Search This Blog

28.2.14

காந்தியாரின் படுகொலைக்கும், சவார்க்கருக்கும் சம்பந்தமில்லையா?


சென்னையில் பல இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள் ளது. ஒட்டிய அமைப்பு இந்து மகாசபை. எதற்காக இந்த விளம்பரம்? வி.டி. சவார்க்கர் நினைவு நாளாம் (1966). அவர் சுதந்திரத்தின் தந்தையாம். மாவீரராம் - இந்திய சுதந்திர வரலாற் றில் நீண்ட வருடங்கள் சிறையில் இருந்தவராம்.

காந்தியாரின் படு கொலைக்கும், சவார்க்கருக்கும் சம்பந்தமில்லையாம். அவரின் 48 ஆவது நினைவு தினமாம். அந்தச் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளன மேற்கண்ட வாக்கியங்கள்.

பல்லாவரத்தில் இந்து மகாசபையால் அனுசரிக் கப்படுகிறதாம்.
காந்தியார் படுகொலைக் கும், சவார்க்கருக்கும் தொடர்பு இல்லை. அவர் நிரபராதி என்று தீர்ப்பில் கூறப்படவில்லை என் பது ஒருபுறம் இருக்கட் டும்!
1949 பிப்ரவரி 10 ஆம் நாளன்று சிறப்பு நீதிபதி ஆத்மாசரண் வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடவில்லையா?

அப்ரூவர் திகம்பர பாட்கேயின் சாட்சியத்தை வைத்து மட்டுமே சவார்க்கர் மீது குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. அதை வைத்து முடிவு கட்டுவது பாதுகாப் பானது அல்ல; அப்ரூவரின் சாட்சியம் பொய்யானது என்று குற்றவாளிகள் தரப் பில் நிரூபிக்கப்படவில்லை. அந்தச் சாட்சியம் மெய் யானதே - ஆனால், அதை வைத்து மட்டும் முடிவுக்கு வர முடியவில்லை என்று தான் நீதிபதி சந்தேகத்தின் பலனை சவார்க்கருக்குக் கொடுத்து விடுவித்தாரே தவிர - சவார்க்கர் நிரபராதி என்ற முறையில் அல்ல.

அ.தி.மு.க. பொதுச்செய லாளர்மீது தி.மு.க. ஆட்சி யில் தொடரப்பட்ட வழக் கில் ஜெயலலிதா விடுவிக் கப்பட்டது குறித்து திரு வாளர் சோ ராமசாமி பேசி னாரே (துக்ளக் ஆண்டு விழாவில், 14.1.2002) அ.தி. மு.க. ஆட்சியில் அதிக அள வுக்கு ஊழல் நடந்தது என் பது மறுக்க முடியாத உண்மை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடு தலை செய்யப்பட்டிருக் கிறார், அவ்வளவுதான் என்று சோ பேசியதை இந்த இடத்தில் பொருத்திக் கொள்ளலாம்.

காந்தியார் படுகொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பைப் படித்து முடித்த அந்தத் தருணத்திலேயே கோட்சே உள்பட அனைத்துக் கைதி களும், நீதிமன்றத்திற்கு வந் திருந்த சவார்க்கரின் காலில் விழுந்து வணங்கினார் களே, ஏன்?
அமர் ரஹே! ஹிந்து ஹிந்தி ஹிந்துஸ்தான் கபி நாஹோகா பாகிஸ்தான்; என்று கோஷம் போட்டார் களே, ஏன்? எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதானே!

சவார்க்கர் இறந்த பிறகு 1966 இல் நீதிபதி கபூர் தலை மையிலான விசாரணை ஆணையத்தின்முன் சவார்க் கரின் உதவியாளர்கள் சாட் சியம் அளித்தனர். அந்தச் சாட்சிங்கள், சவார்க்கர் உயி ரோடு இருந்தபோது நடத் தப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்தால், கோட்சேயோடு சவார்க் கரும் தூக்கில் தொங்கி இருப்பாரே!

சவார்க்கரைப் பொறுத்த வரை நேரில் சிக்கிக் கொள்ள மாட்டார்; பின்னணியிலி ருந்து இயக்கி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய கோழை!

எந்த இடத்திலும் துப் பாக்கியை எடுத்துக்கொண் டுப் போய் அவர் நிற்க மாட்டார். துப்பாக்கி வழங் குவதுதான் அவர் வேலை யாக இருக்குமே தவிர, துப்பாக்கியைப் பிடித்து அவர் நேரிடையாக மாட் டிக்கொள்கிறவர் இல்லை. அதை மற்றவர்களிடம் விட்டுவிடுவார்.

இராமன் மாதிரி அம்பு எடுக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாகத் துப் பாக்கிக் கொடுக்கிறேன். நான் இராமனை நம்பி னால் அம்பைத்தானே கொடுக்கவேண்டும். இப்பொழுது வேண்டி யது துப்பாக்கிதான் என்று சொன்னால், அதைக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றவர் சவார்க்கர்; கோட் சேயின் கைகளில் கொடுக் கப்பட்டது துப்பாக்கிதானே!

அதிக காலம் சிறையில் இருந்தவராம் - சுதந்திரப் போராட்ட வீரராம் - என்ன கதையா?

அந்தமான் சிறையில் இருந்தபோது அந்த மூன் றாண்டுகளுக்குள்ளாகவே நான்கு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் - வீராதி வீரராம்!
1911, 1913, 1918, 1925 ஆகிய ஆண்டுகளில் பிரிட் டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள் ளார். 1948 மற்றும் 1950-களிலும் இனி நான் அரசி யலில் ஈடுபடுவதில்லை என்று இந்திய அரசுக்கு எழுதி தன்னை விடுதலை செய்யக் கெஞ்சிக் கூத்தாட வில்லையா?

எப்பொழுதும் அபின் மயக்கத்திலிருக்கும் இவர் தான் உத்தமப் புருஷராம். இவரின் படம்தான் பி.ஜே.பி. ஆட்சியில் இந்திய நாடா ளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் திறக்கப் பட்டு பிறந்த நாளிலும், இறந்த நாளிலும் பிரதமர் முதல் மரியாதை நிமித்த மாகத் தலைகுனிந்து நிற் கின்றனர்; அந்தத் தலைக் குனிவுக்கு உண்மையிலே வேறு அர்த்தமாகத்தான் இருக்க முடியும்.

---------------------- கருஞ்சட்டை  -"விடுதலை” 27-2-2014

குறிப்பு: விரிவான தகவல்களுக்கு திரா விடர் கழக வெளி யீடான சவார்க்கர் - காந்தியார் - கோட்சே - ஆர்.எஸ்.எஸ். (எழு தியவர் கி.வீரமணி) நூலைப் படிக்கவும்.

38 comments:

தமிழ் ஓவியா said...


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவதா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


சோதிடத்தைப் பாடமாகப் போதிக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம் (மார்ச் 3)!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத் தைப் பாடமாக வைப்பதைக் கண்டித்து வரும் மார்ச் 3 ஆம் தேதியன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாடத் திட்டத்தில் சோதிடமாம்!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதி டத்தைச் சொல்லிக் கொடுக்கும் பட்டய வகுப்பை நடத்தவிருப்பதாக ஏடுகளில் விளம்பரம் வெளி வந்துள்ளது.

அறிவியலுக்கு விரோதமான- மூட நம்பிக்கை யின் மறு வடிவமான சோதிடத்தை ஒரு பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்க முடிவெடுப்பது - அபத்தமானது - கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51-ஏ(எச்)) விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்பவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசமைப் புச் சட்டத்திற்கே விரோத மாக ஒரு பல்கலைக் கழகம் சோதிடத்தைக் கற்பிக்க முயற்சிக்கலாமா?

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இப்படித் தான் சோதிடப் பாடத் திட்டம் வகுக்கப்பட்டது. திராவிடர் கழகம் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய நிலையில், அப்பல்கலைக்கழகம் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது.

சோதிடம் (Astrology)என்பது வேறு வானியல் (Astronomy) என்பது வேறு; இரண்டும் ஒன்றல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றவர்கள் சோதிடத்தை அறிவுலகம் ஏற்காது என்றும், எத்தனையோ லட்சம் மைல்க ளுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் பூமியில் மனித வாழ் வைப் பாதிக்கும் என்று எப்படித்தான் நம்புகிறார் களோ என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. அது செய்ய வேண்டிய உன்னதப் பணிகள் ஏராளம், ஏராளம்!

தமிழ் ஓவியா said...

அதனைக் கைவிட்டு, மூடத்தனத்தை வளர்க் கும் வேலையில் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் விஞ் ஞான மனப்பான்மைக்கு எதிரான சோதிடப் பாடத் திட்டத்தை எதிர்த்து வரும் மார்ச் 3 ஆம் தேதி தஞ்சையில் ரயில்வே சந்திப்பு அருகில் திராவிடர் கழக மாணவரணி மாநில செயலாளர் மானமிகு பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தேவையான ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

#############

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்துவதா?

மத்திய அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயது இப்பொழுது 60; அதனை 62 வயதாக உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக இன்றையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சி வேலை வாய்ப்பை எதிர்ப்பார்த் துக் காத்திருக்கும் கோடானுகோடி இளைஞர்களுக் குப் பேரிடி போன்றதோர் செய்தியாகும்!

இந்தியாவைப் பொறுத்தவரை 25 வயதுக்குட் பட்ட இளைஞர்கள் 56 சதவிகிதமாகும். இது உலகள வில் 10 சதவிகிதம்.

இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடாதா? இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

தமிழ் ஓவியா said...

சண்டிகரில் உள்ள தொழில் அமைச்சகப் பிரிவு இளைஞர்களின் வேலை வாய்ப்பு - வேலைவாய்ப் பின்மை என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இதுகுறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கணக்கெடுப் பானது நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கைமூலம் 17 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரிடையே அதிகள வில் வேலை வாய்ப்பின்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பின்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 விழுக்காடாகவும், புற நகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 விழுக் காடாகவும் காணப்படுகிறது. அதேநேரத்தில், எவ்விதக் கல்வியறிவும் இல்லாத 15-க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரிடையே வேலை வாய்ப்பின்மை 37 விழுக்காடாகவும் காணப்படு கிறது.

இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏற்கெனவே பணிகளில் இருப்போரின் ஓய்வு வயதை உயர்த்துவது பொறுப்பற்ற செயலாகும்.

பி.ஜே.பி. ஆட்சியில் மத்திய அரசு பணியாளர் களின் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தியபோதே அதனைக் கண்டித்துத் திராவிடர் கழகம் சைக்கிள் பயணம் நடத்தி, வேலை வாய்ப்பற்றுத் தவிக்கும் இளைஞர்களின் உணர்வினை வெளிப்படுத்தி னோம்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எண் ணிக்கை பெருகப் பெருக - விரக்தியின் உச்சக் கட்டத்திற்குச் சென்று வன்முறையில் ஈடுபடும் பேராபத்தினை ஓர் அரசாங்கமே முன்னின்று உருவாக்கலாமா?

பெரும்பாலும் பார்ப்பனர்களே!

மத்திய அரசைப் பொறுத்தவரை அதன் பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் பெரும் பாலும் பார்ப்பன உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களே!

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கம் காரண மாக 1992 முதல்தான் மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் உள்ளே நுழையும் வாய்ப்புக் கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்த 22 ஆண்டு களில்கூட அவர்களுக்குரிய 27 சதவிகிதம் எட்டப் படவில்லை; வெறும் ஏழு சதவிகிதம் அளவுக்கே வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர்க்கு மத்திய அரசுத் துறை களில் இட ஒதுக்கீடு 1950 முதல் உண்டு எனினும், அவர்களுக்குரிய விகிதாச்சாரமான (தாழ்த்தப் பட்டோர் 15%, மலைவாழ் மக்கள் 75%) எண்ணிக் கையில் இன்னும் முழுவதுமாக வாய்ப்புக் கிட்ட வில்லை.

இந்தச் சூழலில், ஏற்கெனவே பணியில் உள்ள உயர்ஜாதியினருக்குத்தான் - இந்த ஓய்வு வயது உயர்வால் பலன் ஏற்படும் என்பதுதான் உண்மை - உண்மையிலும் உண்மை. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மத்திய அரசின் புதிய முடிவு மிகவும் தவறான ஒன்றாகும்.

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 30.99 லட்சமாகும். இதில் ஆண்டு ஒன்றுக்கு ஓய்வு பெறுவோர் 2,80,000 (7 சதவிகிதம்).

ஓய்வு வயது 62 ஆக உயர்த்தினால், கிட்டத் தட்ட மூன்று லட்சம் இருபால் இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

சமூகநீதியாளர்கள் மத்திய அரசின் புதிய முடி வைக் கண்டிக்கவேண்டும்; இளைஞர்களும் கண் டனக் குரலை எழுப்பவேண்டும். அறப்போராட் டங்கள் வெடிக்கவேண்டும்.

வழக்கம்போல இந்த மிக முக்கியமான சமூக நீதிப் பிரச்சினையில், திராவிடர் கழகம் முன் வரிசையில் நின்று வழிகாட்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

16 ஆவது மக்களவைத் தேர்தலைச் சந்திக்க விருக்கும் ஒரு காலகட்டத்தில் அய்க்கிய முற் போக் குக் கூட்டணி அரசு - இளைஞர்களின் கோபத் திற்கு இரையாகவேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை 27.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/76029.html#ixzz2uZb5DjN1

தமிழ் ஓவியா said...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம்

சோதிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங் களும், ஆபாசங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கிருத்திகை இராசியில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர் களின் மனைவிகளாம். அம்பா, துலா, நிதத்நி, அய்யந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி, சுபினிகா என்ற அந்த மனைவி மார்களின் பெயர்களாம்.

இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தமிழுக்கும், இவற் றிற்கும் எவ்வித உறவும் இல்லை. இவற்றின் வேர் என்பது ஆரியம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் சில அபத்தங்கள் உண்டு. சூரியனுக்குப் பகை சனிக்கிரகம், சந்திரனுக்குப் பகை ராகு, கேது (இவை இரண்டும் பாம்புகளாம்; சந்திரனை விழுங்குகின்றனவாம் - அதுதான் சந்திர கிரகணமாம்!).

குருவுக்குப் பகை புதன் கிரகமாம்; புதனுக்குக் குரு கிரகம் பகையாம்! இவை மட்டுமா?
கிரகங்களிலும் ஆண், பெண் வேறுபாடாம். சூரியன், செவ்வாய், குரு ஆண் கிரகங்களாம். சந்திரன், சுக்கிரன், ராகு பெண் கிரகங்களாம். அதோடு விட்டார்களா? அலி கிரகங்களும் உண்டாம்.

அவை - புதன், சனி, கேது ஆகிய மூன்றுமாம்!

கிரகங்களோடு இந்தக் கட்டுக்கதைகளை முடித்தார் களா? அதுதான் இல்லை; நட்சத்திரங்களிலும் பால் இன வேறுபாடாம்.

ஆண் நட்சத்திரங்கள் 8; பெண் நட்சத்திரங்கள் 16; அலி நட்சத்திரங்கள் 3.

வானியல் ஆய்வுப்படி 25 ஆயிரம் கோடி நட்சத் திரங்கள் இருக்கும்பொழுது, வெறும் 27 நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டு கதையளக்கும் அறியா மையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் விலாநோகச் சிரிப்புதான் வெடிக்கும்.

சோதிடத்தில் பெண் அடிமைத்தனம் என்பது ஆணி அடித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாதாம்; ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியார் மண்டையைப் போட்டு விடுவாராம். கேட்டையில் பிறந்தால் கணவனின் மூத்த சகோதரன் மூச்சை விட்டு விடுவார்... விசாக நட்சத்திரத்தில் பிறந்தால் கணவனின் இளைய சகோதரனுக்கு ஆபத்தாம்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்த நட்சத்திரங் களில் பெண் பிறந்தால்தான் இந்தத் தீய விளைவுகளாம்! ஆண்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் அதனால் பாதிப்புக் கிடையாதாம். ஆரியக் கலாச்சாரம் என்கிறபோது அங்கு பெண் அடிமை என்பதுதானே அடிப்படை!

1955 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள் மத்திய அரசு சார்பில் மேனக்ஷா என்ற விஞ்ஞானியின் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பஞ்சாங்கம், சோதிடம் பற்றி ஆய்வு செய்வது அக்குழுவின் நோக்கமாகும்.

இந்து காலண்டர் பஞ்சாங்கம் என்பது மனிதர் கள் தங்கள் சிந்தனையில் கற்பனையில் உருவாக்கப் பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளை யும், அரைகுறையான உண்மைகளையும், இடைக் காலத்தில் இணைத்து விட்டார்கள் - அதில் பல குளறு படிகளும், குழப்பங்களும் உள்ளன. 23 நாள்கள் இடைவெளி வித்தியாசத்தில் இந்துப் பஞ்சாங்கம் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டு களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 வித்தியாசத்தில் நிற்கிறது என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதே!

இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த விஞ் ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளாரே!

சூரியக் குடும்பத்தில் வெகுதொலைவிலுள்ள கிரகங் கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சோதிடத்தை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்களின் இயக்கங்கள்பற்றிய சிக்கலான கணிப்பு களைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க் கையை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்கிறார் அப்துல்கலாம்.

சோதிடத்தின் பித்தலாட்டத்தைத் தனது வாழ்க்கை யிலிருந்தே எடுத்துக்காட்டினார் தந்தை பெரியார்.

என் சோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன். என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது - ஆனால், பொய்யாகி விட்டது - அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுதமாட்டான் (பெரம்பலூரில் பெரியார் பேச்சு, 13.7.1973).

உண்மைகள் இவ்வாறு இருக்க, அறிவியலுக்கு விரோதமான சோதிடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதை கைவிட வேண்டும் :என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் 3.3.2014 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகம், மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரளுங்கள் தோழர்களே!

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் ஆர்ப்பாட்டம்

சோதிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மூடத்தனங் களும், ஆபாசங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கிருத்திகை இராசியில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர் களின் மனைவிகளாம். அம்பா, துலா, நிதத்நி, அய்யந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி, சுபினிகா என்ற அந்த மனைவி மார்களின் பெயர்களாம்.

இந்தப் பெயர்களைப் பார்த்தாலே தமிழுக்கும், இவற் றிற்கும் எவ்வித உறவும் இல்லை. இவற்றின் வேர் என்பது ஆரியம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் சில அபத்தங்கள் உண்டு. சூரியனுக்குப் பகை சனிக்கிரகம், சந்திரனுக்குப் பகை ராகு, கேது (இவை இரண்டும் பாம்புகளாம்; சந்திரனை விழுங்குகின்றனவாம் - அதுதான் சந்திர கிரகணமாம்!).

குருவுக்குப் பகை புதன் கிரகமாம்; புதனுக்குக் குரு கிரகம் பகையாம்! இவை மட்டுமா?
கிரகங்களிலும் ஆண், பெண் வேறுபாடாம். சூரியன், செவ்வாய், குரு ஆண் கிரகங்களாம். சந்திரன், சுக்கிரன், ராகு பெண் கிரகங்களாம். அதோடு விட்டார்களா? அலி கிரகங்களும் உண்டாம்.

அவை - புதன், சனி, கேது ஆகிய மூன்றுமாம்!

கிரகங்களோடு இந்தக் கட்டுக்கதைகளை முடித்தார் களா? அதுதான் இல்லை; நட்சத்திரங்களிலும் பால் இன வேறுபாடாம்.

ஆண் நட்சத்திரங்கள் 8; பெண் நட்சத்திரங்கள் 16; அலி நட்சத்திரங்கள் 3.

வானியல் ஆய்வுப்படி 25 ஆயிரம் கோடி நட்சத் திரங்கள் இருக்கும்பொழுது, வெறும் 27 நட்சத்திரங்களை மட்டும் கணக்கில் கொண்டு கதையளக்கும் அறியா மையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் விலாநோகச் சிரிப்புதான் வெடிக்கும்.

சோதிடத்தில் பெண் அடிமைத்தனம் என்பது ஆணி அடித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாதாம்; ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியார் மண்டையைப் போட்டு விடுவாராம். கேட்டையில் பிறந்தால் கணவனின் மூத்த சகோதரன் மூச்சை விட்டு விடுவார்... விசாக நட்சத்திரத்தில் பிறந்தால் கணவனின் இளைய சகோதரனுக்கு ஆபத்தாம்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்த நட்சத்திரங் களில் பெண் பிறந்தால்தான் இந்தத் தீய விளைவுகளாம்! ஆண்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் அதனால் பாதிப்புக் கிடையாதாம். ஆரியக் கலாச்சாரம் என்கிறபோது அங்கு பெண் அடிமை என்பதுதானே அடிப்படை!

1955 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு அவர்கள் மத்திய அரசு சார்பில் மேனக்ஷா என்ற விஞ்ஞானியின் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பஞ்சாங்கம், சோதிடம் பற்றி ஆய்வு செய்வது அக்குழுவின் நோக்கமாகும்.

இந்து காலண்டர் பஞ்சாங்கம் என்பது மனிதர் கள் தங்கள் சிந்தனையில் கற்பனையில் உருவாக்கப் பட்டதால், அதில் ஏராளமான மூட நம்பிக்கைகளை யும், அரைகுறையான உண்மைகளையும், இடைக் காலத்தில் இணைத்து விட்டார்கள் - அதில் பல குளறு படிகளும், குழப்பங்களும் உள்ளன. 23 நாள்கள் இடைவெளி வித்தியாசத்தில் இந்துப் பஞ்சாங்கம் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டு களாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 வித்தியாசத்தில் நிற்கிறது என்று அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதே!

இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த விஞ் ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளாரே!

சூரியக் குடும்பத்தில் வெகுதொலைவிலுள்ள கிரகங் கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சோதிடத்தை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரகங்களின் இயக்கங்கள்பற்றிய சிக்கலான கணிப்பு களைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க் கையை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்கிறார் அப்துல்கலாம்.

சோதிடத்தின் பித்தலாட்டத்தைத் தனது வாழ்க்கை யிலிருந்தே எடுத்துக்காட்டினார் தந்தை பெரியார்.

என் சோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன். என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது - ஆனால், பொய்யாகி விட்டது - அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுதமாட்டான் (பெரம்பலூரில் பெரியார் பேச்சு, 13.7.1973).

உண்மைகள் இவ்வாறு இருக்க, அறிவியலுக்கு விரோதமான சோதிடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதை கைவிட வேண்டும் :என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்முன் 3.3.2014 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் கழகம், மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரளுங்கள் தோழர்களே!


தமிழ் ஓவியா said...

காசு கொடுத்தால் சாதகமான கருத்துக் கணிப்புகள் மோசடி நிறுவனங்களை அம்பலப்படுத்திய நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி நிறுவனம்


புதுடில்லி, பிப்.27- காசு கொடுத்தால் போதும், உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக கருத்துக் கணிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியும் என்று ஒரு தொலைக்காட்சி நிறு வனம் 11 கருத்துத் திணிப்பு நிறுவனங் களின் முகமூடியை கிழித்துள்ளது தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அது ஒரு இந்தி செய்தி தொலைக் காட்சி நிறுவனமாகும். நாட்டில் உள்ள 11 முக்கியமான கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்கள் எப்படியெல் லாம் மோசடியாக செயல்படுகின்றன என்பதை இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தனது ஸ்டிங் நடவடிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. இத னால் இதுவரை வந்த அத்தனைக் கருத் துக் கணிப்பு முடிவுகள்மீதும் சந்தேகம் வந்துள்ளது மக்களுக்கு. நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி நிறுவனம்தான் இந்த அதிரடி நடவடிக் கையை எடுத்து நாட்டையே உலுக்கி யுள்ளது. ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்த ஸ்டிங்கை நடத்தி யுள்ளது நியூஸ் எக்ஸ்பிரஸ். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி யில், கருத்துக் கணிப்புகள் உண்மையான மக்கள் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. அனைத்துமே கருத்துத் திணிப் புகளாக உள்ளன, திரித்துக் கூறப்படும் தகவல்களையே கொண்டுள்ளன. மேலும் ஒரு விலை கொடுத்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உயர்த்திக் காட்டி கருத்துக் கணிப்புகளை இந்த நிறுவனங்கள் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

11 கருத்துக் கணிப்பு நிறுவனங்களை...

மொத்தம் 11 கருத்துக் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்களை இந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள் ளது. அதில் பல முன்னணி நிறுவனங்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவர்களின் கருத்துக் கணிப்புகளைத்தான் பல முக்கிய செய்தி நிறுவனங்கள், ஊட கங்கள், தொலைக்காட்சி தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து வருகின்றன. இதன் காரணமாக இது வரை நாம் பார்த்து வந்த, படித்து வந்த, கேட்டு வந்த அத்தனை கருத்துக் கணிப்பு களுமே சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அதிலும் ஒரு முக்கியமான, பெரிய கருத்துக் கணிப்பு நிறுவனம்தான் மிகப் பெரிய அளவில் மோசடி செய்கிறதாம். இந்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்புகள் பல முன்னணி ஊடகங்களில் வெளியாகி யுள்ளன. இந்த நிறுவனம், தனக்கு கூடுதலாக பணம் கொடுத்தால், மார்ஜின் ஆப் எர்ரரை, வழக்கமான 3 சதவீதம் என்பதிலிருந்து 5 சதவீதமாக உயர்த்த முன்வருமாம்.

இப்படி எர்ரர் மார்ஜினை உயர்த்து வதால் ஒட்டுமொத்த முடிவும் தாறு மாறாக மாறிப் போய்விடும். அதாவது உண்மையான கருத்து அதில் இருக்காது. மாறாக நாம் விருப்பப்படும் கட்சிக்கு சாதகமாக முடிவுகளைத் திருப்ப முடியும். இதுகுறித்து அந்த கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் பிசினஸ் டெவலப்மென்ட் மேலாளர், ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய வரிடம் கூறுகையில், முடிவுகளைத் திரித்துக் கூற தனித் தனியாக ரேட் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மார்ஜின் ஆப் எர்ரர் மாற்றம். அதனால் நமக்குச் சாதகமானவர்களுக்கு ஆதரவாக முடிவை மாற்றிக் கூற முடியும் என்று கூறியுள்ளார். இந்த மேலாளர் ஒரு பெண் அதிகாரி ஆவார். நியூஸ் எக்ஸ்பிரஸ் சானலின் எடிட் டர் வினோத் கப்ரி இந்த ஸ்டிங் குறித்துக் கூறுகையில், கருத்துக் கணிப்புகள் குறித்த உங்களது கருத்துக்களைக் கூறுங்கள் என்று கடந்த ஆண்டு கட்சிகளிடம் கேட் டிருந்தது தேர்தல் ஆணையம். இதுதான் எங்களை இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவித்தது. பல கருத்துக் கணிப்புகளில் முடிவு கள் திரித்துக் கூறப்படுவதாகத் தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்திருந்தது. இது வாக்காளர்களின் மனதைப் பாதிக் கும் செயலாக அமையும் என்றும் அது கவலை தெரிவித்திருந்தது. இதுதான் எங் களைத் தூண்டி இதில் ஈடுபட வைத்தது. மோசடி...

எங்களது ஸ்டிங் நடவடிக்கையில் நாங்கள் தெரிந்து கொண்டது, ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் இந்த கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் மோசடி செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் என் பதுதான். 11 நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் திரித்துக் கூறப்படுபவையே. ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனம், சாத கமான கட்சி அல்லது வேட்பாளருக்கு சாதகமாக நடக்க,தேவையில்லாத, பாதக மான தகவல்களையே நீக்க முன்வந்தது. ஒரு நிறுவன மூத்த அதிகாரி கூறுகை யில், பிராந்தியக் கட்சி ஒன்றுக்கு அவர்கள் ரூ. 4 கோடிக்கு கருத்துக் கணிப்பு நடத்திக் கொடுத்தனராம். அப்போது வெள்ளை யாக ரூ.12 லட்சம் மட்டுமே வாங்கி யுள்ளனர். மற்றவற்றை கருப்புப் பண மாகவே வாங்கியுள்ளனராம். மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை நாட்டின் பிரபலமான சானல்களில் வெளி வரச் செய்வதாகவும் அந்த நிறுவனம் உறுதியளிக்கிறது. அதேபோல உ.பியைச் சேர்ந்த ஒரு முக்கியமான கட்சிக்கு சாதகமாக மிகப் பெரிய வேலையில் ஒரு நிறுவனம் ஈடுபட்டதாம். அதாவது அந்தக் கட்சியின் முக்கியமான தலைவரின் மச்சான் இந்த நிறுவனத்தை அணுகி தங்களுக்கு சட்ட சபைத் தேர்தலில் 200 சீட் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் அக்கட்சிக்கு 80 சீட்டுக்கு மேல் கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்தும் கூட துணிந்து பச்சைப் பொய் சொன்ன தாம் அந்த நிறுவனம். எலலாம் காசு வாங்கிக் கொண்டுதானாம்.

ஆபரேஷனுக்காக அணுகப்பட்ட நிறுவனங்களில் சில - சி வோட்டர், கியூ ஆர்எஸ், இப்சாஸ் இந்தியா, எம்எம்ஆர், டிஆர்ஸ். மக்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்... பாருங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/76046.html#ixzz2uZbtsJBD

தமிழ் ஓவியா said...


சமூகநீதிக்குச் சவக்குழி!

- குடந்தை கருணா

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற் போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, பொருளா தார அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானத்திற்கும் குறைவாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின ருக்கு மட்டும், இட ஒதுக்கீடு வழங்கிட பாஜக ஆட்சிக்கு வந்தால் உரிய சட்டம் கொண்டு வரும் என, பாஜக தாழ்த்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறி உள்ளார். அது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தில் கண வன், மனைவி இருவரும் இரண்டாம் நிலை பதவியில் இருந்தாலும், அல்லது கணவனோ அல்லது மனைவியோ, முதல் நிலை பதவியில் இருந்தாலும், அவர் களின் பிள்ளைகளுக்கு. இட ஒதுக்கீடு முறையில் அரசு பணிகள் கிடையாது என்றும் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறி உள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; பாஜகவின் கருத்து என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளார் சஞ்சய் பஸ்வான். 1990 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை எதிர்த்து, அத்வானி ரத யாத்திரை நடத்தி, வட நாட்டில் கலவரம் உருவாகக் காரணமாக இருந்தது பாஜக. தற்போது, ஆட்சிக்கு வந்தால், தாழ்த் தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அடிப் படையை புகுத்திட திட்டமிட்டுள்ளனர்.

மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்; அவர் பிரதமரானால், அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என ஆர்.எஸ்.எஸ். உத்தரபிரதேசத்தில் மாநாடு நடத்திக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டு முறையை அரசியல் சட்டத்திற்கு மாறாக மாற்றிட முடிவு செய்துள்ளனர். இதுதான் பாஜக ஆர்.எஸ். எஸ்.-இன் இரட்டை வேடம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் ராம் தாஸ் அதாவ்லே, உதித்ராஜ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் இப்போது பாஜக அணியில் தங்களை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்திற்கு எதி ரான நிலையை மேற்கொள்ளும் பாஜக வோடு கூட்டணி சேரும் கட்சி களுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் கள் வரும் தேர்தலில் தக்க பாடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், போராடி பெற்ற சமூகநீதி, சவக்குழிக்கு சென்றி டும், ஜாக்கிரதை!

Read more: http://viduthalai.in/page-2/76047.html#ixzz2uZc9zEWN

தமிழ் ஓவியா said...


சிங்களப் பெண்மணியே கிளர்ந்தெழுகிறார் சிங்கள வெறியர்களின் ஆட்சியை எதிர்த்து!


பிற இதழிலிருந்து....!

சிங்களப் பெண்மணியே கிளர்ந்தெழுகிறார்
சிங்கள வெறியர்களின் ஆட்சியை எதிர்த்து!

நிமல்கா பெர்னாண்டோ

இனப்பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவி, ராஜபக்சே சகோதரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சிங்களப் பெண். ராஜபக்சே அரசின் போர்க் குற் றங்களுக்காகவும், இனப்படுகொலை களுக்காகவும் சர்வதேச நீதிமன்றக் கூண் டில் அவரை நிறுத்தத் துடிக்கிற மனித உரிமை செயற்பாட்டாளர், கண்காணிப்பு, கொலை முயற்சி, மிரட்டல்களைக் கடந்து இனப் படுகொலைக்கு எதிராக உலக அரங்கில் முழக்கமிட்டு கவனம் ஈர்க்கும் வழக்கறிஞர். இலங்கைக்கு எதிரான அய்.நா.வின் மூன்றாவது தீர்மானத்துக்கு ஆதரவாக உலகைத் திரட்டிக் கொண்டி ருக்கும் பரபரப்பான சூழலுக்கு நடுவில் குங்குமம் இதழுக்காக பேசினார் நிமல்கா.

தேர்தல்களுக்குப் பிறகான இலங் கையில், தமிழர்களின் நிலை மாறி யிருக்கிறதா?

ஒன்றும் மாறவில்லை. தமிழர் பகுதி களில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. 5 பேருக்கு ஒரு ராணுவ புலனாய்வாளர் என்ற கணக்கில் படையினர் தமிழ் நிலங் களை ஆக்கிரமித்துள்ளார்கள். ஒரு குழந் தையின் பிறப்பைக் கொண்டாடவும், ஒரு மரணத்தின் துக்கத்தில் அழவும் கூட முடியாத அளவுக்கு மக்கள் முடக்கப் பட்டுள்ளார்கள். வீட்டுக்கு எவரேனும் வந்தால், விசாரணைக்கு உட்பட வேண்டி யுள்ளது. வாழ்வுரிமை கேட்டுப் போரா டும் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்படு கிறார்கள். கோத்த பய ராஜபக்சே தலை மையில் இதற்காகவே ஒரு சிறப்புப்படை இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சிறப்புப்படையினர் உலா வருவதாகச் சொல்கிறார்கள்.

தமிழர் பகுதிகள் அதிவேகத்தில் சிங் களமயமாகி வருகின்றன. இதற்கு மூன்று விதமான யுக்திகள் பயன்படுத்தப்படுகின் றன. முதல் யுக்தி, தமிழ்ப்பெயர் மாற்றம், வடக்கில் பழைமையான புத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த தமிழ்ப்பெயரை அழித்துவிட்டு சிங்களத்தில் எழுதியுள் ளார்கள். தமிழ்ப்பகுதிகளில் சிங்களர் களே ஆதிகுடிமக்கள் என்று வரலாற்றை மாற்றி எழுதுகிற முயற்சியும் நடக்கிறது. தமிழ் மக்களுக்கு அரசு வேலை தேவை யென்றால் சிங்களம் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டாவது யுக்தி, எல்லாப்பகுதிகளி லும் புத்தவிகாரங்கள், தூண்கள், வழி பாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுகின் றன. பிற மத வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்படுகின்றன. மூன்றாவது யுக்தி, சிங்களக் குடியேற்றம், தமிழ் மக் களின் நிலங்களை ராணுவம் கையகப் படுத்தி, குடியிருப்புகளை உருவாக்கி சிங் களர்களை குடியமர்த்துகிறது. விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட மக்களை மீண்டும் கொண்டு வருவதாகச் சொல்லி, ராணுவக்குடும்பங்களை தமிழ் மண் ணுக்கு இடம் மாற்றுகிறார்கள். உறவு களை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, வரலாற்றையும் இழந்து தமிழர்கள் மிகப்பெரிய இக்கட்டில் தவிக்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

தமிழ் மக்கள் - குறிப்பாக பெண்கள் - ராணுவத்தால் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறதே?

உண்மை தான் பெரும்பாலான தமிழர் கிராமங்களில் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. பெரும் பாலான பெண்கள் தனித்தே வாழ்கிறார் கள்; ஆண்கள் கொல்லப்பட்டு விட்டார் கள், அல்லது காணாமல் போய்விட்டார் கள். பெண்களே பொருளீட்டி வாழ வேண்டிய நெருக்கடியில், பெண் பிள் ளைகளை தனியாக வீட்டில் விட்டு விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ராணுவத்தினர் மட்டுமின்றி உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடு கிறார்கள். வெளியில் சொன்னாலோ, காவல்நிலையத்திற்குப் போனாலோ உயிரோடு வாழ முடியாது.

இதனால், சீக்கிரமே பெண் பிள்ளை களுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இது வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. பெண் பிள்ளைகள் நிறைய படித்திருக்கிறார்கள். படிக்காத ஆண்களுக்கு அவர்களைத் திருமணம் செய்து வைப்பதால், குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன. அதிக மான பெண்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்தவர்கள். நல்ல விளைச்சல் தந்த அவர்களின் நிலங்களைப்பிடுங்கி, ராணுவ முகாம்களாக மாற்றி விட்டார்கள். இத னால் மிகக் குறைந்த அளவே விவசாயம் நடக்கிறது. கடன் வாங்கி வேறு தொழில் செய்வதற்கும் வழியில்லை. சிங்களத் தொழிலதிபர்கள் மொத்தமான பொருட் களை வாரிக்கொட்டி விற்பனை செய் கிறார்கள். அடித்தட்டுக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றன.

தமிழ் ஓவியா said...

தமிழர் பகுதிகளில் இதுவரை எந்தப் புள்ளி விவரங்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்றுவரும் காணாமல் போனவர் பற்றிய தகவல் சேகரிப்பும் முறையாக நடக்கவில்லை என்று தகவல்கள் வரு கின்றன. எந்த ராணுவத்துக்கு எதிராகப் போராடினார்களோ, அந்த ராணுவத்தின் ஆதிக்கத்திலேயே வாழ நேர்வது மிகப்பெரிய அச்சுறுத்தல்.

போருக்குப் பிறகு இது சிறந்த காலம் என்கிறாரே ராஜபக்சே?

சரியாகத்தான் சொல்கிறார். இது அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் சிறந்த காலம். ராஜபக்சே, அதிபர் - ராணுவ அமைச்சர் அவரது அண்ணன் ஷமல் ராஜபக்சே இலங்கை சபாநாயகர்; இன் னொரு சகோதரர் கோத்தபய ராணுவச் செயலாளர்; இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்; ராஜபக்சேயின் மகன் நமல், நாடாளுமன்ற உறுப்பினர். கிளிநொச்சி வட்டாரத்தின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துக்கும் அவர்தான் பொறுப்பு; தமிழர்களுடைய நிலங்களை அபகரிப் பதில் நமல்தான் முன் நிற்கிறார். இப்படி ஒட்டு மொத்த இலங்கையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டி ருக்கிற ராஜபக்சேவுக்கு நிச்சயமாக இது சிறந்த காலம்தான்.

தமிழ் ஓவியா said...

தங்களைச் சுற்றி பல வன்முறைக் குழுக்களை ராஜபக்சே குடும்பம் வளர்த்து வருகிறது. குறிப்பாக பொதுபலசேனா என்ற புத்த பேரினவாத அமைப்பு. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளைக் குலைத்து, வழிபாட்டுச் சுதந்திரத்தை பறிப்பதில் முன்னிலை வகிக்கிறது. பத் திரிகைகள், எதையும் சுதந்திரமாக எழுத முடியவில்லை. எதிர்த்துப் பேசுபவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். போர்க்காலத் தில் ராஜபக்சேவுக்கு ஆதரவளித்த சிங்கள மக்கள் இப்போது முழுமையாக வெறுக் கத் தொடங்கி விட்டார்கள்.

சுயமரியாதையோடும், சுதந்திரத் தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமா?

இப்போதுள்ள நிலையில், அது சாத்தி யமில்லை என்பதே என்கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்திர மில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக் கென்று தனித்த சுய ஆட்சி, சுய அதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார் கள். 75 சதவீத வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலு மாக ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவது மாக மாற்றி எழுதவேண்டும். தமிழர் களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண் டும். அவர்களுக்கான திட்டங்களை அவர் களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.

அய்.நா.சபையில் மூன்றாவது தீர் மானம் எதையாவது சாதிக்குமா?

சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத் துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய், ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம், உலகநாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.

அரசு, அரசியல்வாதிகள், மதவாதி கள் என எல்லா தரப்பாலும் குறி வைக்கப்படுகிறீர்கள். எதிர்ப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார் கள். தேசப்பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர் களைத்தான். இலங்கையை அல்ல. இலங் கையில் எல்லா தரப்பினரும் அமைதியோ டும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனதுகொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடு வது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.

- வெ.நீலகண்டன்

நன்றி: குங்குமம் 3.3.2014

Read more: http://viduthalai.in/page-2/76045.html#ixzz2uZcKwVuS

தமிழ் ஓவியா said...

மாயாஜாலங்கள் பற்றி
சங்கராச்சாரியார்!

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச் சாரியாரிடம் மந்திர மாயாஜாலங்கள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது:

மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையை பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகில் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத்துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டது அல்ல. (23.10.74 செய்தித்தாள்களில்)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufX69hpZ

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞரின் பதில்

மதுரையில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலந்து கொண்டார். அப்போது கி.ஆ.பொ.விசுவநாதம் அவர்கள் வைகையிலே சென்று புண்ணிய முழுக்குப் போட புரட்சிக் கவிஞரை அழைத்தார். புரட்சிக் கவிஞரோ, நீங்கள் வைகையில் மூழ்கி உங்கள் பாவத்தைக் கழித்து விட்டு, எனக்குப் குளிப்பதற்கு கொஞ்சம் நீர் கொண்டு வாருங்கள். நான் அதை சுடவைத்து, அதில் உள்ள பாவங்களைப் போக்கி விட்டு, பிறகு குளிக்கிறேன் என்றாரே பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXCVFn7

தமிழ் ஓவியா said...

இந்தியில் ஒரு சிறுகதை

சிறீராமச்சந்திரன் அயோத்தி நகருக்கு திரும்பி வந்த போது பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் சீரும் சிறப்பு மிக்க வரவேற்பு விழாக்கள் நடத்தப்பட்டன. உள்ளூர் பத்திரிகைகளும் வெளியூர் பத்திரிகைகளும் பல நாட்கள் இது பற்றி செய்திகளை வெளியிட்டன.

ஒரு நாள் சிறீராமன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவரது தம்பி பரதன் மிகுந்த பரபரப்புடன் அவரை நோக்கி வந்து, மதிப்புக்குரிய அண்ணா; இன்றைய பத்திரிகை பார்த்தீர்களா? என்று வினவினான்.

ராமன், பார்க்கவில்லையே என்று பதிலளித்தார். பரதன் பல்வேறு பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காகிதக்கட்டை காண்பித்து விட்டு சொன்னான்; நம் நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண பிரஜையான ரஜகன் என்ற சலவைத் தொழிலாளி தங்கள் அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறான்.

மதிப்புக்குரிய சீதை அண்ணிக்கு ராவணன் விருந்தளித் தாரல்லவா; இதை மய்யமாக வைத்து உங்கள் இருவர் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவன் பத்திரிகைகளில் அறிக்கை விடுத்துள்ளான் என்றதும், சிறீராமன் பத்திரிகைச் செய்திகளைப் படித்து பார்த்தார். அவர் முகத்தில் இருட்டு ஏறியது. பரதனைப் பார்த்து அவர் சொன்னார். தம்பீ, உனக்குத் தெரியுமல்லவா இது விஷமிகளின் கற்பனை என்று. பரதன் மிகப் பணிவுடன் பதில் அளித்தான்: மதிப்புக்குரிய அண்ணா, நான் தங்களது அந்தரங்கச் செயலாளனல்லவா! எனக்கு அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது தெரியாதா? இவற்றை நாம் காரி உமிழ்ந்து புறக்கணிக்க வேண்டும். இருப்பினும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டுமல்லவா... இப்படிப்பட்ட சாதாரண பிரச்சினைகள் பெரும் குற்றச்சாட்டுகளாக மாறலாம்..

கடவுளே! அப்படியானால் நாம் என்ன செய்வது? தேர்தல் நெருங்குகிறது. எனது பப்ளிக் இமேஜ் போய் விடுமே ராமன் ஆழ்ந்த கவலையுடன் கூறினார்.

அண்ணி, அக்னி பரீட்சை நடத்தட்டும் - பரதன் ஆலோசனை வழங்கினான்.

டாம்ஃபூள்! புதிய சட்டப்படி அது தற்கொலை முயற்சி என்பது உனக்குத் தெரியாதா? ராமன் கோபத்துடன் கத்தினார். சகோதரர்கள் இருவரும் சிந்தனையில் மூழ்கினர். திடீரென்று பரதன் ஆரவாரத்துடன் அளவற்ற மகிழ்ச்சி கலந்த குரலில், ஒன்டர்ஃபுள், நானும் உலகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இதற்கு சரியான பரிகாரம் கிடைத்துவிட்டது என்று சத்தமிட்டு துள்ளிக் குதித்தான்.

அடுத்த நாள் பத்திரிகைகளில் தனது பெயரில் வெளியாகியிருந்த ஒரு அறிக்கைக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை யென்றும், தான் அப்படி ஒரு அறிக்கை விடுவது பற்றி கனவில் கூட எண்ணவில்லையென்றும் சொல்லி, தான் சிறீராமன் மீதும் அவர் துணைவியார் மீதும் வைத்திருக்கும் மதிப்பை விளக்கியும், அவர்களது ஆட்சி சிறப்பை வர்ணித்தும் ரஜகன் விடுத்திருந்த அறிக்கை முதற் பக்கங்களிலேயே வெளியாகியிருந்தது.

அதற்கு அடுத்த நாள் பத்திரிகை ஒன்றின் ஒருமூலை யில், ரஜகன் என்பவர் சர்க்கார் கணக்குப் பிள்ளையாக நியமனம் செய்யப்பட்ட செய்தி அச்சிடப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXL6NPg

தமிழ் ஓவியா said...

விதவைத் துயரம்

என்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படி என்றால், மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தா திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீ யாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்பு லோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்!

கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந் தாலும் - ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டம் இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள் காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா-இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

இப்போதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும்; மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்பந்தம் கொஞ்ச காலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண் யத்தை உத்தேசித்துப் பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்குத் தன் பெண்சாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சையைத் தணிக்க வேண்டியதும்;

மிருகங்களுக்கு ஏற்படும் தினவைத் தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொறிக்கல் நட்டு வைக்க வேண்டியதும் 32 தர்மங்களில் 2 தர்மங்களாகக் கொண்டு - கோயில்களில் தாசிகளை வைத்தும், கிராமங்கள்தோறும் நத்தங்களில் ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு - நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்ட முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது, ஜீவகாருண்யப் புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.

- (குடிஅரசு, 27.10.1929)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXSfHBe

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,
2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? -சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXaQKtS

தமிழ் ஓவியா said...

அரசர்களும்-புரோகிதர்களும்!

தலைமைப் பதவியிலும், பிறருடைய உழைப்பைச் சுரண்டுவதிலும், கொள்வினை கொடுப் பினையிலும் பிறப்பினாலுங்கூட அரசர்களும், புரோகிதர்களும் ஒரே இனத்தவர்கள் தாம்.
ஆயினும் அவர்கள் சத்திரியர்கள், பிராமணர்கள் என்று தனித்தனியே அழைக்கப்படுகிறார்கள்.

-ராகுல சாங் கிருத்தியாயன்

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXgwXd9

தமிழ் ஓவியா said...


சபாஷ் நீதிபதிகள்!

நீதிபதிகளில் பகுத்தறிவுச் சிந்தனையின் பார்வையில், தீர்ப்புகள் வழங்குபவர்களைப் பார்ப்பது அரிது. விடுமுறை நாள்களில்தானே, அரசு அலுவலகங்களில் பூஜை நடக் கிறது; அதில் என்ன தவறு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் எல்லாம் உண்டு. விடுமுறை இல்லாத நாள்களிலும்கூட, வெள்ளிக் கிழமைகளில் பூஜை போடும் அலுவலகங்கள் இல்லையா?

அரசு என்றால், மதத் தொடர்பு இல்லாதது என்ற அடிப்படைக்கூட இல்லாமல், தன் மனம் போன போக்கில் பச்சை மையால் ஏதோ கிறுக்கித் தள்ளுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர்கள் சுதாகர், வேலுமணி ஆகிய இரு நீதிபதிகள் கடந்த 25 ஆம் தேதி அளித்த தீர்ப்பு எடுத்துக்காட்டானது - பின்பற்றத் தகுந்ததாகும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி அருகே அய்யம் பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த முத்துரத்தினம் என்பவர் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அவர்கள் ஊரில் உள்ள பகவதி மாரியம்மன், இளையாண்டி அம்மன் சாமிகளுக்குப் பாலாபிஷேகம் செய்ய அவ்வூரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தங்களுக்கும் பாலாபிஷேகம் செய்ய அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்பதுதான் மனுவின் சாரம்.

அந்த வழக்கின்மீது மேலே சொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கினார்கள்.

நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு, தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தைகள் பலர், பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஓர் அத்தியாவசிய உணவுவாகும் என்பதை மனுதாரரும், அவருடைய கிராமத்தினரும் நன்கு அறிவர்.

இதுபோன்ற அத்தியாவசிய உணவுப்பொருளை இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற வர்களுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கலாம் என்பதை மனுதாரர் அறியவேண்டும். மனுதாரர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

நீதிபதிகள் சொன்னவை சத்தான வார்த்தைகள் என்பதில் அய்யமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை யில் 72 விழுக்காட்டினர் சத்தற்ற உணவை உட்கொள்கின் றனர். ஊட்டச் சத்து குறைவான குழந்தைகள் 30 விழுக் காடாகும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நீதிபதி களால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் பொன்னான வரிகள் அவை!

பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழுவுது - குழவிக் கற்களுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா? என்று திராவிடர் கழகப் பேரணிகளில் கருஞ்சட்டைத் தோழர்கள் முழங்கியது வீண் போகவில்லை - நீதிபதிகள் வாயா லேயே வேறு சொற்களில் சொல்ல வைத்திருக்கிறது.

கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அந்தக் கடவுளுக்குத் தட்சணை கொடுப்பது, உண்டியலில் பணம் போடுவது, நேர்த்திக்கடன் கழிப்பது, பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம், நெய்யினால் அபிஷேகம் செய்வது எல்லாம் சிறு பிள்ளை விளையாட்டு அல்லவா - சர்வசக்தி வாய்ந்த(?) கடவுளையும் கேலி செய்வது அல்லவா!

உணவுப் பொருள்களைப் பொருளற்ற முறையில் வீணடிப்பது உற்பத்தி நாசம் அல்லவா! பொதுவாகச் சிலை வணக்கம் என்பதே புத்தி குறைந்த மக்களுக்கு என்று ஆக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

உத்தர கீதை என்னும் சாத்திர நூல் என்ன கூறுகிறது?

துவி ஜாதிகளுக்கு அதாவது இரு பிறப்பாளர் களான பிராமணர்களுக்கு தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்த மக்களுக்குத் தெய்வம் சிலையில் என்று கூறப்பட்டுள்ளதே!

சிலைகளைக் கும்பிடுவது, சிலைகளுக்கு அபிஷேகம் செய்தால், அதன் பொருள் என்னவென்றால், தங்களைப் புத்தி குறைந்தவர்கள் என்று ஒப்புக்கொள்வதேயாகும்.

பொருளுக்குப் பொருளையும் கொடுத்து, காலத்தையும் வீணாகச் செலவழித்துக் கண்ட பலன் புத்திக் குறை வானவர்கள் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக்கொள் வதுதானா?
சூத்திர, பஞ்சம தமிழர்களே பதறாமல் சிந்திப்பீர்!

மீண்டும் நீதிபதிகளுக்குப் பாராட்டுகள்!

Read more: http://viduthalai.in/page-2/76099.html#ixzz2ufXom3Hy

தமிழ் ஓவியா said...


வன்முறையைப் பொது வாழ்விலிருந்து விரட்டியடிப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாடு நமக் கும், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கும் உகந்தது அல்ல; என்றாலும், அதற்காக காங்கிரசு அலுவலகத்தைத் தாக்குவது, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது சரியான அணுகுமுறை யல்ல; தமிழ்நாட்டின் பொது வாழ்விலிருந்து வன்முறைகளை விரட்டியடிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனைக்குள்ளாகி 23 ஆண்டுகளாக அவர்களது கருணை மனுவை பரிசீலிக்காமல், காலதாமதத்திற்குக் காரணமான மத்திய அரசின் செயல், நீதி கேட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அநியாயம் என்பதால், அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலை மையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. (இதற்குமுன் வீரப்பன் கூட்டாளி களான நான்கு பேருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி - வழங்கப்பட்ட நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இது) அத் தீர்ப்பில் இதற்குமேல் அவர்களது விடுதலைபற்றி சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய பொறுப்பு - உரிய அரசுகளுக்கு உண்டு என்று அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டதையொட்டி, தமிழக முதல் வர் எடுத்து அறிவித்த முடிவு மனிதநேய அடிப் படையில் விடுதலை என்ற போதிலும், மத்திய அரசுக்குக் கெடு விதித்து அறிவித்த முறை அவசர, அதீத போக்கு என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், முடிவு எடுக்கத் தகுதியுள்ள அரசு மாநில அரசு என்பதும் சிறைத் தண்டனையைக் குறைக்கும் (Remission) அதிகாரம் சட்டப்படி அதற்கு உண்டு என்பதெல்லாம் சட்டப்பூர்வ நிலைப்பாடே!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதனுள் விரிவாகச் செல்வது சட்டப் படி சரியான நிலைப்பாடாக இருக்காது என்பதால், நாம் இங்கே விளக்க விரும்பவில்லை.

காங்கிரசு நிலைப்பாடும் - வன்முறை செயல்பாடுகளும்!

காங்கிரசு கட்சியின் நிலைப்பாட்டில் நமக்கு உடன்பாடு இல்லை - மனிதநேய அடிப்படை யில், அதற்காக அதனை (காங்கிரசு கட்சியின் நிலைப்பாட்டை) எதிர்க்கும் வகையில், சில கட்சிகளோ, நண்பர்களோ, நபர்களோ, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது, காங்கிரசுக் கட்சி அலுவலகத்தைச் சென்று தாக்குவது என்பது சரியான பரிகாரமோ, முறையாகவோ இருக்காது. அது தவறான வன்முறை வெளிப்பாடாகும்.

வன்முறைகளை விரட்டியடிப்போம்!

எழுப்பப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அவற்றை உடைப்பது, ஊனப்படுத்துவது அசல் அரசியல் அநாகரிகம் ஆகும். இதை வன்மை யாகக் கண்டிக்கிறோம்.

காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மனித நேயம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்; என் றாலும், அதற்கு மாற்று- சிலைகள்மீதும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் என்பது தவறான அணுகுமுறையாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்களை முன்கூட்டியே அப்புறப்படுத்தி (Whisking Away) அதன்மூலம் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும்.

அதுபோலவே, கட்சித் தலைவர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் முறையாகாது - அதனையும் கண்டிக்கிறோம்.

வன்முறையை தமிழகத்தின் பொதுவாழ் விலிருந்து விரட்டியடிக்கவேண்டும்; காவல் துறையும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை
28.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/76091.html#ixzz2ufY2ieKl

தமிழ் ஓவியா said...


சுப்பிரமணியசாமிக்குத் தங்கப் பூணூலாம்!


திருப்பரங்குன்றம் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உபயமாக வந்த தங்கப் பூணூல்
(தினமணி, 27.2.2014, பக்கம் 2)

இதற்கு முன்பு காஞ்சி ஜெயேந்திரர் மூன்று கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார்.

கடவுள்களே, இந்த நாட்டில் ஒரு ஜாதியைச் சேர்ந்ததாக இருக்கிறது. உலகத்தில் இதுபோன்ற நிலை உண்டா? கடவுள் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்துவிட்டது. பார்ப்பனர்கள் கடவுளைக் காப்பாற்ற நினைப்பது தங்கள் ஜாதியின் உயர்வைக் கட்டிக் காப்பாற்றத்தான் என்று தந்தை பெரியாரும், திராவிடர் கழகத்தினரும் கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?

தேவாதீனம் ஜகத்சர்வம்
மந்திரா தீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிராமணாதீனம்
பிராமண மம தேவதா

என்பது இருக்கு வேத சுலோகம் (ரிக் வேதம், 62 ஆவது பிரிவு, 10 ஆவது சுலோகம்).

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிரா மணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே, பிராமணனே நமது கடவுள் என்பது இதன் பொருள்.

கடவுளைக் கும்பிடும் சூத்திர, பஞ்சம சகோ தரர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/76095.html#ixzz2ufYE9OxM

தமிழ் ஓவியா said...


அரசியல் இலாபம்


அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே செய்யாது. - (குடிஅரசு, 31.7.1927)

Read more: http://viduthalai.in/page-2/76098.html#ixzz2ufYdshp2

தமிழ் ஓவியா said...


ராஜீவ் கொலை வழக்கு: விடுதலைபற்றி உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, பிப்.28- ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந் தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தனர்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மூவரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்தது. மேலும் அவர்களை விடு விப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கில் தொடர்பு டைய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதில், முதல் மூன்று பேரையும் விடுதலை செய் வதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த 20 ஆம் தேதி உத்தர விட்டது.

இந்நிலையில் நளினி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.சதா சிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி ஆஜரானார். அவர் வாதாடியபோது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரிட் மனு ஏற்புடையது அல்ல. 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை கடி தம் அனுப்பியுள்ளது. அதற்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சொலி சிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக் கில் குற்றவாளிகள் தொடர்பாக முடி வெடுக்க மத்திய அரசுக்குத்தான் அதி காரம் உண்டு. மாநில அரசுக்குக் கிடை யாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறிய தாவது:

எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளி களின் மரண தண்டனை ஆயுள் தண்ட னையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர் களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந் தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளை பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

அந்த நடைமுறைகளின்படி குற்ற வாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதி மன்றத்திடம் அறிக்கை கோரவேண்டும். அதன் பின்னரே உரிய முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு வாரத்தில் தீர்வு

குற்றவாளிகள் விடுதலை செய்யப் படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்கவேண் டும். இந்தப் பிரச்சினைக்கு காரணம் நாங்கள்தான். இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் மனு தொடர் பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை 4 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-2/76102.html#ixzz2ufZIEcyI

தமிழ் ஓவியா said...

என் கருவறை பெரியார் திடல்தான்! கவிஞர் கனிமொழி எம்.பி. உரை


சென்னை.பிப். 28- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திமுக நாடாளு மன்றஉறுப்பினர் கவிஞர் கனிமொழி எழுதிய நூல்க ளுக்கான விமர்சனக் கூட்டம் நேற்று (27.2.2014) மாலை நடைபெற்றது.

கவிஞர் கனிமொழி எழு திய கட்டுரை நூல்கள், கவிதை நூல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு விமர்சனம் செய்துபேசினார்.

கவிஞர் கனிமொழி ஏற் புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவதுபெரிய விஷ யம்.கட்சிக் கூட்டங்கள் நடத் திடலாம். தமிழகத்தில் வாசிப்பு அந்த நிலையில் உள்ளது. பல நூல்விமர்சனக் கூட்டங்களுக்கு நான் சென் றுள்ளேன். பெரியார் திடல் எனக்கும் கருவறைதான். என்னுடைய எழுத்துக்களில் எந்த இடத்தில் மோதல் வரும் என்பது எனக்குத்தெரி யும். உங்களைப் போன்றவர் களிடம் பேச நேரம் கிடைக் காதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களிடம் பேசும்போது கிடைக்கும் அனுபவம் ஒரு புத்தகத்தைப் படித்தால் கூடக்கிடைக்காது. நீங்கள் ஒதுக்கித் தரும்அந்த நேரத் திற்காகக் காத்திருக்கிறேன்.

கவிதையில் பிடிபட வில்லை, பொய் இருக்கிறது என்கிறீர்கள். நான் மிகவும் உண்மையாக இருப்பது கவிதையில்தான். ஒரு கவிதை எழுதும்வரைதான் அது என் கவிதை. எழுதி முடித்தபின் அது வாசகரு டையது. வாசிப்பவர் தன் அனுபவத்தைக் கவிதையின் பின்னால் வாசகரின் அனு பவம்இருக்கும்.கவிதை ஒரு நிலைக்கண்ணாடிமாதிரி. அனுபவத்தைத் தாண்டி வந்தால்தான் புரியும்.

மொழிபெயர்ப்பில் பல விஷயங்கள் தொலைந்து விடும். ஒரு கவிதை தமிழில் எழுதப்பட்டு, நமக்கென்று இருப்பது கவிதை, அதையே நமக்கு தொடர்பில்லாத வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கப் படும் போது பல விஷயங் கள் தொலைந்து போகும்.

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் நிதியளிப்பு மனந்திறக்கிறார் ஒரு தோழர்

மயிலாடுதுறை மாவட்ட கழக சார்பில் சீர்காழி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ந.நாராயணன் தந்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், புலவர் இராவணன் உள்ளனர்.

திராவிடர் கழகத்தின் சார் பில் திருச்சியில் அமையவி ருக்கும் பெரியார் உலகத் திற்கான நன்கொடை பெற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன் ஆகியோ ரோடு சீர்காழி ஒன்றிய கழகச் செயலாளர் ந.நாராயணன் அவர்களை சந்திக்க பூம்பு கார் சென்றிருந்தோம்.

எங்களைக் கண்டதும் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்று தேநீர் விருந்த ளித்து உரையாடினார் நாராய ணன். நான் முழுமையான கடவுள் மறுப்பாளன். என்னு டைய பிள்ளைகளை அப்படி வளர்க்கத் தவறிவிட்டேன். அந்த மன உறுத்தலுக்கு அடிக் கடி ஆளாகிறேன். இதனா லேயே சில நாள் வீட்டில் கோபித்துக் கொண்டு உணவு விடுதியில் சாப்பிட்டேன். வீட்டையே திருத்த முடியாத என்னால் எப்படி ஊரை திருத்த தகுதியாவேன்? என தொடர்ந்து புலம்பிக் கொண் டிருந்தார். கழகப் பொதுச் செயலாளர், நாம் பகுத்தறி வாளர்கள், ஆத்திரப்படக் கூடாது என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தினார்.

நாராயணன் அவர்களோ, கழகப் பொதுச் செயலாள ரைப் பார்த்து நான் அந்தக் காலத்து பி.ஏ. எங்கள் பகுதி யிலேயே பள்ளிக்கூடம் சென்று படித்தவன் நான்தான். அதனாலேயே என்னை பள் ளிக்கூடத்தார் என்றுதான் கூப்பிடுவார்கள். நான் பூம்புகார் சுற்றுலாத் துறை யில் பணியாற்றி ஓய்வு பெற் றவன். பெரியார் இல்லையா னால் இந்த வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்குமா? எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும். என் பிள்ளைகள் உட்பட ஒரு அரங்கு நிறையும் அளவிற்கு இளைஞர்களைக் கலந்து கொள்ள செய்கிறேன். இதற் கான முழு செலவுத் தொகை யும் நானே ஏற்கிறேன். இது எனது சுயநலம்தான் என்றார்.

இதில் சுயநலம் ஒன்றும் இல்லை. உங்கள் வீட்டு பிள் ளைகளோடு பல தோழர்கள் பயன்பெற வாய்ப்பு ஏற் படும். அவசியம் ஏற்பாடு செய்வோம் என்றார் துரை. சந்திரசேகரன்.
நாராயணன் அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்த வர்தான். அவர் மூலம் அந்த ஊர் பிரமுகர்களை சந்தித்து நன்கொடை பெறலாம் என சென்ற எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிலைக்கு எவ்வளவு நன் கொடை? என அவர்கேட்க குறைந்தபட்சம் ஒரு பவு னுக்கான தொகை ரூ. 25 ஆயி ரம் என்று சொன்னது தான் தாம தம், உடனே ஒரு காசோலையை தந்து தன் சார் பில் ரூ.25 ஆயிரத்தை அளிப்பதாக கூறி காசோலையை பூர்த்தி செய்யச் சொன்னார். சற்றும் எதிர்பாராத நானும் மாவட் டத் தலைவரும் மிக்க நன்றி என்று கூறினோம். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக் குத்தான் நன்றி சொல்ல வேண் டும் என்று திரும்ப திரும்ப வழி நெடுகச் சொல்லி மனதை நெகிழ வைத்தார் நாராயணன்.

Read more: http://viduthalai.in/page-8/76133.html#ixzz2ufaygCR5

தமிழ் ஓவியா said...


நான்காம் தலைமுறை நாயகர் வாழிய பல்லாண்டு தளபதி மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளியொனைட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 28.2.2014).


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய திரா விடர் பாரம்பரிய தலைமை வரிசையில், அம்மூவரின் கொள்கை, லட்சியங்கள், தத்துவங்களையும் அவைகள் செயலுரு கொள்ளும் வகையில், அரசியல் வாய்ப்பு களையும் பயன்படுத்தி, திராவிடரின் இன எழுச்சி வரலாற்றில் நான்காம் தலைமுறை நாயகரான தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா இன்று (1.3.2014).

இளைஞர்களின் பாசறையாக தி.மு.க.வை வளர்த்து, அவர்தம் இதயத்தையே தம் நிரந்தர சிம்மாசனமாக்கிக் கொண்ட நம் இனமானத் தளபதியின் அடக்கம், ஆற்றல், கடும் உழைப்பு, சோர்விலா சொல்லற்கரிய பணி என்பது எவராலும் பாராட்டப்படுகின்ற அரிய இன எழுச்சித் தொண்டாகும்!

என்றும் இளைஞரே இவர் என்பது போன்ற உழைப்பை அவர் நாளும் இயக் கப் பணிமூலம் இந்த இனத்திற்கு வழங்கி வருகின்றார்.

அவரது அரவணைக்கும் போக்கு, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கட்டுப்பாடு மிகுந்த கடமை உணர்வு, எவரிடமும் கண்ணியத்தோடு பழகும் பான்மை, நடுநிலையாளரும் வியந்து மகிழும் விழுமிய நற்பண்புகளாகும்!

அவர் நல்ல உடல்நலத்தோடு, உற் சாகக் குறைவின்றி, ஊக்கத்தை உடைமை யாகக் கொண்டு, ஆக்கத்தைச் சமூகத் திற்கு அளித்து, புதியதோர் சமூகத்தைக் காண ஆட்சி என்பது இனத்தின் மீட்சியே என்று காட்டும் வண்ணம் அவர் உழைக்க, மேலும் பல்லாண்டு வாழ்ந்து, சரித்திரச் சாதனைகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்!

தாய்க்கழகத்தின் வாழ்த்து!

தாய்க்கழகம் இந்த தளபதியின் அன்பு, அடக்கம், ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து என்றும் உச்சிமோந்து வாழ்த்துவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறது!

வாழ்க! வளர்க!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

1.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76153.html#ixzz2ulK9dslO

தமிழ் ஓவியா said...


மோடியின் மூக்கை மீண்டும் மீண்டும் அறுக்கும் அமெரிக்கா

புதுடில்லி, மார்ச் 1- குஜ ராத் கலவரம் தொடர்பாக பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி விவகாரத்தில் இறங்கி வரவில்லை என்று அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. முந் தைய ஆண்டுகளைப் போன்று இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவில் இருக் கும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நடைமுறைகள் அறிக்கை யில் குஜராத் முதல்வர் மோடியின் பெயர் இல்லை. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில்,

மோடி விவகாரத்தில் அமெரிக்கா இறங்கி வர வில்லை. இந்தியாவில் நடக் கும் சமூக வன்முறைச் சம் பவங்கள் குறித்த எங்களின் நிலை தெளிவாக உள்ளது. எங்களிடம் புதிய கொள் கையோ அல்லது கொள் கைத் திருத்தமோ இல்லை. மோடியின் விசா விவகாரம் குறித்து உங்களுக்கு தெரி விக்க ஒன்றும் இப்போ தைக்கு இல்லை. மோடியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சந்தித்து பேசியதை வேறு எதனு டனும் தொடர்புபடுத்த வேண்டாம். வரும் மே மாதம் இந்தியாவில் தேர்தல் நடக்கவிருப்பதால் பல் வேறு அதிகாரிகளை நாங் கள் சந்தித்து வருகிறோம் என்றார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அமெரிக்கா மோடிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விசா கொடுக்க மறுத்து வருகிறது. அதில் இருந்து மோடியும் விசா கேட்டு விண்ணப்பிக்க வில்லை. இந்நிலையில் அமெரிக்க செயலாளர் ஜான் கெர்ரி வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் கூறி யிருப்பதாவது, இந்தியா வில் மனித உரிமைகள் பிரச் சினை என்றால் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை யினரின் அத்துமீறல்கள், அதில் கொலை, சித்திர வதை, பாலியல் வன்முறை அடங்கும், அரசின் அனைத்து தரப்பிலும் பரவியுள்ள ஊழல், இதனால் நீதி மறுக்கப்படுகிறது. திடீர் என்று மாயமாவது, சிறை யில் போதிய வசதி இல் லாதது உள்ளிட்டவை பிற மனித உரிமை பிரச்சினை கள் ஆகும். சில மாநிலங் களில் மதமாறுதலை சட்டம் அனுமதிப்பதில்லை. இது தொடர்பாக கைது நடவ டிக்கைகள் நடந்ததாக தக வல் கிடைத்துள்ளது. ஊழல் எங்கும் உள்ளது. பாலியல் வன்கொடுமை, வரதட் சணை கொலைகள், கவுர வக் கொலைகள், பாலியல் அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து முக்கிய பிரச்சி னைகளாக உள்ளன. 2002 ஆம் ஆண்டில் குஜ ராத் கலவரத்தின்போது குற் றங்கள் செய்த காவல்துறை யினர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறித்த வழக்கில் அரசு சில முன் னேற்றத்தை கண்டுள்ளது. இருப்பினும் கலவரத்தின் போது மக்களை குஜராத் மாநில அரசு காக்கத் தவறி யது சமூக ஆர்வலர்களின் தொடர் அக்கறையாக உள் ளது. அரசு மக்களைப் பாது காக்க தவறியதால் 1,200-க் கும் மேற்பட்டோர் கொல் லப்பட்டனர். அதில் பெரும் பாலானோர் முஸ்லிம்கள் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76155.html#ixzz2ulKdF24v

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் கடமை

நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)

Read more: http://viduthalai.in/page-2/76160.html#ixzz2ulL9HWd4

தமிழ் ஓவியா said...

அரசியலும், சத்தியமும்

திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜபதிராய் அவர்கள் பூரண சுயேச்சையே வேண்டு மென்று கேட்பவர்களான தாங்கள் ராஜ பக்திப் பிரமாணம் செய்யலாமா என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் பொய்ச் சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையான சத்தியம் செய்யவில்லை என்று சொன்னாராம்.

உடனே திரு. லாலாஜி அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசிய தாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம்.

நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர் களானவரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தி யாசங்கள் இருந்தால் இது சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல் பேசும் விஷயங்களில் எத்தனைவித வித்தியாசங்கள் இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வல்லவர்கள் யார் என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆனபோதிலும் இந்த பொய் சத்தியமுறை தற்காலத்தில் அநேக கனவான்களுக்கு மிகவும் யோக்கியமான முறையென்றேற்பட்டு திரு. அய்யங்காருக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் கொடுக்க முன் வந்திருக்கின்றார்கள்.

அதாவது திருவாளர்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலு வும் முறையே இந்தியாவின் அரசியலை நடத்த திரு. சீனிவாசய்யங்காரே தக்க பெரியாரென்றும் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களும் இந்த திரு. சீனிவாசய்யங் காரையே நம்பி இருக்கின்றார்கள் என்றும் சொல்லி அய்யங்காரை குஷால் படுத்தினார்கள்.

போதாக் குறைக்கு திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரி என்கின்ற சத்தியகீர்த்தியும், திரு. சீனிவாசய்யங்காரை விட்டால் சென்னை மாகாணத்தில் காங்கிரசை நிர்வகிக்க வேறு தக்க நபர் கிடையாது என்று பம்பாயில் சொன்னார். இவர்களே இப்படி சொல்லியிருக்க மற்றபடி இதே கூட்டத்தில் இருக்கும் திருவாளர்கள் குழந்தை குப்புசாமி அண்ணாமலை, கந்தசாமி அமித்கான் முதலான தலைவர்கள் சொல்லுவதைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டுமா என்று கேட்கின்றோம்.

எனவே அரசியல் என்பது எவ்வளவு அயோக்கியத் தனம் என்பதையும் எந்த விதத்திலும் இந்த அரசியல் ஸ்தாபனங்கள் மானம் வெட்கம் ஒழுக்கம் நாணயம் முதலியவை இல்லாதவர்களுக்கு சொந்தமாக இருக் கின்றது என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற் காகவே இதை எழுதுகின்றோமேயல்லாமல் மேற் கண்ட கனவான்களின் யோக்கியதையை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டு வதற்காக எழுதவில்லை.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76182.html#ixzz2ulM9g8Be

தமிழ் ஓவியா said...


மூடர்கள் இந்தியாவுக்கு மாத்திரந்தான் சொந்தமா?


மேல்நாட்டில் கூட இவர் சுவாமி என்றும் மோட்சம் என்றும் நரகம் என்றும் சூட்சம சரீரம் என்றும் சொல்லு கின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு சூட்சம சரீரக்காரர் தனது பத்திரிகையில் எழுதுகிறார்.

நாம் இதற்கு ஒரு பதில் தான் சொல்லக்கூடும். அது முட்டாள்களுக்கும் தம் அயோக்கியர்களுக்கும் இந்தி யாவும் சிறப்பாக தமிழ்நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான்.

கார்பொரேஷன் தலைவர்

சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சியடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும்.

மேலும் இந்த முடிவானது சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாக வோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசிய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்த வரையில் பார்ப்பனரல் லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத் தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராய பேதம் வருந்த தக்கதேயாகும். என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர் களைத் தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பரே ஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது.

சென்னை கார்ப்பொரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும் இழிவும் திரு முதலியார் காலத்தில் மாறி அதற்கு ஒரு கௌரவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

லாலா லஜபதி

திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று தியாகபூமியில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால பட்டா பிராமய்யா அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரித்து அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கி யதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக் கின்றார். எனவே வாசகர்கள தயவு செய்து பொறுமையுடன் முழுவதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMPgZLj

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

நாம் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது, மனிதன் காட்டு மிராண்டிக் காலத்தில், முட்டாளாக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டவைகளைத்தானேயொழியப் புதுமைகளை மனிதன் அறிவு பெற்றபின் செய்தவைகளை அல்ல. இதை மக்கள் நல்ல வண்ணம் உணர வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMYWYOq

தமிழ் ஓவியா said...

பிரச்சாரப் பள்ளிக்கூடம்

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரச்சாரப் பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31 தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித் திருந்ததில் அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக்கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சவுகரியப்படவில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதின் பேரில் தள்ளிவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.



ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர் களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டிய தாயிற்று.

திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்ப விழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்பட்டு முன் தெரி வித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 04.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMnPk48

தமிழ் ஓவியா said...


செயற்கை இதயம்


பிரான்சில் மருத்துவர்கள், இதயம் செயலிழந்த முதியவர் ஒருவருக்கு ஒரு கிலோ எடையுள்ள செயற்கை இதயத்தை பொருத்தியுள் ளனர். இந்த இதயம் லித்தியம் அயனிகளைக் கொண்ட மின்கலன்கள் மூலம் இயங்குகிறது. இதைப் பொருத் தியதன் மூலம் அம்முதியவர் ஐந்து ஆண்டுகள் வாழ்நாள் பாதுகாப்புடன் வாழலாம். செயற்கை இழைகள் இன்றி மாட்டின் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் இதனை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வாய்ப்புகள் குறைவு. பல உணரிகள் (ஷிமீஸீஷீக்ஷீ), நுண்செயலிகள் (Micro Processors) கொண்ட இதன் எடை ஒரு கிலோ. மருத்துவத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பிரான்சில் உள்ள கார்மட் என்ற நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள ஜார்ஜ் பொம்பிடௌ ஐரோப்பிய மருத்துவமனையில் இந்த இதயத்தை அந்த முதியவருக்குப் பொருத்த சுமார் 10 மணி நேரம் செயல்பட்டனர். இது முதல் முயற்சி என்பதால் இதயம் பொருத்தப்பட்ட முதியவர் ஒரு மாதம் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட இயலும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
- அறிவியல் ஒளி - ஜனவரி 2014 - பக்கம் 29

Read more: http://viduthalai.in/page2/76206.html#ixzz2ulNQBCMp

தமிழ் ஓவியா said...


இராமாயண கால மது வகைகள்


டில்லியிலிருந்து வெளியாகும் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் 15.8.1954-ஆம் தேதிய இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் என்பவர் எழுதியுள்ள கட் டுரையில் காணப்படுவதாவது:

1. கிதைசுரா: இது காய்ச்சி இறக் கப் படும் சாராயத்துக்குப் பெயர்.

2. மைரேயா: வாசனையூட்டப் பட்ட பானம்: சர்க்கார் மதுவென் றும் கூறுவர்.

3. மத்யா: போதை தரும் பானகம்.

4. மந்தா: இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என்றும் பெயர். போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க விரும்பார்.

5. சுராபானம்: கிதை சுராவுக்கு மாறானது. கிதை சுராபானம் செயற் கையால் செய்யப்படுவது. சுரா என்பது இயற்கைச் சாராயம் இயற்கை முறையில் வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக் களின் பானம். இதைப் பற்றித் தான் புராணங்களில் அதிகமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.

6. சிந்து: கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கும் பானம்.

7. சௌவீரகா: மட்டரகப் பானம்.
bv8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது வகைகளில் மிகவும் காட்டமானது (போதை அதிகமானது) இந்த பானம், இதனைக் குடித்த அதே நொடியில் போதையுண்டாகித் தள்ளாடி விழச் செய்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page4/76211.html#ixzz2ulOCogl8

தமிழ் ஓவியா said...


மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்


மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல் லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.

இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.

உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து வாக்கவில்லை.

இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம் செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து, புகுந்து தீர்ப்பை ஏற்கிறது (ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.

இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.

மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை செய்வான்?

ஆனதினாலேயே கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?

செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து விடுகின்றன.

ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி புல், பூண்டுகளுக்கும் உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.

Read more: http://viduthalai.in/page4/76212.html#ixzz2ulOMQrGH

தமிழ் ஓவியா said...


சோதிடம்பற்றி கிருபளானி

இங்கு ஜனநாயகமும் இல்லை. சோஷலிசமும் இல்லை. எனக்குத் தெரியும், ஒவ்வொரு மந்திரியும் ஜோதிடரிடம் சென்று ஆலோசிக்கத் தவறுவதே இல்லை. அவர்கள் (அமைச்சர்கள்) உடுத்தும் துணியின் நிறங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட ஜோஸ்யர்கள் தீர்மானிக்கிறார்கள்! இத்தகையவர்கள் சோஷலிசம் என்றும், ஜன நாயகம் என்றும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய உள்ளங்கள், பெரிய வார்த்தைகள் என்ற ரகத்தில்தான் இவர்கள் சேர்க்கப்பட வேண்டியவர் களாவார்கள். - ஜே.பி. கிருபளானி

Read more: http://viduthalai.in/page4/76213.html#ixzz2ulOaLXJp

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி நாகரிகம்



உலகின் பண்டைய நாகரிகங்களுள் சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இந்நாகரிகத்தின் சிறப்பு, அம்மக்கள் பிறரிடம் கொண்டிருந்த வணிகத் தொடர்பு, கட்டடக் கலையில் அவர்களின் நுண்கலையறிவு, உற்பத் தித்திறன் மற்றும் அந்நாகரிகத்தின் பரப்பு போன்ற பலவும் வியக்கத்தக்க வகையில் இருந்தன. இவற்றை அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுச் சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். இச்சிறப்பின் காரண மாக வரலாறு, தொல்லியல், மானுடவி யல், மொழியியல், கணிதவியல், புள்ளி யியல் வானவியல், கணினி அறிவியல், கட்டடக் கலை என பல்துறைசார்ந்த அறிஞர்களும் இத்துறையில் ஈடுபட் டுள்ளனர்.

இப்பெரும் நாகரிகத்தின் வீழ்ச்சிக் கான காரணம் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையில் உள்ளன. அதே போன்று சிந்துவெளி எழுத்துக் களும் முழுமையாகப் படிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இவ்விரு கார ணங்களும் ஆய்வாளர்களின் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. ஆகையால் அவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு இடங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிந்துவெளி நாகரிகம் அழியாமல் இன்றுவரை நம்மிடையே நீடித்திருக் கிறது என்பதற்குப் பல சான்றுகள் உள் ளன. உதாரணமாக அவை நடை முறை யில் தொன்மக் கதைகளாகக் குறியீட்டு வடிவில் காணப்படுகின்றன. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி, பண்டைய திராவிட மொழி என்பதற்கான நம்பத் தகுந்த சான்றுகள் உள்ளன. சிந்து வெளிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து அய்ராவதம் மகா தேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வறிஞர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளனர். மேலும் இவ் விரண்டு நிலப் பரப்பிற்குமான பண் பாட்டுத் தொடர்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இத்தொடர்புகளை அடையாளம் கண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சின்னத் தில் சிந்து வெளிக் கூறுகளை இணைத் துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பையும் பண்டைய நாகரிகங்களான திராவிட நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே உள்ள பண்பாடு மற்றும் மொழியியல் தொடர் பையும் இக்கண்காட்சி மூலம் காட்டுவ தற்கான வாய்ப்பை நல்கியுள்ளது.

Read more: http://viduthalai.in/page5/76214.html#ixzz2ulOormdp

தமிழ் ஓவியா said...


மூக்கின் வழி மூடநம்பிக்கை


அது ஒரு வைதீகத் திருமணம், நட்புக் காக தோழர் ஒருவருடன் சென்றிருந்தோம். நிகழ்ச்சியுடன் ஒன்றிய புகை மூட்டமும் எழுந்தது. கெட்டி மேளம் கொட்டும் வேளை வந்தது. உடன் வந்த தோழர் விர் என்று எழுந்து வெளியே சென்றார். மாங்கல்யம் கட்டி முடித்த பிறகு வந்தார். என்ன அப்படி அவசரம்? என்றேன், தும்மல் வந்தது, தாலி கட்டும் நேரத்தில் தும்மல் எற்பட்டு திருமண வீட்டார் என்னை முகம் திரிந்து நோக் குவரே என்ற அச்சத்தினால் வெளியே சென்றேன் என்றார். புகைச்சல் நெடி, என்ன செய்வது! என்றார். மூட நம்பிக்கை முகாமிட்டிருக்கும் இடத்தில் பண்போடு நடந்து கொண்ட நண்பரைப் பாராட்டினேன். இந்த தும்மலைப்பற்றி சில கருத்தோட்டம், உடலில் ஏற்படும் சளி, தூசு, காற்று போன்ற பல காரணங்களி னால் தும்மல் ஏற்படுவது இயற்கை. எங்கள் வீட்டில் எவரேனும் தும்மினால், என் பாட்டி நூறுவயது என்று உடனே சொல்வார். காரணம் பற்றி சிந்தித்த தில்லை, இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

மேலை நாட்டு மக்களிடையேகூட இதைப் போன்ற பழக்கம் இருந்து வருகிறது. அனைத்தும் பழக்கத்திலிருந்து வரும் மூட நம்பிக்கையே. மேலை நாட் டில் ஒருவர் தும்மினால் ஆசிர்வதிக் கிறேன் ஙிறீமீ சீஷீ என்று பக்கத்தில் இருப்பவர் கூறுவதுண்டு, காரணம்? ஒருவர் தும்மும் போது மூச்சின் வழியாக அவரின் ஆவி - உயிர் வெளிவந்து இறப்பை ஏற்படுத்தும். இந்த இறப்பைத் தடுக்க கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டி, மூக்கின் வழி உயிர் வெளியேறுவதைத் தடை செய்வதே நோக்கம், ஒரு மூடநம்பிக்கை.

பாட்டியின், நூறு வயது என்பது பெயரனுக்கு வாழ்த்து கூறும் வகையில் அமைவதாக உள்ளது என்பதாக எடுத்துக் கொள்வோம்.
- மு.வி. சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page7/76225.html#ixzz2ulPTx4Oy