Search This Blog

26.2.14

ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் - பிப்ரவரி 26


ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் (பிப்ரவரி 26)
ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை!

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை

உலகத் தமிழர்களால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிற ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளில் (பிப்ரவரி 26) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2012ஆம் ஆண்டில் பிரிட்டானியப் பாராளுமன்றத்தில் கூடிய, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய உலகின் பன்னாடுகள் சார்ந்த அமைப்புகளாலும், தொண்டு  நிறுவனங்களாலும் ஒரு முக்கிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்றை அய்.நா.வின் உறுப்பினராக உள்ள நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி  26ஆம் நாளை ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர்.
இலங்கை அரசுக்கு அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டுவதும், அந்த அடிப்படையில் அய்.நா. செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தவும் உலக நாடுகளும் அய்.நா.வுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று கோரவும் இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இலங்கை அரசுக்கு அய்நா மனித உரிமைக்கவுன்சிலின் பரிந்துரைகள்

1.    பாதிக்கப்பட்ட மக்களிடம் வெறுப்பு விரோத மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரத்தில் கண் துடைப்பான விசாரணையை போலல் லாமல் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும் ; மனித உரிமை மீறல்பற்றிய விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும்; மேலும் இதுவரை நடந்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை மறு ஆய்வு செய்து அதையும் சர்வதேச சட்ட திட்டத்திற்கு ஏற்ப மறு விசாரணை செய்யவேண்டும்

2.    தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் தீவிரவாத செயல்கள் புரிந்தவர்கள் என்று கூறி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் மீதான அதீத கட்டுப்பாடுகளை விலக்கி, அவர்களுக்கான சட்ட உரிமைகளை வழங்கவேண்டும்.

3.    சிறுபான்மை சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பற்றி பக்கச்சார்பின்றி விசாரணை நடத் தப்பட வேண்டும்; மற்றும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்கள்  கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளிக்கவேண்டும்.

 மனித புதை குழிகள்

4.    சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழிகள் பற்றி மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் படி தகுந்த விசாரணை நடத்தி, அது பற்றிய உண்மைகளை உலகிற்குக் கொண்டுவரவேண்டும். குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும், நோக்கிலோ அல்லது அவர்களை தப்பவைக்கும் செயலிலோ இறங்கக்கூடாது.

5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். மேலும் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப அம்மக்களின் புகார்களுக்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கான இழப்பீடு கொடுப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

6.    விடுதலைப்புலிகளின் காலத்தின் போதும், இறுதிப் போருக்குப் பிறகும் இராணுவக்குழு அமைத்த நீதிமன்ற விசாரணைகளை உடனடியாக வெளியிடவேண்டும், அதே நேரத்தில் இலங்கை அதிபரின் நேரடிப் பார்வைக்கு இந்த அறிக்கையை அனுப்பி, அங்கிருந்து அதன்மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடவேண்டும்.

7.    இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்களின் விளைநிலங்களை ஆக்கிரமித்த இராணுவ நடவடிக்கை குறித்தும், அப்படி ஆக்கிரமித்த நிலங்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்து, அந்த நிலங்களில் வாழுபவர்களின் மீதான குற்றவியல் தொடர்பான விசாரணைகளை விரைந்து விசாரிக்கவும் மற்றும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து சுமுகமான வாழ்க்கை வாழ அரசு அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்

8.    சர்வதேச மனித உரிமைகள் காட்டிய வழிகளின் படியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் படியும் குழு ஒன்றினை அமைக்க வேண்டும்; அந்தக் குழுவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வர்களின் பிரதி நிதிகளை நியமித்து, அவர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து பெறவேண்டும். 

தேவை ஓர் உயர் ஆணையம்

9.    மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஓர் உயர் ஆணையம் ஒன்று அமைத்து,  அறிக்கைகளை உடனுக்கு உடன் மனித உரிமை ஆணையத்துக்கும் இதர விசாரணை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

10.    இறுதியாக மனித உரிமைக்குழுக்கள் இலங்கை யில் சுற்றுப்பயணம் செய்து தெரிவித்துள்ள தகவல்களின்  அடிப்படையில் விசாரணைனையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கைகள் எவ்வித ஒளிவு மறைவின்றி நடைபெறவேண்டும். இவற்றைக் கண்காணிக்க சிறப்புப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்கவேண்டும்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட கொடுமைபற்றி..

11. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மரணம் கொலை என்றே நிரூபணம் ஆகிறது; இராணுவ வீரர்களிடம் சரணடைந்த பாலச்சந்திரன் முதலில் நிராயுதபாணியாக ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். இது முதல் படத்திலும், அதே இடத் தில் மார்பு வயிறு போன்ற இடங்களில் குண்டுப்பட்டு இறந்த நிலையில் உள்ள படம் இரண்டும் ஒரே காமிராவில் எடுக்கப்பட்டது. இந்த கொடுஞ்செயல் குறித்தும், விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் என்ற துரைராஜசிங்கம் முதலில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது குறித்து பல நேரில் கண்ட சாட்சிகளும் அலை வரிசை (சானல்) 4 வெளியிட்டுள்ள ஆவணப் படங்களிலும் காணப்படுகிறது, அதன் பிறகு வெளியான காட்சிகளில் மிகவும் கோரமாக அவர் கொலை செய்யப் பட்டு பாதி எரிந்த நிலையில் பிணமாகக் காணப்படுகிறார். இந்த கொலைச்சம்பவம் குறித்தும் சுபா என்ற இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் உயிரோடு சரணடைந்தும் பிறகு அவர் கோரமாக பிணமாகக் கிடந்த காட்சியும் வெளியாகி இருந்தது,  மேலும் வெள்ளைக் கொடியுடன் இராணுவ உயரதிகாரிகளின் முன்னிலையில் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள்  பிணமாக இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளன,

பத்திரிகையாளர்கள் படுகொலை

12) மற்றும் இலங்கைப் போரின் போது பல பத்திரி கையாளர்களும் கொல்லப்பட்டனர்; இதுகுறித்து பொது வான விசாரணை ஒன்றை அமைக்கவேண்டும். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை ஆரம்பக் கட்ட விசாரணை யைக்கூட இலங்கை அரசு துவங்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பரிந்துரைகளை மனித உரிமை ஆணையம் அய்.நா.வுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் தாமதிக்காமல் மனித உரிமை அமைப்புகளும் உலக நாடுகளும், அய்.நா.வும், குறிப்பாக இந்தியாவும் இந்த மனிதஉரிமை காக்கும் பணியில் தத்தம் கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் உலகத் தமிழர்கள் அறிவித்துள்ள இந்த நாளில் (பிப்ரவரி 26) வலியுறுத்துகிறோம்.

----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம், சென்னை  - 25.2.2014

16 comments:

தமிழ் ஓவியா said...


அதிர்ச்சியூட்டும் கொலை!


சென்னை - கேளம்பாக்கத்தையடுத்த சிறுசேரியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றிய உமா மகேஸ்வரி படுகொலை செய்யப் பட்டுள்ள சேதி - நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக உள்ளது.

டில்லியிலே மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது டில்லிப் பெரு நகரமே பற்றி எரிந்தது. தலைநகர மக்கள் எல்லாம் திரண்டு எழுந்தனர். சட்டம், ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ந்து பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2013 டிசம்பர் வரை தமிழ்நாட்டில் பாலியல் கொடூரங்கள் 584 பாலியல் சீண்டல் 721 கடத்தல் 1379 இன்னும் பல; இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் வழக்குகள் 5861 இதில் பாலியல் வன்முறை 1751 என்று நீள்கிறது. ஆனால், நம் நாட்டு ஊடகங்கள் ஊமைகளாகி விட்டன; தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஓசையற்றுப் போயின. இந்த இலட்சணத்தில் உள்ள இந்த ஊடகங்கள் தான் உலகத்துக்கே உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!

மென் பொருள் நிறுவனத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளரின் உடல் அழுகிய நிலையில், கண்டுபிடிக்கப்படுவதற்கே ஒன்பது நாட்கள் தேவைப்பட்டுள்ளது காவல்துறைக்கு.

நம் சமுதாயப் பெண்கள் கல்வி பெறத் தலைப்பட்டதே அண்மைக் காலம்தான். அதுவும் பொறியியல் பட்டதாரி ஆகி, வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு நிறு வனத்தில் பணியாற்றுவது என்பதெல்லாம் நல்ல முன்னேற்றம் - வளர்ச்சிப் போக்கு என்று கருதும் நிலை யில் பெண்களை இப்படி வக்கிர புத்தியோடு கொடூரத் திற்கும் ஆளாக்குவதை எப்படி தான் பொறுத்துக் கொள்வது!

புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயம், தவறாகப் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள், நுகர்வோர் கலாச்சாரம், சினிமாக் கலாச்சாரம் உள்ளிட்ட ஊடகங்கள் பரப்பும் கீழ்த்தர வக்கிரங்கள்தான் இவற்றிற்கு மூலாதாரங்களா! மனித குலத்தின் மேன்மைக்கு ஊடகங்கள் பயன்படுமேயானால் இருகரம் குவித்து கனிவுடன் வரவேற்கச் செய்யலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக அல்லவா, அநாகரிகமாக அல்லவா தடம் புரண்டு குப்புற அல்லவா வீழ்ந்து கொண்டு இருக்கின்றன. மருத்துவக் கல்லூரி மாணவியும், மாணவனும் திருடு கிறார்களே! கல்வி முறை மாற்றப்பட வேண்டாமா? தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் வெட்டு, குத்து, கொலை என்பது அன்றாட வானிலை அறிக்கை போல நடந்து கொண்டு இருக்கிறது. ஊராட்சித் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்ற வர்கள் எல்லம்கூட பட்டப் பகலிலேயே படுகொலை செய்யப்படுகிறார்களே! பட்டப் பகலிலே பணப் பறிப்பு, நகைகள் பறிப்பு என்பது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறதே!
பெரும்பாலும் தனியே வாழும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கழுத்து அறுக்கப்படுகிறார்கள் என்னே கொடுமை! பெண்கள் பாதுகாப்பற்று வாழும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்றால், அதில் தமிழ்நாடு முதலிடத்தில் நின்று தலைமை தாங்கும் தகுதியைப் பெற்று விடும்போலும்!

அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் தலைவர்கள் கூட பெரும்பாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏடுகள், அரசு விளம்பரங்கள் என்ற இலஞ்சக் குளியலில் மூழ்கிக் கிடக்கின்றன.

நமது முதல் அமைச்சர் ஏதோ புள்ளி விவரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆட்சியைவிட எனது ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதாக மனதறிந்து உண்மைக்கு மாறாகத் தகவல்களை வெளி யிடுகிறார். அப்படிப்பட்ட செய்திகளை மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து நமது ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

காவல்துறைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏராள மான வகையில் சலுகைகள் எல்லாம் வாரி வழங்கப்படு கின்றன. வாகனங்கள் தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன. காவல்துறைக்கு நேரிடையாகத் தேவைப்படுகின்ற பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமிக்காமல் காவல் துறைக்குத் துணை புரிவதற்காக பல்லாயிரக்கணக்கில் சிறப்புக் காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளது (10099) (கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்து தர வேண்டாமா?)

ஒரு பக்கத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள் - சற்றும் மனிதாபிமானமின்றி.

மக்கள் நல அரசு என்பது போய், கட்சி நல அரசு என்ற மகுடம் என்னும் பாட்டையில் அரசு நடைபோடுமே யானால், அதனை வெகு விரைவில் மக்கள் புரிந்து கொள் வார்கள். கடந்த கால அரசியலை சரி வரக் கணிப்பவர் களுக்கு இதுமிக நன்றாகவே தெரியும்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் இதெல்லாம் தெரியா மல் இருக்கலாம் - கண்களை மறைக்கலாம் - போகப் போகத்தான் புரியும்; காலம் கடந்து தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

Read more: http://viduthalai.in/page-2/75948.html#ixzz2uOIPXhcR

தமிழ் ஓவியா said...


இழிநிலை



உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75947.html#ixzz2uOIWuKqX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -3


- குடந்தை கருணா

சென்ற ஆண்டு 2013 ஜூன் மாதத் தில், கேதார்நாத்தில் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டு, சுற்றுலா சென்ற பல்லாயிரணக்கான மக்கள் இறக் கவும், பலர் மீள முடியாமல் தவிக்க வுமான நிலை ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், (தமிழ்நாடு உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுத்தன.

ஆனால் குஜராத் மாநில அரசு சார்பில், அதன் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக அங்கே சென்று ஏறத்தாழ 15000 குஜராத் மக்களை இரண்டொரு நாள்களில் விரைந்து காப் பாற்றினார் என செய்தி பரப்பினர், மோடி புகழ் பாட, பல கோடிக் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்கோ ஏஜென்சி (கிஜீநீஷீ கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ) கஜகஸ்தான் சர்வாதிகாரிக்கும், அமெ ரிக்கப் புகையிலை அதிபர்களுக்கும் சேவை செய்யும் அமெரிக்க நிறுவன மான இந்த அப்கோ ஏஜென்சிதான், மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையும் மனதில் கொள்க. மற்ற மாநிலங்கள் பத்து நாட் களுக்கு மேல் போராடியும் வெள் ளத்தில் சிக்கித் தவித்த 40000 மக்களை காப்பாற்ற முடியாமல் திணறின, கேதார்நாத்பகுதி முழுவதும் வெள் ளத்தின் காரணமாக சாலைகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மோடியால் 15000 மக்களை எப்படி காப்பாற்ற முடிந்தது? மோடி இந்த சூப்பர் மேன் செயலுக்கு 80 இன்னோவா கார்களை பணியில் அமர்த்தி இரண்டு நாள் களில் 15000 பேரை காப்பாற்றினார் என கதை அளந்தது அப்கோ நிறுவனம்.

கேதார்நாத் பகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள டேகராடூன் என்ற ஊருக்கு சென்றால் தான் அங்கிருந்து ரயில் அல்லது விமானம் மூலம் புதுடில்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்ல முடியும். கேதார் நாத்திற்கும் டேகராடூனுக்கும் உள்ள தூரம் 221 கி.மீ. மலைப் பகுதி என்பதாலும், வெள்ளத்தால் சாலை கள் பாதிக்கப்பட்டதாலூம், 40 கி.மீ. வேகத்தில் செல்வதே கடினம். ஒரு முறை செல்ல 6 மணி நேரம் ஆகும். திரும்ப வர 6 மணி நேரம் ஆகும். 24 மணி நேரத்தில், காரை நிறுத்தாமல் சென்றால், இரு முறை தான் செல்ல முடியும். மோடி ஏற்பாடு செய்திருந்த 80 இன்னோவா கார்களும் ஒரு பயணத் திற்கு 720 மக்களை ஏற்றிச் செல்ல முடியும். 15000 மக்களை அழைத்து செல்ல 21 முறை செல்ல வேண்டும். ஆனால், 15000 மக்களை இரண்டு நாட்களுக்குள்ளாக 80 இன்னோவா கார்களில் ஏற்றிச் சென்று மோடி காப்பாற்றினார் என மோடி ஏற்பாடு செய்திருந்த அப்கோ நிறுவனம் மூலம் செய்தி பரப்புகிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மோடி புளுகு. அப்பட்டமான மோசடிப் புளுகு.

Read more: http://viduthalai.in/page-2/75955.html#ixzz2uOIef3IZ

தமிழ் ஓவியா said...


நீடாமங்கலத்தில் எழிலரசன் - ரேணுகா திருமணம்



1935 இல் இக்குடும்பத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தை குடிஅரசிலிருந்து எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை

நீடாமங்கலம், பிப்.25- 1935 இல் இக்குடும்பத்தில் தந்தை பெரியார் நடத்தி வைத்து சுயமரியாதைத் திரு மணத்தை குடிஅரசு இதழி லிருந்து எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார்.

நீடாமங்கலம் இராஜேஸ் வரி திருமண மண்டபத்தில் 24.2.2014 அன்று காலை 10 மணிக்கு ச.எழிலரசன், ந.ரேணுகா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற் றது.

அனைவரையும் வர வேற்று நீடாமங்கலம் தி.க தலைவர் பி.எஸ்.ஆர். அமிர் தராஜ் உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்க ராசு, பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், திருவா ரூர் மண்டல தலைவர் இரா.கோபால், பட்டுக் கோட்டை மாவட்ட தலை வர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக தலை வர் ப.சிவஞானம், பொதுக் குழு உறுப்பினர் ஆ.சுப்பிர மணியம், ஒன்றிய தலைவர் கோ.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் எம்.பொன் னுசாமி ஆகியோர் முன் னிலை ஏற்று மணமக்களை வாழ்த்தினர்.

வாழ்த்துரை

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ராசமாணிக் கம், மன்னை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராசா, நீலன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைபள்ளி தாளாளர் உ.நீலன், சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் அரியலூர் ஆறுமுகம், சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் சித்த மல்லி சோமசுந்தரம், ராசகிரி கோ. தங்கராசு, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோ ரது வாழ்த்துரைக்கு பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பி.எஸ்.ஆர்.அமிர்த ராஜ் - அமிர்த ஜோதி ஆகி யோரது மகன் ஏ.எழிலரசன் - எஸ்.ராமசாமி, இந்திரா ஆகியோரது மகள் ஆர். ரேணுகா ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். நிறைவாக பி.எஸ்.ஆர். மாத வராஜ் நன்றி கூறினார்.


தமிழ் ஓவியா said...

இந்நிகழ்ச்சிக்கு இராம சாமி சித்திரா, பார்த்திபன், அன்பரசி, செல்வகணபதி, இரத்தினசெல்வி, செல்ல ராசு, கனிமொழி, காவியா, ஜெயசூரியா, விக்னேஷ், நிரஞ்சன், தர்மராஜ், நேகா போன்ற குடும்பத்தாரும் மற்றும் பல்வேறு இயக்கங் களை சேர்ந்த தோழர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மண வீட்டாரின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. தமிழர் தலைவர் எழுதிய சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும் என்ற நூலினை மணமக்கள் தமிழர் தலைவரிடம் பெற் றுக்கொண்டனர். டி.ஆர்.பி.ராசா தமதுரை யில், இங்கே வரும் வழியில் நீடாமங்கலம் ரயில்வே கிராசில் அய்யா அவர்களும், நானும் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டு வருவ தற்கு தாமதமானது; இங்கே ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ. 35 கோடி எனது தந்தை யார் ஒதுக்கினார். நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்தப் பணி இந்த ஆட்சி யினால் அப்படியே நின்று போய் உள்ளது. நாகப்பட்டி னம் வரை 4 வழிச் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப் பட்டு அந்தப் பணி அப்ப டியே நின்று போய் உள்ளது. இது போன்ற மக்கள் நலப் பணிகள் இந்தப் பகுதியில் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக உள்ளது இந்த ஆட்சி. மக்கள் உங்கள் வீட்டை பற்றியே சிந்தித்து பேசிக்கொண்டு இருப் பதை நிறுத்தி விட்டு கொஞ் சம் பொது விசயங்கள், நாட்டில் நடக்கும் அவலங் களைப் பற்றி சிந்தியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில் குறிப்பிட் டதாவது:-

இங்கே இந்தக் குடும்ப மணவிழாவில் நான் பங் கேற்பது நம் தலைமுறை மண விழா ஆகும். மண மகனின் தாத்தா திருமணம் தந்தை பெரியாரால் நடத்தி வைக்கப்பட்டது. இவரது தந்தை திருமணத்தை 22.8.1971 அன்று நான் நடத்தி வைத் தேன். இவர்களது திரு மணத்தை நான் நடத்தி வைக்கிறேன். இவர்களது குழந்தைகள் திருமணத்தை யும் நடத்தி வைப்பேன்.

தமிழ் ஓவியா said...

இந்தப் பகுதியில் ஆசிரி யர் சோமசுந்தரம் கொள் கையில் தீவிரமாக இருந்த வர். அவர் நடத்திய நாடகங் களில் எல்லாம் நான் கலந்து கொண்டு பார்த்திருக்கி றேன். ரத்னசபாபதி அய்யா விடமும், அன்னை மணியம் மையாரிடமும் மிகுந்த ஈடு பாடு கொண்டவர்.

தந்தை பெரியார் அவர் கள் சில முடிவுகள் எடுக்கும் போது முல்லைவாசன் அவர்களிடம் கலந்து கொண்டு எடுத்து இருக்கிறார்கள். நான் நிறைய வெளியூர் சுற்றுப் பயணத்தில் பங்கேற்று பணிச்சுமையில் இருந்த போதும் இந்த மணவிழா வில் அவசியம் பங்கேற்க வேண்டும் என வந்துள் ளேன். மணமகனின் தாத்தா - பாட்டி பெரியார் கொள் கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கிராம அதிகாரியாக இருந்த நிலை யிலும் கொள்கை மாறாத வராக இருந்தார். அவரு டைய மணவிழா பெரியார் தலைமையில் நடந்தது. அந்த பெரியார் கொள்கை யில் இன்றளவும் இந்தக் குடும்பம் மாறாமல் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.

1935 இல் பி.எஸ்.ரெத்தினசாமி - தனலட்சுமி ஆகியோரின் மணவிழா

1935 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமண மாக நடைபெற்றது. 1935 மே 12 ஆம் தேதி குடியரசு இதழில் வந்த செய்தியை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:

நீடாமங்கலத்தில் முல்லைவாசல் பி.எஸ்.ரெத் தினசபாபதி - தனலெட்சுமி ஆகியவர்கள் திருமணம் சுயமரியாதை முறையில் 5.5.1935 அன்று காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இத் திருமணத்திற்கு நீடாமங் கலம் பிரமுகர் தோழர் நட ராஜபிள்ளை வரவேற்று தோழர் முத்துசாமி வல்லத் தரசு எம்எல்சி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

நீடாமங்கலம் சமதர்ம சங்க தலைவரும், யூனியன் போர்டு தலைவருமான தோழர் அ.ஆறுமுகம், பஞ் சாயத்து போர்டு மெம்பர் தோழர் சோமசுந்தரம் ஆகி யோர் (தந்தை பெரியார்) ஈ.வெ.ராவை முன்னிலை வகிக்கக் கேட்டுக்கொண் டார்கள். இத்திருமணத்திற்கு மணமகனுடைய பிடிவாதத் தால் குறிப்பிட்ட பெண் ணுக்கும் மாப்பிளைக்குக் சுயமரியாதை திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் மணமக்கள் ஒருவரை ஒரு வர் தாங்களாகவே தேர்ந் தெடுத்துக் கொண்டார்கள். பெண்ணைப் பற்றி மாப் பிள்ளையின் தகப்பனாருக்கு பிடிக்கவில்லை. காரணம் மூத்த மகனுக்கு அதே வீட் டில் கல்யாணம் செய்ததில் சம்பந்திகளுக்குள் ஒற்றுமை யில்லையாம்; ஆனால் அந்த தம்பதிகள் நேசமாகத் தான் வாழ்கிறார்களாம். இந்நிலை யில் மணமகள் தந்தையார் அத்திருமணத்தை ஆட்சே பித்ததோடு திருமணத்துக் கும் கடைசி நிமிடம் வரை வருவதில்லை என்ற முடி வோடு இருந்தார். மணப் பெண் மண ஒப்பந்தத்தைச் சொல்லும்போது மிகக்கம் பீரமாக இருந்ததைச் சபை யோர் கண்டு ஆனந்தித்தார் கள். பிறகு தோழர் ஈ.வெ. ரா.வை பேசும்படி கேட் டுக்கொண்டார்கள்.

ஈ.வெ.ரா அவர்கள் எழுந்து சுயமரியாதைத் திருமணம் என்பது சீர் திருத்தத் திருமணமே ஒழிய மற்றபடி வேறு அல்ல என் பதாக பல மேற்கோள் களுடன் சிறிது நேரம் பேசி னார். அதில் 10 வருஷத்துக்கு முன்னால் நடந்த தனது திருமணமும் இந்த மாதிரி தன் தகப்பனாருக்கு இஷ்ட மில்லாமல் நடந்ததாகவும் தனது மனைவியை மணக்க திருமணத்தின் போது தந்தை தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னதாகவும் அதனால் தந்தையார் சாப் பாட்டு இடத்திலேயே இருந் தாரே ஒழிய மணக்கொட் டகைக்கு வரவில்லை என் றும் மற்றபடி செலவு விஷ யத்தில் அவர் ஏதும் குறுக்கி டவில்லை என்றும் அய் ரோப்பியர் வந்தபோது மாத் திரம் வரவேற்க வந்ததைத் தவிர மற்றபடி எந்த காரி யத்தையும் கவனிக்க வில்லை என்றும் பிறகு தன் மனைவி விஷயத்தில் தன் தகப்பனார் மிக பாரபட்ச மாக இருந்தார் என்றும் ஒவ்வொன்றுக்கும் மனை விக்காக சிபாரிசுக்கு வந்து தன்னைக் கண்டித்தாரென் றும் சொல்லி அதுபோலவே இப்போது மணமகன் தந்தையாருக்கு ஏதோ சிறிது அதிருப்தி இருந்தாலும் அது சீக்கிரம் சரிப்பட்டுப் போகும் என்றும் சொன் னார். பிறகு மணமகள் சபைக்கும் தலைவருக்கும் தோழர் ஈ.வெ.ராவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண் டார்கள்.

மாலை 5 மணிக்கு சீனி வாசபிள்ளை சத்திரத்துக்கு எதிரில் தோழர் ஆறுமுகம் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது அதில் அரசியலும், சமூக இயலும் என்பது பற்றி தோழர்கள் வல்லத்தரசு அவர்களும் ஈ.வெ.ராவும் பேசினார்கள் என குடியரசு இதழில் வந் ததை எடுத்து கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/75958.html#ixzz2uOJGm0z2

தமிழ் ஓவியா said...

ஏமாற்று வேலை!

எப்பொழுதாவது எங் கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குற்றங்களோ இருந்தால் அதற் காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத்சிங்!

மன்னிப்புக் கேட்க வேண்டியவர் மோடி யல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/75978.html#ixzz2uTtoRCiF

தமிழ் ஓவியா said...


வரலாற்றுப் பிழைகளின் குப்பைத் தொட்டியான மோடி ராஜ்ஜியம்

காந்திநகர், பிப்.26- வர லாற்று விவரங்களை தப் புத்தப்பாக குஜராத் முதல் வர் நரேந்திரமோடி பேசி வருவது ஒன்றும் தற்செய லான விஷயமல்லவோ என்று சந்தேகம் கிளம்பு மளவுக்கு அம்மாநிலப் பள்ளிப்பாடங்கள் அமைந் துள்ளன. இமாலயத்தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்

ஆங்கில மொழி வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகம் மொத்தம் 124 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 59 பிழைகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும்மாதிரிதான் என்றும், கிட்டத்தட்ட ஆங் கில மற்றும் குஜராத்தி வழிக் கல்வி ஆகிய இரண்டிற்கு மான பாடப்புத்தகங்களில் இப்படித்தான் நிலைமை உள்ளது என்று குற்றம் சாட் டுகிறார்கள் கல்வியாளர்கள். அதோடு நிற்கவில்லை, இவையெல்லாம் பிழைகள் என்று சொல்வது பிரச்சி னையைக் குறைத்து மதிப் பிடுவதாகும். இமாலயத் தவறு என்று சுட்டிக்காட்டு கிறார்கள் அந்தக் கல்வி யாளர்கள்.

யார் சுட்டுக் கொன்றது?

சில எடுத்துக்காட்டுகள், இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு வீசித்தாக் கியது. நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்தி யார், அக்டோபர் 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப் பட்டார். (தேதியைத் தவ றாகக் குறிப்பிடும் பாடப் புத்தகத்தில் யார் சுட்டுக் கொன்றது என்ற விபரம் கவனமாக நீக்கப்பட்டிருக் கிறது).

தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் தீவிர வாதிகள் என்று அழைக்கப் பட்டனர். 1947 இல் நாடு பிரிந்த போது, இஸ்லாமிய இஸ்லா மாபாத் என்கிற புதிய நாடு உருவானது.

அதன் தலை நகராக இந்துகுஷ் மலைத் தொடரிலுள்ள கைபர்காட் அமைந்தது. ஆயிரக்கணக்கான மாண வர்கள் இவற்றை மனப் பாடம் செய்து தேர்வு எழு தத் தயாராகியுள்ள நிலை யில், ஆம்! தவறுகள் நேர்ந் துள்ளன. அவற்றைப் பட்டி யலிட்டு இணையதளத்தில் வெளியிடப் போகிறோம் என்கிறார் பள்ளி நூல்களுக் கான வாரியத் தலைவர் நிதின் பேதானி.

Read more: http://viduthalai.in/e-paper/75981.html#ixzz2uTuI00cm

தமிழ் ஓவியா said...


எது குற்றம்?


குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ--மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும்.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/75985.html#ixzz2uTug0YrX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -4


- குடந்தை கருணா

அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.

இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.

தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான், விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/75991.html#ixzz2uTv5PkME

தமிழ் ஓவியா said...


உண்டியலில் காணிக்கை ஏன்? வருமான வரிகட்டுவது நல்லது: கமல்



சென்னை, பிப்.26-வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாள் கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக- புதுவை மாநில வருமான வரித் துறை முதன்மை ஆணையர், ரவி தலைமை தாங்கினர். இயக்குநர் ஜென ரல் ஜெய்சங்கர், முதன்மை ஆணையர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,

கடவுளுக்கு, உண்டிய லில் காணிக்கை செலுத்து வதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்க ளுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மை யாக வரி செலுத்தி வருகி றேன். சிலர், வரிகட்டும் போது மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.

வரியினால், நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்க ளால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால், வரி யின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/76024.html#ixzz2uTvUUyKA

தமிழ் ஓவியா said...


குஜராத் மதுவிலக்கின் லட்சணம் மனைவியை எரித்துக் கொன்ற குடிகாரன்

அகமதாபாத், பிப். 26- குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சுனாராவாட் பகுதியில் திங்கள் அன்று இரவு குடிக்கப் பணம் தராத மனைவியை உயிருடன் எரித் துக் கொலை செய்தான். சுனாராவாட் பகுதியைச் சேர்ந்த அமித் வசானி, இவ ரது மனைவி பூனம், இவர் களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. குடிப்பழக்கம் உள்ள அமித் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண் டையிடுவார். கடந்த ஞாயிறு மாலை தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இரவு முழுவதும் சண்டையிட்ட அமித், திங்கள் கிழமையன்று காலை, தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மீது, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு இருந்தவரை அரு கில் உள்ள உறவினர்கள் மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். பூனம் தனது மரண வாக் குமூலத்தில் கூறியிருப்பதா வது நீண்ட காலமாகவே அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட் டிற்கு வந்து துன்புறுத்துவார். வேலைக்குச் செல்வதும் கிடை யாது நான் அவ்வப்போது கூலிவேலைக்குச்சென்று கொண்டுவரும் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டு குடித் துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை இல்லா ததால் என்னிடம் பணம் இல்லை, இந்த நிலையில் மாலை என்னிடம் வந்து குடிக்க பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறியும் கேட்காமல் என்னை அடித்து துன்புறுத்தினார். பிறகு வெளியே சென்று விட்டார். திங்கள் கிழமை காலை வீட் டிற்கு வந்தவர் திடீரென மண்ணெண்ணெய் பாத்தி ரத்தை எடுத்து என்மீது வீசி னார், என் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் பரவியது.

உடனே தீக்குச்சியை பற்றவைத்து என்மீது வீசி விட்டு ஓடிவிட்டார், தீப்பற்றி யதும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதற்குள் என்மீதிருந்த ஆடைமீது பற்றிக்கொண்டு என் உடல் முழுவதும் தீ பர வியது. அதற்குள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என் அலறல் ஒலி கேட்டு என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். என்று காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/76027.html#ixzz2uTvcWTMA

தமிழ் ஓவியா said...


அரசியல் என்றால்..


அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளைஒழிப்பதற்காக ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான்நம்கொள்கை.சமுதாய வேலையைக் கலக்காதஓர்அரசியல் மனிதசமுதாயத்திற்குஎதற்காக வேண்டும்?
_ (குடிஅரசு, 29.6.1946)

Read more: http://viduthalai.in/page-2/76043.html#ixzz2uZbOdDNx

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம்

சோதிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங் களும், ஆபாசங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கிருத்திகை இராசியில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர் களின் மனைவிகளாம். அம்பா, துலா, நிதத்நி, அய்யந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி, சுபினிகா என்ற அந்த மனைவி மார்களின் பெயர்களாம்.

இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தமிழுக்கும், இவற் றிற்கும் எவ்வித உறவும் இல்லை. இவற்றின் வேர் என்பது ஆரியம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் சில அபத்தங்கள் உண்டு. சூரியனுக்குப் பகை சனிக்கிரகம், சந்திரனுக்குப் பகை ராகு, கேது (இவை இரண்டும் பாம்புகளாம்; சந்திரனை விழுங்குகின்றனவாம் - அதுதான் சந்திர கிரகணமாம்!).

குருவுக்குப் பகை புதன் கிரகமாம்; புதனுக்குக் குரு கிரகம் பகையாம்! இவை மட்டுமா?
கிரகங்களிலும் ஆண், பெண் வேறுபாடாம். சூரியன், செவ்வாய், குரு ஆண் கிரகங்களாம். சந்திரன், சுக்கிரன், ராகு பெண் கிரகங்களாம். அதோடு விட்டார்களா? அலி கிரகங்களும் உண்டாம்.

அவை - புதன், சனி, கேது ஆகிய மூன்றுமாம்!

கிரகங்களோடு இந்தக் கட்டுக்கதைகளை முடித்தார் களா? அதுதான் இல்லை; நட்சத்திரங்களிலும் பால் இன வேறுபாடாம்.

ஆண் நட்சத்திரங்கள் 8; பெண் நட்சத்திரங்கள் 16; அலி நட்சத்திரங்கள் 3.

வானியல் ஆய்வுப்படி 25 ஆயிரம் கோடி நட்சத் திரங்கள் இருக்கும்பொழுது, வெறும் 27 நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டு கதையளக்கும் அறியா மையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் விலாநோகச் சிரிப்புதான் வெடிக்கும்.

சோதிடத்தில் பெண் அடிமைத்தனம் என்பது ஆணி அடித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாதாம்; ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியார் மண்டையைப் போட்டு விடுவாராம். கேட்டையில் பிறந்தால் கணவனின் மூத்த சகோதரன் மூச்சை விட்டு விடுவார்... விசாக நட்சத்திரத்தில் பிறந்தால் கணவனின் இளைய சகோதரனுக்கு ஆபத்தாம்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்த நட்சத்திரங் களில் பெண் பிறந்தால்தான் இந்தத் தீய விளைவுகளாம்! ஆண்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் அதனால் பாதிப்புக் கிடையாதாம். ஆரியக் கலாச்சாரம் என்கிறபோது அங்கு பெண் அடிமை என்பதுதானே அடிப்படை!

1955 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள் மத்திய அரசு சார்பில் மேனக்ஷா என்ற விஞ்ஞானியின் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பஞ்சாங்கம், சோதிடம் பற்றி ஆய்வு செய்வது அக்குழுவின் நோக்கமாகும்.

இந்து காலண்டர் பஞ்சாங்கம் என்பது மனிதர் கள் தங்கள் சிந்தனையில் கற்பனையில் உருவாக்கப் பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளை யும், அரைகுறையான உண்மைகளையும், இடைக் காலத்தில் இணைத்து விட்டார்கள் - அதில் பல குளறு படிகளும், குழப்பங்களும் உள்ளன. 23 நாள்கள் இடைவெளி வித்தியாசத்தில் இந்துப் பஞ்சாங்கம் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டு களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 வித்தியாசத்தில் நிற்கிறது என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதே!

இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த விஞ் ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளாரே!

சூரியக் குடும்பத்தில் வெகுதொலைவிலுள்ள கிரகங் கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சோதிடத்தை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்களின் இயக்கங்கள்பற்றிய சிக்கலான கணிப்பு களைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க் கையை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்கிறார் அப்துல்கலாம்.

சோதிடத்தின் பித்தலாட்டத்தைத் தனது வாழ்க்கை யிலிருந்தே எடுத்துக்காட்டினார் தந்தை பெரியார்.

என் சோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன். என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது - ஆனால், பொய்யாகி விட்டது - அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுதமாட்டான் (பெரம்பலூரில் பெரியார் பேச்சு, 13.7.1973).

உண்மைகள் இவ்வாறு இருக்க, அறிவியலுக்கு விரோதமான சோதிடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதை கைவிட வேண்டும் :என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் 3.3.2014 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகம், மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரளுங்கள் தோழர்களே!


தமிழ் ஓவியா said...


சமூகநீதிக்குச் சவக்குழி!

- குடந்தை கருணா

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற் போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பொருளா தார அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானத்திற்கும் குறைவாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின ருக்கு மட்டும், இட ஒதுக்கீடு வழங்கிட பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிய சட்டம் கொண்டு வரும் என, பாஜக தாழ்த்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறி உள்ளார். அது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தில் கண வன், மனைவி இருவரும் இரண்டாம் நிலை பதவியில் இருந்தாலும், அல்லது கணவனோ அல்லது மனைவியோ, முதல் நிலை பதவியில் இருந்தாலும், அவர் களின் பிள்ளைகளுக்கு. இட ஒதுக்கீடு முறையில் அரசு பணிகள் கிடையாது என்றும் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறி உள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; பாஜகவின் கருத்து என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளார் சஞ்சய் பஸ்வான். 1990 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை எதிர்த்து, அத்வானி ரத யாத்திரை நடத்தி, வட நாட்டில் கலவரம் உருவாகக் காரணமாக இருந்தது பாஜக. தற்போது, ஆட்சிக்கு வந்தால், தாழ்த் தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அடிப் படையை புகுத்திட திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்; அவர் பிரதமரானால், அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என ஆர்.எஸ்.எஸ். உத்தரபிரதேசத்தில் மாநாடு நடத்திக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அரசியல் சட்டத்திற்கு மாறாக மாற்றிட முடிவு செய்துள்ளனர். இதுதான் பாஜக ஆர்.எஸ். எஸ்.-இன் இரட்டை வேடம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் ராம் தாஸ் அதாவ்லே, உதித்ராஜ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் இப்போது பாஜக அணியில் தங்களை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்திற்கு எதி ரான நிலையை மேற்கொள்ளும் பாஜக வோடு கூட்டணி சேரும் கட்சி களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் கள் வரும் தேர்தலில் தக்க பாடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், போராடி பெற்ற சமூகநீதி, சவக்குழிக்கு சென்றி டும், ஜாக்கிரதை!

Read more: http://viduthalai.in/page-2/76047.html#ixzz2uZc9zEWN

தமிழ் ஓவியா said...

அமைதி, வளம், வளர்ச்சி இதுதானா?

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழக ஆளுங் கட்சித் தலைவர், அம்மையார் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டு உள்ளார். அமைதி, வளம், வளர்ச்சி இந்தியா மேன்மையுற செயல்திட்டம் என்று கூறியுள்ளது கவர்ச்சியான வாசகங்கள் தான்.

தமிழகத்தில் மதுரை உள்பட நெல்லை நகரங்களில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது.

எனவே அமைதி - எங்கே?

வளம் - யாருக்கு?

கடன் தொல்லையால் மாண்ட விவசாயிகள், பயிர்கள் வாடியதால் மரித்த விவசாயிகள், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினால் பலி! நாடு கண்ட வளம் இதுதானா?

வளம் கண்டவர்கள் யார்?

விழிகளில் குளம் கண்டவர்கள் எண்ணிக்கையில் குறைந்தால்தான் வளர்ச்சி! வளர்ச்சி எங்கே? கோடிகளில் செலவழிப்பேன் எனக்கூறும் வேட்பாளர்கள் வாழ்விலா?

வேடிக்கை விசித்திரம்

தென்மாவட்டங்களில் வாழும் மக்கள் அமைதியாக முன்னேற்றம் காண வழிசெய்யவே 2000 கோடி ரூபாய் செலவு சேதுசமுத்திரத்துக்கான நலத் திட்டத்தை வளமைக்கு வழிவகுக்கும் திட்டத்தை இராமர் பாலம் என்று கூறி கிடப்பில் போட நீதிமன்றம் மூலம் தடை செய்து, இலங்கைக்கு வருவாய்த் தேடி தருவது மூலம் கிடைத்தது அமைதியா?

வளமா? அதனால் ஏற்பட்ட வளம் யாருக்கு?

நாட்டு வளர்ச்சிக்கு இதுவா அடையாளம்? மதுரவாயல் திட்டம் உயர்நீதிமன்றத்தில் ரூ.1800 கோடி பெருவழிச் சாலைக்கு அடிக்கட்டுமான வசதியை தடுத்து உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதுதான் வளர்ச்சியா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க மாட்டார்களா?

- போடி நாயக்கனூர் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் உரையின் ஒரு பகுதி (26.2.2014)

Read more: http://viduthalai.in/page-2/76055.html#ixzz2uZd3nuvH