Search This Blog

28.6.12

கணேசனும், லட்சுமியும், காளியும் அமெரிக்கனைச் சுட்டெரிக்காதது ஏனோ?


இந்துக்களின் ஆக்ரோஷ கடவுளான காளியை அமெரிக்காவில் ஒரு நிறுவனம் எதற்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது தெரியுமா? காளியின் பெயரால் பீர் அறிமுகமாகியுள்ளது. (இதில் கோபப்பட என்ன உள் ளது? இந்துக் கடவுள்கள், அவதாரங்கள் குடிக்க வில்லையா?)

லட்சுமியின் படம் அமெரிக்காவின் கழிப் பறையில் ஓவியமாக வரையப்பட்டதுண்டு. விநாயகரின் படம் பெண்களின் உள்ளாடைகளில் இடம் பெற்றது.

செருப்புகளில் விநாயகர் குடியிருந்தார். சிவபுரத்து நடராசன் சிலை கடத்தப்பட்டு, நாட்ரன்துரையிடம் அமெரிக்காவில் சரண் அடைந்தது. நடராசர் நடனமாடுவது போல இருந்த காட்சி அவர்களை ரசிக்கச் செய்தது. அவர் கையில் இருந்த தட்டை சிகரேட் தூளைப் படியவைக்கும் (ஹளா கூசயல) கிண்ணமாகப் பயன் படுத்திக் கொண்டார்.

இந்துக்களின் மனம் மிகவும் புண்படுத்தப்பட் டது என்று குரல் கொடுத்தனர். நாடாளு மன்றத்தில் பி.ஜே.பி. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் அனல் கக்கி னார். அமெரிக்கத் தூதரை அழைத்து நடந்த காரியங்களுக்காக மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரித்தார் - ஒன்றும் நடந்துவிடவில்லை.

மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுக்கலாம். பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கலாம், காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறக்கலாம். மாண்டவ்ய முனிவர் தவளைக்குப் பிறக்கலாம். சவுனக முனி நாய்க்கும் பிறக்கலாம்; ஜாம்பவந்தர் கரடிக்குப் பிறக்கலாம்.

மகாவிஷ்ணுவின் மார்பின் கறுப்பு மயிரில் கிருஷ்ணன் பிறக்கலாம் வெள்ளை மயிரில் அவன் அண்ணன் பிறக்கலாம்!

இப்படியாக சாத்திரம் புராணங்கள் எழுதி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அமெரிக்கக்காரன் இந்துக் கடவுள்களைக் கேலி செய்து விட்டான் என்று குதிப் பதில் பொருளுண்டோ!

அவன் செய்ததாவது கேலி, நீ செய்ததோ, அசிங்கம் - ஆபாசமாயிற்றே!

அதுசரி உங்கள் கணேசனும், லட்சுமியும், காளியும் அந்த அமெரிக்கர்களை ஒன்றும் செய்யவில்லையே! உம் கடவுள் சக்தி பூஜ்ஜியம் தானோ!

அதுவும் காளி சிவமூர்த்தியின் கோபாக்னியாயிற்றே - பத்ரகாளியாயிற்றே. அந்த அமெரிக்கனைச் சுட் டெரிக்காதது ஏனோ? குடலைக் கிழிக்காதது ஏனோ! எல்லாம் உல்டாப் தானோ!

---------------- மயிலாடன் அவர்கள் 28-6-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

பிள்ளை விளையாட்டைப் பாரீர்!


மதுரை மீனாட்சிக் கோயிலைக் குண்டு வைத்துத் தகர்க்காமல் இருக்க கடவுளைப் பாதுகாக்கும் நோக்கோடு மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படும் காட்சி.

கோயில்களில் உள்ள கடவுள்களும், சிறைக் கைதிகளும் ஒன்றுதான்; கைதிகளைப் போல பூட்டித்தான் வைத்திருக்கிறார்கள். மணி அடித்து சிறையில் கைதிகளுக்கு உணவு கொடுப்பது போல கோயிலிலும் மணி அடித்துதான் ஆறு காலப் பூஜை நடக்கிறது.

கருவறைக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகள் வெறும் பொம்மைகள் என்பது நம்மைவிட அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

முக்கியமாக கோயில்களில் உள்ள மூல விக்கிரகங்கள் இப்பொழுது அந்தக் கோயில் களில் கிடையாது. பக்கத்தில் உள்ள பெரிய கோயில் ஒன்றில் அவற்றைப் பாதுகாத்து (ளுயகந னுநயீடிளவை) வைத்துள்ளனர். (இன்சூரன்சும் செய்யப்படுகிறதாம்) மூல விக்கிரகங்களுக்குப் பதில் போலி சிலைகள் (னுரயீடஉயவந) மூலக் கிரகங்களில் வைக்கப்படுகின்றன.

முக்கிய திருவிழாக் காலங்களில் மட்டும் தக்க பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் மறுபடியும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. (அய்ம் பொன்னால் ஆனது - திருடப்பட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!)

முக்கிய கோயில்களில் உள்ளே நுழையும் போது பக்தர்கள் மெடல்டிடெக்டர் வைத்துச் சோதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய்கள் சுற்றித் திரிகின்றன. (இவ்வளவையும் மீறி சாமி சிலைகள் திருடப்படுகின்றன என்பது வேறு சேதி)

இன்னொரு தகவல் முக்கியம்; அதுவும் வரலாற்றுத் தகவல்:

சிதம்பரம், சிறீரங்கம், மதுரைக் கோயில்களில் இருந்த மூல விக்கிரகங்கள், முஸ்லீம் அரசர்களின் படையெடுப்பால் கொள்ளையடிக் கப்படும் என்று பயந்து அச்சிலைகளை வேறு இடத்திற்குத் தூக்கிச் சென்றனர் என்பதுதான் அந்தச் சுவையான தகவல்கள் இதோ! 24.4.1648 முதல் சிதம்பரம் நடராஜன் சிலை வெளியேற்றப் பட்டு முதல் நாற்பது மாதங்கள் குடுமியான் மலை யிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. பிஜப்பூர் சுல்தானின் படையெடுப்புக்குப் பயந்து கொண்டே இது நடந்திருக்கிறது. கடைசியில் இந்த நடராஜனை மராட்டிய மன்னன் சகசிதான் மதுரையிலிருந்து மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தான் (ஆதாரம்: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், மறு வெளியீடு மணியனின் இதயம் பேசுகிறது)

அதேபோல முகமது பின் துக்ளக் திருவரங்கம் நோக்கிப் படையெடுத்து வருகிறார் என்றவுடன் வைணவப் பார்ப்பனர்களின் வயிற்றில் எல்லாம் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

பிள்ளை உலகாசிரியர் என்பவர் ரெங்க நாதனை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் போவது என்றும் நாச்சியார் விக்கிரகத்தை இன்னொரு கோஷ்டியினர் வேறு திசையில் எடுத்துக் கொண்டு போவது என்றும் தேசிகர் (வைணவ மதத்தில் பெரிய மகான் என்று போற்றப்படும் வேதாந்த மகா தேசிகன்) ஏற்பாடு செய்துவிட்டார்.

தேசிகரும், சீடர்களும் மேற்கு நோக்கிப் பயணித்து சத்தியமங்கலம் சென்று அங்கே சில காலம் தங்கினர். இதற்கிடையே இந்தக் கோயில்களும் மூடப்பட்டன. மதுரை மீனாட்சியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாள்.

விஜயநகர பிரதாணகோபணா என்பார் படையெடுத்து சமயபுரம், சிறீரங்கம் முதலிய இடங்களைக் கைப்பற்றி மதுரை சுல்தானியர் களையும் முறியடித்து, சிலைகள் மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டன.

இவை எல்லாம் நம் கைச் சரக்கல்ல - ஈரோட்டாரின் கற்பனையும் அல்ல - விடுதலையின் வேண்டா வெறுப்புச் சேதியும் அல்ல.

ஆன்மீகத்தை அப்படியே காப்பாற்றுவதற் காகவே அவதரித்ததாகக் கூறிக் கொள்ளும் மணியன் அய்யர்வாளின் ஞானபூமி இதழிலும் (ஆகஸ்டு 1983) மற்றும் சவுரி எழுதிய இந்தி யாவின் கலையும் கலாச்சாரமும் எனும் நூலிலும் (பக்கம் 145-146 வானதி பதிப்பகம் வெளியீடு) காணப்படுபவை.

இந்தக் கூத்து ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களில் அழித்தல் கடவுளாகிய - திரிபுரம் எரித்த விரிசடையோனான சிவபெருமானின் கதை என்ன தெரியுமா?

அந்தத் திருக்கைலாயங்கிரி எனும் பூலோக சொர்க்கம் இப்பொழுது யார் கையில் இருக்கிறது தெரியுமா? சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் பதுங்கிக் கிடக்கிறது!

ஹி... ஹி... இந்தப் பொம்மைகள்தான் கடவுள்களாம் - சர்வசக்தி படைத்தவையாம்.

இவற்றைப் பிரஸ்தாபிக்க ஸ்தலப் புராணங் களாம் திருமஞ்சனங்களாம் - ஆருத்ரா தரிசனமாம் - சிவராத்திரிகளாம் - வைகுந்த ஏகாதசிகளாம் - பிரமோத்வங்களாம் - தேர்த் திருவிழாக்களாம்!

சின்ன பிள்ளைகள் மண் வீடு கட்டி, சிறு நீர் கழித்து குழம்பு வைத்து விளையாடுகிறார்கள் என்றால் பெரியவர்கள் பெரிய தேர் கட்டி ஊர் வலம் நடத்தி கிச்சு கிச்சு விளையாடுகிறார்கள்.

இதைத்தான் வடலூரார் பிள்ளை விளை யாட்டு என்றாரோ! 28-6-2012

தமிழ் ஓவியா said...

கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கு கழகத் தலைவரின் கருத்துப் புதையல்!


நமது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த சில நாட் களாகக் கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்குத் திராவிட இயக்கம் 100 என்னும் தலைப்பில் பல அரிய வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிப் பேசி வருகிறார்கள்.

ஏற்கெனவே வாழ்வியல் சிந்தனை கள் என்பதுபற்றி மனித சமுதாயம் சிந்தித்திராத பல அரிய கருத்துக்களை எழுதி வருகிறார். அவற்றை மக்கள் சிந்தித்துப் பார்க்கவும், வாழ்வியல் நடைமுறையில் பல உண்மைகளை அறிந்து, வாழ்ந்து நலம் பெறவும் அய்யா அவர்கள் சில ஆண்டுகளாக எழுதி வருவது அனைத்துப் பிரிவினர்க்கும் வாய்க்கப் பெற்ற சிறந்த கருவூலமாகும்!

அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் இப்பொழுது திராவிட இயக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் புரிந்து கொள்ளும்படியாக மிகமிக எளிய பேச்சு நடையில் நேருக்கு நேர் அமர்ந்து, ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவதுபோலத் தெளிவான முறையில் மேற்கோள் விளக்கங்களுடன் கலைஞர் தொலைக் காட்சியில் நாளும் காலை 8 மணிக்கு உரையாற்றி வருகிறார். அவரது கருத் தாழம் மிக்க உரையை ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் தவறாமல் கேட்டு உள்ளத்தில் பதிய வைப்பார்களே யானால் அறிவு வளர்ச்சியும், மான உணர்ச்சியும் உடையவர்களாக அவர்கள் சுயமரியாதை வாழ்வு பெற்று விளங்க வழிவகுக்கும் என்பது உறுதி!

காங்கிரசு இயக்கத்தில் உள்ள பலர் காங்கிரசு இயக்கம் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் 1800-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்திலேயே அயல்நாட்டவர் ஒருவரால் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது என்ற உண் மையைக் கூறி விளக்கமும் தந்தார் அய்யா அவர்கள். இது போலவே திராவிட அமைப்பும் நீண்ட காலத்திற்கு முன்பே இருந்ததையும் 1910-ஆம் ஆண்டு வாக் கில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியதற்கான காரணத்தையும் கூறினார். அதன் வளர்ச்சியாக நீதிக் கட்சி வரலாறு, பார்ப்பனரல்லாதார் பெற்ற நலன்கள், சுயமரியாதை இயக்கமாக மாறியதன் பலன், திராவிடர் கழகம் மலர்ந்த பரிணாம வளர்ச்சி ஆகிய வற்றையெல்லாம் அய்யா அவர்கள் நிரல்பட விளக்கி உரையாற்றினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் பள்ளியில் படித்த காலத்திலேயே சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்றவர் என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி விளக்கினார்கள். நாயுடு, முதலியார், நாயக்கர் என்று அக்காலத் தில் புகழப்பட்ட சமுதாயச் சீர்திருத்தம் கண்டவர்கள் ஆற்றிவந்த உரிமை முழக்கங்களையும், பார்ப்பனர்களால் இழைக்கப்பட்டு வந்த இடையூறுகள் கொடுமைகள் பற்றியும் விரிவாகத் தொலைக்காட்சி மூலம் தெளிவு படுத்தினார்கள். அய்யா அவர்கள் கூறும் செய்திகளுக்கு இந்துப் பத்திரிகை ஆதாரங்களை மிகத் தெளிவாக - பொறுமையாக - சுவையாக விளக்கி உரை யாற்றி வருவது, எதிர்காலத் தமிழர்க்குக் கிடைக்கும் மிகப் பெரிய நன் கொடையாகும்!

இடைச் செருகல் இல்லாத - கற்பனை கலவாத தூய திராவிடர் இயக்க வர லாற்றைத் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களைத் தவிர இனி வேறு எவராலே தர முடியும்?

நடந்த நிகழ்ச்சிகள்பற்றிய இடம், காலம், இத்தனையாவது ஆண்டு என் றெல்லாம் அவரது உரை வீச்சில் குறிப் பிடுகிறார். அத்தனையும் நூலாதாரங் களோடு, அவற்றின் ஆசிரியர்களையும் அவ்வப்போது காட்டுகிறார்.

தமிழர் தலைவர் அவர்கள் கொள் கையின் தனி மனிதராய்த் திராவிட இயக்கப் பணியைப் புதுப்பிக்கும் பெருந் தொண்டில் ஈடுபட்டுள்ளார் என்பது இன்று நம்மில் சிலருக்குப் புரியாதிருக் கலாம். ஆனால், அய்யா அவர்கள் இன்று தொடங்கியுள்ள இந்தப் பணி, பார்ப் பனர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்ற செயலாகும் என்பது அவாளுக்கு நன்றாகத் தெரியும்! எனவே அன்று தந்தை பெரியார் அவர்களுக்கு எத்தகைய துன்பங்களையும், தொல்லைகளையும் பார்ப்பனர்கள் கொடுத்தார்களோ, அதுபோன்ற செயலை வெளிப்படையாக இன்று செய்ய முன்வராவிட்டாலும் அவர் களுக்காகத் திறந்திருக்கும் கொல்லைப் புற ஊடக வழிகள் கை கொடுக்கத் தயங்கா.

ஆனால் தந்தை பெரியார் சுயமரி யாதைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற தமிழர்கள் - இளைஞர்கள் - பெண்கள் ஏராளமாக இன்று வளர்ந்துள்ளனர் என்பதால் கழகத் தலைவர் அய்யா அவர்களின் உரைவீச்சு கலைஞர் தொலைக்காட்சியில் இனி நாளுக்கு நாள் ஒளிவீச்சாக வளர்ந்து திராவிட இயக்கம் புதுப் பொலிவுடன் திகழவுள்ளது என்பதை இனிவரும் இளைஞர் உலகம் மெய்ப் பிக்கும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!

தென்மொழி ஞானபண்டிதன்
(மாநிலத் துணைத் தலைவர்
பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)28-6-2012

தமிழ் ஓவியா said...

தினமணியின் திரிபுவேலை


எம்.பி.பி.எஸ்., சென்னை கல்லூரிகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? எனும் தலைப்பில் தினமணி நேற்று (27.6.2012) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 140 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 127 எம்.பி.பி.எஸ். இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 128 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

மேலே குறிப்பிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் முற்பட்ட வகுப்பினருக்கு (எஃப்ஓசி) மொத்தம் 123 எம்.பி.பி.எஸ். இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தம் 106 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 123 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால் 200-க்கு 199.50 கட்ஆஃப் மதிப்பெண் இருந்தால் மட்டுமே சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கும் என்பதுதான் இந்தச் செய்தி. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது முற்பட்ட வகுப்பினருக்கு 123 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படியோ, இடஒதுக்கீட்டு முறையிலோ எந்த இடத்திலாவது முற்பட்டவர்களுக்கென்று தனியாக சதவிகித அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவா? உயர்ந்த ஜாதியினருக்கு இடஒதுக்கீடுக்கு வகை செய்ய எங்காவது சட்டமோ, ஆணையோ உள்ளதா? உண்மையும், நடைமுறையும் இவ்வாறு இருக்கையில், உண்மைக்கு மாறாக தினமணி இப்படி செய்தி வெளியிடுவது ஏன்? இடஒதுக்கீடு - பார்ப்பனர் பார்வையில் விரும்பத் தகாததாக இருக்கக் கூடும். அதற்காக தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்ய ஆசைப்படலாமா?

பார்ப்பனர்கள் ஏதோ தெரியாமல், அறியாமை காரணமாக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. நன்றாகவே தெரியும் அவர்களுக்கு; இருந்தாலும் மக்களைக் குழப்புவதன் மூலம் ஓர் அற்ப மகிழ்ச்சியில் கொஞ்சமாவது மிதக்கலாம் அல்லவா!

இது முதன் முறையில்லை; இதற்கு முன்புகூட தினமணி குழுமத்தின் ஆங்கில நாளேடான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்று சட்டத்தில் இருக்கிறதே தவிர எந்த இடத்திலும் பொருளாதார ரீதியாக என்று குறிப்பிடப்படவில்லை) செய்தி வெளியிட்டது. அப்பொழுதே அதனைக் கண்டித்து விடுதலை எழுதியதும்.

அதே போல OC என்பதை திறந்த போட்டி (Open Competition) என்பதற்குப் பிற சாதியினர் (Other Community) என்று திரிபுவாதம் செய்து வந்ததும் பார்ப்பன ஏடுகளே.

செவிலியர்கள் விளம்பரம் ஒன்று இப்படி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திராவிடர் கழகமே. அப்பொழுது மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே அதனைத் திருத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான - தேர்வு ஆணையத்தின் விளம்பரத்திலும் திறந்த போட்டி என்பதை - பிற சாதியினர் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. விடுதலை சுட்டிக் காட்டியதற்குப் பிறகு திருத்த விளம்பரம் வெளியிடப்பட்டது.

இப்படி கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுக் கொண்டே திராவிடர் கழகமும், விடுதலையும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போதே - இப்படி திரிபு வேலைகளில் திரிநூலார் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

மத்திய தேர்வாணையம் வரை இத்தகைய சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்பட்ட துண்டு. எந்தக் கட்சிப் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி. இடஒதுக்கீடு எனும் பிரச்சினையில் ஒன்றாகவே சிந்திப்பார்கள். சமூக நீதிக்கு எதிராகவே கொடி பிடிப்பார்கள் (நீதிபதிகள்கூட விதிவிலக்கு இல்லை என்பது கசப்பான உண்மையாகும்)

தினமணியின் ஆசிரியராக துக்ளக் குடும்பத் தில் தயாரிக்கப்பட்டவர் இருக்கும் பொழுது, இது போன்ற விஷமங்கள் நடைபெறுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் பார்ப்பன ஏடுகளைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பார்த்து கடைசியில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சரணா கதி அடைந்தும் அவர்கள் பாடம் பெறவில்லை - வெட்கக் கேடு! 28-6-2012

தமிழ் ஓவியா said...

இதே எட்வர்ட் மன்றத்தில் 1944இல் தந்தை பெரியார்: எடுத்துக்காட்டி கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் உரை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
வியாழன், 28 ஜூன் 2012 16:20
E-mail Print


மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுச்சி உரையாற்றினார். (24.6.2012)

மதுரை, ஜூன் 28-ஆண்டாண்டு காலமாய் ஆரியர்களின் அடிமை களாய் இருந்த நாம், இருள் அகற்றும் சூரிய னாய் வந்த தந்தை பெரி யாரால் உணர்வு பெற் றோம், உரிமை பெற் றோம், ஆட்சி பெற்றோம், அதிகாரம் பெற்றோம் என்பதையெல்லாம் மறந்து பார்ப்பனர்கள் சொல்லித்தரும் பாடத்தை திருப்பி சொல்லும் அடி மைகளாய் புதிதாய் கிளம்பியிருப்போரின் அறியாமையை அகற்ற திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் அவர்களால் தரப்பட்ட திராவிடத்தால் வீழ்ந் தோம் என்பது அறி யாமையா? ஆணவமா? என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் மதுரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 24.6.12 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற் றது.

அறியாமையே!

கருத்தரங்கிற்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக செய லாளர் இரா.திருப்பதி அனைவரையும் வர வேற்றார். திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன் ராசா, நெல்லை மண்டல திராவிடர் கழகத் தலை வர் பொறியாளர் சி.மனோ கரன், மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தலை வர் க.அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை மதுரை மண்டல திராவிடர் கழகத்தலைவர் வே.செல்வம் சிறப்பாக ஒருங்கிணைத்தார். தொடக்க உரையாக திராவிடர் கழகப் பேச் சாளர் அ.வேங்கை மாறன் உரையாற்றினார். கருத்தரங்கத்தின் முன் னோட்டமாக மதுரை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் மீ. அழகர்சாமி உரையாற் றினார். தொடர்ந்து திராவிடத்தால் வீழ்ந் தோம் என்பது அறியா மையே என்னும் தலைப் பில் திராவிடர் கழகத் தின் மாநில சட்டத் துறைத் தலைவர் வழக்க றிஞர் கி.மகேந்திரன் உரையாற்றினார்.

அகம்பாவமே!

திராவிடத்தால் வீழ்ந் தோம் என்பது அகம் பாவமே என்னும் தலைப் பில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றி னார். முடிவில் தலைமை ஏற்ற திராவிடர் கழ கத்தின் பொதுச்செய லாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் மிகச் சிறப்பாக பல்வேறு தக வல்களை, நிகழ்வு களைக் குறிப்பிட்டு திராவிடத்தால் வீழ்ந் தோம் என்பது-அறியா மையே, அகம்பாவமே என்பதோடு இத்தலைப் பில் விபீஷண தன் மையே என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். மதுரையை மய்யப்படுத்தி....

அந்தக்காட்டிக் கொடுக்கும் தன்மை யால்தான் தமிழர்களில் சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கிளம்பியிருக்கிறார்கள். சிலர், அதனை அலட் சியப்படுத்தி செல்ல லாம், ஆனால் மக்கள் மன்றத்தில் இக்கருத்து வைக்கப்படுவதால், மக்களிடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும்என்னும் அவசியத்தில்இக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கூறி , மதுரையை மய்யப் படுத்தி 1944இல் இதே எட்வர்டு ஹாலில் தந்தை பெரியார் உரையாற்றியி ருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா மற்றும் பல தலைவர்கள் உரையாற்றியிருக்கிறார்கள், இதே மதுரையில்தான் எண்ணாயிரம் சமணர் கள் கொல்லப்பட்டார் கள், இதே மதுரையில் 1610 இல் 10000 பேர் படித்தார்கள் ,பத்தா யிரம் பேரும் பார்ப்ப னர்கள் ஆனால் இன் றைக்கு 89 சதவீதம் பார்ப்பனரல்லாத, பிற் படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகள் படிப்பதை சுட்டிக் காட்டி மிகச் சிறப்பாக உரையாற்றி னார்.

28-6-2012

தமிழ் ஓவியா said...

பெண்கள் வாழத் தகுதியான நாடு எது?

பெண்கள் வாழ தகுதி யான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தைப் பிடித் துள்ளது. இந்தியாவில் பெண் களுக்கு எதிரான வன் முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.

உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவற்றை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி-20 நாடுகளிலேயே பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும்.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்தி ரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங் களால் பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.28-6-2012