Search This Blog

10.6.15

அய்ந்து பஞ்சமா பாதகங்கள்!-பெரியார்

அய்ந்து (பஞ்சமா) பாதகங்கள்!

 
முதல் பாதகம் :-

ஒன்று - பார்ப்பனன் ஓட்டலுக்குச் (உணவகத்துக்குச்) செல்வது. நமது தன்மானத்திற்குக் கேடு. நாமே பார்ப்பனரை மேல் ஜாதி என்று கருதுகிறோம் என்பதாகும்.

நம்மவர்கள் ஓட்டல், சிற்றுண்டி சாலை, உணவு விடுதி முதலியவைகள் ஏற்படுத்துவதையும், நம்மவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதையும், நம்மவர்கள் பொருளாதார வசதி உயர்வதையும் தடுக்கிறது.

உண்மையிலேயே "நாம் கீழ் ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டிருக்கிறோம்" என்பதை நாமே நம்பவில்லை; உணரவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஜாதி ஒழிப்புக்கு ஆக இவ்வளவு பெரிய கிளர்ச்சி நடக்கிற போதும், "பார்ப்பான் ஓட்டலுக்குப் போவதில்லை; அங்குச் சென்று உணவருந்துவதில்லை; சிற்றுண்டி அருந்துவதில்லை என்று 10000- பேருக்கு மேல் தங்கள் உறுதிமொழி கையொப்பமிட்டு பெயர்கள் விளம்பரப்படுத்தி இருக்கிற போதும், ஏறத்தாழ 700- பேர் வரை பார்ப்பனர் ஓட்டல் முன் நின்று மக்களை வேண்டிக் கொண்டு அதற்கு ஆக 5-வாரம், 4-வாரம், 3-வாரம், 2-வாரம், ஒரு வாரம் தண்டனை பெற்றுச் சிறை சென்றும், சுமார் 1,00,000-ரூபாய் (ஒரு இலட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டுமென்று தண்டிக்கப்பட்ட பின்பும் மற்றும் பல பெரும் உயிர் தியாகப் பெரும் கிளர்ச்சிகள் நடக்கும் போதும், தமிழன் - திராவிடன் ஒருவன் பார்ப்பான் ஓட்டலுக்குப் போவான், போகிறான் என்றால் அவன் குலத்தின் கண் அய்யப்பட வேண்டியதைத் தவிர அப்படிப்பட்டவனைப் பற்றி மக்கள் வேறு என்னதான் எண்ணுவார்கள்? வேறு என்னதான் எண்ண முடியும்? அப்படிச் செல்லுவதானது தன்குலம் இன்னது என்று காட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன காரியத்திற்காகவது பயன்படுமா?

பாதகம் இரண்டு :-

பார்ப்பனரைப்பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் வரும்போது அவர்களைப் பிராமணர்கள் என்கிற சொல்லால் குறிப்பிடுவதானது. இது நம்மை நாமே சூத்திரன் என்று ஒப்புக்கொண்டதாகிறது அல்லவா? அவன் பிராமணன் என்றால் நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் 'சூத்திரன்' என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

"பிராமணன்" என்ற சொல்லால் ஒருவரைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு சொல் இல்லா விட்டால், வேறு சொல்லால் சொன்னால் ஒருவரின் வகுப்பு, குறிப்பு, அடையாளம் தெரியாது என்ற நிர்பந்தம் (கட்டாய நிலை) இருந்தால் மாத்திரம் அப்படிக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமலேயே வேறு சொல்லால் குறிப்பிடலாம் என்பதற்குத் தக்க சொல்லாகப் 'பார்ப்பனர்' என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும் போது, ஒருவரைப் 'பிராமணன்' என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு மானம் இல்லை; அறிவு இல்லை; மனித உணர்ச்சி இல்லை.

நாட்டில் மற்றத் தமிழர்கள் நடத்துகிற கிளர்ச்சிகளுக்கு விரோதமாய் நடந்து, பார்ப்பனருக்கு அடிமையாகி, எப்படி எப்படி ஈனப் பிழைப்பையாவது நடத்தி வாழவேண்டுமென்கிற இழிநிலையில் இருப்பவர் நாம் என்பதல்லாமல், இதற்கு வேறு என்ன பெயர்க் கருத்து கொள்ள முடியும்?


பாதகம்  மூன்று: -

தீபாவளி கொண்டாடுவது இது ஒரு பொய்க்கதையை, அதுவும் காட்டமிராண்டித்தனமான முட்டாள் தன்மையைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. திராவிடனை இழிவு படுத்திய கொலை செய்ததாகிய கருத்தைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. கதை அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ, உண்மைக்கோ, படிப்பினைக்கோ சிறிதும் ஏற்றமும் பொருத்தமும் அற்றது தீபாவளி.

பாதகம்  நான்கு: -

 சினிமாவிற்குப் போகக் கூடாது. இந்த நாட்டில் சினிமா நடப்பதை அனுமதித்துவிட்டு, அதில் பங்கு கொண்டு ஆதரித்து விட்டு, அரசாங்கத்தின் அய்ந்தாண்டுத் திட்டத்தையும் ஊதாரிச் செலவையும், (வீண் கொள்ளை) வரியையும் கண்டிப்பவர்கள் ஒன்று மடையர்களாக இருக்க வேண்டும் அல்லது மக்களை ஏய்க்கும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.

அய்ந்தாண்டு திட்டம் நல்ல எண்ணத்தின் மீது இருக்க வேண்டும். அல்லது நம்மால் இன்ன காரியம் ஆயிற்று என்கின்ற பெருமை தங்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட வேண்டும். இதுவும் கட்டுப்பாடான ஒரு சர்க்கார் (ஆட்சி) கொள்கை - திட்டம் என்கின்ற பெயரால் நடத்தப்படுவது. இதில் உள்ள சுயநலம் மறுபடியும் தாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதாக இருக்கலாம். நீண்ட நாளாய் சட்டப்படி ஏற்பட்ட வரும்படியும் ஆதிக்காரர்களுக்கு இருக்கலாம்.

வசூலிக்கப்படும் வரியும் கணக்குக் காட்டி, வரவு செலவு பட்ஜெட் திட்டம் காட்டி மெஜாரிட்டி (பெரும்பான்மை) மக்களால் ஓட்டு செய்யப்பட்ட மக்கள், மெஜாரிட்டி (பெரும்பான்மை) ஓட்டுப்பெற்று நிறைவேற்றி, பெரிதும் பணக்காரர்களிடம் வரும்படியில் பங்கு என்னும் பேராலும், தொழிலின் மூலம் சம்பாதித்துக் கொண்டு, "சம்பாதித்துக் கொள்" என்னும் உரிமை கொடுத்து வசூலிக்கப் படுகிறதுடன் வரவுக்கும் செலவுக்கும் கணக்குக் காட்டப்படுகிறது.

ஆனால் சினிமாவின் (திரைப்படத்தின்) பெயரால் கதை எழுதுகிறவன், வசனம் எழுதுகிறவன், சாயம் பூசுகிறவன், நடிக்கிறவன், பாடுபடுகிறவன், முதலியவர்கள் யாருடைய பிரதிநிதிகள்? யாரிடம் ஓட்டுப் பெற்றவர்கள்? எதற்காக வசூலிப்பவர்கள்? என்ன கணக்குக் காட்டுகிறவர்கள்? இவர்கள் தகுதிக்கு, தேவைக்கு எந்தவித முறையில் கணக்குப் பார்த்து, என்ன செலவுக்கு யாருக்குக் கணக்குக் காட்ட, என்ன பொதுநலத்திற்கு என்ற கொள்ளை கொள்ளையாக வசூலிக்க வேண்டியதாகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

சினிமா (திரைப்பட) முதலாளிகளாவது மக்களின் முட்டாள் தனத்தையும் மிருகக் காட்டுமிராண்டி உணர்ச்சியையும் முதலாக வைத்துக் கொண்டு வசூலிக்கிறார்கள். 10-லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிவிட்டுப் பல கோடிக்கணக்கில் வசூல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது அல்லாமல் வேறு ஏதாவது சினிமா முதலாளிகள் கொள்ளைக்கு நியாயமோ சமாதானமோ சொல்ல முடியுமா?

அல்லது மேற்கண்ட இக்கூட்டத்தார் எல்லோரும் கொள்ளையடிக்கும் பணம் 100-க்கு 99-பாகம், குடி, கூத்தி, விபசாரம், சூதுவாது ஆகிய காரியங்களுக்குப் பாழாகிறதல்லாமல் வேறு பலன் எதற்குப் பயன்படுகிறது? இதில் ஈடுபடுபவர்கள் ஆணோ, பெண்ணோ, செல்வவானோ, புலவனோ, அறிஞனோ, யாரானாலும் இந்த மேற்கண்ட கதிகளுக்கு ஆளாவதல்லாமல் கடுகளவு மனிதத் தன்மைக்கோ, நல்வாழ்வுக்கோ, மக்களுக்கு நன்மை ஏற்படவோ பயன்படுகிறார்களா? என்பதையும் சிந்தித்தால் அத்தனையும் கேடும் நாசமுமாகத்தான் இருக்கும்.

இதைப் பார்ப்பவர்கள் மிருக உணர்ச்சி என்பதன் பரிகாரத்திற்கு ஆகவே பெரும்பாலான ஏழை மக்கள், எளிய மக்கள் தங்கள் குடும்பவாழ்வுக்கு நியாயமாய்ச் செலவு செய்ய வேண்டிய இன்றியமையாப் பணத்தை நாசமாக்குகிறார்கள். இதன் மூலம் ஆணும், பெண்ணும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பதான 3-வயது முதல் 90-வயது வரை உள்ள பெண்களும், அதுபோலவே உள்ள ஆண்களும் ஒழுக்கத்தில் கேடு கெட்ட கடையர்கள், காமாதுர, தூர்த்தர்கள் ஆகிப் பொது ஒழுக்கம், நாணயம், நம்பிக்கை, நன்றியறிதல் ஆகிய காரியங்களில் கீழ்மக்களாகவே தங்களை அறியாமலேயே ஆகிவிடுகிறார்கள். இந்த வகையான மனித சமுதாய ஒழுக்கக்கேட்டிற்குக் காந்தியும், காங்கிரசும், தேர்தலும், அரசியலும் காரணங்களாக இருந்தாலும் இந்தச் சினிமா வந்த பிறகு இந்தத் துறை பணந்திரட்டவும் கலைஞானத்திற்குப் - பொது நலத்திற்கு என்று உழைப்பவர்களுக்கு ஒரு சாதனமாகக் கொள்ளப்பட்ட பிறகு திடீர் வளர்ச்சிக்குக் காரணமாகிவிட்டது.

காந்தி, காங்கிரஸ் தேர்தல் முதலியவைகள் பற்றிச் சிலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தாலும் இக்கேடுகளுக்குச் சினிமாவே முக்கியக் காரணம் என்பதில் பாபு ராஜேந்திரர், ஜவகர்லால் நேரு முதல் ராஜாஜி வரை மாறுபட்ட கருத்தில்லாமல் காமராசர் முதல் காங்கிரசுக் கண்ணீர்த் துளி வரையில், சங்கராச்சாரி பண்டார சந்நிதிகள் முதல் வீரமுத்து சாமியார்கள் வரையில் மற்றும் பெரும் பெரும் புலவர் அறிஞர், பொது வாழ்வில் பெயர் பெற்ற உலக அறிஞர் முதல் காங்கிரசுக்காரர்கள், கம்யூனிஸ்ட்கள், சோஷயலிஸ்ட்கள் வரை எல்லாத் துறை மக்களும் சினிமாவை மனித சமுதாய நல்வாழ்வுககும் ஒழுக்கத்திற்கும் கேடானது என்றே சொல்லி விட்டார்கள். அதில் ஈடுபட்டவர்கள், அதனால் மனிதர்கள் மனுஷிகள் ஆனவர்கள், வாழ்வு நடத்துபவர்கள் தவிர எல்லோரும் சினிமா கேடானது, ஒழுக்கக் கேடானது, ஏழை மக்களைப் பிடுங்கித்தின்பது என்று சொல்லி விட்டார்கள். மற்றும் சொல்ல வேண்டுமானால் நகைச்சுவையரசு என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா முதற்கொண்டு சில கலைஞர்களும் சொல்லிவிட்டார்கள். இனி யார் சொல்ல வேண்டும்?

பாதகம் அய்ந்து: - 

இராட்டினம் சுற்றுவது, இராட்டினம் சுற்ற வேண்டாம்; கதர் கட்ட வேண்டாம் என்பது நம் கொள்கை.

இராட்டினம் அல்லது கைராட்டை என்பது அறிவுப்பெருக்கமில்லாமல், காட்டானாய் இருந்த காலத்தில் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சாதனமாகும்.

எதுபோலவென்றால், மனிதன் நெருப்பு உண்டாக்குவதற்குச் சக்கி முக்கிக் கல்லைக் கண்டு பிடித்தது போலும், விளக்குக்கு மண் அகலை எண்ணெய் விளக்குக் கண்டுபிடித்தது போலும், மனிதன் போக்கு வரவுக்குக் கட்டை வண்டியைக் கண்டுபிடித்தது போலவும், உடைக்காக நூல் நூற்க இராட்டினமும், துணி நெய்ய கைத்தறியும் கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

அவைகளில் சக்கிமுக்கிக் கல்லுக்குப் பதில் நெருப்புக் குச்சியும் சிம்னி விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மின்சார நெருப்பும் மின்சாரம் (Electric) விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டதுடன் வராத இடங்களில் மக்களுக்கு அதிக வேட்கையும் ஏற்பட்டுவிட்டது.

கட்டை வண்டிக்குப் பதில் சைக்கில் (மிதிவண்டி), மோட்டார், ஆகாய விமானம் ஏற்பட்டு விட்டன. இராட்டினத்திற்குப் பதில் நூற்பு யந்திரமும், கைத்தறிக்குப் பதில் நெசவு யந்திரமும் ஏற்பட்டு உலக முழுவதிலும் அமலுக்கு வந்திருப்பதோடு இந்த இரண்டு சாதனங்களினாலும்தான் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு ஆடை அளிக்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இராட்டினத்தைக் கொண்டு நூல் நூற்கச் செய்வதென்பது, நெருப்புக்கு சக்கிமுக்கிக் கல்லையும், வழிப்பயணப் போக்குவரத்துக்குக் கட்டை வண்டியையும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறவன் புத்திக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவு மதிப்புதான் கொடுக்கத் தக்கதாகுமே ஒழிய, வேறு எந்தவித்திலும் கைராட்டினம் புகுத்தியவர்களை இக்கால மனித வளர்ச்சித் தன்மைக்கு ஏற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும் காந்தியாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இராட்டினம் அநேகமாக ஒழிந்து போய்விட்ட தென்றே சொல்லலாம். அதுவும் யாராலும் ஒழிக்கப்படாமல் தானாக ஒழிந்து போய்விட்டது! எப்படியெனில் பழையகால இராட்டினமாகிய (காந்திராட்டினம்) ஒரு கதிர் இராட்டினம் மறைந்துவிட்டது. என்ன சொல்லிக் கொண்டு மறைந்தது என்றால், "மக்களின் வாழ்வுக்கு (இராட்டினம் சுற்றுகிறவர்களுக்குக் கஞ்சி வார்க்க) ஒரு கதிர் இராட்டினம் போதாது, உதவாது, ஆதலால் நான் போகிறேன் அடுப்புக்கு" என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது! இக்கருத்தை இராட்டினம் புகுத்தப்பட்ட காலத்தில் அறிவு சுதந்திரமுள்ள மக்கள் அத்தனை பேரும் எடுத்துக் கூறினார்கள் என்றாலும், காந்தி சர்வாதிகார காலத்தில் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டதுடன், இராட்டினம் தானாகவே நான் சாகப்போகிறேன் என்று சொன்ன காலத்தில் காந்தியாரே 'இது வேண்டாம், வேறு ஏதாவது நூல் யந்திரம் போல் பல கதிர் இராட்டினம் கண்டு பிடித்ததாக வேண்டும்' என்கின்ற அவசியத்திற்கு (கட்டாயத் தேவைக்கு) வந்துவிட்டார்.

அதுபோலவே கைத்தறிக்காரர்களும் பட்டினியால் சாக ஆரம்பித்த பின்பு, விசை நாடா தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறிவந்து பழைய கைத்தறி அனேகமாய் அடுப்புக்குப் போய்விட்டது.

இந்த நிலையில் 'காந்திக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்' என்கின்ற பெயரால் கல்வித்துறையில் கைராட்டினத்தையும், கைத்தறியையும் புகுத்திக் கூத்தடிக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.

கதர் (செலவு) துணி என்பது சுத்த காட்டுமிராண்டித்தனமானது. பொருளாதாரத்தையும், நாகரிகத்தையும் கொலை செய்யக் கூடியது என்று தெரிந்தும், பொதுமக்கள் வரிப்பணத்தை நாசமாக்கும் தன்மையில் ஆண்டு ஒன்றுக்குப் பல கோடி ரூபாய்களைக் கதர் வளர்ச்சிக்கு என்று உதவித் தொகையாகக் காங்கிரஸ் அரசாங்கம் கொடுத்துக் கதரைச் சாகாமல் காப்பாற்றி வருகிறது.

இது அதாவது இராட்டினம், கதர் என்கின்ற இரண்டு சாதனமும் அரசியல் விவகாரம் என்கின்ற தன்மையில் இன்று இந்த நாட்டில் உலவிக் கொண்டு இருக்கின்றன.

காந்தியையும், காங்கிரசையும் ஆதரிக்கிறவர்கள் என்பவர்களுக்கு இவை இரண்டும் சின்னங்களாக இருந்து வருகின்றன.

இவைபற்றி இன்னும் அநேகம் சொல்ல இருக்கின்றன என்றாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.

ஆகவே தோழர்களே!

1. பார்ப்பான் ஓட்டலுக்குப் (உணவகத்துக்குப்) போகாதீர்கள்.
2. பார்ப்பானைப் பிராமணன் என்று சொல்லாதீர்கள்.
3. தீபாவளி கொண்டாடாதீர்கள்.
4. சினிமாவுக்குப் போகாதீர்கள்.
5. இராட்டினம் சுற்றுவதும், கதரை உடுத்துவதுமான காரியம் செய்யாதீர்கள்.

தோழர்களே! நான் வேண்டிக் கொள்வதை சிந்தித்து இந்த அய்ந்து காரியத்தையும், பஞ்சமாபாதகம் என்பதாகவே கருதி, செய்வதினின்று நீங்கி,

மானத்தையும்,
அறிவையும்,
ஆராய்ச்சித் திறனையும்,
ஒழுக்கத்தையும்,

பொருளாதாரத்தையும் காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

-------------------------------------பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்:-”விடுதலை” 21.10.1957

45 comments:

தமிழ் ஓவியா said...

தடை நீக்கம் சிறிய வெற்றியே!

இந்துத்துவாவுக்கு எதிரான எங்கள் பயணம் தொடரும்!

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட அமைப்பு அறிவிப்பு



சென்னை, ஜுன் 10_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் _ பெரியார் வாச கர் வட்டத்தின் மீதான தடை நீக்கம் - சிறிய வெற்றி தான். இந்துத்துவா கார்ப் பரேட் முதலாளித்துவப் போக்குகளுக்கு எதிரான எங்கள் பணிகள், பயணங் கள் தொடரும் என்று அமைப்பின் பொறுப்பா ளர்கள் அறிவித்துள்ளனர்.

அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை விலக் கிக்கொள்ளப்பட்டதன் பின்னர், அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கும் போது, தொடர்ந்து விடாப் பிடியாக கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் இந் துத்துவா செயல்திட்டங் களை எதிர்த்துக்கொண்டே இருப்போம். இந்துத்துவா சக்திகள் எப்போது திரும் பவும் தாக்கலாம் என்று வாய்ப்புக்காக காத்திருக் கும் என்றும் கருதுகிறோம் என்று அம்பேத்கர்_பெரி யார் வாசகர் வட்டம் என் கிற அய்.அய்.டியின் மாண வர் அமைப்பினர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

உண்மைதான். தடை நீக்கப்பட்டுள்ளது. வேறு வகையில் சொல்வதா னால், சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் அங்கீகாரம் மீண்டும் அளித்துள்ளது. அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்துக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பதை உலகமே அறிந்து கொண்டுவிட்டது.

நடந்தது என்ன?

உண்மையில் நடந்தது என்னவென்றால், அனாமத்தாக யாரோ அளித்த புகாரின்பேரில் மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்ச கத்தின் தலையீட்டின் பேரில், சட்டவிரோதமாக அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்தின் பெயரை மாற்றிக்கொள்ளு மாறு அய்.அய்.டி தலைவ ராக உள்ள முதல்வர் அறி வுறுத்தினார்.

தமிழ் ஓவியா said...

நம்முடைய அம்பேத் கர்_பெரியார் வாசகர் வட்டம் அமைப்பைப் போன்ற அமைப்புகளைத் தடை செய்யுமாறு பாஜ கவின் (தேசிய செயலா ளர்) எச்.ராஜா வெளிப் படையாகவேப் பேசி யுள்ளார்.

ஆனால், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் கருத்துப்படி, அய்.அய்.டி. நிர்வாகம் தாமாக எடுத்த நடவ டிக்கை என்று குறிப்பிட்டு உள்ளார். ஆகவேதான், அய்.அய்.டி. நிர்வாகம் தங்களுடைய சொந்த முடிவு என்று கூறுகிறது.

எப்பேர்ப்பட்ட நாடகம்?

அப்படியே இருந்தா லும், அவர்கள் தடைக் கான காரணமாகக் கூறி யது அய்.அய்.டி. நிறுவ னத்தின் பெயரை அவர் களின் அனுமதியைப் பெறா மல் வழிகாட்டு நெறி முறைகளை மீறி பயன் படுத்தியதுதான் என்கி றார்கள். ஆனால், இப் போது அவர்கள் கண்டு பிடித்துள்ளது என்ன வென்றால், அவர்கள் கூறும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிட் டார்கள். அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத் தின் நிகழ்ச்சி ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று நடந் துள்ளதை இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஆகவேதான், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தடையை விலக்கிக் கொள் கிறார்களாம். கைர்லாஞ்ஜி படுகொ லைக்கு உயர்நீதிமன்றத் தில் சாதாரண குற்றம் மற் றும் பழிவாங்கும் கொலை என்றும், ஜாதியால் எது வுமே நடக்கவில்லை கார ணமாக சொல்லப்பட்டது போல், அவர்கள் விதிக் கின்ற இதுபோன்ற தடை யின்மூலமாக, டாக்டர் அம்பேத்கர், பெரியார், பகத்சிங் அல்லது இந்து மதம் மற்றும் மோடி அர சின் கொள்கைகள்குறித்த நம்முடைய விமர்சனங் களின்மீதோ எதையுமே செய்யமுடியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் கள்.

அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்ட அமைப்புக் குத் தடை விலக்கிக்கொள் ளப்பட்ட போதிலும், அய்.அய்.டி. நிர்வாகம் மன் னிப்புக் கோரவில்லை. நாம் அமைப்புக்கான அங்கீகா ரத்தைத்தான் பெற முடிந் ததே ஒழிய, அவர்களிடமி ருந்து மன்னிப்புக் கோரிக் கையைப் பெற முடிய வில்லை.

இது அம்பேத்கரிடம், காந்தி கோரியது போன்ற தாகவே உள்ளது. தீண்டா மையை கடைப்பிடித் தமைக்காக ஜாதி இந்துக் களிடமிருந்து வருத் தத்தை வேண்டுமானால் பெறலாம் என்றார்.

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி. நிர்வாகம் மன்னிப்பு கேட்பதற்கான போதிய வாய்ப்புகளை வழங்கினோம். ஆனால், அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் இருந்தது டன், மெல்ல அச்சுறுத் தவும் தொடங்கினார்கள்.

அம்பேத்கர் சொல்வது போன்று, ஜாதி இந்துக் கள் மனதளவில் தாழ்த் தப்பட்ட ஜாதியினரை ஆதிக்கம் செலுத்தி வந் ததை குற்ற உணர்ச்சியாக எண்ணவில்லை. சட்ட ரீதியிலான அழுத்தங்கள் ஏற்படும்வரை அவர்கள் எண்ணம் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார்.

குஜராத்தில் நூற்றுக் கணக்கிலான முசுலிம்க ளைக் கொன்று குவித்த போது ஏற்படாத குற்ற உணர்வு, கைர்லாஞ்ஜி மற்றும் ஹாஷிம்புரா கொலையாளிகள் வழக் குகளில் அவர்களுக்கு ஆதரவான தீர்ப்புகள் வந் ததைக் கொண்டாடியவர் கள், அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்துக்குத் தடைவிதித்ததில் எப்படி குற்ற உணர்வுடன் இருப் பார்கள்? அவர்களிடமி ருந்து அதை எதிர்பார்ப் பதே அதிகமானதாகத் தான் இருக்கும். அவர்கள் மன்னிப்பு கோரும் விருப் பம் இல்லாமல் இருக்கும் நிலையில், அவர்களிடமி ருந்து மன்னிப்பைப் பெறும் வகையில் நாம் இன்னும் வலிமையாக வளராமல் இருக்கிறோம்.

அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத் தடை நீக் கப்படுவதற்கான பேச்சு வார்த்தை 8 மணிநேரம் நீடித்தது. அங்கிருந்தவர் கள் கூறும்போது, அய்.அய்.டி.யின் வரலாற்றில் இதுபோன்று மாணவர் அமைப்போ, பேராசிரியர் களோகூட இந்த அள வுக்கு அய்.அய்.டி. இயக்கு நருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டது கிடையாது என் கிறார்கள். இந்த அளவி லான சிறிய வெற்றிகூட ஜன நாயக சக்திகளால் மட்டுமே சாத்தியமானது. வேறு காரணங்களால் அல்ல.

பேச்சுவார்த்தையில் அனைத்து மாணவர் அமைப்புகளையும் சமமாக நடத்துவதையும், கருத்து சுதந்திரத்தை உறுதிப் படுத்தவும் ஒப்புக்கொண் டுள்ளனர். அவர்களுக்குள் பாரபட்சம் என்பது வேரூன்றிப்போய் உள்ளது. அதுதான் அனைவருடன் எங்களை சமமாக நடத்து வதற்கு தடையாக உள் ளது. ஆகவே, இனியும் எங்களை சமமாக நடத்த வேண்டும் என்று கெஞ்சப் போவதில்லை. ஆனால், தொடர்ந்து விடாப் பிடியாக கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் இந்துத்துவா செயல் திட்டங்களை எதிர்த்துக் கொண்டே இருப்போம். இந்துத்துவா சக்திகள் எப்போது திரும்பவும் தாக்கலாம் என்று வாய்ப் புக்காக காத்திருக்கும் என்றும் கருதுகிறோம்.

அரசமைப்பு என்று ஒன்று உள்ளது. சட்டங் களும், நீதிமன்றங்களும் இருக்கின்றன. ஆனால், அவை நீதியைக் காப்ப வையாக இல்லாமல் இருக் கின்றன. இவைகளை யெல்லாம் தாண்டித்தான் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். போராடியேத் தீரவேண்டும என்கிற முடிவுக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக நம்மால் முடியும். இந்த சிறிய அள விலான வெற்றி எங்களை திருப்திபடுத்திவிடாது. ஆனால், எங்களுக்கு தொடர்ச்சியாக போராட வேண்டும் என்கிற உணர்வை அளித்துள்ளது.

எங்களுடன் தோள் கொடுத்து நின்றவர்கள் அத்துணைப்பேருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இது மக்களிடையே நாங் கள் ஆற்ற வேண்டிய பங் களிப்பை மேலும் அதி கரித்து உள்ளது.

_இவ்வாறு அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டக் குழுவினர் வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103012.html#ixzz3cekVC4x9

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற நாட்டில் கல்விக் கூடங்களில் கீதை, சூரிய நமஸ்காரமா?
நீதிமன்றம் செல்லுகின்றன இஸ்லாமிய அமைப்புகள்

புதுடில்லி, ஜூன் 10_  அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பகம் மற் றும் சில சிறுபான்மை அமைப்புகள் ஒன்றி ணைந்து மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனைத்து மத மக்கள் மீதும் கீதை, சூரிய நமஸ் காரம், யோகா மற்றும் வேத சுலோகங்களை நெட்டுரு செய்ய வற்புறுத் துவதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.    அரியானா, மகாராஷ் டிரா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வரு கிறது. இந்த மாநில அரசுகள் ஆட்சிக்கு வந்த உடனேயே இளம்வயதின ரின் கல்வித்திட்டத்தில் இந்துத்துவக் கொள்கை களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றன.    அரியானா மாநில அரசு, தான் ஆட்சிக்கு வந்த உடனேயே அரி யானா மாநிலத்திலுள்ள பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்த்தது. இதனைத் தொடர்ந்து யோகா, சூரிய நமஸ்காரம், மற்றும் வேதங்களில் உள்ள சுலோகங்களை எல்லாக் குழந்தைகளும் கட்டாயம் படிக்கவேண் டும் என்று உத்தரவிட்டி ருந்தது. அரியானாவைத் தொடர்ந்து மகாராஷ் டிராவில் அனைத்து மாந கராட்சிகளுக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதை, ஒரு பாட மாக கட்டாயமாக்கப் பட்டது. மெல்ல மெல்ல அனைத்துப் பள்ளிகளுக் கும் கொண்டு செல்லும் திட்டத்தையும் முன்வைத் துள்ளது.

மகாராஷ்டிரா வில் உள்ள தனியார் பள்ளிகள் அனுமதியின் போது கட்டாயம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத் திற்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப் பட்டது. மேலும் யோகா சூரியநமஸ்காரத்திற்கான தனி வகுப்புகளும் கட்டா யப்படுத்தப்பட்டன. இந்த இரு மாநிலங்களைத் தவிர ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களி லுள்ள பள்ளிகளில் பகவத் கீதை சூரியநமஸ்காரம் கட்டயமாக்கப்பட்டது. இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில் குறிப் பிட்ட மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தாலும் மதம் சார்பான கட்சி ஆட்சியமைந்ததாலும் அரசியல் சட்டம் கூறிய மதச்சார்பின்மை குப்பை யில் தூக்கி எறியப்பட்டது.  இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு மற்றும் சிறு பான்மையினர், மாநில அரசுகளின் இந்த அரா ஜகப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து முஸ்லிம் சட்ட ஆணையத்தின் பேச்சாளர் அப்துல் ரகீம் குரோஷி கூறியதாவது, இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தவரும் அவர்களின் நம்பிக்கைப்படி வாழ உரிமை உள்ளது, முஸ்லிம் கள் அல்லாவை மட்டுமே வணங்குகின்றனர். இது அவர்களின் மதநம்பிக்கை தொடர்பான விவகாரம், ஆனால் சில மாநில அர சுகள் பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்வதையும், பகவத் கீதைப் படிப்பதை யும் கட்டாயமாக்கியுள் ளார்கள்.  இந்தப் பள்ளி களில் முஸ்லிம் கிறிஸ்தவ மற்றும் இதர மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் கல்விகற்கின்றனர். இதைக் கருத்தில் கொள்ளாது மத உணர்வுகளை வேண்டு மென்றே புண்படுத்தும் செயல்களைச் செய்துவரு கிறது.  மாநில அரசுகளின் இந்த செயல்கள் தேசியத் தின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் விதமாக உள் ளது. தேச ஒற்றுமையை யும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல உள்ளோம். நீதி மன்றம் செல்லாமல் இதற் குத் தீர்வு காணமுடியாது. மேலும் நாடு தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்சிந்தனையும்

இதற்குப் பிறகாவது...

செய்தி: திராவிடக் கட்சிகளை யாராலும் அழிக்க முடியாதுதான்; ஆனால், அவர்களே அவற்றை அழித்து விடுவார்கள்.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிறகாவது எந்த ஒரு திராவிடர் கட்சியாவது பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக்கொள்ள நினைத்தால், அவர்கள் தானாகவே அழிந்து விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: தமிழ்நாட்டில் பி.ஜே.பி. பிறக்கும்போதே இறந்துதானே பிரசவமானது.

தமிழ் ஓவியா said...

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்


ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும், ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது அரிச்சுவடி படிக்காமல், பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.

_ (குடிஅரசு, 9.2.1936)



Read more: http://www.viduthalai.in/page-2/103022.html#ixzz3celQRcYX

தமிழ் ஓவியா said...

யோகாவின் பெயரால் இந்துத்துவா நுழைவா?


பன்னாட்டு யோகா நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்து யோகா மட்டும் செய்யலாம் என்று புதிய உத்தரவு வெளிவந்துள்ளது.

இந்து மதப் பிரச்சார யுக்திகளில் ஒன்றான யோகாவை தந்திரமாக உடற்பயிற்சி என்ற போர்வையில் மாற்றி பன்னாட்டளவில் யோகா தினமாகக் கொண்டாடப்படும் அளவிற்கு மோடி அரசு கொண்டு சென்றது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த உடற்பயிற்சிக் கலை திராவிடர்களுக்குரியது; சிந்து சமவெளி நாகரிகத்தில் இதன் வேர் உள்ளது; ஆரியம் இதனையும் ஆன்மிகப் போர்வையில் உருமாற்றி விட்டது.

இந்துத்துவா சிந்தனை கொண்ட அரசு மோடி தலைமையில் அமைந்ததும் உடனடியாக இந்து அடையாளங்களை வற்புறுத்தி இந்தியா முழுவதும் வாழும் அனைத்து மக்களிடமும் திணித்து, பிற மதத்தவர்களின் கலாச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அனைத்து இடங்களிலும் நடைமுறைப் படுத்தத் துடிக்கிறது; இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் கட்டாய யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை விட்டிருந்தது. பன்னாட்டு யோகாநாளான ஜூன் 21 ஆம் தேதி நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் யோகாவுடன் சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவை இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

இஸ்லாமிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோடான கோடி விண்மீன்களின் சூரியன் ஒரு விண்மீன் மட்டுமே; அதை வணங்குவதென்பது முட்டாள்தனமாக செயலாகும். இந்த முட்டாள்தனமான செயலை குழந்தைகளையும் செய்யச் சொல்வது என்பது அவர்களின் அறிவியல் கல்விக்கு எதிரானதாகும். வகுப்பறையில் சூரியன் ஒரு விண்மீன் என்று படித்துவிட்டு, பிறகு வெளியில் வந்து சூரியனை வணங்குங்கள் என்று குழந்தைகளிடம் கூறும்போது, அவர்கள் குழம்பிப் போவார்கள். பள்ளிக்குச் செல்லுவது குழப்பத்தைத் தீர்க்கவா? குழம்பிப் போகவா? மேலும் கடவுள் ஒருவனே அவனைத் தவிர வேறு எதையும் வணங்குவதில்லை என்பது இஸ்லாமியர்களின் மார்க்கமாகும்.

தமிழ் ஓவியா said...

இந்தியா போன்ற துணைக் கண்டத்தில் இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மேலும் பல்வேறு மதக் கொள்கைகளை பின்பற்றுபவர்கள், மறுப்பாளர்கள், நாத்திகர்கள் வாழ் கின்றனர். ஆனால், மத்திய அரசு தன்னுடைய இந்துத்துவா கொள்கைகளை அனைத்து மதத்தவர்களிடமும் திணிக்கும் வகையில் நடந்து வருகிறது என்று பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளன.

தொடக்கத்தில் சூரிய நமஸ்காரம் உடற்பயிற்சி என்று தனக்கு ஆதரவான இஸ்லாமிய அமைச்சர்கள்மூலம் அறிக்கை விட்டு ஆழம் பார்த்தனர். ஆனால், எதிர்ப்பு மேலும் வலுவடைய, கடைசியில் சூரிய நமஸ்காரம் மாத்திரம் தேவையில்லை என்று மீண்டும் திருத்திய சுற்றறிக்கை விட்டுள்ளது.
ஏற்கெனவே யோகா தினத்தின் போது ஓம் என்று முழங்குமாறு உத்தரவிட்டு, அதையும் திரும்பப் பெற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் சூரிய நமஸ்காரத்தைத் திரும்பப் பெற்று மூக்குடைபட்டுள்ளது.

இந்த நிலையில், சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கிச் சாகவேண்டும், இந்தியாவை விட்டு ஓடவேண்டும் என்று மீண்டும் தனது இந்துத்துவ நஞ்சைக் கக்கியுள்ள சாமியாரும், பா.ஜ.க. எம்.பி.,யுமான ஆதித்யநாத், வாரணாசியில் உள்ள கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, சூரிய நமஸ்காரம் திரும்பப் பெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துப் பேசியபோதுதான் இவ்வாறு கூறியுள்ளார். யோகாவில் ஒன்றுதான் சூரிய நமஸ்காரம்; தலையில்லாமல் உடல் இல்லை; அதுபோல், யோகாவில் சூரிய நமஸ்காரம் தலை போன்றது; தலையில் மூளையில்லாதவர்களுக்குத் தலையின் (சூரிய நமஸ்காரம்) மதிப்புத் தெரியாது. சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் இனிமேல் பூமிக்குள் பள்ளம் தோண்டி இருட்டில் வாழட்டும். அதைவிட அவர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்றுவிட்டால், அவர்களுக்கும் நல்லது; எங்களுக்கும் நிம்மதி என்று அவருக்கு உரித்தான வகையில் உளறிக் கொட்டியுள்ளார். சூரிய நமஸ்காரத்தை கட்டாயம் செய்யவேண்டும் என்றும், விருப்பமில்லாதவர்களுக்கு இந்த நாட்டில் இருக்க உரிமையில்லை என்றும் ஊளையிடுகிறார்.

இந்த நாட்டில் எல்லா மதத்தவர்களும் சம உரிமை யுடன் வாழ உரிமையுண்டு என்று ஒரு பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நீட்டி முழங்குகின்றார். இன்னொரு பக்கத்திலோ அவரின் எடுபிடி சாமியார்கள் வாயைத் திறந்தால், சாக்கடைக் கும்பியாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

அந்த இந்துத்துவா வட்டாரத்துக்கே உரித்தான இரட்டை நாக்கு செயல்முறை தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இந்துத்துவா நஞ்சைக் கக்கி வரும் அந்தச் சாமியார் என்னும் நாகப்பாம்பின்மீது நடவடிக்கை எடுக்கத் துப்பு இல்லை; இந்த லட்சணத்தில் சாதுர்யமாக நல்லிணக்கம்பற்றி பேசுவதெல்லாம் யாரை ஏமாற்றிட? அசல் வெட்கக்கேடு!!



Read more: http://www.viduthalai.in/page-2/103024.html#ixzz3celcE4zm

தமிழ் ஓவியா said...

பெரியார் ஈ.வெ.ரா.வும்- மார்சல் நேசமணியும்!


-பேரா.டாக்டர் இவாஞ்சலின் ஜெமி

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில்



தூங்கியவனைத் துடிப்பாக்கித் துன் பத்தினைத் தோணியாக்கித் தியாகத் தினைத் தழும்பாக்கித் திராவிட மக் களைத் தட்டியெழுப்பி ஆரியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாங்கித் தந்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அதேபோன்று மாந்தன் என்று கருதப் படாமல் மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட திருவிதாங்கூர்த் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு வாகை சூடியவர் தென் எல்லைக் காவலன் நேசமணி.

மார்சல் நேசமணி தன்னுடைய வாழ்நாளில் தன் கைகளினால் மாலை இட்டது பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு மட் டுமே. அவ்வாறு பெரியாருக்கு மட்டும் மாலை சூட்ட என்ன காரணம் என்று பார்த்தால், வரலாற்றைச் சற்றுப் பின் னோக்கிப் பார்க்கவேண்டும்.

1921 ஆம் ஆண்டில் நாகர்கோவி லில் மார்ஷல் நேசமணி தமது வழக் குரைஞர் தொழிலை ஆரம்பித்தார். நீதிமன்றத்தில் மேலின வழக்குரைஞர் களுக்கு நாற்காலியும், மற்ற எல்லா வழக்குரைஞர்களுக்குக் குந்துமனை யும் (ஸ்டூல்) போடப்பட்டிருந்தது. வழக் குத் தொடுப்பவர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே நின்றுதான் தங்களுடைய சாட்சியங்களைப் பதிவு செய்யவேண் டும். இடுப்பில் துணி கட்டிக்கொண்டு தான் நீதிமன்றத்திற்கு வெளியில் நிற்கவேண்டும். மார்ஷல் நேசமணி அந்தக் குந்துமனையில் உட்காராமல் மேலின வழக்குரைஞர்கள் உட்காரும் இடத்திற்குச் சென்று உட்கார்ந்தார். தன்னுடைய மனுதாரர்களைச் சாட்சி யின்போது நீதிமன்றத்திற்குள்ளே அழைத்து வந்தார். இது திருவிதாங் கூரில் பெரும் பரபரப்பை உருவாக்கிற்று. இவருடைய தலைமையை ஏற்றுச் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட வழக்குரைஞர்கள் போராட முன்வந்தனர். நிலைமையை உணர்ந்த திருவிதாங்கூர் அரசு எல்லா வழக்குரை ஞர்களும் நாற்காலியில் உட்காரலாம் என்று அனுமதி வழங்கியது. இதனால், திருவிதாங்கூர் நீதிமன்றங்களில் நாற் காலிகளில் பதிந்திருந்த ஜாதி வெறி அகற்றப்பட்டது. வழக்குத் தொடுப்பவர் களும் தேவைப்பட்டால் நீதிமன்றத்திற் குள் வர உரிமை பிறந்தது. நீதிமன்றங் களில் இரு பானை தண்ணீர் இருந்தது. உயர் இனத்தவருக்கு ஒரு பானையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேறொரு பானையுமாக இரு பானை தண்ணீர் இருந்தது. நேசமணி ஒரு பானையை உடைத்தெறிந்தார். அன்றிலிருந்து தண் ணீரில் இருந்த ஜாதி வேறுபாடு நீதி மன்றத்தை விட்டு வெளியேறியது.

திருவிதாங்கூரில் திருமூலம் சட்ட சபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே ஓட்டுரிமை இருந்தது. அதனை மாற்றி எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டு மென்று நேசமணி குரல் கொடுத்து வந்தார். 1943 ஆம் ஆண்டு திருமூலம் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட் டதும் தன்னுடைய கன்னிப் பேச்சில் இந்தக் குமுறலை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் எல்லோருக்கும் ஓட் டுரிமை கொடுக்கப்பட்டது. இது நேச மணியின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்ததும், அதிகார வர்க் கங்கள் ஜனநாயகத்தில் தோல்வியை அடைந்தன. இதனால் இன்றும் உயரின வர்க்கம் நேசமணியைக் குறித்து இழி வாகவே பேசுவர்.

திருவிதாங்கூர் முழுவதும் காலரா, வைசூரி போன்ற நோய்கள் பரவின. அக்காலத்தில் தீட்டு காரணமாக அரசு மருத்துவர்கள் மருத்துவம் செய்ய முன்வருவதில்லை. இதனால், நோயால் பலரது உயிர்கள் அவர்களை விட்டு நீங்கியது. இதனைப் பற்றித் தோப்பூர் மு.சுப்பிரமணியம் கூறும்போது,

தமிழ் ஓவியா said...

காலரா நோயால் ஏழை மக்கள் பட்ட துயர் கொஞ்சநஞ்சம் அல்ல. அரசாங்கமோ பாராமுகமாய் இருந்தது. செத்த பிணம் ஓர்புறம் அதன் பக்கத்தில் உயிருக்காக மன்றாடும் மற்றொரு மனிதன். தாய்மார்களின் கண்ணீர்; சாவோடு போர் செய்யும் தந்தையைப் பார்த்துச் சேயின் கதறல். இவற்றின் மத் தியிலே அந்த அஞ்சாநெஞ்சன் நேச மணி சென்று தன் அரிய முயற்சியால் கிடைத்த மருந்துகளையும், உணவை யும் உட்கொள்ளச் செய்தார். இவரு டைய வேண்டுதலின்படி அய்ரோப்பிய பாதிரிமார்களும் உதவி செய்தனர்.

கோடிமுனைப் பகுதியில் கடலின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ஓலையும், மூங்கிலும் வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. சிறிதளவு ஓலையும், மூங்கிலும் வழங்கப் பட்டது. இன்னும் அதிகமாகத் தேவைப் பட்டது. அதற்குத்தான் அந்த ஏழை களின் தோழன் கூறியதாவது:

பணம் படைத்தவன் ஒருவன் ஒரு கேஸ் கொண்டு வந்தால் அந்தக் குறை யையும் நிவர்த்தி செய்துவிடுவேன் என்று ஏழைகளின் தோழன் எங்கள் மார்ஷல் நேசமணி கூறினார் என் கிறார் தோப்பூரார்.

தமிழ் ஓவியா said...

பல சாலைகள், கிணறுகள், குளங் கள், சானல்கள் ஆகியவற்றில் இருந்த ஜாதி வெறி இவர் போராட்டத்தால் மாறி யது. எப்படிப் பெரியார் தமிழகத்தில் பல்வகையான போராட்டங்கள் நடத்தித் தமிழனை ஆரிய இனத்திடமிருந்து காப் பாற்றினாரோ அதேபோன்று மாபெரும் போராட்டங்களை நடத்தி நம்பூதிரிகளி டமிருந்தும், ஜாதி வெறி பிடித்த உய ரினத்தவர்களிடமிருந்தும் தமிழர்களைக் காப்பாற்றினார் நேசமணி.

திருவிதாங்கூர் மன்னரும், மக்களில் சில இனத்தவரும் மருமக்கள் வழி சட்டத்தைப் பின்பற்றிய காரணத்தினால் தமிழ் மன்னர்கள் மலையாள மன்னர் களாக மாறினர். தமிழ்மொழி இருந்த இடத்தில் வட்டார மொழியாகத் தோன் றிய மலையாள மொழி ஆட்சி பீடம் ஏறியது. இந்த நிலையை மாற்றுவதற் காக, பல பெரியோர்கள் பல இயக் கங்களைத் தோற்றுவித்தனர். அதில் ஒன்று நேசமணியால் உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரஸ்.

1945 டிசம்பர் 9 ஆம் நாள் சமூகநீதிப் போராட்டத்திற்காகத் திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரஸ் நேசமணியால் தொடங்கப்பட்டது. இதை 1947 செப்டம் பர் 8 இல் சிவதாணுப்பிள்ளை, எம்.எல்.ஏ., அறிஞர் சிதம்பரம் பிள்ளை, அப்துல் ரசாக் எம்.எல்.ஏ. ஆகியோருடன் இணைந்து ஆலன் மண்டபத்தில் வைத்துத் திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாக நேசமணி மாற்றினார். இதன் வழிப் போராடி திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகள் (நாலரை தாலுகா) தாய்த் தமிழகத்துடன் இணைந்தன. இணைந்த பகுதிகளைத் திருநெல்வேலி மாவட்டத் தோடு இணைக்க அரசு விரும்பியது. நேசமணியின் வேண்டுதலுக்கிணங்கப் பெருந்தலைவர் காமராசர் கன்னியா குமரி மாவட்டம் என்று பெயர் சூட்டி தனி மாவட்டமாக மாற்றினார்.

இந்தப் போராட்டத்தில் நேசமணி 4.7.1954 ஆம் நாள் கைது செய்யப் பட்டார். அவருடன் ஜனாப் அப்துல் ரசாக் எம்.பி., மாண்புமிகு சிதம்பரநாதன் ஆகியோரும் கைதாகினர். அவர்களை விடுதலை செய்யத் திருவிதாங்கூர்த் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நேசமணி விடுதலை செய்யப்பட்டார். நேசமணி விடுதலை தினமும், நாடு விடுதலை தினமும் கொண்டாடப்பட் டன. அப்போது நேசமணி மற்றும் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக் கப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் 11 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 36 பேர் உயிரிழந்ததாகத் தியாகிகள் கூறுகிறார்கள். பலர் ஊரை விட்டே காட்டுப் பகுதிகளில் ஓடித் தங்கினர். இதனால் திருவிதாங்கூர் முழுவதும் கண்ணீரும், அழுகையுமாகக் காணப்பட் டது. நேசமணி பாரதப் பிரதமர் பண்டிதர் நேரு முதல் தமிழக முதல்வர் பெருந்தலை வர் காமராசர் வரை தொலைப்பேசி மூலமாகச் செய்திகளை அனுப்பினார்.

இதனை அறிந்த பெரியார் உடுக்கை இழந்தவன் கைபோல உதவி செய்தார். மெரீனா கடற்கரையில் ஒரு கூட்டத் தைக் கூட்டி, திருவிதாங்கூரில் தமிழர் கள் தாக்கப்படுவார்களானால், இங் கிருக்கும் மலையாளிகளும் தாக்கப்படு வார்கள். அவர்கள் இங்கு உரிமை யோடு வாழ முடியாது. அவர்கள் டீக்கடை வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறினார். தமிழகத்தி லிருந்த மலையாளிகள் பட்டத்தை நெருக்கினார்கள். இதனால், திருவிதாங் கூர் முதலமைச்சர் பட்டம் தாணு பிள்ளை தன்னுடைய தமிழன் வேட் டையை நிறுத்தினார். பெரியார் செய்த உதவியை நேசமணி வாயாரப் புகழ்ந் துள்ளார். பாரதப் பிரதமர் பண்டிதர் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், இராஜகோபாலாச்சாரியார், பெருந்தலை வர் காமராசர், டாக்டர் லோகியா, கிருபாளினி, இராஜேந்திர பிரசாத், லால்பகதூர் சாஸ்திரி, திருவிதாங்கூர்த் தலைவர்களான சித்திரைத் திருநாள் மகாராஜா, பிரதமர் நாராயண பிள்ளை, பட்டம் தாணுபிள்ளை ஆகியோருடன் பேசியும், வாதாடியும் வந்துள்ள நேச மணி யாருக்குமே மாலை அணிவித்தது கிடையாது. ஆனால், தன் கரத்தால் பெரியார் ஈ.வெ.ரா.-வுக்கு மட்டும் மாலை சூட்டினார் என்கிறார் சுவாமி தாஸ் எம்.எல்.ஏ., பெரியாரின் சேவையும், தென்னெல்லைக் காவலன் நேசமணி யின் சேவையும் தமிழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும் என்பதில் அய்யமில்லை.

குறிப்பு: தென்னெல்லைக் காவலன் மார்சல் நேசமணி பிறந்த நாள் 12.06.1895



Read more: http://www.viduthalai.in/page-2/103025.html#ixzz3celxtpRS

தமிழ் ஓவியா said...

செல்லக்கிளி (எ) சு.அறி வுச்செல்வன் _ வ.சந்தியா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்து பேசியதாவது:_ மணமகன் செல்லக்கிளி பழகுமுகாம் மாணவர் அவர் இரண்டு முறைதான் வாய் திறப்பார் ஒன்று கொட்டாவி விடும் போது இரண்டாவது சாப் பிடும்போது. பழகு முகாம் நிறைவில் அவருடைய பேச்சை நிறுத்த முடியாத அளவு பேசும் திறனை பழகு முகாம் வளர்த்தது என் பதை நினைவுபடுத்தி தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் உழைப்பால் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகளை தொடங்கி வைத் ததால் நாம் இன்றைக்கு நமது செல்லக்கிளி (எ) அன்புச்செல்வன் - மண மகள் வ.சந்தியா ஆகியோர் பட்டயப்படிப்பை முடித்து உள்ளனர். இந்த அளவுக்கு நாம் உயரக் காரணம் தந்தை பெரியார் பெற்று தந்த இடஒதுக்கீட்டால் என்பதை மறக்கக்கூடாது. இது சுயமரியாதைத் திரும ணம் இதுவே புரோகிதத் திருமணமாக இருந்தால் பார்ப்பான் சொல்லும் மந்திரம் நமக்கு ஒன்றும் புரியாது. மணமக்களுக்கும் ஒன்றும் புரியாது. தீ குண் டம் வளர்த்து எண்ணெயை ஊற்றி புகை கிளப்பி மண மகள் கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கு எற்பாடு செய்வார். மணமகளை கேவலப்படுத்தும் வகையில் மந்திரங்களை கூறுவார். இது போன்ற சுயமரியாதை திருமணத்தில் அனைவருக் கும் புரியும்படியான நமது தாய் தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்து மணமக்கள் உறுதிமொழி கூறி மாலை மாற்றி கொண் டனர். இது போல ஒவ் வொரு தமிழன் இல்லத்தி லும் நடைபெறும் விழாக் களை நம்முடைய பெரி யோர்கள், பெற்றோர்கள் முன்னின்று நடத்துங்கள் தமிழன் இல்ல நிகழ்ச்சிக்கு பார்ப்பனனை அழைக் காதீர்கள் என்று கூறி மண மக்கள் எக்காரணத்தை கொண்டும் பெற்றோர் களை புறந்தள்ளக்கூடாது நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறி நிறைவுரையாற்றினார்.

குறிப்பு: மணவிழா நிகழ்ச்சி நடந்துகொண் டிருக்கும்போது உற்றார் _ உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பு அளிக்க மேடையை நோக்கி வருகை தந்தபோது மணமகன் செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் எழுந்து வந்து மைக்கை வாங்கி அனைவ ரும் தயவு செய்து இருக்கை யில் அமருங்கள் நமக்கு தெரிந்த மொழியில்தான் தமிழில்தான் பேசுகிறார் கள். நமக்கு புரியாத சமஸ் கிருத மொழியில் என்ன பேசுகிறார் என்பதை தெரி யாத நாம் மணிகணக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்கள் நமக்கு தெரிந்த மொழியில் கருத்துக்களை கூறுகிறார் கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தயவு செய்து அமைதியாக உட்கார்ந்து கருத்துகளை தெரிந்து கொண்டு சொல்ல வேண் டும் என்று மணமகன் அன் புச்செல்வன் கேட்டுக்கொண் டதால் அனைவரும் இருக் கையில் அமர்ந்து கொண்ட னர்.

கழக மாநாடு போல பையூர் பெரியார் சிலை அருகிலிருந்து மணமகன் செல்லக்கிளி இல்லம் வரையும், காவேரிப்பட் டணம் பெரியார் சிலையி லிருந்து தருமபுரி சாலை எஸ்.எம்.கல்யாண மகால் மண்டபம் வரை நூற்றுக் கும் மேற்பட்ட கழகக் கொடி கட்டியும், டிஜிட் டல் பேனர்கள் வைத்தும், பையூர் தந்தை பெரியார் சிலைக்கு மணமகன் மாலை அணிவித்து சிறப்பித்தார். மாநாடு போல சிறப்பாக செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் _ வ.சந்தியா இணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் மாநாடுபோல நடைபெற் றது. இறுதியாக பையூர் திமுக பேச்சாளர் தி.க. இளைய ராசா நன்றி கூறினார்.

10-06-2015

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரையும், பெரியாரையும் பிரித்தாளத் துடிக்கும் காவிகள் - பார்ப்பனர்கள்!
இந்து ஏடு திரட்டி வெளியிட்ட கருத்துகள்

சென்னை, ஜூன் 10_ சென்னை அய்.அய்.டி. விவகாரத்தில் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் சங் பரிவார்க ளும், பார்ப்பனர்களும் மேற் கொள்ளும் சூழ்ச்சிபற்றி இந்து ஏடு பலரிடம் கருத் துகளைக் கேட்டு வெளி யிட்டுள்ளது.

விவரம் இதோ:
சென்னை அய்.அய்.டி யில் புயலடித்து ஓய்ந்த  அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை தொடர்பான சர்ச்சை அர சியல் கட்சிகளின் ஒரு மித்த போராட்டத்தின் விளைவால் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒரு முகமாக அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத்தின் பேச் சுரிமை சுதந்திரத்திற்கு குரல் கொடுத்து அதில் வென்றுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

அவ்வி ரண்டு தலைவர்களின் கருத்துக்கள் மேலும் மக்களிடையே கொண்டு செல்ல புதிய பாதை உரு வாகியுள்ளது.   பாஜக மற்றும் அதன் துணை அமைப்புபோல் செயல்படும் உதிரிக் கட்சி, அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையைக் கொண்டாடி யுள்ளது.

அதேபோல் முக் கியமாக உதிரிக் கட்சி ஒன்று அம்பேத்கர் இந்து மத பாதுகாவலர் போல வும், பெரியார் தாழ்த்தப் பட்டவர்களின் விரோதி கள் போலவும் சித்தரித்து வருகிறார்கள். மத்தியிலும் தொடர்ந்து அம்பேத் கருக்கு இந்து மதச்சாயம் பூசும் உள்ளார்ந்த வேலை கள் நடந்துவருகின்றன.

சங்பரிவார்களின் இந்த நரித்தந்திரத்தை தமிழகத் தில் உள்ள உதிரிக்கட்சி ஒன்று தமிழக மண்ணில் செயல்படுத்த முனைந் துள்ளது. இதற்கு அம்பேத் கர்_ பெரியார் வாசகர் வட் டத்திற்கான தடையை சாத மாக எடுத்துகொண்டது.

கலி.பூங்குன்றன்

அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக் கங்கள், இதை உடைக்க தமிழ்நாட்டில் உள்ள சில சில்லறைக் காவி அமைப்பு கள் முனைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்கள் அம்பேத்கர்_ பெரியார் இருவரின் சமூக போராட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர்.

இருவ ருமே ஜாதிய வேறு பாட்டை உடைத்தெரிய வேண்டுமென்றால் முத லில் பார்ப்பனர்கள் வகுத்த வர்ண முறையை வேரோடு பிடுங்கி எரித்து சாம்ப லாக்கவேண்டும், இதையே தான் பெரியாரின் திரா விட இயக்கமும், அம்பேத் கரின் போராட்டங்களும் தெற்கிலும் வடக்கிலும் வலியுறுத்தி வந்தன.

அம்பேத்கர் மற்றும் பெரியார் இருவருக்குமே ஒரே இலக்குதான், இந்து மதத்தை ஒழித்தாலொழிய இந்தச் சமூகத்தில் புரை யோடிக்கிடக்கும் ஜாதீயக் கொடுமைகளை நீக்க முடியாது.

இந்த வர்ண பேத ஒழிப்புப் போராட் டத்தில் இருவரின் அணுகு முறைகளும் வேறாக இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, ஆனால் தற்போது இருவரின் கருத் துக்களிடையே பிளவை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க பார்ப்பன நரித் தந்திரம் சூழ்ச்சி செய்து வருகிறது, என்று விடு தலை பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிய தாவது,

அய்.அய்.டி சென்னை முழுவதுமே பார்ப்பனர் களால் ஆக்கிரமிக்கப் பட்ட நிறுவனமாக மாறி விட்டது. உயர் ஜாதியினர் அந்த நிறுவனத்தின் அனைத்து முக்கிய பதவிக ளிலும் 95 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர். பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்கள் முதல் உதவிப் பேராசிரியர்கள் வரை எங்கும் பார்ப்பன மயம்தான். அங்கு இருந்து கொண்டு இட ஒதுக்கீட் டின் மூலம் வாய்ப்புப் பெற்று நுழைந்தவர்கள் சமூகநீதிபற்றி பேசும் போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது என்று கலி. பூங்குன்றன் கூறினார்.

ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் குறிப்பிடும்போது, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித் தும் சில எதிர்மறைக் கருத் துக்களை கூறியிருந்தாலும், இந்துத்துவா சக்திகளிட மிருந்து பாதுகாப்பது பெரியார் மற்றும் பெரி யாரின் கருத்துகள்தான் என்று தனது நிலைப் பாட்டை கூறினார்.

புனிதபாண்டியன்

தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் குறிப் பிடும்போது, சங்கபரிவார் அமைப் புகள் இந்தியா முழுவது முள்ள தலித்துகளின் வாக்குவங்கி மீது நீண்ட நாட்களாகவே ஒரு பார் வையை வைத்துள்ளன.

சங்கபரிவார் அமைப்புகள் வட இந்தியாவில் உள்ள தலித்துகளை மூளைச் சலவை செய்து அம்பேத்கா ரின் இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான எதிர் மறைக் கருத்துக்களை மறைத்து அம்பேத்கர் சங் பரிவாருக்கு ஆதரவான வர்; அவர்களின் கொள் கைகளை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்ற போலி யான கருத்துகளை தலித் துகளிடையே பரப்பி வரு கிறனர்.

அம்பேத்கர் வலி மையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அதே நேரத்தில் பார்ப் பனக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார்.   பெரியார் தனி திரா விட நாட்டை வலியுறுத்தி வந்தார், மேலும் பார்ப் பனீயத்தை எதிர்த்து பார்ப் பனரல்லாத மக்களை ஒன்றுதிரட்டினார். இந்த அமைப்பு அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு கொள்கையை முற்றிலும் ஆதரித்து ஒன் றாக செயல்பட்டு வந்தது.

சென்னை அய்.அய்.டி. யின் அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதன் எதிர் விளைவாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவது அம்பேத்கர்_பெரியார் பெயரில் அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னையின் அம்பேத் கர்_பெரியார் வாசகர் வட்டம் துவக்கவிழா ஒன் றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன், பெரியாரிய கருத்துகள், அம்பேத்கரிய கருத்துகள், இடதுசாரி சிந் தனைகள் கொண்டவர் கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்படவேண் டிய தருணம் வந்துவிட் டது. காரணம் மூவருக்கும் பொதுவான எதிரி ஒரு வரே என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பான் என்னைக் கொல்ல மாட்டான்//
நானும் பிரான்சிசும் அய்யாவை வழக்கம் போல சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, நாளைக்கு திருச்சி கடை வீதியில் உண்டியல் வசூல் செய்ய வேண்டும். நானும் வருகிறேன் , நோட்டீஸ் போடுங்கள் என்றார் அய்யா. என் கையைப் பிடித்துக் கொண்டு, சாதி ஒழிப்பு போராட்ட நிதிக்காக திருச்சி நகரில் ஈ.வெ.ரா பிச்சை எடுப்பார்" என்று நோட்டீஸ் அடிக்க வேண்டும் என்றார் அய்யா.
மறுநாள் 01.08.1957 அன்று காலை சைக்கிள் ரிக்‌ஷாவில் அய்யா உட்கார்ந்து வர, மார்க்கெட்டில் உள்ள மளிகைக் கடைக்காரர்கள் அனைவரும் உண்டியலில் பணம் போட்டனர். நேராக மலைவாசல் திரும்பினோம். இப்போது "மங்கள் &மங்கள் " கடை இருக்கும் இடத்திற்கு முன்பு அப்போது பார்ப்பனர் ஓட்டல் ஒன்று இருந்தது.
சற்று தூரத்தில் அய்யா வரும் போதே, சைக்கிள் ரிக்‌ஷாவைப் பார்த்த பார்ப்பன முதலாளி, கையில் ரோஸ் மில்க்குடன் ஓடிவந்ந்தார். அய்யாவும் அதை வாங்கிக் குடித்தார்.டம்ளரை வாங்கிக் கொண்டு உண்டியலில் 100 ரூபாய் போட்ட விட்டு சென்றார் அந்தப் பார்ப்பனர். எனக்கு கோபமாக இருந்தது.
அம்பீஸ் கபே தாண்டி, சாமி ஆர்ட்ஸ் ஸ்டூடியோ தாண்டி தெப்பக்குளம் அருகே போகும் போது ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார் அய்யா. என்ன பழனி? என் மேல் கோபமா? என்றார்.
ஆமாம் என்று சத்தமாகவே கூறினேன்.பார்ப்பான் கொடுத்ததை நீங்கள் வாங்கிக் குடிக்கிறீர்கள். ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது? இந்த நகரத்துக்கு நான் பொறுப்பு.நான் நகரச் செயலாளர் என்று கோபமாகவே பேசினேன்.

அய்யா சிரித்துக் கொண்டே, "என்னப்பா நீ, பார்ப்பான் என்றைக்கும் என்னைக் கொல்ல மாட்டான்.என்னைக் கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவனுக்கு தெரியும். நான் உயிரோடு இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி விட்டு வேனில் ஏறி மாளிகைக்கு சென்று விட்டார்..
--பெரியார் தொண்டர் திருசி வீ.அ பழனி வாழ்வும் போராட்டமும் என்ற நூலில் இருந்து,,

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பூக்குழி

செய்தி: பழநியையடுத்த கே. வேலூர் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பூக்குழி (நெருப்பில்) இறங்கி நேர்த்திக் கடன் கழித்தனர்.

சிந்தனை: விரதம் இருக் காமலேயே கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று கூறி திராவிடர் கழகத் தோழர்கள் பூக்குழி இறங் கியதுண்டே! கே.கே. பட்டி யில் (தேனி மாவட்டம்) கோயில் திருவிழா பூக்குழி யிலேயே கடவுள் மறுப்புக் கூறி கருஞ்சட்டைத் தோழர் கள் பூக்குழி இறங்கிக் காட்டி பக்தர்களை மலைக்க வைத் தனரே பூக்குழியில் ஓடும் பக் தர்கள் சிறிது நேரம் தீக்குழி யில் நின்று காட்டுவார்களா?

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குத்துக் கல்லு

கோயில் திருவிழா வில்  பக்தர்களிடையே மோதல்  சாவு -காயம் என்று செய்திகள் வரு கின்றனவே - அந்தக் கோயிலுக்குள் குடியிருக்கும் கடவுள் என்ன செய்து கொண்டு இருக்கிறதாம்?

கடவுளாவது வெங் காயமாவது - அது வெறும் குத்துக்கல் தான் என்று ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

யாரிந்த ஆணையர்?

முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்

POWER CORRUPTS;
ABSOLUTE POWER CORRUPTS ABSOLUTELY

அதிகாரம் பிழைபடுத்திவிடும்;
முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்.

எங்களது ஓராண்டு ஆட்சியில் ஊழல் இருந்ததா? என கேள்வி எழுப்பினார் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் பதவி நிரப்பப் படாமல் இருந்தது. இதனை அனைவரும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.

இப்போது இந்த உயரிய பதவிக்கு கே.வி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பரிந்துரையில் மோடி இதனை ஏற்றுக் கொண்டு  குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அவரும் நேற்று பதவியேற்றார்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சரும், வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி, மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு கே.வி. சவுத்ரியை நியமிக்கக்கூடாது என்றும், அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், அதற்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டும் மோடிக்கும், குடிஅரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி யுள்ளார்.

அரசின் சார்பில் இந்த நியமனம் செய்யப்பட்டி ருப்பதை உறுதி செய்து அரசின் அட்டார்னி ஜெனரல், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்ட நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருப்பதாக வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் நேர்மையும், யோக்கியதையும் விரைவில் அம்பலமாகும்.

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டுவோம்!


தமிழ்நாட்டில் மழை பொழியவேண்டி தமிழ்நாடு அரசுத் துறையான நீர்வளத்துறை - அதன் தலைமைப் பொறியாளர் திருச்சிராப்பள்ளி மண்டலத்துக்குட்பட்ட 30 உட்கோட்ட அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைப் போல் ஒன்றை அனுப்பினார்.

ஒவ்வொரு உட்கோட்டம் சார்பிலும் ஆங்காங்கே உள்ள கோவிலில் சிறப்பு யாகம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டது.

இது ஒரு பிற்போக்குத்தனமான - விஞ்ஞானத்திற்கு எதிரான பழைமை வாய்ந்த இந்து மத மூடநம்பிக்கையைச் சேர்ந்த பழங்குப்பையாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே அழுத்தமாக வரையறுத்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை தனக்குரிய அதிகாரத்தையும், மக்களின் மூடத்தனத்தையும் பயன்படுத்தி அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்திருப்பது அசல் அத்துமீறிய - அப்பட்டமான சட்ட மீறலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்தியுள்ளது.

அதன்படிப் பார்த்தால் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்ட குற்ற வாளியாவார்.

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள்மீது திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார் (விடுதலை, 6.6.2015).

சம்பந்தப்பட்ட அதிகாரியின் சட்ட மீறலோடு அந்த நடவடிக்கை முடிந்து விடவில்லை. கோவில்களில் யாகங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்துவது என்பது அதிகாரிகளின் சொந்த செலவில் அல்ல; அரசுப் பணம்தான் அரசுக் கொள்கைக்கும், சட்டத்திற்கும் விரோதமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாகும்.

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கையின் எதிரொலியாக பொதுப் பணித்துறையின் உயர்நிலை அதிகாரியான மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்த சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு இருப்பதாகத் தகவல் வெளிவந் துள்ளது. 15 நாள்களுக்குள் பதிலை அளிக்கவேண்டும் என்று அதில் வலியுறுத்தவும் பட்டுள்ளது. அது ஒரு அரசுத் துறை நடவடிக்கையாக இருக்கக்கூடும்.

அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டுவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை போடுவது, ஆயுத பூஜை கொண்டாடுவது, காவல் நிலையங்களில் ஒலி பெருக்கி வைத்தே தடபுடலாக ஆயுத பூஜை நடத்துவது, அதற்காக வசூல் வேட் டைகளில் ஈடுபடுவது, வேலியே பயிரை மேய்வது போல நீதிமன்ற வளாகங்களுக்குள்ளேயே கோவில் களைக் கட்டுவது - இன்னோரன்ன அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிக் கிடைத்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் தாக்கல் செய்ய இருக்கும் இந்த வழக்கு பல வகைகளிலும் ஒரு சரியான பாதையை - வழிகாட்டுதலை அரசுத் துறைகளுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் காட்டும் வகையில் அமையும்.

நடைபாதைக் கோவில்களை உடனே அகற்றிட வேண்டும். அப்படி அகற்றாத மாநில அரசுகளின் (தமிழ்நாடு உள்பட) தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டும், அப்படிச் செயல்படாத அரசுகளுள் ஒன்றுதான் தமிழ்நாடு அரசு.

மக்கள் மத்தியில் உரிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமையாகும். ஒரு பக்கத்தில் பொதுக்கூட்டங்களின் வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற பணியை எழுச்சியோடு செய்துகொண்டுள்ளது.

இன்னொரு கட்டமாகத்தான் நீதிமன்றத்தின் கதவையும் தட்டுகிறது கழகம். மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அப்படி விழுமேயானால், பிரச்சினைகள் மிக எளிதாகவே தீர்க்கப்பட்டு விடும் அல்லவா?

யாகத்தாலும், பூஜை புனஸ்காரங்களாலும் விரும்பியதை எட்ட முடியும் என்றால், அரசாங்கம் கூடத் தேவைப்படாதே! எல்லாவற்றையும் பூஜைகள், புனஸ்காரங்கள், யாகங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாமே!

மெத்தப் படித்தவர்கள்கூட, பொறியியல் பட்டம் பெற்றவர்களே கூட பகுத்தறிவைச் செலுத்தாமல், பக்திப் போதைக்கு அறிவைப் பலி கொடுத்து, தாங்கள் நாசமாவதுடன், மற்றவர்களையும் அந்த மூடப் படுகுழியில் தள்ளுவது - மன்னிக்கவே பட முடியாத பெருங்குற்றமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனானால், அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருத்தை எண்ணிப் பாருங்கள் - அறிவின்மீது அவர் வைத்துள்ள மதிப்பையும், சீர்தூக்கிப் பாருங்கள், பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

புதுமைத் தென்றல் : வி.ஸ. காண்டேகரின் கருத்து மழை


மராத்திய புதுமை எழுத்தாளர் - புதினம் புனையும் பொலிவு மிக்க கருத்தாளர் வி.ஸ. காண்டேகர் அவர்கள் ஆவார்கள்.

மராத்தியில் அவர் எழுதிய புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - இவைகளை தமிழில் சுவை குன்றாமல் தரும் பணியை - அரும்பணி செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்கு புது உலகம் தேடுவோர் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறும் முன்னரும், பெற்ற பின்னரும் எனக்குத் தேவையான மெல்லியப் பூங்காற்றை  (சுவாசிப்பதைப்போல) வாசிப்பது அவசியம் - நேரமும் பறந்து விடும். வலியை மறந்து விடுவோம் என்ற வகையில் காண் டேகர்தான் எனக்குத் துணையாக இருந்தார் - முழு நேரப் பணி பெரியார் சிந்தனைகளை பரப்புவதுதான் என்றாலும்கூட!

வி.ஸ.காண்டேகர் கதைகள் என்ற நூலில் மூன்று உருவகங்களைக் கொண்ட யதார்த்தத்தை கற்பனை வண்ணம்பூசி அருமையாக தந்துள் ளார் நந்தவனம் என்ற  தலைப்பில் ஒரு சிறுகதையில்; அதைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்த போதும்) நவில்தொறும் நூல் நயம் கண்டேன்!

அதனை உங்களைப் போன்ற பயில்தொறும், படிக்கும் வாசக நண்பர் களுடன் பகிர்ந்து கொண்டு, யான் பெற்ற இன்பத்தை எனது வாசக உலகமும் பெறட்டும் என்பதாக இதனைத் தருகிறேன்.

அடிவானம்
புதுயுகம்
மரத்தின் வேர்
பெண்ணின் உள்ளம்
வழிபாடு
என்ற அய்ந்து குறுந் தலைப்புகளில் சுவைமிக்க கருத்து உருவகங்கள்-

கற்க வேண்டிய பாடங்களே அவரவர் பயிற்சிக்கும், பக்குவத்திற்கும்  ஏற்பவே ரசனைகள் அமையக் கூடும்.

சமைத்து வைத்த சுவை உணவைப் பரிமாறுகிறவன் பரிமாறாமல் பசி வந்தவர்முன் பலபடப் பேசுவதும் காலத்தைத் தாழ்த்துவதும் கூடா ஒன்று அல்லவா?

அதனால் நேரே நந்தவனத்தின் நறு மலர்களின் மணத்தை அனுபவிக்கவும், மலர்க் காட்சியைக் கண்டு உள்ளங்  குளிரவும் அழைத்துச் செல்கிறேன்.

புதுயுகம் என்ற சிறு தலைப்பின் கீழ்

முன் காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக்காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அல்ல அது அல்ல என்ற அறிவு மட்டுமே அவர் களுக்கு உண்டாயிற்று.

உண்மையான தத்துவஞானம் இதுதான்! என்று மக்கள் வியந்தனர்.

இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக் கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று. ஆண்டவன் நீரிலும், தரையிலும், மரத்திலும், கல்லிலும் இருப்பதாக அவர்கள் அறிந்தார்கள். உண்மையான பக்தி இதுதான்! என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.

விஞ்ஞான யுகம் வந்தது. விஞ் ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது. கல்லிலிருந்து, குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தார்கள். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப் படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு, இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்றார்கள்.

நாஸ்திகன் நாஸ்திகன்! என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.

@@@@@@@@@@@@@

மற்றொரு மிக அருமையான உருவகம்!
மரத்தின் வேர் என்ற தலைப்பில் -
ஒரு மரத்தில் மலர்களின் மணம் எங்கும் பரவி இருந்தது.
வழிப்போக்கன் ஒவ்வொருவனும் அந்த மணத்தை நுகர்ந்து கொண்டு அங்கே கணப் பொழுதாவது நிற்காமல் போவதில்லை.

அந்த மரத்தில் கனிகள் காய்த்துக் குலுங்கின. அவற்றின் நறுமணத்தில் மயங்கி, நிறம் நிறமான பறவைகள் அந்த மரத்தைச் சுற்றிக் கூத்தாடின.

மலர்களும், கனிகளும் சொர்க்க இன்பத்தை எய்தின.

ஒருநாள் காலையில் தோட்டக் காரன் அந்த மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினான்.

மலர்கள் அவனைப் பார்த்து, தோட்டக்காரா! உனக்குப் புத்தியே இல்லை! அங்கே மண்ணில் எதற் காகத் தண்ணீர் விடுகிறாய்! பீச்சாங் குழலினாலே எங்கள்மீது நீர்த்துளி களை வீசு. முகத்தைப்போலே அவை ஒளிவீசும் என்றன.

பழங்களும் அப்படியே பிடிவாதம் பிடித்தன. கோணல் மாணலான, நிறமும் அழகும் இல்லாத, எப்பொ ழுதும் மண்ணிலே புரளுகிற அந்த வேர்களுக்கு எதற்காக நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும்? என்று அவை நினைத்தன.

தோட்டக்காரன் மலர்களுக்கும், கனிகளுக்கும், நீரைத் தெளித்தான்.

தண்ணீர் கிடைத்துங்கூட மலர்கள் வாடின; கனிகள் அழுகின.

அவை கடைசியில் தோட்டக்கார னுடைய காலில் விழுந்து, தோட்டக் காரத் தாத்தா, மண்ணில் இருக்கும் அந்த வேர்களுக்கே முதலில் நீர் பாய்ச்சுங்கள், அவை பிழைத்தால் தான் நாங்கள் உயிர் வாழ்வோம் என்று கெஞ்சின. - இதனைப் புரிந்து கொள்ளுங் கள்; ஓர் இயக்கம், குடும்பம்,நிறுவனம் எல்லாவற்றுக்குமே இந்த உண்மை புரிய வேண்டும் - புரிந்து நடக்க வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...

ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல - கருநாடகத்தில்
தண்டோரா போட மறுத்ததால் ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள்மீது வழக்கு

சிக்மகளூரு, ஜுன்11_  முன்னோர் செய்த தொழிலான தண்டோரா போட்டு  அடித்து தகவல் தெரிவிப் பதற்கு மறுத்ததால் தண்டத்தொகை விதிப்பு, தண்டத் தொகையைக் கட்ட மறுத்ததால் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஏழுபேர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் வட்டத்தில் வத்தாரஹள்ளி கிரா மத்தைச் சேர்ந்த குருபா வகுப்பினத் தவர் உள்ளிட்ட பிற வகுப்பினரால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் முன்னோர் செய்து வந்த பணியை (தண்டோரா போட்டு தகவல் தெரிவிப்பது) அவர்கள் தொடர்ந்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் பிற வகுப்பினரால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

சித்தய்யா என்பவர் கூறும்போது, கடந்த யுகாதி திருவிழாவின்போது, உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்ட கிராமத்தினர் அந்த திருவிழா குறித்து  கிராமத்தைச் சுற்றிவந்து தண்டோரா போட்டு தெரிவிக்குமாறு என்னுடைய சகோதரர் ரங்கய்யா விடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதனால் அவர்கள் எங்கள்மீது கோபமாக இருந்து வருகிறார்கள் என்றார்.

29.5.2015 அன்று இந்தப் பிரச்சினை தீவிரமானது. கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதியைச் சேர்ந்த நிஞ்சே கவுடா என்பவர் சித்தய்யாவிடம் இதுகுறித்து சச்சரவு செய்துள்ளார். அதில் பிரச் சினை பெரிதாகி நிஞ்சே கவுடா மறுநாளே (30.5.2015) பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளார்.  கிராமப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் சித்தய் மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யா ஆகிய இருவரும் தலா ரூ.2,001 தண்டத் தொகை கட்டவேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பாக கூறப்பட்டது. ஆனால், அவ்விருவரும் அதை ஏற்க மறுத்து தண்டத் தொகையைக் கட்ட மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தினர் எவரும் சித்தய்யா மற்றும் ரங்கய்யா, அவர்களின் சகோ தரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினர்களிடம் பேசுவது உள்பட எவ் விதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று முடிவாக அறிவித்தனர். மேலும், அவர்களுக்கு மளிகைக் கடைகள் மற்றும் பால் கடைகளிலி ருந்து  பொருள்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் முடிவானது.

இவ்வளவு காலங்களாக அவர் களின் முன்னோர்கள் செய்துவந்த பணிகளையே கட்டாயத்தின்பேரில் செய்துவந்த சித்தய்யா மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யாவும் செய்ய மறுத்து விட்டதுதான் காரணமாக கூறப் பட்டுள்ளது. சித்தய்யா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும்  பஞ்சாயத்து முடிவு குறித்து சிக்மகளூரு காவல்நிலையத் தில் புகார் தெரிவித்தார்.

காவல்துறையினர் சித்தய்யாவின் புகாரின்பேரில் அந்த ஊரைச் சேர்ந்த வர்களான நிஞ்சே கவுடா, சன்னே கவுடா, ஜயண்ணா, பசவராஜு, தர்மாச்சாரி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணே கவுடா ஆகிய ஏழுபேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ரயில் பயணம் தத்கல் முறையில் மாற்றங்கள்

புதுடில்லி, ஜூன் 11_  ரயிலில் பயணம் செய்ய, கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் பெறும், 'தத்கல்' முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை, 10 மணிக்கு மேல், பயணச்சீட்டு இருக்கும் வரை, எவ்வளவு நேரமும் பெற முடியும் என்ற நிலை, தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

*தினமும், காலை, 10 _ 11 மணி வரை, 'ஏசி' வசதி டிக்கெட்டுகளும், 11_ 12 மணி வரை, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளும், தத்கல் முறையில் பெறமுடியும்.

*உறுதி செய்யப்பட்ட தத்கல் பயணச்சீட்டு பெற்ற பிறகு, அதை ரத்து செய் தால், இதுவரை பணம் திருப்பிக் கொடுப்பதில்லை. அதில் மாற்றம் செய்யப் பட்டு, இனிமேல், 50 சதவீத கட்டண பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

* தத்கல் கட்டணத்தில் பயணச்சீட்டு பெற்றவர்கள் பயணிக்கும் தனி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை, தத்கல் சிறப்பு ரயில் கள் என அழைக்கப்படும்.

* அதிக தேவை உள்ள வழித்தடங்களில், தத்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படும்.

*புதிதாக அறிமுகப் படுத்தப்பட உள்ள தத்கல் சிறப்பு ரயில்களுக்கு, குறைந்தபட்சம், 10 நாட் களுக்கு முன்னதாகவும், அதிகபட்சம், 60 நாட் களுக்கு முன்னதாகவும், பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இப்போது, தத்கல் பயணச்சீட்டு, பயண நாளுக்கு ஒருநாள் முன்ன தாக வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், அதிக தேவை உள்ள வழித்தடங்களில், பிரீமியம் ரயில்கள் என்ற பெயரில், ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன. அந்த ரயில் களில் பயணிக்க, தேவையை பொறுத்து, பயணச்சீட்டு கட்டணம் மாறுபடும். குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படும்; அதற்கு மேல், தேவைக்கு ஏற்ப, பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆனால், புதிதாக அறி முகப்படுத்தப்பட உள்ள தத்கல் ரயிலில், தத்கல் கட்டணத்தில் தான் அனைத்து பயணச்சீட்டு களும் விற்கப் படும். 175 முதல், 400 ரூபாய் வரை உயர்வு இருக்கும்.
பிரீமியம் ரயில்களுக் கான பயணச்சீட்டை, அய்.ஆர்.சி.டி.சி., இணைய தளம் மூலமே பெற முடியும். தத்கல் சிறப்பு ரயில் பயணச் சீட்டை, ரயில் நிலையங் களிலும், இணையதளம் மூலமும் பெறலாம்.

இந்த மாற்றங்கள் இரண்டொரு நாட்களில் அமலாகும் என, ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

மனிதருள் மாணிக்கம்!



எம்.வி.வள்ளியப்பன்
வீகேயென் நிறுவனத்தின் வி திரு.எம்.வி. வள்ளியப்பன் அவர்கள் வீகேயென் உடன் தனக்குள்ள நட்பைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார்.

வீகேயென் எனக்கு 1965 முதல் பழக்கம் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக என்ஜினி யரிங் படித்தோம். வகுப்பில் மட்டுமில்லை விடுதியிலும் நான் அவருக்கு ரூம்மெட். நியூ ப்ளாக்கில் அறை எண் 51 அந்த நெருக்கத்தை வாழ்வில் மறக்கவே முடியாது. வீகேயென் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை.

யாருடனும் அந்த மாதிரி பழகுவதில்லை. படிப்பிலும் கூட அப்படித்தான். படிப்பில் சாதனையாளராக வரவேண்டும் என்று அவர் நினைத்ததில்லை. அப்போதே அவருடைய நினைவும், கனவும் தொழில் பற்றியதாகத்தான் இருக்கும். எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பார். இளம் பருவத்திலேயே சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக, வெறியாகக் கொண்டு நடந்தவர்.

படித்து முடித்த பின்பு  தொழில் தொடங்க வேண்டி வீகேயென் இடம் ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்றிருந்தார். அந்த நேரம் முதலீட்டுக்காகப் பணம் தேவைப்பட்ட  போது அவர் என்னை அணுகிய போது தொழில் பார்ட்னராக வா என்று தான் அழைத்தார். அவரது ஆர்வம், நேர்மை, திறமை பற்றி எனக்குத் தெரியும். எங்கள் வீட்டினருக்குத் தெரியாது.

தவிர ஏற்கெனவே குடும்பத்தினர் பார்த்து வந்த தொழி லைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட போது புதுத் தொழி லுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்று எனக்கு தெரி யும். ஆனால் எனக்கு வீகேயென் மீது நல்ல நம்பிக்கை இருந்தது. கூட இருந்தே கவனித்து வந்திருக்கிறேனே! இவர் நன்றாக வருவார் அதற்குப் பணம் கொடுத்து உதவலாம் என்று குடும்பத்தில் என் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

வீகேயென் நிறுவனம் நன்கு வளர்ந்த பிறகு கூட அவ்வப்போது என்னிடம் பார்டனராக வா! என்று அழைப்பார். ஒரு நிறுவனம் தொடங்கும் போது எவ்வளவோ கஷ்ட நட்டங்கள் சோதனைகள் வரும். அவற்றை எல்லாம் கடந்து இவர் இன்று வெற்றிகரமாய் நடத்தும் போது பார்ட்னராக சேருவது நல்ல நட்புக்கு அழகல்ல என்று மறுத்துவிட்டேன். ஏதோ முதலீடு கொடுத்தேன் என்பதற்காக நன்றிகாட்டும் விதம் என் முதலெழுத்து வி யைத் தன் நிறுவனத்தின் முதல் எழுத்தாக வைத்திருப்பதை எண்ணும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. சமயத்தில் கூச்சமாகவும் இருக்கிறது.  மேலும் எந்தப் பிரபலம் வந்தாலும் அவர்களிடம் என்னை வீகேயென்னின் வி இவர்தான் என அறிமுகப் படுத்தி மகிழ்வார்.

வீகேயென் உயரிய பண்பு மிக்கவர். தன்மானத்துடன் செயல்படுபவர். தொழிலாளர் நலம் பேணுபவர். மிகுந்த திறமையும், ஆற்றலும் கொண்டவர். நேர்மை யாய் நடப்பவர். துணிவுமிக்கவர். தவறான பாதைக்கு இவரும் போகமாட்டார். மற்றவரையும் அனுமதிக்க மாட்டார். தவறைச் சுட்டிக்காட்ட தயங்கவும் மாட்டார்.  ஒருவரின் தவறை அவரின் முகத்துக்கு நேராய் தெரிவிக்கும் வல்லமை பெற்றவர். இவருக்கு கம்ப்யூட்டர் அறிவு, யானை அளவுக்கு ஞாப சக்தி உண்டு. கணக்கில் இவரிடம் ஏமாற்ற முடியாது. குழப்பமோ, குதர்க்கமோ இவரிடம் கூடாது.

நேராக வா, நேராக போ!
இவருடைய வெற்றிக்குப் பின்னால் இப்படி எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இவரது வெற்றி சும்மா அதிர்ஷ்டத்திலோ, பிறரை வஞ்சித்தோ வந்ததல்ல. எல்லாமே சீரிய உழைப்பு. மனிதநேய மாமணி

தமிழ் ஓவியா said...

வீகேயென் பாண்டியன்
வீகேயென் இது வெறும் ஆங்கில எழுத்துகளல்ல, என்னைப் பொருத்தவரை இவைதான் எனக்கு உயிரெழுத்துகள். அரை நூற்றாண்டுக் காலத்தை தாண்டிய எனது வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மூன்றெழுத்திற்குள்தான் அடங்கியிருக்கிறது.

படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த  என்னை 1974 ஆம் ஆண்டு இனி இவர்தான் உனக்கு எல்லாம் என்று என்னை எனது தந்தை ஆறுமுகம் பிள்ளை வீகேயெனிடம் ஒப்படைத்தார். அப்போது வீகேயென் அவர்கள் துவாக்குடியில் விகேயென் நிறுவனத்தைப் புதிதாக தொடங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இருந்த தொழிலதிபர்.

அவரது ஊழியனாக அவரோடு என்னை இணைத்துக் கொண்டதுதான் என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பாக்கியம்.  மூன்று தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 500 பேர் பணி புரிகின்றார்கள். அதே இந்நிறுவனத்தின் கிளை ராணிப் பேட்டையிலும் தொடங்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தொழிலதிபர் திரு.வீகேயென் அவர்களின்  உழைப்பு என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாது. தொழிற் சாலை அவருக்கு இன்னொரு தாய் வீடு அதன் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு இரும்புத் துண்டும் அவரது பெயரைச் சொல்லும். தொழிற்சாலை வளாகத்திலேயே தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு தருபவர் எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டிலேயே திரு. வீகேயென் அவர்கள் ஒருவர்தான்.

அது மட்டுமல்ல. உணவு நேரத்தில் தொழிற்சாலையில் இருந்தால் அவர்களுடன் அமர்ந்து அதே உணவைத் தானும் சாப்பிடுவார். தனது தொழிலாளர்கள் தொழில் கற்றுக் கொண்டு தனியாகத் தொழில் செய்ய விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்தத் தொழிலாளியின் தனி வாழ்க்கையைத் தொடங்கி வைப்பார்.

இதுவரை 120 தொழிலாளர்களுக்குத் தலா 1 இலட்சம் கொடுத்துப் புதுவாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கிறார்.  மேலும் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதியும் இலவசமாக செய்து கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தோடும், அதன் தலைவர் கி.வீரமணி அவர்களோடும் நெருங்கிய நட்பும், அன்பும் கொண்டு உள்ளார். பெரியார் இல்லமும், திராவிடர் கழக கல்வி நிறு வனங்களும் அவருக்கு கண் போன்றவை.

அந்த நிறுவனங் களுக்கு தன் பொருளையும் உழைப்பையும் வாரி வழங்கி யிருக்கிறார். பெரியார் மணியம்மை மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு, தாளாளராக இருந்து பணியாற்றி வருகிறார். மேலும் தஞ்சை  வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  இணைவேந்தர் பதவி அவரை தேடி வந்தபோது அதனை மறுத்தார்.

ஆனாலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வற்புறுத்தி அந்த உயரிய கவுரவுத்தை அவருக்கு வழங்கினார். இப்போதும் அந்த பணியிணை சிறப்பாக செய்து வருகிறார். நான் அறிந்த வகையில் நன்றிக்கு இலக்கணமாக மாமனிதன் திரு.வீகேயென் அவர்கள் அளவுக்கு யாரும் இல்லை என்று சொல்வேன்.

தமிழ் ஓவியா said...

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு


கிருஷ்ணகிரி,  ஜூன் 11_ கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண் கள் பெற்று தோல்விய டைந்ததாக அறிவிக்கப் பட்ட மாணவிக்கு விடைத் தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப் பிரமணி. தொழிலாளி. இவரது மகள் கவிதா மணி. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடப் பிரிவில் பயின்று வந்த அவர், பொதுத் தேர்வை எழுதினார். கடந்த மாதம் அறிவிக் கப்பட்ட தேர்வு முடிவில் அவர் மொத்தம் 584 மதிப் பெண்கள் பெற்றதாகவும், பொருளாதாரப் பாடத் தில் 200-_க்கும் 24 மதிப் பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கவிதா மணி தனது விடைத்தாள் நகலை உரிய முறையில் பெற்றுப் பார்த்த போது, விடைத்தாள் நகலின் முன்பகுதியில் கவிதாமணி யின் பெயர், பதிவு எண் இருந்தது. ஆனால், அவர் எழுதிய விடைத்தாளுக் குப் பதிலாக மற்றொரு வரின் விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து, கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவ லகத்தை அவர் தொடர்பு கொண்டபோது, விடைத் தாள் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திருத்தப் பட்ட தும், அப்போது தவறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

மேலும், 10 நாள் களில் உரிய விடைத்தாள் நகல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அலுவலர்கள் உறுதியளித் ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை யாம். இதனால், பாதிக்கப் பட்ட மாணவி எந்தக் கல்லூரியிலும் விண்ணப் பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், பொருளாதாரப் பாடத்தில் கவிதாமணி 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக கல் வித் துறையினர் அறிவித் ததாக அவரது தந்தை சுப்பிரமணி தெரிவித்தார்.

மேலும், மாணவி கவி தாமணி பொருளாதாரப் பாடத்தில் 123 மதிப் பெண்கள் பெற்றுள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லக வட்டாரங்கள் உறு திப்படுத்தின.

தமிழ் ஓவியா said...

மனமகிழ வாழ்த்துகிறேன்...


க.நா.நேரு
தி.மு.க. மாவட்ட செயலாளர், திருச்சி தெற்கு மாவட்டம்

மிசா காலம் தொட்டு...
இன்று வரை தி.மு.க.விற்கு பொருளாதார ரீதியாக மிக பெரிய பேருதவியாக
இருந்து வருபவர் அண்ணன் வீகேயென் அவர்கள்
தி.மு.கவிற்கும், தி.கவிற்கும் மனவருத்தம் இருந்த காலத்தில் கூட கலைஞர், ஆசிரியர் ஆகிய
இரு தலைவர்களையும் விட்டு
கொடுக்காமல் பேசி வந்தவர், அந்த மனவருத்தங்கள் போக்கிட விரும்பியவர் அண்ணன் வீகேயென் அவர்கள்.
தகுதியானவர்
இல்லத் திருமணத்திற்கு தகுதியானவர்களாக வாழ்த்த வருகை தரும் திருமிகு தளபதியார், மானமிகு ஆசிரியர் மற்றும் முன்னோடி பெருமக்களும் நன்றி.
வாழ்த்துகிறேன்...

தமிழ் ஓவியா said...

வாழிய வீகேயென் அய்யா
இல்ல மணவிழா






மனித நேயமிக்க மாமனிதராய்
உழைப்பாலும், நேர்மையாலும்
உயர்ந்து நிற்பவர் வீகேயென் அவர்கள்.

உண்மையிலும், உன்னத்திலும் சிகரமாய் விளங்கக் கூடிய
எளிமையானவர், வித்தியாசமானவர்.
எதையும் வலிமையோடு, எதிர் கொள்பவர்.
எடுத்த முடிவில் சமரசம் ஆகாதவர்.
கடந்து வந்த பாதையை மறக்காதவர்
உதவியவர்களுக்கு உயிராய் இருப்பவர்
கழகத் தலைவர் ஆசிரியர் மீது
என்றும் அன்புடையவர்.
தொண்டுள்ளம் கொண்டவர்
கழக நிகழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அள்ளிக் கொடுப்பவர்.
கொடை வள்ளல் வீகேயென்.
உழைப்பை மட்டும் நம்புபவர்
உன்னத நேர்மையாளர். தந்தை பெரியாரின் கொள்கையை என்றும் மனதில் கொள்பவர்.
கழகத்திற்கு தோன்றா துணையாய் இருப்பவர்.
வீகேயென் மணவிழா சிறக்க வாழ்த்துகள்!

மு.சேகர்
திருச்சி மாவட்ட தலைவர்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பார்த்தசாரதி


சென்னைத் திருவல்லிக் கேணி என்றால் பார்த்தசாரதி கோயிலைத்தான் சொல்லு வார்கள். பார்த்தசாரதியாகிய கிருஷ்ணன் இந்தக் கோயி லில் மீசை முறுக்கோடு செதுக்கி வைக்கப்பட்டுள் ளான். இவருக்கு மீசைப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது பகல் பத்து ஆறாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில் லாமல் தரிசிக்கலாமாம்! (ஓட்டு மீசையோ!)

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணம் போல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் இருக்காதா? 108 திவ்ய தேசங்களில் இது 61ஆவது திவ்யதேசமாம். திருமாலின் பக்தனான சுமதி ராஜன் என்னும் மன்னனுக்கு பெருமாளை குருக்ஷேத்திர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக தரிசிக்க ஆசை யாம்; தன் ஆசையை பெரு மாளிடம் தெரிவித்தாராம். பெருமாளும் இங்கு தேரோட் டியாக காட்சி அளித்தாராம்  திருவல்லிக்கேணி பார்த்த சாரதியின் தலபுராணம் இது தான்.

சரி, இதுபோன்றவை எல்லாம் கடந்த காலத்தில் அதாவது இறந்த காலத்தில் நடந்ததாகத் தானே எழுதித் தள்ளியுள்ளார்கள். இப்பொ ழுதெல்லாம் ஏன் நடப்ப தில்லை? பார்த்தசாரதிக்கு சுமதி ராஜன் போன்ற பக் தர்கள் இப்பொழுதெல்லாம் கிடைக்கவில்லையா? ஏன் ஜீயராவது பெருமாளை வேண்டி அவரின்லீலை களைக் கொஞ்சம் நிகழ் காலத்தில் செய்து காட்டச் சொல்ல வேண்டியதுதானே?

இந்தப் பார்த்தசாரதிக்கும், திராவிட இயக்கத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று சொன்னால் சிலருடைய புருவங்கள் ஏறி இறங்கும் - ஆச்சரியம் செங்குத்தாக எழுந்தும் நிற்கும்.

சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் சம காலத்தில் பணியாற்றினர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள தெப்பக்குளம் அசுத்த மாகி நோய் பரப்பும் இடமாக இருந்து வந்ததால் மக்கள் நலம் கருதி குளத்தை மூடி ஆங்கோர் பூங்காவை நிறு வலாம் என்ற யோச னையைத் தெரிவித்தார் டாக்டர் டி.எம். நாயர். அவ்வளவுதான் பக்திப் பழ மான வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயருக்கு மீசை துடித்தது.

நாயரின் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்தார் தியாகராயர். இதே பார்த்த சாரதி கோயில் தெப்பக் குளத்தை மய்யமாக வைத்து இன்னொரு சண்டை இரு வருக்கும்.

அந்தத் திருக்குளத்துக்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டும் என்றார் தியாக ராயர் (1908) டாக்டர் நாயர் எழுந்து அப்படியானால் மற்ற கோயில் குளங்களுக்கும் அதே மாதிரி நகராட்சி செலவிலேயே தண்ணீர் விட வேண்டும். மேலும் இக்குளம் பொதுக் குளம் அல்ல, கோயிலுக்குச் சொந்தமானது. நல்லளவு வருமானம் வரும் கோயில், அதற்கு ஏன் சலுகை என்று ஒரு போடு போட்டார் டாக்டர் நாயர்.

டாக்டர் நாயர் லண் டனில் மறைந்தபோது இந்தக் கோயிலில் தேங்காய் உடைத் துக் குதியாட்டம் போட்டனர் பார்ப்பனர்கள்.

இந்த வைணவக் கோயில்கள்பற்றி ஒரு முக்கிய தகவல் உண்டு.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தமிழக அரசுக்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில்  108 வைணவக் கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் 30 கோயில்களில் மட்டும் ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் உள்ளனராம்.

அந்தப்பட்டியலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியும் ஒன்றா?

- மயிலாடன்

இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகமாம்.

தமிழ் ஓவியா said...

அறிவுரை யாருக்கோ?

மதத்துடன் யோகாவை தொடர்புபடுத்த வேண்டாம்.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இதைத்தான் மற்றவர்களும் சொல்லுகிறார்கள்;  யோகாவை (இந்து) மதத் தோடு தொடர்புபடுத்த வேண்டாம் - சூரிய நமஸ் காரம் வேண்டாம், ஓம் வேண்டாம் என்றுதான் மற்ற வர்களும் சொல்லுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போர்

அமைதியான வாழ்வுக்கும் உலகுக்கும் வழிகாட்டக் கூடியவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, போரை நடத்தச் சொல்லி தனது உறவினர்களையும், கொல்லு கொல்லு என்று ஆணையிடும் பார்த்த சாரதிகள் (கடவுள் கிருஷ் ணன்) உள்ள இந்து மதத்தின் ஆன்மிக லட் சணம் இதுதானா

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியத்திற்கு முன்னோட்டமா?
இராமாயணத்தைப்பற்றி அருங்காட்சியகமாம்!

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சொல்லுகிறார்




புதுடில்லி, ஜுன் 12_ இராமாயணா சர்க்குயூட் என்கிற பெயரில்  இராமா யணத்தைப் பரப்புவதற் காக பல சுற்றுகள் வாயிலாக பல்வேறு செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இராமாயணத் தில் கூறப்பட்டவைகளைக் கொண்டு  அயோத்தியா வில் இராமன் அருங் காட்சியகம் அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ள தாக மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச் சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இராமன் அருங்காட்சியகத்தில் அரசியல்ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருப்ப தால்,  பிரச்சினைக்குரிய இடமாக உள்ள (பாப்ரி மஸ்ஜித்) பகுதிகுறித்த தகவல் எதுவும் இடம் பெறாது.

இதுவரை இல்லாத அளவில் அருங்காட்சிய கம் மாபெரும் அளவில் அமைத்திட திட்டமிடப் பட்டு வருகிறது. இராமா யண இராமனின் மகிமை களை சித்தரிப்பவையாக அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பிரச் சினைக்குரிய இடம் (பாப்ரி மஸ்ஜித்)குறித்து எந்த வகையிலும் குறிப் பிடாதவாறு அமைக்கப் படுகிறது.

இந்த அருங்காட்சிய கத் திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் படுவதுடன் எவ்வளவு நிதி இருக்கிறதோ அந்த அளவுக்கு செய்யப்படும். அடுத்த ஆண்டில் இதைச் செய்துவிடுவோம்.

தமிழ் ஓவியா said...

விரிவான திட்டத்தின் அறிக்கையுடன் விரைவில் இந்த பணியைத் தொடங்க உள்ளோம். டில்லியில் உள்ள சுவாமிநாராய ணன் அக்ஷார்தாம் கோயிலை மாதிரியாகக் கொண்டு அருங்காட்சியம் அமைத்திடத் திட்டமிடப் பட்டுள்ளது.

ஒளி, ஒலி அமைப்பு களுடன் காட்சிகள், படகு சவாரி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம் சங்கள்  மற்றும் தெய்வத் தன்மையுடன் தொடர் புள்ள தொல்பொருள் துறையின் பொருள்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்.

அரசு சார்பில் திட்டங்கள்

அயோத்தியாவை மாபெரும் கலாச்சாரத் தின் மய்யமாக உருவாக்கு வதற்கு அயோத்தியா மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் அரசு சார்பில் வளர்ச்சித் திட் டங்கள் செயல்படுத்தப் படும். உத்தரப்பிர தேசத்தில் தேர்தல் நடை பெற உள்ள சூழலில்   2017ஆம் ஆண்டில் அருங் காட்சியகப் பணிகள் நிறைவடையலாம். சுற்று லாவைத்தான் நாங்கள் வளர்க்கிறோம். அங்கு இராமன் கோயில் அமைக் கப் போகிறோம் என்று நாங்கள் கூறவில்லை.
ஏற்கெனவே அரசு சார்பில் ஒன்றுடன் ஒன்று தொடர்சங்கிலியாக பணியாற்றும்வகையில் அய்ந்து சுற்றுகள் செய லாக்கம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் வெவ் வேறான சுற்றுகள்குறித்து அறிவிக்கப்படும். அயோத் தியாவின் மய்யமான ஏதோ ஒரு பகுதியிலும், சித்திரக்கூட் பகுதியிலும் இராமாயணா சுற்று முதலில் தொடங்கப்படு கிறது. பஸ்தியில் உள்ள மகோடா பகுதிக்கும் கண்டிப்பாக செல்வோம். இராமன் தொடர்புடைய உன்னாவ் பகுதியில் ஜானகி குண்ட் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகளை செய்வதே எங்கள் திட்டமாகும்.
திட்டத்தின் ஒரு பகு தியாக, அரசே நடத்தக் கூடிய கலாச்சார செயல் பாடுகளாக இராமன் மற்றும் இராமாயணத்தை மய்யப்படுத்தி வெளிநாடு களிலும், இந்திய விழாக் களிலும் போக்குவரத்து வணிகப்பகுதிகள் உள் ளிட்ட பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

பிரசாத் திட்டம்

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் சார்பில்  புனித யாத்திரை புத்துணர்வு மற்றும் ஆன்மீகம் பெருக்குதல் இயக்கத் திட்டம் (பிர சாத்) (Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive-PRASAD) எனும் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட் டங்களுக்கான முன்வரை வுகளை அனுப்புமாறு ஏற்கெனவே உத்தரப்பிர தேச மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது.

மகேஷ் சர்மாவை அமைச் சராகக் கொண்டுள்ள கலாச்சாரத்துறையிடம் அருங்காட்சியகத்துக்கான பணிகள் மற்றும் இரா மன் மற்றும இராமாய ணத்துடன் தொடர்பு டைய கலாச்சாரங்களை செயல்படுத்தவும் கோரப் பட உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கான செயலாளர் லலித் பவார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநில அரசிடம் பிரசாத் திட்டத்தின்கீழ் திட்டமுன்வரைவுகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இத் திட்டம் மாநில அரசுகள் செய்ய வேண்டியத் திட்ட மாகும். ஆகவே, இதே போன்று மற்ற மாநிலங் களிடமும் இதுகுறித்து பேசு வோம் என்று கூறினார்.
இந்திராகாந்தி தேசிய கலை மய்யத்தின் (Indira Gandhi National Centre for Arts)
சார்பில் பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்றுவருகின்றன. கடந்த ஆண்டில் இராம்லீலா குறித்த ஆய்வுகளைக் கோரி இருந்தது.

இந்திய தொல் பொருள் துறையின் தலை வராக உள்ள ராகேஷ் திவாரி கூறுகையில் இரா மாயணா சுற்றுகுறித்த விவாதங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளது. அதன் செயல்பாடுகளில் சுற்றுலாத்துறை க்கு இயன்ற அனைத்து உதவி களையும் தொல்பொருள் துறை செய்யும். இந்த சுற்றுகளின் வளர்ச்சிக்கு எங்களை அரசு என்ன செய்ய சொல்கிறதோ அதை செய்வதற்கு நாங் கள் ஆயத்தமாக இருக் கிறோம். இராமாயணத்து டன் தொடர்பு கொண் டுள்ள நாட்டுப்புற கலை ஞர்கள் மற்றும் கலாச் சாரம் தொடர்பில் உள்ள அனைவரையும் ஒருங் கிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...

 

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொரு ளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு திராவிடர் கழகம் ஆதரவு

மத்திய மதவாத பி.ஜேபி. அரசுக்கு அ.தி.மு.க. ஆட்சி துணை போய்க் கொண்டிருக்கிறது

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேட்டி



தஞ்சை, ஜூன் 13- சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் அவர்களுக்கு திராவிடர் கழகம் ஆதரவு தரும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.

தஞ்சையில் இன்று (13.6.2015) காலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்திலும் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதை அறிவித்தார்.

நடைபெற இருக்கும் சென்னை இராதா கிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தல் என்பது திணிக்கப்பட்ட இடைத் தேர்தலாகும். இடைத் தேர்தல் என்பதைவிட கடைத் தேர்தல் என்று சொல்ல வேண்டும்.

அதாவது கடையில் சென்று பொருள்களை வாங்குவது போல வாக்குகள் வாங்கும் தேர்தல் என்று பொருள்.

மற்ற கட்சிகள் இந்த இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இடதுசாரிகள் முன் வந்திருப்பதை திராவிடர் கழகம் வரவேற்கிறது; ஆதரிக்கிறது. மதச் சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சினைகளில் இடதுசாரிகள் நம்மோடு நெருக்கமாக இருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சி. மகேந்திரன் அவர்களை ஆதரிப்பது என்பதை அறிவிக்கிறோம்.

மத்தியில் ஆளும் மதவாத பி.ஜே.பி. ஆட்சி, மதவாத கொள்கைகளை தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. மாறாக பல்வேறு பிரச்சினைகளிலும் மத்திய மதவாத பி.ஜே.பி. அரசுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது.

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த கட்சிகள் சி. மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்

இந்த நிலையில் நமது எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும். இந்த நேரத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளும் தங்களின் முடிவினை மறுபரிசீலனை செய்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சி. மகேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கொள்ளுவதோ, தள்ளுவதோ மற்றவர்களின் உரிமை ஆனால், இதனை சொல்வது எங்களின் கடமை! உரிமை!

இவ்வாறு திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103197.html#ixzz3cwPq43jH

தமிழ் ஓவியா said...

மணவை முஸ்தபா அவர்களுக்கு வாழ்த்து!



மணவையார் அமெரிக்கா வந்து தமிழ்ச்சங்கப் பேரவையிலும் மற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தமிழின் பெருமையை நிலை நாட்டினார். தமிழுக்காகத் தனக்கு கிடைத்த வேலையை உதறி தமிழால் முன்னேறி உலகம் போற்ற அய்க்கிய நாட்டுப் பணியை ஆற்றிய மேன்மையை அறிவோம்.

இங்கு எங்கள் பலர் இல்லங்களிலே அவர் தங்கியிருந்தமை எங்கட்கெல்லாம் பெருமை. பேச்சுத் திறனை இழந்தாலும் மூச்சு தமிழுக்கே என்று வாழும் பெருந்தகையே உமை வாழ்த்த வார்த்தைகள் பல நீர் எழுதிய பல அறிவியல் களஞ்சியங்களிலே உண்டு ஆனாலும் அதற்கும் மேலும் ஒரு வார்த்தை அறிவியல் வள்ளுவன். வாழிய நீவிர்! - சோம.இளங்கோவன்
FeTNA, Past President, Periyar International USA

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் அம்பேத்கர்- பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் தொடக்கவிழா


சென்னை, ஜூன் 12_ சென்னை அய்.அய்.டி. மாண வர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது. அதனால், நாடுதழுவிய அளவில் பெருமளவில் எதிர்ப்புகள் வெடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் மட்டுமன்றி மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாஜகவின் மத்திய அரசையே நிலைகுலையச் செய்தது. காரணம் அய்.அய்.டியில் விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து போராட்டங்கள் ஒரு பக்கம் என்றால், மும்பை, டில்லி, கான்பூர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங் களிலும் மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், நாடுமுழுவதும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டங்கள் மிகுந்த எழுச்சியை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திவந்தன. வேறு வழியின்றி ஆளும் பாஜகவின் அரசு தன் கையாலாகாத தனத்தை மறைத்துக்கொண்டு, இந்துத்துவாவின் வாலை சுருட்டிக்கொண்டு, தடைக்கான காரணமாக ஒப்புக்கு சப்பான காரணங்களைச் சொல்லியது. அய்.அய்.டி.நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களுக்கான நடத்தை விதிமுறைகள் 18.4.2015 அன்று உத்தரவானது என்றும், ஆனால், அதற்கு முன்பே 14.4.2015 அன்று சென்னை அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதால், அந்த உத்தரவின்மூலம் அவ்வமைப்புக்கு விதிக்கப்பட்டத் தடையை விலக்கிக்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மை என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் பெயரில் அமைப்பு அய்.அய்.டி. நிறு வனத்துக்குள் இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும், சென்னை அய்.அய்.டி மாண வர்களின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் இந் துத்துவா செயல்திட்டங்களை வெளிப்படையாகக் கண்டித்ததுதான் முதன்மையான காரணமாகும்.

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களின் பெயரில் அமைப்பு இருக்கக்கூடாது என்கிற பாசிச பாஜகவின் எதேச்சாதிகாரத்துக்கு சாட்டைஅடி கொடுக்கும்வகையில் மேலும் மேலும் பல்வேறு இடங்களில் அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்டம் நேற்று (11.6.2015) அன்று ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேட் அரங்கில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் தொடங்கப்பட்டது. வழக்குரைஞர் வை.இளங்கோவன் வரவேற்றார்.

அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட தொடக்க விழாவில் உயர்நீதிமன்றத்தின் வழக் குரைஞர்களால் அரங்குநிறைந்தது. மூத்த வழக்குரை ஞர்கள், இளம் வழக்குரைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் அமைப்பில் இணைந்து ஒடுக்கப்பட்ட வர்களின் குரல்வளையை எவரும் நெரித்துவிட முடியாது என்று அறிவிக்கும்வகையில் இருபால் வழக்குரைஞர் களும் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். தொடக்க உரையில் அய்.அய்.டி. மாணவர்களின் அம்பேத்கர்_ பெரி யார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்கு விதிக்கப் பட்ட தடை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையில் அம்பேத்கர்_ பெரியார் வழக்குரைஞர்கள் படிப்பு வட்ட அமைப்பை தோற்றுவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர்களை பெரிதும் வாழ்த்திப் பாராட்டினார். மேலும், இவ்வமைப்பு போல் பல்வேறு இடங்களிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் தம்முடைய விருப்பத்தையும் தெரிவித்தார் வழக்குரைஞர் துரை.அருண் நன்றி கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ், வழக்குரைஞர் சமூக பேரவை தலைவர் கே.பாலு, வழக்குரைஞர்கள் நளினி, ஆ.வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், சென்னியப்பன், அருள்மொழி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

ஹோசிமின் கூறுகிறார்
பழம் பெருமைப் பேசாதே!

கம்யூனிஸ்டுகள் எளிமையாகவும், பணிவாகவும் எத்தகைய கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு மற்றவர்களுக்கு முன்னதாக உழைப்பைப் பற்றி சிந்திப்பவர்களாகவும், மகிழ்ச்சியோடு இருப்பதை மற்றவர்களுக்குப் பின்னர் எண்ணுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

புரட்சியாளர்கள் பழம் பெருமை பேசுவது கூடாது

- பீப்பிள் டெமாக்கிரசி

தமிழ் ஓவியா said...

பெண்மைச் சமத்துவம் பேணல் நன்றே!
-----வா.மு.சேதுராமன்



பெண்ணடிமைச் சின்னம்தான் தாலி என்றால்
பீடுடையார் அதை மறுத்துச் சொல்வா ராமோ?
கண்ணுடையான் சிவபெருமான் தன்னில் பாதி
கற்பகத்தாய் உமையாளை வைத்துப் போற்றும்
மண்ணுடையார் பெண்கட்கு மட்டும் தாலி
மாட்டைப்போல் மூக்கணாங்கயிறுமாட்டி
நுண்ணறிவில் இடர்ப்பாட்டால் தாலி கட்ட
நுவன்றிட்டால் வருங்காலம் ஏற்ப துண்டோ

புண்ணியமும் பாவமும்அத் தாலி இல்லை
பொற்கொடியர் கற்புநெறி ஐயம் கொண்டு
கண்ணியமில் தாலியினை மாட்டி விட்டுக்
காரிகையர் அடிமையாக ஞாலம் தன்னில்
வண்ணஎழில் ஓவியத்தைச் சிதைத்த லைப்போல்
வன்கொடுமை செய்பவர்கள், மாதர் தம்மை
எண்ணில்லா இடும்பைக்கே ஆளாக் கும்அவ்
இயற்கைக்கு முரணா ம்அத் தாலி அன்றோ?

தொல்காப்பி யர்காலத் தின்முன் தாலி
துணைவியர்க்கோ அடையாள மாக இல்லை
பல்விதத்தும் பொய்புரட்டுச் சூழ வாழும்
பாங்குக்குத் தக்கவழிக் கரணம் கண்டார்
எல்லையிலாத தம்வீரம் காதல் ஆக
இவையிரண்டு மேதமிழர் வாழ்வுக் கேதான்
நல்லிரு வெல் கண்களாகப் போற்றிக் காத்தல்
நாடுகாதல் வாழ்விலாண்பெண் சமமே கண்டார்

அடலேற்று வீரமகன் செறிந்த காட்டுள்
அதி எதிர்க்கும் வேங்கை கள்வென்று கொண்ட
இடம்தந்த பொருள் களபல் செயல்கள் ஆண்மை
ஏற்றதிரு அடையாள மாக காதல்
மடலவிழ்பூங் கோதைக்குப் பரிசு தந்தான்
மாவேற்றோ டேசண்டை போட அஞ்சும்
தடந்தோள்கள் இல்லானை மங்கை நல்லாள்
தான்விரும்பாள் என்றெல்லாம் பாக்கள் உண்டே!

வீரத்திற் கொருகாலம் மதிப்பு பின்னாள்
வேண்டறிவு விவேகத்தின் மதிப்பே விஞ்சி
நேர்காதல் ஆண்பெண்கள் சமம்என் னும்நல்
நிலைவந்த காலத்தில் பெண்கள் ஆண்கள்
சேரத்தான் முறைவரைய றைகள் என்னும்
திருப்பூட்டின் வழக்கங்கள் அரங்கே றிற்றே
பாரம் பெண் மக்களுக்கே ஆண் களுக்கே
பதில்சுமை என்? பகுத்தறிவு கேட்கும் கேள்வி!

எம்மதத்தும் இந்துமதம் போன்ற பெண்மைக்கு
இரங்காத கொடியநிலை இல்லை! அந்த
அம்மதங்கள் தாலியைஓர் பொருட்டாய் எண்ணா!
அமெரிக்கா ஐரோப்பா நாட்டுப் பெண்கள்
தெம்பாக ஆண்கள் போல் தாலி இன்றி
தேவைஒருவ னுக் கொருத்தி யாக வாழும்
செம்மைதேர்நெறிவாழ்வு நடத்தல் கண்டோம்!
தேவைதாலி கற்புகாக்கும் என்ற  பொய்யே!

மாதருக்குத் தாலியென்றால் ஆண்களுக்கென்?
மறுமலர்ச்சிக் காலத்தில் மானம் கற்பு
தோதிருபா லவர்க்குமொன்றே தேவை மாற்றம்
திகழ்காலம் தாலியினை அகற்றல் பெண்மை
காதல்நெறிக் கற்புநெறிச் சமத்துவத்தைக்
காட்டுகின்ற விழிப்புணர்ச்சி தேவை! தேவை!
ஈதறத்தை செயல்முனைந்த தி.க. வாழ்க!
எம்தமிழர் வீரமணி வாழ்க மாதோ!

நன்றி: தமிழ்ப் பணி மே 2015

தமிழ் ஓவியா said...

உயிரைக் காக்கும் தலைக்கவசம்


இரு சக்கர வாகன ஒட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் (Helmet) அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இப்படி ஆணை பிறப்பிப்பது ஒன்றும் புதியதல்ல. இதற்குமுன் இது போன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அது ஏட்டளவில் இருந்ததே தவிர, நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இது போன்ற சட்டங்கள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்பதை வாகன ஒட்டிகள் முதலில் உணர வேண்டும், ஏதோ அரசு தேவையில்லாமல் இது போன்ற ஆணைகளைப் பிறப்பிப்பதாகக் கருதக் கூடாது.

மருந்து சாப்பிடுவது நோய் தீர்வதற்காகத்தானே தவிர, டாக்டர் வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற் காகவா மருந்து சாப்பிடுகிறோம்?

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு என். கிருபாகரன் வரும் ஜூலை முதல் தேதி முதல் இரு சக்கர வாகன ஒட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திட வேண்டும் என்ற தீர்ப்பே கொடுத்து விட்டார் என்று சொல்ல வேண்டும்.

வாகனங்கள் பெருக்கம் வாயு வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடைபாதைகளும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில்களும், கடைகளும் அவற்றை நிரப்பி விடுகின்றன.  நடைப் பயணிகள் பாடு திண்டாட்டம் தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2006-2007இல் இருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து  3 ஆயிரத்து 426 ஆகும். 2013-2014ஆம் ஆண்டிலே இது ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக வளர்ந்து விட்டது.

அதுவும் இளைஞர்கள் கைகளில் சிக்கிய இந்த இரு சக்கர வாகனங்கள் போகும் வேகம் பார்ப்பவர்களுக்குப் பெரும் திகிலைத்தான் ஏற்படுத்துகிறது. போதும் போதாதற்கு டாஸ்மாக் என்னும் அதி வேக ஊக்க மருந்தும் சேர்ந்து விட்டால் கேட்கவும் வேண்டுமோ!

தலைக்கவசம் அணியாத காரணத்தால் 2005ஆம் ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 1670; 2014ஆம் ஆண்டிலோ 6419 என்று பல மடங்கு உயிரைக் குடித்து விட்டது. விலை மதிக்க முடியாத மனித உயிர் இப்படி போதிய பாதுகாப்பு நடவடிக்கையின்மையால் பரிதாபமாக மலிவாக இழக்கப்படுவதை நினைத்தால் பெரும் வேதனை.

தொலைக்காட்சிகள் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் சத்தம் போட்டுப் பேசுகின்றன. இது போன்ற விழிப்புணர்வுக்காக சில நொடிகளை ஒதுக்கக்கூடாதா? எல்லாவற்றிலும் காசு பண்ணுவதுதான் ஊடகங்களின் ஓய்வறியாத குறிக்கோளா? சமூகப் பொறுப்பு என்பது அவர்களுக்குக் கிடையவே கிடையாதே - பாடத் திட்டத்திலும் பாலகர்களிடமிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும்.

எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் இது போன்ற அவசியமான கருத்துக்களை மக்கள் மத்தியில் நயம்படக் கொண்டு சேர்க்க வேண்டாமா!

ஒரு இளைஞன் சாலை விபத்தில் பலியாகிறான் என்றால், அவனோடு அந்தப் பிரச்சினை முடிந்து விடக் கூடியதல்ல; அவனை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறதே நினைத்துப் பார்க்க வேண்டாமா?

தலைக்கவசம் அணியுங்கள்; அதன் மூலம் இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதை மாற்றி தலை தப்புவது - தலைக்கவசத்தின் புண்ணியம் என்ற புதுப் பொருளை உண்டாக்குங்கள்!

தமிழ் ஓவியா said...

தோழர் சத்தியமூர்த்தி புகார்களுக்குப் பதில்
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரை யொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகிவிட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அபேட்சகராக நிற்கும் ஆளைக் கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுபோடுங்கள் எனக் கூறுகிறார்கள்.

இது நாமம் போட்ட சோம்பேறிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிற நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்ததையும், யோக்கியதாம் சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்து தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டு போடும் உரிமை உங்களுக்குண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாற மாட்டீர்களென்பது நிச்சயம்.

காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரச்சாரத்தை நீங்கள் கவனிக்கக் கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம். ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படி யிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள்.

தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்குமேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டு மென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றன வென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் சத்திய மூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக பல பொய்யான விஷயங்களைக்  கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம்

மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கிறது.
(20-10-1934) மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தலைமை தாங்கி  ஆற்றிய உரை.)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934

தமிழ் ஓவியா said...

மார்க்கட்டு நிலவரம் - சித்திரபுத்திரன்


தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப்படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இது சமயம் இரண்டொரு சரக்குகளுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.

பெண்கள்
செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப் போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டு சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளி நாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய்ச் செட்டி மார்களும் சர்க்காருக்கு (சமுகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமுகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமுகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுகள்
முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல் ஓட்டுகளுக்கு கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளை யாய் அந்த உத்தரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் தேர்தல் இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.

ஈரோடு
குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் செலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேட்சகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.
சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப் பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.

சில வார்டுகளில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.
சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேட் சகர் 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேட்சகர் 5000ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்குப் பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.

ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஒட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் -  மார்க்கண்டன், அனுமார், விபீஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல. சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ் சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டி ருக்கிறார்கள்!

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திர மல்லாமல் கோவில்கட்ட, மசூதி கட்ட, சர்ச் சட்ட, என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.

நல்ல வேளையாக ஈரோட்டைப் பொறுத்தவரை, ஓட்டுகளுக்கு ஜாதிச் சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மனுக்கே சேர வேண்டியது.
- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர்.சண்முகமும்

தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங் களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள். இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன. இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற் கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத்தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்ப னரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப் படுகின்றோம். என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க் கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம். பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?



சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

-  சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)

தமிழ் ஓவியா said...

அண்ணா பதில் சொல்கிறார்



(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)

கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?

பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.

ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.

சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.

பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.

அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.

இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!

-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947