Search This Blog

26.6.15

பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால்?-பெரியார்

பெண்களும், சர்க்கார் உத்தியோகமும்!



ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சர்க்கார் உத்தியோகங்கள் எதிலும் இடம் கிடைக்க வேண்டும் என்பது பற்றி சென்னை சட்டசபையில் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. "சர்க்காரில் எந்தெந்த உத்தியோகங்களைப் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று விதியிருக்கிறது" என்று தோழியர் பீகம் அமிருதீன் கேட்ட கேள்விக்கு முதல் மந்திரியார் ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்திருக்கிறார். 

பெண்கள் எந்தெந்தத் தொழிலை ஏற்கத் தகுதியுள்ளவர்கள் என்பதைப் பற்றி சட்டசபை உறுப்பினர்கள் பலர் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். சில உறுப்பினர்கள கிண்டலாகவும், பரிகாசமாகவும், பொழுதுபோக்காகவும் கூடப் பேசியிருக்கின்றனர். இரண்டொருவர் தங்கள் நவைச்சுவைத் திறமையை வேறெங்கும் காட்டுவதற்கு வழி தெரியாத காரணத்தால் இந்த முக்கியமான பிரச்சினையைப் பற்றி விவாதிக்கும் போது சிறு பிள்னைத்தனமாக நடந்துக் கொண்டிருக்கின்றனர். கேலி செய்வது போன்ற உணர்ச்சியை உண்டாக்குவதற்காகவே ஒரு சில உறுப்பினர்கள் சில கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். 

"மாடம் கியூரி என்ற பெண்ணரசி, "ரேடியம்" என்பதைக் கண்டுபிடித்திருக்கும் போது பெண்களுக்கு எந்த விதமான உயர்ந்த பதவியையும் கொடுக்கலையே என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு போலீஸ் முதல் எல்லா உத்தியோகங்களிலும் இடம் கிடைக்க வேண்டும் என்று சில ஆண் அங்கத்தினர் உண்மையாகவே வாதாடிய சமயத்தில், தோழியர் அமிருதினைத் தவிர மற்றப் பெண்கள் யாரும் வாய் திறவாமல் இருந்திருக்கும் காரணம் நமக்கு விளங்கவில்லை. பெண்மந்திரியின் சில தோழியர் ருக்குமணி, லட்சுமி கூட இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. புதிய மந்திரி சபையில் தமக்கு இடமிருக்காது என்ற கவலையின் பேரில் பேசாமலிருந்தார்களோ என்னவோ தெரியவில்லை. 

கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த முதன் மந்திரி சர்க்கார் உத்தியோகங்களும் இனிமேல் பெண்களுக்குக் கொடுக்கப்படும் என்று உறுதி கூறியிருப்பதை அறிய மகிழ்ச்சியடைகிறோம். பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம். 


நம் பெண்கள் சமூதாயத்தில் தலைக்கீழான புரட்சி ஏற்பட்டாலொழிய நாம் வேறு துறைகளில் எவ்விதமான பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் எந்தப் பயனும் ஏற்படாது. பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால் மூன்று காரியங்கள் உடனே செய்யப்பட வேண்டும். முதலில் அடுப்பாங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். இரண்டாவது நகைப்பேயை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும். மூன்றாவது இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டுதுண்டாக நறுக்கி விட வேண்டும்

இவ்வளவுக்கும் அடிப்படையாயிருப்பவை கல்வியும், சொத்துரிமையும். இவ்விரண்டையும் பெற்ற பெண்கள் அவர்களுக்குப் பிரியமான உத்தியோகங்களை ஏற்பதற்குத் தடையில்லாமல் செய்ய வேண்டும். இந்த உதவியைத் தான் இங்குள்ள ஆட்சியாளர் செய்ய வேண்டும். 


பெண்கள் எந்த வேலைக்காவது தகுதியற்றவர்கள் என்று கூறப்படுவதை உலக அனுபவமுடைய எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வாய்ப்பு இருக்குமேயானால் எந்தப் பதவியையும் ஏற்பார்கள் என்பதற்கு உலக வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைக் காணலாம். 


பெண்கள் உத்தியோகங்களில் அமர்ந்து விடுவார்களேயானால், நாம் மேல் கூறிய மூன்று தேவைகளும் தாமாகவே படிப்படியாக நிறைவேறிவிடும்.


ஆயுள் முழுவதும் அடுப்பங்கரையிலேயே கிடந்து மடிவதற்காகவே ஒரு தனி இனம் இருக்க வேண்டும் என்பது பச்சை வர்ணாசிரமத்திலும் பன்மடங்கு மோசமான கொள்கை, சமையல் தொழிலில் ஆசையும், திறமையும் உடையவரும் அந்த வேலையை ஏற்றுக் கொள்ளலாம். அத்துடன் சமையல் முறைகளையும் அடியோடு மாற்றி சுருக்கிக் கொள்ள வேண்டும். கல்வியும், உத்தியோகமும், சொத்துரிமையும் பெற்ற பெண்களில் 100-க்கு ஒருவர் கூட அடுப்பங்கரை வேலையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி. அப்படியானால் சாப்பாடு என்பார்கள் சிலர். அதற்கு வேறு ஒரு ஏற்பாடு செய்து வேண்டியது தான். செருப்புத் தைப்பதற்கென்று ஒரு ஜாதி இல்லாவிட்டால் என் கிழிந்த செருப்பை யார் தைப்பது? என்று கேட்பதைப் போலிருக்கிறது இந்தக் கேள்வி. 


இரண்டாவது நகைப்பேய்! நல்லவேளையாக பவுன் விலை ஏற்றத்தாலும், உயர்தரப் படிப்பினாலும், மேல்நாட்டு நாகரிகத் தொடர்பினாலும் இந்தப் பைத்தியம் வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. நாள் ஆக, ஆக இன்னும் குறைந்து விடும் என்றே எதிர்பார்க்கிறோம். சொத்துரிமையும், உத்தியோகமும் கிடைத்த பிறகு ஏதோ இரண்டொரு நகைகளைத் தவிர மற்றவைகளை விரும்பமாட்டார்களென்றே கருதுகிறோம். 


இனி, மூன்றாவது தேவைத்தான் முக்கியமானது. அது திருமணச் சிக்கல். ஜாதி, மதம், வயது, குலம், சுற்றம், கோத்திரம், பணம், பதவி, அந்தஸ்து பெற்றோர் கட்டாயம் ஆகிய அர்த்தமற்ற கட்டுப்பாடுகளுக்காகப் பெண்கள் தங்கள் வாழ்க்கையையே பலிகொடுப்பது ஒழிய வேண்டுமானால் அவர்களுக்குச் சுயேச்சையான உத்யோகங்கள் வேண்டியது மிகவும் அவசியம். ஆண்களுடன் சரிசமமாகப் பழகும் வாய்ப்பும், உரிமையும் அளிக்கப்பட்டு விட்டால் இந்த அடிமை விலங்குகளை ஒரே விநாடியில் உடைத்து விடுவார்கள் பெண்கள். 


எனவே, பெண்களுக்கு எந்தவிதமான உத்யோகமும் கிடைக்கக்கூடியவாறு சர்க்கார் விதிகளைத் திருத்த வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம். ஆனால், அதிலும் பார்ப்பனப் பெண்களோ அல்லது இன்றைய தினம் படிப்பில் முன்னேறியிருக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டத்தாரோ, எல்லா உத்யோகங்களையும் கைப்பற்றிக் கொண்டு விடாதபடி சமுதாய ஜனத்தொகை விதிப்படி உத்தியோகங்களை வழங்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம். 


------------------------------ 18-03-1947- "விடுதலை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.

60 comments:

தமிழ் ஓவியா said...

கிடுக்கிப்பிடியில் பிஜேபி முதல் அமைச்சர்

லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்!

வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது


லலித்மோடியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற நிதின் கட்கரி, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானியுடன், லலித்மோடியின் நெருங்கிய நண்பரும், லண்டனில் லலித்மோடிக்கு நிதி உதவிகள் செய்துவரும் விஜய் ஜோலியும் 2011 ஆம் ஆண்டு எடுத்தபடம்


ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ள வசுந் தரா ராஜே 2011-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன் றத்திற்கு எழுதிய கடி தத்தை காங்கிரஸ் கட்சியினர் டில்லி யில் வெளியிட்டனர். இந்தக் கடிதத்தில் லலித் மோடி தனது உறவினர் என்றும் தான் இந்தியாவில் உள்ள ஒரு மாகாணத்தின் மகா ராணி; லலித் மோடி எனது உறவினர், லலித் மோடிக்கு அவமானம் என்றால் அது மகாராணி யான எனக்கும் அவ மானம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தக் கடித்ததின் முழு விவரம் வருமாறு:    இங்கிலாந்தின் நீதி மன்ற ஆவணப் பதிவு களில் இருந்து சண்டே மெயில் என்ற பத்திரி கைக்கு 2011 ஆகஸ்ட் 18 தேதியிட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்ததில் முதல் பத்தியி லேயே நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக வரும் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படப் போகி றேன். ஆகையால், நான் எழுதியுள்ள இந்தக் கடி தத்தை பொதுப்படுத்தக் கூடாது; இதனால் எனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம்.
 
என்று குறிப்பிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ளதாவது: விரைவில் இந்தியா வில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது எங்கள் கட்சி மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிக்கு வரும்; தற் போது இருக்கும் காங் கிரஸ் அரசு விரைவில் வீழ்த்தப்படும்; மக்களி டையே நாங்கள் கடுமை யான பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறோம்.  காங்கிரஸ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கி விட்டனர். ஆகையால் தான் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
 
இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் பலமி ழந்து வருகின்றன. ஆகை யால் தென் மாநிலங்களில் பாஜகவும் வடமாநிலங்க ளில் காங்கிரசும் வெற்றி வாய்ப்பை இழக்கும், இருப்பினும் வரும் காலத் தில் பாஜகவின் கைகள் பலம்பொருந்தி இருக்கும்.    லலித் மோடி எனது உறவினர், எனது தலை மையில் ஆன அரசு 2008-ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததும், லலித் மோடியை உடனடியாக ராஜஸ்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர் பதவி யில் இருந்து அரசு நீக்கி விட்டது. இது பழி வாங்கும் செயலாகும். என் மீது காங்கிரஸ் ஆட்சி யாளர் பொறாமை கொண்டுள்ளனர். அவர் களுக்கு எனது உறவினர் கள் முக்கியபதவியில் இருப்பது பிடிக்கவில்லை.
 
அதன் பிறகு எனது அரசியல் எதிரிகள் லலித் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறை யில் தள்ள முயற்சி செய் தார்கள். தேர்தல் பிரச் சாரத்தின் போது லலித் மோடியின் மீது பொய் யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதற்கு நான் உடந்தையாக இருப்பது போல் காட்டிக் கொண் டார்கள். இதன் காரண மாக நான் தோல்வி யடைய நேர்ந்தது. நான் தோல்வியடைந்த பிறகு அசோக் கெலாட் தலை மையில் உள்ள அரசு எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. என்னை மோசடிக்காரி என்றும் ஊழல்வாதி என்றும் கூறி வருகிறார்கள்.
 
லலித் மோடி இங் கிலாந்தின் பிரபல விளை யாட்டான கிரிக் கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர், அய். பி.எல். என்னும் கிரிக் கெட்டை கொண்டுவந்து குறுகிய காலத்திலேயே இந்தியாவில் உள்ள அனைத்து இளைய தலை முறைகளிடம் கொண்டு சேர்த்தவர். இது ஒரு சாதனையாகும்; லலித் மோடியின் இந்தச் செயல் பாராட்டத்தக்கதாகும். அவர் எனது உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். லலித் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்தியா வில் இல்லை, தற்போது உள்ள பிரச்சினை எல் லாம் அரசியல் சூழ்ச்சி தான், ஆகையால் அவ ருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் இங்கி லாந்து நீதிமன்றம் எடுக் கத் தேவையில்லை.  இங்கி லாந்து நீதிமன்றம் தவறு தலாக லலித்மோடி மீது நடவடிக்கை எடுத்தால், அது லலித்மோடியை அவமானப்படுத்துவது போலாகிவிடும். லலித் மோடிக்கு ஓர் அவமானம் என்றால் அது ராஜஸ் தானின் மகாராணியான எனக்கும் அவமானம் தான் என்று என்னுடைய சுயநினைவுடன்  ஆங்கி லத்தில் நானே எழுது கிறேன்.

இத்துடன் லலித் மோடி எங்களது குடும்ப உறவுகள் குறித்த சில ஆவணங்களை இணைத்துள்ளேன். மேலும் அதிக ஆவணங்களை நான் நேரில் கொண்டு வந்து இங்கி லாந்து நீதி மன்றத்தில் வழங்குவேன்.

தமிழ் ஓவியா said...

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்
தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

அரசு வழக்குரைஞரே அம்பலப்படுத்துகிறார்


டில்லி, ஜூன் 26_ மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர் களை விரைவில் விடு விக்கும் வகையில் வழக் காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன், ஆங்கிலப் பத் திரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

இதன் விவரம்: 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டி ராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர் களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த் தியது தெரியவந்தது.  தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப் பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும் தொடர்பு உள்ள தாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறி யிருந்தார்.   தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்தி ரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.

மோடி அரசு வந்த உடனேயே தேசிய புல னாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித் தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி,  உங்க ளுக்கு ஒரு செய்தி இருக் கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.

பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக் கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து  மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக் கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரை ஞர் நீதிமன்றத்தில் வாதா டுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.

இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியி ருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்கு களை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித் தால்தான் தேசிய புல னாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில்  -_ இந்த வழக்கில் அல்ல -_  ஈடுபட முடியும் என்று  கூறினேன்.
 
அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேச வில்லை என்றார் அவர். ரோஹினி செலிய னுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக் கப்பட்டுவிட்டன. அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது.  மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந் தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமா னியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகை யில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள். அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால்  அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

இவரை மறக்க முடியுமா?

 

- உடுமலை அ.ப.நடராசன்



பேராசிரியர் ந.சுப்ரமண்யன் அவர்கள் 27.6.1915ல் பிறந்தார். 99 வருடங்கள் 6 மாதங்கள் வாழ்ந்தார். 27.6.2015 நூறு ஆண்டுகள் முடிந்து விட்டன. இன்று ஏன் அவரை நினைக் கிறோம்? அப்படி என்ன சாதனை புரிந்து விட்டார்?

தமிழ், ஆங்கிலம் இவற்றில் 152 நூல்களை எழுதினார். இவற்றில் மெய்யியல், தன் வரலாறு, சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், அரசியல், பொருளா தாரம், மகளிர் மேம்பாடு, சமூகவியல், அகழ்வாராய்வு, சங்க இலக்கியம், சட்டம், இன்னும் காலத்தால் அழியாத மொழிபெயர்ப்பு நூல்களும் அடங்கும்.

135 நூல்களை எழுதிய பின் தனது 93ஆம் வயதில் தனது 60 ஆண்டுகால முயற்சியைத் துணிந்து நிறைவேற்று கிறார். மேலை நாட்டு எழுத்தாளர் தாமஸ் கார்லைவ் எழுதிய பிரெஞ்சுப் புரட்சி என்ற நூலைத் தமிழாக்கம் செய்கிறார். தனது 93-95 வயதுக்கிடை யில் சேக்ஸ்பியரின் நாடகங்கள் உட்பட 24 மொழி பெயர்ப்பு நூல்களை யும், 12 தமிழ் நூல்களையும் எழுதி உலக சாதனை படைக்கிறார்.

தன் வாழ்நாளெல்லாம் ஒரு கோட் பாட்டை மிக ஆதாரமாக வைத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அது என்ன?

உணவு, உடை உறையுள், மருத்துவ வசதி, கல்வி வாய்ப்பு, ஆரோக்கியம், புவியியற் சூழ்நிலை என்பவையும் இவை போன்றவையும் உலகில் ஒரு மனிதனுக்கும் கிடைக்காமல் இருக்கக் கூடாது, அப்படிக்கிடைக்காமல் இருக்கும் நிலைமையை எந்த ஒரு சக்தியேனும் உருவாக்கினால் அந்தச் சக்தியை அழிப்பதற்கு, அவ்வசதிகளை யிழந்தோர்க்குத் தார்மீக உரிமை உண்டு. அதை இயன்றால் அமைதி முறையில் செய்யலாம். இயலாது என்று உறுதிப்பட்டு விட்டால் அச்சக்திகளை எவ்வாறேனும் அழிப்பதற்கு அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு என்பதே ஆகும்.

அவரது எல்லாப் புத்தகங்களிலும் கீழே கொடுக்கப்பட்டவை குறிப்பாகச் சர்ச்சைக்குரியவை.

1) Hindu Tripod and other essays  தமிழில் இந்து முக்காலி

2) Brahmin in Tamil Country

3) தர்ம தேவதை 4) திருக்குறட் கட்டுரைகள்,

5) A phychobiography of C.Subra- mania Bharathi

6) Gandhi and his associates.

7) Epic musings.

இவரைப்பற்றிய தனிச் சிறப்பு என்ன வெனில் இவர் பார்ப்பன குடும்பத்தில் பிறந் திருந்தாலும் யாருடைய தாட் சண்யத்தையும் எதிர் பார்க் காமல், எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் பட்டதைப் பேசி யும் எழுதியும் வந்ததே ஆகும்.

இந்து முக்காலி என்ற நூலில் இந்து மதம் அதிக காலம் நீடிக்காது என்றும் Brahmin in Tamil country  என்ற நூலில் பார்ப்பனர்கள் தமிழகத் துக்கு எப்படி வந்தார்கள், எந்தெந்த வழிகளில் ஏற்றம் கண்டார்கள், அவர்களது குணங்கள், நடை முறைப் பழக்க வழக்கங்கள் இவற்றை ஆதாரங்களுடன் விளக்கி யுள்ளார்.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் இது வரை அவரைப்பற்றி  அறிந்திராத மறு பக்க உண்மைகளையும் எழுதியுள்ளார்.

இன்னும் மேலாக தர்மதேவதை என்ற நூலின் முற்கூறலாக இதை எழுதுகிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக தெய்வம் என்று ஒன்றினை இட்டுக்கொண்டு அது செய்வதெல்லாம் தர்மம் என்று ஏற்றுக் கொள்வதை விட, தர்மம் என்பது யாது என்று நிர்ணயித்துக் கொண்டு அதன் உருவாய் நிற்பது தான் தெய்வம் என்பதே சிறந்தது என்று புது விளக்கம் சொல்கிறார்.

இக்கதையில் துரோணர், ஏகலைவ னிடம் குருதட்சிணையாக கட்டை விரலைக் கேட்கிறார். இதற்கு ஏகலைவன், எனது வலது கைக்கட்டை விரலால் உங்களுக்கு ஆகக்கூடியது ஒன்று மில்லை. நான் வேட்டை ஆடி ஜீவனம் செய்பவன். கொடுக்க முடியாது என்று மறுக்கும் விதத்தில் புராணத்தின் போக் கையே துணிச்சலாக மாற்றி இதுதான் தர்மம் என்று எழுதியுள்ளார். இது ஒன்றே போதும் அவரைச் சிறப்பு செய்வதற்கு இவர் எழுதிய கருத்துகள்

1) நான் ஒரு நாத்திகன் அல்ல Agnostic, பிரபஞ்சத்தைப் பற்றியேல அறிந்து கொள்ள முடியாது என்னும் கருத்துடையவன்.

2) அரசியல் கொள்கைகளில் நான் ஒரு முற்போக்குவாதி. அகில உலக முற்போக் குக் கட்சியின் உறுப்பினன். எல்லாவிதமான தீவிரவாதத்திற்கும் எதிரான மிதவாதி.

3) உலக அரசாங்கம் என்பதில் நம்பிக்கையுண்டு. வரலாற்றில் 90% போர் களுக்கு அடித்தளமாக அமைந்தவை தேசிய வாதமும் மதமுந்தான்.

தமிழ் ஓவியா said...

4) சமுதாயப் பிரச்சினைகள் தீர்க்கப் படாமல் இருக்கும்போது நாட்டின் செல் வம் அற்பமாகவும் , ஆடம்பரமாகவும் பயனற்ற முறையில் வீணடிக்கப்படக் கூடாது.

5) மதத்தைத் தனி மனிதனின் நம் பிக்கை அளவில் நிறுத்த வேண்டும். சமு தாயத்தின் ஒரு அக்கறையாக மாற்றக்கூடாது.

6) தீண்டாமை சட்டப்புத்தகத்தில் மட் டுமல்ல, உண்மையிலேயும் ஒழிக்கப்பட வேண்டும்.

7) ஆடவர்க்கும் மகளிர்க்கும் இடையே சட்டம் சமுதாய நிகர்மை இருக்க வேண்டும்.

8) ஆங்கிலம் போன்றதோர் நவீன மொழி வாயிலாகத் தரப்படும் கல்வியே இந்நாட்டை பழமையினின்றும் வெளிக் கொணர முடியும்.

9) வெற்று விவரங்களை அறிவிற்கு நிகராகக் கருதும் நிலை தவிர்க்கப்படல் வேண்டும்.

10) இங்கு இப்போது ஆக்கம் பெறும் திரைப்படங்கள் என்னும் கொடுமையைஉடனடியாக அழித்தல் வேண்டும்.

11) மதிப்பீட்டிற்குப் புறம்பான மனிதர் என்று எவரும் இல்லை. மேற்கண்ட கருத்துக்களை பார்ப்பனர் களோ அந்த சமுதாயமோ ஜீரணம் செய்ய முடியவில்லை. இவர் பார்பபன சமுதாயத்திற்குப் பயன்படவில்லை என்பதால் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை. நிராகரித்தனர். பார்ப்பனியப் பத்திரிக்கைகளால் பக்குவமாக மறைத்து வைக்கப்பட்டார்.

இவர் சங்கராச்சாரிகளிடமோ, அரசியல் தலைவர்களிடமோ, உயர்நிலை அரசு அலுவலர்களிடமோ அவர்கள் விருப்பத்துக்கிணங்க நயந்து செல்ல வில்லை. இதனால் இவருக்குப் பெரிய பதவிகளோ, பட்டங்களோ, பரிசுகளோ, பொற்கிழிகளோ, வாய்ப்பு வசதிகளோ ஏதும் கிடைக்கவில்லை.

தான் எழுதிய வரலாறு தவிர்த்த புத் தகங்களை நூலகங்களோ, வெளியீட்டா ளர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. அச்சடித்த புத்தகங்கள் பெருமளவில் தேக்கம் கண்டன. தனது எண் ணத்திற்கும் பணிக்கும் தக்க அங்கீகாரம் சமு தாயத்திடமிருந்து கிடைக்கவில்லை என மனம் தளர்ந்திருந்த நிலையில் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இவரது நூல்களைப் படித்து இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு இவரைச் சந்திக்கிறார்.

இவரது புரட்சிக்கருத்துக்களைப் பாராட்டி ஊக்கம் கொடுக்கிறார். உங்களை கவுரவிக்க நாங்கள் இருக்கிறோம். மனம் தளராமல் கருத்துக் களை வெளியிடுங்கள் என்று கூறி விடுதலையில் அறிமுகம் செய்கிறார்.

உலகமெங்கும் உள்ள வாசகர்கள் இவரைத் தெரிந்து கொள்கின்றனர். தேங்கிக்கிடந்த புத்தகங்களையும் விற் றுக் கொடுத்து நஷ்டத்தைப் போக்கு கிறார். நவில் தோறும் நூல் நயம் போல தமிழர் தலைவர் அவர்களும் மோகனா அம்மையார் அவர்களும் அடிக்கடி பேராசிரியரைச் சந்தித்து அவரது தளர்ச்சியை நீக்குகின்றனர்.

தமிழர் தலைவர் தம்மைச் சந்தித்தது யாம் பெற்ற பேறு, பார்ப்பனர் என்றும் பாராமல் தன்னைப் பாராட்டியது, தன்னை நெகிழச்செய்து விட்டது என்று கூறினார்.

இன்னும் மேலாக வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பேரா சிரியருக்கு, வரலாற்றுத் துறையில் மிகச்சிறந்த கல்விப்பணி ஆற்றியமைக் காகவும் புதுமைச் சிந்தனைகளைக் கொண்ட சமூக மறுமலர்ச்சியை பல் கலைக்கழக அளவில் ஏற்படுத்திச் சிறப்புப்பணி ஆற்றியமைக்காகவும் பாராட்டி டாக்டர் (D.Litt) மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி தலைசிறந்த அறிவுக் கருவூலக் கல்வியாளர் (Eminent Exuberant Educationist)  என்ற சிறப்பு விருதினை நேரில் வழங்கி சிறப்புச் செய்தது.

அவரது திடீர் மறைவின் போது தமிழர் தலைவரும் மோகனா அம்மை யாரும் உடனே பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

(ஆந்திர) கோரா காலத்திற்குப் பிறகு கால் நூற்றாண்டு கழித்து ஒரு பார்ப்பன அறிஞர் நம் இயக்கத்தின் பாராட்டினைப் பெறுவது சிறப்பாகக் கூறிப்பிடத்தக்கது என்று 1999 ஆம் வருடத்திலேயே பெரியார் பேருரை யாளர் பேராசிரியர் இறையன் அவர்கள், பேராசிரியர் ந.சுப்ரமண்யன் அவர்களைப்பற்றி எழுதி இருந்தது மிகவும் சாலச் சிறந்ததேயாகும்.

தமிழ் ஓவியா said...

உலக சமஸ்கிருத மாநாடாம்

 

அடுத்து உலக சமஸ்கிருத தின அறிவிப்பிற்கான நடவடிக்கையில் இறங்கி விட்டது மோடி அரசு    உலகம் முழுவதும் ரூ.7000 கோடி க்குமேல் வருவாய் ஈட்டும் யோகாவை உலக யோகா தினமாக மாற்றி சந்தைப்படுத்திய நிலையில், அடுத்து சமஸ் கிருதத் தையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல, உலக சமஸ்கிருத தினத்தை விரைவில் கொண்டுவர மோடி அரசு முடிவெடுத்துள்ளது; ஜனவரிமாதம் நடந்த பகவத்கீதை  விழாவின் போது சமஸ்கிருத மொழியின் சர்வதேச தூதுவராக சுஸ்மாசுவராஜ் நியமிக்கப்பட்டார்.

அப்போதே உலகம் முழுவதும் சமஸ்கிருதத்தை எப்படி கொண்டு செல்வது என்று திட்டமிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆலோசகர் கிருஷ்ணகோபால்  யோகாதினத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதின் முடிவை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினார். இதனை அடுத்து யோகா தினம் முடிந்த கையோடு சுஸ்மா சுவராஜ் அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

இம்மாதம் 28-ஆம் தேதி துவங்கி ஜூலை 2 வரை உலக சமஸ்கிருத மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலக சமஸ்கிருத மொழித்தூதுவராக இருக்கும் சுஸ்மா சுவராஜ் ஜூன் 24 அன்று காலை புறப்பட்டுச் சென்றார்.  இந்த மாநாட்டில் முதல் முறையாக முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திலேயே உரையரங்கேற்றம் மற்றும் கட்டுரைகள் நடைபெறுகிறது. மொழிபெயர்ப்பிற் கென்று சிறப்பு மென்பொருள் அடங்கிய ஒலிப்பேழை அனைவருக்கும் வழங்கப்படும். மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் போதே ஆரம்ப சமஸ்கிருதப் பயிற்றுவிப்பும் நடைபெறுமாம்.   அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சமஸ்கிருத மொழிக்கென தனித்துறை ஒதுக்கப்பட்டு அதற்காக நிதிவாரியமும் அமைக்கப்பட்டது.  இதற்கு சமஸ்கிருத பாரதி என்று பெயர் சூட்டப்பட்டது.  தற்போது மோடி தலைமையில் ஆன அரசு மீண்டும் சமஸ்கிருதத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது, சமஸ்கிருத பாரதியின் தலை வரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான  சுஸ்மா சுவராஜுடன் பாங்காக்செல்லும் போது அவருடன் 250 பேர் அடங்கிய குழுவில் 40 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் களும் 8 இந்து அமைப்பின் முக்கியப் பிரமுகர்களும் உடன் சென்றுள்ளனர் - யார் வீட்டுப் பணத்தில் பார்ப்பனீயம் கொழிக்கிறது?

சமஸ்கிருத பாரதி அமைப்பின் செயலாளர் தினேஷ்காமத் கூறும்போது இம்முறை சமஸ்கிருத மொழிக்கான முழு மரியாதையும் கிடைத்திருக்கிறது. பாங்காக்கில் இது போன்ற மாநாடு நடைபெறுவது முதல் முறையாகும். பாங்காக்கில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமஸ்கிருத மாணவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.    இந்த மாநாட்டில் சமஸ்கிருத தினமாக அறிவிக்க அரசு எடுத்துவரும் முயற்சி குறித்து ஆய்வறிக்கை வெளியிடப் படுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து சமஸ்கிருத வித்வான்கள் கலந்துகொள்கிறார்கள்  யோகா தினம் போல் உலக சமஸ்கிருத தினம் ஒன்றை அறிவிக்க பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரத் திட்டம் இந்த மாநாட்டில் உருவாக்கப்படுமாம். இந்தப் பிரச்சாரக் குழுவிற்கும் சுஸ்மா சுவராஜ் தலைவராக இருப்பார். இந்தக் குழு இந்த ஆண்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து சமஸ்கிருத தினம் கொண்டாட அய் நாவை வற்புறுத்தும் என்று சமஸ்கிருத பாரதி தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாட்டை வெற்றி கரமாக முடித்துத் தர தாய்லாந்து அரசு முழுமையாக ஒத்துழைப்பு நல்கும் என்று தெரிவித்துள்ளார். வரும் 2017-ஆம் ஆண்டிற்குள் சமஸ்கிருத தினம் அறிவிக்க முழுமுயற்சி எடுக்கப்படும்; இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டு உலக சமஸ்கிருத நாளில் மாநாடு நடைபெறும் என்று தினேஷ்காமத் கூறினார்.

தமிழ் ஓவியா said...


இது குறித்து மோடியின் பிரதமர் அலுவலகம் மற்றும் ஸ்மிருதி இராணியின் மனிதவளத்துறை அமைச் சரகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரித்துள்ளது.

தாய்லாந்தில் துவங்கும் சமஸ்கிருத மாநாடு வெற்றிபெற இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் சமஸ்கிருதத்தை உலகெங்கும் கொண்டுசெல்ல இந்த மாநாடு நல்ல துவக்கமாக அமையும் என்றும் உலகமெங்கும் சமஸ்கிருத பிரச்சார அமைப்புகள் துவங்க இந்த மாநாட்டில் முடிவெடுத்து சமஸ்கிருத பாரதி தரப்பில் அதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 0.1 சதவீதம் பேசும் மொழிக்கு இவ்வளவு அமர்க்களம்!

ஆர்.எஸ்.எஸின் அடிப்படையில்தான் இன்றைய மத்திய அரசு இயங்குகிறது என்பதற்கு இது ஒரு கூடுதல் சான்றாகும். இந்தியாவுக்கு ஆட்சி மொழியாக சமஸ் கிருதம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கோல்வால்கர் கூறியுள்ளார்; குருநாதர் கூறியதை மோடிகளால் அலட்சியப்படுத்த முடியுமா?

1938ஆம் ஆண்டிலே சென்னை மாநிலத்தின் பிரத மராக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்த போது சென்னை  லயோலா கல்லூரியில் என்ன பேசினார்? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று பேசிடவில்லையா?

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் குறியாக இருப்பார்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; பார்ப்பன எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என்பது மட்டும் அசைக்க முடியாத பேருண்மையாகும்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை

ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

தமிழ் ஓவியா said...

காவல்துறை கவனிக்குமா?

இந்தியாவில் அதிகமாக இருப்பது ஓரல் கேன்சர் என்னும் வாய்ப்புற்று நோயும், மார்பகப் புற்று நோயும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைத் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார், சமீபத்தில் அறிக்கை ஒன்றில் இந்த வாய்ப்புற்றுநோய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது என அபாய அறிவிப்பு விடுக்கிறார்.

சமீபத்தில் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டபோது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரும், டாக்டர் சாந்தா அம்மையாரோடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது புகையிலைப் பழக்கத்தின் கெடுதியை வலியுறுத்தியிருப் பதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக விடிவு காலம் பிறக்கும் என்றுதான் எண்ணி னோம். ஆனால் சென்னை நகர வீதிகளில் எட்டுத்திசைகளிலும் சுற்றிப்பார்த்தால் தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழிக்கும், தமிழ்க் குடும்பங்களின் அமைதியை அழிக்கும், சோகத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் தாராளமாக, எவ்வித பயமுமின்றி, தயக்க முமின்றி விற்கப்படுவதைக் காணலாம்.

அதிலும் கல்லூரிகளில் இன்றைய மாணவர்களின் பையைச் சோதனை செய்தால் தவறாமல் காணலாம். சென்னை நகர வீதிகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை ஒருபுறம் நடைபெறுகிறது என்றால் தடையிலில்லாமல் மலிவு விலையில் விற்கப் படும் போதைப் பொருட்கள் மற்றொருபுறம்.

வட்டமான வண்ணக்குடை, அதன் கீழே வடநாட்டுக்காரன் ஒருவன் வட்டத்தட்டில் வரிசையாக மூடிபோட்ட டப்பாக்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பீடாக்கடை. ஆனால் அங்கு விற்கப்படும் போதைப்பொருள் பெயர் மாவா

பத்து ரூபாய் சில இடங்களில் ஒன்பது ரூபாய்க்கும் கிடைக்கிறது. மாவா என்று கேட்டால் போதும் ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில், பொடிபோல் மேலே ஒரு ரப்பர் பேண்டு சுற்றி உடனே கிடைக்கிறது.

இந்த மாவா போடுகிறவன் வாய்குளறும். ஒரு மயக்கமூட்டும் வாசனை வரும். இதைப்போட்டால் மூளை மந்தமாகும். மூளைக்குப் போகும் ரத்தக்குழாயில் ரத்தத்தை உறைய வைக்கும். இது போட்டால் மது அருந்திய அளவிற்குத் தள்ளாட்டமும் இருக்கும். இந்த சுகம் பத்து ரூபாய்க்குள் சாலையின் ஓரங்களில் மட்டுமல்ல, முதன்மையான இடங்களில் காவலர் எதிரேயே விற்கப்படுவதுதான் கொடுமை. திருவல்லிக்கேணி பாரதிசாலை தொடக்கத் தில் எக்ஸ்பிரஸ் அவின்யூ எதிரில் மயிலாப் பூரில், வடசென்னையில் தாராளமாக விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பவர்கள் தவறாமல் மாமூல் கொடுத்து விடுவதாகவும் கேள்வி.

மதுரவாயலில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகம், கேளம்பாக்கம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அருகில் மிகத் தாரா ளமாக விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

இது போல் புகார் செய்யப்படும்போது ரெய்டு என்று ஏமாற்றுவது நடைபெறும். எங்கிருந்து வருகிறதோ அங்கேயே வராமல் தடுப்பதை விட்டு இது போல் ஏமாற்று வேலை. இதனால் பாதிப்பிற்குள்ளாவது மாணவர்கள் மட்டுமில்லை. நம் திராவிடச் சமூகத்தின் உழைக்கும் வர்க்கமான கட்டடக் கலைஞர்கள் சிறுசிறு பணியாளர்கள் என்று பலரும் அடக்கம்.

தலைக்கவசம் போடவேண்டும் என்று வலியுறுத்தும் நீதிமன்றம் இதைத்தடுக்கும் படி அரசுக்கு எச்சரிக்கக்கூடாதா?

அண்டை மாநிலமான கேரளத்தில் இந்த ஆபத்தான பொருள் விற்பனை கிடையாது. இங்கே அரசாங்கம், காவல்துறை பற்றிய அச்சமோ, கவலையோ இல்லாமல் ஒளிவு மறைவு கூட இல்லாமல் விற்கிறார்கள்.

இது இப்படியென்றால் வெற்றிலை பாக்குக் கடைகளில் பகிரங்கமாக விற்கப் படும் போதைப்பொருள் பெட்டி பெட்டியாக விற்கப்படும் போதைப் பொருளின் ஹான்ஸ் என்பது. மஞ்சள் வண்ண பிளாஸ்டிக் உறையில், முகர்ந்து பார்த்தாலே ஒரு வித மயக்கம் தரும் புகையிலைப் பொருள் வெளிப்படையாக விற்கப்படு கிறது. இதன் விலையும் மலிவு தான்.

ஏற்கெனவே தெருவிற்கு இரண்டுகடை என்று மதுபானக்கடையைத் திறந்து போதையை பரப்பும் அரசு மாவா, ஹான்ஸ் விஷயத்தில் மட்டும் நட வடிக்கை எடுத்து விடுமா?

சமூக ஆர்வலர்கள் என்போர் மது வுக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால் போதாது?

இந்தப் போதைப்பொருள் விற் பனையை முழுமையாக ஒழிக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா?

சென்னை நகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், பிரபல மான கடைகளில் பணிபுரியும் ஏராளமான வடநாட்டவர்கள் வருகையால் ஏற்பட்ட சமூகத் தீமை இது.

கழிவறை, யோகா என்றெல்லாம் பரப்புரை செய்யும் மய்ய அரசு, சமுதாயத்தை மெல்லக் கரையான் போல் அரித்துப் புற்றுநோய்க்கு வழிகாட்டும் இந்தத் தீமைக்கு, மனித மூளையைச் செயல்படாமல் தடுக்கும் நஞ்சை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

வெற்றிலை பாக்குக் கடைகளில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை கிடையாது எனும் விளம்பரத்தைப் பார்க்கையில் இந்தக் கேலிக்கூத்தை நினைத்துச் சிரிப்பு வருகிறது.

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப் பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக் கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும் கேட்டார். அவர் இப்படி கேட்கும்போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அப்போது தந்தை பெரியார்அதற்குப் பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/page-7/103998.html#ixzz3eBDtz8O9

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து



(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.

நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.

இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,

சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.

மிருகத்தனமானது

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.

இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.

ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?

வேதங்கள் பொய்

சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?

அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை

இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

(பகுத்தறிவு, 1933)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்



பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை  விளைவித்தது !

திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.

மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.

புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !

- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.     மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மோடி அரசின்மீது முஸ்லிம் சட்டவாரியம் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு!
ஆர்.எஸ்.எஸின் கட்டுப்பாட்டில் ஆட்சி செயல்படுகிறது!




புதுடில்லி, ஜூன் 26_ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அவர்களின் திட் டங்களை நிறைவேற்றி இந்தியாவின் மதச்சார் பின்மைக்கு பங்கம் விளைவிக்கிறார் மோடி என்று அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் இஸ்லா மியர்களின் உரிமை களுக்கு என்று உருவாக் கப்பட்டுள்ள முஸ்லீம் சட்டவாரியம் முதல்முறை யாக மோடி அரசுக்கு நேரடி எச்சரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து முஸ்லீம் சட்டவாரியம் புதனன்று வெளியிட் டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்

அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் கடந்த ஆண்டு மோடி தலைமை யில் ஆட்சிப்பொறுப் பேற்ற என்.டி.ஏ அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற தில் இருந்தே சிறு பான்மை மக்களுக்கு எதி ரான போக்கை கடைப் பிடித்து வந்தது.

இருப் பினும் மோடியின் பேச் சுமீது நம்பிக்கைவைத்து நாங்கள் அமைதியாக இருந்தோம். மோடி வாய் பேச்சில் மட்டும் சிறு பான்மை நலன்பற்றி பேசுகிறார். ஆனால், அவ ருக்குக்கீழ் பதவியில் உள்ள அமைச்சர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் பாஜக முதல்வர்கள்கூட சிறு பான்மையினருக்கு எதி ரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அனைவரையும் மதவழி பாடு செய்ய வைப்பது (சூரிய நமஸ்காரம்) மத ஸ்லோகங்களைச் சொல்ல வைப்பது, மற்றும் மத அடையாளங்களை கட் டாயமாக அணிய வைப் பது போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களை மோடி செயல்படுத்துவ தில் மிகத் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் தொடர்ந்து நடைபெறும் சிறுபான்மையினருக்கு எதிரான விரோதப் போக்கு நாடு முழுவது முள்ள சிறுபான்மையினத் தலைவர்களைக் கவலைக் குள்ளாக்கியுள்ளது.

புகார்கள் குவிகின்றன

கடந்த சில மாதங் களாகவே முஸ்லீம் மதத் தலைவர்கள், முஸ்லீம் நல அமைப்பின் உறுப்பினர் கள் மற்றும் அரசு சாரா முஸ்லீம் சேவை நிறுவ னத்தவர்கள் என பலர் நாடு முழுவதிலுமிருந்து எங்களிடம் புகாரளித்து வருகின்றனர். மேலும் வட மாநிலங்களில் சிறுபான் மையினரின் சொத்துக்கள் மறைமுகமாக சூறையா டப்பட்டு வருகின்றன.

அவர்களின் தொழில் நிறுவனங்கள் செயல்படா மல் அழிக்கப்பட பல் வேறு முறையில் தொந் தரவு செய்து வருகிறார் கள் பாஜக ஆளும் மாநி லங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு ஆளும் அதிகார வர்க்கமே நேரடியாக இறங்கி முஸ்லீம்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வருகின்றன.

யோகா நிகழ்ச்சியின் போது அவர்கள் கொடுத்த உறுதி மொழியை மீறி ஓம் என்ற மந்திரத்தையும் சூரிய நமஸ்காரத்தையும் செய்யச் சொல்லி வற்புறுத் தினார்கள்.  இந்த அரசு மத ரீதியாக நேரிடையா கவே செயல்பட ஆரம் பித்துவிட்டது.  இது அர சமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும்.

மோடி தலைமையில் உள்ள அரசு, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத் தவும், அதற்காக மக்களி டையே சிறுபான்மை யினர்மீது வெறுப்பை உண்டாக்கவுமான செயல் பாடுகளை வெளிப்படை யாகவே செய்ய தொடங்கி விட்டது. இது குறித்து மவுலானா வலி ரஹ் மானி விரிவாக எங் களுக்கு ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அடாலி கிராமத்தில் என்ன நடந்தது!

ஊடகங்களை விலைக்கு வாங்கிக்கொண்ட இந்த அரசு, முஸ்லீம்கள் மீது வட இந்தியா முழுமையும் நடக்கும் மத மோதல் களை வெளியில் வராமல் மூடி மறைத்து விடுகிறது, இதற்கு உதாரணமாக அரியானா மாநிலம், அடாலி கிராமத்தில் நடந்த மோதலைக் கூற லாம். சுமார் 3000 முஸ் லீம்கள் தாக்கப்பட்டு சொந்த கிராமத்தை விட்டு விரட்டப்பட்டும், இரண்டு வாரத்திற்குப் பிறகு சாதாரண நிகழ்ச்சி போல் பத்திரிகைகள் எழுதி இருந்தன. இன்று வரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை.

அதை விட அரசு அவர்களுக்கு பாதுகாப்பிற்கான எந்த ஒரு உத்தரவாதமும் செய்யவில்லை.  முக்கியமாக அடாலி மதக்கலவரம் திட்டமிட்ட மதக்கலவரமாகும், இதற்கு அரசு முழுமையாக துணை போயுள்ளது. காவல்நிலை யத்தில் அடைக்கலம் பெற்ற முஸ்லீம் பெண் கள் இரவில் துன்புறுத்தப் பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும் என்று கூறினார்.

உலகம் முழுவதுமறிந்த காந்தியாரின் பிறந்த நாளை, சுவட்ச பாரத் என்று அறிவித்து விட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் கே.பி ஹெட் கேவார் நினைவு நாளை யோகா தினமாக அறி வித்தது திட்டமிட்ட செயலாகும். மதச்சார் பின் மைக்கு எதிராக செயல் பட்டு வரும் மோடி அரசை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்பு களும்தான்.

அரசின் செயல்பாடுகள் குறித்து முஸ்லீம்களும் சிறு பான்மை மக்களும் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். சிறுபான்மை விரோதப் போக்கிற்கு எதிராக விரைவில் அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் இந்தியா முழு வதுமுள்ள சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து அடுத்த நட வடிக்கை குறித்து திட்ட மிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...

40 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை சிந்தனை
1975 நெருக்கடி காலம் மீண்டும் வருமா?

அத்வானியின் கருத்தைப் புறந்தள்ள முடியாது!

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

மிசா கைதியாக இருந்த தமிழர் தலைவர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
1975 நெருக்கடி நிலைக்குப் பிறகு மீண்டும் நெருக்கடி நிலைவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1975 ஜூன் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள், நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் - முறை கேடுகளுக்கான வழிகளில் (Corrupt Practices) வெற்றி பெற்ற தேர்தல் என்று போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் என்ற சோஷியலிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்ட வழக்கில், அந்த உயர்நீதிமன்ற நீதிபதி S.N. சின்கா அளித்த தீர்ப்பில், அவரது தேர்தல் செல்லாது; மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்கத் தகுதி இழந்த வராவார் என்று குறிப்பிட்டதானது, நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது; அந்த நீதிபதியின் நேர்மை, அஞ்சாமை தெளிவு - இவைகளை மக்களில் பெரும்பாலோர் வரவேற்றனர்.

அதற்கு முன்பே 1973 முதலே இத்தகு தவறான வழிகள் நாட்டில் மேலோங்கியிருந்தன. ஊழல் தலை விரித்தாடியது - இவைகளுக்கு எதிராக லோக் நாயக் என்று அழைக்கப்பட்ட ஜெயப் பிரகாஷ் நாராயண் தலைமையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம் ஆட்சிகளில் குறைபாடுகளைச் சுட்டி அறவழி போராட்டங்களை நடத்தியது.

அதற்குப் பிறகு ரயில்வே ஸ்டிரைக் போன்றவைகள் நடந்தன; ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மத்திய அமைச்சர் எல்.என். மிஸ்ரா கொல்லப்பட்டார். இதை வைத்து (1975 ஜூன் 10-இல்) ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டனர்

நெருக்கடி நிலை பிரகடனம்!

இவைகளைப் பின்னணியாகக் காட்டி 1975 ஜூன் 25இல் நெருக்கடி காலம் (Emergency)
பிரகடனப்படுத்தப்பட்டது.

முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர்.

பத்திரிக்கைககள் தணிக்கை (Censor) க்கு உட்படுத்தப் பட்டு, அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே வெளியிடப் படும் வகையில் அவர்களது அதிகாரிகளின் கண்காணிப் புக்கு உள்ளாகியது. கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்தது. பாசீசம் தலை விரித்தாடியது.

அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் எல்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

தி.மு.க. ஆட்சி கலைப்பு!

1975இல் தி.மு.க. ஆட்சி கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆட்சி, மத்திய அரசின் இந்த நெருக்கடி பிரகடனத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நின்றது.

இதனால் பிரதமரின் வெறுப்புக்கும், உருட்டல் மிரட்ட லுக்கும் ஆளாகிய நிலை ஏற்பட்டது.

1975 - இந்த நெருக்கடியை எதிர்த்து ஒரு மாநாடுகூட பெரியார் திடலில் நடைபெற்றது. ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கலைஞர் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

1975 ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. (356ஆவது பிரிவின்படி)

அன்று இரவே தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திராவிடர் கழகத்தவரில் சென்னையில் என்னையும் மற்றும் 9 முக்கியஸ்தர்களையும் நள்ளிரவில் கைது செய்து, அடுத்த நாள் சென்னை மத்திய சிறைச்சாலையில் கொண்டு போய் அடைத்தனர். (மற்ற சிறைச் சாலைகளிலும் பலர் கைது செய்து அடைக்கப்பட்டனர்)

தமிழ் ஓவியா said...

அருவருப்பான வசவுகளை அதிகாரிகள் எங்கள்மீது காரணமின்றிப் பொழிந்தனர் - அச்சுறுத்தினர்.

9 நம் நம்பர் பிளாக் எனும் தொழுநோயாளிகளை அடைத்த பகுதிகளில் (அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு) வைத்தனர்.

எட்டடி கொட்டடியில் 8 பேர்கள் - இரண்டு பானைகள்; ஒன்றில் தண்ணீர் - மற்றொன்று சிறுநீர் கழிக்க; சாப்பாடு தரும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எங்கள்அறைகள் பூட்டப்பட்டே இருக்கும். காலைக் கடன்கள் கழிக்கக்கூட குறிப்பிட்ட நேரம்தான். உடனே உள்ளே போய் விடுவோம்.
எங்களது உடைகள் எதுவும் 15 நாட்கள் வரை தரப்படாததால், கட்டிய வேட்டி, உடையையே நாங்கள் பயன்படுத்திய நிலையில் இருந்த பரிதாபம்! அது எங்களை மிகவும் பக்குவப்படுத்தி விட்டது!

சிறையில் தாக்கப்பட்டோம்!

பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9 மணி; எங்கள் அறைகள் திடீரென்று திறக்கப்பட்டன. ஆயுள் கைதிகளான காணிக் வார்டன்கள் என்பவர்களைக் கொண்டு எங்களை வரிசையாக (File) உட்கார வைத்து, திடீரென்று மூர்க்கத் தனமாகத் தாக்கினர்கள். எங்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! எனக்கு லட்டியின் தாக்குதல் கண்ணுக்கு கீழே! தோழர் N.S. சம்பந்தம் முதுகுத் தண்டு வடம் அறுவை சிகிச்சை செய்தவரை அடிக்காதீர் என்று கெஞ்சிக் கேட்ட எனக்கு அந்த லட்டிக் குத்து! இன்று வரை அதன் பாதிப்பு தொடர்கிறது. தி.மு.க. தி.க. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் (காங்கிரஸ்-ஓ) முக்கிய தோழர்கள் சுமார் 300 பேர்களுக்கு பக்கமாக இருந்தோம்! நடிகவேள் எம்.ஆர். ராதாவும் எங்களுடன் கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர்.

உணவில் திட்டமிட்டே கல் போடப்பட்டது. சிறுநீரும் கலக்கப்பட்டது (இது ஜஸ்டீஸ் இஸ்மாயில் விசாரணைக் கமிஷன் அறிக்கையிலும் உள்ளது)

தி.மு.க. தோழர்கள் குறிப்பாக மேயர் சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, முரசொலி அடியார் போன்றவர்கள் வெகு கடுமையாகத் தாக்கப்பட்டனர். எட்டி உதைக்கப் பட்டனர். கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.

விடுதலை முரசொலி போன்ற ஏடுகள் தணிக்கை என்ற பெயரால் மிகவும் அச்சுறுத்தப்பட்ட அவலம் மறக்கப்பட முடியாத ஒன்று!
அடுத்த நாள் இரவு சகோதரர் மு.க. ஸ்டாலினை அடித்து ரத்தம் சொட்டச் சொட்ட இரவு எங்கள் கொட்டடி யில் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த எங்கள்மீது அவரைத் தள்ளினர். திடீரென்று பார்த்தபோது ஸ்டாலின் ரத்தக் கோலத்தில், இக்கோலத்தில் ஆறுதல் கூறி அரவணைத்தோம் - நானும் நண்பர் சிட்டிபாபுவும்.

தமிழ் ஓவியா said...


நாங்கள் எந்த சிறையில் இருக்கிறோம் என்ற தகவல் கூட எங்கள் வீட்டாருக்குத் தெரியாது!

இந்த கொடுமை ஒரு மாதத்திற்குமேல் நீடித்து - பிறகே பல அதிகாரிகள் மாற்றத்திற்குப்பின் நிலைமை மாறியது.

சென்னையில் தான் இப்படி - அதி தீவிர கொடுமையின் அட்டகாசம்!

தோழர் சிட்டிபாபுவின் மரணம், சாத்தூர் பால கிருஷ்ணன் மரணம் - சிறைச்சாலை விளைவுகள்.

வெள்ளைத்தாள்களை நீட்டினர்

வெள்ளைத்தாள்களை வார்டன்கள் கொண்டு வந்து கொடுத்து, கட்சியிலிருந்து விலகுவதாக மன்னிப்புக் கூறி எழுதினால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும், வெளியில் செல்ல முடியும்; இல்லையேல் உங்கள் கதை இங்கேயே முடிந்து விடும் என்று அச்சுறுத்தி, ஆசைகாட்டினார்கள்.

திராவிடர் கழகத்தவர்களிடம் வர மாட்டார்கள்; கம்யூனிஸ்ட்களிடமும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்களை தவிர மற்ற சபலத்திற்குரியவர்களிடத்தில் இப்படியெல்லாம் செய்வார்கள்!

நேர்காணல் போதும் சி.அய்.டி.கள்

நேர்காணல் வாரம் ஒருமுறை; இரண்டு மூன்று சி.அய்.டி. அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கொண்டு மனைவி மக்களிடம் நாங்கள் பேசுவதைக் குறிப்பெடுப் பார்கள். அடிப்படைச் சுதந்தரம் பறிபோன நாள் அந்நாள்!

எப்படியே 1977 மார்ச் 17 நெருக்கடி காலம் அகற்றப் பட்டது!

நாங்கள் சுமார் ஒரு ஆண்டுகால சிறை வாசத்திற்குப் பிறகு கெட்டுப் போய் இருந்த வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்தது.

அத்வானியின் கூற்றைப் புறந்தள்ள முடியுமா?

இப்படிப்பட்ட இருண்ட காலம் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் - முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்களே கூறுவது - புறந்தள்ளக் கூடிய ஒன்றா?

வெளியில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பைவிட, பா.ஜ.க.வின் பல குரல்கள் - மோடி ஆட்சியின் அமைச் சர்களுக்கு எதிராக அக்கட்சியினரால் நாளும் எழும்பு கின்றன. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்ற மூத்த பா.ஜ.க. தலைவர்களே விமர்சிக் கின்றனர்.

நாட்டில் மீண்டும் மீண்டும் அவசரச் சட்டத்தையே புதுப்பிக்கும் போக்கு அரும்புகிறதோ என்ற அய்யம் - மக்கள் ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்குகிறது!

தமிழ்நாடு அரசும் சரி, மத்திய அரசும் அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் போல, தகவல் தரும் நவீன மின்னணு சாதனங்களையும் மிரட்டும் போக்கு இருப்பது விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமல்ல.

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் எந்த விலையும் கொடுக்க எப்போதும் தயார் நிலையில் இருப்பதே ஒரே வழி - இருண்ட காலம் மீண்டும் வந்து கதவைத் தட்டாமல் இருக்க.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை, 25.6.2015



Read more: http://www.viduthalai.in/page1/103917.html#ixzz3eBF27PNH

தமிழ் ஓவியா said...

காலாவதியான மருந்துகள் தயாரிப்பு விநியோகம்


22.6.15 அன்று சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் கிடங்கில் காலாவதியான மருந்துகள் தயாரிப்பு விநியோகம்???

சி.பி.சி.அய்.டி. இன்று அதிரடி சோதனை.

RSS இன் துண்டறிக்கை தான் நினைவில் வருகிறது... ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தபட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாழ்த்தபட்ட மக்கள் அதிகம் வாங்கி பயன்பெறும் மருந்துகளை மத்திய அரசே கவனக் குறைவாக இப்படி காலாவதியான மருந்துகளை கொடுத்து பொதுமக்கள் உயிருடன் விளையாடுவது சரியா?



Read more: http://www.viduthalai.in/page1/103920.html#ixzz3eBFOOqTZ

தமிழ் ஓவியா said...

இரயில்வேயும் தனியார் துறைக்குச் செல்லுகிறதா?

இரயில்வே சீர்திருத்தத்துக்காக விவேக்தேவ்ராய் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு கடந்த மார்ச்சு மாதத்தில் இடைக்கால அறிக்கை ஒன்றை அளித்தது - அதன் பிறகு கடந்த வாரத்தில் இறுதி அறிக்கையையும் அளித்து விட்டது. அய்ந்து ஆண்டுகளில் இரயில்வே துறையை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் அவ்வறிக்கை விலாவாரியாகக் கூறியுள்ளதாம்.

* ரயில்வேக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை. அதை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விடலாம்.

* இந்திய ரயில்வே உள்கட்டமைப்புக் கழகம், ரயில்வே போக்குவரத்துக் கழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக் கலாம். தண்டவாளம், ரயில் நிலையங்கள், சிக்னல்கள் இதில் அடங்கும். போக்குவரத்துக் கழகத்தில் தனியாரை இணைக்கலாம். ஏர்போர்ட் போல ரயில் நிலையம் அரசிடம் இருக்கும் (இதையும் படிப்படியாக தனியாருக்குத் தரவேண்டும்).

ரயிலை தனியார் நிறுவனங்கள் ஓட்டலாம்.

* புறநகர் ரயில்கள் போன்ற நஷ்டம் ஏற்படுத்தும் ரயில் களை மாநில அரசுகளிடம் தந்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். * சரக்குப் போக்குவரத்தை தனியார் கையில் தர வேண்டும்.

* ரயில் போக்குவரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, மருத்துவமனை, ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் தந்து விடவேண்டும்.

* கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாம். * ஓய்வுபெறும் ஊழியர்கள், பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மென்ட்டுகளை பணமாகத் தராமல், புல்லட் பாண்ட்டாக தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்தே பணமாக்க முடியும்) * தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச் சினைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ரயில்வே ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும். * அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக ஆட்களைத் தேர்வு செய்யக்கூடாது.

இத்தகைய பரிந்துரைகளின் அடிநாதம் எது என்றால் அரசுத் துறையில் இருக்கும் இந்தப் பெரிய இந்திய நிறுவனம் தனியார்த்துறைக்குத் தாரை வார்க்கப்பட வேண்டும் என்பதுதான்.

12,617 பயணிகள் இரயில்கள், 7,421 சரக்கு இரயில்கள், 7,172 தொடர் வண்டி நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ., இருப்புப்பாதை 13 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்திய இரயில்வே துறை. நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.30 கோடி மக்கள் பயணிக்கும் மிக முக்கியமான துறை இது. உலகில் உள்ள அரசுத் துறை நிறுவனங்களில் இந்தியாவின் இரயில்வே துறையே மிகப் பெரியது. மக்கள் பயணிப்பது மட்டுமல்ல; சரக்குப் போக்குவரத்து என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும்.

தமிழ் ஓவியா said...

இப்பொழுது நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால் தனியார்மயம் என்ற தண்ட வாளத்தில் ஓடக் கூடியதாகும். பன்னாட்டு நிறுவனங் களும், உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளும் சகட்டுமேனிக்கு மேய்வதற்கு அகலப் பாதையைத் திறந்து விடும் கொள்கையைக் கொண்டதாகும்.

இதனைப் புரிந்து கொண்டால் இரயில்வே நிருவாகம் பெரும்பாலும் தனியார்த்துறைக்குத் தள்ளி விடப்படுவதன் இரகசியம் எளிதாகவே புரிந்து விடும். தொடக்கத்தில் சில பணிகள் மட்டும் தனியாருக்கு என்று சொல்லுவார்கள்; நாளடைவில் முழுக்க முழுக்க கூடாரத்தில் ஓட்டகம் நுழைந்த கதையாகத்தான் முடியும். இரயில்வேயில் நட்டம் ஏற்படுகிறது என்றால் அதனைச் சரி செய்வதற்கான முயற்சியையும், திட்டங்களையும் மேற்கொள்வதுதான் புத்திசாலிகள் செய்யக்கூடிய செயலாக இருக்க முடியும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத் அவர்கள் இரயில்வே அமைச்சராக இருந்தபோது இரயில்வேயை இலாபகரமான நிறுவனமாக நிகழ்த்திக் காட்டினாரே! இந்தப் பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் அடேயப்பா, எப்படி எப்படியெல்லாம் அவரைக் கேலி செய்வார்கள் தெரியுமா? அவர்களின் முகங்களில் எல்லாம் கரியைத் தடவும் வகையில் அவர் சாதனை வீரராகக் கம்பீரமாக வெளிவந்தாரே! இன்னொன்றும் இதில் முக்கியமாகும். அரசாங்கம் நடத்தும் எல்லாத்துறைகளுமே இலாபத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது மக்கள் நலன்தான் முதன்மையானது -அதனை வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது. கட்டணத்தை முடிவு செய்வதில் அரசு தலையிடக் கூடாதாம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாமாம். இது ஒன்று போதாதா தனியார் முதலாளிகளுக்கு? தானடித்த மூப்பாகத்தானே வரிந்து கட்டிக் கொண்டு சம்பாதிக்க முயலுவார்கள்.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் என்ன நடந்து கொண்டுள்ளது? எண்ணெய் நிறுவனத்தவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற பூட்டுச் சாவியை முதலாளிகளின் கையில் கொடுத் ததால் அதன் சுமை பொது மக்கள் தலையில் விடிந்து கொண்டு இருக்கிறது. அதே பாணியில்தான் இரயில்வே துறையும் இயங்கும் நிலை ஏற்படப் போகிறது. உலகில் இரயில்வே துறையில் எட்டாவது இடத்தில் இருக்கும் நாடு அர்ஜென்டினா. 47 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கு இரயில் இயக்கப்படுகிறது; 95 ஆயிரம் ஊழியர்கள்அங்கு பணியாற்றினர். சில ஆண்டுகளுக்குமுன் அரசுத் துறையில் இருந்த இரயில்வே, தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் சோகமானது.

இரயில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி தண்டவாளங்களையும், இரயில் நிலையங்களையும்கூட நேர்த்தியாகப் பராமரிக்க முடியவில்லை. 70 ஆயிரம் பேர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன. உற்பத்திப் பொருள்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் தோல்வி ஏற்பட்டதால் விலைவாசிகள் விண் ணைத் தொட்டன. அதன் விளைவு, சிறிது சிறிதாக மீண்டும் அரசு கைக்கு இரயில்வே துறை பயணித்துக் கொண்டுள்ளது.

அர்ஜென்டினாவின் கசப்பான அனுபவத்தைப் பார்த்த பிறகாவது மத்திய அரசு புத்திக் கொள்முதல் பெற வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சோசலிலிஸ்ட் என்பதையும் கவனத்தில் கொள்ள அரசு கடமைப்பட்டுள்ளது. தனியார்மயம் சமூகநீதிக்கு குழிவெட்டக் கூடியது என்பதையும் மறக்கக் கூடாது.



Read more: http://www.viduthalai.in/page1/103913.html#ixzz3eBFdsIEL

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

தமிழ் ஓவியா said...

இடுக்கண் வருங்கால் நகுக - மிசாவில் நிகழ்வுகள்!

-----------veramani

இந்திய வரலாற்றின் இருண்ட காலம் என்று வர்ணிக்கப்படும் நெரு டிக்கடி காலம் (Emergency Period) என்பது எத்தனையோ உள் அடக்கங் களையும் வெளிப்புற ஆகா, ஊகா பாராட்டுகளையும் பெற்ற இரு புறத் தோற்றங்களைக் கொண்டது!

எண்ணற்ற பதினாயிரக்கணக்கில் இந்தியாவின் பல்வேறு கட்சி, அமைப் புகளின் தலைவர்கள் கைது - காரணம் காட்டப்படாமலேயே, எப்போது அவர்கள் வெளி வருவார்கள் என்று கைதானவர்களுக்கோ சிறை நிர் வாகிகளுக்கோ கூடத் தெரியாத - தெரிந்து கொள்ள முடியாத விசித்திர நிலை. (ஆயுள் தண்டனைக் குற்ற வாளிகளுக்குக்கூட ஒரு இரும்பு பித்தளை அட்டை பெயர், எண், விடுதலையாகும் நாள் - 20 ஆண்டு கழித்து, என்று உண்டு. மிசா என்ற நெருக்கடி கால கைதிகளுக்கு எது வுமே தெரியாது!

இப்படிப்பட்ட இருண்ட, இறுக்க மான சூழ்நிலைகள் கவ்விய நேரத்தில், நாங்கள் மிகவும் கலகலப்பாகவே சிறை வாழ்க்கையை அனுபவித்தோம் - ஆரம்பக் கொடு மைகளையும் தாண்டி!

இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர்தம் குறளின் பொருளை பல நேரங்களில் சுவைத்து மகிழ்ந்தோம்!
1976 ஜனவரி 31ஆம் தேதி இரவு தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்டு, மாலையே குடிஅரசுத் தலைவர் ஆட்சிஅமுலுக்கு வந்தது. எங்களை நள்ளிரவு 1 மணி அளவில் கைது செய்து சென்னை நகர போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டோம்!

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் இவர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியி லிருந்தும் கைது செய்து அங்கு (போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு)க் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டி ருந்தனர்.

இரவெல்லாம் அங்குள்ள ஹாலில்(Press Room) உட்கார்ந்திருந்தோம்.

அந்த நள்ளிரவில் நடிகவேள் M.R. ராதா அவர்களைக் கைது செய்து எங்களுடன் அமர வைத்தனர்.

சில நிமிடங்கள் கழித்து நடிகவேள் அவர்கள், என்னை அழைத்துக் கொண்டு மாட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பழைய அய்.ஜி.கள், சிட்டி போலீஸ் கமிஷனர்கள் படங்கள்பற்றி கேட்டுக் கொண்டே வந்தார். நான் பெயரைப் படித்து இது சஞ்சீவிப் பிள்ளை, இது F.V. அருள் இப்படி வரிசையாக நான் ஒவ்வொரு படத்தையும் பற்றி விளக்கி வந்தேன். அங்கே ஒரிடத்தில் மய்யப்பகுதியில் திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டிருந்தது. உடனே என்னைப் பார்த்து ராதா அண்ணன் அவருக்கே உரிய குரலில், சத்தமாக - ஏம்பா, திருவள்ளுவர் எப்பப்பா நம் நாட்டிலே அய்.ஜி.யா இருந்தார்? என்று ஒரு போடு போட்டார்!

உடனே மிகுந்த அதிர்ச்சி கலந்த சோகத்துடன் உட்கார்ந்திருந்த அத் தனைப் பேரும் கலகலப்பாக சத்தம் போட்டுச் சிரித்தனர்!
நிலவிய இறுக்கச் சூழ்நிலை திடீரென மறைந்தது!

இடுக்கண் வருங்கால் நகுக இதுதானோ?

****

வாரம் ஒரு முறை சிறையில் நேர் காணல் இரண்டு மிசா கைதிகளை தனித்தனியாக உட்கார வைத்து, அவர்கள் வீட்டுக் குடும்ப உறுப்பினர்கள் - மனைவி - மக்கள் - நெருங்கிய உறவினர்கள் அமர வைத்து நலம் விசாரித்து உரையாட அனுமதிப்பர் சிறை அதிகாரிகள்.

அந்த இடத்திற்கு முன்னால் சிறை அதிகாரி ஒருவர் அமர்ந்திருப்பார்.

ஒரு சி.அய்.டி இன்ஸ்பெக்டர் (Intelligence Inspector) சுருக்கெழுத்தில் கைதிகளின் மனைவி மற்றும் சொந்தக் காரர்களிடம் பேசுவதைக்கூட ஒருவரி விடாமல் எழுதுவார். திரைக்குப்பின்னால் இதே போன்று மற்றொரு அதிகாரி துப்பறியும் இன்ஸ்பெக்டர் (CID) அமர்ந்து குறிப்பெடுப்பார்.

இப்படிப்பட்ட ரத, கஜ, துரகபதாதி களுடன் எங்களின் தனிப்பட்ட சுதந்தரம் காவு கொடுக்கப்பட்டு - ஏதோ ஒப்புக்கு பார்த்தும், பேசியதுமாக நேர்காணல் முடிந்து விடும்.

தமிழ் ஓவியா said...

நடிகவேள் ராதா அவர்களின் நேர் காணலுக்கு அவரது மனைவி திருமதி தனலட்சுமி அம்மாள் வந்து பேசிக் கொண்டு, எப்ப மாமா நீங்க வீட்டுக்கு வருவீங்க? என்று வெகுளித்தனமாகக் கேட்டார்.

விட்டா நான் இங்கேயா இருப்பேன்? உடனே வந்துர மாட்டேனா? நான் என்ன இங்கேயே தங்கி குடும்பம் நடத்தப் போறேனா? என்றார்.

ஒரே சிரிப்பு அதிகாரிகளாலும் அடக்க முடியவில்லை. அதற்கு அடுத்த கட்டம் தான் மிகவும் சுவையானது!

ஏன் மாமா வெளியே சொல் றாங்க; என்னவோ நீங்க எழுதிக் கொடுத்தா உட்டுடுவாங்க வீட்டுக்கு வந்துடலாம் என்று. அப்படி எழுதிக் கொடுத்துட்டு வாங்களேன் என்றார்.

என்னான்னு எழுதித் தர்றது? - M.R. ராதா; அந்த அம்மா இனிமே இந்த தப்பைச் செய்ய மாட் டேன்ண்ணு எழுதிக் கொடுங்க என்றார்.

ஏம்மா, நான் என்ன தப்புப் பண்ணி இங்கே கூட்டியாந்திருக் காங்க... இன்னமும் புரியலையே யாருக்கும்!

நான் வீட்டிலே படுத்து தூங்கிக் கிட்டு இருந்தேன். எழுப்பிக் கூட்டி யாந்துட்டாங்க,

இனிமே இப்படி செய்ய மாட் டேன்னு என்னை எழுதிக் கொடுக் கச் சொல்றே.

இனி நான் ராத்திரிலே தூங்க மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்றியா? என்று பட்டென்று பதில் சொன்னார்.

ஒரே சிரிப்பு - எழுதிய சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவைக் கீழே போட்டு விட்டு சிரித்தார். சிறை அதிகாரி களின் சிரிப்பு அடங்க நேரமாகியது.

பக்கத்தில் நேர் காணலில் இருந்த எங்களுக்கு அவரது - பதிலை நையாண்டி நகைச்சுவைக் குரலில் கேட்டு சிரித்துச் சிரித்து மகிழ்ந்தோம். இப்போதும் இது நல்ல காமெடி பீஸ் அல்லவா!

இடுக்கண் வருங்கால் நகுக! - துன்பம் போயிற்று - மகிழ்ச்சி மின்னிற்று!



Read more: http://www.viduthalai.in/page1/103914.html#ixzz3eBFvhLve

தமிழ் ஓவியா said...

வட நாட்டு அரசியல் தளத்தைப் புரட்டிப் போட்ட சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் ஜூன் 25


- குடந்தை கருணா



தான், தேநீர் விற்று வாழ்ந்தவன் என்றும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தில் பிறந்தவன் என்றும் கூறும் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி சார்ந்துள்ள பாஜக எனும் கட்சி பார்ப்பனர்களின் மேல் தன்மையை நிலை நாட்டுவதற்காகத் தோன்றிய கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் ஒரு பிற்படுத்தப்பட்டவரை முன்னிறுத்த வேண்டிய நிலைமை இன்று ஏன் ஏற்பட்டது? பீகார், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநி லங்களில் இதற்கு முன்னர், பார்ப் பனர்களும், உயர் ஜாதியினரும்தான் முதல்வர் என்ற நிலை மாறி இன்று ஒடுக்கப்பட்டவரின் கோட்டையாக மாறியது எப்படி? ராம் விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற விளிம்பு நிலைச் சமுதாயத்தினர் இன்று அரசியல் கட்சிகளை உருவாக்கி, ஆட்சி பீடத்தில் பங்கு பெறுவதும், உதித் ராஜ் போன்ற இந்திய வருவாய் துறையின் முன்னாள் அதிகாரி, பாஜக நாடாளு மன்ற வேட்பாளராகவே புதுடில்லியில் போட்டியிடுவதும், இதற்கு முன்பு நினைத்துப் பார்த்திட முடிந்ததா?

இந்த அரசியல் மாற்றமெல்லாம் எப்போது நடந்தது? காங்கிரசிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, ஜன்மோர்ச்சா அமைப்பைத் தொடங்கி, பின்னர் ஜனதா தளம் எனும் கூட்டமைப்பைத் துவங்கி, தேர்தலில் வெற்றி பெற்று 1990-ஆம் ஆண்டில் பிரதமர் ஆன தற்கு பின்புதானே. தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் முதன்மை யானது, ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுப் பரிந்துரைகளை நிறைவேற் றுவேன் என கூறியவாறு, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்பார்த்தவாறே, பார்ப்பனர்கள் கடுமையான எதிர்ப்பை சாலைகளிலும், ஊடகங்களிலும் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

கட்சியில், தன் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்காக, வி.பி.சிங் நாட்டை பிளவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டினர். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள், 16.6.1989-இல் புது டில்லியில் வி.பி.சிங் பேசிய போதும் சரி, பின்னர், 18.9.1989-இல் சென்னையில் பேசியபோதும், மண்டல் அறிக்கையை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்று வி.பி.சிங் சொன்னதை, வசதியாக மறந்து அல்லது மறைத்து தங்களது எதிர்ப்பை பெருங் கொந்தளிப்புடன் காட்டினர். ஆக, நாட்டின் பெரும்பான்மை மக்க ளாகிய சூத்திர மக்களின் உரிமைச் சாசன மாம் மண்டல் குழுப் பரிந்துரைகளை 1980ஆம் ஆண்டு முதல் முடக்கி வைத் ததை வெளியில் கொண்டு வந்தவர் வி.பி.சிங். இதற்காக தனிப் பெருமை எதையும் வி.பி.சிங் கொண்டாடவில்லை. மாறாக, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், லோகியா ஆகியோரது கனவை தனது அரசு நனவாக்கியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல; பின்னர் 1996-ஆம் ஆண்டில் அய்க்கிய முன் னணி ஆட்சி அமைத்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட பிரதமர் வாய்ப்பை ஏற்க மறுத்து, தேவகவுடா பிரதமராகும் வரை, புதுடில்லியில் நுழையாமல் தவிர்த்தவர்; மீண்டும் 1997-ல் தேவகவுடாவிற்குப் பிறகு, அய்.கே.குஜ்ரால் பிரதமராக வழி வகுத்தவரும் வி.பி.சிங் தான். தனது இறுதி நாள்வரை ஏழை மக்களின் உரிமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குமாகவே தனது வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப் புற வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு அடிகோலியவர்களான அருணா ராய், நிகில் தேவ் ஆகியோர், வி.பி.சிங் மறைவை ஒட்டி விடுத்த இரங்கலுரையில், வி.பி.சிங் வரலாறு, மண்டல் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்த போராடியதோடு முடிந்துவிட வில்லை; ஏழை மக்களின் பக்கமும், நில ஆக்கிர மிப்புக்கு எதிராகவும் அவர் போராடியது எங்களுக்கு ஊக்கம் அளித்தது; இந்தச் சட்டங்கள் நிறைவேற வழிவகுத்தது என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டதையொட்டி நடைபெற்ற தேர்தலில் மிக அதிகமான இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் பதவியேற்ற காங்கிரசு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து, அம்பானி, அமிதாப் பச்சன் போன்ற பெரிய திமிங்கலங்களின் வரி ஏய்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்று அங்கே நடக்கும் ஊழல்களையும், (போபர்ஸ் உட்பட) அம்பலப்படுத்தி, நேர்மையானவராக அக்கட்சியிலி ருந்து விலகி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இறுதிவரைப் போராடிய ஒரு மாமனிதரை, இந்தப் பார்ப்பன, பனியாக் கும்பல்களும் அதன் அடி வருடிகளாகத் திகழும் ஊடகங்களும் என்றைக்காவது பாராட்டியதுண்டா? மாறாக இன்றளவும் புழுதிவாரித் தூற்றித்தான் வருகின்றன.

இதுதானே இவர்களின் யோக்கியதை.

இதைவிட மிகக் கொடுமை; வி.பி.சிங் அவர்களாலே அடையாளம் காணப்பட்டு இன்றளவும் அரசியல் செய்யும் லாலு பிரசாத், நிதீஷ்குமார், முலாயம்சிங், சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் போன்றோர், வி.பி.சிங் பற்றி எந்த மூச்சும் விடாமல் இருப்பதுதான்.

இல்லையென்றால், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தவுடன், அவரை விட மக் களின் உரிமைக்கு அதிகம் பாடுபட்ட வி.பி.சிங் அவர்களுக்குத்தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என குரல் கொடுத்திருப்பார்களே.

ஆனால், வி.பி.சிங் எந்த மக்களின் உரிமைக்காக பிரதமர் பதவியையும் துச்சமென தூக்கி எறிந்து, இறுதிவரைப் போராடினாரோ, அந்த மக்கள் அவரை நன்றியோடு கொண்டாடவேண்டும். அவர்கள் தம் கடமை. இந்தக் கடமையை பெரியார் பிறந்த மண்ணில், சமூகநீதிக் காவலருக்கு அவரது பிறந்த நாளில் நாம் கொண் டாடுவதும், அவருடைய புகழைப் பாடுவதும் இயல்பே. வாழ்க வி.பி.சிங்; வெல்க சமூக நீதி.



Read more: http://www.viduthalai.in/page1/103915.html#ixzz3eBGExDI9

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப்  பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக்  கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும்  விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத  நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும்  கேட்டார்.   அவர் இப்படி கேட்கும்போது  ஒரு  பார்ப்பனரும் கூட இருந்தார்.    அப்போது தந்தை பெரியார்அதற்குப்  பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து  17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து உலகிற்கே தேவை!

 

பெண்ணடிமைத்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டும் உள்ள தனிச் சொத்தல்ல; உலகம் முழுவதுமே இது நீக்கமற நிறைந்திருக்கிறது.

சென்னை - திருவொற்றியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் (10.5.2007) நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூறுகிறது.

குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல் நலனை முன்னிட்டும் கருத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கருத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உ,ரிமையாக இருக்க வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்கான தனிச் சட்டத்தையும் அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் திருவொற்றியூர் தீர்மானமாகும்.

இந்தத் தீர்மானம் ஏதோ இந்தியாவுக்கு மட்டும் தேவைப்படும் என்று நினைத்து விடக் கூடாது; அயர் லாந்து நாட்டில் நிலவும் ஒரு சட்டத்தைப் பார்க்கும் போது திருவொற்றியூர் மாநாட்டுத் தீர்மானத்தின் முக்கியத்துவம் புலனாகும். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். மருத்துவர் அந்தக்கரு சரியாக உருவாகவில்லை என்கிறார். ஆனால், அய்ரிஷ் சட்டமோ அந்தக் கருவை மகப் பேறு காலம்வரை அப்பெண் சுமந்தே தீரவேண்டும் என்கிறது.

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அதனால், கருவுற்றிருக்கிறாள். அவள் அந்தக் கருவை சுமந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் அய்ரிஷ் சட்டம் அவளை அந்தக் கருவை சுமந்தேயிருக்குமாறு கூறுகிறது.

அவளுக்குத் தேவை கருக்கலைப்பு. ஆனால் எந்தப் பெண்ணையும் கருக்கலைப்பு செய்து கொள்ள அயர்லாந்து அனுமதிப்பதில்லை. ஆகவே, அவள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகிறாள். அதுவும் அவள் உடல் அதற்கு இடம் கொடுத்தால்தான். அப்படி நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் அங்கேயே இருந்துகொண்டு கருக்கலைப்புக்கான முயற்சிகளைச் செய்தார் என்றால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் என்கிற அச்சுறுத்தல் இருக்கிறது.

அவர் குற்றவாளி இல்லை. அவருக்கு கருவைக் கலைத்துக்கொள்ளும் மனித உரிமை உள்ளது.
இவ்வாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு சபையின் சார்பில் அயர்லாந்து அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கோரிக்கையை இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் மனிதநேயர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.
நன்றியறிவிப்பில் குறிப்பிடும்போது, கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் கோரியமைக்கு நன்றி. அதேபோல் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குற்றவாளிகளாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, அயர்லாந்தில் உள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுமிகளுக்கான சுகாதாரக் கவனிப்பு  மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படு கின்றன. அவர்களுக்கான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் தேவை! அயர்லாந்து அரசுக்கு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளோம்.

இக்கோரிக்கைகளை இப்பொழுதே உங்கள் நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்துவிடுங்கள்.

இவ்வாறு அயர்லாந்து அரசுக்கு கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை செய்திட இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் கோரிக்கையாக பன்னாட்டு பொது மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

பன்னாட்டுப் பொது மன்னிப்பு சபையின் வேண்டுகோள் மிகவும் நியாயமானது.
அதே நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் வெகு நீண்ட காலத் திற்கு முன்பிருந்தே கூறி வருவதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

ஆம், மற்ற மற்ற கருத்துக்களில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். பெண்ணுரிமைப் பிரச்சி னையில் தந்தை பெரியாரியல் என்பது உலகிற்கே தேவைப்படக் கூடியது என்பதில் அய்யமே இல்லை.

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

மற்றுமொரு தொல்லை

மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில், ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிகல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக் கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்பந்தமான தெய்வ சம்பந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம்தோறும் வந்து கொண்டுள்ளன.

தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்தபாடில்லை. முதலாளிகள் கோடியாடை களின்னும் மழுங்கவில்லை. பலகார பட்சணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.

மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி, தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்டகடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்த லட்சணத்தில் கார்த்திகை தீபம் என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது; தீபாவளி தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களை பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.

இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே (சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறா ரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும், குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும், ஜவுளிகளையும் குடங்குடமாக, மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாகத் திருப்தியடைவதுமான களியாட் டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும், அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத் தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.

மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.

நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத் தானைத் தட்டினால் லட்ச தீபம் போல அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்து வரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து, அத்தகைய காட்டு மிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக்காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம் சொக்கப்பானை கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 11.11.1934

தமிழ் ஓவியா said...

சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை



சென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும் அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவி களும், பெரும்பான்மையாகக் கொண்டதாக ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

இந்த நாட்டு பணக்காரர்கள் ஜமீன்தார்கள் ஆகியவர் களுக்கு எப்படி உண்மையான விடுதலை தேவை இல்லையோ அதேபோல் இந்தப் பெண்களுக்கும் உண்மை யான விடுதலை தேவை இல்லை என்பதோடு தெரிவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் அரசியல் துறையில் பிரவேசித்து தோழர் சத்தியமூர்த்தியை ஆதரிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றால் பெண்கள் சமூகத்துக்கு அதைவிட வெட்கக் கேடு வேறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆண்களும் பெண்களும் சரிசமமான சுதந்திரத்திற்கு அருகதையுடை யவர்கள் என்பதையே ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பெண்களுக்குள்ள இழிவையும், தாழ்வையும் அப்படியே நிலைநிறுத்தப்பாடு படுகின்றவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.

உதாரணமாக தேவதாசி தொழிலை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தேவதாசித் தொழிலை ஆதரித்தார். தேவதாசிகள் இல்லாவிட்டால் தெய்வங்களுக்குச் சக்தி குறைந்துவிடும் என்றும், ஆகமங்கள் கெட்டு விடும் என்றும் பேசினார்.

இரண்டாவதாக - குழந்தைகளுக்கு கலியாணம் செய்யக்கூடாது என்றும், குழந்தை பருவத்திலேயே பிள்ளை பெற விடக்கூடாது என்றும் கொள்கையுள்ள சாரதாசட்டத்தை ஹ. ராமசாமி முதலியார் ஆதரித்து இந்தியா முழுவதும் சுற்றி அபிப்பிராயம் தெரிந்து வரும் காலத்தில் தோழர் சத்திய மூர்த்தி அவர்கள் குழந்தை கலியாணம் கூடாது என்று சட்டம் செய்தால் நான் அந்தச் சட்டத்தை மீறி என் மகனுக்கு கலியாணம் செய்து சிறை செல்லுவேன் என்று தைரியம் சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத் தூண்டினார்.

இப்படிப்பட்டவருக்குப் பெண்கள் சங்கம் ஆதரவு கொடுப்ப தென்றால் அச்சங்கம் பெண்கள் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் பொருந்தியதா என்பதைக் கவனிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். - பகுத்தறிவு - வேண்டுகோள் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி, 27 ஜூன் 2015


கொழும்பு, ஜூன், 27_ இலங்கையில் 4 குழந் தைகள் உள்பட 8 தமிழர் களை கொலை செய்த ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக இழைக் கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வ தேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 தமிழர்களை, சுனில் ரத்னாயகே என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடந்த 2000ஆம் ஆண்டு பிடித் துச் சென்று அவர்களது கழுத்தை அறுத்து கொடூர மாக கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத் திய இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சுமார் 15 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கில், ராணுவ அதி காரி சுனில் ரத்னாய கேவுக்கு மரண தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அரசு வழக்குரைஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான சரத் ஜெயமன்னா வரவேற்றுள்ளார். ஒரு நம்பகமான விசார ணையை எங்களால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புத்த மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடான இலங் கையில், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப்பிறகு யாருக் கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் சுமார் 400 பேர், தண் டனை நிறைவேற்றத்துக் காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதம் மீண்டும் தலைதூக்குகின்றது

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சமூக வலைத் தளமான டுவிட்டர் பக் கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள் ளனராம்.

கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 தமிழ் மக்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்ற வாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன் றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிபர் சுனில் ரத்னாயக் கவுக்கு ஆதரவாக டுவிட் டர் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளி லேயே 10 ஆயிரம் பேர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.


'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங் கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக் கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ராம்!

படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படை வீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ள தாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர் கள் குறிப்பிட்டுள்ளனர். ஈழத் தமிழர்மீது சிங்களர்களின் இனவாதம் மீண்டும் தலைதூக்குகின் றது என்ப தற்கு சான்றாக இதுவும் ஒன்றாக அமைந் துள்ளதாக சமூக வலைத் தள பதிவர்கள் தமது கருத் துக்களை பதிவிட்டிருக் கிறார்கள்.



Read more: http://www.viduthalai.in/headline/104041-8-----------.html#ixzz3eHUPqUFO

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட  அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்



சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.

தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும்  வேறு யாராலும் முடியாது என்று.

தமிழ் ஓவியா said...

ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.

ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில்.  நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.

நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச்  சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி  பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

ஏழுமலையான் சக்தி வெத்து வேட்டுதானா? கோயில்மீது விமானம் பறக்க தடையாம்!

சனி, 27 ஜூன் 2015

திருமலை, ஜூன் 27_ திருப்பதி ஏழுமலை யான் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ய்பு இருப்பதாக மத்திய புலனாய்வு துறை பலமுறை எச்சரிக்கை செய்துள்ளதாம்!. கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் திருப்பதியை ஆய்வு செய்த எம்பிக்கள் குழு, ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க பரிந்துரை செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?

சனி, 27 ஜூன் 2015
 

ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டி



ஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன்  என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.

அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.

அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.
கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.

சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.

புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

குஜராத் : பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்

சனி, 27 ஜூன் 2015


அகமதாபாத் ஜூன் 27_ குஜராத் கலவரத்தில் சொந்தப் பகைக்காக பாலி யல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்ற வாளிகளுக்கு எதிராக சாட்சிகள் இல்லாததைக் காரணம் காட்டி மூன்று குற்றவாளிகளையும் அகமதா பாத் நீதிமன்றம் விடுதலை செய்தது.   குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆட்சியின் போது 2002-ஆம் ஆண்டு மதக்கலவரம் நிகழ்ந்தது, இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படு கொலை செய்யப்பட்ட னர். இஸ்லாமியர்களின் வசிப்பிடம் தொழில் நிறு வனம் மற்றும் சொத்துக் கள் சேதப்படுத்தப்பட் டன. இன்றுவரை இந்த கலவரத்திற்காக நீதி கிடைக்காத பட்சத்தில் முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். கடந்த ஆண்டு மோடி, அமித் ஷா போன்றவர்களை சிறப்பு புலனாய்வு நீதி மன்றம் இந்தவழக்கில் இருந்து விடுவித்தது.   இதனை அடுத்து கலவர வழக்கில் நேரடித் தொடர்புடையவர்கள் தற்போது விடுவிக்கப் பட்டு வருகின்றனர்.  கலவரத்திற்கு தொடர் பில்லாத ஆனந்த மாவட் டத்தில் ஆடே என்ற ஊரில் நிலத் தகராறு தொடர்பாக அங்குள்ள முஸ்லீம் குடும்பத்தின் மீது அந்த ஊரில் உள்ள சிலர் வன்மம் வைத்திருந் தனர். கோத்ரா சம்பவம், அதைத் தொடர்ந்து அகமதாபாத் வரை கலவரம் பரவியதைச் சாதகமாகக் கொண்டு அந்த ஊரைச் சேர்ந்தவர் கள் முஸ்லீம் குடும்பத்தி னரைக் கொலை செய் தனர், முஸ்லீம் குடும்பப் பெண்களான ஆயிசா, நூரி ஆகியோரை அன்கூர்  படேல் மோகன் படேல், நிகுல் படேல் போன்றவர் கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய் தனர், நூரியின் சகோதர ரான காதர் என்பவரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். சம்பவம் நடந்த பிறகு அனைத்து பிணங்களை யும் வீட்டிற்குள் போட்டு எரித்து விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடே ஊரைச் சேர்ந்த 20 பேர்கள் மீது சிறப்பு புலனாய்வுத்துறை வழக் குப் பதிவு விசாரணை செய்து வந்தது. கடந்த ஆண்டு 14 பேர், சாட் சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேரடித் தொடர்புடைய அங்கூர், மோகன், நிகுல் ஆகி யோரை அகமதாபாத் நீதி மன்ற நீதிபதி எ.எஸ்.பட்டு விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது, சிறப்புப் புலனாய்வுத்துறை குற்றம் தொடர்பானவர்கள் மீதான சான்றுகளை வைக்கவில்லை. மேலும் சாட்சிகள் யாரும் இவர் கள் இந்தச் சம்பவத்தில் தொடர் புடையதாகக் கூறவில்லை. ஆகையால் இவர்கள் அனைவரும் இந்த வழக் கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம் அதை என் முகத்தில் விடாதே!



யோகாவை யாரும் தடை செய்யக் கோரவில்லை. யார் யாருக்கு என்ன முடியுமோ அப்படி மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால், இப்போது மோடி நடத்திய யோகா நாடகம், தனது மத்திய தர வர்க்க வாக்காளர் களிடையே கிழியத் தொடங்கும் நல்லாட்சி எனும் முகமூடியை ஒட்ட வைக்க நடத்தப்படும் ஒட்டுப் பிளாஸ்திரி வேலை என்பதால் இதை நாம் எதிர்க்க வேண்டி யிருக்கிறது.

ஏழைகளை இன்னும் விலக்கி வைக்கிற ஒரு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தும் மோடி, பத்து பதினைந்து பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக்குவதே வளர்ச்சித் திட்டம் என்று சொல் லும் மோடி, ஏழைகளுக்கு பாது காப்பாக இருக்கிற நலத்திட்டங் களை எல்லாம் இழுத்து மூடிக்கொண்டிருக்கும் மோடி, தனது இந்துத்துவ அடியாட்கள் அடிக்கும் லூட்டிகளை அமைதி யாக இருந்து ஆமோதிக்கும் மோடி, கலர் கலராக உடையணிந்து நம்மைக் கேவலப்படுத்தும் மோடி, இந்தியாவில் இருக்கும் அறிவு சார்ந்தஅரசு நிறுவனங்களில் தனது ஜால்ராக்களை முக்கியஸ்தர் களாக்கி அவற்றை நீர்த்துப் போகச்செய்யும் மோடி, ஆதிவாசி, தலித், முஸ்லீம், கிறிஸ்தவர், ஹிந்தி அல்லாத பிற இந்திய மொழி பேசுபவர், விவசாயி, கைவினைஞர், மீனவர், பாலியல் சிறுபான்மை யினர், மாற்றுத் திறனாளி என்று எல்லோரையும் அந்நியனாக்கும் மோடி, யோகா என்ற பெயரில் நம்மை வைத்து காமெடி பண்ணுவ தாக சுயமரியாதை உள்ள எனக்குப் படுகிறது.

அதனால் நான் இந்த யோகா நாடகத்தை எதிர்க்கிறேன். சிலருக்கு வடக்கிருத்தல் உசிதம் என்றால் நான் அதையும் வரவேற்பேன்.

ஆன்மா சுத்தி அடையும், அதனால் கரண்ட் கம்பியில் தொங்க விருப்பமென்றாலும் நான் தடுக்க மாட்டேன். எனது பெருமை என்று என்னை உங்கள் விளையாட்டில் மட்டும் தயவு செய்து சேர்க்காதீர்!
இந்திய ஞானமரபு என்பது நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம். அதை என் முகத்தில் விடாதே என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

(முக நூலிலிருந்து  குடந்தை கருணா)

தமிழ் ஓவியா said...

இனியாவது போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...

அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள்- இந்நாள்!

1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் -அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்டநாள்!
பெரியார் - புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை,
பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்
கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி  என்ற விருது வழங்கப்பட்ட நாள்! மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் அறிவு ஆசான் பெரியாரின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பு: இத்தகு பெருமைமிக்க பாராட்டுரைகளை ஆய்வு செய்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த ஆண்டு நான்கு நாள்கள் கட்டணத்துடன் கூடிய ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவ்வுரைகள் தொகுக்கப்பட்டு சிறந்த ஆய்வு நூலாக விரைவில் வெளிவர உள்ளது.

தமிழ் ஓவியா said...

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!



வினோத வழிபாடாம்:
அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணமாம்!
வத்தலக்குண்டு, ஜூன். 29 திண் டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் கருப்பண்ணசாமி பாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவனின் உருவமாக அரச மரத்தையும், அம்மனின் உருவமாக வேப்பமரத்தையும் கருதி இரு மரங் களுக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வினோத வழிபாடு செய்து வருகிறார்கள்.

உலக அமைதி வேண்டி இந்த திருமணம் ஆண்டுதோறும் நடை பெறுவதாக கிராம மக்கள் அய்தீகமாக கருதுகின்றனர். இதே போல இந்த ஆண்டும் மணமக்கள் போல அரச மரத்தையும், வேப்பமரத்தையும் ஜோடித்து திருமணம் செய்து வைக் கப்பட்டது.

இதற்காக மணமேடை அமைத்து யாகம் வளர்த்து கோவில் குருக்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட் டது. தொடர்ந்து ஊர் கிராம மக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு, பட்டி வீரன் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்னர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இயற்கையான மரங்களை தெய்வங்களாக வழிபட்டு அவற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் ஊரில் அமைதி நிலவும் என்பது எங்களது அய்தீகம். அதனால் ஊரில் அமைதி நிலவ மரங்களுக்கு திருமணம் நடத் தினோம். கடந்த 33 ஆண்டுகளாக இது போன்று செய்து வருகின்றோம் என்றனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/104167.html#ixzz3eTLCnh3g

தமிழ் ஓவியா said...

பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை, ஜூன் 29 வால் பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் னால் வில்லோனி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 2 குட்டி உள்பட 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் லோயர் பாரளை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டு புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

 

இந்த யானைகள் கூட்டம் நேற்று இரவு அங்கிருந்து வால்பாறை பொள்ளாச்சி மெயின்ரோட்டை கடந்து புதுத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பூசாரி மணி என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்தது.

வீட்டுக்குள் துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்குமா? என்று தேடியது. வீட்டி லிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் எஸ்டேட் பகுதி மக்களுடன் இணைந்து யானை களை விரட்டினர்.

தமிழ் ஓவியா said...

பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை, ஜூன் 29 வால் பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் னால் வில்லோனி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 2 குட்டி உள்பட 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் லோயர் பாரளை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டு புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

 

இந்த யானைகள் கூட்டம் நேற்று இரவு அங்கிருந்து வால்பாறை பொள்ளாச்சி மெயின்ரோட்டை கடந்து புதுத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பூசாரி மணி என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்தது.

வீட்டுக்குள் துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்குமா? என்று தேடியது. வீட்டி லிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் எஸ்டேட் பகுதி மக்களுடன் இணைந்து யானை களை விரட்டினர்.

தமிழ் ஓவியா said...

மந்திரச்சடங்குகளுக்காக தம்பியின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த  மந்திரவாதி கைது

புர்த்வான், ஜூன் 29- வளர்ச்சி யடைந்த நவீன சமூகம் என்று மனித சமூகம் தன்னை கருதிக் கொள்ளும் இந்தக் காலத்திலும் கூட, மந்திரச் சடங்குகளுக்காக தனது உடன்பிறந்த சகோதரரின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த கொடூரம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. காஞ்சன் நகர் கிராமத்தில் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருபவர் ஷூபஜித்(40).

கடந்த சில வாரங்களாக இவரது தம்பியான ஷாமிக்கை கிராமத்தில் எங்கும் காணமுடியாததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது வீட்டை மறைமுகமாக சோதனையிட்டனர். அப்போது, அவரது தம்பி ஷாமிக், உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித் தனர்.  இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகாரளித்தனர்.

உடனடியாக நடவடிக் கையில் இறங்கிய காவல் துறையினர் ஷூபஜித்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த ஒன்றரை மாதங்களாக ஷாமிக்கை அடைத்து வைத்து தனது மந்திரச் சடங்கு களுக்காக  அவரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஷூபஜித்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஆட்சியாளர்கள் வரலாற்று பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது : அப்துல் கலாம்



புதுடில்லி ஜூன் 29_ ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது என்று குடியரசு முன்னாள் தலை வர் அப்துல் கலாம் கூறி யுள்ளார்.

ஒளிமயமான எதிர் காலத்துக்கு அறிவியல் வழிகள்' என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள் ளார். அதில், விண்வெளி அறிவியல், ரோபாட் டிக்ஸ், மருத்துவம், புதைப் படிமவியல் ஆகிய துறை களில் உள்ள இளைஞர் களுக்கு அறிவுரை வழங் கும் வகையில் இந்தப் புத் தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் அவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெரும்பாலான வரலாற் றுப் பாடப் புத்தகங்கள் ஆட்சியாளர்களால் எழுதப்பட்டவை. அந்தப் புத்தகங்களை நேர்மை யுடன் அணுகி, ஆய்வு செய்ய வேண்டும். வர லாற்று ரீதியாக உண்மை யில் என்ன நடந்தது என் பதையும் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, முறையாக எழுதப்பட வேண்டும். அந்தப் புத்த கங்களை ஆட்சியதிகாரத் தில் இருப்பவர்கள் எழுதக் கூடாது. மாறாக, கல்வித் துறையில் சிறந்து விளங்கு பவர்கள் எழுத வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள தொகை அசாதாரணமானது; குறிப்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் பெருந் தொகை பதுங்கிக் கிடக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்தே தீருவோம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று அடேயப்பா மோடியும் அவரைச்சார்ந்த விற்பன்னப் புலிகளும் கொட்டி முழங்கிய சமாச்சாரத்தைக் கேட்டு கொட்டாவி விட்டுக் காத்துக் கொண்டு இருந்தனர் - இந்திய மக்களும், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இருக்கும் மக்கள் 30 சதவிகிதம் மக்களும். இரவு உணவுக்கு வழியின்றி வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கும் மக்கள் தொகை 19 கோடி.

நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருமானம் உடையோர் 77 விழுக்காடு  என்று புள்ளி விவரங்களை அள்ளி விடுவதும் இந்திய அரசுதான்.
இந்தச் சூழலில் வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டுதான் வருகிறார்களே தவிர நடைமுறையில் சுழியம்தான் இவ்வளவுக் கால அவகாசம் கொடுத்தால் பண முதலைகள் வாளா இருக்குமா?
அந்தக் கறுப்புப் பணத்தை அந்த வங்கிகளிலிருந்து எடுத்து வேறு ஏற்பாடுகளைச்  செய்துவிட மாட் டார்களா?
தேர்தலுக்கு முன்பு மோடி பேசிய பேச்சை இப்பொழுது மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று மோடி(போபாலில் 18 ஏப்ரல் 2014-அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது) பேசியது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் அருண் ஜேட்லி இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றிய உத்தேசங் களின் அடிப்படையில் ஓர் 'எடுத்துக்காட்டுக்கு' கூறியதே அந்த ரூ.15 லட்சம் விவகாரம்" என்றார். நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறிய போது, கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்று கூறியது பற்றி மாநிலங்களவையில்  கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ஜேட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துக் காட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது.

மேற்கூறிய இந்த அர்த்தத்தில்தான் பலரும் அதனைப் பயன்படுத்தினர். எனவே இதனை இந்தப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அருண் ஜேட்லி. இது எவ்வளவுப் பெரிய உண்மைக்கு மாறானது என்பது நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். பாஷ்ய கர்த்தாக்கள் இப்படித் தான் பேசுவார்கள்.
இவர்கள் வியாக்கியானம் மக்களைத் திருப்திப் படுத்தாத நிலையில், பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வேறு வழியின்றி ஓருண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

மோடி பேசியது உண்மைதான்; அது தேர்தல் நேரத்தில் அரசியலுக்காகச் சொல்லப்பட்டது என்று சொன்னாரே பார்க்கலாம். மக்களின் மறதிதான் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு மூலதனமாகும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதாமீது எப்படியெல்லாம் இந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்கள் குதியாட்டம் போட்டார்கள்; இப்பொழுது இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்கிற பாணியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் பிரச் சினையைத் திசை திருப்பிட யோகா போன்றவற்றைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆன கதைதான்.

இரயில்வே போன்ற பெரும் அரசுத் துறைகளே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குத்தான் போகப் போகின்றன. உண்மையிலேயே ஆட்சி நடத்துப வர்களும் அவர்களே!

தமிழ் ஓவியா said...

முதலில்...

மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டு மானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமே யாகும்.
(விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...

வளர்த்த கிளியும், பெற்ற கிளியும்!

மனிதர்களின் ஆறாம் அறிவு காரணமாக பாசமும், பகுத்தறிவும் அவர்களுக்கு இயல்பானது!
அய்ந்தறிவுள்ள மிருகங்களுக்கோ, அதைவிடக் குறைந்த அறிவுள்ள பட்சி பறவைகளுக்கோ பாசம் இல்லையா? அதன் குஞ்சுகளை வளர்க்கவில்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை.

அவை தம் குஞ்சுக்கு மட்டுமே கூடு கட்டும், இறக்கை முளைத்ததும் தானே பறந்து விடும் பிறகு நீயாரோ நான் யாரோ தான் (பெரியார் படப் பாட்டு மாதிரி).
ஆனால், மனிதர்களின் உறவு பாசம் - அப்படிப்பட்டதல்ல! பகை வந்த போதிலும் மனதுக்குள் புகையாய் இருக்கவே செய்யும். எளிதில் மறந்து போகாது.
பாசத்தைச் செலுத்த தங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள் மனிதர்கள்! வைதிக மனப்பான்மையும், மன இறுக்கமும் கொண்ட குடும்பத்தவர்கள் பலர் குழந்தைபெற்றுக் கொள்ளாத பெண்களைக் கரித்துக் கொட்டி வறுத்து எடுக்கும் வன்கொடுமையையும் வாழ்த்து மடலாக வாசிக்கத் தவறுவதே இல்லை பல குடும்பங்களில்.

இதற்காகவே இப்போது மழை காலத்துக் காளான்களைப் போல ஆங்காங்கு குழந்தைப் பண்ணை விளைநிலத்தைப் பக்குவப்படுத்தும் மருத்துவ வியாபாரங்கள் ஓங்கி வளர்ந்து வருகின்றன!

தந்தை பெரியார் அவர்கள் ஒரு முறை அழகாகக் கூறினார். மனிதன் தனக்கே குழந்தை பிறக்கு வேண்டு மென்று பிடிவாதமாக இருப்பது, தனியார் சொத்துரிமைக் கருத்து ஆட்சி செய்த பிறகே தான். பாசம் காட்ட குழந்தைதான் வேண்டுமென்றால் வேறு ஒரு குழந்தை - அதிகம் பெற்று காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்களே அப்படிப்பட்ட ஒரு குழந்தையை தத்து - வளர்ப்புக் குழந்தையாக்கி பாசம் காட்டி மகிழலாமே! அதுகூட வேண்டாம்; பலர் நாய், பூனை, கிளி போன்ற பல்வேறு வகை மிருகங்கள் பட்சிகளையும்கூட வளர்த்து பாசம் காட்டி, மகிழ்ச்சியை அடைகிறார்களே அது போல செய்யலாமே என்பார்!

சிங்கப்பூரில் நான் தங்கியிருக்கும் கவிதாமாறன் இல்லத்திற்குச் செல்லும் மின்தூக்கி (லிவீயீ) ஒன்றில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது!
பக்கத்து பிளாக்கில் வசிக்கும் ஒருவர் வளர்த்த கிளி திடீரென காணாமற் போய் விட்டிருக்கிறது. அக்கிளிக்கு இவர் சிகிச்சை தந்து கொண்டிருந்தார். அந் நிலையில் காணாமற் போன அக்கிளியைக் கண்டுபிடித்து தந்தால் அந்த நபருக்கு 5000 சிங்கப்பூர் டாலர்கள் பரிசு என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
நம்ம இந்திய பணத்திற்கு இது சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் 2,40,000 ரூபாய் ஆகிறது! அவரது பாசமும், பரிவும் தான் எத்தகையது! அக்கிளி பற்றிய வர்ணனை அதை வளர்த்துள்ளவர்களின் மனிதநேயத்தையும் - பாசத்தையும் உறவையும்கூட காட்டும் வகையில் அதற்கு சிகிச்சை அளித்துக் கொண் டுள்ளோம். பல மருந்துகளைத் தந்து குணப்படுத்தும் நிலையும் உள்ளது என்று சோகத்தையும் கொட்டியுள்ளார் அந்த அறிவிப்பில்:
அந்த படம் (தனியே காண்க).

பொதுவாக அமெ ரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் மனிதனாகப் பிறப்பதற்குப் பதிலாக நாயாக, பூனையாக, பிறந்தால் (றிமீ கிஸீவீனீணீறீ) பெரிய வாய்ப்பு!
அவனைத் திட்டி னால்கூட அலட்சியம் செய்து விடுவான்; ஆனால், அவர்களு டைய நாயை, பூனையைத் திட்டினால் படுகோபத்துடன் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள்!

இவைகளுக்கு என்னே சொகுசு -வாய்ப்பு! சில நாள் களுக்கு முன் ஆந்திரா வில் மூன்றாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது என்று வெறுப்படைந்த கணவர் தனியார் மருத் துவமனைக்கு வரவே இல்லை என்றும், மருத் துவமனை பணம்(பில்) கட்ட 25 ஆயிரம் ரூபாய்க்கு அந்தக் குழந் தையை யாரோ ஒருவருக்கு விற்று விட்டு, இந்தப் பெண் வீடு திரும்பி அழு திருக்கிறாள்!
வளர்த்த கிளிக்கு வருத்தம் அங்கு!
பெற்ற கிளியையே விற்ற கொடூரம் இங்கு!
இதுதான் நம்நாட்டில் பாசம் படும்பாடு!



Read more: http://www.viduthalai.in/page-2/104179.html#ixzz3eTMYQctc

தமிழ் ஓவியா said...

செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்

குடந்தை கருணா


ஆண்டு தோறும் உலக அளவில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவருக்கு 20,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங் கிடவும், வெளியுறவு அமைச்சகத்தில் சமஸ்கிருதத்திற்கு என தனியாக ஒரு இணை செயலாளர் நியமனம் செய்வதாகவும், பாங்காக் நகரில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்தார்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும்போது, சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்மையார்தான், பகவத் கீதை தேசிய நூல் என அரசு அறி விக்க இருக்கிறது என்பதை டில்லி யில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியவர். தற்போது, அரசால் குற்ற வாளி என அறிவிக்கப்பட்ட அய்.பி. எல். சூதாட்ட நாயகன் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் விசா வழங்கியதாகக் கூறு வதும்  இந்த சுஸ்மா சுவராஜ் தான்.

தமிழ் ஓவியா said...

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின்
சத்துக்களும், மருத்துவ குணங்களும்




தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.

கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.

புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.

வெண்டைக்காய்: மூளை  வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன. அவரைக்காய்: நார், புரதச்சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கலை நீக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்கு  ஆண்மையை அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.

சுண்டைக்காய்: வைட்டமின் ஏ, புரதம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு  வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக்கிழங்கு:  கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டால், உடல்  வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும்,  கட்டுப்படுத்தவும் செய்கிறது.

வாழைத்தண்டு: பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. சிறுநீர் பாதையில் கல் அடைப்பை கரைக்க உதவும்.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார், இரும்புச்சத்துகள் உள்ளன. வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

பீட்ரூட்: சோடியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. உடலை வலுப்படுத்தும்.

உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

காரட்: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பார்வை கோளாறை கட்டுப்படுத்தும். ரத்த விருத்தி தரும்.

மரவள்ளிக்கிழங்கு: உடலுக்கு குளிர்ச்சி தரும். பனங்கிழங்கு: புரதச்சத்து அதிகமுடையது. மலச்சிக்கலை போக்கி பசியை அதிகரிக்கும்.

இப்படி பலப்பல சத்துக்கள் காய்கறிகளில் குவிந்து கிடக்கின்றன. எனவே, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில், பூச்சிக்கொல்லி மருந்து அதிகமின்றி உருவாகும் இந்த காய்கறிகள் உடலுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...

அனைவருக்கும் உகந்த வெங்காயம்...!

ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி பழங்கஞ்சி குடிக்கிற ஏழ்மை. பர்கரிலும் வெங்காயம் சுவைக்கிற வளமை... இப்படி வெங்காயம் ஒரு பொதுமை காட்டி நிற்கிறது. இது ஒரு பழமையான மூலிகைப்பயிர்.  6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.

வெங்காய காரத்திற்கு அலைல் புரோப்பைல் டை சல்பைடு வேதிப்பொருளே காரணமாம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழவைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. மரத்தில் தொங்கும் தேன் ராட்டு எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம்.

இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது.

தவறுக்கு தண்டனையாய் கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதய சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது.

பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.

தமிழ் ஓவியா said...

வாத நோய் போக்கும் நன்னாரி



அங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால்  அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது.  நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மணத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை  என்று கூறலாம்.

அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள்  கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே  வளரும் பாலுள்ள கொடி இனம்.

நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும்  மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில  ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும்.

இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250  மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான  குணம் ஏற்படும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும்  குடிக்கலாம்.

நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை  மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.

நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து  வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கெண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம்  தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும்.

நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலமாக கட்டி அதை  கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து  அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

தமிழ் ஓவியா said...

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்



மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தோ அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம்பழத்தில் அதிக பட்சமாக நீர்சத்து 78 விழுக்காடு உள்ளது. மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.

மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறை பாடுகளை அகற்றும்.

இது தவிர, காதடைப்பு, வெப்பக்காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழரசம் விலக்கும். மாதுளம் பழரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.

அன்றாடம் பாதி மாதுளம்பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும், மாதுளம் பழச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். இது தவிர,

மேலே குறிப்பிட்டது போல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொடர்ந்து ஏற்படும் விக்கல் உடனே நிற்கும். ஏதேனும் காரணத்தினால் நீர் அருந்தாமலே,

டலில் நீர்த் தன்மை குறைந்த அதிக தாகம் எடுக்கும் போதே மாதுளம்பழம் சாப்பிட்டால் உடனடியாக தாகம் தணியும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம் சுஷ்மா ஸ்வராஜ்


பாங்காக், ஜூன் 30_- சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டு மெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது உலக சமஸ்கிருத மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த சமஸ் கிருத நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது மக்களிடம் சமஸ்கிருத மொழி பேசுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த மொழி மக்களின் மனதை துய்மைப்படுத் துவதுடன் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாஸ்திரங் களுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் முயற்சி எடுக்கி றோம் என்றும் அமைச்சர் சுஷ்மா தனது உரையில் தெரிவித்தார். அவர் இந்த மாநாட்டில் சமஸ்கிருத மொழியிலேயே பேசியது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்

காந்திநகர், ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் வருகிற 2016-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாண வர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆர் எஸ்எஸ்-சின் யோகா திட்டத்தை, குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவ ர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழு வதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப் பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி களில் யோகா பாடத்தை நடத்த குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படு கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடு முறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப் படும். அது மட்டுமல்லா மல் யோகாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாண வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோகா பாடத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச் சூழல் சுகாதார விழிப் புணர்வு, மரம் நடுதல், காடுகள் அவசியம் குறித் தவைகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம் பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கை விட்டது. ஏற்கெனவே குஜராத்தில் கல்வியை காவிமயமாக்கும் விதத்தில் பல்வேறு பாடத் திட்டங் கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கது

தமிழ் ஓவியா said...

பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் - காவல்துறை விசாரணை

கான்பூர், ஜூன் 30_ உத்தரபிரதேசம் மாநிலத் தில் பாரதீய ஜனதா தலைவர் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் தொண்டர் புகார் கொடுத்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனுப் திவாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள் ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20ஆ-ம் தேதி பெண் தொண்டரை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றிச்சென்ற, திவாரி காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக கட்சியின் அப்பகுதி தலைவர்களிடம் பாதிக்கப் பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சியின் அலுவலகத்திற்கு மறுநாள் வந்த திவாரி தனது உதவியாளர்கள் நான்கு பேருடன் புகார் அளித்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளனர். அவருடைய ஆடைகளை களைவதற் கும் முயற்சி செய்துள் ளனர் என்று காவல்துறை யில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சம் பவம் தொடர்பாக கட் சியின் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களிட மும், மாநில தலைவர்களி டமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதிக் கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அனுகி உள் ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியின் உத்தரவின்பேரில், பெண் ணின் புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/104219.html#ixzz3eYRa2RGf

தமிழ் ஓவியா said...

கவலை ஏன்?

மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?
_ (குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும் திராவிடர

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்



சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக் குரைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சென்னை, பெரியார் திடலில் 21.6.2015 அன்று காலை 10.30 மணி யளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவி டர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் கலந்து கொண்டவர் களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வரு மாறு:_

கி.வீரமணி, ஜெ.துரை சாமி, கரூர் இராசசேகரன், மு.சென்னியப்பன், ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண் டியன், ம.வீ.அருள்மொழி, ந.இளங்கோ, த.வீரசேக ரன், சின்னம்பேடு எஸ். கண்ணன், செஞ்சி விவே கானந்தன், ஜெ.தம்பிபிர பாகரன், வி.பெரியசாமி, எஸ்.பி.சக்திவேல், எஸ்.குமாரதேவன், இராம ராஜன், அ.அருள்மொழி, பீ.இரமேஷ், இரா.சர வணகுமார், மு.இராசா

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தற்போதைய சூழ் நிலையில் சட்டக்கல்வி யின் அவசியம் அதிகரித்து வருவதாகவும், தற்போ தைய சட்டக்கல்வி தர மானதாகவும், போது மானதாகவும் இல்லாத தால் பெரியார்- _ மணி யம்மை பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக்கழகத்தையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2) அண்மைக்காலத் தில் திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி தராமலும், போதிய கார ணமின்றி அனுமதி மறுப் பதும், சட்டவிரோதமான வகையில் கூட்டத்தில் பேச வேண்டிய கருத்து களுக்கு தடைவிதிப்பதும், காவல் துறையின் வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த சட்ட விரோத போக்கினை தடுப்பதற்கு அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழக சட்டத் துறை அமைக்க, சட்ட ஆலோசனைக் குழுவிடம் அணுக வேண்டுமென்று மேற்படி சட்ட ஆலோ சனைக்குழு தமிழகம் எங்கும் ஒரே சீரான அணுகுமுறையை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட் டுக்கொள்கிறது. இப்பிரச் சினை சட்ட ரீதியாக அணுகப்படும்.



3) திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக விரைவில் மாவட்டம் தோறும் முக்கியமான சட்டப்பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

4) ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் குடிமக் களை அடக்கி ஒடுக்குவ தற்காக ஏற்படுத்தப்பட்ட பல காலாவதியான சட் டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும், அரசியல் சட்டம் அங் கீகரிக்கும் கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் திருத் தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று மத் திய _ மாநில அரசைக் இக் கூட்டம் கேட்டுக்கொள் கிறது.

5) விரைவில் திராவி டர் கழக வழக்குரைஞரணி மண்டல, மாவட்ட நிர் வாகிகள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர் மானிக்கப்படுகிறது.

திராவிடர் கழக வழக் குரைஞரணி மதுரை மண் டல மாவட்ட நிர்வாகிகள்  நியமனம்

தராவிடர் கழக சட் டத்துறை செயலர் ச. இன் பலாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படட தராவிடர் கழக வழக்கு ரைஞரணி அமைப்புக் கூட்டம் 27.10.2014 மதுரையில் தராவிடர் கழக வழக்குரைஞரணி துணைத்தவைர் பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட நர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

மதுரை மண்டலம்

தலைவர்: கோ. சுப்பிர மணியன் பி.ஏ. பி.எல்., வழக் குரைஞர், தண்டுக்கல். செயலர்: -மு. சத்தார்த் தன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை.

மதுரை மாவட்டம்

தலைவர்: கே. பொன் னையா, எம்.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை, செயலர்: சோ. தியாக ராசன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதி மன்றம், மதுரை,

தண்டுககல் மாவட்டம்

தலைவர்: சுப. ஜெக நாதன், பி.ஏ., பி.எல்., வழக குரைஞர், திண்டுக்கல்
செயலர்:- சாக்ரடீஸ், பி.ஏ., பி.எல்., வழக்கு ரைஞர், திண்டுக்கல்.

விருதுநகர் மாவட்டம்

அமைப்பாளர் - பகர தன் பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், திருவில்லிபுத் தூர்
தேனி மாவட்டம்

அமைப்பாளர்: - சின்ன முத்து பி.ஏ., ப.எல்., வழக் குரைஞர், பெரியகுளம்.