Search This Blog

24.2.14

ஜெயலலிதா பிறந்த நாள் - எண்ணிப்பார் கோபியாமல்!

அண்ணாவின் பெயரால் - இப்படியா?

  • ஜெயலலிதா பிறந்த நாள்: 200 புரோகிதர்களை வைத்து மஹா ருத்ர யாகம். அமைச்சர் சின்னையா கலந்து கொண்டார்.
  • 66 பெண்களுடன் கையில் தீச்சட்டி ஏந்தினார் வளர்மதி!
  • கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டார் வி.பி. கலைராஜன்; முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விசேஷ பூஜை நடந்தது?!!
இவையெல்லாம் அகில இந்திய அண்ணா திமுகவின் பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காகவாம்! கட்சியிலே அண்ணா பெயர் இருக்கிறது கட்சியின் கொடியிலே அண்ணா உருவம் இருக்கிறது -

ஆனாலும் அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக மேற்கண்ட காரியங்கள் களேபரமாக நடக்கின்றன.

அண்ணாவின் உருவத்தை கொடியில் பறக்க விடுவது கொள்கைகளைக் காற்றில் பறக்க விடத்தானோ!

கட்சியிலே திராவிட என்ற இனச் சுட்டுப் பெயர் இருக்கிறது; கட்சியின் தலைவராக ஆரியர் இருப்பதால் திரா விடத் தத்துவத்தை ஊடுருவி அழிக்கும் வேலைகள் நடக்கின்றன என்று எண்ணுவதற்கு நியாயம் இருக்கிறது.
புத்த மார்க்கத்தை ஆரியம் ஊடுருவி அழித்தது போல திராவிட இயக்கத்தின் கொள்கையை ஊடுருவி அழிக்க ஏற்பாடா என்று எண்ணுவதிலும் நியாயம் இருக் கிறது.

கட்சிப் பதாகைகளிலும் சுவரொட்டி களிலும் தந்தை பெரியார் உருவம் பொறிக் கப்பட்டு வருகிறது! ஏன்? ஏன்? ஏன்? பெரியார் படம் கொள்கையின் அடிப்படை யில் என்றால் மேற்கண்ட காரியங்கள் நடைபெறுமா?

அண்ணா தி.மு.க.வில் உள்ள ஒரே ஒரு தொண்டனாவது இதனை இந்தக் கோணத் தில் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பதவிக்காக ஆல வட்டம் சுற்றும் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? வேண்டுமானால் ஒன்று செய்யலாமே!

கட்சியின் பெயரிலிருந்தும், கொடியிலி ருந்தும் அண்ணாவை நீங்கி விடலாமே!

திராவிட என்ற இன அடையாளத்தை எடுத்து விடலாமே! பெரியார் உருவத்தைப் பொறிப்பதையும் தவிர்த்து விடலாமே! அப்படிச் செய்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அக்கட்சியில் இருக்கும் தொண்டர் களுக்கு அண்ணா என்றால் யார்? அவர் பெயர் கட்சியில் இருக்கிறதே - அவர் உருவம் கொடியில் இருக்கிறதே - யார் அந்த அண்ணா? என்று தெரிந்து கொள் வதற்கு இங்கே சில எடுத்துக் காட்டுகள்; படியுங்கள் படியுங்கள் - பகுத்துப் பாருங்கள். அப்பொழுது புரியும் 

-அண்ணாவின் பெயரைச் சொல்லி அக்கிரமம் நடப்பது!

அண்ணாவைச் சொல்லி அவரைக் கொச்சைப்படுத்தும் வேலைகள் அதிகாரப் பூர்வமாக நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். படியுங்கள் - படியுங்கள்! இதோ அண்ணா பேசுகிறார்:

திராவிடரும் - கடவுளரும்

இஞ்ஞான்றைத் திராவிடமக்கள் சிலரால் வழிபடப்படும் கடவுள் அல்லது கடவுளர், உண்மையாகவே திராவிடரின் கடவுளராகவும், திராவிட மொழிகளில் ஒன்றையாவது தெரிந்தவர்களாகவும் இருந்தால், திராவிட மக்களைக் கொண்டே திராவிட மொழிகளிலே தங்களுடைய காரியங்கள் எல்லாம் நடைபெறும்படி செய்திருப்பர். இன்றுங்கூடத் திராவிட நாட்டிலுள்ள கோயில்களில் நடைபெறும் வழிபாடு (பூசை)கள் எல்லாம் ஆரியப் பார்ப் பனரைக் கொண்டே வடமொழியிலேயே நடைபெற்று வருவது கண்கூடு. ஆகை யால், வடமொழியைத் தேனெனப்பருகி, ஆரியக் கொள்கையைக் கற்கண்டெனச் சுவைத்துத் தமிழ் மக்களைச் சூத்திரராக்கித் தமிழ் மொழியைத் தமக்கேற்றதல்லவாக்கித் தமிழர் கொள்கைக்கு இடமளியாது நிற்கும் ஒரு கடவுள், அது எத்தகையதாய் இருப் பினுஞ் சரியே, அதனிடம் எத்துணை ஆற்றல் இருப்பினுஞ்சரியே, 

அதனைத் தனது கடவுள் என்று எந்தத் திராவிட னாவது ஏற்றுக்கொள்வானா?
இனித் திராவிட மக்களுக்கு ஒரு கட வுளும், அவரைக் குறிக்கும் வேதங்கள் திராவிட (தமிழ்) மொழியிலும் இருந்தன வென்றும், ஆனால் அவை ஆரியர் சூழ்ச்சி யாலும், ஆடிப்பெருக்காலும் மறைந்தும் அழிந்தும் போயினவென்றும் சிலர் கூறுவ ரேல், அவர்தம் அக்கூற்று அறிவுடைய மக்களால் அணுவளவும் எற்றுக்கொள்ளக் கூடியதன்று என்பேன்.

ஏனென்றால், அக்கடவுளும் அவர் தம்மைப்பற்றி எழுதப்பட்ட வேதங்களும் ஆரியச் சூழ்ச்சியாலும் ஆடிப் பெருக் காலும் அழியக் கூடியனவாய் இருந்தால், அக்கடவுளை எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றும், அவர் இலக்கணத்தைக் கூறும் சுவடிகளை முடிந்தமுடிபைக் கூறும் வேதங்கள் என்றும் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? தன்னையும், தன்னை விளக்கும் நூல்களையும் காப்பாற்ற வகையற்ற ஒரு கடவுள், நம்மையும் மற்றும் இவ்வுலகிற் காணப்படும் அனைத்தையும் காப்பாற்றும் ஆற்றல் பெற்றுள்ளதென்பதனைக் கேட் கும், மணற்சோறு பொங்கி மகிழும் சிறுமகாரும் எள்ளிநகைப்பரே!

 ------------------------------------------------------------ திராவிட நாடு 15.10.1944


எண்ணிப்பார் கோபியாமல்!

எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக், கண்டுபிடிக்கும் கருவி, டார்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி. விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி இவைகளுக்கான மருந்து, ஆப் ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டிக் கண் ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலி போன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப்படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருகக மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறை கள், கருவிகள், பொருள்கள் ஆகியவை களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்.

ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம் பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல் லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டில
சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை!
ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கற்பூரம்கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்; நீ கொண் டாடுகிறாய்.
ஒருகணமாவது யோசித்தாயா? இவ் வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை.
அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறி ஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

சிவ நேசர்கட்கு

அன்பே சிவமானால் அன்பை வளர்க்கப் பாடுபடுவதுதானே சைவர் கடமை, வேறு எதற்கு? அன்பு வளர, அறிவு வேண்டும், பேதம் ஒழிய வேண்டும். ஆதிக்கம் செய்வோர் அழியவேண்டும். வறுமை போக வேண்டும். வாட்டம் தீர வேண்டும். ஒருவரைச் சுரண்டினால்தான் மற்றவர்கள் வாழ முடியும் என்ற முறையி லுள்ள அமைப்புகள் மாறவேண்டும். அன்பு அப்போதுதான் வளரும். அதைச் செய்ய நாடெங்கும் கோயில்கள் ஏன்? அங்கு கொட்டு முழக்கும் கூத்தும் ஏன்?

அதைக் காட்டிப் பிழைக்க ஓர் ஆரியக் கூட்டம் ஏன்? அது கட்டிவிட்ட கதைகள் ஏன்? ஆறுகாலப் பூசையும் அபிடேக விசேடமும் ஏன்? அன்பு வளர அவசியமா? அன்றி ஆலயங்களில் அடைபட்டுள்ள பொருளை வறுமை போக்கும், வளமான திட்டங்களுக்குச் செலவிடல் முறையா என்பதுபற்றிச் சிவநேசச் செல்வர்கள் சற்றே சிந்திக்கக் கூடாதா? என்று கேட்கிறேன். என் சத்தம் அவர்கள் செவி புகுமோ, புகாதோ, நானறியேன்.    - அண்ணா (திராவிட நாடு இதழ், 10.1.1943)

இப்படி எல்லாம் எழுதியவர் தான் அறிஞர் அண்ணா - அத்தகைய அறிஞரின் கருத்துக்களை வஞ்சிக்கலாமா? அவருக்குத் துரோகம் செய்யலாமா?
தெரியாமலா இவற்றைச் செய்கிறார்கள்? எல்லாம் தெரியும் - அம்மையாரைவிட அய்யாவும், அண்ணாவும் பெரிய தலைவர்களா என்ற ஆணவமா? பதவிப் போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட தடு மாற்றமா சிந்திப்பீர்!

----------------------- மின்சாரம் 22-2-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

44 comments:

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமைத் தலைவர் சிங்காரவேலர்


இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர்
பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மா.

தமிழகத்தின் முதல் பொதுவு டைமைத் தலைவர், காங்கிரசின் முன் னணித் தலைவர், தன்மானத் தலைவர், பெரியாரின் நண்பர், சுயமரியாதை இயக்கத் தளபதி, தொழிலாளர் தலைவர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சிங்காரவேலர் 19-ஆம் நூற்றாண்டில் 1860 பிப்ரவரி 18-ஆம் நாள் பிறந்தவர்; மீனவவகுப்பைச் சேர்ந்த வெங்கடாசலம் செட்டிக்கும், வள்ளியம்மைக்கும் பிறந்து கல்வி அறிவால் பொதுவாழ்வில் உயர்நிலைக்கு வந்த சிங்கார வேலர் சேற்றில் பிறந்த செந்தாமரை.

சென்னையில் உள்ள மீனவர் சமு தாயத்தில் அக்காலத்தில் பெரிய பட்டி னவர், சிறிய பட்டினவர் என்று இரு பிரிவுகள் இருந்தன. பெரிய பட்டினவர் பிரிவைச் சேர்ந்த சிங்காரவேலர் சிறிய பட்டினப் பிரிவைச் சேர்ந்த அங்கம் மையை 1889-இல் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல்.பட்டம் பெற்றார். 1907-இல் தனது 47-ஆம் வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண் டார். ஆனால் அவர் பட்டப்படிப்பிற்கும் வழக்குரைஞர் ஆனதற்கும் 17 ஆண்டுகள் ஓடி விட்டன அவரது வணிக ஈடுபாடு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.


தமிழ் ஓவியா said...

வழக்குரைஞர் பணியுடன் பொது வாழ் வில் தீவிரமாக ஈடுபட்ட சிங்காரவேலர், பீகார் மாநிலத்தில் புத்தகயாவில் 1922 டிசம்பர் 27-ஆம் நாள் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு புகழ் மிக்க சொற்பொழிவு ஆற்றினார். இதுவே அவர் கலந்து கொண்ட முதல் மாநாடு ஆகும். மே நாளை முதன் முதலில் இந்தியாவில் சென்னையில் 1-5-1923-இல் கொண்டாடிய பெருமை சிங்காரவேல ருக்கு உரியது. 1925 நவம்பர் 21, 22 நாள்களில் காஞ்சிபுரத்தில் திரு.வி.கல்யாண சுந்தரனார் தலைமையில் நடந்த காங்கி ரசின் மாநில மாநாட்டில் தந்தை பெரியா ருடன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கி சிறப்பான சொற்பொழிவு ஆற்றினார். முதன் முதலாக இம்மாநாட்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சிங் காரவேலுவும், பொதுச்செயலாளராக எஸ். வி.காட்கேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1925-இல் சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டு 13-ஆவது யானைகவுனி டிவிசன் உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பன் மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தர னாரும் அவ்வமயம் மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். சிங்கார வேலர் கல்விக் குழுவின் தலைவராக இருந்தபோது மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 78 லிருந்து 94 ஆக உயர்ந்தது.

தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று 1931 டிசம்பர் 26 இல் சென்னையில் நடை பெற்ற சுயமரியாதை மாநாட்டைத் திறந்து வைத்து சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்.

அவர் சிறப்புரையின் சில பகுதிகள் வருமாறு:

தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப் போல் மதக்கற்பனைகள் நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக் கத்திற்கு வழி காட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி மக்களும் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெரியார் காட்டிய பகுத்தறிவை உபயோகிப்பீர்களானால் சமதர்மமே அதாவது மதமற்ற, சாதி வேற்றுமையற்ற, பொருளாதார வேற்று மையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்க மாகும்.

தமிழ் ஓவியா said...

1931-ஆம் ஆண்டு தந்தை பெரியார் சென்னையில் சிங்காரவேலரை அவர் இல்லத்தில் சந்தித்து தனது குடியரசு இதழில் பகுத்தறிவு மற்றும் சமதர்மக் கொள்கைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதி வரும்படி கேட்டுக்கொண்டார். 1931 முதல் 1935 ஆம் ஆண்டு வரை சிங்காரவேலர் குடியரசில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1823-இல் வடலூரில் பிறந்த வள்ளலார், 1860-இல் பிறந்த சிங்காரவேலர், 1879-இல் பிறந்த தந்தை பெரியார் ஆகியோர் தங்களின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தமிழகத்தில் செய்யவில்லை என்றால் தமிழ்ச் சமுதாயம் இன்னும் பல கொடிய மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கும்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1932 மே மாதம் சேலம் மாவட்ட சுயமரியாதை மாநாடு நடத்தியது. மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய தலைமை உரையின் முக்கிய பகுதி வருமாறு: தோழர்களே! நமது நாட்டிலுள்ள 34 கோடி சாமான்ய மக்கள் உண்மையான சுதந்திரம் பெற்று, பசி இல்லாமலும், மத கற்பனை இல்லாமலும், சாதி, சமயமில்லாமலும், உண்ண, உடுக்க, இருக்க வசதிகள் யாவருக்கும் சரிநிகர் சமான வாழ்க்கை பெற சமதர்ம ராஜயத்தை ஸ்தாபியுங்கள்

சிங்காரவேலர் குடியரசில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ் நாட்டில் சமதர்ம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்தன என்று சாமி சிதம்பரனார் தனது தந்தை பெரியார் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சிங்காரவேலர் மனித குலத்தின் மீது குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் கொண்டிருந்த பரிவும் அன்பும் அவரைத் தொழிற்சங்கத் தலைவராகவும், சமதர்மவாதியாகவும் ஆக்கியது என்று கூறலாம். 1918-இல் சென்னை நகரில் பிளேக் நோய் பரவியபோது ஆயிரக்கணக் கானோர் மாண்டனர். அக்காலத்தில் தெற்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தன் வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குத் தன் சொந்த செலவில் மருத்து வர்களைக் கொண்டு இலவச மருத்துவ வசதி அளித்தார்.

1945 சூன் மாதம் அச்சகத் தொழிலாளர் மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை வகித்து சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய உணர்ச்சி மிக்க உரையில் இப்பொழுது எனக்கு வயது 84 எனினும் தொழிலாளி வர்க்கத்திற்காக என் கட மையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் சிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? என்று கூறினார்.

பெரியாரைப்போல் சிறந்த பகுத்தறிவு வாதியான சிங்காரவேலர் இறைவழிபாடு என்பதன் பேரால் நாம் நடத்தும் திருவிழாக் களைச் சிங்காரவேலர் கண்டிக்கிறார். சிறு குழந்தைகள் அலங்கரித்த பொம்மை களைத் தூக்கி விளையாடுவதைப் போல் பெரிய குழந்தைகள் செய்வதை உற்சவ மென்கிறார்கள் என்று மத உற்சவங்களைக் கண்டிக்கிறார். கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி சுப்பிரமணியர் கோயில் வரை தமிழகத்தில் சுமார் 40,000 கோயில்களுக்கு ஆண்டு தோறும் ஆடம்பரமான திரு விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றிற்கு ஒரு ஆண்டில் ரூபாய் 1,000 கோடி, 2000 கோடி என்று செலவாகும். திருவண்ணா மலை கார்த்திகை தீபவிழாவிற்கும், திருச்செந்தூர் சூரசம்மார விழாவிற்கும் 15 லட்சம், 20 இலட்சம் என்று மக்கள் கூடுகிறார்கள். இதனால் மக்களின் நேரம், உழைப்பு, பணம் செலவாவதைத் தவிர, நாட்டிற்கு என்ன நன்மை? மதங்களால் எத்தனை கோயில்கள் குருக்கள், மௌலா னாக்கள், பிஷப்புகள் உயிர் வளர்க்கின் றனர்? என்று புரோகிதக் கூட்டத்தைச் சாடுகிறார் சிங்காரவேலர்.

சிங்காரவேலர் தன் எண்பத்தாறாம் வயதில் 1946 பிப்ரவரி 11 ஆம் நாள் இயற்கை எய்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் 24.2.1946 தேதி திராவிட நாடு வார இதழில் பின் வருமாறு எழுதினார்.

மார்க்ஸியம் என்னும் பொருளாதார தத்துவத்தை சாதாரண மக்களும் உணரும் படி செய்த பெருமை தமிழ் நாட்டில் இருவரையே சாரும் - பெரியார் ராமசாமி அவர்களும், சிங்காரவேலரும், தோழர் சிங்காரவேலு சுயமரியாதை இயக்கம் வளர்வதற்குப் பெரிதும் பாடுபட்டார்.

1952 செப்டம்பர் 26 ஆம் நாள் பொன்மலை ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் சிங்காரவேலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் பின் வருமாறு உரை ஆற்றினார்.

பொதுவுடைமை, பகுத்தறிவு சம்பந்தமாக அவரைப்போன்று அப் போது இல்லை என்றே கூறலாம். அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப் பார். அவர் வீடே புத்தக சாலையாகக் காட்சி அளித்தது. கடினமான பிரச்சினைகள் குறித்து எல்லாம் எழுதுவார். அவர் தைரி யமான நாத்திகர். காங்கிரசில் இருந்து கொண்டே நகர சபையில் கடவுளின் பெயரால் பிரமாணம் எடுக்கக் கூடா தென்று தீர்மானம் கொண்டு வந்தார். எதையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரியமும் உடைய அவ ரைப் போன்று ஆராய்ச்சியாளர்கள் நிறைய விஷயம் உணர்ந்து வாதிப்பவர்கள் அவ ருக்குப் பிறகு தோன்றவில்லை.

சிங்காரவேலரின் நினைவைப் போற் றும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட் டுள்ளது. சிங்காரவேலர், பெரியார் ஆகி யோரின் பகுத்தறிவுக் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்குத் தன் பேச் சாலும் எழுத்தாலும் பரப்பி வரும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் அவர் களுக்குத் துணை நிற்க வேண்டியது ஒவ் வொரு தன்மானத் தமிழரின் தலையாய கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page2/75784.html#ixzz2uC7rIPYR

தமிழ் ஓவியா said...


அழியும் மொழிகள்


1,000 வருடங்களாக மொழி அழிவதும், புது மொழி உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில வருடங்கள் முன்பு அந்தமான் தீவில் வயதான பெண்மணி ஒருவர் இறந்துபோனார். அவர் பேசிய 'போ மொழியும் அவருடன் அழிந்துபோனது. அந்த மொழி தெரிந்த கடைசி ஆள் அவர். '65,000 வருடக் கலாசாரம் துண்டுபட்டது என்று பத்திரிகைகள் எழுதின.

100 வருடங்கள் முன்பு ஹீப்ரு மொழி, அழிவின் வாசலில் நின்றது. இன்று 9 மில்லியன் மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு 'இஸ்ரேல் என்ற ஒரு நாடு கிடைத்ததுதான் காரணம். 50 வருடங்கள் முன்பு, ஹவாய் மொழி அழிவு நிலையில் இருந்தது. இன்று அதை மீட்டெடுத்துவிட்டார்கள்.

நவீனத் துருக்கிய மொழியின் வயது 80. இந்த மொழியில்தான் ஓர்ஹான் பாமுக் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்றார். தமிழுக்கு அழிவு வெளியே இருந்து வரப்போவது இல்லை. தமிழர்களால்தான் வரும். போலந்தில் பிறந்த ஒருவர் போலந்து மொழியில் படிப்பார். ரஷ்யாவில் பிறந்த ஒரு ரஷ்ய மொழியில் படிப்பார். டென்மார்க்கில் பிறந்த ஒருவர் டேனிஷ் மொழியில் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் படிக்காமலேயே மேல்படிப்பு படித்து வேலை தேடிக்கொள்ளலாம். இந்த நிலைமை தமிழ்நாட்டில் இருந்தாலும், புலம்பெயர் சூழல் ஆரோக்கிய மானதாக இருக்கிறது.

அறிவகம் என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டத்தின் கீழ் 3,000 புலம்பெயர் தமிழ்ச் சிறார்கள் ஆண்டுதோறும் தேர்வு எழுதுகிறார்கள். இதனால் ஒரு லாபமும் அவர்களுக்கு கிடையாது. ஆர்வம் தான் காரணம். வைதேகி ஹெர்பர்ட் எனும் அமெரிக்கப் பெண்மணி, 12 சங்க நூல்களை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். 2,000 வருடங்களாக ஒருவரும் செய்திராத சாதனை இது. அமெரிக்கத் தமிழர் குமார் சிவலிங்கம், குழந்தைப் பாடல்களையும் குழந்தைக் கதைகளையும் அச்சு/ஒலி புத்தகங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகான படங்களுடன் உலகத் தரத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழின் எதிர்காலம் ஒருபக்கம் பிரகாசமாகவும், இன்னொரு பக்கம் இருள் நிறைந்ததாகவும் உள்ளது. எந்தத் திசையைத் தமிழர்கள் தேர்வு செய் வார்கள் என்பது ஊகம்தான்!

- ஆனந்தவிகடன் - 5.2.2014, பக்கம் 30-31

Read more: http://viduthalai.in/page2/75785.html#ixzz2uC8IEnA1

தமிழ் ஓவியா said...


இணையத் தொடர்பு இல்லாமல் போனில் பேஸ்புக்

போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க.

இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து *325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை. கட்டணம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் புரியும்.
Facebook India ஆனது Fonetwish உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது.
முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்ல வேண்டும். இந்த வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது கிடைக்கும்.

இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை பகிரலாம்.

இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி பார்ப்போமே.
- பிரபு கிருஷ்ணா

Read more: http://viduthalai.in/page2/75786.html#ixzz2uC8r25kS

தமிழ் ஓவியா said...


இருவர் உரையாடல்!


இருவர் உரையாடல்!

அவன்: ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும், எல்லைத் தெய்வம் இருக்குன்னு சொல்றாங் களே அது நிலப்பகுதியில் மட்டுமா இருக்கும்?

இவன்: ஏன் இப்படி கேட்கறெ?

அவன்: இலங்கை கடற்படை நம்ம தமிழக மீனவர்களுக்கு தொல்லைக் கொடுக்கிறார்களே கடலில் எல்லைத் தெய்வம் இருந்து நம்ம மீனவர்களை தாக்காமல் காக்கக் கூடாதான்னுதான்!

இவன்: ஆ: !? !? !?

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9BRGwP

தமிழ் ஓவியா said...

அதிசய மனிதர்

போலியோ என்னும் நோயைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க், தனது கண்டுபிடிப்பு உரிமைக்கான காப்புரிமையைக் கோரவில்லை - உண்மையிலேயே அதிசய மனிதர்தான்.

Read more: http://viduthalai.in/page4/75788.html#ixzz2uC9acEoU

தமிழ் ஓவியா said...


சிகாகோவில் சு.சாமிக்கும், ராம்தேவுக்கும் தடை


சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக்குழு சு.சாமி, யோகா குரு ராம்தேவ் இவர்களின் தலையீட்டைக் கண்டித்து பிரச்சினை எழுப்பியது. சிகாகோ பரஸ்பர நம்பிக்கைக் குழு வானது சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை ஆதரிப்பதை ஏன் திரும்பப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத்தும் வெளிநாடு வாழ் பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப்பும் ஆதர வளித்து விவேகானந்தரின் விழாவை நடத்துவதால் அந்த சிகாகோ அமைப்பு விவேகானந்தரின் விழாவுக்கு ஆதர வளிப்பதைத் திரும்பப்பெற்றுக் கொண் டதாக அறிவித்துள்ளது.

அப்படிச் செய்ததன் மூலம் உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு, இந்திய பாரதிய ஜனதா கட்சிக்கும் உலக பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள் என்ற அமைப் புக்கும் உள்ள தொடர்பை விளக்கமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுவுமல்லாமல் இந்திய பாரதிய ஜனதா கட்சியானது அமெரிக்காவால் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நரேந்திரமோடியினால் தலைமையேற்று நடத்தப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

அமெரிக்க ஹிந்து நிறுவனம் என்னும் ஹிந்து ஆதரவு அமைப்பு விவேகானந் தரின் விழாவுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதற்குக் கண்டனம் தெரிவித் துள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவானது பி.ஜே.பி மற்றும் சிறுபான் மையினருக்கு எதிரான பேச்சாளர்கள் குறிப்பாக இரண்டு நபர்கள் சுப்பிரமணிய சாமியும், சுவாமி ராம்தேவும் அந்த விழா வில் கலந்து கொண்டு பேச இருப்பதை தடைக்கான காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

அதனால் தான் சி.றி.கீ.ஸி என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மேரி நெல்சன் என்பவர் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடும் போது முக்கியப் பேச்சாளரான டாக்டர் சு.சாமி, பி.ஜே.பி.யின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சு.சாமியின் கவுரவ விரிவுரையாளர் பதவிக்கு வேட்டு

இந்திய முஸ்லிகள் இந்து மதத்தின் பழைமையை அங்கீகரிக்க மறுப்பதால் அவர்களின் ஓட்டுரிமையைப்பறிக்க வேண்டும் என்றும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்றும் பேசிய திமிர்ப் பேச் சினால் சு.சாமியின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கவுரவ விரிவுரையாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினால் பெரும்பான் மையான வாக்குகள் வித்தியாசத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழுவின் துணைத் தலைவர் அட்டர்னி பிளிஸ் குயூரர் என்பவரும் மதக் கல்வியின் பேராசிரியர் ராபர்ட் செல்லர் என்பவரும் சுவாமி ராம்தேவ் என்பவர் மேற்கண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினர் என்பதோடு நரேந்திர மோடியின் ஆதர வாளர் என்றும் மோடியின் பிரச்சாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறி மேற்கண்ட விழாவிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதற்கான காரணத்தைக் கூறியுள் ளனர்.

உலக மதங்களின் பார்லிமெண்ட் குழு வானது அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத் தன் வலைத்தளத்தில் சீக்கியர்களும் ஜைனர்களும், புத்தமதத்தினரும் இந்துக் களே என்று கூறியுள்ளதைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

மற்ற மதங்களுக்கு எதிரான நடவடிக் கைகளால் அமெரிக்க ராஜீயத்துறை 2001 ஆம் ஆண்டிலிருந்து விஸ்வஹிந்து பரி ஷத்தை ஒரு தீவிரவாதக்குழு என்று அறி வித்துள்ளது.

- (இந்து 3.10.2012 பக்கம் 10)

Read more: http://viduthalai.in/page4/75789.html#ixzz2uC9m0eM8

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்


இந்திய சமுதாயத்தில் ஆழ வேரூன்றி யிருக்கும் மூடநம்பிக் கைகளை ஒழித்து, அவர்களை பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழி திருப்பி விடும் பெரும் பொறுப்பு விஞ் ஞானிகளுக்கு இருக்கிறது. இந்த அடிப் படையில் ஒரு விஞ்ஞானி சித்து வேலை களை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த ஏமாற்றுகளும் விஞ்ஞானமும் இணைந்து போக முடியாது. சமுதாய சீர்திருத்தம், சுகா தாரம், குடும்பக் கட்டுப்பாடு ஆகிய வற்றை வலியுறுத்துவதுதான் மூடநம்பிக் கைகளை ஒழித்து விஞ்ஞான மனப்பான் மையை உருவாக்க ஒரே வழியாகும். இந்தியாவில் விஞ்ஞானம் என்பது ஏதோ ஓட்டளவிலும் தொழில் ரீதியாகவும் இருக் கிறதே தவிர, விஞ்ஞான மனப் பான்மை வாழ்வியலில் எதிரொலிக்கவில்லை. சோத னைச் சாலையில் விஞ்ஞானியாக இருக் கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் விஞ்ஞானத் திற்கு நேர் எதிரான பழக்க வழக்கங்கள், சிந்தனை களை கைக்கொள்கிறார்கள். இது முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

(பெங்களூர் பல்கலைக் கழகத்தில் விஞ் ஞானமும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் இந்திய அரசுத்துறை செயலாள ரும், விஞ்ஞான தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநருமான டாக்டர் நாயுடம்மா).

Read more: http://viduthalai.in/page4/75791.html#ixzz2uCABjG2C

தமிழ் ஓவியா said...


சோதிடத்தைப்பற்றி ஆச்சாரியார்!


அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் கவர்னர் ஜெனரலுக்கு (ராஜாஜிக்கு) அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித் தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். ராஜாஜியின் முழுப்பெயரில் உள்ள எழுத்துக்களைக்கூட்டி, அதை வைத்து நம்பர் ஜோசியம் கூறுவதாக - அவரை ஒரேயடியாகப் புகழ்ந்து நல்ல பலன் களாகவே கூறினர். இவைகளுக்கு ராஜாஜி பதிலளித்துப் பேசு கையில், உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோசியத்தை நம்புவ தில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோசியத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன

(ராஜாஜி மேற்கு வங்கத்தின் முதல் கவர்னராக இருந்தபோது அவருடைய ராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ராஜாஜி யுடன் ஆயிரம் நாட்கள் (ஜிலீஷீணீஸீபீ பீணீஹ் ஷ்வீலீ ஸிணீழீணீழீவீ) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது).

Read more: http://viduthalai.in/page5/75797.html#ixzz2uCATN8hW

தமிழ் ஓவியா said...

ரயில் பயணிகளின் காவலனாய் விளங்கிய திராவிடர் கழகம்


திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதை வழித்தடத்தில் உள்ள நிலையங்களில் ஒன்று செய்துங்கநல்லூர். இந்த நிலையத்தின் இடது பக்கம் நீரில்லாத குளம் ஒன்றுள்ளது. இங்கே குடி மகன்கள் அமர்ந்து குடிப்பதும் அங்கேயே கற்களை வைத்தே செய்த அடுப்பில் எலி - பூனை போன்றவற்றை சுட்டு உண்பதும் வழக்கம். தங்கள் பாணி யிலிருந்து இவர்கள் தடம் மாறிச்செல்ல விரும்பியதால், முதல் நாள் உடைந்த மதுபாட்டில் ஒன்றை இரவு 7 மணியள வில் அந்தப் பகுதியில் சென்ற திருச் செந்தூர் - திருநெல்வேலி பயணியர் ரயில்மீது பெண்கள் பெட்டியைக் குறி வைத்து எறிந்தார்கள். இந்த நிகழ்வு 2013 மே மாதம் நடந்தது. அந்த பாட்டில் குறிதவறாமல் ஒரு பெண்ணின் நெற்றியில் காயத்தை உண்டாக்கியது. இதனால் உற்சாகம் அடைநத குடி மகன்களில் ஒருவர் வேறொரு நாள் அரை பாட்டில் விஸ்கியுடன் மது பாட்டிலை அதே நேரத்துக்கு வந்த தொடர்வண்டியின் மீது எறிந்தார். அது யார் மீதும் விழாமல் பெண்கள் பெட்டியில் விழுந்து உடைந்து சிதறியது.

அடுத்தடுத்து பெண்கள் பெட்டியில் இந்த நிலை உருவானதும் அதைத் திராவிடர் கழகத்தின் கவனத்துக்கு பெண் பயணிகள் கொண்டு வந்தார்கள். அந்தத் தொடர் வண்டியில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காக வருவதால், நாம் அவர்களை அணுகி, பாதுகாப்புப் படையினர் கார்டு பெட்டியிலேயே பயணம் செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்தோம். அவர்களும் நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாக அச்சமின்றி சில மாதங்கள் கடந்து சென்றன. மீண்டும் பயணிகளுக்கு தொல்லைகள் வரத்து வங்கின.

இந்தத் தடவை செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தின் வலது பக்கம் உள்ள சுடுகாட்டில் கட்டப்பட்டுள்ள காத்திருப் போர் கூடத்திலிருந்து தொடர் வண்டியில் பொதுப்பெட்டியில் கல் எறியப்பட்டது. இங்கே பலர் சீட்டாடுவது வழக்கம். உடனேயே நாம் பாதுகாப்புப்படை ஆய் வாளர் சாந்த குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்புப் படையினர் சாதாரண உடையில் நின்று அந்தப் பகுதியைக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். அவரும் அப்படியே செய்வதாக உறுதி யளித்தார். இங்கே நாம் அரசு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொள்ளாததற்குக் காரணம், அங்கே காவலர்கள் மிகக்குறைவான அளவில் இருந்ததுதான். இந்த நிலையில் மீண்டும் அதே வண்டியின் மீது கல்லெறி யப்பட்டதும் அரசு இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் அருண் பிரகாஷ் அவர்கள் களத்தில் இறங்கினார்.

தமிழ் ஓவியா said...

ஆயினும் பயணிகள், இதற்கு நிரந்தரத் தீர்வு காண திராவிடர் கழகம் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கையை நம்முன் வைத்தனர். எனவே நிரந்தரத் தீர்வு காண திராவிடர் கழகமும் களத்தில் இறங்கியது. திருவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவல கத்தை அது அணுகியதும், செய்துங்க நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்தப் பணியைச் செய்ய இயலாது என்று சொன் னால், நாங்கள் நேரடியாகக் களத்தில் இறங்குகின்றோம் என்றார்கள். நாம் காவல் ஆய்வாளர் பட்டாணி அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். ஓரிரு நாள் களுக்குப்பிறகு அவர் நம்மிடம், அரசு இருப்புப்பாதை காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப்படை ஆகியோருடன் நாங்களும் களத்தில் இருக்கின்றோம். இனி எங்கள் எல்லையில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

இப்பொழுது ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ரயில்வே பாது காப்புப்படை அவ்வப்பொழுது இங்கே காவலர்களை அனுப்ப முடியாமல் தவிக்கின்றது. ஆனால் திருநெல்வேலி அரசு இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் அருண் பிரகாஷ் கண்காணிப்புக்காக தினமும் காவலர்களை அனுப்புகின்றார். செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி தினமும் நேரடி யாகவே கண்காணிப்பில் ஈடுபடுகின்றார். தினமும் மேற்கொள்கின்ற நடைப்பயிற் சியை இரவில் இங்கேயே செய்கின்றார்.

இதன் விளைவு என்ன? இரண்டு மாதங்களுக்கு முன்னால் இங்கே கண்ட நிலைமை முழுமையாக மாறிவிட்டது. இங்கே எவரும் மதுபானங்களைக் குடித்த தடமோ எலி - பூனைகளைச் சுட்ட தடமோ சீட்டாடிய தடமோ எதுவும் இல்லை. ஆங்காங்கே அடுப்புக்காக வைத்திருந்த கற்கள்கூட காணாமல் போய்விட்டன.

இங்கே இந்தத் தொல்லைகளை விளைவிப்பவர்கள் கல்லூரி மாணவர்கள் தான் என்ற ஒரு குற்றச்சாற்றும் எழுந்தது. அதனால் திராவிடர் கழகம் செய்துங்க நல்லூர் தொடர் வண்டி நிலையத்தின் அருகில் அமைந்துள்ள செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரை அணுகியது. படிக்கின்ற பிள்ளைகள் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஆனாலும் பிரச்சினைக்குரிய பகுதியில் மாணவர்கள் நடமாட வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்புங்கள். காவல்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதி இருப்பதால் மாணவர்களை ஒத்துழைப்பு அளிக்கச் சொல்லுங்கள் என்றோம். கல்லூரி முதல்வரோ, எங்கள் மாணவர் கள் அந்தப்பகுதிகளில் வரமாட்டார்கள். வெளி மாணவர்கள் அய்ந்தே கால் மணிக் குள் வீட்டுக்குச் சென்று விடுவார்கள்; விடுதி மாணவர்கள் மாலை 6 மணிக்குள் விடுத்திக்குள் இருக்க வேண்டும். ஆனாலும் நான் மைக் மூலமே அறிவிப்புச் செய்கின்றேன் என்றார். இப்பொழுது மாணவர்களும் அந்தப் பகுதிகளில் நடமாடுவதில்லை. பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் திராவிடர் கழகத்தின் அணுகுமுறையை மிகவும் பாராட்டு கின்றார்கள்.

ரயில்வேயிலுள்ள மற்றுமொரு பிரச்சி னையில் திராவிடர் கழகம் தலையிட்டதை பயணிகள் வரவேற்கின்றார்கள். தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோயில் சந்திப்பு நிலையம் (இது தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதி) முக் கியமான ஒரு நிலையமாகும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் - புனலூர் - மதுரை பயணியர் ரயில் போன்ற பல வண்டிகள் நாகர்கோயிலை அடைந்ததும் லோக்கோ வின் இணைப்பை விடுவித்து மறு முனையில் மாட்டுவார்கள். அதேபோல அந்த நிலையத்துடன் முடிவடையும் ரயில்களின் லோக்கோவின் இணைப்பை விடுவிக்கவும் மாட்டவும் வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களிலும் ஊழி யர்களே இந்தப் பணியைச் செய்வார்கள். நாகர்கோயில் சந்திப்பு நிலைய ஊழியர்கள் இந்த வேலையைச் செய்ய மாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். இதனால் ஓட்டுநர்களே லோக்கோவைக் கழற்றி மாட்டியதால் பயணிகளுக்கு கால விரயம் உண்டானது. ரயில்கள் தாமதமாகச் சென்றன.

மாதங்கள் பல கடந்தும், நான்கு முறை கோட்ட மேலாளர் பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லை. திராவிடர் கழகம் இதில் தலையிட்டது. நிலை மையை தெற்கு ரயில்வே பொது மேலா ளர் மற்றும் இணை இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. ஒரு வாரத்துக்குள்ளாகவே நிலைமையை பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் சீரமைத்து விட்டார். இப்பொழுது ஊழி யர்கள் லோக்கோவை கழற்றி மாட்டு கின்றார்கள். இதை அறிந்த பயணிகளும் பொதுமக்களும் திராவிடர் கழகத்தை வெகுவாகப் பாராட்டுகின்றார்கள்.

- த. அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page6/75799.html#ixzz2uCSaiPit

தமிழ் ஓவியா said...


இனித்த கனி எது?


(சந்திரமோகன் நாடகத்தில்)

இடம்: காகப்பட்டர் ஆசிரமம்

இருப்போர்: காகப்பட்டர், ரங்கு

நிலைமை: (காகப்பட்டர் பழம் சாப்பிட்டுக் கொண்டே ஓலைச்சுவடி களைப் படித்து இரசித்துக் கொண் டிருக்கிறார்.

ரங்கு, குரு சாப்பிடும் பழத்தின் சுவையை எண்ணிய படி ஏக்கத்துடன் இருக்கின்றான். காகப்பட்டர், சுவடியிலே எதையோ படித்துப் பெரிதும் இரசித்தபடி)

காகப்பட்டர்: ரங்கு! எவ்வளவு அருமை, எவ்வளவு இனிமையாக இருக்கு தெரியுமோ!
(குரு பழத்தின் சுவையைத்தான் கூறுகிறார் என்று எண்ணிக் கொண்டு)

ரங்கு: எனக்கெப்படி ஸ்வாமி தெரியும். (பெரு மூச்செறிகிறான்)

(குரு, ரங்குவின் கண்கள் பழத்தின் மீது செல்வது கண்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, புன்னகை புரிந்து)

காக: மண்டு!

என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே பேசு கிறாயே-

ரங்கு: பழத்தின் இனிமையைத் தான் சொல்கிறீர்; புரிகிறது நன்னா- ஆனா பழத்தை நீர் சாப்பிட்டா, இனிமை, எனக்கா தெரியும் - சுவாமி!

காக: பைத்தியக்காரா! பழத்தின் இனிமையை அல்லடா நான் சொல்வது, வேணுமானா, இரண்டு பழம் சாப்பிட்டுத் தொலையேன். வேண் டாம்னு சொல்வேனா?

சொன்னாத்தான் நீ கேட்கப் போறாயா? நான், பழத்தின் இனி மையைக் குறித்துச் சொல்லவில்லை.

இந்தப் பழைய சுவடி இருக்கே..
நம்ம குல ரட்சகர்,

சட்டதிட்ட கர்த்தா மனு,

அவர் வகுத்து வைத்திருக்கும் -

அற்புதமான ஏற்பாடுகளைப் படிக்கப்படிக்க, சிந்திக்கச் சிந்திக்க, அவைகளோட தத்துவங்களை அலசிப் பார்க்கப் பார்க்க, அடடா! எவ்வளவு இனி மையா இருக்கு தெரியுமோ...

ரங்: அதைச்சொல்றேளா?

காக: கேவலம், பழத்தோட இனி மையைப் பத்தி நான் பேசறதாக எண்ணிண்டிருக்கே...

ரங்: நான் என்ன கண்டேன் சுவாமி! பழம் சாப்டிண் டிருந்தீர்...

காக: அதிலே என்னடா மதுரம் இருக்கு...

மண்டு?

மனு செய்திருக்கிற ஏற்பாடு, நமது குலத்துக்கு என் றென்றும் மதுரமான வாழ்வளிக்கும் கற்பகவிருட்சம்?

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (மாமனிதர் அண்ணா நாளிதழ் - பேராசிரியர் க.அன்பழகன்)

Read more: http://viduthalai.in/page7/75801.html#ixzz2uCT8m2iu

தமிழ் ஓவியா said...


கடவுள் புத்திசாலியா? யோக்கியமானதா?


ஒரு தகப்பன் பல குழந்தைகளைப் பெற்று விட்டு அவனது வீட்டின் புறக்கடையில் ஒரு கிணற்றை வெட்டி அக்கிணற்றுக்குச் சுற்றுச்சுவர் கட்டாமல் விட்டு விட்டுக் குழந்தைகளைப் பார்த்துக் கிணற்றிற்குச் சுற்று (பாதுகாப்பு)ச் சுவர் கட்டவில்லை; நீங்கள் புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வானேயானால் அத்தகப்பன் யோக்கியமான அறிவாளியான தகப்பன் ஆவானா?

அப்படித்தானே இன்று கடவுள் மக்களில் அயோக்கியர்களைப் படைத்துவிட்டுப் பாதுகாப்பில்லாமல் செய்து அவர்களிடம் மக்களைத் தொல்லைப்படச் செயகிறார்!

துஷ்ட மிருகங்களைப் படைத்து அவைகளிடம் சாது மிருகங்களைத் தொல்லை அனுபவிக்கும்படிச் செய்கிறார். கசாப்புக் கடைக்காரர்களைப் படைத்து அவர்களிடம் ஆடு மாடுகள் பலியாகும்படிச் செய்கிறார். மீன் பிடிக்கும் வலையர்களைப் படைத்து அவர்களிடம் தினமும் பலப் பல கோடி மீன்களைப் பலியாகும்படிச் செய்கிறார். பெண்களைப் படைத்து அவர்கள்மீது பலப்பல ஆண்களை ஆசைப்படும்படிச் செய்கிறார் - தந்தை பெரியார்.

ஆகவே, இவைகளிலிருந்து கடவுள் எவ்வளவு கருணாநிதி! எவ்வளவு புத்திசாலி! எவ்வளவு யோக்கியன்! கடவுளை நம்புகிற மக்களே, நீங்களே கூறுங்கள்.

Read more: http://viduthalai.in/page7/75800.html#ixzz2uCTIbv8J

தமிழ் ஓவியா said...


தேவாரம்



தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே பிறரைத் துன்புறுத்துவதுதான் என்பதனைத் தேவாரத்தை நடுநிலையுடன் படிக்கும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்வார். வேதாரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத்தில் நிற்க மாட்டான் - ஒரு சமணன் நிற்க மாட்டான் - ஒரு புத்தன் நிற்க மாட்டான் - இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமரச சன்மார்க்கம் பேசும் ஒரு சைவன்கூட அதன் பக்கத்தில் நிற்க மாட்டான் - அந்த அளவுக்கு வசைமொழிகளை வாரி வாரி இறைத்திருக்கிறார்கள். தேவாரத்தைப் பாடிய திருஞானசம்பந்தரும் பிற நாயன்மாரும்! தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசைமொழிகள் பல தேவாரம் பாடிய நாயன்மார்கள் வாயினின்றும் வந்திருக்கின்றனவே!

Read more: http://viduthalai.in/page8/75804.html#ixzz2uCTp7nbI

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பிய துண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப் பதால் அவர் நமது வேண்டுகோளைக் கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன். நன்மையான தர்ம கைங் கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார் என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிர கஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதி கொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்து இப்பொழுது. அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய் விட்டது. இந்த மாய வஞ்சகம் நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக் காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக்கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி. சத்தியவந்தர், சர்வ வல்லமை யுள்ளவர். எங்கும் பரம் பொருளாக நிறைந்திருப்பவர் என்பனவற்றை நான் எப்படி நம்பக் கூடும்? மகா தயாநிதி சத்தியமே ஒரு உருவான மெய்க் கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித் திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி நிறைந்தது. சமத்துவத்திற்குப் பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமை களுக்கும் உறைவிடம்; மிருகத்தனமானது.

வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான உலகத்தைச் சத்தியவந்தரான கடவுள் உண்டு பண்ணியிருக்க முடியுமா? பல ஆயிரக்கணக்கான கொடியர் இவ்வு லகில் ஜீவிக்கிறார்கள் இன்னும் பலர் முட்டாள்கள். அவர்களுக்கு மூளை என் பதே கிடையாது. அன்பு சத்தியம் நிறைந்த இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம் ஏழைகளை இம்சிக்கும் ராக்ஷதர் களும், சத்தியவந்தரைத் தொல்லைப் படுத்தி, அடக்கி, நசுக்கி, மண்ணுக்கு இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர் களும் இன்னும் பல ஆயிரம் கொள்ளை யடிக்கும். திருடர்கள் பலர் சுய நலமே உருக் கொண்ட தீயர்கள் எத்தனையோ லக்ஷம். இந்தச் சுயநலப் பேய்களே மகா சொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்துகிறார்கள். ஏழை களின் கதியோ அதோ கதி தான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகி, தரித்திரத்திற் குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் பசியால் வாடி மடிகின் றனர். முடிவில் மண்ணோடு மண்ணாய்ப் போகிறார்கள். உலகில் இந்தக் கொடு மைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்தக் கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்க முடியுமா?

வேதங்கள் பொய்: சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங் களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக்கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சிலர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாயையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மதவெறி கொண்டவர்களே உண்மையி ருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவானோ, கிறிஸ்துவோ, மகமது நபியோ உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்களா? அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்தச் சத்தியம் மறைந் துவிட்டதா? அல்லது அதைப் போதிக்கப் புறப்பட்டவர்கள் திரித்து, சத்தியத்தையே மறைத்துவிட்டார்களா? இவர்கள் மனி தர்களைப் பாகுபாடு படுத்திப் பிரித்து வைத்தது ஏன்? சத்தியமென்றால் ஒற்று மையின்றிப் பல பாகுபாடுகள் உண்டு பண்ணிச் சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?

லாலாஜி வாழ்க்கை: இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தேனெனக் கேட்கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்க வேண்டும். இது மனித சுபாவம்; ஒரு குணம் அது சதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

- லாலாலஜபதி

Read more: http://viduthalai.in/page8/75803.html#ixzz2uCTwqSO6

தமிழ் ஓவியா said...


செவ்வாயில் மனிதன் குடியேறிய பிறகும், செவ்வாய் தோசம் பேசுகிறார்கள் இருவர் ஒன்று சேர உடற்கூறு பொருத்தமே போதுமானது!


செவ்வாயில் மனிதன் குடியேறிய பிறகும், செவ்வாய் தோசம் பேசுகிறார்கள்

இருவர் ஒன்று சேர உடற்கூறு பொருத்தமே போதுமானது!

ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மன்றல் 2014 பெரு விழாவில் ஜாதி மறுப்புத் திருமணத்தை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (23.2.2014).


சென்னை, பிப்.23- சென்னை பெரியார் திட லில் இன்று காலை நடை பெற்ற மன்றல் பெருவிழாவில் ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்: செவ்வாயில் மனி தன் குடியேறிய பிறகும், நம் மவர்கள் இன்னும் செவ் வாய்தோசம் பேசுகிறார்கள். இருவர் ஒன்று சேர உடற் கூறு பொருத்தம் மட்டுமே போதுமானது என்றார்.


தமிழ் ஓவியா said...

மன்றல் சார்பில் ஒருங் கிணைக்கப்படும் ஜாதி, மத மறுப்பு இணை தேடல் பெரு விழா, சென்னை பெரியார் திடலில் இன்று (23.02.2014) காலை 9 மணியளவில் தொடங் கியது. துவங்கிய சிறிது நேரத் திலேயே, மன்றம் நிறையும் அளவிற்குத் தமிழர்கள் ஒன்று கூடினர்.

ஜாதி, மத மறுப்பு, மண முறிவு பெற்றோர், துணையை இழந்தோர், மாற்றுத் திறனா ளிகள் என அனைத்துப் பிரி வினரும் பயன்பெறும் வகையில் 2012 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப் பட்டது மன்றல் அமைப்பு. இதுவரை சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற் றுள்ளன. மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, மீண் டும் இன்றைய தினம் சென் னையில் இந்நிகழ்ச்சி ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் திரு மகள் தலைமை ஏற்றார். கி.தளபதிராஜ் வரவேற் புரை வழங்க, முனைவர் அதிரடி அன்பழகன் அறிமுகவுரை ஆற்றினார். வழக்கறிஞர் பிரசன்னா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். "தமிழ்நாட்டிற்கு இது தேவையான நிகழ்ச்சி யாகும். பெரியார் சிந்தித்த கருத்துகளைச் செயல்படுத்த வைக்கும் நல்ல ஏற்பாடு இது. ஏனைய திருமண அமைப்புகள் குறிப்பிட்ட ஜாதி அல்லது மதம் கலந்த தாக இருக்கிறது. ஆனால் மன்றல் நிகழ்ச்சிகள் அற்புத மானவை. சமுதாய ஏற்றம் தரும், புரட்சி விழாக்கள் இவை", என்று குறிப்பிட் டுப் பேசினார்.

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய மூடர் கூடம் திரைப்பட இயக்குநர் நவீன், நான் மத மறுப்புத் திருமணம் செய்து, குழந் தைக்குத் தமிழில் பெயர் வைத்துள்ளேன். இது நம் மதம், இது நம் ஜாதி என்ப வர்களுக்கு மத்தியில், எல் லோருக்குமான தேவையாக "மன்றல்" செயல்படுகிறது. ஜாதி, மத மறுப்புத் திரும ணம் செய்ய விரும்பி, ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு மன்றல் நல்ல துணை. அதேநேரம் அவர்களுக்கான ஊக்கத்தை யும் இந்நிகழ்ச்சி கொடுக்கி றது", என நவீன் பேசினார்.

நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலே 104 விண் ணப்பங்கள் பதிவு செய்யப் பட்டன. பதிவு செய்தவர்க ளுக்குக் கூடுதலான பல உதவிகள் மற்றும் அறிவிப்பு கள் அரங்கைச் சுற்றிக் காணப்பட்டன. ஜாதி மறுப்பு, கைம்பெண் திரு மணம், மாற்றுத் திறனாளி கள் ஆகியோருக்கான அரசு உதவித் திட்டங்கள், இலவச சட்ட ஆலோசனை, ஒளிப் பட வசதி உள்ளிட்ட பல வற்றைக் காண முடிந்தது. மன்றலின் சேவை தமிழ் நாட்டு மக்களுக்கு என்றென் றும் தேவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையைச் சோகமாகச் சித்தரிக்கும் அனைத்தையும் தள்ளி வையுங்கள்!

சென்னையில் நடை பெறும் மன்றல் நிகழ்ச்சி யில் விருதுநகர் மாவட்டம், நடுவப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன், அதே ஊரைச் சேர்ந்த காளியம்மாள் ஆகி யோருக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஜாதி மறுப்புத் திரு மணத்தைத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். பின்னர் தம் வாழ்த்துரையில், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இந்த இணையர்கள் இங்கே அமர்ந்துள்ளனர். தங்களுக் கான துணையைத் தாங்களே தேர்வு செய்வது நல்ல விச யம். நாம் ஒருங்கிணைந்து அவர்களைப் பாராட்ட வேண்டும்.

ஜாதி என்பது ஒரு கற் பனை. மூளையில் மாட்டப் பட்ட விலங்கு. நிறைய பேர் அதிலிருந்து வெளிவர முடியாமல் இருக்கிறார்கள். சிலரோ அந்த விலங்கைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு பலரும் தங்களுக் கான தேவையை மேடை யில் அறிவிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஒடுக்கப்பட்ட சமுதாயத் தில் இருந்து வந்த ஒரு பெண், " தான் எம்.இ படித் துள்ளதாகவும், கடவுள் மறுப் புச் சிந்தனை கொண்ட துணை தனக்கு வேண் டும்", என அறிவித்தார். பெரி யாருக்குக் கிடைத்த மாபெ ரும் வெற்றியல்லவா இது!

ஜாதி, மதம், ஜாதகம் என வாழ்க்கையைச் சோகமாக ஆக்குகின்ற எந்த ஒன்றை யும் நீங்கள் அனுமதிக்கா தீர்கள். இன்றைக்கு ஜாதி பார்ப்பது குறைந்து வரு கிறது. நல்ல மனிதராக இருந்தால் போதும் என்ற நிலை வந்துள்ளது. இந் நிலை அதிகரிக்க வேண்டும்.

செவ்வாயில் மனிதன் குடியேறிய பிறகும், நம்ம வர்கள் இன்னும் செவ்வாய் தோசம் பேசுகிறார்கள். இரு வர் ஒன்று சேர உடற்கூறு பொருத்தம் மட்டுமே போதுமானது.

இங்கே இருக்கிற இணையர்கள் கிராமத்தில் இருந்து வந்துள்ளனர். நீங் கள் சிறப்பாக வாழ்வதே உங்களுக்கான வெற்றியாகக் கொள்ளப்படும். எளிமை யோடும், சிக்கனமாகவும், விட்டுக் கொடுத்தும் வாழுங்கள்" எனத் தமிழர் தலைவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/page1/75814.html#ixzz2uCUCyIdp

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. என்னும் மூடநம்பிக்கைக் கூடாரம் ஜோதிடர்களை நம்பி ஓடுகின்றனர்


ராஜ்காட், பிப்.23- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோதிடர்களுக்கு அர சியல்வாதிகளால் யோகம் தான். அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்றில்லாமல் குஜராத் மாநிலத்திலிருந்தும் மோடி போன்றவர்களின் ஆதரவு ஜோதிடர்களுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

ராஜ்காட்டில் அரசு அலு வலகங்களுக்குப் பின்புறமாக ஒரு சந்து அதில் இரண்டு அறைகளுடன் கூடிய இருட்டு உலகம். அங்கே துரிதகதியில் ஆட்கள் வருவதும் போவது மாக இருக்கிறதாம். அங்கே உடல்தளர்ந்து, வயது முதிர்ந்த, பார்வை இழந்த 80 வயது முதல் 90 வயதுக்குள் உள்ள பிரணாப் குமார் பட்டா என்பவர் ஆருடம் கணித்துக் கூறுபவராக உள் ளார். இவர் வாரணாசியில் ஜோதிடத்தைப் பயின்ற வராம். இவரை அந்த ஊரில் பெயர் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாதாம். ஆனால் குருஜி என்று கேட் டால் யார் வேண்டுமானா லும் சொல்லி விடுவார்களாம்.

மூத்த பாஜக தலைவர் ஒருவர் மோடிஜோதிடத் தைப் பெரிதும் நம்புவ தாகக் கூறுகிறார் . முன்னாள் முதல்வர் சிமன்பாய்பட் டேல், சபில்தாஸ் மேத்தா உட்பட பலரும் பட்டாவி டம் ஆருடம் கேட்பது உண் டாம். சாதாரண ஆளிலிருந்து முதல்வர்கள் வரையிலும் அரசியல் பிரபலங்களி டையே மிகுந்த செல்வாக்கு பெற்ற ஜோதிடராம். இவர் வசுந்தரா ராஜி எப்படியும் பிரதமர் ஆவார் என்கிறார். ஆனால், தேதி, நேரம் எல் லாம் தெரியாது என்கிறார்.

பட்டாவிடம் வாடிக்கை யாளர்களாக வரும் பிரபலங் கள்குறித்து கேட்டதற்கு அவர் கூற மறுத்ததுடன் ஜாதகத்துடன் வாருங்கள், பணம் கொடுங்கள், கேள்வி கேளுங்கள், பதிலைப் பெற்று இடத்தைக் காலி செய்யுங்கள் என்கிறார். என் கதவுகள் எல்லோருக்கும் திறந்தேவுள்ளது என்கிறார்.

மோடி ஜோதிடத்தை அறிய, தொழிலாக இருப்ப வர்களைமட்டும் நாடாமல் பொழுதுபோக்காக உள்ள வர்களையும் நாடுகிறாராம். அப்படி பொழுதுபோக்காக ஜோதிடம் சொல்பவர் தேஜாஸ் மேத்தா என்பவர். இவர் அமெரிக்காவில் இயங் கும் ஸ்டெம்-செல் கம் பெனியின் உரிமையாளராம். குஜராத்தில் ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவரும், ஜோதி டருமாகிய யசோதர் மேத்தா வின் பேரன்தான் தினேஷ் மேத்தா. மாநில நீர்ப்பாசனத் துறை ஊழியர் பி.சி.படேல் என்பவர் மோடிக்கு மூன்று நிகழ்ச்சிகளுக்கு நேரம் கணித்து சொல்லியுள்ளார். அவர் அமைச்சரவையில் உள்ளவர்களும் அவ்வப் போது நேரம் குறித்துத்தரச் சொல்வார்களாம்.

ஜோதிடர்களை நம்பி குறிகேட்பதும், எண்ணியல் பார்த்துப் பெயரில் மாற்றம் செய்வதும், குறித்த இடங் களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதும் என்று மூட நம்பிக்கையின்பிடியில் அரசியல்வாதிகள் பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட அரசியல் பிரபலங்களின் வரிசையில் இந்தியா முழுவதுமிருந் தும், பலரைப்பற்றியும் தக வல்கள் வெளிவந்துள்ளன. இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கரு நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவர் மகன் குமாரசாமி, முன்னாள் முதல்வர் ஷட்டர் என்று பட்டியல் நீளுகிறதாம். மேற் கண்ட செய்திகளை ஆங் கில நாளேடு ஒன்று விவர மாக வெளியிட்டுள்ளது. மோடி தரப்பில் பதில் வருமா?

இந்திய அரசியலில் தற் போது நவீன தொழில்நுட்ப யுக்திகளைக்கொண்டு களம்காணுவதும், சமூக வலைதளங்கள், திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சிகள், நவீன, திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டங்கள் என்று பல்துறை, ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள் வதுமாக இருந்தாலும், 30-40 ஆண்டுகளாக இல்லாத தொழில்நுட்பங்களுடன் இன்னமும், தம் கொள்கை, தம் கட்சி, செயல்பாடுகளை, வாக்காளர்களை நம்பாமல் ஜோதிடர்களையும், ஜோதி டத்தையும் நம்பி அவர்கள் பின் செல்லும் மோடி போன்ற அரசியல்வாதிகள் சாதிக்கப் போவதுதான் என்ன? என்று விவரம் தெரிந் தவர்கள் கேட்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/75815.html#ixzz2uCUdaUhF

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு பொய்யர் சிறுபான்மை மக்கள் அவரைப் பார்த்து பயப்படுகின்றனர் மாயாவதி குற்றச்சாட்டு



டில்லி, பிப்.23- பாஜக வின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு பொய் யர் என்றும், அவரைப் பார்த்து சிறுபான்மையினர் பயப்படுவதாகவும் குற் றம் சாட்டியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலை வர் மாயாவதி. நாடாளு மன்ற வளாகத்தில் செய்தியாளர் களைச் சந்தித்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறிய தாவது:-
நரேந்திர மோடி கூறு வதில் சிறிய அளவிலேதான் உண்மை இருக்கிறது. பெரும்பாலானவை பொய் தான். மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். நாட்டின் அடுத்த பிரதமராக விடாமல் அவரை தடுக்க கடும் முயற்சிகள் நாங்கள் மேற்கொள்வோம். சிறு பான்மையின மக்கள் அவரை பார்த்து பயப்படு கின்றனர். ஒருவேளை அவர் பிரதமரானால் முஸ் லீம்கள் தாங்கள் பாது காப்பாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள னர். சிறுபான்மையின மக்களாகிய நாம் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். அதே போல், மூன்றாவதுஅணி மற்றும் பிற அணிகளால் நாட்டிற்கு எதையும் செய்ய முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/75816.html#ixzz2uCUo1Neo

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு - 2


பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன், குஜராத் மாநிலம் ரேவாரி கிராமத்தில் 15.9.2013 அன்று பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்ச் பகுதிகளில் காவல் புரியும் நமது இராணுவ வீரர்களின் பயன் பாட்டிற்கு, நர்மதா ஆற்றிலிருந்து குடிநீர் வருவதற்கு தன்னுடைய முயற்சிதான் காரணம் என்றும், இராணுவ வீரர்கள் மீது அதிக அன்பும் மதிப்பும் இருக்கும் காரணத்தினால், 700 கிலோமீட்டர் தூரத்திற்கு, குழாய் அமைத்து, தண்ணீர் செல்ல, தான் ஏற்பாடு செய்த தாகவும் பேசினார், மோடி. இதில் உண்மை இருக்கிறதா? கட்ச் பகுதிக்கு, குழாய் மூலமாக குடி நீர் வழங்கும் மிகப் பெரிய திட்டம் 4700 கோடி ரூபாய் செலவில் சர்தார் சரோவர் அணை மற்றும் மாகி குழாய் திட் டத்தின் மூலாமக 1999-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

மாகி குழாய் திட்டத்தின் மூலமாக நர்மதா ஆற்று நீர், ஆறு மாவட்டங்களில், 29 நகரங்களுக்கும், 1467 கிராமங்களுக்கும், 880 கோடி ரூபாய் செலவில், குடிநீர் தரப்பட்டதை, 2001ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய குஜராத் முதல்வரான கேசுபாய் படேல் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2002-க்குள் கட்ச் பகுதிக்கும் இந்த திட்டம் சென்றடையும் என்றும் அறிவித்தார் கேசுபாய். 22.1.2001 அன்று, மாகி குழாய் திட்டம் கதாதா மாவட்டத்தில் துவக்கப்பட்டது. துவக்கியவர் கேசுபாய் படேல். ஆசிய வளர்ச்சி வங்கியின் 600 கோடி ரூபாய் கடனில், இத்திட்டம், கட்ச் பகுதிக்கும் சென்றடைந்தது 2002 ஆம் ஆண்டு. 7.10.2001 அன்றுதான், நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-இல் இத்திட்டம் கட்ச் பகுதிக்கும் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பாதையை கடந்து சென்றது, இறுதி யாக எல்லைப் பகுதிக்கு சுமார் நூறு கி.மீ. தூரம் உள்ள பாதையை 2004-ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் திறமை மிக்க? மோடி ஆட்சியில், நூறு கி.மீ. கடக்க பத்து ஆண்டுகள் ஆகியது. இறுதி யாக ஆகஸ்டு 2013-இல் தான் இராணுவ வீரர்கள் இருக்கும் எல்லைப் பகுதிக்கு இக்குடிநீர்த் திட்டம் சென்றடைந்தது. கேசுபாய் படேல் முதல்வராக இருந்து 1999-இல் துவக்கப்பட்ட இந்த குடி நீர் திட்டத்தை, மொத்தம் உள்ள 600 கி.மீ. தூர குழாய் திட்டத்தில், 500 கி.மீ. வரை கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப் பட்ட ஒரு திட்டத்தை, அக்டோபர் 2001-இல் முதல்வ ரான மோடி, தானே துவக்கியதாக 2013இல் கூறுகிறார் என்றால், இதற்குப் பெயர் தான் மோடி புளுகு.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/75819.html#ixzz2uCUzolsl

தமிழ் ஓவியா said...


பெரியாரின் மண்ணில் ஒழிந்து போன தேவதாசி முறை கருநாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை!


கருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெய ரில் படிப்பறிவில்லா மக் களை ஏமாற்றி இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட் டியார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் போன்றோர் நடத்திய சமூகப்போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்து போனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரி விக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர் அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத் தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண் களுக்குப் புனிதமான ஒரு சடங்கு போலவும், ஆல யங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை கார ணமாக சிலர் (பெரியார் பெயரைக்குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது பொறாமையும் மதத்தின் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப்போதே மிகவும் சல சலப்பை ஏற்படுத்தியது.

அவரின் ஆபாசமான கூற்றை உச்சநீதிமன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் மிகப் பெரிய அவமானம் என்று கூறி இருக்கிறது. கருநாடக மாநிலம் ஹரப்பனல்லி வட்டத்தில் உத்தரங்கமல அடிவிமல நகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன் றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசுக்குத் தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம்; இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழாவாகும் இதனால் யாரும் பாதிக்கபடவில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்தச் கோவில் தேவதாசி விழாவை சிறப்பாக நடத்தி வந்தது. போராடும் உளியம்மா

இந்தக் கோவிலின் முதிய தேவதாசியான உளி யம்மா என்பவர் நீண்ட காலமாக இந்தப் பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால் நகர நிர்வாகம் மற்றும் பிர பலங்களின் தலையீடு கார ணமாக அவரால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன்வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எஸ் எல் பவுண்டே சன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் தது அதில் உதரங்கமல துர்க்கையம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம்பரிய தேவதாசி முறையையும் சின்னாபின்னமாக்கப் படும் பெண்களின் வாழ்க் கைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சாட்டை! சமூகத்தின் மிகவும் கொடிய பழக்கமாக இன் றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதி மன்றமே ஒருமுறை அதிர்ந்து போனது, தேவதாசியாக மாற்றப்படும் விழா (13.02.14) அன்று இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசார னைக்கு எடுத்துக்கொண்டு இந்த மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்;

இந்த சம்பவம் குறித்து கருநாடக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் குறிப் பிடப்படுவதாவது : இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என் பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமானச் சின்னமாகும், இந்த சம்பவம் பற்றி உட னடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறுவ தைத் தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண் களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பான பதிவு செய்யப் பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட்டுள்ளது. சமூக நீதிக்கான கி.வீர மணி விருதுவழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கி றோம். சமூகத்தில் பெண் கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன் றளவு குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழு வதும் தேவைப்படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தர வின் படி அவரின் வார்த்தை உண்மையானது.

இப்பொழுதுள்ள கரு நாடக முதல் அமைச்சர் சித்தாராமையா பகுத்தறிவு வாதி அவர் தலையிட்டு இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/75770.html#ixzz2uCWGPSKT

தமிழ் ஓவியா said...


மோடியின் திருவிளையாடல்கள்!


மோடியின் திருவிளையாடல்கள்!

மோடி பயன்படுத்தும் அதானியின் தனியார் விமானம்

அகமதாபாத்: அய்ந்து ஆயிரம் கோடி ரூபாய் இழப் புக்கு மத்திய தணிக்கைத் துறை ஏற்கெனவே அதானியை குற்றம் சாட்டியுள்ளது.

பிரபல தொழிலதிபர் களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோ ருக்கு சாதகமாக மோடி செயல்பட்டுவருவதாக மத் திய தணிக்கைத்துறை மோடி மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில் தொடர்ந்து அவர் செல்லுமிடமெல் லாம் அதே தொழிலதிபர் களுக்குச் சொந்தமான நிறு வனத்தின் விமானத்தைத் தான் பயன்படுத்துகிறா ராம். இணையத்தில் அவர் களுக்கு ஆதரவாக ஏன் எங் கள் பணத்தை பயன்படுத் துகிறீர்கள் என்று ஆசாத் ஹிந்துஸ்தானி என்பவர் இணையத்தில் கேட்கிறார்.

நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் நீக்கமாம்

வதோத்ரா: குஜராத் மாநிலம் வதோத்ரா நகரில் கடந்த 15-ஆம் தேதி உள் ளூர் விளையாட்டு மைதா னம் திறப்பு விழா நடை பெற்றது. ஏராளமான மாண வர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், மாநில முதல்வரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளருமான நரேந்திர மோடி மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், வதோத்ரா பள்ளியில் உள்ள 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். மோடி பங் கேற்ற விழாவை புறக் கணித்ததால் அவர்களை நீக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர் சங்கம் கடிதம் எழுதியுள் ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் பள்ளியின் முதல் வர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசியல் ஆதாயத்துக்காக பள்ளி மாணவர்களை மோடி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/75772.html#ixzz2uCWQ18b0

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

- (விடுதலை, 30.12.1972

Read more: http://viduthalai.in/page1/75759.html#ixzz2uCWffxES

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு -1




நரேந்திரா தாமோதர்தாஸ் மோடி, (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் முழுப் பெயர்), மற்ற மாநிலங்களில் பேசுகையில், குஜராத்தில் மின் உற்பத்தி தன்னி றைவு பெற்றுவிட்டதாக கூறி வரு கிறார். இதில் உண்மை இருக்கிறதா?

பாஜகவின் விவசாயிகள் சங்கமாக இருக்கும், பாரதீய கிசான் சங், விவ சாயிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக குஜராத் இருந்தால், ஏன், விவசாயிகள் இப்படி ஓர் போராட்டத்தை நடத்த வேண்டும்?

தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக விலை கொடுத்து 15,300 மெகா வாட் மின்சாரத்தை குஜராத் அரசு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா விலேயே, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தனியார் நிறுவனங் களிடமிருந்து வாங்கும் மாநிலமாக குஜராத் முதலிடம் வகிக்கிறது.

தமிழ் நாட்டில், முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட் ஒரு ரூபாய் என்கிற நிலையில், குஜராத்தில், ஒரு யூனிட் ரூ. 3.60 ஆக உள்ளது. 200 யூனிட் வரை தமிழ் நாட்டில் ரூ.1.50 என் றால், குஜராத்தில் ரூ.4.25 ஆக உள் ளது. இதை மேலும் உயர்த்திட குஜ ராத் அரசிடம் தனியார் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

குஜராத்தில், பாஜகவிற்கு இந்த தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான் அதிக நன்கொடைகளை தந்துள் ளன என்பதை தேர்தலை பற்றிய ஆய்வு செய்த சனநாயக சீரமைப்பு சங்கம் என்ற அரசு சாரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் மின் இணைப்பு கேட்டு வந்த மூன்று லட்சம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3945 விண்ணப்பங்களுக்குத் தான், மின் இணைப்பு தரப்பட்டுள்ளன.

2011 கணக்கெடுப்பின்படி, குஜ ராத்தில், மின்சாரம் இல்லாத 11 லட்சம் வீடுகள் உள்ளன. அதில் 9 லட்சம் வீடுகள், கிராமத்தில் தான் உள்ளது என பாரீஸில் வாழும் சமூக ஆய்வாளர் கிறிஸ்டபர் ஜாபரிலெட், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக் கையில் 17.4.2013 எழுதிய கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான், குஜராத்தில் மின் உற்பத்தி பற்றிய நிலை.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page1/75768.html#ixzz2uCWnRwDC

தமிழ் ஓவியா said...


எனது பெற்றோர் விடுதலையை தடுக்காதீர்கள் ராகுல், பிரியங்காவுக்கு, நளினியின் மகள் வேண்டுகோள்


லண்டன், பிப்.22- எனது பெற் றோர் விடுதலையாவதை தடுக்காதீர்கள் என ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நளினியின் மகள் ஹரித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்குதண்டனை விதிக்கப் பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை கடந்த 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து இந்த 3 பேர் உள்பட, ராஜீவ் கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுவிக் கப்படுவர் என தமிழக அரசு அறி வித்தது.
ஆனால் இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க இடைக் காலதடை விதித்தது.

இந்தநிலையில் முருகன்-நளினியின் மகளான ஹரித்ரா லண்டனில் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 23 ஆண்டுகளாக எனது பெற் றோர் என்னுடன் இல்லாததால் நான் மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் முடிவுகளால், எனது பெற்றோர் எனக்கு திரும்ப கிடைப் பார்கள் என மிகுந்த மகிழ்ச்சி அடைந் தேன். ஆனால் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகுந்த ஏமாற்றமும், குழப்பமும் அடைந்துள்ளேன்.

எனது பெற்றோர் எனக்கு திரும்ப கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை இழப்பதால் எவ்வளவு வேதனை ஏற்படும் என்பது, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு தெரியும். எனவே இந்த வாய்ப்பை அவர்கள் (ராகுல், பிரியங்கா) தடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

எனது பெற்றோர் விடுதலையா னால், அதுவே நீங்கள் எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே எனது பெற்றோர் விடுதலையை தயவு செய்து தடுக்காதீர்கள் என நான் உங்களை பணிந்து வேண்டுகிறேன். இவ்வாறு ஹரித்ரா கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/75766.html#ixzz2uCWwNJbj

தமிழ் ஓவியா said...


பல்லாவரத்துப் பண்டிதர்


திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் தமிழ்நாடு திராவிடன் பத்திரிகைகளில் காணப்படுகின்றது.

அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தைத் திருவாளர்கள் தண்டபாணிப் பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்டதாகவும் பதில் சொல்ல இயலா மல் திக்குமுக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது.

அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத்தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்துகொண்டு போனதாகவும் அதை அக்கூட்டத் திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்த தாகவும் திராவிடனில் காணப்படுகின்றது.

அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை குடிஅரசில் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக்கப்படும்.

- குடிஅரசு - தலையங்கம் - 29.07.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXWUZxm

தமிழ் ஓவியா said...

பழியோரிடம் பாவமோரிடம்

காலஞ்சென்ற தமிழ் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியவர்களின் தேசிய நூல்களின் முதலிரண்டு பாகங் களை சென்னை அரசாங்கத்தால் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார் தான் என்று தமிழ்நாடு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.

சென்னை அரசாங்கத்தார் மேற்படி நூல்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று தமிழ்நாடு கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புத்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் மேற்படி நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது.

ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை. பறிமுதல் செய்யப் பட்ட மேற்படி ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்ட தற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை தமிழ்நாடு தாக்கு வதைப் பார்த்தால் அதைக் கோடாரிக்காம்பு என்று சொல்லு வதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா?

- குடிஅரசு - கட்டுரை - 30.09.1928

Read more: http://viduthalai.in/page1/75743.html#ixzz2uCXfuzlj

தமிழ் ஓவியா said...


விஸ்வ நேசன்

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந.நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து விஸ்வ நேசன் என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது.

அது சீக்கிரத்தில் வெளியா கலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் போலவும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர் களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல் சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டிய தான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம்.

அன்றியும் அதன் அதன் பத்திராதி பராக இருக்கப் போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியார்வர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்பட்டு, திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணை யிலிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுய மரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02.09.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXoISCK

தமிழ் ஓவியா said...

அந்தோ பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார்...

சிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10ஆம் நாள் புதன் கிழமையன்று அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். சுவாமிகள் தென் மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம் மடாதிபதியானதும் காலநிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன் பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார்.



கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, முதலியவைகளை பல இன்னல்களுக்கிடையிலும் உபதேசித்து வந்தார். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும், படிகட்டியும் சிதம்பர வாசிகளுக்கு உதவினவர்.

சிதம்பரம் நகர பரிபாலன சபையில் ஓர் ஆதி திராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும் நம் சுவாமிகளே, ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனு தாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 21.10.1928

Read more: http://viduthalai.in/page1/75744.html#ixzz2uCXvZrI1

தமிழ் ஓவியா said...


திரு.சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்


திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும்.

(நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகு மென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூடநம்பிக் கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம்.

சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்ட சபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக் கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டபோது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார்.

திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந் தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும்.

இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page1/75746.html#ixzz2uCY2bWI6

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைப் பிரச்சாரங்கள்


சுயமரியாதைப் பிரசாரங்கள் சுயமரியாதைப் பிரச்சாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவதாகவும் அதைக்கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளுவதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது.

அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் சுய மரியாதைப் பிரச்சார போதனைக் கூடம் என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, குடி அரசில் கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக் கிறோம். காலாவதியொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும்.

அவர்களில் சௌகர்ய மில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ளவர்கள் தெரிவித்துக் கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும் வர வேண் டிய விபரத்துக்கும் மற்ற நிபந்தனைகள் விபரத்துக்கும் தெரிவிக்கப்படும்.

- ஈ.வெ.ராமசாமி

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.07.1928

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYCOQRV

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானது மான ஜாதியொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம்.



நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப் படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/75747.html#ixzz2uCYJgffW

தமிழ் ஓவியா said...


புகழ்ந்து பேசுவதுதான்!

ஒரு மனிதனுடைய சொந்தத் துக்காக என்று ஒன்று இருக்கு மானால், அது அவன் இறந்த பின் அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவது தான்.

(விடுதலை, 31.3.1950

Read more: http://viduthalai.in/page-2/75864.html#ixzz2uIDOrbRp

தமிழ் ஓவியா said...


முத்துராமலிங்க தேவர் பேசுகிறார்

காவ்யா வெளியீடான, பசும்பொன் களஞ்சியம் என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் 12.6.1949-இல் தேவர் உரை (பக்கம் 61) என்ற பகுதி அவரு டைய பேச்சு, ஆச்சரியத்தைக் கொடுத்தது - அதில் அவர் குறிப்பிடுவது இதுதான்:

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுய நலமிகள் கோயில் கட்டுவதும், கும்பாபி ஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்கள் அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும் மொட்டையடித்துப் பண்டாரமாகி, பண் டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் திரவிய ஆசை,

பெண் ஆசை இவை போன்ற ஆசைகளில் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்துபோய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்த காலமிது! என்று குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் காலத்தாலழியாத கருத்துக்களை முத்துராமலிங்க தேவரும் பேசியிருப்பதைக் கண்டு அய்யாவின் கருத்து ஆன்மீகவாதிகளின் போக்கையும் எப்படி மாற்றி இருக்கிறது என்பதை எண்ணி எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர், குடந்தை

Read more: http://viduthalai.in/page-2/75867.html#ixzz2uIDXodcl

தமிழ் ஓவியா said...


நமது உடலின் வியக்கத்தக்க செயல்பாடுகள்


முழுமையான வாழ்நாள் என்பது 120 ஆண்டுகள் நலமுடன் வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ர் கண் கொடையில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராட்டின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

இறப்பிற்குப் பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

Read more: http://viduthalai.in/page-7/75895.html#ixzz2uIEDTM4H

தமிழ் ஓவியா said...

வேலை நேரத்தை மாற்றி பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

ஒரு மனிதனின் உணவுத் திட்டம், தூக்கம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி மாறும் போது உடலை கண்டிப்பாக சர்க்கரை நோய் தாக்கும். உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந் தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே உணர்ந்து அதனால் தடுக்க முடியும்.

அடிக்கடி பாதையை மாற்றிக் கொண்டே இருப்பது போல் உணவு, உறக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கான நேர முறையில் மாறும் போது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உடல் சந்திக்கிறது என்கிறார் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் எம்.ஜி.யுவராஜ்.

மேலும் இவர் கூறுகையில், அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவு அல்லது பகலில் வேலை செய்யும் போது சர்க்கரை நோய் தாக்கு வது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவுப் பணியில் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல் பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் ஹார் மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக அதிக உணவு எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

பகல் மற்றும் இரவுப் பணி என வேலை மாறுவதால் குறித்த நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய முடியாது. இரவு நேர வேலையால் உடற்பயிற்சி பாதிப்பதுடன் தூக்கம் கெட்டு மனக்குழப்பத்துக்கு ஆளாக நேரிடும். பகலில் வேலை பார்ப்பவர்கள் மாலை நேர வேலை பார்க்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படாது.

எனவே பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஒரே வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண் டும். தவிர்க்க முடியாமல் வேறு நேரத்தில் வேலை பார்க் கும் சூழல் அமைந்து விட்டால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. நடந்து கொண்டே வேலை பார்க்க வேண்டும்.

தேநீர், காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேலை நேரத்தில் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம், என்கிறார் யுவராஜ்.

Read more: http://viduthalai.in/page-7/75895.html#ixzz2uIEWMgPQ

தமிழ் ஓவியா said...


பா.வே.மாணிக்க நாயக்கர் 1871- 1931


பா.வே. மாணிக்கநாயக் கர் என்னும் பெயர் தமிழ் உலகம் அறிந்த ஒன்றாகும் அடிப்படையில் அவர் பொறியாளர் என்றாலும் தமிழ் ஆய்வில் இலக்கிய விமர்சனத்தில் வித்தகராக விளங்கியவர். சேலம் அருகே உள்ள பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்த வர். பா. என்னும் எழுத்து பாகல்பட்டியையும் வே. என்ற எழுத்து அவரது தந்தை யார் வேங் கடசாமி நாயக்கரையும் குறிக்கும்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று நான்கு சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தைப் பெற்றார். பொதுப் பணித் துறையில் கட்டுமான பொறியாள ராகப் பணியாற்றினார்.

மேட்டூர் அணை உள்ள வரைக்கும் இவர் பெயரும் நிலைத்திருக்கும்; காரணம் மேட்டூர் அணையை நிர் மாணிப்பதற்கான இடத் தைத் தேர்வு செய்து கொடுத் தவரே இவர் தானே! ஆனால் மேட்டூர் அணை கட்டு மானப் பணி அவரிடம் அரசு ஒப்படைக்காதது அவருக் குப் பெரிய ஏமாற்றம்தான்

அவர் பட்டாளம் (படை) வீரர் மரபு வழி வந்த குடும்பத்தில் வந்ததால் அந்த நாயக்கர் என்பது குடும்பப் பெயரோடு ஒட் டிக் கொண்டது. அவரது காலத்திலேயே திருமண முறையில் பல்வேறு ஜாதி கள் அவர்தம் குடும்பத் தோடு கரைந்து விட்டன. பொறியாளர் ஒருவ ருக்கு எப்படி இத்தகு தமிழ் ஆய்வு என்று திரு.வி.க. மறைமலை அடிகள் போன் றவர்களேகூட வியந்த துண்டு. 1919இல் திருச்சியில் தமிழ்ப் புலவர் மாநாடு கூட்டப் பெற்றதில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாகும். கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் எனும் தலைப்பில் மறை மலை அடிகள் முன்னிலை யில் பல்லாவரத்தில் அவர் ஆற்றிய ஆய்வுரை பிர சித்தி பெற்ற ஒன்றாகும்.

ஈரோட்டில் தந்தை பெரியாருக்குச் சொந்த மான வீட்டில் இவர் குடி யிருந்தார் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் - விவாதம் செய்து கொள்வார்கள்.

அவரைப்பற்றி தந்தை பெரியார் கூறும் தகவல் அனைவருக்கும் பயன் படக் கூடியதாகும். ஈரோட் டில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இரண்டு கொல்லர்கள் வேண்டும் என்று பெரியா ரிடம் கேட்டுக் கொண்டார், கெட்டிக்கார இருவர்களை அழைத்துவர தனது குமாஸ்தாவிடம் பெரியார் சொன்னார். கெட்டிக்காரக் கொல்லர்கள் வேண்டாம்; நான் சொல்கிற வேலை செய்பவராக இருந்தால் போதும்; கெட்டிக்காரனை அழைத்து வந்தால் அவன் நமக்கு யோசனை சொல் லத்தான் பார்ப்பான் என் றாராம். இதனை எடுத்துக் காட்டி என்னைப் பின்பற் றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூடக் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று தூத்துக் குடி மாநாட்டில் தந்தை பெரியார் கூறியுள் ளதை நினைவூட்டுகிறோம். (குடிஅரசு 29.5.1948).

- மயிலாடன்

குறிப்பு: இன்று பா.வே. மாணிக்க நாயக்கரின் பிறந்த நாள். (1871)

Read more: http://viduthalai.in/e-paper/75936.html#ixzz2uOI431IH

தமிழ் ஓவியா said...


அதிர்ச்சியூட்டும் கொலை!


சென்னை - கேளம்பாக்கத்தையடுத்த சிறுசேரியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றிய உமா மகேஸ்வரி படுகொலை செய்யப் பட்டுள்ள சேதி - நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக உள்ளது.

டில்லியிலே மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது டில்லிப் பெரு நகரமே பற்றி எரிந்தது. தலைநகர மக்கள் எல்லாம் திரண்டு எழுந்தனர். சட்டம், ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ந்து பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2013 டிசம்பர் வரை தமிழ்நாட்டில் பாலியல் கொடூரங்கள் 584 பாலியல் சீண்டல் 721 கடத்தல் 1379 இன்னும் பல; இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் வழக்குகள் 5861 இதில் பாலியல் வன்முறை 1751 என்று நீள்கிறது. ஆனால், நம் நாட்டு ஊடகங்கள் ஊமைகளாகி விட்டன; தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஓசையற்றுப் போயின. இந்த இலட்சணத்தில் உள்ள இந்த ஊடகங்கள் தான் உலகத்துக்கே உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!

மென் பொருள் நிறுவனத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளரின் உடல் அழுகிய நிலையில், கண்டுபிடிக்கப்படுவதற்கே ஒன்பது நாட்கள் தேவைப்பட்டுள்ளது காவல்துறைக்கு.

நம் சமுதாயப் பெண்கள் கல்வி பெறத் தலைப்பட்டதே அண்மைக் காலம்தான். அதுவும் பொறியியல் பட்டதாரி ஆகி, வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு நிறு வனத்தில் பணியாற்றுவது என்பதெல்லாம் நல்ல முன்னேற்றம் - வளர்ச்சிப் போக்கு என்று கருதும் நிலை யில் பெண்களை இப்படி வக்கிர புத்தியோடு கொடூரத் திற்கும் ஆளாக்குவதை எப்படி தான் பொறுத்துக் கொள்வது!

புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயம், தவறாகப் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள், நுகர்வோர் கலாச்சாரம், சினிமாக் கலாச்சாரம் உள்ளிட்ட ஊடகங்கள் பரப்பும் கீழ்த்தர வக்கிரங்கள்தான் இவற்றிற்கு மூலாதாரங்களா! மனித குலத்தின் மேன்மைக்கு ஊடகங்கள் பயன்படுமேயானால் இருகரம் குவித்து கனிவுடன் வரவேற்கச் செய்யலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக அல்லவா, அநாகரிகமாக அல்லவா தடம் புரண்டு குப்புற அல்லவா வீழ்ந்து கொண்டு இருக்கின்றன. மருத்துவக் கல்லூரி மாணவியும், மாணவனும் திருடு கிறார்களே! கல்வி முறை மாற்றப்பட வேண்டாமா? தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் வெட்டு, குத்து, கொலை என்பது அன்றாட வானிலை அறிக்கை போல நடந்து கொண்டு இருக்கிறது. ஊராட்சித் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்ற வர்கள் எல்லம்கூட பட்டப் பகலிலேயே படுகொலை செய்யப்படுகிறார்களே! பட்டப் பகலிலே பணப் பறிப்பு, நகைகள் பறிப்பு என்பது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறதே!
பெரும்பாலும் தனியே வாழும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கழுத்து அறுக்கப்படுகிறார்கள் என்னே கொடுமை! பெண்கள் பாதுகாப்பற்று வாழும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்றால், அதில் தமிழ்நாடு முதலிடத்தில் நின்று தலைமை தாங்கும் தகுதியைப் பெற்று விடும்போலும்!

அரசியல் நிலைப்பாடு காரணமாக அரசியல் தலைவர்கள் கூட பெரும்பாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏடுகள், அரசு விளம்பரங்கள் என்ற இலஞ்சக் குளியலில் மூழ்கிக் கிடக்கின்றன.

நமது முதல் அமைச்சர் ஏதோ புள்ளி விவரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆட்சியைவிட எனது ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதாக மனதறிந்து உண்மைக்கு மாறாகத் தகவல்களை வெளி யிடுகிறார். அப்படிப்பட்ட செய்திகளை மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து நமது ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

காவல்துறைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏராள மான வகையில் சலுகைகள் எல்லாம் வாரி வழங்கப்படு கின்றன. வாகனங்கள் தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன. காவல்துறைக்கு நேரிடையாகத் தேவைப்படுகின்ற பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமிக்காமல் காவல் துறைக்குத் துணை புரிவதற்காக பல்லாயிரக்கணக்கில் சிறப்புக் காவல் இளைஞர் படை உருவாக்கப்பட்டுள்ளது (10099) (கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்து தர வேண்டாமா?)

ஒரு பக்கத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள் - சற்றும் மனிதாபிமானமின்றி.

மக்கள் நல அரசு என்பது போய், கட்சி நல அரசு என்ற மகுடம் என்னும் பாட்டையில் அரசு நடைபோடுமே யானால், அதனை வெகு விரைவில் மக்கள் புரிந்து கொள் வார்கள். கடந்த கால அரசியலை சரி வரக் கணிப்பவர் களுக்கு இதுமிக நன்றாகவே தெரியும்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் இதெல்லாம் தெரியா மல் இருக்கலாம் - கண்களை மறைக்கலாம் - போகப் போகத்தான் புரியும்; காலம் கடந்து தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

Read more: http://viduthalai.in/page-2/75948.html#ixzz2uOIPXhcR

தமிழ் ஓவியா said...


இழிநிலை



உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75947.html#ixzz2uOIWuKqX

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு -3


- குடந்தை கருணா

சென்ற ஆண்டு 2013 ஜூன் மாதத் தில், கேதார்நாத்தில் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டு, சுற்றுலா சென்ற பல்லாயிரணக்கான மக்கள் இறக் கவும், பலர் மீள முடியாமல் தவிக்க வுமான நிலை ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், (தமிழ்நாடு உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுத்தன.

ஆனால் குஜராத் மாநில அரசு சார்பில், அதன் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக அங்கே சென்று ஏறத்தாழ 15000 குஜராத் மக்களை இரண்டொரு நாள்களில் விரைந்து காப் பாற்றினார் என செய்தி பரப்பினர், மோடி புகழ் பாட, பல கோடிக் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்கோ ஏஜென்சி (கிஜீநீஷீ கீஷீக்ஷீறீபீஷ்வீபீமீ) கஜகஸ்தான் சர்வாதிகாரிக்கும், அமெ ரிக்கப் புகையிலை அதிபர்களுக்கும் சேவை செய்யும் அமெரிக்க நிறுவன மான இந்த அப்கோ ஏஜென்சிதான், மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையும் மனதில் கொள்க. மற்ற மாநிலங்கள் பத்து நாட் களுக்கு மேல் போராடியும் வெள் ளத்தில் சிக்கித் தவித்த 40000 மக்களை காப்பாற்ற முடியாமல் திணறின, கேதார்நாத்பகுதி முழுவதும் வெள் ளத்தின் காரணமாக சாலைகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மோடியால் 15000 மக்களை எப்படி காப்பாற்ற முடிந்தது? மோடி இந்த சூப்பர் மேன் செயலுக்கு 80 இன்னோவா கார்களை பணியில் அமர்த்தி இரண்டு நாள் களில் 15000 பேரை காப்பாற்றினார் என கதை அளந்தது அப்கோ நிறுவனம்.

கேதார்நாத் பகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள டேகராடூன் என்ற ஊருக்கு சென்றால் தான் அங்கிருந்து ரயில் அல்லது விமானம் மூலம் புதுடில்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்ல முடியும். கேதார் நாத்திற்கும் டேகராடூனுக்கும் உள்ள தூரம் 221 கி.மீ. மலைப் பகுதி என்பதாலும், வெள்ளத்தால் சாலை கள் பாதிக்கப்பட்டதாலூம், 40 கி.மீ. வேகத்தில் செல்வதே கடினம். ஒரு முறை செல்ல 6 மணி நேரம் ஆகும். திரும்ப வர 6 மணி நேரம் ஆகும். 24 மணி நேரத்தில், காரை நிறுத்தாமல் சென்றால், இரு முறை தான் செல்ல முடியும். மோடி ஏற்பாடு செய்திருந்த 80 இன்னோவா கார்களும் ஒரு பயணத் திற்கு 720 மக்களை ஏற்றிச் செல்ல முடியும். 15000 மக்களை அழைத்து செல்ல 21 முறை செல்ல வேண்டும். ஆனால், 15000 மக்களை இரண்டு நாட்களுக்குள்ளாக 80 இன்னோவா கார்களில் ஏற்றிச் சென்று மோடி காப்பாற்றினார் என மோடி ஏற்பாடு செய்திருந்த அப்கோ நிறுவனம் மூலம் செய்தி பரப்புகிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மோடி புளுகு. அப்பட்டமான மோசடிப் புளுகு.

Read more: http://viduthalai.in/page-2/75955.html#ixzz2uOIef3IZ

தமிழ் ஓவியா said...


ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேரை விடுவிக்க தடை கோரி மத்திய அரசு வழக்காம்!



புதுடில்லி, பிப்.25-ராஜீவ் கொலை வழக்கில், 3 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை பெற்ற மத்திய அரசு, மேலும் 4 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மனு தாக்கல் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, இந்த சீராய்வு மனுவில் குற்றவாளிகள் 7 பேரின் பெயர் களும் இடம்பெற்றுள்ளன. முக்கியத் துவம் கருதி இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக் கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் தங்களது கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டு கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மூன்று பேரின் தூக்கு தண் டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி யானதும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மேலும் 4 பேரையும் சேர்த்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த 19ஆம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் சட்டப்பேரவையில் அறி வித்தார். கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தடை விதித்து கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப் பித்தது. கைதிகளை விடுதலை செய்வதில் சட்ட நடைமுறைகளை தமிழக அரசு கடைப்பிடிக்க வில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. தமிழக அரசு சார்பில் அப்போது ஆஜரான மூத்த வழக் குரைஞர் ராகேஷ் திவேதி, மத்திய அரசின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு இறுதி யான முடிவை எடுக்கவில்லை. எனவே தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நான்கு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டபோது, இதற்கு புதிய மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந் தது. அதன்படி, புதிய சீராய்வு மனுவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பியாஸ், ஜெயகுமார், ரவிச் சந்திரன் ஆகிய நான்கு பேரை விடுதலை செய்ய தடை கோருகிறது மத்திய அரசு.

Read more: http://viduthalai.in/page-2/75950.html#ixzz2uOImqvs5

தமிழ் ஓவியா said...


தொலைக்காட்சி அவலம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்


மதுரை, பிப்.25-சமூக சூழ் நிலைக்கு ஏற்ப வாழாமல் தொலைக்காட்சியைப் பார்த்து பாசத்தை வளர்க் கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப் பட்டுள்ளனர் என்று குன்றக் குடி பொன்னம்பல அடி களார் பேசினார்.

மதுரையில் உலக திருக் குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடை பெற்று வருகிறது. இரண் டாம் நாள் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் படத்தைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சங்க இலக்கியங்கள் எத்தனையோ இருந்தும் பல ஆண்டுகளாக திருக்குற ளைத்தான் மழலையர்கள் முதல் முதியோர்வரை அசைபோட்டுக்கொண்டிருக் கிறார்கள். இது திருக்குற ளுக்கு கிடைத்திருக்கும் தனித்தன்மை.

திருக்குறளைப் படித்து அதன்படி நடந்தால் வாழ்க் கையில் முன்னேறலாம். வெறும் பட்டங்கள் மட் டும் பெற்றால் வாழ்க்கை யில் உயர்வடைய முடியாது. அன்றாடம் கிடைக்கும் பட்டறிவுதான் ஒரு மனி தனை உயர்த்தும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொன்னார்கள். உடலில் இருந்து மூச்சுக்காற்றை விட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் நல்ல செயல் களைச் செய்து பெயர் வாங் கிக்கொள் என்பதுதான் அர்த் தம். ஆனால் இப்போது அதனை மாற்றிவிட்டார்கள். இருக்கும்போதே சம்பாதித் துக்கொள் என்று அந்த தொனி மாறிவிட்டது.

மருத்துவர், விஞ்ஞானி, வழக்குரைஞர்கள், பொறி யாளர்களை கல்வி உரு வாக்குகிறது. ஆனால் நல்ல மனிதர்களைத்தான் கல்வி கற்றுத்தர மறந்து விட்டதோ என்று எண்ணத் தோன்று கிறது. ஏனென்றால் கல்விக் கூடத்தில் கல்லூரி முதல் வரே கொலை செய்யப்படு கிறார். கொலை செய்பவர் மாணவனாக இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சரியான பாதையில் போகிறோமா என்ற சந் தேகம் ஏற்படுகிறது.

தொலைக்காட்சியைப் பார்த்துதான் குடும்பப் பாசத்தை வளர்க்கும் நிலை வந்து விட்டது.

இதை மாற்றி சமூக சூழ்நிலைக்கு ஏற்ப வாழ இளைய தலை முறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். திருக்குறள் காட் டும்பாதையில் பயணித்தால் முன்னேற்றம் ஏற்படும். - இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழண் ணல் உள்பட பலர் பேசினர். இதில் உலக திருக்குறள் பேரவையின் முதன்மை பொதுச்செயலாளர் மணி மொழியன் தலைமை தாங் கினார். துணை செயலாளர் சொ.கு.முருகேசன், செயலா ளர் மலையப்பன், பொரு ளாளர் சீனு சின்னப்பா, செந்தமிழ்க்கல்லூரி நிர்வாகி கள் குருசாமி, அழகுமலை, அசோக்ராஜ், மார்ஷல்முரு கன், முன்னாள் துணை ஆட் சியர் கா.கருப்பையா உள் பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/75959.html#ixzz2uOJSG7fY