Search This Blog

18.6.12

தமிழ் இனையப்பயிலரங்கம் ஒரு பார்வை


17-6-2012 அன்று மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஊரக வளர்ச்சி உராய்வு மையம் இணைந்து நடத்தும் தமிழ் இனையப்பயிலரங்கத்திற்கு செல்வதன முடிவெடுத்து திண்டுக்கல் தோழர் வழக்குரைஞர் மானமிகு சாக்ரட்டீஸ் அவர்களுடன் சரியாக காலை 9.30 மணி அளவில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்குள் சென்றபோது ப.க.தலைவர் மானமிகு நேரு அய்யா,சுப.முருகானந்தம் அய்யா,வழக்குரைஞர் கணேசன் ஆகியோருடன் குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களும் (நின்று கொண்டிருந்தனர்) எங்களை வரவேற்று,அறிமுகப்படலம் நடந்து கொண்டிருந்த போது மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் அய்யா நம்.சீனிவாசன் அவர்களும் வந்து கலந்து கொண்டார்.உடனே நிகழ்ச்சி நடக்கும் கணனி அறைக்கு (computer lab) அனைவரையும் அழைத்துச் சென்று அமர வைத்து தமிழ் இனையப்பயிலரங்க தொடக்க விழாவிற்கு ஆயத்தமானார்கள். சென்னையிலிருந்து ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் வந்து சேர்ந்தார். கணிசமான அளவு பங்கேற்பாளர்கள்.பயிற்சியாளர்கள் என அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது.


தொடக்கவிழா


பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் தலைமையில்,தி.க.தலமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குனர் இராச.கோவிந்தசாமி, தி.க.மதுரைமண்டலத் தலைவர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரம் 10.30 யை நெருங்கி கொண்டிருந்ததால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற்று இணையம் தொடர்பான கருத்துக்களை நருக்குத் தெரித்தார் போல் எடுத்து வைத்து வரவெற்புரையை முடித்தார்.அடுத்து அறிமுகவுரையில் ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இதர்கு முன் நடைபெற்ற இணையப்பயிலரங்கங்கள் பற்றியும்,அங்கு நடைபெற்ற சுவராசியமான நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார். அவரது உரையில் ”தமிழ் ஓவியா” வலைப்பூ பற்றி கூறி பாராட்டு தெரிவித்தார். அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது என்றும் அனைவரும் இப்பயிலரங்கத்தை நன்கு பயன்படுத்தி பெரியார் கருத்துக்களை உலகமயமாக்கும் பணியில் தங்களையும் இனைத்துக் கொள்ள வேண்டும் என்றும். பெரியாரையோ நமது இயக்கத்தையோ தவறாக விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அந்த வகையில் ”தமிழ் ஓவியா” வலைப்பூ சிறப்பாக் செயல்பட்டு வருவதையும் எடுத்துக்கூறி தமிழ் ஓவியா அவர்களுக்கு, குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்கள் பொன்னாடை அணிவிக்க கேட்டுக் கொண்டார்.(இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை -- தமிழ் ஓவியா)


தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. விழா அரங்கம் இனி பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறது என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.


முதல் அமர்வு:-தமிழ் இணையம் வளர்ச்சி வரலாறு



தமிழ் இணையம் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி?அதன் பயன்பாடுகள், வலைப்பூ உருவாக்கம் அதன் பயன்பாடுகள்,அதை எப்படிப்பயன்படுத்துவது? தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதனை எப்படிப்பயன்படுத்துவது? தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? யுனிக்கோடு ,எழுத்துருச் சிக்கலை தீர்ப்பது எப்படி? ஏனைய இணைய இதழ்கள், நூலகங்கள் போன்ற தலைப்புகளில் பவர் பாயிண்ட் மூலம் பாடம் நடத்தினார் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன்.இடையிடையே ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும் விளக்கம் அளித்தார்.


இரண்டாம் அமர்வு:-வலைப்பு உருவாக்கமும் பயன்பாடுகளும்



பங்கேற்பார்கள் அனைவரையும் (ஒருவருக்கு ஒரு கணனி என்ற அடிப்படையில்) கணனி முன் அமர வைத்து முதலில் மின்னஞ்சல் தொடங்குவது எப்படி?தொடங்கியபின் வலைப்பூ எப்படி தொடங்குவது? பின்பு அதில் தங்களது கருத்துக்கள தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? படம் இணைப்பது எப்படி? வீடியோ இணைப்பது எப்படி? திரட்டிகளில் இணைப்பது எப்படி? என்பதை பற்றி விரிவாக செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பல பயிற்சியாளர்கள் நன்கு கற்றுக் கொண்டனர்.


மூன்றாம் அமர்வு:- தமிழ் விக்கிபீடியா மற்றும் இணையதழ்கள்


மாணவர்கள் அதிகமாக வந்திருப்பதால் தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதில் எப்படி எழுதுவது என்பது பற்றியும் மீண்டும் விளக்கமாக எடுத்துரைத்தார்.அப்போது கிரந்த எழுத்துக்களை பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துக்களுடன் சேர்க்க இருந்த நிலையை சுட்டிக்காட்டி அதை ஆசிரியர் அய்யாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஒரு அறிக்கையின் மூலம் அதை தடுத்து நிறுத்தியவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி என்றும் பெருமை பொங்க குறிப்பிட்டார் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன். ”விடுதலை”, உண்மை பெரியார் பிஞ்சு ,மாடர்ன் ரேசனலிஸ்ட் போன்ற நமது இதழ்கள்,பெரியார் இணையதளம் மற்றும்பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் பற்றிய சிறப்புகளை விளக்கி அனைவரும் சிறந்த வலைப்பதிவாளர்களாக வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார் பிரின்சு என்னாரெசு பெரியார்.


நிறைவு விழா:-


பங்கேற்பாளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூறினர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனிவாசன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் அய்யா அவர்கள் சிறப்புரையாற்றி பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள். மதுரை புற நகர் தி.க. மாவட்டச் செயலாளர் அ.வேல்முருகன் அவர்கள் நன்றி கூறினார்.

இணையப்பயிலரங்கில் 1996 இல் எழுத்தாளர் பயிச்சிப்பட்டறையில் கலந்து கொண்ட சோழவந்தான் வழக்கறிஞர் தோழர் கணேசன், கணனி வல்லுநர் திரு முத்துக்கண்ணன், மதுரை ஹோமியோ மருத்துவர் அன்புமதி போன்ற முகநூலில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல தோழர்களை முகம் பார்த்து பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனைவருக்கும் நன்றி கூறி வீடு திரும்பினோம்.

3 comments:

தமிழ் ஓவியா said...

மதுரையில் தமிழில் இணைய தளம் பயிற்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தியது


மதுரை, ஜூன் 19- 17.6.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மதுரை மன்னர் திரு மலை நாயக்கர் கல் லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்க விழாவில் பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செய லாளர் சுப.முருகானந் தம் அனைவரையும் வர வேற்றார். பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங் கினார்.

இணைய தள பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

திராவிடர் கழ கத்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தே. எடிசன் ராஜா, மதுரை மண்டல தி.க. செய லாளர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசி ரியர் ஜி.ஜெகஜோதி ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.

ப.க. மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அறிமுக வுரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழில் இணையதளப் பயிற்சி, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடை பெறுகிறது.

நமது எதி ரிகள் இணையதளத்தில் பல்வேறு பொய் செய் திகளைப் பரப்புகிறார் கள். எடுத்துக்காட்டாக , விற்பனைக்கு என்று வெளிநாட்டில் விளம் பரம் செய்யப்பட்ட வீட்டை முன்னாள் மத் திய அமைச்சர் ஆ.ராசா வின் வீடு என்று இணை யத்தில் பொய்யாய்ப் பரப்பினார்கள்.

இப்படி பொய், பொய் யாய்ப் பார்ப்பனர்களும், ஊடகங்களும் பரப்பும் பொய்மைக்கு எதிராக இணையதளத்தில் கருத்துப்போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது. அதற்கு இப்படிப் பட்ட தமிழ் இணைய தளப் பயிற்சி தேவைப் படுகின்றது என்று குறிப் பிட்டார்.

தலைமை வகித்த வா.நேரு தனது உரையில் இக்கல்லூரி யில் பயிலரங்கம் நடத்த அனுமதி அளித்த மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் செயலாளர் அய்யா எம்.விஜய ராகவன் அவர்களுக்கும், முதல்வர் ச.நேரு, சுய நிதிப் பிரிவு இயக்குநர் இராஜா.கோவிந்தசாமி அவர்களுக்கும் பேருதவி புரியும் பேரா.நம்.சீனி வாசன் அவர்களுக்கும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் நன்றியைக்கூறி , இப்பயி லரங்க வகுப்பை முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சி யாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

குடியரசுத் தலைவ ரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற புதுச்சேரியைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று வகுப்புக்களை நடத்தினார்.

தமிழ் இணையம் - தோற்றம், வளர்ச்சி, தமிழில் இணை யத்தை பய்ன்படுத்துவ தற்காக உழைத்த பெரு மக்களை அவர்களின் புகைப்படங்களோடு குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பை விளக் கினார். தமிழ் இணைய மாநாடுகள்,சென்னை தமிழ் இணைய மாநாடு 99-ஆம் ஆண்டு நடை பெற்றதன் பயனாக ஒருங் குறி (ரஉடினந) உருவாக் கம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட் டார்.

மின்னஞ்சல் பயன் பாடுகள், வலைப்பூ உருவாக்கம்,வலைப்பூவில் எப்படி படங்களை ஏற் றுவது, எப்படி செய்தி களை ஏற்றுவது போன் றவற்றை விளக்கிக் கூறி னார். தமிழில் எப்படி தேடுவது, எப்படி டைப் செய்வது போன்றவற்றை விளக்கிப் பயிற்சியளித் தார். அடுத்த வகுப்பில் , தமிழ் விக்கிபீடியா, இணைய இதழ்கள், பல் வேறு வலைத்தளங்கள், தமிழ் இணையப் பல் கலைக்கழகம் போன்ற தலைப்புகளில் செய் முறையோடு பேராசிரி யர் முனைவர் மு.இளங் கோவன் பாடம் நடத் தினார்.

விடுதலை இணைய தளம், அதில் உள்ள பெரியார் வலைக்காட்சி, பெரியார் பண்பலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசன லிஸ்டு போன்ற இதழ் களை எப்படி படிப்பது, கழக நிகழ்ச்சிகளை எப் படிப் பார்ப்பது, விடு தலை குழுமத்தில் எப் படி இணைவது, பேஸ் புக் போன்ற சமூக தளங் களை எப்படிப்பார்ப் பது போன்றவற்றை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விளக்கினார்.

பங்கேற்ற மாணவ மாண விகள் கணினி செயல் முறை வகுப்புகளின் மூலம் தமிழில் இணைய தளத்தைப் பயன்படுத் தவும், தமிழில் உள்ள இணையதளங்களைப் பற்றி அறிந்துகொள்ள வும் மிகப்பெரிய வாய்ப் பாக இப்பயிலரங்கம் அமைந்தது.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மா.பவுன்ராசா, மாநகர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் சே.முனியசாமி ஆகி யோர் முன்னிலை வகித் தனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனி வாசன், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் க.நல்லதம்பி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேரா.ஜெகஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்பா ளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தாங்கள் பயன்பெற்றது பற்றி கருத்துக் கூறினர்.

கவிஞர் கோ, தற் செயலாக இப்பயிலரங் கம் பற்றி கேள்விப்பட்ட தாகவும், இன்றைக்கு வராமல் போயிருந்தால் எவ்வளவு பெரிய வாய்ப் பைத் தவற விட்டிருப் பேன் என்று குறிப்பிட்டு சிறப்பாக பயிலரங்கம் நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தார். பங்கு பெற்ற மாணவ மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் சிறப்புரையாற்றினார் .

அவர் தனது உரையில் கணினி இன்றைய நிலை யில் எல்லா நேரங்க ளிலும் தேவைப்படுகின் றது. மதுரையில் இன் னும் இதனைப் போல 4, 5 தமிழ் இணையப் பயிலரங்கங்கள் நடை பெற வேண்டும். அப்படி நடைபெற அனைத்து விதமான உதவிகளை யும் வழங்கத் தான் தயாராக இருப்பதாக வும் தெரிவித்தார்.

மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரி கணினி பயிற்சி கத்தில் பணியாற்றும் பேராசிரியர் கண்ணன் மற்றும் ஊழியர்களுக் கும், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகப்பேராசிரியர்கள் அருணா, ஜி.ஜெகஜோதி அவர்களுக்கும் புத்தங் கங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களுக் கும், வலைப்பூவை சிறப் பாக வடிவமைத்து தொடர்ந்து இயஙகும் தோழர் பழனி வ.மாரி முத்து(த மிழோவியா. பிளாக்ஸ் பாட்.காம்) ஆகியோர்களுக்கு சிறப் புகள் செய்யப்பட்டன. மதிய உணவு, தேநீர், மினரல் வாட்டர், குறிப் பேடு உள்ளிட்டவைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் மதுரைபுறநகர் மாவட்ட திராவிடர் கழக செய லாளர் அ.வேல்முருகன் நன்றி கூறினார். "விடுதலை” 19-6-2012

தமிழ் ஓவியா said...

தினத்தந்தி பார்வையில் சுயமரியாதைத் திருமணம்: தத்துவமும், வரலாறும்


தந்தை பெரியார், சமு தாய சீர்திருத்தத்துக்காக பல முற்போக்கான நட வடிக்கைகளை அறிவித்தார். அவற்றை நடைமுறையிலும் கொண்டு வந்தார். அவர் கூறிய சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ண டிமை ஒழிப்பு, சிக்கனம், எளிமைக்கு ஏற்றம், இவை கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், அவர் கொண்டு வந்த மாற்றம்தான் சுயமரியாதைத் திருமணம். இந்த சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் வரலாற்றையும், நூல் ஆசிரியரான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த நூலில் மிக ஆழமாக வடித்து தந்திருக்கிறார்.

1935ஆம் ஆண்டு நடந்த ஒரு திருமணத்தில் தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணம் அல்லது சீர்திருத்த திருமணம் என்ற பொருள் பற்றி பேசிய பேச்சே இந்த நூலுக்கு அடிப்படை. பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் ஒரு அமைதி புரட்சியை அறிவதற்காக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் அது.

வெளியீடு: திராவிடர் கழகம்

கிடைக்குமிடம்: பெரியார் புத்தக நிலையம், பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7; விலை: ரூ.130)

- நன்றி: தினத்தந்தி, 20.6.2012