Search This Blog

7.2.14

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல்-பார்ப்பனர்களின் சூழ்ச்சி - எச்சரிக்கை!


இடஒதுக்கீடு சமூக நீதி என்ற பயணத்தில் அடிக்கடி முட்டுக்கட்டைகள் போடக் கூடிய பார்ப்பனர்கள் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறார்கள். பார்ப்பனர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் சமூகநீதிப் பிரச்சினை என்று வந்தால் சுருதி பேதம் இல்லாமல் ஒரே குரலில் வாசிப்பதை அறியலாம்.

எடுத்துக்காட்டாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான ஜனார்த்தன திவேதி என்பவர் தெரிவித்த கருத்து பெரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

இடஒதுக்கீடு ஜாதியின் அடிப்படையில் இருக்கக் கூடாது; பொருளாதார அடிப்படையில் தான் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து விடுதலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்று திட்டவட்டமாகவே குறிப்பிட்டுள்ளார்.

திவேதி என்றாலே இரு வேதங்களைத் தெரிந்தவர்கள் என்று பொருள். அதனால்தான் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் புகுந்து குறுக்குச்சால் ஒட்டியுள்ளார்.

திவேதி சொன்ன கருத்து காங்கிரஸ் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ள கருத்துக்கு விரோதமாகும். திவேதிக்கு இதுகுறித்து ஏதாவது கருத்து இருக்குமே யானால், அதனைக் கட்சிக்குள் எடுத்துரைக்க வேண்டுமே தவிர, பொது இடத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தக் கூடாது; மேலும் இதில் காங்கிரசின் துணைத் தலைவர் இராகுல் காந்தியின் பெயரையும் சம்பந்தப்படுத்தியுள்ளது சரியானதுதானா? நியாயமாக இப்படி அவர் பேசியதற்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கக் கூடியவர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு விரோதமாகப் பேசலாமா?

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி திவேதியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா திவேதி சொன்ன கருத்து -அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர காங்கிரசின் கருத்தல்ல என்று கூறியிருப்பது  வரவேற்கத்தக்கதாகும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திவேதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது மேலும் வரவேற்கத்தக்கது.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எப்படியும் திணித்தே தீர வேண்டும் என்பதிலே பார்ப்பனர்கள் தொடக்க முதலே துடிதுடித்துக் கொண்டுதான் இருந்தனர். மண்டல் குழுத் தொடர்பான வழக்கில், அப்பொழுது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் ஆட்சியில் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு என்ற ஒரு அம்சத்தைச் சேர்த்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பில் திட்டவட்டமாகவே தெரிவித்து விட்டது உச்சநீதிமன்றம். 

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்று ஒன்றைத் திணித்தார் ஆண்டு வருமானம் 9000 ரூபாய் வருமானம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் அந்த ஆணை (தமிழ்நாடு அரசு ஆணை எண் 115 சமூக நலத்துறை நாள் (2.7.1979).

தளகர்த்தராக இருந்து திராவிடர் கழகம் போர்க் கொடியை உயர்த்தியது. அனைத்துக் கட்சிகளையும், சமூக நீதிக்கு ஆதரவான அமைப்புகளையும் ஒன்றிணைத்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. பெரும் தோல்வியைத் தழுவியது. 39 இடங்களில் 37 இடங்களில் முதல் தோல்வியைச் சந்தித்தது.
அந்த அடியைப் பலமாக வாங்கியதால்தான் எம்.ஜி.ஆர். உடனடியாக பொருளாதார அளவுகோலைப் பின் வாங்கி,  பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார் என்பதுதான் வரலாறாகும்.

பிற்படுத்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை மத்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு என்பது 1992ஆம் ஆண்டுக்குப் பிறகுதானே? அதற்குள் எந்த அடிப்படை யில் இந்தக் குளறுபடிகளை எல்லாம் செய்ய முன் வருகிறார்கள்?
இந்த நாட்டில் கல்வி வாய்ப்பு நீண்ட காலமாக மறுக்கப்பட்டது - எந்த அடிப்படையில்? ஜாதி அடிப் படையில்தானே? எந்த ஜாதி கல்வி வாய்ப்புக்கு தடை விதித்ததோ - அந்த ஜாதியையே மருந்தாக்கி முன்னேற்றம் அடையச் செய்வதுதான் இடஒதுக்கீடு என்பது.

அம்மை நோய்க்கான கிருமிகளைக் கொண்டே தடுப்பூசியை உருவாக்கவில்லையா?

தடையாக இருந்ததையே ஏணியாக்கி மேலே ஏறுவதுதான் இந்த இடஒதுக்கீடு.
பொருளாதார அளவுகோல் என்று வந்தால் யாசகம், புருஷ லட்சணம்  என்று கூறும்! பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து விடுவார்கள். பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடக் கூடாது, எச்சரிக்கை!

                    ---------------------------”விடுதலை” தலையங்கம் 6-2-2014
Read more: http://viduthalai.in/page1/74784.html#ixzz2sdGcg61U

38 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

தமிழை - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக அறிவித்திடுக!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

பெரியார் உலகத்திற்கான நிதி வசூலை விரைந்து முடித்திடுக!
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர் மீன்பிடி உரிமையை மீட்டுத் தருக!


சென்னை பிப்.6- சென்னை உயர்நீதிமன்றத் தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத் தும் உரிமை, கச்சத் தீவுப் பகுதிகளில் தமிழக மீன வர்களின் மீன்பிடி உரி மைக்கு உத்தரவாதம் உள் ளிட்ட முக்கிய தீர்மானங் கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

திராவிடர் கழகத் தலை மைச் செயற்குழுக்கூட் டம் சென்னை பெரியார் திடல் துரை. சக்ரவர்த்தி நினைவகத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1) இரங்கல் தீர்மானம்:

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் (வயது 75 - மறைவு 30.12.2013) திராவி டர் கழகப் பேச்சாளர், எழுத்தாளர் திருவாரூர் கே. தங்கராசு (வயது 89 - மறைவு 5.1.2014) கவிஞர் தஞ்சை வாணன் (30.1.2014) கடலூர் மண்டல திராவி டர் கழகத் தலைவர் - பெரியார் பெருந்தொண் டர் புதுவை வ.சு. சம்பந் தம் (வயது 79) மறைவு 16.12.2013) நீலகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கோவிந்தராசு (வயது 83 - மறைவு 26.12.2013) சிவகங்கை சுயமரியாதை இயக்க வீராங்கனை இராமலக் குமி சண்முகநாதன் (வயது 89 - மறைவு 2.1.2014) ஆகி யோரின் மறைவிற்கு இக்கூட்டம் இரங்கலைத் தெரிவிப்பதுடன் இவர் களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2

இடைநிலை ஆசிரியர் கள் பட்டதாரி ஆசிரியர் களின் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் களுக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்படாமல், தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத் தப்பட்ட தேர்வு முறையை எதிர்த்து சமூகநீதியில் அக் கறையுள்ள தலைவர்களை யும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, திரா விடர் கழகம் தொடர்ந்து போராடியதன் விளைவாக தமிழ்நாடு அரசு அனை வருக்கும் ஒட்டு மொத்த மாக தகுதி மதிப்பெண் 60 என்ற நிலையிலிருந்து சற்றே கீழே இறங்கி வந்து, இடஒதுக்கீடுப் பிரிவி னரக்கு 55 சதவீத மதிப் பெண்களை அறிவித்தது வரவேற்கத் தகுந்தது என் றாலும் பிற்படுத்தப்பட் டோருக்கும் தாழ்த்தப்பட் டோருக்கும் 55 சதவீத மதிப்பெண் என்று ஒரே அளவுகோலை நிர்ண யித்து இருப்பது தமிழ் நாடு அரசு இதுவரை (தொழிற் கல்லூரிகள் சேர்க்கையில் உட்பட) பின்பற்றி வரும் சமூக நீதிக் கண்ணோட்டத்துக்கு விரோதமானது என்பதைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆந்திர மாநிலத்தில் பின்பற்றப் பட்டுள்ள பொதுத் தொகு திக்கு 60%, பிற்படுத்தப் பட்டோருக்கு 50%, தாழ்த்தப்பட்டோருக்கு 40% மதிப்பெண் என்ற அளவுகோலைப் பின் பற்றி புதிய ஆணையைப் பிடிப்பிக்குமாறு தமிழ் நாடு அரசை இச்செயற் குழு வலியுறுத்துகிறது.

தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட் டேஜ் கொடுக்கும் முறை யையும் கை விடுமாறு இச்செயற்குழு வலியுறுத் துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண்: 3

அ) சேது சமுத்திரத் திட்டம் என்பது திராவிட இயக்கத்தில் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டமா கும் - அறிஞர் அண்ணா அவர்கள் வற்புறுத்தி வந்த திட்டமாகும்.

இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இராமனை முன்னிறுத்தி, இந்து மச் சார்பு கண்ணோட்டத்துடன் அணுகி, இத்திட் டத்தை முடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக் குப் பதிவு செய்து இருப் பதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. ராமன் பாலம் என்ப தையும் கடந்து, இத்திட் டமே கூடாது என்று தமிழக அரசு கூறுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குப் பெரும் கேடும் தடையும் ஆகும் என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிடும் வழக்கினை விலக்கிக் கொள்ள வேண் டும் என்று தமிழக முதல மைச்சரை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

ஆ) சிதம்பரம் நடரா ஜர் கோயில் இந்து அற நிலையத் துறைக்கே சொந் தமென்று எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்ச ராக இருந்தபோதே உரிமை கொண்டாடி, அதனை நிலை நிறுத்த முயற்சிகளை மேற் கொண்ட நிலையில், நீதிமன்றத்திற்குச் சென்று சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் தடை வாங்கினார்கள்; திமுக ஆட்சிக் காலத்தில் வழக் காடி, சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் உச்சநீதிமன் றத்திற்கு மேல் முறையீடு செய்திருந்தனர்.

தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து 2011இல் ஆட் சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க அரசு - அதன் முதல் அமைச்சர் இந்த வழக்கினை உளப் பூர்வமாக நடத்தாமல், மூத்த வழக்கறிஞர்களை யும் நியமித்து வாதாடா மல், ஏனோ தானோ என்று நடத்தி, சிதம்பரம் நட ராஜர் கோயில் தீட்சதர் களுக்குத் தீர்ப்பு சாதகமாக அமையும் வகையில் நடந்து கொண்டது பெரிதும் வருந்தத்தக்கதும், கண்டிக்கத் தக்கதுமாகும். இவ்வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் சீராய்வு மனு செய்யுமாறு தமிழக அரசை இச்செயற் குழு வலியுறுத்துகிறது.

(இ) காஞ்சீபுரம் சங்கர ராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப் பெற்ற காஞ்சீபுரம் சங்கராச்சாரி யார்கள் ஜெயேந்திர சரஸ்வதி விஜயேந்திர சரஸ்வதி ஆகி யோர் மீதான வழக்கில் புதுச் சேரி நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பின்மீது மேல் முறை யீடு செய்ய வேண்டுமாய் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

1.2.2014 அன்று சென் னையில் அண்ணா அறி வாலயத்தில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளை இச் செயற்குழு வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்கள் இலங்கை சிங்களக் கடற் படையினரால் தாக்குதல் என்பது அன்றாடத் தொடர் கதையாகி விட்டது; குறிப் பாக கடந்த நான்கு நாட் களாகத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட தோடு கைது செய்வதும், படகுகளைப் பறி முதல் செய் வதுமாக அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன.
கச்சத்தீவு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு சார்பாகத் தாக்கல் செய்யப் பட்ட பிரமாணப் பாத்திரத் தில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை என்று உண் மைக்கும், நியாயத்துக்கும், மரபுரிமைக்கும் எதிராகக் கூறப்பட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற் படைதீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை விலக்கிக் கொண்டு கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீன வர்கள் மீன் பிடிக்கும் உரி மையை உறுதிப்படுத்திடு மாறு மத்திய அரசை இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது; பொரு ளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் ஜனார்த்தன துவேதி கூறிய கருத்தை மறுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திட்டவட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளதை இச்செயற் குழு பாராட்டி வரவேற் கிறது. கட்சியின் நிலைப் பாட்டுக்கு விரோதமாகக் கருத்து தெரிவித்துள்ள காங் கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன திவேதிமீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலை மையை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

திருச்சி சிறுகனூரில் உரு வாக்கப்பட உள்ள பெரியார் உலகிற்கான நிதி திரட்டும் பணியில் உற்சாகமாக ஈடு பட்டுக் கொண்டிருக்கும் கழகத் தோழர்களுக்கு இச் செயற்குழு தனது பாராட்டு களைத் தெரிவித்துக் கொள் கிறது.

தமிழ் ஓவியா said...

இதில் மாவட்டங் களுக்கு ஒதுக்கப்பட்ட இலக் கினை இதுவரை முடிக்காத மாவட்டங்களின் பொறுப் பாளர்கள் விரைந்து செயல் பட்டு, தங்களுக்குரிய இலக் கினை முடித்து இயக்க வரலாற்றிலும், நமது இன வரலாற்றிலும் மிக முக்கிய மான இந்தச் செயற்கரும் பணியில் தங்களை முழுமை யாக ஈடுபடுத்திக் கொள்ளு மாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மாநிலப் பொறுப்பாளர் களும், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகள் - இதுவரை இலக்கினை முடிக்காத மாவட்ட இயக்கப் பொறுப்பாளர்களை நேரிடையாகத் தொடர்பு கொண்டு ஊக்கப் படுத்தி நிறைவேற்றி முடிக்க ஆவன செய்யுமாறு இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கழகத் தலைவர் மேற் கொள்ளும் சுற்றுப் பயணத் தின்போது, அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மண்டலங் களைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட் டத்துக்குரிய நிதியை முழ மையான அளவில் அளிக்கு மாறும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 7:

சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கு - நீதி முறையில் ஆட்சி மொழி யான தமிழ் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற பொதுமக்கள், வழக் காடிகள், வழக்குரைஞர்கள், பொதுநல ஆர்வலர்கள் ஆகியோர்தம் கோரிக்கை இதுவரை மத்திய அரசால் ஏற்கப்படாமல், காலந் தாழ்ந்து வருவதற்கு இச் செயற்குழு தனது வருத்தத் தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது.

செம்மொழித் தகுதி பெற்றுள்ள மொழி தமிழ் மொழியாகும்; மற்ற மாநில உயர்நீதிமன்றங்களில் நடைமுறை மொழியாக அம்மாநில வட்டார மொழி கள் புழக்கத்திலிருக்கையில், தமிழ் மொழியும், வழக் காடும் மொழி ஆவதற்குரிய சட்டத் திருத்த நடவடிக்கை களை மத்திய அரசும், மாநில அரசும், சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் உரிய கவனத்திற் கொண்டு, நடவடிக்கைக்கு உரிய வழி செய் வதற்கான அனைத்து முயற்சிகளிலும் உடனடியாக ஈடுபட வேண் டுமென இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

வழக்காடிகளுக்கு வழக் கின் வாதங்களைப் புரிந்து கொள்ள இது உதவக்கூடும்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற நிர்வாகப் பணி களுக்காக நடைபெறும் தேர்வுகளில் தமிழில் எழுத வாய்ப்புள்ளபோது (நிர் வாகத் துறைகள்), சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழில் வாதாட இயலும் என்பதால், இதற்கான வாய்ப் பை விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று இச்செயற் குழு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண் 8:

தஞ்சையில் 14.12.2013 அன்று நடைபெற்ற தலை மைச் செயற்குழுக் கூட்டத் தில் எடுத்த முடிவின்படி கீழ்க்கண்ட பணிகள் சிறப் பாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளன.

1) திராவிடர் மகளிர் பாசறை (Work Shop) சென்னையில் 3 நாட்கள் சிறப்பாக நடத்தி முடிக்கப் பட்டது (24,25, 26.12.2013) ஏலகிரி, நீலகிரி, காரைக்குடி, குற்றாலம் பகுதியில் இனி முடிக்கப்பட வேண்டும்.

2) சர். ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்களின் 125ஆம் ஆண்டு விழா சென் னையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது (17.1.2014) (திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றிய பழைய கோட்டை அர்ச்சு னன் அவர்களின் 90ஆம் ஆண்டு விழா விரைவில் ஈரோட்டில் நடத்தப்படும்! 3) திராவிடர் திருவிழா வாம் பொங்கல் விழா சென் னையில் வெகு நேர்த்தியுடன் நடத்தி முடிக்கப்பட்டது (17,18,19.1..2014). சிறப்பாக மூன்று நாள் விழாக்களையும் நடத்தி முடித்த பொறுப் பாளர்களுக்குக் கழகத் தலைமைச் செயற்குழு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

4) இளைஞரணி, மாண வரணி தொழிலாளர் அணிக் கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

5) பெரியரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இவற்றிற்கான பொறுப்பாளர்கள் இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

6) அனைத்து ஜாதியி னருக்கும் - அர்ச்சகர் உரிமை என்னும் கழகத்தின் மிக முக்கியமான பணியில் மாவட்டந்தோறும் கருத் தரங்கம் என்று கழகத் தலை வர் அறிவித்த திட்டத்தை பகுத்தறி வாளர் கழகத் தோழர்களின் ஒத்துழைப் புடன் திராவிடர் கழகம் மாவட்டந்தோறும் நடத்துவது என்று தீர் மானிக்கப்படுகிறது.

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு:

மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம் (6.2.2014)

செங்கற்பட்டு மாவட்ட புதிய நிர்வாகிகள்

மதுராந்தகம் ஒன்றிய -அண்ணாமலை அமைப்பாளர் மதுராந்தகம்

சித்தாமூர், லத்தூர் - வே.பொன்மாறன்,

ஒன்றிய பொறுப்பாளர் மதுராந்தகம்

பேரமனூர் கிளை தலைவர் - விசயராகவன்

பேரமனூர் கிளை செயலாளர் - நீலகண்டன்

மறைமலை நகர் தலைவர் - துரை.முத்து

மறைமலை நகர் செயலாளர் - வெங்கடேசன்

கீழ்க்கரணை கிளை தலைவர் - மருதீஸ்வரன்

கீழ்க்கரணை கிளை செயலாளர் - ம.சுபாஷ்

காட்டாங்கொளத்தூர் தலைவர் - சீ.தனஞ்செயன்

காட்டாங்கொளத்தூர் செயலாளர் - அ.செல்வமணி

மாவட்ட -சு.ஆனந்தி மகளிரணி தலைவர் செங்கற்பட்டு

மாவட்ட - ஏ.சந்திரா,

மகளிரணி செயலாளர் மதுராந்தகம்


தூத்துக்குடி மாவட்டம்

தலைவர் - பேரா.கனகராசு

துணைத் தலைவர் - செல்வராசு

செயலாளர் - மேல்மாந்தை, காலாடி

துணைச் செயலாளர் - ஆழ்வார்

அமைப்பாளர் - ஆசிரியர் காசிராசன்

தூத்துக்குடி மாநகர்

மாநகரத் தலைவர் - முனியசாமி

மாநகரச் செயலாளர் - சி.மணிமொழி

பொதுக்குழு உறுப்பினர் - தி.ப.பெரியாரடியான்

சேலம் மாவட்டம்

தலைவர் - கே.ஜவகர்

துணைத் தலைவர் - பரமசிவம்

செயலாளர் - கடவுள் இல்லை சிவக்குமார்

துணைச் செயலாளர் - அம்மாபேட்டை தனபால்

அமைப்பாளர் - இராவண பூபதி

பழனி மாவட்டம்

தலைவர் - பாலசுப்ரமணியம்

துணைத் தலைவர் - இரணியன்

செயலாளர் - ஒட்டன்சத்திரம் சக்திவேல்

துணைச் செயலாளர் - கோரிக்கடவு காளிமுத்து

அமைப்பாளர் - பழனி மணி

பொதுக்குழு உறுப்பினர் - புலவர் வீர.கலாநிதி

மேற்கண்ட பொறுப்பாளர்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் (சென்னை 6.2.2014) அறிவிக்கப்பட்டனர்.

Read more: http://viduthalai.in/page1/74769.html#ixzz2sdP6WHhi

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் கரிசனங்கள்

கேள்வி: குஜராத் கல வரத்தில் மோடிக்குத் தொடர் பில்லை என்று சொல்லி விட்டதே அகமதாபாத் கோர்ட்?

பதில்: ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்ய எல்லா வாய்ப்பு களும் உண்டு. குஜராத் கலவரத்தின்போது மோடி அலட்சியமாகவோ அல் லது தூண்டி விடும் விதத் திலோ நடந்து கொண்டதற் கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதை இத்தீர்ப்பு உறு திப்படுத்தி இருப்பது உண்மை. ஆனால், பெரும் பாலான இஸ்லாமியர் மனதில் இன்னமும் மோடி குறித்த அச்சம் தொடர்வது நல்லதல்ல. அவர் இஸ்லா மியர்களுக்கு நம்பிக்கை யூட்டும் விதமாகப் பேசுவ தும் நடந்து கொள்வதும் நல்லது. போதாக்குறைக்கு இளம்பெண்ணை வேவு பார்த்த விஷயத்தை மத்திய அரசு கிளறி, மோடி மீது விசாரணைக் கமிஷன் போட்டு அவநம்பிக்கையை வளர்க் கிறது. (கல்கி 12.1.2014)

நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விட்டது என்ற திரைமறை வில் கல்கிகள் ராமனைப் போல மரத்தின் பின் ஒளிந்து கொண்டு மோடியைக் காப் பாற்ற முயற்சிக்கின்றன.

கல்கிகளுக்கு மிகவும் நெருக்கமான திருவாளர் சோ ராமசாமி இது போன்ற தீர்ப்புகள் பற்றிக் கூறியதை எடுத்துக் கூறி னால் கல்கி கனபாடிகளின் குளிருக்குக் கொஞ்சம் கணப் புச் சட்டியாக இருக்கும்!

இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்கு களில் ஜெயலலிதா விடு தலை செய்யப்பட்டிருக் கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். - 1991 - 1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊழல் நடந்தது உண்மையே! திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்று கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றஞ்சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்! (துக்ளக் 14.1.2002) என்று திருவாளர் சோ சொன்னதுதான் கல் கிக்கும் பதில்.

பாபர் மசூதி பிரச்சினை யில் நீதிமன்றம் சொன் னாலும் ஏற்க மாட்டோம். காரணம் இது எங்களின் நம்பிக்கைப் பிரச்சினை என்று அரட்டை அடிப்ப வர்கள், மோடி விடயத்தில் நீதிமன்றத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க வேண் டும்.

இதே மோடியை உச்ச நீதிமன்றம் நீரோ மன்ன னுக்கு ஒப்பிட்டுச் சொன் னதை மிக வசதியாக மறந்து விடுவார்கள் - ஏன் மறைக் கவும் முயலுவார்கள். குஜ ராத்தில் இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட முசுலிம் கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்தவர் நரேந்திர மோடி இல்லை என்று கூடச் சொன்னாலும் சொல் வார்கள் - யார் கண்டது?

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் கலவரத்தின்போது முதல்வர் மோடி எப்படி எல்லாம் எங்களுக்குக் கட்டளையிட்டார் என்று தெகல்காவிடம் கூறியது வீடியோ காட்சிகளாக வெளி வந்ததே - மறுக்க முடியுமா?

மோடி ஆட்சியில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளே குஜராத் கலவரத்தில் மோடி யின் பங்கை விலாவாரி யாகக் கூறி இருக்கிறார்களே - அப்படி உண்மையைச் சொன்ன அதிகாரிகளைக் கூட பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளிய புண்ணியவான் ஆயிற்றே மோடி.

அரியலூரில் ரயில் கவிழ்ந் ததால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சர் ஓ.வி. அழகேசனும் பதவிகளை ராஜினாமா செய்தார்களே! காரணம் என்ன? இந்த இரண்டு பேர்களுமா அந்த ரயிலை ஓட்டினார்கள்?

குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆட்சியில் முதல மைச்சராகவிருந்த மோடி பொறுப்பு ஏற்க வேண் டாமா? ராஜினாமா செய்ய வேண்டும் முதல் அமைச் சர் மோடி என்று பிரதம ராக இருந்த வாஜ்பேயி சொன்னதாக அத்வானி கூறியது ஏன்?)

நாணயமான - நேர்மை யான மனிதராக மோடி இருந்தால் குஜராத் கலவ ரத்திற்கான பொறுப்பை ஏற்று அன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது இப்பொழுதா வது அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

குஜராத்தில் முசுலிம் கள் கொல்லப்பட்டதை யும் காரில் பயணம் செய் யும் பொழுது நாய்க் குட்டி அடிபடுவதையும் சமமாக ஒப்பிட்டு இப்பொழுது கூடச் சொல்லுகிறார்கள்! என்றால் - இத்தகையவர் களைக் காப்பாற்ற கல்கி கூட்டங்கள் கனைக்கின் றன என்றால் அவாளின் குரூரக் குணத்தையும், மத வெறியையும் கணக் கிட்டுக் கொள்ளலாமே!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/page1/74778.html#ixzz2sdPVPyhc

தமிழ் ஓவியா said...


இதோ இன்னொரு மோ(ச)டி!


ஒபாமா கூட மோடி பேச்சை கேட்கிறார்: ஃபேஸ்புக்கில் பரவும் போலி போட்டோ

அமெரிக்க அதிபர் ஒபாமா - இந்தியப் பிரத மருக்கான ஆர்.எஸ்.எஸின் சிபாரிசு தாரர் நரேந்திர மோடியின் மேடைப் பேச்சை தொலைக்காட்சி யில் கண்டு ரசிப்பது போன்று சித்தரிக்கப் பட்ட படம் வலைக்காட்சி யில் உலவ விடப்பட்டுள் ளது. (பேஸ் புக்) குஜராத் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் நவசாரி என்பவரின் பேஸ் புக்கில் இந்தப் பித்தலாட் டப் படம் பதிவு செய்யப் பட்டுள்ளது.

உண்மை என்ன தெரி யுமா? 2011இல் எகிப்து அதிபர் முபாரக்கின் உரையை டி.வி.யில் ஒபாமா பார்ப்பது போன்ற காட் சியை உல்டா பண்ணி இந்த மோசடியைச் செய் துள்ளனர்.

இதுகுறித்து நவசாரி எம்.பி.யிடம் கேட்டபோது இதற்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்று கழற்றிக் கொண்டார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது பழமொழி.

Read more: http://viduthalai.in/page1/74781.html#ixzz2sdPd3TaD

தமிழ் ஓவியா said...


மோடியின் கொல்கத்தா பேச்சில், வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?


மோடியின் கொல்கத்தா பேச்சில்,
வங்காளிகளின் மூக்கைச் சொறிகிறாராம் மோடி?

- ஊசி மிளகாய்

இவர் நிலை என்ன?

கொல்கத்தாவில், பேசிய நரேந்திரமோடி, பெரிய தேசீயவாதி என்றும், ஆர்.எஸ்.எஸ். குறுகிய ஜாதி, மாநில பிரிவுகள் எண்ணங்களிலிருந்து விடுபட்டு தேசீய பார்வை மக்களுக்கு அளிக்கவே அவதாரம் எடுத்ததாகச் சொல்லி பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் பி.ஜே.பி.யின்மீது திணிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளராக ஆங்காங்கே பெருங் கூட் டத்தை அழைத்து வந்து, மீடியாக்கள், பெரு முதலாளி கள் தயவுடன் விளம்பர வெளிச்சத்தில் உலா வருகிறாரே! குஜராத் மக்களிடத்தில் பேசும்போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருகுகிறார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை என்ற வித்தையில் இறங்கி அதனை அரசியல் யுத்தியாக்கி நேருவைத் தாக்கி, பட்டேலை உயர்த்துகிறார்!

மேற்கு வங்காளத்திற்குச் சென்றால், அங்கே பிரணாப் முகர்ஜியைத் தூக்கி அவரையல்லவா மன்மோகன்சிங்க்குப் பதில் பிரதமராக்கி இருக்க வேண்டும்? என்று வங்க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறார்! பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இருக்க இவர் எப்படி பிரதமர் என்றார்! அது காங்கிரஸ் கட்சியும் தலைமையும் தீர்மானிக்க வேண்டிய உள் விஷயங்கள். அதே கேள்வியை மோடியைப் பார்த்து மற்றவர் களும் கேட்கலாமே!

மூத்த தலைவர் அத்வானி,
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ்,
மூத்த மற்ற தலைவர் ஜஸ்வந்த் சிங்,
முரளி மனோகர் ஜோஷி இப்படிப் பலரைப் பின் தள்ளி மோடி எப்படி - ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இப்படி ஒரே அடியில் ஜாக்பாட் பெற்றார்?

அதற்குச் சில வாரங்களுக்குமுன் நான் குஜராத் முதல் அமைச்சராக மட்டுமே நீடிப்பேன் என்றாரே அது ஏன் காற்றில் பறந்தது?

Read more: http://viduthalai.in/e-paper/74820.html#ixzz2sgnr8ekz

தமிழ் ஓவியா said...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பளிங்குகல்லிலான பிள்ளையார் சிலை

கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முன்பு பளிங்குகல்லிலான விநாயகர் சிலை அரச மரம், வேப்ப மரம் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் செங்கற்களை அடுக்கி அதன் மேல் விநாயகர் சிலையை வைத்தும், அரளி பூ மாலை போட்டும் விளக் கேற்றியும், பூலப்பூ மரத் தில் சூட்டியும், குங்குமம், மஞ்சள், சாம்பல் (திருநீறு) கொண்டும் தினமும் அங்கு பூசை செய்து வருவதாக அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அரசு அலுவலக வளா கங்களில் மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்னும் அரசா ணை படி எந்த அரசு அலுவலகங்களிலும், ஒரு குறிப்பிட்ட மத சம்பந்த மான கடவுள் சிலை வைத்து வழிப்படக் கூடாது என் றும் அரசாணையை மதிக் காமல் செயல்படும் நபர் கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த கோயில் சிலை பகு தியை அகற்ற உத்தரவிட வேண்டும்.

சமூக விரோ திகள்மீது தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லை யேல் கரூர் மாவட்ட திராவி டர் கழக தோழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களைத் திரட்டி பெரிய போராட் டம் நடைபெறு வதை தவிர்க்க வேண்டுகிறோம். தகவல்: தே. அலெக்சாண்டர், கரூர் மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/74825.html#ixzz2sgoR5PLc

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்


வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்பதற்கு ஆகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ்ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/74826.html#ixzz2sgolPfCz

தமிழ் ஓவியா said...


நீதி கெட்டது யாரால்?

- குடந்தையான்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மதிப்பெண் தளர்த்தப் பட வேண்டும் என்ற மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற காரணத்தைச் சொல்லி தள்ளுபடி செய்துள்ளது.

நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு சரியா? கொள்கை முடிவுகளில் நீதி மன்றங்கள் தலையிட்டது இல்லையா?

தமிழ் நாட்டில், பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கு, எந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது?

அரசியல் சட்டம் 340-இன் படி அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைப்படி, விபி சிங் அரசு, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கிய ஆணையை, மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்த தற்கு, உச்சநீதிமன்றம் எந்த அடிப் படையில் முதலில் தடை விதித்தது? 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத் தப்பட்டோரில் முன்னேறிய பிரி வினரை நீக்க வேண்டும் என்றும், அரசின் கொள்கை முடி வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக, எந்த அடிப் படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?

ஆக, பெரும்பான்மை ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, அரசு கொள்கை முடி வினை எடுத்தால், நீதி மன்றங்கள் எதிராகவும், இந்த மக்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால், நீதி மன்றங்கள், கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், தீர்ப்பு அளிப்பது, நீதி கெட்டது யாரால் என்ற வரலாற்றுப் பதிவினை, புரட் சியாளர் பெரியார் நீதி மன்றத்தில் பதிவு செய்ததை, நினைவுப்படுத் தவும், இன்றளவும் நீதிமன்றங் கள் மாறவில்லை என்பதாகவும் தான் நாம் கருத வேண்டியுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான பாசிச ஆட்சி யின் முன்னோட்டமாக, நீதி மன்றங் களும், ஊடகங்களும், அண்மைக் காலமாக தங்களது கருத்து களை பதிவு செய்து வருகின்றன என்பதை யும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது.

Eternal vigilance is the price of liberty. உரிமைக்கான விலை, நாம் என்றும் விழிப்புணர்வோடு இருத்தலே.

Read more: http://viduthalai.in/page-2/74833.html#ixzz2sgpdtDms

தமிழ் ஓவியா said...


குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!

செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்


புதுடில்லி, பிப்.7- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவின் பேரில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன என சிறையில் இருக்கும் இந்து தீவிரவாத சுவாமி அசீமானந்த் அளித்த தகவல் அனைத்தும் உண் மையே என்றும் அவர் குரல் பதிவை கொடுக்கத் தயார் என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனா கீதா ரகுநாத் இன்று தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த சில பயங்கரமான குண்டுவெடிப் பில் நூற்றுக்குக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட னர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் காவித்தீவிரவாதி களின் நேரடி தொடபை ஆதாரத்துடன் நிறுபிக்கப் பட்டு சாது பிரஞ்யா தாக்கூர் என்ற பெண் சாமியார், அசி மானந்தா, இந்திய ராணுவப் படையில் உயரதிகாரி பொறுப்பு வகித்த சிறீகாந்த் புரோகித் மற்றும் தயானந்த் பாண்டே போன்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸின் நேரடி தொடர்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மாத இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.

இந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.

இது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.

Read more: http://viduthalai.in/page-3/74811.html#ixzz2sgpzkdBK

தமிழ் ஓவியா said...


சிவசேனாவின் மதவெறி

மும்பை, பிப்.7- மும்பை செய்தியாளர் சங்க அரங்கத்தில் பாகிஸ் தானைச் சேர்ந்த மேக்கல் ஹசன் என்ற பிரபல இசைக்குழு இந்தியா வில் தனது இசைப்பயணம் குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந் தது, இந்த இசைக்குழுவின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக்கலைஞர் களின் மூலம் இரு நாட்டிற்கு மிடையேயான நல் லிணக்கத்தை உருவாக்கும் விதமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி கள் நடத்த முடிவு செய் திருந்தது.

இக்குழுவில் இந்தியா வைச் சேர்ந்த பிரபல பாடகி ஷர்மிஸ்தா சாட்டர்ஜி மற் றும் போஜ்புரி பாடகல் பிர்ஜேஸ் மிஸ்ராவும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, செய்தி யாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் புல்லாங் குழல் இசைக்கலைஞர் முகமது அஹசான் பாபு கூறியதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் செயற்கையாக இரு நாடுகளாக பிரிந்திருந்தாலும் மக்கள் உள்ளுணர்வில் ஒரு தாய்மக்களாகவே வாழ் கின்றனர்.

சிவசேனா வன்முறை

நீண்ட காலமாக இரு நாட்டிற்கு இடையே நிலவி வரும் கசப்புணர்வை நீக்க இசை மற்றும் விளையாட்டு போன்றவை மிகவும் முக் கியமான ஒரு அருமருந்தாக வே நினைக்கிறோம். எங் களது இந்திய இசைப் பயணத்தின் நோக்கமும் அதுதான், அதே போல் பல இந்திய இசைக்கலைஞர்கள் பாகிஸ்தான் வந்து எங் களுடன் இசைப்பயணத்தில் சேர முன்வந்துள்ளனர் என்று கூறினார். பத்திரிக் கையாளர் கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் ஒன்றாக இசைவிருந்து படைக்க தயாராகிக்கொண்டு இருந் தனர். அப்போது திடிரென சுமார் இருபதுக்கும் மேற் பட்ட சிவசேனா கட்சி யினர்கள் அரங்கத்திற்குள் நுழைந்து ரகளை செய்ய ஆரம்பித்தனர். இதனால் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பயந்து வெளி யேற ஆரம்பித்தனர். சிவ சேனா கட்சியினர் அரங்கத் திற்கு வெளியே வந்து பாகிஸ்தான் இசைக்கலைஞர் களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். பாகிஸ்தானியரே வெளியேறு வந்தே மாதரம் என்று முழக்கங்கள் எழுப்பி செய்தியாளர்கள் சந்திப்பு வளாகத்தில் உள்ள அரங்கத் தில் இருந்த பூச்செடிகளை உடைத்து ரகளை செய்தனர். இச்சம்பவம் குறித்து பிரஸ் கிளப் தலைவர் குருபீர் சிங் கூறுகையில் சிவசேனா வினர் ஏன் இது போன்ற ஒரு வன்முறையில் இறங் கினார்கள் என்று தெரிய வில்லை, இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமே இரண்டு நாடுகளுக்கு இடை யேயான கசப்புணர்வை நீக்கி சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவது தான் ஆனால் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவது சர் வாதிகாரத்தனமான செய லாகும். சிவசேனா இது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும் நிகழ்ச்சிகள் பற்றி அதன் தலைமை முழுமை யாக அறிந்துகொள்ள வேண் டும் என்று கூறினார். மும்பை செய்தியாளர் சங்கம், இச்சம் பவம் குறித்து காவல்துறை யில் புகார் செய்த்து. இதனை அடுத்து சம்பவ இத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பெண்கள் உட்ப்ட 20 சிவசேனாவினரை கைது செய்தனர். இவர்கள் மீது பொது நிகழ்ச்சிக்கு பங்கம் விளை வித்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, மற்றும் இசைகலைஞர்களை மிரட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அவப்பெ யரைப்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பெண் கலைஞர் வீனா மாலிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி தேசிய மகளிர் ஆணையத்தின் கண் டனத்தைப் பெற்றது அனை வரும் அறிந்ததே!

Read more: http://viduthalai.in/page-3/74812.html#ixzz2sgq9z8ws

தமிழ் ஓவியா said...


வசம் கெட்டது!


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrA02rs

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgrMUhLG

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுச் சிந்தனை!

அறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித்தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தனமாகாது.அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது. - ஷேக்ஸ்பியர்

Read more: http://viduthalai.in/page-8/74851.html#ixzz2sgra0qZh

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம்


சென்னை, பிப்.7- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 விழுக்காடு மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி யினர், பிற்படுத்தப்பட் டோர், பிற்படுத்தப்பட் டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற் றாலே தேர்ச்சி பெறலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை யின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 விழுக்காடு) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங் கப்படும் என அறிவித்தார்.

இந்த மதிப்பெண் சலு கைக்குப் பிறகு இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்று வதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ண யம் செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவி னர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ண யிக்கப்படுகிறது.

இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் பொதுப்பிரிவினருக் கான தேர்ச்சி மதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப் பெண் 82 எனவும் நிர்ணயிக் கப்படுவதாக அந்த அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

எனவே, 82.5 என்ற மதிப் பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக் கீட்டுப் பிரிவினர் கணக் கெடுக்கப்பட்டு, அவர்களுக் கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணி நிய மனம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more: http://viduthalai.in/page-8/74846.html#ixzz2sgrlIwCv

தமிழ் ஓவியா said...


சைவரும் - வைணவரும்!


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?

வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.

சைவர்: என்ன சந்தேகம்?

வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!

-சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAYJKBf

தமிழ் ஓவியா said...

எலி ஒழிப்பிலும் மதம்!

நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.

- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAiYSdI

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வியின் தலையில் கை வைப்பதா?


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன் பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந் நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரசு கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரத்தை மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பது தான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.

மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
8.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74856.html#ixzz2smne5iu4

தமிழ் ஓவியா said...


ஆகா, அவாளின் சமத்தோ சமத்து!

கேள்வி: ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே நண்பர் சோ தான், இன்றைக்கு ஜெய லலிதாவுக்கு வக்காலத்து வாங்கி அ.தி.மு.க. ஆட்சிக் குப் புகழ் பாடுகிறார் என்று கலைஞர் ஆதங்கப் பட்டிருக்கிறாரே?

பதில்: ஜெயலலிதா வின் 1991-96 அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தவன்தான் நான். ஆனால் 96-ல் வந்த தி.மு.க. அரசு செயல்பட்ட விதம் தவறாக இருந்ததால், 2000 ஆண்டு வாக்கில் அதே ஜெயலலிதாவை நான் ஆதரிக்க ஆரம்பித்தேன். 2001 தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் சில முயற்சிகளைச் செய்தேன். அதிலிருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வை ஆதரித்துத் தான் எழுதி வருகிறேன். அதற்கு முக்கியக் காரணம் தி.மு.க.வின் சீர்கேடுகள் தான்.
(துக்ளக் 12.2.2014 பக்கம் 9)

கலைஞர் அவர்கள் முர சொலியில் (18.1.2014) கலை ஞர் பதில்கள் பகுதியில் எழுதிய ஒரு பகுதிக்கு மட் டும் தான் பதில் சொல்ல முயற்சி செய்துள்ளார். கலைஞர் அவர்கள் அந்தப் பதிலில் சோவின் ஒரு குலத்துக்கொரு நீதி சோ சொல்லும் சோவின் மனு தர்மப் புத்தியையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

14.1.2002 சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நண்பர் சோ ராமசாமி அவர்கள்.

இப்போது டான்சி உட் பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்குகள் என்றும் கூற மாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்தத் தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய் யப்பட்டிருக்கிறார் அவ் வவளவுதான் என்று துக்ளக்கில் திருவாளர் சோ ராமசாமி எழுதியதை கலைஞர் அவர்கள் எடுத் துக்காட்டியுள்ளார். நரேந்திரமோடிபற்றிய பிரச்சினை வரும் போதெல் லாம் என்ன எழுதுகிறார் சோ! நீதிமன்றம் குற்றம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டதே என்று மோடியைக் காப்பாற்ற முயலுகிறார். அன்று ஜெய லலிதா மீதான தீர்ப்பைக் குறித்து சோ வெளியிட்ட கருத்து மோடிக்கு மட்டும் பொருந்தாதா? விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே நிரபராதி என்று சொல்ல மாட்டேன் என்று எழுதினாரே -

அந்தப் பகுதியை வசதி யாக இருட்டடிப்பார் சோ மதிமுக பொதுச் செயலாளருக்குச் சமர்ப்பணம்

கேள்வி: ஈழத் தமிழர் கள் பிரச்சினையில் காங் கிரஸ் செய்த துரோகத்தை பா.ஜ.க., செய்யாது என்ப தால், அவர்களுடன் கூட் டணி அமைக்கிறோம் என்று வைகோ கூறியுள்ளது பற்றி?

பதில்: கூட்டணி நிர்பந் தத்தினால் அவர் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், வைகோ மிகவும் வற்புறுத் துகிற தனி ஈழம் பா.ஜ.க. வினால் ஏற்கப்படவில்லை. இலங்கை பிளவுபடுவதை பா.ஜ.க.வும், காங்கிரஸைப் போலவே எதிர்க்கிறது.

அதைத் தவிர விடு தலைப்புலிகளை வைகோ ஆதரிப்பதைப் போல பா.ஜ.க. ஆதரிப்பதில்லை. மாறாகக் கடுமையாக எதிர்க்கிறது. ஆகையால் இலங்கைப் பிரச்சினை யில் வைகோ நிலையி லிருந்து பா.ஜ.க.வின் நிலை மாறுபட்டது. அதை மூடி மறைப்பதற்காக நீங் கள் சுட்டிக் காட்டியிருப் பதைப் போல வைகோ பேசியிருக்கலாம். - (துக்ளக் 12.2.2014 பக்கம் 12)

பி.ஜே.பி.பற்றி வைகோ அவர்களைவிட திருவா ளர் சோ ராமசாமிக்கு மிக நன்னாவே தெரியும்.

சோவின் கூற்றுக்கு மறுப்புச் சொல்லுவாரா அல்லது உண்மையைச் சொல்லி நம்மை தர்ம சங் கடத்தில் தள்ளி விட்டாரே என்று உள்ளுக்குள் பொரு முவாரா மறுமலர்ச்சி வைகோ?

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/74882.html#ixzz2smnq1K6F

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்


உடைந்தது 108 தேங்காய்கள்!

சென்னை - எழிலகத் தில் பொதுப் பணித் துறை யில் பணியாற்றும் அலு வலர் ஒருவர் 108 தேங் காய்களை உடைத்திருக் கிறாராம் - எதற்குத் தெரி யுமா? பொதுப் பணித்துறை மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமாம்.

ஒரு துறை வளர்ச்சி அடைவதற்கான ஒரு குறுக்கு வழியை இந்தத் துரை கண்டுபிடித்துவிட்டாரோ!

நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான டாக்டர் டி.எம். நாயர் உடல் நலம் பாதிக் கப்பட்டபோது திருவல்லிக் கேணிப் பார்ப்பனர்கள் பிள்ளையாருக்குத் தேங் காய் உடைத்தபோது டாக் டர் நாயர் சொன்னார். நீங்கள் தேங்காய்களை உடைப்பதால் கேரளாவில் உள்ள ஏழை மக்கள், தென்னை மரங்களை நம்பி வாழும் அவர்களுக்குப் பயனாய் முடியும் என்றார். அதுதான் இப்பொழுதும் நினைவிற்கு வருகிறது.

ஒரு துறை வளர்ச்சி அடைவது அத்துறையின் ஊழியர்களின் உழைப்பை யும், திறனையும், நாணயத் தினையும் பொறுத்தது என் கிற அடிப்படைக் கூடவா தெரியாது?

பொதுத் துறைப் பொறி யாளர்கள் மைல் கல்லுக்குப் பூஜை செய்தனர் என்பதை நினைவு கூர்ந்தால், நம் நாட்டுப் படிப்பு என்பது - வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வரும்.
...ம் என்ன செய்வது அரசன் எவ்வழி அவ்வழி குடி மக்கள்!

கொடிகளின் கதை

காங்கிரஸ், சரத்பவர், மம்தா கட்சிகளின் கொடி கள் தேசியக் கொடியைப் போன்று இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது; அது சரி, அத்தோடு இந்தியாவின் தேசிய மலரான தாமரையைத் தேர்தல் சின்னமாகக் கொண்டுள்ளதே பி.ஜே.பி. அதனையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண் டியதுதானே!

அடுத்த பல்டி....

காஞ்சி சங்கராச்சாரி யார்கள் மீதான கொலை வழக்கில் 70-க்கும் மேற் பட்டவர்கள் பிறழ்சாட்சியா னார்கள்; அது எப்படி நடந் திருக்க முடியும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே எளிதில் புரிந்து விடும்.

அதே காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திரர் மீது - ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்டது - அரிவாளால் வெட்டப்பட் டது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் அரசு சாட்சியான காஞ்சி சங்கர மடத்தின் காசாளர் நாகராசன் பிறழ் சாட்சியாகப் பல்டி அடித் துள்ளார் - இப்பொழுது அந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பணமும் பதவியும் பாதாளம் வரை பாயும் என்பார்கள் அவற்றைத் தான் கண்ணெதிரில் யதார்த் தமாகப் பார்த்துக் கொண்டி ருக்கிறோமே!

Read more: http://viduthalai.in/e-paper/74881.html#ixzz2smo0ACOp

தமிழ் ஓவியா said...


அப்படி என்ன பெரிய அப்பா டக்கரா ஜனார்த்தன் திவேதி

- குடந்தையான்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி, இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது; பொருளாதார அடிப்படை யில் இருக்க வேண்டும் என கூறியதற்கு, சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலைவர் கள் கடும் கண்டனத்தைத் தெரிவித் ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஜாதி அடிப்படையில் தற்போது நடை முறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடரும் என அறிவித்துள்ளார்.

ஜனார்த்தன் திவேதி காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் குழுவில் உள்ளவர். இப்படி ஒரு கருத்தை சொல்வதால் வரும் பிரச் சினைகளைப் பற்றி அறியாதவர் அல்ல;

தேர்தலை சந்திக்க உள்ள நிலை யில் இத்தகைய முரண்பாடான கருத்தை ஏன் சொல்ல வேண்டும்?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற கூப்பாட்டை, பார்ப்பனர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். கம்யூனல் ஜிஓ தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த கருத்தை முன் வைத்துத் தான் செண்பகம் துரைராசன் பெயரில் வழக்கு தொடர்ந்தனர் பார்ப்ப னர்கள்;

அரசியல் சட்ட முதல் திருத்தம் 15(4) வரும் நிலையில், நாடாளு மன்றத்தில் பார்ப்பனர்கள் இந்த கருத்தை முன் வைத்து வாக்கெடுப்பு நடத்தி தோற்றனர். ஜாதி அடிப் படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு ஆதரவாக 245 வாக்குகளும், வரு மான அடிப்படைக்கு 5 வாக்கும் தான் கிடைத்தன.

1990-இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 27 விழுக்காடு இட ஒதுக் கீட்டை மண்டல் குழு அடிப்படை யில் ஆணை பிறப்பித்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணையினை பார்ப்பனர்கள் பெற் றனர். அப்போதும், ஜாதி அடிப் படையில் கூடாது என வாதம் செய் தனர். உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லாது என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

2005-இல் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு வழங் கிய நிலையில், மீண்டும் பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றத்தில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என வாதிட்டனர். உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில், ஜாதி அடிப் படையில் கல்வியில் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இத்தனையும் அறிந்தவர்தான் ஜனார்த்தன் திவேதி.

தற்போது, அரசு வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் சூழ்நிலையில், ஜாதி அடிப் படையில் வேண்டாம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தால், பார்ப்பனர்களுக்கு என்றைக் கும் பாதிப்பு இருக்காது என்கிற ஒரு நோக்கில், கருத்தினை, ஜனார்த்தன் திவேதி மூலமாக வெளியிட்டிருக் கிறார்கள் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது.

தனி மனிதனாக கருத்து சொல் லும் அளவுக்கு, ஜனார்த்தன் திவேதி அவ்வளவு பெரிய அப்பா டக்கர் இல்லை

Read more: http://viduthalai.in/page-2/74893.html#ixzz2smodhUAl

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/74884.html#ixzz2smoo4r6t

தமிழ் ஓவியா said...


பெரிய அக்கிரமம்!


பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத்தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும்.

எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை.

இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக்கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74908.html#ixzz2smpwt7J0

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது.

இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74908.html#ixzz2smq4w5Gy

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதன் சமூகப் பொருளாதார வாழ்வில் மற்றவனுக்குத் தாழ்ந்தவனல்லன் என்ற எண்ணம் உதித்து, அது கைகூடிவிட்டால் அதுவேதான் விடுதலை யாகும். விடுதலை என்பதற்கு இதுவே தகுந்த பொருளாகும். உங்களுக்கு மேல் - உயர்ந்த ஜாதியார், செல்வந்தன் - அதிகாரி ஆகிய இவர்களிருந்தால் அது ஒரு நாளும் விடுதலை என்பதாகாது.

Read more: http://viduthalai.in/e-paper/74907.html#ixzz2smqLuWoY

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரின் ஞானோதயம்


ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும், அவர்களது வால்களினு டையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத்தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜ கோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.

முதலாவதாக, மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜினாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலைவைத்தாரே அன்றா?

அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போனவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50,000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப் பாளையம் ஜமீன்தாரிடம் 10,000 ரூபாய் பெறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா?

அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பலம் குறைந்ததாகத் தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்கியதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரமப் பிரச்சாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?

அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரச்சார தைரியத்தை வைத்துக் கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்த தான பூமியில் இருந்து கொண்டு பத்மாசூரன் கதைபோல் அந்த சமுகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம் பிக்க முடிவு செய்தாரே அன்றா?

அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத்துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவை ஆகி விடுகின்றது.

பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறுநன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசிய அயோக்கியத்தனமாகி விடுகின்றது.

இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம் போலும். நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்?, என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அதுபோல் பார்ப்பனரல்லாதாரிலே உள்ள கோடாலிக் காம்புகளை நினைக்கும்போது ஸ்ரீராஜகோபாலாச்சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.

- குடிஅரசு - தலையங்கம்-01.04.1928

Read more: http://viduthalai.in/e-paper/74906.html#ixzz2smqTuaBe

தமிழ் ஓவியா said...


ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்


நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக எனது மேஜையை ஒழுங்குபடுத்து வதில் 10 நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் தாள்களையும் விரைவாகத் துருவிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்வேன். உடனடியாக கவனம் தேவைப்படுபவை; குறைந்த முக்கியத்துவம் கொண்டவை; படிப்பதற்கான விஷயங்கள் என்று பகுத்துக் கொள்வேன். அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தாள்களை மட்டும்தான் மேஜையில் வைத்துக் கொள்வேன். வேறெதும் அதில் இருக்காது''.

- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Read more: http://viduthalai.in/page2/74924.html#ixzz2smrDWc3l

தமிழ் ஓவியா said...


இதழ ஒனறன இருவேறு பககஙகள!

- சிவகாசி மணியம்

கேளவ: பெருமபாலான குடுமபஙகளல பரச சனைககுக காரணமாக அமைவது எது?
பதல: கணவன மனைவககடையே 20-ம பககததல (அரசு பதல) இபபடி நோமையான, அறவாததமான பதல இது எனறால, மூடததனததன மூலததை அடைய வழகாடடும முரணபாடு அதே இதழன 50-ஆம பககததல! செனனை 108-லருநது ஒரு பகதை எழுபபும கேளவ இது:

எனககுத தருமணமாக 8 ஆண்டுகள ஆக வட டது. ஒரு பெண குழநதையும உணடு. தனமும என கண வருககும எனககும எதறகாவது சணடைதான நாஙகள ஒறறுமையுடன வாழ எநதக கோவலுககுச செலல வேணடும?

கணவன மனைவ உறவு பலம பெற எனும கடடு ரையல பயா கலயாணராமன எனபவான வழ காடடுதலைப பாருஙகள.

குடுமப ஒறறுமை உணடாக மடடுமலல, எலலா நலனும நஙகள பெற நமமத பெற நமமதயாக நஙகள படுததுறஙக சுருடடபபளள பளளகொணடேசுவரரை கடடாயம ஒரு முறை தாசனம செயது பாருஙகள, பலனகளை உடனடியாக உணாவகள. இது சததயம எனறவா அநதக கோவல எஙகே இருககறது, எபபடிச செலவது எனபதையும வவாககறா. ரொமப சமபள, செனனை கோயமபேடடிலருநது புததூ வழயாகச செலலும எலலா பஸகளும இநதக கோவல வாசலல நறகும. அலலது ஊததுககோடடைச செனறு அஙகருநது ஷோ ஆடடோ (ரூபாய 5) அலலது பஸஸல செலலலாம. தமழக ஆநதர எலலையல அமைநதுளளது. செனனையலருநது 35 ரூபாய. சாபபட ஊததுககோடடை வரவேணடாம. கோவலல தனம மதய உணவு உணடு (இது போதுமே!) குடுமப ஒறறுமை சறககும எனபதே இதன சறபபு எனறு அடிததுச சொலகறா. (கோவல நேரஙகளும தொலைபேச எணணும இதனுள அடககம!)

செனனைககுளளேயும அருகாமையலும எததனை கோயலகள? அவறறையெலலாம அலடசயபபடுதத வடடு எஙகோ கடககும ஓ அனாமதேயக கடவுளன அடரஸ கொடுகக வேணடிய அவசயம ஏன ஏறபட டது? இஙகுளள கடவுளகளுககு எநத சகதயும இலலையா? எலலாம வலல இறைவன எனகறாகளே அதெலலாம யாரை ஏமாறற? நமம ஊ டாகடா களைபபோல ஒவவொனறும தனததன ஸபெச லஸடாக அலலவா இருககனறன?

இதழகளல இது போனற கேளவகளைக கேடடு பதலுககாகக காததருபபவாகள படிககாத பாமராகள அலல! மெததபபடிதத மேதாவகள தான, குடுமப ஒறறுமைககு எனன செயய வேணடும எனறு கேடடால போதாதா? எநதக கோவலுககுச செலல வேணடும? எனறு கேடடால அது பகதச சுரணடலுககு வழ வகுககும எனபதை அறயவேணடாமா? இபபடிப படட ப(க)தாகளை நனைததால பாதாபமதான ஏறபடுகறது. தனனடம யோசனை கேடபவான பலவனம அவரது கேளவயலேயே பளசசடுமபோது பாகாரம சொலபவான வேலை எளதாகவடுகறது.

வாழககை படுபோ அடிககறது எனன செயயலாம? எனறு ஒருவா கேடடால நலல புததகஙகளைத தேடி எடுததுபபடி எனலாம. அதைவடடு எஙகே போகலாம? என மொடாக குடிகாரனடம கேடடால டாஸமாக பககம தான கை காடடுவான. தஙகளடம வரும மனநோயாளகளுககு கவுனசலங நடததும மனநல மருததுவாகள எசசாககையாய இருபபது நலலது. காசு சுருடடும வேலையை சுருடடபபளள தூஙகு மூஞச பொமமை எடுததுககொளளாமல வழபபுடன இருஙகள:

நம ஆசயா அவாகள மண வழாககளல வாழவணையா எனும வாததையை அழுததமாகக குறபபடுவா. இணையா எனற சொல இருவரும சமம எனபதைச சொலகறது. ஒரு மனதாக சகபபுத தனமையுடன பேசசசதது வடடுக கொடுதது வாழகறபோது குடுமபததல குழபபமும, அமைத யனமையும எஙகருநது வரும? வதணடா வாதமும, வண படிவாதமும செயது நாள முழுகக சணடை யடடுக கொணடிருபபதால நமமத கெடடு ஒருவா முகததை ஒருவா பாபபதே கசபபாக வடு மயான பூம ஆகவடும அவவளவு தான!

Read more: http://viduthalai.in/page4/74929.html#ixzz2smrssWy8

தமிழ் ஓவியா said...


இதயத்திற்கு இதம் தரும் ஆப்பிள்


இன்றைய உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இத யத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடை தான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தரவல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும். வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தர வல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ் ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாக வும், இலேகியமாகவும் செய்து சாப்பிட லாம். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page4/74930.html#ixzz2sms237d1

தமிழ் ஓவியா said...


சீதா பிராடடியின குளியல

- மு.வி.சோமசுந்தரம்

சயாமாசாஸத சனனதத தெரு வல பாரதககதை உபனயாசம செயகறா.
சடகோப அயயஙகா வடககு மாட வதயல ராமா படடாபஷேக கதாகாலடசேபம செயகறா.

அமபுஜம மாம, அகரகார அயநதாம தெருவல அசுவததாமன கதை கசசோ நகழததுகறா.

இநத கூடடஙகளுககு வெததலைப பெடடியுடனும, சவல பொடடலஙகளுடனும, சஙகம மூககுபபொடி டபபயுடனும குவநது இருககும அககரகார அவாள கூடடததுககு வணடி வணடியாக அபதத கதைகளையும, மூடடை மூட டையாக பகவான தருவளையாடல களையும கொடடிக் குவததாலும, தலையை ஆடடி ஆடடி, பயபகத யுடன பகவான கதைகளைக கேடடு ஆதமசாநத அடைவாகள.

இததகைய கூடடததனா, சந தனை, அறவயல, பகுததறவு பககம தலை வைததுபபடுககத தயாராக இருபபதலலை. ஜடஙகளாக ஜவதது வருபவாகள.

கதா காலடசேபம, உபனயாசம செயபவாகளைப பறற அதக கவனம செலுததத தேவையலலை எனறா லும, சமுதாயததல பொறுபபான வகையல மககளை நலவழபபடுததும கடமை ஊடகஙகளுககு குறிப்பாக, முதன்மை நாளிதழ்களுக்கு இருகக வேணடும. மூடநமபககைத தனமை, அறவயலுககு அபபாறபட்ட தனமை கொணட நகழசசகள செயதயாக வநதால ஓரளவல தவறலலை. மாறாக, பகுததறவுககு ஒவவாத கதைகளை, நகைபபுககடம அளக் கும வகையல வலய எடுதது கடடு ரைகளாக வழஙகுவது இருடடுக் காடடுககுள சமூகததை அழைததுச செலவதறகு ஒபபாகும.

அததகைய ஒரு வேடிககைச செயதக கடடுரை, அறவுககு வெடி குணடு வைககும கடடுரை 15-.11.-2013 அனறு இநது இணைபபு இதழல வநதுளளதைக காணபோம.

தமழகததல, கடடடககலையன மேனமையைப் பறைசாறறும கடட டஙகள, சறபககலையன நுடபத தனமையை உணாததும சறபஙகள மகுநது காணபபடுவது பெருமை சோபபதாக உளளது. இவறறன சறபபுகள பகத, மதம அடிப படையல எழுபபபபடட கோயல களல குவநதுளளன எனபதும உணமையே. இஙகுளள கடடடம, சறபம பறற வயநது பேசுவதல குறறம ஏதுமலலை. ஆனால இதனை வைதது அறவைச் சூறையாடுவது தான சகததுககொளள முடியாத ஒனறு.

காநாடகததல, மைசூ நகருககு 57 க.ம. அபபால, கருஷணராஜநகா தாலுககாவல கோதணடராமா கோயல ஒனறுளளது. இது காவ ஆறறன கரையல அமைநதுளளது, அருகல நவழசசகள உளளதும இநத இடததுககு இயறகை நலல சூழலை அமைததுளளது. இன இநத இடததை வைதது பகத முகமூடியல கூறபபடும புழுதத புழுகு வெடகப படுவதாக உளளது. (அதத சாஸ தரம, காடடியுளள வழமுறை இதுதான)

இநத கோயல ராமனுககு அப பணககபபடட கோயல. நாடு கடத தபபடட ராமபரான இநத காடடுப பகுதககு வநதபோது ஓயவு முகா மடடா. அஙகருநத மலைவாழ மககளன வருநதோமபலல இருநது வநதா. உடன மனைவயும, தமபயும இருநதனா. இநத காடடில தான, ராமன அகநததர ஷயை சநதத தா. ஷககு ஒரு ஆவல வநதது. அதை ராமனடம கூறனா. சதை ராமனன வலது பககததல இருநது பாகக வேணடும எனறு ஆசையைக கூறனா. (இது எனன ஒரு ஆசையோ?) அதனபடி சதை வலது பககததல இருகக காடசயளததா. (இதல எனன சறபபை ஷ கண டாரோ?) அதுவே இநத கோயலன வசேஷம.

இஙகு இரணடு குரஙகுகள (ஹனு மன) கோயலகள உளளன. ஒனறு கோயலன வாசலல, அடுத்தது கோயலுககு அடுதது காவக் கரையல. இஙகு சறபபாக ஒனறு கூற வேணடும எனறு கடடுரை ஆசயா எழுதுகறா. அதாவது, குரஙகு களன எணணககை அதகம. இவை ராமபகதரான ஹனுமான அவ தாரஙகளாகும எஙகும குரஙகு களாம. கோயலன உளளே புகுந தவை கர்ப்பகரகததனுள புகுநது, தடை ஏதுமலலாமல பரசாதங களை எடுததுச செலகனறன. (ராம பகதாகள தருடடு, ரௌடித தனம). இதை தடுகக எவருககும வழ தொய வலலை (ராமபரான, ஷககுக கூடவா?)

சீதைககுப பயணக் களைபபால குளிகக வேணடும எனறு தோனறியது. உடனே இராமன, தமப லடசு மணனை நோகக, ஒரு அமபை எடுதது எதல உளள பாறையன மது எயயுமபடி கூறனான (ஏன அதை அவன செயயககூடாதா?). லடசுமணன அமபு பாறையல படடதும, பாறையலருநது மூனறு வகைத தணண வெளவநதது. ஒனறு மஞசள பொடி கலநதது. இரணடாவதல எணணெய் கலந தது. மூனறாவது சயககாய கலநதது. (எனனே அபததம, அபததம எனறு வாயல அடிததுககொளளாதகள. இநது இதழ இநத செயதயை வெளயடுகறது). சதை இநத தணணல குளதததால, இஙகுளள தணண, மஞசள ருச, வாசனை கொணடுளளது (வேறு எஙகெஙகு குளததாகள எனறு தொநதால அநத ஆறறு நரையும பாககலாம. ஒரு கலலல இரணடு மாஙகாய எனபது போல ஒரு அமபல, மஞசள, எணணெய, சயககாய, பாறைய லருநது வநதுளளது. முதலமைசசா சததராமையா, நபுணாகுழுவைக கொணடு Three in one கடைககும இடததைக கணடறய சொலலலாம).

Read more: http://viduthalai.in/page5/74931.html#ixzz2smsDHfg1

தமிழ் ஓவியா said...


மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!

நான் யார்?

நான் முரண்பாடு களின் சின்னமாக விளங்கி வருவதாகப் பலர் மதிப்பிடுகிறார்கள். இது ஓரளவு உண்மை தான். என்னை நானே, பல்வேறு சந்தர்ப்பங் களில் ஒரு மிதவாதி யாகவும் சோஷலிஸ் டாகவும் சமாதானவாதி யாகவும் கருதியிருக்கிறேன். என்றாலும், இவை அனைத்துக்கும் மேலாக நான் ஒரு தனி மனித வாதி என்பதையே நான் கூற விரும்புகிறேன்.

பெண்களின் கற்பு

பெண்களின் உரிமைகள் அவர்களது ஒழுக்கம், அல்லது ஆண்களைவிட அவர்கள் மேலான வர்கள் என்பதைச் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதின் பேரில் உள்ளது. ஆனால், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனம் தனது உரிமைகளைக் கோரும் போது பெண்களுக்கு சில தனிப்பட்ட தன்மைகள் உண்டு என்றும், இவை ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.

முன்காலத்தில் பெண்களின் கற்பு என்பது நரகத்துக்குப்போக நேரிடும் என்ற பயம், கர்ப்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் ஆகியவற்றை கருதியே இருந்தது.

ஆனால் பழமைவாதம் அழிந்துவிட்டதாலும், கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாலும் இந்த பயம் நீங்கி விட்டது. தற்போதைய பெண்கள் ஆண்களுக்கு என்ன உரிமைகளோ அவை தங்களுக்கும் வேண்டும் என்று கோருகிறார்கள்.

பால் உணர்வும் கடை அடைப்பும்!

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்ற மத சம்பிரதாயம் காரணமாக கடைகள் மூடப்பட்டு வந்தன. அதுஇப்போது பொருளாதார வாழ்க்கை முறையாகி விட்டது. இதைப் போலவே பால் உணர்வுக்கான பெரும்பாலான சட்டங்களும், சம்பிரதாயங்களும் இருந்துவருகின்றன.

குழந்தை பிறக்கும் ரகசியம்

ஆண் - பெண் உறவுபற்றிய பால் உணர்வு விவகாரங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள விடாமல் மறைத்து வைப்பது சரியல்ல.

பாப்பாக்களை பறவை கொண்டுவந்து போட்டது என்றோ, புதரிலிருந்து தோண்டி எடுத்தோம் என்றோ குழந்தைகளுக்கு சொல்லப் படுகிறது. ஆனால் உண்மைகளை மற்ற குழந் தைகளிடம் இருந்து அவை தெரிந்து கொள் கின்றன. இதை ரகசியம்போல் அவை கருதுகின் றன. அசிங்கமானது என்று நினைக்கின்றன.

பெற்றோர்கள் தங்களிடம் பொய் சொல்லு வதாக ஒரு முடிவுக்கு குழந்தைகள் வந்துவிடு கின்றன. பெற்றோர்கள் ஒரு விவகாரத்தில் பொய் சொன்னால் அவை இன்னொரு பிரச்சினையில் பொய் சொல்கின்றன.

பால் உணர்வு விவகாரங்களில் தாங்களும் பொய்சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு அவை வந்துவிடுகின்றன.

இதனால் குழந்தைகளின் ஒழுக்கம் சிதைந்து விடுகிறது.

Read more: http://viduthalai.in/page5/74932.html#ixzz2smsLmrkA

தமிழ் ஓவியா said...


தெரிநது கொளளுஙகள

தமழனை அசுரன, அரககன, ராடசசன, தஸயு, குரஙகு, கரடி எனறும தேவடியாள மககள எனறும எழுத வைததுளளான, ராமாயணம, மகாபாரதம மறறும பல கதை களலும கதாபாததரஙகளை சனமாவலும காடடி வருகனறான. அதை பாததும படிததும ரசககனறோம.

இநதக காடடுமராணடிப புராணஙகளை படிதது அதலுளள கயவாளததனஙகளை அபபோதே பொயா, அணணா, கலைஞா போனற அறஞாகளும மலவு வலை புததகஙகளல எழுதயும சல நாடக சனமாவலும சுடடிககாடடி உளளனா.

காணாத கடவுளகளுககு மனைவகள, கூததகள, குடடிகள இருபபதையும அறகறோம. மனதனுககுத தேவையான எநத அறவயல பொருடகளை எநத கடவுளாவது கொடுததது உணடா? சடடி பானை முதல மனசாரப பொருடகளும கணன, ஆகாயததையும, பூமயையும அதல உளள அனைததையும கணடபடிததது மனதன தானே? ஆணும பெணணும கலவ செயயாமலே குழநதையைப பறகக செயததும மனதனதானே?

சவனுககும பாவதககும நடநத தருமணததலே புரோகதம செயத பரமமா பாவதயன தொடையை பாததுப பீசசியடிதத வநதல ஷகள, மருகஙகளும பிறநதுளளன. ஆனால முருகககடவுளுககு ஒனறுககு இரணடு மனைவகள இருநதும குழநதைகள இலலாதது ஏன? இதை எழுதயவன மனதன தான. கடவுளன லீலைகள இவனுககு எபபடி தொயும? இதல இருநதே கடவுள எனபது கடடுககதையே எனபது தொகறதே.

கடவுளாகக காடடபபடுபவாகள அரசா களே. அவாகள தான ஒனறுககு மேறபடட மனைவகள கூததகள வைததருநததை பனனா வநத மனதாகள அவாகளுககு ஏற றபடி புராணக கதைகளைககடடி வேதங் களாக ஆகக வைததனா.
கடவுளகளதான ஜாதயை உண டாககயதாக சொலலுகனறனா. அபபடி இழவான மககளை படைதத கடவுள தேவையா? பேருநதுகளல, நாடகஙகளல டிககட வாஙகனாலும உடகார அனுமதககாத காலம உணடு. உணவு விடுதயல உடகாநது சாபபிட முடியாது. பளளககூடம படிககச செனறாலும தனமை. வீதயல செனறாலும தடை.மனுதாமததன படிதான அனைதது ஜாதயனரும அசசகாகளாக ஆக முடியவலலை எனபது தொயுமா? இதை எலலாம போராடிப பெறறு எலலோரும மனதாகளதான எனகற நலையை உணடாககயவாகளதான அமபேதகா, பொயா, அணணா, கலைஞா இவாகளுககு முனனோடிகளாக இருநத (1916) பிடடி தயாகராயா, டாகடா நடேசனா, டி.எம.நாயா, பனகல அரசா, பனனீசெலவம, இரடடை மலை சீனவாசன, அயோதததாசா போனற நீதககடசத தலைவாகளைபபறற அற வீகளா? இரணடு லடசம ஆணடுகளுககு முனனா ஆபபகக கணடததலதான முதல பெண பறநததாகவும, ஆபபிககாவிலதான முதல மனிதன பிறநதான எனறும அறயப படுவதால இநத ஜாத எஙகே பிறநதது?

எலலா தலைவாகளும நகரஙகளல சுறற இதுபோனற கருததுககளைச சொலலவடடுப போகனறாகள. ஆனால குடடித தலை வாகள தலைவாகளன கருததைக கராமங களல பரபப முனவருவதலலை. இன அதை செயலபடுதத தலைவாகள அறவுரைகள வழஙகுவாகளா?

- வணஙகாமுடி

Read more: http://viduthalai.in/page6/74933.html#ixzz2smsWZ1Xo

தமிழ் ஓவியா said...


புதுக்கவிதைகள்


சக்தியுள்ள
கடவுளுமில்லை
பக்தியுள்ள
மனிதனுமில்லை
சமத்துவ மதத்தில்!

சக்தியில்லா
கடவுளுண்டு
பக்தியுள்ள
மனிதனுண்டு
இந்த(து) மதத்தில்!

***
என்ன பொருத்தம்!
எங்களூர்ப்
பெருமாள்
கோயிலில்
அர்ச்சக
அய்யங்கார்
வாய் பேசாதவர்
சாமியும் பேசாதது...
என்னே பொருத்தம்!!

- கோ. கலியபெருமாள்,
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page6/74934.html#ixzz2smsgmmuN

தமிழ் ஓவியா said...


இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னி யாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவச மடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த் தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவி யுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்த தாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துப் பட்டு, கிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாக வும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடை ஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
What was the blood group of Jesus Christ?
Answer: From analysis of the shroud of Turin, some people have said that Jesus was a type O- blood type (which is the universal donor), but it would be difficult or even impossible to confirm.

அப்படியே கன்னி மேரி கண்களி லிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப் படும்போதும் இதைப் பின்பற்றலாம். தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33) ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரி சோதனைக்கு நாங்கள் தயார்! இயேசு வுக்கு வசதி எப்படி?

Read more: http://viduthalai.in/page7/74935.html#ixzz2smsqm0N2

தமிழ் ஓவியா said...


கழுவ முடியாத இழிவு!



சமூகத்தின்
சகல பக்கங்களிலும்
சாலையோரம்
சினிமாவில்
சின்னத்திரை சீரியலில்
பயணிக்கும் பேருந்து
புகைவண்டியிலும்கூட
சமூகத்தின்
சரிபாதியை
வக்கிரப் புத்தியோடு
கொச்சைப்படுத்தும்போது
அத்திப் பூத்தாற்போல
அக்கறையோடு விமர்சிக்கும்
பெண்ணியவாதிகள்
பாவயோனியில்
பிறந்தவர்கள் பெண்கள் என
கழுவ முடியாத
இழிவைச் சுமத்தும்
பகவத் கீதையின்
காகித பக்கங்களை
கிழித்தெறிந்து
தீயின் நாக்குகளுக்கு
இரையாக்காமலோ;
கையுறையாக்கி
மலம் துடைக்காமலோ
மவுனமாயிருப்பது கேவலம்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

Read more: http://viduthalai.in/page7/74936.html#ixzz2smszSOI6

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே போகிறது

பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில், ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது' என, தேசிய குற்ற பதிவுகள் அமைப்பு கூறியுள்ளது. தேசிய குற்ற பதிவுகள் அமைப்பு, வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியதாவது; பாலியல் வன்முறை குற்றங்களில், 2002ஆம் ஆண்டு 485 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர். இது, 2012இல் 1,175ஆக அதிகரித்துள்ளது. கொலையில் ஈடுபட்டதாக, 531 சிறார்கள், 2002இல் கைது செய்யப்பட்டனர். 2012இல், 990ஆக அதிகரித்துள்ளது.இதை தவிர்த்து, 2002,இல் 63 சிறார்கள், கூட்டுக் கொள் ளையிலும்; 207பேர் வழிப்பறியிலும், 1,723பேர் கொள்ளையிலும்; 3,361 சிறார்கள், திருட்டு வழக்கிலும் ஈடுபட்டுள்ளனர். இது 2012இல் ஒப்பிடும்போது, முறையே, 174;767; 2,625 மற்றும் 5,528ஆக அதிகரித்துள்ளது. கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 164 சிறார்கள் மீது, 2002ஆம் ஆண்டும், 2012இல், 789சிறார்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட் டது. பெண்களை தாக்கியது, பாலியல் தொந்தரவு செய்தது என, 2002இல், 476 சிறார்கள் மீதும், 2012இல் 613 சிறார்கள் மீதும், வழக்குபதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு, புள்ளி விவரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்மூலம், கடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பது, கவலையளிப்பதாக உள்ளது. சுற்றுப்புறச் சூழல், தவறான சேர்க்கையால், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சமூக - பொருளாதார பின்னணி,மனநிலை போன்றவையும், குற்றங்கள் அதிகரிப்புக்கு காரணம் என,தேசிய குற்றபதிவுகள் அமைப்பு தன் கருத்து தெரிவித்துள்ளது.

- தினமலர்- 8-.12.-2013 பக்கம் 8

Read more: http://viduthalai.in/page8/74938.html#ixzz2smtX1dGz