Search This Blog

12.2.14

ஏழுமலையான் பெண்களிடம் கல்லடிபட்ட கதை தெரியுமா?


புராணங்களைப் பழிக் காதீர்கள் - புழு புழுத்துச் சாவீர்கள் என்று சாபமிடு வார்கள். புராணங்களை மக்கள் மத்தியில் புட்டுப் புட்டு வைத்த தந்தை பெரியார், தேவாரம் பாடிய திருஞான சம்பந்தனைவிட, பல மடங்கு காலம் வாழ்ந்து காட்டினார்.

ஆனாலும், ஆஸ்திக சிரோன்மணிகள் வாயி லேயே வருவது கந்த புராணத்தில் உள்ள புளுகு வேறு எந்தப் புராணத்திலும் கிடையாது என்பது. இதன் மூலம் கந்த புராணம் என்பது புளுகு மூட்டை என்பதை அவர்களே ஒப்புக்கொள் கிறார்கள் என்றுதானே ஆகிறது.

புராணம் என்றால், புராணங்களின் அகராதி என்று அவர்கள் சொல்லும் அபிதான சிந்தாமணி என்ன சொல்லுகிறது?

ஸ்ரீசிவமூர்த்தியினிடம் இவைகளைக் கேட்ட நந்தி மாதேவர், சநற்குமார முனி வருக்கு உபதேசிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க, வியாச பகவான் சூதனுக்கு உபதேசித்தனர். இப்புராணங்கள் பதினெண் வகைப்படும் என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி. முனிவர்களின் சாட்சியங்களுடன் புராணங் கள் பவனி வருகின்றன.

அந்த வழியிலேயே தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பதாகச் சொல் லுகிறார்களே, அந்த ஏழு மலையான் பெண்களிடம் கல்லடிபட்ட கதை தெரியுமா?

இதோ:

திருப்பதி - திருமலை கோவில் புராணத்தில் உள்ளது.
சோழ அரசன் மகன் ஆகாசராசன் மனைவி தரணிதேவி. இவர்களுக்குப் பிள்ளையில்லாததால், ஆகாச ராசன் யாகம் செய்ய எண்ணி, யாகசாலைக்கான இடத்தை உழுதான். அந்தக் கலப்பை உழவுச் சாலில் ஒரு பொன் தாமரையும், அதில் ஒரு பெண் குழந்தையும் காணப் பட்டன. அரசன் அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வரச் செய்தான். அதற்குப் பத்மாவதி என்று பெயரிட் டான். வளர்ந்து கன்னிப் பருவமடைந்த பத்மாவதி ஒரு நாள் மலர் கொய்ய மலர்வனம் சென்றாள்.

ஏழுமலையான் நாரா யணமூர்த்தி மலையில் வேட்டையாடிவிட்டு, அடி வாரத்துக்கு இறங்கியபோது, பூம்பொழிலில் பத்மாவதியைக் கண்டு, ஆசைப்பட்டு அவளை அணுகினார். (கடவுளுக்கும் காதலோ!).
ஓ பெண்ணே! நான் உன் பேரில் விருப்பம் கொண்டு இவ்விடம் வந்தேன். என்மீது தயையுள்ளவளாய் என்னை ஆலிங்கனம் செய்துகொள் (எவ்வளவுக் கேவலம்)  என்று அவளிடம் கூறினார்.

அந்த மங்கை, ஓய்! நீ உலகத்தில் சொல்லாத வசனங்களைச் சொல்கிறாய். என் அப்பா ஆகாசராஜன் இதைக் கேட்டால், உன் உசிரைப் போக்கிவிடுவார் என்று சீற்றத்துடன் சொன்னாள்.

அவளுடைய பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாமல், நாராயணமூர்த்தி (ஏழு மலையான்) அந்தப் பத்மாவதியை அணுகினார்.

அவள், ஆத்திரமடைந்து, அவளும், தோழிகளும் அவரைக் கற்களால் அடித் தனர். அவர் அந்தக் கல்லடி களைப் பொறுக்கமாட்டாமல், திரும்பி வேங்கடாத்திரிக்கு (திருமலை)ச் சென்றார்.

(திருப்பதி திருமலைக் கோவில் புராணம்) சக்தி வாய்ந்த கடவுள் ஏழுமலை யான் தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந் தன் என்று அளந்துகொட்டு கிறார்களே - அந்தக் கோவிந் தன் பெண்களிடம் அடிபட்டு ஓடினான் என்றால், அவன் எப்படி சக்தி வாய்ந்தவன்?

------------------ மயிலாடன் அவர்கள் 12-2-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

20 comments:

தமிழ் ஓவியா said...


தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இலச்சினையில் கடவுளர் படமா?


பாங்க் ஆப் இந்தியா என்னும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியின் இலச் சினை அடையாளத்தில் சிங்கம், சூலத்துடன் ஒரு பெண் உருவம் இருப்ப தான படத்துடன் இலச் சினை உள்ளது. நாடு விடுதலை அடை வதற்குமுன் 1906 இல் தொடங்கப்பட்ட வங்கி யில் இந்துமத கடவுள் படத்துடன் தனியாரால் மும்பையில் தொடங்கப் பட்டு, பின்னர் 1969 இல் தேசியமயமாக்கப்பட்டது. மதசார்பற்ற நாட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இலச்சினையில் இதுபோன்ற ஒரு சார்புள்ள மத சின்னம் இடம் பெற லாமா? வாடிக்கையாளர்கள் ஒரு மதத்தை மட்டும் சார்ந் தவர்களாகவா உள்ளனர்? வங்கி நிர்வாகம், மத்திய அரசு சிந்திக்குமா?

அய்ந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களிலும் கூட இந்து மதக் கடவுள் களின் உருவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசாம்!

Read more: http://viduthalai.in/e-paper/75127.html#ixzz2t9q9Iax3

தமிழ் ஓவியா said...


மனித சமூகம் தேய்ந்ததேன்?



பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது.
(விடுதலை,16.6.1935)

Read more: http://viduthalai.in/page-2/75132.html#ixzz2t9r0J7cD

தமிழ் ஓவியா said...


கல் முதலாளி!


திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் உண் டியல் வசூல் ரூ.2.45 கோடி யாம். மக்களுக்குப் பகுத் தறிவு தேவை என்பதற்கு இது அடையாளம்; பக்தி பெருகிவிட்டது என்று மகிழ்ச்சி அடைவது, மருத் துவமனைகள் (நோய்கள் பெருகியதால்) அதிகரித்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவது போன்றதாகும்.

எல்லாம் வல்ல கடவுள் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நிதி கொடுப்பது - கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? இந்தப் பணத்தால் ஒரு சல்லிக் காசு ஏழுமலை யான் என்ற பொம்மைக்குப் பலன் உண்டா? அது உயிர் உள்ள ஒன்றா? ஆறுகால் கன்றுக்குடி என்று சொல்லி வித்தை காட்டிப் பணம் பறிப்பவனுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
தினமலர் பக்தி மலரின் கருத்து:

கோவில்களில் கூட்டம் அதிகரித்துவிட்டது; கோவி லில் முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக் கின்றன... மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பக்தி நெறி செழித்திருப்பதுபோல தெரிகிறது. இது பொய்த் தோற்றம். இந்நாளில் இருக் கும் பக்தி, வழுக்கல் நிலத் தில் வடித்த மாளிகை என்று கூறியிருப்பதை நினைவூட் டுகிறோம். நாட்டில் உள்ள 10 கோடி ஏழைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3200/- வங்கி மூலம் அளிக்கும் திட்டத்தை - இந்தக் கோவில் நிதிகளிலி ருந்து எடுத்துக் கொடுக்க லாமே! நாட்டில் இருவகை முதலாளிகள் - ஒன்று, தொழில் முதலாளிகள்; இன் னொன்று ஏழுமலையான் போன்ற கல் முதலாளிகள்.

(இன்னொரு கூடுதல் தகவல்: ஏழுமலையான் தன் கலயாணத்துக்காக குபேரனி டம் கடன் வாங்கினானாம் - அதனை அடைக்கத்தான் இந்த உண்டியல் வசூலாம்! கடவுளே கடன்காரனா? பேஷ், பேஷ் நன்னாயிருக்குப் போங்கோ!).

Read more: http://viduthalai.in/e-paper/75215.html#ixzz2tFWVzoOX

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க!


பல துறைகளில் வசதிகள் இருக்கத்தான் செய் கின்றன. அந்த வசதிகள் இருப்பது எத்தனைப் பேர் களுக்குத் தெரியும்?

“May I Help You” என்று எழுதப்பட்டு இருக்கும்; அங்குள்ளவரிடம் சென்று உதவி கேட்பதற்கு நம் மக்களுக்கோ ஒரு வகை தயக்கம். இந்தச் சபைக் கோழைத்தனத்தைத் தூக்கி எறிய வேண்டும்.

ரயிலில் பயணம் செய்வோர்களுக்குச் சில தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்! குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களோடு தொடர்பு கொள்ளலாம். 044-25353999 மற்றும் 9003161710 இந்த உதவி (Help Line) 24 மணி நேரத்திற்கும் கிடைக்கும் - முதலில் பெண்கள் கைப்பேசியில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/75208.html#ixzz2tFWdpSMA

தமிழ் ஓவியா said...


இப்பொழுதே மிரட்டலா?



மோடி மற்றும் பிஜேபியின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்தை பதிவு செய்பவர்கள்மீது சிறிதும் சகிப்புத்தன்மை இல்லாமல் மிரட்டுபவர்கள் உள்ளனர். இவர்கள் சமூக தளங்களான டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் கருத்திடுபவர்களில் குறிப்பிட் டவர்களை மய்யப்படுத்தி தொடர் தாக்குதலும் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள்மீது சைபர் குற்றச் சட்டப்படி (அய்.டி.) நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும், அண்மையில் மூத்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் எழுதியதற்காக அச் சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். அதேபோல், காங்கிரசு பிரச்சார ஊழியரான அசீபா ஆமின் என்பவர்மீது சமூக ஊடகங்கள்மூலம் ஆபாசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே மிரட்டுகிறார்கள். இவர்களை அடையாளம் காணவேண்டும் என்கிறார் காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான்.

Read more: http://viduthalai.in/e-paper/75214.html#ixzz2tFWsPA1s

தமிழ் ஓவியா said...


அய்.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்


இங்கிலாந்து உறுதி

லண்டன், பிப். 13- இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக் கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித் தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், அய்.நா.வும் கடும் கண் டனம் தெரிவித்தன.

அதை தொடர்ந்து அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஏற்கனவே இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட் டன. இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக் கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதி ராக மூன்றாவது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊட கங்களுக்கு சுதந்திரம் வழங் குவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப் படும் இந்த தீர்மானம் நிச் சயமாக நிறைவேற்றப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவ டிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கி லாந்து அரசு உலக நாடுகளு டன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள் ளது. இந்தத் தகவலை தமி ழர்களுக்கான அனைத்துக் கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/75211.html#ixzz2tFX1olwB

தமிழ் ஓவியா said...


மனிதன்


மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும். - (விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/75216.html#ixzz2tFXPgHbN

தமிழ் ஓவியா said...


கேள்விக்கென்ன பதில்?


- குடந்தையான்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட் கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார். 1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட் டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன? 2. தற்போது மோடி மேற்கொள் ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம் பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே? 3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் அமைச்சர வையில் நீடிக்கிறாரே.

மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழை வதை தடுப்பேன் எனக் கூற முடியும். 4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநி லம் பின் தங்கியுள்ளதே? இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை. 2007ஆம் ஆண்டு ஆங்கிலத் தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்டகேள்விக்கு பதில் தர முடியாமல் மோடி வெளியேறினார்.

தற்போது, அகமதாபாத்தில் தேநீர் கடையினை உருவாக்கி, அதில் காணொலி காட்சி முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேநீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி. முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட் டும். பிறகு தேநீர் சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-2/75221.html#ixzz2tFXay8Rv

தமிழ் ஓவியா said...


மாஸ்கோ சென்றார்

தந்தை பெரியார் அவர்கள் ஒரு வரலாறு. அந்த வரலாற்று நாயகர் வரலாறு படைத்த சோவி யத் ருசியாவிற்குள் காலடி வைத்த வரலாற்று குறிப்பு நாள் இந்நாள் (1932). எத்தனையோ தலைவர் கள், அரசியல் வாதிகள் ருசியா சென்று வந்து இருக்கலாம்;

ஆனாலும் தந்தை பெரியார் 82 ஆண்டு களுக்கு முன்பாகவே - போக்குவரத்துத்துறை வளர்ச்சி பெறாத அந்தக் காலகட்டத்தில் அய்ரோப் பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சாதாரணமானதா? மூன்று மாதங்கள் ருசியாவில் தங்கி இருந்து பல வர லாற்றுச் சிறப்புமிக்க இடங்களையெல்லாம் பார்வையிட்டார். அவரது மொழி பெயர்ப்பாளராக பெண் ஒருவரை ருசியா அரசு ஏற்பாடு செய்து கொடுத் தது.

ருசியாவில் மே தினத் தன்று அந்த நாட்டின் பிரதமரான காலினின் பங்கேற்ற அரசு விழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருசிய மக்கள் குழுமியி ருந்து மே தினத்தை மேன்மைமிக்க நாளாகக் கொண்டாடுகின்றனர். பல மாநில மக்களும் 6 மைல் அளவுக்கு ஊர்வலமாக வந்து லெனின் கிராட்டில் லெனின் உடல் பாதுகாக் கப்பட்டுள்ள இடத்தில் கூடுகிறார்கள். சாலையின் இரு ஓரங்களிலும் மூட நம்பிக்கைகளை முறிய டிக்கும் காட்சிகளும் மத குருக்களின் முகமூடி களைக் கிழிக்கும் அறிவுப் பூர்வமான காட்சிகளும் அணி செய்யப்பட்டதை யெல்லாம் தந்தை பெரி யார் கூறுகிறார்.

மத வாதிகள் எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகிறார் கள் என்பதுபற்றி எல்லாம் இரு மருங்கிலும் விளக்கக் காட்டுகளாம்! (இன்று அங்கு அவை எல்லாம் தலைகீழாக மாறியிருக் கின்றன என்பது வேறு சங்கதி!) அந்த மே தினத்தில் இதுவரை வராத இந்தியாவிலிருந்து சிறப்புப் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர் என்று கூறி தந்தை பெரியாரும், எஸ். இராமநாதனும் அறிமுகப்படுத்தப்பட்டனர். இருவரும் எழுந்து நின்று தலையை உயர்த்தி அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டனர். ருசிய அரசின் அதிகாரப் பூர்வ இல்லமான கிரம்ளின் மாளிகையில் வெளி நாடுகளிலிருந்து மே தினத்துக்காக ருசியாவுக்கு வந்திருந்த பெரியார் பேராளர்களுக்கு விருந் தளித்து உபசரிக்கப்பட்டது.

அதில் தந்தை பெரியாரும், எஸ். இராமநாதனும் பங் கேற்றனர். அந்நிகழ்ச்சி யில் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரும், சோவியத்துப் பிரதமருமான காலினின் பங்கு கொண்டு தந்தை பெரியாரிடம் கை குலுக் கினார்.

ருசியா சென்று வந்த பிறகு ஈரோட்டில் கூடி சமதர்மத் திட்டத்தை வகுத் தார் தந்தை பெரியார் என்றாலும், எனது நீண்ட கால கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்குமான செயல் வடிவத்தை ருசியா வில் கண்டேன் என்றே குறிப்பிட்டுள்ளது குறிப் பிடத்தக்கதாகும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75253.html#ixzz2tLF14EKa

தமிழ் ஓவியா said...


பணியாளர் நியமனக் குழுக்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவம்


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது

பணியாளர் நியமனக் குழுக்களில்

பிற்படுத்தப்பட்டோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவம்

மத்திய அரசு ஆணை



புதுடில்லி, பிப்.14- சமூக நீதிக்கள போராளி களின் நீண்ட நாள் கோரிக் கைகளுள் ஒன்றான பணி யாளர் தேர்வு குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் உட் பட அனைத்து சமூகத்தின ருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் புதிய ஆணையை மத்திய பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1995-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆணையின் படி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவில் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர் வாணைக் குழுக்கள் மற் றும் ஆணையங்களில் தாழ்த் தப்பட்ட/பழங்குடி/இதர பிற்படுத்தப்பட்ட/பிரிவில் ஒரு பிரதிநிதியும் சிறு பான்மை சமூகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும் கட்டா யம் இடம் பெறவேண் டும் என அறிவிக்கப்பட்டி ருந்தது அவ்வாறு தேர்ந் தெடுக்கப்படுவர்களில் பெண்கள் இல்லாத பட் சத்தில் பொதுப்பிரிவைச சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் குழுவில் இணைந்து ஆலோசனை கூற வாய்ப் பளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணை தற் போது மறுஆய்வு செய் யப்பட்டு, புதிய ஆணை நேற்று (13.02.14) மத்திய பணியாளர் மற்றும் நிர் வாக சீர்திருத்த அமைச்ச கத்தால் வெளியிடப்பட் டது.

இந்தப் புதிய ஆணை யின் படி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவில் 10 அல்லது அதற்கு மேற் பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது தேர்வாணைக்குழுக்களில் தாழ்த்தப்பட்ட/பழங் குடி/இதர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவினர் ஒவ்வொன்றுக் கும், அனைவரும் கட்டா யம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களில் பெண்கள் இல்லையெனில், பொதுப் பிரிவில் இருந்து ஒரு பெண் இடம் பெற வேண் டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவிப்பினை பொதுத் துறை நிறுவனங்கள், மத் திய அரசினால் நடத்தப் படும் வங்கிகள், மத்திய அரசின் அலுவலகங்கள், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம், பிரதம அமைச்சர் அலுவலகம் மற்றும் குடியரசுத் தலை வர் அலுவல கம் உள் ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இதுவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. இப்பொ ழுது அனைத்துப் பிரிவின ருக்கும் பிரதிநிதித்துவம் என்பது வரவேற்கத்தக்க தாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/75254.html#ixzz2tLFNWYTv

தமிழ் ஓவியா said...


வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
- (விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75259.html#ixzz2tLFp2cbF

தமிழ் ஓவியா said...


ஓராண்டில் நூறாண்டுச் சாதனை?


- குடந்தையான்

தமிழக அரசின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரியில்லா பட்ஜெட் என பெருமை யோடு கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2012-13 ஆண்டில் 4.14 விழுக்காடு தான்.

இது இந்திய அளவின் 4.9 விழுக் காட்டை விட குறைவு. இதற்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2005-06 ஆண்டில் தான் இந்த நிலை இருந்தது.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளா தார வளர்ச்சி (GDP) 2009-10-ல் 10.8 விழுக்காடாகவும், 2010-11-ல் 13.12 விழுக்காடாகவும், நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில், பொருளா தார வளர்ச்சி 2011-12-ல் 7.42 விழுக் காடாக குறைந்து, தற்போது 4.14 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள் ளது. தமிழகத்தில் நிலவும் மின் வெட்டின் காரணமாக, தொழில் துறை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினையை, அரசு முறை யாக எதிர்கொள்ள வில்லை. அவ்வாறு செய்திருந்தால், குறு, சிறு தொழில் முனைவோருக்கு உதவியாக இருந் திருக்கும்; இந்த அளவுக்கு வீழ்ச்சி இருந்திருக்காது என மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பும் பெருமளவு பாதிக்கப்பட் டுள்ளது.

இந்த விஷயங்களையெல் லாம், இங்கே உள்ள ஊடகங்கள் எதுவும் விவாதிப்பது இல்லை; தங் களை நடு நிலை ஊடகங்கள் என கூறிக்கொண்டு, கருத்துத் திணிப்பை அரசுக்கு சாதகமாக வெளியிடுவதில் மிகுந்த அக்கறையோடு செயல்படு கின்றன.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த அளவுக்கு, இந்தியா வின் மற்ற மாநிலங்களைக் காட்டி லும், மிக மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது பற்றி, தமிழக நிதி அமைச்சர் கண்டு கொள்ள வில்லை; ஆனால் என்ன? ரூ.200 கோடிக்கு, மாடு வாங்கவும், ஆடு வாங்கவும் நிதி ஒதுக்கியுள்ளார். ஆடு, மாடு மேய்த்த நம் திராவிடர்கள், கல்வி கற்று மேம்பாடு அடைய வேண்டும் என பெரியார் போராடினார்.

நீதிக்கட்சியும், காமராசரும், மக்கள் கல்வி கற்று முன்னேறிட திட்டங்கள் தீட்டினர். ஆனால், அம்மையார் ஆட்சியில் மீண்டும் மாடு, ஆடு மேய்த்திடுவது தான் வளர்ச்சி எனக் கருதி, நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. ஓராண்டில், நூறாண்டு சாதனை என்பது இது தானோ?

Read more: http://viduthalai.in/page-2/75269.html#ixzz2tLFxD3bP

தமிழ் ஓவியா said...


சூனியமும் புராதன மதங்களும்!


சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.

ஜான் வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக்கையை வற்புறுத்தியிருக்கிறார். இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற்காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன. நியாய ஸ்தலத்தின் உத்திரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர்.

அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறின தில்லை என்று மறுத்தாள். கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டாள்.

இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்தி லிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.

கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப் பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமான தாகவே இருந்தது.

ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான். இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.

(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம் பிசாசு என்ற நூலில்) தகவல்: குன்னம் ராமண்ணா

Read more: http://viduthalai.in/page-5/75304.html#ixzz2tLGpVO4S

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்!


தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடை யாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள் ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-5/75306.html#ixzz2tLH9zYra

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார் கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி, அதை ராத்திரி அறுத்தாய் விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியலையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை. குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரையாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-5/75307.html#ixzz2tLHIwQ30

தமிழ் ஓவியா said...

மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை

நமது கலாச்சாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடு களின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன்னேற்ற வேண்டும்.

இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங் களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-5/75307.html#ixzz2tLHR82va

தமிழ் ஓவியா said...


எதிலும் லேட் தான்

எதிலும் லேட் தான்

கேள்வி: ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?

டி.கே. ரெங்கராஜன் எம்.பி: மாநில முதல் அமைச் சராக இருப்பவர் பிரதமராக வர முடியும். அப்படி அவர் பிரதமராக வந்தால் மாநிலங் களில் கஷ்டத்தை உணர்ந்தி ருக்கும் காரணத்தால் அவர் சார்ந்த மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் நன்மை செய்வார். ஆனால் யார் பிரதமர் என்பதை இப்போதே யாராலும் தீர்மானிக்க முடி யாது. (ஜுனியர் விகடன் 12.2.2014 பக்கம் 7)

ரொம்ப சரி.. இந்த ஞானோ தயம் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் கால் நூற்றாண்டுக்காலம் மேற்கு வங்க முதல் அமைச்சராக இருந்த ஆளுமை மிகுந்த ஜோதிபாசு பிரதமராக வந் திருக்க முடியுமே - அந்த முடிவை எடுக்கத் தவறியது ஏன் காம்ரேட் என்று ஒரு கேள்வி நறுக்கென்று தோன் றுகிறது. எதிலும் இவர்கள் லேட்தான்!

கேடு கேடுதான்

வாசிங்டனில் ஒருவர் 87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை படைத்ததாக ஒரு செய்தி.

இந்தச் செய்தியால் என்ன பயன்? இது ஒரு சாதனை என்று விளம்பரப்படுத்துவ தால் நல்லதைவிட கெட்டது தான் அதிகம் நடக்கும். லண்டனில் ஒருவன் 87 மணி நேரம் தூங்கினான். ருசியா வில் ஒருவன் 87 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந் தான்; டோக்கியோவில் ஒரு வன் 87 மணி நேரம் சிரித்துக் கொண்டே இருந்தான்; சிறீ ரங்கத்தில் ஒருவன் 87 மணி நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டே இருந்தான் என்றே வைத்துக் கொள்வோம் அவற் றால் ஏற்படும் பலன் என்ன? படிப்பவனுக்கு நேரக்கேடு - நம்புகிறவனுக்கு அறிவுக் கேடு - கடைப்பிடிக்கிறவ னுக்கு எல்லாமே கேடுதானே!

நீடோ சாகவில்லை

அருணாசலப்பிரதேச காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் நீடோ பவித்ரா வின் மகன் நீடோ டானியா. டெல்லியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த மாதம் 30ஆம் தேதி டெல்லி லஜ்பத் நகரில் தனது தோற்றத்தைக் கேலி செய்தவருடன் நடத்திய வாக்கு வாதத்தில் கொல்லப் பட்டார் என்பது எத்தகைய கொடுமை! கொல்லப்பட்ட நீடோவின் குடும்பத்தினர் பிரதமரைச் சந்தித்துத் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனிதனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால், குரோதம், இன வெறுப்பு, துவேஷம், அடுத்தவரை சீண்டும் கீழ்க் குணம் என்னும் அருவருப் பான மிருகத்தின்மீது தான் சவாரி செய்வான். நீடோவின் தந்தையார் பிரதமரிடம் வைத்த வேண்டு கோள் நீடோவின் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பது. அப்படி நிறுவப்படும் சிலையின் பீடத்தில் வரலாற் றுக் குறிப்பை பொறிக்க வேண்டும். அப்பொழுதாவது புதிய சிந்தனைகள் பூக்கின் றனவா என்று பார்க்கலாம். அதன் மூலம் அவன் சாக வில்லை. சகலருக்கும் பகுத் தறிவு - மனிதநேயத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டு இருப்பானே!

Read more: http://viduthalai.in/e-paper/75347.html#ixzz2tOYb7eyq

தமிழ் ஓவியா said...


என்னாகும்?


சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும்போது சகுனமோ, ராகு காலமோ பார்க்கிறோமா? நீதிமன்றத்தில் ராகு காலம் பார்த்தால் என்ன ஆகும்? - (விடுதலை, 21.12.1954)

Read more: http://viduthalai.in/page-2/75325.html#ixzz2tOZ7A3rE

தமிழ் ஓவியா said...


சைமன் கமிஷன் பகிஷ்காரப் புரட்டு


சைமன் கமிஷன் பகிஷ்காரப் புரட்டு

சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றும், மற்றும் பல பார்ப்பன தாசர்களின் வயிற்றுப் பிழைப்பு, வியாபாரம் என்றும் பலமுறை தெரிவித்து வந்திருக் கின்றோம். அதற்கிசைந்த வண்ணமாக தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் அடிக்கடி குட்டிக்கரணம் போட்டு வருவதையும் பகிஷ்காரத்திற்கு புது புது வியாக்கியானங்கள் சொல்லி வருவதையும் அவ்வப்போது தெரிவித்து வந்திருக் கின்றோம். திரு. சீனிவாசய்யங்கார் தமது திட்டத்தைத் தூக்கிக் கொண்டு சீமைக்குச் சென்றிருப்பதைப் பற்றியும் தெரிவித் திருக்கின்றோம். இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பன சமூகத்தின் பேராலும் வருணாசிரம தர்ம சபையின் பேராலும் கமிஷனுடன் ஒத்துழைக்கும் விதமாக தங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். கமிஷனிடம் சாட்சி சொல்லவும் தயாரா யிருக்கிறார்கள். எனவே பகிஷ்கார உப தேசத்தை இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் இனி யாருக்கு உபதேசம் செய்கின்றார்கள் என்பதைப் பொது ஜனங்களே யோசித்துக் கொள்ள வேண்டுகின்றோம். அன்றி யும் இப்பார்ப்பனர்களையும் அவர்களது அடிமை களையும் நம்பி மோசம் போகாமல் ஒவ்வொரு சமூகத்தாரும் தங்கள் தங்கள் குறைகளை அவசியம் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதாகவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 24.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75360.html#ixzz2tOahxt72

தமிழ் ஓவியா said...


லோகோபகாரியின் மயக்கம்


31-05-1928 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில் குழந்தை களுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக் கின்றது. இது நன்று, ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரச்சாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இதுமுடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்லவென்று நமக்குத் தோன்றுகிறது, என்று எழுதி விடு கின்றது. இப்படி எழுதி இருப்பதானது சீர்திருத்தக்காரருக்குத் தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர்களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.

குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்குக் கேடு உண்டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் லோகோபாகாரிக்குக்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.

கடைசியாக இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும் என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும், உத்தியோகம் பெறும் விஷயத் திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப் பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள் விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்க வில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக் காகிலும் வயது கண்டு பிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.

இந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித மூடநம்பிக்கை யுள்ளவர்களானதால் கண்டிப்பாய்க் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தைப் புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.

எனவே இனியாவது லோகோபகாரிச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும், இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டுத் தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOaxFC3l