேர்
பெண்ணின் உள்ளம்
வழிபாடு
என்ற அய்ந்து குறுந் தலைப்புகளில் சுவைமிக்க கருத்து உருவகங்கள்-

கற்க வேண்டிய பாடங்களே அவரவர் பயிற்சிக்கும், பக்குவத்திற்கும்  ஏற்பவே ரசனைகள் அமையக் கூடும்.

சமைத்து வைத்த சுவை உணவைப் பரிமாறுகிறவன் பரிமாறாமல் பசி வந்தவர்முன் பலபடப் பேசுவதும் காலத்தைத் தாழ்த்துவதும் கூடா ஒன்று அல்லவா?

அதனால் நேரே நந்தவனத்தின் நறு மலர்களின் மணத்தை அனுபவிக்கவும், மலர்க் காட்சியைக் கண்டு உள்ளங்  குளிரவும் அழைத்துச் செல்கிறேன்.

புதுயுகம் என்ற சிறு தலைப்பின் கீழ்

முன் காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக்காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அல்ல அது அல்ல என்ற அறிவு மட்டுமே அவர் களுக்கு உண்டாயிற்று.

உண்மையான தத்துவஞானம் இதுதான்! என்று மக்கள் வியந்தனர்.

இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக் கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று. ஆண்டவன் நீரிலும், தரையிலும், மரத்திலும், கல்லிலும் இருப்பதாக அவர்கள் அறிந்தார்கள். உண்மையான பக்தி இதுதான்! என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.

விஞ்ஞான யுகம் வந்தது. விஞ் ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது. கல்லிலிருந்து, குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தார்கள். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப் படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு, இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்றார்கள்.

நாஸ்திகன் நாஸ்திகன்! என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.

@@@@@@@@@@@@@

மற்றொரு மிக அருமையான உருவகம்!
மரத்தின் வேர் என்ற தலைப்பில் -
ஒரு மரத்தில் மலர்களின் மணம் எங்கும் பரவி இருந்தது.
வழிப்போக்கன் ஒவ்வொருவனும் அந்த மணத்தை நுகர்ந்து கொண்டு அங்கே கணப் பொழுதாவது நிற்காமல் போவதில்லை.

அந்த மரத்தில் கனிகள் காய்த்துக் குலுங்கின. அவற்றின் நறுமணத்தில் மயங்கி, நிறம் நிறமான பறவைகள் அந்த மரத்தைச் சுற்றிக் கூத்தாடின.

மலர்களும், கனிகளும் சொர்க்க இன்பத்தை எய்தின.

ஒருநாள் காலையில் தோட்டக் காரன் அந்த மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினான்.

மலர்கள் அவனைப் பார்த்து, தோட்டக்காரா! உனக்குப் புத்தியே இல்லை! அங்கே மண்ணில் எதற் காகத் தண்ணீர் விடுகிறாய்! பீச்சாங் குழலினாலே எங்கள்மீது நீர்த்துளி களை வீசு. முகத்தைப்போலே அவை ஒளிவீசும் என்றன.

பழங்களும் அப்படியே பிடிவாதம் பிடித்தன. கோணல் மாணலான, நிறமும் அழகும் இல்லாத, எப்பொ ழுதும் மண்ணிலே புரளுகிற அந்த வேர்களுக்கு எதற்காக நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும்? என்று அவை நினைத்தன.

தோட்டக்காரன் மலர்களுக்கும், கனிகளுக்கும், நீரைத் தெளித்தான்.

தண்ணீர் கிடைத்துங்கூட மலர்கள் வாடின; கனிகள் அழுகின.

அவை கடைசியில் தோட்டக்கார னுடைய காலில் விழுந்து, தோட்டக் காரத் தாத்தா, மண்ணில் இருக்கும் அந்த வேர்களுக்கே முதலில் நீர் பாய்ச்சுங்கள், அவை பிழைத்தால் தான் நாங்கள் உயிர் வாழ்வோம் என்று கெஞ்சின. - இதனைப் புரிந்து கொள்ளுங் கள்; ஓர் இயக்கம், குடும்பம்,நிறுவனம் எல்லாவற்றுக்குமே இந்த உண்மை புரிய வேண்டும் - புரிந்து நடக்க வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...

ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல - கருநாடகத்தில்
தண்டோரா போட மறுத்ததால் ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள்மீது வழக்கு

சிக்மகளூரு, ஜுன்11_  முன்னோர் செய்த தொழிலான தண்டோரா போட்டு  அடித்து தகவல் தெரிவிப் பதற்கு மறுத்ததால் தண்டத்தொகை விதிப்பு, தண்டத் தொகையைக் கட்ட மறுத்ததால் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஏழுபேர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் வட்டத்தில் வத்தாரஹள்ளி கிரா மத்தைச் சேர்ந்த குருபா வகுப்பினத் தவர் உள்ளிட்ட பிற வகுப்பினரால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் முன்னோர் செய்து வந்த பணியை (தண்டோரா போட்டு தகவல் தெரிவிப்பது) அவர்கள் தொடர்ந்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் பிற வகுப்பினரால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

சித்தய்யா என்பவர் கூறும்போது, கடந்த யுகாதி திருவிழாவின்போது, உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்ட கிராமத்தினர் அந்த திருவிழா குறித்து  கிராமத்தைச் சுற்றிவந்து தண்டோரா போட்டு தெரிவிக்குமாறு என்னுடைய சகோதரர் ரங்கய்யா விடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதனால் அவர்கள் எங்கள்மீது கோபமாக இருந்து வருகிறார்கள் என்றார்.

29.5.2015 அன்று இந்தப் பிரச்சினை தீவிரமானது. கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதியைச் சேர்ந்த நிஞ்சே கவுடா என்பவர் சித்தய்யாவிடம் இதுகுறித்து சச்சரவு செய்துள்ளார். அதில் பிரச் சினை பெரிதாகி நிஞ்சே கவுடா மறுநாளே (30.5.2015) பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளார்.  கிராமப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் சித்தய் மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யா ஆகிய இருவரும் தலா ரூ.2,001 தண்டத் தொகை கட்டவேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பாக கூறப்பட்டது. ஆனால், அவ்விருவரும் அதை ஏற்க மறுத்து தண்டத் தொகையைக் கட்ட மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தினர் எவரும் சித்தய்யா மற்றும் ரங்கய்யா, அவர்களின் சகோ தரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினர்களிடம் பேசுவது உள்பட எவ் விதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று முடிவாக அறிவித்தனர். மேலும், அவர்களுக்கு மளிகைக் கடைகள் மற்றும் பால் கடைகளிலி ருந்து  பொருள்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் முடிவானது.

இவ்வளவு காலங்களாக அவர் களின் முன்னோர்கள் செய்துவந்த பணிகளையே கட்டாயத்தின்பேரில் செய்துவந்த சித்தய்யா மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யாவும் செய்ய மறுத்து விட்டதுதான் காரணமாக கூறப் பட்டுள்ளது. சித்தய்யா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும்  பஞ்சாயத்து முடிவு குறித்து சிக்மகளூரு காவல்நிலையத் தில் புகார் தெரிவித்தார்.

காவல்துறையினர் சித்தய்யாவின் புகாரின்பேரில் அந்த ஊரைச் சேர்ந்த வர்களான நிஞ்சே கவுடா, சன்னே கவுடா, ஜயண்ணா, பசவராஜு, தர்மாச்சாரி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணே கவுடா ஆகிய ஏழுபேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ரயில் பயணம் தத்கல் முறையில் மாற்றங்கள்

புதுடில்லி, ஜூன் 11_  ரயிலில் பயணம் செய்ய, கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் பெறும், 'தத்கல்' முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை, 10 மணிக்கு மேல், பயணச்சீட்டு இருக்கும் வரை, எவ்வளவு நேரமும் பெற முடியும் என்ற நிலை, தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

*தினமும், காலை, 10 _ 11 மணி வரை, 'ஏசி' வசதி டிக்கெட்டுகளும், 11_ 12 மணி வரை, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளும், தத்கல் முறையில் பெறமுடியும்.

*உறுதி செய்யப்பட்ட தத்கல் பயணச்சீட்டு பெற்ற பிறகு, அதை ரத்து செய் தால், இதுவரை பணம் திருப்பிக் கொடுப்பதில்லை. அதில் மாற்றம் செய்யப் பட்டு, இனிமேல், 50 சதவீத கட்டண பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

* தத்கல் கட்டணத்தில் பயணச்சீட்டு பெற்றவர்கள் பயணிக்கும் தனி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை, தத்கல் சிறப்பு ரயில் கள் என அழைக்கப்படும்.

* அதிக தேவை உள்ள வழித்தடங்களில், தத்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படும்.

*புதிதாக அறிமுகப் படுத்தப்பட உள்ள தத்கல் சிறப்பு ரயில்களுக்கு, குறைந்தபட்சம், 10 நாட் களுக்கு முன்னதாகவும், அதிகபட்சம், 60 நாட் களுக்கு முன்னதாகவும், பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இப்போது, தத்கல் பயணச்சீட்டு, பயண நாளுக்கு ஒருநாள் முன்ன தாக வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், அதிக தேவை உள்ள வழித்தடங்களில், பிரீமியம் ரயில்கள் என்ற பெயரில், ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன. அந்த ரயில் களில் பயணிக்க, தேவையை பொறுத்து, பயணச்சீட்டு கட்டணம் மாறுபடும். குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படும்; அதற்கு மேல், தேவைக்கு ஏற்ப, பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆனால், புதிதாக அறி முகப்படுத்தப்பட உள்ள தத்கல் ரயிலில், தத்கல் கட்டணத்தில் தான் அனைத்து பயணச்சீட்டு களும் விற்கப் படும். 175 முதல், 400 ரூபாய் வரை உயர்வு இருக்கும்.
பிரீமியம் ரயில்களுக் கான பயணச்சீட்டை, அய்.ஆர்.சி.டி.சி., இணைய தளம் மூலமே பெற முடியும். தத்கல் சிறப்பு ரயில் பயணச் சீட்டை, ரயில் நிலையங் களிலும், இணையதளம் மூலமும் பெறலாம்.

இந்த மாற்றங்கள் இரண்டொரு நாட்களில் அமலாகும் என, ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

மனிதருள் மாணிக்கம்!



எம்.வி.வள்ளியப்பன்
வீகேயென் நிறுவனத்தின் வி திரு.எம்.வி. வள்ளியப்பன் அவர்கள் வீகேயென் உடன் தனக்குள்ள நட்பைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார்.

வீகேயென் எனக்கு 1965 முதல் பழக்கம் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக என்ஜினி யரிங் படித்தோம். வகுப்பில் மட்டுமில்லை விடுதியிலும் நான் அவருக்கு ரூம்மெட். நியூ ப்ளாக்கில் அறை எண் 51 அந்த நெருக்கத்தை வாழ்வில் மறக்கவே முடியாது. வீகேயென் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை.

யாருடனும் அந்த மாதிரி பழகுவதில்லை. படிப்பிலும் கூட அப்படித்தான். படிப்பில் சாதனையாளராக வரவேண்டும் என்று அவர் நினைத்ததில்லை. அப்போதே அவருடைய நினைவும், கனவும் தொழில் பற்றியதாகத்தான் இருக்கும். எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பார். இளம் பருவத்திலேயே சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக, வெறியாகக் கொண்டு நடந்தவர்.

படித்து முடித்த பின்பு  தொழில் தொடங்க வேண்டி வீகேயென் இடம் ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்றிருந்தார். அந்த நேரம் முதலீட்டுக்காகப் பணம் தேவைப்பட்ட  போது அவர் என்னை அணுகிய போது தொழில் பார்ட்னராக வா என்று தான் அழைத்தார். அவரது ஆர்வம், நேர்மை, திறமை பற்றி எனக்குத் தெரியும். எங்கள் வீட்டினருக்குத் தெரியாது.

தவிர ஏற்கெனவே குடும்பத்தினர் பார்த்து வந்த தொழி லைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட போது புதுத் தொழி லுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்று எனக்கு தெரி யும். ஆனால் எனக்கு வீகேயென் மீது நல்ல நம்பிக்கை இருந்தது. கூட இருந்தே கவனித்து வந்திருக்கிறேனே! இவர் நன்றாக வருவார் அதற்குப் பணம் கொடுத்து உதவலாம் என்று குடும்பத்தில் என் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

வீகேயென் நிறுவனம் நன்கு வளர்ந்த பிறகு கூட அவ்வப்போது என்னிடம் பார்டனராக வா! என்று அழைப்பார். ஒரு நிறுவனம் தொடங்கும் போது எவ்வளவோ கஷ்ட நட்டங்கள் சோதனைகள் வரும். அவற்றை எல்லாம் கடந்து இவர் இன்று வெற்றிகரமாய் நடத்தும் போது பார்ட்னராக சேருவது நல்ல நட்புக்கு அழகல்ல என்று மறுத்துவிட்டேன். ஏதோ முதலீடு கொடுத்தேன் என்பதற்காக நன்றிகாட்டும் விதம் என் முதலெழுத்து வி யைத் தன் நிறுவனத்தின் முதல் எழுத்தாக வைத்திருப்பதை எண்ணும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. சமயத்தில் கூச்சமாகவும் இருக்கிறது.  மேலும் எந்தப் பிரபலம் வந்தாலும் அவர்களிடம் என்னை வீகேயென்னின் வி இவர்தான் என அறிமுகப் படுத்தி மகிழ்வார்.

வீகேயென் உயரிய பண்பு மிக்கவர். தன்மானத்துடன் செயல்படுபவர். தொழிலாளர் நலம் பேணுபவர். மிகுந்த திறமையும், ஆற்றலும் கொண்டவர். நேர்மை யாய் நடப்பவர். துணிவுமிக்கவர். தவறான பாதைக்கு இவரும் போகமாட்டார். மற்றவரையும் அனுமதிக்க மாட்டார். தவறைச் சுட்டிக்காட்ட தயங்கவும் மாட்டார்.  ஒருவரின் தவறை அவரின் முகத்துக்கு நேராய் தெரிவிக்கும் வல்லமை பெற்றவர். இவருக்கு கம்ப்யூட்டர் அறிவு, யானை அளவுக்கு ஞாப சக்தி உண்டு. கணக்கில் இவரிடம் ஏமாற்ற முடியாது. குழப்பமோ, குதர்க்கமோ இவரிடம் கூடாது.

நேராக வா, நேராக போ!
இவருடைய வெற்றிக்குப் பின்னால் இப்படி எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இவரது வெற்றி சும்மா அதிர்ஷ்டத்திலோ, பிறரை வஞ்சித்தோ வந்ததல்ல. எல்லாமே சீரிய உழைப்பு. மனிதநேய மாமணி

தமிழ் ஓவியா said...

வீகேயென் பாண்டியன்
வீகேயென் இது வெறும் ஆங்கில எழுத்துகளல்ல, என்னைப் பொருத்தவரை இவைதான் எனக்கு உயிரெழுத்துகள். அரை நூற்றாண்டுக் காலத்தை தாண்டிய எனது வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மூன்றெழுத்திற்குள்தான் அடங்கியிருக்கிறது.

படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த  என்னை 1974 ஆம் ஆண்டு இனி இவர்தான் உனக்கு எல்லாம் என்று என்னை எனது தந்தை ஆறுமுகம் பிள்ளை வீகேயெனிடம் ஒப்படைத்தார். அப்போது வீகேயென் அவர்கள் துவாக்குடியில் விகேயென் நிறுவனத்தைப் புதிதாக தொடங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இருந்த தொழிலதிபர்.

அவரது ஊழியனாக அவரோடு என்னை இணைத்துக் கொண்டதுதான் என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பாக்கியம்.  மூன்று தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 500 பேர் பணி புரிகின்றார்கள். அதே இந்நிறுவனத்தின் கிளை ராணிப் பேட்டையிலும் தொடங்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தொழிலதிபர் திரு.வீகேயென் அவர்களின்  உழைப்பு என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாது. தொழிற் சாலை அவருக்கு இன்னொரு தாய் வீடு அதன் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு இரும்புத் துண்டும் அவரது பெயரைச் சொல்லும். தொழிற்சாலை வளாகத்திலேயே தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு தருபவர் எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டிலேயே திரு. வீகேயென் அவர்கள் ஒருவர்தான்.

அது மட்டுமல்ல. உணவு நேரத்தில் தொழிற்சாலையில் இருந்தால் அவர்களுடன் அமர்ந்து அதே உணவைத் தானும் சாப்பிடுவார். தனது தொழிலாளர்கள் தொழில் கற்றுக் கொண்டு தனியாகத் தொழில் செய்ய விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்தத் தொழிலாளியின் தனி வாழ்க்கையைத் தொடங்கி வைப்பார்.

இதுவரை 120 தொழிலாளர்களுக்குத் தலா 1 இலட்சம் கொடுத்துப் புதுவாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கிறார்.  மேலும் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதியும் இலவசமாக செய்து கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தோடும், அதன் தலைவர் கி.வீரமணி அவர்களோடும் நெருங்கிய நட்பும், அன்பும் கொண்டு உள்ளார். பெரியார் இல்லமும், திராவிடர் கழக கல்வி நிறு வனங்களும் அவருக்கு கண் போன்றவை.

அந்த நிறுவனங் களுக்கு தன் பொருளையும் உழைப்பையும் வாரி வழங்கி யிருக்கிறார். பெரியார் மணியம்மை மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு, தாளாளராக இருந்து பணியாற்றி வருகிறார். மேலும் தஞ்சை  வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  இணைவேந்தர் பதவி அவரை தேடி வந்தபோது அதனை மறுத்தார்.

ஆனாலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வற்புறுத்தி அந்த உயரிய கவுரவுத்தை அவருக்கு வழங்கினார். இப்போதும் அந்த பணியிணை சிறப்பாக செய்து வருகிறார். நான் அறிந்த வகையில் நன்றிக்கு இலக்கணமாக மாமனிதன் திரு.வீகேயென் அவர்கள் அளவுக்கு யாரும் இல்லை என்று சொல்வேன்.

தமிழ் ஓவியா said...

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு


கிருஷ்ணகிரி,  ஜூன் 11_ கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண் கள் பெற்று தோல்விய டைந்ததாக அறிவிக்கப் பட்ட மாணவிக்கு விடைத் தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப் பிரமணி. தொழிலாளி. இவரது மகள் கவிதா மணி. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடப் பிரிவில் பயின்று வந்த அவர், பொதுத் தேர்வை எழுதினார். கடந்த மாதம் அறிவிக் கப்பட்ட தேர்வு முடிவில் அவர் மொத்தம் 584 மதிப் பெண்கள் பெற்றதாகவும், பொருளாதாரப் பாடத் தில் 200-_க்கும் 24 மதிப் பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கவிதா மணி தனது விடைத்தாள் நகலை உரிய முறையில் பெற்றுப் பார்த்த போது, விடைத்தாள் நகலின் முன்பகுதியில் கவிதாமணி யின் பெயர், பதிவு எண் இருந்தது. ஆனால், அவர் எழுதிய விடைத்தாளுக் குப் பதிலாக மற்றொரு வரின் விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து, கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவ லகத்தை அவர் தொடர்பு கொண்டபோது, விடைத் தாள் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திருத்தப் பட்ட தும், அப்போது தவறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

மேலும், 10 நாள் களில் உரிய விடைத்தாள் நகல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அலுவலர்கள் உறுதியளித் ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை யாம். இதனால், பாதிக்கப் பட்ட மாணவி எந்தக் கல்லூரியிலும் விண்ணப் பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், பொருளாதாரப் பாடத்தில் கவிதாமணி 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக கல் வித் துறையினர் அறிவித் ததாக அவரது தந்தை சுப்பிரமணி தெரிவித்தார்.

மேலும், மாணவி கவி தாமணி பொருளாதாரப் பாடத்தில் 123 மதிப் பெண்கள் பெற்றுள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லக வட்டாரங்கள் உறு திப்படுத்தின.

தமிழ் ஓவியா said...

வாழிய வீகேயென் அய்யா
இல்ல மணவிழா






மனித நேயமிக்க மாமனிதராய்
உழைப்பாலும், நேர்மையாலும்
உயர்ந்து நிற்பவர் வீகேயென் அவர்கள்.

உண்மையிலும், உன்னத்திலும் சிகரமாய் விளங்கக் கூடிய
எளிமையானவர், வித்தியாசமானவர்.
எதையும் வலிமையோடு, எதிர் கொள்பவர்.
எடுத்த முடிவில் சமரசம் ஆகாதவர்.
கடந்து வந்த பாதையை மறக்காதவர்
உதவியவர்களுக்கு உயிராய் இருப்பவர்
கழகத் தலைவர் ஆசிரியர் மீது
என்றும் அன்புடையவர்.
தொண்டுள்ளம் கொண்டவர்
கழக நிகழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அள்ளிக் கொடுப்பவர்.
கொடை வள்ளல் வீகேயென்.
உழைப்பை மட்டும் நம்புபவர்
உன்னத நேர்மையாளர். தந்தை பெரியாரின் கொள்கையை என்றும் மனதில் கொள்பவர்.
கழகத்திற்கு தோன்றா துணையாய் இருப்பவர்.
வீகேயென் மணவிழா சிறக்க வாழ்த்துகள்!

மு.சேகர்
திருச்சி மாவட்ட தலைவர்
திராவிடர் கழகம்