Search This Blog

17.6.15

இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பேச முடியுமா?-பெரியார்

பார்ப்பான் காலைக் கழுவும் மூட நிலையினின்று மீளுங்கள்!


நான் அதிகம் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன். 

நாம் சூத்திர ஜாதியாக மட்டும் இருக்கக் கூடாது; அப்பட்டமான சூத்திரனாகவே இருக்க வேண்டும். சூத்திரனாக மட்டும் கூடாது, மடையனாகவே இருக்க வேண்டும்; என்பதுதான் பார்ப்பனர் கருத்து. 

நாம் எத்தனை டிக்ரி (அளவு) முட்டாளாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல. ஒரு டிக்ரிகூட குறையாமல் இருக்கின்றானா என்பதுதான் பார்ப்பான் கவலை; பார்ப்பான் சடங்கிலே நெருப்பிலே நெய் ஊற்றுவதற்குத் தனியாக சுத்தமான நெய்யாகவே வைத்திருப்போமே! நெய்யைப் பார்ப்பான் கொஞ்சம் குறைத்து நெருப்பிலே விட்டாலும் நமக்குப் பொறுக்காது. "சாமி நெய்யைத் தாராளமாக விடுங்கள், இன்னும் நெய் வைத்திருக்கோம்" என்பான். "சரி இவன் சரியான முட்டாள்தான். இன்னும் மாறவில்லை" என்று தெரிந்து கொள்வான். 

ஆனால் பந்திக்குப் பரிமாற கலப்பு நெய்யாகத்தான் இருக்கும். இதைக்கொண்டு "முட்டாள் டிக்ரி" இவ்வளவென்று தெரியும் அவனுக்கு. 

சடங்கு முறையில் ஜாதித் திட்டப்படி செய்வார்கள்; ஏன் என்றால் ஜாதியைக் காப்பாற்ற யென்பான். 

உதாரணமாக சொல்கிறேன் இரண்டு அணாவை எட்டணாவால் மூட முடியும். எட்டு அணாவை இரண்டு அணாவால் மூட முடியுமா?  

நம் புலவர்கள் சங்கதியென்ன வென்றால் நமக்குயென்று என்ன, எங்கே இருக்கிறதுயென்று தேடுகிறார்கள். அங்கே போனால் அது அவன் (பார்ப்பான்) சடங்காக இருக்கிறது.

கட்டை வண்டியிலிருந்து பஸ் வந்தது. இப்போது ஏரோபிளேன் வந்தது. நான் பிளேனில் ஏறு என்றால், "இரு இரு எங்க அம்மா பாட்டி எதிலே ஏறினார்கள் என்பதைத் தெரிந்துதான் ஏறுவேன்" என்றால் வண்டி போய்விடுமா இல்லையா?

முன்னோர்கள் முறையென்று போனால் முட்டாள்தனம் தான். எங்கள் பாட்டி காலத்திலே சக்கி முக்கி கல் இருந்தது. அதிலே தான் அடித்து நெருப்புப் பற்ற வைத்து சுங்கான் (புகைக் குடிக்கும் குழாய்) குடிக்கிறது. உங்களுக்கு அது தெரியாது. எனக்கு 10-வயதிலே நான் பார்த்திருக்கிறேன். அப்புறம் தீப்பெட்டி வந்தது. இப்போ எலெக்டிரிக் (மின்சார) விளக்கு எரிகிறது.

நீ என்ன என்றால், "இலக்கியம் இலக்கியம்" என்கிறாயே! எதுக்கு ஆகுது? அதுவெறும் சுடுகாடு; ஒரு மைலுக்கு முன்னால் என்ன உண்டு; நாளைக்கு யென்ன? எதிர்காலம் யென்ன? என்பதைப் பற்றிப் பேசுவாயா? இல்லை என் முதுகுப் பக்கமா அப்பறம் குடையடித்து விழவேண்டியதுதான், பின்னோக்கி நேற்று நூறுவருடத்துக்கு முந்தி என்று ஏன் போகிறாய்? 

நாம் ரொம்ப ரொம்ப பழமையிலேயே இருக்கிறோம். நாம் படித்தவர்களாக இருக்கிறோம். நமக்குச் சாதி உணர்ச்சி மாறுகிறதா? நமக்கு மாறினாலும் நம் பெண்களுக்குப், பாட்டிமார்களுக்கு மாறுகிறதா? 

என் பொது வாழ்வு துவங்கும் போதே 'குடி அரசு' மூலம் புலவர்களைத் தான் தாக்கு தாக்கு என்று தாக்குவேன்; ஆனால் நான் மிகவும் உங்கள் மாதிரி படித்தவன் இல்லை. வல்லினம், மெல்லினம் கூட பார்க்கப்பட்டேன்; முதல் வரியிலே இரண்டு சுழி "ன" போட்டால் அடுத்த வரியிலே மூன்று சுழி "ண" தான் போடுவேன்? அதுலே என்ன இருக்கு? கருத்துதானே முக்கியம். நான் ஒன்றும் மறைக்கவில்லை. அப்படி இருந்தும் இந்தப் புலவர்களைத்தான் தாக்குவேன். 

திரு.வி.க.வையே தாக்கினேன்; கடைசியிலே அவர்தான் சரணாகதியடித்தார்; பார்ப்பானோடே தொல்லை வேறே! அப்படி இருந்தும் நான் ஒன்றும் பின்வாங்காது எனது கருத்தை எடுத்து சொல்லிக் கொண்டு தான் வந்தேன்; என் கூட 4-பேர்தான் இருந்தார்கள். இப்போது புலவர்கள் எல்லாரும் நம் ஆள்களாக ஆகிவிட்டார்கள். 

நான் மதக்காரனையும் விட்டு வைக்கவில்லை. முதலிலே வைஷ்ணவன்; அப்பறம் சைவன்; 3-வது கிறிஸ்தவன்; 4-வது மகம்மதியன். இப்படி அவர்களிடம் இருந்த பிற்போக்கைக் கூட விடுவதில்லை. நானே வைஷ்ணவன். அதனாலே என் மதத்தையே நானே தாக்கினேன். பிறகு சைவனைப் பிடித்தேன். இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பிடித்தேன். இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பேச முடியுமா என்றான். கிறிஸ்தவனைப் பிடித்தேன். ஏன் அய்யா முகம்மதியனை மட்டும் விட்டு வைத்திருக்கிறாய் யென்றான். இது முடியட்டும்; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். பிறகு அதையும் தாக்கினேன். இதனாலே அவர்களும் பலனடைந்தார்கள். அதோட (இரகசியமாக) அரசாங்கத்தையும் சரி பண்ணிக்கொள்வேன். 

நாம் பார்ப்பான், கடவுள், மதம், அரசாங்கம் இத்தனையும் தான் திட்டுகிறோம் இத்தனையையும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் சக்கரமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. 

நாம் ஏன் இப்படி மாற்ற வேண்டும் யென்று வந்தோமென்றால் அரசாங்கமும் நமது போக்குக்கு வந்துவிட்டது. முக்கியமாக பெண்களுக்கு உரிமை வந்துவிட்டது. ஆணுக்குக் கலியாணம் என்றால் பெண் அடிமை ஆவது; பெண்ணுக்குக் கலியாணம் என்றால் அடிமை புகுவது; இப்படித்தான் இப்போதும்.

நமது கையையே எடுத்துக் கொள்வோம். வலது கை பலம் இடது கைக்கு இல்லை. ஏன்? வலது கையை அதிகமாக உபயோகப்படுத்தி விட்டோம். இடது கைக்கு வேலை கொடுப்பதில்லை. ஏதாவது இடது கைக்கு வேலை இருந்தால் பெண்கள் குழந்தை மலத்தையெடுத்து யெறிவதுதான். இப்படியேவிட்டால் இந்தக் கைக்குப் பலமே இருக்காது. இதேபோல் தான் பெண்கள் நிலையும் இடது கையாக ஆகிவிட்டது. அதிக நாளாக பொட்டை, பொட்டை, பொட்டையென்றே தள்ளிக் கொண்டே வந்து விட்டோம். 

பார்ப்பான் முறைப்படி செய்தால் எத்தனை கலியாணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், கலியாணத்துக்கு முன்பு தேவடியாளை வைத்திருப்பான்; கலியாணமும் நடக்கும். அவளும் வந்திருப்பாள். ஏனென்றால் சொத்து நிறைய இருக்கிறது. பிள்ளை கொடுக்க அவனுக்குச் சக்தி இருக்கிறது. உனக்கு என்னடி? யென்று பெண்களே சொல்வார்கள். சிலப்பதிகாரக் கதையிலும் அப்படித்தானே, இருக்கிறது? 

'பெண்களுக்குச் சொத்து உரிமை வேண்டும்' என்று செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தோம். இதைப் பெண்களே மாநாடு போட்டு எதிர்த்தார்கள் அப்போது. இப்போது பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என சட்டமே வந்துவிட்டதே! நாம் சொன்னது முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது இன்னும் என்ன கேட்பதுயென்றே யோசிக்கிறோம். 

இப்போ சமீபத்திலே நடந்ததே அண்டை இராஜ்யத்தில், "என்னடா நாராயணா உன் பெண்டாட்டி ரொம்ப அழகுண்ணு கேள்விப்பட்டேன், அப்படியா?" என்று நம்பூதிரி பார்ப்பான் கேட்பான். நாராயணன் "சந்தோஷமா ஆமாம், இங்கே அழைத்து வருகிறதா அல்லது அங்கேயே வருகிறீர்களா?" என்பானே. அப்படி இருந்தது பார்ப்பான் உயர்வு நிலைமை. 

சங்கராச்சாரி பாதத்தைத் தங்கத் தாம்பளத்திலே நிற்க வைத்து அவன் காலிலே தண்ணீரை ஊற்றி (பாத பூசை செய்வது) அதைக் கழுவிப் பெரிய B.A,M.A. M.O.L., B.O.L., Ph.D. M.L.A., M.P. கவர்னர், வெங்காயம் அவன், இவன் எல்லாம் குடிக்கிறானே! அதுவும் சும்மா குடிப்பதில்லை. ஒரு பவுன், 1/2 பவுன் இதுமாதிரி பவுனாக வைத்துத் தானே குடிக்கிறான்?  

சாமி தீப்பிடித்து வெந்து போனால் தங்கத்தாலே புதுசாமி செய்துவிடுகிறான்; கோபுரத்திலே இடி விழுந்தால் உடனே புதுசு. இப்படி அல்லவா செய்து கொண்டே போகிறான்! இவற்றையெல்லாம் நாம் கண்ணாலேயே பார்க்கிறோம். அப்பறம் நான் என்ன செய்வது? 

இவ்வளவு பலமாகப் பார்ப்பான் காலை ஊன்றிக் கொண்டான். இதிலிருந்து நாம் மீள சகல துறைகளிலும் பார்ப்பானை வெறுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

---------------------------------------- 14.07.1959-அன்று செந்துறை நந்தியன் குடிக்காட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு.”விடுதலை”, 18.07.1959

86 comments:

தமிழ் ஓவியா said...

தினமணி: லலித் மோடிக்கு வக்காலத்தா?

புதன், 17 ஜூன் 2015 15:16

லலித் மோடி விவகாரத்தில் வழக்கம்போல பி.ஜே. பி.,க்கு வரிந்து கட்டிக்கொண்டு தலையங்கம் எழுதியுள்ளது தினமணி. அதில் ஓரிடம் கவனிக்கத்தக்கது.

பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் (அய்.பி.எல். கிரிக்கெட்டில்) குறைபாடுகள் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று தலையங்கப் பகுதியில் எழுதியுள்ளது தினமணி.
எப்படி இருக்கிறது நியாயம்?

பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் முறைகேடுகள் நடக்கத்தான் செய்யும். இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று எழுதுகிறது தினமணி.

இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நேரத்தில் நமக்குப் பயன்படும்.

தமிழ் ஓவியா said...

காவிரி நீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை

பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது!

அனைத்துக் கட்சியினரையும், எம்.பி.,க்களையும் இணைத்து முதல்வர் தலைமையில் தூதுக்குழு பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும்


தமிழக அரசுக்கு தமிழர் தலைவரின் வேண்டுகோள் அறிக்கை



காவிரி நதிநீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ் வாதாரப் பிரச்சினை; இதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி களைச் சமாளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத் துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை தமது தலைமையில் அமைத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

1. காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கைவைத்து, அதனை தமிழ்நாட்டின் வறண்ட பூமியாகவும், தப்பித்தவறி விடப்படும் (கருநாடகத்தால்) நீர் கழிவுப் பொருள்கள் கலந்த நீராகவும் வருகிறது என்ற  வேதனை - விவசாயப் பெருங்குடிகளை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.

பசுமை

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர் களில் துத்த நாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப் பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

வெந்த புண்ணில் வேல்!

இவைகளோடு, வெந்த புண்ணில் வேலைச் சொருகும் வகையில், கருநாடக அரசு காவிரியின் குறுக்கே நான்கு சிறிய அணைகளைக் கட்டிட மிகவும் மும்முர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இரண்டு பெரிய அணைகளைக் கட்டினால் மத்திய அரசின் அனுமதி பெற்றாகவேண்டும் என்ற சட்ட விதிகளைப் புறந்தள்ளிடவே இப்படி ஒரு தந்திர வியூகம்!

மற்றொரு தந்திரம் தங்களுக்குக் குடிநீர் தேவை என்ற ஒரு பொய்ச் சாக்கைப் பயன்படுத்தி இப்படி ஒரு முயற்சி.

முல்லைப் பெரியாறிலும் பிரச்சினை!

2. இதுபோலவே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் உயரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட லாம்; மேலும் கூடுதலாகத் தண்ணீரைத் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினையே புறந்தள்ளி, குறுக்கு வழியில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடுக்க, புதிதாக ஒரு அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் அனு மதிகூட பெறாமல், தன்னிச்சையாக, துணிவாக அணைகள் கட்ட சர்வே முதலியவற்றை முடுக்கிவிட்டுள்ளது.

இதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும், காணாததுபோல இருப்பதும் ஏனோ?

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் ஆணையம் - மேற்பார்வை பொறுப்பு - வழக்கு - பிரச்சினை ஏற்படினும், தீர்வு தரும் நிலையை உடனடியாகத் தரக்கூடிய பொது அமைப்பாக இன்னும் மத்திய அரசால் அமைக்கப்பட வில்லை!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு  முன்பே வந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு - தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டிற்கு மோடி அவர்கள் வந்தபோது கூறிய தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? காற்றில் பறந்து போயிற்றா?

கருநாடகத்தையும், கேரளாவையுமாவது தங்கள் பா.ஜ.க. கட்சி வசப்படுத்த வேண்டுமென்பதற்காக மத்திய அரசு கண்ணை மூடி ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளுகிறதா என்ற அய்யம் பரவலாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்கு வழமைபோல இவ்வாண்டும் மேட்டூர் தண்ணீர் ஜூன் 12 இல் திறக்கப்படவில்லை; மாறாக, குறுவை தொகுப்பு உதவி என்ற பஞ்சு மிட்டாயை அழும் குழந்தைக்குக் காட்டுவதுபோன்று தமிழக அரசு காட்டி விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை தூங்கச் செய்கிறது!

கடிதம் எழுதினால் போதாது - பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி தூதுக்குழு தேவை!

இதற்காக பிரதமருக்கு முதலமைச்சர் வெறும் கடிதம் எழுதினால் போதாது.

அதன்மேல் நடவடிக்கையாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருநாடகா, கேரள அரசுகளின் அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு, மேலும் காலம் தாமதிக் காமல், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட உடனடியாக முன்வரவேண்டியது அவசியம்.

இதற்காக முதல்வர் தலைமையில், அனைத்துக் கட்சியினரை அழைத்து, எம்.பி.,க்களோடு இணைத்து, தூதுக்குழுவாக பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய தமிழக அரசு, முதலமைச்சர் முன்வரவேண்டும்.

கட்சிக் கண்ணோட்டம் வேண்டாம்!

இதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கு இடமின்றி, அனைத் துக் கட்சிகளும் முதல்வரின் முயற்சிக்கு - அரசியலைத் தாண்டி - ஒத்துழைப்பு நல்குவர் என்பது உறுதி.

எனவே, மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக இக்கருத்தினை ஏற்று செயல்படவேண்டியது அவசரம்! அவசியம்!!


கி.வீரமணி   
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
17.6.2015

தமிழ் ஓவியா said...

இன்றைய  ஆன்மிகம்?

உதைபட்டது சிவனா? ஆறுமுகசாமியா?

மாணிக்கவாசகர் தனது இறுதிக் காலத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவரைப் பார்க்க அந்தணர் உருவில் வந்தார் சிவபெருமான். மாணிக்க வாசகரிடம், இதுவரை அவர் பாடிய பாடல்களை தனக்கு சொல்லி அருளும்படி வேண்டினார். மாணிக்கவாசகரும் அந்தணரை அருகில் இருத்தி, தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந் தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்தார்.

பின்னர் திருக்கோவை என்ற நூல் பாடலையும் பாடச் சொல்லிக் கேட்டு, அதனையும் தன் திருக்கரத் தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதைக் கண்ட மாணிக்க வாசகர், வந்தது சிவபெருமானே என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்க இறைவனைத் துதித்தார்.

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவை யையும் தம் கையால் எழுதிய இறைவன், அந்த நூல்களை உலகறியச் செய்வதற்காக, நூலின் முடிவில், திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என கையொப்பம் இட்டு தில்லைச் சிற்றம்பலத்தில் வாசல் படியில் வைத்தருளினார்.

இப்படி சிவனே கைப்பட எழுதிய திருவாசகத்தை சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் நடராஜன் (சிவன்) கோவில் சிற்றம்பல மேடையில் பாடியபோது, தீட்சதர் கள் அடித்து உதைத்தனரே - அப்படி என்றால், உதை பட்டது சிவனா? ஆறுமுகசாமியா?

தமிழ் ஓவியா said...

இதுதான் பா.ஜ.க. ஆட்சி!

தாழ்த்தப்பட்ட சிறுமியின் நிழல் பட்டதால் தாக்கப்பட்ட பெருங்கொடுமை




சத்தார்பூர், ஜூன் 17_ பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணேஷ்புரா கிராமத்தில்  தாழ்த்தப்பட்ட சிறுமி யின் நிழல் பட்டுவிட்டது என உயர் ஜாதி ஆணவத் தால் அச்சிறுமியை மோச மாகத் தாக்கிய கொடுமை நடந்துள்ளது.

13.6.2015 அன்று கணேஷ்புரா கிராமத்தில் ஒரு சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக ஆழ் துளைக்கிணறு அமைக் கப்பட்ட இடத்துக்கு சென்றாள். அப்போது உயர்ஜாதியைச் சேர்ந்த ஒருவர்மீது தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த  அச்சிறுமியின் நிழல்  விழுந்ததாம். அதனால், அச்சிறுமியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அப்பெண்ணின் தந்தை தகவல் அறிந்து தன் மகளுடன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க செல்ல முயன்ற போது, மற்றவர்களால் தடுக்கப்பட்டார். இருந்த போதிலும், வேறு வழியில் காவல்நிலையத்துக்கு சென்று தன் மகள் தாக் கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். புகா ரின்பேரில் காடி மல் ஹேரா காவல்நிலையத் தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை கூடுதல் கண் காணிப்பாளர் நீரஜ் பாண்டே கூறும்போது, சிறுமியின் தந்தை அளித்த புகாரில் குறிப் பிடும்போது, அவர் மகள் கிராமத்தில் உள்ள பொதுக்குழாயில் தண் ணீர் எடுப்பதற்காக சென்றபோது (உயர் ஜாதியைச் சேர்ந்த) புரான் யாதவ் என்பவர்மீது அவர் மகளின் நிழல்பட் டது என்று அச்சிறுமியை அவர் தாக்கியுளளார்.   அதைத் தொடர்ந்து உயர்ஜாதியினர் என்று கூறிக்கொள்ளும் அவர் குடும்பத்து பெண்ணும் சிறுமியை சரமாரியாகத் தாக்கியதோடு, இனிமேல் அந்த பொதுக்குழாய் பக்கம் வரக்கூடாது என் றும் எச்சரித்து உள்ளனர். அப்படி மீண்டும் அந்தப் பொதுக்குழாய் பக்கம் அச்சிறுமியைப் பார்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கக்கூடாது என் றும் தடுத்துள்ளனர். ஆனால், வேறு வழியாக காவல்நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்து விட்டார்கள் என்று கூறினார்.

அந்தப் புகாரின் பேரில் இந்திய தண்ட னைச் சட்டப்பிரிவுகள் 323, 341, 506 ஆகிய பிரி வுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது.

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் தீண்டாமை இன்னமும் சர்வ சாதாரணமாக இருந்துவருகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப் பினத்தவர்கள் உயர்ஜாதி யினராக இருப்பவர்களை சந்திப்பதோ, அவர்கள் சமைத்த உணவை   பகிர்ந்து கொள்ளுவதோ முடியா தது மட்டுமன்றி, அவர்கள் பார்வையில்கூட படக் கூடாது என்கிற நிலை இருந்துவருகிறது. தாழ்த் தப்பட்டவர்களின் நிழல்கூட உயர்ஜாதியினர் மீதுபட்டுவிட்டால் தீட் டாகிவிடுகிறது என்று கூறுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

யோகா வேண்டாம்! பி.ஜே.பி. முதலமைச்சர்!

புதன், 17 ஜூன் 2015
 

பனாஜி, ஜூன் 17- வருகிற 21 ஆம் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அன்றைய தினம் யோகா பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சிறுபான்மையினர் எதிர்ப்பு காரணமாக சூரிய நமஸ்காரம் ரத்து செய்யப்பட்டு யோகா மட்டும் நடத்தப் படுகிறது. கோவாவில் 21 ஆம் தேதி பாம்புலிம் ஸ்டேடி யத்தில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் யோகா சனம் நிகழ்ச்சியில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளு மாறு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இதற்கு சிறுபான்மையினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. யோகா பயிற்சி கட்டாயம் என்று கூறப்படாவிலும் அன்றைய தினம் நடத்துவது தங்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் என்று சிறுபான்மையினர் கேட்டுக் கொண்டதால் உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் லட்சுமி காந்த் பர்சேகர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

ஆச்சாரம் கெடாதோ...!

செய்தி: தமிழ்நாட்டில் 37 இந்துக் கோவில்களில் தங்கத் தேர் வடிவமைத்துக் கொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த ரகுமான் என்ற முஸ்லிம்

சிந்தனை: இங்கு மட்டும் ஆச்சாரம் கெடாதோ? தண்ணீருக்குத் தீட்டு; பாலுக்குத் தீட்டு இல்லை என்று சொல்லும் கும்பல்தானே!

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை


மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.
_ (குடிஅரசு, 3.4.1927)

தமிழ் ஓவியா said...

நாட்டு நடப்புகள்


நாடாளுமன்றம், நீதிமன்றம், நிருவாகம், பத்திரிகை கள் இவை நான்கும் நாட்டின் தூண்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை நான்கும் நாணயமான முறையில் நடந்துகொள்ளுமேயானால், நாடும் ஒழுங் காக நாளும் பயணிக்கும் என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த நான்கும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது நன்கு தெரிந்ததுதான்.

எல்லா அமைப்புகளையும்விட கூடுதலான அதிகாரம் படைத்த நீதிமன்றங்களே - ஏன் உச்சநீதி மன்றமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை என்கிறபோது, மற்றவற்றைப்பற்றிக் கேட்பானேன்?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீதே வழக்குத் தொடுக்கப்பட்ட நிலை எல்லாம் உண்டே! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரே (ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர்) தன் வயதை தன் பதிவேட்டில் (சர்வீஸ் ரிஜிஸ்டர்) திருத்தி மோசடி செய்து பதவியில் நீடிக்கவில்லையா?

தலைமை நீதிபதியே தவறு செய்யும்போது கடுமை யான அதிகபட்சத் தண்டனையை அல்லவா அளித்திருக்கவேண்டும்? வேலியே பயிரை மேய்வது எவ்வளவுப் பெரிய ஆபத்தானது!

ஆனால், என்ன நடந்தது? குடியரசுத் தலைவராக வும் ஒரு பார்ப்பனர் இருந்ததால், பூணூல் பாலங்கள், நீதிபதிக்கு ஒரு சொட்டு வேர்வைக்குக்கூட சேதாரம் இல்லாமல் வெளியில் அனுப்பிய பவித்திரம் சாதாரணமானதுதானா?

நீதித்துறை இப்படி என்றால், ஆட்சித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு இப்பொழுது நடந்துகொண்டு இருக்கும் லலித் மோடி பிரச்சினை ஒன்றே ஒன்று போதாதா? அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் காதும் காதும் வைத்தாற் போல உதவி செய்வது எந்த வகையில் சரியானது?

நிருவாகத் துறையின் இலட்சணத்திற்கு ஓர் உதாரணம் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு. கேள்வி - பதில்கள் குறுஞ்செய்திகளாக உலா வருகின்றன என்றால், மேலே என்ன சொல்லவேண்டும்?

பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்; அய்.பி.எல்.லில் பெரும் பணம் புழக்கத்தில் இருப்பதால், அதில் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே என்று தினமணி இன்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதே.

நடுநிலையில் நின்று பேனா பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் துக்ளக் ஆசிரியர், சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்றால், அவர் பேனா எப்படியெல்லாம் நாட்டியம் ஆடும்; கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலும் இருந்து வந்தவர்தானே அவாளுக்கு லோகக் குரு;  வழக்கு நடந்துகொண் டிருந்தபோது, சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! என்று எழுதினாரா இல்லையா?

பக்தி, தாத்பர்யம், தார்மீகம்பற்றியெல்லாம் எச்சில் ஒழுகப் பேசுகிறார்களே - அந்தப் பக்தி லோகம் எப்படி இருக்கிறது? இன்றைய ஏடுகளில்கூட ஒரு சேதி வெளிவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் அர்ச்சகர் மணிவண்ணன் - புதிய தேர் செய்வதாகக் கூறி, ரூ.60 லட்சம் கையாடல் என்று, தினமலரே செய்தி வெளியிடுகிறதே!

சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, தங்கும் இடத்தில் மதுபாட்டில்கள், விபச்சாரி வீட்டில் கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவரவில்லையா?

குஜராத் மாநில சவுமிய நாராயணசாமி கோவில் குருக்கள் குடியிருப்பில் விபச்சாரிகளுடன் குருக்கள் சல்லாபம் என்ற செய்தி பலான படங்களுடன் வெளிவரவில்லையா?

வெகுதூரம் போவானேன்? காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோவில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன், கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த பெண்களைப் பாலியல் வெறிக்குப் பயன்படுத்தினான் என்ற தகவல் கள் பக்கம் பக்கமாக வெளிவரவில்லையா? இதுகுறித்து எந்தப் பார்ப்பன ஏடுகளாவது மூக்குச் சிந்தியது உண்டா?
பக்தி பெருகினால் ஒழுக்கம் பரவும் என்று சொல்லு வதெல்லாம் யாரை ஏமாற்ற? இன்னும் சொல்லப் போனால், பக்தி பெருகப் பெருகத்தான் ஒழுக்கக்கேடும் வால் முளைத்து, இறக்கைகள் முளைத்து வீறுகொண்டு விண்ணில் பறக்கின்றன.

12 ஆண்டுகள் பாவம் செய்து விட்டு 12 ஆவது ஆண்டு வரும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்துவிட்டால், பாவங்கள் பஞ்சாகப் பறந்து போய் விடும் என்றால், நாட்டில் ஒழுக்கக்கேடாக நடக்காதவன் பைத்தியக்காரனாகப் பார்க்கப்படமாட்டானா?

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால், பலகீனமான மனிதன், அந்தப் பக்கம்தானே தாவுவான்!

இந்து மதமும், பார்ப்பன தர்பாரும் நாட்டில் நீடிக் கும்வரை நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கம் என்பதெல் லாம் குதிரைக் கொம்பே! ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் கோணல் புத்திதான் நடமாடும்.

இதைத் தந்தை பெரியார் உரைக்கல்லில் உரைத்துப் பார்த்து, பகுத்தறிவைக் கூர்தீட்டிப் பார்த்தால், உண்மைகளின் தன்மை வெளிச்சமாகவே தெரியும்!

தமிழ் ஓவியா said...

கிளாக்கோமா என்றால் என்ன?



வழக்கமான கண் பரிசோதனைக்காக கோவை சத்தியன் கண் மருத்துவ மனைக்கு நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை செல்வதுண்டு. அதனை மிக அருமையாக, நோயாளிகளின் நலப் பாதுகாப்பையே தொண்டாக நடத்திடும் டாக்டர் சத்தியன் அவர்களிடம் பரி சோதித்துக்கொண்டு வருவது வாடிக்கை.

அம்மருத்துவமனை நடத்தும் பிரபல கண் டாக்டர் சத்தியன் அவர்களை, நம்முடைய பெரியார் மருத்துவ மிஷ னின் இயக்குநர், டாக்டர் இரா.கவுதமன் அவர்கள்தான் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

வசதி படைத்த கோவை பெருங் குடும்பங்களில் ஒன்றிலிருந்து படித்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை போன்ற பலவற்றிலும் பழுத்த அனுபவம் பெற்ற, (நடுத்தர வயதுக்காரர்) டாக்டர் சத்தியன் அவர்களும், அவரது வாழ் விணையரும் (அவரும் இத்துறை வல் லுநர்) மருத்துவ சேவையை இவருடன் இணைந்து நடத்தி வருபவர்.

இனிய பண்பாளர்கள் இருவரும்! அவரது நிர்வாகத்தில் இயங்கும் அக் கண் மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள், மற்ற மருத்துவர்கள் - செவிலியர்களான சகோதரிகள் அனை வருமே சிகிச்சையை நாடி வருவோரி டம் பரிவுடன் கேட்டு, எவ்வித ஆர வாரமும் இன்றி தத்தம் கடமையைச் செய்யும் பக்குவத்தால் கனிந்துள்ளனர்.

நோயாளிகள் பரிசோதனைக்காக காத்திருக்கையில், புத்தகக் குவியல் ஒன்று அருகில் இருக்கும் - பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்ட நூல்கள் அவை. காலம் நகருவது - காத்திருக் கிறோம் என்ற அயர்வினைப் போக் கிடும் - அவை இளைப்பாறிட அரிய உறுதுணை!

நல்ல சிந்திக்கக்கூடிய மருத்துவ அறிவுரைகள், ஆக்கபூர்வ வாழ்வியல் சிந்தனை கருத்துரைகள் ஆங்காங்கு அலங்கரிக்கின்றன!

நான் இம்மாதிரி செய்திகள் எங்கே கிடைத்தாலும், தேனை பறந்து, பறந்து மலர்களில் இருந்து சேகரிக்கும் தேனீ போலச் சென்று குறிப்புகளை எழுதி வைத்து பலருக்கும் பரப்பிடுவதில் சுவை காண்பவன்.

டாக்டர் என்னை பரிசோதனை செய்யும் இடத்தில் கிளாக்கோமோ (ரீறீணீநீஷீனீணீ) கண்நோய் பற்றிய குறிப்பு களைத் தொங்க விட்டிருந்தார். படித் தேன், எழுதத் தொடங்கினேன்.

அதை விரிவாக தமிழில் விளக்கி, கேள்வி - பதில் ரூபத்தில் ஒரு சிறிய தகவல் வெளியீட்டினைத் தந்தால், அதுபற்றி எழுதினால் பலருக்கும் - குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்ப தால், அதை அப்படியே தருகிறோம்:

கெட்ட வாய்ப்பாக, பெரும்பாலான நோயாளிகள் கிளாக்கோமாவை தாம தமாகவே உணர்கிறார்கள், அந்நேரம் கிளாக்காமோ ஆனது 40%க்கு மேல் உருவாகியிருக்கும். அதைத் தவிர்ப்ப தற்கு, உரிய நேரத்தில் நோயைக் கண் டறிவதும் உடனடியாக சிகிச்சையைத் துவங்குவதும் கிளாக்கோமா மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கு அவசிய மாகும். உங்களுக்கு கீழ்கண்ட கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அறிவுறுத்தியது போல தவறாமல் ஒவ்வொரு நாளும் கண்ணில் போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நோயாளி: டாக்டர், இந்த நோயின் தீவிரத் தன்மையை நான் புரிந்து கொண்டேன். இருப்பினும் இதன் அறி குறிகளை நான் அனுபவிக்கவில்லை மற்றும் எனது பார்வையில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியானால் கிளாக்கோமா போன்ற ஒரு தீவிரமான நிலையால் நான் பாதிக்கப்பட்டிருக் கிறேன் என்று ஏன் நீங்கள் கூறு கிறீர்கள்?

கண் சிறப்பு நிபுணர்: சுவையான கேள்வி: உண்மையில் கிளாக்கோமா என்பது பார்வைத் திறனை அழிக்கும் ஒரு சப்தமில்லாது தாக்கும் கொலை யாளி ஆகும். ஆரம்பத்தில் பெரும் பாலான நோயாளிகள் பிரச்சினைகள், எதையும் உணர்வதில்லை. எனவே தான் அந்த நோயாளிகள் அந்த நிலையை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. கிளாக்கோமா ஆனது நோயாளியை முற்றிலும் குருடாகும் நிலைக்கு நோயாளியைப் படிப்படி யாகத் தள்ளுகிறது. கரையான் போன்று பார்வையைப் படிப்படியாக அரித்து விடுகிறது. எனவேதான் நமது அனைத்து முயற்சிகளும், இருக்கும் பார்வையைத் தக்க வைத்துக் கொள்வதை நோக்க மாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்கு ஒன்றும் செய்ய இயலாது. விசுவல் ஃபீல்ட்டெஸ்ட் மற்றும் கோனியோஸ்கோப்பி போன்ற நவீன கருவிகளால் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட லாம். பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை ஒழுங்காக எடுப்பது, நோயாளி குரு டாவதில் இருந்து தடுக்கிறது. கிளாக் கோமா பற்றியும் அதற்கான மருந்து பற்றியும் அறிந்திராத அல்லது அலட்சி யப்படுத்தும் நோயாளிகளே, குருடா வதற்கு வாய்ப்புள்ளது.



நோயாளி: டாக்டர் இந்த மருந்து களை ஒழுங்காக நான் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதும் கூட எனது பார்வையில் மேம்பாட்டினை என்னால் கவனிக்க முடியவில்லையே.

கண் சிறப்பு நிபுணர்: ஆமாம், நன் றாகக் கவனித்துள்ளீர்கள், கெட்ட வாய்ப் பாக கிளாக்கோமா உள்ள நோயா ளியாக நீங்கள் அறியப்பட்டுள்ளீர்கள். முற்றிலும் பார்வையிழப்பு என்ற நிலையை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள். மேலும் இந்த மருந்தானது அதைத் தடுத்திடும். நிலையை மேலும் மோசமடையச் செய்யாது. பரிந்துரைக்கப்பட்ட மருந்து களை நீங்கள் உபயோகிக்காவிட்டால் நீங்கள் தொடர்ந்து பார்வையை இழப்பீர்கள்.

நோயாளி: டாக்டர் மருந்தை எடுக்க நான் மறந்து விட்டால் என்ன நேரும்?

தமிழ் ஓவியா said...

கண் சிறப்பு நிபுணர்: நான் பரிந் துரைத்த மருந்தை தினந்தோறும் மறக்காமல் அல்லது தவறாமல் எடுப்பது மிக முக்கியம் ஆகும். பரிந்துரைத்த மருந்து டோஸினை எடுக்கத் தவறுவது கண்ணைக் சேதமடையச் செய்யும்.

நோயாளி: சிறிது காலம் கழித்து இந்த மருந்து எனது கிளாக்கோமாவை குணப்படுத்துமா?

கண் சிறப்பு நிபுணர்: ஏற்கனெவே நான் சொன்னதைத் திரும்பச் சொல் கிறேன். நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்று கிளாக் கோமாவையும் குணப்படுத்த இயலாது. ஒழுங்காக மருந்தை எடுத்துக்கொள்வது அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மட் டுமே செய்யும். மருந்தை எடுப்பதற்கான நோக்கம் என்ன என்றால், ஏற்கெனவே இருக்கும் காணும் திறனை / பார்வைத் திறனை தக்க வைத்துக்கொள்வதும் அது மேலும் மோசமடையாமல் வைத்திருப் பதும் ஆகும்.
நோயாளி: டாக்டர் இந்த மருந்து களின் விலை பற்றி கூறுங்கள் அவை விலை உயர்வானவையா?

கண் சிறப்பு நிபுணர்: நல்ல கேள்வி கிளாக்கோமோ சிகிச்சைக்கான மருந்து கள் மலிவானவையும் உள்ளன.

விலை மதிப்பு மிக்கவையும் உள்ளன. பழைய மருந்துகள் மலிவானதாக இருக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு சில தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் நுரையீரல்கள் மற்றும் இதயம் பாதிக்கப்படக்கூடும். புதிய மருந்துகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை உங்களது நுரை யீரல்கள் மற்றும் இதயத்தைப் பாதிப்ப தில்லை. உங்கள் கண்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மருந்து களை நான் பரிந்துரைக்கவில்லை. உங்களது ஒட்டுமொத்த உடல் நிலை யைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன். கிளாக்கோமோவுக்கான பழைய மருந்து களை எடுத்துக்கொண்டு அதனால் நேரும் சிக்கல்களுக்காக பெரும் அளவில் பணம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை.
நோயாளி: ஒரு வேளை சிறிது காலம் கழித்து இந்த மருந்தை நான் நிறுத்தி விட்டால் என்ன நேரும்?

கண் சிறப்பு நிபுணர்: நீங்கள் விவேகமுள்ளவர் என நான் நம்பு கிறேன். இந்த கேள்விக்குப் பதிலளிப் பதற்கு ஒரு பரிசோதனை செய்து பார்ப்போம். 15 நிமிடங்களுக்கு உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங் களைச் சுற்றியுள்ள இருளானது உங் களை அச்சமூட்டி 5 நிமிடங்களுக்குள் ளேயே, மூடிய உங்களது கண்களைத் திறக்க வைத்திடும். இந்த காரிருள் உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமாகச் சூழ்ந்திடும் வகையில் ஒரு பொழுதும் செயல்படாதீர்கள். நீங்கள் யார் தயவும் இல்லாமல் சுயமாக நடமாடும் வகையில் உங்களது கண்களுக்கு அதிக முக்கியத் துவம் தாருங்கள்.

நோயாளி: மருந்து போடும் பொழுது ஒன்றைக்கவனித்ன். கண் சொட்டு மருந்துகளைப் போட்டதும் என் கண்கள் சிவப்பாகி விடுகின்றன. ஏதேனும் பிரச்சினையா? என் கண்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது?

கண் சிறப்பு நிபுணர்: நல்ல கேள்வி, சில நவீன மருந்துகள் ஆரம்பத்தில் கண்களைச் சிவப்பாகச் செய்கின்றன. அது பற்றி மிகையாகக் கவலைப்பட வேண்டாம். அந்த சிவப்பு நிறம் பின்னர் மறைந்து விடும். இப்படி சிவந்து போவது தீங்கானது அல்ல.

*****

கடுமையான சர்க்கரை நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று இந்த கிளாக்கோமா. எனவே, சர்க்கரை நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடைப்பிடித்தால் கவலையில்லை. நன்கு வாழலாம்.

--veramani

Read more: http://www.viduthalai.in/page-2/103398.html#ixzz3dKLeq3t5

தமிழ் ஓவியா said...

சிறப்பான வாழ்விற்கு சிந்தனையே மூலதனம்


யானைக்கு மதம் பிடித்தால் காடு தாங்காது, மனிதனுக்கு மதம் பிடித்தால் நாடு தாங்காது என்பார்கள். இதற்கு புண்ணிய பாரதமே. ஒரு சிறந்த எடுத்துக் காட்டு, காரியம் ஆகிறவரை காலைப் பிடிப்பதும் காரியம் முடிந்ததும் கழுத் தைப் பிடிப்பதும் பார்ப்பனியத்துக்கே உள்ள தனிப்பண்பு.

விடுதலை ஞாயிறு மலரில் (7.6.2015) தி இந்து தமிழ் நாளேட்டில் வந்துள்ள பத்து ரூபாய்த் தாள் படம் ஒன்றே போதும் இதனை உறுதிப்படுத்த! வெள் ளையரை விரட்டும்வரை தேவைப்பட் டார் காந்தி. விடுதலை நாள் விழாவிற்குக் கூட அவர் அழைக்கப்படவில்லை. அப் படியிருக்க ரூபாய்த் தாளிலே நோட் டிலே மட்டும் அவர் படத்தை எப்படி இடம் பெறச் செய்வார்கள்? அதனால் தான் காந்தியாரையே சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு நாடு நெடுகிலும் சிலை வைக்க வேண்டுமென்று கொஞ்சமும் கூச்சநாச்சமோ மனித நேயமோ இன்றி உளறிக் கொண்டிருக்கிறார்கள்! குடி வைத்த வீட்டிலேயே கொள்ளி வைக்கத் தயங்காத இந்தக்கும்பலுக்கு அன்றும் இன்றும் காந்தியார் மீது ஏன் இத்தகைய வெறுப்பு என்பதற்கும் காரணம் இருக் கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இதோ, ஒரு சான்று 1909இல் இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழில் காந்தியார் எழுதியிருப் பது:

திராவிட மொழிகளில் மிகச்சிறந்தது தமிழ்மொழி. அய்ரோப்பிய நாடுகளுக்கு லத்தீன் மொழி எப்படியோ, அதே போன்று இந்தியாவுக்குத் தமிழ் மொழி பழைமையானது ஆகும். எந்த வகையில் பார்த்தாலும் லண்டன் பல்கலைக்கழகத் தில் விருப்பப்பாடமாக ஏற்கத் தகுந்தது தமிழே ஆகும். அதுமட்டுமல்ல. இந்திய ஒருமைப்பாட்டிற்காக வடமாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும்!

இது பாக்யா இதழிலும் (4.10.2013) வெளியாகி இருக்கிறது.

இந்தியாவையே இந்துத்வா நாடாக்க வேண்டும். சமஸ்கிருதத்தைத் தேசிய மொழி ஆக்கவேண்டும். கீதையை தேசிய நூலாக்க வேண்டும். காஷ்மீரி லிருந்து கன்னியாகுமரிவரை பார்ப்ப னியப் பேரரசே தழைத்துச் செழிக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண் டிருப்போருக்கு காந்தியாரின் இந்தக் கருத்து பிடிக்குமா? பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்து, அடுத்தவர் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சி, தானும் தன் இனமும் மட்டுமே கொழுக்க வேண்டும் என்ற கெடு நினைப்பு கொண்டோருக்கு, காந்தியார் தமிழ்மொழியைப் புகழு வதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அதனால்தான் அவர்களுக்கே உரித் தான அந்த சிறுமைப் பண்பிலே இறங்கி இருக்கிறார்கள்.

அரசியல் பற்றியும், சமூகக் கருத்துக் கள் பற்றியும் சொல்லும்போது வர லாற்றுப் பிழைகள் இருக்கக்கூடாது. ஆனால் பார்ப்பனியமோ புராணப் புளுகுகளை எல்லாம் வரலாறு என புளுகும். தமிழகவரலாற்றுச் செய்தி களையே ஊடகங்களைத் துணை கொண்டும், பணபலம், அதிகாரபலம் கொண்டும் அப்படியே புரட்டிப்போட்டு விடும்! தமிழர் தனது உழைப்பால் உயர்ந்தால் கூட, அதற்குப் பொறுக்காது. உடனே ஏதாவதொரு பழி சுமத்தி ஒழித்துவிடத்துடிக்கும்!
இதனைத் தமிழினம் புரிந்து கொண் டால், தன்னலத் தலைவர்களைக் கொண்ட இத்தனை அரசியல் கட்சிகள் முளைத்திருக்காது. கோட்டையிலே பார்ப்பனக்கொடி பறந்திருக்காது!

இனியேனும் ஒற்றுமையின் அவசி யத்தை தமிழ் மக்களின் நலன் கருதி உணர்வார்களா தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்?

செல்லும் பாதை.. அய்யா தந்த பகுத்தறிவுப் பாதையாக இருக்கும்போது மெல்ல ஓடினாலும் அது வெற்றியிலே தான் முடியும்! இது வரலாறு!! ஆம் சிறப்பான தமிழினத்தின் நல்வாழ்வுக்கு அய்யா, நமக்களித்த சிந்தனையே மூலதனம்!

பகுத்தறிவுச் சிந்தனையால், பார்ப் பனியத்தை வெல்வோம்! அய்யாவின் அறிவுப்படை என்றுமே தோற்றதில்லை!! இதுவும் கடந்த கால வரலாறே!

- நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...

தஞ்சைப் பொதுக் குழுவில் கழகத் தோழர்கள் காட்டிய மகத்தான அன்பு - யான் பெற்ற பெரும் பேறு!

இலட்சியப் போரில் வெற்றி பெற போராட்ட வீரர்களின் பட்டியல் தொடரட்டும்!

பொதுக் குழுவை சிறப்பாக நடத்திய தஞ்சை மாவட்ட தோழர்களுக்குப் பாராட்டு!

கழகத் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அறிக்கை




தஞ்சாவூரில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு குறித்தும்,  கொள்கைக் குடும்பத்தினர் காட்டிய அன்பால், தாம் அடைந்த மகிழ்ச்சிப் பேறு பற்றியும் - எந்தப் பணியைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காது பெரும் சிறப்புடன் நிகழ்ச்சியை நடத்திக் காட்டும் தஞ்சை மாவட்ட கழகத் தோழர்களின் செயல் திறன் குறித்தும் பாராட்டி அடுத்து நாம் சந்திக்க இருக்கும் இலட்சியப் போராட்டங்களில் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கும் போராட்ட வீரர்தம் பட்டியலின் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

13.6.2015 சனிக்கிழமை தஞ்சையில் சுமார்  ஆயிரம் (1000) கழகத் தோழர்கள் - தோழியர் களைக் கொண்ட கழகத்தின் கொள்கைக் குடும்பப் பொறுப்பாளர்களை - 40 நாள்கள் இடைவெளியில் சென்னை மருத்துவமனையிலிருந்து திரும்பி பணியாற்ற பக்குவமாகித் திரும்பிய நான், சந்தித்தபோது அடைந்த எல்லையற்ற கொள்ளை மகிழ்ச்சியை அளக்கத்தான் அளவுகோல் ஏது?

அதேபோல், எம்மைச் சந்தித்த கழகக் குடும்பத்தவரின் மகிழ்ச்சிக் கண்ணீர் அருவியில் குளிக்கத் தள்ளி விட்டனர்!

கொள்கை வாழ்வில் கிடைக்கும் அரும் பேறு! கொள்கை வாழ்வில் கிடைக்கும் அரும் பேறு இது! இதற்கு பட்டமோ, பதவியோ, பணமோ ஒரு போதும் ஈடாகாது!
எனது உணர்ச்சிகளை - அவர்கள் காட்டிய அன்பெனும் வெள்ளத்தில் மிதக்க விட்டேன் என்றாலும் அதை வெளியே தெரியாத அடி நீரோட்டமாகவே அமைத்து விட்டேன்.

நம் அறிவு ஆசானையும், அவரைத் தொடர்ந்து நம்மை வழி நடத்திய அன்னையாரையும் என்றென்றும் தலைவர்களாக ஏற்று, பதவி நாடா, சுகம் தேடா, மானம் பாரா நன்றியை எதிர்பாரா  எதிர் நீச்சல் - போராட்ட களம் என்ற தன்னலமற்ற தியாக வாழ்வு - இவைகளையே தங்களது தனித் தன்மையாகக் கொண்ட இயக்கத் தளபதிகள், தளர்ச்சி தலை காட்டாத செயல் வீரர் - வீராங்கனைகளின் பாசறைச் சந்திப்பாக அச்சந்திப்பு - இரு வழிப் பாதையாக அமைந்தது எனக்கு அருமருந்து, அதிக வேக நடைகுன்றா உற்சாக ஊற்று ஆகும்!
தஞ்சைத் தோழர்களின் செயல் திறன்

தஞ்சைக் கழகப் பொறுப்பாளர்கள் எப்போது தலைமை சொன்னாலும், ஓ செய்து முடித்து விடுகிறோம் அதிலென்ன அட்டி? என்று முகம் சுளிக்காது, அகம் மலர சாதனையாளராகக் கொண் டவர்கள் - அவர்களுக்கு வழிகாட்ட 91 வயது இளைஞர் நம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அய்யா ராஜகிரி கோ. தங்கராசு அவர்கள்!

கமிட்டியும், மாலைப் பொதுக் கூட்டமும் மிகவும் அருமையான ஏற்பாடுகளாலும், அவர்தம் அயராத உழைப்பினாலும், மாபெரும் வெற்றியாக அமைந்தன.

வழக்கம் போன்று ஊடகங்களில் பல, நம் நிகழ்வை இருட்டடித்து, தங்கள் தனித்துவத்தை நிலை நாட்டின.

எதிரிகளின் எதிர்ப்பு என்ற உரம்!

நாளும் பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சந்திக்கும் இயக்கம் நம் இயக்கம். இது ஒன்றும் காசு கொடுத்து மற்றும் கொடுக்கக் கூடாதவைகளைக் கொடுத்து ஆள் பிடித்து அடைத்து பெருங் கூட்டம் என்று காட்டும் கட்சிகளின் வரிசையில் உள்ள இயக்கம் அல்ல. 250 மாநாடுகள் - இன்னும்  தொடரும் மாநாடுகள் என்ற கொள்கை உறுதியுடன் தனித்துவ முடிவுகளை, தக்க நேரத்தில் எடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கு நம் இயக்கம்!

நம் எதிரிகள் எப்போதும், எதிர்ப்பு என்ற உரமிட்டு வளர்க்கத் தவறாத வாய்ப்புள்ள இயக்கம் நமது என்பதை எவரே மறுப்பர்?

பெரியார் என்ற தத்துவம் தந்த தலைவர் இன்று உலகமயமாகி, அதனை வழி நடத்தும் சமூக விஞ்ஞானியாக வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலை இத்தனை ஆண்டு உழைப்பிற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

உள்ளூர் தொடங்கி, உலக நாடுகள் வரை கல்வி மூலமாகவும், கழகச் செயற்பாடுகள் வாயிலாகவும் பெரியார் என்பது ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம் என்று அறிஞர் அண்ணா தீட்டிய ஓவியம் - என்றும் உயிர் ஓவியமாக ஒளி பொருந்திய இலக்கியமாக உள்ளது.

போராட்ட வீரர்களின் பட்டியல் தொடரட்டும்!

எனவே, இருட்டடிப்பு, எதிர்ப்பு மலை, ஏகடியப் பேச்சு இவைகளை அலட்சியப்படுத்தி சிறைச் சாலை நோக்கிச் சென்று, அதை வாசமாகக் கொள்ளத் தேவைப்படின் நாங்கள் என்றும் தயார் என்று தந்தப் பட்டியல் தொடரட்டும்! அதுவே இயக்க ஆரோக்கிய காப்பீடு - மறவாதீர்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் அன்பின் அடிமை

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

ஐ-ஐயர்



ஒரு காலத்தில் நமது பாடத் திட்டத்தில் இவ்வாறு இருந்தது.

இவன் உழவன் - ஏர் உழுகிறான், இவன் தச்சன் - மரம் அறுக்கிறான், இவன் வண்ணான் - துணி துவைக்கிறான், இவன் அம் பட்டன் - சவரம் செய்கிறான், இவன் குயவன் - மண் பாண்டம் செய்கிறான், இவர் அய்யர் - பாடம் படிக்கிறார் என்று பாடத் திட்டங்களில் இருந்தது இறந்த காலம் என்று எண்ணி மகிழ வேண்டாம்.

இதோ சேலத்தில் ஒரு தனியார் புத்தக நிறுவனம் (Shabari Book House) வெளியிட்டுள்ள புத்தகத்தில் உயிர் எழுத்துகள் ஐ - ஐயர் என்று வெளியிட்டுள்ளது. இதுவரை ஐ - ஐவர் என்று தான் இருந்து வந்திருக்கிறது.

இந்தத் திடீர் மாற்றத் திற்கு என்ன காரணம் என் பதைவிட இந்தத் தைரியத் துக்கு என்ன பின்னணி என்று கேள்வியை மாற்றிக் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

1937இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் சென்னை மாநில பிரதமராக இருந்தபோது ஆசாரியார்கள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததுண்டு.

காலம் மாறி விட்டது; பழையன கழிந்துஓடி விட் டன. இப்பொழுதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்? பிராமணர்கள்கூட மாறித் தான் இருக்கிறார்கள்; என் நண்பன் முனியாண்டி ஓட் டலில் என்னோடு தினமும் சாப்பிடுகிறான் என்று சொல் லும் விரிந்த (?) மனப் பான்மை கொண்ட மெத்தப் படித்த மேதாவிகள் நம் மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

தினமணியையும் தின மலரையும் துக்ளக்கையும் தொடர்ந்து படித்து வந்தால் அதில் துள்ளும் பூணூல் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். தொலைக் காட்சிகளில் அரட்டைக் கச்சேரி நடத்தும் பிஜேபி பார்ப்பனர்களின் தடித்த வார்த்தைகளைக் கேட்கும் போதும் புரியும்.

தமிழில் பெயர் சூட்டிக் கொள்ளும் ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்டுவதுகூட கடினம்தான். ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர (இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி) வேறு ஒருவரைச் சுட்டிக் காட்ட முடிய வில்லையே!

கோயிலுக்குள் தமிழில் வழிபாடு என்றால் விட் டேனா பார் என்று எகிறிக் குதித்து உச்சநீதிமன்றத்தின் கதவில் போய் முட்டு கிறார்களே..

ஐ - ஐயர் என்றால் நீங்கள் எண்ணுவதுபோல பார்ப்பனரையல்ல - பெரி யோர், பெருமையிற் சிறந்தவர், பாதிரிமார் பட்டப் பெயர் என்று தப்பிக்க முடியாது; காரணம் ஒரு ஐயர் படத்தையும் போட்டு பச்சையாக ஜாதி உணர் வைக் காட்டி விட்டனரே!

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும்படிச் செய்தார் தந்தை பெரியார். மீண்டும் தலை தூக்கப் பார்க்கிறது;

மத்தியில் மதவாத ஆட்சியும், மாநிலத்தில் அதற்குத் துணை போகும் ஆட்சியும் இருப்பதுதான் இதற்குக் காரணம் போலும்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

காலந்தோறும் மனித குலத்துக்குத்
தேவைப்படும் மாமருந்து தந்தை பெரியார்

பார்வர்டு பிரஸ் இதழைச் சுட்டிக் காட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெருமிதம்



சென்னை, ஜூன் 16- டில்லியிலிருந்து வெளி வரும் பார்வேர்டு பிரஸ் இந்தி - ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டி (விடுதலை ஏட்டில் வெளிவந்துள் ளதைச் சுட்டிக் காட்டி!) தந்தை பெரியார் காலஞ் தோறும் மனித குலத் துக்குத் தேவைப்படும் மாமருத்து என்று கலைஞர் எழுதியுள் ளார். இன்றைய (16.6.2015) முரசொலி யில் அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் பற்றி, டெல்லி யிலிருந்து வெளிவரும் "பார்வர்டு பிரஸ்"  என்ற மாதம் இருமுறை இதழ் மிகச் சிறப்பாக எழுதியதோடு,  அந்தக் கருத்துக்கள் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டு மென்றும் வலியுறுத்தியிருக்கிறதே?

கலைஞர் :- அந்த இதழில் பெரியார் பற்றி  கூறியிருந்ததை, "விடுதலை" நாளேட்டில் முழு வதுமாக மொழி யாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.  அதில் ஆதிக்கச் சாதியினரின் சர்வாதிகாரத்தைச் சாமானிய மக்களிடம் விளக்கி   மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர்  தந்தை பெரியார் என்றும், அவருடைய கருத் துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவை என்றும், அந்தக் கருத்துக்களை இந்தியா முழுமைக்கும்  கொண்டு செல்ல வேண்டுமென்றும் எழுதியிருக் கிறது.  பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக் களால்தான் இந்தியா இன்று சமூக நீதிக் களத்தில் முன்னேற்றம் பெற்று வீர நடைபோடுகிறது. தற்போது இந்துத்துவாக் கொள்கை களைப் போற்றும் ஆட்சியாளர்களால் சமூக நீதிக்குச் சிறிது பின்னடைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் கால கட்டத்தில்  பெரியாரின் கருத்துக் களுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப்பட்டுள் ளோம் என்றெல்லாம் அந்த இதழில் செய்தி வந்துள்ளது.   காலந் தோறும்  பெரியார்,  மனித குலத்துக்குத் தேவைப்படும்  மாமருந்து என்பது அசைக்க முடியாத உண்மை!

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தியின் சாதனையை பாரீர்!

குமரி மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்துப் பணம் கொள்ளை கன்னியா குமரி மாவட்டம் திருவட் டார் அருகே காங்கரை என்னும் ஊரில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு கோவில் நிர்வாகிகள் நேற்று காலை சென்ற போது அந்த கோவிலில் உள்ள உண்டியல் உடைக் கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டுப் போய் இருந்தது  தெரிய வந்தது. உடைக்கப்பட்ட உண்டி யலில் பணத்தை திருடி விட்டு அந்த உண்டியலை திருடர்கள் அருகில் உள்ள ரப்பர் தோட்டத் தில் வீசி விட்டு சென் றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி திரு வட்டார் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். தனது உண்டியலையே பாதுகாக்க இயலாத வக்கற்ற அந்த கடவுள் பொம்மை பக்தர்களைப் பாதுகாக்க போகிறது.  இயேசுவின் சக்தியும் சந்தி சிரிக்கிறது

கன்னியாகுமரி மாவட் டம்  தக்கலை அருகே உள்ள கடமலைக்குன்று பகுதியில் உள்ள சி.  எஸ்.  அய்.  தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு நேற்று மக்கள் வந்தனர்.  அப் போது ஆலயத்தின் ஒரு பக்க கதவு உடைக்கப் பட்டு ஆலயத்தில் உள்ள பொருட்களும் மாயமாகி இருந்தன. இது பற்றி ஆலய நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட் டது. ஆலய நிர்வாகிகள் வந்து உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த ரூபாய் 8 ஆயிரம் பணம்,  மற்றும் ஆலயப் பொருட்களும் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

கர்த்தருக்கு சக்தி இருந் தால் இந்த பணத்தை பறி கொடுத்திருப்பாரா?

தமிழ் ஓவியா said...

ராமர் கோவில் கட்டுவதை தடுத்தால் மசூதிகள் கோயில்களாக மாறுமாம்

மதக் கலவரத்தைத் தூண்டுகிறார் வி.எச்.பி. தலைவர்

புதுடில்லி, ஜூன் 16_ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத் தால் அனைத்து மசூதி களும் கோயில்களாக மாறும் என விஷ்வ இந்து பர்ஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது ராம ரின் விருப்பம் என்றார். இதனை யாரால் எதிர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் ராமர் கோவில் கட்டுவது குறித்து முடிவு எடுக்கவிடாமல் தடுத்தால் அனைத்து மசூதிகளும் கோயில் களாக மாறும் என்றார். பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் அண்மையில் கூறியிருந்தார். இல்லையெல் ராமர் கோவில் கட்டுவதை தடுத் தால் அனைத்து மசூதி களும் கோவில்களாக அசோக் சிங்கால் கூறியி ருப்பது சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

இல்லவே இல்லை!

எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்க ளில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.
_ (விடுதலை, 26.4.1972)

தமிழ் ஓவியா said...

தஞ்சைத் தீர்மானம் : சமூக நீதி
தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுத் தீர்மானங்களுள் சமூகநீதித் தொடர்பானது முக்கியமானதாகும்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு கமிஷன் (ஆணையம்) அமைக் கப்பட வேண்டும் என்று முறையே 339 மற்றும் 340 அரச மைப்புச் சட்டப் பிரிவுகள் கூறும் நிலையில், அதன்படி செயல்படாத நிலையை தஞ்சைப் பொதுக்குழு சுட்டிக் காட்டி, உடனடியாக சட்டப்படியான அந்தக் கமிஷன்களை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.

மத்திய அரசு, தாழ்த்தப்பட்டோர்களுக்கான தேசிய ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. அதற்கு அரசமைப் புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரம் அதற்கு அளிக்கப்பட்டதால்தான் சென்னை அய்.அய்.டி. இயக்குநரை நேரில் வந்து ஆஜராக ஆணை பிறப்பிக்க முடிகிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட் டோருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டும், அதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அதிகாரம் அளிக்கப் படாததால் வெற்றுக் காகித ஆணையமாகவே இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிக்கு அப்பாற் பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் களின் ஆதரவோடு ஒன்று சேர்ந்து, ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும், அடுத்த வினாடியே அதற்கான அங்கீகாரம் கிடைத்து விடுமே!

இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் முறையே 15%, 7.5.%, 27% இருந்தாலும் நடைமுறையில் அந்த விகிதத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதனைத்தான் தஞ்சைப் பொதுக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (National Sample Survey) பார்த்தால்  (2.24 லட்சம் பேர்களிடம் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில்) இந்திய அளவில் தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பில் 66% மருத்துவத் துறையில், 65% பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் பட்டதாரிகள் 67% இடங்களைப் பார்ப்பனர்களே ஆக்ரமித்துக் கொண்டுள்ளனர். 1999- 2000 ஆண்டுக்கான கணக்கெடுப்பாக இது இருந்தாலும், இதிலிருந்து பெரிய அளவுக்கு மாறுதல் ஒன்றும் ஏற்பட வாய்ப்புக் கிடையாது.

1992 ஆம் ஆண்டிலிருந்து தானே பிற்படுத்தப்பட் டோருக்கு வேலை வாய்ப்பிலும் 2011 முதல் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதனால் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்று முடிவு கொள்ளக்காரணம் இல்லை.

அதுபோலவே அரசுப் பணிகளிலும் இவர்களுக்கான இடஒதுக்கீட்டின் - சதவீத அளவு எட்டப்படவேயில்லை.

குரூப் A - 5.5% குரூப் B - 3.9% குரூப் C - 8.1% குரூப் D - 5%

என்கிற அளவில்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போதும் போதாததற்குக் கிரீமிலேயர் என்ற அளவு கோலைக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தகுதி இருந்தும் வெளியே தள்ளப்படுகின்றனர்.

இதுகுறித்து தஞ்சைப் பொதுக் குழுவின் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் அவர்களுக்குரிய சதவிகிதத்தினை (15 + 7.5 சதவீதம்) எட்டும் நிலை இன்னும் ஏற்படவில்லை. குறிப்பாக குரூப் ஒன்று பதவிகளில் பல துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடம் வெறும் பூஜ்யம் என்ற பரிதாப நிலைதான் இன்று வரை; அய்.அய்.டி; அய்.அய்.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பதவிகளில் இவர்களுக்குரிய இடம் அறவேயில்லை என்று சொல்லும் அளவுக்கு சதவிகிதம் குடை சாய்த்து விழுந்து கிடக்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிரீமிலேயர் என்ற தந்திர அளவுகோல் புகுத்தப்பட்டுள்ளதால், தகுதியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் சூழ்நிலையில் அந்தக் காலி இடங்களையும், பொதுப் போட்டியில் பெரும்பாலும் உயர் ஜாதிக்காரர்கள் கபளீகரம் செய்து கொண்டு விடுகிறார்கள் என்று தஞ்சைப் பொதுக்குழுத் தீர்மானம் பிரச்சினையை வெகு துல்லியமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இன்னொரு பக்கத்தையும் நாம் அவசியம் கவனித்தாக வேண்டும். அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகிப் போய் தனியார்த் துறைகளில், பன்னாட்டு நிறுவனங்களும் வளர்ந்து வரும் நிலையில், இடஒதுக்கீடு என்பது யதார்த்தப் பார்வையில் இனிமேல் தனியார்த் துறைகளில் கொண்டு வரப்படுவதைப் பொறுத்தே அர்த்தப்படும் நிலையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தனியார்த்துறைக்கு இடஒதுக்கீடு இல்லாத நிலை ஆனால், மண்டல் குழுப் பரிந்துரையில் தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வரிப் பணத்திலிருந்து தான் தனியார்த்துறை களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டுள்ளன. குறைந்த வட்டியில் கடனுதவியும் தாராளமாக தாரை வார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தனியார்த் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தலைமை அதிகாரிகளில் (Top Officers) பார்ப்பனர்கள் 41.2%, சத்திரியர் 18.5% வைசியர் 17.9%, சூத்திரர் 4.2% என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. மொத்தம் 3,129 உயர் அதிகாரிகளிலிருந்து இந்த விவரம் வெளியில் வந்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சைப் பொதுக் குழுவில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளும், பொதுத்துறைகளும் சுருங்கி, தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தலைதூக்கும் நிலையில், தனியார்த்துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதுதான் உண்மையான சமூகநீதிக் குரலாக இருக்கவும் முடியும். தனியார்த்துறைகளில் ஆட்களைப் பணியமர்த்தும்  இடத்தில் உள்ள இயக்குநர்களில் 92.6 சதவீதம் உயர் ஜாதியினரே இருப்பதால் (Economic  and Political Weekly Dated 11.8.2012)

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டுவது குதிரைக் கொம்பே! இந்நிலையில் தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு கிடைத்திட சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது என்கிற தஞ்சைத் தீர்மானம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்துக்கே அவசியம் தேவையானதாகும். மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் தோள்கள் ஒன்று சேர்ந்து உயருமேயானால், உரிய உரிமைகள் தங்கத்தாம்பாளத்தில் வைத்துக் கொடுக் கப்படும் நிலை உருவாகும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!

ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வீர்!

தமிழ் ஓவியா said...

மூன்று மூத்த தலைவர்கள் எவ்வாறு தங்களை அமைச்சர் பணியில் பொருத்திக் கொண்டனர்?

மோடி அமைச்சரவையில் உள்ள செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பற்றி ராபின்சிங் கூறுகிறார். நன்றாகப் புலப்படும் மாறுபட்ட வழிகளில் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர் பிரதமருடன் தங்கள் உறவை எவ்வாறு வைத்திருக்கின்றனர் என்று ராபின்சிங் கூறுகிறார்.

- ராபின்சிங்

அருண்ஜெட்லி : அவரைப் பற்றிய பெரிய சோதனை இனிதான் வரப்போகிறது

நரேந்திர மோடியின் அமைச் சரவையில் முக்கிய மானவராக விளங்கும்  நிதியமைச்சர் அருண் ஜெட்லிதான்  மோடியின் மிகுந்த நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும்  உரியவராக விளங் குகிறார். மோடியை பிரதமர் வேட் பாளராக அறிவிக்கும் கருத்துக்கு எதிராக கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்த போது, மோடியை பலமாக ஆதரித்த வர்களில் ஒருவராக அருண்ஜெட்லி இருந்தார் என்று அவருக்கு நெருக்க மானவர்கள் கூறுகின்றனர்.



மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோரின் சட்டப் பிரச்சினைகளையும் அருண்ஜெட்லி கையாண்டு வந்தார்.  அமித்ஷா குஜராத்துக்குள் நுழையக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்த போது, முதலில் அவர் ஜெட்லியின் வீட்டுக்குத்தான் சென்றார் என்று கட்சித் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

பா.ஜ.க. தலைவராக இப்போது இருக்கும் நிலையில் அமித்ஷா, அருண்ஜெட்லியையே அதிகமாகச் சார்ந்து இருக்கிறார். கட்சியில் ஷாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுப வர்கள் அனைவருமே அருண் ஜெட்லியின் ஆட்கள்தான். மக்களைப் பற்றிய ஷாவின் மதிப்பீடு அருண் ஜெட்லியின் மதிப்பீட்டின் அடிப் படையில் அமைந்ததேயாகும். மோடி யும் அப்படித்தான் என்று கட்சித் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

அருண் ஜெட்லியுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று கருதப்பட்ட பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் அனைவரும் முக்கியமான துறைகளில் அமைச்சர் களாக நியமிக்கப்பட்டுள்ளதை அத் தலைவர் சுட்டிக் காட்டுகிறார். இப் பெயர்கள் அனைத்தும் ஷாவினாலும் பரிந்துரைக்கப்பட்டது. ஷாவும், ஜெட் லியும் ஒன்றுபட்ட கருத்துடன் செய லாற்றுகிறார்கள் என்று அத்தலைவர் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

சட்ட அதிகாரிகளின் நியமனத்தி லும் இதுதான் உண்மை. ஜெட்லியின் நெருங்கிய நண்பர் முகுல் ரோஹாட் கியின் நியமனம் ஏதோ சில காரணங் களுக்காக ரத்து செய்யப்பட்டபோது, அமித்ஷா, மோடியுடன் பேசி அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கச் செய்தார் என்று ஜெட்லியின் நண்பர் ஒருவர் கூறுகிறார்.

மோடி, ஜெட்லி, ஷா ஆகிய மூவருக்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவு பலருக்கும் பொறாமையை ஏற்படுத்துபவதாக இருப்பதாகும். இந்த மூவரில், எளிதாகத் தாக்கப்பட இயன்ற இடத்தில் இருப்பவர் ஜெட்லிதான். பிகார் தேர்தலில் பா.ஜ.கட்சி மோசமான தோல்வியை அடைந்தால் தான் ஷா மீதான தாக்குதல்கள் தொடங் கும். தாராள எண்ணம் கொண்டவரான அவர், பா.ஜ.கட்சியின்  தீவிரக் கோட் பாட்டாளர்களிடையே பிரபலமடைந்தவர் அல்ல.

ஆனால் உண்மையில் ஜெட்லிக்கான மாற்று ஆள் இல்லை. நிதி அமைச்சர் என்பது மட்டுமன்றி, மோடிக்காக சிக்கல்களைத் தீர்த்து வைப்பவரும் அவர்தான் என்று அந்த நபர் கூறுகிறார்.

ஆனால் மோடி சர்க்காரின் செயல் பாடுகள் பெரும்பகுதி பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டியதாக இருப்பதால், மோடியின் முக்கிய அமைச்சரான ஜெட்லியும் இறுதியில் அதன்படிதான் மதிப்பிடப்பட வேண்டி இருக்கிறது. ஜெட்லி மதிப்பும்  செல்வாக்கும்  மிகுந்தவராக இருந்தாலும், இறுதியில் அவரும் தன்னை நிரூபித்துக் காட்டத்தான் வேண்டி இருக்கிறது. மோடி சர்க்காரின் செயல்பாடுகள் பற்றி மக்கள் பொறுமை இழந்திருப்பதெல்லாம் ஜெட்லியின் மீது எதிரொளிக்கிறது. இதுதான் அவர் மீது மேற்கொள்ளப்படும் பெரும் சோதனையாகும் என்று ஒரு தலைவர் கூறுகிறார்.

ராஜ்நாத்சிங் : மோடியை விரும்ப அவர் கற்றுக் கொண்டார் மேலும் பயனுள்ளவராக அவர் விளங்குவார்



உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தாகூர் தலைவரான ராஜ்நாத்சிங் மோடி யின் அமைச்சரவையில் இரண்டாம் இடத் தில் உள்ளவர். பிரதமர் நாட்டில் இல்லாதபோது அமைச்சரவைக் கூட்டங் களுக்கு ராஜ்நாத்சிங்தான் தலைமை தாங்குவார் என்பதை அதிகார பூர்வமான அறிவிப்பு உறுதி செய்கிறது. சங்கத்தின் ஆதரவைப் பெற்றவர் இவர் என்பதால், மோடியும் ஷாவும் கூட இவருடன் உரசிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக நடந்து கொள்கின்றனர். தனது மகனைப் பற்றிய வதந்திகள் ஓர் அமைச்சரவை சகாவால் பரப்பப்படுவதாக  கூறப்படுவதைப் பற்றி தனது அதிருப்தியை சிங் வெளிப்படையாகத் கடுமையாகத் தெரிவித்த பிறகு, அந்த வதந்திகள் நின்று போயின. செய்தி தெளிவாக இருக்கிறது. ராஜ்நாத் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று பா.ஜ.கட்சிக்காரர் ஒருவர் கூறுகிறார்.

பா.ஜ.க. தலைவராக ராஜ்நாத் சிங் முதன் முதலாக வந்தபோது,  மோடி மற்றும் ஷா ஆகியோருடனான அவரது உறவு அவ்வளவு சுமுகமானதாக இருக்க வில்லை. கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து மோடியையும், செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஜெட்லியையும் ராஜ்நாத் சிங் நீக்கினார். ஆனால் இரண்டாவது முறையாக கட்சித் தலைவராக அவர் வந்தபோது, மோடி யுடனான அவரது உறவு வியப்பளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்தது. எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எதிராகவும், மோடிக்கு ஆதரவாகவும் ராஜ்நாத்சிங் போராடினார்.

தமிழ் ஓவியா said...

மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருக்கும் படி கேட்டுக்கொள்வதற்காக ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரும் கூட சிங்கின் வீட்டிற்குச் சென்றார். ஆனால் கோவா வில், மோடியை பிரதமர் வேட்பாளராக ராஜ்நாத் சிங் அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியைப் பற்றி வெளிப்படையாக விமர்சனமோ கண் டனமோ தெரிவிக்காமல் இருக்குமாறு, மோடியுடன் கருத்து வேறுபாடு கொண் டவர்களை, சிங் தடுத்து நிறுத்தினார் என்று பா.ஜ.க.தலைவர் ஒருவர் கூறினார். மோடிக்கு எதிராக  கடுமையான கருத்து களைத் தெரிவிக்காமல் இருக்கும்படி சத்ருகன்சின்ஹாவுடன் பேசுமாறு  யஷ்வந்த் சின்ஹாவை  ஒரு சமயம் ராஜ்நாத் கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு நிருபேந்திர மிஸ்ரா பெயரை  ரஜ்நாத்சிங் பரிந்துரைக்குப் பிறகுதான் நியமனம் செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச முதல்வராக சிங் இருந்தபோது மிஸ்ரா அவருடன் பணியாற்றி இருந்தார்.

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர் தல்களின்போது, ஒரு நட்சத்திரப் பேச்சாளராக யோகி ஆதித்தியநாத்தை, ஷா பயன்படுத்திக் கொண்டபோது உத்தரப் பிரதேசத்திலிருந்து மற்றொரு தாகூர் முன் நிறுத்தப்படுகிறார் என்று கட்சி வட்டாரங்கள் நினைத்ததாக பா.ஜ.க. தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் இடைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கட்சிக்கு சாதகமாக இல்லாமல் போனது. அதனால் யோகி பற்றி எந்த கவலையும் ராஜ்நாத் சிங்குக்கு இனி இருக்காது.

இப்போதைக்கு சிங்-மோடி ஆகி யோருக்கு இடையேயான உறவு மென்மையானதாக இருந்த போதிலும், நிதி மற்றும் உள்துறை அமைச்சர் களுக்கிடையே நிலவும் சஞ்சலமான உறவு எதிர்காலத்தில் பிரதமருக்கு ஒரு பிரச்சினையாக ஆகக் கூடும் என்று கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.  பிரணாப் முகர்ஜி மற்றும் பா.சிதம்பரம் ஆகியோருக்கிடையேயான நிழல் யுத்தமே இரண்டாவது தே.ஜ.கூ. வீழ்ச்சி யடைந்ததற்காக காரணம். அது போல இரண்டாவது முறை ஆட்சி அமையும் போது, சிங், ஜெட்லி ஆகியோருக் கிடையே ஏற்படும் மோதல் பிரதமருக்கு தொல்லை கொடுக்க இயன்றதாக ஆகக் கூடும் என்று கட்சியின் அனுபவசாலி ஒருவர் கூறுகிறார்.

மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சுஷ்மா சுவராஜ்தான் மிக நன்றாக மோடியுடன் இப்போது ஒத்துப் போகிறார்

குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது சுஷ்மா சுவராஜ் அவர் களிடம் தான் என்று ஒரு பா.ஜ.க. தலைவர் கூறு கிறார். கட்சி யின் தலை மைப் பொறுப் புக்கு மோடி ஏற்றம் பெறும் முன்னர், அவரைப் பற்றி கடுமையாக விவரித்து வந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த சுஷ்மா ஸ்வராஜ், அதிகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத அயல் துறை அமைச்சர் என்ற தனது பங்கினை சரியாகச் செய்து, பிரதமருடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துப் போகிறார். எவர் ஒருவரும் பாராட்டிப் பேசாவிட்டாலும், தனது பணிகளை இன்னமும் அவர் நன்றாகவே ஆற்று கிறார் என்று கட்சியின் அனுபவசாலி ஒருவர் கூறுகிறார்.

பல பிரதமர்கள் செய்தது போலத்தான் மோடியும் அயல்நாட்டுக் கொள்கையைக் கடைப் பிடிக்கிறார். அண்மைக் காலத்தில் பிரதமர்களாக இருந்தவர்களை விட தனிப்பட்ட முறையில் அயல்நாட்டுக் கொள்கைகளில் மோடி தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இது சுவராஜூக்கு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கலாம் என்றாலும், அவர் அதனைப் பற்றி கவலைப்படாமல் சுஷ்மா தனது பணிகளை மட்டுமே செய்துகொண்டு போகிறார். மிகுந்த பெருந்தன்மையை சுஷ்மா காட்டுப வராக இருந்தார் என்று பா.ஜ.க.தலைவர் ஒருவர் கூறுகிறார்.

தனது முக்கியமான கருத்துகளையும், தான் தொடங்க நினைக்கும் எந்த செயலையும் சுவராஜூக்கு, மோடி எப்போதுமே தெரிவித்துவிடுவார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் சார்க் அமைப்பு நாடுகள் விவகாரங் களில் தனிக் கவனம் செலுத்துமாறு சுவராஜை மோடி கேட்டுக் கொண்ட தாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பிரதமரைப் போலவே, உயர்துறை அமைச்சரும் அடிக்கடி வெளிநாடு களுக்குப் பயணிப்பவர் ஆவார். ஆனால் சுஷ்மா ஒரு விளம்பரப் பிரியை அல்ல; அவருடைய பயணங் களைப் பற்றி உங்களால் எதுவும் கேள்விப்பட இயலாது என்று அவரை கவனித்த ஒரு பா.ஜ.க. தலைவர் கூறுகிறார்.



அமைச்சர்கள் எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாது என்பதை சுஷ்மா சுவராஜ் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் என்று ஒரு மூத்தவர் கூறுகிறார். மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா வின் குரல்தான் கருத்து மாறுபாடு கொண்டதாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். என்றாலும் அது போல எதுவும் நடைபெறவில்லை.

இந்திய அரசியலில் என்ன என்ன வியப்பளிக்கும் நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்பதற்கு சுஷ்மா சுவராஜே நல்லதொரு எடுத்துக் காட்டாகும். பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படுவதை எதிர்த்த சுஷ்மாதான், இன்று மோடியுடன் அதிக அளவில் ஒத்துப் போகும்  மூத்த கேபினட் அமைச்சராக  விளங்குகிறார்.16-06-2015

தமிழ் ஓவியா said...

சமைப்பது மட்டுமே பெண்களின் வேலையா?

தடைகளும் சோதனைகளும்தான் ஒரு மனிதனை முன்னுக்குக் கொண்டுவரும் முக்கியப் படிக்கட்டுகள் என்பதை உணர்த்துகிறது சந்திராவின் வாழ்க்கை.

காரைக்குடியைச் சேர்ந்த சந்திரா, கைவினைக் கலைஞர், கராத்தே பயிற்சியாளர், ஒப்பனைக் கலை நிபுணர், செல்போன் பழுது நீக்குபவர் எனப் பன்முகம் காட்டுகிறார். இவர் இந்த உயரத்துக்கு வரக் கடந்துவந்த பாதை கரடுமுரடானது, வலிகள் நிறைந்தவை. இவருடைய அம்மா ராமு, பிரசவத்தின் போது மகளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் கண்ணை மூடிவிட்டார்.

மகள் மீது அந்தச் சோகம் படராமல் வளர்த்தார் அப்பா சேது ராமன். ஆனால், சந்திராவுக்கு 12 வயதிருக்கும்போது அப்பாவும் ஒரு விபத்தில் உயிரிழக்க, துவண்டு போனார் சந்திரா.

அப்பாவையும் பறிகொடுத்துட்டு அந்தச் சின்ன வயசுல அடுத்த வேளைக்கு எங்க போறதுன்னு தெரியாம நின்னேன். அப்பச் சித்தியும் மாமாவும் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. இங்க கொஞ்ச நாள் அங்கக் கொஞ்ச நாள்னு ரெண்டு பேர் வீட்டுலயும் நாட்களை ஓட்டினேன்.

அப்பவே, எப்படியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து சொந்தக் காலில் நிக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம் இருந்துச்சு. கஷ்டப்பட்டுப் பி.பி.ஏ. வரைக்கும் படிச்சேன். கூடவே தனித் திறமைகளையும் வளர்த்துக்கிட்டேன். போலீஸ், இல்லாட்டி ராணுவத்துல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யணும்ங்கிறது என்னோட விருப்பம்.

அதுக்குத் தற்காப்பு கலை அவசியம். எங்க மாமா கராத்தே மாஸ்டரா இருந்ததால அதுவும் எனக்கு எளிதில் சாத்தியமாச்சு என்று தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் சந்திரா. கராத்தேயில் மூன்று பிளாக் பெல்ட் வாங்கியிருக்கும் சந்திரா, அய்ந்து முறை தேசியச் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். 2006இல் இவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது. ஆனால், இவரது லட்சியம் பெரிதாக இருந்தாலும் காவல்துறை கனவு நிறைவேறவில்லை.

அதற்காக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், கிராஃப்ட், ஃபேஷன் டிசைனிங் படிப்புகளில் சேர்ந்து அவற்றையும் கற்றுக் கொண்டார். செல்போன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பமும் படித்திருக்கும் இவர், செல்போன் சர்வீஸ் செய்துகொண்டே பியூட்டி பார்லரில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். காலை, மாலை வேளைகளில் கராத்தே வகுப்புகளையும் நடத்துகிறார்.

இவை அனைத்தும்தான் இப்போது சந்திராவைத் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாகத் தலை நிமிர்ந்து நடக்கவைத்திருக்கின்றன. அரசுப் பள்ளி தையல் ஆசிரியர் பணிக்கும் சமீபத்தில் தேர்வாகியிருக்கிறார். முதலில் என்னை நான் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்க முடியும். அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சமைத்துப் போடுவது மட்டுமே பெண்களின் வேலை இல்லை. அந்தக் குறுகிய வட்டத்தைத் தாண்டி ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்ச முடியும். திறமை இருந்தால் படிக்காவிட்டாலும் சாதிக்க முடியும். அதற்கேற்ப பெண்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்படி, பெண்கள் தங்களை அனைத்து விதத்திலும் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி மய்யத்தை மதுரையில் தொடங்கப் போகிறேன். அங்கு வரும் பெண்கள் பயிற்சி முடித்ததும் தன்னம்பிக்கை உடையவர்களாக வெளியில் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சந்திரா.

தமிழ் ஓவியா said...

உள்ளூரிலிருந்து உலகச் சந்தைக்கு!

வெளிநாட்டுப் பயணிகளுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் அந்தக் கிராமத்துப் பெண்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நம் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர்கள் போல, நாங்க கிராமத்துல பிறந்திருந்தாலும் நாங்கள் தயாரிக்கிற பொருட்கள் வெளிநாடு களுக்குப் போவதால் ஆங்கிலத்தையும் கத்துக்கிட்டோம் என்கிறார்கள்.

புதுச்சேரி அருகே உள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். காகிதத்திலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர் கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த மதர், அரவிந்தர், ஜெயம், எஸ்தர் மகளிர் குழுவினர். வழக்கமான வீட்டு வேலைகளைக் கவனித்துக் கெள்வதுடன் தங்களுக்கு ஏற்ற வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்.

இவர்களின் விருப்ப மொழியே, நேற்றைய நாளிதழ் இன்றைய கலைப் பொருள் என்பதுதான். நாளிதழ்களில் இருந்து வண்ண வண்ணக் கலைப் பொருட்களைத் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள். நாளிதழ்களைக் கொண்டு வட்ட மற்றும் சதுர வடிவிலான கூடைகள், கிண்ணங்கள், காகித நகைகள் ஆகியவற்றைச் செய்கிறார்கள்.

பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைகள், மாங்கொட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், தேவையில்லாத சிடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பலவிதப் பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் செய்கின்றனர்.

இப்படித் தயாராகும் காகிதக் கலைப் பொருட்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதே போல் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலச் சந்தைகளிலும் இவர்களின் கலைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு. ஆர்வமுள்ளவர்களுக்கு இங்கே குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு ஆரோவில்லுக்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டேனி-ஓர்லி இணையர் வந்தனர். ஆரேவில் கிராமச் செயல்வழிக் குழுவில் இருந்த எங்களுக்குப் பழைய பேப்பர்களைக் கொண்டு கூடைகள் செய்ய நான்கு மாதம் பயிற்சியளித்தனர்.

நாங்கள் தயார் செய்யும் கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வெல் பேப்பர் என்ற நிறுவனத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் இன்றும் துணையாக இருக்கின்றனர் என்கிறார்கள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.

இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடக்கத்தில் எட்டுப் பேராக இருந்த குழுவில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 25. குழுவுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

நாங்கள் செய்யும் வேலைக்கு நாள் ஒன்றுக்குத் தலா ரூ. 180 ஒவ்வொருவருக்கும் தரப்படும். மீதமுள்ள தெகையை வங்கிக் கணக்கில் சேமிப்போம். எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் கிடையாது.

அனைவரும் இங்கே சமம். வெல் பேப்பர் நிறுவனம் சார்பில் எங்கள் தனித்திறமையை உயர்த்திக்கொள்ளும் வகையில் ஆங்கிலம் பேசவும், யோகா செய்யவும் பயிற்சி தருகின்றனர் என்று சொல்லும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பழைய சேலைகளைக் கொண்டு புதுமையான கையடக்கப் பைகளைத் தயார்செய்ய முடிவெடுத்திருக் கிறார்களாம். இதுவும் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கின்றனர் உற்சாகமாக.

தமிழ் ஓவியா said...

அன்று மெடிக்கல் ரெப் இன்று அய்.பி.எஸ்!



எஃப்.டி.டி.அய். கல்லூரியின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் என்கிற பிரமாண்ட அடையாளத்தின் பின்னால் மிக எளிமையாக  வரவேற்கிறார் பரிமளா அய்.பி.எஸ். அந்த தன்னடக்கத்தின் பின்னணியில் இருக்கிறது அவரது லட்சியப் போராட்டம். அதை அவரது  வார்த்தைகளிலேயே கேட்கும் போது உற்சாகம் ஊற்றெடுக்கிறது.

அப்பா ஃபோர்மேனா இருந்தவர். 2 அக்கா, 1 அண்ணனுக்குப் பிறகு நான்தான் கடைக்குட்டி. வீட்ல என்னைத் தவிர வேற யாரும்  அதிகம் படிக்கலை. எனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. மெடிசின் சீட் கிடைக்காததால பி.பார்ம். முடிச்சேன். மெடிக்கல்  ரெப்ரசன்ட்டேட்டிவா வேலை கிடைச்சது.

அக்காக்கள், அண்ணனுக்கெல்லாம் கல்யாணம் முடிச்சதும், என் கல்யாணப் பேச்சை  ஆரம்பிச்சாங்க. `வாழ்க்கையில ஏதாவது சாதிச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரை அந்தப் பேச்சைப் பேசாதீங்க.  கல்யாண வயசைத் தாண்டினாலும் பரவாயில்லைனு சொல்லிட்டேன். உள்ளுக்குள்ள ஒரு தேடல் இருந்தது. அப்பதான் அந்த  விளம்பரம் என் கண்ல பட்டது.

`IAS is my dads dream... But I make it true’ ங்கிற அந்த வாசகம் எனக்குள்ள பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தினது. சிவில் சர்வீஸுக்கு படிக்கணும்கிற ஆர்வம் வந்தது. அன்னிக்கே அந்த விளம்பரம் கொடுத்திருந்த இன்ஸ்டிடியூட்டை தொடர்பு கொண்டு, தகவல்களை சேகரிச்சேன். உடனடியா பயிற்சியில சேர்ந்தேன்.

மெடிக்கல் ரெப்ரசன்ட்டேட்டிவ்  வேலைங்கிறது அலைச்சல் அதிகமுள்ள துறை. நேரங்காலமும் பார்க்க முடியாது. ஆனாலும், எப்போதும் என் மெடிக்கல் ரெப்  பையோட, என் புத்தகங் களையும் சேர்த்து எடுத்துக்கிட்டுப் போவேன். மருத்துவர்களை சந்திக்க காத்திட்டிருக்கிற நேரத்தை வீணாக்காம, அங்கேயே உட்கார்ந்து படிப்பேன். சின்ன வயசுலேருந்தே எனக்கு  செய்திகள் படிக்கிற பழக்கம் உண்டு.

நியூஸ் பேப்பரை அக்குவேறு ஆணி வேறாக படிப்பேன். பொது அறிவு விஷயங்களை விரல்  நுனியில் வச்சிருப்பேன். வெறும் 5 மணி நேரம்தான் தூக்கம். சிவில் சர்வீஸ் எக்ஸாம்ஸுக்கு படிக்கணும்னா நிறைய செலவு  பண்ணணும்... டில்லி மாதிரி இடங்களில் சிறப்பு பயிற்சி எடுக்கணும்கிற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு.

என் அனுபவத்துல நான் பார்த்த, பயனடைஞ்ச விஷயங்களை இங்கே பகிர்ந்துக்க நினைக்கிறேன். சென்னையில உள்ள  கன்னிமாரா நூலகத்துல சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கான தனி பிரிவே இருக்கு. அங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை.  அதோடு, கடந்த வருஷ கேள்வித் தாள்கள், குறிப்புகள்னு எல்லாம் கிடைக்கும்.

எனக்கு அதெல்லாம்தான் உதவியா இருந்தது.  கூடவே நியூஸ் சேனல்ஸ், பத்திரிகைகள் வாசிச்சாலே போதும். இதையெல்லாம் சரியா பயன்படுத்திக்கிட்டாலே பொது அறிவை  வளர்த்துக்கலாம். தமிழ்நாட்ல அய்.ஏ.எஸ். கோச்சிங் கொடுக்க இலவசப் பயிற்சி மய்யங்கள் நிறைய இருக்கு, அப்படியொரு இடத்தை ஆர்.ஏ.புரத்துல  கண்டுபிடிச்சேன்.

வெறும் 600 ரூபாய் கட்டணத்துல சாப்பாடு, தங்கற இடத்தோட 6 மாசப் பயிற்சியும் கொடுத்தாங்க.  6 ஆவதிலிருந்து பிளஸ் டூ வரைக்குமான சி.பி. எஸ்.இ. சோஷியல் சயின்ஸ், எகனாமிக்ஸ் பாடப் புத்தகங்களை வாங்கிப்  படிக்கணும்.

தமிழ் ஓவியா said...

இப்படி நம்மளைச் சுத்தியிருக்கிற வாய்ப்புகளை முறையாக பயன் படுத்திக்கிட்டாலே இந்தத் தேர்வுகளில் சுலபமாக  ஜெயிச்சிடலாம்... என்கிற பரிமளா, 2 முறை தோல்விகளுக்குப் பிறகு 3ஆவது முறையில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் தொடர்ந்த சவால்களை தைரியமாகவே எதிர்கொண்டிருக்கிறார் இவர்.

செலக்ட் ஆனதும் ராஜஸ்தானில் போஸ்ட்டிங். சென்னை, திருமுல்லைவாயிலில் பிறந்து வளர்ந்த எனக்கு சுத்தமாக இந்தி  தெரியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் யார்கிட்டயாவது அர்த்தம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுதான் பதில் சொல்லணும். சவாய்  மதோபூர்ல ஏ.எஸ்.பியா போஸ்ட்டிங்... அந்த ஏரியாக்களில் இந்து-முஸ்லிம் பிரச்சினைகள் சகஜமா நடக்கும்.

அஜ்மீர்,  ஜெய்சல்மர்னு வேலை பார்த்த ஒவ்வொரு இடத்துலயும் லத்தி சார்ஜ், 144 தடை உத்தரவுனு ஏகப்பட்ட அனுபவங்கள்... மறக்க  முடியாத அனுப வத்தைக் கொடுத்தது பனஸ்தலி யுனிவர்சிட்டி... - ஞாபக அடுக்கு களில் சேகரித்த அனுபவங்களை அழகாக  நினைவு கூர்கிறார் பரிமளா.

இந்தியாவின் பெண்களுக்கான முதல் யுனிவர்சிட்டி அது. ஒரு பாலியல் வன்முறை நடந்து போச்சுனு ஸ்டூடன்ட்ஸ் மொத்தமும்  போராட்டத்துல குதிச்சாங்க. இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, ஒரு அறைக்குள்ள அடைச்சு  வச்சிருக்கிறதாக தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குப் போனேன். ஸ்டூடன்ட்டோட உறவுக்காரங்கனு சொல்லி, ரொம்ப கஷ்டப்பட்டு  உள்ளே நுழைஞ்சேன்.

ஒரு அறையில் இரண்டு சிறுமிகளை அடைச்சு வச்சிருந்தாங்க. அதைக் கண்டுபிடிச்சு விசாரிச்சபோது கதவைத்  திறக்க மறுத்தாங்க. அப்பதான் நான் யாரு, என்னங்கிற விவரத்தைச் சொல்லி, அந்தப் பெண்களை விடுவிச்சேன். கல்லூரி ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொன்ன அந்தச் சிறுமிகள், கடைசியில நீதிமன்றத்தில் அப்படி எதுவுமே  நடக்கலைனு மாத்திச் சொன்னப்ப அதிர்ச்சியா இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாசம் அந்த காலேஜுக்கு போய் தினமும் அந்தப்  பெண்கள்கிட்ட பேசி, கவுன்சலிங் கொடுத்து, தைரியம் சொன்ன தெல்லாம் வீணாப் போனது வருத்தமாவும் இருந்தது... -  நினைவு களில் இருந்து மீள்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஃபுட்வேர் டிசைன் மற்றும் டெவலப்மென்ட்  இன்ஸ்டிடியூட்டின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இது வேற ஒரு உலகம். முழுக்க முழுக்க படிப்பு, தொழில் தொடங்க விரும்பறவங்களுக்கான பயிற்சி, அவங்களுக்கான  வழிகாட்டுதல்னு கொஞ்சமும் பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை. பத்து ஆண்டு காவல் அனுபவத்தில் நான் பார்த்த பல  விஷயங்கள் எனக்குள்ள நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திடுச்சு. அதுல ஒண்ணு கணவர் மற்றும் புகுந்த வீட்டார் மேல பெண்கள்  தொடுக்கிற தவறான வழக்கு.

இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குப்  பெரிய அளவில் கொண்டு போகணும்கிற ஆசை ரொம்ப நாளாக இருக்கு. வாய்ப்பு கிடைக்கிறபோது நிச்சயம் செய்வேன்... -  பொறுப்பாகச் சொல்கிறார் பரிமளா அய்.பி.எஸ்.!

தமிழ் ஓவியா said...

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?

- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி

ஆண்_பெண் உடல் உறவு இல்லாமலே மருத்துவர்கள் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் காலம் மிக விரைவில் வரும். சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு அதனைப் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்க்கும் காலம் வருங்காலம்! பிள்ளைப் பேற்றுக்கு ஆண்_பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல உடற்கட்டும் புதிய நுட்பமும், அழகும், உடல் வலிமையும் உள்ள குடிமக்கள் ஏற்படும்படியாக, பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்து, மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ஊசிமூலம் பெண்களின் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண்_பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.

1943இல் தந்தை பெரியார் இக்கருத்துகளை வெளியிட்டபோது பலர் அதிர்ச்சியடைந்து போனார்கள். மயங்கி விழுந்தவர்களும் உண்டு. ஆனால் மருத்துவ அறிவியல் தந்தை பெரியார் என்னும் இயற்கை அறிவியலாளரின் திசையிலேயே பயணித்தது. 1978இல் பிரிட்டனில் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. அதன் பெயர் லூசி பிரவுன். அதன் பின்னர் சில ஆண்டுகளில் கல்கத்தாவில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இன்று உலகில் எல்லா நாடுகளிலும் இந்த முறை மிக எளிமையாகிவிட்டது.

தென்னகத்தைப் பொருத்தவரையில், அரச மரத்தைச் சுற்றிவந்தால், கோவில்களில் சின்னச் சின்ன தொட்டில்களைக் கட்டித் தொங்க விட்டால், விரதமிருந்தால் குழந்தை பிறக்கும் என்னும் மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருந்தது. அதைவிட, சாமியார்கள் பிள்ளைவரம் கொடுக்கும் ஒரு கொள்ளை நோய் பரவியிருந்தது. சாமியார்களிடமும் ஆசிரமங்களுக்கும், மடாலயங்களுக்கும் சென்று மக்கள் மானத்தை இழந்துவரும் தொடர்கதை இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையில், தந்தை பெரியார் இத்தகைய மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழக்கமிட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டினார்.
மலட்டுத்தன்மை: மலட்டுத்தன்மை என்பதைக் காரணமாகக் காட்டி பல பெண்கள், ஆண்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். ஆனால் மலட்டுத்தன்மை என்பது ஆண்களிடமும் உண்டு என்னும் திடுக்கிடத்தக்க உண்மை வெளியானவுடன் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றார்கள். அச்சம் அகன்று துணிவு பிறந்தது. கணவன்_மனைவி இருவருமே இப்போது மருத்துவரை நாடித் தம் குறைபாடுகளை நீக்கிக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆக மலட்டுத்தன்மை என்பது இப்போது பொய்யாக்கப்பட்டு பெண்களை மட்டுமே குறிப்பிட்டுக் கூறப்பட்டு வந்த மலடி என்ற சொல் (ஆண்களைக் குறிக்கும் இதற்கு நிகரான சொல் இல்லை) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்த மலடி என்ற சொல்லைப் பயன்படுத்தி ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கமும் இப்போது காண்பதற்கு அரிதாகும்.

சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம் பற்றித் தந்தை பெரியார் 1938இல் தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டபோது, இது கடவுள் படைப்புக்கு எதிரான கருத்து; நாத்திகர்களின் கோணல் பார்வை என்று தந்தை பெரியாரைச் சாடினார்கள் மதவாதிகள்!

தமிழ் ஓவியா said...

இன்று மருத்துவ அறிவியல் வியத்தகு வளர்ச்சியை அடைந்துள்ளது. சோதனைக் குழாய் மூலம் குழந்தை வளர்ப்பு என்பது பழைய முறையாகிவிட்டது! பெண்ணின் கரு முட்டைகளை அதிகம் உருவாக்கி (என்சைம்ஸ் வழியாக) அதனை எடுத்து ஆணின் உயிரணுக்களோடு சோதனைக் குழாயில் அய்ந்தாறு நாட்கள் வளர்த்து அதன்பின் அதனைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்ப்பது சோதனைக் குழாய் (Test Tube Methode) முறையாகும். இம்முறையிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்று இப்போது கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test) என்னும் மிக நுட்பமான வளர்நிலையை எட்டியுள்ளது.

கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test): இந்த முறை மருத்துவம் மிக நுட்பமானது. ஒரு மெல்லிய ஊசி; அந்த ஊசியின் உட்புறம் ஒருவகை வேதிப் பொருள் கலவையால் பூசப்பட்டிருக்கும் (டெஃப்ரான்). இந்த மெல்லிய ஊசியின் மூலமாகப் பெண்ணின் கருமுட்டை காயம் ஏற்படாமல் சேதாரம் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகிறது. அதனோடு ஆண் உயிரணுவைச் சேர்த்து ஒரு கேப்சுயூலில் வைத்துப் பெண்ணின் பிறப்புறுப்பிலேயே கரு வளர்க்கப்படுகிறது; இதன் பின்னர், தாயின் கருப்பையில் அக்கரு வைக்கப்படுகிறது. தாயின் இயற்கையான வெப்பத்தில் கரு வளர்ந்துவரும். இதற்கு முன்பு சோதனைக் குழாய் முறைக்கு ஆன செலவை விட கேப்சுயூல் முறைக்கு மூன்றில் ஒரு பங்குதான் செலவு!

கேப்சுயூல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இவற்றின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. இவற்றை இங்கேயே உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் செலவு மிக மிகக் குறைவாகும். ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கும் நல்வாய்ப்பாகிவிடும்.

கேப்சுயூல் முறையில் குழந்தை வெளியே வளர்வதில்லை. அது தாயின் அரவணைப்பில் கருப்பையிலேயே வளர்கின்றது. ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மறுமுறையும் இதே சோதனையை எளிதில் தொடரலாம். 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தச் சோதனை வெற்றிபெற்றது. இந்தியாவில் _ தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சோதனை வெற்றி பெற்றது.

ஈரோட்டில் 64 வயதுப் பெண்மணிக்கு: ஈரோட்டில் 64 வயதான ஒரு பெண்மணி; பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் மலடி என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு உறவினர்களின் ஓரப் பார்வையால் சொல்லவொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகி வாழ்ந்து வந்தார். அவருக்கு 45ஆம் வயதில்  மாதவிடாய் நின்றுவிட்டது. இருபது ஆண்டுகளாகச் சர்க்கரை நோய்; இரத்த அழுத்தம் எல்லாம் இருந்தன. கணவருக்கு அகவை 75; அவர் இதய நோயாளி. என்றாலும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்காதா என்ற கவலை ஒருபுறம் நெஞ்சைத் துளைத்து ஏங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லா மருத்துவத்தையும் பார்த்துவிட்டார்கள்.

கடைசியில் கேப்சுயூல் முறையையும் பார்த்துவிடலாம் என்று டாக்டர் நிர்மலா சதாசிவத்தை அணுகினார்கள். 64 வயதுப் பெண்ணுக்கு இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குத் தாய்மைப் பேற்றை நல்கி அவர்கள் இருவரும் இதுவரை பெற்றிராத மகிழ்ச்சியைக் கொடுத்தார் டாக்டர் நிர்மலா சதாசிவம். உலகில் இந்த வயதில் எவருக்கும் குழந்தை பிறந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் முதல்முறையாக ஈரோட்டில் இந்த மருத்துவம் மருத்துவத் துறை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தச் சோதனைகளின் மூலவர், தொலை நோக்குச் சிந்தனையாளர், சோதனைக் குழாயில் குழந்தை உருவாகும் என்ற முன் அறிவிப்பை வெளியிட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தச் சாதனை நிகழ்த்தப் பெற்றிருக்கிறது.

டாக்டர் நிர்மலா சதாசிவம் இணையரை அழைத்து பெரியார் மன்றம் பெருமைப்படுத்தியது. பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி அய்யாவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

1926 வரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த விதியை தந்தை பெரியார், பனகல் அரசரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த விதியை அகற்றினார்கள். அதன் பின்புதான் நம்மவர்கள் மருத்துவத்துறையில் நுழைய முடிந்தது! இன்று உலகம் வியக்கத்தக்க சாதனைகளை நம்முடைய மருத்துவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!

தமிழ் ஓவியா said...

2015 ஜுன் 01-15
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்


நூல்: வருணாசிரம தருமமும் வாய்மொழியும் வள்ளுவமும்

ஆசிரியர் : தி.முருகரத்தனம்

வெளியீடு : தமிழ்ச்சோலை,
5, தெற்குத் தெரு 3, அறவாழி நகர், பல்கலை நகர்க் கிழக்கு, மதுரை - 625 021.

தொலைப்பேசி: 0452- 2459195  பக்கங்கள்: 185    விலை: ரூ.55


வருணாசிரம தருமம் = தமிழரின் வீழ்ச்சி

கி.மு.1500 ஆண்டளவில் _3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடமேற்குப் புலம் வந்தேறிய ஆரியரின் முதல் நூல்கள் கி.மு.800க்கு முற்பட்டவை. அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு தொகை நூல்கள்; தனித்தனிப் பாக்களாக உரைநடை கலந்து பாடப்பட்டவை. தீக்குண்டம் வளர்த்து உயிர்ப்பலி சொரிந்து யாகம் செய்து வருணன், ருத்திரன், இந்திரன் முதலிய தேவரிடம் வளம் வேண்டியும் துணை வேண்டியும் இயற்றப்பட்டவையே இப்பாக்கள். இவற்றின் விளக்கமாகப் பின்னர் பிராமணங்கள் என்னும் விளக்க உரைகள் தோன்றின. வாழ்க்கை பற்றி, உயிர் பற்றி, அதன் வருகை போக்குப் பற்றி எண்ணற்ற வினாக்களோடும் அய்யங்களோடும் அடுத்த உபநிஷதங்கள் எனப்படுபவை தோன்றின.

மூவேதங்களில் பரவலாகப் பேசப்படும் கருத்துகள் யக்ஞம் செய்தல் பற்றியது ஆகும். யக்ஞம் என்னும் யாகங்களால் வானகத்து வையகத்துத் தேவர்களின் துணை பெறலாம்; வேண்டாதோரை வெல்லலாம்; பார் முதல் அண்டத்தை அடக்கலாம்; வான் பெயல் ஒல்லும்; வையம் வளம் வழங்கும்; மக்கள் நலம் மல்கும். மந்திர தந்திரங்கள் போன்று இவை தோன்றுகின்றன. உண்மையும் அதுவே. சாம அதர்வண வேதங்கள் இப்படிப் பேசுகின்றன. வேத மறைமொழி தானே மந்திரம் என்பர்.

வேதங்களின் பிறபகுதிகள் மாந்தரது உயிரின் இயல்பு, பார் முதல் அண்டத்தின் இயல்பு, இவற்றின் தோற்றம் படைப்பு பற்றியெல்லாம் விளக்கம் தர முயல்கின்றன. இயற்கை இறந்த நிகழ்வுகளைப் பேசுகின்ற காரணத்தால் இவை சமயமாக உருக்கொண்டு விட்டன. உடன் சமயங்களுக்கான ஈர்ப்பு, காப்பு, போற்றலும் தோன்றின. வைதிக சமயம் தோன்றியது.

இவ்வேத காலத்தில் தான் வருணாசிரம தருமம் என்னும் சமூகக் கொள்கை உருவாக்கப்பட்டது. யாகங்கள் பெருவாரியாக நடைபெற்றன. யாகங்களின் வழி அண்டத்தின் இயல்பைக் காணலாம், கட்டுப்படுத்தலாம் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. யாகங்களை நடத்தப் புரோகிதப் பிராமணர் அமைந்திருந்தனர். வாழ்க்கைக்கு வேண்டிய விழவு இழவுச் சடங்குகளை _ புனிதப் பணிகளை -_ நடத்தவும் இப்புரோகிதர் தயாராகினர். குறுநில ஆள்நரும் இருந்தனர். பல வேறு தொழில்களில் ஈடுபட்டு வைய வாழ்க்கைக்கு வேண்டி உழைப்பினைத் தந்து செல்வத்தையும் பல்பண்டங்களையும் படைக்கும் தொழிலாளரும் உணவுப் பண்டங்களை விளைவிக்கும் தொழிலாளரும் இருந்தனர்.

உழைக்கும் மக்களால் தோன்றிய பல்பண்டங்களைப் பரிமாற்றம் செய்யும் வகையினரும் உண்டாயினர். இவ்வாறு மக்கள் வாழ்வில் நான்கு குழுவும் அமைந்தன. இவையெல்லாம் _ இவர்கள் எல்லாரும் _ சமூக வாழ்க்கைக்குத் தேவைதான். இவர்கள் ஆரியர் அல்லாத பிற இனத்தவராயும் பிற நிறத்தவராயும் இருந்தனர்.

இத்தகைய மாந்தர் வாழ்க்கையில் புனிதம் என்னும் சமயக் கொள்கை இணைக்கப்பட்டது. புகுத்தப்பட்டது. பிராமணரின் புரோகிப் பணி புனிதமாகக் கொள்ளப்பட்டது. மற்றவை புனிதம் குறைந்தவை என்றோ புனிதம் அற்றவை என்றோ கொள்ளப்பட்டன. வைய வாழ்க்கைக்கு வேண்டிய பல்பண்டங்களைப் படைத்தல் பொருட்டு அவ்வாழ்வில் அமிழ்ந்து சிக்குண்ட மக்கள் புனிதத்தில் தாழ்ந்தோராகக் கொள்ளப்பட்டனர். இதனால் மாந்தரிடையே உயர்வு தாழ்வு என அடுக்குகள் வகை பெற்றன. இந்த மன்பதை நிலை _ சமூக நிலை _ சமயமுமாக அமைக்கப்பட்டது.

நால்வருணம், மேல்வருணம், கீழ்வருணம் என இரண்டாகியது. மேல்வருணம் இருபிறப்பாளர் எனவும் கீழ்வருணம் ஒரு பிறப்பாளர் எனவும் ஆகின. இருப்பிறப்-பாளராவர், பிராமண சத்திரிய வைசியர். இவர்கள் புரிநூல் அணிந்து புனிதம் பெற்றுத் _ தீட்டு நீங்கி _ இரண்டாம் பிறப்புப் பெறுவர்.

தமிழ் ஓவியா said...

ஒரு பிறப்பாளர் _ சூத்திரர் பிற இனத்தவர். தமிழகத்தில் வேளாளர் புனிதம் பெறாது தீட்டுடன் திகழ்வர். முப்புரிநூல் _ பூணூல் _ அணியவும் புனிதம் பெறவும் இவர்களுக்கு உரிமை இல்லை. மேல்வருண முப்புரிநூல் மூவர், மூவேதங்களை ஒத்தவர், மூவுலகங்கள் போன்றவர்; முக்குணங்கள் கொண்டவர். மும்மை மும்மையாக விளங்கும் அண்ட-கோளங்களின் இயற்கையில் மேல் வருணத்தார் மூவராயினர். இவ்வருணதருமம் படைப்புக்-காலம் தொட்டுப் பகவத் விஷயமாகவே கருக் கொண்டது. நால்வருணத்தாரையும் பிரஜாபதி என்னும் மக்கள் தெய்வம் தன் தலையிலிருந்தும் தோளிலிருந்தும் தொடையிலிருந்தும் பாதத்திலிருந்தும் படைத்தது என்பதைப் பண்டை ஆரியர் ரிக் வேதமே சொல்-கிறதல்லவா! ஆதலால் வருணம் புனிதம் பெற்றது, மாறுதலும் இல்லாதது, மாற்றலும் ஒல்லாதது, மாற்றினால் பொல்லாதது. இவை எல்லாம் மநுநீதி, முதல் மனுஷ்யன் நீதி, சநாதந தருமம், இந்து தருமம்.

வருண வகுப்புகளோடு பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் வாழ்க்கை நிலைகளும் இணைக்கப்-பட்டன. வருணதருமம் வருணாசிரமதருமம் ஆனது.

புனிதம் என்பது சுத்தம், தெய்வாம்சம். இவற்றுக்கு எதிர் சொற்கள் பாவம், அசுத்தம், அழுக்கு, தீட்டு, நீசம் என்பவை.

புனிதம் பாவம், உயர்வு தாழ்வு, மெய்யுழைப்பும் பிறர் பிழைப்பும் என்பவையே வருணாசிரம தருமம். உழைப்பும் பிழைப்பும் என்பது தொழில்கள் ஜாதிகளுடன் இணைக்கப்-பட்டது என்பதாகும். இவையே இந்து சமயத்தின் உள்ளார்ந்த மெய்மைகள். இவற்றோடு ஆன்மா, வினைகள் (கருமம்), பல்பிறப்பு, வீடு(மோட்சம்) என்னும் எண்ணக்-கோள்களும் ஆங்காங்கே கைக்கொள்ளப்பட்டுப் பின்னப்பட்டன. இவற்றால் சநாதந இந்துசமயம் _ வைதிக சமயம் _பிராமணீயம் _ நியாய பீடத்தில் அமர்ந்தது, அமர்த்தப்பட்டது. அவரவர் நல்வினை தீவினைகளே வருணதருமத்திற்குக் காரணங்கள் எனக் கற்பிக்கப்பட்டன. வருணாசிரம இந்துசமயத்தின் இயக்குநர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் பிராமணர்களே. அவர்களே இந்து சமயத்தின் கட்டிக்காப்பாளர்கள். இந்த இந்து சமயத்தின் இருப்புப் பெட்டகங்கள் வேதங்கள், உபநிடதங்கள், கீதைகள், இதிகாசங்கள், புராணங்கள், தருமசாத்திரங்கள், மநுதரும சாத்திரம் இவற்றின் சட்ட நூல்.

இந்த எண்ணப்பின்னல்கள் எல்லாம் வேதத்தில் உள்ளனவாகவும் வேதத்திற்கு உரியனவாகவும் வேதங்கள் அநாதி, பிரம்-மாவால் இயற்றப்பட்டு வழங்கப்பட்டன எனவும் கற்பிக்கப்பட்டன. ஆதலால், வேதங்கள் புனிதம் பெற்றவை ஆகிவிட்டன; புனிதம் கெடாது காக்கப்பட வேண்டியவையாகவும் ஆகிவிட்டன. முன்னர்த் தோன்றிய நான்கு வேதத் தொகுதிகளையும் ஆரியர் எழுத்துருவத்திற்குக் கொண்டு வரவில்லை. அவை எழுத்துருவம் பெற்றால் அவற்றை ஆரியர் அல்லாப் பிறர் அறிந்து கொள்வர் என்றும், ஆரியர் அல்லாப் பிறர் அறிந்தால் அவற்றின் புனிதம் கெட்டுத் தீட்டுப்பட்டுவிடும் என்றும் ஆரியர் கருதும் அவை எழுத்துருவம் பெறாமைக்கு ஒரு காரணம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டதால் அவை மறை எனவும் எழுதாக் கிளவி எனவும் வழங்கப்பட்டன. அவை மறைத்துக் காக்கப்பட வேண்டியவை, பிறர்க்கு உரியவை அல்ல, பிறர் ஓதினால் தீட்டாகும், பிறர் எல்லோரும் தீட்டானவர்களே என்னும் கொள்கைகள் நிலைபெற்றன.

வருணம் (அல்லது ஜாதி) பிறப்பில் அமைவது; இயற்கையை ஒட்டியது. மக்கட்பிறப்பில் தூய்மையும் தூய்மை-யல்லவையும் உண்டு. தூயோர் உயர்ந்தோர்; தூயர் அல்லோர் இழிந்தோர்; உயர்வும் தாழ்வும், தூய்மையும் தூய்மையின்மையும் குலங்களுள் _ ஜாதிகளுக்குள் _ உண்டு; உயர் குலத்தோர், மூவர்; இருப்பிறப்பாளர். இவர்கள் சிறுபான்மையினர்; இவர்கள் வேதக் கல்விக்கு உரியர். நாலாமவர் தூய்மையற்றவர்; ஆகவே தாழ்ந்தவர். நாலாமவர் போன்றே பெண்டிரும் தூய்மையற்றவர்கள். வேதங்கள் கற்றால், கேட்டால் வேதங்கள் புனிதம் இழந்து தூய்மையும் கெடும்; அழுக்குப்படும். ஆதலால் இவர்களிடமிருந்து வேதங்கள் காக்கப்படல் வேண்டும். இவை அனைத்தும் கடவுளரின் கட்டளையே _ வேதங்கள் மறைவானதற்கும் மறையானதற்கும் இத்தகைய எண்ணச் சூழலே _ சிந்தனைகளே _ காரணம். இந்தச் சிந்தனைகளை உரம் ஊட்டி வளர்த்தனர் பின் வந்த ஆச்சாரியர்.

தமிழ் ஓவியா said...

ஆரியர் வேதங்களான மறைகள் அவர்கள் பேசிவந்த மொழியில் இயன்றன. கி.மு.1000 அளவில் மூவேதங்கள் இயற்றப்பட்ட போது வழங்கிய அம்மொழியை வேதமொழி என இன்று வழங்குகின்றனர். இது இந்திய _ ஆரிய  (மிஸீபீஷீ-கிக்ஷீஹ்ணீஸீ) வேர் மொழியின் ஒரு கிளை மொழி. தெய்வாம்சமும் புனிதமும் நிறைந்த வேதங்கள் வழங்கும் மொழியாதலால் வேதமொழியும் தெய்வாம்சமும் புனிதமும் கொண்டதாகக் கருதப்பட்டது. ஆரியர் பேசிய இந்த வேதமொழி இந்திய மக்கள் அப்போது பேசிய மொழிகளுடன் கலந்தது. (மக்கள் கலக்கின்ற போது மொழியும் கலத்தல் இயல்பு தானே.) அப்போது கலப்பு மொழிகள் மக்கள் வழக்கில் உருவாயின. வேதத்தின் தெய்வாம்-சத்தையும் புனிதத்தையும் காத்தல் பொருட்டும் வேதம் சார்ந்த வைதிக சமயத்தை நடத்தல் பொருட்டும் ஆரிய மரபின் வழிவந்தோராகக் காணப்படும் பிராமணர் உலகியல் கலப்பு மொழிகளிலிருந்தும் தம் வேதமொழியிலிருந்தும் ஒரு மொழியினை உருவாக்கிக் கொண்டனர். திருத்தி உருவாக்கப்பட்டது என்னும் பொருளில் அம்மொழி ஷிணீனீளீக்ஷீவீ என வழங்கப்பட்டது. (ரிக்ஷீவீ= செயல்). இது பின்னர்ச் சமய மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் வழங்கியது. சமஸ்கிருதம் என்றும் எங்கும் பேச்சில் வழங்கியது இல்லை. (இதனைத் தமிழ் மரபினர் வடசொல், வடமொழி என வழங்கி வருகின்றனர்.) அது ஆரியப் பிராமணர் மொழியாகவே வாழ்வு கொண்டுவிட்டது. ஆரியரது வேதச் சமயம் இந்திரன் வருணன் உருத்திரன் முதலான தேவர்களைப் பற்றிப் பேசுவதாலும், பிராமணர் பூதேவர் என வழங்கப்படுவதாலும் சமஸ்கிருதம் தேவபாடை என வழங்கப்பட்டது. அவ்வாறாதலால் பிற பாஷைகள் நீச பாஷைகள் என வழங்கப்பட்டன. தேவர்க்கு எதிரானவர் நீசர். ஆதலால் சமஸ்கிருதம் தவிரப் பிற வையத்து மொழிகள் பிராகிருத றிக்ஷீணீளீக்ஷீவீ எனவும் தமிழில் பாகதம் எனவும் வழங்கப்பட்டன. பிராகிருதங்களே மக்கள் வழக்கு மொழிகள். இவை பாலிமொழி எனவும் அர்த்தமாகதி மொழிகள் எனவும் பெயர் வழங்கப்பட்டன. இவற்றுக்குத் தெய்வாம்சம் இல்லை. புனிதம் இல்லை, (தீட்டு உண்டு), அழுக்கு உண்டு, சூத்திரரும், பெண்டிரும் அழுக்குடையவர், நீசர். அவர்கள் அழுக்குடைய பிராகிருத மொழியே பேசுவர். அது நீசமொழி. சமஸ்கிருத நாடகங்களில் வரும் உறுப்பாளர்களுள் மூவருண இரு பிறப்பாளரான ஆடவர்கள் மட்டும் சமஸ்கிருதத்தில் உரையாடுவர், அனைத்து வருணப் பெண்டிரும் சூத்திரரும் பிராகிருத மொழியில் பேசுவர். பெண்டிரும் சூத்திரரும் சமஸ்கிருதம் படித்தால் அது அழுக்கடைந்து தீட்டுப்பட்டுவிடும். படிக்கும் அவர்களும் கெட்டொழிவராம்!

பெண்டிரும், சூத்திரருமான தொண்ணூற்று ஏழுபேரும் சமஸ்கிருதமே படித்தல் கூடாது என்றால் சமஸ்கிருதம் சொல்லும் வேதப்-பொருள் பற்றி என்ன இயம்ப இயலும். வேதங்கள் கூறும் பொருள்கள் பிரமம், ஆன்மா, மோட்சம் பற்றியவை. இவை எல்லாம் மறை பொருள்கள்; இவைகளும் பெண்டிர்க்கும் சூத்திரர்க்கும் ஆகா. இவை பற்றி இவர்கள் பேசுதலும் கூடாது; கற்றலும் கூடாது; இவற்றை அடைய முயலுதலும் கூடாது. சுருங்கச் சொன்னால் பெண்டிர்க்கும் சூத்திரக்கும் பஞ்சமர்க்கும் மோட்சம் இல்லை; இப்பிறப்பில் உறுதியாக இல்லை.

தமிழ் ஓவியா said...


வருணாசிரம தருமச் சமய சமூகக் கொள்கையின் பின்புலத்தில் மக்களிடை உயர்வு தாழ்வும், தீண்டல் தீண்டாமையும், காணல் காணாமையும், முரண்டல் சுரண்டலும் சமூகநெறிகள் ஆயின அல்லவா. இந்நெறிகள் சமூகத்தில் மட்டும் அல்லாது மொழியிலும் இலக்கியத்திலும் கலைகளிலும் ஏற்றப்பட்டன. சூத்திரராகிய கீழோரே பெரும்பாலோர்; நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழினர். இவர்கள் மொழி தமிழ்மொழி. சூத்திரர் என இழிந்தோராகக் கருதப்பட்ட 97 பேரான தமிழர் பேசும் மொழியும் இழிந்ததாகக் கருதப்பட்டது; தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. தமிழ் என்னதான் தொல்தமிழாகவும் செந்-தமிழாகவும் பைந்தமிழாகவும் வண்டமிழாகவும் இன்றமிழாகவும் ஒண்தீந்தமிழாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் பலரால் கொண்டாடப்-பட்டாலும் அது இழிமொழிதான். சூத்திரருடைய அது பாவப்பட்ட பாகத (பிராகிருத) மொழிகளுள் ஒன்றாகவே ஆரியப் பிராமணீய அந்தணரால் கருதப்பட்டது.
இவ்வாறு தமிழ், சூத்திரர்களைப் போன்றே அழுக்கும் தீட்டும் கொண்டுள்ள மொழி, நீச மொழியானது. அதற்குத் தெய்வாம்சமும் புனிதமும் இல்லை. இருக்கவும் இயலாது. ஆதலால் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினள், ஆன தாய்த்தமிழ் சமஸ்கிருதத்திற்கு ஒப்பானது அல்ல. ஆதலால் தெய்வாம்சத்தோடும் புனிதத்தோடும் சமஸ்கிருதத்தில் குடிகொண்டிருக்கும் வேதங்களை நீசத்தமிழில் கொண்டு வருதல் இயலாது, கூடாது. கூடுமானால் இரண்டும் கெடும். அதாவது தமிழ் பிரமம், ஆத்மா, மோட்சம் ஆகியவை பற்றிப் பேசத் தகுதி பெறாதது. வைதிக சமய வருணாசிரம தருமம் வழங்கும் செய்தி இதுதான். அது பிறப்பிக்கும் ஆணையும் இதுதான். வருணாசிரம தருமம் சரி என்றால் இக்கருத்துகள் எல்லாம் சரிதானே.

இந்த இழி வரலாறு எல்லாம் பழங்காலத்-திற்கும் இடைக்காலத்திற்கும் உரியவை. ஆனால், இந்த வரலாறு ஒரு பகுதிதான் உண்மை என்பதும் சொல்லப்பட வேண்டும். சூத்திரர் பற்றியும் பெண்டிர் பற்றியும் தமிழர் பற்றியும் தமிழ்மொழி பற்றியும் சுமத்தப்பட்ட இழிநிலையினை எல்லாத் தமிழரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது இல்லை. தமிழ் மண்ணிலே மலர்ந்து விரிந்த சைவ சமயத்தார் தமிழைத் தாங்கித் தூக்கிப் பிடித்தனர். சிவபெருமானிடம் தமிழ் தூதராக விடப்பட்டது. (தமிழ் விடு தூது காண்க.) கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பைந்தமிழ் மண்ணிடைச் சில இலக்கண வரம்பு இலா மொழிகள் போல்எண்ணிடப்படக் கூடுமோ? எனச் சைவர் பண்பாடினார். தமிழ்ச் சங்கத்தைச் சிவபிராணும் சிவகுமாரனும் தலைமை ஏற்று நடத்தினர். ஆனால் வருணாசிரம தருமம் சுமத்திய இழிவுக்கு விடை சொல்வதாகத்தான் இந்தச் சைவத் தமிழ் வரலாற தோற்றுவிக்கப்-பட்டது போலும்! (இது தனியே ஆராயத்தக்கது.)

இந்த வருணாசிரதருமம் வடபுலத்தில்-தோன்றித் தென்புலம் வந்த வரலாறு விளக்கப்பட்டது.

2.5. அயல் வருணாசிரம தருமத்திற்கும் தமிழகத்திற்கும் என்ன உறவு? இன்றைய தமிழகத்தின் காட்சியிலிருந்து நோக்கலாம். இன்று வருணாசிரம தருமந்தான் தமிழகத்தில் கோல் ஓச்சுகிறது:-

அ. வருண வகுப்புகளின் மறுபிறப்புக்களான ஜாதிகள் இன்றும் இயங்குகின்றன. ஜாதிக்குள் மணம் என்னும் நடைமுறையால் இவை செல்கின்றன.

ஆ. ஜாதிகள் தொழில்களுடன் இணைக்கப்-பட்டுள்ளன. இன்ன ஜாதியாருக்க இன்ன தொழில் என்னும் நிலை நிலவுகிறது.

இ. ஜாதிகளிடையே உயர்வு தாழ்வுகள் செயற்படுகின்றன.

ஈ. புனிதம் பாவம், சுத்த அசுத்தம், தீண்டல் தீண்டாமை ஜாதிகளிடையே குடி-கொண்டுள்ளன. இவற்றின் விளைவுகள்:

வருணாசிரமத்தின் கர்ப்க்கிரகமாகக் கோவில்கள் விளங்குகின்றன.

பிராமணர்கள் சுத்தமானவர்களாகவும் மேலோராகவும் வைக்கப்பட்டுள்ளனர். இரு பிறப்பாளர் ஆதலால் அவர்களே கோவில்களில் புரோகிதர்கள்; அர்ச்சகர்கள்.

பெரும்பான்மைத் தமிழர்கள் _ 97 தமிழர்கள் _ கோவில் கருவறைக்குள் செல்லவும் அருச்சனை செய்யவும் மந்திரங்கள் ஓதவும் தகுதி இல்லாதவர்கள்; இவர்கள் சூத்திரர்கள். அசுத்தமானவர்கள், அழுக்குடையவர்கள், தீட்டுடையவர்கள், பிராமணர்களைப் போன்று சுத்தமானவர்கள் அல்லர். ஆதலால் தீட்டின் அடிப்படையில் அமைந்த ஜாதி உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்பக் கோவில்களில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

சமஸ்கிருதம் சுத்த மொழியாகக் கருதப்-பட்டுச் சைவ வைணவக் கோவில்களில் தெய்வப் படிமங்கள் உள்ள கருவறைகளில் அருச்-சனைக்கும் பூசைக்கும் மந்திரம் ஓதலுக்கும் உரியதாக கொள்ளப்பட்டுள்ளது. தெய் வழிபாட்டுக்கான அனைத்துப் பணிகளுக்கும் உரிய தெய்வபாஷை _ தேவ பாஷை _ சமஸ்கிருதமாகவே விளங்குகிறது.

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


ஊன்றிப் படித்து உண்மையை உணருக!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பகவன்

பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.

பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24.6.58)

சலம்

ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.

சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாக தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
(குயில், 1.7.58)
உவமை

உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.

அமிழ்து

இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து_-உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.

மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன்பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.

(குயில், 08.07.1958)

தமிழ் ஓவியா said...

நான் ஒரு நாத்திகன் - அய்ன்ஸ்டீன் அறிவிப்பு


நான் ஒரு நாத்திகன்

- அய்ன்ஸ்டீன் அறிவிப்பு

அறிவியல் மேதை, அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவரது கடிதமே சான்றாவணம்!

இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக் கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது.    இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் மற்றும் அவரது மகன்களான ஹான்ஸ், எட்வார்ட் ஆகியோருக்கு 1949-ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் தனது கைப்பட எழுதிய கடிதமும் அடங்கும்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது அணுப்பிளவுக் கொள்கை மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்தும், மற்றும் மதம் கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டையும் எழுதியுள்ளார். முக்கியமாக ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் மீண்டும் பதவிக்கு வருநிலை உள்ளதால் தான் ஜெர்மன் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கடிதம் குறித்து வரலாற்று ஆய்வாளர், மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் அமைப்பின் தலைவரான ஜோசப் மெடலினா கூறியதாவது,: அய்ன்ஸ் டைனின் புகழ்பெற்ற இக்கடிதங்கள் ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஏலத்திற்கு வரும், இந்தக் கடிதங்கள் அய்ன்ஸ்டைனின் கடவுள் குறித்த பார்வையைத் தெளிவாகக் கூறும் விதத்தில் உள்ளன. ஒரு தலைசிறந்த இயற்பியலாளர் கடவுள் குறித்த தனது பார்வையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் 1945-ஆம் ஆண்டு கய் எச் ரானேர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், நான் யூதனாக அறியப்பட்டாலும் நான் ஒரு நாத்திகனே என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் ரானேருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தான் ஒரு நாத்திகன் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.

கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத்தன-மானது, புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது,  ஆனால் நாத்திகம் என்பது தெளிவான ஒரு மனநிலையில் எந்த ஒரு செயலையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்ப-தாகும், இங்கு நான் ஒரு கடவுள் மறுப்பாளராகவே இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.

அய்ன்ஸ்டைன் தனது இளைய மகன் ஹன்ஸ்ற்கு எழுதிய கடிதத்தில் அணு குண்டு பற்றியும் அது ஹிரோஷிமா, நாகாசாகி போன்ற நகரங்களில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியும் குறிப்பிட்டு தனது சார்பியல் கோட்பாட்டை அதனுடன் இணைத்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மற்றொரு கடித்தில் அவர் நாஜிக்களின் மோசமான நடவடிக்கையால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர வேண்டியிருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் பற்றியும், யூதக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் தனது கடிதத்தில் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை தொடர்பாக தனது மகனுக்கு எழுதிய கடிதம் மற்றும்  மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தனது மகனின் திருமணம் மற்றும் தனது கண்டுபிடிப்புகள் குறித்த தனது மனநிலையை எழுதியுள்ளார். இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும்போது  அமெரிக்க டாலர் மதிப்பில் 15,000 முதல் 25,000 டாலர் வரை விலைபோகும் என்று தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?


மகனின் ஓரினச் சேர்க்கைக்கு ஆண் தேடும் பார்ப்பனத் தாய்!

கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?

மும்பை மே 22_ மும்பையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் பத்திரிகை ஒன்றில் தனது மகனுக்காக தகுந்த மணமகன் வேண்டும் என்று ஒரு பார்ப்பனத்தாய் விளம்பரம் செய்துள்ளார்.

ஹரீஸ் அய்யர் என்ற 36 வயதுடைய மும்பை பார்ப்பனப் பையனுக்கு அவனுடைய இனத்தில் பெண் கிடைக்கவில்லை. நீண்ட நாள்களாக தேடிய பிறகு சலித்துப்போன அந்தப் பார்ப்பனத்தாய் தனது மகனுடன் கலந்து ஆலோசித்து ஒரு திடகாத்திரமான ஆணை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவனும் தலையை ஆட்டிவிட, உடனே இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே ஓரினச் சேர்க்கையாளருக்கான இதழில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

ஓரினச்சேர்க்கை மணமகன் தேவை; வயது 25 முதல் 40 வயதுவரை; எனது மகனின் தகுதி _  வளர்ப்புப் பிராணிப் பிரியர், சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி யாற்றுகிறார். நல்ல சம்பாத்தியம், என்று குறிப்பிட்டு முக்கியமாக ஜாதிபற்றிக் கவலையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டும் இருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான இந்த விளம்பரத்திற்கு இணையதளம் மூலம் ஆயிரக் கணக்கான விருப்ப மின்னஞ்சல் சென்றுள்ளதாம். பொதுவாக இந்தியாவில் தற்போது கலாச்சாரக் காவலர்கள் ஆட்சியில் இருக்கும்போது பூணூல் அணிந்த பார்ப்பானுக்கு அவனது தாயே ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்து இணையும் தேட ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இருந்தும் அயல் நாடுகளிலும் இருந்தும் நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது மகன்தான் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்வான் என்றார். மேலும் திருமணம் முழுக்க முழுக்க இந்து முறைப்படி சாஸ்திர சாம்பிரதாயங் களுடன் நடைபெறும் என்றார்.

கலாச்சாரம் காக்கும் காவலர்களே!
இதற்கு என்னச் செய்யப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்


அரிய செய்திகள் :

புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்!

குப்புறப்படுத்து மார்புக்குத் தலை-யணையைத் தாங்கலாக வைத்துக் கொண்டு எழுதும் வழக்கமுடையவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
(ஆதாரம்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் _ 18)

தமிழ் எழுத்தாளர் தமிழை நன்றாகக் கற்கவேண்டும். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும், எவருக்கும் அஞ்சாமல் தன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவராய் இருக்க வேண்டும்.
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கறியை விடாதே. கறிதான் மனிதனுக்கு உணர்ச்சி வெறியை உண்டாக்குது. உணர்ச்சி வெறிதான் கவிஞனுக்கு வேண்டும். கடைசிவரை கறியை விடாதே. நான் அதுக்கு எடுத்துக்காட்டு... என்ன... சைவத்தை நம்பி நம்பி வீரஉணர்ச்சியே போயிடிச்சு!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலையில் பரிமாறப்பட்டிருந்த உப்புக் கண்டத்தைக் காட்டி இது என்ன உப்புக் கண்டம்? சொல்லு பார்க்கலாம் என்றார் பாவேந்தர். நான் அதைச் சுவைத்துப் பார்த்தபோது அது ஆட்டுக்கறியாகத் தெரியவில்லை. சுவை மாறுபட்டிருந்ததால் மான் கறியாக இருக்கும் என்று நினைத்து மான்கறியா? என்றேன். உடனே பாவேந்தர், இல்லை. புலிக்கறி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன புலியா? புலிக்கறி எப்படிக் கிடைக்கிறது? என்றேன்.

புதுக்கோட்டை அரசருக்கு வேண்டிய ஒரு நடிக நண்பர் எனக்கு அடிக்கடி அனுப்புவார். சாப்பிடு! என்றார்.
- கவிஞர் முருகு.சுந்தரம்

* * *

தப்பெனில் ஒப்பும் தலைமைப் பண்பினர்

கனியிடை ஏறிய சுவையும் _ முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் _ காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
என்ற புரட்சிக்கவிஞரின் பாடலைப் படித்த தமிழ் மறவர் பொன்னம்பலனார், புரட்சிக்-கவிஞரிடம் இதிலுள்ள ருசி என்னும் வடசொல்லை நீக்கி சுவை என்று அழகு தமிழில் சொல்லலாமே என்றார்.

தவறு என்று அறிந்ததும் உடனே அதை ஏற்று அடுத்த பதிப்பில் சுவை என்று மாற்றம் செய்யச் சொன்னார் புரட்சிக்-கவிஞர். தவற்றை ஒப்பிக் களைதல்தானே தலைமைப் பண்பிற்கு அழகு! அது புரட்சிக்கவிஞரின் முரட்டு உள்ளத்திற்குள் அழகுறக் குடிகொண்டிருந்ததை நம்மால் இதன் வழி அறிய முடிகிறது. அது மட்டுமல்ல அதன்பின் வடசொல் கலப்பின்றி எழுத முற்பட்டார், எழுதினார்.

* * *

தமிழாசிரியர்களின் சம்பளத்தை ரூ.45/_லிருந்து ரூ.75/_ஆக உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்து உயர்த்தச் செய்தவர் பொன்னம்பலனார்.

தியாகராய நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்தபோது, ஆனந்த-விகடனில் பாரதியாரைப் பற்றி எழுதும்படி திரு.எஸ்.எஸ்.வாசனே நேரில் வந்து கேட்டுக்கொள்ள, அதற்கு இணங்கிய பாவேந்தர் ஒரு கட்டுரை அனுப்பினார். அதன்பின் எழுத-வில்லை, நிறுத்திவிட்டார். ஏன் மறந்துவிட்டீர்கள் என்று கேட்ட-போது, முகத்தைச் சுளித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை.

கவிஞர் தாகூரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. அவருடைய கையெழுத்துப் படியில் மை சிந்திவிட்டால் அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டுவிட்டால் அதை ஓர் ஓவியமாக மாற்றிவிடுவார். அதேபோல், தன் கையெழுத்துப் படியில் மை சிந்தினால் அதைப் பூவாக மாற்றும் பழக்கம் பாவேந்தருக்கும் உண்டு.

தாம் கதை வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்தில் சில வரிகளை மாற்றிவிட்டார்கள் என்பதற்காக, மார்டன் தியேட்டர்ஸாரின் ரூ.40,000/_ ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்த சுயமரியாதைக்-காரர் புரட்சிக்-கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

நூல் மதிப்புரை


எம்.எஸ்.எஸ்.பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள்

மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958_2014) அவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு எம்.எஸ்.எஸ். பாண்டியன்  பெயரில் வெளியிட்டுள்ளன.

இப்புத்தகத்திலுள்ள மூன்று கட்டுரைகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வந்திருப்பினும் ஒன்றோடொன்று கருத்துரீதியாக தொடர்புடையவையாக உள்ளன.
தேசியத்தை பழமையிலிருந்து விடுவித்து எதிர்காலத்தில் நிலைகொள்ள பகுத்தறிவு, அறிவியல், மனித விடுதலை, போராட்டம் மூலம் முன்னேற்றம் தேவை என்று பெரியார் வழிகாட்டியதாகக் கூறுகிறார்.

மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பதே பெரியாரின் கருத்து என்று எழுதிய திரு.  பாண்டியன் அவர்கள், அடித்தட்டு மக்கள் பகுத்தறிவு, அறிவியல் ஆகியவற்றின் மூலமே சுயமரியாதையையும் அதன்மூலம் அரசியல் முகமையையும் பெற முடியும் என்று பெரியார் அவர்கள் கருதியதாகவும் கூறியுள்ள நிலையில், பாண்டியன் அவர்களின் எழுத்துகள் பன்மைப் புலம் சார்ந்ததாகவும், பெரியார் அவர்கள் நிலைகொண்ட திராவிட அரசியல் ஆதரவு என்பதாகவும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

புத்தகத்திலுள்ள அய்ந்து கட்டுரைகளுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களின் அறிவுக் கூர்மையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகிறது. அறிவை வளர்த்துக்கொள்ள விழைவோருக்கு இந்த நூல் சிறப்பு விருந்து என்று கூறினால் தவறில்லை.

வெளியீடு :

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.
பக்கங்கள்: 95, விலை: 75/-

தமிழ் ஓவியா said...

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது!


கேள்வி: சமீபகாலமாக, தமிழகத்தில் ஜாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?

பதில்: பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது ஜாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்லமுடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்லமுடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் ஜாதி ஒழிப்பை முன்வைத்தார். கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, ஜாதி ஒழிப்புதான். ஜாதி புகல்கிற கோவில்கள், ஜாதி புகல்கிற இலக்கியங்கள், ஜாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.

ஜாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதால்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான திறனை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

- பேராசிரியர் தொ.பரமசிவன்

நன்றி: தி இந்து தமிழ், 17.5.2015

தமிழ் ஓவியா said...

தீஸ்தா நேர்காணல் :


மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு இணையதளத்திற்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.

மதவெறியருக்கெதிரான நீண்ட போராட்டத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மதவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தை 1985_-86 வாக்கிலேயே தொடங்கிவிட்டோம். அந்த நேரத்தில்தான், பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன; ஷா பானு வழக்கு தொடர்பான அடிப்படைவாதப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. இரண்டுமே சரிசமமான வெறித்தனம் கொண்டவை.

நான் அப்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்து வந்தேன். ஜாவித், சாய்நாத், குமார் கேட்கர் உள்ளிட்ட நாங்கள் சிலர் சேர்ந்து மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பைத் தொடங்கினோம்.

தாக்கரே போன்றவர்கள், முஸ்லீம்களைத் தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும், காஷ்மீர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் பேசிய வெறுக்கத்தக்க பேச்சுகள் மராத்தி நாளிதழ்களில் பேனர் தலைப்புச் செய்திகளாக வெளியாகின. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலிருந்து 110 பத்திரிகையாளர்களின் கையொப்பங்களைச் சேகரித்து, இத்தகைய ஊடக துஷ்பிரயோகங்களைத் தடுக்க வேண்டும்; ஊடகங்கள் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படக் கூடாது; முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசிடம் மனு கொடுத்தோம்.

அதைத் தொடர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை, 1992_-93 மும்பை வன்முறைகள் நடந்தன. அது கொடூரமானதாக இருந்தது. மொத்த நகரமும் இரண்டாகப் பிளவுபட்டதோடு தெருக்களில் மரணம் கோர தாண்டவமாடியது. இசுலாமிய சமூகத்தைப் பற்றி மிக நச்சுத்தனமான கருத்துகள் பேசப்பட்டன.

அப்போது ஜாவித் சண்டே அப்சர்வரிலும், நான் பிசினஸ் இந்தியாவிலும் வேலை செய்து கொண்டிருந்தோம்.

மும்பை கலவரங்கள் தொடர்பாக நான் பிசினஸ் இந்தியாவின் இரண்டு இதழ்களுக்காக அட்டைப் படக்கட்டுரைகளைத் தயாரித்தேன். காணாமல் போனவர்கள், குடும்பங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் உள்ள பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து எழுத விரும்பினேன். ஆனால், வெகுஜன ஊடகங்கள் ஒரு பிரச்சனையை இறுதி வரை முழுமையாகப் பின்தொடர விரும்புவதில்லை. பரபரப்புக்காக ஓரிரு பெரிய கட்டுரைகள் வெளியிடுவதை ஏற்றுக் கொள்வார்கள். அதற்குமேல் போனால் அனுமதிக்க மாட்டார்கள்.

மத வன்முறைக்கான சூழல் உருவாவதைக் கவனிப்பது, வன்முறைக்கான முன் தயாரிப்புகளையும், வன்முறையின் விளைவுகளையும் பற்றி எழுதுவது என்று செயல்பட விரும்பினோம் நாங்கள். அதனால்தான், வேலையைவிட்டு விலகி, கம்யூனலிசம் காம்பட் இதழைத் தொடங்கினோம்.

தமிழ் ஓவியா said...

2002 குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

நரோடா பாட்டியாவைச் சேர்ந்த பெண்கள் தினக் கூலி வேலை செய்பவர்கள்; குல்பர்க் சொசைட்டியில் பாதிக்கப்பட்டவர்கள் போல நடுத்தர வர்க்கத்தினர் இல்லை; சர்தார்புரா போன்ற இடங்களில் செய்ததைப் போல அவர்கள் வேறு இடங்களுக்குச் குடிபெயர முடியாது. அவர்கள் திரும்பி அதே பகுதிக்குத்தான் போக வேண்டும்; மாயா கோத்னானி இப்போது பிணையில் வெளிவந்துள்ள அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.


2002 கலவரத்திற்குப் பிறகு அகதி முகாமில் இருக்கும் முசுலீம் மக்களின் குழந்தைகள்!

அவர்கள் தினமும் காலையில் வேலைக்குப் போகும் போது கிண்டல் செய்து அச்சுறுத்தப்படுகின்றனர். எப்போதெல்லாம் விஷயம் கைமீறிப் போகிறதோ, அப்போது அவர்களுடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதுதான் எங்களால் முடிந்த சிறிய உதவி. ஆனால், அவர்கள்தான் அந்த தினசரி சித்திரவதையை அனுபவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம் குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, நீதிபதி ஜோஸ்னா யக்னிக்கை நீதிபதியாக நியமித்து, விசாரணையைக் கண்காணித்து வந்தது. நரோடாபாட்டியாவில் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்பவர்களிடம் பேசினால் அந்த நீதிபதி பற்றி மனமுருகிப் பேசுவார்கள். ஏனென்றால், வழக்கு விசாரணையின் போது எதிர்த்தரப்பு வக்கீல் அவர்களைத் துன்புறுத்தியதை அவர் அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற விசாரணைகளில் தலித் பெண்கள், தலித் உழைப்பாளிகள் சாட்சிக் கூண்டில் நிற்கும் போது இந்த அமைப்பு அவர்களைத் துன்புறுத்துகிறது. நீதிமன்றச் சூழலே அவர்களுக்கு பகையானதாக உள்ளது. ஆனால், ஜோஸ்னா யக்னிக், ஒரு கேள்விகூட வரம்பு மீறுவதை அனுமதிக்கவில்லை. பெண்கள் சாட்சி சொல்ல தைரியம் பெற்றனர்; தமது தாய்களுக்கு, தமது மகள்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகளைக் குறித்துக்கூடப் பேசினர். நீதிமன்றம் அளித்த தைரியத்தில்தான் அவர்களால் பேச முடிந்தது.

மோடியை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ஜாகியா ஜாஃப்ரி எப்படி உணர்கிறார்?

2003-இல் குற்றப் பதிவு செய்ய ஜாகியா ஜாஃப்ரிக்கு நாங்கள் உதவிய போது, உளவுத்துறை அறிக்கைகளிலிருந்து ஆதாரங்களையும், மறுமுறையீட்டுக் கட்டத்தின்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஆவணங்களையும் திரட்டினோம். மோடி மீது வழக்குத் தொடருவதற்குப் போதுமான ஆதாரங்கள் அவற்றில் இருந்தன.

தமிழ் ஓவியா said...

அதிகாரப்பூர்வப் பதிவுகளின்படி கோத்ராவின் ஆட்சியர், அப்போது உள்துறை அமைச்சகப் பொறுப்பை வைத்திருந்த மோடிக்கு கோத்ரா நிகழ்வைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் உடனடியாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் படேலை அழைக்கிறார். (காவல் துறை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டவில்லை). அது தொடர்பான தொலைப்பேசி அழைப்புப் பதிவுகள் உள்ளன. பின்னர் ஜெய்தீப் படேல் கோத்ராவுக்குச் செல்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் பட் கோத்ராவுக்குப் போகிறார்.

கொல்லப்பட்ட சடலங்களின் பிரேதப் பரிசோதனை இந்துத்துவா கும்பலின்முன் திறந்த வெளியில் நடத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் உடல்கள், சிதைக்கப்பட்ட சடலங்களைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டனர். பிரேத பரிசோதனை திறந்தவெளியில் செய்யப்படுகிறது என்று மோடிக்கும் தெரியும்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. உடல்களை அகமதாபாத்துக்கு எடுத்துச் செல்லும்படி உத்தரவிடப்படுகிறது.

இவை அனைத்தும் வழக்குத் தொடுப்பதற்குப் போதுமான ஆதாரங்கள். இது தொடர்பான வழக்கு இப்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதை விசாரிக்க எந்த நீதிபதிக்குத் தைரியம் உள்ளது என்று தெரியவில்லை.

நீங்கள் காவல்துறை உயரதிகாரி ஸ்ரீகுமார் பற்றி பேசினீர்கள். சஞ்சீவ் பட் அளித்த வாக்குமூலத்தின் முக்கியத்துவம் என்ன?

சஞ்சீவ் பட் மகத்தான தைரியத்தைக் காட்டியுள்ளார். முதலமைச்சர் வீட்டில் பிப்ரவரி 27 மாலை நடந்த கூட்டம் தொடர்பான விஷயத்தில் அவருடையது முக்கியமான சாட்சியமாக இருக்கும்.

ஸ்ரீகுமார், ராகுல் சர்மா 2002 முதலே ஒரு நிலைப்பாடு எடுத்து நானாவதி கமிஷன் முன்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால் சஞ்சீவ் பட் 2002இ-ல் பேசவில்லை.

சஞ்சீவ் பட்

2009-ம் ஆண்டு சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடந்த போது, பிப்ரவரி 27 அன்று முதலமைச்சர் வீட்டில் நடந்த கூட்டம் பற்றி ஹரேன் பாண்டியா தீர்ப்பாயத்திடம் கூறியிருந்ததை முன்னிட்டு உளவுத்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களைச் சிறப்பு விசாரணைக் குழுவின் மல்ஹோத்ரா பதிவு செய்யும் போது நவம்பர் 2009இ-ல்தான் முதல் முறையாக சஞ்சீவ் பட் தனது வாக்குமூலத்தைக் கொடுத்தார்.

அது வரை பேசாததற்கான அவரது விளக்கம் என்னவென்றால், கேள்வி கேட்கப்படும்போது மட்டும்தான் ஒரு காவல்துறை அதிகாரி பேச வேண்டும் என்பது. அதைக் குறை சொல்ல முடியாதுதான். ஸ்ரீகுமார், ராகுல் சர்மா போன்றவர்கள் அதை ஒரு தார்மீகப் பிரச்சினையாக, அரசியல் சட்டப் பிரச்சனையாகப் பார்த்தனர். சஞ்சீவ் பட்டைப் பொறுத்தவரை தேவைப்படும்போது அவர் அதைச் செய்தார்.

குஜராத் இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர் களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள் வேறுபடுவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

எங்கள் கணக்குப்படி காணாமல் போனவர்களையும் சேர்த்தால் 1900த்திலிருந்து 2000 பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் குற்றப்பத்திரிகைவாரியான எண்ணிக்கையைத் தொகுத்திருக்கிறோம்; ஒரு மாதத்துக்குள் அவற்றை வெளியிடுவோம்.

இந்த ஆதாரப்பூர்வமான தகவலை, நாடாளுமன்றத்தின் முன்னும் வைக்க விரும்புகிறோம். இது தொடர்பான வரலாற்றை நேர் செய்ய வேண்டும்.

நன்றி :வினவு இணையதளம்

(www.vinavu.com)

தமிழ் ஓவியா said...

முரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்!

மதம், மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் ஆகியவற்றின் பெயரால் மனிதன் தன்னுடைய அறிவை இழக்கிறான். மதத்தைப் பின்பற்றுவோர் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதை இங்கே உள்ள படங்கள் காட்டுகின்றன.

அர்ச்சகர்களுக்கும், மூட நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கும் பணத்தை மக்கள் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், பெற்றோருக்கு உணவளிக்க, கவனிக்க மறுக்கிறார்கள். இறந்தபின் திதி கொடுக்கிறார்கள்!

கர்நாடகாவில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் எருதுகளைத் தீயில் புகுந்து விரட்டுகிறார்கள். அதேநேரத்தில் பசுவைப் புனிதம் என்பார்கள். மாட்டிறைச்சியை உண்பவர்கள்மீது ஆத்திரப்படுவார்கள். வழிபாடு என்பதன் பெயரால் விலங்குகளைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். அனுமனுக்குக்கூட பான் அட்டை கொடுக்கும் அவல நிலை. தேவி சரசுவதி பெயரில் முகநூல். அதேநேரத்தில் மேற்கத்தியக் கலாச்சாரம் என்று எதிர்ப்பு, விமர்சனம் செய்கிறார்கள்!

பன்னாட்டளவில் ஒவ்வொரு 3.6 வினாடிகளிலும் பட்டினியால் வதைபடுகிறார்கள் என்கின்ற நிலையில், லட்சக்கணக்கில் குழந்தைகளுக்கு பாலில்லை. ஆனால், கல் கடவுளுக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம். இதில் யாருக்கு முக்கியத்துவம்? சாப்பிட முடியாத கடவுளுக்கா? சாப்பிட முடிந்த மனிதனுக்கா?

சிந்திக்க வேண்டாமா? முரண்பாடுகளின் மொத்த உருவம்தானே மதம், மத நம்பிக்கைகள்.

 

50 ஆயிரம் செலவில் விநாயகர் சிலை ஆயிரக்கணக்கில் அதற்குப் பூசை - வணக்கம்! அடுத்த நாள் அதைத் தடியால் அடித்து கடலில் மிதிக்கிறான்!

கருடனை பார்த்து கன்னத்தில் போட்டு வணங்குகிறான். கோழிக்குஞ்சை அது தூக்கும்போது கல்லால் அடித்து விரட்டுகிறான்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறான். ஆனால் கோயிலுக்குப் பூட்டுப் போடுகிறான்!

கடவுள் நம்மைப் படைத்தது; நம்மைக் காப்பது என்கிறான். ஆனால், இவன்தான் கடவுளைப் படைக்கிறான், காக்கிறான்.
சிந்தியுங்கள்...

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர் - 9


- மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

ஆக்ரா - அய்.நா.அடையாளச் சின்னம் ஆக்ரா கோட்டை

தாஜ்மகாலை விட்டுப் பிரிவது, காதலர்கள் சந்திப்பின் பின்னர் பிரிவது போலத்தான்! மீண்டும் வருகின்றோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

ஆக்ராவின் அடுத்த சிறப்பான இடம் ஆக்ரா கோட்டை. ஆக்ரா கோட்டை  பல வரலாற்று மிக்க இடம். மூன்று பானிப்பட்டுப் போர்கள் பற்றி வரலாற்றில் படித்திருப்போம். ராஜபுத்திரர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடந்த போர்கள். மாறி மாறி இந்தக் கோட்டையில் ஆண்டுள்ளனர்.அக்பர் கோட்டையைப் பெரிதாக்கி உள்ளே அரண்மனைகளையும் கட்டியுள்ளார். 500 கட்டிடங்களில் தற்போது 30-_35 கட்டிடங்கள் மட்டுமே அழிக்கப்படாமல் உள்ளன. சுற்றிலும் பெரிய அகழ்வுகள், அடுத்து 70 அடி உயர கோட்டைச் சுவர்கள். மிகவும் பெரிய, வேலைப்பாடு மிக்க   கோட்டை நுழைவுகளும், கதவுகளும். உள்ளே நுழைந்ததும் 90 டிகிரியில் திரும்பும் பாதை யானைகள் வேகமாக உள்ளே நுழைந்தாலும் அதே வேகத்தில் இதில் திரும்ப முடியாது தங்கள் வலுவை இழந்து விடுமாறு இந்தத் திருப்பம். உள்ளே அழகிய பூங்காக்கள், அரண்மனைகள், மாட மாளிகைகள். அற்புத வேலைப்பாடுகள். ராஜபுத்திர, முகமதிய அடையாளங்கள் கலந்துள்ளன. ஜஹாங்கீர் அரண்மனை மிகவும் அழகாக உள்ளது.

அரண்மனைவாசிகளுக்காக பெரிய நீர்த்தொட்டி! அதிலே ரோசாப்பூ நீர் வைக்கப்பட்டிருக்குமாம்.  மாடியில் ஒரு அரண்மனையில்தான் ஷாஜஹான் அவரது மகன் ஔரங்கசீப்பால் சிறை வைக்கப் பட்டிருந்தாராம். அது ஒன்றும் சிறை அல்ல. மாடமாளிகைதான். அங்கிருந்து தாஜ்மஹால் அழகாகத் தெரிகின்றது. அதுதான் அவருக்குத் தண்டனையாம். பின்னர் ஆக்ரா கோட்டையிலிருந்து டில்லி செங்கோட்டைக்கு ஆட்சி மாற்றப்பட்டு விட்டது.

ஆக்ரா கோட்டையில்தான் 1857இல் பன்றிக் கொழுப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம், சிப்பாய்க் கலகம், முதல் விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் போராட்டம் நடந்தது. அதன் முடிவுதான் கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இப்போதும் இந்தியப் படையின் ஒரு பிரிவு கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ளது.

அங்கிருந்து மற்றும் இரண்டு இடங்களைப் பார்த்தோம். ஒன்று, உலகின் பெரிய சித்திர வேலைப்பாடுகள் பளிங்குக் கற்களில் பொதிக்கப்படும் விற்பனைச் சாலை. சிறியதும் பெரியதுமான விலையுயர்ந்த கற்கள் பெரிய பளிங்குக் கற்களிலும், யானை போன்ற  அழகான சிலைகளிலும் பொதிக்கப் படுகின்றன. ஆயிரக்கணக்கல்ல, கோடிகள் விலை பெறும் அற்புதங்களைப் படைத்து உலகெங்கும் விற்பனை செய்கின்றனர். அதை வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும், அதை வைப்பதற்குச் சரியான அரண்மனை வேண்டாமா? அரசியல்வாதிகளுக்காகத்தான் செய்கின்றார்கள் போலும்! எங்களுடன் வந்தவர்கள் சில சிறிய அழகிய சிற்பங்களை வாங்கினார்கள்.

அடுத்துச் சென்ற இடம் ஆம்! ஒரு நகைக் கடை. கொல்லம் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை? இது ஒரு குடும்பத்தின் கதை. இந்தக் குடும்பம் மும்தாஜ் மஹாலுக்கே நகை செய்து தந்த குடும்பம். பல அரச குடும்பத்தினருக்குச் செய்த நகைகளையும், மும்தாஜ் அணிந்திருந்த நகைகளையும், எங்கள் குழுவிற்குக் காண்பிப்பதற்காகவே வங்கியின் பாதுகாப்பிலிருந்து எடுத்து வந்திருந்தனர். அந்தக் குடும்பத்தினர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நான் ஒரு பெரிய கழுத்தணியையும், மும்தாஜின் மோதிரத்தையும் அணிந்தேன். அப்போதாவது நாங்கள் ஏதாவது விலையுயர் நகை வாங்குவோம் என்று பார்த்திருக்கலாம்! நல்ல வேலைப்பாடு, அது போலவே விலையும் நிறையதான். எங்கள் குழுவில் சிலர் வாங்கினார்கள்.

கனவுகள் கலைந்து நினைவுலகத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது!

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்திலே பெண்ணுக்கு நா(நீ)தியில்லையா?


நாட்டையே பாதுகாக்கும் செயல்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவர் அவரது மேலதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார்.

நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் பி.வி.ஜி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்துவருகிறது. நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண் 2013ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு புதிய மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்ற நபரால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளார்.

கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும்போது, மேற்பார்வையாளர் பின்தொடர்ந்து வந்து அநாகரிகமாகப் பேசுவார் என்றும், எதிர்ப்புத் தெரிவித்தால் மிரட்டுவார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கான இரசாயணப் பொருள்கள் காலியாகிவிடவே, புதிதாகத் தருமாறு அவரது அறைக்குச் சென்று கேட்டுள்ளார். உடனே, பதிலுக்கு நீ என்ன தருவாய்? என மேற்பார்வையாளர் கேட்டதும், கழிப்பறையைச் சுத்தம் செய்யும் என் கடமையை ஒழுங்காகச் செய்வேன் என்று கூறியுள்ளார் அந்தப் பெண். அதுதவிர நீ கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது என்றதும் மேற்பார்வையாளரை வன்மையாகக் கண்டித்து எச்சரித்ததும், பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து, டெல்லி கனோட் பிளேசில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததையடுத்து, அந்தப் பெண்ணுக்கு மக்களவையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரலில், பி.வி.ஜி நிறுவனம் மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்கியிருப்பதாக கூறியதும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மேற்பார்வையாளரை மன்னிப்புக் கேட்கும்படிக் கூறியுள்ளது. இன்றுவரை அந்த மேற்பார்வையாளர் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் என் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறேன். என் குழந்தையைப் பராமரிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இந்நிலையில் என் பணிக்குப் பாதுகாப்பு இல்லாமல் போனால் அது இன்னமும் சிக்கலாகும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பரிசீலிக்கும் குழு நாடாளுமன்றத்தில் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட வழியில்லாமல் இருக்கிறது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்குத் தீர்வு காண எவ்வித உதவியும் பெற முடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை என மே 3 அன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குரல் எழுப்பினார். இப்பிரச்சினையில் சிறப்புக் கவனம் செலுத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், இப்பிரச்சினை தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார். பின்னர் மக்களவையிலும் எதிரொலித்தது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறிய புகார் தொடர்பாக லோக்சபா செயலர் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (2)

தமிழர்க்குத் தாலியில்லை!

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

- மஞ்சை வசந்தன்

சாலியொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்.....

என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பார்ப்பான் மறைவழி காட்டியது, தீவலம் செய்தது, அருந்ததி பார்த்தது எல்லாம் குறிப்பிடுகிறார். தாலிகட்டியது அல்லது அரும்பத உரையாசிரியர் கருத்துப்படியும் அதைத்தழுவிய சிவஞானம் கருத்துப்படியும் மாங்கல்ய சூத்திரம் கட்டியது இதிலே இல்லை. இதிலிருந்து மங்கல அணி மாங்கல்ய சூத்திரம் ஆக முடியாது என்பது புலனாகும்.

அதுவுமன்றி, எல்லாச் சடங்குகளையும் புகுத்திய பார்ப்பனர், அந்நாளில் தாலி கட்டும் பழக்கத்தைப் புகுத்தவில்லை என்பதும் அறியக் கிடக்கும். அதற்குப் பின்னரே, அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துவான் வேண்டிப் புகுத்தியிருக்கலாம். ஆய்விலே காணும் முடிபு, இளங்கோ அடிகளும் அவருக்கு முந்திய சங்க இலக்கியகர்த்தர்களும் தாலிகட்டும் முறை இருந்ததாகவே குறிப்பிடவில்லை என்பதுதான்.

இந்த அரும்பத உரையாசிரியன் உரை, பொருந்தா உரை என, தமிழ்ப்புலவர் கு.மதுரை முதலியார் அவர்களால் ஒருமுறை எடுத்துக்காட்டப் பெற்றிருக்கிறது. மேலும் மங்கல அணி என்பது இயற்கை அழகு என்ற பொருளிலேயே சிலப்பதிகாரத்தின் மற்றோர் பகுதியில் கையாளப்படுகிறது. மனையறம் படுத்த காதையில் அறுபத்தி மூன்றாவது வரியில் மங்கல அணி பற்றிக் குறிப்பிடுகிறார், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்.

நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் மறுவின் மங்கல அணியே யன்றியும்
பிறிதணி அணியப்பெற்றதை யெவன் கொல்

என்கிறார். இதன் பொருள்:

நறுமலரணிந்த கோதையே! நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், குற்றமற்ற உனது இயற்கை அழகு இருக்கும்போது வேறு நகைகளையும் அணிந்ததனால் பெற்றது யாது கொல்?

_ ஆமாம்; இயற்கையழகாகிய மங்கல அணி இருக்கும்போது வேறு அணிகள் எதற்கு என்று கேட்கிறார் இளங்கோ அடிகள். இதே உரையைத்தான் பெரும்புலவர், நாவலர் ந.மு.வெங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறிப்போந்தார். சிவஞானம் பாராட்டுகிற கம்பன்கூட ஒரு இடத்தில்,

உமிழ் சுடர்க்கலன்கள் நங்கையுருவினை
மறைப்பதோரார்

என்கிறான். இயற்கையான மங்கல அணியை நகைகள் மறைக்கின்றன என்கிறான், கம்பன். ஆகவே அணிகள் யாவினும் பெரிது, மங்கல அணி _ அதாவது இயற்கை அழகு என்னும் பொருளையே இளங்கோவடிகள் வலியுறுத்தியுள்ளார் என்பது யாவர்க்கும் புலனாகும்.

_ மங்கல அணி, தாலிதான் என்பதற்கு சிலப்பதிகாரத்தில் துளிக்கூட இடமில்லை. முழுதும் ஆராயாத தோழர் சிவஞானத்தின் குறைபட்ட ஆராய்ச்சி தாலிதான் மங்கல அணி என்று கூறுகிறது. மங்கல அணியை இயற்கை யழகு என்ற பொருளில் மங்கல வாழ்த்துப் பகுதியிலும், மனையறம் படுத்த காதையிலும், முறையே அகலுண் மங்கல அணி எழுந்தது என்றும், மறுவின் மங்கல அணியே என்றும் கூறியிருப்பதைப் பார்த்துவிட்டு, அந்திமாலை சிறப்புச் செய்காதைக்கு வருவோமானால் இங்கேயும் அதே பொருளைக் காண முடியும்!

சிவஞானம் இப்படிக் கூறுகிறார்:

மற்றும், அந்திமாலை சிறப்புச் செய்காதையில், கோவலனைப் பிரிந்த வருத்தத்தால் வாடியிருக்கும் கண்ணகியின் தோற்றத்தைக் கூறுமிடத்து,

அஞ்செஞ்சீரடி அணிசிலம் பொழிய
கொங்கை முற்றிற் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்

என்ற வரிகளால், சிலம்பிழந்த சீரடி, குங்குமத் தொய்யில் எழுதாக் கொங்கை என, அங்கங்களின் அணிகளை அல்லது அலங்காரத்தைத் துறந்ததைக் கூறுகிறார். மார்புக்கு மேலிடமான கழுத்து வரும்போது மங்கல அணி என்று குறிப்பிட்டிருப்பதால் அவ்வணி தாலியே என்பது உறுதிப்படுகின்றது.

தமிழ் ஓவியா said...

_ இது சிவஞானத்தின் சீரிய கருத்து. இதுவரை பார்ப்போம். இதில்கூட இளங்கோவடிகளின் ஒரு வரியை நண்பர் விட்டுவிட்டார். அந்த வரியைச் சொன்னால் எங்கே ஆபாசம் என்று மற்றவர்கள் கூறி விடுவார்களோ என்ற பயத்தில் இளங்கோவடிகளைக் காப்பாற்ற ஆசைப்பட்டு, விட்டுவிட்டார் போலும்! தோழர் பயப்பட வேண்டியதில்லை! இந்த இடத்தில் அந்த வரி வருவது இலக்கியத்துக்குப் புறம்பும் அல்ல; ஆபாசமும் அல்ல. மேலும் இது மனிதக்கதை. அந்த வரி இதுதான்: மென்துகில் அல்குல்மேகலை நீங்க... மறைவிடத்தே மேகலை அணிதலும் ஒழிந்தாள் என்பது பொருள்.

சிவஞானத்தின் பெருந்தவறான ஆராய்ச்சி, உண்மையாக முடியாமல், அவர் வரிகளும் அவரைக் காட்டிக் கொடுக்கின்றன! இளங்கோவடிகள், கண்ணகியின் தோற்றத்தை, உள்ளங்கால்முதல் உச்சிவரையில் கூறுவதாகவும், ஒவ்வொரு அங்கத்தின் நகைகளையும் கூறும்போது கழுத்தருகில் வந்து மங்கல அணி என்பதாகக் குறிப்பிடுவதாகவும் ஆகவே அது தாலிதான் என்றும் சாதிக்கிறார். ஒவ்வொரு அங்கத்தின் அணிகளை அல்லது அலங்காரத்தைத் துறந்தாள் என சிவஞானம் கூறுகிறார். அதன்படி இளங்கோவடிகள் முழுதும் அணிகளையே கூறவில்லை; அலங்காரத்தைச் சில அங்கங்களுக்கும் கூறுகிறார் என்கிற உண்மை அறியக் கிடக்கிறது. உதாரணமாக, கால் சிலம்பு இல்லை _ இது நகை. கொங்கைக்கு தொய்யில் எழுதவில்லை  இது அலங்காரம்! நகையல்ல! எழுதுவிக்கும் ஒரு செயற்கை அலங்காரம்  அவ்வளவுதான்! அதேபோல, தொடர்ந்து போகும்போதும் இளங்கோவடிகள்,

மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழைதுறந்து வடிவந்துவீழ்காதினள்!
திங்கள்வாண் முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணணி...
_ என்கிறார்.

இந்த வரிகள், இளங்கோவடிகள் வெறும் அணிகளைப் பற்றி மட்டும் கூறவில்லை என்பதும், ஒவ்வொரு அங்கத்தின் செயற்கை அழகையும் துறந்தாள் என்று சொல்ல வந்து, அணிபூட்டக் கூடியவற்றிற்கு அணிகளையும், அது முடியாத, நெற்றி, கண் முதலியவற்றிற்கு அலங்காரத்தையும் துறந்தாள் என்று கூறுகிறார். காலில் சிலம்பு இல்லை; மேகலை இல்லை; கொங்கைக்கு அலங்காரம் இல்லை; எனக் கூறி, கழுத்தில் ஒரு அணியும் இல்லை என்பதை _ இயங்கை அழகன்றி வேறு அணிகள் சூடவில்லை என்பதை _ வேறு அழகு செய்யாமல் இயற்கை அழகோடு இருந்தாள் என்பதை _ மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் என்று கூறுகிறார். கழுத்தில் ஒரு அணியும் இல்லை என்பதே பொருள். தாலி கட்டப்பட்டிருந்தால் அதைக் கழற்றக் கூடாது என்கிற புனிதத் தன்மைப்படி, கழற்றியிருக்க முடியாது. ஆகவே தாலி கட்டப்படவில்லை _ ஒன்று!

மங்கல அணியைத் தவிர வேறு அணி இல்லை _ தாலி தவிர வேறு இல்லை என்ற சிவஞானக் கருத்துப்படி பார்த்தால், ஏதோ நூற்று எட்டு நகைகளைக் கழுத்தில் அணிந்தாள்; தாலியைத் தவிர மற்றவற்றைக் கழற்றி விட்டாள் என்று வலிந்து பொருள் கொள்ளவேண்டும்! இது தவறு! ஆகவே, பெரும்புலவர் வேங்கடசாமி நாட்டார் கருத்துப்படி, இயற்கை அழகன்றி செயற்கை அழகு செய்யாள் எனப் பொருள் கொள்வதே முறை. அடிமுதல் நுனிவரை முழுதும் அணிபற்றிக் கூறியிருந்தால் சிவஞானம் கருத்துச் சரிதான்! ஆனால் அப்படி இல்லையே! பின்பும், காதிற்குழையில்லை; முகத்தில் காதலில் வரும் சிறுவியர்வுஇல்லை; கண்களில் அஞ்சனம் இல்லை; நெற்றியில் பொட்டு இல்லை என்று அலங்காரத்தை _ அணியல்லாத அலங்காரத்தை அடுக்கி வைத்துள்ளாரே! அதுபோன்றே, கழுத்தில் இயற்கை அழகன்றி செயற்கை அழகில்லை என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த இடத்திலும் மங்கல அணி தாலி அல்ல!

அப்படி அது, தாலிதான் என்றால், கணவன் இறந்ததும் அலங்காரங்களைச் சிதைக்கிற கண்ணகி தாலியையும் கழற்றினாள் என்று இளங்கோவடிகள் கூறியிருக்க வேண்டும். அவர் அப்படிக் கூறவில்லை. கட்டுரை காதையில்

கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலனெனக்
கொற்றவை வாயிற்பொற்றொடி தகர்த்து...!
_ என்கிறார்.

தமிழ் ஓவியா said...

இதில், கண்ணகி, துர்க்கை கோயிலில், தன் வளையல்களை உடைத்து, தன் கணவனைக் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இல்லேன் என்கிறாள். கொலைச் செய்திக்குப்பின், இச்செய்தி வருகிறது. தாலி கட்டப்பட்டிருந்தால், கண்ணகி தாலியைக் கழற்றினாள் என, இளங்கோவடிகள் குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. கண்ணகியும் தாலியைக் கழற்றாமல் முடியாது! இங்கேயும் கண்ணகி, வளையல்களை உடைக்கிறாளே தவிர, தாலி கழற்றவில்லை, காரணம் தாலி இல்லை!
கோவலனுக்கும் கண்ணகிக்கும்; திருமணம் நிகழ்ந்த பின்னர், சில தோழியர், அவர்களை அமளியில் ஏற்றுவித்து, பின்வருமாறு வாழ்த்துகிறார்கள்.

காதலற்பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்
தீதறுக!

_ அதாவது, கண்ணகி, தன் இன்னுயிர்க் காதலனை கண்ணிலும் நெஞ்சிலும் பிரியாமல் வாழ்க! கோவலனும் தன் துணையாகிய கண்ணகியைத் தழுவியகை நெகிழாமல் எக்காலத்திலும் வாழ்வதாக! என்பதாகும். இதிலும் தாலிக் கயிறு தங்கவேணும் என்கிற நவீன ஒப்பாரி இல்லை!
ஆகவே, நன்று, முறையே கற்றுத் தேர்ந்து ஆராய்ந்த, வெங்கடசாமி நாட்டார், மதுரை முதலியார், ராசமாணிக்கனார் முதலியோர் கருத்துப்படி, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியங்களிலும் தாலி குறிப்பிடப்படவே இல்லை என்னும் சரியான ஆராய்ச்சி முடிவுக்கு நாம் வரலாம்.

தோழர் சிவஞானம், சிலம்புச் செல்வன் என்றெல்லாம் புகழ் வாங்கிக் கொண்டவர்; அதிலே தேர்ந்த அறிவாளி என்று தமைத்தாமே பாராட்டிக் கொள்பவர். நாமும் அவருக்குத் தெரிந்தது அது ஒன்றுதான் என்று கருதிக் கொண்டிருந்தோம். இப்போது அதுவும் பூஜ்யமா அவருக்கு என்ற ஆயாசம் பிறக்கிறது!

மேலும் தோழர் சிவஞானம் தாலி உண்டு என்ற கூற்றுக்கு, புறநானூற்றுப் பாடல்களிலிருந்தும் ஆதாரம் தேடுகிறார். சான்றாக, ஒரு புறநானூற்றுப் பாடலிலிருந்து இந்த வரியைக் கூறுகிறார்:

ஈகையரிய இழையணிமாதர் _ அதாவது, கொடுத்தற்கரிய தாலி (மங்கல அணி!)யை அணிந்த பெண்கள் என்று உரையாசிரியர் கூற்றையும் சேர்த்துக் காட்டுகிறார். தாலி, கொடுத்தற்கு அரியது என்பது ஆரிய வழக்குப்படி ஏற்பட்ட புனித எண்ணம். இதை, வாதத்துக்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், வெறும் இழையணி என்றாலே, கொடுத்தற்கரியது என்னும் பொருள் வந்துவிடும். மனிதன் என்று சொன்னாலே, சாப்பிடாமல் வாழமுடியாதவன்; சாகாமல் இருக்க முடியாதவன் என்கிற பொருள்கள்_ மனிதனுக்கு இயற்கையாக உள்ள நிலைகள் தோன்றிவிடும்! சாப்பிடாமல் வாழுதற்கரிய மனிதன்; சாகாமல் இருத்தற்கரிய மனிதன்; சாகாமல் இருத்தற்கரிய மனிதன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதிலும் புறம்பாடியவர்களில் ஒரு சிறந்த புலவர் இந்தக் குற்றத்திற்கு ஆட்படமாட்டார். ஆகவே, இழையணி என்பதற்கு ஆபரணங்கள் என்ற பொதுப் பொருளைத்தான் கொள்ள முடியும். தாலிஎன்கிற ஸ்பெஷல் பொருள் கொள்ள முடியாது! ஈகையரிய என்றால், கொடுத்தற்கரிய விலையுயர்ந்த என்னும் பொருள் சுலபமாக வந்து நிற்கிறது. ஆகவே, பொதுவாக, விலையுயர்ந்த நகைகளை (தாலி அல்ல!) அணிந்த பெண்கள் என்று கொள்வதே அறிவுடமை!

இதற்கு எடுத்துக்காட்டாக, புறநானூற்றிலேயே வேறு பாடலைக் காணலாம்! முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்!

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

அறிவோம்! தெளிவோம்!


கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்றுவந்த பலனைப் பெற முடியுமா?

- இது 11.12.14 தினமலர் பக்தி மலரில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு, வேலைநிமித்தமாக கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் பொருத்தமான விஷயம் இது. மற்றபடி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால்தான் சிறப்பு - என பதில் தரப்பட்டிருக்கிறது. ஆக,

ஆரியக் கூத்தாடினாலும் ஆரியம், காசு காரியத்தில் கண்ணாயிருக்கும் என்பது இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குப் போனால்தானே குருக்களுக்குத் தட்சணை கிடைக்கும். பக்தியின் பெயரால் இப்படிச் சுரண்டித்தானே... பார்ப்பனீயம் இதுவரை செழித்துக்கொண்டிருக்கிறது. இதன் ஆணிவேரை அறுக்கத்தானே தந்தை பெரியார் அகவை 95லும் அயராது உழைத்தார்!

விளைவு? இன்று....

அறிந்தோம்! தெளிந்தோம்!!

கோபுர தரிசனம் எதற்கு? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் இந்து மதத்தைவிட்டு விலகவும் கூடாது... ஆனால், அதேசமயம் அவர்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்கவும் கூடாது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதானே பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி! அதன் தாரக மந்திரம்!! இதைத் தோலுரித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்!

அதனால்தானே இன்று தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் இளைஞர் படை அணிவகுத்து நிற்கிறது. இன்று அறிந்தோம்! தெளிந்தோம்!! என்று உறுதிகூறி!

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...

சிறுகதை : அணில் குஞ்சு


- டாக்டர் கலைஞர்

கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப் பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக் கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன.

புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை கிளையாகப் பிரியும் தெருக்களில் அந்தப் பிள்ளைகளும் பிரிந்து சென்றனர். கூட்டமாகக் கிளம்பிய அந்தச் சிட்டுக்குருவிகள் சிறிது நேரத்தில் மூன்று நான்கு பேராகவும் பின்னும் கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இருவராகவும் தங்களின் வீடு நோக்கிச் செல்லும் பாதைகளில் நடக்கத் தலைப்பட்டனர்.

அந்தப் பிள்ளைகளில் ஒருவன்தான் பரூக் _ பத்து வயதிருக்கும். கட்டம் போட்ட கால்சட்டை _ பச்சை நிறத்தில் மேல் சட்டை _ உச்சியை மட்டும் மூடிக்கொண்டு முழுத்தலையையும் மறைக்காத ஒரு வெள்ளைக் குல்லாய், பூ வேலைப்பாடுகளுடன்!

மணி அடித்தவுடன் உற்சாகம் பொங்க ஓடிவந்து, பின்னர் நடக்கத் தொடங்கி, அதற்குப் பிறகு அவன் மேகத்தைப் போல் தெருவில் நகர்ந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த நடையும்கூட தளர்ந்து, எதையோ கூர்மையாகக் காது கொடுத்துக் கவனித்தான்.

பக்கத்தில் யாரோ கூட்டத்தில் பேசுகிற ஒலிபெருக்கி சப்தம். பரூக் நின்றுவிட்டான். பேச்சு தெளிவாகக் காதில் விழுவதற்காக அந்தத் தெருவின் ஓரம் ஒதுங்கினான்.

நானூறு ஆண்டு கால வரலாற்றுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்தது பயங்கரமான மதவெறிக் கூத்தல்லவா? இத்தகைய மதவெறிக்கு நாம் துளியும் இடம் தரலாமா? யோசித்துப் பாருங்கள். கரசேவை என்ற பெயரால் மசூதியை இடித்தது எவ்வளவு வன்முறைக்கு இடம் கொடுத்து நாட்டையே ரத்தக்களரி ஆக்கிவிட்டிருக்கிறது. எனவே, மதப் பூசலுக்கு நமது தமிழ் மண்ணில் அனுமதி கிடையாது என்பதில் அனைவரும் கைகோர்த்து நின்று அணிவகுப்போம்! அமைதி காப்போம்!

அந்த வேண்டுகோளை வரவேற்றுக் கையொலி எழுந்தது.

இதுவரை முழக்கமிட்ட நமது தம்பித்துரை அவர்களுக்கு இந்த சால்வை அணிவிக்கப்படுகிறது.

ஒலிபெருக்கியில் நன்றி கூறி சால்வை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பரூக், பாட்டைக் கேட்டவாறு மீண்டும் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவன் மனத்தில் மட்டும் பாபர் மசூதி _ கரசேவை என்ற அந்தச் சொற்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. மேலும் இரண்டு தெருக்களைக் கடந்திருப்பான்; அப்போது அவன் கவனத்தை மற்றொரு ஒலிபெருக்கி திருப்பியதால் _ அதையும் கேட்கும் ஆர்வத்தில் நின்றுகொண்டான்.
அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதனால் பாபர் மசூதியும் இருக்கட்டும், பக்கத்தில் ராமர் கோயிலும் கட்டிக் கொள்ளலாம் என்று வாதிட்டவர்களின் பேச்சை உண்மையான ராமபக்தர்கள் ஏற்கவில்லை. எனவே அந்த மசூதியை இடித்து அகற்றியதில் எந்தவிதமான தவறும் இல்லை.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கி முழக்கம் நின்றுவிட்டது. ஏன் பேச்சு நின்றுவிட்டது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாமலே பரூக் அங்கிருந்து மெல்ல நடந்து கொண்டிருந்தான்.

பாபர் மசூதி _ கரசேவை _ மதவெறி _ ராமர் கோயில் _ அயோத்தி இந்த வார்த்தைகளைச் சமீபகாலமாக அவன் அடிக்கடி கேட்டிருக்கிறான் என்றாலும், அப்படிக் கேட்கும் போதும் அவற்றைப் பற்றி அவன் ஆழமாகச் சிந்தித்ததில்லை. இப்போது ஒலி பெருக்கிகளில் _ இரண்டு கூட்டங்களின் பேச்சுகளைக் கேட்டபோதும் அதைப் பற்றி முழு விபரமும் தெரிந்துகொள்ள அவனொன்றும் விரும்பவுமில்லை

இருந்த போதிலும் இப்போது அவன் மனத்தில் அலைமோதிய பாபர் மசூதி _ கரசேவை என்ற அந்த இரண்டு வார்த்தைகளுடன், ராமர் கோயில் _ அயோத்தி என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துகொண்டன.

தமிழ் ஓவியா said...

மாலை நேரத்து மெல்லிய காற்று பரூக்கின் உடலைத் தழுவி உற்சாகமூட்டியபோதிலும், அந்த ஒலிபெருக்கிகளில் இரண்டு விதமான கருத்துகள் வெளிவந்ததை நினைத்துக் கொண்டே குழம்பிப்போன நிலையில் ஆகாயத்தைச் சற்று அண்ணாந்து பார்த்தவாறு தன் வீட்டுக்குச் செல்ல இன்னும் இரண்டே தெருக்கள் இருக்கும்போது இடையில் மரங்கள் நிறைந்த ஒரு தெருவில் ஏதோ ஒரு சினிமாப் படம் பார்த்த நினைவில் மெதுவாகக் கைகால்களை அசைத்து நடனமாடிக்கொண்டு போனான்.

என்னப்பா பரூக், தெருவுன்னு நினைச்சியா டிராமா மேடைன்னு நினைச்சியா? டூயட் டான்சா? என்னையும் வேணும்னா சேத்துக்கிட்டு ஆடுறியா?

காய்கறி விற்கிற கிழவி, வியாபாரம் முடிந்து வெறுங்கூடையுடன் எதிரே வந்தவள் இந்தக் கேலி நிரம்பிய கேள்வியைக் கேட்டவுடன், பரூக், படக் என்று பதில் சொன்னான்: நீ என்னைத் தூக்கிக்கிட்டு ஆடேன் பாட்டீ! முடியாதுன்னா வீட்டிலே பாட்டன் காத்துக்கிட்டிருப்பார், அங்கே போயி அவரோட டிஸ்கோ ஆடு பாட்டி!

காய்கறிப் பாட்டிக்குச் சிரிப்பும் கோபமும் வந்துவிட்டது. கணவனுடன் நடனமாடுவதைக் கனவில் கண்டு வெட்கமும் பிடுங்கித் தின்றது. பரூக்கின் கன்னத்தில் லேசாகத்தட்டி, டேய், இப்ராகிம் ராவுத்தர் மவனே! உனக்கு என்னா குறும்பு! என்று கூறிவிட்டு படிக்காத ராவுத்தருக்கு புள்ளையா பொறந்து எவ்வளவு துடிப்பா பேசுறே! என்று ஆச்சரியம் பொங்க அவனை முத்தமிட்டுவிட்டு அவள் போய்விட்டாள் என்றாலும் பரூக்கிற்கு அந்தப் பாட்டியின் மீதுள்ள அன்பும் பரிவும் அங்கேயே அவன் நெஞ்சில் நிலைகொண்டுவிட்டன. அந்தப் பாட்டி, பக்கத்தில் உள்ள காலனியில் வாழ்பவள் என்பதால் அந்தத் தெருவிலிருந்து குறுக்கே போகும் வரப்பு வழியாகப் போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பரூக்கின் அருகே, ஏதோ ஒன்று மரத்திலிருந்து பொத் என்று விழுந்த சப்தம் கேட்டது. திடுக்கிட்டான். திரும்பி மரத்தடியில் பார்வையைச் செலுத்தினான்.

மரக்கிளையிலிருந்து ஓர் அணில்குஞ்சு எப்படியோ தவறியோ, தடம் மாறியோ தரையில் விழுந்து, விழுந்த அதிர்ச்சியில் அசைவற்றுக் கிடந்தது. பரூக்கிற்கு அந்த அணில்குஞ்சின் மீது அனுதாபம் பெருக்கெடுத்தது. உடனே ஓடி அதைக் கையிலெடுத்து ஆசுவாசப்படுத்தினான். அணில்குஞ்சு, மெலிந்த குரலில் கீச்சு கீச்சு என்று முனகியது. இளம் விரல்களால் அதை அவன் இதமாகத் தடவிக் கொடுத்தான். அணில்குஞ்சு அவன் உள்ளங்கையில் புரண்டு, தனக்கு உயிர் இருப்பதை நிரூபித்துக்கொண்டது. மிக லாவகமாக அதைப் பிடித்துக்கொண்டு, ஒரு கையில் அணில்குஞ்சும், அதற்கு இன்னொரு கையின் அணைப்புமாக வீடு நோக்கி விரைந்தான்.

இந்த அணில்குஞ்சை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். அதற்குப் பழரசம் கொடுக்க வேண்டும் பழரசமென்ன, ஒரு கரண்டியோ இரண்டு கரண்டியோ போதுமானது. பள்ளிக்கூடம் போகும்போதும் _ இதைப் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி மனக்கோட்டை கட்டிக்கொண்டு நடந்த பரூக்கின் நினைவுக்கு அணிலைப் பற்றிப் பள்ளி ஆசிரியர் சொன்ன கதையும்கூட வரத் தவறவில்லை. அந்த இனிய ஞாபகத்துடன் கையின் கதகதப்பில் அணில்குஞ்சை வைத்தவாறு பரூக் வீட்டுக்குள் நுழைந்தான். அம்மா! இன்னம் வாப்பா வரலியா? என்று ஆசையுடன் கேட்ட மகனிடம் வாப்பா கசாப்புக்கடை பாக்கியெல்லாம் வசூலிச்சுக்கிட்டு சாயந்திரம் வந்திடுறேன்னு சொன்னாரு. இப்ப வந்திடுவாரு! என்று பதில் சொன்னாள் பரூக்கின் தாயார்.

அப்போது அவன் அப்பா கசாப்புக்கடை இப்ராகிம் ராவுத்தரும் தனது பெரிய மீசையைத் தடவிக்கொண்டு இடுப்பில் கட்டிய லுங்கிக்கு மேலே, பிடிப்பாகப் போட்டிருந்த பச்சை கேன்வாஸ் பெல்ட்டை மேலும் இழுத்துவிட்டுக்கொண்டு, என்னடா, புள்ளையாண்டான் வந்துட்டியா? இன்னைக்கு உங்க ஸ்கூல்ல என்ன விசேஷம்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

வாப்பா! இதோ பாருங்க வாப்பா, அணில் குஞ்சு! மரத்தடியிலே கிடந்துச்சு! இதை நான் வளர்க்கப் போறேன்.

பரூக்கின் தாயும் தந்தையும் இமைகொட்டாமல், அவன் கையிலிருந்த அணில்குஞ்சைப் பார்த்தனர். அவர்களும் அதன்மீது பரிவுடன் தடவிக் கொடுத்தனர்.

வாப்பா, இந்த அணில்குஞ்சு ஒன்னும் சாமான்யமில்லியாம். ராமாயணத்திலே ராமரும் அவரோட சேர்ந்து குரங்குகளும் இலங்கைக்குப் பாலம் கட்டி ராவணன்மீது படையெடுத்தப்ப, அணில்கூட அந்தப் பாலம்கட்ட ராமருக்கு உதவி செஞ்சுதாம். அதுக்காக ராமர் அணில் முதுகிலே மூனு விரலாலே தடவிக்கொடுத்துப் பாராட்டினாராம். அதான் இது முதுகில மூனு கோடுகளாம் _ எங்க டீச்சர் போன வாரம் கிளாசிலே சொன்னாரு!

தமிழ் ஓவியா said...

பரூக் சொன்னதைக் கேட்டவுடன் இப்ராகிம் ராவுத்தருக்குக் கோபம் பொங்கியது. பெரிய மீசைகள் துடித்தன! ராமர் பெயர் _ அவர் தடவிக் கொடுத்த அணில் _ இலங்கைப் பாலம் _ அயோத்தி _ பாபர் மசூதி இடிப்பு இத்தனையும் இணைத்துப் பார்த்துவிட்டார் போலும்! பரூக் சொன்ன கதையை இதுவரை அவர் கேள்விப்பட்டதில்லை.

ஏய் பரூக்! அணில்குஞ்சு நம்ப வீட்ல ஒரு நிமிஷம்கூட இருக்கக்கூடாது! இது இங்கே இருந்தா, இது ராமபக்தன் அணிலோட வீடுன்னு இதையும் இடிக்க வருவாங்க! மரியாதையா இப்பவே கொண்டு போய் இதை எங்கு எடுத்தியோ அங்க கொண்டு போயி விட்டுவிட்டு வந்துடு! ம்... போ!

இது வாயில்லா ஜீவன், இது என்ன வாப்பா செய்யும்? பாவம், போனாப் போகுது, நான் கவனமாக வளர்க்கிறேன் வாப்பா!

டேய், என் பேச்சையா தட்டிப் பேசுறே? இந்த அணில் ராமருக்கு உதவி செஞ்சதுன்னு நீயே சொல்லிட்டு, இது மேல இருக்கிற மூனு கோடும் ராமர் போட்ட கோடுன்னு சொல்லிட்டு அதுக்கப்புறமும் இதை இங்க வளர்க்கிறதா?

முடியாது. இப்பவே கொண்டு போய் விட்டுவிட்டு வா! போ!

பரூக், கண்கலங்க நின்றான். அணில்குஞ்சைப் பரிதாபமாகப் பார்த்தான். பார்த்துக் கொண்டே தன் தாயாரையும் உருக்கமாகப் பார்த்தான். தாயார் இருவருக்கும் பொதுவாக ஒரு சமரச ஏற்பாடு செய்தாள்.

போனாப் போகுதுங்க, இனிமே இருட்டிலே கொண்டு போயி இதை எங்க விட முடியும். பரூக் நல்லபிள்ளை, நம்ப பேச்சை நிச்சயம் கேட்பான். பொழுது விடிஞ்சோன்ன கொண்டு போயி விட்டுட்டு வந்திருவான். ஏன்டா கண்ணு பரூக்? நான் சொல்றது சரிதானே, காலையில கொண்டு போயி விட்டுடணும்!

சரிம்மா!

இரவு அணில்குஞ்சை காற்றோட்டமான ஒரு பிரம்புக் கூடை போட்டுக் கவிழ்த்து விட்டு, அதனருகேயே. ஒரு பாயைப் போட்டுப் பாதுகாப்பாக பரூக் படுத்துக் கொண்டான். இரவு முழுவதும் அவன் தூங்கவே இல்லை. ஒரு சிறிய கரண்டியில் ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு, அதைக் கூடையின் இடுக்கு வழியாக உள்ளே நீட்டி, அதை அணில்குஞ்சு சுவைத்து அருந்துவதை அவன் ரசித்துப் பார்த்துக் களித்தான்.
தந்தையின் கட்டளைப்படி, அணில்குஞ்சை எடுத்துக் கொண்டு அதை எங்கே பத்திரமான இடத்தில் விடலாமென்று யோசித்துக் கொண்டே அதைக் கண்டெடுத்த பழைய மரத்தடியின் பக்கமே பரூக் வந்தான்.

என்னடா, காலங்காத்தாலே எங்கடா போறே? நோக்கு இன்னக்கு ஸ்கூல் இல்லியோ? படிக்காம எங்க வெட்டியிலே சுத்தறே? என்று கேட்டுக்கொண்டே எதிரே வந்தவர், ஆராவமுத அய்யங்கார் _ அந்த ஊரின் சனாதனப் புள்ளிகளில் ஒருவர். அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பரூக் நின்றான்.
என்னடா கையிலே? என்ன வச்சிண்டு அழறே?

அணில்குஞ்சு! இதை வளர்க்கணும்னு எடுத்துக்கிட்டுப் போனேன்...

பரூக், பேச்சை முடிப்பதற்குள் ஆராவமுத அய்யங்கார் பதறிப் போய்,

என்ன, அணிலை வளர்க்கிறதாவது _ அதுவும் நீ வளர்க்கிறதாவது; அணில் ராமரோட கடாட்சம் பெற்ற ஜீவனாச்சே! அதை நீங்க தொடுறதே தப்பாச்சே! என்று சீறினார்.

அப்போது இப்ராகிம் ராவுத்தரும் அங்கே வந்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

என்ன பெரியவாள், ஏன் பையன்கிட்ட கோபிக்கிறீங்க? என்ன தப்பு செஞ்சான் என் மவன்?

இப்ராகிம்! உமக்கு விஷயம் தெரியாதோ? அணில் வளர்க்கிறானாம் இவன்? அது ராமரோட சிஷ்யப் பிராணி! அதை வளர்க்க உங்க மதத்திலே உள்ளவாளுக்கு என்ன உரிமை இருக்கு? மகா பாபமில்லையோ?

ஆராவமுதரின் இந்த எரிச்சல் வார்த்தைகளைக் கேட்டதும் இப்ராகிம் ராவுத்தருக்கும் சினம் தலைக்கேறிவிட்டது. உரிமைக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏன், நாங்க வளர்த்தா என்ன? அயோத்தியிலே எங்க மசூதிதான் இருக்கக் கூடாதுன்னு இடிச்சீங்க. அணில் கூடவா வளர்க்கக் கூடாது? நல்ல நியாயம் இது
என்னங்காணும் ராவுத்தரே, என்கிட்ட நியாயம் பேச வந்துட்டீர்? அணில் குஞ்சுக்கும்  அயோத்திக்கும் ஏன் முடிச்சுப் போடுறீர்?

நீங்கதான் அணில்குஞ்சுக்கும் ராமருக்கும் முடிச்சுப் போடுறீங்க?

நீதான் அயோத்தியைப் பத்திப் பேசி எங்க இந்துக்கள் மனசைப் புண்படுத்துறே?

மரியாதையா பேசணும். நீ நான்னு ஒருமையிலே பேசினா நானும் பேசுவேன்!

வார்த்தைகள் இருவரிடையே தடிக்கத் தடிக்க மரத்தடியில் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கில் கூடிவிட்டனர். பெரிய கலவரத்துக்கான கைகலப்பு ஏற்படப் போகிறது என்று கேள்விப்பட்ட பரூக்கின் தாயாரும் தலைதெறிக்க அங்கு ஓடிவந்து விட்டாள். தனது முக்காட்டை மேலும் இழுத்து மூடியவாறு, மரமொன்றின் பின்னால் மறைந்துகொண்டு,

ஏய் பரூக்! எல்லாம் உன்னால வந்த வினைதான்! அந்த அணில்குஞ்சைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்துடு! இல்லாவிட்டால் இந்த ஊர்ல பத்துக் கொலை விழுந்துடும்.

அங்கு ஆவேசமாக நின்றுகொண்டிருந்த இரு தரப்பினருமே குரல் வந்த திசையை நோக்கினர். பரூக்கும், அம்மா! என்று கதறியபடி மரத்தடிக்குச் சென்று அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் கொட்டக் கொட்ட, அந்த அணில் குஞ்சை அந்த மரங்களுக்கு இடையே தரையில் மெல்ல வைத்தான்.

திடீரென ஒரு பருந்து.... மரக்கிளையில் அமர்ந்திருந்தது. இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு  அந்த அணில்குஞ்சின் மீது பாய்ந்தது. அதே வேகத்தில் அந்த அற்ப ஜீவனுடன் ஆகாயத்தில் பறந்தது.

இருசாராரும் கலைந்து சென்றனர். அந்த ஊரின் அமைதியை அந்த அணில்குஞ்சு காத்தது, அதனால் முடிந்த தியாகத்தைச் செய்து!

எனினும் பரூக் மட்டும், பருந்து எடுத்துச் செல்லும் அணில்குஞ்சைப் பார்த்தவாறு கண்ணீர் சிந்தி நின்றான்.

தமிழ் ஓவியா said...

சொன்னது சொன்னபடி


அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எனினும் இப்போதைய சூழ்நிலையில் கோவில் கட்ட முடியவில்லை. காரணம், ராஜ்யசபாவில் எங்கள் கட்சிக்குப் போதிய பலம் இல்லை. அதனால்தான் ராஜ்யசபாவில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற முடியவில்லை.

- ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர்

முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். அதற்கு பா.ஜ.வும் ஆதரவு அளித்து அப்போது தவறு செய்துவிட்டது. நான் பிரதமரானதும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பல மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன.

- நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்

திருநங்கைகள் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக அவர்களுக்கு எதிராக இருக்கிற 377 சட்டப் பிரிவை முழுமையாக நீக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு என்பது எப்படி அரசு மற்றும் தனியார் துறையில் அனைவருக்கும் கிடைக்கிறதோ அதேபோல் திருநங்கைகளுக்கும் வழங்க அரசு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

_ திருநங்கை ரேவதி

உயர் பதவிகளில் இருப்பவர்கள் வழக்கமான சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தர முடியும்.

_ ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்

சென்னையிலும் அதனைச் சுற்றியுள் ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் உள்ள மரங்களின் அடர்த்தி 13 விழுக்காடு குறைந்திருக்கின்றன. இந்த அளவில் மரங்களின் மோசமான இழப்புக்குக் காரணம் ரியல் எஸ்டேட் தொழில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதே ஆகும்.

இதனைச் சரிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து மரங்களை நடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மரங்கள் நடுவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அதனை முறையாகப் பராமரிப்பதுதான் அந்த முயற்சியின் முழுமையான வெற்றி.

-  சாந்தா ஷீலா நாயர், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டினர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விஷயத்தில் பன்னாட்டு விதிமுறையைப் பின்பற்ற சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் விரைவில் பரிசீலிக்கும்.

_ அம்மான், பொருளாதாரத்துறை அமைச்சர், சுவிட்சர்லாந்து

மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மாநிலங்களவையின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

_ சோம்நாத் சட்டர்ஜி, மக்களவை மேனாள் தலைவர்

கார்கில் போரின்போது நான்கு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் முன்னேறினர். அந்தப் போரில் இந்தியாவின் கழுத்தை நெரித்துவிட்டோம். அதை இந்தியாவால் மறக்கவே முடியாது.

_ பர்வேஸ் முஷாரப், மேனாள் அதிபர், பாகிஸ்தான்

தமிழ் ஓவியா said...

புதுப்பா


ஓராயிரம் சூரியனின்
வெப்பம் தெறிக்கும்,
உன் வார்த்தைகள்!
எதிரிகளை வதம் செய்கையில் உன் (எழுத்து) நடையின்
அதிர்வில்
நடுங்குகிறது ஆரியம்! உன் சிந்தனையின்
பெரு வெடிப்பில்
சின்னா பின்னமாகிறது
ஜாதியக் கோட்டைகள்!
உன் கைத்தடியில்
அடி பட்டு
நொறுங்கிக் கிடக்கிறது
மத வெறி! தன்மானம் இழந்தேனும்
இனமானம் காத்தவரே,
கனமான கொள்கைகளை
கிழத் தோளில் சுமந்தவரே, எத்தனை விமர்சனம்
இன்றும் உன் மீது,
எவர் சொன்னது ?
நீ இறந்து விட்டாயென்று ....

-  பாசு.ஓவியச் செல்வன்

தமிழ் ஓவியா said...

ஆட்சியர் அணியலாமா கூலிங் கிளாஸ்?



சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மே 9 அன்று சென்ற பிரதமர் மோடியை அம்மாநிலத்திலுள்ள பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா வரவேற்றுள்ளார். அப்போது அவர், பந்காலா என்ற அலுவலக அதிகாப்பூர்வ அணியாமலும் கூலிங் கிளாஸ் அணிந்தும் கை கொடுத்து (கொலுத்தும் வெயிலில் அணியத்தக்க உடை அல்ல அது) பிரதமரை வரவேற்றதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அதில், பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். நீங்கள் அப்போது முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதுடன் கூலிங் கிளாஸ் அணிந்தும் வரவேற்றுள்ளீர்கள். இனி இத்தகைய தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டாம் என மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது.

நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத் துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

மோடி மட்டும் கோமாளி கூத்து போல விதவிதமான ஆடைகள்  அணிவதும், ஆடை முழுவதும் தன்னுடைய பெயரை பதித்து 10 இலட்ச ரூபாய்க்கு வெளிநாட்டு ஆடை  அணிவதும் நடக்கலாம். அய்.ஏ.எஸ். அதிகாரி வெயிலுக்கு கூலிங்கிளாஸ் அணியக் கூடாது. நல்லா இருக்கு உங்க நடத்தை விதிமுறைகள்!

தமிழ் ஓவியா said...

கொல்லைப்புற வழியே குலக்கல்வியா?



- மஞ்சை வசந்தன்

மத்திய அமைச்சரவை 13.05.2015 அன்று கூடி சிறார் தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தச் செய்தி வெளிவந்த அன்றே பி.ஜே.பி ஆட்சியை அணுஅணுவாய் கூர்ந்து நோக்கிவரும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு,  கிளர்ச்சி வெடிக்கும்! விளைவு விபரீதமாய் இருக்கும் என்று திட்டவட்டமாய் தெரிவித்து விட்டார்கள்.

சிறார் தொழிலாளர் சட்டப்படி 14 வயதுவரை சிறுவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அவர்களை வேறு வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம்.

இச்சட்டத்தில்தான் பி.ஜே.பி. அமைச்சரவை சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளதாம்!

அவை என்ன?

குடும்பப் பாரம்பரியத் தொழில்கள் (குலத்தொழில்கள்) திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் என்பது போன்ற பொழுதுபோக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்கு உட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறு எந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் சிறார் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

சட்டத்திருத்தம் எப்படியிருக்க வேண்டும்?

எந்தவொரு சட்டத்திருத்தமாயினும் அது நடப்பில் உள்ள சட்டத்தின் இலக்கை (நோக்கை) மேலும் சரியாக, சிந்தாமல், சிதறாமல், முழுமையாய் எட்டக்கூடியதாகச் செய்யும் வகையில்தான் இருக்க வேண்டும். அதன்படி சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் திருத்தம், சிறார் ஒருவர்கூட கல்வியைத் தவிர வேறு பணியில் ஈடுபடுவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும்.

நடப்பில் சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டம் இருக்கும் நிலையிலே நாடு முழுமையும் 1,26,00,000 (ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம்) சிறார் தொழிலாளர் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறார்களின் தொகையில் இது ஒரு கணிசமான சதவீதம். இதற்கு வேதனைப்பட வேண்டும், தீர்வு காண முயல வேண்டும், நெஞ்சு பதைக்க வேண்டும்.

இருக்கும் சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும். 14 வயது என்பதை 18 என்று உயர்த்த வேண்டும். இருக்கும் தண்டனையை இன்னும் உயர்த்த வேண்டும். (கடுமையாக்க வேண்டும்) ஓட்டைகளை அடைக்க வேண்டும், விதிவிலக்குகளை விலக்க வேண்டும்; கண்காணிப்பைத் தீவிரமாக்க வேண்டும். இலவசக் கல்வியை, கல்வி உதவித் தொகையை இன்னும் சிறப்பாக விரிவாகச் செயல்படுத்த வேண்டும். இதுதான் சட்டத்தின் இலக்கை எட்ட செய்யப்பட வேண்டிய திருத்தத்திற்கான இலக்கணம்; வரையறை, நெறிமுறை!

திருத்தம் என்ற பெயரில் ஒரு கருவியையோ, வாகனத்தையோ, வீட்டையோ செம்மை செய்தல், மேம்படுத்துதல், திருத்தம் செய்தல் என்றால் என்ன பொருள்? அதைத் தற்போதுள்ள நிலையினும் வசதி, நுட்பம், நேர்த்தி, பாதுகாப்பு இவற்றை மேம்படுத்துவதாகும்; மாறாக ஆங்காங்கே ஓட்டைபோடுவதா மேம்பாடு, திருத்தம், செப்பம்?

ஆனால், திருத்தம் என்ற பெயரில் விதிவிலக்குகளை உருவாக்கி, சட்டத்தின் நோக்கத்தையே அழித்து, பாதுகாக்கப்பட வேண்டியவர்களுக்கு பாதிப்பை உருவாக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது என்பது சூது, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம், கீழறுப்பு அல்லவா?

முதலாளிகளும், கார்ப்பரேட் கம்பெனிகளும் மிக எளிதில் சிறார் தொழிலாளர்களை, சட்ட மீறல் இன்றி வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வகையில் திருத்தங்களைச் செய்துவிட்டு, சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை 20,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்திவிட்டோம் என்பது ஊரை ஏமாற்றும் மோசடியல்லவா?

இச்சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?

(அ) கொல்லைப்புற வழியே குலக்கல்வியைக் கொண்டு வருவது:-

இராஜாஜி முதலமைச்சராய் இருந்தபோது குலக்கல்வியைக் கொண்டு வந்தார். பள்ளிப் படிப்போடு, ஒவ்வொரு நாளும் குலத்தொழிலையும் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்றார்.

தந்தை பெரியாரின் எதிர்ப்பு, போராட்டம், கிளர்ச்சி, எச்சரிக்கையால் அது திரும்பப் பெறப்பட்டதோடு, இராஜாஜியும் பதவி இழந்தார்.

சிருங்கேரி சங்கராச்சாரி உட்பட மதவாதிகள் குலக்கல்வியை அண்மையில்கூட ஆதரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

குலவழி தொழில் கற்பிக்கப்படும்போது, அவர்கள் மிகவும் திறமையோடும், நுட்பத்தோடும் செய்வர் என்று வாதத்தையும் வைத்துள்ளனர்.

1. அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், சிறார் சட்டத்திருத்தம் என்ற போர்வையில், கொல்லைப்புற வழியே மீண்டும் கொண்டுவர ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். _ பி.ஜே.பி. அரசு முயற்சி செய்கிறது.

2. உயர்ஜாதியினர் தங்கள் பிள்ளைகளைத் தொலைக்காட்சித் தொடர், கலைத்துறை போன்றவற்றில் ஈடுபடுத்தி வருவாய் ஈட்ட இந்த வழியில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முயலுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

3. முதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சிறார் தொழிலாளர்களின் உழைப்பை குறைந்த கூலிக்கு (அதிக உழைப்பைச் சுரண்ட இதன்மூலம் வழிசெய்து கொள்ளத் துடிக்கின்றனர்.

இதன் கேடு யாருக்கு?

உயர் ஜாதிக்காரர்களுக்கும், முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இது பெரும்பயன் அளிக்கும். ஆனால், இதன் கொடும் பாதிப்பு ஏழை எளிய, சூத்திர, பஞ்சம மக்களுக்கு அல்லவா? அதாவது பயன் 3% மக்களுக்கு, பாதிப்பு 97%. 3% மக்களின் நன்மைக்காக, 97% மக்களுக்கு எதிரான ஆட்சியே பி.ஜே.பி. ஆட்சி என்பதன் வெளிப்படையான நிரூபணம் அல்லவா இச்சட்டத் திருத்தம்?

ஆதரவுக் குரல் எழுப்பும் அரைவேக்காடுகளின் சிந்தனைக்கு:

இச்சட்டத் திருத்தத்திற்கு மனிதநேயம் கொண்ட சிந்தனையாளர்கள், இயக்கங்கள், கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பெரியாரின் தொண்டர்கள் என்று பலதரப்பாரும் எதிர்ப்பும், கண்டனமும், எச்சரிக்கையும் செய்துவரும் நிலையில், சில சுயநல ஆதிக்கப் பேர்வழிகள் மக்களைக் குழப்பும் வகையில் சில விளக்கங்களை _ வாதங்களை முன்வைக்கின்றனர். எனவே, அவர்கள் கூறுபவை அனைத்தும் அற்பத்தனமானவை, அரைவேக்காட்டுத்தனமானவை, ஆழ்ந்த சிந்தனையில்லாதவை என்பதை இங்குச் சுட்டவேண்டியது கட்டாயமாகிறது.

ஆதரவு வாதங்கள் எவை?

(அ) குலத்தொழிலைக் கற்பதற்குச் செலவு இல்லை. பெற்றோரிடம் இலவசமாகக் கற்கலாம்.

(ஆ) குலத்தொழிலைக் கற்பது எளிது, திறமையாகச் செய்ய இயலும்.

(இ) கல்வியைத் தாண்டி ஒரு கூடுதல் தொழிலைக் கற்பதில் என்ன தவறு?

இவையே இவர்கள் முன்வைக்கும் வாதம்.   மேலோட்டமாகப் பார்க்கும் எவரும் இவை சரிதானே! என்று எண்ணுவர். ஆனால், ஆழமான அறிவோடும், அனுபவத்தோடும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், மனித நேயத்தோடும், சிறார்களின் உளநிலை நோக்கிலும் சிந்தித்தால் இவை சூழ்ச்சியான வாதங்கள் என்பது தெற்றென தெளிவாய்ப் புரியும்!

வீட்டில் குலத்தொழில் பயில செலவு இல்லை; கற்பது எளிது, திறமையாய் செய்ய இயலும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. இது திசை திருப்பி ஏமாற்றும் வாதம். காரணம், இது அடிப்படையிலே தவறான வாதம்.

தமிழ் ஓவியா said...

ஒரு படிக்கும் மாணவன் காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும். பின் காலைக்கடன் முடித்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து 1 மணி நேரமாவது விளையாட வேண்டும். அதன்பின் படிக்க வேண்டும். இரவு 11 மணிவரை படிப்பு, வீட்டுப்பாடம் முடித்தல் எல்லாம். இதிலே உணவு, குடும்பத்தாருடன் பழகுதல், தொலைக்காட்சி பார்த்தல் என்று இடையிடையே கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள். அப்படியிருக்க, பரம்பரைத் தொழிலைப் பயில ஓய்வு எங்கேயிருக்கிறது?

கற்பதும் கற்பிப்பதும் இருதரப்புப் பணி. பிள்ளைகளுக்கு ஓய்வு இருந்தால் பெற்றோருக்கு ஓய்வு இருக்காது; பெற்றோருக்கு ஓய்வு இருந்தால் பிள்ளைகளுக்கு ஓய்வு இருக்காது. உண்மை நிலை என்னவென்றால் படிக்கும் பிள்ளை பாரம்பரியத் தொழில் பயில இருதரப்பிற்கும் ஓய்வு அறவே கிடைக்காது என்பதேயாகும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கற்கலாமே என்று எதிர் தரப்பினர் கேட்கலாம். படிக்கும்  பிள்ளைகளுக்கு சனி, ஞாயிறு விடுப்பு என்பது நடைமுறையில் உண்மை இல்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிப் படிப்பு சார்ந்த பாடங்களுக்குச் சிறப்பு வகுப்புகள். ஒவ்வொரு ஆசிரியர் நடத்தும் வகுப்பிற்கும் மாறிமாறிச் செல்ல வேண்டும். அதன்பின் வீட்டுப்பாடம், பதிவேடு, படம் வரைதல் படித்தல் வகுப்புத் தேர்வுக்குத் தயார் செய்தல் எனறு பல. இத்தனைக்கும் இடையே பிள்ளைகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விளையாட வேண்டும். நண்பர்களோடு களிக்க வேண்டும்.

உண்மைநிலை இப்படியிருக்க இதில் பகுதிநேரமாகப் பாரம்பரியத் தொழில் பயில நேரம் ஏது? இந்த வாதம் செய்கிறவர்கள், ஆதரித்துப் பேசுகிறவர்கள் யார்? மதவெறி பிடித்த, உயர்ஜாதி வழக்குரைஞர்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தத் தெரியும். பள்ளி மாணவர்களைப் பற்றிப் பேச அவர்களுக்கென்ன தகுதியுள்ளது?

கட்சிக்காரர்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் அழைப்பதைத் தவிர்த்து, துறை வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோர், மாணவர் என்று கருத்துக் கேட்க வேண்டும். அதைவிட்டு, வாய்கிழியக் கத்துகின்ற வறட்டு, முரட்டு ஆட்களை அழைத்துப் பேசுவது ஆக்கபூர்வமானதல்ல. அடுத்து அவர்கள் வாதம், தொழில் ஒன்றைக் கூடுதலாய்க் கற்பதில் தவறென்ன? எந்தத் தொழிலும் இழிவல்லவே என்பது!

கல்வியோடு கூடுதலாய் ஒரு தொழிலைக் கற்பதைத் தவறு என்று யாரும் சொல்லவில்லை; எந்தத் தொழிலும் இழிவு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், கற்பதற்கு ஏதுநேரம் என்பதே முதல் கேள்வி. இல்லை என்று விளக்கிவிட்டோம்.

அடுத்து கூடுதலாக தொழில் கற்பது என்பது பரம்பரைத் தொழில் என்பது அயோக்கியத்தனம் அல்லவா?

கூடுதலாய் ஒரு தொழில் கற்க வேண்டுமானாலும், மாணவர் விரும்பும் தொழிலைத்தானே கற்க வேண்டும்? பரம்பரைத் தொழிலைத் திணிப்பது மனித உரிமை மீறல்; குற்றம் அல்லவா?

தொழில் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு, கல்விப் பாடத்திட்டத்திலே, மேல்நிலை வகுப்பு, மற்றும் கல்லூரிகளில் வாய்ப்புண்டு.

சமையல், பீங்கான் தொழில், பிட்டர், வெல்டர், மோட்டார் ரீவைண்டிங், ரேடியோ, டி.வி., மோட்டார் மெக்கானிக், கணினி, கட்டடக் கலை, நெசவு, நுண்கலை, வேளாண்மை, பொறியியல் என்று பல தொழிற்பிரிவுகள் உள்ளன. அதில் சேர்ந்து விருப்பம் உள்ளவர்கள், விருப்பம் உள்ள தொழிலைப் பயிலலாம். அதை விட்டுவிட்டு பரம்பரைத் தொழிலைப் பயிலச் சொல்வது வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டி, சூத்திரனாக்கி, கல்லாதவனாக்கி, நல்ல அடிமைகளைத் தங்களுக்கு உருவாக்கிக் கொள்ள முயலும் மோசடியான முயற்சியல்லவா இது!
மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரானது அல்லவா இது!
இளம் வயதில் பஞ்சாலையில் வேலை செய்யும் பெண்களுக்கு கருப்பைப் பாதிப்பு, இருபாலருக்கும் நுரையீரல் பாதிப்பு, வெடிமருந்து, பீடி போன்றவற்றில் உடல் நலம், உயிர் பாதிப்பு.

இப்படி ஆபத்து, விபத்து நிறைந்தவற்றில் நேரும் விபத்துகள், கேடுகள், பாதிப்புகள் சிறார்களை வாழ்நாள் முழுக்க பாதிப்புக்குள்ளாக்கி, பாழாக்கும் கொடுமைகள் அல்லவா?

இப்போதுதான் முதல்தலைமுறை படிக்கத் தொடங்கியிருக்கிறது. வாய்ப்புக் கொடுக்கப்பட்டதும் வியப்பை உண்டாக்கும் வகையில் பெண்களும், அடித்தட்டு சமுதாய மாணவர்களும் உயர் ஜாதியினரை ஓரம்கட்டி சாதித்து வருகின்றனர்.

இதைப் பொறுக்க முடியாத ஆதிக்க ஜாதியினர், அரசியல், ஆட்சித் துணையோடு குலக்கல்வியைக் கொல்லைப்புறமாகக் கொண்டுவர முயற்சித்தால், பெரியாரின் தொண்டர்களும், மனிதநேய இயக்கங்களும், 97% மக்களும் வெகுண்டு வேகங்கொண்டு எழுந்தால், விளைவு விபரீதமாய் இருக்கும்! ஆதிக்க ஜாதியினருக்கும், அரசுக்கும் எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?


தாலிக்கு எதிராய்

புரட்சிக்கவிஞர் மகளின் கேள்வி :

நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?

1944இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரஸ்வதிக்கும், கரூர் அருகில் உள்ள கட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணப்பருக்கும் திருமணம் முடிக்க முடிவாயிற்று.

திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றி பேச்சு எழுந்தது. உடனே சரசு (சரஸ்வதி) என்னைப் பார்த்து,

ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிட்டியில் கட்டுவதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?

என்று கேட்டாள். நான் வியப்பில் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக்கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன்.

- திருமதி மஞ்சுளாபாய் கானாடுகாத்தான்

குறிப்பு: திருமதி மஞ்சுளாபாய் பெரும் செல்வந்தரான வை.சு.சண்முகம் செட்டியாரின் இணையர். தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் ஆகியோருடன் பற்றுக் கொண்டவர். அன்னை நாகம்மையார் காலனியில் தங்கி, சுயமரியாதை இயக்கப் பணியாற்றியவர்.

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் உயிரிழப்பை பகவான் தடுக்காததேன்?


கடவுள் நம்பிக்கை, பக்தி இவைதான் மூடநம்பிக்கைகளிலேயே தாய் மூடநம்பிக்கை! காரணம், அறிவுக்குச் சிறிதேனும் இடந்தராது கண்ணை மூடிக்கொண்டு நம்பி, மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் என்பதுபோல மீளமுடியாத பழக்கம், பிறகு வழக்கமாகியதன் விளைவுதான் இந்த நம்பிக்கை.

மனிதனைவிட கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று காட்டி, பக்தியின் பேரால் சுரண்டிக் கொழுப்பதில் மதங்களுக்குள் போட்டி ஏராளம்!

இதற்கு விதிவிலக்கு சிராவணம் (சமணம்), பவுத்தம் _ இரண்டும் கடவுளை நம்பாத நெறிகள். (பிற்காலத்தில் இவற்றையும் மதமாக்கி புத்தரை அவதாரமாக்கி, ஜாதகக் கதைகளை தம் இஷ்டம்போல் புனைந்து புழக்கத்தில்விட்டுள்ளனர்.

மனிதனைவிட கடவுளே உயர்ந்தவர். இயற்கையை மீறிய சக்தி என்றெல்லாம் புளுகப்பட்டது!

முப்பெரும் தன்மைகள் எல்லா மதக் கடவுள்களுக்கும் இட்டுக்கட்டப்பட்டன!

எல்லாம் கடவுள் செயலா? சிந்தியுங்கள்!

1. கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர். (Omnipotence)

2. கடவுள் சர்வவியாபி (Omnipresence)

3. கடவுள் கருணையே வடிவானவர் (Omniscience)

இந்த மூன்றும் எந்தக் கடவுளுக்கு இருந்தது _ இருக்கிறது என்று இதுவரை உலக நடப்புகள் தொன்றுதொட்டு இன்றுவரை நிரூபித்து உள்ளனவா?

கடவுள் சர்வசக்தி உடையவன் என்றால், அவனால் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவனது பிள்ளைகளுக்குள் சண்டை _ போர் _ நடந்து ஒருவரை மற்றவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை முன்கூட்டியே அவன் தடுத்து இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?

கடவுளைத் தொழ _ வணங்கச் செல்லும் பக்தர்கள் உயிர் பறிபோகிறது விபத்து மூலம். அதை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ள கருணையே வடிவான கடவுள் தடுத்து இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

தூங்கிய காவல்காரனைக்கூட தண்டிக்கிறோம்; காரணம், அவன் கடமை தவறி தூங்கியதால் பொருள் களவு போனது என்று. இத்தனைக்கும் அவன் சராசரி மனிதன்; ஆனால், அதைவிட மேலான அற்புத சக்தி படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள்கள் ஏன் 10 ஆயிரம் மக்களைப் பலிகொண்ட ஈவிரக்கம் அற்ற நேபாள பூகம்பத்தைத் தடுத்து நிறுத்தவில்லை?

எவ்வளவு அறியாமை!

ஒரு சில உயிர் பிழைத்தவர்கள் நாங்கள்  தெய்வாதீனமாக _ கடவுள் அருளால் உயிர் பிழைத்து மீண்டோம் என்று கூறுகின்றனரே!

இத்தனை ஆயிரம் பேர் செத்தார்களே!  அது எந்த ஆதினம்? என்று பகுத்தறிவு உள்ளவர் கேட்க வேண்டாமா?

பஞ்சாபில், ஒரு மத்திய அமைச்சருக்குச் சொந்தமான ஓடும் பேருந்தில் ஓர் இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையோடு, அப்பெண்ணை ஓடும் பேருந்திலிருந்து கீழே, ஈவிரக்கம் சிறிதும் இன்றி தள்ளிவிட்டனர்; அவர் மாண்டார்.

இந்தக் கொடுமையான காட்டுமிராண்டிச்  செயலைக் கண்டித்து நாடே குமுறிய நிலையில் (சில வாரங்களுக்கு முன்) பஞ்சாப் அமைச்சரவையில் அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க. கூட்டணி அமைச்சர்) இதுபற்றி சிறிதும் கூச்சநாச்சம், மனிதாபிமானம் இன்றி, இது ஆண்டவன் செயல் என்று வெகு சாதாரணமாகக் கூறி, இன்னமும் அமைச்சராக நீடிக்கும் அவலம் இந்த ஞானபூமியில் உள்ளது!

நம் கடவுள்கள் எவ்வளவு கேவலமான, கொடூரமான உணர்வாளர்களாக இருக்க வேண்டும்? மகா வெட்கக்கேடு! இது நம் நாட்டில் மட்டுமா? கடவுள் நம்பிக்கை என்ற மூடத்தனம் உலகளாவிய நிலையிலும்கூட மக்களை எப்படி ஏமாற்றப் பயன்படுகிறது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:

முன்பு அமெரிக்காவில் அதிபராக (குடியரசுக் கட்சி) இருந்து, ஈராக் மீது போர் நடத்தி அந்நாட்டை அழிக்க முயன்ற (ஜுனியர்) ஜார்ஜ் புஷ் அவர்கள், ஈராக் மீது போர் தொடுக்குமாறு கடவுள்தான் எனக்குக் கட்டளை இட்டார் என்று புருடா விடவில்லையா?

கடவுள் என்பது எப்படிப்பட்ட ஏமாற்றுக் கருவியாகப் பலருக்கும் பயன்படுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையா?

சில நாள்களுக்கு முன் வேலூர் அருகில் ஒரு கோவில் தேரோட்டத்திற்காக _ தேர் இழுத்து, பொம்மை விளையாட்டு விளையாடிய பெரியவர்களில், மின்சாரம் தாக்கி (தேரின் கம்பி மின்சாரக் கம்பியுடன் உரசி) ஆறு பேர் உயிர் இழந்த கொடுமை கண்டு, நாம் துன்பமும் துயரமும் கொள்ளுகிறோம்.

பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்து தேர் இழுத்தனர். கருணையே வடிவான கடவுள் காப்பாற்றவில்லையே!

கடவுளைவிட மனிதன் கண்டுபிடித்த மின்சாரம் சக்தி வாய்ந்தது என்பது புலனாகவில்லையா?

இம்மாதிரி பக்தர்களின் மரண ஓலம் நாளும் இடையறாது கேட்டுக் கொண்டேதானே இருக்கிறது!

இதெல்லாம் தலைவிதி _ தலையெழுத்து என்று சமாதானம் கூறப்படுமானால், கடவுள் சக்தியற்றவராக, கருணையற்றவராக  அதற்குமுன் காட்சியளிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எத்தகைய பொய்யாமொழி!

சிந்தியுங்கள் பக்தர்களே, சிந்தியுங்கள்!

நாம் வாழுவது 21ஆம் நூற்றாண்டில்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


மாண்டேகு - செம்ஸ் போர்டு அறிக்கை, சட்டம் ஆவதற்கு முன், நீதிக் கட்சித் தலைவரான டாக்டர் நாயர் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் சட்டமன்றத்தில் ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தச் சென்றபோது, 1918ஆம் ஆண்டு லண்டனுக்குத் இங்கிலாந்து அரசாங்கம் அவர் கருத்துத் தெரிவிக்கத் தடைபோட்டதும், தளர்ச்சி அடையாமல் டாக்டர் நாயர், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்துத் தடையை நீக்கச் செய்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் சென்னை திரும்பினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. அரசு எங்கே போகிறது?

அவசர நிலைப் பிரகடனம் வரும்

அத்வானி அபாய அறிவிப்பு!



புதுடில்லி, ஜூன் 18_ முன்னாள் பிரதமர் இந் திரா காந்தி காலத்தில் அவசரநிலைப் பிரகடனத் தின்போது சிறை சென்ற அன்றைய ஜனசங்கக் கட்சித் தலைவரும் இன் றைய பாஜகவின் முக்கிய தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி மீண் டும் ஒரு அவசரநிலைப் பிரகடனம் வர 99 விழுக் காடு வாய்ப்புள்ளது என் றும், இதற்குக் காரணமாக அவர் கூறும் போது மோடி அரசின்மீது எதிர் கட்சிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது அரசு வேறு வழி யின்றி அவசர நிலைப் பிரகடனம் செய்யக் கூடும் என்று கூறினார்.

பத்திரிகைக்குப் பேட்டி

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வியாழ னன்று பேட்டியளித்த லால்கிருஷ்ண அத்வானி கூறும்போது,

மீண்டும் ஒரு அவசர நிலைப் பிரகடனத்திற்கு தற்போதைய அரசு தயா ராகி வரக்கூடும். இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் சூழல் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது. 2015- ஆம் ஆண்டு இறு திக்குள் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை களால் சூழ்நிலையை சமாளிக்க இயலாத நிலை உருவாக்கூடும், அந்த நேரத்தில் அவசரநிலைப் பிரகடனம் ஏற்பட்டால் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை மக்களைப் பாதுகாக்கும் கவசமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் மக்களின் சுதந் திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பை யும் மறுக்க முடியாது.

அதிகாரம் திசை மாறுகிறது

அவசரநிலைப் பிரகட னத்தை இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அதுவும் தற்போதைய சூழலில் கொண்டுவருவது இயலாதகாரியம் என்றா லும், மக்களாட்சியில் சில எதிர்மறை சக்திகளின் வலிமை பெருகிக் கொண்டு இருக்கிறது, மேலும் சில அரசியல் சக்திகளின் தலைமையின் போக்கில் மாற்றம் ஏற்படும் போது அது அவசரநிலைப் பிர கடனத்திற்கு வழிவகுக் கும், காரணம் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிலரின் கைகளில் இருந்து அதிகாரம் திசைமாறு கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.     தற்போதுள்ள சூழ் நிலையில் நான் அவசர நிலைப் பிரகடனம் குறித்து வலியுறுத்திக் கூறக்காரணம் _ அரசியல் சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இங்கு நீதிமன் றம் மற்றும் ஆட்சி அதி கார வலிமை மெல்ல மெல்ல வலுவிழந்து கொண்டிருக்கிறது.

2015- இறுதியில் மீண் டும் அரசியல் குழப்பம் ஏற்படும்; இந்த நிலையில் அவசர நிலைப்பிரகடனம் என்பது தவிர்க்க முடி யாது ஒன்றாகிவிடும். அப் போது எந்த அரசியல் சக்தியும் மக்கள் உரிமை களை மீட்டெடுக்க குர லெழுப்ப இயலாத நிலைக் குச் சென்றுவிடும், எப்படி இந்திரா காந்தியின் காலத் தில் ஏற்பட்டதோ அதே நிலை மீண்டும் ஏற்படும் என்று என் உள்மனம் கூறுகிறது என்று கூறி னார்.

கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவு பற்றி கூறும் போது ஊடகங்களுக்கு அளவுக்கு மீறி சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அதி காரம் மக்களின் உரிமை மற்றும் மக்களாட்சிக்கு எதிராக திருப்பப்படும் அச்சமும் உள்ளது. எடுத் துக்காட்டாக அன்னா அசாரே நடத்திய ஊழல் ஒழிப்புப் போராட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இறுதியில் அது அரசியல் கலந்து ஆம் ஆத்மி கட்சி உருவாகவே பயன்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந் துள்ளனர்.

ஆம் ஆத்மி கருத்து

அத்வானியின் இந்த பேட்டி குறித்து உடனடி யாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி கூறிய போது, அரசியலில் மிக வும் பழுத்த அனுபவாதி யான அத்வானி இப்படி மக்களாட்சிப் படுகொலை குறித்து கூறுவது, மிகவும் வியப்பாக உள்ளது.

மோடி தலைமையை ஏற் றுக்கொண்டு மோடிக்கு எதிராகவே கருத்து கூறு வது நகைப்பிற்குரியதாக உள்ளது. அத்வானியின் இந்தப் பேச்சு சுஷ்மாவின் தவற்றை திசை திருப்புவ தற்காகக் கூட இருக்க லாம் இருப்பினும் அரசியல் சூழலில் அத்வானி கூறுவதுபோல் நடக்க லாம் எதற்கும் மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

ராமர் கோயில் கொள்கையில் மாற்றமில்லையாம் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

வியாழன், 18 ஜூன் 2015


புதுடில்லி, ஜூன் 18_ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அரசியல் சாசன சட்டம் 370- ஆவது பிரிவை நீக்கு வது ஆகிய கொள்கை களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சதா னந்த கவுடா தெரிவித் துள்ளார்.

அதே வேளையில் இந்த விவகாரங்களில் விரி வான ஆலோசனைக்குப் பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட் டத்தின் 370 ஆ-வது பிரிவை நீக்குவது ஆகி யவை பாஜகவின் கொள் கைகளாக தொடர்கின் றன. எங்களுடைய கட்சி யின் தேர்தல் வாக்குறுதி யிலும் இதுபற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒருபோதும் நாங்கள் கைவிடமாட் டோம்.

குறிப்பாக 370- ஆவது சட்டப் பிரிவை நீக்குவது குறித்து பல்வேறு அரசி யல் கட்சிகளுடன் விரி வான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. மேலும், இதனால் பயன டையும் பகுதி மக்களிட மும் கருத்து கேட்கப்படும். அதன் பிறகுதான் இது பற்றி முடிவு எடுக்க முடி யும். அனைத்து தரப்பின ரின் ஒருமித்த கருத்தை எட்டாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கப்படமாட் டாது. இதுதொடர்பான நடைமுறைகள் மெதுவாக நடைபெறும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். _ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

யோகா தின கொண்டாட்டங்களில் உத்தரகாண்ட் பங்கேற்காது:
முதல்வர் ஹரிஷ் ராவத்

டேராடூன், ஜூன் 18_ வருகிற ஜூன் 21- ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் யோகா தின கொண் டாட்டங்களில் உத்தரகாண்ட், அதிகாரப்பூர்வமாக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார். டேராடூனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், நாங்கள் சர்வதேச யோகா நாளில் பங்கேற்கப் போவதில்லை. இந்த முடிவு குறித்து தம்பட்டம் அடிப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. என்றார். மேலும் இந்தியாவின் பாரம்பரியமான உடல் மற்றும் மன ஒழுக்கங்களை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதில் மாநில அரசு முழு ஆர்வத்து டன் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார்.

தமிழ் ஓவியா said...

சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும்தான் யோகாசனம் தேவை:
கருநாடக அமைச்சர்

பெங்களூரு, ஜூன் 18_- உலகம் முழுவதும் வரும் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாகக் கடை பிடிக்க உள்ள நிலையில் சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகாசனம் தேவை என கருநாடக சமூக நலத்துறை அமைச்சர் அன் ஜனய்யா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- யோகாசனம் என்பது சோம்பேறிகளுக்கான, குறிப்பாக பணக்காரர்களுக்கான ஒரு பயிற்சியாகும். அவர்களுக்குதான் பொது இடங்களில் நடைபயிற்சி செய்வதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், வயல்களில் வியர்வை சொட்டச்சொட்ட கஷ்டப் பட்டு வேலை செய்பவர்களுக்கு யோகாசனம் தேவை இல்லை. யோகாசனத்துக்கு பதிலாக, மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஓட்டப் பயிற்சி, நெடுந்தூர நடைப் பயிற்சி போன்ற திறந்தவெளி பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். யோகாவின் பலன்களை விளக்கவும், பயிற்சிகளை அளிக்கவும் எத்தனையோ குருக்களும், நிபுணர்களும் உள்ளனர். பிரதமரின் நேரம் என்பது மிகவும் பொன்னானது, யோகா சனத்தை பற்றி விளக்கம் அளிப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டை வழிநடத்துவதில் அவர் தனது நேரத்தை செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
 

தஞ்சைப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுபற்றியது குறிப்பிடத்தக்க தாகும்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற சொலவடையை உருவாக்கி மக்கள் மத்தியில் அது குறித்து சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பிடும் பணியைத் தொடர்ந்து செய்து வந்துகொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம்  என்பது நாட்டு மக்கள் அறிவார்கள்.

கச்சத்தீவு, காவிரி நதி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை என்று தமிழ்நாடு, தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சூழ்நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

நதிநீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட, அதனைச் சற்றும் பொருட்படுத்தாத போக்குகள் தொடர்ந்து கொண்டுள்ளன; காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருநாடகமும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் கேரளமும் இத்தகைய போக்குகளை மேற்கொண்டு வருகின்றன. நீதிமன்ற அவ மதிப்பு என்ற ஒன்று இருக்கிறதா? அதன்மீதான மரியாதையின் கதி இதுதானா? என்ற கேள்விகளும் செங்குத்தாகவே எழுந்து நிற்கின்றன.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல நீதிமன்ற தீர்ப்புக்குமேல், மேலும் அதிரடி யாகவும், ஆணவமாகவும் நீதிமன்ற தீர்ப்புகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு, அதற்குமேலும் தீவிரமாக சட்ட விரோத - நீதிமன்ற தீர்ப்பு விரோத வேலைகளில் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவதை என்ன சொல்ல?

காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பெரிய அணைகள் கட்டுவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. இப்பொழுது அதில் சிறு மாற்றம் செய்து,  நான்கு சிறிய  அணைகளை எழுப்பி 100 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிட கருநாடக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த அணைகள் மூலம் பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கிட இத்திட்டமாம்.

கருநாடக மாநில நீர்வளத் துறை நிபுணர்கள் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான திட்ட அறிக் கையைத் தயாரித்துள்ளனர். கருநாடக வனத்துறையினரும், மேகதாதுப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதிகளின் கூட்டமைப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளைத் தயாரித் துள்ளனராம். குடிநீருக்காக மட்டுமல்ல 1000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இத்தோடு நின்றுவிடவில்லை கருநாடகா, டில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமும் பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்றிடமும்கூட வரைவு அறிக்கை கோரப்பட் டுள்ளதாம். போகிற போக்கைப் பார்த்தால் அதிவிரைவில் இந்தச் சட்ட விரோதப் பணிகளில் கருநாடக அரசு ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

பிரதமரைச் சந்தித்தாகி விட்டது; குடியரசுத் தலைவரையும் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு அலுத்துப் போய்விட்டது தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசோ நாங்களும் இதில் செயல்பட்டோம் என்று காட்டிக் கொள்ளும் மேனா மினுக்கித்தனமாக செயல்படுகிறதே தவிர - குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி - இப்பிரச்சினையில் தமிழ்நாடு ஒன்று பட்டு நிற்கிறது என்று காட்டுவதற்குக்கூடத் தயாராக இல்லை என்பது பெரிதும் வேதனைக்குரியது. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனைப் பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழ்நாடு அரசு கேளாக்காதாக இருப்பது சரியல்ல.

தமிழ் ஓவியா said...

அதேநேரத்தில், கருநாடகத்தில் என்ன நடந்துகொண்டி ருக்கிறது? கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் அமைச்சர்கள், கருநாடகத் தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் துணை நிற்போம் என்று பச்சையாகக் கருத்துத் தெரிவிக்கின்றனரே!

2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. 2013 பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுவரை ஏன் அந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை? காங்கிரஸ் ஆட்சியை மட்டும் குறைகூறி பி.ஜே.பி. அரசு தப்பிப் பிழைக்க முடியாது.

மத்திய அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களுக்கும், பொதுவானவர்கள் என்பதையும் மறந்து கருநாடக மாநில உணர்வோடு பேசுவது சரியானதுதானா?

காவிரி நீரில் கருநாடகப் பகுதியில் கழிவு நீர் கலக்கப்படு வதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும், அதனைச் சந்திக்க கருநாடகம் தயார் என்று சொல்லுவது பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா (கருநாடகம்) என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு மத்திய அமைச்சரே ஒரு சார்பாகப் பேசுவதுபற்றி பிரதமர் கண்டிக்க வேண்டாமா?

இந்தியத் தேசியம்பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்; அதே நேரத்தில், மாநில சுயநலம் என்று வரும்போது தேசியமாவது - கீசியமாவது என்று கிழித்து எறிந்துவிடுவார்கள்.

கடந்த நூற்றாண்டுக்காலமாக தமிழ்நாட்டு விவசாயம் சாகடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. விவசாயத்தை நம்பியுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான விவசா யிகள் விவசாயத் தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு நகர்ப்புறங்களுக்குப் படையெடுக்கும் பரிதாப நிலை.

காவிரி மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் கேரள அரசு - கருநாடக அரசுக்கு அப்பனாகவே நடந்து கொண்டு வருகிறது!

இன்னும் எத்தனை முறைதான் நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது! உறுதியாக இருக்கிறது! என்று தண்டோரா போட்டுச் சொல்லவேண்டுமோ?

நீரோட்டத்தில் நியாயமான முடிவு எட்டப்படா விட்டால், தேசிய நீரோட்டம் என்பது கேள்விக்குறியாக ஆகும் நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்கப்படவே முடியாததுதான்.

தமிழ்நாடு, உபரி நீரின் வடிகாலாக இருக்கும் பிச்சைக் காரப் பூமியாக ஆக்கப்பட்டு விட்டது. இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தேசியவாதிகளே!

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்


இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள்தாம்.
_ (விடுதலை, 11.4.1959)

தமிழ் ஓவியா said...

அஞ்சுவதற்கல்ல முதுமை; அனுபவப் பகிர்வுக்கே!
--veramani



அமெரிக்க குடிஅரசுத் தலைவர் களில், மிகுந்த பண்பாளர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த மிக நல்ல ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள்!

அப்போதே இந்திய நாட்டை மிகவும் நேசித்து, நல்லறிவுடன் இருந்த குடிஅரசுத் தலைவர். இவர் விவசாயி களின் பிரதிநிதியாவார். இவருக்கு மற்றொரு செல்லப் பெயரே - பதவி வகித்தபோது ‘Peanut President’ - வேர்க்கடலை ஜனாதிபதி என்பதாகும்!

சில ஆண்டுகளுக்குமுன் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நான் வாங்கிப் படித்துச் சுவைத்த அவரது அறிவுச் செல்வ நூல் ஒன்று, ‘‘The Virtues of Aging’’(வயதாவது - முதுமை என்ற பெரும் நன்மைகளுக்கான வாய்ப்பு) என்ற நூல்.

மறுமுறை இப்போது படித்தேன் - சுவைத்தேன்!

இவர் 56 வயதிலேயே பதவி வாழ்க் கையிலிருந்து ஓய்வு பெற்று, மக்களி டையே தொண்டறத்தை மேற்கொண்ட வர்.

அமெரிக்காவில்  65 வயது அல்லது அதற்கு மேலும் என்ற வயது முதுகுடி மக்கள் என்ற தகுதி முத்திரையைப் பொறிக்கக்கூடியதாகும்.

எந்த வயதை அடைந்தால் நாம் முதியவர் (வயதானவர்) என்ற நிலையை அடைகின்றோம்? என்ற கேள்விக்கு அவர் அந்த பொத்தகத்தில் சிறப்பாக விடையளிக்கிறார்:

அது வெறும் வயதின் கூட்டலினால் வருவதல்ல; ஒவ்வொரு நபருக்கும், இடம் பொறுத்து மாறுகிறது. உதாரணத் திற்கு அமெரிக்காவில் இது சராசரியாக 73 வயதாகிற நிலையில், முதியவர் என்ற பட்டத்திற்குத் தயாராகிறார்கள்.

ஒருவர் எப்போது வயதானவராக முதுமை அடைந்தவராக - கருதப்படு கிறார்? என்ற கேள்விக்கு அருமை யான இலக்கணம் கூறுகிறார்! நம்மில் அவர் எப்படி சிந்திக்கிறாரோ அதைப் பொறுத்தே அதற்கு விடை கிடைக் கிறது! நகர முடியாத குந்தியே இருக்கும் நிலை, மற்றவர்களின் உதவியைப் பெரிதும் நாடியே வாழும் சூழ்நிலை, குறிப்பிடத்தக்க அளவு நம்முடைய உடல், உள்ள இயக்கத்தின் அளவு குறைந்துவிட்டது என்ற உணரும் நிலை, நாம் சந்தித்து உரையாடிடும் நண்பர் களின் எண்ணிக்கை குறையும்போது - அந்தப் பருவம் - நிலை நம்மைத் தொடுகிறது என்று கருதலாம்.

எத்தனை ஆண்டுகள் வாழுகிறோம் என்பது வயதுடன் இணைந்த ஒன்றல்ல. வயதுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடைமுறை உண்மை யாகும்.

நம்முடைய ஆயுள் குறைவதோ, நீளுவதோ, நம் இளமைக்கால நடவடிக் கைகளின்போது ஏற்படும் உடல்நலப் பாதுகாப்பைப் பொறுத்த ஒன்றேயாகும்.

அமெரிக்காவின் 6 குடிஅரசுத் தலை வர்கள் (வாஷிங்டனில் தொடங்கி ஜான்குன்சி ஆடம்ஸ்வரை) சராசரி வயது 76 ஆண்டுகள் ஆகும்.

கடைசி 6  குடிஅரசுத் தலைவர்கள் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் ரிச்சர்ட் நிக்சன்வரை) வாழ்ந்த சராசரி வயது 70 ஆண்டுகளே; கென்னடியைத் தவிர்த்து விட்டுக் கணக்கிட்டால், மற்ற வர்கள் சராசரி வயது 74.8 ஆண்டுகளே என்று விவரிக்கிறார்!

ஜிம்மி கார்ட்டர் அவர்கள் பதவியை விட்டு விலகி ஓய்வுக்குத் தயாராகும் போது, அவர்பற்றி பல அரிய தகவல் களைத் திரட்டி எழுதிய பார்பாரா வால்டர் என்ற எழுத்தாளர், இவரைப் பேட்டி கண்டு ஓர் அருமையான கேள் வியைக் கேட்டார்!
மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் எவ்வளவு பரபரப்பான, சவால் விடுத்த பணிகளையெல்லாம் எதிர்கொண்டு பணியாற்றியுள்ளீர்கள். எது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டுகள், விளக்குவீர்களா? என்று கேட்டார்.

சிறிது நேர யோசனைக்குப்பின், ஜிம்மி கார்ட்டர் கூறினார்:

(இது) இப்போதுதான் சிறப்பான ஆண்டு எனக்கு.

அந்த கேள்வியாளருக்கு வியப்பு. காரணம் கூற முடியுமா? என்று கேட்கிறார்.

சிறிதுநேரம் மீண்டும் யோசிக்கிறார் ஜிம்மி கார்ட்டர்; பிறகு பதிலளிக்கிறார்:



எனக்குப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிதானமாக, முன்பு எதிரொலித்த சிந்தனைகளையும், எனது குடும்பத்த வருடன் மேலும் அதிகநேரம் செலவிட வும், எனது முந்தைய தவறுகளை நான் திருத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையை நடத்த அரிய வாய்ப்பு - இந்த நிலையில்தான் என்று கூறுகிறார்.

எவ்வளவு நேர்த்தியான பதில் - அறிவார்ந்த விளக்கம்!

முதுமையில் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நாம் சேர்த்த செல்வம் அல்ல; அனுபவித்த பதவியல்ல; முன்பு சுவைத்த ஆடம்பரங்கள் அல்ல.

நல்ல ஆதரவுள்ள அன்பு பொழியும் - வழியும் - நல்ல குடும்பத்தவர். நண்பர் கள் வட்டம்.

புதுப்புது திட்டங்கள் - தொண்டறப் பணிகள் நம்மை என்றும் சீர் இளமை யாகவே வைத்திருக்கும். முதுமை என் பது பயந்து ஓடவேண்டிய ஒன்றல்ல; மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை யில் முன்பு கிடைக்காததற்கு வருத்தப் படாமல், கிடைத்தவைகளை மகிழ்ச்சியாக ஏற்று, அனுபவித்துள்ள மகிழ்ச்சியை அசை போட்டு வாழுவதே முதுமையின் நற்பயன்கள்!

இளமையில் கிட்டாத வாய்ப்பு - முதுமை என்ற அனுபவக் களஞ்சியத் தின் தொகுப்பு என்பதாகும். அதைப் பகிர்ந்தளித்து நாளும் மகிழ்வுடன் வாழுவோம்.

எதுவும் நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்ததே!

நன்றும் தீதும் பிறர் தர வாரா! - இல்லையா?

தமிழ் ஓவியா said...

யோகா: வழிக்கு வந்தது மத்திய அரசு

வெள்ளி, 19 ஜூன் 2015 1


புதுடில்லி, ஜூன்.19- தாங்கள் நடத்தும் யோகா தின நிகழ்ச்சி யில் சூரிய நமஸ் காரத்தை சேர்ப்பது இல்லை என்ற முடி வில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. ஓம் மந் திரத்தை உச்சரிப்பது கட்டாயம் அல்ல என்றும் கூறியுள்ளது. சர்வதேச யோகா தினம், ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சிகளில், சூரிய நமஸ்காரமும், ஆசனம் செய்யும்போது, ஓம் என்ற மந்திர உச்சரிப்பும் இடம்பெறச் செய்ய திட்ட மிடப்பட்டது. இதற்கு சில சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், சூரிய நமஸ்காரம் செய்வது கட்டாயம் அல்ல என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறிவிட்டது. அத்துடன், டில்லியில், தாங்கள் நடத்தும் யோகா தின கொண்டாட்டத்தில், சூரிய நமஸ்காரம் இடம்பெறாது என்றும், ஓம் மந்திரத்தை உச்சரிப்பது கட்டாயம் அல்ல என்றும் தெரிவித்தது. இதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்து அமைப்புகளின் எதிர்ப்பு பற்றி, நேற்று டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ராஜாங்க அமைச்சர் சிறீபாத் நாயக்கிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், சூரிய நமஸ் காரம் இடம்பெறாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார்.

அவர் கூறியதாவது:- மத்திய அரசின் யோகா தின கொண்டாட்டத்தில், சூரிய நமஸ்காரம் இடம்பெறாது. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதும் கட்டாயம் அல்ல. அவரவருக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரித்துக் கொள்ளலாம்.

சில அரசு சார்பற்ற அமைப்புகள், யோகா தின கொண்டாட்டத்தை தனியாக நடத்து கின்றன. ஆயிரக்கணக்கான ஆசனங்கள் இருப்பதால், அவர்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு எந்த ஆசனத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். தங்கள் மத நம்பிக்கைப்படி, எந்த பெயரையும் உச்சரித்துக் கொள்ளலாம். இவ்வாறு சிறீபாத் நாயக் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103541.html#ixzz3dW4yTsLg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சூழ்ச்சி

சிவனுக்கும்- பார்வ திக்கும் ஆடல் போட்டி நடைபெற்றது. சிவனால் வெல்ல முடியாத நிலை யில் காலைத் தூக்கிக் காட்டினான்; பெண் என்பதால் பார்வதியால் காலைத் தூக்கிக் காட்ட முடியவில்லை; அதனால்  சிவனிடம் பார்வதி தோற் றதாகச் சொல்லு கிறார்களே.

இதில் சிவன் திறமை யால் வென்றானா?  அரு வருப்பான சூழ்ச்சியால் வென்றானா? சூழ்ச்சியும் ஒரு திறமைதானே என்று ஆன்மிகக் குஞ்சுகள் சொல்லுமோ!

தமிழ் ஓவியா said...

கான்வென்ட் பள்ளிகளைத்  தடை செய்ய வேண்டுமாம்!

கோவாவில் இந்து மத மாநாட்டில் வெறிக் கூச்சல்



பனாஜி, ஜுன்19_ பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் இந்து அமைப் புகள் ஒன்று கூடி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளன. அம்மாநாட்டில் கான் வென்ட் பள்ளிகள் மற் றும் மாட்டிறைச்சிக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. ராம்நாத்தி கிராமத் தில் வலது சாரி இந்து அமைப்பான இந்து ஜன கிருதி சமிதிசார்பில் அனைத்திந்திய இந்துமத மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களி லிருந்தும், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந் தும் பலர் பங்கேற்றனர். இதில் 210 இந்து அமைப் புகள்  பங்கேற்றன.

மாநாட்டில், இந்து மாணவர்கள் பழைமை யான இந்துக் கலாச்சா ரத்தைப் பின்பற்ற அனு மதிக்காமல் கான்வென்ட் பள்ளிகள் தடையாக இருக் கின்றன. கான்வென்ட் பள்ளிகளில் படித்துவரும் இந்து மாணவர்கள் இந்து பழக்கவழக்கங்களாக உள்ள மருதாணி வைத்துக் கொள்ளவும், மலர்களைச் சூடிக்கொள்ளவும், துப் பட்டா அணிவதற்கும், குங்குமம் அல்லது பொட்டு வைத்துக்கொள்வதற்கும் கான்வென்ட் பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது நிறுத்தப்பட வேண் டும். கான்வென்ட் பள்ளி களில் ஒட்டுமொத்தத்தில் பாகுபாடுகள் இருக்கின் றன என்று குறிப்பிட்டுள் ளார்கள்.

இந்து ஜனகிருதி சமிதி தேசிய ஒருங்கிணைப்பா ளர்  சாருதத் பிங்க்ளே கூறு கையில், மாநாட்டின் மூலமாக கோவா முதல் வர் லட்சுமிகாந்த் பர் சேகர் ஆளும் கோவா மாநிலத்தில் 70 விழுக் காடு இந்து மாணவர்கள் கான்வென்ட் பள்ளிகளில் படித்துவருகிறார்கள். ஆகவே, அந்த மாநிலத் தில் கான்வென்ட் பள்ளி களைத் தடை செய்யுமாறு அவரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். கத்தோலிக்க கிறித்த வர்கள் அரசு செயல்பாடு களில் தலையிடமுடியும் என்றால், இந்து அமைப்பு களுக்கும் அதே உரிமை உண்டு என்று அதற்கான கோரிக்கையை எழுப் புவோம் என்றார்.

கோவாவில் கத்தோ லிக்கக் கிறித்தவ சட்ட மன்ற உறுப்பினர்களிடம் கோவாவின் கிறித்தவ சர்ச் அமைப்பாகிய ஆர்ச் டையாசன் கல்வி வாரியம் என்று  வைத்துக் கொண்டு பல்வேறு கோரிக்கைளை எழுப்பிவருகிறார்கள் என்பதைக் குறித்தே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.

மாநாட்டில்,  நாடு முழுவதும் மாட்டிறைச் சிக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், கான் வென்ட் பள்ளிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண் டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளனவாம்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலையா?
மோடியைத்தான் அத்வானி விமர்சித்து இருக்கிறார் - எதிர்க்கட்சிகள் கருத்து

புதுடில்லி, ஜூன் 19_ இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறி இருப்பதுவும், அரசியல் தலைமையிடம் நம்பிக்கை இல்லை என கூறி இருப்பதுவும் பரபரப்பான விவாதத்துக்கு வழி வகுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி உள்ளனர். அது வருமாறு:-

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கருத்து தெரிவிக்கையில், நீதிபதி வெளியே வந்திருக்கிறார். அத்வானி பேசுகிற தலை வர். அவர் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்லி விட்டார். அவர் களது அரசு இருக்கிறது. அவர்களது பிரதமர் இருக் கிறார். இந்த நிலையில் அவர் யாரைப்பற்றி சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. இதை அவர் அறிவார். அவர் ராஜதந்திரி. பிரதமர் பெயரை குறிப்பிட விரும்ப வில்லை. ஆனால் அவரது பேட்டியை வாசிக்கிற அனைவரும் அவர் மோடியைப் பற்றித்தான் கூறி உள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்

நிதிஷ்குமார்

பீகார் முதல் அமைச் சருமான நிதிஷ்குமார், அத்வானி மிக மூத்த தலைவர். அவரது கருத் துக்கள் தீவிர பரிசீல னைக்கு உரியவை. தினமும் இப்போது நெருக்கடி நிலை போன்ற சூழலைத் தான் எதிர் கொண்டிருக் கிறோம் என கருத்து தெரிவித்தார்.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், அத்வானி பேட்டி குறித்து கருத்து கூறும்போது, அத்வானி ஒரு கவலையை வெளியிட் டிருக்கிறார் என்றால், கட்சியின் மூத்த உறுப் பினர் கூறி இருக்கிறார் என்ற வகையில் அதை அரசாங்கம்தான் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். நாட் டில் இப்போது நடந்து கொண்டிருக்கிற ஆட்சி முறை ஜனநாயக ரீதியி லானதாக இல்லை. சர் வாதிகார மனப்பாங்கு பிர திபலிக்கிறது என குறிப் பிட்டார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நெருக்கடி நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது என அத்வானி கூறி இருப்பது சரிதான். டில்லிதான் அவர்களது முதல் பரிசோதனையோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்படி எதிர்க்கட்சி தலைவர்கள், அத்வானி பேட்டியில் விமர்சித்திருப் பது பிரதமர் மோடியைத் தான் என குறிப்பிடுகிற போது, அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதாவும் மறுத்துள்ளன

ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஜி. வைத்யா, இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், அத்வானி, பாரதீய ஜனதாவின் மகா தர்ஷக் மண்டலில் (வழி காட்டும் குழு) உறுப்பினர். அவர் வயதாலும், அனுப வத்தாலும் மூத்த தலைவர். அவர் மோடியிடம் பேச முடியும். இந்த பேட்டியின் வாயிலாக மோடிக்கு செய்தி அனுப்பும் நோக்கம் அவருக்கு இருக்கும் என நான் கருதவில்லை என கூறினார்.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், அத்வானி தனிப்பட்ட நபர்களைவிட அமைப்புகளைத்தான் குறிப்பிடுவதாக நினைக் கிறேன். அத்வானியின் கருத்தை மதிக்கிறேன். ஆனால் நாட்டில் நெருக் கடி நிலை அமல்படுத் தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தனிப்பட்ட முறையில் நான் கருத வில்லை. அந்தக் காலம் முடிந்துவிட்டது. இந்திய ஜனநாயகம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது என குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

மறைப்பது ஏன்?

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம் 2010 என்பதில் மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்படுவது குறித்து தலையங்கம் தீட்டியுள்ள இன்றைய தினமணியில், இத்தகைய நன்கொடைகளை அதிகம் பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவாரங்கள் குறித்து மூச்சு விடாதது  - ஏன்?

முதல் தலைமுறை!

அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஈ., பி.டெக் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 லட்சம் பேர்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 80 ஆயிரம்.

தெரியுமா?

குழந்தை நாள் ஒன்றுக்கு 200 தடவை சிரிக்கிறது. வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 15 தடவை மட்டுமே சிரிக்கின்றனராம்.

ரூ.ஒரு கோடியே 40 லட்சம்

தமிழ்நாட்டில் நிர்வாக ஒதுக்கீட்டால் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ஒரு மாணவனுக்கு ஆகும் செலவு ரூ.ஒரு கோடியே 40 லட்சமாகும்.

தமிழ் ஓவியா said...

கண்ணாடியும் - நண்பர்களும்

வெள்ளி, 19 ஜூன் 2015



காலத்தை வென்ற மேல்நாட்டுக் கலைவாணர் (நகைச் சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணனைப் போல்) சார்லி சாப்ளின் அவர்கள் வெறும் சிரிப்புமூட்டும் கலைஞர் மட்டுமல்ல; சிரிக்கவும் வைத்து உலக மக்களைச் சிந்திக்கவும் வைத்த மிகப் பெரிய மேதை.

அவரது சிந்தனையின் பலனாக உருவாக்கப்பட்ட திரைப்படங் களையே கண்டு மிரண்ட அரசுகளும், அதன் காரணமாக நாட்டையே விட்டு வெளியேறிட வேண்டிய நிர்ப்பந்த மும்கூட அவருக்கு ஏற்பட்டதுண்டு!

மக்களையெல்லாம் இப்படி மகிழ்ச்சி அருவியில் குளிக்க வைத்து மகிழ்வித்த அந்த மாமேதையின் வாழ்க்கைக்குள்ளோ எத்தனையோ சோகத் தாக்குதல்கள்; அவற்றை மறைத்தோ, மறந்தோ அவர் மக் களுக்கு தனது நகைச்சுவை (துணுக் குகள்) மூலம் அறிவு கொடுக்கத் தவறவில்லை!

அவர் ஒருமுறை சொன்ன கருத்து உலகம் முழுவதும் பரவிய கருத்து; ஊடகங்களும்கூட இதனை அவ்வப் போது மேற்கோளாகக் காட்டிடத் தவறவில்லை!

முகம் பார்க்கும் கண்ணாடி (Mirror) தான் என் சிறந்த நண்பர்; ஏனெனில் நான் அழும்போது, அது ஒரு போதும் சிரித்ததில்லை - சார்லி சாப்ளின்
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!

நம்முடைய நண்பர்களில் பலர் நமக்கு முகமன் கூறியே நம்மிடம் சலுகையோ, தயவோ, பெற விரும்புவர்கள்.

நகுதல் பொருட்டல்ல நட்பு என் பதைக் கடைப்பிடித் தொழுகுவதை அறியாதவர்கள்.

காரியம் ஆவதற்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடி என்ற அனுபவ மொழிக்கேற்ப, பயன் கருதி நட்புப் பாராட்டுபவர்களே உலகில் ஏராளம்!

ஒப்பனை இல்லாத நட்பே உயர் நட்பு!

இடுக்கண் வருங்கால் நகுக என்ப தற்கு நாங்கள் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த 60 ஆண்டு களுக்கு முன்பு - இக்குறளைப் பல நண்பர்கள் எப்படிப் பொருள் கொண்டு கூறினார்கள் தெரியுமா?

துன்பம்; இன்னல், சோதனை ஒருவருக்கு வரும்போது அதுகண்டு உதவிடவோ, ஆதரவுக்கரம் நீட்டவோ கூடச்செய்யாது, சிரித்து மகிழ்வதில் - அதாவது கேலிச் சிரிப்பு நகுதலை வாடிக்கையாகக் கொண்டு ஒழுகுக என்பது இன்றைய நடைமுறை என்று மாணவத் தோழர்கள் கூறுவதுண்டு.

நம்மில் பலரும் - அது குடும்பமா கவோ, நிறுவனமாகவோ, இயக்கமாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும், பரவாயில்லை. அவற்றுடன் தொடர்புடைய நமது நண்பர்கள் கூறும் மாறுபட்ட கருத்து எதையும் கேட்கக் கூட நம்மில் பலர் தயாராக இருப்பதில்லை.

எப்போதும் புகழுரை என்ற குளிர் பதனத்தையே அனுபவித்துக் கொண் டுள்ள நாம், கொஞ்சம் வித்தியாசமான - அது நம்முடைய உண்மை நலனில் அக்கறை கொண்ட கருத்துரையாக இருப்பினும்கூட,  வெப்பம் போல் அதைக் கேட்கக் கூடத் (ஏற்றுக் கொள்வது பிறகு அடுத்த நிலை - அல்லது இறுதி நிலை) தயாராக இருப்பதில்லை.

எந்தக் கருத்து, அறிவுரையாயினும் நண்பர்கள் - உள்நோக்கம் ஏதுவும் இன்றி - கூற முன் வரும்போது அதை வர வேற்று, பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டு, கொள்ளுவதைக் கொள்ளலாம்;  தள்ளுவதைத்  தள்ளலாம். திருத்திக் கொள்ள வேண்டியவற்றைத் திருத்தி நாம் மேலும் வளரலாம் - வாழலாம்.

அதற்குப் பலரும் தயாராவ தில்லை என்பது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்!

மழையோ, புயலோ வரக்கூடும் என்று வானிலை நிலவரம் கூறும் பொறியாளர் - விஞ்ஞானி மக்கள் பகைவரா?

ஆட்சிக்கு எதிரான சதிகாரரா? இல்லையே, மக்களை எச்சரிக்கைப் படுத்திடும் மிக அரிய பணியைச் செய்யும் நண்பர் அல்லவா?

உடைந்த எலும்பை படமாகக் காட்டும்  எக்ஸ்ரே கருவியை - நாம் விரோதி என்றா கருதுகிறோம்?

அதன் மூலம் தானே நாம் நம் உடல் நலத்தை சீரமைத்துக் கொள் ளும் வாய்ப்பை மருத்துவ உதவி மூலம் பெறுகிறோம் - இல்லையா?

எனவே, உண்மை நட்பை - அவர்கள் கசப்பு மருந்தை தந்தாலும் அதை உண்டு நலம் பெறுவோம். ஒப்பனை (முகமன் கூறும்) நண் பர்களை  அடையாளம் காண்போம். சில கண்ணாடிகள் மாற்றிக் காட்டி னால் அதை எறிந்துவிடுங்கள்.

சில நண்பர்கள், கண்ணாடி கீழே விழுந்தால் பட்டென்று உடை வதுபோல் உடைந்து, ஒதுங்கி விடு வதும் உண்டு; அதையும் மறுபுறம் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்.

அக நக நட்பே; தலையாயது என்று உறுதியுடன்  கணியுங்கள்.

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு

பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்து வதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...

அய்யா அகராதி

இராமாயணம் - பார்ப்பனரின் புரொசீஜர் கோட்
கற்பு - பெண்ணடிமை ஆயுதம்
சாதி - மனிதனை மனிதன் இழிவுபடுத்துவது
சமயம் - சாதிக்கு வித்து
கடவுள் - சமயத்தின் காவலன்

பார்ப்பான் - இம்மூன்றையும் படைத்த கர்த்தா
குருக்கள் - மோட்ச லோகக் கைகாட்டி
கோயில் - அறிவு பணம், இரண்டையும் இழக்கும் இடம்
சத்தியாகிரகம் - சண்டித்தனம்
உண்ணாவிரதம்- தற்கொலைக் குற்றமுள்ள நோய்
தியாகம் - அர்த்தமில்லாச் சொல்

சோதிடம் - சோம்பேறிகளின் மூலதனம்
புராணங்கள் - புளுகு மூட்டைகள்
புலவர்கள் - பழைமைக் குட்டையில் படிந்து ஊறிய பாசி
உற்சவம் - கண்ணடிக்கும் கான்பரன்ஸ்
வக்கீல் - சேலை கட்டாத தாசி

வியாபாரி - நாணயமற்ற லாப வேட்டைக்காரர்
மோட்சம் - முடிச்சுமாறிகளின் புரட்டு
நரகம் - வெறும் கற்பனைப் பூச்சாண்டி
பிரார்த்தனை - பேராசையின் மறுபெயர்
நாஸ்திகம் - அறிவின் உண்மையான எல்லை
மூடநம்பிக்கை - Observation and Experiment இரண்டுக்கும் உட்படாதது

நாணயம் - ஒருவனுடைய இலட்சியத்தையும், தேவையையும் பொறுத்த ஒழுக்கம்
ஆசிரியர்- பையன் பாஸ் செய்தால் கெட்டிக்காரர் என்று பெயர் வாங்குபவர் - பெயில் ஆகிவிட்டால் பையன் முட்டாள் என்று பெயர் சூட்டுபவர்.

பிச்சைக்காரன் - பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித்தனத்தாலும் கெஞ்சி புகழ்ந்து வாழ்பவர்கள்.
தொழிலாளி - தன் வயிற்றுப் பிழைப்புக்காக தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்குக் கொடுக்கிறவன் அல்லது பிறர் இஷ்டப்படி நடக்க வேண்டியவனாகிறவன்.

முதலாளி - தன் உழைப்பைத் தன் இஷ்டமான விலைக்கு பிரதிப் பிரயோசனத்திற்கு மாறுப்பண்டமாக விலை பேசுகிறவன்.
மனைவி - ஓர் ஆணுக்குச் சமையற்காரி; ஓர் ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.

பெண்ணுரிமை - பெண்களுக்கும் ஆண்கள் போன்று வீரம், வன்மை, ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்கள் உணரச் செய்வது.
சாதி ஒழிப்பு - நாட்டில் லைசென்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பது.
கிராமம் - ஒரு வித வருணாசிரம தர்ம முறையில் கீழான சாதி.

தமிழ் ஓவியா said...

ஆரிய (மிலேச்ச)ரைப் பற்றி வ.உ.சிதம்பரனார்



பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர் களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர் களென்றும், நினைத்தவற்றை யெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும்,

அவர்களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள் களைத் கொள்ளாமலும், அவர்களை தொட நேர்ந்தபோது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள்:- உடனே தங்களைப் பிராம ணர்கள் என்றும், சொல்லவும், எழுதவும் தலைப்பட்டார்கள்;

அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும், நடத்தையிலும் காட்டினார்கள். அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம்.

அதாவது, பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொரு வரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியர்களை நடத்துகிறது போல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய் விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.

(5.11.1927இல் நடந்த சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டுத் தலைமை தாங்கும் போது திரு. வ.உ.சி. அவர்கள் ஆற்றிய சொற்பொழிலிருந்து எடுக்கப்பட்டது. பக்கம் 39, 40, 41)



Read more: http://www.viduthalai.in/e-paper/103549.html#ixzz3dW8rdRTx

தமிழ் ஓவியா said...

புராணப் பிரியர்களும் சிரிக்கிறார்கள்
நமது பெரியவர்கள் சொல்லிவிட்டு போன கதைகளைச் சொன்னால் இந்தகாலத்துப் பசங்கள் கேலி பேசறதா; நம்பமாட்டேன் என்கிறா - நையாண்டி செய்யறா - அனுமாரின் வாலை நீர் அளந்து பார்த்தீரோ; அரம்பை ஆடுவது கண்டீரோ;

இந்திரன் கண்களை எண்ணிப் பார்த்தீரோ என்றெல்லாம் கேள்விகளைப் பூட்டிப் பேசறா - நாம் என்ன இருக்கு, செய்ய? ஒவ்வொன்றுக்கும் காரணம் கேட்கிறதா, அர்த்தம் கேட்கிறதா, ஆதாரத்தைக் காட்டுன்னு மல்லுக்கு நிற்கிறா - என்று தான் வைதீகர்கள் - புராணப் பிரியர்கள் தங்கள் முகாமிலே கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது விசாரப்படுகிறார்கள்;

பதைக்கிறார்கள் முதலில் - பிறகு திகைக்கிறார்கள் - கடைசியில் அவர்களே சிரிக்கிறார்கள். ஆமாம்! இந்தப் பயல்கள் சொல்வது போல் புராணக் கதைகள் நம்ப முடியாதவைகளாகத்தான் இருந்து தொலைக்கின்றன - நாம் என்ன செய்வது என்று சிந்தித்து விட்டுச் சிரிக்கிறார்கள்.

- 5.12.1948, திராவிடநாடு

தமிழ் ஓவியா said...

இராமாயண ஆராய்ச்சி
வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்



இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.

தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.

அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:

மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.

இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.

என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;

இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.

ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.

நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.

இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.

இதைப்பற்றி சிந்திப்போம்

வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?

மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.

மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு

சனி, 20 ஜூன் 2015
எங்கெங்கு காணினும் பெரியார் கொள்கை மயம்!

அம்பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலி:

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு

தந்தை பெரியாரின் ராமாயண பாத்திரங்கள் ஆய்வு ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது!



புதுடில்லி, ஜூன் 20- அம் பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலியாக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாண வர் அமைப்பு தந்தை பெரி யாரின் ராமாயண பாத்திரங்கள் ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது. புதுடில்லி ஜவகர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சமீபத்தில் மலர்ந்தது. இந்த வாசகர் வட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக தந்தை பெரியார் தமிழில் எழுதிய ராமாயணபாத்திரங்கள் என்ற நூல் இந்தியில் சச்சி ராமாயணா என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது இந்த நூலை மக்களிடையே கொண்டு செல்லும் பரப்புரையை மேற்கொண்டனர்.   தங்களது வாசகர் வட்ட மையத்தில் இணைந்துள்ள வர்களுக்கு தங்களது நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மென்புத்தகம் (PDF) அனுப்பி அனைவரையும் படித்து தெளிவு பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இராமாயணப் பாத்திரங்கள் - வால்மீகி இராமாயணத் தில் உள்ளபடி உண்மை இராமாயணம்? ‘Ramayana - True  Reading’  என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல். பல்லாயிரக்கணக்கில் பிரதிகள் விற்கப்பட்டன. தமிழில் பல லட்சக்கணக்கான பிரதிகள் மக்களால் வாங்கப் பெற்றது. பவ்லா ரிச்சமென் (Paula Richman) என்ற அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியரான அம்மையார் (இவரை சென்ற ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதுபற்றி உரையாடி மகிழ்ந்து நன்றி சொன்னார்).

1958இல் தந்தை பெரியார் அவர்களை உத்தர பிரதேசத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டினைத் திறந்து வைக்க அழைத்திருந்தபோது அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி, புலவர் கோ. இமய வரம்பன், ஆனைமலை நரசிம்மன், இராம கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் கான்பூர், லக்னோ, டில்லி போன்ற ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தபோது லாலைசிங் யாதவ் (Lalai Singh Yadav)  என்ற நண்பர் -ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் உண்மை இராமா யணம் (True Reading) புத்தகத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கேட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார்.

அது சச்சி இராமாயணா என்ற பெயரில் ஹிந்தியில் வெளி வந்து பல பதிப்புகள் விற்பனையானது.

இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு - பார்ப்பனர் எழுப்பிய எதிர்ப்புக் கூச்சல் கண்டு அந்நூலைத் தடை செய்தது. அதன்மீது உயர்நீதிமன்றத்தில் நூல் வெளியீட் டாளர் லலித்சிங்யாதவ்  வழக்கு போட்டு,  வென்றார். அதன் மீது உ.பி. அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தடையை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு வாதாடியது.

நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது, 1976 வாக்கில் இந்த மேல் முறையீடு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதிகள் ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைந்த அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு எழுதிய வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்,

ஆயிரம் பூக்கள் மலருவது ஒரு பூந்தோட்டத்திற்கு அழகு; அதுபோல இராமாயணத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துரைகள், நூல்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கது.

உத்தரப்பிரதேச அரசு தடை போட்டது செல்லாது என்று திட்டவட்டமாக கூறியது. அதுவும் நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது வந்த வரலாற்று முக்கியத்தீர்ப்பு இது!

1976 முதல் இன்று வரை 39 ஆண்டுகளாக இந்நூல் வடநாட்டில் அமோக விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

மனிதன்

மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!
veramani

வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.

எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)

எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.

அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.

மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!

நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும்,  அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!

பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!

நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?

வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்)  எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாது,  அஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!

வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்!  இருக்கிறது!

உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?

அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?

அதில் சற்று நயத்தக்க  நாகரிகம் ததும்ப வேண்டாமா?

உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!

அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?

பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!

அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?

அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!

புகழேகூட  போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.

புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!

(எஞ்சியது  நாளை)

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி

விடுதலை 15.6.2015 நாளிதழில் மயிலாடன் அவர்களின் ஒற்றைப் பத்தியில் குரங்குக்கு நோட்டீஸ் என்ற செய்தி கட்டுரையில் மிகவும் நகைச்சுவையாகவும், இந்து மத கேலிக்கூத்துகளும் எப்படி இருக்கின்றன என்பதை மயிலாடன் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுவதுமாக படித்துப்பார்த்தால் இந்துமதக் கோயில்களில் எவ்வளவு கேலிக்கூத்துகளும், மூடத்தனத்தின் உச்சாணி நிகழ்வும் எப்படி நிகழ்கின்றன என்பதை ஆதார பூர்வமாக அருமையாக விளக்கியுள்ளார். மயிலாடன் அவர்களின் ஒற்றைப்பத்தி புதிய புதிய செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் தினந்தோறும் அருவியாக தந்து கொண்டிருக்கிறது.

அந்த நாள் விடுதலையில் மஞ்சை வசந்தன் அவர்களின் இருட்டுக் கால திருட்டு செய்ய எத்தனிக்கும் எத்தர்கள் என்று கட்டுரை பிஜேபி, இந்துத்துவா கூட்டாளிகள் முகத்திரையை கிழிப்பதாக இருந்தது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்டநிலையில் வளர்ச்சியெங்கே என்றால் வாய்ச்சவடால் அடிக்கிறார். மோடி என்ன மோடி மஸ்தானா? வளர்ச்சி மந்திரம் மூலம் வருமா என்ன? மோடி வந்தால் ஆறுமாதத்தில் வளர்ச்சிவரும் என்றனர். இன்றைக்கு மோடி என்ன மந்திரமாக வைத்திருக்கிறார் என்று அயோக்கியத்தனமாக மாற்றிப் பேசு கிறார்கள். ஆக இந்த மதவாதக் கும்பல் ஒரு மோசடிக் கும்பல், அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. இவ் வாறு கட்டுரை முழுவதும் எரியீட்டியாக எழுச்சி நடையில் வீசுகிறார் மஞ்சை வசந்தன்.

அதே நாள் விடுதலையில் தஞ்சைத் தீர்மானம் என்ற தலையங்கத்தில் அண்ணா பெயரில் கட்சி வைத்து அண்ணாவின் கொள்கைக்கு புறம்பாக நடைபோடும் கட்சிக்கு சரியான சவுக்கடி, எச்சரிக்கை மணி.

பால்காவடி எடுப்பதுதான் பகுத் தறிவா? தேர் இழுப்பதுபற்றி எல்லாம் அண்ணா எழுதவில்லையா? பேச வில்லையா?

அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லிக்கொண்டே அண்ணாமலையார் கோவிலில் விழுந்து புரளுவதுதான் அண்ணா திமுகவா? அண்ணா ஆட்சியா?

இவ்வளவு ஆணித்தரமாக கொள்கை ரீதியாக நமது இயக்கத்தைவிட வேறு யார் சொல்லிட இயலும், சொல்லிட தைரியம் வரும், விடுதலையைத் தவிர வேறு யாருக்கு இந்த வீரம் வரும், வாழ்க பெரியார்!

- தி.க.பாலு

(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3.)