Search This Blog

8.2.14

தமிழக முதல்அமைச்சர் சரியான கோணத்தில் சிந்தித்தால் நல்ல விளைவு ஏற்படுமே!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (6.2.2014) மூன்று பிரச்சினைகளில் அ.இ.அ.தி.மு.க. அரசு மறுபரிசீலனையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஒன்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஆகும். நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கக் கூடிய திட்டம் இது.

குறிப்பாக திராவிட இயக்கம் வலியுறுத்தி வந்த திட்டமாகும். இன்றைய தினம் வேலையில்லாத் திண்டாட் டம் என்பது தலை கொழுத்து நிற்கிறது. வன்முறை எனும் கூர் ஆயுதம் சாணை பிடிக்கபபடுவதற்கு வேலை வாய்ப்பின்றி விரக்திப் பள்ளத்தில் தள்ளப்படும் வாலிபர்களின் மனோபாவம் ஒரு முக்கிய காரணமாகும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி நிமிர்ந்து  நிற்பதோடு, பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புக்  கிடைத்திட வாராது வந்த மாமழை போன்றதாகும்.

இன்னும் சொல்லப் போனால் அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும்  அது அவசியம் தேவை என்று வற்புறுத்தப்பட்ட திட்டமாகும். இன்றைக்கு அ.இ.அ.தி.மு.க. முதல்வர் தலைகீழ் மாற்றமடைந்து  அந்தத் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது - அவரின் அரசியல் அபிலாசையைத் தான் குறிக்கும். அந்தத் திட்டம் செயல்பட்டால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைச்சுத்துறை திமு.க. விடம் இருந்ததால், அதன் அரசியல் பலன் திமுகவுக்குச் சென்று விடும் என்று அஞ்சுகின்ற அரசியல் பிள்ளை விளையாட்டே இது.

ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது. இந்துக்கள் மனம் புண்பட்டு விடும் என்று பேசுவதெல்லாம் முதிர்ச்சியற்ற - பகுத்தறிவற்ற - பாமரத்தனமான மிகவும் மலிவான  தன்மை கொண்டதாகும். இதனை இன்னொரு வகையில் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தினால், அதற்குரிய விலையைக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்குமே முதல் அமைச்சர்; தொலைநோக்கோடு சிந்திக்காததன் பலனை நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் அனுபவிக்க நேரிடும் என்று இடித்துச் சொல்ல விரும்பு கிறோம்.  தேர்தலில் வாக்களிக்கும் போதுதான் மாறுபட வேண்டுமே தவிர மற்றபடி நாட்டு நலனை பொறுத்த வரையில் கை குலுக்கி மகிழும் அரசியல் பண்பாட்டு உணர்வு - ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவசியம் தேவையாகும். எனவே இந்தப் பிரச்சினையில் முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்ய அவசியம் கடமைப்பட்டுள்ளார்.

இரண்டாவதாக சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அற நிலையத்துறைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியில் முதல் அமைச்சர் ஈடுபட வேண்டும் என்று கோருவதாகும். குறிப்பிட்ட பார்ப்பனர் பிரிவைச் சேர்ந்த தீட்சதர் களுக்குத் தான் அந்தக் கோயில் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது. வாய்ச் சமத்தும், கைச்சமத்தும் தான் காரணமாகும். தி.மு.க. ஆட்சியில் அந்தக் கோயில் இந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டது என்பதற்காக அந்த வழக்கில் அரசே தோல்வியடைந் தாலும் பரவாயில்லை. என்ற போக்கை முதல்வர் பெற்றது பெரிதும் வருந்தத்தக்கதாகும். இதன் மீதும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

மூன்றாவதாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான கொலை வழக்காகும். இன்னும் சொல்லப் போனால் அ.இ.அ.தி.மு.க. அரசே அதன் முதல்வரான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அரசே முன்னின்று போட்ட வழக்கு அது.

பெரும்பாலான சாட்சியங்கள் - அரசு சாட்சியங்கள் உட்பட பிறழ்சாட்சியானது;  இந்த வழக்கினைப் போல வேறு எந்த வழக்கிலும் இந்த அளவுக்குப் பிறழ்சாட்சியம் நடந்ததாகச் சுட்டிக் காட்டவியலாது.  அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு அளவுக்கு மீறிய கெட்ட பெயர் இந்த வழக்கில். எனவே இந்தத் தீர்ப்பின்மீதும் மேல் முறையீடு அவசியம் தேவைப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நீதிபதியிடமே தொலைப்பேசி மூலம் பேரம் பேசப்பட்டதெல்லாம் செய்திக் குவியலாக வெட்ட வெளிச்சத்திற்கு வரவில்லையா? கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தின் நிலையை கொஞ்சம் ஆழமாக நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த மூன்று வேண்டுகோள்களையும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முதல் அமைச்சரிடம் வைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இந்த மூன்றும் முத்தாய்ப்பானவை. திராவிடர் கழகத்திற்கு எந்த அரசியல் கண்ணோட் டமும் கிடையாது; பொது நிலையில் அறிவு நாணயத்தோடு எடுத்து வைக்கும் இந்தக் கருத்தை தமிழக முதல் அமைச்சர் சரியான கோணத்தில் சிந்தித்தால் நல்ல விளைவு ஏற்படுமே!

                  --------------------------: “விடுதலை” தலையங்கம் 8-2-2014

36 comments:

தமிழ் ஓவியா said...


சைவரும் - வைணவரும்!


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?

வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.

சைவர்: என்ன சந்தேகம்?

வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!

-சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAYJKBf

தமிழ் ஓவியா said...

எலி ஒழிப்பிலும் மதம்!

நிருபர்: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள் அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்துக்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

நிருபர்: ஆம்; பம்பாயில் தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?
நிருபர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

நிருபர்: ஆமாம்; எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது ; இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன; இவர்கள் இப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதினால்தான் எந்தப் பிரச்சினைகளையும் வெல்லமுடியவில்லை.

- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி, 26.2.1977 இதழிலிருந்து

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/74849-2014-02-07-12-27-41.html#ixzz2sjAiYSdI

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வியின் தலையில் கை வைப்பதா?


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன் பெற்றனர்.

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.

இந் நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரசு கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரத்தை மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பது தான் புதிய ஆணையின் சாரமாகும்.

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.

மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
8.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/74856.html#ixzz2smne5iu4

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்


உடைந்தது 108 தேங்காய்கள்!

சென்னை - எழிலகத் தில் பொதுப் பணித் துறை யில் பணியாற்றும் அலு வலர் ஒருவர் 108 தேங் காய்களை உடைத்திருக் கிறாராம் - எதற்குத் தெரி யுமா? பொதுப் பணித்துறை மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமாம்.

ஒரு துறை வளர்ச்சி அடைவதற்கான ஒரு குறுக்கு வழியை இந்தத் துரை கண்டுபிடித்துவிட்டாரோ!

நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான டாக்டர் டி.எம். நாயர் உடல் நலம் பாதிக் கப்பட்டபோது திருவல்லிக் கேணிப் பார்ப்பனர்கள் பிள்ளையாருக்குத் தேங் காய் உடைத்தபோது டாக் டர் நாயர் சொன்னார். நீங்கள் தேங்காய்களை உடைப்பதால் கேரளாவில் உள்ள ஏழை மக்கள், தென்னை மரங்களை நம்பி வாழும் அவர்களுக்குப் பயனாய் முடியும் என்றார். அதுதான் இப்பொழுதும் நினைவிற்கு வருகிறது.

ஒரு துறை வளர்ச்சி அடைவது அத்துறையின் ஊழியர்களின் உழைப்பை யும், திறனையும், நாணயத் தினையும் பொறுத்தது என் கிற அடிப்படைக் கூடவா தெரியாது?

பொதுத் துறைப் பொறி யாளர்கள் மைல் கல்லுக்குப் பூஜை செய்தனர் என்பதை நினைவு கூர்ந்தால், நம் நாட்டுப் படிப்பு என்பது - வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வரும்.
...ம் என்ன செய்வது அரசன் எவ்வழி அவ்வழி குடி மக்கள்!

கொடிகளின் கதை

காங்கிரஸ், சரத்பவர், மம்தா கட்சிகளின் கொடி கள் தேசியக் கொடியைப் போன்று இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது; அது சரி, அத்தோடு இந்தியாவின் தேசிய மலரான தாமரையைத் தேர்தல் சின்னமாகக் கொண்டுள்ளதே பி.ஜே.பி. அதனையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண் டியதுதானே!

அடுத்த பல்டி....

காஞ்சி சங்கராச்சாரி யார்கள் மீதான கொலை வழக்கில் 70-க்கும் மேற் பட்டவர்கள் பிறழ்சாட்சியா னார்கள்; அது எப்படி நடந் திருக்க முடியும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே எளிதில் புரிந்து விடும்.

அதே காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திரர் மீது - ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்டது - அரிவாளால் வெட்டப்பட் டது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் அரசு சாட்சியான காஞ்சி சங்கர மடத்தின் காசாளர் நாகராசன் பிறழ் சாட்சியாகப் பல்டி அடித் துள்ளார் - இப்பொழுது அந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பணமும் பதவியும் பாதாளம் வரை பாயும் என்பார்கள் அவற்றைத் தான் கண்ணெதிரில் யதார்த் தமாகப் பார்த்துக் கொண்டி ருக்கிறோமே!

Read more: http://viduthalai.in/e-paper/74881.html#ixzz2smo0ACOp

தமிழ் ஓவியா said...

தெல்லாம் பெருமையா என்ன?

நம்ம கடமை..

திருச்சி, பிப்.8 சென்னை நெடுஞ்சாலையில் அமைய விருக்கும் பெரியார் உல கம் - ஒரு சமூக அறிவியல் உலகமாக வரும் தலை முறைக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் பெரியார் மேலுள்ள பற்றால் இன்று ரூ.25,000 அனுப்பி வைத்து விட்டு வந்து எழுது கிறேன். வேல்கம்பும் வீச்சரிவாளையும் தூக்கிச் சுமந்த ஒரு இனத்தை அறி வாயுதம் தூக்கச் சொல்லி , அதற்காக மூத்திரச் சட் டியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் அலைந்த மாமனிதர் பெரியார். சும்மா மேடைகளில் மட்டும் சொல்லாமல் அதற்காக அரசியல் சட்டத்தை திருத்தச் சொல்லி முதல் அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வைத்து இடஒதுக் கீடு வாங்கிக் கொடுத்து.. படிங்கடா முட்டாளுங்களா என்று சொன்னவர் அவர் கிழவர் அல்ல.. தமிழர் களின் கிழக்கு திசை..

பிற்படுத்தப்பட்ட தமி ழினம் ஒரு அறிவுடைய சமுதாயமாக மாற்ற, ஒரளவு மாற்றிக் காண்பித்த தந்தை பெரியாருக்கு அவ ரால் பலன் பெற்ற கோடானுகோடி தமிழ் உள்ளங்கள் சார்பாக கடைசி மூச்சு வரை நன்றி யுடன் இருக்க விழையும் ஒரு சாதாரண தமிழன். உங்களால் முடிந்த அளவு நன்கொடை அளித்து அந்த மய்யம் ஒரு அறிவுடைக் கருவூலமாக மாற்ற தமிழர் களுக்கு வேண்டுகோளுடன்.

அய்யா.. உங்கள் ஆணைப்படி பணி முடிப் போம்.. இதெல்லாம் பெரு மையா என்ன நம்ம கடமை..

-அ. வெற்றிவேல்
(முகாம்: சவுதி அரேபியா)

Read more: http://viduthalai.in/e-paper/74878.html#ixzz2smoBP73q

தமிழ் ஓவியா said...


அப்படி என்ன பெரிய அப்பா டக்கரா ஜனார்த்தன் திவேதி

- குடந்தையான்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி, இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது; பொருளாதார அடிப்படை யில் இருக்க வேண்டும் என கூறியதற்கு, சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலைவர் கள் கடும் கண்டனத்தைத் தெரிவித் ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஜாதி அடிப்படையில் தற்போது நடை முறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடரும் என அறிவித்துள்ளார்.

ஜனார்த்தன் திவேதி காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் குழுவில் உள்ளவர். இப்படி ஒரு கருத்தை சொல்வதால் வரும் பிரச் சினைகளைப் பற்றி அறியாதவர் அல்ல;

தேர்தலை சந்திக்க உள்ள நிலை யில் இத்தகைய முரண்பாடான கருத்தை ஏன் சொல்ல வேண்டும்?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற கூப்பாட்டை, பார்ப்பனர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். கம்யூனல் ஜிஓ தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த கருத்தை முன் வைத்துத் தான் செண்பகம் துரைராசன் பெயரில் வழக்கு தொடர்ந்தனர் பார்ப்ப னர்கள்;

அரசியல் சட்ட முதல் திருத்தம் 15(4) வரும் நிலையில், நாடாளு மன்றத்தில் பார்ப்பனர்கள் இந்த கருத்தை முன் வைத்து வாக்கெடுப்பு நடத்தி தோற்றனர். ஜாதி அடிப் படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு ஆதரவாக 245 வாக்குகளும், வரு மான அடிப்படைக்கு 5 வாக்கும் தான் கிடைத்தன.

1990-இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 27 விழுக்காடு இட ஒதுக் கீட்டை மண்டல் குழு அடிப்படை யில் ஆணை பிறப்பித்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணையினை பார்ப்பனர்கள் பெற் றனர். அப்போதும், ஜாதி அடிப் படையில் கூடாது என வாதம் செய் தனர். உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லாது என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

2005-இல் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு வழங் கிய நிலையில், மீண்டும் பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றத்தில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என வாதிட்டனர். உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில், ஜாதி அடிப் படையில் கல்வியில் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இத்தனையும் அறிந்தவர்தான் ஜனார்த்தன் திவேதி.

தற்போது, அரசு வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் சூழ்நிலையில், ஜாதி அடிப் படையில் வேண்டாம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தால், பார்ப்பனர்களுக்கு என்றைக் கும் பாதிப்பு இருக்காது என்கிற ஒரு நோக்கில், கருத்தினை, ஜனார்த்தன் திவேதி மூலமாக வெளியிட்டிருக் கிறார்கள் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது.

தனி மனிதனாக கருத்து சொல் லும் அளவுக்கு, ஜனார்த்தன் திவேதி அவ்வளவு பெரிய அப்பா டக்கர் இல்லை

Read more: http://viduthalai.in/page-2/74893.html#ixzz2smodhUAl

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/74884.html#ixzz2smoo4r6t

தமிழ் ஓவியா said...


பெரிய அக்கிரமம்!


பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,

ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.

ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத்தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும்.

எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை.

இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக்கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!

எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74908.html#ixzz2smpwt7J0

தமிழ் ஓவியா said...

உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்

சென்னையில் பார்ப்பனியத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம் சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கிராமப் புணருத்தாரண வேலை ஸ்தாபனம். நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அய்க்கிய ஒற்றுமை சங்கம் என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.

அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு, ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம்மஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்குக் கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகி களாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலிகொடுத்திருக்கிறது.

இதைப்பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும் சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74908.html#ixzz2smq4w5Gy

தமிழ் ஓவியா said...


யார் வார்த்தைகள் கடினம்?


பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.

இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர்களாவது கண்டித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர்களுடைய இம்மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்கவில்லையா?

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ்வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.

தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவைகளில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டதானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண் டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.

ஆகவே யாருடைய வார்த் தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யானதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரிகைகள் என்ன வேலை செய்து யார் நடத்தினாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

- குடியரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/e-paper/74907.html#ixzz2smqDs6tR

தமிழ் ஓவியா said...


ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்


நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக எனது மேஜையை ஒழுங்குபடுத்து வதில் 10 நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் தாள்களையும் விரைவாகத் துருவிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்வேன். உடனடியாக கவனம் தேவைப்படுபவை; குறைந்த முக்கியத்துவம் கொண்டவை; படிப்பதற்கான விஷயங்கள் என்று பகுத்துக் கொள்வேன். அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தாள்களை மட்டும்தான் மேஜையில் வைத்துக் கொள்வேன். வேறெதும் அதில் இருக்காது''.

- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Read more: http://viduthalai.in/page2/74924.html#ixzz2smrDWc3l

தமிழ் ஓவியா said...


மக்கள் சிந்தனைக்கு

அசுர குருவான சுக்கிரன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் (தமிழர்) ஏற்பட்ட போரில் இறந்த அசுரர்களை உயிர்பெற செய்துள்ளான்.

சிவபெருமான் கொடுத்த வரத்தை தவறான வழியில் பயன்படுத்தியதால் சுக்கிரனை சிவன் விழுங்கி விட்டான். அசுரர்களின் வேண்டுதலுக் கிணங்க சுக்கல வழியாக வெளியே வந்தான். வெள்ளி என்று பெயர் வந்ததாம்.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்க கமண்டலத்தில் உள்ள நீர் வெளியே வராமல் சுக்கிரன் வண்டு வடிவத்தை எடுத்து துவாரத்தை அடைத்து விட்டானாம். திருமால் தர்ப்பையால் குத்த சுக்கிரன் கண் குருடானது.
நாம் பிறக்கும் போதே நம் சாதக கட்டத்தில் நம் கண்ணுக்கு தெரியாமலே இறைவன் எழுதி விடுகிறான். இது விவரம் தினகரன் வார (8.1.2014) இதழில் வந்துள்ளது.

இந்த கதையின்படி கடவுள் மனிதனின் சாதக கட்டத்தில் எழுதிவிட்ட பின்பு சுக்கிரனுக்கு என்ன வேலை? இந்த பித்தலாட்டத்தை எழுதிய வனுக்கு எப்படி தெரியும் கடவுளும் சுக்கிரனும்.

###

வீடோ, நிலமோ வாங்க முற்படுகிறவர்கள் வடக்கா அல்லது கிழக்கா என திசையை கேட்கும் வாஸ்து ராசி பலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமெனவும் கேட்கிறார்கள் இவர்களுக்கு ராசி பலனும் வாஸ்து சாஸ்திரமும் தெரியாது. யாருக்கோ யாரோ சொன்னதை வைத்து கிழக்கு வடக்கு திசையாக வீடு வாங்க கேட்பதே வழக்க மாகி விட்டது. அப்படியே ராசி பலன்படி வீடு வாங்கட்டும். கழிப்பிடம் இல்லாமல் வீடு இருக் குமா? வாஸ்துபடி வீட்டில் கழிப்பிடம் (ஜிஷீவீறீமீ) இருக்கக் கூடாதே. ஜாதகம், சாஸ்திரம் என்ன ஆனது.

ஆனால் இவர்களுக்கு பின்னர் வரும் வாரிசுகள் இவர்களின் ராசிபடியே அல்லாமல் எதிர்மறையாக தெற்கு மேற்கு ராசிபலன் உள்ள வர்களாக பிறந்தால் இவர் கட்டிய வீட்டை இடிக்கவா? விற்கவா? எண்ணில் அடங்கா உதாரணங்கள் பல இருந்தாலும் சிந்திக்க வேண்டியது நீங்கள்தான். 21ஆம் நூற்றாண்டில் வாழும் நாம் வெளி நாட்டான் கண்டுபிடித்த மின்சாரம், தொலைப்பேசி, ரேடியோ, டி.வி. என பலவற்றையும் பயன்படுத்துகிறோம். 20ஆம் நூற்றாண்டு வரை நமக்கு கல்வி கொடுக்க சரஸ்வதிகூட வரவில்லையே. சுதந்திரம் பெற்ற பின்பும் கல்வி கொடுக்க மறுக்கப்பட்டது. தந்தை பெரியாரின் கருத்தை ஏற்ற காமராஜர் வந்த பிறகுதானே படிப்பு அனைவருக்கும் கிடைத்தது. சமஸ்கிருதம் படித்ததால் மட்டுமே மருத்துவ சீட்டு என்று நிபந்தனை வைத்திருந்தார்கள். நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் படிப்பில்லாமல் மூடநம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்கள். கால நேரத்தை வீணாக்காமல் மூடநம்பிக்கைகளை கைவிட்டு பகுத்தறிவு கொள்கையை கடைபிடிப்போமாக.

-_- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/74928.html#ixzz2smriw3yl

தமிழ் ஓவியா said...


இதழ ஒனறன இருவேறு பககஙகள!

- சிவகாசி மணியம்

கேளவ: பெருமபாலான குடுமபஙகளல பரச சனைககுக காரணமாக அமைவது எது?
பதல: கணவன மனைவககடையே 20-ம பககததல (அரசு பதல) இபபடி நோமையான, அறவாததமான பதல இது எனறால, மூடததனததன மூலததை அடைய வழகாடடும முரணபாடு அதே இதழன 50-ஆம பககததல! செனனை 108-லருநது ஒரு பகதை எழுபபும கேளவ இது:

எனககுத தருமணமாக 8 ஆண்டுகள ஆக வட டது. ஒரு பெண குழநதையும உணடு. தனமும என கண வருககும எனககும எதறகாவது சணடைதான நாஙகள ஒறறுமையுடன வாழ எநதக கோவலுககுச செலல வேணடும?

கணவன மனைவ உறவு பலம பெற எனும கடடு ரையல பயா கலயாணராமன எனபவான வழ காடடுதலைப பாருஙகள.

குடுமப ஒறறுமை உணடாக மடடுமலல, எலலா நலனும நஙகள பெற நமமத பெற நமமதயாக நஙகள படுததுறஙக சுருடடபபளள பளளகொணடேசுவரரை கடடாயம ஒரு முறை தாசனம செயது பாருஙகள, பலனகளை உடனடியாக உணாவகள. இது சததயம எனறவா அநதக கோவல எஙகே இருககறது, எபபடிச செலவது எனபதையும வவாககறா. ரொமப சமபள, செனனை கோயமபேடடிலருநது புததூ வழயாகச செலலும எலலா பஸகளும இநதக கோவல வாசலல நறகும. அலலது ஊததுககோடடைச செனறு அஙகருநது ஷோ ஆடடோ (ரூபாய 5) அலலது பஸஸல செலலலாம. தமழக ஆநதர எலலையல அமைநதுளளது. செனனையலருநது 35 ரூபாய. சாபபட ஊததுககோடடை வரவேணடாம. கோவலல தனம மதய உணவு உணடு (இது போதுமே!) குடுமப ஒறறுமை சறககும எனபதே இதன சறபபு எனறு அடிததுச சொலகறா. (கோவல நேரஙகளும தொலைபேச எணணும இதனுள அடககம!)

செனனைககுளளேயும அருகாமையலும எததனை கோயலகள? அவறறையெலலாம அலடசயபபடுதத வடடு எஙகோ கடககும ஓ அனாமதேயக கடவுளன அடரஸ கொடுகக வேணடிய அவசயம ஏன ஏறபட டது? இஙகுளள கடவுளகளுககு எநத சகதயும இலலையா? எலலாம வலல இறைவன எனகறாகளே அதெலலாம யாரை ஏமாறற? நமம ஊ டாகடா களைபபோல ஒவவொனறும தனததன ஸபெச லஸடாக அலலவா இருககனறன?

இதழகளல இது போனற கேளவகளைக கேடடு பதலுககாகக காததருபபவாகள படிககாத பாமராகள அலல! மெததபபடிதத மேதாவகள தான, குடுமப ஒறறுமைககு எனன செயய வேணடும எனறு கேடடால போதாதா? எநதக கோவலுககுச செலல வேணடும? எனறு கேடடால அது பகதச சுரணடலுககு வழ வகுககும எனபதை அறயவேணடாமா? இபபடிப படட ப(க)தாகளை நனைததால பாதாபமதான ஏறபடுகறது. தனனடம யோசனை கேடபவான பலவனம அவரது கேளவயலேயே பளசசடுமபோது பாகாரம சொலபவான வேலை எளதாகவடுகறது.

வாழககை படுபோ அடிககறது எனன செயயலாம? எனறு ஒருவா கேடடால நலல புததகஙகளைத தேடி எடுததுபபடி எனலாம. அதைவடடு எஙகே போகலாம? என மொடாக குடிகாரனடம கேடடால டாஸமாக பககம தான கை காடடுவான. தஙகளடம வரும மனநோயாளகளுககு கவுனசலங நடததும மனநல மருததுவாகள எசசாககையாய இருபபது நலலது. காசு சுருடடும வேலையை சுருடடபபளள தூஙகு மூஞச பொமமை எடுததுககொளளாமல வழபபுடன இருஙகள:

நம ஆசயா அவாகள மண வழாககளல வாழவணையா எனும வாததையை அழுததமாகக குறபபடுவா. இணையா எனற சொல இருவரும சமம எனபதைச சொலகறது. ஒரு மனதாக சகபபுத தனமையுடன பேசசசதது வடடுக கொடுதது வாழகறபோது குடுமபததல குழபபமும, அமைத யனமையும எஙகருநது வரும? வதணடா வாதமும, வண படிவாதமும செயது நாள முழுகக சணடை யடடுக கொணடிருபபதால நமமத கெடடு ஒருவா முகததை ஒருவா பாபபதே கசபபாக வடு மயான பூம ஆகவடும அவவளவு தான!

Read more: http://viduthalai.in/page4/74929.html#ixzz2smrssWy8

தமிழ் ஓவியா said...


இதயத்திற்கு இதம் தரும் ஆப்பிள்


இன்றைய உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இத யத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடை தான் காய்களும் கனிகளும்.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தரவல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும். வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தர வல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ் ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாக வும், இலேகியமாகவும் செய்து சாப்பிட லாம். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும். ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.

Read more: http://viduthalai.in/page4/74930.html#ixzz2sms237d1

தமிழ் ஓவியா said...


சீதா பிராடடியின குளியல

- மு.வி.சோமசுந்தரம்

சயாமாசாஸத சனனதத தெரு வல பாரதககதை உபனயாசம செயகறா.
சடகோப அயயஙகா வடககு மாட வதயல ராமா படடாபஷேக கதாகாலடசேபம செயகறா.

அமபுஜம மாம, அகரகார அயநதாம தெருவல அசுவததாமன கதை கசசோ நகழததுகறா.

இநத கூடடஙகளுககு வெததலைப பெடடியுடனும, சவல பொடடலஙகளுடனும, சஙகம மூககுபபொடி டபபயுடனும குவநது இருககும அககரகார அவாள கூடடததுககு வணடி வணடியாக அபதத கதைகளையும, மூடடை மூட டையாக பகவான தருவளையாடல களையும கொடடிக் குவததாலும, தலையை ஆடடி ஆடடி, பயபகத யுடன பகவான கதைகளைக கேடடு ஆதமசாநத அடைவாகள.

இததகைய கூடடததனா, சந தனை, அறவயல, பகுததறவு பககம தலை வைததுபபடுககத தயாராக இருபபதலலை. ஜடஙகளாக ஜவதது வருபவாகள.

கதா காலடசேபம, உபனயாசம செயபவாகளைப பறற அதக கவனம செலுததத தேவையலலை எனறா லும, சமுதாயததல பொறுபபான வகையல மககளை நலவழபபடுததும கடமை ஊடகஙகளுககு குறிப்பாக, முதன்மை நாளிதழ்களுக்கு இருகக வேணடும. மூடநமபககைத தனமை, அறவயலுககு அபபாறபட்ட தனமை கொணட நகழசசகள செயதயாக வநதால ஓரளவல தவறலலை. மாறாக, பகுததறவுககு ஒவவாத கதைகளை, நகைபபுககடம அளக் கும வகையல வலய எடுதது கடடு ரைகளாக வழஙகுவது இருடடுக் காடடுககுள சமூகததை அழைததுச செலவதறகு ஒபபாகும.

அததகைய ஒரு வேடிககைச செயதக கடடுரை, அறவுககு வெடி குணடு வைககும கடடுரை 15-.11.-2013 அனறு இநது இணைபபு இதழல வநதுளளதைக காணபோம.

தமழகததல, கடடடககலையன மேனமையைப் பறைசாறறும கடட டஙகள, சறபககலையன நுடபத தனமையை உணாததும சறபஙகள மகுநது காணபபடுவது பெருமை சோபபதாக உளளது. இவறறன சறபபுகள பகத, மதம அடிப படையல எழுபபபபடட கோயல களல குவநதுளளன எனபதும உணமையே. இஙகுளள கடடடம, சறபம பறற வயநது பேசுவதல குறறம ஏதுமலலை. ஆனால இதனை வைதது அறவைச் சூறையாடுவது தான சகததுககொளள முடியாத ஒனறு.

காநாடகததல, மைசூ நகருககு 57 க.ம. அபபால, கருஷணராஜநகா தாலுககாவல கோதணடராமா கோயல ஒனறுளளது. இது காவ ஆறறன கரையல அமைநதுளளது, அருகல நவழசசகள உளளதும இநத இடததுககு இயறகை நலல சூழலை அமைததுளளது. இன இநத இடததை வைதது பகத முகமூடியல கூறபபடும புழுதத புழுகு வெடகப படுவதாக உளளது. (அதத சாஸ தரம, காடடியுளள வழமுறை இதுதான)

இநத கோயல ராமனுககு அப பணககபபடட கோயல. நாடு கடத தபபடட ராமபரான இநத காடடுப பகுதககு வநதபோது ஓயவு முகா மடடா. அஙகருநத மலைவாழ மககளன வருநதோமபலல இருநது வநதா. உடன மனைவயும, தமபயும இருநதனா. இநத காடடில தான, ராமன அகநததர ஷயை சநதத தா. ஷககு ஒரு ஆவல வநதது. அதை ராமனடம கூறனா. சதை ராமனன வலது பககததல இருநது பாகக வேணடும எனறு ஆசையைக கூறனா. (இது எனன ஒரு ஆசையோ?) அதனபடி சதை வலது பககததல இருகக காடசயளததா. (இதல எனன சறபபை ஷ கண டாரோ?) அதுவே இநத கோயலன வசேஷம.

இஙகு இரணடு குரஙகுகள (ஹனு மன) கோயலகள உளளன. ஒனறு கோயலன வாசலல, அடுத்தது கோயலுககு அடுதது காவக் கரையல. இஙகு சறபபாக ஒனறு கூற வேணடும எனறு கடடுரை ஆசயா எழுதுகறா. அதாவது, குரஙகு களன எணணககை அதகம. இவை ராமபகதரான ஹனுமான அவ தாரஙகளாகும எஙகும குரஙகு களாம. கோயலன உளளே புகுந தவை கர்ப்பகரகததனுள புகுநது, தடை ஏதுமலலாமல பரசாதங களை எடுததுச செலகனறன. (ராம பகதாகள தருடடு, ரௌடித தனம). இதை தடுகக எவருககும வழ தொய வலலை (ராமபரான, ஷககுக கூடவா?)

சீதைககுப பயணக் களைபபால குளிகக வேணடும எனறு தோனறியது. உடனே இராமன, தமப லடசு மணனை நோகக, ஒரு அமபை எடுதது எதல உளள பாறையன மது எயயுமபடி கூறனான (ஏன அதை அவன செயயககூடாதா?). லடசுமணன அமபு பாறையல படடதும, பாறையலருநது மூனறு வகைத தணண வெளவநதது. ஒனறு மஞசள பொடி கலநதது. இரணடாவதல எணணெய் கலந தது. மூனறாவது சயககாய கலநதது. (எனனே அபததம, அபததம எனறு வாயல அடிததுககொளளாதகள. இநது இதழ இநத செயதயை வெளயடுகறது). சதை இநத தணணல குளதததால, இஙகுளள தணண, மஞசள ருச, வாசனை கொணடுளளது (வேறு எஙகெஙகு குளததாகள எனறு தொநதால அநத ஆறறு நரையும பாககலாம. ஒரு கலலல இரணடு மாஙகாய எனபது போல ஒரு அமபல, மஞசள, எணணெய, சயககாய, பாறைய லருநது வநதுளளது. முதலமைசசா சததராமையா, நபுணாகுழுவைக கொணடு Three in one கடைககும இடததைக கணடறய சொலலலாம).

Read more: http://viduthalai.in/page5/74931.html#ixzz2smsDHfg1

தமிழ் ஓவியா said...


மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!

நான் யார்?

நான் முரண்பாடு களின் சின்னமாக விளங்கி வருவதாகப் பலர் மதிப்பிடுகிறார்கள். இது ஓரளவு உண்மை தான். என்னை நானே, பல்வேறு சந்தர்ப்பங் களில் ஒரு மிதவாதி யாகவும் சோஷலிஸ் டாகவும் சமாதானவாதி யாகவும் கருதியிருக்கிறேன். என்றாலும், இவை அனைத்துக்கும் மேலாக நான் ஒரு தனி மனித வாதி என்பதையே நான் கூற விரும்புகிறேன்.

பெண்களின் கற்பு

பெண்களின் உரிமைகள் அவர்களது ஒழுக்கம், அல்லது ஆண்களைவிட அவர்கள் மேலான வர்கள் என்பதைச் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதின் பேரில் உள்ளது. ஆனால், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனம் தனது உரிமைகளைக் கோரும் போது பெண்களுக்கு சில தனிப்பட்ட தன்மைகள் உண்டு என்றும், இவை ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.

முன்காலத்தில் பெண்களின் கற்பு என்பது நரகத்துக்குப்போக நேரிடும் என்ற பயம், கர்ப்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் ஆகியவற்றை கருதியே இருந்தது.

ஆனால் பழமைவாதம் அழிந்துவிட்டதாலும், கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாலும் இந்த பயம் நீங்கி விட்டது. தற்போதைய பெண்கள் ஆண்களுக்கு என்ன உரிமைகளோ அவை தங்களுக்கும் வேண்டும் என்று கோருகிறார்கள்.

பால் உணர்வும் கடை அடைப்பும்!

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்ற மத சம்பிரதாயம் காரணமாக கடைகள் மூடப்பட்டு வந்தன. அதுஇப்போது பொருளாதார வாழ்க்கை முறையாகி விட்டது. இதைப் போலவே பால் உணர்வுக்கான பெரும்பாலான சட்டங்களும், சம்பிரதாயங்களும் இருந்துவருகின்றன.

குழந்தை பிறக்கும் ரகசியம்

ஆண் - பெண் உறவுபற்றிய பால் உணர்வு விவகாரங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள விடாமல் மறைத்து வைப்பது சரியல்ல.

பாப்பாக்களை பறவை கொண்டுவந்து போட்டது என்றோ, புதரிலிருந்து தோண்டி எடுத்தோம் என்றோ குழந்தைகளுக்கு சொல்லப் படுகிறது. ஆனால் உண்மைகளை மற்ற குழந் தைகளிடம் இருந்து அவை தெரிந்து கொள் கின்றன. இதை ரகசியம்போல் அவை கருதுகின் றன. அசிங்கமானது என்று நினைக்கின்றன.

பெற்றோர்கள் தங்களிடம் பொய் சொல்லு வதாக ஒரு முடிவுக்கு குழந்தைகள் வந்துவிடு கின்றன. பெற்றோர்கள் ஒரு விவகாரத்தில் பொய் சொன்னால் அவை இன்னொரு பிரச்சினையில் பொய் சொல்கின்றன.

பால் உணர்வு விவகாரங்களில் தாங்களும் பொய்சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு அவை வந்துவிடுகின்றன.

இதனால் குழந்தைகளின் ஒழுக்கம் சிதைந்து விடுகிறது.

Read more: http://viduthalai.in/page5/74932.html#ixzz2smsLmrkA

தமிழ் ஓவியா said...


இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னி யாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவச மடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த் தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவி யுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்த தாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துப் பட்டு, கிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாக வும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடை ஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
What was the blood group of Jesus Christ?
Answer: From analysis of the shroud of Turin, some people have said that Jesus was a type O- blood type (which is the universal donor), but it would be difficult or even impossible to confirm.

அப்படியே கன்னி மேரி கண்களி லிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப் படும்போதும் இதைப் பின்பற்றலாம். தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33) ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரி சோதனைக்கு நாங்கள் தயார்! இயேசு வுக்கு வசதி எப்படி?

Read more: http://viduthalai.in/page7/74935.html#ixzz2smsqm0N2

தமிழ் ஓவியா said...


கழுவ முடியாத இழிவு!



சமூகத்தின்
சகல பக்கங்களிலும்
சாலையோரம்
சினிமாவில்
சின்னத்திரை சீரியலில்
பயணிக்கும் பேருந்து
புகைவண்டியிலும்கூட
சமூகத்தின்
சரிபாதியை
வக்கிரப் புத்தியோடு
கொச்சைப்படுத்தும்போது
அத்திப் பூத்தாற்போல
அக்கறையோடு விமர்சிக்கும்
பெண்ணியவாதிகள்
பாவயோனியில்
பிறந்தவர்கள் பெண்கள் என
கழுவ முடியாத
இழிவைச் சுமத்தும்
பகவத் கீதையின்
காகித பக்கங்களை
கிழித்தெறிந்து
தீயின் நாக்குகளுக்கு
இரையாக்காமலோ;
கையுறையாக்கி
மலம் துடைக்காமலோ
மவுனமாயிருப்பது கேவலம்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

Read more: http://viduthalai.in/page7/74936.html#ixzz2smszSOI6

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே போகிறது

பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில், ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது' என, தேசிய குற்ற பதிவுகள் அமைப்பு கூறியுள்ளது. தேசிய குற்ற பதிவுகள் அமைப்பு, வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியதாவது; பாலியல் வன்முறை குற்றங்களில், 2002ஆம் ஆண்டு 485 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர். இது, 2012இல் 1,175ஆக அதிகரித்துள்ளது. கொலையில் ஈடுபட்டதாக, 531 சிறார்கள், 2002இல் கைது செய்யப்பட்டனர். 2012இல், 990ஆக அதிகரித்துள்ளது.இதை தவிர்த்து, 2002,இல் 63 சிறார்கள், கூட்டுக் கொள் ளையிலும்; 207பேர் வழிப்பறியிலும், 1,723பேர் கொள்ளையிலும்; 3,361 சிறார்கள், திருட்டு வழக்கிலும் ஈடுபட்டுள்ளனர். இது 2012இல் ஒப்பிடும்போது, முறையே, 174;767; 2,625 மற்றும் 5,528ஆக அதிகரித்துள்ளது. கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 164 சிறார்கள் மீது, 2002ஆம் ஆண்டும், 2012இல், 789சிறார்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட் டது. பெண்களை தாக்கியது, பாலியல் தொந்தரவு செய்தது என, 2002இல், 476 சிறார்கள் மீதும், 2012இல் 613 சிறார்கள் மீதும், வழக்குபதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு, புள்ளி விவரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்மூலம், கடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பது, கவலையளிப்பதாக உள்ளது. சுற்றுப்புறச் சூழல், தவறான சேர்க்கையால், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சமூக - பொருளாதார பின்னணி,மனநிலை போன்றவையும், குற்றங்கள் அதிகரிப்புக்கு காரணம் என,தேசிய குற்றபதிவுகள் அமைப்பு தன் கருத்து தெரிவித்துள்ளது.

- தினமலர்- 8-.12.-2013 பக்கம் 8

Read more: http://viduthalai.in/page8/74938.html#ixzz2smtX1dGz

தமிழ் ஓவியா said...


வா(வீ)ழ்க சோஷலிசம்!


இந்தியாவில் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வைத் துள்ள வரி பாக்கி ரூ.2.46 லட்சம் கோடி இதில் 45 நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளன என்று நிதித்துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் மக்களவையில் தெரிவித் துள்ளார் (6.2.2014).

இந்தியாவில் நாள் வருமானம் 20 ரூபாய் என்ற நிலையில் உள்ள வர்கள் 70 சதவீதம் என்று சென்குப்தா அறிக்கை கூறுகிறது. உலகில் 120 கோடி மக்கள் வறுமை யின் வன்பிடியில் சிக்கி விழிபிதுங்குகிறார்கள் என்றால் அதில் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி) மக்கள் பாரத புண்ணிய பூமியாம் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பெரும் பணத் திமிங்கலங்கள் இலாபம் கொழிக்கும் எஜமானர்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி யைச் செலுத்தவில்லை என்றால் இதற்குக் கார ணம் என்ன?

பண முதலைகள், ஏமாற்றுக்காரர்கள் என் பது ஒருபுறம் இருக்கட் டும்; அந்த முதலைகளை அடக்க ஒரு அங்குசம் இந்திய அரசிடம் இல்லை என்பது பரிதாபமே!

கேதன் தேசாய் என்ற பார்ப்பனர் இந்திய மருத் துவக் கவுன்சிலின் தலை வராக இருந்தார். வரு மான வரித்துறையினர் அவர் வீட்டில் புகுந்து சோதனை நடத்திய போது 1500 கிலோ தங்கக் கட்டிகளையும், ரூ.1800 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினார்களே - அதற்குப் பிறகு ஒரே ஒரு வரி செய்தி வெளியில் கசிந்ததுண்டா?

சுவிஸ் வங்கியில் மட் டும் முடங்கிக் கிடக்கும், இந்தியர்களின் பணம் ரூ.80 லட்சம் கோடி; இதனை இலகுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு வெளிநாடு களில் இருக்கும் கடன் தொகையைவிட 13 மடங்கு அதிகம் - இதன் மதிப்பு. இந்தத் தொகையைப் பறிமுதல் செய்தால் ஒவ் வொரு இந்தியக் குடி மகனுக்கும் ரூ.50 ஆயி ரம் இலவசமாக சுண்டல் போலக் கொடுக்கலாமாம்.

பிஜேபி. ஆனாலும் சரி, காங்கிரசானாலும் சரி, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத் தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று முண்டாதட்டினார்களே தவிர சல்லிக்காசுகூட வந்து சேரவில்லை.

பணத் திமிங்கலங் களை மேலும் வளர்ப்பது தான் இந்திய அரசின் கொள்கை போலும்! சொகுசு கார் வாங்க நினைத்தால் அதற்கு இந் திய வங்கிகளில் வட்டி 7 சதவீதம், குளிர்ப்பதனக் கிடங்கு கட்டுவதற்கு முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட கடனுக்கு வட்டி வெறும் 4 சதவீதம்.

அதே நேரத்தில் ஓர் விவசாயி ஒரு டிராக்டர் வாங்க வேண்டுமானால் வங்கி விதிக்கும் வட் டியோ 14 சதவீதம்.

ஹரிபீ கட்டாவோ! (வறுமையே வெளியேறு!) - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/74962.html#ixzz2srqbBCwS

தமிழ் ஓவியா said...


காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பின்பற்றுபவர்தான் மோடி! ராகுல் காந்தி தாக்கு!

பர்டோலி, பிப்.9- காந்தியின் படுகொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ். எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடி யும் பிரதிபலித்து கொண்டி ருக்கிறார் என மோடியை ராகுல்காந்தி தாக்கி பேசி னார். குஜராத் மாநிலம் பர் டோலியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.2.2014) தேர்தல் பிரசாரம் செய்தார்.

இதை முன்னிட்டு ஹசாரி பக் என்ற இடத்தில் பேர ணியும் நடந்தது. அதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பின் னர் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், இம்மாநில முதல்வரும் பாஜ.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரடி யாக தாக்கி பேசினார். அவ ருடைய பேச்சு விவரம் வருமாறு:

சர்தார் வல்லபாய் படே லின் சிலையை அமைப்ப தாக இங்குள்ள தலைவர் கூறி வருகிறார். ஆனால், படேலின் வரலாற்றை அவர் சரியாக படிக்கவில்லை. அவருடைய கொள்கைகள் பற்றி சரியாக தெரியவில்லை.

ஆனால், அவருக்கு சிலை அமைப்பதாக மட்டும் கூறி கொள்கின்றனர். ஆர்எஸ்எஸ் ஒரு விஷ அமைப்பு என்று படேல் கூறினார். மகாத்மா காந் தியின் படுகொலைக்கு பின் னணியில் ஆர்எஸ்எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடியும் பிர திபலித்து கொண்டிருக் கிறார். உண்மையில்லை என்று தெரிந்தாலும் கூட, தனது மனதில் தோன்றுவதை எல்லாம் அவர் பேசுகிறார்.

நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால், ஊழ லுக்கு எதிராக போராடுவ தாக கூறிக் கொள்ளும்படி மோடி, குஜராத் மாநிலத் தில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான தீர்மா னத்தை 9 ஆண்டுகள் நிறை வேற்றாமல் இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும்.

ஆனால், குஜ ராத்தில் ஒரே ஒரு தகவல் ஆணையர்தான் இருக் கிறார். அதுவும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் இவரும் நியமிக்கப்பட் டார். ஊழலை ஒழிப்பதில் பாஜ.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது சம்பந்தப்பட்ட 6 மசோ தாக்களை நாடாளுமன்றத் தில் நிறைவேற்ற காங்கிர சுக்கு ஏன் உதவக் கூடாது? விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். குஜராத்தில் 13 ஆயிரம் அரசுப் பள்ளி கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஏழை மக்களையும், ஆதிவாசிகளையும் புறக் கணித்து விட்டு, மாநிலம் வளர்ச்சி பெறுவதில் எந்த பலனும் இல்லை.

மக்களின் கையில் அதிகாரத்தை வழங்கவே காங்கிரஸ் விரும்புகிறது. வறுமையை ஒழிப்பது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. பாஜ.வோ ஏழைகளை ஒழிப்பது பற்றி பேசுகிறது. நாடு முழுவதும் மக்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக் கின்றனர். சிலர் டீ விற்கின் றனர். சிலர் டாக்சி ஓட்டு கின்றனர். சிலர் விவசாயம் செய்கின்றனர்.

யார் எந்த தொழில் செய்தாலும் அதை மதிக்க வேண்டும். ஆனால், ஒரு மனிதர் நம்மை எல் லாம் முட்டாளாக்கி கொண் டிருக்கிறார். அது போன்ற வர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவ சியமில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/74968.html#ixzz2srqlNoyk

தமிழ் ஓவியா said...


தீட்சதர் வால்


சாதாரணமாகவே குரங்கு அது கள்ளுக் குடித்த போது தேளும் கொட்டி னால் என்னாகும்? என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு.

இது சிதம்பரம் தீட்சதர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். சிதம்பரம் நட ராஜர் கோயில் தீட்சதர் களின் சிண்டுக்குள் சிக்கி விட்டது என்றவுடன் பூணூல் விரைக்கத் தானே செய்யும்?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்சபை அரு கில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம் பாடச் சென்றபோது கோயில் தீட்சதர்கள் தடுப்பு வேலையில் இறங்கியுள்ள னர். ஆறுமுகசாமி வழக் கமாக உட்கார்ந்து தேவா ரம், திருவாசகம் பாடும் இடத்தில் எண்ணெயை ஊற்றி அவரை அமர விடாமல் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுக சாமி காவல்துறையில் புகார் செய்துள்ளார். சிதம்பரம் கோயில், தீட்சதர் கையிலி ருந்து இந்து அறநிலையத் துறைக்குச் சென்ற நிலை யில், கோயிலுக்குள் உண்டி யல் வைக்கப்பட்டு இருந் தது. அப்பொழுது இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரி யுமா? உண்டியலுக்குள் நெய்யை ஊற்றினார்கள்.

ஏன் தெரியுமா? ரூபாய் நோட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நாசமாகப் போய் விட வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைதான்; தனக் குப் பயன்படாத ஒன்று நாச மாகப் போய்விட வேண் டும் என்பதுதானே பார்ப் பனப் புத்தி!

Read more: http://viduthalai.in/e-paper/74963.html#ixzz2srquW5hk

தமிழ் ஓவியா said...


செருப்பினை செய்திடவும் தெரியும் பயன்படுத்தவும் தெரியும்


- குடந்தையான்

1970-ல் சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் இரா மனை பெரியார் செருப்பால் அடித்தாராம். அதற்காக புரட்சியாளர் பெரியாரை அப்போதே தாக்கியிருக்க வேண்டும் என, பார்ப்பனன் ஹெச்.ராஜா அண்மை யில் பேசியதற்கு, பலரும் கோபப்படுகிறார்கள்; சிலர் கூட்டம் போட்டு கண்டனம் செய்துள்ளார்கள். நியாயம் தானே;

சாதாரண வார்டு உறுப்பினர் மீது அவதூறு பேசினாலே, அந்த பக்கத்தில் பேருந்து ஓட முடியாத நிலை ஏற்படும் காலத்தில், இரண்டாயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை புரட்டிப்போட்ட பெரியாரை அவமதிக்க நினைத்தால், கோபப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

ஆனால், பார்ப்பனன் ஹெச்.ராஜாவுக்கு, அவரது தலைவன் மோடியைப் போல வரலாறு தெரியாது.

காந்தியாரை, ஹெச்.ராஜாவின் ஜாதிக்காரன் சுட்டுக் கொன்ற நிலையில், நாடெங்கும் பதற்றமும், சில இடங்களில் பார்ப்பனர்களைத் தாக்கும் வன் முறையும் ஏற்பட்ட நிலையில், தமிழ் நாட்டில் எந்தக் கலவரமும் ஏற்படக்கூடாது என்ற நோக் கத்தில், அன்றைய அரசு, யாரை அழைத்தது தெரி யுமா? ஹெச்.ராஜாவின் பாட்டன் இராசகோபாலாச் சாரியை அழைக்கவில்லை; ஹெச்.ராஜாவின் (உ)லோக குரு சீனியர் சங்கராச்சாரியை அழைக்க வில்லை;

மனித நேயர் பெரியாரைத் தான் வானொலி மூலம் அமைதிப் படுத்திட அழைத்தார்கள். அன்றைக்கு பெரியார், காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற பார்ப் பனன் தான் என்று சொல் லியிருந்தால், இன்றைக்கு ஹெச்.ராஜாவின் சமுதாயமே தமிழ் நாட்டில் இருந்திருக்காது.

கடலூரில் பொதுக்கூட்டம் முடிந்து வரும் வழியில், பெரியார் மீது செருப்பு ஒன்று வீசினான் ஹெச்.ராஜாவை ஒத்த ஒருவன். ஆனால் பெரியார் மிரண்டு விட வில்லை; மாறாக, இன்னொரு செருப்பு வீசினால், பயன்படுமே என்று வண்டியை அந்த பக்கமே திருப்பச் சொன்னவர் பெரியார். இன்று அந்த இடத்தில் பெரியாரின் சிலை கம்பீரமாக நிற்கிறது இந்த செய்திகளுடன். செருப்பு ஒன்று விழுந்தால், சிலை ஒன்று முளைக்கும் என்றான் ஒரு கவிஞன்.

ஹெச்.ராஜாவின் ஜாதிக்காரன், இப்போது பிஜேபியில் சேர்ந்துள்ள சுப்ரமணியன் சாமி, (உ)லோக குரு சீனியர் சங்கராச்சாரியை சந்தித்து, தான் பொது வாழ்வில் செல்வதற்கு ஆசி வழங்கிட கோரினார். அப்போது, சீனியர் சங்கராச்சாரி என்ன சொன்னார் தெரியுமா? என்றார். காரணம் கேட்ட போது, சீனியர் சொன்னார், மக்களை அன்றாடம் சந்தித்து வந்தவர் பெரியார்; அதன் காரணமாக, அவர் களிடத்தில் அறிமுகமும், அவர்களின் பிரச்சினை களை அறிந்து கொள்ளவும் முடியும் என்றார்.

பெரியாரின் ஈடுபாட்டால் வைக்கம் போராட்டம் தீவிரம் அடைந்ததால், அங்கே உள்ள பார்ப்பனர்கள், சத்ரு சங்கார யாகம் நடத்தினர். அவ்வாறு செய்தால், அவர்களால் எதிரியாகக் கருதப்படும் பெரியார் இறந்து விடுவார் என்ற எண்ணம். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராஜாதான் இறந்து போனார். ஓர் சமஸ்தானத்தின் ராஜாவுக்கே இந்த கதி என்றால், வெறும் பெயரில் மட்டும் ராஜாவாக உள்ள ஹெச்.ராஜா கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

பெரியாரின் அறிவுரையை ஏற்று, பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை, மெத்த படித்த பண்டிதர் முதல், சாமான்ய மக்கள் வரை நீக்கிய மண் இந்த தமிழ் மண்.

பெரியாரின் கட்டளையை ஏற்று, இந்திய அரசியல் சட்டம், ஜாதியை பாதுகாக்கிறது; அதற்கான பிரிவுகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசியல் சட்டத்தை கொளுத்தி, அதன் காரணமாக, மூன்றாண்டுகள் வரை கடும் தண்டனையை பெற்ற பெரியார் தொண்டர்கள் வாழும் நாடு இந்த தமிழ் நாடு. ஹெச்.ராஜாவுக்கு, செருப்பினை காலில் மாட்ட மட்டும் தான் தெரியும். ஆனால், திராவிடர் சமுதாயத் திற்கு, செருப்பினை செய்திடவும் தெரியும்; அதற் கான ஆயுதமும் கையில் இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-2/74973.html#ixzz2srrVMDIx

தமிழ் ஓவியா said...


பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு


சென்னை, பிப். 9-குழந் தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக் கிறது. மேலும் பெரியவர் களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடு கின்றனர். பிஸ்கெட் சாப் பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயர மாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத் துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்சர்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறு வனங்களின் பிஸ்கெட்டு கள் மற்றும் 25 நிறுவனங் கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற் றில் உணவு பாதுகாப்பு மற் றும் தர நிர்ணய அமைப் பின் விதிகளின்படி பிஸ் கெட்டுகள் தயாரிக்கப்பட் டுள்ளதா? இந்திய தர நிர் ணய அமைப்பு தெரிவித் துள்ள கொழுப்பு, புரோட் டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கருநாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங் களில் கடந்த ஏழு மாதங் களாக பிஸ்கெட்டுகள் பரி சோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குநர் சந்தனராஜன் கூறியதாவது:

ரசாயன கலவைகள்

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக் கரியில் இருந்து தயாரிக்கப் படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங் கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க் கப்பட்டுள்ளன.
ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட் டுகளில் ரசாயனக் கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவ தன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

கவர்ச்சியான விளம்பரங்கள்

மாறாக உடலில் சத்து கள் உருவாகாது. பெரும்பா லான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உண வுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க் கரை நோயாளிகள் சாப்பிட லாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம் பரங்களைச் செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகை யிலைப் பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட் களாலும் 30 விழுக்காடு புற்று நோய் வர வாய்ப் புள்ளது என்றார். எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன் ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும் பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நீரிழிவு, ரத்த அழுத்தம்

இனிப்பு வகை ஊறு காய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவை யும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக் கும். இந்தத் தகவலை இந் திய நுகர்வோர் சங்க தலை வர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/74949.html#ixzz2srslzQSz

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்டம்!


தமிழ்நாடு அரசு விழிக்குமா? செயல்படுமா?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்டம்!
முன்னாள் எம்.பி. வி.வி.சுவாமிநாதன் கேள்வி

சிதம்பரம், பிப்.9- சிதம் பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் சட்டமீறல்கள், ஒழுக்கக்கேடுகள்பற்றி முன்னாள் மாநில அமைச் சரும், நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினருமான வி.வி.சுவாமிநாதன் முதல மைச்சருக்குத் தகவல் அனுப்பினார்.
6.1.2014 அன்று உச்சநீதி மன்றம் எந்தவித நிபந் தனையுமின்றி, தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை மதச்சார்பற்ற நிர்வாகத் தின்கீழ் 2.2.2009-லிருந்து இருந்து வந்ததை, தில்லை தீட்சதர்களிடம் ஒப்படைத் ததின் விளைவு, தீட்சதர்கள் சட்டத்தையும், அவர்கள் கடைப்பிடித்த பழைய மரபு களையும் மீறி பக்தர்களை, வழிபடுவோர்களை ஆத் திரம் மூட்டும்படி நடப்ப தாகும்.

எடுத்துக்காட்டாக இந் தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர் கார்கள்கூட நுழைய அனு மதிக்காத நடராசர் கோவி லுக்குள், கொலைக்குற்றம், பாலியல் வன்முறைக் குற் றங்கள் சாட்டப்பட்டு, விடு தலையான காஞ்சி சங்கராச் சாரியாரின் காரை கோவிலுக் குள் அனுமதித்ததைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. அதுமாத்திர மல்ல,
குழந்தைத் திருமணம் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது தெரிந் தும், நிர்வாகம் தங்கள் கையில் இருக்கிறது; கோவி லின் நான்கு கோபுர வாசல் கதவுகளின் பூட்டு சாவிகள் தங்கள் கைகளில் இருப்ப தால், 18 இளம் ஆணுக்கும், பெண்ணுக்கும், பூட்டப் பட்ட கோவிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 10.2.2014 அன்று அதிகாலை 4 மணிமுதல் 5 மணிக்குள் திருமணங்கள் நடத்த ஏற் பாடாகி இருக்கிறது.

எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தவுடன், 3.2.2014 அன்று மதியமே தமிழ்நாடு முதலமைச்சருக் கும், அன்றே விழுப்புரம் டி.அய்.ஜி.க்கும் தந்தி மூல மும், கடிதம்மூலமும் தக வல் கொடுத்திருக்கிறேன்.

7.2.2014 உள்ளூர் சிதம் பரம் துணை ஆட்சியரிட மும் 18 குழந்தைத் திரு மணங்களைத் தடுப்பது டன், நடத்துபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கடிதம் எழுதியிருக் கிறேன். கோவிலுக்குள் வரு கிற பக்தர்களுக்குப் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங் கப்படவில்லை; வழிபட வருகிறவர்களுக்கு அவசரத் திற்கு சிறுநீர் கழிக்கக்கூட கழிப்பறை இல்லை.

பழையபடி கோவிலுக் குள் இரவில் சீட்டாட்ட மும், மது அருந்துதலும் தொடர்வதாகத் தகவல்.

நடராசர் கோவில் பொதுக் கோவில் என்பதால், அதற் குள் குழந்தைத் திருமணம் போன்ற குற்றங்கள் நடப்ப தைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடவேண் டும். மனித உரிமை ஆர்வ லர்கள் குழந்தைத் திரு மணங்களைத் தடுக்க முயன் றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

தமிழக அரசு குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, திருமண ஏற்பாடுகளை செய்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமா? என்று முன்னாள் மாநில அமைச்சரும், நாடாளு மன்ற உறுப்பினருமான வி.வி.சுவாமிநாதன், தமிழ் நாடு அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.


முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட தந்தி (3.2.2014)

Hon., J.Jayalalitha Amma
Chief Minister
Government of Tamil Nadu
Secretariat, Chennai-9
Request to prevent 28 Children both bride and bridegroom Marriages between 4 am to 5 am on 10.2.2014 in Ayirankkal Mandapam by Thillai Deekshadars inside Lord Natarajar Koil in Chidambaram Town Cuddalore District Proposed to be conducted by Printed invitations.

- V.V.Swaminathan, Ex. M.P.,
Former HRCEA Minister, Chidambaram

Read more: http://viduthalai.in/page-8/74957.html#ixzz2srsx1KmT

தமிழ் ஓவியா said...


மணமகனுக்குத் தாலி



இன்றைய நாளேடு களில் ஒரு செய்தி பர பரப்பாக வெளியிடப் பட்டுள்ளது. நீடாமங் கலம் காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த சோமு. கல்யாணி இணையரின் மகள் கல்யாணி; சிறீரங் கம் பழனி நாயக்கன் - திலகவதி ஆகியோரின் மகன் சதீஷ் ஆகியோரின் திருமணம் நீடாமங்கலத் தில் நடைபெற்றுள்ளது.

வழக்கம்போல மாலை அணிவிக்கப்பட்டது. மணமகன் மணமகளுக் குத் தாலி கட்டினார்; இது வரை ஒன்றும் இல்லை - எங்கும் நடக்கக் கூடியது தான்; மணமகள் மணமக னுக்கும் தாலி கட்டினாரே பார்க்கலாம்; ஒரே பரப்பு சலசலப்பு! கிசு கிசு!

ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு அடை யாளமே இது என்று பெற்றோர் அறிவித்தனர்.

இது வரவேற்கத்தக்க ஒன்றே! திராவிடர் கழகத் தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையல்ல; ஏற் கெனவே நடைபெற்றது தான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகள் சரஸ்வதி - புலவர் கண்ணப்பர் திருமணம் நடந்தது. மஞ்சுளா பாய் அம்மையார்தான் முன் னின்று ஏற்பாடு செய்தார்.

மணமகளிடம் மண மகன் கண்ணப்பனைப் பற்றி எடுத்துக் கூறினார். நல்ல பகுத்தறிவுவாதி - நம் கொள்கை வழிப்பட் டவர் என்று எல்லாம் எடுத்துக் கூறினார்.
தாலி உண்டா என்று புரட்சிக்கவிஞரின் மகள் கேட்டார். தாலி எல்லாம் உண்டு என்று மஞ்சுளா பாய் அம்மையார் கூறி னார். அப்படியென்றால் மணமகனுக்கு நானும் தாலி கட்டுவேன் - சம் மதமா என்று எதிர்க் கேள்வி போட்டார் மண மகள் சரஸ்வதி. (புரட்சிக் கவிஞர் மகள் அல்லவா!) அதன்பின் தாலியில்லா மல் அந்தத் திருமணமும் நடைபெற்றது. (23.1.1944).

கையொப்பமிட்டு அழைப்புக் கொடுத்தவர் கள் ஈ.வெ. ராமசாமி மஞ்சுமளாபாய்வைசு.

1964ஆம் ஆண்டில் மன்னார்குடி வட்டம் எடமேலையூர் பெரியார் பெருந்தொண்டர் சாம்பசிவம் அவர்களின் மகள் பானுமதி - சகோதரி யின் மகன் சவுந்தரராச னுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்றது.

அந்த விழாவிலும் மணமகள் மணமகனுக் குத் தாலி கட்டினார். செய்யாறையடுத்த வாழ்குடை என்ற ஊரில், வி.எஸ். கிருஷ்ணசாமி என்பவருக்கு (கான்ஸ்ட புள்) திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. மணமகன் தாலியும் கட்டி விட்டார்; தாலி பெண் அடிமை என்பதற்கு அடையாளம் என்று தந்தை பெரியார் பேசினார்; தன் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை திடீரென்று மணமகள் கழற்றி மேசையின்மீது போட்டாரே பார்க்கலாம்.

உலகில் நடக்கும் எந்த கலாச்சாரப் புரட்சிக் கும் மேலானது - தந்தை பெரியார் தம் கருஞ் சட்டைக்காரர்களின் அன்றாடப் புரட்சிகள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75035.html#ixzz2sy9Sz0a2

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்.....


சரஸ்வதி யாகமாம்

திருப்பதியில் சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டுள்ளது. ஏராள மாணவர்கள் கலந்து கொண்டார்களாம். தேர்வு நன்றாக எழுத கங்கணக் கயிறுகளும் கட்டப்பட்ட தாம்.

(மாணவர்களைக் கெடுப்பதற்கு அவர்களின் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் குலைப் பதற்கு இது போன்ற மூடத் தனங்கள் அரங்கேற்றப்படு கின்றன - இவை தடுக்கப்பட வேண்டும்).

நல்ல நேரம்

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நிதி நிலை தாக்கலுக்காக 13ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக் கப்பட்டு இருந்தது. இப் பொழுது திடீரென்று காலை 11 மணிக்கென்று மாற்றப்பட் டுள்ளது. காரணம் இதுதான் நல்ல நேரமாம். வாழ்க அண்ணா நாமம்!

(விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரச மைப்புச் சட்டம் கூறுகிறது. முதலில் முதல் அமைச்சர் களைக் கூட்டிப் பகுத்தறி வுப் பாடம் நடத்துவது அவசியம்).

தீராவினை!

திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சேயின் மனைவி சிராந்தியா ராஜ பக்சே சனியன்று திரு மலைக்கு வந்தா ராம்.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவாளர் ஏழுமலையான், இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்ற பாவத்தைத் தீர்த்து வைக்க மாட்டாரா என்ற நம் பிக்கையாக இருக்குமோ!

(இன்னொரு கூடுதல் தகவல்: புத்தர் விகாரமான இருந்ததுதான் ஏழுமலை யான் கோயிலாக மாற்றப் பட்டது என்பது வரலாறு.)

சர்வதேச அவமானம்!

அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் டில்லியில் நிடோ தனியம் கொல்லப்பட்டது தேசிய அவமானம் என்று பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

(ஒருவர் கொல்லப்பட் டதே தேசிய அவமானம் என்றால் குஜராத்தில் 2000 பேர் கொல்லப்பட்டது சர்வ தேச அவமானம் அல்லவா!)

நாணயம்?

கழிப்பறையில் கட்டணம் வசூலித்தால் 1913 என்ற எண்ணுக்குத் தொலைபேசி செய்யுங்கள் என்று மாநக ராட்சி அறிவித்துள்ளது

(நம் நாட்டின் நாணயம், பொது ஒழுக்கம் எந்த யோக்கி யதையில் உள்ளது என்ப தற்கு இது ஒன்று போதாதா? முன்பெல்லாம் ரயில் நிலை யங்களில் குடிதண்ணீர் பானையில் குவளையை சங்கிலியால் கட்டி பூட்டுப் போட்டுத் தொங்க விடுவார் கள். அதுபற்றி அப்பொழுது விடுதலை கிண்டல் செய் ததுண்டு - இந்த 2014-லும் இப்படியொரு நிலையா? இதுதான் பாரத புண்ணிய பூமியாம்.

(வெட்கக்கேடு சர்வசக்தி கடவுள் கோயிலுக்கும், உண்டியலுக்கும்கூட இங்கு பூட்டுத் தேவைப்படுகிறதே!)

Read more: http://viduthalai.in/e-paper/75041.html#ixzz2syA3RfGr

தமிழ் ஓவியா said...


சிக்கன எளிய திருமணம் - கலைஞர் மன நிறைவு -



சென்னை, பிப்.10- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் எளிமையான முறையில் கலைஞர் தொலைக்காட்சி ஊழியர் தம்பிதுரை இல்லத் திருமண விழா நடைபெற்றது. கலைஞர் நடத்தி வைத்தார். சுயமரியாதை முறையி லான எளிய திருமண நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைத் தவிர்த்து நம்முடைய வீட்டிலேயே நடத்திக் கொள்கிற இந்தச் சிக்கனம் போற் றத்தக்கது - பாராட்டத்தக்கது. தந்தை பெரியார் பலமுறை இந்த முறையைப் பாராட்டியிருக்கிறார் - நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கலைஞர் (9.2.2014).

Read more: http://viduthalai.in/e-paper/75038.html#ixzz2syACdAj1

தமிழ் ஓவியா said...


திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/75021.html#ixzz2syAr7S9z

தமிழ் ஓவியா said...


திரும்பத் திரும்ப பேசற நீ


-குடந்தையான்

அண்மைக் காலமாக நரேந்திர மோடி, பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ் வாறு சொல்வதன் மூலம், தான் சாமானிய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார். ஆனால், நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடு கள், சாமானிய மக்களின் வளர்ச்சிக் காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள் ளையடிப்பதற்கான திட்டங்கள் தான், மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த பெரும் தொழில் நிறுவனங் களால், பெரிய அளவில் வேலை வாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக் கும் குறு, சிறு, தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குஜராத்தின் வரவு செலவு கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளி களுக்கான மானிய நிதியாகவும், சிறு, தொழில் செய்வோருக்கு 2.3 விழுக் காடு மானிய நிதியாகவும் தான் அளிக் கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத் திற்கும், அதானி குழுமத்திற்கும் தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகை கள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங் களால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு தரப்பட வில்லை. மோடியை பிரதமராக்கிடுவதில் பெரு முத லாளிகள் தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள்.

ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக் கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட தாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டதாக மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவை விட கூடுதல் நிதியை பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13 க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2473 கோடிதான், அதாவது நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத் தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு அதாவது, ரூ.49000 கோடி நேரடி அன்னிய முதலீட்டை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ் நாடு, ஆந் திரா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள், தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள், கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ் நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள் தான் கிடைத் தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத் துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப் படும் மனித வள குறியீட்டில், 12-வது இடத்தைத் தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப் 27, 2013). கார்ப் பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்கு காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட் டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்று தான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற் றம் என்பதை மறந்தும் சொல்ல வில்லை; அவரது பேச்சிலும், செய லிலும் சமூக நீதியைப் பற்றி எந்த கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களை சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்கு கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கு உணர்த்த வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/75034.html#ixzz2syBN6Fic

தமிழ் ஓவியா said...

கிராம அதிகாரப் பகிர்வு நடைமுறையில் யாருக்குப் பயன்படுகிறது?


ஜனவரி 30, 2014 அன்று காந்தியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் நாட்டின் அர சியல் அதிகாரத்தில் இருப் போரின் நடவடிக்கைகள் நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்பதை மறந்து வருகின்ற நிலைமைகளை தெரிவிப்பதாக அமைந்து விட்டன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் கலந்துகொண்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் அந்த மாநில அரசின் ஒரு அமைச்சர் கூட கலந்து கொள்ளவில்லை. மும்பாய் மாநகர மேயர் சுனில் பிரபு தேசத் தந்தையின் நினைவுநாள் நிகழ்ச்சியி னையே மறந்துவிட்டார். தமக்கு நினைவூட்டவில்லை என அதிகாரிகள் மீது பழி போட்டுவிட்டார். இந்த நிலை வியப்பினை அளிக்கத் தக்கதாக இல்லை என்பதை அண்மையில் ஒரு செய்தி ஊடகம் பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்புப் பணியின் முடிவுகள் முன் னமே தெரிவித்துவிட்டன. நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர் கள் சோனியா காந்தியை மகாத்மா காந்தியின் உறவி னர் எனக் கருதுவதாக அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.

காந்தியாரின் போதனை கள் பலரை ஊக்குவிப்ப தாகத் தோன்றுகிறது! ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் காந்தி குல்லாவை அணிவதன் மூலம் காந்தியாரின் தத்து வத்திற்கு தம்மை சொந்த மானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துவ தன் மூலம் காந்தியாரின் கிராம சுயராஜ்யத்தை நிறை வேற்ற முயல்வதாகக் கூறு கின்றனர்.

ஆனால் அவர்கள் காந்தி யாரின் நிழல் ஆதிக்கத்தில் வாழ்ந்த மற்றொரு பேரு ருவாகத் திகந்த தலைவர், காந்தியாரின் தத்துவப் போதாமையை தம் மறை விற்கு பின்னர் வெளிப்படுத் திக் காட்டிய வலிமையினை அக்கட்சியினர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆம் தலித் மக்களின் தலைவராகக் கருதப்பட்ட டாக்டர் பீம ராவ் அம்பேத்கர் ஆவார் அவர்.

காந்தியாரின் கொள்கை

கிராம நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் காந்தி யாரின் கொள்கைகளும், அம் பேத்கரின் கொள்கைகளும் எதிரானவை. மய்ய அரசு தம்மிடம் குறைந்த அதிகா ரத்தை வைத்துக் கொண்டு, பெரும்பான்மை அதிகாரங் களை கிராம சபையிடம் அளித்துவிட வேண்டும்; கிராமத் தலைவர் ஆட்சி செலுத்தும் பழைமைவாத அடிப்படை நிலவிட வேண் டும் என்று காந்தியார் விரும் பினார். ஆனால் அம்பேத் கரோ கிராமங்கள் மற்றும் அதன் நிர்வாகத் தலைமை யினர், கொடுங்கோன்மை, ஜாதி பாகுபாடு, வகுப்பு பேதம் ஆகியவற்றின் ஊற் றுக் கண்ணாய் திகழ்ந்து வரு கிறார்கள் எனக் கருதினார். மனித நேயத்திற்குப் புறம் பாக நடந்து கொள்ளும் ஆதிக்க மனப்பான்மையி னரிடம், மனித உரிமைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கேள்வி கேட் டார். ஒரு முறை பம்பாய் மாநில சட்ட மேலவையில், கிராமத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்திட வல்ல. மசோதா விவாதத் திற்கு வந்த பொழுது அம் பேத்கார் கூறியது நினைவூட் டத்தக்கது:

ஜாதியக் கட்டுப்பாட் டுக்குள் உள்ள மக்கள் பகுதி யினர் - பழைமைவாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட மக்கட் பிரிவு - சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு பிரிவினர் - சமூக தளத்தில் பிறப்பின் அடிப்படையி லான வேறுபாட்டை வலி யுறுத்தும் வகையினர் - மக்களில் ஒரு பகுதியினர் உயர்ந்தவர்கள், பிறர் தாழ்ந் தவர்கள் எனும் கருத்தைக் கடைப்பிடிப்போர் - இவர் களிடம் நியாயமான வகை யில் நீதியை எதிர்பார்க்க இயலுமா? கிராமத் தலை மைக்கு ஆட்சி அதிகாரப் பகிர்வை நான் வன்மையா கக் கண்டிருக்கிறேன். அப் படிப்பட்டவர்களிடம் எமது வாழ்வு, விடுதலை, எங்கள் உடமைகளை அடகு வைத் திட நாங்கள் தயாராக இல்லை.

தமிழ் ஓவியா said...

டாக்டர் அம்பேத்கரின் ஆய்ந்த முடிவுகள் 80 ஆண்டு களைக் கடந்த வேளையில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அரசமைப்புச் சட்ட அரவ ணைப்புப் பிரிவுகள், இதர சட்டப் பிரிவுகள், அரசியல் பிரகடனங்கள் உள்ள நடப்பு வேளையிலும் பலமாகவே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிராமத்தை நோக்கிய அதிகா ரப் பகிர்வு, சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் - முசாபர் நகரில் கொத்தாக முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட நிலைமை நிகழ்ந்துள்ளது. ஒரு முஸ்லிம் ஆண், ஒரு இந்துப் பெண்ணை விரும்பிய நிகழ்வு, வெறுப் பினை ஊட்டும் ஜாட் மகா சபைப் பேச்சால் கொலை நடைபெறும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.

பஞ்சாப் மற்றும் ஹரி யானா மாநிலத்தில் உள்ள கப் பஞ்சாயத்து (ரிலீணீஜீ ஜீணீஸீநீலீணீஹ்ணீ) நில உடைமை, கால்நடை உடமை பற்றிய விசாரணை, மணமுடித்தல் முதல் மனிதக் கொலை உள்ளடக்கிய விசா ரணை செய்து, தீர்ப்பு அளிக் கின்ற நீதிமன்றங்கள் போல செயல்பட்டு வருகின்றன. மனித உரிமை பற்றிய ஒவ் வொரு சட்ட விதியையும் அவை உடைத்தெறிந்து வரு கின்றன. பெண்கள் நாகரிக மாக உடையணிவதைக் கூட தடுக்கவல்ல தீர்ப்பினை வழங்குகின்றன. செல்பேசி பயன்பாட்டைத் தடுப்பது. குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது, இளம் தம்பதி யரை, மரியாதைக் கொலை என்பதன் பேரால் முடிவு கட்டுவது என மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட கொலைகள் மணம் புரிந்த ஆணும் பெண்ணும் வெவ் வேறு ஜாதியினைச் சார்ந்த வர்களாக இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. மேலும் மணம் புரிந்த இணையர் ஒரே கோத்திரத்தைச் சார்ந்த வர்களாக இருந்தாலும் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்திலும்...

இப்படிப்பட்ட அவல, காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுகள் நாட்டின் வடக் குப் பகுதியில் மட்டும் நிக ழுவதாக கருதிவிடமுடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தின் 20 வயதுப் பெண்ணை, 13 ஆண்கள், சேர்ந்து பாலியல் வன்முறை செய்திட கிராம சபையினர் தண்டனை விதித் தனர். அந்தப் பெண் செய்த தவறு (?), வேறு ஜாதியைச் சார்ந்த ஆணை விரும்பியதே!

அரியானா மாநிலத்தை விட முற்போக்கு மாநிலமா கக் கருதப்படும் தமிழ்நாட்டி லும் தவறு நடக்காமல் இல்லை. ஒரு தலித் ஆண், வன்னியர் சமுதாயப் பெண் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்ட தால் 268 தலித் குடும்பத்தினர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட் டன. வன்னியர் சமுதாய, டாக்டர் ராமதாஸ் காதல் திருமணத்தை கடுமையாகத் தாக்கி, தலித் ஆண்கள், வன் னியர் சமுதாயப் பெண்களை மயக்கிக் காதல் வயப்படுத்தி, பின்னர் அவர்களை கைவிட்டு விடுவதாகக் கூறுகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக ஜாதி இந்துக்களின் கூட்டணி யினை அவர் கோருகிறார். ஜாதி மறுப்புத் திருமணத்தை தடை செய்திடவும், தலித் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்களையும் வேண்டு கிறார்.

இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல. தலித் மக்களுக்காக ஒதுக்கப் பட்ட சில ஊராட்சி மன்றங் களில் தலைவருக்கான தேர்த லில் வேட்பு மனு தாக்கல் செய்திட ஒரு தலித் கூட முன் வரவில்லை. காரணம் ஆதிக்க ஜாதியினரின் அச்சுறுத்தலால் தலித் யாரும் முன்வரவில்லை.

உலக வங்கி மேற்கொண்ட ஒரு ஆய்வின், முடிவு - உல கில் அனைத்து நாடுகளிலும், கிராமங்களை விட அதிகாரம் கொண்ட மய்ய அரசுகள், முற்போக்கு மதசார்பின்மை கொண்டவைகளாக உள் ளன. அம்பேத்கர் குறிப்பிட்ட கட்டுப் பெட்டியான கிராமம் இன்னும் உலக உண்மையா கவே உள்ளது.

இப்படிப்பட்ட சூழலி லும், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் வழங்கிட வும், நீதிக் கொள்கை வகுத் திடவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட போக்குகள் கிராம அளவில் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கினைப் பேணுவதாகவே அமையும். கிராமப் பஞ்சாயத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் தலித் மக்களுக்காக, பெண் களுக்காக ஒதுக்கிவிடுதால் மட்டும் நியாயமான பலன், நீதி கிடைத்து விடுவதில்லை.

அறிவார்ந்த பார்ப்பனர் கள், கிராம பஞ்சாயத்துகளில் நிலவி வரும் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் நிலைமையினை நீக்கி விடுவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் நினைக்கின்றனர். இது நகைப்பிற்கு இடமானது. காந்திக் குல்லாயை அவர்கள் போட்டுக் கொள்ளட்டும்; அருள் கூர்ந்து அம்பேத்கரை யும் அவர்கள் செவி மடுத்திட வேண்டும்.

ஆதாரம்: சுவாமினோமிக்ஸ்
தி டைம்ஸ் ஆப் இந்தியா - 9.2.2014

மொழியாக்கம்: வீ.குமரேசன்

Read more: http://viduthalai.in/page-4/75001.html#ixzz2syBhXQLp

தமிழ் ஓவியா said...


ஆந்திரா - போரவரிப்பாலம் கிராமத்தில் தமிழர் தலைவர்: செய்தியாளர்கள் சந்திப்பு


ரேபல்லியில் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங் கேற்ற பின்னர், சமூக நீதி மன் றத்தின் மதிப்புறு தலைவர் கேச சங்கர்ராவ் அவர்கள் தமது கிராமமான போர வரிப்பாலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்றார். ஒடுக்கப்பட்ட வகுப்பினரான, மரத்திலி ருந்து கள் இறக்கும் மக்கள், பெரும்பான்மையினராக வாழும் சிற்றூர் அது.

அங்கு தமிழர் தலைவ ரின் செய்தியாளர்கள் சந்திப் புக்கு ஏற்பாடு செய்திருந் தனர். செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரி வித்தவைகளின் சுருக்கம்:

நீதித் துறையின் உயர் மட்ட நீதிபதிகள் நியமனத் தில் நியாயமான, சமூக நீதி யினை நிலைநாட்டும் வகை யில் தெரிவுகள் நடைபெற வேண்டும். நாடு விடுதலை பெற்று 66 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் கூட இல்லை என்பது சமூகநீதிக்கு ஏற் பட்ட அவல நிலையாகும். 66 ஆண்டுகள் கழித்துத்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்தவர் இந்தியா வின் தலைமை நீதிபதியாக வர முடிந்துள்ளது. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடி வகுப்பின ருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பெண் கள் நீதிபதிகளாக நியமனம் பெறுவதிலும், உயர்ஜாதி மகளிருக்கே அத்தகைய பதவிகள் அளிக்கப்படுகின் றன.

சமூகநீதி என்பது கொடை அல்ல; ஒடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும். உச்சநீதிமன் றம் மற்றும் உயர் நீதிமன்றங் களில் நீதிபதி பதவிகள் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு உரிய அளவில் இடம் கிடைத் திடும் வகையில் வலிமை யான சமூகநீதி இயக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்து கட்சிகளி லும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் ஒருங் கிணைந்து போராட முன் வரவேண்டும்.

அண்மையில் காங் கிரசு இயக்கத்தின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இடஒதுக்கீட்டு நடை முறைக்கு பொருளாதார அளவுகோல் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது; ஜாதி அடிப்படையில் வழங் கப்படும் தற்போதைய நிலை மையே நீடிக்கும் என உறுதி செய்துள்ளதை வரவேற்கி றோம். காரணம், இந்நாட்டில் இன்னமும் ஜாதி அமைப்பு முறை நீங்கியபாடில்லை என்பதே அது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் மட்டுமே நடை முறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடு, தனியார் துறையி லும் கடைப்பிடிக்கப்பட போராட வேண்டும், தனியார் மயமாக்கப்படும் சூழலில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க் கப்படுகின்றன. எடுத்துக்காட் டாக, அரசு வசம் இருக்கும் விமான நிலைய மேலாண் மைப் பொறுப்பு தனியாருக் குச் சென்றிடும் நிலை உரு வாகி உள்ளது.

வரி விதிப்பில் புதி தாக உணவு தானிய விற்ப னையில் அரிசிக்கு சேவை வரி விதிப்பிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரிசி உணவு உட்கொள்ளும், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, மாநில மக்களைப் பெரிதும் பாதிக் கும் வரி விதிப்பாகும் இது. உணவு பழக்கவழக்கப் பண் பாட்டில், ஒரு சாராரை மட் டும் (அரிசி உணவு உண்பவர் கள்) பாகுபடுத்தி அவர்க ளுக்கு வரிப்பளுவைக் கூட் டிட வல்ல மய்ய அரசின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- மேற்கண்டவாறு தமிழர் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-4/74999.html#ixzz2syBsPPjf

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடியை மக்கள் ஏற்கமாட்டார்கள் கருநாடக முதல் அமைச்சர்


பெங்களூரு, பிப். 10- நரேந் திரமோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று கர்நாடக முதல் அமைச்சர் சித்தரா மையா கூறினார்.

நாடாளுமன்ற தேர்த லையொட்டி பாரதீய ஜனதா வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவ தும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். மேலும், நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக பார தீய ஜனதாவினர் சொல் கிறார்கள்.

ஆனால் நரேந்திரமோடி யின் திட்டம் கர்நாடகத்தில் எடுபடாது என்று முதல் அமைச்சர் சித்தராமையா கூறினார். 2010-2011ஆம் ஆண்டுக்கான சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று தார்வார் செல்லும் வழியில் ஊப்ளி வந்த சித்தரா மையா அங்கு செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர் களின் கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்த லில் பாரதீய ஜனதா வெற்றி பெறாது. மத்தியில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி மீண் டும் வெற்றி பெற்று ஆட் சியை பிடிக்கும் என்ற நம் பிக்கை எனக்கு உள்ளது. பார தீய ஜனதா பிரதமர் வேட்பா ளர் நரேந்திரமோடியின் திட் டம் கர்நாடகத்தில் எடு படாது. இது கடந்த சட்ட மன்ற தேர்தலிலேயே நிரூ பிக்கப்பட்டு விட்டது.

இங்கு உள்ள வாக்கா ளர்கள் அறிவாளிகள். மத சார்பற்ற கட்சியை அடையா ளம் கண்டு ஆதரிப்பார்கள். கர்நாடகத்தைப் பொறுத்த வரையில் மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பது காங்கிரஸ் மட் டுமே! நரேந்திரமோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர். அதனால் பா.ஜனதாவுக்கு வாக்காளர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். இவ் வாறு சித்தரா மயா கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/75032.html#ixzz2syD7ZQ5P

தமிழ் ஓவியா said...


நோய்களை தகர்க்கும் முருங்கை

இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. பாதுகாப்பற்ற தண்ணீர், மாசு படிந்த காற்று ஆகியவற்றாலும் நோய் வேகமாக பரவுகிறது. இவற்றை தடுக்க மனிதர்கள் அனைவரும் முயன்றால் மட்டுமே முடியும்.

இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் நோயின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளும் வகையில் கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும். அந்த வகையில் முருங்கை கீரையை சாப்பிடலாம். இது ரசாயன உரம் இன்றி வீடுகளில் கூட தண்ணீர் இருந்தால் மிக வேகமாக வளர்ந்து நமக்கு பயன் தரக்கூடியதாகும். இதன் பயன்கள் அளவிட முடியாத வகையில் உள்ளது.

முருங்கை கீரை, காய், பூ என அனைத்தும் பெரும் பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியவை. அதிக சத்து நிறைந்தவை. திருமண விருந்தை மணமாக்க கூடியவை முருங்கைக்காய். முருங்கை கீரை, பூ, காய், விதை, வேர், பட்டை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை ஆகும். இவற்றில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன. இருமல், தொண்டைக் கம்மல் ஏற்பட்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இவற்றை போக்க முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாக குழைத்து தொண்டைக் குழியின் மேல் தடவினால் இருமல், தொண்டைக்கம்மல் நீங்கும்.

கெட்டநீர் வெளியேற முருங்கை இலையின் காம்புகளை எடுத்து அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த கஷாயத்தை காலை மாலை என 2 வேளையும் 3 அவுன்ஸ் குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாகும்.

உடம்பில் வாயுத்தொல்லை அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். முருங்கை பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு தொல்லை அகலும். வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் அகன்று விடும். மனிதர்களுக்கு மிக எளிதாகும் நோய்களில் தலைவலி முதலிடத்தில் உள்ளது.

இந்த தலைவலி தீர, முருங்கைப் பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை வலி விரைவில் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/75020.html#ixzz2syDK5TJu

தமிழ் ஓவியா said...


எடையை குறைக்கும் பேரிக்காய்


ஆசியா மற்றும் அய்ரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும் பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங் களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளை கின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.

பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்று நோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.

குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது.

பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படு கின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.

தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படு கின்றன.

பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.

பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தியும், உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த மருத்துவ குணம் படைத்த பேரிக்காய்களை நாள்தோறும் உண்போம்.

Read more: http://viduthalai.in/page-7/75022.html#ixzz2syDWiHY1