Search This Blog

29.6.15

தமிழும் தமிழர் முன்னேற்றமும்-பெரியார்

தந்தை பெரியார்

தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக் கணம் கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.


உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத் திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?


இனிப் பள்ளிக் கூடப் பிள்ளை களுக்குத் தமிழ் இலக்கியத் துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மததத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப் பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ் சியங்களும் அல்லாமல் வேறு இலக் கியங்கள் காணப்படுகின்றனவா? பண்டி தர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம் தானே அதிகமாயி ருக்கின்றது?


மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ் பியர் வேண்டும் என்பானாம். தமிழன் எதைக் கேட்பது?


இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.

மேல் நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறி வாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.


மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்த மின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால்  நுற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக் கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள், சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக் கும் பொதுவான இலக்கியம், ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும்மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக் கியம் ஆகியவை மூலம்தான், ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத் திரமல்லாமல், அதைக் கையாளும் மக் களும் ஞானமுடையவர்களா வார்கள்.
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்களே இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது! தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. சுயமரி யாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக் களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

தமிழ் மொழியின் பெருமை பரம சிவனுடைய படைப்பினால் வந்த தென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதினிடை விடுத்த தாலும், முதலை உண்ட பாலனை அழைத்த தாலும் எலும்பைப் பெண்ணாக்கின தாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத் தான் பயன்படும்.
பரமசிவனுக்கு உகந்த மொழி தமிழ் என்றால் - வைண வனும், முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.


இன்று தமிழ் நாட்டில் வந்து, தமிழ் கற்று, வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்கள் தானே, இந்தி பாஷை இந்தியப் பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள்? கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்களே. காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்.


தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா லோர்க்கு இதைப் பற்றி சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் கோபத்துக்கும் பயந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ் கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ்மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்ப தில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள்.
ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜ்கள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரி களும் பாடுபடுகின்றார்களே! 

நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.


தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? 

தமிழ்மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக் கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்ப தில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதர வளிப்பது மில்லை. தற்கால நிலைக்குத் தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ள தாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்?


மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன.

எழுத்துக் களில் எவ்வளவு மாறுதல் செய்து வரு கிறார்கள்! ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத் துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய ஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்து விட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றி கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண் டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ ராவது, அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.


ஆனால் தகுதி உள்ள வேறு எவரும் வெளிவராவிட்டால் என்செய்வது?
ஆனாலும், நான் அம்முறை யிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே பல புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வ ளவோ செய்ய வேண்டி இருக்கிறது, இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப் பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு அதரவு அளித்தார்கள்.


எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றிய மையாதது. அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.


தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானது மான பண்டிகைகள் கொண்டாடு வதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக் கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல மாகத் திருநாள்களைப் பரப்ப வேண்டும்.

நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் - தீபாவளியும், மாரிப்பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்.
இந்தப் பண்டிகையால் தமிழர் முன்னேற முடியுமா? சுயமரியாதை உணர்வுகள் வந்திருந்தால் தான் முன்னேற முடியும்.


-----------------------------------தந்தை பெரியார் அவர்கள் "விடுதலை"யில்  எழுதிய கட்டுரை,  - “விடுதலை” 28.6.1964



Read more: http://www.viduthalai.in/page1/104101.html#ixzz3eS8wNUcU

21 comments:

தமிழ் ஓவியா said...

பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை, ஜூன் 29 வால் பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் னால் வில்லோனி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 2 குட்டி உள்பட 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் லோயர் பாரளை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டு புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

 

இந்த யானைகள் கூட்டம் நேற்று இரவு அங்கிருந்து வால்பாறை பொள்ளாச்சி மெயின்ரோட்டை கடந்து புதுத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பூசாரி மணி என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்தது.

வீட்டுக்குள் துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்குமா? என்று தேடியது. வீட்டி லிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் எஸ்டேட் பகுதி மக்களுடன் இணைந்து யானை களை விரட்டினர்.

தமிழ் ஓவியா said...

அம்மன் கோவிலில் தீ விபத்து: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
காஞ்சீபுரம், ஜூன் 29 காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்வாயில் பகுதி யில் சிறீதண்டு மாரியம்மன் கோவில் உள்ளது.
புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்வர். இந்நிலையில் நேற்று மதியம் கோவிலில் அமைக்கப்பட் டுள்ள இன்வெர்டர்கள் திடீரென வெடித்தது. இதனால் தீ மளமளவென பரவ தொடங்கியது.

 

இதை பார்த்து கோவில் அருகில் இருந்தவர்கள், பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். விபத்து குறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மந்திரச்சடங்குகளுக்காக தம்பியின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த  மந்திரவாதி கைது

புர்த்வான், ஜூன் 29- வளர்ச்சி யடைந்த நவீன சமூகம் என்று மனித சமூகம் தன்னை கருதிக் கொள்ளும் இந்தக் காலத்திலும் கூட, மந்திரச் சடங்குகளுக்காக தனது உடன்பிறந்த சகோதரரின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த கொடூரம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. காஞ்சன் நகர் கிராமத்தில் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருபவர் ஷூபஜித்(40).

கடந்த சில வாரங்களாக இவரது தம்பியான ஷாமிக்கை கிராமத்தில் எங்கும் காணமுடியாததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது வீட்டை மறைமுகமாக சோதனையிட்டனர். அப்போது, அவரது தம்பி ஷாமிக், உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித் தனர்.  இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகாரளித்தனர்.

உடனடியாக நடவடிக் கையில் இறங்கிய காவல் துறையினர் ஷூபஜித்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த ஒன்றரை மாதங்களாக ஷாமிக்கை அடைத்து வைத்து தனது மந்திரச் சடங்கு களுக்காக  அவரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஷூபஜித்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டிலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை

மும்பை திரைப்பட கதாபாத்திரங்களில் உயர் ஜாதியினருக்கே முக்கியத்துவம்
இந்து ஆங்கில ஏடு ஒப்பீடு
சென்னை, ஜுன்29_ மும்பையில் வெளிவரும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக உயர் ஜாதியினரே சித்தரிக்கப் படுகின்றனர்; தமிழ்நாட் டில் அதற்கு மாறாக தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் கதாநாயகர் களாக சித்தரிக்கப்படுகின் றனர் என்று இந்து ஆங் கில ஏடு ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட் டுள்ளது.

(28.6.2015) அதன் விவரம் வருமாறு:
மும்பைத் திரை உலகு மற்றும் சென்னை திரை உலகு இரண்டையும் தி இந்து ஒப்பீடு செய்துள் ளது. இரண்டு திரையுலகி லும் திரைக் கதைகளில் இடம்பெறக்கூடிய கதா பாத்திரங்களில் ஜாதியின் நிலைகுறித்து அந்த ஒப்பீடு சுட்டிக்காட்டி உள்ளது.

மும்பைத் திரையுலகில் பெரிய அளவிலான மாற் றங்கள் ஏற்படாமல் ஜாதி யைப் பிடித்துக்கொண்டு பின்னடைவிலேயே இருப் பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. அதேநேரத்தில் சென்னைத் திரையுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட ஜாதியினர், பெயர்களில் கதாபாத்தி ரங்கள் சித்தரிக்கப்பட்டுள் ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு களில்தான் பிற்படுத்தப்பட் டவர்கள் கதாபாத்திரங் களாக இடம் பெற்றுள்ள தாக புள்ளிவிவரத் தகவல் குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு களில் வெளியான பிரபல மான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களாக பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் சித்தரிக் கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மும்பை திரையுலகில் வெளியான படங்கள்குறித்து திரட் டப்பட்ட தகவலின் அடிப் படையில் திரைப்படங் களில் இடம்பெறும் கதா பாத்திரங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் பெயர்கள், கதையோட் டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே முன் னணி கதாபாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்பினரை சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மஞ்சு நாத், ஹைவே படத்தில் குஜ்ஜார் குற்றவாளியாக முன்னணி கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு கதாபாத்திரங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இடம் பெறச் செய்துள்ளனர்.

சம்பட் பால் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் மாதுரி தீக்ஷித் நடித்துள்ள குலாப் கேங் படம், அமோலே குப்தா வின் குழந்தைகளுக்கான படமான ஹவா ஹவாய் ஆகிய படங்களில் கதா பாத்திரங்களாக பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் சித் தரிக்கப்பட்டுள்ளனர்.

மேரி கோம் படம் பழங் குடியின குத்துச் சண்டை வீராங்கனை கதாநாயகி யாக சித்தரிக்கிறது. இரண்டு படங்களில் கிறித்தவர் களை முக்கியக் கதாபாத் திரங்களாகவும், மூன்று படங்களில் சீக்கியர்களை கதாநாயகர்களாகவும், ஒன்பது படங்களில் முசு லீம் கதாபாத்திரங்களா கவும் சித்தரிக்கப்பட்டுள்ள னர். மற்ற 66 படங்களில் இந்துக்களில் உயர்ஜாதி யினர் மட்டுமே கதாபாத் திரங்களாக சித்தரிக்கப்பட் டுள்ளனர். மற்ற படங்களில் ஜாதிகளைக் குறிப்பிடக் கூடிய வகைகளில் கதா பாத்திரங்கள் இல்லை.
2013ஆம் ஆண்டில் பந்தூக், ரிவால்வர் ராணி ஆகிய படங்களில் கங் கானா ராவுத் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த வராக நடித்துள்ளார். கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா படத்தில் ரன்வீர் சிங் பழங்குடியினத்தவராக நடித்துள்ளார்.
மும்பை திரையுலகிலி ருந்து வெளிவரக்கூடிய படங்களில் கதாபாத்தி ரங்களாக உயர்ஜாதியினர் மட்டுமே குறிப்பிடப் பட்டுவருகின்றனர்.
2013ஆம் ஆண்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 66 படங்களிலும் கதா பாத்திரங்களும் உயர்ஜாதி கதாபாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள் ளனர்.
கடந்த காலங்களில் மும்பையில்
கடந்த காலங்களில் மும்பை திரையுலகில் வெளியான படங்களில் முன்னணி பாத்திரங்களாக பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்தான் சித்தரிக்கப் பட்டு வந்தனர். 2010ஆம் ஆண்டில் வெளியான ஆக்ரோஷ், ராஜ்நீதி மற்றும் 2006ஆம் ஆண் டில் வெளியான ஓம்காரா ஆகிய படங்களில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராக கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், பல்வேறு ஜாதிகளிடையே ஏற்படுகின்ற பிரச்சி னைகளை உள்ளடக்கியதா கவே இருக்குமே தவிர வெறுமனே பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை மட டும் கொண்டுள்ள கதா பாத்திரங்களாக அவை இருக்காது.

மும்பை திரையுலகினரி டையே ஆண், பெண் இருபாலரிடத்திலும் பன்முகத்தன்மைகள் இல்லாமல் இருப்பதால், பெரும்பான்மையராக உள்ளவர்களில் 750 நடிகர் மற்றும் நடிகையரில் கடந்த பத்து ஆண்டுகளில் அய்ந்து படங்களுக்கும் மேலாக முசுலீம்களைத் தொடர்ந்து இந்துக்களில் உயர்ஜாதியினர் இருந்து வருகிறார்கள்.
ஆனால், தமிழ்த்திரை யுலகில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னணிக் கதாபாத்திரங் களாக இருந்து வருகிறார் கள். தென்னிந்தியாவில் உள்ள அனைத்துப் படங் களும் கணக்கில் கொள் ளப்படா விட்டாலும், 2013ஆம் ஆண்டில் வெளி யான முக்கியத்துவம்பெற்ற 16 படங்கள் பழைய படங் களின் பெயரையேக் கொண்டுள்ளன.

ஏழு படங்கள் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னணிக் கதாபாத்திரங் களாகக் கொண்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் பிர பலமான 10 படங்களில் குறைந்த பட்சம் ஒரு படமாவது (சென்னை) தாழ்த்தப்பட்ட வகுப்பி னரைச் சித்தரிக்கும் கதா பாத்திரமாக அமைக்கப் பட்டிருக்கிறது.

இதுகுறித்து கருத்துகளைக் கேட்கும் போது, பிரச்சினை ஏற் படுத்தக்கூடியது என்று பெரும்பாலான இயக்கு நர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/104160.html#ixzz3eTLedLbu

தமிழ் ஓவியா said...

ஆட்சியாளர்கள் வரலாற்று பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது : அப்துல் கலாம்



புதுடில்லி ஜூன் 29_ ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது என்று குடியரசு முன்னாள் தலை வர் அப்துல் கலாம் கூறி யுள்ளார்.

ஒளிமயமான எதிர் காலத்துக்கு அறிவியல் வழிகள்' என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள் ளார். அதில், விண்வெளி அறிவியல், ரோபாட் டிக்ஸ், மருத்துவம், புதைப் படிமவியல் ஆகிய துறை களில் உள்ள இளைஞர் களுக்கு அறிவுரை வழங் கும் வகையில் இந்தப் புத் தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் அவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெரும்பாலான வரலாற் றுப் பாடப் புத்தகங்கள் ஆட்சியாளர்களால் எழுதப்பட்டவை. அந்தப் புத்தகங்களை நேர்மை யுடன் அணுகி, ஆய்வு செய்ய வேண்டும். வர லாற்று ரீதியாக உண்மை யில் என்ன நடந்தது என் பதையும் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, முறையாக எழுதப்பட வேண்டும். அந்தப் புத்த கங்களை ஆட்சியதிகாரத் தில் இருப்பவர்கள் எழுதக் கூடாது. மாறாக, கல்வித் துறையில் சிறந்து விளங்கு பவர்கள் எழுத வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள தொகை அசாதாரணமானது; குறிப்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் பெருந் தொகை பதுங்கிக் கிடக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்தே தீருவோம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று அடேயப்பா மோடியும் அவரைச்சார்ந்த விற்பன்னப் புலிகளும் கொட்டி முழங்கிய சமாச்சாரத்தைக் கேட்டு கொட்டாவி விட்டுக் காத்துக் கொண்டு இருந்தனர் - இந்திய மக்களும், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இருக்கும் மக்கள் 30 சதவிகிதம் மக்களும். இரவு உணவுக்கு வழியின்றி வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கும் மக்கள் தொகை 19 கோடி.

நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருமானம் உடையோர் 77 விழுக்காடு  என்று புள்ளி விவரங்களை அள்ளி விடுவதும் இந்திய அரசுதான்.
இந்தச் சூழலில் வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டுதான் வருகிறார்களே தவிர நடைமுறையில் சுழியம்தான் இவ்வளவுக் கால அவகாசம் கொடுத்தால் பண முதலைகள் வாளா இருக்குமா?
அந்தக் கறுப்புப் பணத்தை அந்த வங்கிகளிலிருந்து எடுத்து வேறு ஏற்பாடுகளைச்  செய்துவிட மாட் டார்களா?
தேர்தலுக்கு முன்பு மோடி பேசிய பேச்சை இப்பொழுது மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.

'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று மோடி(போபாலில் 18 ஏப்ரல் 2014-அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது) பேசியது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் அருண் ஜேட்லி இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றிய உத்தேசங் களின் அடிப்படையில் ஓர் 'எடுத்துக்காட்டுக்கு' கூறியதே அந்த ரூ.15 லட்சம் விவகாரம்" என்றார். நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறிய போது, கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்று கூறியது பற்றி மாநிலங்களவையில்  கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ஜேட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துக் காட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது.

மேற்கூறிய இந்த அர்த்தத்தில்தான் பலரும் அதனைப் பயன்படுத்தினர். எனவே இதனை இந்தப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அருண் ஜேட்லி. இது எவ்வளவுப் பெரிய உண்மைக்கு மாறானது என்பது நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். பாஷ்ய கர்த்தாக்கள் இப்படித் தான் பேசுவார்கள்.
இவர்கள் வியாக்கியானம் மக்களைத் திருப்திப் படுத்தாத நிலையில், பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வேறு வழியின்றி ஓருண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

மோடி பேசியது உண்மைதான்; அது தேர்தல் நேரத்தில் அரசியலுக்காகச் சொல்லப்பட்டது என்று சொன்னாரே பார்க்கலாம். மக்களின் மறதிதான் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு மூலதனமாகும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதாமீது எப்படியெல்லாம் இந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்கள் குதியாட்டம் போட்டார்கள்; இப்பொழுது இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்கிற பாணியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் பிரச் சினையைத் திசை திருப்பிட யோகா போன்றவற்றைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆன கதைதான்.

இரயில்வே போன்ற பெரும் அரசுத் துறைகளே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குத்தான் போகப் போகின்றன. உண்மையிலேயே ஆட்சி நடத்துப வர்களும் அவர்களே!

தமிழ் ஓவியா said...

முதலில்...

மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டு மானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமே யாகும்.
(விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...

குடமுழுக்கு போர்வையில் நடராஜர் கோயிலில் பெரும் கொள்ளை

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. அந்த கோயில் தீட்சிதர்கள் பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை பற்றி முன்னாள் தமிழக அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வி.வி.சாமிநாதன் அவர்கள் தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் எழுதிய கடிதம் விவரம் வருமாறு:

சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் சங்கமும், சில தனிப்பட்ட தீட்சிதர் களும் தமிழ்நாடு அரசு அனுமதி யில்லாமல் இந்தியாவிலும், வெளிநாடு களிலும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய என்று பல நூறு கோடி ரூபாய் வசூலித்த தொகைக்கு அவர்களிடம் வரவு செலவு கணக்கு கேட்பதுடன் சட்ட விரோதமாக ஆன்றோர் சான்றோர் கொண்ட குழு எதையும் நியமிக்காமல் அரசு அறநிலையத்துறை சட்ட மரபுகளுக்கு விரோதமாக தில்லை தீட்சிதர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பவுன், வெள்ளிகளை வசூலித்தவர்கள் மீது அரசு பலதுறை அதிகாரிகள் மூலம் விசாரணை செய்து தண்டிக்கவும் நட வடிக்கை உடன் எடுக்கவும் வேண்டு மென்று மு ன்னாள் முதல்வர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அரசில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சராக இருந்த வரும் முன்னாள் சிதம்பரம் நகரசபைத் தலைவர் மற்றும் இரண்டு தடவை திமுக, அஇஅதிமுக எம்பியாக இருந்தவருமான வி.வி. சுவாமிநாதன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாள ருக்கு 23.6,2015 அன்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

100 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்ற முதல் இந்திய தலைமை நீதிபதி சர்.டி.முத்துசாமி அய்யர் மற்றும் நீதிபதி ஷெப்பர்டு அடங்கிய அமர்வு சிதம்பரம் நடராசரோ, கோயிலோ அதன் சொத்துக்களோ அங்கு அர்ச்சகராக பணிபுரியும் தில்லை தீட்சிதர்கள் யாருக்கும் சொந்தமில்லை என்று அளித்த அந்த தீர்ப்பை தெரிந்திருந்தும் அது ரத்து செய்யப்படாமல் அப்படியே இருக்கும் போது தில்லை தீட்சிதர்கள் அந்த தீர்ப்பை அவமதிப்பதுபோல் நடராசர் கோயிலுக்கு சொந்தக்காரர்கள் போல் உள்ளூரிலும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் குடமுழுக்கு செய்யப் போவதாக எக்கச் சக்கமான பணம், பவுன், வெள்ளி முதலிய வைகளை வசூலித்து அரசையும் மக் களையும் ஏமாற்றி அனுபவித்ததற்கு சட்டப்படி வரவு செலவு கணக்கு காட்ட வில்லை. சிதம்பரம் நடராசர் கோயில் தனியார் கோயில் அல்ல அனைத்து இந்தியாவிலுமுள்ள சைவர்களுக்கும் சொந்தமான அரசு பொது சொத்து தமிழ்நாடு எந்த முதலைச்சருக்கோ தலைமை செயலாளருக்கோ சொந்த மில்லாத நடராசர் கோயிலை தில்லை தீட்சிதர்களுக்கு யாரும் தானம் செய்ய முடியாது.

தமிழ் ஓவியா said...


கடுமையான குற்றச்சாட்டுகளுக் காளான தில்லை தீட்சிதர்கள் பிடியிலி ருந்து மதசார்பற்ற நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப் படி எடுத்த தீர்ப்பை தமிழ்நாடு தில்லை தீட்சிதர்களுக்கு சாதகமாக வாதாடத் தவறியதால் ரத்து செய்த உச்ச நீதிமன்றம் கூட சிதம்பரம் நடராசர் கோயில் தில்லை தீட்சிதர்களுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அறிவிக்காதபோது கோயில் நிர்வாகத்தை அரசு எடுக்காதபோது கூட எம்.ஜி.ஆர் முதல்வராகவும் வி.வி.சுவாமிநான் அற நிலையத்துறை அமைச்சராகவும் இருந்த போது குடமுழுக்கு நடத்த குழு நியமிக் கப்பட்டதும் நன்கொடை வசூல் செய்ய அரசு அனுமதி பெற்றதையும் தில்லை தீட் சிதர்களும் தமிழ்நாடு அரசும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அரசு நிர்வாகத்தில் இருந்தபோது நடராசர் கோயிலுக்குள் அரசு வைத்த உண்டியல்களில் இருந்த பணம் பவுன், வெள்ளி அயல்நாட்டு நாணயங்கள் அனைத்தையும் மூடநம்பிக்கையும் தில்லை தீட்சிதர்கள் பால் தீராத பாசமும் உள்ள தமிழ்நாடு அரசு வி.வி.சுவாமி நாதன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் தில்லை தீட்சிதர்களுக்கு கொடுத்ததே மிகத்தவறு சிதம்பரம் நடராசர் கோயிலை தமிழ்நாடு அரசு எடுத்தது செல்லாது என தத்து அய்யங்கார் அவர்கள் உச்ச நீதிமன்றம் அளித்த தவறான தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டு மென்று மேற்படி வழக்கில் பிரதிவாதி களாக உள்ள சிவனடியார் ஆறு முகசாமியும் ஆகம நிபுணரும் ஓய்வு பெற்ற அரசு உயர் பொறியாளருமான சக்திவேல் முருகனாரும் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்திருக்கும்போது அந்த செய்தியை தமிழக முதல்வருக் கும், தலைமைச் செயலாளருக்கும் வி.வி.சுவாமிநாதன் தெரிவித்த பிறகும் தில்லை தீட்சிதர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு இருந்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். நடராசர் கோயிலுக்குள் இருந்த வரலாற்று சோழப் பேரரசன் கட்டிய வெற்றி நினைவுச்சின்னம் கலைபொக்கிஷம் பாண்டியநாயகம் கோயிலை இடித்த சில தீட்சிதர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்த குற்றம் இன்னும் நிலுவையில் உள்ளது.

எனவே சட்டப்படி நடராசர் கோயி லுக்குள் அரசு வைத்த உண்டியல்களில் இருந்த பணம் மற்றும் சொத்துக்கள் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட் டதும் குடமுழுக்கு என்ற பெயரில் சட்ட விரோதமாக உள்நாட்டிலும், வெளிநாட் டிலும் தில்லை தீட்சிதர்களால் வசூலிக் கப்பட்ட பணம் பவுன் வெள்ளி முதலிய சொத்துக்களின் வரவு - செலவு கணக் குக்கும் நன்கொடைக்கும் செலவுக்கும் அச்சடித்த வரவுச்சீட்டுடன் மீதமுள்ள பணம் முதலியவைகளை ஒப்படைக்க தில்லை தீட்சிதர்கள் பொது சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தில்லை தீட்சிதர்கள்மீது அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்

குடந்தை கருணா


ஆண்டு தோறும் உலக அளவில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவருக்கு 20,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங் கிடவும், வெளியுறவு அமைச்சகத்தில் சமஸ்கிருதத்திற்கு என தனியாக ஒரு இணை செயலாளர் நியமனம் செய்வதாகவும், பாங்காக் நகரில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்தார்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும்போது, சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்மையார்தான், பகவத் கீதை தேசிய நூல் என அரசு அறி விக்க இருக்கிறது என்பதை டில்லி யில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியவர். தற்போது, அரசால் குற்ற வாளி என அறிவிக்கப்பட்ட அய்.பி. எல். சூதாட்ட நாயகன் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் விசா வழங்கியதாகக் கூறு வதும்  இந்த சுஸ்மா சுவராஜ் தான்.

தமிழ் ஓவியா said...

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின்
சத்துக்களும், மருத்துவ குணங்களும்




தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.

கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.

புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.

வெண்டைக்காய்: மூளை  வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன. அவரைக்காய்: நார், புரதச்சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கலை நீக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்கு  ஆண்மையை அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.

சுண்டைக்காய்: வைட்டமின் ஏ, புரதம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு  வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக்கிழங்கு:  கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டால், உடல்  வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும்,  கட்டுப்படுத்தவும் செய்கிறது.

வாழைத்தண்டு: பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. சிறுநீர் பாதையில் கல் அடைப்பை கரைக்க உதவும்.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார், இரும்புச்சத்துகள் உள்ளன. வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

பீட்ரூட்: சோடியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. உடலை வலுப்படுத்தும்.

உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

காரட்: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பார்வை கோளாறை கட்டுப்படுத்தும். ரத்த விருத்தி தரும்.

மரவள்ளிக்கிழங்கு: உடலுக்கு குளிர்ச்சி தரும். பனங்கிழங்கு: புரதச்சத்து அதிகமுடையது. மலச்சிக்கலை போக்கி பசியை அதிகரிக்கும்.

இப்படி பலப்பல சத்துக்கள் காய்கறிகளில் குவிந்து கிடக்கின்றன. எனவே, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில், பூச்சிக்கொல்லி மருந்து அதிகமின்றி உருவாகும் இந்த காய்கறிகள் உடலுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...

அனைவருக்கும் உகந்த வெங்காயம்...!

ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி பழங்கஞ்சி குடிக்கிற ஏழ்மை. பர்கரிலும் வெங்காயம் சுவைக்கிற வளமை... இப்படி வெங்காயம் ஒரு பொதுமை காட்டி நிற்கிறது. இது ஒரு பழமையான மூலிகைப்பயிர்.  6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.

வெங்காய காரத்திற்கு அலைல் புரோப்பைல் டை சல்பைடு வேதிப்பொருளே காரணமாம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழவைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. மரத்தில் தொங்கும் தேன் ராட்டு எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம்.

இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது.

தவறுக்கு தண்டனையாய் கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதய சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது.

பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.

தமிழ் ஓவியா said...

வாத நோய் போக்கும் நன்னாரி



அங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால்  அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது.  நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மணத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை  என்று கூறலாம்.

அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள்  கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே  வளரும் பாலுள்ள கொடி இனம்.

நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும்  மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில  ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும்.

இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250  மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான  குணம் ஏற்படும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும்  குடிக்கலாம்.

நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை  மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.

நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து  வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கெண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம்  தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும்.

நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலமாக கட்டி அதை  கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து  அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

தமிழ் ஓவியா said...

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்



மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தோ அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம்பழத்தில் அதிக பட்சமாக நீர்சத்து 78 விழுக்காடு உள்ளது. மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.

மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறை பாடுகளை அகற்றும்.

இது தவிர, காதடைப்பு, வெப்பக்காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழரசம் விலக்கும். மாதுளம் பழரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.

அன்றாடம் பாதி மாதுளம்பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும், மாதுளம் பழச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். இது தவிர,

மேலே குறிப்பிட்டது போல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொடர்ந்து ஏற்படும் விக்கல் உடனே நிற்கும். ஏதேனும் காரணத்தினால் நீர் அருந்தாமலே,

டலில் நீர்த் தன்மை குறைந்த அதிக தாகம் எடுக்கும் போதே மாதுளம்பழம் சாப்பிட்டால் உடனடியாக தாகம் தணியும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

தமிழ் ஓவியா said...

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம் சுஷ்மா ஸ்வராஜ்


பாங்காக், ஜூன் 30_- சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டு மெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது உலக சமஸ்கிருத மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த சமஸ் கிருத நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது மக்களிடம் சமஸ்கிருத மொழி பேசுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த மொழி மக்களின் மனதை துய்மைப்படுத் துவதுடன் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாஸ்திரங் களுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் முயற்சி எடுக்கி றோம் என்றும் அமைச்சர் சுஷ்மா தனது உரையில் தெரிவித்தார். அவர் இந்த மாநாட்டில் சமஸ்கிருத மொழியிலேயே பேசியது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்

காந்திநகர், ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் வருகிற 2016-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாண வர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆர் எஸ்எஸ்-சின் யோகா திட்டத்தை, குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவ ர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழு வதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப் பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி களில் யோகா பாடத்தை நடத்த குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படு கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடு முறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப் படும். அது மட்டுமல்லா மல் யோகாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாண வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோகா பாடத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச் சூழல் சுகாதார விழிப் புணர்வு, மரம் நடுதல், காடுகள் அவசியம் குறித் தவைகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம் பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கை விட்டது. ஏற்கெனவே குஜராத்தில் கல்வியை காவிமயமாக்கும் விதத்தில் பல்வேறு பாடத் திட்டங் கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கது

தமிழ் ஓவியா said...

பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் - காவல்துறை விசாரணை

கான்பூர், ஜூன் 30_ உத்தரபிரதேசம் மாநிலத் தில் பாரதீய ஜனதா தலைவர் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் தொண்டர் புகார் கொடுத்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனுப் திவாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள் ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20ஆ-ம் தேதி பெண் தொண்டரை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றிச்சென்ற, திவாரி காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக கட்சியின் அப்பகுதி தலைவர்களிடம் பாதிக்கப் பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்சியின் அலுவலகத்திற்கு மறுநாள் வந்த திவாரி தனது உதவியாளர்கள் நான்கு பேருடன் புகார் அளித்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளனர். அவருடைய ஆடைகளை களைவதற் கும் முயற்சி செய்துள் ளனர் என்று காவல்துறை யில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சம் பவம் தொடர்பாக கட் சியின் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களிட மும், மாநில தலைவர்களி டமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதிக் கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அனுகி உள் ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியின் உத்தரவின்பேரில், பெண் ணின் புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/104219.html#ixzz3eYRa2RGf

தமிழ் ஓவியா said...

கவலை ஏன்?

மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?
_ (குடிஅரசு, 16.11.1946)

தமிழ் ஓவியா said...

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும் திராவிடர

கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்



சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்

திராவிடர் கழக வழக் குரைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சென்னை, பெரியார் திடலில் 21.6.2015 அன்று காலை 10.30 மணி யளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவி டர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் கலந்து கொண்டவர் களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வரு மாறு:_

கி.வீரமணி, ஜெ.துரை சாமி, கரூர் இராசசேகரன், மு.சென்னியப்பன், ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண் டியன், ம.வீ.அருள்மொழி, ந.இளங்கோ, த.வீரசேக ரன், சின்னம்பேடு எஸ். கண்ணன், செஞ்சி விவே கானந்தன், ஜெ.தம்பிபிர பாகரன், வி.பெரியசாமி, எஸ்.பி.சக்திவேல், எஸ்.குமாரதேவன், இராம ராஜன், அ.அருள்மொழி, பீ.இரமேஷ், இரா.சர வணகுமார், மு.இராசா

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தற்போதைய சூழ் நிலையில் சட்டக்கல்வி யின் அவசியம் அதிகரித்து வருவதாகவும், தற்போ தைய சட்டக்கல்வி தர மானதாகவும், போது மானதாகவும் இல்லாத தால் பெரியார்- _ மணி யம்மை பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக்கழகத்தையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2) அண்மைக்காலத் தில் திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி தராமலும், போதிய கார ணமின்றி அனுமதி மறுப் பதும், சட்டவிரோதமான வகையில் கூட்டத்தில் பேச வேண்டிய கருத்து களுக்கு தடைவிதிப்பதும், காவல் துறையின் வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த சட்ட விரோத போக்கினை தடுப்பதற்கு அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழக சட்டத் துறை அமைக்க, சட்ட ஆலோசனைக் குழுவிடம் அணுக வேண்டுமென்று மேற்படி சட்ட ஆலோ சனைக்குழு தமிழகம் எங்கும் ஒரே சீரான அணுகுமுறையை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட் டுக்கொள்கிறது. இப்பிரச் சினை சட்ட ரீதியாக அணுகப்படும்.



3) திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக விரைவில் மாவட்டம் தோறும் முக்கியமான சட்டப்பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

4) ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் குடிமக் களை அடக்கி ஒடுக்குவ தற்காக ஏற்படுத்தப்பட்ட பல காலாவதியான சட் டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும், அரசியல் சட்டம் அங் கீகரிக்கும் கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் திருத் தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று மத் திய _ மாநில அரசைக் இக் கூட்டம் கேட்டுக்கொள் கிறது.

5) விரைவில் திராவி டர் கழக வழக்குரைஞரணி மண்டல, மாவட்ட நிர் வாகிகள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர் மானிக்கப்படுகிறது.

திராவிடர் கழக வழக் குரைஞரணி மதுரை மண் டல மாவட்ட நிர்வாகிகள்  நியமனம்

தராவிடர் கழக சட் டத்துறை செயலர் ச. இன் பலாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படட தராவிடர் கழக வழக்கு ரைஞரணி அமைப்புக் கூட்டம் 27.10.2014 மதுரையில் தராவிடர் கழக வழக்குரைஞரணி துணைத்தவைர் பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட நர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

மதுரை மண்டலம்

தலைவர்: கோ. சுப்பிர மணியன் பி.ஏ. பி.எல்., வழக் குரைஞர், தண்டுக்கல். செயலர்: -மு. சத்தார்த் தன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை.

மதுரை மாவட்டம்

தலைவர்: கே. பொன் னையா, எம்.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை, செயலர்: சோ. தியாக ராசன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதி மன்றம், மதுரை,

தண்டுககல் மாவட்டம்

தலைவர்: சுப. ஜெக நாதன், பி.ஏ., பி.எல்., வழக குரைஞர், திண்டுக்கல்
செயலர்:- சாக்ரடீஸ், பி.ஏ., பி.எல்., வழக்கு ரைஞர், திண்டுக்கல்.

விருதுநகர் மாவட்டம்

அமைப்பாளர் - பகர தன் பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், திருவில்லிபுத் தூர்
தேனி மாவட்டம்

அமைப்பாளர்: - சின்ன முத்து பி.ஏ., ப.எல்., வழக் குரைஞர், பெரியகுளம்.