Search This Blog

19.2.14

ஹிந்துத்துவாவை ஆராயப் போகிறார்களாம்!

இந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத் தின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா அளித்த தீர்ப்பு குறித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க உள்ளதாம்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, மகா ராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிரா வில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார். இது மத உணர்வுகளைத் தூண்டும் செயல். அதனால், முரளி மனோகர் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி என்.பி.படேல் என்பவர், உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா அல்லது இந்துமதம் என்பது ஒன்றுதான். அது மதத்தின் பெயரை குறிப்பது அல்ல. இந்திய துணை கண்டத் தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிவிக்கும் சொல் என்று கூறி, ஜோஷிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதேபோல், மகாராஷ்டிரா பேரவைக்கு 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ. சார்பில் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் இந்துத்துவா பற்றி அபிராம்சிங் பேசினார் என்று கூறி அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அபிராம்சிங் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அபி ராம்சிங் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இது அரசியல் சட்டம் சம்பந்தப் பட்ட விவகாரம் என்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த மனுவை அனுப்பியது. இந்த மனு மீதான விசா ரணை நீதிபதிகள் ஆர்.எம் லோதா, ஏ.கே. பட்நாயக், முகோபாத் யாயா, தீபக் மிஸ்ரா, கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., தலைவர் சுந்தர்லால் பட்வா மீது நாராயண் சிங் என்பவர் தொடர்ந்து வழக்கை விசாரித்த 5 நீதிபதி கள் கொண்ட அமர்வு, மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத் துள்ளது.
இந்நிலையில், அபிராம்சிங் மேல் முறையீடு மனு மீதான விசாரணை கடந்த 30 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நடந்தது. அப்போது, சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட இதேபோன்ற வழக்கு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப் பட்டுள்ளது என்று நீதிபதிகளுக்கு தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும் அந்த வழக்குடன் சேர்த்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு பரிந்துரைத் தது. அத்துடன், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்களை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்கவும கேட்டு கொண்டது.
இதையடுத்து, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அனுப்புவார் என்றும், அதன்பின், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதி பதி அமைப்பார் என்றும் உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரி வித்தன.
நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறியுள்ள கருத்தைப் பகுத்தாய்வு செய்ய உச்சநீதி மன்றம் கோதாவில் குதித்தது இருக்கட்டும்; அந்த ஜே.எஸ். வர்மா அவர்களே நான் கூறிய கருத்தினை இந்துத்துவாவாதிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். (தி இந்து 6.2.2003) கூறி விட்டாரே -
அதையும் முக்கியமாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் - ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு.
1990ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை மய்யப்படுத்தி இன்றைக்கு ஆராய்வது இருக்கட்டும்; அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பம்பாய் நீதிமன்றத் தில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டதே. அதை எப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.

அந்தத் தீர்ப்பை வரவேற்று விடுதலை தலையங்கம் தீட்டியதுண்டே! (16.4.1994) அது இதோ:
பம்பாய் உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது. நாம், மற்றொரு நல்ல தீர்ப்பு என்று குறிப்பிடுவ தற்குக் காரணம் - ஏற்கெனவே. இது போன்ற வரவேற்கத்தக்க தீர்ப்புகளை பம்பாய் உயர்நீதிமன்றம் தந்திருப்பதால் தான். தானே நாடாளுமன்றத் தொகுதியி லிருந்து - பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்கப்சே என்ப வரின் தேர்தல் செல்லத்தக்கது அல்ல என்பது தான் அந்தத் தீர்ப்பு!
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பன்சிங் - இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். விசுவ இந்து பரிஷத்தைச் சார்ந்த சத்விரித்தாம்பரா என்பவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பிரமோத் மகாஜன் என்பவரும் - பா.ஜ.க., வேட்பாளருக்கு ஆதரவாக - இந்து மத அடிப்படையில் வாக்கு கேட்டார்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் வேட் பாளர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்! 1991ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் - சத்விரிதாம்பரா, இந்து மதத்தின் அடிப்படையில் ஓட்டுக்களைக் கேட்டது உண்மை என்றும், அந்த மேடை யில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்கப்சேவும் இருந்தார் என்றும் உறுதிப்படுத்திய நீதிபதி ஏ.சி. அகர்வால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 123 (3)க்கு இது எதிரானது என்று கூறி - தேர்தலை, செல்லாது என்று அறிவித்திருந்திருக்கிறார்.
பா.ஜ.க.வைச் சார்ந்த மகாஜன் என்ப வரும் - வேட்பாளர் கப்சேயும், இந்துக் களுக்கு முஸ்லீம்கள் பகைவர்கள் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது; இந்துக்களும், முஸ்லீம்களும் நண்பர்களாக வாழும் நிலையில் - இரு சமூகத்தினருக்கும் இடையே பகையை உருவாக்குவதாகும். சர்விரிதாம்பராவும் - மகாஜனும் கூட்டு சேர்ந்து கொண்டு - மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதற்கு வேட்பாளரும் துணை போயிருக் கிறார் என்று நீதிபதி அகர்வால் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
முரண்பாட்டின் மொத்த உருவம்
ஹிந்து மதம் ஹிந்து மதம் என்று கதைக்கிறார்களே - அதற்கென்று ஒரு வரையறை உண்டா? வகுக்கப்பட்ட கொள்கை உண்டா? இண்டர்நேஷனல் என்சைக்ளோபீடியா ஆப் சோஷியல் சயின்ஸ் (தொகுதி 6) பக்கம் 358) என்ற நூல் இந்துமதத்தின் தன்மைபற்றி விளக்கம் அளிக்கிறது.
இஸ்லாம் கிருத்துவம்போல் ஹிந்து மதக்கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்குச் சரித்திர ரீதியில் ஒரு அமைப்பாளரும் கிடையாது. ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. ஹிந்துவாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இம்மதத்தில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன. எல்லா ஹிந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ, அமைப்பு களோ ஒன்றும் கிடையாது. ஹிந்து மதத் திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக் கையும் - ஏதாவது ஒரு ஹிந்துக் கூட்டத் தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
இந்துத்துவா பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சங்கப் பலகை நடத்துவது ஒரு புறம் இருக்கட்டும்; 1952ஆம் ஆண்டி லேயே பிரபல நீதிபதியாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட ராஜமன்னார் ஆய்ந்து கூறியுள்ளாரே, அதனை முக்கிய மாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்து மதம்பற்றி நான் பேசுகையில், அந்தச் சொல்லினுடைய தெளிவில்லாத கட்டுப்பாடற்ற - பொருள் விளக்கம் பற்றிய உணர்வோடுதான் இருக்கிறேன்.
(“When I Speak of Hindu Religion I am Actually Conscious of the vague Connotation of that Word” Michael vs Venkateswaran Case - MLJ 239/1952-1)
தம்முடைய நிலைக்குப் பக்க துணை யாக நீதிபதி ராஜமன்னார் அவர்கள் இந்தியப் பண்பாட்டு மரபு எனும் நூலிலி ருந்து கீழ்வரும் சான்றினைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதம் என்ற சொல்லை இப்போது நாம் புரிந்து கொள்ளும் பொருளின்படி இந்து வியல் என்பது ஒருமதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று அல்லது இந்துக்கள் என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒரு போதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செத்துப் போன மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதியும்கூட இதனை ஒத்துக் கொண்டுள் ளார். அந்நிய நாட்டுக்காரர்கள் வைத்த பெயர் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்
.
                                        (தெய்வத்தின் குரல் முதல் பாகம் பக்கம் - 125)
கடவுளை ஏற்றுக் கொண்டவனும் இந்து மதத்தில் இருக்கலாம்; ஏற்காதவனும் இந்து மதத்தில் இருக்கலாம்; முரண்பாடுகளின் ஒட்டு மொத்த தொகுப்பு என்று ஒரு வரியில் சொல்லி விடலாம் இந்து மதத்தை.
நாத்திகத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு மதத்தின் தலைவரான சங்கராச்சாரி யார் கூறுகிறார் நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே! - என்று 

                                                      (தெய்வத்தின் குரல் - 3ஆம் பாகம் - பக்கம் 734)
இதுதான் இந்து மதத்தின் மனிதாபி மானம் - இன்னொரு பக்கத்தில் முரண் பாட்டின் மொத்தக் குத்தகை;ஹிந்துத்துவா என்ற சொல்லை அறிமுகப்படுத்திய மே(ல்) தாவி வி.டி. சாவர்க்கார். (காந்தி கொலைக்கு மூலவராக இருந்த ஆசாமி)பொதுக் கலாச்சாரம், பொது வரலாறு, பொது மொழி, பொது நாடு, பொது மதம் இவை அய்ந்தும் சேர்ந்துதான் ஹிந்துத் துவா என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அளவுகோல்படி பார்த்தால் இங்கே யார் இந்து? எத்தனைப்பேர் ஹிந்து என்று தேர்வார்கள்?
இவர்கள் சொல்லும் பொது மொழி சமஸ்கிருதம் - அதுவோ செத்து ஒழிந்து விட்டது - அதற்குப் பிறகு இங்கு ஹிந்துத் துவா  என்ன வாழ்கிறது?
நடைமுறையில் சொல்ல வேண்டுமா னால் சிறுபான்மை மக்களான முஸ்லீம் களையும், கிறித்தவர்களையும் அந்நியப் படுத்துவதற்கு இந்தப் பதம் பயன்படுத்தப் படுகிறது.
அப்படிப் பிரித்துக் காட்டப்பட்ட பிறகும், இவர்கள் யார் யாரையெல்லாம் ஹிந்துக்கள் என்று சொல்லுகிறார்களோ - அவர்களிடையே பிறப்பின் அடிப் படையில் ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் - பிளவுகள் - உயர்வு - தாழ்வுகள்!

பிறவிப் பேதம் பேசும் அமைப்பை நிர்மூலப்படுத்த தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்க மும் தோள் தட்டிக் கிளம்பி ஹிந்துத் துவாவை நார் நாராகக் கிழித்து விட்டது. இந்து என்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே! என்ற முழக்கங்கள் தமிழ்நாட்டின் வீதிகளில் விண்ணை முட்டுகின்றன.
அப்படி என்றால் இங்கு எங்கே இருக்கிறது ஹிந்துத்துவா? இதற்குப் போய் 9 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி முடிவு செய்வது வீண் வேலை;  இலட்சக்கணக் கில் வழக்குகள் நிலுவையில் குவிந்து கிடக்கின்றன - அவற்றில் கவனம் செலுத்துவதுதான் இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியம் - வீணாக காலத்தை விரயம் செய்ய வேண்டாமே!!

            ----------------மின்சாரம் அவர்கள் 8-2-2014 “விடுதலை “ஞாயிறும்லரில் எழுதிய கட்டுரை

27 comments:

தமிழ் ஓவியா said...


காளஹஸ்தி சிவன் கோயிலா காமக் களியாட்டக் கூடாரமா?


சிறீகாளஹஸ்தி, பிப்.18- சிறீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் சென் னையைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயன்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், சித் தூர் மாவட்டத்தில் உள்ள சிறீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஆந்திர மாநி லம் மட்டுமின்றி தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் தின மும் சர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்து வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த இணையர் தங்களது 20 வயது மகளுடன் கடந்த சனிக்கிழமை (15-ஆம் தேதி) சிறீகாளஹஸ்தி சிவன் கோவி லுக்கு அவர்கள் சிறீகாள ஹஸ்தியில் உள்ள ஒரு தனி யார் விடுதியில் தங்கினர். 15-ஆம் தேதி மாலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப் போது பூஜை பொருட்கள் விற்கும் இளைஞர் ஒருவர், அவர்களிடம் என்ன பூஜை செய்ய வந்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் தனது மகளின் திருமண தடை நீங்க, பரிகார பூஜை செய்ய வந்துள்ளோம் என் றனர். உடனே அந்த இளை ஞர், குறைந்த கட்டணத் தில் பரிகார பூஜை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறியத ற்கு அவர்களும் சம்மதித் தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பூஜை செய்தால் மிகவும் நல்லது என அந்த இளைஞர் கூறினார். அதன் படி நள்ளிரவு அவர்களை கோவில் வளாகத்தில் உள்ள வீரபத்திரசாமி கோவில் சன்னதி அருகே அழைத்துச் சென்றார். அங்கு, ஏற்கெ னவே 2 வாலிபர்கள் இருந் தனர். அந்த கோவில் அருகே அந்த இளம்பெண்ணை அமர வைத்தனர். தோஷம் உள்ளவர்கள் மட்டும் தான் இங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் என கூறி பெற்றோரை அனுப்பி விட்டனர்.

இளைஞர்களில் ஒருவர் திடீரென இளம் பெண் ணின் வாயை பொத்தினார். பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக கூறப்படு கிறது. அந்த பெண், கூச்சல் போட்டார்.

மகளின் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சிறீகாளஹஸ்தி நகர காவல் நிலையத்தில் முறையீடு செய்தனர். காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். சிறீ காளஹஸ்தியை அடுத்த சூரமாலையை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 25), சிறீகாளஹஸ்தியை சேர்ந்த பாட்ஷா, காந்தி என்ற 3 பேரை கைது செய்தனர். மக் களிடையே மூடநம்பிக்கை உள்ளவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.

Read more: http://viduthalai.in/e-paper/75490.html#ixzz2tj2VASz2

தமிழ் ஓவியா said...


சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!


தந்தை பெரியாரின் உற்ற தோழராகவும், கொள்கைப் பயணத்தில் சக பயணாளி களில் ஒருவருமான சிந் தனைச் சிற்பி. ம. சிங்கார வேலர் அவர்கள், சுயமரி யாதை சமதர்மத்தைச் செதுக் கிய அரும்பெரும் சிந்தனை யாளர் ஆவார்!

பச்சை அட்டைக் குடி அரசு ஏட்டில் தகத்தகாய பொன்னாக ஒளி வீசும் - கைவல்யம் அவர்களின் சிந்தனைப் பொறியைத் தீட்டும் கட்டுரை ஒருபுறம்.

சிங்காரவேலரின் பொதுவுடைமை, சமதர்ம, மூடநம்பிக்கைகளை எதிர்த்த, அறிவியல் ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சிடும், காலத்தை வென்ற கருத் துக்கள் மறுபுறம் என்பது சுயமரியாதை இயக்க வரலாறு, பிரபல கம்யூனிஸ்ட் பேராசிரியரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான பேராசிரியர் ஹிரேன் முக்கர்ஜி அவர்கள் எழுதிய ஒரு நூலில், இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்திய வரலாற்றில் பேசப்படும் இருபெரும் இந்தியத் தலைவர்கள் தந்தை பெரியாரும், ம. சிங்காரவேலரும் தான் என்று சரியாகக் கணித்து எழுதியுள்ளார்கள். அவரது 155ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிந்தனைகளை செயலாக்கிட, ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஜாதி, மத, கடவுள் மூடநம்பிக் கைகளை முறியடித்து, புதிய உலகம் காண்போமாக!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/75493.html#ixzz2tj2d5kEn

தமிழ் ஓவியா said...



ஹாட்ரிக்

சென்னை - சேத்துப்பட் டில் உள்ள விநாயகர் கோயி லில் உண்டியல் மூன்றாவது முறையாக உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப் பட்டு உண்டியல் முட் புதரில் வீசி எறியப்பட்டது.

நம்பித் தொலையுங்கள்!

நடக்கவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை இந்துமுன்னணி முடிவு செய் யவில்லையாம் - சொல்லு கிறார் அதன் மாநில அமைப் பாளர் ராம. கோபாலன்.

யாத்திரை

யாத்திரை என்று சொன் னாலே அத்வானியின் ர(த்)த யாத்திரைதான் நினைவிற்கு வந்து தொலைகிறது (சோம நாதபுரத்திலிருந்து அந்த யாத்திரையைத் தொடங்கிய போதே அதன் உள்நோக்கம் புரிந்தது. யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் மதக் கலவரங்கள்! இப்பொழுது தமிழ்நாட்டிலே காந்தியாரை படுகொலை செய்த கூட்டத் தின் வாரிசுகள் ஒரு யாத் திரையைத் தொடங்கி உள் ளனர். வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்று அதற்குப் பெயராம்.

இதன் பொருள் இல்லம் தோறும் மதவெறியூட்டல் - உள்ளம்தோறும் மனுதர்மச் சிந்தனைக்குப் புத்துயிர் ஊட்டல்! தந்தை பெரியார் மண்ணில் இவுர்களின் சித்து விளையாட்டுகள் பலிக்கப் போவதில்லை பலிக்கவும் விடமாட்டோம்!

தப்புத்தாளம்

சென்னை அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி செல்லும் வழித்தடம் எண் 25ஜி பேருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது தனி யார்க் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி, தாளம் போட்டு, பாட்டுப்பாடி ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்கள் நடத்துநர் பாண்டியன் அவ் வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது நடத்துநரை மாண வர்கள் தாக்கியுள்ளனர்.

மாணவர்களே, நீங்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்து நம்மைக் காப் பாற்றுவார்கள் என்று ஒவ் வொரு நொடியும் கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்.

நம் இனத்து மக்கள் எல்லாம் கல்வி உரிமை பெற்று, உத்தியோகப் படிக்ககட்டுகளில் மதிப்புப் பெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டாரே தந்தை பெரியார். பாடுபட்டுக் கொண்டிருக் கிறதே திராவிடர் கழகம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு களைப் பொய்த்துப் போகச் செய்ய வேண்டாமே! நீங்கள் போடுவது தாளமா? அல்ல அல்ல - தப்புத் தாளம்!

கா(ம)ள கஸ்தி!

காளகஸ்தி கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பக்தையை பக்தர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனராம். கோயில்களை விபச்சாரக்கூடம் என்று காந் தியார் சொன்னது தவறாகி விடக் கூடாதல்லவா! காஞ் சிபுரம் தேவநாதன்கள் நாட் டில் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார் கள். என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/e-paper/75492.html#ixzz2tj2v6Ocw

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் முழக்கம்!

திருச்சி - திமுக மாநில மாநாடு பல அலைகளைத் தட்டி எழுப்பி விட்டது. அஸ்தமித்தது திமுக என்று தங்கள் ஆசைகளைக் குதிரையாக்கிச் சவாரி செய்த ஏடு கூட திருச்சி - திணறியது என்று தலைப்பிட்டுச் செய்தியை வெளியிடும் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.

மாநாடு முடிந்த நிலையில்கூட ஒரு பார்ப்பனர் ஏடு - திமுக மாநாடு சாதித்தது என்ன? என்று அதனை விவாதப் பொருளாக ஆக்கி வியாபாரம் செய்ய முன் வந்துள்ளது.

ஓர் உண்மையை எதிரிகள் கூட மறுக்க முடியாது. ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் திமுகவையும், முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களையும் தவிர்க்கவே முடியாது என்பது அப்பட்டமான உண்மையாகும்.

தமிழ்நாட்டில் அரசியல் என்பது கலைஞர் அவர்களை யும், தி.மு.க.வையும் மய்யப் புள்ளியாக வைத்துத்தான் சுழன்று கொண்டு இருக்கிறது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட இமாலய உண்மையாகும். திமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு நாள் இடை வெளியில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையிலும், உச்சநீதிமன்றத்திலும்கூட இவ்வளவுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.

திமுக என்பது மாபெரும் மக்கள் கட்சி என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது. அதன்மீது வீசப்படும் புழுதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை உணர்ந்து, இனிமேலாவது ஊடக வன்கணாளர்கள் தங்கள் நச்சு வாலை சுருட்டிக் கொண்டு உண்மையான பத்திரிகா தர்மத்தைக் கடைப்பிடித்தால் கொஞ்ச நஞ்ச மரியாதையாவது மிஞ்சக் கூடும்.

திருச்சி திமுக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய அரை மணி நேர உரை மாநாட்டில் பேசப்பட்ட முக்கிய உரையாகும்.

திமுக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; அதற்கென்று சமுதாயக் கொள்கைகள் நிச்சயம் உண்டு என்பதை எடுத்துச் சொன்ன திராவிடர் கழகத் தலைவர், திமுகவுக்கு எதிர்ப்பு என்பது குறிப்பாக ஊடகங்களின் எதிர்ப்பு என்பது திமுக கொண்டிருக்கும் ஆணி வேர்க் கொள்கையான சமுதாயக் கொள்கைகள்மீது கொண்ட அடிப்படை கோபம்தான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது அவரது உரை!

தமிழ் ஓவியா said...

திமுக தோற்றது என்றால் அடுத்துப் பார்ப்பன ஆதிக்கம்தானே ஜெயித்ததாக முடியும்?... அந்த நிலை ஏற்பட்டால் தமிழன் கதி என்ன ஆகும்? பழி வாங்கும் படலம்தானே - வேறு யார் பதவிக்கு வந்தா லும் ஆட்சி கைப்பற்றப்பட்டாலும் நடைபெறும்? என்று தந்தை பெரியார் விடுதலையில் (15.3.1969) இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்தினை மிகப் பொருத்தமாக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துவைத்தார்.

தந்தை பெரியார் அவர்களின் அந்தத் தொலை நோக்கை இன்றைக்குக் கண்ணெதிரே நாடு கண்டு கொண்டுதானே இருக்கிறது?

திமுக தோற்றால் பார்ப்பன ஆதிக்கம் தானேவரும்! இந்த எழுத்துக்களை ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும், உண்மையான திராவிட இயக்கவாதிகளின் வீட்டிலும் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டாமா?

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் தூக்கி எறியப்படவில்லையா? பார்ப்பனீயத் தன்மையில் புராணத்தில் எழுதி வைக்கப்பட்ட நாரதன் கிருஷ்ணன் என்னும் இரு ஆண் கடவுள்களுக்குப் பிறந்தவைதான் தமிழ் ஆண்டுகள் என்று கூறி அந்த ஆபாச முறைதான் சரி என்று பார்ப்பன ஆட்சியில் சட்டம் இயற்றப்படவில்லையா?

இந்தியாவிலே நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்று ஒரு துறை உரு வாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி கைப்பற்றப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் தீட்சதர்ப் பார்ப்பனர் கொள்ளைக்கு வழி செய்யப்பட்டது. அஇ.அதிமுக ஆட்சியில்தானே?

பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை கலைஞர் தலைமையிலானஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் இந்த ஆட்சியில் மேலும் வளர்ச்சிக்கு வழி வகுக்காமல் முடக்கப்பட்டு விடவில்லையா?

தி.மு.க. ஆட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க என்றென்றும் நினைத்துப் போற்றத்தக்க சாதனைகளுள் ஒன்று - தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி கிடைத்த தாகும். அதன் நிலை இன்று என்ன? அந்தத் துறை அவலப் பட்டு விட்டதே - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் உருவாக்கப்பட்ட நூலகம் உருக்குலையும்படி ஆக்கப் படவில்லையா?

அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் இன்றைய நிலை என்ன? சமூக சீர்திருத்தத் துறை எங்கே? எங்கே? இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

தந்தைபெரியார் கணித்தபடியே திமுக ஆட்சியைப் பறி கொடுத்ததால் தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரான, கேடான ஆட்சி உருவானதால் நாளும் தமிழ்நாடு உரிமை இழப்புக்கு ஆளாகி வருகிறதா இல்லையா?

தந்தை பெரியாரின் தொலைநோக்கை, கணிப்பைச் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தி.மு.க. மாநில மாநாட்டில் முழங் கியவை மாநாட்டில் கூடியவர்களின் காதுகளில் மட்டு மல்ல; ஒட்டு மொத்த தமிழர்களின் உள்ளத்திலும் எதிரொ லித்துக் கொண்டே இருக்கும்; இருக்கவும் வேண்டும் - வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து


சென்னை, பிப்.18- டெசோ கூட்டங்களின் வாயி லாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறு கடிதங் களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன் னேற்றக் கழகத்தின் பத் தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் திற்கு ஒரு வெற்றி யாக - உச்ச நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகி யோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள் களின் அடிப்படையிலும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலிய பெருமாள், நளினி ஆகி யோரைப் போல இன் றைக்குத் தூக்குத் தண்டனை யிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முரு கன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறப்பான தீர்ப் பினைத் தொடர்ந்து, உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கெனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடி யாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அவர்கள் விடு தலை அடைவார்களேயா னால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்ப தையும் தெரிவித்துக் கொள் கிறேன்

Read more: http://viduthalai.in/page-3/75513.html#ixzz2tj3ZBPbr

தமிழ் ஓவியா said...


கலைஞர் சட்டசபைக்கு வந்தார்

சென்னை, பிப்.18- தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்கள் இன்று வருகை தந்து கையெழுத்திட்டு சென்றார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று (18.2.2014) காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை பதிவேட்டில் கையொப்பமிட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை வாசலில் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்தனர். அவையில் துரைமுருகன் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் கேட்க திமுக உறுப்பினர்கள் முயற்சித்தனர். திமுகவினர் பேச அனுமதி மறுக்கபட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று ஒலி முழக்கமிட்டனர். ஒலி முழக்கமிட்ட தி.மு.க உறுப் பினர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளே கூடாது என்ற முறையில் செயல்படுவது ஜனநாயக விரோத செயல். எங்கள் கருத்துக்களை சொல்ல அனு மதிக்காததால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் தி.மு.க. உறுப் பினர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். - இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம்- ம.ம.க வெளிநடப்பு

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் இருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி யதை கண்டித்து புதிய தமிழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

கலைஞர் பேட்டி

சட்டமன்ற வளாகத்தில் வெளியேயும்- அண்ணா அறிவாலயத்திலும் செய்தியாளர்களுக்கு கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறதே?

கலைஞர் :- அது தவறான வாதம். அதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

செய்தியாளர் :- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பேரவையிலிருந்து அய்ந்து நாட்கள் இடை நீக்கம் செய்திருப்பது பற்றி?

கலைஞர்:- இந்த அரசின் அவை நடவடிக்கை களில் அது ஒன்று. இந்த ஆட்சியில் இப்படித் தான் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலே ஒன்று தான் இது. செய்தியாளர் :-பொதுவாக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகள் பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரப் படுகிறதா?

கலைஞர்:- நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?

செய்தியாளர் :- இன்னொரு கேள்வி?

கலைஞர் :- கேள்வி நேரம் இங்கே இல்லை. அது அவைக்கு உள்ளே தான் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. (கலைஞரைச் செய்தியாளர்கள் அவைக்கு வெளியே சந்தித்த போது, பேரவைக்குள் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது) செய்தியாளர் :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உச்சநீதி மன்றம் விடுவித்திருப்பது பற்றி?

கலைஞர் :- இது பற்றி என்னுடைய அறிக்கையை நான் ஏற்கெனவே வெளி யிட்டிருக்கிறேனே? செய்தியாளர் :- இவர்கள் மூவரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

கலைஞர் :- சாத்தியக் கூறுகள்என்ன, வழி வகைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். கழக ஆட்சியின் போதும் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-3/75523.html#ixzz2tj3nhlPE

தமிழ் ஓவியா said...


சட்டமன்றத்தில் இன்று:


சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்
முதலமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு


சென்னை, பிப்.19- ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளி களாக ஆக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டமன்றத் தில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று (19.2.2014) காலை 10 மணி யளவில் அவை கூடியதும் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்று முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்பு தீர் மான அடிப்படையில் முத லமைச்சர் விதி 110- இன் கீழ் ஒரு அறிவிப்பை வாசிப் பார் என பேரவைத் தலை வர் ப. தனபால் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறி விப்பை வாசித்தார்:

இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-இன்படி தமிழ் நாடு அமைச்சர வையின் முடிவு குறித்து மத்திய அர சுடன் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தி னைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ் நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாள் களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச் சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் விடுவிக்கப்படுவார் கள் என்பதை இந்த மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/75554.html#ixzz2tp0Y8xpJ

தமிழ் ஓவியா said...


கல்கிகளின் ஆசை

கல்கிகளின் ஆசை

கேள்வி: மோடி அலை வெறும் மாயை என்கிறாரே திருமாவளவன்?

பதில்: வண்டலூர் மாநாட் டுக்குத் திரண்டவர்களின் எண்ணிக்கையை தினமலர் பத்து ல,ட்சம் என்றது; தின மணி ஒரு லட்சம் என்றது; எண்ணிக்கை எதுவானலும் கூட்டம் பிரியாணி பொட் டலத்துக்கும், குவார்ட்டர் பாட்டிலுக்கும், ரூபாய்க்கும் திரண்ட கூட்டமல்ல; மோடி மீது நம்பிக்கை கொண் டோரின் கூட்டம். யதார்த்தம் எடுத்துரைக்கும் உண் மையைக் கண்டறிந்தும் மாயாஜாலமாகப் பேசுவது எதிர் அணி அரசியல்வாதிக்கு அவசியமாகி விடுகிறது.

இப்படி எழுதுவது ஆர். எஸ்.எஸின் விஜயபாரதம் அல்ல கல்கி தான் (23.2.2014 பக்கம் 43).
வண்டலூரில் மோடி கூட்டம் பேசிய அன்று (8.2.2014) அங்கு டாஸ்மாக் விற்பனை புதிய சாதனை படைத்ததாம் - ரூ.4.9 கோடி விற்பனையாம் - இந்தக் குவார்ட்டர்களை சொந்த மாகப் பணம் கொடுத்து வாங்கியதுதான் என்று கல்கி கூறுகிறதோ?

கோயம்பேட்டில் தனி யார்ப் பேருந்துகளை நிறுத்தி, கூவிக் கூவி மக்களை அழைத்த கதை ஊர் சிரிக்க வில்லையா? ஆகா! கல்கி களுக்குத்தான் மோடியைச் சிம்மாசனத்தில் உட்கார வைக்க எவ்வளவுப் பெரிய ஆசை!

நற்குடி மக்களா?

ஏடுகளில் அன்றாடம் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக் கடையை இங்கே வைக் காதே! பெண்கள் நடமாட முடியவில்லை! என்று பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை அறிய முடிகிறது. இதில் உள்ள நியா யத்தைப் புரிந்து கொள்ள வேண்டமா? குடிகுடியைக் கெடுக்கும் என்ற விளம்பரப் பலகையையும் ஒரு பக்கத் தில் மாட்டிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் - மக்கள் அதிகமாகப் புழங் கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை வைப்பது சரி தானா? இந்த மதுபானக் கடைகளை இழுத்து மூடி விட்டு, கள்ளுக் கடைகளைத் திறப்பது பற்றி அரசு யோசிக் கலாமே! திராவிடப் பெருங் குடி மக்கள் நற்குடி மக்க ளாக வாழ ஒரு வழி செய்யக் கூடாதா? மதுவை ஒழிக்க வேண்டும் என்று போடப் படுகின்ற மாநாட்டுத் திடலில், பொழுது விடிந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புரி கிறது - எங்குப் பார்த்தாலும் காலி மதுப்பாட்டில்களின் அணி வகுப்பு!

பேஷ், பேஷ்!

தாம்பரத்தையடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டப் பகலில் படுகொலை செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்புகூட அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இப் படியே படுகொலை செய் யப்பட்டுள்ளனர். பேஷ், பேஷ்! சட்டம் ஒழுங்கு மிக நன்னாயிருக்கு...

வாராக்கடன்

வங்கிகளின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதி யாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 35.2 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/75561.html#ixzz2tp0fsfAc

தமிழ் ஓவியா said...

7பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி : கலைஞர்


சென்னை, பிப்.19- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முரு கன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண் டனையை ஆயுள் தண் டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப் பளித்தது. அவர்களை விடு தலை செய்யும் முடிவை மாநில அரசு மேற்கொள்ள லாம் எனவும் அந்த தீர்ப் பில் கூறியிருந்தது.

எனவே, இன்று சட்ட சபையில் முதல்வர் ஜெய லலிதா முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் உட னடியாக விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண் டும் என்று மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள் ளார். இதுகுறித்து திமுக தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக் கிறது. 7 பேரையும் விரை வில் விடுதலை செய்ய மத் திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/75557.html#ixzz2tp0oJKMu

தமிழ் ஓவியா said...


உலகளந்த பெருமாள் தேர் உடைந்து போனதே!


வாலாஜாபாத், பிப்.19- காஞ்சீபுரம் உலகளந்த பெரு மாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் தேர் சக்கரத் தில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந் தனர். காஞ்சீபுரத்தில் உலக ளந்த பெருமாள் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 6 நாட்களாக நடை பெற்று வந்தது.

7-ஆம் திருநாளான நேற்று காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. முன்ன தாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை யும் நடந்ததாம். பின்னர் திருத்தேரில் எழுந்தருளினா ராம். திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காஞ்சீபுரத்தில் உள்ள ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.

செங்கழுநீரோடை வீதி யில் வந்தபோது திடீரென தேரின் முன்சக்கரத்தில் லேசான சத்தம் வந்தது. உடனே தேரை நிறுத்தி பார்த்தனர். அப்போது சக்கரத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருந்தது. இத னால் தேர் நிறுத்தப்பட்டு முன்பக்க சக்கரத்தை கழற்றி பின்பக்கமும், பின்பக்க சக் கரத்தை கழற்றி முன்பக்கத் திற்கும் மாற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பூக்கடை சத்திரம் என்ற இடம் அருகே வந்தபோது சக்கரத்தில் திடீரென விரிசல் அதிகம் ஆனது. பின்னர் தேரை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகத் தினர் மேற்கொண்டனர். இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக் குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் கூடி விட்டனர். பின்னர் சக் கரத்தை தற்காலிகமாக சரி செய்து தேரை கோவில் நிலைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.

திருத்தேர் உற்சவம் நடத் துவதற்கு அறநிலையத் துறை சார்பில் நேற்று முன் தினம் தான் திருத்தேர் நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/75559.html#ixzz2tp1Ce2Z9

தமிழ் ஓவியா said...


பிஜேபி என்ன ஊழலுக்கு அப்பாற்பட்டதா?


மதவாத எதிர்ப்புக் கை கொடுக்குமா என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது ஒரு நாளேடு.

அந்த நாளேட்டுக்கு மட்டுமல்ல; இதே கருத்தைக் கொண்டுள்ள எவருக்கும் நாம் சொல்லக் கூடிய ஒரு பதில் - கண்டிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாத எதிர்ப்பு என்பது கை கொடுத்தே தீரும். காரணம் இது தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட பகுத்தறிவுப் பூமி. இந்த வினாவைத் தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளாகவே கூட இந்த வினாவை எழுப்பிப் பார்த்திருக்க வேண்டாமா?

இன்னும் சொல்லப் போனால் ஊழலைவிட மிகப் பெரிய ஆபத்தானது மதவாதம் ஆகும்.

அதே நேரத்தில் மதவாதத்திற்குக் காரணமான பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல. அதற்காக வெகு தூரம் சென்று ஆய் வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

பிஜேபி ஆட்சி செய்த கருநாடக மாநிலத்தில் என்ன நடந்தது? ஊழலின் ஒட்டு மொத்த உறைவிடமாக அது விளங்கவில்லையா? ரெட்டி சகோதரர்கள் அடித்த கொள் ளைக்கு அளவுண்டா? ஏன் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா செய்த ஊழல் பட்டியல்தான் சாதாரண மானதுதானா?

நடந்து முடிந்த தேர்தலில் தென்னகத்தில் ஆட்சி புரிய வாய்ப்புக் கிடைத்த ஒரே மாநிலமாகவிருந்த கருநாடக மாநிலத்தில் ஆட்சியைப் பறி கொடுத்ததே!

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்ததே சவப் பெட்டி ஊழல் - மக்கள் மறந்து விட்டார்களா? அகில இந்திய பிஜேபியின் தலைவர் பங்காரு லட்சுமணன் இலஞ்சப் பணத்தை வாங்கி மேசையின் அறையில் திணித்தது வரை தெகல்கா நிறுவனம் அம்பலப்படுத்தியதா இல்லையா?

மற்றொரு அகில இந்திய பிஜேபியின் தலைவர் நிதின் கட்காரிமீது ஊழல் புகார் வந்ததன் பின்னணியில் மறுபடியும் தலைவராக வர முடியாத இடத்துக்குத் தள்ளப் படவில்லையா? சோதனை செய்ய வந்த வருமானவரித் துறை அதிகாரிகளை மிரட்டியவர் தானே அவர்? மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று அதிகாரிகளை மிரட் டிய செய்தி வெளி உலகத்திற்கு வந்து சேரவில்லையா?

ஏன் அவ்வளவு தூரம் போவானேன்? பிஜேபியின் இன்றைய பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் குஜராத் ஆட்சியில்தான் என்ன வாழ்கிறது?

குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் 2009ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏடுகள் சொல்லவில்லை; இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தலைமை அதிகாரியின் அறிக்கை அம்பலப் படுத்தியதா இல்லையா?

தேவையற்ற முறையில் சலுகைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களில், கவுதம் அதானி மின்னாற்றல், ரூயாயின் எஸ்ஸார் குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை அடங்கும். சொல்லுவது இந்தியத் தலைமை தணிக்கைத் துறை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மதவாதம் ஒரு பக்கம், ஊழல் இன்னொரு பக்கம் எனும் ஆபத்தான இரட்டை குழல் துப்பாக்கிதான் பிஜேபி என்பதை மறந்து விடக் கூடாது.

இன்னும் சொல்லப் போனால் ஊழலைவிட மிகவும் ஆபத்தானது மதவாதம். நாட்டு மக்களை மதவாதக் கண் ணோட்டத்தோடு பார்த்து, அன்றாடம் நாட்டு மக்களி டையே கலவரத்தையும், பதற்றத்தையும் உருவாக்கக் கூடிய ஓர் ஆட்சி தேவையா?

2002இல் குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை அப்பட்டமாக தெரிந்த நிலையிலும் கட்டு விரியனை எடுத்துக் காதுக்குள் விட விரும்புவார்களா?

1992இல், அயோத்தியில் என்ன நடந்தது? 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை, பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான சங்பரிவார் இந்துத்துவ வன்முறைக் கும்பல் கூடி, இடித்துத் தரை மட்டமாக்கவில்லையா?
கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அசோக்சிங்கால் முதலிய முக்கிய தலைவர்கள் தலைமையேற்று இந்த அட்டூழியத்தைச் செய்து முடிக்கவில்லையா? இந்துக்கள் அலிகள் அல்ல - ஆண்கள் என்பதற்கு அடையாளம்தான் பாபர் மசூதி இடிப்பு என்று - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திர மோடி அப்பொழுது சொன்னாரா இல்லையா?

ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது ஊழல் புகாரை மட்டும் சொல்லி, அதைவிட பல மடங்கு ஊழலும், மதவெறியும் கொண்ட பிஜேபியை ஆட்சியில் அமர்த்துவதைவிட தற்கொலை வேறு ஒன்று உண்டா?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஏடுகள், ஊடகங்கள் கூட இதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அதை விட வேதனை எதுவாக இருக்க முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/75563.html#ixzz2tp1QuG7E

தமிழ் ஓவியா said...


மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்


- குடந்தை கருணா

இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.

மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.

1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?

2. பிரதமர் மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?

3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?

4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?

5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?

6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?

7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?

8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?

9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?

அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.

Read more: http://viduthalai.in/page-2/75567.html#ixzz2tp1ss9mW

தமிழ் ஓவியா said...


மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்! எக்னாமிக் டைம்ஸ் அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, பிப்21- மக்கள் மத்தியில் போலி யான மலிவுப் பிரச்சாரத் தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின் னால் உள்ள நிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டு வரு கிறார்.

தேர்தலை மய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

அது 1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங் கள்,

2. அதை மய்யமாக வைத்து பொதுக் கூட்டங் களில் உரையாற்றுவது,

3. அவற்றை அப்படியே ஊட கங்களின் மூலம் மக்களி டம் கொண்டு சேர்ப்பது;

இதுதான் மோடியின் தேர் தல் மோசடித் திட்டம். மோடியின் இந்த மோசடித்திட்டத்திற்கு வலு வூட்ட பல நிபுணர்கள் கொண்டகுழு உள்ளது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல் கலைக்கழக பேராசிரியர் அரவிந்த பங்கரியா, பிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தா, கொள்கை ஆய்வு மய்யக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய், மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.

இந்தக்குழுவின் தலை வர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீது மதிப்பு கொண் டவர். ஆனாலும், அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர். இதில் பங்கரியா பாது காப்பு மற்றும் அயலுறவுத் துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம். இந்தக்குழு தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்து வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின் ஆலோச னையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் மோடியின் தேர்தல் களத் தின் பின் புலத்தில் உள்ளனர்.

இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக் கும் முக்கிய பிரச்சினை யான மின்சாரத்தை முதன் மையாக எடுத்துள்ளது.

24 மணி நேரம் மின்சாரம் என்பது சாமானியர்களின் கனவாகும். இதை மனதில் கொண்டு மின்சாரம் மற் றும் இந்த பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராக காட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நிறைவேற்ற இயலாதவை! மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறு வது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில் பொருளாதார, தொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய ஆலோசனைக்குழு வின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த உரையை அனைத்து மேடை களிலும் பேசி வருகிறார்.

பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கி, அதன் பிறகு அதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி) வருகிறார். உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபு ணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவை நிறை வேற்ற இயலாதவையா கவே உள்ளன .

- (நன்றி: எக்னாமிக் டைம்ஸ் நாள்:19.2.2014)

Read more: http://viduthalai.in/e-paper/75683.html#ixzz2u0MywW4H

தமிழ் ஓவியா said...


முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.

(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/75675.html#ixzz2u0NcsguV

தமிழ் ஓவியா said...


மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம் இந்தியாவின் 29-ஆவது மாநிலம் ஆனது


தெலங்கானா புதுடில்லி, பிப்.21- கடும் அமளிக்கு இடையே, மாநிலங்களவையில் தெலுங் கானா மசோதா நேற்று நிறைவேற்றப் பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியதும் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அவரவர் மாநில பிரச்சினைகளை எழுப்பி அமளி யில் ஈடுபட்டனர்.

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக் கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங் கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட னர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

தெலுங்கு தேச எம்.பி.க்கள், ஆந்தி ராவை பிரிப்பதற்கு எதிராக பதாகைகளை பிடித்து முழக்கமிட்டனர்.

இந்த அமளிக்கிடையே, தெலங்கானா மசோதாவை மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்போது, அவரைச் சுற்றிலும் தெலங் கானா ஆதரவு எம்.பி.க்கள் மனித வளையம் போல் நின்று கொண்டனர். அவர்களை தெலங்கானா எதிர்ப்பு எம்.பி.க் கள் தாக்க முற்பட்டனர்.

அமளி காரணமாக, பிற்பகல் 2 மணியில் இருந்து 4.30 மணிக்குள் 5 தடவை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நடந்த விவாதத்தின்போது, தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தெலங் கானா மசோதா, இந்தியாவின் கூட்டாட்சி முறை பற்றிய கவலையை எழுப்புகிறது. ஆந்திராவை பிரிப்பதை நாங்கள் எதிர்க் கிறோம். ஆகவே, வெளி நடப்பு செய் கிறோம் என்று தி.மு.க. உறுப்பினர் கனி மொழி கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் திடீரென சபைக்கு வந்தார். அவர் முன்னிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி, தெலங்கானா தனிமாநிலம் உருவாக்குவதற்கு எதிராக பேசினார். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவது தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், சீமாந்திரா பகுதிக்கு ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதிஉதவி அறிவிக்க வேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் குறுக்கிட்டு பேச எழுந்தபோது, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மசோதாவை கிழித்து வீசு என்று கூச்சலிட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், மன்மோகன்சிங் முன்பு காகிதங்களை கிழித்து வீசினர்.

மன்மோகன்சிங் பேசுகையில், சீமாந் திரா பகுதியின் பின்தங்கிய மாவட் டங்களுக்கு சிறப்பு நிதிஉதவி திட்டம் அறிவிக்கப்படும். வரிச்சலுகை அளிக்கப் படும். சீமாந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் 6 அம்ச வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். போலா வரம் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சீமாந்திராவுக்கு 5 ஆண் டுகளுக்கு சிறப்பு தகுதி அளிக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து, தெலங்கானா மசோ தாவை திருத்தம் இன்றி ஆதரிக்க பா.ஜனதா முன்வந்தது. ஓட்டெடுப் பின்போது, காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரித் தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தெலுங்கு தேசம், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடுமையான கூச்சல்-குழப்பத்துக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு மூலம், மசோதா நிறைவேறியது. இரவு 8.30 மணியளவில்தான் மசோதா நிறைவேற் றப்பட்டது.
திருத்தம் இல்லாமல் மசோதா நிறை வேற்றப்பட்டதால், அதை மறுபடியும் மக்களவைக்கு அனுப்ப வேண்டியது இல்லை. குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்கு நேரிடையாக அனுப்பி விடலாம்.
எனவே, நாட்டின் 29-ஆவது மாநில மாக தெலங்கானா உதயம் ஆனது.

Read more: http://viduthalai.in/page-2/75677.html#ixzz2u0NpCQAj

தமிழ் ஓவியா said...


மதத்தைப் பற்றி மதவாதி!


இந்துமதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனைவிட மிகக் கேவலமாக நடத்தி வருகிறது.

ஜாதிஇந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தினர். இன்றும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

ஜாதி இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்துகூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங்கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்துமதம் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றை யெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்று பெண்களையும் சமமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்ப்பானும் தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே.

மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும்; அவற்றிற்குத் தீயிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளவர் புனேயில் யோகா நிலையம் வைத்து நடத்தி வரும் ரஜனீஷ். அவரும் ஒரு மதவாதியே என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ஆன் லுக்கர், டிசம்பர் 15 (1970

Read more: http://viduthalai.in/e-paper/75712.html#ixzz2u0OaWbbg

தமிழ் ஓவியா said...


நாஸ்திக வாதம்! (கிளிக்கண்ணி மெட்டு)


1. கடவுள் எனும் சொல் வெறும்
கற்பனைச் சொல் ஆகுமடா
திடமுடன் டுடுட்டு வென்றால் - மனிதா!
தெரியும் பொருளே தடா!

2. கல்லில் ஒரு கடவுள்
கருத்தில் ஒரு கடவுள்
சொல்லில் ஒரு கடவுள் - மனிதா!
தொட்டதெல்லாம் கடவுள்

3. அர்த்தமில்லாக் கடவுள்
அனர்த்தஞ் செய்யுங் கடவுள்
மெத்த இம் மேதினியில் - மனிதா!
வீண் வீணென்றே உமிழடா

4. எட்டாக் கடவு ளென்று
எட்டிப் பிடிப்ப தன்றோ?
முட்டாள் ஆஸ்திகர்கள் - மனிதா!
முற்றும் முரண் பேசுவரே

5. உழைப்பு செல்வம் காலத்தை உண்டு சும்மா இருந்திடும்
பிழைப்புத்தான் கடவுட்கென்றால் - மனிதா!
பிசகென்ன நாஸ்திகத்தில்!

6. ஏழையுலகை வாட்டிடும்
ஈனக் கடவுளைத்தான்
ஆழக்குழி வெட்டியே - மனிதா!
ஆழ்த்திப் புதைத்திடடா

7. அறிவியல் அன்றும் இன்றும்
ஆத்திகம் காத்ததில்லை
குறி, சட்டம், ஸ்தாபனத்தால் - மனிதா!
கொடும் மதம் காத்ததடா

8. அரி சிவன் அல்லா பிரம்மம்
அருஞ் சமரிட்டதாலே
சொரிந்தனர் மக்கள் ரத்தம் - மனிதா!
சொல்லவும் கொதிக்குதடா

9. அடிமை வறுமை பஞ்சம்
அநியாயம் மோசம் நாசம்
மிடிமையும் கடவுள் மேலே - மனிதா
வேர்க் கொள்ளக் கண்டோமடா

10. மனிதன் மனிதனாக!
மதங்கள் கடவுள் வீழ்க!
புனிதப் பொதுவுடமை - மனிதா!
புது உலகம் வாழ்ந்திடவே.

Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0P5WXzY

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து எடுத்துவிடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட் பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத் தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங் குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.


Read more: http://viduthalai.in/e-paper/75711.html#ixzz2u0PJdH4u

தமிழ் ஓவியா said...


மெய்ஞானம் எது? பகுத்தறிவு எது?


ஞானம் - மெய்ஞானம் என்றிடில் கடவுளைப் பற்றிய அறிவு என்றும், மோட்சம் அடைவதற்கான வழிகளை அறிதல் என்றும் கூறுவர் மதத்தினர்.

அதாவது, உலக நல்வாழ்வுக்கல்லாததும், இல்லாத ஒன்றிற்கான அறிவு பெறுதல் என்பர்.

இல்லாததைப்பற்றி அறிந்து கொள்வதால் நற்பயன் பயக்குமோ? பலனுக்காகாத கற்பனை கனவு போன்றில்லையா இக்கூற்று? மெய்ஞானம் - பலன் பயக்கும் உண்மையறிவு எது என்று திருத்தக்கத் தேவர் சிந்தாமணியில் விளக்குகிறார்;

மெய்வழி தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகையின்றித் தேறல் காட்சி
அய்ம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரை தேயாதொழுகுதல்
ஒழுக்கம் மூன்றாம்

நல்லது கெட்டதைப் பகுத்தறியும் உண்மை வழியைக் கண்டறிதலே ஞானம் (உண்மை - நல்லறிவு).

பொருள்களின் உண்மையை பொய் வகையில்லாத வகையில் கண்டறிதலே நற்காட்சி. அதாவது, ஒரு பொருளை நல்லதா கெட்டதா என்று தெளிந்து அறிதலே அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியும் காட்சிப் பிரமாண மாகும்.

தகாத வழிகளில் வாழ்த்தும் உடலின் அய்ம்பொறி களையும் (பட்டினியால் தவத்தால்) வாட்டி, வாழ்க்கைச் சக்தியான உயிரைச் சிறுகச் சிறுக நலிவிக்காமல், உயிரையும் அவ்வழி உடலையும் பேணி வாழ்தலே நல்லொழுக்கமாகும். அதாவது, தகாத முறைகளை விடுத்து, நல்ல முறைகளில் சம்பாதித்து வாழ்தலே நல்லொழுக்கம் (நற்சீலம்)ஆகும்.

கடவுள் என்பதன் அருளைப் பெற என்று கூறிக் கொண்டு தவம் செய்தலையும், உண்ணா விரதமிருப்பதையும், கண்டிக்கிறார். இவை பயனற்றவை. உயிரையும் உடலையும் சிறுகச் சிறுக நலிவித்து விரைவில் சாவைத் தேடிக் கொள்ளும் இயற்கை முரண் செயல் இவை என்பதே இதன் தெளி பொருள்.

ஊன் வாட, உயிர் வாட மெய்க் காவலிட்டு தான் வாட வாட தவம் செய்ய வேண்டாம் என்று திருமங்கையாழ்வாரும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.

மெய்ஞானம் (நல்லறிவு, பகுத்தறிவு), நற்காட்சி (நல்ல பொருள்களைக் கண்டறிதல்), நல்லொழுக்கம் ஆகிய மூன்றுமே மக்கள் நல்வாழ்வு - இன்ப சுகவாழ்வு எய்துவதற்கு முக்கிய மூன்று பண்புகள். இவற்றை புத்தர் முத்திரையம் என்றும், சமணர் ரத்தினத்திரையும் என்றும் கூறுவர்.

இந்தப் பகுத்தறிவு மெய்ஞானத்தை நன்ஞானம், மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மன மெய்ஞானம், கேவல ஞானம் என்று அய்ந்தாக விரித்துக் கூறுவர்.

அதாவது, பொதுப்படையான நல்லறிவு (பகுத்தறிவு) புத்தியைக் கொண்டு, நல்லது கெட்டதைத் தெளிந்தறியும் ஆககம் அறிவு - தெளிந்த மதிநுட்பம் ஒரு பொருளோ, விஷயமோ பொருந்துமா, பொருந்தாதா என்று கண்டறியும் அறிவுத் தொல்லைகளை - கெடுதிகளைக் கண்டறியும் அறிவு - மனதால் உண்மையைக் கண்டறியும் சிந்தனை அறிவு (சிந்தனைச் சக்தி) இழித்தன்மையைக் கண்டறியும் அறிவு என்பவனவாம். இதன் ரத்தினச் சுருக்கக் கருப் பொருள்; பகுத் தறிவு பெறு என்ற தந்தை பெரியார் அவர்களின் நல்லுரை யேயாகும் - பகுத்தறிவே நல்வாழ்வளிக்கும் என்பதாகும்.

- விசித்திர சித்தன்

Read more: http://viduthalai.in/e-paper/75710.html#ixzz2u0PVtmMg

தமிழ் ஓவியா said...


கா. நமச்சிவாயனார்


தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.

திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும் திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்

அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.

தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே
தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!
என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.

அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் - அந்தக் கால கட்டத்தில் தமிழின் - தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.

தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய - முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் - அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் என்று தந்தை பெரியார் எழுதினார்.

(விடுதலை 15.2.1960)

இது ஒரு பானை சோற் றுக்கு ஒரு பருக்கைப் பதம்!

குறிப்பு: இன்று பெரும் புலவர் கா.நமசிவாய (முதலி யார்) பிறந்த நாள் (1876).

- மயிலாடன் -20-2-2014

Read more: http://viduthalai.in/page1/75655.html#ixzz2u0kQ3QPl

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது



உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப்பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.
(விடுதலை, 28.10.1967)

Read more: http://viduthalai.in/page1/75644.html#ixzz2u0lEbb24

தமிழ் ஓவியா said...

வைரம் எவ்வளவு ஆழத்தில் இருந்து கிடைக்கிறது?

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா? ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப் போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக் கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75626.html#ixzz2u0lypyFZ

தமிழ் ஓவியா said...

அதென்ன? ரோச்சி எல்லை!

ஒரு கோளினுடைய துணைக் கோளானது, அந்த கோளைக் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நெருங்க முடியும் என்பதை 1850ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞர் எட்வர்டு ரோச்சி இதை கணிதவியல் ரீதியாக நிரூபித்தார். இது ரோச்சி எல்லை என அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கோளிற்கும் ரோச்சி எல்லை உண்டு. அது அந்தந்தக் கோளின் சுற்றுவட்டத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். சனிக் கோளின் ரோச்சி எல்லை அதன் மய்யத்தி லிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த தூரத்தைக் கடந்து உள்ளே செல்லும் துணைக் கோள்கள் வெடித்துச் சிதறி, ஒரு வட்டத்தை உருவாக்கு கின்றன. ஆனால் புவியிலிருந்து செல்லும் செயற்கைக் கோள்களுக்கு ரோச்சி எல்லை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/75630.html#ixzz2u0nwigtX

தமிழ் ஓவியா said...

மனித குருதி நிறம் என்ன?

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0o8kLVw

தமிழ் ஓவியா said...


உலகின் மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி!


உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக்காடுகளிலோ, மலை களிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிகக் கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொல்லைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது ! முதலில் பூச்சி என்றால் என்ன ?

6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது ! சரி, அந்த மிகக் கொடிய விஷமுள்ள பூச்சி எது தெரியுமா ? எறும்பு ?!

ஆம் எறும்பேதானாம் ! ஆனால் நாம் சாதாரனமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை. அதன் பெயர் ஹார்வஸ்ட் ஆண்ட் என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.

உருவத்தோடு சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனீக்கு இருக்கும் விஷத்தை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக விஷம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

எறும்புகள் கடிப்பதும்,கொட்டுவதும் இரு வெவ்வேறு நடவடிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சில எறும்புகள் கடிக்கும் ஆனால் கொட்டுவதில்லை; சில எறும்புகள் கடித்து விட்டு கடித்த இடத்தில் விஷத்தை பீய்ச்சியடிக்கின்றன.

சில எறும்பு வகைகள் கொடுக்கு களால் கவ்விப்பிடித்துக்கொண்டு கடித்த பாகத்தில் தொடர்ச்சி யாக விஷத்தை செலுத்தும் பழக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்: சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஒரு எலியை இவ்வகை எறும்புகள் பன்னிரண்டு முறை கொட்டினால் இறந்து விடுமாம்.

Read more: http://viduthalai.in/page1/75628.html#ixzz2u0oEnYAL

தமிழ் ஓவியா said...


விண்வெளிக்கு எளிய வழி! ஏழு மணி நேரத்தில் செல்லலாம்


சற்று தொலை தூர ஊர் என்றால் பேருந்து, ரயில் பயணத்திலேயே 7,8 மணி நேரம் ஆகும்.

ஆனால் சமீபத்தில் பூமியில் இருந்து விண்வெளியில் வீரர்கள் வெறும் 6 மணி நேரப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை படைத்து இருக்கிறார்கள். இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்தான் அந்தச் சாதனை யாளர்கள்.

கஸகிஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இவர்களின் சோயூஸ் காப்சூல்ஸ்' விண்வெளிச் சுற்றுப்பாதை அவுட் போஸ்ட்டான சர்வதேச விண்வெளி நிலையத்தை 6 மணி நேரத்துக்குள்ளாக அடைந்து விட்டது. வழக்கமான இந்த விண்வெளிப் பயணத்துக்கு ஆகக்கூடியது 51 மணி நேரம்.ஆனால் ஒரு குறுக்கு வழி'யில் சென்றதன் மூலம் 45 மணி நேரத்துக்குள் முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தை வீரர்கள் அடைந்துவிட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரூட் என்ற புதிய வழியின் மூலம்,அமெரிக்க விண்வெளி வீரர் கிரிஸ் காஸ்டி,ரஸ்ய விண்வெளி வீரர்கள் பாவல் வினோகி ரடோவ்,அலெக்ஸ்சாண்டர்,மிருஸ்கின் குழுவின் சோயூஸ்கேப்சூல்ஸ்,வெறும் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தொட்டது. அங்குள்ள பாய்ஸ் மாட் ஊளில் பார்க்' ஆனது. அய்ந்தரை மாத விண்வெளி ஆய்வு பயணமாக இக்குழு சென்றுள்ளது.

இதற்கு முந்தைய விண்வெளிப் பயணக் கலங்கள் அனைத்துமே -தோது நாசாவின் ஓய்வு பெற்ற' ஸ்பேஸ் சட்டல்களாக இருக்கட்டும்-சர்வேதேச நிலையத்தை எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டி ருக்கின்றன.

இப்படி விரைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியதால்,நெருக்கடியான விண்கலத்தில் இரண்டு நாள்களுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிரமத்தில் இருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விடு கிறார்கள், இந்த விண்வெளி வீரர்கள்!

Read more: http://viduthalai.in/page1/75627.html#ixzz2u0oPfxww