Search This Blog

9.6.12

தாழ்த்தப்பட்டவர்களைதாங்கும்இயக்கம்எது?பார்ப்பனர்களுக்குப் பால் வார்க்காதீர்!


தீண்டாதார்

பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத் திலோ மற்றும் பல பொது வாழ்க்கை யிலேயோ, அவர்கள் முன்னேறவே யில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5இல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி, அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப்பற்றி கவலையிராதுதான். பொறுப்புள்ள பொது மக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத் துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை; இன்னும் எவ்வளவோ பெரிய பாவிக ளென்று தான் சொல்லவேண்டும். சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமேயானால், இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும், பிராமணக் கொடுமையும், நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக் கூடாத மனிதனும், கண்ணில் தென்படக் கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக் கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொரு வரும் யோசிக்க வேண்டுவதோடு, ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமலுக்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டியது தேசபக்தர்களின் கடமையென் பதை வணக்கத் துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். (குடிஅரசு, தலையங்கம் 8.11.1925)

தாழ்த்தப்பட்டோரை அடிமைப்படுத்தினால் திராவிடர் இயக்கம் போராடும்!

உங்கள் கிராமமாகிய இத்திருமங்கலத்திலுள்ள அக்கிரகாரம் வீதியில் (பார்ப்பனர் சேரி) தாழ்த்தப்பட்டோர் போக உரிமை கிடையாது என்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த 1947ஆம் ஆண்டிலும், அதுவும் அரசியலார் இவற்றை ஒழிக்கும் முறையில் சட்டம் செய்திருந்தும், இந்த ஊர் ஆரியர்கள் பகிரங்கமாக இவ்வளவு மனிதத் தன்மை யற்று நடந்து வருகிறார்களென்றால் இந்த ஜாதி ஆணவத்தை எதற்கு ஒப் பிடுவது?

சுயமரியாதை - திராவிடர் இயக்கக் கிளர்ச்சியால் இரயில்வே ஸ்டேஷன் களிலுள்ள ஜாதி வித்தியாசத் தடை களும், ஓட்டல்களிலுள்ள ஜாதி வேறுபாடு முறை வழக்கங்களும் அறவே ஒழிந்துவிட்டன.

ஆனால் இம்மாதிரியான கிராமங்களில் ஆரியர் - உயர் ஜாதிக்காரர்கள் என்று கூறப் படுவோர், தாழ்த்தப்பட்டோருக் குச் செய்யும் வஞ்சகத்தை உடனடியாக ஒழித்துத் தீர வேண்டுவது நாட்டின் நலன் கருதுவோர் அனைவரின் கடமையாகும்.

இவ்விதக் கொடுமைகளை எல்லாம் இனி எங்கிருந்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தெரி வியுங்கள். இவைகளை எல்லாம் முதலில் ஒரு மாநாட்டின் மூலம் அரசியலாருக்கு எடுத்துக் கூறுவோம். ஆவன செய்ய வேண்டி. அதற்கும் இன்றைய அரசியலாரின் அலட்சியமே நமக்குப் பதிலாயி ருக்குமானால், அரசியலாரின் 144 தடைகளையும் வேண்டுமானால் இந்த விஷயத்தில் மீறியாவது மனித உரிமையைப் பெறுவோம்.

சுருங்கக் கூறுகிறேன், தாழ்த்தப்பட் டோரை யார் அடிமைப்படுத்தினாலும் அதைத் திராவிடர் இயக்கம் எதிர்த்துப் போராடும் என்று. இம்மாதிரியான காரியங்களில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பஞ்சாயத்தாரும், மற்றவர்களும் அக்கறை எடுத்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

(4.7.1947இல் திருமங்கலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு, விடுதலை, 5.7.1947)


பெரியாரிடத்தில் நம்பிக்கை வைத்து நடந்துகொள்ளுங்கள்!

பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள். - அண்ணல் அம்பேத்கர், (குடிஅரசு, 30.9.1944)

(குறிப்பு: தந்தை பெரியாருக்கு விரோதமாக நாங்கள் தான் நீதிக்கட்சி என்று சொல்லிக் கொண்ட சிலர் அண்ணல் அம்பேத்கரிடம் முறையிட்ட போது அம்பேத்கர் கூறிய அறிவுரை இது)

பெரியார் ஒருவர்தான் இருக்கிறார்!

இந்திய உபகண்டத்திலேயே சாதி ஒழிப்புக்காகவும், சாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, சாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது -பாபு. ஜெகஜீவன்ராம், (விடுதலை, 18.10.1960)

நோயைத் நீக்கும் மருந்து

தமிழ்நாட்டில் உணர்ச்சியற்று உறங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்டோரைத் தட்டி எழுப்பிய தகைமிகு தனிப் பெருமை - பெரியாரையே சாரும். இதன் காரணமாகவே, தாழ்த்தப்பட்டோர் பெரியார்பால் அசைக்க முடியாத உரிமை பூண்டு வருகின்றனர். சாதி, மதம், பழக்க வழக்கம் இவற்றையே மூலவேருடன் முனைந்து களையும் போது, கிளைபோல் நிலைத்த தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட தீயசதியும் அடியற்று வீழ ஏதுவாகிறது. இதை யறியாத பலர், போலித் தலைவர்களின் பேச்சில் ஏமாற்றமுற்று மோசம் போகின்றனர்.

பெரியாரின் மருந்து கசப்புள்ளது; ஆனால், உறுதியாக நோயை அண்டிப் போக்கக்கூடியது. கசப்பு என்று ஒதுக்கின், கவலைக்கிடமாகிக் குணம் உண்டாகாதாகிவிடும். வேறுபல, ஏனை யோரின் விடங்கலந்த மருந்தை இனிதென்று அருந்தி, இறுதியில் இன்னுயிரிழக்க வகைகோலாதவாறு, பெரியாரின் உதாரண செயல் உணர்த்தி விட்டது. எதிர் நீச்சு நீந்தி பெரும் காரியத்தில் வெற்றி கண்டு நமக்களிக்க முன் வந்திருக்கும் நம் பெரியார், ஓர் ஒப்பற்ற கர்ம வீரர் என்பதில் அய்ய மில்லை.- -- வீராங்கனை சத்தியவாணிமுத்து

பகுத்தறிவுச் சமதர்ம வீராங்கனை சத்தியவாணிமுத்து

மேயர் வேலூர் நாராயணனுக்கும், அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மை யாருக்கும் இடையே தந்தை பெரியார் செய்து வைத்த சமாதானம்!

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம்; வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.

அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.

வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர், அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படிச் சொல்லியிருந்தால் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுகிறேன்.

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தி ஏதாவது சொல்லியிருந்தால் அவர் தி.மு.கவில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாக பேசினார் தந்தை பெரியார்.

அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைக் கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை; ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத் திருப்பேன். அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.

காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லிவிடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன் என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில் (11.12.1968) பேசினார்.

******

இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக் கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும். - அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி (ஆனந்தவிகடன், 16.7.1972)

உண்மைகளும், நடப்புகளும் இவ்வாறு இருக்க, இவற்றிற்கு மாறாக திராவிடர் இயக்கத்தின் மீதும் தந்தை பெரியார் அவர்களின்மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி வீசிட மனம் எப்படித்தான் இடம் கொடுத்ததோ? கைகளும் இத்தகைய ஏறுமாறான எழுத்துக்களை வரைந்திட எப்படித் தான் முன்வந்ததோ!

தோழர்களே! பார்ப்பனர்களுக்குப் பால் வார்க்காதீர்! நம் கை நம் கண்களைக் குத்தலாமா? தனிமையில் தீர்க்கமாகச் சிந்தித்து தகுதியானவற்றை மட்டுமே எழுதுக!

அபாண்டம் ஏன்?

தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள் நகராட்சியிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் இடம் பெறுவதை நீதிக்கட்சியினர் அனுமதிக்கவில்லை என்ற ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் ரவிக்குமார்.

உண்மை என்னவென்றால் தாலுக்கா போர்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களை உறுப்பினர்களாக நியமித்தது நீதிக் கட்சிதான். இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோர்க்கு எதிராகச் சுயமரியாதை இயக்கத்தினர் கண்டனக் கூட்டங் களை ஏற்பாடு செய்தனர் (திராவிட இயக்கம் தமிழர்களுக்கு எதிரானதா? - - க. திருநாவுக்கரசு பக்கம் 23).

------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 9-6-2012 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...

கல்வித்துறைக்குப் பார்ப்பனர் அமைச்சராக இருக்கக்கூடாது


ஏதோ எந்தக் காலத்திலோ சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துத் தொலைத்தார்கள் - காலம் மாறி வரும் சூழலில் அவர்களின் மனப் பான்மையில் ஏதாவது மாற்றம் வந்திருக்குமா என்று எதிர்பார்த்தால், பலத்த ஏமாற்றம்தான்.

எப்பொழுதுமே அவர்களின் சிந்தனைகள், பார்ப்பனர் அல்லாதார் படித்துவிடக் கூடாது என்பதுதான்; 1937இல் முதன் முதலாக ஆச்சாரியார் என்று அழைக்கப்படும் ராஜாஜி அவர்கள் சென்னை மாநிலத்தின் பிரதமராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; பள்ளிகளில் இந்தியையும் திணித்தார். 1952இல் கொல்லைப்புறம் வழியாக சட்ட மேல் சபையில் நுழைந்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சார் ஆனார் என்றால், அப்பொழுதும் 6000 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும்; மீதி நேரம் மாணவர்கள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு வழியில்லாமல் கதவை அடைத்து விட்டனர்.

சட்டத் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதன் சந்து பொந்துகளில் நுழைந்து ஏதாவது தொல்லை கொடுத்து வருவது பார்ப்பனர்களின் ஜீவ சுபாவமாகவே போய் விட்டது.

திறந்த போட்டி (Open Competition) என்பதை பிற சாதியினர் (Other Community) என்று திரிபுவாதம் செய்து அனைத்து ஜாதியினரும் போட்டியிடத் தகுதி உடைய அனைத்து இடங்களையும் பார்ப்பனர்களே பறித்துக் கொண்டனர். அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு மூன்றாண்டுகள் ஓடி விடும் - கிடைத்த வரை ஆதாயம்தானே!

மத்திய தேர்வாணையம் வரை உள்ள பார்ப்பன அதிகார மய்யங்கள் - இந்த அக்கிரமத்தைச் செய்தன! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில்கூட அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டோருக்கு திறந்த போட்டிக்குரிய ஒதுக்கீட்டில் இடம் அளிக்காமல்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்குரிய ஒதுக்கீட்டில் இடங்களை அளித்து திறந்த போட்டிக்குரிய அந்த இடங்களையெல்லாம் இந்த உயர் ஜாதிக்காரர்களே சுளையாக விழுங்கினார்கள்.

இப்பொழுதுதான் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது; உச்சநீதிமன்றம் வரை சென்று பார்ப்பனர் முட்டி மோதிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை என்றவுடன் இப்பொழுதோ அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்து வாசல் வழியாக உள்ளே நுழைய முடியாத பார்ப்பன சாதி ஒட்டகம் கொல்லைப்புற வழியாக நுழைய பார்க்கிறது.

பொறியியல் - கல்லூரிகளில் சேருவதற்குத் தகுதி மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு ஒன்றை நிர்ணயம் செய்தால் உடனே அகில இந்திய தொழில் நுட்பக் கவுன் சில் (AICT) என்ன செய்கிறது? தகுதி மதிப்பெண்களை உயர்த்தி அறிவிக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு கிடையாது. இதனை எதிர்த்து வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண் குறைவாகவும், சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண் வேறாகவும் இருக்கிறது. பல்கலைக் கழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தகுதி மதிப்பெண்ணையே (பொதுப் பிரிவுக்கு 70 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீதம்) அரசு கல்லூரியில் சேருவதற்கும் வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு சம்பந்தப் பட்டவர்களுக்குத் தாக்கீது அனுப்பியுள்ளது. மனப்பாடம் பண்ணி வாங்கும் மதிப்பெண்ணில்தான் ஒட்டு மொத்தமாக தகுதியும் கூடாரம் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக அடம் பிடித்துச் சாதிக்கப் பார்க்கிறார்கள் பார்ப்பனர்கள்.

டில்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களைச் சேர்ப்பதில் நிருவாகம் செய்த தில்லுமுல்லுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் ஒன்றைக் குறிப்பிட்டனர்.

அந்த நாட்களில் தேர்ச்சி பெற குறைந்தளவு மதிப்பெண்கள் 35 ஆகும். அம்பேத்கர் 37 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கல்லூரியில் சேர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு ஒரு அம்பேத்கரும், அருமையான அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்குமா என்று கேட்டனர். இந்த உண்மைகள் எல்லாம் உயர் ஜாதிக்காரரான - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது? கல்வித் துறைக்குப் பார்ப்பனர் அமைச்சராக இருப்பது ஆபத்தானது! ஆபத்தானது!! 9-6-2012

தமிழ் ஓவியா said...

நுழைவுத் தேர்வை நுழைய விடோம்!


ழைவுத் தேர்வு என்ன? சமூக நீதிக் கப்பலுக்கு ஓட்டை போட முனையும் எந்தச் சக்தியையும் முறியடிப்போம் தோழர்களே!

நுழைவுத் தேர்வு என்றால் என்ன பொருள் தெரியுமா? காலம் காலமாக தள்ளுபடி செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் - மனுதர்ம காலம் தொட்டு, கல்வி மறுக்கப்பட்ட பஞ்சம, சூத்திர மக்கள் ஆகி யோர்களை கல்விச் சோலைக் குள் நுழைய விடக் கூடாது என்கிற சூழ்ச்சியை மூடி மறைக்கும் முகமூடி!

மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை (கல்வி) அமைச்சர் கபில் சிபல் நுழைவுத் தேர்வு - நுழைவுத் தேர்வு என்று எதற் கெடுத்தாலும் சலங்கை கட்டி ஆடுகிறாரே - இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் குக்கிராமங்கள் உட்பட சமமான அளவுக்குக் கல்விக் கூடங் களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளனவா?

நகர்ப்புறக் கல்வி நிறுவனங் கள் என்றால் அய்ந்து நட்சத்திர வசதிகள், குக்கிராமங்கள் என்றால் குடிசை நிலை என்ற வேறுபாடுகள் இருக்கின் றனவா, இல்லையா?

கரும்பலகை இல்லாத பள்ளிகள் இன்னும் உண்டு என்ற வெட்கம் கெட்ட நிலையில், நுழைவுத் தேர்வு என்ற வக்கணையைத் திணிப்பது யாரை ஏமாற்ற? யாரை வஞ்சிக்க?

இந்தியா முழுமையும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கதைக் கிறாரே மத்திய அமைச்சர். இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டமா உள்ளது? பல இனங்கள், பல மொழிகள், பல கலாச் சாரங்கள், பல வகையான சுற்றுச் சூழல்கள் புவியியல் மாற்றங்கள் உள்ளனவா இல்லையா? இந்தியா ஒரே நாடு அல்லவே - துணைக் கண்டம்தானே! இந்த நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எப்படிப் பொருந்தும்?
போட்டித் தேர்வும், நுழைவுத் தேர்வும் ஒன்றல்ல - இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

நுழைவுத் தேர்வுதான் அறிவை அளக்கும் பாகைமானியா? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் நுழைவுத் தேர்வு குறித்து என்ன கூறினார்கள்? நுழைவுத் தேர்வை நடத்தி னாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந் தெடுப்பதை விட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று மண்டையில் அடித்தாற்போல கூறி யுள்ளார்களே. இதற்குக் கபில்சிபல் வைத்திருக்கும் பதில் என்ன?

அகில இந்திய நுழைவுத் தேர்வு என்கிறபோது எந்த மொழியில் எழுதப் போகிறார்கள்? ஆங்கிலத் திலும், இந்தியிலும்தானே? இந் தியைத் தாய்மொழியாகக் கொண் டவர்களுக்குத்தானே குலோப்ஜான் மாதிரி.

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்த முதல் தலை முறையைச் சேர்ந்தவர்கள் முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் ஒதுங்கிக் கிடக்க வேண்டுமா?

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கிராமவாசிகள் படிக்க ஆரம்பித்து விட்டனர், பட்டதாரிகள் ஆகிவிட் டனர், டாக்டர்கள் ஆகிவிட்டனர், பொறியாளர்கள் ஆகிவிட்டனர். இவர்களை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் தீவட் டியைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கின்றது; ஒடுக் கப்பட்ட மக்களே எச்சரிக்கை! எச்சரிக்கை !! தமிழ்நாட்டில் பட்டதாரியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலை முறையினருக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் எல்லாம் அகில இந்திய திட்டத்தின்கீழ் புதைக்க ப்படப் போகின்றன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஏற்கெனவே தமிழ் நாட்டிலிருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண் ணிக்கையில் 15 விழுக்காட்டை மத்திய தொகுப்புக்கு என்று கூறி விழுங்கி விட்டார்கள். மருத்துவ முதுநிலை படிப்புக்கும் 50 விழுக்காடு இடங்களைத் தூக்கிச் சென்று விட்டார்கள். இப்பொழுது அகில இந்திய நுழைவுத் தேர்வு என்று கூறி, இந்தியில் எழுதலாம் என்ற ஏற்பாடு செய்து எஞ்சிய இடங்களையும் தமிழ்நாட்டிலிருந்து கொள்ளை யடித்துக் கொண்டு போகப் போகி றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உஷார்! உஷார்!!

தமிழர் தலைவர் ஆணை பிறப் பித்து விட்டார்!

12 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் நுழைவுத் தேர்வை எதிர்த்து கழகம் நடத்த இருக்கும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் மாணவர் பட்டாளம் திரளட்டும்! திரளட்டும்!! இளைஞர் கள் ஈட்டி முனையாய்க் கிளம்பட்டும்! கிளம்பட்டும்!!

மாணவரணி, இளைஞரணி தோழர்களே என்ன செய்யப் போகி றீர்கள்? களத்தில் இறங்கிவிட் டீர்களா? இன்னும் இரண்டே நாட் கள்தான் - களப்பணி ஆற்றிடுவீர்! ஆற்றிடுவீர்!! 9-6-2012

தமிழ் ஓவியா said...

பொது நுழைவுத் தேர்வு யாரை மேம்படுத்த?


பொறியியல் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித் திருக்கிறார். வருகின்ற 12-06-2012 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தோழர்களும், தோழி யர்களும், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் ஆர்த்தெழுந்து நுழைவுத்தேர்வினை எதிர்த்து தமிழர் தலைவர் அவர்களின் ஆணையின்படி ஆர்ப்பாட்டத்தினை நடத்த இருக் கின்றார்கள். ஒரு காட்டில் பலவிதமான பறவைகள் இருந்ததாம். அந்த பறவைகள் காட்டிற்கு ஆட்சி செலுத்த பெங்குயின் பறவைகளுக்கு வாய்ப்பு வந்ததாம். பெங்குயின் பறவைகள் புத்திசாலிகள் அல்ல, புகழ் வாய்ந்தவைகளும் அல்ல ஆனால் காட்டின் அதிகாரம் அனைத்தும் அவைகளின் கையில் இருந்ததாம்.

மத்திய அமைச்சர் சொல்லும் திட்டம்: நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இந்த திட்டத்தின் கீழ் வரும். அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். அந்த நுழைவுத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் ஒரு பட்டியல் (டேட்டா) தயாரிக்கப்படும். அந்தப்பட்டியலில் முன் னணியில் உள்ள மாண வர்கள், மாணவியர்கள் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சேர் வார்கள், அடுத்தடுத்த பொறியியல் கல்லூரிகளில் அடுத்தடுத்த மாணவ மாணவிகள் சேர்க்கப் படுவார்கள். நாடு முழு வதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும். இந்த திட்டத்தின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனைப் போலவே மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கையும் அகில இந்திய நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறும். இது மட்டுமல்ல கலை, அறிவியல் கல்லூரிகளின் உயர் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கையும் இதே மாதிரியான நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

தமிழகமும் நுழைவுத் தேர்வும்: தமிழகத் திலே ஒரு காலத்தில் நுழைவுத்தேர்வு இருந்தது, அது திராவிடர் கழகத்தின் தொடர்ந்த போராட்டங்களால், தமிழக ஆட்சியாளர்களின் விழிப்புணர்வால் ஒழிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது மத்திய அரசாங்கம் மறைமுகமாக நுழை வுத் தேர்வு முறையை தமிழகத்திற்கும் சேர்த்து புகுத்துகிறது. இதனைத் தடுக்க வேண்டாமா?என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டிருக்கிறார். தமிழகத்தில் பொ றியியல் படிப்புக்கான கலந்தாய்வு சமூக நீதி அடிப்படையில் அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தில் முதன் முதல் பட்டதாரி என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, படிப்புக்கான கட்டணங்கள் விலக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட மாணவன் அதுவும் அவரது தந்தை கூலித்தொழிலாளி என்றால் அவருக்கு முன்னுரிமை கொடுக் கப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மாண வர்களில் மிகவும் அடித்தட்டில் உள்ள அருந்ததியர் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளை எல்லாம், சமூக நீதியை எல்லாம் குழிதோண்டிப்புதைக்க கொண்டு வரப்படும் திட்டமே இந்த நுழைவுத்தேர்வு திட்டமாகும்.

நுழைவுத் தேர்வும் கிராமப்புற மாணவர்களும்: இப்பொழுதுதான் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஓரிருவர் பொறியியல் பட்டதாரிகளாய் படித்து பட்டம் பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்களை ஒட்டு மொத்தமாக பொறியியல் கல்லூரிகள் பக்கம் வராம லேயே தடுப்பதற்கு கொண்டு வரப்படும் திட்டமே இந்த நுழைவுத்தேர்வு திட்ட மாகும். நமது மக்கள் பெரிதும் படிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், நம்மவர்களுக்கு புத்தி இல்லை என்றோ படிப்பில் ஆசை இல்லை என்றோ சொல்லி விட முடியுமா? பின் என்னவென்றால் படிப்புக்கு உள்ள சவுகரியமும் அதற்குப்பிடிக்கும் செல வுக்கு ஏற்ற பணமும் பெருவாரி மக்க ளாகிய நம்மிடம் இல்லை, அதனாலேயே பெரிதும் நம்மவர்கள் படிக்க முடிய வில்லை". இதில் படிப்பு என்பதற்கு பதிலாக நுழைவுத்தேர்வு எனக்குறித்தால் நுழைவுத்தேர்வுக்கு உள்ள சவுகரியமும், அதற்குப் பிடிக்கும் செலவுக்கு ஏற்ற பணமும் கிராமப்புற மாணவர்களிடம் இல்லை, ஒடுக்கப்பட்ட வகுப் பினை சேர்ந்த மாணவர்களிடம் இல்லை எனவே அவர்கள் ஒட்டு மொத்தமாக வராமல் தடுக்கப்படுவார்கள். பொறி யியல் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு என்று சொன்ன வுடனேயே இந்தியா டுடே பத்திரிகையில் பிரபலமான சில நிறுவனங்கள், இந்த நுழைவுத் தேர்வுக்காக நாங்கள் பயிற்சி கொடுக்கப்போகிறோம், எங்களிடம் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்வார்கள் என்று பேட்டி கொடுக்கின் றார்கள். ஆம், கொல்லைப்புற வழியில் உயர் ஜாதி மாண வர்கள் பலன் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் திட்டமே இந்த நுழைவுத்தேர்வு திட்டமாகும். நகர்ப்புற மாணவர்கள் , பணம் கொடுத்து பயிற்சி பெற்று குப்பன் வீட்டு, சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்பினைத் தட்டிப் பறிக்கும் திட்டமே நுழைவுத்தேர்வு திட்டமாகும்.

தமிழ் ஓவியா said...

குரங்கு கையில் பூமாலை: அனைத்து பொறியியல் கல்லூரிகளுக் கும் சேர்வதற்கான நுழைவுத்தேர்வினை யார் நடத்துவார்கள் என்றால், அய்.அய்.டி. நிறுவனங்கள் நடத்தும் என்று மத்திய அமைச்சர் சொல்லியி ருக்கிறார். அது மட்டுமல்ல, இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடக்கும், வினாத்தாள் தயாரிப்பு போன்றவற்றை அய்.அய்.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தயாரிப்பார்கள் என்று கூறியிருக்கின்றார். ஏற்கெனவே 17 அய்.அய்.டி. நிறுவ னங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்களோ, கிராமப்புற மாணவர்களோ, மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களோ தேர்ச்சி பெற முடியவில்லை. கான்பூர், டில்லி போன்ற அய்.அய்.டி.நிறுவனத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் இந்த பொது நுழைவுத் தேர்வு என்பதனை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக, அவர்களை சமாதானப் படுத்தும் விதமாக , இந்த தேர்வினை அய்.அய்.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நடத்துவார்கள் என்று கூறியிருக்கின்றார். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல் இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர் காலத்தை, பொறியியல் கல்லூரி சேர்க் கையை அய்.அய்.டி.யினர் தீர்மானிப் பார்கள் என்பது கொடுமையாகும், சமூக அநீதியாகும்

ஆதரிக்கும் பார்ப்பனர்கள்: மத்திய அரசின் கல்வி மசோதா குறித்தும், நுழைவுத்தேர்வினை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கமான அறிக் கைகளை விடுதலையில் கொடுத் துள்ளார். தனது அறிக்கையில் "ஒவ்வொரு மாநிலமும் மொழி, கலாச்சாரம், பண்பாட்டில் தனித்தனியானவை; இவற் றின் பன்முகக் கலாச்சாரத்தைப் பறித்து ஒருவகைப் பாசிசத்தை உருவாக்குவதே இம்மசோதா; எனவே நாடு தழுவிய அளவில் கல்வியாளர்களின் எதிர்ப்பும் அவசர அவசியமாகத் தேவை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் தான் நவீன காலத்து பாசிஸ்டுகளின் அரசான குஜராத் அரசினர் இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். பார்ப் பனர்கள் பத்திரிகைகளில் இதனை ஆதரிக்கின்றார்கள். நாம் இதனை எதிர்க்க ஒன்று சேரவேண்டாமா? எதிர்த்து குரல் கொடுக்க வேண்டாமா? ஆர்ப்பரித்து வாருங்கள், 12.6.2012 நுழைவுத்தேர்வினை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்.

- முனைவர் வா. நேரு
தலைவர், பகுத்தறிவாளர் கழகம் 9-6-2012

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் ஆ.இராசா செய்தியாளர்கள் சந்திப்பு


சென்னை, ஜூன் 9- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மற்றும் ஆ.இராசா ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

தலைவர் கலைஞர் அவர்களை நேற்று மாலை - சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வினையடுத்து கலைஞர் அவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஓராண்டுக்குப் பிறகு ஆ.ராசாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் தொடுத்த வினாவிற்குப் பதிலளித்த கலைஞர் அவர்கள், ``ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாகப் பிரிந்திருந்த தம்பியைப் பார்க்கும்போது, ஓர் அண்ணனுக்கு என்ன உணர்வு இருக்குமோ, அந்த உணர்வுதான் தம்பி ராசாவைப் பார்க்கும்போது எனக்கு இருந்தது என்று குறிப்பிட்டார். செய்தி யாளர் பேட்டியின்போது வினா ஒன்றுக்குப் பதிலளித்த ஆ.இராசா ``தலைவர் கலைஞரின் `நெஞ்சுக்கு நீதியை இருபது முறைக்கு மேல் படித்ததில் கிடைத்த வலிவு, இதைவிட சோ தனையைக் கூட தாங்கி வெளிவரக் கூடிய வலிவை எனக்குக் கொடுத்திருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி., புதுடெல்லியிலிருந்து நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக - அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.

அறிவாலயத்தில் - கலைஞர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வணங்கினார். தலைவர் கலைஞர் அவர்கள், ஆ.ராசாவுக்குப் பொன்னாடையும் மாலையும் அணிவித்து வாழ்த்தினார்.

அதேபோல் - கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி ஆகியோருக்கும் ஆ.ராசா, பொன்னாடை அணிவித்து வணங்கினார். பேராசிரியர், மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி ஆகியோரும் ஆ.ராசாவுக்குப் பொன்னா டைகள் அணிவித்தனர். கலைஞரை - ஆ.ராசா சந்தித்த இந்த நிகழ்வுக்குப் பிறகு, கலைஞர் அவர்கள், அறிவாலயம் - பத்திரிகையாளர் அரங்கில் திரண் டிருந்த ஏராளமான செய்தியாளர்களுக்கும், தொலைக் காட்சி நிருபர்களுக்கும் பேட்டியளித்தார்.

அப்பேட்டி வருமாறு:- செய்தியாளர் :- ராஜா அவர்களை இத்தனை மாதங்கள் கழித்து நீங்கள் பார்க்கிறீர்கள். அவரைப் பார்த்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? ராஜா எப்படி உணர்ந்தார்? கலைஞர் :- ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு மேலாக பிரிந்திருந்த தம்பியை, ஓர் அண்ணன் பார்க்கும்போது என்ன உணர்வு இருக்குமோ அந்த உணர்வுதான் என்னுடைய உணர்வாகவும் இருந்தது. என்னுடைய உணர்வுதான் தம்பி ராஜாவின் உணர்வும்!

செய்தியாளர் :- ராஜா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவாரா? கலைஞர் :- இப்போதே அவர் தீவிர அரசியலிலே தான் இருக்கிறார்.

செய்தியாளர் :- கூட்டங்களில் ராஜா பேசுவாரா?

கலைஞர் :- பேசுவார்.

செய்தியாளர் :- ராஜா! நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ராஜா :- தலைவர் அவர்கள் என்ன சொன்னார்களோ, அது தான் என்னுடைய உணர்வு.

செய்தியாளர் :- ராஜா இத்தனை நாட் களாக நீங்கள் ஏன் ஜாமீன் கோரவில்லை? ராஜா:- வழக்கு தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றது. எனவே பதில் சொல்ல விரும்ப வில்லை.

செய்தியாளர் :- ராஜா, அலைக்கற்றை வழக்கைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி உங்கள் மீது குற்றஞ்சாட்டியதாக நீங்கள் உணருகிறீர்களா?

கலைஞர் :- வழக்கு நடந்து கொண்டிருக் கிறது. அப்படியெல்லாம் நான் உணரவில்லை.

செய்தியாளர் :- வழக்கே ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள். சி.பி.அய். மேலே இந்த வழக்கைத் தொடர முடிய வில்லை என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- நீங்கள் சொல்வது சிந்திக்கத்தக்கது.

செய்தியாளர் :- ராஜா அவர்களே, மாநில அரசியலில் தொடர்ந்து ஈடுபட இருக்கிறீர்களா?

ராஜா :- தலைவர் அவர்கள் என்னை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களோ, அந்த வகை யில் நான் பணியாற்றுவது பற்றி தலைவரும், தலைமைக் கழகமும் முடிவெடுக்கும். செய்தியாளர் :- தலைவரைப் பார்த்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

ராஜா:- தலைவர் சொன்ன மாதிரிதான்!

செய்தியாளர்:- தொடக்கத்திலேயே வெளிப்படையாக இருப்பேன், இந்த வழக்கை நிரூபிப்பேன் என்றெல்லாம் சொல்லியிருக் கிறீர்கள். வழக்கு தொடர்ந்து ஓராண்டு ஆகி யிருக்கிறது. உங்கள் உணர்வு இப்போது எப்படி இருக்கிறது? வழக்கின் வெற்றி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ராஜா :- நீங்கள் வழக்கு விசாரணையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் இதுவரையில் எனக்கென்ன பாதிப்பு ஏற்பட்டுள் ளது? 45 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை எனக்கு எதிர்ப்பாக என்ன உள்ளது?

செய்தியாளர் :- இந்த வழக்கில் முக்கிய மான நீரா ராடியா போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்படவில்லை. ஆனால் நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். அதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

ராஜா :- இன்னும் யார் யார் பாக்கியிருக் கிறார்கள் என்று நீங்கள் சி.பி.அய்.யிடம் சொன்னால், அவர்கள் கைது செய்யலாம். (சிரிப்பாக)

``தலைவர் கலைஞரின் அறிவுரைப்படிபணியை தொடர்ந்து கொண்டிருப்பேன் - ராசா

செய்தியாளர் :- இந்த வழக்கிலே உங்களை நடத்திய விதத்திற்கும், இதுபோன்ற வழக்கிலே வேறு சிலர் நடத்தப்பட்ட விதத்திற் கும் வேறுபாடு இருந்ததாக உணர்கிறீர்களா?
ராஜா :- வழக்கு நீதிமன்றத்தின் முன்னால் இருக்கின்ற நிலையில், இதைப்பற்றி நான் பதில் சொல்வது சரியாக இருக்காது.
செய்தியாளர் :- நீங்கள் கைது செய்யப் பட்டது, அரசியல் பழிவாங்கும் செயல் என்று நினைக்கிறீர்களா?
ராஜா :- இந்தக் கேள்விக்கு நான் எதையும் யூகமாகக் கூற முடியாது.

``பனிக்குடத்தில் உள்ள குழந்தை போல கலைஞரின் கரங்களில் நான்! - ஆ.ராசா!

செய்தியாளர் :- நீங்கள் சிறையிலே இருந்த போது தி.மு. கழகம் உங்களுக்கு ஒத்துழைப்பு தந்ததா?

ராஜா :- பனிக் குடத்தில் உள்ள குழந்தையைப் போல நான் தலைவர் கலைஞர் கரங்களிலும், தலைமைக் கழகத்தின் கரங்களிலும் பத்திரமாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன்.

செய்தியாளர் :- நீங்கள் சிறையிலே இருந்தபோது ஒரு கட்டத்தில் உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதா?
ராஜா :- அப்படியெல்லாம் இல்லை.

செய்தியாளர் :- 15மாதங்கள் சிறையிலே இருந்ததால் நீங்கள் எதை இழந்ததாகக் கருதுகிறீர்கள்?

ராஜா :- தனி மனித சுதந்திரம்.

செய்தியாளர் :- 15 மாத காலம் சிறை யிலே இருந்த பிறகு உங்களுடைய அரசியல் வாழ்வில் உயர்வு ஏற்பட்டதாக நினைக் கிறீர்களா?

ராஜா :- தலைவர் கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதியை இருபது முறைக்கு மேல் படித்திருக்கிறேன். அந்த நெஞ்சுக்கு நீதி புத்தகம் கொடுத்திருக்கிற வலிவு, இதை விட சோதனையைத் தாங்கி என்னால் வெளிவர முடியும்.

செய்தியாளர் :- உங்களைத் தேர்ந் தெடுத்த நீலகிரி பகுதி மக்களுக்கும், உங்களுக்குச் சொந்த ஊரான பெரம்பலூர் பகுதி மக்களுக்கும் இந்த நேரத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ராஜா :- தொடர்ந்து என்னுடைய பணியைச் செய்து கொண்டே இருப்பேன். தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலுடன், தலைமைக் கழகத்தின் அறிவுரைப்படியும்.

செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் முக்கிய தலைவர்கள் விமான நிலையத்தில் உங்களை வரவேற்க வராதது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறதா?

ராஜா :- தலைவர் கலைஞர் அவர்கள் பேசியதற்குப் பிறகு, நேற்றையதினம் பொருளாளர் தளபதி அவர்கள் டெல்லிக்கு என்னுடைய இல்லத்திற்கே வந்ததற்குப் பிறகு, முழு தலைமைக் கழகமும் என்னை வரவேற்ற தாக நான் உணருகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றபோது நான் என்னுடைய பிறவிப் பயனை அடைந்ததாக உணருகிறேன். இதை விட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. செய்தியாளர் :- கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு உங்களுக்குத் தரப்படவில்லையே?

கலைஞர் :- இதுவரை செய்திகள் கேட்டீர்கள். இப்போது கலகம் பண்ணப் பார்க்கிறீர்கள். (சிரிப்பு) ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நல்ல பத்திரிகைக்காரர்களாக நடந்து கொள்ளுங்கள்.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் :- ராஜா அவர்களே, உங்கள் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது! இந்திய சுதந்திர வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? மக்களுக்கு என்ன பதில் சொல்ல விரும்பு கிறீர்கள்?

கலைஞர் :- இந்த வழக்கு பற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பத்திரிகை களிலே அதைப்பற்றி செய்திகள் வந்திருக் கின்றன. ஏற்கனவே இந்தத் துறையிலே இருந்த அமைச்சர்கள், யார் யார் காலத்தில் எப்படி நடைபெற்றது? என்ன முறை பின்பற்றப்பட்டது? என்பதெல்லாம் விளக்கப் பட்டிருக்கின்றன. இதற்கு மேல் அதைப்பற்றி எதுவும் சொல்லி, வழக்கின் விவரங்களுக்குள் செல்ல விரும்ப வில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ராஜா :- நீங்கள் பெரிய ஊழல் என்றெல்லாம் கேட்டீர்கள். இதைச் சொல்லும் போது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பிறகு சி.பி.அய். 35 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார்கள். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதை ஒத்துக் கொள்ளவில்லை. நீதி மன்றம் குற்றச் சாட்டை வரையும்போது (உயசபந கசயஅந) அதையும் ஒத்துக் கொள்ளவில்லை. எனவே 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது நீங்கள் பத்திரிகையாளர்கள் இதுவரை சொல்லிக் கொண்டே இருக்கின்ற விஷயம். அதை ஏற்றுக் கொண்டு எந்த நீதிமன்றமும் என்மீது குற்றச் சாட்டு சுமத்தவில்லை.

செய்தியாளர் :- 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்ற தணிக்கை அதிகாரியின் அறிக்கை காங்கிரஸ் கட்சியின் துணையோடு செய்யப்பட்ட சதி என்று நினைக்கிறீர்களா?

ராஜா :- இது உங்களுடைய கற்பனையான கேள்வி. செய்தியாளர் :- அப்படியானால் உண் மையான தொகைதான் எவ்வளவு?

ராஜா :- நீதி மன்றக் குற்றச்சாட்டின் வரைவை எடுத்துப் பாருங்கள். அதிலே அரசாங்கத்திற்கு எவ்வளவு இழப்பு என்று குறிப்பிடவே இல்லை.

செய்தியாளர் :- இந்தக் குற்றச்சாட்டினை உங்கள் மீது சாட்டிய போது, உண்மையை நிரூபிப்பேன் என்று சொன் னீர்கள். எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?

ராஜா :- நான்தான் உங்களிடம் கூறினேனே! 43 சாட்சிகள் விசாரணை முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் நிரம்பிய நீதிமன்றத்திலே நானே வாதம் செய்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எங்கள் வீட்டிலே எட்டாவது பையன். ஏழு அண்ணன் தம்பிகள் வீட்டிலே அக்காள் தங்கைகள் வீட்டிலே சோதனை நடந்தது. சி.பி.ஐ. வந்திருக்கிறார்கள். அமுலாக்கப் பிரிவினர் வந்திருக்கிறார்கள். வருமான வரித் துறையினர் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன கண்டுபிடித்தார்கள் என்று நீதிமன்றத்திலே கேட்டேன். அந்தக் கேள்வியை நான் தொடர்ந்து கேட்பேன்.9-6-2012

தமிழ் ஓவியா said...

(Otherwise) பிரசிடெண்டு வெங்கட்ராமய்யர் யோக்கியதை - நடத்தை - பாராட்டத் தகுந்ததா?
ஆர்.எஸ்.எஸ். காரர் குருமூர்த்தி அய்யரின் கோணல் பார்வை: ஒரு சாட்டையடி

- சர்ச்லைட்

இதுவரை வந்த குடிஅரசுத் தலைவர்களிலேயே ஒரே ஒரு பாரிஜாத மலர் பார்ப்பனப் பூணூல் திருமேனி ஆர். வெங்கட்டராமய்யர்தான் என்று பூணூல் திருமேனி குருமூர்த்திகள் சகஸ்ரநாமம் பாடுகிறார் இனமணி ஏட்டில்!

அந்த மகா மகா மேதையின் கடந்த கால நடவடிக்கை குடி அரசுத் தலைவர் பதவிக்கு இருந்த மரியாதையை ஒழிக்கும் வண்ணம் நடந்த நிகழ்ச்சிகள்.

(1) தனக்கு கோட்டூர்புரத்தில் அரண்மனை போன்ற இரண்டு வீடுகள் அடுத்தடுத்து இருந்தும், இலவசமாக அரசு பங்களா ஒன்றைத் தருகிறது என்ற வுடன் அந்த இரண்டையும் வாடகைக்கு விட்டுவிட்டு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை வாசஸ்தலமாக ஆக்கிட்ட யோக்கியர் அவர்! இதற்கு அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்ட நிலையில் டில்லியில் வீடு வாங்கிக் கொண்டு வாழ்ந்தவர் இவர்!

(2) தனது அரசு மனையான புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் மகள் மூலம் ஒரு டிரஸ்ட் அமைத்தது பற்றி இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியாவில் தனிக் கட்டுரைகள் எழுதப்பட்டு, அதிகார துஷ்பிரயோகம் என்று சுட்டிக் காட்டப்படவில்லையா?

(3) ஓய்வு பெற்ற பிறகு எந்த குடிஅரசுத் தலைவரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு, அப்பதவியின் மரியாதையைக் குறைத்ததே கிடையாது; கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரிகள் - ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட போது, புது டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கூறி அமர்ந்தவர் அல்லவா இந்த உத்தம புருஷன்?

இப்படிப் பலப்பல, என்றாலும் பூணூல் பாசம் இவர் சிறந்தவர் என்று பிரச்சாரம் செய்யச் செய்கிறது.10-6-2012

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி அடுத் துள்ள மேலவாசல் குமரபுரத்தில் இந்திரா காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சதாசிவம் கதிர் காமவள்ளி கல்வி நிறுவனத்திற்கு உள்பட்ட அருணாமலை கல்வியியல் கல்லூரியில் பெரியார் சிந்தனை மய்யம் துவக்க விழா நடைபெற்றது. 27.4.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்வி நிறுவனங் களின் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். அருணாமலை கல்வியியல் கல்லூரி நிருவாக இயக்குநர் தரங்கை ச.பன்னீர்செல்வம், அருணா மழை ஆசிரியர், பயிற்சி நிருவாக இயக்குநர் சி.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரடி அன்பழகன்

இதில் சிறப்பு அழைப்பாளராக தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் கலந்து கொண்டு பெரியார் பிறவாமல் இருந்திருந்தால் என்ற தலைப்பில் பெரியார் சிந்தனை மய்யத்தை துவக்கி வைத்து பேசும்போது, மருத்துவர், பொறியாளர் படிப்பும் பணியை விட ஆசிரியர் படிப்பும், பணியும் உயர்ந்த நிலையை அடைய கூடியவர்களை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆசிரியர் பயிற்சியுடன் உளவியல் கல்வியையும் கற்று எதிர்கால சந்ததி யினருக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் களுக்குள்ளது. அதற்கு காரணம் சமுதாய மாற்றம் செய்யும் சக்தி ஆசிரியர் பணியால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற சிந்தனை தோன்றினாலே தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஆண்டுதோறும் சதய விழா எடுக்கும் தமிழக அரசு கல்லணையை கட்டிய கரிகாற் சோழனுக்கு விழா எடுக்காமல் இருப்பது எதனால் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

இங்கு விழா துவங்கும் போது மாணவிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடினர். இந்த பாடலில் இரண்டு வரிகள் நீக்கப்பட்டு தற்போது பாடி வருகிறோம் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும். இதுபற்றி சிந்தனை தோன்றினால் விளக்கம் கிடைக்கும்.

பெண்களின் நிலை

நான்கு வகை வர்ணங்களுக்கு அடுத்த நிலையில் தான் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர். திருவி தாங்கூர் தேவஸ்தானத்தில் பெண்கள் ரவிக்கை அணிந்தார்கள் என்ற காரணத்தினால் மார்பகங் களை வெட்டிய நிகழ்ச்சியும், ரவிக்கைக்கு வரிபோடும் முறையும், கோவில்களில் பொட்டு கட்டுதல் என்ற தேவதாசிமுறையும் இருந்தது பல நூற்றாண்டுக்கு முன் அல்ல. நாம் வாழும் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தான் இந்த கொடுமைகள் பெண்களுக்கு எதிராக இருந்து வந்தன. நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெரியார் கருத்துகளை டாக்டர் முத்துலட்சுமிரெட்டி சட்டமன்றத்தில் எதிரொலித்து பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி பெரியாரின் போராட்டம் வெற்றி பெற்று பொதுமகள், விலை மகள் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையைச் சட்டம் போட்டு தடைவிதித்தது அரசு. இதற்கு காரணம் பெரியார் சிந்தனைதான்.
கற்புகரசிக்கு அடையாளம் கண்ணகி என கூறி சென்னையில் அரசு சார்பில் கண்ணகிக்கு சிலை வைத்த போது, அதனை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். நாட்டில் சரிபாதி பெண்கள் எண் ணிக்கை இருக்கும் போது ஒரே ஒருவர் மட்டும் தான் கற்புகரசியா என வெளிநாட்டுக்காரன் கேட்டால் என்ன பதில் சொல்வது என பகுத்தறிவு கொண்டு கேள்வி எழுப்பியதுடன் சிலையை பெண்கள் உடைத்து எறிய வேண்டும் என்ற எழுச்சி சிந்தனையை உருவாக்கி முழக்கமிட்டவர் பெரி யார். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சொத் தில் சரிபங்கு வழங்க வேண்டும் என்பதுடன் ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண் ணுக்கு உண்டு என்றவர் பெண்கள் தன்னம்பிக்கை யுடன், சுயமரியாதையு டன் வாழ திருமணத் திற்கு கற்பனையை அகற்ற விட வேண்டும் புரட்சிகருத்து களை வித் திட்டவர் பெரியார்.

1929ஆம் ஆண்டிலேயே....

1929ஆம் ஆண்டி லேயே துவக்கப்பள்ளி களில் பெண் களை மட்டுமே ஆசிரியர் களாக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நீதிக்கட்சி மாநாட்டில் கொண்டு வந்து நிறைவேற் றியவர் பெரியார். பெண் களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதுடன், விளை யாட்டு, கனரக வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் பெரியார். இதனால்தான் இன்று அரசியல், கல்வி, விளை யாட்டு, வேலை வாய்ப்புகளில் பெண்கள் சாதனையாளர் களாக விளங்க காரணம் பெரியார் சிந்தனை புரட்சிதான்.

மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு பாட்டிகள் சாமியாடிய காலம் மாறி பெரியாரின் பகுத்தறிவு புரட்சி மூலம் பேத்திகள் கணினி உலகத்தில் கோலோச்சி வருகின்றனர். மாணவிகள் அறிவியல் கருத்து என்பது வேறு, அறிவியல் மனப்பான்மை வேறு என்பதை உணர வேண்டும். எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும், அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுயமரியாதை உணர்வுடன் முன்னேற்றப் பாதையில் புதிய உலகம் படைக்க பெரியார் சிந்தனைகளை துணை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார் அதிரடி அன்பழகன்.11-6-2012

தமிழ் ஓவியா said...

மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு


மதுரை: மதுரை ஆதீன மடத்தில் நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாசன நடனம் ஆடியதாக கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
நான் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். கடந்த மாதம் 12-ந்தேதி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் என்னை மடத்திற்கு அழைத்தார். அங்கு அருணகிரிநாதருடன் நித்தியானந்தாவும் இருந்தார்.
அப்போது அருணகிரி நாதர் என்னிடம் மதுரை ஆதீன மடத்திற்கென்று தனி புகழ் உள்ளது. பிரச்சினைகள் செய்ய வேண்டாம். நித்தியானந்தா மிகவும் ஒழுக்கமானவர். புனிதமானவர் என்று கூறினார்.
அப்போது அவரிடம், நான் மடத்திற்கு எதிரானவன் அல்ல. ஆதீன மரபுபடி நித்தியானந்தா மொட்டையடித்து உங்களுக்கு கீழ் பணி செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறினேன். பின்னர் ஆதீன மடத்தின் மாடியில் நடைபெறும் பஜனையில் கலந்து கொள்ள என்னை அழைத்தனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் சீடர்கள் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் என்னிடம் அங்கிருந்த சீடர்கள் புனித நீர் என்று கூறி ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்தனர். அதை குடித்த எனக்கு சிறிது நேரத்தில் மயக்கம் வந்ததுபோல உணர்வு ஏற்பட்டது. அந்த தண்ணீரை குடித்த சீடர்கள் உள்பட அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.
அந்த நேரத்தில் புலித்தோல் விரிக்கப்பட்டது. அதில் யானை தந்தம், மான் கொம்புகள் பரப்பப்பட்டது. அப்போது நித்தியானந்தாவின் பாடல்கள் ஒலிபரப்பானது. நடிகை ரஞ்சிதா மயக்க நிலையில் நித்தியானந்தா அருகிலேயே நடனமாடி கொண்டிருந்தார். வைஷ்ணவியும், பெண் சீடர்களும் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர்.
மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் முயற்சி நடக்கிறது. ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என நான் விளக்குத்தூண் போலீசில் கடந்த மாதம் 15-ந்தேதி புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக போலீஸ் டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-----------------http://tamil.oneindia.in/news/2012/06/11/tamilnadu-obscene-dance-madurai-aadheenam-155487.html