Search This Blog

8.6.15

நான் ஏன் கடவுள்களை ஒழிக்க வேண்டுமென்கிறேன்?-பெரியார்

 கடவுளும் - நானும்!


கடவுளைப்பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால் ஏன் அப்படி இருக்கிறேன் என்று ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே!

நான் ஏன் கடவுள்களை ஒழிக்க வேண்டுமென்கிறேன்? கடவுளை உண்டாக்கிக் கொண்ட எவருமே யோக்கியமான அல்லது யோக்கியத்தன்மையுடைய கடவுளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே!

அவரவர் சுயநலத்திற்கேற்ப, முட்டாள்தனத்திற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, சக்தியற்ற கடவுள்களையும், தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்ற கடவுள்களையும், தம் எதிரிகளை ஒழிக்க வேண்டுகிற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டால், அவற்றை, அதை அவற்றால் பாதிக்கப்படுபவர்களும், அறிவாளிகளும் ஏற்றுக் கொள்ள முடியுமா? சுயநலமற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

உலக மனித சமூதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால்தானே அவன் உண்மையான யோக்கியமான அறிவாளியான தொண்டனாக இருக்க முடியும்?

உதாரணமாக, ஒரு மனிதன்தான் மற்ற மனிதனைவிட மேலான - மேல் பிறவியான உயர்சாதி மனிதன் என்று சொல்லிக் கொண்டு, அதற்காகவென்று ஒரு கடவுளையோ பல கடவுள்களையோ, கற்பித்துக் கொண்டு, அதுவும் அயோக்கியத்தனமான, ஒழுக்கங்கெட்ட கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, அவைகள் தான் என்னை – எங்களை உயர்ஜாதியாய்ப் பிறப்பித்தது என்றால் - அந்த உயர்ஜாதி அல்லாத மற்றவன் அதனால், அவற்றால் இழி ஜாதி, கீழ் ஜாதியாக ஆக்கப்பட்டவன் அந்த அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் கடவுளை – கடவுள்களை ஒழிக்க, அழிக்க, சின்னப்படுத்த முன்வராதவன் மனிதனாவானா,  அறிவாளியாவானா, மானமுள்ளவனாவானா, தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள தகுதியுடையவன் ஆவானா?

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகத்தான் இருக்கட்டுமே, அவர்களை, 'எதற்காக கடவுள் ஏற்பட்டது? அதனால் உனக்கு என்ன பலன்?' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவான்? அவன் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுவானானால், 'அதனால் எல்லா மக்களும் பயனடைகிறார்களா? மகிழ்ச்சியடைகிறார்களா? யாராவது துக்கம், வேதனை, இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா?' என்றால், என்ன பதில் சொல்லுவான்? மகிழ்ச்சி, நலம் மேன்மையடைந்திருக்கும் எவனும் "கடவுள் சித்தத்தால்" என்பான். அவை இல்லாதவன், அவற்றிற்கு நேர்மாறான துன்பம், தொல்லை, கவலை அடைந்து கொண்டிருப்பவன் முட்டாளாய் இருந்தால், 'கடவுள் சித்தம்' என்பான். ஏன் அப்படியென்றால், 'என் கர்மம்' என்பான். இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக நாமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு இந்தக் கடவுள்களைக் காப்பாற்றுவதா?

"உயர்ஜாதிக்காரன் நலன் அனுவிப்பவன் கடவுளைக் காப்பாற்றினால், "தாழ்ந்த" ஜாதிக்காரன், கேடு அனுபவிப்பவன் கடவுளை ஒழிப்பது என்பது தானே நியாயமும், நேர்மையும், அறிவுமாகுமா?

"அப்படிக்கில்லையானால், அவன் அடிமை, மானமற்றவன், கூலி, சுயநலக்கார மடையன் என்று தானே சொல்லப்பட வேண்டும்?

ஆகவே, தோழர்களே!

கவலையும், துன்பமும், இழிவும் உள்ளவர்களே, சிந்தியுங்கள். உங்களுக்கு விமோசனம், விடுதலை, மனிதத் தன்மை கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், இழிவுபடுத்துவதிலும் இருக்கிறது.

இதனால் யோக்கியமான - அறிவாளியான யார் மனமும் புண்பட இடமில்லை. சுயநலத்திற்காகச் சிலர் ஆத்திரப்படலாம். 'மனம் புண்படுகிறது' என்று சொல்லலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள். நாம் யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; செய்யவில்லை. இதற்காக, அறிவற்றவர்களால், சுயநலக்காரர்களால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால் மகிழ்ச்சியோடு ஏற்று, மானத்தோடு பாய்ந்தொழுங்கள், யார் மீதும் வெறுப்பு, குரோதம் கொள்ளாதீர்கள்.



      ---------------------------------தந்தைபெரியார் -"கடவுள் ஒரு கற்பனையே" எனும் நூலிலிருந்து

38 comments:

தமிழ் ஓவியா said...

மழைக்கு யாகம் வளர்க்க சொன்ன பொறியாளருக்கு அறிவிக்கை


சென்னை, ஜூன் 8 தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. அதன் படி இந்தாண்டு குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே திறந்து விட முடியும். ஆனால், தற் போது மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 72.64 அடியாக உள்ளது. இத னால், குறுவை சாகு படிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் மண்டலத்திற்குட்பட்ட 30 உபகோட்ட அலுவல கத்திற்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பிலும் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயி லில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில் களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அரசே அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கை பரப்பும் வகையில் அரசு அதிகாரி களே யாகம் நடத்திய தற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொதுப் பணித்துறை தலைமை அறிவுரை இல்லாமல் தலைமை பொறியாளர் தன்னிச்சையாக யாகம் நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த அதி காரியிடம் விளக்கம் கேட்டு பொதுப்பணித் துறை தலைமை அறி விக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை திருச்சி மண்டலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகு படிக்கு, தண்ணீர் திறக் கப்படவில்லை. இந் நிலையில், திருச்சி மண் டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களில் யாகம் நடத்த கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது. இதற்கு 15 நாட் களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப் பது குறித்து ஆலோசிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102907.html#ixzz3cThqSR9C

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி. விவகாரத்தில் அதன் நிருவாகம் பணிந்து விட்டது - முடிந்து விட்டது என்று கருத வேண்டாம்!

மக்கள் பணத்தில் நடக்கும் அய்.அய்.டி. பெரும்பான்மை மக்களுக்குப் பயன்பட

அம்பேத்கர் - பெரியார் பெயரிலான அமைப்பை நாடு தழுவிய அளவில் உருவாக்கிட கால்கோள் செய்வோம்!

தமிழர் தலைவரின் சமூகநீதிக்கான முக்கிய அறிக்கை

அம்பேத்கர் - பெரியார் பெயரிலான அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டது என்பதோடு நாம் திருப்தி அடைந்து விடக் கூடாது.

மக்கள் வரிப் பணத்தில் நடைபெறும் அய்.அய்.டி.கள் சிறிய கூட்டத்துக்குத் தான் பெரும்பாலும் பயன்பட்டு வருகிறது. அது பெரும்பாலான மக்களுக்கும் பயன்படும் வகையில் மாற்றப்பட, அம்பேத்கர் பெரியார் பெயரிலான அமைப்பை நாடு தழுவிய அளவில் உருவாக்குவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

தமிழ்நாட்டில் உள்ள அய்.அய்.டி. (I.I.T.) நிர்வாகமும் அதனை வழி நடத்தும் டெல்லி மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சு அதிகாரிகளும், பாயும் மின்சாரத்தில் கை வைத்தது போன்ற ஒரு பெரும் அதிர்ச்சி அனுபவத்தைப் பெற்றனர்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்பது அய்.அய்.டி. மாணவர்கள் - சமூக நீதிக்கான துளிர்கள் - நடத்துகின்றனர். அதனை விளக்கம் கூடக் கேட்காமல், தடை செய்து ஆழம் பார்த்தனர் - இது ஒரு முன்னோட்டம்!

அய்.அய்.டி. என்பது அப்பட்டமான அக்கரகாரம்; அய்யர் அய்யங்கார் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி.

தமிழ் ஓவியா said...

ஜெர்மனி நாட்டின் உதவி

ஜெர்மனி நாட்டின் உதவியும், நம் நாட்டு ஏழை, எளிய மக்கள் வரிப் பணத்தின் பெரும் பகுதியையும் கொட்டித் தீர்த்து, உயர் ஜாதியினரான பார்ப்பனரையும், பிற மாநிலத்தவரையும் தகுதி திறமை என்ற போர்வை போர்த்தி உள்ளே அழைத்து வந்து, பட்டங்களைக் கொடுத்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் குடியேறி நிரந்தரமாகத் தங்கி, கொள்ளைச் சம்பளம் குபேர வாழ்வு வாழ கல்வி விசா கொடுத்தனுப்பும் ஒர் தனி அமைப்பு ஆகும்!

நம் நாட்டின் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டாலோ மிகவும் மோசம்.

அமெரிக்கா - 34 சதவிகிதம்
இங்கிலாந்து - 59 சதவிகிதம்
ஜப்பான் - 55 சதவிகிதம்
சீனா - 28 சதவிகிதம்

இந்தியா - 18.8 சதவிகிதம்

நவீன சதுர்வேதி மங்கலங்களா?

இந்த நிலையில் முழுக்க முழுக்க மக்கள் வரிப் பணத்தில் - சென்னை அய்.அய்.டி. ஜெர்மனி நிதி உதவி மிக மிகக் குறைவு; (அநேகமாக இல்லை என்றே கூற வேண்டும்).

இந்நிலையில், அங்கே ஒவ்வொரு ஆண்டும் கட்டடங்கள் விரிவாக்கம், சமூக நீதியைப் புறந்தள்ளிய பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் நியமனம் போன்றவைகள்; பார்ப்பனர்களுக்காக, பழைய கால சதுர்வேதி மங்கலங்களாகவே தானங்களாகவே நடைபெற்று வருகின்றன!

மலைவாழ், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி உள்ள பிறப்புரிமை - அடிப்படை உரிமை என்ற போதிலும் அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படுவதோ, அக்கறை காட்டுவதோ இல்லை.

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற பழமொழி போல் அங்கு நியமனங்களும், ஆராய்ச்சி யாளர்கள் தேர்வும், மான்யங்களும், உதவித் தொகைகளும், உயர் ஜாதிக் கண்ணோட்டத்தோடுதான் நடைபெறுகின்றன. (நியமனங்கள் பட்டியல் விகிதாச்சாரம் எவ்வளவு விதி மீறல் என்பதை தனியே தந்துள்ளோம் - படிக்கவும்)

வறியோர்க்கும் வற்றாத கல்வி நீரோடையாக மாற்றிட வேண்டும்

இதனை மாற்றி, மக்களுக்கான கல்வி, ஆராய்ச்சி நிறுவனமாக ஆக்கிக் காட்ட வேண்டிய மகத்தான கடமை அனைத்து சமூக நீதிப் போராளிகளுக்கும் உண்டு. வறியோர்க்கும் வற்றாத கல்வி நீரோடையாக அதனை மாற்றிட வேண்டும்.

எனவே, அம்பேத்கர் - பெரியார் உணர்வு என்ற எரிமலை வெடிக்கத் துவங்கியவுடன் அடி பணிந்தது என்று நாம் ஓரளவுதான் மகிழ முடியும்.

உலகத் தரம் இல்லையே - ஏன்?

இத்தனை கோடிக்கணக்கில் நாடு முழுவதும் தரமான தொழில் நுட்பக் கல்வி என்று கூறி, தகுதி, திறமை முக மூடி போட்டு தேர்வுகள் நடத்திடும் நிகர்நிலைப் பல்கலைக் கழக அமைப்பான இவைகளில், ஒன்றுகூட உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், கல்வி ஆராய்ச்சி நிலையங்களாக உயரவில்லை என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை அல்லவா!

சுற்றிலும் கூரை இல்லாத குடிசைகள் மத்தியில் அரண்மனை கட்டிய கேலிக் கூத்து போன்றதல்லவா இது?

இதனுடன் ஒப்பிட்டால் அண்ணா பல்கலைக் கழகம் போன்ற மாநில அரசுப் பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி உதவி எவ்வளவு?

வெகு மக்களிடையே அதன் விழுமிய பயன் எவ்வளவு?

ஒரு சிறு கூட்டம்தானே பெரும்பாலும் அனுபவிக்கிறது.

மக்கள் வரிப்பணம் யாருக்கு நன்மை?

அய்.அய்.டி. என்ற ஒரு வெகுச் சிறுபான்மையான பார்ப்பனரின் (Microscopic Minority) நலம் பேணும் இந்த தகுதி, திறமை முகமூடி அமைப்புகளுக்கு கொட்டியழும் நிதி எவ்வளவு?

அது மக்கள் வரிப் பணம் அல்லவா?

நாடெங்கும் அம்பேத்கர் - பெரியார் பேரவையை உருவாக்குவோம்!

எனவே, இதுபற்றி விரைவில் ஒரு விரிவான கருத்தரங்கமும், அதன் பின் சமூக நீதிக்கான ஒரு தொடர் போராட்டத்தையும் நாடு தழுவிய அளவில் அம்பேத்கர் - பெரியார் பெயரிலேயே துவக்கிட கால்கோள் விழாவை நடத்திட இந்த நடவடிக்கை மூலம் நம் இன எதிரிகளும், மத வெறியர்களும், சமூக நீதியின் பிறவி எதிரிகளும் நம் மக்கள்மீது திணித்து விட்டார்கள்.

இதனை ஏற்போமாக! எனவே, பணிந்ததன் மூலம் முடிந்து விட்டது என்று கருத வேண்டாம்! இனிமேல் இது ஒரு நல்ல தொடக்கம்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
8.6.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102911.html#ixzz3cTi0veBO

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ள லாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத் துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரி யராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட தடையை நீக்க இணையத்தின் வாயிலாக வலியுறுத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள்


சென்னை ஜூன் 8 கல்வியாளர்களாக, ஆராய்ச் சியாளர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக் களாக உள்ள ஏராளமானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி. இயக்குநருக்கு பன்னாட் டளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி இயக்குநருக்கு கோரிக்கையை விளக்கி கடிதம் அனுப்பினார்கள். www.change.org எனும் தளத்தின் வாயிலாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் 100, 200 எனத் தொடங்கி பன் னாட்டளவில் உள்ள சமூக நீதிப் பற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய் 7.597பேர் என்கிற அளவிலான எண்ணிக்கையினர் இணை யத்தில் இந்தத் தளத்தில் மட்டும் பதிவு செய் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் ஏராளமானவர்கள் அவரவர் முகநூல் பக்கம் மட்டுமன்றி புதிதாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்று டில்லி, மகாராட்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது. டிவிட்டரிலும் சென்னை அய்.அய்.டி. பக்கத்தில் அவ்வப்போதைய தகவல்கள் பரிமாற்றம் இருந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊண் உறக்கம் இன்றி சமூக நீதிக்களத்தில் இறங்கிய மறவர்கள் ஏராளமானவர்கள் களம் கண்டனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102908.html#ixzz3cTiHBBtz

தமிழ் ஓவியா said...

புதுமைத் தென்றலின் மென் சுகம்! சுவையே சுவை!!



செம்மொழி நம் தமிழ் மொழியின் இலக்கியங்களைப் படித்து இன்புறுவது ஒருவகை இளைப்பாறல்.

கோடையிலே கிடைத்த குளிர் தரு!

தருநிழல், நிழல் கனிந்த சுகம்!!

பகடி செய்து எழுதுதல் பழம் பெரும் புலவர் பெருமக்கள் முதல், இன்றைய நம் காலம் வரை வழமையானதோர் அவைகளில் சுவைத்து மகிழத் தக்கவை ஏராளம் உண்டு!

இதோ ஒரு பழம்பெரும் பாட்டு! கார் என்று பேர் படைத்தாய்
ககனத்துறும் போது
நீரென்று பேர் படைத்தாய் நீனிலத்தில்
விழுந்த பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர்
கைபட்டதன்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!
- கவி காளமேகப் புலவர்

மோரில் தண்ணீர் ஊற்றுவது வழமை, வாடிக்கை; ஆனால் தண்ணீரில் மோர் கொஞ்சம் ஊற்றி எஞ்சியவை வெறும் தண்ணீர்தான் உள்ளது என்பதற்கான கிண்டல் இது!

எழுத்துலக வேந்தர்களில் ஒருவராக, சிறுகதை இலக்கிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக என்றும் திகழுபவர் யதார்த்தத்தையும் வறுமையையும் இரு மூச்சுக் குழல்களாகக் கொண்டு வாழ்ந்து, மறைந்தும் மறையாதவரான,

புதுமை எழுத்தாளர் புதுமைப் பித்தன் அவர்கள் ஆவார்கள்!

அவரது சுவைமிகுந்த பகடி இலக்கியப் பாடல் ஒன்று இதோ!

இன்றைய நடைமுறை உலகின் இரட்டை வாழ்க்கை, இரட்டை வேட முறைகளைச் சாடும் சாட்டையாகத் தனது எழுதுகோலை சொடுக்கியவர் புதுமைப் பித்தன் என்ற சொ. விருத்தாசலம் அவர்கள்.

ஓடாதீர் என்ற ஒரு கவிதை இதோ:

ஓகோ உலகத்தீர் ஓடாதீர்
சாகா வரம் பெற்ற
சரஸ்வதியார் அருள்பெற்ற
வண்ணக் கவிராயன் நானல்ல
உன்னிப்பாய் கேளுங்கள்
ஓடாதீர் வானக் கனவுகளை
வக்கணையாய்ச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல
சத்தியமாய் சொல்லுகிறேன்
சரஸ்வதியார் நாவினிலே
வந்து நடம்புரியும்
வளமை கிடையாது
உம்மைப் போல் நானும்
ஒருவன் காண்
உம்மைப்போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்
புளுகுகளைக் கொண்டும்மை
கூட்டி வைத்துக் காசை
ஏமாந்தால் கறந்திடுவேன்

அடடா! என்ன பச்சை உண்மைகள் தோகை விரித்தாடுகின்றன! பொய்யர் களின் புரட்டு முகமூடி கிழிப்பு!! அதைவிட முத்தாய்ப்பான பகுதி.

அக்கவிதையில் இனி மேல் தான் கேளுங்கள்:
இத்தனைக்கும் மேலே
இனிஒன்று
அய்யா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி
கல்லில் வடித்து
வையாதீர்!
வானத்து அமரன்
வந்தான் காண்
என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்
இப்படி எல்லாம் நீண்டு எழுதி வந்த புதுமைப்பித்தன் மேலும் உறுதிபடச் சொல்கிறார்
சொல்லுக்குச் சோர்வேது
சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும்
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றதுபோல்
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது
காசை வையும் கீழே, பின்
கனவுதனை வாங்கும்
இந்தா!
காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது
ஏங்காணும்
ஓடுகிறீர்?
ஓடாதீர்
உமைப்போல நானும்
ஒருவன் காண்
ஓடாதீர்!

இதைவிட தமிழ்நாட்டின் இலக் கிய, எழுத்துலகத்தின் பொய்த் திரையை கிழித்திட்ட பகடி இலக்கி யம்தான் வேறு உண்டோ!

இலக்கிய எக்ஸ்ரே எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கு நமது புன் சிரிப்புடன் கொண்ட வீர வணக்கம்!



- கி.வீரமணி



Read more: http://www.viduthalai.in/page-2/102916.html#ixzz3cTiY22J4

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)



Read more: http://www.viduthalai.in/page-2/102914.html#ixzz3cTjAQt00

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம்: கலைஞர் வரவேற்பு



சென்னை, ஜூன் 8_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் _ பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று இன்று (8.6.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:_

31.-5.-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - மொட்டைக் கடிதத்தின் காரணமாக,மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறு வனம் தற்போது போராட் டக் களமாக மாறியுள்ளது. எனவே இந்தப் பிரச் சினையில் உடனடியாக பிரதமர் அவர்கள் நேரடி யாகத் தலையிட்டு, சென் னையில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் அமைதி யையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலை நாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். என் னைப் போலவே தமிழகத் தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்க ளும் இது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந் தனர். மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி அந்த நிறுவன இயக்குனருக்கு நேரடியாகக் கடிதமே எழுதியிருந்தார். தி.மு. கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. இவைகளின் விளைவாக நேற்றைய தினம் அய்.அய்.டி. நிர்வா கம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையினை நீக்கியதோடு, சுயேச்சையான அமைப் பாக அது செயல்பட அனு மதி அளித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அய்.அய்.டி. நிர்வாகத்தின் இந்த முடி வினை தி.மு. கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த, போராடிய அனைவருக்கும் நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



Read more: http://www.viduthalai.in/page-4/102941.html#ixzz3cTja2LN8

தமிழ் ஓவியா said...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்



உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப் படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அ

வர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரை யானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந் திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம், இதை உறுதி செய்ய வேண்டு மானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே தக்காளியை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.



Read more: http://www.viduthalai.in/page-7/102921.html#ixzz3cTjquTRn

தமிழ் ஓவியா said...

வெயில் கால வெப்பக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!



பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறு வகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கி யுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கி யுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம்.

எளிதில் செரிமானமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊற வைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Read more: http://www.viduthalai.in/page-7/102925.html#ixzz3cTk5BuMX

தமிழ் ஓவியா said...

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

மனிதன் ஆரோக்கி யமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

தமிழ் ஓவியா said...

மேகி விற்பனை அதிகரிப்புக்கு சோம்பல் மிகுந்த இளம் தாய்மார்களே காரணமாம் பாஜக பெண் எம்.எல்.ஏ-வின் பேச்சால் பரபரப்பு

புதுடில்லி, ஜூன் 8_ மேகி விற்பனை அதி கரிக்க சோம்பலான தாய் மார்களே காரணம் என்று கூறிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பேச்சு சர்ச்சை யாக வெடித்துள்ளது.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட ரசாயனம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இந்தி யாவில் பல்வேறு மாநி லங்களில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த நட வடிக்கையை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ உஷா தாகூர் வரவேற்றுள்ளார்.

இன்றைய தலைமுறை தாய்மார்கள் சோம்பல் காரணமாக விரைவு உணவு நூடுல்ஸ்களை குழந்தைகளுக்குத் தருவ தாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே மேகி போன்ற உணவு பொருள் களின் விற்பனை அதி கரித்து இருப்பதாக தெரி வித்தார்.

மக்கள் மீதான அக் கறை காரணமாகவே மேகிக்கு பாஜக அரசு தடை விதித்திருப்பதாக கூறிய உஷா தாகூர், மேகி போன்ற விரைவு உணவு களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் இத்தகைய பேச்சு சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள்  சட்டமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து ஏதா வது உளறி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நட வடிக்கை தொடர்கதை யாகி வருகிறது.

தமிழ் ஓவியா said...

ராமன் கோயிலைக் கட்டா விட்டால்
அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

மோடியை மிரட்டுகிறது சிவசேனா




மும்பை, மே 9_ ராமர் கோவில் விவகா ரத்தை வைத்து தான் இந்துக்களின் நம்பிக் கையைப் பெற்று ஆட் சிக்கு வந்தீர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ராமர்கோவில் கட்ட காலம் தாழ்த்தினால் மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கிடுவார்கள், ஆகவே மன்கி பாத் நிகழ்ச்சியில் ராமர் கோவில் விவகாரத் திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும் என்று சிவசேனா அதி காரப் பூர்வ ஏடான சாம்னா தனது தலை யங்கத்தில் குறிப்பிட் டுள்ளது. மோடி தன்னுடைய ஓராண்டு ஆட்சியில் நடந்த தோல்விகளை மறைக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் தனது ஆட்சியின் மிக முக்கிய பிரச்சனை யான இந்துத்துவா மற் றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித் தும் பேசியிருந்தார். அதில் எனது ஆட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள பாதையில் தான் செல் கிறது. சிறுபான்மையின ருக்கு எந்த வடிவில் பாதிப்பு நிகழ்ந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டேன். சிறுபானையினர் இரவு 2 மணிக்குக் கூட என்னை நேரில் சந்தித்து தங்களது பிரச்சனை களைக் கூறலாம் என்று தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போல் பேசியிருந்தார். மோடியின் சிறுபான்மையினர் மீதான இந்தக் கரிசனப் பார்வை பலரது புருவங்களை உயர்த்தியது. ஆனால் மோடியின் பேச்சு எல் லாம் நடிப்பு தான் என்று சிவசேனா தலைமை தங்களது நாளிதழான சாம்னா மூலமாக மறை முகமாக காட்டிக் கொடுத்துவிட்டது. சாம்னாவின் தலை யங்கத்தில் எழுதியதன் விபரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கான மோடியின் பேச்சு குறித்து பலர் வியப்படைந்துள் ளனர். ஆனால் மோடி யின் பேச்சில் உள்ளார்ந்த விளக்கம் இந்துத்துவாதி களுக்கு மாத்திரமே தெரி யும், மோடி மறைமுகமாக மதம்மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சிறு பான்மை மதத்தலைவர் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். இது இந்து நாடு; இங்கு வேறுமதத் தலைவர்களுக்கு வேலை யில்லை, வேறு மதத்தலை வர்களுக்கு மோடி கசப் பான மருந்தைக் கொடுத் துள்ளார். முக்கியமாக பிரிவினை பேசும் காஷ்மீர் தலைவர்களுக்கும், இங் குள்ள ஒவைசி போன்ற வர்களுக்கும் தான் மோடியின் இந்த பேச்சு கசப்பான மருந்தாகும். அவர்கள் தான் கவலைப் படவேண்டும், இந்துக் களின் மடியில் கன மில்லை ஆகையால் இந் துக்கள் மோடியின் பேச்சால் பாதிக்கப்படப் போவதில்லை, பொதுச் சிவில் சட்டம் குறித்த சரியான பாதையில் மோடி சென்று கொண்டு இருக்கிறார். இது அவரது தற்போதைய நடவடிக்கை யில் தெரியவராது ஆனால் அவர் இதைச் செய்வார் என்று சிலருக்கு மாத்தி ரம் (சங்கப் பரிவாரத் தலைவர்கள்) தெரியும். காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் மோடிக்கும் பாஜக தலை வர் அமித்ஷாவிற்குமி டையே கருத்துவேறுபாடு கிடையாது. எதை எப் போது செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கத் தான் பாஜக தலைமையி னால் ஆன ஆட்சிக்கு முழு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். ராமர் கோவில் விவ காரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பத்துவங்கி யுள்ளது. இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மக்கள் ராமர்கோவில் கட்ட முழு விருப்பம் தெரிவித்து மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மோடிக்கு மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது நன்கு தெரியும், ஆகவே ராமர் கோவில் விவகாரத்தை வாஜ்பாய் அரசைப் போல் பரணில் தூக்கிப் போட முடியாது. அல்லது அதை மீண்டும் பேச்சு வார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்க முடியாது. ஒராண்டில் மோடிக்குப் பழைய தவறுகளைத் திருத்தவே நேரம் சரியாகப் போய் விட்டது. இனிவரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களின் எண்ணம் ராமர் கோவில் தான்; அதை மோடி தலைமையினால் ஆன அரசு விரைவில் கட்டித் தர வேண்டும். அதே நேரத்தில் மோடி வானோலியில் பேசும் நிகழ்ச்சியான மன் கி பாத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்துப் பேசவேண்டும் காலம் தாழ்த்தினால் மக்கள் மோடியை வெறுக்கத் துவங்கிவிடுவார்கள், அதன் பிறகு வாஜ்பாய் அரசுக்கான அதே நிலைதான் மோடிக்கும் ஏற்படும் என்று அந்த தலையங்கத்தில் எழுதி யுள்ளார்கள்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102957.html#ixzz3cZcuZg4w

தமிழ் ஓவியா said...

தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.
(குடிஅரசு, 19.2.1944)



Read more: http://www.viduthalai.in/page-2/102951.html#ixzz3cZdNOIL4

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் பற்றிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை


விடுதலை நாளிதழில் 25.5.2015இல் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையான சர்க்கரை நோய் பற்றிய சில புரட்டுகளுடன் உண்மை களும் என்ற கட்டுரை மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தது. முழு வதுமாக படித்த போது சிறந்த மருத்துவர் கூட தர முடியாத அருமையான அறிவுப்பூர்வமான குறிப்புகளாக இருந்தது. இன்றையக் காலக்கட்டத்திலே பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் தவிர்க்க முடியாததாகி விட்ட சூழ்நிலையில் அது வந்த பின் எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது குறித்தும் - சர்க்கரை நோய் பற்றிய புரட்டுகளை விளக்கமாக புரட்டு எண் 1 முதல் 5 வரை புரட்டு - உண்மை என்று அருமையான விளக்கமாக தெளிவுரை கிடைத்தது. எனக்கும் type-2 சர்க்கரை இருந்தாலும் மருத்துவரின் மாத்திரைகள், நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய வற்றால் கட்டுக்குள் வைத்திருந்தாலும், ஆசிரியர்கள் கட்டு ரைகள் எனக்கு மட்டுமல்ல பல்லா யிரக்கணக்கான வாசகர்களுக்கும் இன்றைய கால கட்டத்தினை பயன் தரத்தக்கதாய் அமைந்துள்ளது.

விடுதலை 26.5.2015 ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந் தனைக் கட்டுரையில் மவுனம் அமைதி யின் விழுமிய சிந்தனையும் பயனும் என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. அருமையான நூல் கிருஸ்டோபர் அன்சார்டு என்பவர் எழுதியThe Tibetan Art of Living  புத்தகத்திலிருந்து அருமை யான விளக்கங்களை நமக்கு தருகிறார் ஆசிரியர்.

Wise body -- புத்திசாலித்தனமான உடல்
Wise mind -புத்திசாலித்தனமான மனம்

Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை என்ற தலைப்பில் பல செய்திகள் - அதில் மன அமைதி ஷிவீறீமீஸீநீமீ  என்பது அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய மானது என்பதற்கான அரிய விளக்கம் குறித்தும் கட்டுரை முழுவதும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள். ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் மக்களின் - மன இருளைப் போக்கும் பகுத்தறிவுச் சூரியனாக பிரகாசிக்கிறது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- தி.க.பாலு
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3)

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.யில் தடை நீக்கம்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 9_ அய்.அய்.டியில் அம்பேத் கர், பெரியார் மாணவர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டதை கட்சித் தலைவர்கள் வரவேற்றுள் ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தி யில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி

இதற்கு தனது மகிழ்ச் சியை தெரிவித்தார் ராகுல் காந்தி. இந்த விஷ யத்தில் மோடி அரசு, பின் வாங்கியுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் கில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி. சென்னை யில் மீண்டும் அம்பேத்கர்_- பெரியார் மாணவர்  வட் டம் சுதந்திரமான மாண வர் அமைப்பாக செயல் படுவதற்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன். விவா தங்களுக்கும், கருத்துப்  பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

ஆட் சேபணைக்குரிய கருத்துக் கள் பற்றி  விவாதிப்பதற் குக் கூட கல்வி நிறுவனங் களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கவேண் டும். சட்டத்திற்கு உட் பட்டும், கல்வி நிறுவனத் தின்  விதிமுறைகளுக் குட்பட்டும் கருத்துக் களைப் பரிமாறிக் கொள் வதற்கு மாணவர் அமைப்பு களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும்.

நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இளைய தலைமுறைதான். எனவே, அவர்கள் ஆக்கப்பூர்வ மான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது  வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என் பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க  விரும்புகிறேன்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் (த.மா.கா): மாணவர்களின் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் அய்அய்டி  நிர்வாகத்துக் கும் அய்அய்டி அம்பேத்கர் -_பெரியார் வாசகர் வட்ட  நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை யின் முடிவில் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட் டிருந்த தடை   நீக்கப்பட் டுள்ளது. உடன்பாடு ஏற்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும் மாண வர்கள் இனிமேல் படிப் பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற  வேண்டும்.

முத்தரசன்

முத்தரசன் (இந்திய கம் யூனிஸ்ட் மாநில செயலா ளர்): சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த 6 ஆம் தேதி மாணவர் அமைப்பு டன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை  நடத்தி, தடையை விலக்கி, அம் பேத்கர்-_பெரியார் வாசகர் வட்டத்தை மீண்டும் அங்கீகரித்துள்ளது. கருத் துரிமை பாதுகாப்புக்கான ஒன்றுபட்ட போராட்டத் திற்கு கிடைத்த குறிப்பிட் டத்தக்க வெற்றியாகும்.

இப்போராட்டத்தை ஆத ரித்தவர்களுக்கும், பங் கேற்றோர்களுக் கும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது டன், அய்அய்டி நடவடிக் கையை வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. எம்.பி.,யின் மதத் திமிர்வாதப் பேச்சு

சூரிய நமஸ்காரம் பிடிக்கவில்லையா? கடலில் போய் விழுங்கள்!



வாரணாசி, ஜூன் 10_- பிரதமர் நரேந்திர மோடி யின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21- ஆம் தேதி, சர்வதேச யோகா நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது, நாடு முழு வதும் பல இடங்களில் யோகா மற்றும் சூரிய நமஸ் காரம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், சூரிய நமஸ்காரத்துக்கு சில சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதனால், சூரிய நமஸ்கார பயிற்சியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், யோகா பயிற்சியில் ஈடுபடுவது கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள லாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பெயர் போன உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத், சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்களை விமர்சித்து புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாம் வாழ்வதற்கான சக்தியின் ஆதாரமே சூரியன்தான். ஜாதி, மதம், இனம் பார்க்காமல், எல்லோருக்கும் சூரிய கடவுள் ஒளியை அள்ளி வழங்கி வருகிறது. அத்தகைய சூரியனை மதத் துடன் தொடர்புபடுத்தி பார்ப்பவர்களின் மன நிலையை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் சூரிய ஒளியையோ, வெப்பத்தையோ பயன்படுத்தக்கூடாது. வாழ்நாள் முழுவதும் இருட்டறையில் அடைந்து கிடக்கவேண்டும் அல்லது கடலில் போய் விழுந்து மூழ்க வேண் டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

யோகி ஆதித்யநாத், மத பாகுபாட்டை உரு வாக்க முயல்வதாகவும், பேசும்போதெல்லாம் நஞ்சை கக்குவதாகவும் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா தெரிவித்துள்ளார்.

யாரும் தங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என்று சமாஜ்வாடி கட்சி பிரமுகர் கவுரவ் பாட்டியா கூறியுள்ளார்.

இந்தியாவில் நெரிசல் மிகுந்துள்ளதற்கு தீர் வாக நம்மில் பலரை மூட்டை கட்ட பார்க்கிறார் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103013.html#ixzz3cekLoYVK

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற நாட்டில் கல்விக் கூடங்களில் கீதை, சூரிய நமஸ்காரமா?
நீதிமன்றம் செல்லுகின்றன இஸ்லாமிய அமைப்புகள்

புதுடில்லி, ஜூன் 10_  அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பகம் மற் றும் சில சிறுபான்மை அமைப்புகள் ஒன்றி ணைந்து மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனைத்து மத மக்கள் மீதும் கீதை, சூரிய நமஸ் காரம், யோகா மற்றும் வேத சுலோகங்களை நெட்டுரு செய்ய வற்புறுத் துவதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.    அரியானா, மகாராஷ் டிரா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வரு கிறது. இந்த மாநில அரசுகள் ஆட்சிக்கு வந்த உடனேயே இளம்வயதின ரின் கல்வித்திட்டத்தில் இந்துத்துவக் கொள்கை களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றன.    அரியானா மாநில அரசு, தான் ஆட்சிக்கு வந்த உடனேயே அரி யானா மாநிலத்திலுள்ள பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்த்தது. இதனைத் தொடர்ந்து யோகா, சூரிய நமஸ்காரம், மற்றும் வேதங்களில் உள்ள சுலோகங்களை எல்லாக் குழந்தைகளும் கட்டாயம் படிக்கவேண் டும் என்று உத்தரவிட்டி ருந்தது. அரியானாவைத் தொடர்ந்து மகாராஷ் டிராவில் அனைத்து மாந கராட்சிகளுக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்திலும் பகவத் கீதை, ஒரு பாட மாக கட்டாயமாக்கப் பட்டது. மெல்ல மெல்ல அனைத்துப் பள்ளிகளுக் கும் கொண்டு செல்லும் திட்டத்தையும் முன்வைத் துள்ளது.

மகாராஷ்டிரா வில் உள்ள தனியார் பள்ளிகள் அனுமதியின் போது கட்டாயம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத் திற்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப் பட்டது. மேலும் யோகா சூரியநமஸ்காரத்திற்கான தனி வகுப்புகளும் கட்டா யப்படுத்தப்பட்டன. இந்த இரு மாநிலங்களைத் தவிர ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களி லுள்ள பள்ளிகளில் பகவத் கீதை சூரியநமஸ்காரம் கட்டயமாக்கப்பட்டது. இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில் குறிப் பிட்ட மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தாலும் மதம் சார்பான கட்சி ஆட்சியமைந்ததாலும் அரசியல் சட்டம் கூறிய மதச்சார்பின்மை குப்பை யில் தூக்கி எறியப்பட்டது.  இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு மற்றும் சிறு பான்மையினர், மாநில அரசுகளின் இந்த அரா ஜகப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து முஸ்லிம் சட்ட ஆணையத்தின் பேச்சாளர் அப்துல் ரகீம் குரோஷி கூறியதாவது, இந்த நாடு, மதச்சார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தவரும் அவர்களின் நம்பிக்கைப்படி வாழ உரிமை உள்ளது, முஸ்லிம் கள் அல்லாவை மட்டுமே வணங்குகின்றனர். இது அவர்களின் மதநம்பிக்கை தொடர்பான விவகாரம், ஆனால் சில மாநில அர சுகள் பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் செய்வதையும், பகவத் கீதைப் படிப்பதை யும் கட்டாயமாக்கியுள் ளார்கள்.  இந்தப் பள்ளி களில் முஸ்லிம் கிறிஸ்தவ மற்றும் இதர மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் கல்விகற்கின்றனர். இதைக் கருத்தில் கொள்ளாது மத உணர்வுகளை வேண்டு மென்றே புண்படுத்தும் செயல்களைச் செய்துவரு கிறது.  மாநில அரசுகளின் இந்த செயல்கள் தேசியத் தின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் விதமாக உள் ளது. தேச ஒற்றுமையை யும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல உள்ளோம். நீதி மன்றம் செல்லாமல் இதற் குத் தீர்வு காணமுடியாது. மேலும் நாடு தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்சிந்தனையும்

இதற்குப் பிறகாவது...

செய்தி: திராவிடக் கட்சிகளை யாராலும் அழிக்க முடியாதுதான்; ஆனால், அவர்களே அவற்றை அழித்து விடுவார்கள்.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: இதற்குப் பிறகாவது எந்த ஒரு திராவிடர் கட்சியாவது பி.ஜே.பி.யுடன் கூட்டு வைத்துக்கொள்ள நினைத்தால், அவர்கள் தானாகவே அழிந்து விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: தமிழ்நாட்டில் பி.ஜே.பி. பிறக்கும்போதே இறந்துதானே பிரசவமானது.

தமிழ் ஓவியா said...

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் மோடி அரசு: சோனியா குற்றச்சாற்று


புதுடில்லி, ஜூன் 10_ நாட்டு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்துவதற் காக, தனது அமைச்சரவை சகாக்கள்மூலம் அச்சம், பீதி கலந்த சூழலை உரு வாக்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். டில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற காங் கிரஸ் ஆளும் முதல்வர் கள் மாநாட்டில் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: நல்ல நிர்வாகத்தை அளிப்பதிலும், அரசியல் சாசன விதிகளை மதிப் பதிலும் தான் முதன்மை யானவர் என முன்னி லைப்படுத்திக் கொள்ள பிரதமர் மோடி விரும்பு கிறார். அதே வேளையில், வகுப்புவாத வன்முறை களைத் தூண்டும் இழி வான கருத்துகளை தனது அமைச்சரவை சகாக்கள் பலர் பேசுவதை மோடி அனுமதிக்கிறார். இத னால், நாட்டின் மதச் சார்பற்ற கட்டமைப்பு ஏற்கெனவே பாதிக்கப்பட் டுள்ளது. அச்சம், பீதி கலந்த சூழல் திட்ட மிட்டே உருவாக்கப்படு கிறது. மாநிலங்களில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுகள் உருவாக்கி வைத் துள்ள வளர்ச்சிக்கான கட்டமைப்பை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட தாக்குதல் நடத்துவதன் மூலம் பயங்கரமான இரட் டைவேட விளையாட்டு களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. நாடாளுமன்ற விதி முறைகளை ஓரங்கட்டி விட்டு, கற்பனைக்கு எட் டாத அளவுக்கு அதிகாரத் தைக் குவிக்கும் நடவடிக் கையில் மோடி ஈடுபட்டுள் ளார். இதனால், சமூகத் துக்கும், நீதித்துறைக்கும் அச்சுறுத்தல் எழுந்துள் ளது. கல்வி, சுகாதாரம், குடிநீர், கிராமப்புறச் சாலை கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன், தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங் குடியினர் நலன் ஆகிய வற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர் என்ற வகையில், மாநில நலன் தொடர்பான விவ காரங்களில் மத்திய அரசுடன் இணைந்து பணி யாற்றுங்கள். அதேவேளை யில் மக்கள் நலனுக்கு எதிராக மோடி அரசு செயல்படுமானால், காங் கிரஸ்காரர் என்ற வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். திட்டக் குழு கலைக்கப் பட்டதால் காங்கிரஸ் ஆளும் 7 மாநிலங்கள் உள்பட சிறப்புத் தகுதி நிலையில் உள்ள 11 மாநிலங்களுக்குப் பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்குப் போது மான நிதியை ஒதுக்காமல் அவர்கள்மீது சுமைகளை ஏற்றும் அதே வேளையில் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச் சலுகை வழங்குகிறது. உள்நாட்டு அரசியலை வெளிநாடுகளில் பேசுவ தில்லை என்ற பாரம்பரியத் தையும் மோடி உடைத்து விட்டார். 2013- ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு, சேவை வரி மசோதா உள்பட பல்வேறு விவ காரங்களில் தனது முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது என்றார் சோனியா காந்தி.



Read more: http://www.viduthalai.in/e-paper/103018.html#ixzz3cel1D1j9

தமிழ் ஓவியா said...

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும், ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது அரிச்சுவடி படிக்காமல், பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.

_ (குடிஅரசு, 9.2.1936)



Read more: http://www.viduthalai.in/page-2/103022.html#ixzz3celQRcYX

தமிழ் ஓவியா said...

செல்லக்கிளி (எ) சு.அறி வுச்செல்வன் _ வ.சந்தியா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று நடத்தி வைத்து பேசியதாவது:_ மணமகன் செல்லக்கிளி பழகுமுகாம் மாணவர் அவர் இரண்டு முறைதான் வாய் திறப்பார் ஒன்று கொட்டாவி விடும் போது இரண்டாவது சாப் பிடும்போது. பழகு முகாம் நிறைவில் அவருடைய பேச்சை நிறுத்த முடியாத அளவு பேசும் திறனை பழகு முகாம் வளர்த்தது என் பதை நினைவுபடுத்தி தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் உழைப்பால் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகளை தொடங்கி வைத் ததால் நாம் இன்றைக்கு நமது செல்லக்கிளி (எ) அன்புச்செல்வன் - மண மகள் வ.சந்தியா ஆகியோர் பட்டயப்படிப்பை முடித்து உள்ளனர். இந்த அளவுக்கு நாம் உயரக் காரணம் தந்தை பெரியார் பெற்று தந்த இடஒதுக்கீட்டால் என்பதை மறக்கக்கூடாது. இது சுயமரியாதைத் திரும ணம் இதுவே புரோகிதத் திருமணமாக இருந்தால் பார்ப்பான் சொல்லும் மந்திரம் நமக்கு ஒன்றும் புரியாது. மணமக்களுக்கும் ஒன்றும் புரியாது. தீ குண் டம் வளர்த்து எண்ணெயை ஊற்றி புகை கிளப்பி மண மகள் கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கு எற்பாடு செய்வார். மணமகளை கேவலப்படுத்தும் வகையில் மந்திரங்களை கூறுவார். இது போன்ற சுயமரியாதை திருமணத்தில் அனைவருக் கும் புரியும்படியான நமது தாய் தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்து மணமக்கள் உறுதிமொழி கூறி மாலை மாற்றி கொண் டனர். இது போல ஒவ் வொரு தமிழன் இல்லத்தி லும் நடைபெறும் விழாக் களை நம்முடைய பெரி யோர்கள், பெற்றோர்கள் முன்னின்று நடத்துங்கள் தமிழன் இல்ல நிகழ்ச்சிக்கு பார்ப்பனனை அழைக் காதீர்கள் என்று கூறி மண மக்கள் எக்காரணத்தை கொண்டும் பெற்றோர் களை புறந்தள்ளக்கூடாது நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறி நிறைவுரையாற்றினார்.

குறிப்பு: மணவிழா நிகழ்ச்சி நடந்துகொண் டிருக்கும்போது உற்றார் _ உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பு அளிக்க மேடையை நோக்கி வருகை தந்தபோது மணமகன் செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் எழுந்து வந்து மைக்கை வாங்கி அனைவ ரும் தயவு செய்து இருக்கை யில் அமருங்கள் நமக்கு தெரிந்த மொழியில்தான் தமிழில்தான் பேசுகிறார் கள். நமக்கு புரியாத சமஸ் கிருத மொழியில் என்ன பேசுகிறார் என்பதை தெரி யாத நாம் மணிகணக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்கள் நமக்கு தெரிந்த மொழியில் கருத்துக்களை கூறுகிறார் கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தயவு செய்து அமைதியாக உட்கார்ந்து கருத்துகளை தெரிந்து கொண்டு சொல்ல வேண் டும் என்று மணமகன் அன் புச்செல்வன் கேட்டுக்கொண் டதால் அனைவரும் இருக் கையில் அமர்ந்து கொண்ட னர்.

கழக மாநாடு போல பையூர் பெரியார் சிலை அருகிலிருந்து மணமகன் செல்லக்கிளி இல்லம் வரையும், காவேரிப்பட் டணம் பெரியார் சிலையி லிருந்து தருமபுரி சாலை எஸ்.எம்.கல்யாண மகால் மண்டபம் வரை நூற்றுக் கும் மேற்பட்ட கழகக் கொடி கட்டியும், டிஜிட் டல் பேனர்கள் வைத்தும், பையூர் தந்தை பெரியார் சிலைக்கு மணமகன் மாலை அணிவித்து சிறப்பித்தார். மாநாடு போல சிறப்பாக செல்லக்கிளி (எ) அன்புச் செல்வன் _ வ.சந்தியா இணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் மாநாடுபோல நடைபெற் றது. இறுதியாக பையூர் திமுக பேச்சாளர் தி.க. இளைய ராசா நன்றி கூறினார்.

10-06-2015

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரையும், பெரியாரையும் பிரித்தாளத் துடிக்கும் காவிகள் - பார்ப்பனர்கள்!
இந்து ஏடு திரட்டி வெளியிட்ட கருத்துகள்

சென்னை, ஜூன் 10_ சென்னை அய்.அய்.டி. விவகாரத்தில் தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் பிரிக்கும் சூழ்ச்சியில் சங் பரிவார்க ளும், பார்ப்பனர்களும் மேற் கொள்ளும் சூழ்ச்சிபற்றி இந்து ஏடு பலரிடம் கருத் துகளைக் கேட்டு வெளி யிட்டுள்ளது.

விவரம் இதோ:
சென்னை அய்.அய்.டி யில் புயலடித்து ஓய்ந்த  அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை தொடர்பான சர்ச்சை அர சியல் கட்சிகளின் ஒரு மித்த போராட்டத்தின் விளைவால் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒரு முகமாக அம்பேத்கர்_ பெரியார் வாசகர் வட்டத்தின் பேச் சுரிமை சுதந்திரத்திற்கு குரல் கொடுத்து அதில் வென்றுள்ளனர்.

அவ்வி ரண்டு தலைவர்களின் கருத்துக்கள் மேலும் மக்களிடையே கொண்டு செல்ல புதிய பாதை உரு வாகியுள்ளது.   பாஜக மற்றும் அதன் துணை அமைப்புபோல் செயல்படும் உதிரிக் கட்சி, அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையைக் கொண்டாடி யுள்ளது.

அதேபோல் முக் கியமாக உதிரிக் கட்சி ஒன்று அம்பேத்கர் இந்து மத பாதுகாவலர் போல வும், பெரியார் தாழ்த்தப் பட்டவர்களின் விரோதி கள் போலவும் சித்தரித்து வருகிறார்கள். மத்தியிலும் தொடர்ந்து அம்பேத் கருக்கு இந்து மதச்சாயம் பூசும் உள்ளார்ந்த வேலை கள் நடந்துவருகின்றன.

சங்பரிவார்களின் இந்த நரித்தந்திரத்தை தமிழகத் தில் உள்ள உதிரிக்கட்சி ஒன்று தமிழக மண்ணில் செயல்படுத்த முனைந் துள்ளது. இதற்கு அம்பேத் கர்_ பெரியார் வாசகர் வட் டத்திற்கான தடையை சாத மாக எடுத்துகொண்டது.

கலி.பூங்குன்றன்

அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக் கங்கள், இதை உடைக்க தமிழ்நாட்டில் உள்ள சில சில்லறைக் காவி அமைப்பு கள் முனைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்கள் அம்பேத்கர்_ பெரியார் இருவரின் சமூக போராட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர்.

இருவ ருமே ஜாதிய வேறு பாட்டை உடைத்தெரிய வேண்டுமென்றால் முத லில் பார்ப்பனர்கள் வகுத்த வர்ண முறையை வேரோடு பிடுங்கி எரித்து சாம்ப லாக்கவேண்டும், இதையே தான் பெரியாரின் திரா விட இயக்கமும், அம்பேத் கரின் போராட்டங்களும் தெற்கிலும் வடக்கிலும் வலியுறுத்தி வந்தன.

அம்பேத்கர் மற்றும் பெரியார் இருவருக்குமே ஒரே இலக்குதான், இந்து மதத்தை ஒழித்தாலொழிய இந்தச் சமூகத்தில் புரை யோடிக்கிடக்கும் ஜாதீயக் கொடுமைகளை நீக்க முடியாது.

இந்த வர்ண பேத ஒழிப்புப் போராட் டத்தில் இருவரின் அணுகு முறைகளும் வேறாக இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, ஆனால் தற்போது இருவரின் கருத் துக்களிடையே பிளவை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க பார்ப்பன நரித் தந்திரம் சூழ்ச்சி செய்து வருகிறது, என்று விடு தலை பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கலி. பூங்குன்றன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிய தாவது,

அய்.அய்.டி சென்னை முழுவதுமே பார்ப்பனர் களால் ஆக்கிரமிக்கப் பட்ட நிறுவனமாக மாறி விட்டது. உயர் ஜாதியினர் அந்த நிறுவனத்தின் அனைத்து முக்கிய பதவிக ளிலும் 95 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர். பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்கள் முதல் உதவிப் பேராசிரியர்கள் வரை எங்கும் பார்ப்பன மயம்தான். அங்கு இருந்து கொண்டு இட ஒதுக்கீட் டின் மூலம் வாய்ப்புப் பெற்று நுழைந்தவர்கள் சமூகநீதிபற்றி பேசும் போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது என்று கலி. பூங்குன்றன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் குறிப்பிடும்போது, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித் தும் சில எதிர்மறைக் கருத் துக்களை கூறியிருந்தாலும், இந்துத்துவா சக்திகளிட மிருந்து பாதுகாப்பது பெரியார் மற்றும் பெரி யாரின் கருத்துகள்தான் என்று தனது நிலைப் பாட்டை கூறினார்.

புனிதபாண்டியன்

தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் குறிப் பிடும்போது, சங்கபரிவார் அமைப் புகள் இந்தியா முழுவது முள்ள தலித்துகளின் வாக்குவங்கி மீது நீண்ட நாட்களாகவே ஒரு பார் வையை வைத்துள்ளன.

சங்கபரிவார் அமைப்புகள் வட இந்தியாவில் உள்ள தலித்துகளை மூளைச் சலவை செய்து அம்பேத்கா ரின் இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான எதிர் மறைக் கருத்துக்களை மறைத்து அம்பேத்கர் சங் பரிவாருக்கு ஆதரவான வர்; அவர்களின் கொள் கைகளை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்ற போலி யான கருத்துகளை தலித் துகளிடையே பரப்பி வரு கிறனர்.

அம்பேத்கர் வலி மையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அதே நேரத்தில் பார்ப் பனக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார்.   பெரியார் தனி திரா விட நாட்டை வலியுறுத்தி வந்தார், மேலும் பார்ப் பனீயத்தை எதிர்த்து பார்ப் பனரல்லாத மக்களை ஒன்றுதிரட்டினார். இந்த அமைப்பு அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு கொள்கையை முற்றிலும் ஆதரித்து ஒன் றாக செயல்பட்டு வந்தது.

சென்னை அய்.அய்.டி. யின் அம்பேத்கர்_பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதன் எதிர் விளைவாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவது அம்பேத்கர்_பெரியார் பெயரில் அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னையின் அம்பேத் கர்_பெரியார் வாசகர் வட்டம் துவக்கவிழா ஒன் றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன், பெரியாரிய கருத்துகள், அம்பேத்கரிய கருத்துகள், இடதுசாரி சிந் தனைகள் கொண்டவர் கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்படவேண் டிய தருணம் வந்துவிட் டது. காரணம் மூவருக்கும் பொதுவான எதிரி ஒரு வரே என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பான் என்னைக் கொல்ல மாட்டான்//
நானும் பிரான்சிசும் அய்யாவை வழக்கம் போல சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, நாளைக்கு திருச்சி கடை வீதியில் உண்டியல் வசூல் செய்ய வேண்டும். நானும் வருகிறேன் , நோட்டீஸ் போடுங்கள் என்றார் அய்யா. என் கையைப் பிடித்துக் கொண்டு, சாதி ஒழிப்பு போராட்ட நிதிக்காக திருச்சி நகரில் ஈ.வெ.ரா பிச்சை எடுப்பார்" என்று நோட்டீஸ் அடிக்க வேண்டும் என்றார் அய்யா.
மறுநாள் 01.08.1957 அன்று காலை சைக்கிள் ரிக்‌ஷாவில் அய்யா உட்கார்ந்து வர, மார்க்கெட்டில் உள்ள மளிகைக் கடைக்காரர்கள் அனைவரும் உண்டியலில் பணம் போட்டனர். நேராக மலைவாசல் திரும்பினோம். இப்போது "மங்கள் &மங்கள் " கடை இருக்கும் இடத்திற்கு முன்பு அப்போது பார்ப்பனர் ஓட்டல் ஒன்று இருந்தது.
சற்று தூரத்தில் அய்யா வரும் போதே, சைக்கிள் ரிக்‌ஷாவைப் பார்த்த பார்ப்பன முதலாளி, கையில் ரோஸ் மில்க்குடன் ஓடிவந்ந்தார். அய்யாவும் அதை வாங்கிக் குடித்தார்.டம்ளரை வாங்கிக் கொண்டு உண்டியலில் 100 ரூபாய் போட்ட விட்டு சென்றார் அந்தப் பார்ப்பனர். எனக்கு கோபமாக இருந்தது.
அம்பீஸ் கபே தாண்டி, சாமி ஆர்ட்ஸ் ஸ்டூடியோ தாண்டி தெப்பக்குளம் அருகே போகும் போது ரிக்‌ஷாவை நிறுத்தச் சொன்னார் அய்யா. என்ன பழனி? என் மேல் கோபமா? என்றார்.
ஆமாம் என்று சத்தமாகவே கூறினேன்.பார்ப்பான் கொடுத்ததை நீங்கள் வாங்கிக் குடிக்கிறீர்கள். ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது? இந்த நகரத்துக்கு நான் பொறுப்பு.நான் நகரச் செயலாளர் என்று கோபமாகவே பேசினேன்.

அய்யா சிரித்துக் கொண்டே, "என்னப்பா நீ, பார்ப்பான் என்றைக்கும் என்னைக் கொல்ல மாட்டான்.என்னைக் கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவனுக்கு தெரியும். நான் உயிரோடு இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி விட்டு வேனில் ஏறி மாளிகைக்கு சென்று விட்டார்..
--பெரியார் தொண்டர் திருசி வீ.அ பழனி வாழ்வும் போராட்டமும் என்ற நூலில் இருந்து,,

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பூக்குழி

செய்தி: பழநியையடுத்த கே. வேலூர் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பூக்குழி (நெருப்பில்) இறங்கி நேர்த்திக் கடன் கழித்தனர்.

சிந்தனை: விரதம் இருக் காமலேயே கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று கூறி திராவிடர் கழகத் தோழர்கள் பூக்குழி இறங் கியதுண்டே! கே.கே. பட்டி யில் (தேனி மாவட்டம்) கோயில் திருவிழா பூக்குழி யிலேயே கடவுள் மறுப்புக் கூறி கருஞ்சட்டைத் தோழர் கள் பூக்குழி இறங்கிக் காட்டி பக்தர்களை மலைக்க வைத் தனரே பூக்குழியில் ஓடும் பக் தர்கள் சிறிது நேரம் தீக்குழி யில் நின்று காட்டுவார்களா?

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குத்துக் கல்லு

கோயில் திருவிழா வில்  பக்தர்களிடையே மோதல்  சாவு -காயம் என்று செய்திகள் வரு கின்றனவே - அந்தக் கோயிலுக்குள் குடியிருக்கும் கடவுள் என்ன செய்து கொண்டு இருக்கிறதாம்?

கடவுளாவது வெங் காயமாவது - அது வெறும் குத்துக்கல் தான் என்று ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...

யாரிந்த ஆணையர்?

முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்

POWER CORRUPTS;
ABSOLUTE POWER CORRUPTS ABSOLUTELY

அதிகாரம் பிழைபடுத்திவிடும்;
முழு அதிகாரம், முழுமையாக பிழைபடுத்திவிடும்.

எங்களது ஓராண்டு ஆட்சியில் ஊழல் இருந்ததா? என கேள்வி எழுப்பினார் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் பதவி நிரப்பப் படாமல் இருந்தது. இதனை அனைவரும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.

இப்போது இந்த உயரிய பதவிக்கு கே.வி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பரிந்துரையில் மோடி இதனை ஏற்றுக் கொண்டு  குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அவரும் நேற்று பதவியேற்றார்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சரும், வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி, மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு கே.வி. சவுத்ரியை நியமிக்கக்கூடாது என்றும், அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், அதற்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டும் மோடிக்கும், குடிஅரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி யுள்ளார்.

அரசின் சார்பில் இந்த நியமனம் செய்யப்பட்டி ருப்பதை உறுதி செய்து அரசின் அட்டார்னி ஜெனரல், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்ட நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருப்பதாக வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் நேர்மையும், யோக்கியதையும் விரைவில் அம்பலமாகும்.

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டுவோம்!


தமிழ்நாட்டில் மழை பொழியவேண்டி தமிழ்நாடு அரசுத் துறையான நீர்வளத்துறை - அதன் தலைமைப் பொறியாளர் திருச்சிராப்பள்ளி மண்டலத்துக்குட்பட்ட 30 உட்கோட்ட அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைப் போல் ஒன்றை அனுப்பினார்.

ஒவ்வொரு உட்கோட்டம் சார்பிலும் ஆங்காங்கே உள்ள கோவிலில் சிறப்பு யாகம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டது.

இது ஒரு பிற்போக்குத்தனமான - விஞ்ஞானத்திற்கு எதிரான பழைமை வாய்ந்த இந்து மத மூடநம்பிக்கையைச் சேர்ந்த பழங்குப்பையாகும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே அழுத்தமாக வரையறுத்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை தனக்குரிய அதிகாரத்தையும், மக்களின் மூடத்தனத்தையும் பயன்படுத்தி அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்திருப்பது அசல் அத்துமீறிய - அப்பட்டமான சட்ட மீறலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்தியுள்ளது.

அதன்படிப் பார்த்தால் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்ட குற்ற வாளியாவார்.

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள்மீது திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார் (விடுதலை, 6.6.2015).

சம்பந்தப்பட்ட அதிகாரியின் சட்ட மீறலோடு அந்த நடவடிக்கை முடிந்து விடவில்லை. கோவில்களில் யாகங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்துவது என்பது அதிகாரிகளின் சொந்த செலவில் அல்ல; அரசுப் பணம்தான் அரசுக் கொள்கைக்கும், சட்டத்திற்கும் விரோதமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாகும்.

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கையின் எதிரொலியாக பொதுப் பணித்துறையின் உயர்நிலை அதிகாரியான மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்த சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு இருப்பதாகத் தகவல் வெளிவந் துள்ளது. 15 நாள்களுக்குள் பதிலை அளிக்கவேண்டும் என்று அதில் வலியுறுத்தவும் பட்டுள்ளது. அது ஒரு அரசுத் துறை நடவடிக்கையாக இருக்கக்கூடும்.

அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்களை மாட்டுவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை போடுவது, ஆயுத பூஜை கொண்டாடுவது, காவல் நிலையங்களில் ஒலி பெருக்கி வைத்தே தடபுடலாக ஆயுத பூஜை நடத்துவது, அதற்காக வசூல் வேட் டைகளில் ஈடுபடுவது, வேலியே பயிரை மேய்வது போல நீதிமன்ற வளாகங்களுக்குள்ளேயே கோவில் களைக் கட்டுவது - இன்னோரன்ன அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளிக் கிடைத்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் தாக்கல் செய்ய இருக்கும் இந்த வழக்கு பல வகைகளிலும் ஒரு சரியான பாதையை - வழிகாட்டுதலை அரசுத் துறைகளுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் காட்டும் வகையில் அமையும்.

நடைபாதைக் கோவில்களை உடனே அகற்றிட வேண்டும். அப்படி அகற்றாத மாநில அரசுகளின் (தமிழ்நாடு உள்பட) தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டும், அப்படிச் செயல்படாத அரசுகளுள் ஒன்றுதான் தமிழ்நாடு அரசு.

மக்கள் மத்தியில் உரிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமையாகும். ஒரு பக்கத்தில் பொதுக்கூட்டங்களின் வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற பணியை எழுச்சியோடு செய்துகொண்டுள்ளது.

இன்னொரு கட்டமாகத்தான் நீதிமன்றத்தின் கதவையும் தட்டுகிறது கழகம். மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அப்படி விழுமேயானால், பிரச்சினைகள் மிக எளிதாகவே தீர்க்கப்பட்டு விடும் அல்லவா?

யாகத்தாலும், பூஜை புனஸ்காரங்களாலும் விரும்பியதை எட்ட முடியும் என்றால், அரசாங்கம் கூடத் தேவைப்படாதே! எல்லாவற்றையும் பூஜைகள், புனஸ்காரங்கள், யாகங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாமே!

மெத்தப் படித்தவர்கள்கூட, பொறியியல் பட்டம் பெற்றவர்களே கூட பகுத்தறிவைச் செலுத்தாமல், பக்திப் போதைக்கு அறிவைப் பலி கொடுத்து, தாங்கள் நாசமாவதுடன், மற்றவர்களையும் அந்த மூடப் படுகுழியில் தள்ளுவது - மன்னிக்கவே பட முடியாத பெருங்குற்றமாகும்.

நான் ஒரு நிமிடம் அரசனானால், அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருத்தை எண்ணிப் பாருங்கள் - அறிவின்மீது அவர் வைத்துள்ள மதிப்பையும், சீர்தூக்கிப் பாருங்கள், பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

புதுமைத் தென்றல் : வி.ஸ. காண்டேகரின் கருத்து மழை


மராத்திய புதுமை எழுத்தாளர் - புதினம் புனையும் பொலிவு மிக்க கருத்தாளர் வி.ஸ. காண்டேகர் அவர்கள் ஆவார்கள்.

மராத்தியில் அவர் எழுதிய புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - இவைகளை தமிழில் சுவை குன்றாமல் தரும் பணியை - அரும்பணி செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்கு புது உலகம் தேடுவோர் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறும் முன்னரும், பெற்ற பின்னரும் எனக்குத் தேவையான மெல்லியப் பூங்காற்றை  (சுவாசிப்பதைப்போல) வாசிப்பது அவசியம் - நேரமும் பறந்து விடும். வலியை மறந்து விடுவோம் என்ற வகையில் காண் டேகர்தான் எனக்குத் துணையாக இருந்தார் - முழு நேரப் பணி பெரியார் சிந்தனைகளை பரப்புவதுதான் என்றாலும்கூட!

வி.ஸ.காண்டேகர் கதைகள் என்ற நூலில் மூன்று உருவகங்களைக் கொண்ட யதார்த்தத்தை கற்பனை வண்ணம்பூசி அருமையாக தந்துள் ளார் நந்தவனம் என்ற  தலைப்பில் ஒரு சிறுகதையில்; அதைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்த போதும்) நவில்தொறும் நூல் நயம் கண்டேன்!

அதனை உங்களைப் போன்ற பயில்தொறும், படிக்கும் வாசக நண்பர் களுடன் பகிர்ந்து கொண்டு, யான் பெற்ற இன்பத்தை எனது வாசக உலகமும் பெறட்டும் என்பதாக இதனைத் தருகிறேன்.

அடிவானம்
புதுயுகம்
மரத்தின் வேர்
பெண்ணின் உள்ளம்
வழிபாடு
என்ற அய்ந்து குறுந் தலைப்புகளில் சுவைமிக்க கருத்து உருவகங்கள்-

கற்க வேண்டிய பாடங்களே அவரவர் பயிற்சிக்கும், பக்குவத்திற்கும்  ஏற்பவே ரசனைகள் அமையக் கூடும்.

சமைத்து வைத்த சுவை உணவைப் பரிமாறுகிறவன் பரிமாறாமல் பசி வந்தவர்முன் பலபடப் பேசுவதும் காலத்தைத் தாழ்த்துவதும் கூடா ஒன்று அல்லவா?

அதனால் நேரே நந்தவனத்தின் நறு மலர்களின் மணத்தை அனுபவிக்கவும், மலர்க் காட்சியைக் கண்டு உள்ளங்  குளிரவும் அழைத்துச் செல்கிறேன்.

புதுயுகம் என்ற சிறு தலைப்பின் கீழ்

முன் காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக்காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அல்ல அது அல்ல என்ற அறிவு மட்டுமே அவர் களுக்கு உண்டாயிற்று.

உண்மையான தத்துவஞானம் இதுதான்! என்று மக்கள் வியந்தனர்.

இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக் கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று. ஆண்டவன் நீரிலும், தரையிலும், மரத்திலும், கல்லிலும் இருப்பதாக அவர்கள் அறிந்தார்கள். உண்மையான பக்தி இதுதான்! என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.

விஞ்ஞான யுகம் வந்தது. விஞ் ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது. கல்லிலிருந்து, குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தார்கள். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப் படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு, இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்றார்கள்.

நாஸ்திகன் நாஸ்திகன்! என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.

@@@@@@@@@@@@@

மற்றொரு மிக அருமையான உருவகம்!
மரத்தின் வேர் என்ற தலைப்பில் -
ஒரு மரத்தில் மலர்களின் மணம் எங்கும் பரவி இருந்தது.
வழிப்போக்கன் ஒவ்வொருவனும் அந்த மணத்தை நுகர்ந்து கொண்டு அங்கே கணப் பொழுதாவது நிற்காமல் போவதில்லை.

அந்த மரத்தில் கனிகள் காய்த்துக் குலுங்கின. அவற்றின் நறுமணத்தில் மயங்கி, நிறம் நிறமான பறவைகள் அந்த மரத்தைச் சுற்றிக் கூத்தாடின.

மலர்களும், கனிகளும் சொர்க்க இன்பத்தை எய்தின.

ஒருநாள் காலையில் தோட்டக் காரன் அந்த மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினான்.

மலர்கள் அவனைப் பார்த்து, தோட்டக்காரா! உனக்குப் புத்தியே இல்லை! அங்கே மண்ணில் எதற் காகத் தண்ணீர் விடுகிறாய்! பீச்சாங் குழலினாலே எங்கள்மீது நீர்த்துளி களை வீசு. முகத்தைப்போலே அவை ஒளிவீசும் என்றன.

பழங்களும் அப்படியே பிடிவாதம் பிடித்தன. கோணல் மாணலான, நிறமும் அழகும் இல்லாத, எப்பொ ழுதும் மண்ணிலே புரளுகிற அந்த வேர்களுக்கு எதற்காக நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும்? என்று அவை நினைத்தன.

தோட்டக்காரன் மலர்களுக்கும், கனிகளுக்கும், நீரைத் தெளித்தான்.

தண்ணீர் கிடைத்துங்கூட மலர்கள் வாடின; கனிகள் அழுகின.

அவை கடைசியில் தோட்டக்கார னுடைய காலில் விழுந்து, தோட்டக் காரத் தாத்தா, மண்ணில் இருக்கும் அந்த வேர்களுக்கே முதலில் நீர் பாய்ச்சுங்கள், அவை பிழைத்தால் தான் நாங்கள் உயிர் வாழ்வோம் என்று கெஞ்சின. - இதனைப் புரிந்து கொள்ளுங் கள்; ஓர் இயக்கம், குடும்பம்,நிறுவனம் எல்லாவற்றுக்குமே இந்த உண்மை புரிய வேண்டும் - புரிந்து நடக்க வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...

ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல - கருநாடகத்தில்
தண்டோரா போட மறுத்ததால் ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள்மீது வழக்கு

சிக்மகளூரு, ஜுன்11_  முன்னோர் செய்த தொழிலான தண்டோரா போட்டு  அடித்து தகவல் தெரிவிப் பதற்கு மறுத்ததால் தண்டத்தொகை விதிப்பு, தண்டத் தொகையைக் கட்ட மறுத்ததால் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஏழுபேர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் வட்டத்தில் வத்தாரஹள்ளி கிரா மத்தைச் சேர்ந்த குருபா வகுப்பினத் தவர் உள்ளிட்ட பிற வகுப்பினரால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் முன்னோர் செய்து வந்த பணியை (தண்டோரா போட்டு தகவல் தெரிவிப்பது) அவர்கள் தொடர்ந்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் பிற வகுப்பினரால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

சித்தய்யா என்பவர் கூறும்போது, கடந்த யுகாதி திருவிழாவின்போது, உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்ட கிராமத்தினர் அந்த திருவிழா குறித்து  கிராமத்தைச் சுற்றிவந்து தண்டோரா போட்டு தெரிவிக்குமாறு என்னுடைய சகோதரர் ரங்கய்யா விடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதனால் அவர்கள் எங்கள்மீது கோபமாக இருந்து வருகிறார்கள் என்றார்.

29.5.2015 அன்று இந்தப் பிரச்சினை தீவிரமானது. கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதியைச் சேர்ந்த நிஞ்சே கவுடா என்பவர் சித்தய்யாவிடம் இதுகுறித்து சச்சரவு செய்துள்ளார். அதில் பிரச் சினை பெரிதாகி நிஞ்சே கவுடா மறுநாளே (30.5.2015) பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளார்.  கிராமப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் சித்தய் மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யா ஆகிய இருவரும் தலா ரூ.2,001 தண்டத் தொகை கட்டவேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பாக கூறப்பட்டது. ஆனால், அவ்விருவரும் அதை ஏற்க மறுத்து தண்டத் தொகையைக் கட்ட மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தினர் எவரும் சித்தய்யா மற்றும் ரங்கய்யா, அவர்களின் சகோ தரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினர்களிடம் பேசுவது உள்பட எவ் விதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று முடிவாக அறிவித்தனர். மேலும், அவர்களுக்கு மளிகைக் கடைகள் மற்றும் பால் கடைகளிலி ருந்து  பொருள்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் முடிவானது.

இவ்வளவு காலங்களாக அவர் களின் முன்னோர்கள் செய்துவந்த பணிகளையே கட்டாயத்தின்பேரில் செய்துவந்த சித்தய்யா மற்றும் அவர் சகோதரர் ரங்கய்யாவும் செய்ய மறுத்து விட்டதுதான் காரணமாக கூறப் பட்டுள்ளது. சித்தய்யா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும்  பஞ்சாயத்து முடிவு குறித்து சிக்மகளூரு காவல்நிலையத் தில் புகார் தெரிவித்தார்.

காவல்துறையினர் சித்தய்யாவின் புகாரின்பேரில் அந்த ஊரைச் சேர்ந்த வர்களான நிஞ்சே கவுடா, சன்னே கவுடா, ஜயண்ணா, பசவராஜு, தர்மாச்சாரி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணே கவுடா ஆகிய ஏழுபேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ரயில் பயணம் தத்கல் முறையில் மாற்றங்கள்

புதுடில்லி, ஜூன் 11_  ரயிலில் பயணம் செய்ய, கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் பெறும், 'தத்கல்' முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை, 10 மணிக்கு மேல், பயணச்சீட்டு இருக்கும் வரை, எவ்வளவு நேரமும் பெற முடியும் என்ற நிலை, தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

*தினமும், காலை, 10 _ 11 மணி வரை, 'ஏசி' வசதி டிக்கெட்டுகளும், 11_ 12 மணி வரை, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளும், தத்கல் முறையில் பெறமுடியும்.

*உறுதி செய்யப்பட்ட தத்கல் பயணச்சீட்டு பெற்ற பிறகு, அதை ரத்து செய் தால், இதுவரை பணம் திருப்பிக் கொடுப்பதில்லை. அதில் மாற்றம் செய்யப் பட்டு, இனிமேல், 50 சதவீத கட்டண பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

* தத்கல் கட்டணத்தில் பயணச்சீட்டு பெற்றவர்கள் பயணிக்கும் தனி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை, தத்கல் சிறப்பு ரயில் கள் என அழைக்கப்படும்.

* அதிக தேவை உள்ள வழித்தடங்களில், தத்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படும்.

*புதிதாக அறிமுகப் படுத்தப்பட உள்ள தத்கல் சிறப்பு ரயில்களுக்கு, குறைந்தபட்சம், 10 நாட் களுக்கு முன்னதாகவும், அதிகபட்சம், 60 நாட் களுக்கு முன்னதாகவும், பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இப்போது, தத்கல் பயணச்சீட்டு, பயண நாளுக்கு ஒருநாள் முன்ன தாக வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், அதிக தேவை உள்ள வழித்தடங்களில், பிரீமியம் ரயில்கள் என்ற பெயரில், ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன. அந்த ரயில் களில் பயணிக்க, தேவையை பொறுத்து, பயணச்சீட்டு கட்டணம் மாறுபடும். குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படும்; அதற்கு மேல், தேவைக்கு ஏற்ப, பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆனால், புதிதாக அறி முகப்படுத்தப்பட உள்ள தத்கல் ரயிலில், தத்கல் கட்டணத்தில் தான் அனைத்து பயணச்சீட்டு களும் விற்கப் படும். 175 முதல், 400 ரூபாய் வரை உயர்வு இருக்கும்.
பிரீமியம் ரயில்களுக் கான பயணச்சீட்டை, அய்.ஆர்.சி.டி.சி., இணைய தளம் மூலமே பெற முடியும். தத்கல் சிறப்பு ரயில் பயணச் சீட்டை, ரயில் நிலையங் களிலும், இணையதளம் மூலமும் பெறலாம்.

இந்த மாற்றங்கள் இரண்டொரு நாட்களில் அமலாகும் என, ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

மனிதருள் மாணிக்கம்!



எம்.வி.வள்ளியப்பன்
வீகேயென் நிறுவனத்தின் வி திரு.எம்.வி. வள்ளியப்பன் அவர்கள் வீகேயென் உடன் தனக்குள்ள நட்பைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார்.

வீகேயென் எனக்கு 1965 முதல் பழக்கம் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக என்ஜினி யரிங் படித்தோம். வகுப்பில் மட்டுமில்லை விடுதியிலும் நான் அவருக்கு ரூம்மெட். நியூ ப்ளாக்கில் அறை எண் 51 அந்த நெருக்கத்தை வாழ்வில் மறக்கவே முடியாது. வீகேயென் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை.

யாருடனும் அந்த மாதிரி பழகுவதில்லை. படிப்பிலும் கூட அப்படித்தான். படிப்பில் சாதனையாளராக வரவேண்டும் என்று அவர் நினைத்ததில்லை. அப்போதே அவருடைய நினைவும், கனவும் தொழில் பற்றியதாகத்தான் இருக்கும். எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பார். இளம் பருவத்திலேயே சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக, வெறியாகக் கொண்டு நடந்தவர்.

படித்து முடித்த பின்பு  தொழில் தொடங்க வேண்டி வீகேயென் இடம் ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்றிருந்தார். அந்த நேரம் முதலீட்டுக்காகப் பணம் தேவைப்பட்ட  போது அவர் என்னை அணுகிய போது தொழில் பார்ட்னராக வா என்று தான் அழைத்தார். அவரது ஆர்வம், நேர்மை, திறமை பற்றி எனக்குத் தெரியும். எங்கள் வீட்டினருக்குத் தெரியாது.

தவிர ஏற்கெனவே குடும்பத்தினர் பார்த்து வந்த தொழி லைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட போது புதுத் தொழி லுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்று எனக்கு தெரி யும். ஆனால் எனக்கு வீகேயென் மீது நல்ல நம்பிக்கை இருந்தது. கூட இருந்தே கவனித்து வந்திருக்கிறேனே! இவர் நன்றாக வருவார் அதற்குப் பணம் கொடுத்து உதவலாம் என்று குடும்பத்தில் என் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

வீகேயென் நிறுவனம் நன்கு வளர்ந்த பிறகு கூட அவ்வப்போது என்னிடம் பார்டனராக வா! என்று அழைப்பார். ஒரு நிறுவனம் தொடங்கும் போது எவ்வளவோ கஷ்ட நட்டங்கள் சோதனைகள் வரும். அவற்றை எல்லாம் கடந்து இவர் இன்று வெற்றிகரமாய் நடத்தும் போது பார்ட்னராக சேருவது நல்ல நட்புக்கு அழகல்ல என்று மறுத்துவிட்டேன். ஏதோ முதலீடு கொடுத்தேன் என்பதற்காக நன்றிகாட்டும் விதம் என் முதலெழுத்து வி யைத் தன் நிறுவனத்தின் முதல் எழுத்தாக வைத்திருப்பதை எண்ணும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. சமயத்தில் கூச்சமாகவும் இருக்கிறது.  மேலும் எந்தப் பிரபலம் வந்தாலும் அவர்களிடம் என்னை வீகேயென்னின் வி இவர்தான் என அறிமுகப் படுத்தி மகிழ்வார்.

வீகேயென் உயரிய பண்பு மிக்கவர். தன்மானத்துடன் செயல்படுபவர். தொழிலாளர் நலம் பேணுபவர். மிகுந்த திறமையும், ஆற்றலும் கொண்டவர். நேர்மை யாய் நடப்பவர். துணிவுமிக்கவர். தவறான பாதைக்கு இவரும் போகமாட்டார். மற்றவரையும் அனுமதிக்க மாட்டார். தவறைச் சுட்டிக்காட்ட தயங்கவும் மாட்டார்.  ஒருவரின் தவறை அவரின் முகத்துக்கு நேராய் தெரிவிக்கும் வல்லமை பெற்றவர். இவருக்கு கம்ப்யூட்டர் அறிவு, யானை அளவுக்கு ஞாப சக்தி உண்டு. கணக்கில் இவரிடம் ஏமாற்ற முடியாது. குழப்பமோ, குதர்க்கமோ இவரிடம் கூடாது.

நேராக வா, நேராக போ!
இவருடைய வெற்றிக்குப் பின்னால் இப்படி எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இவரது வெற்றி சும்மா அதிர்ஷ்டத்திலோ, பிறரை வஞ்சித்தோ வந்ததல்ல. எல்லாமே சீரிய உழைப்பு. மனிதநேய மாமணி

தமிழ் ஓவியா said...

வீகேயென் பாண்டியன்
வீகேயென் இது வெறும் ஆங்கில எழுத்துகளல்ல, என்னைப் பொருத்தவரை இவைதான் எனக்கு உயிரெழுத்துகள். அரை நூற்றாண்டுக் காலத்தை தாண்டிய எனது வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மூன்றெழுத்திற்குள்தான் அடங்கியிருக்கிறது.

படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த  என்னை 1974 ஆம் ஆண்டு இனி இவர்தான் உனக்கு எல்லாம் என்று என்னை எனது தந்தை ஆறுமுகம் பிள்ளை வீகேயெனிடம் ஒப்படைத்தார். அப்போது வீகேயென் அவர்கள் துவாக்குடியில் விகேயென் நிறுவனத்தைப் புதிதாக தொடங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இருந்த தொழிலதிபர்.

அவரது ஊழியனாக அவரோடு என்னை இணைத்துக் கொண்டதுதான் என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பாக்கியம்.  மூன்று தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 500 பேர் பணி புரிகின்றார்கள். அதே இந்நிறுவனத்தின் கிளை ராணிப் பேட்டையிலும் தொடங்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தொழிலதிபர் திரு.வீகேயென் அவர்களின்  உழைப்பு என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாது. தொழிற் சாலை அவருக்கு இன்னொரு தாய் வீடு அதன் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு இரும்புத் துண்டும் அவரது பெயரைச் சொல்லும். தொழிற்சாலை வளாகத்திலேயே தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு தருபவர் எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டிலேயே திரு. வீகேயென் அவர்கள் ஒருவர்தான்.

அது மட்டுமல்ல. உணவு நேரத்தில் தொழிற்சாலையில் இருந்தால் அவர்களுடன் அமர்ந்து அதே உணவைத் தானும் சாப்பிடுவார். தனது தொழிலாளர்கள் தொழில் கற்றுக் கொண்டு தனியாகத் தொழில் செய்ய விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்தத் தொழிலாளியின் தனி வாழ்க்கையைத் தொடங்கி வைப்பார்.

இதுவரை 120 தொழிலாளர்களுக்குத் தலா 1 இலட்சம் கொடுத்துப் புதுவாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கிறார்.  மேலும் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதியும் இலவசமாக செய்து கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தோடும், அதன் தலைவர் கி.வீரமணி அவர்களோடும் நெருங்கிய நட்பும், அன்பும் கொண்டு உள்ளார். பெரியார் இல்லமும், திராவிடர் கழக கல்வி நிறு வனங்களும் அவருக்கு கண் போன்றவை.

அந்த நிறுவனங் களுக்கு தன் பொருளையும் உழைப்பையும் வாரி வழங்கி யிருக்கிறார். பெரியார் மணியம்மை மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு, தாளாளராக இருந்து பணியாற்றி வருகிறார். மேலும் தஞ்சை  வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  இணைவேந்தர் பதவி அவரை தேடி வந்தபோது அதனை மறுத்தார்.

ஆனாலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வற்புறுத்தி அந்த உயரிய கவுரவுத்தை அவருக்கு வழங்கினார். இப்போதும் அந்த பணியிணை சிறப்பாக செய்து வருகிறார். நான் அறிந்த வகையில் நன்றிக்கு இலக்கணமாக மாமனிதன் திரு.வீகேயென் அவர்கள் அளவுக்கு யாரும் இல்லை என்று சொல்வேன்.

தமிழ் ஓவியா said...

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு


கிருஷ்ணகிரி,  ஜூன் 11_ கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண் கள் பெற்று தோல்விய டைந்ததாக அறிவிக்கப் பட்ட மாணவிக்கு விடைத் தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப் பிரமணி. தொழிலாளி. இவரது மகள் கவிதா மணி. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடப் பிரிவில் பயின்று வந்த அவர், பொதுத் தேர்வை எழுதினார். கடந்த மாதம் அறிவிக் கப்பட்ட தேர்வு முடிவில் அவர் மொத்தம் 584 மதிப் பெண்கள் பெற்றதாகவும், பொருளாதாரப் பாடத் தில் 200-_க்கும் 24 மதிப் பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கவிதா மணி தனது விடைத்தாள் நகலை உரிய முறையில் பெற்றுப் பார்த்த போது, விடைத்தாள் நகலின் முன்பகுதியில் கவிதாமணி யின் பெயர், பதிவு எண் இருந்தது. ஆனால், அவர் எழுதிய விடைத்தாளுக் குப் பதிலாக மற்றொரு வரின் விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து, கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவ லகத்தை அவர் தொடர்பு கொண்டபோது, விடைத் தாள் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திருத்தப் பட்ட தும், அப்போது தவறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

மேலும், 10 நாள் களில் உரிய விடைத்தாள் நகல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அலுவலர்கள் உறுதியளித் ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை யாம். இதனால், பாதிக்கப் பட்ட மாணவி எந்தக் கல்லூரியிலும் விண்ணப் பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், பொருளாதாரப் பாடத்தில் கவிதாமணி 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக கல் வித் துறையினர் அறிவித் ததாக அவரது தந்தை சுப்பிரமணி தெரிவித்தார்.

மேலும், மாணவி கவி தாமணி பொருளாதாரப் பாடத்தில் 123 மதிப் பெண்கள் பெற்றுள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லக வட்டாரங்கள் உறு திப்படுத்தின.

தமிழ் ஓவியா said...

மனமகிழ வாழ்த்துகிறேன்...


க.நா.நேரு
தி.மு.க. மாவட்ட செயலாளர், திருச்சி தெற்கு மாவட்டம்

மிசா காலம் தொட்டு...
இன்று வரை தி.மு.க.விற்கு பொருளாதார ரீதியாக மிக பெரிய பேருதவியாக
இருந்து வருபவர் அண்ணன் வீகேயென் அவர்கள்
தி.மு.கவிற்கும், தி.கவிற்கும் மனவருத்தம் இருந்த காலத்தில் கூட கலைஞர், ஆசிரியர் ஆகிய
இரு தலைவர்களையும் விட்டு
கொடுக்காமல் பேசி வந்தவர், அந்த மனவருத்தங்கள் போக்கிட விரும்பியவர் அண்ணன் வீகேயென் அவர்கள்.
தகுதியானவர்
இல்லத் திருமணத்திற்கு தகுதியானவர்களாக வாழ்த்த வருகை தரும் திருமிகு தளபதியார், மானமிகு ஆசிரியர் மற்றும் முன்னோடி பெருமக்களும் நன்றி.
வாழ்த்துகிறேன்...

தமிழ் ஓவியா said...

வாழிய வீகேயென் அய்யா
இல்ல மணவிழா






மனித நேயமிக்க மாமனிதராய்
உழைப்பாலும், நேர்மையாலும்
உயர்ந்து நிற்பவர் வீகேயென் அவர்கள்.

உண்மையிலும், உன்னத்திலும் சிகரமாய் விளங்கக் கூடிய
எளிமையானவர், வித்தியாசமானவர்.
எதையும் வலிமையோடு, எதிர் கொள்பவர்.
எடுத்த முடிவில் சமரசம் ஆகாதவர்.
கடந்து வந்த பாதையை மறக்காதவர்
உதவியவர்களுக்கு உயிராய் இருப்பவர்
கழகத் தலைவர் ஆசிரியர் மீது
என்றும் அன்புடையவர்.
தொண்டுள்ளம் கொண்டவர்
கழக நிகழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அள்ளிக் கொடுப்பவர்.
கொடை வள்ளல் வீகேயென்.
உழைப்பை மட்டும் நம்புபவர்
உன்னத நேர்மையாளர். தந்தை பெரியாரின் கொள்கையை என்றும் மனதில் கொள்பவர்.
கழகத்திற்கு தோன்றா துணையாய் இருப்பவர்.
வீகேயென் மணவிழா சிறக்க வாழ்த்துகள்!

மு.சேகர்
திருச்சி மாவட்ட தலைவர்
திராவிடர் கழகம்