Search This Blog

25.2.14

பக்தி - ஒழுக்கம்

பக்தி - ஒழுக்கம்

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?
ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

--------------------------------தந்தை பெரியார், 24.11.1964 பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

10 comments:

தமிழ் ஓவியா said...


இழிநிலை



உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75947.html#ixzz2uOIWuKqX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -3


- குடந்தை கருணா

சென்ற ஆண்டு 2013 ஜூன் மாதத் தில், கேதார்நாத்தில் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டு, சுற்றுலா சென்ற பல்லாயிரணக்கான மக்கள் இறக் கவும், பலர் மீள முடியாமல் தவிக்க வுமான நிலை ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், (தமிழ்நாடு உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுத்தன.

ஆனால் குஜராத் மாநில அரசு சார்பில், அதன் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக அங்கே சென்று ஏறத்தாழ 15000 குஜராத் மக்களை இரண்டொரு நாள்களில் விரைந்து காப் பாற்றினார் என செய்தி பரப்பினர், மோடி புகழ் பாட, பல கோடிக் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்கோ ஏஜென்சி (கிஜீநீஷீ கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ) கஜகஸ்தான் சர்வாதிகாரிக்கும், அமெ ரிக்கப் புகையிலை அதிபர்களுக்கும் சேவை செய்யும் அமெரிக்க நிறுவன மான இந்த அப்கோ ஏஜென்சிதான், மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையும் மனதில் கொள்க. மற்ற மாநிலங்கள் பத்து நாட் களுக்கு மேல் போராடியும் வெள் ளத்தில் சிக்கித் தவித்த 40000 மக்களை காப்பாற்ற முடியாமல் திணறின, கேதார்நாத்பகுதி முழுவதும் வெள் ளத்தின் காரணமாக சாலைகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மோடியால் 15000 மக்களை எப்படி காப்பாற்ற முடிந்தது? மோடி இந்த சூப்பர் மேன் செயலுக்கு 80 இன்னோவா கார்களை பணியில் அமர்த்தி இரண்டு நாள் களில் 15000 பேரை காப்பாற்றினார் என கதை அளந்தது அப்கோ நிறுவனம்.

கேதார்நாத் பகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள டேகராடூன் என்ற ஊருக்கு சென்றால் தான் அங்கிருந்து ரயில் அல்லது விமானம் மூலம் புதுடில்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்ல முடியும். கேதார் நாத்திற்கும் டேகராடூனுக்கும் உள்ள தூரம் 221 கி.மீ. மலைப் பகுதி என்பதாலும், வெள்ளத்தால் சாலை கள் பாதிக்கப்பட்டதாலூம், 40 கி.மீ. வேகத்தில் செல்வதே கடினம். ஒரு முறை செல்ல 6 மணி நேரம் ஆகும். திரும்ப வர 6 மணி நேரம் ஆகும். 24 மணி நேரத்தில், காரை நிறுத்தாமல் சென்றால், இரு முறை தான் செல்ல முடியும். மோடி ஏற்பாடு செய்திருந்த 80 இன்னோவா கார்களும் ஒரு பயணத் திற்கு 720 மக்களை ஏற்றிச் செல்ல முடியும். 15000 மக்களை அழைத்து செல்ல 21 முறை செல்ல வேண்டும். ஆனால், 15000 மக்களை இரண்டு நாட்களுக்குள்ளாக 80 இன்னோவா கார்களில் ஏற்றிச் சென்று மோடி காப்பாற்றினார் என மோடி ஏற்பாடு செய்திருந்த அப்கோ நிறுவனம் மூலம் செய்தி பரப்புகிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மோடி புளுகு. அப்பட்டமான மோசடிப் புளுகு.

Read more: http://viduthalai.in/page-2/75955.html#ixzz2uOIef3IZ

தமிழ் ஓவியா said...


ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேரை விடுவிக்க தடை கோரி மத்திய அரசு வழக்காம்!



புதுடில்லி, பிப்.25-ராஜீவ் கொலை வழக்கில், 3 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை பெற்ற மத்திய அரசு, மேலும் 4 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மனு தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, இந்த சீராய்வு மனுவில் குற்றவாளிகள் 7 பேரின் பெயர் களும் இடம்பெற்றுள்ளன. முக்கியத் துவம் கருதி இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக் கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் தங்களது கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டு கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மூன்று பேரின் தூக்கு தண் டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி யானதும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மேலும் 4 பேரையும் சேர்த்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த 19ஆம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் சட்டப்பேரவையில் அறி வித்தார். கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தடை விதித்து கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப் பித்தது. கைதிகளை விடுதலை செய்வதில் சட்ட நடைமுறைகளை தமிழக அரசு கடைப்பிடிக்க வில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. தமிழக அரசு சார்பில் அப்போது ஆஜரான மூத்த வழக் குரைஞர் ராகேஷ் திவேதி, மத்திய அரசின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு இறுதி யான முடிவை எடுக்கவில்லை. எனவே தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நான்கு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டபோது, இதற்கு புதிய மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந் தது. அதன்படி, புதிய சீராய்வு மனுவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பியாஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகிய நான்கு பேரை விடுதலை செய்ய தடை கோருகிறது மத்திய அரசு.

Read more: http://viduthalai.in/page-2/75950.html#ixzz2uOImqvs5

தமிழ் ஓவியா said...

ஏமாற்று வேலை!

எப்பொழுதாவது எங் கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குற்றங்களோ இருந்தால் அதற் காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்!

மன்னிப்புக் கேட்க வேண்டியவர் மோடி யல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTtoRCiF

தமிழ் ஓவியா said...


எது குற்றம்?


குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ--மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும்.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/75985.html#ixzz2uTug0YrX

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடமா?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பட் டயப் படிப்புப் (Diploma) பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஓராண்டு படித்தால் பட்டயம் கொடுத்து விடுவார்களாம். சமயம் என்னும் சூளையில் தமிழ்நட்டால் முளையாது என்றார் புரட்சிக்கவிஞர். அதுதான் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது. பாரதியார்கூட வானநூல் பயில் சோதிடம்தனை இகழ் என்று பாடியிருக்கிறார்.

சோதிடம் அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டாலொழிய அதனைப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிப்பது அடிமுட் டாள்தனம் மட்டுமல்ல - மாணவர்களைப் பழிவாங்குவதும் ஆகும்.

வானியல் (Astronomy) என்பது வேறு; சோதிடம் (Astrology) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. பூமி சுற்றுகிறது என்று சொன்ன புரூனோவை சித்திரவதை செய்தவர்களின் வாரிசுகள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் குடிபுகுந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் கற்பிக்கப் படுகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன், திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. திராவிடர் கழகத்திற்கான வேலையை தஞ்சை - தமிழ்ப் பல்கலைக் கழகம் கொடுத்திருக்கிறது என்றே நினைக்கவேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது.
இங்கு என்னடா என்றால், ஒரு பல்கலைக் கழகமே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்தினைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, குப்பைகளைக் கொண்டு வந்து நடு வீட்டில் குடியமர்த்தம் செய்கிறது.

தஞ்சைப் பல்கலைக் கழகக் கல்வியாளர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். சோதிடத்தில் சூரியன் என்பது கோள் என்றுதானே குறிப்பிடப்படுகிறது. உண்மையிலேயே அறிவியல் கணிப்புப்படி சூரியன் நட்சத்திரம் அல்லவா! அடிப்படையே ஆட்டம் காணும்போது அதன்மீது சோதிடம் என்ற மூடத்தனத்தின் கட்டடத்தை எழுப்பப் போகிறார்களா?

சோதிடத்தில் ராகு, கேது என்று இரு கோள்கள் சொல்லப்படுகின்றனவே - அப்படி ஏதாவது கோள்கள் உண்டா? எந்த வானியல் அறிஞர் ராகு, கேது என்ற இரு கோள்கள் உண்டு என்று கூறியிருக்கிறார்?

இன்னும் ஒரு நகைச்சுவை உண்டு; பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கிரகத்தின் பட்டியலில் இடம் கொடுத்து வைத்துள்ள சோதிடர்கள், மூலக்கிரகமான பூமிக்கு இடம் அளிக்கவில்லையே - இதை என்னவென்று சொல்வது!

பூமியின் துணைக் கிரகமான சந்திரனை சோதிடப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்களே, அதன்படிப் பார்த் தால், சனிக்கிரகத்துக்கு 17 துணைக் கிரகங்கள் உண்டே! சோதிடத்தில் இவற்றிற்கு எந்தப் பலனையும் வைத்திருக்க வில்லையே. இந்தக் கிரகங்களுக்கெல்லாம் துணைக் கோள்கள் உண்டு என்று தெரியாத காரணத்தால் அதற் கெல்லாம் பலனைக் கிறுக்காமல் விட்டார்களோ!

விலா நொறுங்கச் சிரித்திட இன்னும் பல தகவல்கள் உண்டு. விண்ணில் 25 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளதாக வானியல் ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்தச் சோதிடர்கள் வெறும் 27 நட்சத்திரங்களுக்குள் சோதிடத்தின் கதையை முடித்துக்கொண்டு விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே கூரையில் பதித்து வைக்கப்பட்டதாக நினைப்பதால்தான் கிரகங்கள் அங்குப் போய்த் தங்குவதாக நினைக்கிறார்கள். ஒரு நட்சத்திரத் திற்கும், இன்னொரு நட்சத்திரத்திற்கும் கோடிக்கணக்கான மைல்கள் இடைவெளியுண்டே!

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலை வில் இருக்கின்றன. ஆனால், நம் கண்களுக்கு அவை எல்லாம் ஓரிடத்தில் திரண்டு இருப்பதுபோலத் தோன்றும். வெவ்வேறு இடங்களில் முளைத்திருக்கும் மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது கூட்டமாகத் திரண்டு காணப்படுவதை இங்கு நினைத்துக் கொள்ளலாம் என்பார் வானியல் ஆய்வாளர் பேராசிரியர் கொண்டல் சு.மகாதேவன் அவர்கள்.

பொதுவாக கிரகங்கள் என்பவைகளுக்கு ஈர்ப்பு சக்தி உண்டே தவிர, மற்றபடி அவைகளுக்கென்று எந்தவிதத் தனிக்குணமோ, ஆற்றலோ கிடையாது. அந்த ஈர்ப்புக்கூட குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் உண்டே தவிர, அதற்கு மேல் கிடையாது. இந்த நிலையில், 9 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் புதனோ, 4 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வெள்ளியோ, 7 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் செவ் வாயோ 272 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தி லிருக்கும் யுரேனசோ, 435 கோடியே 30 லட்சம் தொலை வில் இருக்கும் நெப்டியூனோ பூமிக் கிரகவாசிகளை என்ன செய்யும்?

இன்னும் நவக் கிரகங்களுக்குத்தான் சோதிடம் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே தவிர, விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்து அறிவித்துள்ள யுரேனஸ், நெப்டியூனுக்கு சோதிடத்தில் பலன்கள் கிடையாதே!

புராணங்களைத் தவிர தமிழில் என்ன இருக்கிறது - அது அறிவியல் வளர்ச்சி பெற தமிழ்ப் புலவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கோபத்துடன் கேட்டதுண்டு.

அந்தக் கோபத்துக்குத் தாராளமாக நியாயம் உண்டு என்பதற்கு மற்றுமொரு அடையாளம்தான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புராணப் புளுகு மூட்டையான சோதி டத்தை சொல்லிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருப்பது.

கொஞ்சநஞ்சம் மதிப்பு விஞ்சி நிற்கவேண்டுமானால், தமிழ்ப் பல்கலைக் கழகம் சோதிடப் பாடத்தைப் பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கிடவேண்டும்; இல்லை யெனில், இது மக்கள் பிரச்சினையாக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்.

Read more: http://viduthalai.in/page-2/75986.html#ixzz2uTuouVeX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -4


- குடந்தை கருணா

அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.

இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.

தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான், விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/75991.html#ixzz2uTv5PkME

தமிழ் ஓவியா said...


உண்டியலில் காணிக்கை ஏன்? வருமான வரிகட்டுவது நல்லது: கமல்



சென்னை, பிப்.26-வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாள் கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக- புதுவை மாநில வருமான வரித் துறை முதன்மை ஆணையர், ரவி தலைமை தாங்கினர். இயக்குநர் ஜென ரல் ஜெய்சங்கர், முதன்மை ஆணையர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,

கடவுளுக்கு, உண்டிய லில் காணிக்கை செலுத்து வதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்க ளுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மை யாக வரி செலுத்தி வருகி றேன். சிலர், வரிகட்டும் போது மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.

வரியினால், நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்க ளால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால், வரி யின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/76024.html#ixzz2uTvUUyKA

தமிழ் ஓவியா said...


குஜராத் மதுவிலக்கின் லட்சணம் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரன்

அகமதாபாத், பிப். 26- குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சுனாராவாட் பகுதியில் திங்கள் அன்று இரவு குடிக்கப் பணம் தராத மனைவியை உயிருடன் எரித் துக் கொலை செய்தான். சுனாராவாட் பகுதியைச் சேர்ந்த அமித் வசானி, இவ ரது மனைவி பூனம், இவர் களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள அமித் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண் டையிடுவார். கடந்த ஞாயிறு மாலை தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இரவு முழுவதும் சண்டையிட்ட அமித், திங்கள் கிழமையன்று காலை, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மீது, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு இருந்தவரை அரு கில் உள்ள உறவினர்கள் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். பூனம் தனது மரண வாக் குமூலத்தில் கூறியிருப்பதா வது நீண்ட காலமாகவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட் டிற்கு வந்து துன்புறுத்துவார். வேலைக்குச் செல்வதும் கிடை யாது நான் அவ்வப்போது கூலிவேலைக்குச்சென்று கொண்டுவரும் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டு குடித் துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை இல்லா ததால் என்னிடம் பணம் இல்லை, இந்த நிலையில் மாலை என்னிடம் வந்து குடிக்க பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறியும் கேட்காமல் என்னை அடித்து துன்புறுத்தினார். பிறகு வெளியே சென்று விட்டார். திங்கள் கிழமை காலை வீட் டிற்கு வந்தவர் திடீரென மண்ணெண்ணெய் பாத்தி ரத்தை எடுத்து என்மீது வீசி னார், என் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது.

உடனே தீக்குச்சியை பற்றவைத்து என்மீது வீசி விட்டு ஓடிவிட்டார், தீப்பற்றி யதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதற்குள் என்மீதிருந்த ஆடைமீது பற்றிக்கொண்டு என் உடல் முழுவதும் தீ பர வியது. அதற்குள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என் அலறல் ஒலி கேட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். என்று காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/76027.html#ixzz2uTvcWTMA