Search This Blog

5.6.15

மானமற்றக் கபட நெஞ்சப் பார்ப்பனர்க்குத் தமிழன் மண்டியிடுவதா?-பெரியார்

மானமற்றக் கபட நெஞ்சப் பார்ப்பனர்க்குத் தமிழன் மண்டியிடுவதா?



எனக்கு முன்பு பேசிய தோழர்கள் நம் அருமை நண்பர் இராஜாஜி அவர்கள் இங்கே வந்து பேசியிருப்பதால், அவர் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அவர் பேசியதற்குப் பதில் கூறவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை. என்றாலும் சில உண்மை விஷயங்களை வெளிப்படையாகவே இங்குப் பேச ஆசைப்படுகிறேன். அப்படி நான் கூறுவதில் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கலாம். இன்னும் சிலர் ஒழிக்கப்பட வேண்டிய காங்கிரசுக்கு உதவி செய்கிறாரே என்றும் சொல்லலாம்.

மாறுவது என்பது மனிதன் சுபாவம், மாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது எருமையாக இருக்க வேண்டும், அல்லது எதற்கும் அசையாது இருக்க வேண்டுமானால் அது கல்லாக இருக்க வேண்டும். நாட்டின் நடப்புகளைப் பார்த்து அதற்கு ஏற்றாற்போல் காரியம் செய்ய வேண்டுமானால் மனித உள்ளம் கொண்டவன் மாற்றத்தை எதிர் நோக்கித்தான் நிற்பான். மனிதனுடைய உள்ளம் படிக்கப் படிக்க அவனுக்கு ஆசையும், அதன் மூலம் ஆசாபாச உணர்ச்சியும் தானாகவே ஏற்படுகின்றன. இதுதான் மனிதனது இயற்கைச் சுபாவம். அதற்கு ஏற்றாற் போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நான் மாறுகிறேன் என்பது உண்மைதான். எதில் மாறுகிறேன்? இதுவரை நான் பேசி வந்ததில் மாறி இருக்கிறேனா? அல்லது நடத்தையில் ஏதாவது மாறி இருக்கிறேனா? என்பதை நீங்கள் உணரவேண்டும். என்னுடைய பேச்சில், நடத்தையில், கொள்கையில் மாற்றமில்லை. ஆனால், நடத்தும் வழியில் மாறி இருக்கிறேன். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நான் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமானால், நான் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று, எதை இலட்சியமாகக் கொண்டு வேலை செய்து வருகின்றேனோ, அதிலிருந்து சிறிதுகூட மாறவில்லை. அது எப்படி எப்படி நடக்க வேண்டும் என்கின்ற கருத்தில்தான் மாறுதல் இருக்கலாம். இது தவிர என்னுடைய நாணயத்திலோ, மான உணர்ச்சியிலோ எவ்வித மாறுதலும் இருக்காது. இப்படி இருப்பதாக எவராலும் கூறவும் முடியாது.


ஜாதி ஒழியவேண்டும் என்பது என்னுடைய கருத்து. சிறு வயது முதல் ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் கருத்துக் கொண்டவன் நான். நாற்பது ஆண்டுக் காலமாகச் ஜாதி ஒழிய வேண்டும் மதம் ஒழியவேண்டும் வேதம் ஒழிய வேண்டும் மனுதர்மம் - வருணாசிரம தர்மம் ஒழியவேண்டும் என்று சொல்லியும் எழுதியும் வந்தவன் முப்பத்தைந்து ஆண்டுக் காலமாகப் பார்ப்பானும் ஒழியவேண்டும் என்ற உண்மைக் கருத்தை நன்றாக உணர்ந்து அதற்கு முன்னையவிட  இன்னும் அதிக தீவிரமான முறையில் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன். அதனால் தான் இன்று மக்களிடையே மனிதத் தன்மையைக் காண முடிகிறது. அதற்குக் காரணம் என்னுடைய நாணயமும் நியாய உணர்ச்சியும் ஒழுக்கமும்தான் என்பதைத் தைரியமாகச் சொல்லுவேன்.

அதிசய அறிவியல் அற்புதங்களைக் கண்டுபிடிக்கும் இந்த உலகத்தில் யாராலும் எதைக் கொண்டும் அசைக்க முடியாத சர்வ வல்லமையுள்ள ஒன்று இங்கு இருக்கிறதென்றால், அது இந்தப் பார்ப்பான்தான். மதத் துறையில் பார்த்தாலும் அரசியல் துறையில் பார்த்தாலும், எல்லாவற்றிலும் அரசியல் துறையில் பார்த்தாலும் எல்லாவற்றிலும் பொருந்தி இருப்பவர்கள் இந்தப் பார்ப்பனர்கள். நாடு முழுவதிலும் உள்ள பத்திரிகையை எடுத்துக் கொண்டால் இரண்டொன்றே நம்முடையவை. மற்றவை எல்லாம் அவர்களுடையவை. இந்த இரண்டொன்றும் நம்முடைய ஆள்களால் நடத்தப்பட்டாலும், பார்ப்பனின் தயவில்லாமல் நடத்த முடியாத நிலைமையில் அவனுக்கு அடிமையாக இருந்து அவன் சொல்படிக் கேட்டு, நம்முடைய இனத்தை அழிப்பதற்கே இருப்பவைகள். இவைகளக்கு எல்லாம் தயங்காமல் எதிர்த்து அவைகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதற்குக் காரணம் என்னுடைய ஒழுக்கமும், நாணமும்தான். இது எல்லோருக்கும் விளங்காது. ஆராய்ச்சித் தன்மை உள்ளவருக்கும் என்னை நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கும் தான் விளங்கும். நான் யாருக்காக இப்படிப் பாடுபடுகின்றேன் என்றால் அது என்னுடைய (திராவிட இனத் தமிழ்) மக்களுக்கு ஆகத்தான்.


பார்ப்பானுடைய ஆதிக்கத்தின் காரணமாக நாம் இன்னும் காட்டுமிராண்டித் தன்மையில் தான் மானம் இல்லாத மக்களாக இருக்கிறோம். அதற்குச் ஜாதி ஒழிந்தால், பார்ப்பான் ஒழிவான் என்பதை உணர்ந்து சாதிக்கு ஆதாரமான, கடவுள் - வேதம், மதம், சாஸ்திரம் அவையோடு இவைகளைக் காப்பாற்றும் இந்திய அரசாங்கமும் ஒழியவேண்டும் என்றும், நடக்கிற மத்திய ஆட்சி "காலிப் பசங்கள்" ஆட்சி என்றும் சொன்னேன். எந்தக் கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டு ஒழியவேண்டும் என்று சொன்னேனோ அதனுடைய அடிப்படையில் இப்பொழுது கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. அதைத்தான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கருதினேன்.


என்னுடைய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் இப்பொழுது சூடு பிடித்திருக்கிறது என்றால், அது வெற்றியின் அடிப்படையில் திருப்பு முனைக்கு அது திரும்பி விட்டது என்றுதான் எண்ண வேண்டும். இப்போதுள்ள நிலையில் மக்கள் உள்ளத்தில் ஜாதி ஒழியத்தான் வேண்டும் என்கின்ற தன்மை தானாக ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் திரு. காமராசர்தான். அவரால்தான் இந்தச் சூடு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் எதற்கும் கவலைப்படாமல் காரியம் ஆற்றுபவர்கள். பல கஷ்ட - நஷ்டங்களை அனுபவித்தவர்கள். ஆதலால் எதற்கும் கவலைப்படாமல் எங்களுடைய இலட்சியம் எதுவோ அதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போது நடக்கிற போராட்டம் தேவ - அசுரப் போராட்டம்தான். வேதப்படி, சாஸ்திரப்படி, புராணப்படி, அகராதிப்படி பார்த்தாலும் இது விளங்கும். அசுரர்கள் என்றால் நாம்தான். தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள். இந்த இரண்டு இனத்தாரிடையே நீண்ட காலப் போர். அதாவது, இராமாயண காலம் முதல் இந்த ஆச்சாரியார் காலம் வரை நடந்து கொண்டுதான் வருகிறது. இராவணன், இரணியன், சூரன், சூரபத்மன் எல்லாரும் ஒழிந்ததற்கு மூலகாரணம் தேவ - அசுரப் போராட்டம்தான்.

தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள். கடவுள்கள் - தேவர்கள் என்றால் பார்ப்பான் என்று பொருள். பார்ப்பானும் கடவுளும் ஒன்று. அசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்து வந்துள்ளார். மகாவிஷ்ணு என்னும் கடவுள் எதற்காக வந்தார் என்றால், அசுரர்களாகிய தமிழர்கள் தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக்கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்துள்ளார். மகாவிஷ்ணு என்னும் கடவுள். எதற்காக வந்தார் என்றால் அசுரர்களாகிய தமிழர்கள் தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக்கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்து, தமிழனுடைய தலையைச் சீவி அழித்தார். அந்த மகாவிஷ்ணு அவதாரம் தான் இராமன், கிருஷ்ணன் எல்லாம்!

"அந்த இராமனும், கிருஷ்ணனும் நான்தான்" என்கிறார் இராஜாஜி! மிகத் துணிவோடு மனுதருமம் நிலைக்க வேண்டும் என்று சொல்லுகிறார். அவருக்கு ஆதரவாக மதச் சம்பந்தமான சங்கங்கள், சாதிச் சம்பந்தமான கட்சிகள் இருக்கின்றன. மேலும், நம்முடைய மக்களுக்கு உழைக்கும்படியான கட்சிகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பார்ப்பானுடைய நன்மைக்கே உழைக்கின்றன. இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தைரியமாகச் சொல்லுகிறார், "நான்தான் வேதகால இராமன். மனு தர்மத்தை இந்த நாட்டில் நிலைக்கச் செய்வதே தன் கடமை" என்று! அவருடைய முயற்சிக்குக் கட்டுப்பாட்டுடன் ஒன்றுமையாக இருக்கிறார்கள் பார்ப்பனர்கள். அங்குப் போனால் ஏதாவது கிடைக்காதா என்று பொறுக்கித் தின்பதே புத்தியாகக் கொண்டு நம்மவனும் ஓடுகிறான் என்றால் நம் மக்களுக்கு என்று உழைக்க யார் இருக்கிறார்கள்?

இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும். அந்தப் பக்கம் ராஜாஜி. இந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமி. அவர் எங்குப் போனாலும் போகிற பக்கமெல்லாம் என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார். நானும் அதைப் பற்றித்தான் பேசுகிறேன். என்னுடைய கருத்து நம்முடைய மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக வேண்டும் என்பது. ராஜாஜி அவர்களுடைய கருத்த மனுதரும முறைப்படி ஆட்சியை ஆக்கவேண்டும் என்பது. இதைப் பார்த்தால் புரியாதா, ராஜாஜி அவர்கள் யாருக்காக இருக்கிறார், யாருக்காகப் பாடுபடுகிறார் யாருடைய முன்னேற்றத்தை விரும்புகிறார் என்பது?

நம்முடைய மக்கள் சமுதாயத் துறையிலும், அறிவுத் துறையிலும் மட்டுமல்லாது, மதத் துறையிலும், கடவுள் துறையிலும் மனிதத் தன்மை பெற வேண்டும். இந்தச் சி.ஆர் (ராஜாஜி) மட்டுமல்ல, பெரிய பெரிய மனிதர்கள், அறிவாளிகள், மகான்கள், மகாத்துமாக்கள்; இன்னும் அவர்களைவிடப் பெரிய தெய்வீக சக்தி படைத்தவர்கள் என்று கூறப்படுவார்கள் ஆக யாராய் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்தப் பார்ப்பானுக்குப் பாடுபட்டவர்கள். அல்லது பாடுபடுபவர்கள் ஆகத்தான் இருப்பார்கள் - இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடைய காலத்திற்கு முன்னால் யாரும் "முட்டாள்தனம் ஒழியவேண்டும், அடிமைத்தனம் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும், பார்ப்பான் ஒழிய வேண்டும்" என்று சொல்லவில்லை. இன்னும் அரசியல் மூலம் பார்ப்பானுக்கு பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறானே தவிர, மான உணர்ச்சிக்குப் பாடுபடுபவன் யார்? எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும், பார்ப்பானுக்குப் பயந்துக் கொண்டு இருக்கிறானே தவிர, துணிந்து காரியம் செய்யவில்லையே? மேலும் நம் நாட்டில் படித்தவன், மேல் படிப்புக்காரன், புலவன் என்று இருக்கின்றனர் என்றால், அவர்களால் நமக்கு - நம் சமுதாய மக்களுக்கு என்ன நன்மை? அவனவன் பிழைப்புக்காகப் படித்திருக்கிறானே தவிர, ஊருக்கு உழைக்க வேண்டும் என்று எவன் படித்திக்கிறான்?

நான் தெரிந்தவரையில் நண்பர் இராஜாஜி அவர்கள் மனுவாகவே விளங்குகிறார்! வருணாச்சிரம முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தித் தன்னுடைய இனம் வாழவேண்டும் என்பதாகவே பாடுபட்டுக் கொண்டு வருகிறார். அதன் காரணமாகத்தான் எங்கள் இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்ட முடியவில்லை! அவர் இனத்தைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் கடமையைப்போல், நம் இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை நமக்கும் இருக்கிறது. ஆனால், எடுத்த காரியத்தை முடித்துக் கொள்ளும் தன்மைக்கு "மானத்தை பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று ஓர் ஆயுதம் அவர்களிடம் இருக்கிறது. நமக்கு மானத்தைப் பற்றிக் கவலை இருப்பதால் நமக்கு வெற்றி தோன்றுவது கஷ்டம்தான். மானம், ஈனம் என்பதைப் பற்றிக் கவலைப்படாததற்குக் காரணம் அவர்களுடைய கடவுள்களும், தருமமும் ஆகும்.

பார்ப்பானுடைய தருமம் உடல் வியர்க்கப் பாடுபடக் கூடாது. பிச்சை எடுத்தும் புசிக்க வேண்டும்.

பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரன்) தருமம்.

பார்ப்பான் யாரிடம் பிச்சைக் கேட்டாலும் தன் பொருளையே - சொத்தையே வாங்கிக் கொள்ளுகிறான். பூமி பணம் எல்லாம் பார்ப்பானுடையவை. அவற்றைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தருமம்.

ஏர் - கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும். அதன் உணவை எல்லாம் பார்ப்பான் உண்டு களிக்க வேண்டும். சூத்திரன் படிக்கக் கூடாது என்பது அவன் தருமம். இதனால்தான் அவன் படித்து மேலே போகவும் நாம் கீழே இறங்கவுமான நிலைமை ஏற்பட்டது. இவற்றை எல்லாம் நான் சும்மா சொல்லவில்லை. பி.ஏ., எம்.ஏ., படிப்பதைவிட அதிகம் படித்தே சொல்லுகிறேன்.

நாம் பாடுபடுகிறோம் - கல் உடைக்கிறோம். மரம் வெட்டுகிறோம். வண்டி இழுக்கிறோம். இவ்வளவு கடின வேலைகள் செய்யும் நாம் கூரை வீட்டில் தான் குடியிருக்போம். நம் வீட்டுக் கருமாதிக்கு வந்து, பிச்சை வாங்கிப் பிழைப்பவன் எல்லாம் மாளிகை வாசம்! கார்! பங்களா! மற்றும் பல வசதிகள் என்றால் நமக்கும் அந்த வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருக்காதா? எந்தப் பார்ப்பானாவது கம்பு, கேழ்வரகு சாப்பிடுகிறானா? கீழ்த்தரத்திலுள்ள பார்ப்பான் வீட்டில்கூட நெய் இல்லாமல் சாப்பிட மாட்டானே? நாம் சுடுதாசியில் எழுதித்தான் நாக்கில் ஒட்டிக் கொள்ள வேண்டும். பார்ப்பான் நெய் இல்லாமல் சாப்பிடுவதே பாவமாம்! அவனுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி தான் மதம் - கடவுள், சாஸ்திரம் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மானத்தைப் பற்றி அந்த இனத்திற்குக் கவலையே இல்லை. சூதும் - பொய்யும் - புரட்டும் அவர்களுக்குப் பஞ்சாமிர்தம். நமக்கு அவை வேப்பெண்ணெய். அதற்குப் பொறுப்புள்ளவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி எடுத்துக் கூறி அதன் வழியில் மக்களைப் பக்குவப்படுத்த வேண்டுமே என்கின்ற கவலையில்லாமல் இந்த ஊருக்கு வந்தால் எதைச் சொல்லித் தப்பிக்கலாம் என்று எண்ணி உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு பேசுவது மட்டத்திலும் மட்டம் என்றுதான் சொல்லுவேன்.

இப்பொழுது தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ஆட்சி காங்கிரஸ் ஆட்சியோ அல்லது வேறு எந்த ஆட்சியோ எப்படி வைத்துக் கொண்டாலும், ஜஸ்டிஸ் கட்சிக் (நீதிக்கட்சி) காலத்திலேகூட இப்படித் துணிந்து காரியம் செய்கிற ஓர் ஆட்சி இல்லை. இதைக் காதால் கேட்ட மாத்திரத்திலே நம்முடைய மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். நம்முடைய பிள்ளைகள்  தலைமுறை தலைமுறையாகப் புகழ்ந்து போற்ற வேண்டும். இப்படிச் சொல்ல வேண்டியதற்குக் காரணம் பல உண்டு. அவற்றை எல்லாம் நான்தான் பேசுகிறேனே தவிர காங்கிரஸ்காரனால் பேசக்கூட முடியவில்லையே? செய்த காரியத்தை எடுத்துச் சொல்ல முடியவில்லையே? செய்த காரியத்தை எடுத்தச் சொல்ல முடியாத இக்கட்டான நிலையில் இன்றையத் தினம் காங்கிரஸ்காரன் இருக்கிறான். பொதுவாக ஜனங்களுக்கு நன்மை செய்கின்றோம் என்று சொல்லுகிறார்களே தவிர நம்முடைய இன மக்களுக்குச் செய்கிறோம் என்று சொல்லமாட்டான். இந்த ஆச்சாரியாரைப் பற்றிப் பேசுவதற்குக் கூடப் பயம்!

இப்போது நடக்கிற சண்டை எல்லாம் பெரியாருக்கும் - சி.ஆருக்கும் தானே தவிர காங்கிரசுக்கும், எனக்கும் அல்ல என்று தானே சொல்லுகிறார்கள்? ராஜாஜி அவர்களுடைய கணக்கு எல்லாம் இங்கே இருந்து பவானிக்குப் போனால் எத்தனை முட்டாள் பசங்களை ஏமாற்றலாம்? அங்கேயிருந்து குமாரபாளையத்திற்குப் போனால் அங்கே எத்தனை பேரை ஏமாற்றலாம் என்பதுதானே தவிர, வேறு எவ்வித கவலையும் அவருக்கு இல்லை.

"க.து பசங்கள் எல்லாரும் ஒழுக்கம் கெட்டவர்கள், நாணயம் இல்லாதவர்கள். அவர்களோடு போய்க் கூட்டுச் சேர்ந்துக் கொண்டு இருக்கின்றீர்களே" என்று கேட்டால் அதற்குச் சொல்கிறார்: "அது எல்லாம் சுத்தப் பொய்! சாட்சாத் ஸ்ரீ இராமபிரான் தன் காரியம் சாதிக்கச் சுக்கிரீவனோடு கூட்டுச் சேரவில்லையா? அப்படிப்பட்ட அவரே கூட்டுச் சேர்ந்து இராவணனை ஒழித்திருக்க நான் ஏன் க.து.வோடு கூட்டுச் சேரக் கூடாது?" என்று கேட்கிறார். அதாவது இராமாயணத்தில் இராமனுடைய பெண்டாட்டியை இராவணன் தூக்கிக்கொண்டு போன பிறகு, சீதையை மீட்க இராமன் வரும் வழியில் வாலி, சுக்கிரீவன் பெண்டாட்டிச் சண்டையில் ஈடுபட்டிருக்கும் பேர்து குரங்குக் காலில் போய் விழவில்லையா? என்பதையே எடுத்துக் காட்டுகிறார். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

ராஜாஜியை இராமனாகவும், காமராஜரை இராவணனாகவும், க.து.க்களை குரங்காகவும் வைத்துப் பாருங்கள். இப்படி எல்லாம் சொல்கிறதைப் பார்த்தாலே புரியும். 'என் காரியம் செய்ய யாருடன் வேண்டுமானாலும் கூட்டுச் சேருவேன். நான் எதுவும் செய்வேன்' என்றால், மானம் என்ற சொல் பார்ப்பான் அகராதியில் இல்லை என்று தெளிவாய் விளங்குகிறது அல்லவா? பார்ப்பான் எதைச் செய்தாலும் வேதம் சொல்கிறது - சாஸ்திரம் சொல்கிறது - என்று சொல்லித் தப்பித்துக் கொள்வான். நான் சொல்கிறேன் எதைச் செய்தாலும் மனிதன் செய்தான் என்று - இது தவறா?

இராமன் வலியவே இராவணனிடம் சீதையை அனுப்பியதாகத் தான் அந்தக் கதை இருக்கிறது. பாரதத்திலும் கர்ணனைக் கொல்ல இப்படித்தான் கண்ணன் செய்துள்ளான். இந்தக் கதைகள் எல்லாம் எதற்கு என்றால் பார்ப்பனர்களுக்கு எதாவது இக்கட்டு வருமானால் அதிலிருந்து மீளுவதற்கு, இராமன் அப்படி நடந்து காட்டினான் - நீயும் அப்படி நட. இவன் இப்படி நடந்து காட்டினான். ஆகவே, நீயும் இப்படி நட என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கே ஆகும். சீதை இராவணனுக்குச் "சினைப்பட்டுள்ள" செய்தியை அறிந்தும் ஊரார் தூற்றுதலுக்கு ஆக உதைத்துத் தள்ளுவதுபோல் பாவனை செய்து காட்டுக்கு அனுப்பி அங்கே இரண்டு பிள்ளைகளைப் பெற்று அழைத்துக் கொண்டதை கடவுள் செயல் என்று காட்டி அதன்படி நட என்று சொல்கிறதைப் பார்ப்பன தருமமாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அவை நமக்கு எப்படிப் பொருந்தும்? முட்டாள் மக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் தான் இவற்றைச் சொல்லி மக்களை ஏய்க்கிறார்கள். இல்லையானால் ராஜாஜி அவர்கள் "ஏன் ராம அவதாரம் - மனுஆட்சி நடைபெற வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு இப்படித் திக்விஜயம் செய்ய முடியுமா? இந்த இராஜாஜி அவர்கள் முன்பு நடந்ததையும், இப்பொழுது நடக்கிறதையும் எடுத்துச் சொன்னால் இவர் வெளியே கிளம்ப முடியுமா?

"ஜாதி ஒழிய வேண்டும் என்று யாரோ சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது; என்னுடைய உயிர் உள்ளவரையில் அதற்கு இடங்கொடுக்க மாட்டேன்" என்று மதுரையில் இராஜாஜி அவர்கள் கூறியிருக்கிறார். இதை நான் சந்தேகமற உணர்ந்ததால் தான் அப்போதே காங்கிரசிலிருந்து வெளியேறினேன். அதுவும் சீனுவாச அய்யங்கார் முதல் இந்த சி.ஆர். (இராஜாஜி) வரை என்னைத் தலைவர் என்று அவர்கள் அழைக்கிறபோது, நான் எதற்காக வெளியேற வேண்டும். அப்போதும் ஜாதி ஒழிய வேண்டும் என்பதை எதிர்த்து நின்றவர் இந்த ஆச்சாரி தான். அன்றும் அவர் தான் எதிர்த்தார்; இன்றும் அவர்தான் எதிர்க்கிறார்.

நம்முடைய ஒரே இலட்சியம் இந்த நாட்டில் ஜாதியை ஒழித்தாக வேண்டும் என்பது. இராஜாஜியினுடைய இலட்சியம் ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்பது. இந்த இலட்சியத்தின் அடிப்படையில் தான் அவர் பாடுபடுகிறார்.


--------------------------------- 08.02.1961 அன்று ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு.  “விடுதலை”, 16.02.1961

45 comments:

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக

மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!




திருச்சி, ஜூன் 5- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில், அறிஞர் அண்ணாவின் பெயரில் நடக்கும் ஆட்சியில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மழை வேண்டி வருண பகவானுக்கு யாகமாம்!

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அரசு அலுவலகங் களில் உள்ள கடவுளர் படங்களை உடனே அகற்றுமாறு தனது ஆட்சியின்போது சுற்றறிக்கை விடுத்தார். அண்ணா திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளே மழை வேண்டி யாகம் நடத்த அறிவுறுத்தி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கிலப் பத்திரிகையில் இன்று (5.6.2015) வந்த செய்தியில்:- பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த மண்ணில் தமிழக அரசு அலுவலகமே மழைவேண்டி யாகம் செய்ய சுற்றறிகை விட்டுக்கொண்டு இருக்கிறது, தமிழக நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைவேண்டி சிறப்பு யாகங்கள் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளது. இயற்கை அன்னையின் பெயரில் மழைவேண்டி குறிப்பிட்ட கோவில்களில் யாகம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் எஸ்.அசோகன் இது குறித்து தனது கடிதத்தில் எழுதிய விபரம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜுன் ஒன்றாம் தேதி யாகம் நடத்திய பிறகு அதன் விபரங்களை படங்களோடு எந்த முறையில் செய்தீர்கள் என விளக்கமாக ஜூன் இரண்டாம் தேதி 10 மணிக்குள் தலைமைப்பொறியாளர் பார்வைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.

இன்றைய நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளால் அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள கால கட்டத்தில் அரசே மூடப் பழக்க வழக்கங்களை வளர்க்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியதாகும்.

குறிப்பு: அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர் திருத்தத்தையும் ஆய்வு மனப் பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். ’To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h), என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. இது குடிமகனுக்கும் பொருந்தும் அதைவிட ஆட்சியாளர்களுக்கும் அரசு பதவியில் உள்ளவர்களுக்கும் கட்டாயமாக பொருந்தும் காரணம் அவர்கள் அரசியலைப்புச் சட்டத்தின் படி நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகின்றனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102715.html#ixzz3cCCpHyI9

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துப்பாக்கியைத் தூக்க மாட்டானா?

திண்டுக்கல் அருகே இராணுவத்தில் பணியாற் றும் கணவர்களின் ஆயு ளுக்காக சப்பரத்தைப் பெண்கள் தோளில் தூக்கி வந்தனராம். பக்தி என்று வந்துவிட்டால் புத்தி வேலை செய்யாது என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுப் போதாதா?

சப்பரத்தைத் தூக்கி னால் எதிரி துப்பாக்கி யைத் தூக்கமாட்டானா?



Read more: http://www.viduthalai.in/e-paper/102719.html#ixzz3cCDWCOQ8

தமிழ் ஓவியா said...

வீட்டு வசதி வாரிய இடத்தில் விநாயகர் கோயிலா? அரசு அகற்றுமா?



சென்னை, ஜுன்5_ சென்னை எண்ணுர் காவல்நிலையப் பகுதிக் குட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் அரசு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 156 அடுக்குமாடி களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கப்பட் டுள்ளது. இக்குடியிருப்பு அமைக்கப்ட்டு ஏறக் குறைய 13ஆண்டுகள் ஆகின்றன. இக்குடியிருப் புப் பகுதியில் மதவேறு பாடுகள் ஏதுமின்றி இசு லாமிய, கிறித்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த வர்கள் என்று அனை வரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடியிருப்புப் பகுதியில் நிலவிவரும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக அர சின் வீட்டுவசதி வாரியத் துக்குச் சொந்தமான இடத்தில் பிள்ளையார் கோயிலைக் கட்டும் முயற் சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குடியி ருப்பின் க்யூ பிளாக் பகுதிக்கு அருகில் 30.5.2015 அன்று இரவோடு இர வாக அத்துமீறி அந்த இடத்தில் செங்கல், சிமெண்ட் கொண்டு பீடம் அமைத்து, பிள்ளை யார் சிலையை வைத் துள்ளனர். அவ்வப்போது கோயிலை வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்த மான இடத்தில் அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுகுறித்து குடியி ருப்பு சங்கத்தின் இந்நாள், மேனாள் நிர்வாகிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் தென்னரசு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குப்பன் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு வீட்டுவசதி வாரியத்தில் குடியிருப் பவர்களால் கொண்டு செல்லப்பட்டும் அதைத் தடுத்து நிறுத்திட எவ்வித முயற்சியும் அவர்கள் எடுத்ததாகத் தெரிய வில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி வகையறாக்கள் தற்பொழுது இதுதான் சந்தர்ப்பம் என்று காவல் துறையினரையும் இச் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், வீட்டு வசதித்துறையின் இயக் குநர் என்று அரசுத் துறையின் எந்த மட்டத் திலும் உரிய அனு மதியைப் பெறாமலே சிலையை வைத்து கோயி லைக்கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அரசு வீட்டுவசதித் துறையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் களும் இதை விரும்ப வில்லை.

நெய்தல் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப் போர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.மாணிக்கம், மேனாள் செயலாளர் சேகர் உள்ளிட்ட இந் நாள் மற்றும மேனாள் சங்க நிர்வாகிகள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வருகின்றனர் என்றாலும், அரசு வீட்டுவசதி வாரியம் எனும் அரசுத்துறையும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன் னெச்சரிக்கையாக ஆக்கிர மிப்பை தொடக்கத் திலேயே அகற்றிட வேண் டும் என்று அப்பகுதிவாழ் பொதுமக்களும் எதிர் பார்க்கின்றனர்.

அரசு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான பகுதியை ஆக்கிர மித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றி, உரிய நடவடிக் கையை அப்பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?



Read more: http://www.viduthalai.in/e-paper/102720.html#ixzz3cCDdBS9m

தமிழ் ஓவியா said...

கடவுளின் பெயரால் மோதல்:

கோயில் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு

சேலம், ஜூன் 5--_ சேலத்தை அடுத்த திருமலைகிரியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், புனர மைப்பு செய்து குட முழுக்கு நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி குடமுழுக்கு நடக்க இருந்த நிலையில், கோயிலுக்குள் வருவது தொடர்பாக மற்றாரு தரப் பினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட் டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையின ரும் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அதில் முடிவு ஏற் படாததால், திருமலைகிரி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப் பித்தது. மேலும் கோயிலை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். குடமுழுக்கும் தடைப்பட்டது.

பின்னர், தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு ஏற் படாததால், 3 முறை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டது. மேலும் இக் கோயில் விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் சேலம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தில்  வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்நிலையில் இறுதியாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு  2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைய இருந்தது. அதனால் மாவட்ட நிர்வாகம், மாந கர காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியது. அதன்பின் சேலம் ஆர்டிஓ ஷேக் முகைதீன், திருமலை கிரி உள்ளிட்ட 21 கிரா மங்களிலும் 144 தடை உத்தரவு வரும் ஜூலை 2ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு, அந்த கிராம பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காவல் பாதுகாப்பு, ரோந்து தொடர்ந்து இருக்கும் என காவல் அதிகாரிகள் தெரி வித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற் றமான சூழல் நிலவுகிறது.

தமிழ் ஓவியா said...

சாலை விபத்துகள்!


இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு என்பது பெருமைக்குரியதல்ல; சாலை விபத்துபற்றி செய்தி வராத நாளே அனேகமாக தமிழ்நாட்டில் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் சென்னை பாரி முனையில் நடைபாதையில் (பிளாட்பாரத்தில்) தூங்கிக் கொண்டிருந்த மூவர் மீது மோட்டார் பைக் ஏறி அந்த இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதும் - வேதனைக்குரியதும் ஆகும்.

67 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இன்னும் நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் மக்கள், குடித்தனம் நடத்தும் மக்கள், அந்த நடைபாதையே தான் இரவு தூங்குவதற்கான இடம்; சுருக்கமாகச் சொல்லப் போனால் அந்த நடைபாதையே அவர் களுக்கு எல்லாமாக இருந்து வருகிறது என்றால் இது தான் சுதந்திர இந்தியாவின் சாதனையா? கொஞ்சம் தார்மீகச் சினத்தில் கேட்க வேண்டும் என்றால், இது தான் சுதந்திரத்தின் இலட் சணமா? என்று கேட்கத் தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் சாலையோரத்தில் தூங்குவோர்களின் எண்ணிக்கை 16 ஆயிரம் பேர்களாம். தமிழ்நாட்டின் ஆட்சியாளர் களுக்கு இவைபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை யில்லை. மலர்கள் பரப்பப்பட்ட பாதையில் வாகன வாசம் செய் பவர்களிடத்தில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ப தாலேயே குடிசை மாற்று வாரியம் கிடப்பில் போடப்பட்டது. நொச்சிக் குப்பம் போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் மீள் குடியேற்றம் செய்வதில்கூட குறட்டை! குறட்டை!! நெடுங் குறட்டை!!!

புதிதாக எதையும் செய்யாவிட்டாலும் கடந்த ஆட்சியில் செய்யப்பட்டவைகளைச் செயல்படுத்தக் கூடாது என்பதில் மட்டும் மிகப் பெரிய விழிப்பு!

சென்னை நகரில் இரவு நேர விடுதிகள் இருக் கின்றனவாம். வீடற்றவர்களை அங்குத் தூங்கச் செய்வதில் போதிய திறமையான நிர்வாக செயல் பாடுகள் இல்லாமல் போனது - ஏன்?

அந்தத் தூங்கும் விடுதிகள் சரியான முறையில் சுகாதார முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதுகூடக் கேள்விக்குறிதான். சாலைகளில் குறிப்பாக இளை ஞர்கள் மோட்டார் சைக்கிள் பயணம் செய்யும் விதத்தைப் பார்த்தால் அவர்கள் ஒழுங்காக வீடு போய் சேர்வார்களா என்ற கேள்விதான் பார்ப்பவர்களுக்கு எழும். வீட்டில் சொல்லி விட்டுத் தான் வந்திருக்கிறார்கள் போலும் என்று பொது மக்களின் விமர்சனச் சொற்கள் காதில் விழத்தான் செய்கின்றன.

என்னமோ எட்டு போடுகிறார்களாம் - சில சொல்லடுக்குகள் நடைமுறையில் உலா வருகின்றன. வேகக் கட்டுப்பாடுகள் என்பவை எல்லாம் இருப்பதாகத்தான் சொல்லுகிறார்கள்; ஆனால் நடைமுறையில்? கேள்விக் குறிதான். போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதே யில்லை. தலைக்கவசம் உயிர்க் கவசம் என்று விளம்பரம் செய்தால் போதுமா? இதைக் கூட செயல்படுத்த வைக்க முடியாதது - வெட்கக் கேடு!

வெளிநாடுகளுக்கெல்லாம் நம் நாட்டு ஆட்சியாளர் காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி பயணம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்; அந்த நாடுகளில் எல்லாம் சாலை விதிகள் எந்த நிலையில் உள்ளன? போக்குவரத்து எந்த அளவுக்குக் கட்டுக்குள் இருக்கின்றன என்று பார்த்திருப் பார்களே! சம்பந்தப்பட்ட அந்நாட்டு விற்பன்னர்களை அணுகி இந்தியாவிலும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதாவது யாருக்காவது ஏற்பட்டதுண்டா?

அவை சிறிய நாடுகள் - இந்தியாவோ மிகப் பெரிய நாடு - துணைக் கண்டம் இங்கெல்லாம் வரைமுறைப் படுத்த முடியாது - நடைமுறை சாத்தியமில்லை என்று தப்பித்துக் கொள்வதை எல்லாம் மன்னிக்கவே முடியாது. சிறிய நாடுகள் என்றால் அதற்கான திட்டங்கள்; பெரிய நாடுகள் என்றால் அதற்கான திட்டங்கள் ஏற்பாடுகளைச் செய்யத்தானே வேண்டும்? தொழில் நுட்பம் விண்ணை முட்டும் இந்தக் கால கட்டத்தில் வழிமுறைகளுக்குப் பஞ்சம் கிடையாதே! தேவை மனம்தான் - பொறுப்புணர்ச்சி தான் - நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற வெறிதான்.

தமிழ் ஓவியா said...

முன்பெல்லாம் வாகனத்தை ஒட்டுவதற்கான உரிமங்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. உண்மை யிலேயே ஓட்டக் கூடியவர்களா என்பதை சம்பந்தப் பட்டவர்கள் நேரிடையாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இப்பொழுதெல்லாம் கடையில் கத்திரிக்காய் வாங்கி வருவது போல் ஆகி விட்டதே! டாஸ்மாக் வந்ததும் போதும், இளைஞர்களும் மாணவர்களும்கூட மது அருந்துவது அன்றாடம் தண்ணீர் குடிப்பது போன்றது தான். மது அருந்தா விட்டால் வாகன ஓட்டிகளால் வண்டியை ஒட்ட முடியாது என்று சொல்லும் அளவுக்கு - அதனை நியாயப்படுத்தும் அளவுக்குப் பேச்சு வழக்கு வந்து விட்டது.

வாகனம் ஓட்டும் போது மது அருந்தக் கூடாது என்ற சட்டம் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. அதனை மிகவும் கறாராக செயல்படுத்த வைக்க முடியாதா?

பாரிமுனையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த மூவர் பரிதாபகரமாக பலியானார்களே - அதற்குக் காரணம்கூட பைக்கை ஓட்டி வந்த இளைஞன் போதையில் இருந்தான் என்பதாலேயே என்று தெரிய வருகிறது - ஏடுகளிலும் அத்தகைய செய்தியும் வந்துள்ளதே!

ஒழுங்கு முறைகள் தொடக்கப் பள்ளி முதலே கற்பிக்கப்பட வேண்டும்; ஒரு காகிதக் குப்பையை அதற்குரிய குப்பைக் கூடையில் போட வேண்டும் என்ற ஒழுங்கு முறையை தொட்டிலில் ஆரம்பித்துப் பழக்குங்கள்; முதலில் பெரியவர்கள் அவ்வாறு நடந்து காட்டட்டும்; பிள்ளைகள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா இல்லையா என்று கண்ணெதிரிலேயே நாளும் பார்க்க முடியுமே?

பிள்ளைகளுக்கு எதிரிலேயே தந்தையார் சிகரெட் குடித்தால் அதன் பாதிப்பு சிறு வயதிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு வரத் தானே செய்யும்?

கார் ஓட்டும் பயிற்சியை மேல்நிலைப்பள்ளி களிலேயேகூட முறையாகப் பயிற்றுவிக்கலாமே!

கல்விக் கூடத்தில் கவனம் வையுங்கள் - எல்லாக் கடமைகளும் கண்ணியமாக

நடக்கத் தொடங்கிவிடும். ஆசிரியர்களுக்கும் ஒழுங்குமுறை பயிற்சி அளிக்கப் படுவது அதனை விட முக்கியமானதே!



Read more: http://www.viduthalai.in/page-2/102709.html#ixzz3cCENMPam

தமிழ் ஓவியா said...

உடைபடும் புனிதங்கள்?

- குடந்தை கருணா

சென்னை அய்.அய்.டி. எனும் தொழில் நுட்பக் கழகத்தில் கடந்த ஓராண்டாக இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், மொட்டைக் கூட்டத்தின் அனாமதேயக் கடிதம் எனும் அஸ்திரத்தால், தடை செய்யப்பட்டு, மாணவர்கள் அதற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியா முழுமையும் உள்ள பல கல்லூரிகளில் மாணவர்கள் இந்த தடையைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் செய்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நாட்டை ஆளும் மோடி அரசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சிலர் அறிக்கை விடுகின்றனர். ஊடகங்களில் பேசும் இந்த மேதாவிகள், அய்.அய்.டி. என்பது நாட்டின் மிக முக்கியமான கல்வி நிறுவனம். அதில், அரசியல், சமூகப் பிரச் சினைகள் குறித்து எல்லாம் விவாதிக் கலமா? என அக்கறையோடு கேட் கின்றனர்.
இந்த ஒரு ஆண்டில்தான், சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் இது போன்று ஓர் அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு நடப்பதுபோல் இந்த மேதாவிகள் பம்முகின்றனர்.

இதே அய்.அய்.டியில், 2006-ஆம் ஆண்டில், மாணவர்கள் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்களே. அதுவும் சிவசேனா தவிர்த்து, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி ஆதரவோடு மத்திய அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட முடிவு செய்திருப்பதாக அன்றைய கல்வி அமைச்சர் அர்ஜூன்சிங் அறிவிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்தார்களே. அந்த ஆர்ப்பாட்டம், யாருடைய அனுமதி பெற்று அன்று நடைபெற்றது? கல்வி வளாகத்தின் உள்ளே, அதே நிறுவனத்தின் தொடர் புடைய அமைச்சர் அர்ஜூன்சிங்கை கேவல மாக கண்டித்து மாணவர்கள் ஊர்வலம் சென்றார்களே, எந்த விதியில் அவர்கள் மீது, அன்றைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது?

தமிழ் ஓவியா said...

ஒன்றும் இல்லை; காரணம். எதிர்ப்பு தெரிவித்தது உயர்ஜாதி பார்ப்பன மாண வர்கள். நிர்வாகத்தின் தலைமை பார்ப் பனரிடத்தில். பின் எப்படி நடவடிக்கை இருக் கும்? மாறாக, அவர்களை ஊக்கப்படுத்தும் பணியல்லவா நடைபெற்றது.

வெளியார் யாரும் உள்ளே அனுமதியில் லாமல் நுழையமுடியாது என்கிற நிலைமை யில், உயர்ஜாதி மாணவர்கள் நடத்திய அந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தேசிய ஊடகங்கள் எப்படி நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடிந்தது?

இன்று ஆகா, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என பம்முகிற இதே அம்பிகளும், மேதாவிகளும், அன்றும் உயிரோடுதானே இருந்தார்கள்?

இங்கு மட்டுமல்ல. இதேபோல, புதுடில்லி யில் உள்ள எய்ம்ஸ். மருத்துவமனையுடன் கூடிய கல்லூரி. இதுவும், அம்பிகள் பேச்சில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம்.

இங்கும் அதே 2006-ஆம் ஆண்டில், மருத்துவர்களும், மாணவர்களும் இணைந்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். மருத்துவர்கள், மருத்துவ மனைக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட் டம் நடத்தினார்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல. பதினேழு நாட்கள். எந்த நோயாளிக்கும் மருத்துவம் பார்க்க மாட் டோம் என அறிவித்து, 2006 மே-15 முதல் மே-31-ஆம் தேதி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அந்த எய்ம்ஸ் நிறுவனத்தின் அன்றைய இயக்குநர் வேணுகோபால், இந்த போராட் டத்தை தடுத்தாரா? போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்கள், மருத்துவர்கள்மீது நட வடிக்கை எடுத்தாரா? அந்த நிறுவனத்தின் நேரடி தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆணையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே.

மாறாக என்ன நடந்தது? பதினேழு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்து வர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்; அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என இயக்குநர் வேணுகோபால் அறிவித்தாரே.

இப்போது, அரசுக்கு எதிராக மாண வர்கள் அரசியல் செய்யலாமா? என பேசும் இந்த சவுண்டிகள் எல்லாம், எய்ம்ஸ் மருத்து வமனை போராட்டம் நடைபெற்றபோது, ஆகா, பேஷ், பேஷ் என தொடையில் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் தானே செய்தார்கள்.

இப்போது சென்னை அய்.அய்.டியில், மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தவில்லை. நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து சில பேராசிரியர்களை அழைத்து கருத்தரங்கம், விவாதம் மேற் கொண்டார்கள். இதற்கே இந்த அலம்பல் ஏன்?

பகவத் கீதை புனித நூல் என அறிவிக்க இருக்கிறோம் என அரசின் முக்கிய அமைச்சர் தெரிவிக்கிறார். நாடு முழுவதும், குறிப்பாக தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு. பகவத் கீதை குறித்து, அம்பேத்கரும், பெரியாரும் என்ன சொன்னார்கள் என வீதிவாரியாக விளாசித்தள்ளிவிட்டார்கள்.

வெளிநாட்டில் தான் சந்திக்கும் தலை வர்களுக்கு பகவத் கீதையை புனித நூல் என கொடுத்த பிரதமர், அண்மையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்திய அரசமைப்புச் சட்டம் தான் எங்களது மதம் என சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புனித கங்கை என அறிவித்தார்கள். ஆனால், அதை சுத்தப்படுத்த எத்தனை ஆயிரம் கோடி கொட்டினாலும் நடக்காது என்கிற அளவிற்கு விரிந்த கூவமாக அது இருக்கிறது. இந்த நிலையில்தான், கடந்த ஓராண்டாக சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சமூகத்தின் புரையோடிப்போன சில நோய்கள் குறித்து அலசுகிறது.

இதே அய்.அய்.டியில் பல ஆண்டு களாக இயங்கும் விவேகானந்தா படிப்பு வட்டம், ஹரே ராமா, ஹரேகிருஷ்ணா படிப்பு வட்டம் இவையெல்லாம் எதைக் குறித்து புனிதமாக பேசுகிறதா, அந்த பேசு பொருட்கள் எல்லாம், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் கேள்விக் குறியாக்குகிறது.

இராமாயண வாசிப்பு வட்டத்தில் ராமனைப் புனிதனாக காட்டினால், இவர்கள் அம்பேத்கர், பெரியார் கருத்தின் அடிப்படையில் ராமனைப் பேசத்தானே செய்வார்கள்?

இதுதான் அய்.அய்.டி. என்கிற புனித நிறுவனத்தின் தலைமை குருக்களுக்கும், அவர்தம் அடியொற்றி நடக்கும் சீடர் களுக்கும் உள்ள இன்றைய பிரச்சினை. அவாளின் புனிதஸ்தலத்தில் இப்படி நடக்கலாமா? என்கிற நினைப்பு.

இதற்கான வினைதான், மொட்டைக் கடிதம்; அதனை ஏற்று விளக்கக்கடிதம். அதன் அடிப்படையில், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை. ஆனால், அவாளின் வினை எதிர் வினையாகி, சென்னை அய்.அய்.டி. மட்டுமல்லாமல், நாட்டின் பிற கல்வி நிறுவனங்களிலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மாணவர்களால் துவக்கப் பட்டுவிட்டது.

இனி இந்த இரு புத்தன்களால், புனி தங்கள் உடைபடுவதை யார் தடுக்க முடியும்?



Read more: http://www.viduthalai.in/page-2/102710.html#ixzz3cCEp99rd

தமிழ் ஓவியா said...

பொக்கிஷத்தைப் பாதுகாப்போம்


01.06.2015 தேதியிட்ட நமது விடுதலையில் தங்களது விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்ற தலைப்பிலான அறிக்கையை படித்துப்பார்த்து கண் கலங்கினேன். உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் தங்கி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இல்லம் திரும்பிய பிறகு நீங்கள் எழுதிய முதல் அறிக்கை என்பதை தெரிந்து கொண்டேன்.

தலைவர் தந்தை பெரியார் காலத்தில் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தொடர்ந்து தொய்வில்லாமல் 53 ஆண்டு காலம் விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றி வருவது சாதாரண விசயமே அல்ல, சம்பளத்திற்காக பிற இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட எந்த ஏட்டிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணி புரிந்து வந்ததாக தற்காலத்தில் சொல்ல முடியாது. கொள்கை களையும், லட்சியங்களையும் மட்டும் சம்பளமாகவும், சன்மானமாகவும் பெற்றுக் கொண்டு மலிவான, சுவை மிகுந்த, மக்களை விரைவில் சென்றடையும் விளம் பரங்களோ, செய்திகளோ இல்லாமல் சமூக நீதிக்களத்தில் மற்ற ஏடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் வீடெல்லாம் சென்று வரும் விடுதலைப் பயணத்திற்கு நீங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆசிரியராக மட்டுமல்ல அதன் எல்லாமு மாகவே இருந்து வருகின்றீர்கள்.

மேலும் தங்களது அறிக்கையில், நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும், ஜோதிட மூடநம்பிக்கை, ராசிபலன், மலிவான சுவை களங்களான சின்னத்திரை, பெரிய திரை, மதம், ஆன்மிக வியாபாரம் இவற்றில் மக்களை சுரண்டாத சுயமரியாதை சொக்கத் தங்க நாளேடு விடுதலையை தவிர வேறு உண்டா? விரலை மடக்கத்தான் எவராலும் முடியுமா? என்று கேட்டிருப்பது இன எதிரிகளுக்கும், இயக்க துரோகிகளுக்கும் தாங்கள் கொடுத்த மிகப்பெரிய சாட்டையடி சவாலாகும். இதை எந்தக் கொம்பனும் நேருக்கு நேர் நின்று ஆதாரங்களோடு மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல வருமானத்திற்காக முன் பக்கங்களை கூட காவு கொடுத்துள்ள நாளேடுகள் இன்று நம் கண் முன்னே சர்வ சாதாரணம் என்று தாங்கள் சொல்லியி ருப்பது நிதர்சனமான உண்மை என்பதோடு, இன்றைய கால கட்டத்தில் வருமானத்திற் காக கொள்கையை விலை பேசும் கூட்டத்தின் நடுவில் சுயமரியாதையை காப்பாற்றுவதற்காகவும், இனமானத்தை காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து லட்சங் களை தவிர்த்துவிட்டு லட்சியங்களுக்காக நஷ்டத்தில் இயங்கிவரும் நமது விடுதலை தமிழர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது நமது நஷ்டங்களும், சங்கடங்களும் நமக்கு தூசாகவே தெரிகிறது.

அய்யா! விடுதலை ஏட்டை தொடர்ந்து நடத்துவதற்கும், நமது இயக்கத்தை தொய்வில்லாமல் இன எதிரிகள் மத்தியில் வீறுநடைபோடும் அளவிற்கு தொண்டாற் றவும், தலைவர் தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், எங்களைப் போன்ற கோடிக் கணக்கான தமிழர்களின் சமூக நலனில் அக்கறையுடன் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் தங்களைப் பாராட்டுகின்ற நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம் தங்கள் உடல் நலனை முதலில் கவனமாகப் பேணுங்கள், உங்களை வைத்து தான் இன்னும் கால் நூற்றாண்டிற்கு நமது இயக்கம் இன எதிரிகளை எல்லா களத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால்தான் தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்பாக கேள்விப்பட்டும் கூட நேரிலோ, தொலைபேசியிலோ தங்களை சிரமப் படுத்தவில்லை. எங்களுக்கு தொடர்ந்து தங்களுடைய பணி மேலும் கால் நூற்றாண் டுக்கு கிடைக்க வேண்டும் எனவே தயவு செய்து தங்களுக்கு தற்பொழுது தேவை பரிபூரணமான, ஓய்வு, ஓய்வு, ஓய்வு! வணக்கம்.

- கே.செல்வராஜ்
மாவட்ட திமுக வழக்குரைஞரணி அமைப்பாளர், தாராபுரம்



Read more: http://www.viduthalai.in/page-2/102713.html#ixzz3cCEzIApv

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தியா? சர்வ சைபரா?



சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.

ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)



Read more: http://www.viduthalai.in/page-7/102755.html#ixzz3cCGGNNB5

தமிழ் ஓவியா said...

இராமாயணம் கற்பனை கதையே
இந்தோ- ஆரியர் போரைக் குறிப்பது

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்ச  தந்திரக் கதையிலுள்ள கற்பனைக் கதையைப் போன்றவை என்பதே என் கருத்து

- நேரு, டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

அட, அயோக்கிய புரோகிதர்களே!
சுவாமி விவேகானந்தர்



மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.

சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.

இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள்?

வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.

கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)



Read more: http://www.viduthalai.in/page-7/102756.html#ixzz3cCGZRVLp

தமிழ் ஓவியா said...

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.

மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.

ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.

-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346

ramiahjayapal said...

க.து பசங்கள் எல்லாரும் ஒழுக்கம் கெட்டவர்கள் // எனில், க.து பசங்கள் யார் ?

5 முறை ஆட்சியிலிருந்தவர்களும்,
5 முறை ஆட்சியிலிருந்தவர்களுக்கு, சால்ரா அடித்தவர்களும்,
பெரியாருக்குப் பின் இந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக,
பாப்பான்களுக்கு மண்டியிடவில்லையா !

தமிழ் ஓவியா said...

மீண்டும் சமஸ்கிருதம்: ஆழம் பார்க்கும் மோடி அரசு



புதுடில்லி, ஜூன் 6 -இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளி லும் மாணவர்களிடம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு ஆழம் பார்க் கும் வேலையை மத்திய மோடி அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் மாணவர்களி டம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு மத்திய அரசு தயாராகி வருவது, சமஸ் கிருத மொழி பயில்வோர் பற்றிய விபரம் சேகரிக்க அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கை மூலம் தெரிய வரு கிறது.

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வி யியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இந்தியா முழு வதும் அனைத்து மாநிலங் களின் கல்வித் துறைக்கும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதில் மத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா திட் டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக என்.சி.இ. ஆர்.டி., இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சமஸ்கிருத கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு முன்னோட்ட ஆய்வை மேற்கொள்வதா கவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிரு தம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த சமீபத்திய நிலை குறித்த புள்ளி விவரத்தை உடன டியாக அனுப்ப வேண் டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

இதை மத்திய மனித வளமேம்பாட்டு அமைச் சகத்துக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்த தகவல்களை சேகரித்து விரைவில் அனுப்ப வேண் டும் என்றும் வற்புறுத்தப் பட்டுள்ளது. இந்த சுற்ற றிக்கையை முன்மொழிந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னமும் மாநில பள்ளி கல்வித் துறைக்கும், மெட் ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கும் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையுடன், பூர்த்தி செய்யப்பட வேண்டிய பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2010ஆம் ஆண்டு முதலாக அனைத்து வகுப்புகளிலும் மொத்தம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, அதில் சமஸ்கிருதம் பயிலும் மாணவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சமஸ்கிரு தம் கற்க விரும்பும் மாணவர்கள் எண்ணிக் கையும், இந்த மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆண், பெண் என இரு பாலினர் பற்றிய மிகவும் விலாவாரியான விவரங் கள் கேட்கப்பட்டுள்ளன. யாருமே படிக்காவிட்டா லும் இல்லை என்ற விப ரத்தையும் எழுத்துப்பூர்வ மாக சமர்ப்பிக்ககேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனைத்து விபரங் களையும் ஜூன் 8ம் தேதிக் குள் (திங்கள்கிழமை) அனைத்து பள்ளிகளும் மாநில கல்வித் துறைக்கு அனுப்பிவைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் கற்க விருப்ப முள்ள மாணவர்கள் என்ற ஒரு கேள்விபட்டி யலில் கேட்கப்பட்டுள்ள தன் மூலம், இந்தியா முழுவதும் எவ்வளவு பேர் இதில் ஆர்வமாக உள்ள னர் என்ற தகவலைத் திரட்ட அரசு திட்டமிட் டிருப்பது தெரிகிறது.

இதன் மூலம் சமஸ் கிருத திணிப்புக்கு வழி செய்யப்படுவதை நாம் அறியலாம். ஒருபுறம் அய்அய்டி கல்வி நிலையத் தில் அம்பேத்கர் - _ பெரி யார் வாசிப்பு வட்டத் திற்கு தடை விதித்து விட்டு, மறுபுறம் இந் துத்துவ அரசியலை, சமஸ்கிருதத் திணிப்பைச் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருவதை இந்த சுற்றறிக்கை அம் பலப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத சமஸ்கிருத மொழித் திணிப்பு முக்கிய அரசியல் பிரச்சனை என்பதுடன், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்கள், வகுப் புகள் என வேலைப்பளு அதிகமாக இருக்கும் நிலையில், வேண்டாத வேலையாக இதையும் எங் கள் தலையில் திணித்து சிரமப்படுத்து கின்றனர் என்று பள்ளி நிர்வாகங் களும் வேதனை தெரிவித் துள்ளன.



Read more: http://www.viduthalai.in/e-paper/102808.html#ixzz3cHSthirf

தமிழ் ஓவியா said...

மோடி அரசுக்கு எதிர்ப்பு

50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியவே முடியாது! முரளிமனோகர் ஜோஷி அதிரடி



வாரணாசி, ஜுன்6_ பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கியத் துவம் வாய்ந்த திட்டங் களில் முதன்மையானதாக இருப்பது கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் நமாமி கங்கா(புனித கங்கை) என்று கூறிக் கொள்கிறார்கள்.

பாஜகவின் இந்தத் திட்டம் குறித்து பாஜக வின் முக்கிய தலைவர் களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், கங்கையை சுத்தப்படுத்துவது என்பது 50 ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்கான கனவுத் திட்டமாக வேண் டுமானால் இருக்கலாம். தடைகளில்லாமல் நீரோட் டம் இருந்தால்தான் அது வும் சாத்தியம். ஆகவே, அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தம் செய்ய முடியாது. அடுத்த 50 ஆண்டுகளில் கங்கை ஆற்றோட்டப் பகுதிகளை சிறுசிறு பாகங்களாகப்பிரித்து, சிறிய நீர்த் தேக்கங்களாக மாற்றினால் கங்கையைச் சுத்தம் செய்யலாம். என்று ஜோஷி கூறினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கங்கையில் கப்பல் விடப்போவதாகக் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு முரளி மனோகர் ஜோஷி கூறும் போது, பெரிய படகுகளே செல்ல முடியாத கங்கை யில் கப்பலை எப்படி விட முடியும்? என்று கேட் டார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102806.html#ixzz3cHT3uiYC

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

ஈயம் கலந்த உணவுப் பொருள் எதுவும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கச் செய்யும். டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் ஈயம் கலந்திருக்கும் - உண்ணாதீர் எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...

நல்ல தமாஷ்!

பிஜேபியில் 30 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பி னர்கள் ஆகியுள்ளார்களாம். இந்தியக் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசனையே மிஸ்டு காலில் பிஜேபி உறுப்பினராக ஆக்கியவர்கள் ஆயிற்றே.

தமிழ் ஓவியா said...

ஜூன் 7 : புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான நாள்

ஒரு நோய் பாதிப்பிலிருந்து மீண்ட வர்களிடம் தான் அந்த நோய் பற்றிய உண்மையான அக்கறை இருக்கமுடியும், அதன் படி புற்று போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர் களுக்கான நாளாக ஜூன் இரண்டாம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு ஏழாம் தேதி கொண்டாடப் படுகிறது.

நோயிற்கு மருத்துவம் ஆலோசனைகளைவிட அதனால் பாதித்து மீண்டவர்களின் ஆலோச னைகள் நமக்கு மிகவும் அவசிய மானவை. மீண்டவர்கள் சுற்றுப்புறச்சூழல் காரணமாகத்தான் எங்களுக்கு புற்று நோய் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. புற்றுநோயால் நிகழும் இறப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக் கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மரபணு மூலம் தொடர்ந்து அடுத்த தலை முறைக்குத் தொடரும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் குறித்த சமயத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். தூய்மையான பழக்கவழக்கம் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் முக்கிய காரணியாகும்.

புற்றுநோய் வருவதில் சுற்றுச்சூழலின் பங்கு அதிகம் என்று புற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலைப் பொருட் களால் அதிக அளவு புற்றுநோய் ஏற்படு கிறது. புகையிலைப் பழக்கத்திற்கு அடிமை யானவர்களின் அதாவது சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங் களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கும்.

தூய்மையற்ற நீர், மசாலா கலந்த உணவுகள், சரியான தூக்கமின்மை போன் றவைகள் உணவுப்பாதை நோய்களை உருவாக்கும், முக்கியமாக மாட்டிறைச் சியில் புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என்ற ஒரு பொய்யான கருத்து பரப்பட்டு வருகிறது, இது உண்மையல்ல, எந்த ஒரு இறைச்சியானாலும் காய்கறி உணவானாலும் அதிக அளவு கார வகைகளைச் சேர்த்து உண்ணும் போது உணவுக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் உருவாகும். நன்கு வேக வைத்து உண்ணும் மாட்டிறைச்சி புற்றுநோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும், நொதிகளை அதிகம் உற்பத்தி செய்யும் புரதங்களுக்கு ஊக்க மூட்டி களாக இருக்கிறது. தொடக்க அறிகுறிகள் உடலில் வலியில்லாத கட்டிகள், திடீர் எடை குறைவு, உடல் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதல், தொடர்ந்த மலச்சிக்கல் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் நோய் பற்றி கவலை கொள்ளத் தேவை யில்லை, தொடக்கத்தில் நாம் மருத்துவர் களை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குமேல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப் புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங் களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந் தபுரம் ஆகிய மய்யங்களில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக் கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்களைப் பொருத்தவரை மார் பகப் புற்றுநோயும், கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். கட்டிகளால் ஏற்படும் புற்றுநோய்கள் சிறுவர் சிறுமிகளையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் அதிகம் சுகாதாரமற்ற சூழலினால் உருவாகிறது. நகர்ப்புறக் குடிசைப்பகுதி மற்றும் நெருக்கடியான நகர்ப்புறங் களில் வாழும் குழந்தைகளைப் புற்றுநோய் எளிதில் தாக்குகிறது.

தூய்மையான புறச்சூழல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் காரணி களாகும், மரபணுமூலம் வரும் புற்று நோய் மிகவும் சொற்பமானவையே இவையெல்லாம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள், சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகப் பேணி புற்றுநோயின் தாக் கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

- சரவணா ராஜேந்திரன்



Read more: http://www.viduthalai.in/page-2/102801.html#ixzz3cHTjRZyW

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன் னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பத்திரிகைகளும் சர். சண்முகமும்


தோழர் ஆர்.கே. சண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக் களும் மக்கள் கவனிக்கப்பட தக்கது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. பலர் எதிர்பாக்கவும் கூடும்.

இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகை அவரது நடவடிக் கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிதும்கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். சண்முகம் அவர்கள்.

இந்திய சட்டசபையில் இராணுவ சம்பந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.

இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை.

இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என் கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தத் தைரியம் இல்லாவிட்டால் இத் தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள்தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனியத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன.

அவைகளுக்கும் சுத்த இரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற பணம் பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதர வளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம்.

என்ப தோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தை விட தங்கள் சுய நல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லா தாரைக் கண்டு இரங்குகின்றோம்.

பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு என்று சொன்னது போல், ஒரு மனி தனின் பிழைப்பிற்காக மானத்தைத் தனது சமுகத்தை விற்று விட்டு ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934



Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVjbxIE

தமிழ் ஓவியா said...

விஷமத்துக்கு விஷமமா?
அல்லது உண்மையா?



திருச்சி நகர தூதன் பத்திரிகையில் தோழர் அவிநாசி லிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் கோயம்புத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்குக் காங்கிரஸ் சார்பாக அபேட்ச கராய் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேட்சகராய் நிற்க மாட்டாராம்.

காங்கிரசின் பெயரால் தோழர் அவிநாசிலிங்கம் செட்டியாரை முன்னிருத்தி அத்தகுதியைப் பயன்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரியவருகிறது என்ற ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது.

பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.

நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம். என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாய் இருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்தவாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை.

ஆகவே, தோழர் அவிநாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம். அல்லது பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934



Read more: http://www.viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3cHVvSPcL

தமிழ் ஓவியா said...

வாழ்க பெரியார் அம்பேத்கர் ஜிந்தாபாத்!

கவிஞர் கலி. பூங்குன்றன்



அய்.அய்.டி. என்றால்
என்ன தெரியுமா?
அய்யர் அய்யங்கார்
டெக்னாலஜிதான்?
ஆமாம் அதற்கு இப்பொழுது
என்னாயிற்றாம்!
பெரியார் - அம்பேத்கர்
என்னும்
இரட்டை சிங்கங்கள்
உள்ளே நுழைந்து விட்டன!
அய்யய்யோ! அய்யய்யோ!
ஆரியத்தின் அலறல் சத்தம்!

நரிகள் உலவிய நாரதர் காட்டிலே

அரிமாக்கள் நுழைந்தால்
அச்சம் உலுக்காதா?
அதுவும்
வியாசர், வசிஷ்டர்
விவேகானந்தர்கள்
உறையும் ஆசிரமத்தில்
விவேக வெடிகுண்டுகள்
வீச ஆரம்பித்தால்
அதன் விளைவு..
அவாளுக்கு
நன்னாவே தெரியுமே!
ஆபத்து வந்து விட்டது
அடிநொறுங்கிப் போய் விடுவோம்
ஆதிக்கத்தின் வேரில்
அடி விழப் போகிறதே!
அலறுகிறார்கள் அலறுகிறார்கள்
ஆந்தைகளாக
ஆமாம் அலறுகிறார்கள்

ஏன்
ஆபத்பாந்தவனை
அழைப்பதுதானே?
கிருஷ்ண பரமாத்மாவைக்
கூப்பிடுவதுதானே!
மகா விஷ்ணுவே
மகாவிஷ்ணுவே
சக்ராயுதத்துடன்
வாருமய்யா என்று
வருந்தி அழைப்பதுதானே?
எப்படி வருவார்கள்?
அப்படிப்பட்டவர்கள்
இருந்தால்தானே
வந்து குதிக்க முடியும்?

கீதையைப்பற்றிப்
பிரச்சாரம் கீச்கீச் சென்று
கத்தும் இடத்தில்
கீதையைக் கிழித்து
கிழங்கு சுடும்
கிழக்குச் சூரியன்
கிளர்ந்தெழுந்தால்
கிலிபிடிக்காதா?
கிண்டி அக்ரகாரத்தில்
இந்துத்துவா சங்கீதம்
ஏழு கட்டையில்
வாசித்த இடத்தில்
இந்து என்று சொல்லாதே
இழிவைத் தேடிக் கொள்ளாதே!
எனும்
கட்டளைக் காம்போதி
களை கட்டினால்
கடையைக் கட்டிக்

கொள்ளத்தானே நேரும்?
அம்பேத்கரைக்கூட
ஏற்றுக் கொள்வார்களாம்
ஆனால்
அந்தத் தாடிக் கிழவரை
மட்டும்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்களாம்!
புரியகிறதா - இதற்குப்
பெயர்தான்
பிரித்தாளும் சூழ்ச்சி என்பது!

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்
இவ்விரு சிங்கங்களும்
என்று புரியாதா என்ன?
ஆரியத்தின் சூழ்ச்சிகளை
அகர முதல் னகரம் வரை
சொல்லிக் கொடுத்தவர்களிடமே
சூழ்ச்சி நரிகளின்
சூதாட்ட வித்தைகளா!
சுக்கல் நூறாகும்
எச்சரிக்கை!
முன்புத்தி இல்லாதவர்கள்
முப்புரியார்கள் என்று
தந்தை பெரியார் சொன்னது
இதோ கண்முன் நடக்கிறதே!
கிண்டி அய்.அய்.டி. கிண்டிவிட்ட தீயால்
மும்பை, டில்லி என்று
அண்ணல் அம்பேத்கரும்,
அய்யா பெரியாரும்
ஆகாய மார்க்கம்

பறந்து சென்றனரே!
அடுத்த கட்டம்?
அங்கு இங்கெனாதபடி
அய்யாவும், அம்பேத்கரும்
அனைத்துக் கல்விக்
கூடங்களிலும்
அவதாரம் எடுக்கப்
போகிறார்களே!
அன்றைய அவதாரம்
அசுரர்களை வதம்
செய்தது என்றால்
இவ்விரு அவதாரங்களும்
சுரர்களை
சூறையாடப் போகிறது
சூழ்ச்சி முடிச்சுகளை
கந்தலாக்கப் போகிறது
வன்முறையால் அல்ல
அறிவார்ந்த நன்முறை
அஸ்திரங்களால்!
ஒடுக்கப்பட்டோரே!
உங்களுக்கு அடையாளம்
காட்டி விட்டார்கள் -
காகபட்டர் பரம்பரையினர்!
அய்யாவும், அண்ணலும்
நம்மிரு விழிகள்
அடையாளம் காட்டும்
அன்னை மொழிகள்
நம்மை வாழ்விக்கும்
புரட்சி விழிகள்!
வாழ்க பெரியார்!
அம்பேத்கர் ஜிந்தாபாத்!



Read more: http://www.viduthalai.in/page-1/102774.html#ixzz3cHWIIw73

தமிழ் ஓவியா said...

தமிழர்களிடையே ஜாதி உண்டா?

-பேராசிரியர் வி.எஸ்.ராஜம்

(பென்சில்வேனியா பல்கலைக் கழகம்)



பென்சில்வேனியா பல்கலை க்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் வி.எஸ்.ராஜம் தமிழரிடையே தொடக்க காலங்களில் ஜாதி மற்றும் தீண்டாமை வழக்கத்தில் இல்லை என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

தமிழ் சமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் ஜாதிவெறி பரவிவரும் நேரத்தில் தமிழ்ப் பேராசிரியராகிய வி.எஸ்.ராஜம் சங்க காலத்தில் ஜாதி, தீண்டாமை, இன்னபிற.... என்கிற தலைப்பில் நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் தமிழர்களுக்குத் தொடக்க காலங்களில் ஜாதீய அமைப்பு முறைகள் இல்லாமல்தான் இருந்துள்ளன என்பதை ஆய்வாக குறிப்பிட் டுள்ளார்.

தமிழ்ச்சங்க காலங்களில் ஜாதிய பாகுபாடுகள் மற்றும் தீண்டாமை இருந்ததற்கான குறிப்புகள் ஏதும் கிடையாது என்று பேராசிரியர் வி.எஸ்.ராஜம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார விளக்கம் நூல் மற்றும் உ.வே.சாமிநாதய்யர் நூல், நம்மாழ்வார் திருமொழி ஆகிய நூல்களில் ஜாதீய முறைகள்குறித்து குறிப்பிட்டுள்ளார்கள் என்று பேராசிரியர் வி.எஸ்.ராஜம் குறிப்பிட்டுள்ளார்.

சிலப்பதிகார விளக்க நூல் எழுதிய அடியார்க்கு நல்லாரைக் கேள்வி கேட்கும் பேராசிரியர் ராஜம் செம் மொழி தமிழ் இலக்கிய இலக்கணக் குறிப்புகள் எனும் நூலின்வாயிலாக பேராசிரியர் ராஜம் முத்திரையைப் படைத்துள்ளவர் ஆவார். அந்த நூலை அமெரிக்க தத்துவச் சங்கம் வெளியிட் டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ வடிகள் தங்கநகை செய்பவர்குறித்து குறிப்பிடும்போது, விலங்கு நடை செலவின்.... கொல்லன் என்று குறிப் பிடுகிறார். ஆனால், அவர் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால், உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரிடமிருந்து ஒதுங்கி நின்றான் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார்.

நம்மாழ்வாரின் பாசுரத்தில், குலம் தங்கு சாதிகள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இது ஜாதிக்கும் வருணத் துக்கும் உள்ள இணைப்பைக் குறிப் பிடுவதாக உள்ளது.

பழமையான தமிழ் இலக்கணநூலை வழங்கிய தந்தை ஹென்ரிக்சின் ஆர்டி டா லிங்குவா மலபார்: மொழியாக்கம், வரலாறு மற்றும் ஆராய்ச்சி எனும் நூலை மொழிபெயர்த்துள்ளவரான பேராசிரியர் ராஜம் கூறும்போது, 16ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மிஷனரியைச் சேர்ந்தவரான தந்தை ஹென்ரிக்ஸ் என்பவர்தான் முதல்முதலாக காஸ்டா (Casta) என்கிற சொல்லை பயன்படுத்தியவர். அதுதான் பிற்பாடு ஆங்கிலத்தில் காஸ்ட் (Caste) என்று உருவானது என்று கூறுகிறார்.

அந்த புத்தகம் ஹார்வார்ட் பல் கலைக்கழகத்தின் சார்பில் பதிப்பிக்கப் பட்டது. தமிழ்நாட்டின் தென்மாவட் டங்களில் உள்ள பறவாக்கள்மத்தியில் பணியாற்றி, 1546 ஆம் ஆண்டிலிருந்து 1600 ஆம் ஆண்டுவரை ஹென்ரிக்ஸ் தமிழ்_போர்த்துக்கீசிய அகராதியை உருவாக்கினார். புன்ணைக்காயல் பகுதியில் உயிரிழந்தபின்னர் அவர் உடல் தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயத்தில் புதைக்கப்பட்டது. ஹென்ரிக்ஸ் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை.

சோனகன்(மூர்), சோனகத்தி(மூரினப் பெண்), பிராமணன், பிராமணத்தி என்பதுபோன்று உள்ளூர் ஜாதியினரின் பெயரைக்கொண்டு ஹென்ரிக்ஸ் பிரித்துக் கூறியுள்ளார். அதே நேரத்தில் அவர் ஜாதிக்கான குணங்களாக தாழ்த்தப்பட்டவர் என்றோ, உயர்ந்த ஜாதியினர் என்றோ, தீண்டத்தகாத வர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்று பேராசிரியர் ராஜம் விளக்கிக் கூறினார்.

சேரி

சேரி என்பதற்கு பொருள் தாழ்த் தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி என்று கூறுவதை நிராகரிக்கும் பேராசிரியர் ராஜம் கூறுகையில், சங்க இலக்கி யங்களில் உள் ஆதாரங்களின்படி, சேரி என்பதற்கு பொருள் அனைத்து வகுப்பினரும் சேர்ந்து குடியேறிய பகுதி யையே சேரி என்று வழங்கப்பட்டது.

சேரியில் வசிப்பவர்கள் வறுமையில் உழன்றவர்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அவரவர் தொழிலைச் செய்துகொண்டு மகிழ்ச்சி யுடனே வாழ்ந்தார்கள் என்று கூறினார்.

பேராசிரியர் ராஜம் குறிப்பிடு கையில் சிலப்பதிகாரம் விளக்கம் மற் றும் திருவாய்மொழி ஆகிய நூல்களில் தான் ஜாதியும், தீண்டாமையும் குறிப் படப்பட்டுள்ளன என்று கூறினார்.



Read more: http://www.viduthalai.in/page3/102776.html#ixzz3cHWt0aNe

தமிழ் ஓவியா said...

நாத்திகத்தைப்பற்றி அவதூறா?
பிரேசிலில் தண்டனை



பிரேசிலைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியை வழங்கி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் நாத்திகர்கள்குறித்து எதிர் மறையான கருத்துகளைக் குறிப்பிட்டது.

2010ஆம் ஆண்டில் ரெடி பான் டெய்ரெண்டிஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பிரேசிலின் அவசரம் (அர்ஜென்ட் பிரேசில்) நிகழ்ச்சியை ஜோஸ் லூயிஸ் தாடெனா என்பவர் வழங்கினார். இளைஞர் ஒருவர் கடவுள் இல்லாமைகுறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியை வழங்கியவர் குறிப்பிடும்போது என்னுடைய கருத்தாக கூறுவது என்னவென்றால், ஒருவர் நாத்திகராக இருப்பதால், எந்த வித வரையறையுமில்லாமல் ஏராளமான குற்றங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதேபோன்ற கருத்துகளை தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சி முழுவதுமாக, நாத்திகர்கள் என்றாலே குற்றம் செய்பவர்கள் என்கிற கருத்தைப் பேசிவந்தார். அதேபோல் எவ்வளவுபேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை வாக்கெடுப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியை வழங்கியவரின் கருத்துகளால் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக அரசு வழக்குரைஞர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

மத சுதந்திரம் மற்றும் சட்டத்துக்கு விரோதமாக மதசகிப்புத்தன்மையில்லாமல் எவரும் பேசுவது என்பது சட்டவிரோதமானது. தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியை வழங்கியவரின் கற்பனையால் புனையப்பட்டு கூறப்பட்ட கருத்துகள் பிரேசில் நாட்டின் அரசமைப்புக்கு விரோதமாக இருந்துள்ளது. அப்படி சட்ட விரோதமாக எவரும் பேசுவது என்பது அபராதம் விதிப்பதற்கு அல்லது சிறைத்தண்டனைக்கு உரியதாகும்.

மத சுதந்திரம் என்கிற பெயரில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை வரும் நவம்பர் மாதம்வரை 72 முறை ஒளிபரப்புவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய கருத்துகள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாக இருக்கிறது.

ஏராளமானவர்கள் தங்களின் கருத்துகளாகக் குறிப்பிடும்போது, மதங்கள்தான் போர்கள் நடைபெறுவதற்கு காரணங்களாக இருக்கின்றன. மதங்களால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நாத்திகத்தை குறை கூறக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான தளமாக தாடெனா மற்றும் ஏவர் ஆகியோர் இணைந்து வழங்கிய அந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. தாடெனா என்பவரும் நம்மைப் போன்ற மனிதர்தான். அந்த நிகழ்ச்சி நேரலை என்பதால், அளவுகடந்து சென்று விட்டார் என்று ஒருவர் குறிப்பிட்டார்.

இதுபோன்று அவதூறுகளைப் பரப்புகர்களுக்கு அபராதமோ, சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் என்றும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக பிரேசிலில் நாத்திகர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டுவந்தாலும், அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தகவலின்படி, அமெரிக்க அய்க்கிய நாடுகளில் நாத்திகத்தின் விழுக்காடு அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வில் பிரேசிலில் நாத்திகர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேல் இருப்பது தெரியவந்துள்ளது.



Read more: http://www.viduthalai.in/page3/102777.html#ixzz3cHX1CMO1

தமிழ் ஓவியா said...

சித்ரா பவுர்ணமி சொற் குற்றமும் பொருள் குற்றமும்

சைத்ரா என்றால் சமற்கிருதத்தில் ஆடு எனப் பொருள்படும். மேழம் என்றால் தமிழில் ஆடு எனப் பொருள்படும். பூமி சூரியனைச் சுற்றிவரும் பெயர்ச்சியின்போது இந்த மாதத்தில், பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்குப் பின்னால் காணும் விண்மீன் கூட்டங்களை கற்பனைப் புள்ளியால் ஒருங்கிணைத்தால் ஆடு போன்ற தோற்றம் நினைவில் வரும்.

அதை தமிழ் முன்னோர்கள் மேழம் மாதம் என்று பெயர் சூட்டினார்கள். அதைத்தான் ஆரியம் புகுந்து மேஷம் என மாற்றியது. இந்த மாதம்  முழுவதும் ஆடு போன்ற தோற்றத்தை கற்பனை செய்து நிலவின் பின்புலம் அல்லது தோற்றம் என அழைத்தனர்.

பின்புலம் அல்லது தோற்றம் என்பதுதான் ஆரியத்தால் இராசி என அழைக்கப்பட்டு மேழம் பின்புலம் என்பது மேஷராசி ஆனது. சைத்ரா என்பது சித்திரை ஆனது.

பூமிக்கு இருக்கும் ஒரு நிலவு பூமியைச் சுற்றிவர 27.3 நாள்கள் ஆவதைத்தான் குசேலனுக்கு 27 பிள்ளைகள் என கதை அளந்த ஆரியப் புராணம் வேறு. சித்திரை பவுர்மணி என்பது மருவி சித்ரா பவுர்ணமி ஆகி, சித்ரா வெள்ளாடு ஆகி வழக்கில் உள்ளது.

அதைப் போலத்தான் கள்ளழகர் என்ற கற்பனை உருவ பொம்மையை உருவாக்கி இந்த மாதத்தில் வைகை ஆற்றில் இறக்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் சொல்கின்றன.

உண்மையில் கள்ளழகர் என்ற (கடவுள்) சிலையை பக்தர்கள் சுமந்து வந்து வைகை ஆற்றில் இறக்கினார்கள் என்றல்லவா எழுத வேண்டும் அதை விடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார் என்றால், பக்தர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தானே அல்லவா இறங்கி இருக்க வேண்டும்.  அப்படி இறங்கினால்தானே இறங்கினார் என எழுத வேண்டும். சொல்ல வேண்டும்.

அப்படி எழுதினால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க திராணியற்ற பத்திரிகை ஊடகங்களே இனிமேல் கள்ளழகர் சிலை பக்தர்களால் வண்ண உடை உடுத்தி சுமந்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் இறக்கப்பட்டது என எழுதுங்கள் உங்களுக்கு பத்திரிகை தருமம், எழுத்தில் நேர்மை, நாணயம் இருந்தால் இப்படி எழுதுங்கள்.

தயாரா? சொல்லில் குற்றம் இருந்தால் பொரு ளிலும் குற்றம் வரும். பொருள் படும்படி... படி என்கிறார் புரட்சிக் கவிஞர்.

- _ வசந்த விண்முகில்
- _ எதிலும் கட...உள் பேரவை-

தமிழ் ஓவியா said...

பிழை திருத்தும் மென்தமிழ் மென் பொருள் உருவாக்கிய அறிஞர்



தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக் கூடிய சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கியுள் ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழைகளைத் திருத்த முடியும்.

இந்த மென்பொருளைச் சிறப்பாக வடிவமைத்த தெய்வசுந்தரம், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற முதன்முறையாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓர் இலட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்பட வுள்ளது.

இந்த மென்பொருளை கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றி விட்டால், தமிழ் வார்த்தைகளில் உள்ள தவறை எளிதாகக் கண்டுபிடித்து ஒரு வினாடியிலேயே திருத்த முடியும். வார்த்தையில் ஓர் எழுத்து விடுபட்டி ருக்கலாம் அல்லது எழுத்து இடம் மாறி யிருக்கலாம் அல்லது தேவையில்லாமல் ஓர் எழுத்து சேர்க்கப்பட்டிருக்கலாம்.

இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடியிலே திருத்துவதுதான் இந்த மென்பொருளின் சிறப்பு. உதாரணத்துக்குக் கசலம் என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது கசம், கலம், கமலம், கலசம் ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் படித்து பார்த்தான், வந்துப் பார்த்தான் என்ற வார்த்தை களில் உள்ள ஒற்றுப் பிழையைத் திருத்தி, படித்துப் பார்த்தான், வந்து பார்த்தான் என்று காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்கு கிறது. தமிழ் எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது.

அதாவது 1,20,00,000 என எண் வடிவில் தட்டச்சு செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த மென் பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்த முடியும்.

தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது தனிச்சிறப்பு.

இந்தச் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது:

எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள். கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15 வகையான கீ போர்டு வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இத்தகைய மென்பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட்டும் படித்தால் போதாது. மொழியியல் அறிவும் அவசியம். அதற்குப் பல்கலைக் கழகங்களில் மொழியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் மூலமே ஏராளமான தமிழ் மென் பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும்.

_இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...

கடல் சூழ் உலகு (ஜூன் 8 உலக கடல் நாள்)

இவ்வுலகு நான்கில் மூன்று பாகம் கடலால் நிரம்பியுள்ளது. மனித இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடலை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன. கடலை நாம், சாதாரணமாக பார்க்கும் போது நீல வண்ணம் பவளம் போர்த்தியது போல் காட்சி தரலாம், கடலின் உள்ளே மனிதன் இதுவரை கண்டறியாத பல அறிவியல் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. நமது அறிவியலாளர்கள் ஹப்பில் தொலைநோக்கி மூலம் நமது பால்வெளியையும் தாண்டி வேற்று பால்வெளியை (ஆண்டிரோமீடா) கண்டுவிட்டனர். ஆனால் தினசரி காணம் கடலில் வெறும் 30 விழுக்காடு மட்டுமே அறிந்துள்ளோம். அதே வேளையில் 70 விழுக்காடு கடலை நாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படி இருக்கலாம் என்று அறிந்து வருகிறோம். கடலில் தோன்றும் சிறிய மாற்றங்கள் கூட நிலப்பகுதியில் மிகப்பெரிய் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜூன் மாதம் துவங்கியதும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலையின் இறுதி முனையில் உள்ள தார்ப்பாலைவனத்தில் மழையே காணாத மாற்றங்களும் கடலில் ஏற்படும் மாற்றங்களால்தான் உருவாகிறது. மேற்குதொடர்ச்சி மலைதான் இந்தியாவின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கிறது. ஓர் ஆண்டு மேற்குதொடர்ச்சி மலை மழை தருவதை நிறுத்திவிட்டால் இந்தியாவில் மிகபெரிய பஞ்சம் ஏற்பட்டுவிடும். 2013-ஆம் ஆண்டு ஜூலை வார இறுதியில் தார்ப் பாலைவனப்பகுதியில் கடுமையான மழைபெய்தது, இது குறித்து தார்ப்பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் 79 -வயது முதியவர் ஒருவர் கூறும் போது எனது தாத்தா தந்தை மற்றும் என்னுடைய காலத்தில் இதுபோன்ற மழையை கேள்விப்பட்டது மில்லை, கண்டதுமில்லை என்றார். அதே நேரத்தில் மற்றொரு மாற்றம் மத்திய இந்திய பகுதிகளில் வெறும் 30 விழுக்காடு மழைமட்டுமே பெய்துள்ளது. இது தொடர்ந்தால் இந்தியாவில் 50 விழுக்காடு மக்கள் பஞ்சத்தால் வாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்தத் திடீர் மாற்றம் இந்தியப்பெருங்கடலின் உள்ளே உருவாகிவரும் மிகபெரிய மாற்றத்தின் ஆரம்பக் கட்டம்தான். ஆகையால்தான் தார்ப் பாலைவனத்தில் வெள்ளம் வரும் அளவிற்கு மழையும் ஆயிரம் ஆண்டுகளாக நல்ல மழைபெய்துவரும் பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியும் கொடுக்கிறது. கடலுக்கடியில் தேங்கும் வெப்பம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக புவியில் இயற்கையாக தோன்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை மெல்லுடலிகள் உறிஞ்சி அதை சுண்ணாம்புப் பாறையாக தொடர்ந்து மற்றிக்கொண்டு வருகின்றன. ஆனால் கடந்த சில நூற்றாண்டாக தொழில்வளர்ச்சி காரணமாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு, கடலின் அடியில் அளவுக்கு அதிகமாக தேங்கிக்கொண்டு வருகிறது, இப்படி தேங்கியிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இதை எடுத்துக்கொள்ளும் மெல்லுடலிகளை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. ஒருபுறம் கார்பன் தேக்கம் என்றால் மனிதன் உருவாக்கும் கழிவுகளும் கடலை மெல்ல மெல்ல நாசம் செய்துவருகின்றன.

உலகின் குப்பை கூடமாக மாறும் இந்தியப்பெருங்கடல் முக்கியமாக இந்தியப்பெருங்கடல் உலகின் வியாபாரப் பாதையாக மாறிவிட்ட சூழலில் மற்ற எந்த கடலையும் விட அதிக அளவு மாசுபடுகிறது. இந்திய பெருங்கடல் நாடுகளில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரைத் தவிர மற்ற நாடுகள் இந்தியா உட்பட அனைத்தும் வறுமை தாண்டவமாடும் நாடுகள்தான், இந்தியப்பெருங்கடலில் ஏற்படும் மாசுக்கள் இந்த ஏழை நாடுகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் நெருங்கி வருகிறது. மேலை நாடுகள் தங்கள் கடற்பகுதிகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கும் போது கடல்மாசை கட்டுபடுத்தவேண்டிய இந்தியா போன்ற நாடுகள் மேலை நாடுகளின் கூலியாளாக செயல்பட்டு தங்கள் கடலை குத்தகைக்கு விடும் கேவலமான நிலைக்குச் சென்றுவிட்டது. மேலைநாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் அரசுக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களின் பணத்தாசை, இந்தியா போன்ற நாடுகளின் வாழும் மக்களில் வாழ்வாதாரத்தையே பாதித்துவிடும். கடல்மாசடைவதை தடுப்பதோடு மேலை நாடுகள் இந்தியப் பெருங்கடலை ஆக்ரமிப்பதையும் தடுத்து நிறுத்தவேண்டிய சூழல் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய கடல்தினத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமை அதிகமுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.



Read more: http://www.viduthalai.in/page-4/102883.html#ixzz3cNEQpuZM

தமிழ் ஓவியா said...

மழைக்காக சிறப்பு பூஜைகள் செய்வதா?
மூடநம்பிக்கையை தமிழக அரசு பரப்புவதா!
ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜூன் 7_ தமிழக அரசின் நீர்வளத் துறை மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழைக் காக சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்வ தற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில்:_ தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட் டிக் கொண்டிருக்கும் நிலை யில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப் பணித்துறையின் நீர்வளப் பிரிவு செயற்பொறியாளர் கள் அனைவரும் சிறப்பு பூஜைகளை நடத்த வேண் டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரி விக்க வேண்டும் என்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற் றறிக்கை அனுப்பியுள்ளார்.
வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச் சியடைந்துள்ள இக்காலத் தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந் தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக் கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண் டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய தாகும்.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார் கள். அதேபோல், ஜெயலலி தாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்ட தன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழி யில் செல்லத் தொடங்கி யுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும். பகுத்தறிவுக்கும், அறிவிய லுக்கும் ஒவ்வாத இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்ப தற்கு தலைமைப் பொறியா ளர் முயல வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!



அருமைக் கழகத் தோழர்களே! உரிய சிகிச்சைக்குப் பின் நமது அருமைக் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகிறார்கள் (13.6.2015).

கழகத் தோழர்களும், உடல் நலம் பெற்று திரும்பும் தலைவர் அவர்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தோழர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கிய - அவசியமான - செய்தி ஒன்று உண்டு.

இதே தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில்தான் எனக்குச் சால்வை வேண்டாம் சால்வைக்குப் பதில் விடுதலை சந்தா வேண்டும் என்ற அறிவார்ந்த அன்பு வேண்டுகோளை தமிழர் தலைவர் முன் வைத்தார்கள் (விடுதலை 27.11.2003).
அதனை மீண்டும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய கால கட்டம் இது.

ஆசிரியர் அவர்களின் அய்ம்பதாண்டு விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம்விடுதலை சந்தாக்களை அளித்து அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

வேறு எதைக் கொடுத்தாலும் இதற்கு ஈடானது. அவர்களைப் பொறுத்தவரையில் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை அறிந்தவர்கள் ஆயிற்றே நாம்.

எனவே, அருமைக் கழகக் குடும்பத்த வர்களே! தஞ்சையில் நமது தலைவரைச் சந்திக்கும் பொழுது ஆசிரியர் அவர்களே ஆச்சரியமும், ஆனந்தப் பெருக்கும் அடையும் அளவுக்கு சந்தாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் அவர்களின் கைகளில் அளி யுங்கள்! அளியுங்கள்!! அதன் மூலம் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் தாருங்கள்! தாருங்கள்!!

- கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
5.6.2015 திராவிடர் கழகம்



Read more: http://www.viduthalai.in/page-8/102880.html#ixzz3cNFasNCB

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ள லாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத் துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரி யராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட தடையை நீக்க இணையத்தின் வாயிலாக வலியுறுத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள்


சென்னை ஜூன் 8 கல்வியாளர்களாக, ஆராய்ச் சியாளர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக் களாக உள்ள ஏராளமானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி. இயக்குநருக்கு பன்னாட் டளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையத்தின் வாயிலாக சென்னை அய்.அய்.டி இயக்குநருக்கு கோரிக்கையை விளக்கி கடிதம் அனுப்பினார்கள். www.change.org எனும் தளத்தின் வாயிலாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் 100, 200 எனத் தொடங்கி பன் னாட்டளவில் உள்ள சமூக நீதிப் பற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய் 7.597பேர் என்கிற அளவிலான எண்ணிக்கையினர் இணை யத்தில் இந்தத் தளத்தில் மட்டும் பதிவு செய் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் ஏராளமானவர்கள் அவரவர் முகநூல் பக்கம் மட்டுமன்றி புதிதாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்று டில்லி, மகாராட்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது. டிவிட்டரிலும் சென்னை அய்.அய்.டி. பக்கத்தில் அவ்வப்போதைய தகவல்கள் பரிமாற்றம் இருந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊண் உறக்கம் இன்றி சமூக நீதிக்களத்தில் இறங்கிய மறவர்கள் ஏராளமானவர்கள் களம் கண்டனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102908.html#ixzz3cTiHBBtz

தமிழ் ஓவியா said...

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?



மோடி செய்த 20 சாதனைப் பணிகள் என்ன என்று தகவல் உரிமைஅறியும் சட்டத்தில் கேட்டபோது பிரதமர் ஆற்றிய பணிகுறித்த எந்த விவரமும் எங்களிடம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஒர் ஆண்டு முடிந்துவிட்டது, பாஜக தலைவர் களும் அமைச்சர்களும், நாடெங்கும் கூட்டம் போட்டு ஏழைமக்களுக்காக 20 சாதனைத் திட்டங்கள் நாங்கள் கொண்டுவந்துவிட்டோம். இதுதான் மோடியின் சாதனைகள் என்ற பெயரில் பல்வேறு பொய் கதைகளைப் பேசி தேர்தல் பிரச்சாரங்கள் போல் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்; மே மாதம் 26-ஆம் தேதி மதுராவில் நடந்த கூட்டத்தில், மோடியும், தன் பங்கிற்கு தனது முதுகில், தானே தட்டிக்கொண்டார். அப்படி மோடி என்னதான் செய்துவிட்டார் என்ற உண்மையை அறிந்துகொள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு, மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டு ஆகிவிட்டது, மக்களுக்காக பிரதமர் செய்த பணிகள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டுத்தாருங்கள் என்று கேட்டிருந்தார். அதற்குப் பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் பிரதமர் பணி குறித்த விவரம் இதுவரை எங்களிடம் வர வில்லை. பிரதமர் பணிகள் குறித்த விவரங்களை எல்லாம் சேகரித்து வைப்பது எங்கள் பணியல்ல, அதேபோல் பிரிவு 6(3)-ன் கீழ் தனிப்பட்ட ஒருவருக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் கிடையாது என்று பதில் அனுப்பி இருந்தது. இதுகுறித்து அகமதாபாத்தைச் சேர்ந்த, தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு அனுப்பிய நபர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, பிரதமரின் ஓராண்டு நிறைவை ஒட்டி அவர் மக்களுக்காக என்ன என்ன பணிகளைச் செய்துள்ளார்? இனிமேல் எது மாதிரியான திட்டங்களை நிறைவேற்ற உள்ளார்? என அறிந்து கொள்ள விவரம் கேட்டு பிரதமர் அலுவலகத் திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதியிருந்தேன்.

ஆனால், பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதிலோ ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தது, மே 5 ஆம் தேதியிட்டு வெளிவந்த பிரதமர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி அம்புஜ் சர்மா என்பவர் எழுதிய பதில் கடிதத்தில் உங்களின் கேள்விகளுக்கான பதில்கள் எங்களிடமில்லை என்று வந்துள்ளது. மோடியின் ஓராண்டு ஆட்சி குறித்து ஊடகங்கள் புகழ்ந்துகொண்டு இருக்கும் போது பிரதமர் அலு வலகமே எங்களிடம் விவரம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது, மோடியின் ஆட்சியின் நிலை என்ன என்பதைத் தெளிவாக காட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலகத்திற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை, பிரதமர் எந்த நாட்டிற்குச் செல்கிறார் என்பது கூட தெரியாமல் பத்திரிகை செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றன. பிரதமர் தனது அலுவலக வேலைகளைத் தவிர மற்ற அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பதையே முக்கியமான பணியாகக் கொண்டு இருக்கிறார். இதனால் கேபினெட் அமைச்சரவையின் பணியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன என்று கூறியிருந்தார். இதே போல் லண்டனில் இருந்து வெளிவரும் தி எகனாமிஸ்ட் என்ற இதழும் பிரதமர் தன்னுடைய பணியை விட்டுவிட்டு மற்ற எல்லா அமைச்சர்களின் பணியிலும் தலையிடுகிறார் என்று எழுதியிருந்தது. இவர்களின் கூற்றை பிரதமர் அலுவலகமும் உண்மை தான் என்று குட்டை உடைத்துவிட்டது. மோடி நிருவாகத்திற்கு ஈடு இணை ஏது? இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களிலேயே தலை சிறந்தவர் என்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இது அர்ப்பணம்!

சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும்? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? குறிப்பிடத்தகுந்த சாதனைகளை மோடி அரசு செய்திருந்தால், கண்டிப்பாக பிரதமர் அலுவலக தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்திருக்க மாட்டாரா?

அந்த அதிகாரி அதற்காகத் தானே பிரதமரின் அலுவலகத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்! ஓராண்டில் சாதனை என்பதெல்லாம் மக்களுக்கு வேதனைப் பரிசே தவிர வேறு என்னவாம்?

குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்த கதை போல நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் தீவிர கவனத்தை செலுத்தி விவசாயி மக்களின் வாழ்வில் விளையாடிப் பார்க்க அல்லவா ஆசைப் படுகிறது. பலன் விவசாயிகளின் தற்கொலைப் பட்டியல் தான் நீண்டு கொண்டே போகிறது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் அதிகம்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே மானியங்களும், கடனுக்கான வட்டி விகித குறைப்புகளும். எல்லாம் தலைகீழ் தான் நரேந்திரமோடி ஆட்சியில்; வேதனைப் பட்டியல் உண்டே தவிர சாதனைப் பட்டியலுக்கு எங்கே போவது?

இதில் ஜனநாயகத்தின் நேர்த்தி இழையைக் காண முடியவில்லை - சர்வாதிகாரத்தின் நெடி அல்லவா அனல் கக்குகிறது.



Read more: http://www.viduthalai.in/page-2/102915.html#ixzz3cTihZ8q8

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)



Read more: http://www.viduthalai.in/page-2/102914.html#ixzz3cTjAQt00

தமிழ் ஓவியா said...

இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கம் முடக்கம்: பயனாளர்கள் வேதனை


சென்னை, ஜுன் 8_ இணையத்தில் உள்ள சமூக வலைத்தளங்களில் முகநூல் சமூக ஊடகத்தில் இந்திய நாத்திகர்கள் பக்கம் 28,000 பேர் விரும்பும் முக நூல் பக்கமாக இயங்கி வரு கிறது. இந்திய நாத்திகர்கள் முக நூல் பக்கம் தடை செய்யப்பட்ட பக்கமும் இல்லை. இந்நிலையில் கடந்த 4.6.2015 முதல் அந்த இணையப் பக்கத்தில் எந்த ஒரு படத்தையோ வீடியோ பதிவுகளையோ பகிர்ந்து கொள்ள முடியாமல் உள் ளது. மற்ற கருத்துகளுக் கான பதிவுகளையும் அந்த முகநூல் பக்கத்தில் இணைக் கவும் முடியாமல் உள்ளது. இதனால் அந்த முகநூல் பக்கத்தின் பயனாளர்கள் பெரிதும் அவதிக்கு உள் ளாகி உள்ளனர்.

சமூக ஊடகம் என்பது ஒருவருடைய கருத்தை வெளிப்படையாக மற்றவர் களிடம் பகிர்ந்து கொள் வதற்காகவே இருப்பதாகும். ஆனால், தற்பொழுது பயன்படுத்துவதற்கு வாய்ப் பில்லாமல் முடக்கப்பட்டி ருக்கும் நிலையானது கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது.
பாதுகாப்பற்ற முகநூல் பக்கமாக குறிப்பிடப்பட்டு அதன் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தை நிர்வ கித்து வருபவரான சூர்யா சிறீராம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக் கும் மேலாக இந்த முக நூல் பக்கத்தில் பதிவிடப் படும் கருத்துகளை, படங் கள் மற்றும் வீடியோப் பதிவுகளை பார்ப்பவர்கள் எவரும் அப்படியே மற்ற வர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியாதபடிக்கு, எங்களால் மட்டுமே பகிரும்வண்ணம் இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தை வடிவமைத் திருந்தோம். இதுவே எங் களுக்கு பாதகமாக முடிந்து விட்டது என்று கூறினார்.

இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நிர்முக்தா அமைப்பைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக் கப்பட்டு வந்தது. நிர்முக்தா அமைப்பு அறிவியல், சுதந்திரச் சிந்தனைகள், மத சார்பின்மை மற்றம் மனித நேயத்தை இந்தியாவில் வலியுறுத்தி பரப்பிவரும் அமைப்பாகும்.

சென்னை அய்.அய்.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை விதிக்கப்பட்டபிறகு இந் திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தின் செயல்பாடு களில் முகநூல் பக்க செயல் பாடுகள் கட்டுப்படுத்தப் பட்டதாக நிர்வகிப்பவர் கள் கூறுகின்றனர். சென்னை அய்.அய்.டி வளாகத்துக் குள்ளேயே மதத் தலைவர் களால் போலி அறிவியல் ஜோதிடத்தை பரப்புவதற் கான நிகழ்ச்சியை நடத்து வதற்கு அழைக்கப்படு கிறார்கள். இந்த நிலையில் தான் இந்திய நாத்திகர்கள் பக்கத்துதின் செயல்பாடு கள் முடக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய நாத்திகர்கள் முகநூல் பக்கத்தை நிர் வகிப்பவர் கூறும்போது, நாங்கள் அம்பேத்கர் பெரி யார் வாசகர் வட்டத்தை தடைக்கு எதிராக குரல் கொடுத்துவந்தோம். அதற் காக பல்வேறு மதத் தலை வர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

அதுமட்டுமன்றி தற் போதைய பிரச்சினை களாக இருப்பவற்றின் மீதும் கவனம் செலுத்தி வந்துள்ளோம். மேகி நூடுல்ஸ் முரண்பாடுகள், இந்தியாவில் உள்ள மின் சாரம்குறித்த பிரச்சினை கள், இசுலாமியத் தீவிர வாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து வங்கதேச எழுத் தாளர் தஸ்லீமா நஸ்ரீன் இந்தியாவை விட்டு வெளி யேறி அமெரிக்காவில் தஞ் சம் அடைந்தது ஏன்? என்று பல அண்மைக்காலப் பிரச் சினைகள் குறித்து இந்திய நாத்திகர்கள் முக நூல் பக்கத்தில் விவாதித்துக் கொண்டு வந்துள்ளோம். ஆனால், தற்பொழுது மதத்தன் பெயரால் எங்கள் குரல்வளை நெறிக்கப் பட்ட நிலையை உணருகி றோம் என்று இந்திய நாத்திகர்கள் முக நூல் பக்கத்தை நிர்வகிப்பவர் ஒருவர் கூறியுள்ளார்.

நிர்முக்தா இணையத் தில் செயல்பட்டு வரும் குழு சுதந்திர சிந்தனையா ளர்களைக் கொண்டு முக் கியமான மாநகரங்கள் மற்றும் பிற நகரங்களில் இயங்கி வருகிறது. அதன் உறுப்பினர்களை தொடர்ந்து சந்தித்து சமூ கப்பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறது.



Read more: http://www.viduthalai.in/page-3/102930.html#ixzz3cTjIsxQ7

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம்: கலைஞர் வரவேற்பு



சென்னை, ஜூன் 8_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் _ பெரியார் வாசகர் வட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று இன்று (8.6.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:_

31.-5.-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - மொட்டைக் கடிதத்தின் காரணமாக,மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறு வனம் தற்போது போராட் டக் களமாக மாறியுள்ளது. எனவே இந்தப் பிரச் சினையில் உடனடியாக பிரதமர் அவர்கள் நேரடி யாகத் தலையிட்டு, சென் னையில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் அமைதி யையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலை நாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். என் னைப் போலவே தமிழகத் தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்க ளும் இது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந் தனர். மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி அந்த நிறுவன இயக்குனருக்கு நேரடியாகக் கடிதமே எழுதியிருந்தார். தி.மு. கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. இவைகளின் விளைவாக நேற்றைய தினம் அய்.அய்.டி. நிர்வா கம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையினை நீக்கியதோடு, சுயேச்சையான அமைப் பாக அது செயல்பட அனு மதி அளித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அய்.அய்.டி. நிர்வாகத்தின் இந்த முடி வினை தி.மு. கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த, போராடிய அனைவருக்கும் நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



Read more: http://www.viduthalai.in/page-4/102941.html#ixzz3cTja2LN8

தமிழ் ஓவியா said...

வெயில் கால வெப்பக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!



பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறு வகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கி யுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கி யுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம்.

எளிதில் செரிமானமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊற வைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Read more: http://www.viduthalai.in/page-7/102925.html#ixzz3cTk5BuMX

தமிழ் ஓவியா said...

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

மனிதன் ஆரோக்கி யமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

தமிழ் ஓவியா said...

மேகி விற்பனை அதிகரிப்புக்கு சோம்பல் மிகுந்த இளம் தாய்மார்களே காரணமாம் பாஜக பெண் எம்.எல்.ஏ-வின் பேச்சால் பரபரப்பு

புதுடில்லி, ஜூன் 8_ மேகி விற்பனை அதி கரிக்க சோம்பலான தாய் மார்களே காரணம் என்று கூறிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பேச்சு சர்ச்சை யாக வெடித்துள்ளது.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட ரசாயனம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இந்தி யாவில் பல்வேறு மாநி லங்களில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த நட வடிக்கையை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ உஷா தாகூர் வரவேற்றுள்ளார்.

இன்றைய தலைமுறை தாய்மார்கள் சோம்பல் காரணமாக விரைவு உணவு நூடுல்ஸ்களை குழந்தைகளுக்குத் தருவ தாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே மேகி போன்ற உணவு பொருள் களின் விற்பனை அதி கரித்து இருப்பதாக தெரி வித்தார்.

மக்கள் மீதான அக் கறை காரணமாகவே மேகிக்கு பாஜக அரசு தடை விதித்திருப்பதாக கூறிய உஷா தாகூர், மேகி போன்ற விரைவு உணவு களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் இத்தகைய பேச்சு சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள்  சட்டமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து ஏதா வது உளறி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நட வடிக்கை தொடர்கதை யாகி வருகிறது.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர்மீது புதிய கரிசனம் ஏன்?

செவ்வாய், 09 ஜூன் 2015


அம்பேத்கரின் மீதான காவிகளின் கரிசனம் மிகவும் வஞ்சகமானது.

கொஞ்சம் பழைய கதை. 11ஆம் நூற்றாண்டு வரை அதாவது `பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் சுப்பிரமணியன் கிடையாது முருகன் மட்டுமே உண்டு. வேலவன் என்றும் அவனை அழைப்பர். குறிஞ்சி நிலக்கடவுள் அவர். அவருக்கு ஒரே மனைவி வள்ளிக்குறத்தி. பின்னர் வடநாட்டு சுப்பிரமணியனையும் முருகனையும் இணைத்து கதையுண்டாக்கி; சுப்பிரமணியன் மனைவி தெய்வானையை முருகனுக்கும் மனைவி யாக்கி; வள்ளிக்குறத்தியை சக்களத்தி ஆக்கி விட்டார்கள்; அரவணைத்தும் தோளில் கைப் போட்டும் அழித்தொழிப்பதில் அவர்கள் வல்லவர்கள். சரி ! நாம் ஏமாளியானால்; தூங்கினால் அவர்கள் தொடையில் கயிறென்ன வடமே திரிப்பார்கள். அம்பேத்கர் பெயரை மகாராஷ்டிர பல்கலை.க்கு வைத்தபோது கொந்தளித்த காவிக்கூட்டம் இன்று திடீரென உரிமை கொண்டாடுவது ஏன்?

வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி எனும் பிராமணிய அறிவுஜீவி பெரியாரும் - அம்பேத்கரும் தவறான தலைவர்கள் எனப் பேசியும் எழுதியும் வந்தார். கீஷீக்ஷீலீவீஜீஜீவீஸீரீ திணீறீமீ நிஷீபீ என அம்பேத்கரை அசிங்கப்படுத்தி ஒரு நூலே எழுதினர். தலித் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. முற்போக்காளர்கள். இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். சங்பரிவார் அந்நூலைத் தூக்கிச் சுமந்தது. இப்போது திடீரென அதையெல்லாம் நாம் மறந்திருப்போம் எனக் கருதி வாயினிக்கப் பேசி வஞ்சக நாடகமாடுகின்றனர். அம்பேத்கரை ஒரு சாமியாக்கி விட்டு அவரது கொள்கைகளைப் புதைப்பதுதான் நோக்கம். இதை உணர்க! சரி! வைதீகத்தை - சனாதனத்தை எதிர்த்துக் கிளம்பிய சமணத்தையும், புத்தத்தையும் தனது ஒரு பகுதி என இந்துத்துவா வாதிடுகிறது. நம் கேள்வி சீனா, பர்மா, ஜப்பான் உள்ளிட்ட நாடு களில் புத்தமதத்தை பின்பற்றுவோரே அதிகம்; அப்படியானால் அவர்கள் இந்துக்களா? அப்படிச் சொன்னால் உலகம் கைக்கொட்டிச் சிரிக்காதோ?

அம்பேத்கர் நான் இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாகமாட்டேன் என சபதமிட்டு புத்தமதத்துக்கு மாறினாரே! அவரை இந்துத்துவ சக்திகள் இப்போது உரிமை கொண்டாடுவது வஞ்சக நோக்கின்றி வேறென்ன?

அம்பேத்கர் சிலை இந்தியா முழுவதும் ஊருக்கு வெளியேயும் - சேரிப்புறத்திலும் மட்டும் அமைக்கப்பட்டு இருப்பதேன்? ஆதிக்க வெறியும் மேல்சாதி ஆணவமும் இன்னும் நீடிப்ப தால்தானே? பெரியாருக்கும் - அம்பேத்கருக்கும் மார்க் சிஸ்ட்டுகளுக்கும் கோட்பாடு ரீதியாக சில மாறுபாடு உண்டு ஆனால் அவை முரண்பாடல்ல; பகையல்ல; ஒருவருக்கொருவர் எதிரியல்ல; இன்னும் வலுவாக இந்துத்துவாவை எதிர்ப்பது என்பதில்தான் இவர்களுக்குள் போட்டி; இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை விரைந்து கைதூக்கிவிடுவது என்பதில்தான் போட்டி; ஆகவே மித்தரபேதம் கற்பித்து இவர்களை மோதவிட கனவுகாணும் சங்பரிவார் முயற்சி பலிக்காது.

- சுபொஅ

நன்றி: தீக்கதிர் 9.6.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102961.html#ixzz3cZcdMyzb

தமிழ் ஓவியா said...

ராமன் கோயிலைக் கட்டா விட்டால்
அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்

மோடியை மிரட்டுகிறது சிவசேனா




மும்பை, மே 9_ ராமர் கோவில் விவகா ரத்தை வைத்து தான் இந்துக்களின் நம்பிக் கையைப் பெற்று ஆட் சிக்கு வந்தீர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ராமர்கோவில் கட்ட காலம் தாழ்த்தினால் மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கிடுவார்கள், ஆகவே மன்கி பாத் நிகழ்ச்சியில் ராமர் கோவில் விவகாரத் திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும் என்று சிவசேனா அதி காரப் பூர்வ ஏடான சாம்னா தனது தலை யங்கத்தில் குறிப்பிட் டுள்ளது. மோடி தன்னுடைய ஓராண்டு ஆட்சியில் நடந்த தோல்விகளை மறைக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் தனது ஆட்சியின் மிக முக்கிய பிரச்சனை யான இந்துத்துவா மற் றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித் தும் பேசியிருந்தார். அதில் எனது ஆட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள பாதையில் தான் செல் கிறது. சிறுபான்மையின ருக்கு எந்த வடிவில் பாதிப்பு நிகழ்ந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டேன். சிறுபானையினர் இரவு 2 மணிக்குக் கூட என்னை நேரில் சந்தித்து தங்களது பிரச்சனை களைக் கூறலாம் என்று தேர்தல் பிரச்சார மேடைப் பேச்சு போல் பேசியிருந்தார். மோடியின் சிறுபான்மையினர் மீதான இந்தக் கரிசனப் பார்வை பலரது புருவங்களை உயர்த்தியது. ஆனால் மோடியின் பேச்சு எல் லாம் நடிப்பு தான் என்று சிவசேனா தலைமை தங்களது நாளிதழான சாம்னா மூலமாக மறை முகமாக காட்டிக் கொடுத்துவிட்டது. சாம்னாவின் தலை யங்கத்தில் எழுதியதன் விபரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கான மோடியின் பேச்சு குறித்து பலர் வியப்படைந்துள் ளனர். ஆனால் மோடி யின் பேச்சில் உள்ளார்ந்த விளக்கம் இந்துத்துவாதி களுக்கு மாத்திரமே தெரி யும், மோடி மறைமுகமாக மதம்மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சிறு பான்மை மதத்தலைவர் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். இது இந்து நாடு; இங்கு வேறுமதத் தலைவர்களுக்கு வேலை யில்லை, வேறு மதத்தலை வர்களுக்கு மோடி கசப் பான மருந்தைக் கொடுத் துள்ளார். முக்கியமாக பிரிவினை பேசும் காஷ்மீர் தலைவர்களுக்கும், இங் குள்ள ஒவைசி போன்ற வர்களுக்கும் தான் மோடியின் இந்த பேச்சு கசப்பான மருந்தாகும். அவர்கள் தான் கவலைப் படவேண்டும், இந்துக் களின் மடியில் கன மில்லை ஆகையால் இந் துக்கள் மோடியின் பேச்சால் பாதிக்கப்படப் போவதில்லை, பொதுச் சிவில் சட்டம் குறித்த சரியான பாதையில் மோடி சென்று கொண்டு இருக்கிறார். இது அவரது தற்போதைய நடவடிக்கை யில் தெரியவராது ஆனால் அவர் இதைச் செய்வார் என்று சிலருக்கு மாத்தி ரம் (சங்கப் பரிவாரத் தலைவர்கள்) தெரியும். காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்ய வேண்டும் என்பதில் மோடிக்கும் பாஜக தலை வர் அமித்ஷாவிற்குமி டையே கருத்துவேறுபாடு கிடையாது. எதை எப் போது செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கத் தான் பாஜக தலைமையி னால் ஆன ஆட்சிக்கு முழு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். ராமர் கோவில் விவ காரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பத்துவங்கி யுள்ளது. இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மக்கள் ராமர்கோவில் கட்ட முழு விருப்பம் தெரிவித்து மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மோடிக்கு மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது நன்கு தெரியும், ஆகவே ராமர் கோவில் விவகாரத்தை வாஜ்பாய் அரசைப் போல் பரணில் தூக்கிப் போட முடியாது. அல்லது அதை மீண்டும் பேச்சு வார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்க முடியாது. ஒராண்டில் மோடிக்குப் பழைய தவறுகளைத் திருத்தவே நேரம் சரியாகப் போய் விட்டது. இனிவரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களின் எண்ணம் ராமர் கோவில் தான்; அதை மோடி தலைமையினால் ஆன அரசு விரைவில் கட்டித் தர வேண்டும். அதே நேரத்தில் மோடி வானோலியில் பேசும் நிகழ்ச்சியான மன் கி பாத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்துப் பேசவேண்டும் காலம் தாழ்த்தினால் மக்கள் மோடியை வெறுக்கத் துவங்கிவிடுவார்கள், அதன் பிறகு வாஜ்பாய் அரசுக்கான அதே நிலைதான் மோடிக்கும் ஏற்படும் என்று அந்த தலையங்கத்தில் எழுதி யுள்ளார்கள்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102957.html#ixzz3cZcuZg4w

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி. விவகாரம்:

இயக்குநர் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை

ஜூலை 6இல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு



புதுடில்லி, ஜூன்.9- சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர் _ -பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப் புக்கு தடை விதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சென்னை அய்.அய்.டி. இயக்குனர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தின் செயலாளர் ஆகி யோர் நேரில் ஆஜராக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நோட் டீசு அனுப்பியிருந்தார்.

அதன்படி நேற்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் (பொறுப்பு) பாஸ்கரன் ராமமூர்த்தி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை செயலாளர் பிர வீண் குமார் (முன்னாள் தமிழக தேர்தல் ஆணை யர்) ஆகியோர் தேசிய ஆதி திராவிட ஆணையத் தின் தலைவர் பி.எல். புனியா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

விசாரணை கூட்டம் முடிந்ததும் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

சென்னை அய்.அய்.டி. இயக்குநரிடம் எதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது என்று விளக்கம் கேட்கப் பட்டது. முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த விளக்கத்தை தேசிய ஆதி திராவிடர் ஆணையம் ஏற்கவில்லை. இந்த விளக் கம் முழுமையானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இல்லை என்பதால் பத்து நாட்களுக்குள் பதிலளிக்கு மாறு மேலும் ஒரு நோட்டீசு சென்னை அய்.அய்.டி.க்கு அனுப் பப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப் பித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102960.html#ixzz3cZd69cQI

தமிழ் ஓவியா said...

தமிழர் நலம் பெற...


தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.
(குடிஅரசு, 19.2.1944)



Read more: http://www.viduthalai.in/page-2/102951.html#ixzz3cZdNOIL4

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் பற்றிய வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை


விடுதலை நாளிதழில் 25.5.2015இல் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையான சர்க்கரை நோய் பற்றிய சில புரட்டுகளுடன் உண்மை களும் என்ற கட்டுரை மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தது. முழு வதுமாக படித்த போது சிறந்த மருத்துவர் கூட தர முடியாத அருமையான அறிவுப்பூர்வமான குறிப்புகளாக இருந்தது. இன்றையக் காலக்கட்டத்திலே பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் தவிர்க்க முடியாததாகி விட்ட சூழ்நிலையில் அது வந்த பின் எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது குறித்தும் - சர்க்கரை நோய் பற்றிய புரட்டுகளை விளக்கமாக புரட்டு எண் 1 முதல் 5 வரை புரட்டு - உண்மை என்று அருமையான விளக்கமாக தெளிவுரை கிடைத்தது. எனக்கும் type-2 சர்க்கரை இருந்தாலும் மருத்துவரின் மாத்திரைகள், நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகிய வற்றால் கட்டுக்குள் வைத்திருந்தாலும், ஆசிரியர்கள் கட்டு ரைகள் எனக்கு மட்டுமல்ல பல்லா யிரக்கணக்கான வாசகர்களுக்கும் இன்றைய கால கட்டத்தினை பயன் தரத்தக்கதாய் அமைந்துள்ளது.

விடுதலை 26.5.2015 ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந் தனைக் கட்டுரையில் மவுனம் அமைதி யின் விழுமிய சிந்தனையும் பயனும் என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. அருமையான நூல் கிருஸ்டோபர் அன்சார்டு என்பவர் எழுதியThe Tibetan Art of Living  புத்தகத்திலிருந்து அருமை யான விளக்கங்களை நமக்கு தருகிறார் ஆசிரியர்.

Wise body -- புத்திசாலித்தனமான உடல்
Wise mind -புத்திசாலித்தனமான மனம்

Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை என்ற தலைப்பில் பல செய்திகள் - அதில் மன அமைதி ஷிவீறீமீஸீநீமீ  என்பது அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய மானது என்பதற்கான அரிய விளக்கம் குறித்தும் கட்டுரை முழுவதும் சிறப்பாக எழுதியிருக் கிறார்கள். ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் மக்களின் - மன இருளைப் போக்கும் பகுத்தறிவுச் சூரியனாக பிரகாசிக்கிறது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- தி.க.பாலு
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3)

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி.யில் தடை நீக்கம்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை, ஜூன் 9_ அய்.அய்.டியில் அம்பேத் கர், பெரியார் மாணவர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டதை கட்சித் தலைவர்கள் வரவேற்றுள் ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தி யில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி

இதற்கு தனது மகிழ்ச் சியை தெரிவித்தார் ராகுல் காந்தி. இந்த விஷ யத்தில் மோடி அரசு, பின் வாங்கியுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் கில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி. சென்னை யில் மீண்டும் அம்பேத்கர்_- பெரியார் மாணவர்  வட் டம் சுதந்திரமான மாண வர் அமைப்பாக செயல் படுவதற்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன். விவா தங்களுக்கும், கருத்துப்  பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

ஆட் சேபணைக்குரிய கருத்துக் கள் பற்றி  விவாதிப்பதற் குக் கூட கல்வி நிறுவனங் களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கவேண் டும். சட்டத்திற்கு உட் பட்டும், கல்வி நிறுவனத் தின்  விதிமுறைகளுக் குட்பட்டும் கருத்துக் களைப் பரிமாறிக் கொள் வதற்கு மாணவர் அமைப்பு களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும்.

நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இளைய தலைமுறைதான். எனவே, அவர்கள் ஆக்கப்பூர்வ மான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது  வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என் பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க  விரும்புகிறேன்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் (த.மா.கா): மாணவர்களின் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் அய்அய்டி  நிர்வாகத்துக் கும் அய்அய்டி அம்பேத்கர் -_பெரியார் வாசகர் வட்ட  நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை யின் முடிவில் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட் டிருந்த தடை   நீக்கப்பட் டுள்ளது. உடன்பாடு ஏற்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும் மாண வர்கள் இனிமேல் படிப் பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற  வேண்டும்.

முத்தரசன்

முத்தரசன் (இந்திய கம் யூனிஸ்ட் மாநில செயலா ளர்): சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த 6 ஆம் தேதி மாணவர் அமைப்பு டன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை  நடத்தி, தடையை விலக்கி, அம் பேத்கர்-_பெரியார் வாசகர் வட்டத்தை மீண்டும் அங்கீகரித்துள்ளது. கருத் துரிமை பாதுகாப்புக்கான ஒன்றுபட்ட போராட்டத் திற்கு கிடைத்த குறிப்பிட் டத்தக்க வெற்றியாகும்.

இப்போராட்டத்தை ஆத ரித்தவர்களுக்கும், பங் கேற்றோர்களுக் கும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது டன், அய்அய்டி நடவடிக் கையை வரவேற்கிறது.