Search This Blog

21.6.15

ஜாதி அமைப்பே இந்துமதத்தின் தத்துவமாகும்!-பெரியார்

ஜாதி அமைப்பே இந்துமதத்தின் தத்துவமாகும்!



பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! கழகக் கூட்டத் திறப்பு விழாவிற்கும் பிரசார வேன் நிதி அளிப்புக் கூட்டத்திற்கும் வந்திருந்த இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விழாவைத் தோழர்கள் குப்புசாமி, கோவிந்தராஜன் ஏற்படுத்தி உள்ளார்கள்.

என்னை இந்து மதத்தைப் பற்றிப் பேசச் சொல்லி உள்ளார்கள். இதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தில் கட்டப்பட்ட கோட்டையைப் பற்றிப்   பேசுவதாகும். நமது நாட்டில் அரசியல் இல்லை - மதமும் இல்லை. அரசியல் என்பது பிழைப்புப்புக்கு வழி உள்ளதாகவும் - சிலர் தங்கள் இனநலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களைத் தலை எடுக்க ஒட்டாமலும் செய்து கொண்டே வந்திருக்கின்றது. இது இன்று நேற்று மட்டும் அல்ல மூவேந்தர்கள் காலம் முதல் உள்ளது.

இதற்குக் கொஞ்சங்கூட சளைத்தது அல்ல இந்து மதம். 100-க்கு 3-பேராக உள்ளவரின் சாதி மேல் சாதி; 100-க்கு 97-பேர்கள் உள்ள ஜாதி கீழ்ச்ஜாதி; இதுதான் இந்துமதம். இதைத் தவிர வேறு பலன் உள்ளது என்று சொல்லுவதற்கு இல்லை.

இந்துமதம் என்கின்ற பேரே முஸ்லிம்கள் வந்த பிறகே பயன்படுத்தப்பட்டதாகும். இதற்குமுன் இந்து என்ற சொல்கூட இல்லை. ஆனால் அந்தப் பெயர் பின்னால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. காந்தியே சொல்லி இருக்கின்றார்.

இந்தப் பார்ப்பனர்கள் சிந்து நதிப் பிரதேசத்தில் குடியேறினார்கள். வடமொழியில் 'சி' என்ற ஒலி 'இ' என்று மாறும். அதன்படியே சிந்து ஹிந்து (இந்து) என்று ஆகிவிட்டது. முஸ்லிம்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். ஆனபடியால் முஸ்லிம்கள் படியே சிந்து ஹிந்து (இந்து) என்று கூறிவிட்டான்.

இன்னும் ஒரு பொருளும் கூறுவார்கள். இந்த ஆரியர்கள் பர்சியா நாட்டின் பக்கத்தில் இருந்து வந்தவர்கள். ஆகையால் பாசியாவில் இந்து என்றால் திருடர்கள் என்று பொருள். இவர்கள் அங்குத் திருடர்களாக வாழ்ந்ததனால் அங்கிருந்து விரட்டப்பட்டு நம் நாட்டில் வந்து புகுந்துவிட்டார்கள். அந்தப் பெயரே இங்கு நிரந்தரமாகி விட்டது. 

பழைய சமஸ்கிருதத்தில் 'இந்து' என்பதற்குக் கருப்பு என்பது பொருள். இந்துக்கள் கருப்பர்கள் ஆனபடியால் அதனை உணர்த்த இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வெள்ளையர்கள் கூறுகின்றார்கள்.

நம்முடைய பழைய இலக்கியங்களில் ஆகட்டும், பார்ப்பானுடைய வேதம், புராணம், சாஸ்திரங்கள், இதிகாசங்கள் எதிலுங்கூட 'இந்து' என்ற சொல்லைக் காட்டவே முடியாது.

'கிறிஸ்து' என்ற வார்த்தை (சொல்) இல்லாமல் கிறிஸ்தவ மதமோ சாஸ்திரமோ கிடையாது. அதுபோல 'இஸ்லாம்' என்ற வார்த்தை இல்லாமல் இஸ்லாமோ, இஸ்லாமிய சாஸ்திரமோ கிடையாது. நம் மீது சுமத்தப்பட்ட இந்து மதம்தான் 'இந்து' என்ற சொல் இல்லாமலே - இந்து மதம் என்று பெயர் ஏற்பட்டு இருக்கின்றது.

பார்ப்பான் தனது மதத்தை 'இந்து மதம்' என்று கூறமாட்டான். ஆரியதருமம் - வைதீக மார்க்கம் என்றுதான் கூறுவான். சங்கராச்சாரியாரே இதனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்துமதம் என்பதற்குச் ஜாதி அமைப்புத்தான் முக்கியம்; இந்தத் தனிப்பட்டக் கருத்து உலகில் வேறு எந்த மதத்திலும் கிடையாது. இதிலுள்ள சாதிப் பிரிவுகளையோ அமைப்புக்களையோ எடுத்துவிட்டால், இஸ்லாம் மதத்துக்கோ - கிறிஸ்தவ மதத்துக்கோ வித்தியாசம் இல்லை.

ஜாதியை ஒத்துக்கொள்ளாத இஸ்லாம், கிறிஸ்தவர்களைக் கூப்பிட வேண்டுமானால் - மிலேச்சர்கள் என்றே கூறப்பட்டு வந்து இருக்கிறார்கள். இவர்கள் இதனை ஒத்துக் கொள்வதில்லை. 100-க்கு 97-பேராக உள்ள நாம் தான் சூத்திரன் (தேவடியாள் மகன்) என்று ஒத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

இந்து மதத்துக்கு என்ன கொள்கை? - தருமம் என்று பார்த்தால் சூத்திர சாதிக்குக் கலியாணம் கிடையாது. எல்லோரும் பார்ப்பானுடைய வேசிமக்கள்; கலியாணம் செய்து கொள்ள அருகதை அற்றவர்கள்; சூத்திரன் என்றாலே பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதான் ஆக்கி வைத்திருந்தனர். மனுதர்மத்திலேயே சூத்திரனுக்குக் கலியாணம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

சூத்திரர் பார்ப்பானுக்குக் கூலிபெறாமலே தொண்டூழியம் பண்ண வெண்டியவர்கள்.

கூலி கொடுக்க வேண்டுமானால், பார்ப்பான் தின்று கழித்த பண்டமும், கட்டிக் கிழித்த துணியும், ஆண்டு அனுபவித்துக் கழித்த பாத்திரமும்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று மனு தருமத்தில் உள்ளது. சூத்திரன் வேலை செய்யாவிட்டால் உதைத்து வேலை வாங்கலாம் என்று உள்ளது. இதை எடுத்துச் சொன்னால் பார்ப்பன துவேஷி, மதத்துவேஷி என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே 30- வருஷத்துக்கு முன்னமேயே மனு தர்மத்தைக் கொளுத்தினோம்.

இந்து மத ஆதிக்கம் கோவில்களினாலேயே வளர்த்து உள்ளது. நேற்றுவரைக்கும் ஒரு நாட்டுக்கு - ஒரு நகருக்கு மரியாதையே இந்தக் கோயில்களால்தான்.

இந்தக் காங்கிரஸ் 1920-ஆம் ஆண்டு வரையிலும்கூட ஒரு தெய்வீக சபையாகவே இருந்து, வெள்ளைக்கார அரசாங்கத்தைப் பக்தி விசுவாசத்துடன் பாதுகாக்க வேண்டும் என்று கடவுளுக்குப் பிரார்த்தனையும், வெள்ளையனை விஷ்ணுவின் அம்சம் என்று புகழும்படியான நிலையும் இருந்தன.

1920-இல் தான் இந்த முறை ஆட்டம் கொடுத்தது. ஷவுக்கத் அலி "இம்மாதிரி விசுவாசம் தெரிவித்து வணக்கம் நாம் செய்ய வெட்கம் இல்லையா?" என்று கேட்டார். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டிய வேலைகள் தான் நடந்துவந்தன. பின்னால் நம் தீவிரக் கிளர்ச்சிகளால்தான் காங்கிரசின் போக்கு மாறிற்று.

---------------------------------- 20.09.1961- அன்று தஞ்சையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு.   “விடுதலை”, 30.09.1961

29 comments:

தமிழ் ஓவியா said...

மக்கள்மீது யோகா பெயரில் இந்து மதத்தைத் திணிப்பதா?

மோடிமீது பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு



பாட்னா ஜூன் 21 யோகாக்கலையை பரப்பு பவர்கள் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே வலி யுறுத்துகிறார்கள், நாடெங்கும் உள்ள யோகா குருவென்பவர்கள் மதம் சார்ந்தவர்கள். இதை நன்கு அறிந்து கொண்டே மோடி நாட்டு மக்கள் மீது யோகா என்ற பெயரில் இந்து மதத்தை திணிக்கிறார் என்று தேவேந்திரகுமார் சிங் என்பவர் பாட்னா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பன்னாட்டு யோகா நாளாக இன்று (21.6.2015) நாடு முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது, ஆரம்பம் முதலே மோடி தலைமையினாலான பா.ஜ.க. அரசு நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தும் அதை மக்களி டம் மறைக்கும் வகையில் யோகா நாளை பெரும் பொருட்செலவில் கொண் டாடி வருகிறது.

முக்கிய மாக யோகா தினத்தில் இந்துமத ஸ்லோகம் சொல்லவும் சூரியநமஸ் காரம் செய்வது குறித்த அரசின் சுற்றறிக்கைக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், சூரிய நமஸ்காரம் மற்றும் இந்துமத சுலோகம் தேவையில்லை என்று பின் வாங்கியது. பன்னாட்டு யோகா நாளுக்கு கொடுத்த விளம் பரம் மற்றும் யோகா செய்யப் பயன்படும் பல்வேறு பொருட்களில் மதத்தைக் குறிப்பிடும்படி யான நிறமும் படங்களும் அமைந்திருந்தன. இதனால் யோகா என்பது மதம் சார்ந்த ஒன்று எனவே இதைச் செய்பவர்கள் அனைவரும் அந்த மதத்தவர் என்ற ஒரு நிலையை மறைமுக மாக உருவாக்கும் நோக் கத்திலேயே மோடி தலை மையினாலான அரசு செயல்பட்டுவருகிறது என்று கூறி பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவேந்திரக் குமார் சிங் குற்ற வழக்கு ஒன்றைத் மோடி மீது தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து மதக் கொள்கைகளை மறைமுகமாக மக்களிடம் திணிப்பதற்கு மோடி மற்றும் அவருக்கு உடந் தையாக இருக்கும் பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இவர்கள் மீதும் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதுகுறித்து பாட் னாவில் தேவேந்திர குமார் சிங் கூறியதாவது : ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா நாள் கொண் டாடப்படுகிறது, இதில் முழுக்க முழுக்க மக்கள் பணம் விரயம் செய்யப் படுகிறது. மத்திய அமைச் சர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெயரில் அரசுப் பணத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் இஸ் லாமியர்களின் வழிபாட்டு முறை, கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறை எல் லாம் யோகாவில் இருந்து உருவானது தான் என்று கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அந்த நூலில் யோகா இந்து மதத்தின் வழிபாட்டு தெய்வம் தான்(சிவன்) தலைமை யோகா குருவென் றும் அந்த தெய்வம் தான் யோகக்கலையை கற்றுக் கொடுத்தது என்றும் எழுதப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினத்தவரின் மதவழி பாட்டை இந்து மதவழி பாடு போன்று காட்டுவது போல் உள்ளது, சிறு பான்மை மதத்தவரின் வழிபாட்டை கிண்டல் செய்வது போலவும் உள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக அரசு அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் நாளேடுகளில் விளம்பரம் கொடுத்துவரு கிறது, இதற்கு கோடிக் கணக்கான ரூபாய் செல விடப்படுகிறது, நாட்டில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு பணம் இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் கூறிக் கொண்டு யோகா போன்ற அத்தியாவசிய மற்ற செயல்களுக்கு பணத்தை விரயம் செய்வது மக்கள் விரோதச் செயலாகும். இது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இந்த மனு குற்றவியல் தலைமை நீதிபதி பரத்பால்சிங் திங் களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது.



Read more: http://www.viduthalai.in/e-paper/103651.html#ixzz3dhMS1x5d

தமிழ் ஓவியா said...

சட்டவிரோதமாக தனது கணவர், மகளுக்கு பதவி வழங்கிய சுஷ்மா சுவராஜ்


புதுடில்லி, ஜூன் 21_ பொருளாதார மோசடி குற்றவாளியாகி நாட்டை விட்டு சரியான அனுமதி யின்றி திருட்டுத்தனமாக வெளிநாடு சென்ற லலித் மோடிக்கு உதவிய விவ காரத்தில் சிக்கிய சுஷ்மா சுவராஜ் தற்போது தனது பதவியைப் பயன்படுத்தி தனது கணவருக்கும், மக ளுக்கும் அரசு வழக்கறிஞர் தகுதி வழங்கி மோசடி செய்த்து அம்பலமாகியுள் ளது. சுஷ்மா சுவராஜ் கணவர் சுவராஜ் கவுசல் மகள் பன்சுரி இருவரும் வழக்குரைஞர்கள் இவர் கள் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத் தின் சார்பில் உச்சநீதி மன்ற அரசு விவகாரங் களுக்கான வழக்குரைஞர் களாக பதவியேற்றார்கள். மாநிலத்தில் எத்தனையோ மூத்த வழக்கறிஞர்கள் இருக்கும் போது சுஷ்மா சுவராஜ் தன்னுடைய கணவன் மற்றும் மகளை இப்பதவியில் நியமித்தது குறித்து அப்போது மத்திய பிரதேச வழக்குரைஞர் களுக்குள் மோதல் ஏற் பட்டது. ஆனால் மபி அரசு மற்றும் சுஷ்மா சுவராஜின் நேரடி தலை யீடு காரணமாக எதிர்க் குரல்கள் எதுவும் எழும்பவில்லை. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவர்கரும் வழக் குரைஞருமான அஜய் துபே என்பவர் ஆர்.டி.அய் மூலம் சுவராஜ் மற்றும் பன்சூரி பதவி விவகாரம் குறித்து விளக்கம் கேட்டி ருந்தார். அதில் அவர்களின் பதவி நியமனம் குறித்து எந்த ஒரு வழக்கமான நடைமுறையும் பின் பற்றப்படவில்லை என்றும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் பதவிவழங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டியதாகவும் தெரிகின்றது. மேலும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள மூத்த வழக் குரைஞர்கள் பட்டியலில் இவர்கள் பெயரே இல்லை என்று தெரியவந்தது. சில முக்கிய நபர்களின் வாய்மொழி உத்தரவின் பேரில் இவர்கள் மபி அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப்பட்டியலில் அருண் ஜெட்லி மகள் சோனியா ஜெட்லி பெயரும் இருந் தது. ஆனால் பிறகு அவ ரது பெயர் ஏனோ அழிக்கப்பட்டுவிட்டது. அரசு சார்பான வழக் குகளில் வாதட போதிய அனுபவமில்லாத பன்சுரி (சுஷ்மாவின் மகள்) லலித்மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அய்.பி.எல் தலைமை நிர்வாகி இருந்த லலித் மோடிக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள் ளார் என்று இங்கி லாந்தின் ஆங்கில வார இதழான சண்டே மிர்ரர் செய்தி வெளியிட்டிருந் தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்தியப்பிரதேச பாஜக அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் அரசு வழக்குரைஞராக நியமிக்க அரசுக்கு முழு உரிமை யுள்ளது. யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து மூத்த வழக் குரைஞர்களிடம் கலந்தா லோசித்து அவர்களின் முழு சம்மத்தின் பேரில் தான் நியமிக்கப்பட் டார்கள், என்று கூறினார். மூத்த அரசியல்வாதி யும் பல முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தவருமான சுஷ்மா சுவராஜ் தான் எடுத்த பதவிப்பிரமாணத்திற்கு விரோதமாக தன்னுடைய குடும்ப உறுப்பினர் களையே அரசு பதவி களில் நியமித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி மற்றும் காங் கிரஸ் கட்சிகள் சுஷ்மா சுவராஜ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். லலித்மோடி விவகா ரம் அரசுப்பதவியில் தன்னுடைய குடும்ப உறுப் பினர்களை நியமித்த விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பான நேரத்தில் எதிர்கட்சிகளின் கேள் விக்கு பதிலளிக்காமல் அமெரிக்காவில் நடை பெறும் யோக தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றுள்ளார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103653.html#ixzz3dhMYYvZY

தமிழ் ஓவியா said...

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியம் செய்து யோகா நிகழ்ச்சி நடத்திய அமித்ஷா

பாட்னா. ஜூன் 21 உலக யோக நாளை ஒட்டி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய் யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இந்த உத்தரவை மதிக்காமல் பிகார் தலை நகர் பாட்னாவில் பி.ஜே.பி. கட்சித் தலைவர் அமித்ஷா யோகா நாள் நிகழ்ச் சியைக் கொண்டாடினார்.
பிகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவ தால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமு லில் உள்ளது. இந்த நிலை யில் தேர்தல் ஆணையர் பிகார் அரசியல் கட்சி களுக்கான சில விதி முறைகளை வகுத்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையர் அஜய் வி நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ள தாவது: அரசியல் கட்சிகள் யோகா நாளை தங்களது அரசியல் கட்சியின் லாபத் திற்காக பயன்படுத்துவது போல் தெரிகிறது. இது குறித்து தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே விதி முறைகளை வகுத்துள் ளது. மருத்துவ சேவை, பேரிடர் காலத்தில் மீட் புப்பணி, கலவரம் மற்றும் பள்ளி கல்லூரி விழாக்கள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிப் பெயரையோ, சின்னங்களையோ பயன் படுத்தக் கூடாது. அதே நேரத்தில் மறைமுகமாக வும் கட்சிபிரச்சாரப் பணிகளை இங்கு மேற் கொள்ளக்கூடாது. இது குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக் கும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். மேலும் அரசியல் கட்சி கள் நடத்தும் யோகா நாள் நிகழ்வை காணொ லிகள் மூலம் கண்கானிக் கவும் உத்தர விட்டுள்ளோம்.

பாட்னாவில் உள்ள தொண்டு அமைப்பு ஒன்று டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள் ளது. அதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு யோகா நாளை தங்களது தேர்தல் விளம் பரத்திற்காக பயன்படுத் தும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பிகார் மாநிலம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் யோகா செய்வதை தடை செய்யவேண்டும் என்றும் யோகா நாளின் போது அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தப் புகார் மனுவில் குறிப் பிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை மீறி அமித்ஷா பாட்னாவில் உள்ள மைனல் திடலில் நூற்றுக் கணக்கான பா.ஜ.க. தொண் டர்களை அழைத்துக் கொண்டு யோகா நாள் கொண்டாடினார். இதில் பிகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிகாரில் உள்ள அனைத்து தொலை காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இதற்காக பிகார் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் களை செலவழித்துள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/103654.html#ixzz3dhMhrBRM

தமிழ் ஓவியா said...

மறைந்த திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர்

கட்டுப்பாடு மிக்கவர் கொள்கையில் ஆழமிக்கவர்
நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல் உரை




சென்னை, ஜுன் 20_ மறைந்த நாகலிங்கம் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி 18.6.2015 அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவையின் மாநில செயலாளராகப் பணியாற்றியவரான நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

கழகப்பணியில் ஈடுபட்டு தம்முடைய வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது 4.10.2013 அன்று அவர் விபத்துக்கு ஆளாகி தொடர்ச்சியாக மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவந்தார். 7.4.2015 அன்று மறைந்தார். படத்தைத் திறந்துவைத்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையில் குறிப் பிட்டதாவது:

மிகுந்த துன்பத்துக்கும், துயரத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக, திராவிடர் தொழி லாளர் அமைப்பினுடைய பொறுப்பாளர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பவரான அருமைத் தோழர் மானமிகு நாகலிங்கம் அவர்களு டைய படத்திறப்பு என்ற இந்த நிகழ்ச்சி அவருடைய தொண்டுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி.

மிகப்பெரிய சோகத்துக்கு ஆளாகி இருக்கக்கூடிய நிலையிலே, அதை ஏற்றுக்கொண்டு, அவர் வழிநடத்து வதற்கு நான் திண்டுக்கல் சென்றிருக்க வேண்டும். அங்கே செல்ல வாய்ப்பு இல்லை என்ற காரணத்தாலே இங் கேயே அந்த நிகழ்ச்சியை வந்து நடத்திக்கொள்ளுகி றோம் என்கிற பெரு உள்ளத்தோடு இங்கே வந்திருக் கக்கூடிய அவருடைய அன்புசெல்வங்கள், குடும்பத் தவர்கள், அருமைத்தோழர்கள், தோழியர்கள், அறி வார்ந்த பெருமக்கள் எல்லோருக்கும் அன்பான வணக் கம். தோழர் நம்முடைய நாகலிங்கம் அவர்களைப்பற்றி நினைவுகள் எப்போதும் பசுமையாகவே இருக்கின்றன.  இங்கே கழகத்துணைத் தலைவர் அவர்களும், வீர பாண்டி அவர்களும், மற்றவர்களும் குறிப்பிட்டதைப் போல, கட்டுப்பாடு மிகுந்த ஓர் எடுத்துக்காட்டான இலட்சியத் தோழர், தொண்டர் தோழர் நாகலிங்கம் ஆவார். அப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது என்பது மிகமிக அரிது. இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல திராவிடர் கழகத்தின்சார்பில் தொழிலாளர் அமைப்பை அரசியல்கட்சிகளைப்போல நாம் வளர்க்கவில்லை என்பது உண்மை. அதற்கு காரணமும் சொன்னார்கள். திராவிடர் கழகம் மக்களை தன் பின்னாலே அழைத்துப்போகக்கூடிய ஓர் இயக்கமாக இருக்கிறது, மற்ற அரசியல் கட்சிகள் மக்கள் பின்னாலே அவர்கள் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்களுடைய எண்ணங்களை மாற்றக்கூடிய நிலையிலே இல்லை. மக்களுடைய வாக்குகளை பெறு வதற்காக அவர்கள் மனம் கோணாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வது எல்லா அரசியல் கட்சிகளுடைய இயல்பு.

தமிழ் ஓவியா said...

ஆனால், திராவிடர் கழகம் என்ற சமூக அமைப்பு மக்களுடைய அந்த நீரோட்டத்தோடு போகக்கூடிய தல்ல, எதிர்நீச்சலடித்து திருத்த வேண்டியவர்களைத் திருத்தவேண்டிய ஒரு கடமை. அதுபோலவே நம் முடைய தொழிலாளர் அமைப்பு. தந்தைபெரியார் அவர்கள் பேசிய ஓர் உரையில் தலைப்பிருக்கிறது. திராவிடர் கழகம் என்றாலே தொழிலாளர்கள் அமைப்புதான்.

எனவே இந்தத் தொழிலாளர் அமைப்பு என்பது இருக்கிறதே அதிலும் திராவிடர் கழகமே ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் அமைப்புதான். ஏனென்றால், சூத்திரர்கள் கழகம். சூத்திரர்கள் என்றாலே மனுதர்மப்படி தொழிலாளர்கள்தான்.

மீகாமன் நாகலிங்கம்

ஆகவே, இந்தத் தொழிலாளர் அமைப்பிலேயே  தனியே போக்குவரத்து தொழிலாளர் என்று தனியே ஆரம்பித்து பெரிய அளவிலே அதை, மறைந்தும் மறை யாமல் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற கே.ஜி.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய திண்டுக்கல் சுப்பிரமணியம் அவர்கள் கடுமையாக உழைத்து அருமையாக கட்டினார். அவர் திடீரென்று மறைந்த வுடனே அந்த சோகம் தாங்கமுடியாத நிலையிலே இந்த கப்பலுக்கு யார் கேப்டன்? என்று நினைத்த நேரத்திலே ஓர் அருமையான மீகாமன் தோழர் நாகலிங்கம் கிடைத்தார்.

நாகலிங்கம் அடக்கமானவர், கொள்கை உறுதி நிறைந்தவர். அதிரடியாகப் பேச மாட்டார். ஆனால், நிரம்ப ஆழமானவர். அன்பு நெஞ்சத்தோடு எவரி டத்திலும் பழகக்கூடியவர். அவர் இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுமாதிரி ஒவ்வொருவர் இடத்திலும் நேரிடையாகச் சென்று தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு படிப்படியாக இந்த இயக்கத்தை தொழி லாளர்கள் இயக்கத்தை திராவிடர் கழகத்திலே ஒரு கட்டுமானத்திலே எப்படி கட்டடங்களை அஸ்தி வாரத்திலே நிறுத்தி மேலே கொண்டுவருவார்களோ, அதுமாதிரி கொண்டுவந்தவர். அப்படிப்பட்டவருக்கு விபத்தின் காரணமாக, தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் இயற் கையின் கோணல் புத்தி என்று. அதன் காரணமாக நாம் அவரை இழக்க வேண்டியிருந்தது. இந்த நேரத் திலே நாம் எவ்வளவு துயரப்பட்டாலும், நாகலிங்கம் திரும்பி வரமுடியாது. அதேநேரத்திலே அவர் ஊட் டிய உணர்வை நாம் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த உணர்வு நம்மை எதற்காக அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் ஓய்வு பெற்ற நிலை யிலேகூட. மிகப்பெரிய அளவுக்குப் பணியாற்றியபோது இருந்ததைவிட, பணி ஓய்வு பெற்றபிற்பாடு அவர் கடுமையாக உழைத்தார்.

அதுதான் திராவிடர் கழகத்துக்காரர்கள் சிறப்பு. இந்த இயக்கத்திலே வேலை செய்தால் என்ன கிடைக்கும்? மானம், மரியாதை கிடைக்கும். அவ் வளவுதானே தவிர, வேறு ஒன்றும் பெரிய லாபங்கள் இருக்காது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டினார்கள். அதுவும் தனித்தன்மையோடு இருக்கக்கூடிய இயக்கம் திராவிடர் தொழிலாளர் கழகம் என்பது. அப்படிப்பட்ட ஓர் இயக்கத்துக்குக் கிடைத்த அரும் செல்வமாக பெரும் நிதியாக நமக்கு நாகலிங்கம் அவர்கள் கிடைத்தார்கள். பெரும் செல்வம். ஒரு வறியனுக்குக் கிடைத்த செல்வம். ஓர் ஏழைக்கு கிடைத்த  செல்வம் திடீரென்று பறி போய்விட்டால் அவனுடைய நிலைமை எப்படி இருக் குமோ, அதுபோல அதில் நல்ல வசதியானவர்கள் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும்போது நேபாள பூகம்பம்மாதிரி ஒரே நாளில் பார்த்தீர்கள் என்றால், இப்போது அங்கே இருந்து ஒரு செய்தி வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை நேபாளத்தில் அதிகமாகி இருக்கிறது. காரணம் என்ன என்று சொன்னால் முழுக்க முழுக்க அப்படிப்பட்ட ஒருநிலை. அப்படிப்பட்டவர் களை நாம் நினைத்து வேதனைப்படுவது மட்டுமல்ல, அவர்களுடைய பணி தொடர வேண்டும். நாம் அதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி, அவருடைய வாழ்வு சிறக்க, அவருடைய பணி நடக்க பாராட்ட வேண்டும். ஒன்றரை ஆண்டு காலம் தொடர்ந்து போராடியதன் காரணமாக அவருடைய குடும்பத்தினரை நான் நெஞ்சம் நிறைந்து பாராட்டுகிறேன் மிகுந்த துன்பத் துக்கிடையேகூட. கொள்கையோடு நீங்கள் வந்திருக் கிறீர்கள்.

தமிழ் ஓவியா said...

அவர் எதை விரும்பினார்களோ, அதைப்பற்றி செய்வேன் என்று சரவணன்  அவர்களும், மற்றவர் களும் சொன்னார்கள். இதுதான் அவருக்குச் செய்த சரியான இறுதிமரியாதை. எனவே, உங்களுக்கு இயக்க சார்பாக நன்றி செலுத்திக்கொள்வதோடு, அவர் இருந்தால் இந்த இயக்கம், இந்தக் குடும்பத்தோடு தொடர்புடைய இயக்கமாக இருக்குமோ, இந்தக் குடும்பம் விடுதலையோடு, எங்களோடு தொடர்புடை யவர்களாக இருப்பீர்களோ அப்படிப்பட்ட இரு வழிப்பாதைத் தொடர்புகள் தொடர வேண்டும்.

அதற்காக எல்லோரும் ஒத்துழைப்போம் என்று சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தை சிறப் பாகக் கட்டி, அருமையாக எடுத்துக்காட்டாக நடத்து வதற்கு தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் மறுபடி யும் நாம் சந்திப்போம். கலந்துரையாடுவோம். அதைச் செய்வதுதான் நாகலிங்கம் அவர்களுக்கு செய்யும் சிறப்பு.

திருச்சி பெரியார் சர்வீஸ்

ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரில்  ஒரு பிரிவு

இன்னொரு செய்தி எல்லா ஓட்டுநர்களுக்கும் அவர் பயிற்சி கொடுத்தார். பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து பெரியார் கல்வி நிறுவனங்களிலே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனங்களிலே என்னு டைய ஓட்டுநர்கள் உள்பட. அது நம்முடைய பாது காப்புக்கு பெரிய ஆயுள் காப்பீடு மாதிரி மிகப்பெரிய அளவில் அதையெல்லாம் செய்தார் நம்முடைய நாகலிங்கம் அவர்கள். திருச்சியிலே இருக்கிற பெரியார் சர்வீஸ் ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரிலும் ஓர் பிரிவு அமைக்கப்படும். எனவே, அவருடைய மறைவு என்பது ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு. அந்த இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அதை நாம் நிரப்ப முயற்சி செய்யவேண்டும். அவருடைய புகழ் வாழ்க, அவருக்கு வீரவணக்கம். நன்றி, வணக்கம்.

_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட்மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல்களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுக்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.

பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பி ராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்ட தாகவும் தெரியவருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுதானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. தலதாபன நிர்வாகங் களில் காண்ட்ராக்ட்டு வேலைகளும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்ப தினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன.

இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும்,  கவுன்சிலர்களுக்கும், மெம்பர் களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகிவிடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடம் இருக்காது.

ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரியமேற்படும். ஆகவே, முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934

தமிழ் ஓவியா said...

சர்க்கார் காங்கிரசை விட மோசமானதா?

பட்டேலின் ஸ்ரீ முகம்

தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ்காரருக்கே ஓட்டு செய்யவேண்டும் என்றும் அதற்குக் காரணம் அடக்கு முறையைக் கண்டிக்க வேண்டியும்,

வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டியும் காங்கிரஸ்காரர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். மற்றும் காங்கிரஸ்வாதி அல்லாத மற்றவருக்குக் கொடுக்கும் ஒட்டு சர்க்காருக்குக் கொடுத்தது போல் ஆகுமென்றும் சொல்லுகிறார். முதல் விஷயத்தை ஒப்புக்கொண்டாலும் இரண்டாவது விஷயம் ஒப்புக்கொள்ளப்படாதது என்பதுடன், அதில் நாணயமும் நியாயமுமில்லை என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.

ஏனெனில் இந்த நாட்டிலுள்ள சுமார் 35 கோடி மக்களில் காங்கிரசில் அங்கத்தினர் களாய் இருக்கிற சுமார் ஒரு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் மக்களைத்தவிர மற்றவர்கள் எல்லாம் சர்க்காரைச் சேர்ந்தவர்கள், தேசத்துரோகிகள் என்பது தோழர் பட்டேல் அவர்களின் ஸ்ரீமுகத்தின் கருத்தாகிறது.

தோழர் சண்முகம் அவர்கள் விருதுநகரில் தெரிவித்தது போல் தேசபக்தி என்பது தோழர்கள் பட்டேல், ஆச்சாரியார்கள் ஆகியவர்களின் பிதுரார்ஜித சொத்துப்போலவும் அந்தக் கூட்டத்தில் இவர்களுடைய சிஷ்யர்களும், அடிமைகளும் தவிர மற்றவர்களுக்கு இடம் கிடையாது என்பது போலவும் இவர்களுடைய ஆதிக்கம் இருந்து வருகிறது.

அந்த சிஷ்யர்களும், அடிமைகளும் கூட தங்கள் தேசபக்தியைக் காட்ட வேண்டுமானால் ஒரு முறைக்கு நாலுமுறை சிறை சென்று இருந்தாலும் போதாது. பத்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொண்ட தங்கள் வரும்படிகளையும் துறந்து கை முதல்களையும் இழந்து ராஜபோகத்தையும் விடுத்து, சன்னியாசியாய், கடன்காரனாய் தெருவில் நின்று தவிப்பவனாய் இருந்தாலும் போதாது.

மற்றபடி எவ்வளவு அயோக்கியனாய், குடிகாரனாய், ஜாதி ஆணவம் பிடித்தவனாய், தாசி லோலனாய், ஊரை ஏமாற்றி கொள்ளையடிப்பவனாய், சர்க்காருக்கு ஊ.ஐ.னு. யாய் ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், வீதம் மக்களிடம் இருந்து கரந்துபோக யோக்கியங்கள் அனுபவிப்பவனாய் இருந்து கொண்டு,

கதர் துணியைக் கட்டுபவனாகவும், ராட்டினத்தில் நூற்பவனாகவும், காந்திக்கும் பட்டேலுக்கும், ஆச்சாரிக்கும் ஜே போட்டு மகாத்மா என்று கூப்பிடுபவனாகவும் இருந்தால், பெரிதும் அவன்தான் தேசபக்தன், சர்க்கார் மனிதனல்லாதவன், பாமர மக்கள் ஓட்டைப் பெற தகுதியுடையவன் என்றால் இது யோக்கியமா என்று கேட்கின்றோம்.

தமிழ் ஓவியா said...

மத விஷயத்தில் பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார் என்றும், சாதியால் ஒழுக்கத்தால் தக்காரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார் என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரி யாரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத் துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவற்றின் பேரால் ஏராளமான ஜனங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கொண்ட மக்களைக் கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டுக் கூலிப் பிரச்சாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டு விட்டது.

1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குச் சங்கராச்சாரி போலவும் ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்கு பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் பத்தாயிரக் கணக்காகக் காசு பணம் செலவு செய்தும் தேசியம்,

தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் தோத்திரம், தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிரவும் காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப்படும் என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம்.

இன்றைய தினம் காங்கிரஸைவிட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை.

சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால்,

சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோபாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்கு முறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்கு முறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன.

சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணயக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம் வாக்குவாதம் தவறுதல் ஆகியவை காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச்சதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும எதேச்சதிகாரம் இருந்துதான் வருகிறது.

சர்க்காரில் இருப்பது பொய் ஜனநாயகத் தத்துவமே! ஏன்?  அதைவிட மோசமான ஜனநாயகத் தத்துவமே காங்கிரசிலும இருந்து வருகின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாத வர்களை,  தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிர தங்களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத்துரோகிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம்.

ஆகவே பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத்தறிவுக்குச் சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 30.09.1934

தமிழ் ஓவியா said...

மத விஷயத்தில் பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார் என்றும், சாதியால் ஒழுக்கத்தால் தக்காரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார் என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரி யாரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத் துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவற்றின் பேரால் ஏராளமான ஜனங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கொண்ட மக்களைக் கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டுக் கூலிப் பிரச்சாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டு விட்டது.

1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குச் சங்கராச்சாரி போலவும் ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்கு பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் பத்தாயிரக் கணக்காகக் காசு பணம் செலவு செய்தும் தேசியம்,

தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் தோத்திரம், தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிரவும் காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப்படும் என்று அடிக்கடி பல்லவி பாடுவதின் யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம்.

இன்றைய தினம் காங்கிரஸைவிட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை.

சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால்,

சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோபாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள். சர்க்கார் அடக்கு முறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்கு முறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன.

சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணயக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம் வாக்குவாதம் தவறுதல் ஆகியவை காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச்சதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும எதேச்சதிகாரம் இருந்துதான் வருகிறது.

சர்க்காரில் இருப்பது பொய் ஜனநாயகத் தத்துவமே! ஏன்?  அதைவிட மோசமான ஜனநாயகத் தத்துவமே காங்கிரசிலும இருந்து வருகின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாத வர்களை,  தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிர தங்களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத்துரோகிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம்.

ஆகவே பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத்தறிவுக்குச் சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 30.09.1934

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்



சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ,

ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

அடைய முடியும்

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)


எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.

மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.

இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.

எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!

உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!

உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.

குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?

இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!

சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.

‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.

நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)

பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.

இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)

பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.

எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!

அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)

பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?

அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!

கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.

அப்போது விளங்கி யாருக்குப் பயன்?

“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”

ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!

எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

 

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

ஓரணியாய் திரள்வோம் - சமூகநீதி காப்போம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில், புதுமைப்பித்தன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை முத்துக்கள், காண்டேகரின் கருத்துமழை ஆகிய இலக்கியச் சுவை பகுதிகளை, அவரும் சுவைத்து நம்முடன் பகிர்ந்தளித்த மாண்பை மிகவும் ரசித்துப்படித்து உணர்கிறேன். இனமானப் பேராசிரியரைப் பார்க்கச் சென்றபோது பெற்ற இதயம் காக்க, நூலைப்படித்து எமக்குத்தந்த குறிப்புகள் மிகச்சிறப்பாக பயன் தருகிறது. புத்தகத்தை வாங்கிப்படிக்க ஆர்வம்.

புதுமைப்பித்தன் சிந்தனைச் சுவைகளைத் தொடுத்து பெரியார் புத்தக நிலையம் வெளியிடலாமே. இதயம் காக்க நூலையும் வாங்கி விற்பனை செய்யலாமே.

தாலி அகற்றும் நிகழ்ச்சியன்று நடந்த மதவாதிகளின் தாக்குதலை சந்திக்க உருவாக்கப்பட்ட வழக்கு நிதிக்கு, தந்தை பெரியாரின் உழைப்பால் சகிப்புத் தன்மை நிறைந்த தியாகத்தால் பெற்ற இடஒதுக்கீடு காரணமாக அரசுப் பணியில் உள்ள பார்ப்பனரல்லாத பணியாளர்கள், வழக்கு நிதியை வழங்கிட முன்வர வேண்டும்.

மய்ய, மாநில அரசுகளின் முன்னணித் துறைகளில் மறுக்கப்படுகின்ற சமூக நீதியை ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக மட்டுமல்ல நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கேட்கவும், கழக வழக்குரைஞர்கள் சட்டத்தின் சரத்துகளை வைத்து வாதாடி வென்றிடவும் வழக்குநிதி நிறைய தேவைப்படுவதாக உணர்கிறோம். தங்களால் இயன்ற நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டுகிறோம்.

உயர்நீதிமன்றம், அய்.அய்.டி. நியமனம், அஞ்சலகங்கள், விமான நிலையங்கள், வானிலை ஆய்வு நிறுவனங்கள், ரயில்வே துறை போன்றவற்றில் மறுக்கப்படுகிற சமூகநீதியை எதிர்ப்போம். ஆசிரியரின் தன்னலமற்ற பொதுப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம். வேண்டு கோளையும், திட்டங்களையும் செயல் படுத்துவதில் முனைப்பு எடுப்போம்.

ஆர்.எஸ்.எஸ். மதவாதி மோகன் பகவத்துக்கும், ராம்தேவ் உணவகத்துக்கும், மத்திய அரசின் பாதுகாப்பா? கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி, தமிழக அரசின் திட்ட நிதிகளைப்போல எங் கேயோ ஒதுக்கி எப்போதோ பட்டுவாடா செய்யவா? பகுத்தறிவுச் சிந்தனையாளர் களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டிய நேரம், மிக அவசரமாக நெருங்கி வருகிறது. இணைந்து பணியாற்ற பெரியார் திடல் வருக. மதவாத சதியாளர்களை துரத்திட கரம் கோர்த்து வருக. இணையதளங் களிலும் பரப்புரை புள்ளி விவரங்களை பதிவேற்றுவோம்.

- ஆ.வேல்சாமி
பகுத்தறிவாளர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்

தமிழ் ஓவியா said...

நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்



நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு  வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும்  பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே அத்தகைய பாதிப்பு  இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான  ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர்.

தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ்  உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத்திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத்திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவ தில்லை.

எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண்தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத்தசைகள் ஆண் களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச் சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச்சத்து சமநிலை அடைகிறது.

அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்கு பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும் பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுகுறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகிவிடு கி றது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப்பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண்கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங் கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந் துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்ட சத்து, நீர்ச்சத்து, கொழுப்புசத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

இந்தக் கீ ரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லிய மாக தெரிய உதவும். பொன்னாங்கண்ணியின் பயன்கள் சில..
1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

3. உடலை, தோலைப்பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குறிப்புகள்


* தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகி விடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும் பல் வலி குணமாகிவிடும். ர் உடம்பெல்லாம் வலிக்கிறதா? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும்.

* சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிவிடும். சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். ர் பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்க வில்லையா? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது.

* உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று சாப்பிட்டால், உடல் சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்பு குணமாகிவிடும்.

* குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை.

* தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது.

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

புதன், 24 ஜூன் 2015

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பெண்களைக் கடத்திய மதபோதகர்

புதன், 24 ஜூன் 2015

திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார்.

மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லட்டும்!
வி.எச்.பி. சாமியாரிணி அடாவடிப் பேச்சு

புதுடில்லி, ஜூன் 24_ அதிரடி விவாதப் பேச் சைப் பேசிவரும்  விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர்களில் ஒரு வரான சாமியாரினி பிராச்சி தற்போது மேலும் அடாவடித்தனமாகப் பேசியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலை வர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படா தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராச்சி யோகா தினம் ஒன்றும் திருமண நிகழ்ச்சி கிடை யாது; அழைப்பிதழ் வைத்து அழைக்க, அவரா கவே வந்து கலந்து கொள்ளவேண்டும். அப்படி பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்று துணைக் குடியரசுத் தலை வர் அமித் அன்சாரியைக் குறிப்பிட்டு அவர் கூறி யுள்ளார் மனங்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ள மக்களின் பாரம்பரியங் களுக்கும், கலாசாரங்களுக் கும் ஆட்சேபணை தெரி விப்பது ஒருபோதும் தேவையில்லாத செயலா கும். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) என்ன செய் துள்ளார் அவர் அந்தப் பதவியில் இருப்பதே எதற்காக என்று தெரிய வில்லை. இதை நானும் பல நாள்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச் சாரம் மற்றும் பாரம்பரி யத்துடன் முஸ்லிம்களே தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆட்சேபம் தெரி விக்கக்கூடாது என்றும், அப்படி ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இந் தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ் தானுக்கு போய் விடலாம் எனவும் சாமியாரிணி பிராச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!

இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.

பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!

இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.

உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)

இருதயம்:

எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.

நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.

கணையம்:

உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.

செரிமான உறுப்புகள்:

உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.

உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!

எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.

இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?

1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)

2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise

3. உடற்பருமன் - Obesity

4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்

இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

தமிழ் ஓவியா said...

எதிலும் மதப்பார்வை என்பது ஆபத்தானது!


தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊடுருவ வேண்டும் என்ற திட்டத்தின்படி ராம் மாதவ் சிவ்பிரகாஷ் போன்றோர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி  பாஜகவில் இணைந்தனர். அதற்கு முன்வரை ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆந்திரக்காரர் இவர்.

முக்கியமாக ராம் மாதவ் பாஜகவில் இணைந்த உடனேயே பள்ளிக் கல்வியில் மாற்றம் குறித்த கூட்டத்திற்கு கலந்தாய்வு செய்ய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லாத பல இந்து அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஸ்மிரிதி இராணியுடன் பேசச் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான ஸ்மிரிதி இராணியின் சந்திப்பு முடிந்த பிறகுதான் சமஸ்கிருத பிரச்சினை வெடித்தது.    ராம் மாதவ் மத்தியில் உள்ள சிறுபான்மை இன அதிகாரிகளையும், உயர்பதவி வகிக்கும் பலரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து மத ரீதியாகவே விமர்சனம் செய்து வந்தார்.

ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் அமீத் அன்சாரி கொடிவணக்கம் செலுத்தவில்லை என்று கூறி பிரச்சினையைக் கிளப்பியதின் பின்புலத்திலும் ராம்மாதவ் இருந்திருக்கிறார்.  ராம்மாதவின் இதுபோன்ற மட்டமான செயல்களுக்கும் மோடி மறைமுக ஆதரவுஅளித்தார். ராம் மாதவ் எழுப்பும் எந்தவொரு செயலுக்கும் பாஜக தரப்பில் மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிப்பதில்லை. குடியரசு நாள் விழா விவாதத்தில்கூட துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தான் விதிப்படி குடியரசுத் தலைவர் தலைமையில் நடக்கும் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் கொடிவணக்கம் செலுத்தக் கூடாது என்ற விதி உள்ளதைக் கூறியுள்ளது.  கடந்த ஞாயிறு அன்று  டில்லியில் நடைபெற்ற உலக யோகா நாள் நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருந்தார்.

மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவரை சிறுபான்மை யினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மீண்டும் மீண்டும் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறார்கள். எதிலும் மதப் பார்வைதான் இந்த மதம் பிடித்தவர்களுக்கு. முதலில் யோகா நாள் விழாவில் கலந்துகொள்ள துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேயில்லை. இதற்கு ஆயுர் வேத அமைச்சகம் தெரிவித்துள்ள சப்பைக் காரணமானது பிரதமர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இது மிகவும் பொய்யான ஒரு தகவலாகும்; அரசின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். இது பாரம்பரியமாக இருந்துவரும் நடைமுறையேயாகும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி நேரில் சந்தித்து உலக யோகா நிகழ்ச்சிபற்றி உரையாடி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்; குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோகா நாள் வாழ்த்துக்களும், அதற்காக சிறப்புரையும் ஆற்றினார். அப்படி இருக்க துணைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல்  இருந்துவிட்டு குட்டு உடைந்த பிறகு, ஒரு அமைச்சகமே இப்படி மக்களிடையே பொய் கூறியுள்ளது.

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டாமா? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்குத்தான் - இவர்கள் புளுகோ இரண்டு நாள்களுக்குத் தாங்கவில்லையே!

யோகாவுக்கு வராத துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று வி.எச்.பி. முன்னணி தலைவரான பிராய்ச்சி சாமியாரிணி கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்! பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று இப்படி இந்தக் கூட்டம் அடிக்கடி கூறுவது - பக்கத்து நாட்டையும் பகைக்கும் தன்மையதே!

முதலில் துணைக் குடியரசுத் தலைவர் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு பொய்யைக் கூறிய உடன் தான் மத்திய அரசின் ஏமாற்றுவேலை வெளியே தெரியவந்துள்ளது.

ராம் மாதவின் இந்த பிரிவினைவாத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறியதாவது, அன்சாரி புறக்கணிக்கப் பட்டதன்மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சர் சிறீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இந்த இந்துத்துவாவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களுக்கே இத்தகைய அவமானம் என்றால், பி.ஜே.பி. ஆட்சியில் சட்டம் ஒழுங்கையோ, மரபுகளையோ, நாகரிகத்தையோ எதிர்ப்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!


எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமையாகும். _ (விடுதலை, 9.5.1961)

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நடத்துகின்ற தகுதி யார் யாருக்கெல்லாம் உண்டு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு




கரூர், ஜூன் 24_ கரூர் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் திராவி டர் விழிப்புணர்வு 4ஆவது வட்டார மாநாடு வேலா யுதம்பாளையத்தில் பெரி யார் திடல், ச.சங்கரன் நினை வரங்கம் மலைவீதியில் நடைபெற்றன. நிகழ்ச்சி யில் ஆ.பழனிசாமி (பகுத் தறிவாளர் கழகம்) அவர் கள் அனைவரையும் வர வேற்று பேசினார். கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனி சாமி தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியின் தொடக் கத்தில் திண்டுக்கல் அழ கர்சாமியின் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டினார். சாமியார்கள் செய்யும் மந்திர வித்தை கள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றினைப் பற்றி எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று செய்து காட்டினார். மாநாட்டின் சிறப்புரையை தலைமைக் கழகப் பேச்சாளர் என்ன ரெசு பிராட்லா மத்திய, மாநில அரசுகளின் மக் கள் விரோத இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் செயல்களை கண்டித்துப் பேசினார். இறுதியாக கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசிய தாவது:_

நீதிக்கட்சி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி 100 ஆண்டு ஆகிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழாவை நடத்து கின்ற தகுதி திராவிடர் கழகத்திற்கும், திமுக, மதி முக போன்ற தோழமை கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட தகுதி உள்ளது. பிஜேபியி னர் ராகுல் காந்திக்கு என்ன படிப்பு தகுதி உள் ளது என்று கேட்கின்றனர். ஆனால் பிஜேபி மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு என்ன கல்வித் தகுதி என்று காங்கிரஸ் கேட்டனர் பி.காம் என்று அமைச்சர் சொன்னார் ஹார்வர்ட் பல்கலைகழ கத்தில் நடந்த பயிற்சி முகா மில் 15 நாட்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கியுள்ளதை டிப் ளமோ படித்தேன் என்கி றார். உலகில் 53 இராமா யணங்கள் உள்ளது. ஜப் பான், இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், இலங்கை போன்ற நாடு களில் ஒவ்வொரு இராமா யணக் கதை உள்ளன. இந் தோனேசியாவில் உள்ள இராமாயணத்தில் இரா மன் தலையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தாக அறிஞர் அண்ணா எடுத்து கூறி னார். கல்கியில் இராஜாஜி எழுதிய இராமாயணத் தில் எட்டாவது பக்கத்தில் இராமன் கடவுள் அல்ல கற்பனை கதை என்பதை மு.கருணாநிதி முரசொலி யில் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இராமாய ணத்தை முழுவதுமாக படித்தவர் பெரியார், இராஜாஜி இருவர் மட் டும் தான், உலகத்தில் மூன்று இனம் (வெள்ளை, கருப்பர் _ (நீக்ரோ இனம்), மாநிறம் (மங்கலான சிவப்பு) சாப்பிடவே வழி யில்லாமல் இருக்கும்போது யோகா ஒரு கேடா என் றார் லல்லுபிரசாத் யாதவ். தமிழகத்தில் இரண்டு முறை முதல்வர் பொறுப்பு வந்தும், வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் பெரி யார் என்று செயலவைத் தலைவர் பேசினார். இறுதியாக பெருமாள் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!



பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்

மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்திய அதிகாரிக்கு மன்னிப்பாம்!


சென்னை, ஜூன் 23_ தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் பாசனத் துக்கு தேவையான தண் ணீர் இல்லை. எனவே, பயிர்கள் கருகும் நிலை உருவானது. எனவே, திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், 30 உப கோட்ட அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பில் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில்களில் சிறப்பு யாகம் நடந்தது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அறிவுரை இல்லாமல் அந்த தலைமை பொறியாளர் தன்னிச் சையாக யாகம் நடத்த உத்தர விட்ட தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு பொதுப் பணித் துறை தலைமை அறிவிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொதுப் பணித் துறை தலை மைக்கு உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து அந்த தலைமை பொறியாளரை அழைத்து விளக்கம் கேட்டதுடன், அவரை மன்னித்து அனுப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறும் போது, மழை வேண்டி யாகம் நடத்த உத்தர விட்ட பிரச்சினையில் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்ப தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுதொடர்பாக மேலிடம் தலையிட்டு தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தர விட்டதால் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப் பணித்துறை தலைமை அனுமதி இல்லாமல் இனிமேல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்ற அறிவுரையும், மன்னிப்பும் வழங்கியது பொதுப்பணித் துறை என்றார்.

தமிழ் ஓவியா said...

கீதைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு!



கீதை மனிதநேயத்தை சிதைக்கிறது, அரசு அலுவலகங்களில் பகவத் கீதை படிக்க கொடுப் பது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும் என்கிறார்- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ்விக்.

அமெரிக்க ஆளும் கட்சியின் இடஹோ மாகாண உறுப்பினர் தனது மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதைவகுப்பு  குறித்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இந்து மதம், மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை மய்யமாகக் கொண்டது, பகவத் கீதை ஜாதியை வலியுறுத் துகிறது மனித நேயமற்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மதவழிபாடு இங்கு நடைபெறுமாயின் அது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர் களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ் விக் கூறியதாவது:  அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும்  அரசு அலுவலகங்களில் பகவத் கீதைவகுப்பு களுக்கு அனுமதியளிக்கக்கூடாது.

மேலும் இந்து மதம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மத பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது.

அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகை யால் அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை, பகவத் கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது,

பிறப்பால் ஜாதிபாராட்டும் நூல் பகவத் கீதை, பிறப்பால் ஒருவரை ஜாதிகளாகப் பிரிக்கும் மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத் கீதை என்ற நூல் வலியு றுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும், அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக்கூடாது என்று கூறி இந்து மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் அவர் முகநூலில் எழுதியுள்ளதாவது, இந்து மதவழிபாட்டை ஆதரித்துதான் இந்திய நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனது கருத்துகள் இந்தியாவில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட லாம். அதுகுறித்து, நான் கவலைப்படமாட்டேன். எனது கருத்துகளை மனிதநேயமுள்ள இந்தி யர்கள் பாராட்டுவார்கள் என்று தனது முக நூலில் எழுதியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

மூளையின் அதிசய செயல்பாடுகள்



மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும்.

மிகவும் சோர்வாக இருக் கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள். நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

* மனஉளைச்சல் மூளையை சுருங்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும்.

* ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் நிறைய சாதிக்கலாம்.

* சின்னச்சின்ன தூக்கம். அதாவது, பத்து நிமிடம் கண்மூடி அமைதி யாக இருப்பது மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டும்.

* ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை நினைவுகளை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிக மாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 அல்லது- 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது. படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள்.

காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள். பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9 முதல் 11 மணி ஆகும். மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும்.