Search This Blog

25.6.15

சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம்-பெரியார்

திராவிடர் கழகம் கட்சியல்ல: இயக்கம்!  



பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த மயிலாப்பூர் திராவிட இளைஞர் கழகத்தின் சார்பாக பேசும்படி எனக்கு வாய்ப்பு அளித்த செயலாளர்களுக்கு எனது நன்றி. வரவேற்றுப் பத்திரம் வாசித்தளித்து புகழ்மாலை கூறியதற்காகவும் எனது நன்றி. அதிலே கூறியிருக்கிற புகழுக்குத் தகுதியற்றவன் ஆனாலும் உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடக்க முயற்சிக்கிறேன். இவ்வளவு ஆடம்பரமாக பணம் செலவு செய்து பூமாலைகள் போடுவதைவிட கருப்புத் துணியாவது போடலாம். முதன் முதலிலே இந்த இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இளைஞர்களாகிய நீங்கள் கட்டுப்பாடாக இருந்து ஒழுங்காய், மற்றவர்கள் நம்மைப் பார்த்து மதிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். வெற்றி ஒலி முழங்குகிற காலங்களிலும், கழகக் கொள்கை ஒலி முழங்குகிற காலங்களிலும், கேட்கிறவர்கள் இதற்கு வசப்படும்படியாக இணங்கும்படியாக இருக்க வேண்டும் மற்றவர்கள் மன வருத்தம் அடையும்படியாகவோ வெறுப்பு அடையும் படியாகவோ ஆத்திரப்படக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. வேண்டுமானால் அறியாமை ஒழிய வேண்டும், மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பது போன்ற சொல்லைச் சொல்லுங்கள். எப்பொழுதும் 'வாழ்க' என்றே முழக்கம் செய்யுங்கள்.

ஏன்? இப்பொழுது நாம் நல்ல வெற்றியடைந்து வருகிறோம். யாரையும் நாம் வைது வெற்றியடைய வேண்டியதில்லை. நம்முடைய குறைபாடுகளைச் சொல்வதன் மூலமே, நம்மை நொந்து கொள்வதன் மூலமே இனி நாம் வெற்றியடையப் போகிறோம். சிறிது காலமாக நம் மக்களுக்குச் சிறிதாவது மான உணர்ச்சி உண்டாகும்படி செய்து வந்திருக்கிறோம். இது வளர்ச்சியடைய வேண்டும். எதிரிகளும் திருந்தும்படிச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். இதில் நம்பிக்கை வைத்து ஒழுங்காய் நடக்க வேண்டும். நமது கழகக் கொள்கையைப் பற்றிய போராட்டம் நமக்குள்ளேயே நடக்கக்கூடாது. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு எப்பொழுது கழகத்தில் சேர்ந்து விட்டோமோ அதற்குமேல் அந்தக் கொள்கையைப் பற்றிச் சந்தேகப்படக் கூடாது. தலைவர்களை உண்மையாய் பின்பற்ற வேண்டும். சுயநலத்துக்காக வஞ்சகக் கருத்தோடு கட்சிப் போர்வையில் இருக்கக் கூடாது. தலைவரைக் குறைகூறிக் கொண்டு வைது கொண்டு கட்சிக்குள்ளேயே கலகம் செய்யக்கூடாது. இது எல்லாக் கட்சிக்கும் உள்ள பொதுவான விதி.

தோழர்களே சிந்தித்துப் பாருங்கள். கட்சிக்குள்ளேயே கலக உணர்ச்சியும் கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்பட்டால், கட்சி கலகலத்து விடாதா?


தோழர்களே! நம்முடைய நிலைமை இன்றைய தினம் மிக மிக பரிதாபகரமான தன்மையிலேயே இருக்கிறது. நாம் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறோம். நமக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். நமது கட்டுப்பாட்டைத் தடுக்கும் சூழ்ச்சிகள் ஏராளம் நம்முடைய திட்ட நடப்பைத் தடுக்கும் காரியங்கள் ஏராளமாய் நடைபெறுகின்றன. வெள்ளையாகப் பேசுகின்றேன். நமக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது? ஒரு சர்.ராமசாமி முதலியார், சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற அறிவாளிகளுடைய செல்வான்களுடைய ஆதரவு உண்டா? எந்தப் பிரபுக்கள் மிராசுதார்கள் நம்மை ஆதரிக்கிறார்கள்? எந்தப் பத்திரிகை நம்மை ஆதரிக்கிறது? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை.


கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது. பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது.


தோழர்களே, நமது திராவிட கழகம் என்பது கட்சியல்ல. காங்கிரசைப் போல் நமது கழகம் கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப் பட்டதேயல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சி யிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்.


ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்சியாயிருந்தால் தோல்வி நிலைக்கு வந்தது. அதேபோல காங்கிரஸ் இப்போது வெற்றியடைந்து பதவியேற்கும் நிலைமைக்கு வந்துங்கூட அது சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றே சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வைசியராய், முதன் மந்திரி, கவர்னர் போன்ற பதவிகளும் பட்டங்களும் காங்கிரஸ்காரர்கள் காலடியிலே வந்து விழுகின்றன என்றாலும் அவர்கள் தலைவர்களே சொல்கிறார்கள் "இனி காங்கிரஸ் இருக்க வேண்டியதில்லை. கலைத்துவிடலாம்" என்று, அந்த நிலைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் கட்சி என்பது அழியவேண்டியது தான். ஆனால் நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இயக்கம் ஒழிய வேண்டியதில்லை. ஒரு மனித சமுதாயம் உள்ள வரையில் அது பணியாற்றியே தீரும்.



நமது இயக்க வேலைகளை, நாம் மந்திரிப் பதவியடைவதன் மூலமே அடையமுடியும் என்று கருதுவதும் பிசகு. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தோல்வியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளானார்கள். அதுபோல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வெற்றியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளாகி வருகிறார்கள். இப்பொழுது பார்க்கிறோமே தினம் தினம் வேடிக்கையை, ஹோம் ரூல் கட்சி என்ன ஆனது? ஆங்காங்கே கிளை ஸ்தாபனங்களை ஏற்படுத்தி நல்ல அமைப்பு அமைந்ததிலே அன்னி பெசன்ட் அம்மையார் பேர் எடுத்தார்கள். ஸ்தாபன ரீதியாக வேலை செய்தார்கள். சி.பி. ராமசாமி அய்யர் போன்ற பார்ப்பனர் எல்லாம் பெரும் பெரும் பதவிகளை அடைந்தார்கள். இப்பொழுது அந்தக் கட்சி எங்கே இருக்கிறது? அழிந்துவிட வில்லையா? ஆனால், இயக்கம் அப்படியல்ல. அது தன்னுடைய காரியத்தை பதவியின் மூலம் தான் செய்ய முடியும் என்பதில்லை. மக்களுடைய உள்ளத்தில் கருத்துக்களைப் புகுத்தி வைப்பதன் மூலம் தான் அது வெற்றி அடைவது.



மற்றும் எதைச் சொன்னால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள், எதைச் சொன்னால் மக்களுடைய ஆதரவு கிடைக்கும். எதைச் சொன்னால், மக்களுடைய ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து கட்சி என்பது பணியாற்றும். ஆனால், நாம் இயக்கத்தவர்களாகிய நம் மக்களைத் திருத்த வேண்டும். அவர்களுடைய மனதை மாற்ற வேண்டும். அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அவர்களுடைய புத்தி திருந்த வேண்டும். அவர்கள் உள்ளத்தில் மாறுதல் அடைய வேண்டும் என்று வேலை செய்பவர்கள் அப்பொழுதுதான் நமது லட்சியம் வெற்றி அடையும். மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்பட மாட்டோம். மக்கள் ஏற்றாலும் வைதாலும் கவலைப்படாமல் இருப்போம். நம்மைப் பொறுத்தவரையில் நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னாலே ஓடுவது இல்லை. கல்லடி பட்டாலும் சரி, வெற்றியடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதைச் சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள் எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்தனாலேயே தான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து வருகிறது.



எங்களைக் கல்லால் அடித்தவர்கள் எல்லாம், "அப்போது உங்கள் மீது கல் போட்டது ஒரு கை; இப்போது உங்களைக் கூப்பிடுவது இரு கையால்", என்று கூப்பிட்டு அழைக்கிறார்கள். ஓடி ஓடிக் காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளத்தில் உள்ள பல தவறுதல்களை, மக்களுடைய மனதில் படிந்துள்ள மாசுகளை, மக்களுடைய அறியாமையைத் திருத்தி அவர்களுடைய உள்ளத்தையே திருப்பும் புரட்சிகரமான வேலையையே நாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறோம். நாம் திராவிடர்கள் என்பதையும்,  நமக்கு இருந்ததை நம் எதிரிகள் மறைத்து விட்டதை ஞாபகப்படுத்தி நாம் யாவரும்  திராவிடர் உணர்த்துவதும் நமது திராவிடர் கழக வேலை திராவிடர்கள் என்றால், சில உரிமைகளுக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள். இழிவுகளைத் தாங்குபவர்கள் என்பது கூடவே ஞாபகத்துக்கு வருகிறது. திராவிடர்கள் என்றால், திராவிடர்கள் எப்படி இருந்தார்கள்? திராவிடனுடைய உரிமை என்ன? திராவிடனுடைய தனிப் பண்புகள் என்ன? திராவிடனுடைய நாகரிகம் எப்படி இருந்தது? என்பவைகளையும் உணரும் தன்மை கூடவே வருகிறது.


திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால் இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது. பிராமணர்கள் என்று கூறிக் கொள்ள பிராமணர்கள் பெருமைப்படுகிறார்கள். ஆகையால், அவர்கள் பிராமணர்கள் சங்கம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, இந்தக் குறைபாடுகள் ஒழியவேண்டும். சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனன் என்ற தன்மைகள் ஒழிக்கப்பட வேண்டும். நமது முன்னேற்றத்துக்கு இருந்து வருகிற தடைகள் எல்லாம் நீங்க நமக்கு மனிதத் தன்மை ஏற்பட வேண்டும். நமது அறியாமை ஒழிய வேண்டும்; இதற்குப் பாடுபடவே நாம் இருக்கிறோம். நம்மைத் தவிர வேறு யாரும் இன்று இவ்வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் சூத்திரராய் இருப்பதற்குக் காரணம் ஹிந்து மதம். ஆகையால் அது ஒழிய வேண்டும் என்கிறோம். வேறு மார்க்கம் இருந்தால் சொல்லுங்கள். நம்மைச் சூத்திரனாக்கியது இந்த இந்து மதமும், இந்து மதக் கடவுள்களுமாதலின் அவை ஒழிய வேண்டும் என்கிறோம். இதில் என்ன பிசகு. சூத்திரர்கள் இருப்பதற்கு இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்து குழவிக் கற்கள் சாமிகள் தான் காரணம். இவைகளை ஒழிக்காமல் இருப்பது மானமுள்ள ஒருவன் செயலாகுமா? எண்ணிப் பாருங்கள். இவை ஒழிந்து ஒழுக்கமுள்ள கடவுள், எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்கும் கடவுள் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.


வேறு யார் இவைகளையெல்லாம் சொன்னார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், விவேகானந்தர்கள், மகாத்மாக்கள் என்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வார்த்தை இந்தப் பேதங்கள் எல்லாம் ஒழியவேண்டும், என்று சொன்னார்களா? இவைகளைச் சொல்லாததற்காக இவர்கள் எல்லாம் "சாமிகள்" ஆனார்கள்; இவைகளைச் சொன்னதற்காக நாங்கள் "பாவிகள்" ஆனோம். வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே, எல்லாருடைய இழிவைப் போக்கத்தான் நாங்கள் போராடுகிறோம். இன்னும் கூறவேன் இந்த ஓமத்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு, இந்த தமிழ்நாட்டு 'ராஷ்டரபதி' காமராஜருக்குள்ள இழிவுகளையும் சேர்த்துத்தான் ஒழிக்கப் போராடுகிறோம். ஆதலால் நாங்கள் அவர்களுக்கு எதிரிகள் அல்ல. அவர்களின் பதவிக்குப் போட்டி போடுகிறவர்கள் அல்ல.


மற்றபடி, தொழிலாளர்கள் விஷயமாகச் சிறிது பேசும்படி வேண்டுகிறார்கள். தோழர்களே இன்றைய தினம் இந்தச் சென்னையில் 14,500-பேர்கள் எழுபத்தைந்து நாட்களாக வேலை நிறுத்தம் செய்து கஷ்டப்படுகிறார்கள். ஏன் என்று கேட்க யாருமில்லை. இவர்கள் யார்? இவர்களுக்குப் பரிகாரம் என்ன? இவர்கள் பார்ப்பனர்களாயிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்? அவர்களுடைய எழுச்சியை அடக்கவேண்டும் என்பது சர்க்கார் கவலையேயொழிய அவர்களுடைய தேவையைப் பற்றிச் சர்க்கார் கவலைப்பட்டார்களா? உத்தியோகஸ்தர்கள் ஆசிரியர்கள் ஆகியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களா இருப்பதனாலேயே, அவர்கள் 'ஸ்ட்ரைக்' என்றவுடனேயே கமிட்டி போட்டார்கள். அவர்களக்கு சம்பளத்தை அதிகப்படுத்தினார்கள். தொழிலாளர்கள் யாவரும் திராவிடர்கள் என்பதனால் அடக்கி ஒடுக்கப்பார்க்கிறார்கள். அவர்களிடத்திலே விபீஷணர்களையும், தோல்வியையும் ஏற்படுத்த இந்த சர்க்கார் முயற்சி செய்கிறார்களே தவிர, இதுவரை என்ன பரிகாரம் செய்தார்கள். தொழிலாளர் சங்கங்கள் பார்ப்பனர்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே இருக்கின்றன. வரவர அந்தச் சங்கதிகளுக்கெல்லாம் திராவிடர்களே தலைவர்களாக வருகின்றார்கள். ஆகையினால்தான் இப்பேர்ப்பட்ட சங்கங்களையெல்லாம் ஒழித்துக்கட்டி பார்ப்பனர் தலைமையில் சங்கங்கள் வரும்படி அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இன்று காங்கிரஸ்காரர்கள் இந்தத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டுதானே இப்பேர்ப்பட்ட பதவிகளை அடைந்தார்கள். இப்பொழுது இந்தத் தொழிலாளர்கள் என்னைப் போல விழித்துக் கொண்டார்கள். ஆதலால்தான் இத்தொழிலாளர் என்றுமே முன்னேறக் கூடாது என்று சர்க்கார் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். ஆகவேதான் ரயில்வே வேலை நிறுத்தம், கரூர் நிலைமை ஆகியவைகளிலே இந்தப் பார்ப்பன சர்க்கார் அவைகளை ஒழித்துக் கட்ட முனைந்து நின்றது. அவர்களைக் கோபப்படுத்தி பின்னர் பலாத்காரத்தின் பேரால் அவர்களை அடக்க முயற்சிக்கிறார்கள். என்ன நியாயம்?


தொழிலாளர் தலைவர் என் நண்பர் திரு.வி.க கஷ்டப்படுகிறார் என்றால், எனக்குப் பரிதாபம் உண்டுதான். ஆனால் "ஆ! நீயும் மாட்டிக் கொண்டாயா? உன்னிடமும் பார்ப்பனப் பாம்பு கடிக்க வருகிறது பார்" என்று கூட திரு.வி.க வுக்குச் சுட்டிக்காட்ட சந்தோஷப்படுவேன். "காந்தியத்தைப் பின்பற்று என்கிற காந்திய சிஷ்யர்கள் தானே இந்தத் தொல்லைகளைக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் திரு.வி.க எதற்காக காந்தியத்தை வளர்க்க வேண்டும்? இல்லை இந்தக் காந்தியாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாரா? தொழிலாளர்கள் மீது தடியடி, அவர்கள் தாய்மார்கள் மீது கண்ணீர்ப் புகை, ஆகியவைகளைப் பிரயோகம் செய்யும் பொழுது, இவர் காந்தியத்தைப் பின்பற்றுவது என்ன நியாயம், 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனா? உண்மையைக் கூற வேண்டுமானால், இன்று நடக்கும் பி.அண்ட் சி.மில் தொழிலாளர் போராட்டம் ஆரியர் - திராவிடர் போராட்டமேயாகும். இந்தப் போராட்டத்திலே தொழிலாளர்கள் தோல்வி அடைந்தால் இது திராவிடர்களுடைய தோல்வியே ஆகும். திராவிடர்களுக்குப் பலக் குறைவேயாகும். ஆகவே, தோழர்களே இத்தொழிலாளர் நெருக்கடியைச் சமாளிக்க திராவிடர்கள் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டும். சர்க்காருக்குக் கூட நான் சொல்வேன். தொழிலாளர்கள் தோல்வியடைந்து சர்க்கார் வெற்றி அடைந்தோம் என்று எண்ணினால், கட்டாயம் ஏமாந்து போவார்கள். தொழிலாளர்களுடைய உணர்ச்சியை என்றும் அடக்கவே முடியாது. உண்மையிலே இந்தச் சர்க்கார் பொது மக்களுடைய நலத்தைக் கவனிக்கும் சர்க்காராய் இருந்தால் உடனே இதற்குப் பரிகாரம் தேட வேண்டும். தேடாவிட்டால் தொழிலாளர் உலகமே சர்க்காருக்கு எதிரியாகிவிடும்.


என்னைப் பொறுத்த வரையில் தொழிலாளர்களுக்கு என்னால் ஆன, எல்லா ஒத்துழைப்பையும் அவ்வப்போது கொடுத்து வந்திருக்கிறேன். இனியும் கொடுக்கக் காத்திருக்கிறேன். திரு.வி.க அவர்களும் "நானும் ஜெயிலுக்குப் போகிறேன். நீயும் வா" என்று என்னை அழைத்தாரானால் நான் சிறிதும் தயங்கமாட்டேன். திரு.வி.க அவர்கள் கூட வெளியூர்களுக்கு வரவேண்டும். உண்மையை மக்களுக்கு இரண்டு பேரும் எடுத்துச் சொல்வோம். வேண்டுமானால் வரதராஜீலு நாயுடு அவர்களும் வரட்டும். நாம் மூவரும் நாம் மூவருமே தோல்வியடைந்தோம் என்றாலும் பார்ப்பனர்களுக்குப் புத்தி வராவிட்டாலும் நமது திராவிடர்களுக்கு வெட்கம் வராதா? இந்தப் 14,500- பேரும் எனது இனத்தவர்கள். நமது ரத்தக் கலப்பு உள்ளவர்கள். ஆதலால் திராவிடர் கழகத்தின் ஆதரவு ஒத்துழைப்பு தொழிலாளர்களுக்கு எப்போதும் உண்டு.


---------------------------- 27.05.1947-இல் சென்னை - மயிலாப்பூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "குடிஅரசு' 30.05.1947

28 comments:

தமிழ் ஓவியா said...

கிடுக்கிப்பிடியில் பிஜேபி முதல் அமைச்சர்

லலித்மோடி எனது உறவினர் - அவருக்கு அவமானம் என்றால் அது எனக்கும் தான்!

வசுந்தரா ராஜே கடிதம் அம்பலமானது


லலித்மோடியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்ற நிதின் கட்கரி, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானியுடன், லலித்மோடியின் நெருங்கிய நண்பரும், லண்டனில் லலித்மோடிக்கு நிதி உதவிகள் செய்துவரும் விஜய் ஜோலியும் 2011 ஆம் ஆண்டு எடுத்தபடம்


ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ள வசுந் தரா ராஜே 2011-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன் றத்திற்கு எழுதிய கடி தத்தை காங்கிரஸ் கட்சியினர் டில்லி யில் வெளியிட்டனர். இந்தக் கடிதத்தில் லலித் மோடி தனது உறவினர் என்றும் தான் இந்தியாவில் உள்ள ஒரு மாகாணத்தின் மகா ராணி; லலித் மோடி எனது உறவினர், லலித் மோடிக்கு அவமானம் என்றால் அது மகாராணி யான எனக்கும் அவ மானம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தக் கடித்ததின் முழு விவரம் வருமாறு:    இங்கிலாந்தின் நீதி மன்ற ஆவணப் பதிவு களில் இருந்து சண்டே மெயில் என்ற பத்திரி கைக்கு 2011 ஆகஸ்ட் 18 தேதியிட்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்ததில் முதல் பத்தியி லேயே நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக வரும் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படப் போகி றேன். ஆகையால், நான் எழுதியுள்ள இந்தக் கடி தத்தை பொதுப்படுத்தக் கூடாது; இதனால் எனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம்.
 
என்று குறிப்பிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ளதாவது: விரைவில் இந்தியா வில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது எங்கள் கட்சி மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிக்கு வரும்; தற் போது இருக்கும் காங் கிரஸ் அரசு விரைவில் வீழ்த்தப்படும்; மக்களி டையே நாங்கள் கடுமை யான பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறோம்.  காங்கிரஸ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கி விட்டனர். ஆகையால் தான் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
 
இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் பலமி ழந்து வருகின்றன. ஆகை யால் தென் மாநிலங்களில் பாஜகவும் வடமாநிலங்க ளில் காங்கிரசும் வெற்றி வாய்ப்பை இழக்கும், இருப்பினும் வரும் காலத் தில் பாஜகவின் கைகள் பலம்பொருந்தி இருக்கும்.    லலித் மோடி எனது உறவினர், எனது தலை மையில் ஆன அரசு 2008-ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததும், லலித் மோடியை உடனடியாக ராஜஸ்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர் பதவி யில் இருந்து அரசு நீக்கி விட்டது. இது பழி வாங்கும் செயலாகும். என் மீது காங்கிரஸ் ஆட்சி யாளர் பொறாமை கொண்டுள்ளனர். அவர் களுக்கு எனது உறவினர் கள் முக்கியபதவியில் இருப்பது பிடிக்கவில்லை.
 
அதன் பிறகு எனது அரசியல் எதிரிகள் லலித் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறை யில் தள்ள முயற்சி செய் தார்கள். தேர்தல் பிரச் சாரத்தின் போது லலித் மோடியின் மீது பொய் யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதற்கு நான் உடந்தையாக இருப்பது போல் காட்டிக் கொண் டார்கள். இதன் காரண மாக நான் தோல்வி யடைய நேர்ந்தது. நான் தோல்வியடைந்த பிறகு அசோக் கெலாட் தலை மையில் உள்ள அரசு எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. என்னை மோசடிக்காரி என்றும் ஊழல்வாதி என்றும் கூறி வருகிறார்கள்.
 
லலித் மோடி இங் கிலாந்தின் பிரபல விளை யாட்டான கிரிக் கெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களுள் முதன்மையானவர், அய். பி.எல். என்னும் கிரிக் கெட்டை கொண்டுவந்து குறுகிய காலத்திலேயே இந்தியாவில் உள்ள அனைத்து இளைய தலை முறைகளிடம் கொண்டு சேர்த்தவர். இது ஒரு சாதனையாகும்; லலித் மோடியின் இந்தச் செயல் பாராட்டத்தக்கதாகும். அவர் எனது உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். லலித் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்தியா வில் இல்லை, தற்போது உள்ள பிரச்சினை எல் லாம் அரசியல் சூழ்ச்சி தான், ஆகையால் அவ ருக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் இங்கி லாந்து நீதிமன்றம் எடுக் கத் தேவையில்லை.  இங்கி லாந்து நீதிமன்றம் தவறு தலாக லலித்மோடி மீது நடவடிக்கை எடுத்தால், அது லலித்மோடியை அவமானப்படுத்துவது போலாகிவிடும். லலித் மோடிக்கு ஓர் அவமானம் என்றால் அது ராஜஸ் தானின் மகாராணியான எனக்கும் அவமானம் தான் என்று என்னுடைய சுயநினைவுடன்  ஆங்கி லத்தில் நானே எழுது கிறேன்.

இத்துடன் லலித் மோடி எங்களது குடும்ப உறவுகள் குறித்த சில ஆவணங்களை இணைத்துள்ளேன். மேலும் அதிக ஆவணங்களை நான் நேரில் கொண்டு வந்து இங்கி லாந்து நீதி மன்றத்தில் வழங்குவேன்.

தமிழ் ஓவியா said...

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்
தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

அரசு வழக்குரைஞரே அம்பலப்படுத்துகிறார்


டில்லி, ஜூன் 26_ மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர் களை விரைவில் விடு விக்கும் வகையில் வழக் காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன், ஆங்கிலப் பத் திரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

இதன் விவரம்: 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டி ராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர் களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த் தியது தெரியவந்தது.  தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப் பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும் தொடர்பு உள்ள தாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறி யிருந்தார்.   தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்தி ரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.

மோடி அரசு வந்த உடனேயே தேசிய புல னாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித் தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி,  உங்க ளுக்கு ஒரு செய்தி இருக் கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.

பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக் கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து  மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக் கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரை ஞர் நீதிமன்றத்தில் வாதா டுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.

இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியி ருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்கு களை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித் தால்தான் தேசிய புல னாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில்  -_ இந்த வழக்கில் அல்ல -_  ஈடுபட முடியும் என்று  கூறினேன்.
 
அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேச வில்லை என்றார் அவர். ரோஹினி செலிய னுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக் கப்பட்டுவிட்டன. அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது.  மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந் தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமா னியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகை யில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள். அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால்  அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கை

ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.
_ (விடுதலை,20.3.1956)

தமிழ் ஓவியா said...

காவல்துறை கவனிக்குமா?

இந்தியாவில் அதிகமாக இருப்பது ஓரல் கேன்சர் என்னும் வாய்ப்புற்று நோயும், மார்பகப் புற்று நோயும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைத் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார், சமீபத்தில் அறிக்கை ஒன்றில் இந்த வாய்ப்புற்றுநோய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது என அபாய அறிவிப்பு விடுக்கிறார்.

சமீபத்தில் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டபோது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரும், டாக்டர் சாந்தா அம்மையாரோடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது புகையிலைப் பழக்கத்தின் கெடுதியை வலியுறுத்தியிருப் பதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக விடிவு காலம் பிறக்கும் என்றுதான் எண்ணி னோம். ஆனால் சென்னை நகர வீதிகளில் எட்டுத்திசைகளிலும் சுற்றிப்பார்த்தால் தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழிக்கும், தமிழ்க் குடும்பங்களின் அமைதியை அழிக்கும், சோகத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் தாராளமாக, எவ்வித பயமுமின்றி, தயக்க முமின்றி விற்கப்படுவதைக் காணலாம்.

அதிலும் கல்லூரிகளில் இன்றைய மாணவர்களின் பையைச் சோதனை செய்தால் தவறாமல் காணலாம். சென்னை நகர வீதிகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை ஒருபுறம் நடைபெறுகிறது என்றால் தடையிலில்லாமல் மலிவு விலையில் விற்கப் படும் போதைப் பொருட்கள் மற்றொருபுறம்.

வட்டமான வண்ணக்குடை, அதன் கீழே வடநாட்டுக்காரன் ஒருவன் வட்டத்தட்டில் வரிசையாக மூடிபோட்ட டப்பாக்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பீடாக்கடை. ஆனால் அங்கு விற்கப்படும் போதைப்பொருள் பெயர் மாவா

பத்து ரூபாய் சில இடங்களில் ஒன்பது ரூபாய்க்கும் கிடைக்கிறது. மாவா என்று கேட்டால் போதும் ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில், பொடிபோல் மேலே ஒரு ரப்பர் பேண்டு சுற்றி உடனே கிடைக்கிறது.

இந்த மாவா போடுகிறவன் வாய்குளறும். ஒரு மயக்கமூட்டும் வாசனை வரும். இதைப்போட்டால் மூளை மந்தமாகும். மூளைக்குப் போகும் ரத்தக்குழாயில் ரத்தத்தை உறைய வைக்கும். இது போட்டால் மது அருந்திய அளவிற்குத் தள்ளாட்டமும் இருக்கும். இந்த சுகம் பத்து ரூபாய்க்குள் சாலையின் ஓரங்களில் மட்டுமல்ல, முதன்மையான இடங்களில் காவலர் எதிரேயே விற்கப்படுவதுதான் கொடுமை. திருவல்லிக்கேணி பாரதிசாலை தொடக்கத் தில் எக்ஸ்பிரஸ் அவின்யூ எதிரில் மயிலாப் பூரில், வடசென்னையில் தாராளமாக விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பவர்கள் தவறாமல் மாமூல் கொடுத்து விடுவதாகவும் கேள்வி.

மதுரவாயலில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகம், கேளம்பாக்கம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அருகில் மிகத் தாரா ளமாக விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

இது போல் புகார் செய்யப்படும்போது ரெய்டு என்று ஏமாற்றுவது நடைபெறும். எங்கிருந்து வருகிறதோ அங்கேயே வராமல் தடுப்பதை விட்டு இது போல் ஏமாற்று வேலை. இதனால் பாதிப்பிற்குள்ளாவது மாணவர்கள் மட்டுமில்லை. நம் திராவிடச் சமூகத்தின் உழைக்கும் வர்க்கமான கட்டடக் கலைஞர்கள் சிறுசிறு பணியாளர்கள் என்று பலரும் அடக்கம்.

தலைக்கவசம் போடவேண்டும் என்று வலியுறுத்தும் நீதிமன்றம் இதைத்தடுக்கும் படி அரசுக்கு எச்சரிக்கக்கூடாதா?

அண்டை மாநிலமான கேரளத்தில் இந்த ஆபத்தான பொருள் விற்பனை கிடையாது. இங்கே அரசாங்கம், காவல்துறை பற்றிய அச்சமோ, கவலையோ இல்லாமல் ஒளிவு மறைவு கூட இல்லாமல் விற்கிறார்கள்.

இது இப்படியென்றால் வெற்றிலை பாக்குக் கடைகளில் பகிரங்கமாக விற்கப் படும் போதைப்பொருள் பெட்டி பெட்டியாக விற்கப்படும் போதைப் பொருளின் ஹான்ஸ் என்பது. மஞ்சள் வண்ண பிளாஸ்டிக் உறையில், முகர்ந்து பார்த்தாலே ஒரு வித மயக்கம் தரும் புகையிலைப் பொருள் வெளிப்படையாக விற்கப்படு கிறது. இதன் விலையும் மலிவு தான்.

ஏற்கெனவே தெருவிற்கு இரண்டுகடை என்று மதுபானக்கடையைத் திறந்து போதையை பரப்பும் அரசு மாவா, ஹான்ஸ் விஷயத்தில் மட்டும் நட வடிக்கை எடுத்து விடுமா?

சமூக ஆர்வலர்கள் என்போர் மது வுக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால் போதாது?

இந்தப் போதைப்பொருள் விற் பனையை முழுமையாக ஒழிக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா?

சென்னை நகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், பிரபல மான கடைகளில் பணிபுரியும் ஏராளமான வடநாட்டவர்கள் வருகையால் ஏற்பட்ட சமூகத் தீமை இது.

கழிவறை, யோகா என்றெல்லாம் பரப்புரை செய்யும் மய்ய அரசு, சமுதாயத்தை மெல்லக் கரையான் போல் அரித்துப் புற்றுநோய்க்கு வழிகாட்டும் இந்தத் தீமைக்கு, மனித மூளையைச் செயல்படாமல் தடுக்கும் நஞ்சை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

வெற்றிலை பாக்குக் கடைகளில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை கிடையாது எனும் விளம்பரத்தைப் பார்க்கையில் இந்தக் கேலிக்கூத்தை நினைத்துச் சிரிப்பு வருகிறது.

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து



(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.

நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.

இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,

சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.

மிருகத்தனமானது

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.

இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.

ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?

வேதங்கள் பொய்

சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?

அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை

இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

(பகுத்தறிவு, 1933)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்



பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை  விளைவித்தது !

திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.

மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.

புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !

- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.     மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும்.  மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

அதிரடி நடவடிக்கை
லலித்மோடி விவகாரம் : நிதியமைச்சர் அருண்ஜெட்லிமீது எஃப்.அய்.ஆர் பதிவு

புதுடில்லி ஜூன் 25 லலித் மோடிக்கு உதவிய தாக வெளிவந்த சான்று களின் அடிப்படையில் டில்லியில் உள்ள அய்.பி. எஸ்டேட் காவல் நிலையத் தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் நாடாளு மன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் கடந்த திங்க ளன்று பொருளாதார மோசடி வழக்கில் தேடப் படும் குற்றவாளியான லலித்மோடிக்கு உதவியது தவறு என்று கூறியிருந் தார். லலித்மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, அருண்ஜெட்லி என தொடர்ந்து பாஜக வின் முக்கியத் தலைவர் கள் பெயர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

இந்தப் பரபரப்பான சூழலில் லீஜீ://ஷ்ஷ்ஷ்.றீணீறீவீ னீஷீபீவீ.நீஷீனீ என்ற தன்னு டைய இணையதளத்தில் அருண்ஜெட்லி மற்றும் தனது வழக்கு தொடர் பான ஆவணங் களை வெளியிட்டிருந் தார். இந்த ஆவணங்கள் அருண் ஜெட்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் போது நடந்த பரிமாற்றமாகும், இதன டிப்படையில் பார்க்கும் போது லலித்மோடியின் அனைத்து ஊழலுக்கும் அருண்ஜெட்லி துணை போயுள்ளார் என்றே தெரிகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத், அருண் ஜெட்லி மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் லலித் மோடி தொடர்பான ஹவாலா பணப்பரி மாற் றம் அனைத்தும் அருண் ஜெட்லிக்குத் தெரிந்தே நடந்துள்ளது. ஒரு நாட் டின் பொருளாதார மோசடிக் குற்றத்திற்கு ஆளாகி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிக்கு தெரிந்தே உதவிபுரிந்திருக் கிறார். இது தேச நல னுக்கு எதிரான செயலா கும் மத்தியில் நிதி அமைச் சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே இப்படிச் செய் வது தவறான முன்னு தாரணமாகிவிடும் என்று அந்தப் புகாரில் தெரிவித் துள்ளார்.

புகார் அளித்த பிறகு கீர்த்தி ஆசாத் செய்தி யாளர்களிடம் கூறியதா வது: இந்திய கிரிக்கெட் வாரியத் தின் கூட்டம் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி டில்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத் தில் அனைவருக்கும் மது பரிமாறப்பட்டது. காந்தி யார் பிறந்த நாளான அன்று இந்தியா முழுவ தும் மதுவிற்பனை மற்றும் பரிமாற்றம் சட்ட விதிப் படி தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால் டில்லி கிரிக்கெட் போர்ட் தலை வராக உள்ள அருண் ஜெட்லி அனைவருக்கும் மது பரிமாற ஆணையிட் டுள்ளார். வெளியே மோடி தெருக்கூட்டிக் கொண்டு இருக்கும் போது, உள்ளே அருண்ஜெட்லி சாராயம் அருந்திக்கொண்டு கும்மாளமிட்டுக்கொண்டு இருந்தார் இது குறித்தும் புகார் மனுவில் எழுதி யுள்ளேன் என்று கூறினார்.



Read more: http://www.viduthalai.in/page1/103918.html#ixzz3eBFUTlQI

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

தமிழ் ஓவியா said...

தினமணியின் மூக்கில் வியர்ப்பது ஏன்?

வடலூரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதய்யரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேராசிரியர் மோகன ராசு கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டுக் கீதையின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார் அல்லவா!

அதற்குப் பதில் சொல்ல முடியாத தினமணி அய்யர்வாள் திருக்குறளிலே கொல்லாமை கூறப்பட்டுள்ளதே - அதைக் கடைப்பிடிக்காதவர்கள் திருக்குறளைப்பற்றிப் பேசலாமா? என்று பிரச்சினை யைத் திசை திருப்பிப் பேசினார்; மக்கள் சலசலப்பைக் காட்டினார்கள்.

ஒரு நூலைப் போற்றவேண்டும் என்றால், அந்நூலில் உள்ள அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அசல் விதண்டாவாதமே! வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை விடுதலை விரிவாக வெளியிட்டு இருந்தது (23.6.2015, பக்கம் 8) அல்லவா!

அதைக்கண்டு ஆத்திரப்பட்ட தினமணி அய்யர்வாள் இன்றைய தினமணி ஏட்டில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். மீண்டும் அந்தப் புலால் உண்ணாமைப் புராணம்தான்.

திருவாளர் தினமணி அய்யரைக் கேட்கிறோம். பார்ப்பான் பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும்; அத்தகையவன்தான் பூணூல் போட்டுக்கொள்ள அருகதை உடையவன்; அப்படி இருக்கும்பொழுது, நீங்கள் ஏன் பூணூல் போட்டுக்கொண்டு பிராமணன் என்று மார்தட்டுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டால் உங்கள் பதில் என்ன?

சங்கராச்சாரியார் என்றால் கால்நடையாகத்தான் ஊர் சுற்றவேண்டும். உங்கள் லோகக் குரு ஜெயேந்திர சரசுவதி விமானத்தில் பறக்கிறாரே அது எப்படி? என்று நாங்கள் கேட்டால், உங்கள் பதில் என்ன?

அய்தீக முறைப்படி திருவாளர் வைத்திய நாதய்யர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டுள்ளாரா? அப்படி வைத்துக் கொண்டால்தானே அவர் பூணூல் தரிக்க முடியும்.

இந்த வகைகளில் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு பார்ப்பான்கூட தேறமாட்டானே.

ஆக, வடலூர் நிகழ்ச்சி - தினமணியாரின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பது மட்டும் உண்மை. தினமணி கட்டுரை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.



Read more: http://www.viduthalai.in/page1/103950.html#ixzz3eBk6rVbs

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப்  பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக்  கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும்  விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத  நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும்  கேட்டார்.   அவர் இப்படி கேட்கும்போது  ஒரு  பார்ப்பனரும் கூட இருந்தார்.    அப்போது தந்தை பெரியார்அதற்குப்  பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து  17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!

இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.

அந்த ரஷ்யர், பல விஷயங்களைப்  பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக்  கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும்  விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத  நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.

அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும்  கேட்டார்.   அவர் இப்படி கேட்கும்போது  ஒரு  பார்ப்பனரும் கூட இருந்தார்.    அப்போது தந்தை பெரியார்அதற்குப்  பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து  17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.

நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மவுடீக எண்ணங்கள்

இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப்  பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும்  இந்தியதாய்க்கு  சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில்  குறுகிய எண்ணத்தை  ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச்  சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,

மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும்  சடங்கு களும்  இருக்கின்றன.

அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை  தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து உலகிற்கே தேவை!

 

பெண்ணடிமைத்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டும் உள்ள தனிச் சொத்தல்ல; உலகம் முழுவதுமே இது நீக்கமற நிறைந்திருக்கிறது.

சென்னை - திருவொற்றியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் (10.5.2007) நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூறுகிறது.

குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல் நலனை முன்னிட்டும் கருத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கருத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உ,ரிமையாக இருக்க வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்கான தனிச் சட்டத்தையும் அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் திருவொற்றியூர் தீர்மானமாகும்.

இந்தத் தீர்மானம் ஏதோ இந்தியாவுக்கு மட்டும் தேவைப்படும் என்று நினைத்து விடக் கூடாது; அயர் லாந்து நாட்டில் நிலவும் ஒரு சட்டத்தைப் பார்க்கும் போது திருவொற்றியூர் மாநாட்டுத் தீர்மானத்தின் முக்கியத்துவம் புலனாகும். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். மருத்துவர் அந்தக்கரு சரியாக உருவாகவில்லை என்கிறார். ஆனால், அய்ரிஷ் சட்டமோ அந்தக் கருவை மகப் பேறு காலம்வரை அப்பெண் சுமந்தே தீரவேண்டும் என்கிறது.

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அதனால், கருவுற்றிருக்கிறாள். அவள் அந்தக் கருவை சுமந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் அய்ரிஷ் சட்டம் அவளை அந்தக் கருவை சுமந்தேயிருக்குமாறு கூறுகிறது.

அவளுக்குத் தேவை கருக்கலைப்பு. ஆனால் எந்தப் பெண்ணையும் கருக்கலைப்பு செய்து கொள்ள அயர்லாந்து அனுமதிப்பதில்லை. ஆகவே, அவள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகிறாள். அதுவும் அவள் உடல் அதற்கு இடம் கொடுத்தால்தான். அப்படி நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் அங்கேயே இருந்துகொண்டு கருக்கலைப்புக்கான முயற்சிகளைச் செய்தார் என்றால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் என்கிற அச்சுறுத்தல் இருக்கிறது.

அவர் குற்றவாளி இல்லை. அவருக்கு கருவைக் கலைத்துக்கொள்ளும் மனித உரிமை உள்ளது.
இவ்வாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு சபையின் சார்பில் அயர்லாந்து அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கோரிக்கையை இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் மனிதநேயர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.
நன்றியறிவிப்பில் குறிப்பிடும்போது, கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் கோரியமைக்கு நன்றி. அதேபோல் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குற்றவாளிகளாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, அயர்லாந்தில் உள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுமிகளுக்கான சுகாதாரக் கவனிப்பு  மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படு கின்றன. அவர்களுக்கான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் தேவை! அயர்லாந்து அரசுக்கு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளோம்.

இக்கோரிக்கைகளை இப்பொழுதே உங்கள் நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்துவிடுங்கள்.

இவ்வாறு அயர்லாந்து அரசுக்கு கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை செய்திட இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் கோரிக்கையாக பன்னாட்டு பொது மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

பன்னாட்டுப் பொது மன்னிப்பு சபையின் வேண்டுகோள் மிகவும் நியாயமானது.
அதே நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் வெகு நீண்ட காலத் திற்கு முன்பிருந்தே கூறி வருவதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

ஆம், மற்ற மற்ற கருத்துக்களில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். பெண்ணுரிமைப் பிரச்சி னையில் தந்தை பெரியாரியல் என்பது உலகிற்கே தேவைப்படக் கூடியது என்பதில் அய்யமே இல்லை.

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

மற்றுமொரு தொல்லை

மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில், ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிகல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக் கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்பந்தமான தெய்வ சம்பந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம்தோறும் வந்து கொண்டுள்ளன.

தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்தபாடில்லை. முதலாளிகள் கோடியாடை களின்னும் மழுங்கவில்லை. பலகார பட்சணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.

மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி, தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்டகடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்த லட்சணத்தில் கார்த்திகை தீபம் என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது; தீபாவளி தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களை பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.

இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே (சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறா ரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும், குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும், ஜவுளிகளையும் குடங்குடமாக, மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாகத் திருப்தியடைவதுமான களியாட் டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும், அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத் தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.

மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.

நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத் தானைத் தட்டினால் லட்ச தீபம் போல அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்து வரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து, அத்தகைய காட்டு மிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக்காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம் சொக்கப்பானை கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 11.11.1934

தமிழ் ஓவியா said...

சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை



சென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும் அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவி களும், பெரும்பான்மையாகக் கொண்டதாக ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

இந்த நாட்டு பணக்காரர்கள் ஜமீன்தார்கள் ஆகியவர் களுக்கு எப்படி உண்மையான விடுதலை தேவை இல்லையோ அதேபோல் இந்தப் பெண்களுக்கும் உண்மை யான விடுதலை தேவை இல்லை என்பதோடு தெரிவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் அரசியல் துறையில் பிரவேசித்து தோழர் சத்தியமூர்த்தியை ஆதரிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றால் பெண்கள் சமூகத்துக்கு அதைவிட வெட்கக் கேடு வேறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆண்களும் பெண்களும் சரிசமமான சுதந்திரத்திற்கு அருகதையுடை யவர்கள் என்பதையே ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பெண்களுக்குள்ள இழிவையும், தாழ்வையும் அப்படியே நிலைநிறுத்தப்பாடு படுகின்றவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.

உதாரணமாக தேவதாசி தொழிலை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தேவதாசித் தொழிலை ஆதரித்தார். தேவதாசிகள் இல்லாவிட்டால் தெய்வங்களுக்குச் சக்தி குறைந்துவிடும் என்றும், ஆகமங்கள் கெட்டு விடும் என்றும் பேசினார்.

இரண்டாவதாக - குழந்தைகளுக்கு கலியாணம் செய்யக்கூடாது என்றும், குழந்தை பருவத்திலேயே பிள்ளை பெற விடக்கூடாது என்றும் கொள்கையுள்ள சாரதாசட்டத்தை ஹ. ராமசாமி முதலியார் ஆதரித்து இந்தியா முழுவதும் சுற்றி அபிப்பிராயம் தெரிந்து வரும் காலத்தில் தோழர் சத்திய மூர்த்தி அவர்கள் குழந்தை கலியாணம் கூடாது என்று சட்டம் செய்தால் நான் அந்தச் சட்டத்தை மீறி என் மகனுக்கு கலியாணம் செய்து சிறை செல்லுவேன் என்று தைரியம் சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத் தூண்டினார்.

இப்படிப்பட்டவருக்குப் பெண்கள் சங்கம் ஆதரவு கொடுப்ப தென்றால் அச்சங்கம் பெண்கள் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் பொருந்தியதா என்பதைக் கவனிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். - பகுத்தறிவு - வேண்டுகோள் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி, 27 ஜூன் 2015


கொழும்பு, ஜூன், 27_ இலங்கையில் 4 குழந் தைகள் உள்பட 8 தமிழர் களை கொலை செய்த ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக இழைக் கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வ தேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 தமிழர்களை, சுனில் ரத்னாயகே என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடந்த 2000ஆம் ஆண்டு பிடித் துச் சென்று அவர்களது கழுத்தை அறுத்து கொடூர மாக கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத் திய இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சுமார் 15 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கில், ராணுவ அதி காரி சுனில் ரத்னாய கேவுக்கு மரண தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அரசு வழக்குரைஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான சரத் ஜெயமன்னா வரவேற்றுள்ளார். ஒரு நம்பகமான விசார ணையை எங்களால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புத்த மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடான இலங் கையில், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப்பிறகு யாருக் கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் சுமார் 400 பேர், தண் டனை நிறைவேற்றத்துக் காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனவாதம் மீண்டும் தலைதூக்குகின்றது

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சமூக வலைத் தளமான டுவிட்டர் பக் கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள் ளனராம்.

கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 தமிழ் மக்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்ற வாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன் றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிபர் சுனில் ரத்னாயக் கவுக்கு ஆதரவாக டுவிட் டர் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளி லேயே 10 ஆயிரம் பேர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.


'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங் கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக் கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ராம்!

படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படை வீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ள தாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர் கள் குறிப்பிட்டுள்ளனர். ஈழத் தமிழர்மீது சிங்களர்களின் இனவாதம் மீண்டும் தலைதூக்குகின் றது என்ப தற்கு சான்றாக இதுவும் ஒன்றாக அமைந் துள்ளதாக சமூக வலைத் தள பதிவர்கள் தமது கருத் துக்களை பதிவிட்டிருக் கிறார்கள்.



Read more: http://www.viduthalai.in/headline/104041-8-----------.html#ixzz3eHUPqUFO

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட  அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்



சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.

தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும்  வேறு யாராலும் முடியாது என்று.

தமிழ் ஓவியா said...

ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.

ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில்.  நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.

நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச்  சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி  பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

ஏழுமலையான் சக்தி வெத்து வேட்டுதானா? கோயில்மீது விமானம் பறக்க தடையாம்!

சனி, 27 ஜூன் 2015

திருமலை, ஜூன் 27_ திருப்பதி ஏழுமலை யான் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ய்பு இருப்பதாக மத்திய புலனாய்வு துறை பலமுறை எச்சரிக்கை செய்துள்ளதாம்!. கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் திருப்பதியை ஆய்வு செய்த எம்பிக்கள் குழு, ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க பரிந்துரை செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?

சனி, 27 ஜூன் 2015
 

ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டி



ஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன்  என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.

அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.

அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.
கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.

சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.

புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

குஜராத் : பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்

சனி, 27 ஜூன் 2015


அகமதாபாத் ஜூன் 27_ குஜராத் கலவரத்தில் சொந்தப் பகைக்காக பாலி யல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்ற வாளிகளுக்கு எதிராக சாட்சிகள் இல்லாததைக் காரணம் காட்டி மூன்று குற்றவாளிகளையும் அகமதா பாத் நீதிமன்றம் விடுதலை செய்தது.   குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆட்சியின் போது 2002-ஆம் ஆண்டு மதக்கலவரம் நிகழ்ந்தது, இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படு கொலை செய்யப்பட்ட னர். இஸ்லாமியர்களின் வசிப்பிடம் தொழில் நிறு வனம் மற்றும் சொத்துக் கள் சேதப்படுத்தப்பட் டன. இன்றுவரை இந்த கலவரத்திற்காக நீதி கிடைக்காத பட்சத்தில் முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். கடந்த ஆண்டு மோடி, அமித் ஷா போன்றவர்களை சிறப்பு புலனாய்வு நீதி மன்றம் இந்தவழக்கில் இருந்து விடுவித்தது.   இதனை அடுத்து கலவர வழக்கில் நேரடித் தொடர்புடையவர்கள் தற்போது விடுவிக்கப் பட்டு வருகின்றனர்.  கலவரத்திற்கு தொடர் பில்லாத ஆனந்த மாவட் டத்தில் ஆடே என்ற ஊரில் நிலத் தகராறு தொடர்பாக அங்குள்ள முஸ்லீம் குடும்பத்தின் மீது அந்த ஊரில் உள்ள சிலர் வன்மம் வைத்திருந் தனர். கோத்ரா சம்பவம், அதைத் தொடர்ந்து அகமதாபாத் வரை கலவரம் பரவியதைச் சாதகமாகக் கொண்டு அந்த ஊரைச் சேர்ந்தவர் கள் முஸ்லீம் குடும்பத்தி னரைக் கொலை செய் தனர், முஸ்லீம் குடும்பப் பெண்களான ஆயிசா, நூரி ஆகியோரை அன்கூர்  படேல் மோகன் படேல், நிகுல் படேல் போன்றவர் கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய் தனர், நூரியின் சகோதர ரான காதர் என்பவரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். சம்பவம் நடந்த பிறகு அனைத்து பிணங்களை யும் வீட்டிற்குள் போட்டு எரித்து விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடே ஊரைச் சேர்ந்த 20 பேர்கள் மீது சிறப்பு புலனாய்வுத்துறை வழக் குப் பதிவு விசாரணை செய்து வந்தது. கடந்த ஆண்டு 14 பேர், சாட் சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேரடித் தொடர்புடைய அங்கூர், மோகன், நிகுல் ஆகி யோரை அகமதாபாத் நீதி மன்ற நீதிபதி எ.எஸ்.பட்டு விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது, சிறப்புப் புலனாய்வுத்துறை குற்றம் தொடர்பானவர்கள் மீதான சான்றுகளை வைக்கவில்லை. மேலும் சாட்சிகள் யாரும் இவர் கள் இந்தச் சம்பவத்தில் தொடர் புடையதாகக் கூறவில்லை. ஆகையால் இவர்கள் அனைவரும் இந்த வழக் கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம் அதை என் முகத்தில் விடாதே!



யோகாவை யாரும் தடை செய்யக் கோரவில்லை. யார் யாருக்கு என்ன முடியுமோ அப்படி மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால், இப்போது மோடி நடத்திய யோகா நாடகம், தனது மத்திய தர வர்க்க வாக்காளர் களிடையே கிழியத் தொடங்கும் நல்லாட்சி எனும் முகமூடியை ஒட்ட வைக்க நடத்தப்படும் ஒட்டுப் பிளாஸ்திரி வேலை என்பதால் இதை நாம் எதிர்க்க வேண்டி யிருக்கிறது.

ஏழைகளை இன்னும் விலக்கி வைக்கிற ஒரு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தும் மோடி, பத்து பதினைந்து பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக்குவதே வளர்ச்சித் திட்டம் என்று சொல் லும் மோடி, ஏழைகளுக்கு பாது காப்பாக இருக்கிற நலத்திட்டங் களை எல்லாம் இழுத்து மூடிக்கொண்டிருக்கும் மோடி, தனது இந்துத்துவ அடியாட்கள் அடிக்கும் லூட்டிகளை அமைதி யாக இருந்து ஆமோதிக்கும் மோடி, கலர் கலராக உடையணிந்து நம்மைக் கேவலப்படுத்தும் மோடி, இந்தியாவில் இருக்கும் அறிவு சார்ந்தஅரசு நிறுவனங்களில் தனது ஜால்ராக்களை முக்கியஸ்தர் களாக்கி அவற்றை நீர்த்துப் போகச்செய்யும் மோடி, ஆதிவாசி, தலித், முஸ்லீம், கிறிஸ்தவர், ஹிந்தி அல்லாத பிற இந்திய மொழி பேசுபவர், விவசாயி, கைவினைஞர், மீனவர், பாலியல் சிறுபான்மை யினர், மாற்றுத் திறனாளி என்று எல்லோரையும் அந்நியனாக்கும் மோடி, யோகா என்ற பெயரில் நம்மை வைத்து காமெடி பண்ணுவ தாக சுயமரியாதை உள்ள எனக்குப் படுகிறது.

அதனால் நான் இந்த யோகா நாடகத்தை எதிர்க்கிறேன். சிலருக்கு வடக்கிருத்தல் உசிதம் என்றால் நான் அதையும் வரவேற்பேன்.

ஆன்மா சுத்தி அடையும், அதனால் கரண்ட் கம்பியில் தொங்க விருப்பமென்றாலும் நான் தடுக்க மாட்டேன். எனது பெருமை என்று என்னை உங்கள் விளையாட்டில் மட்டும் தயவு செய்து சேர்க்காதீர்!
இந்திய ஞானமரபு என்பது நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம். அதை என் முகத்தில் விடாதே என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

(முக நூலிலிருந்து  குடந்தை கருணா)

தமிழ் ஓவியா said...

இனியாவது போகாதே!

அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...

அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள்- இந்நாள்!

1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் -அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்டநாள்!
பெரியார் - புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை,
பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்
கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி  என்ற விருது வழங்கப்பட்ட நாள்! மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் அறிவு ஆசான் பெரியாரின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பு: இத்தகு பெருமைமிக்க பாராட்டுரைகளை ஆய்வு செய்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த ஆண்டு நான்கு நாள்கள் கட்டணத்துடன் கூடிய ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவ்வுரைகள் தொகுக்கப்பட்டு சிறந்த ஆய்வு நூலாக விரைவில் வெளிவர உள்ளது.