Search This Blog

31.3.10

நடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப்-கடவுளை அடைய ஆனந்த வழியாம்!


நித்யானந்தா உள்ளிட்ட மோசடி சாமியார் கும்பலை கைது செய்க!
உள்நாட்டு, வெளிநாட்டு சொத்துகளை அரசுடைமையாக்குக!
கருநாடக, மத்திய அரசுகளுக்கு தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்!

காமலீலை நித்யானந்தா சாமியார்களின் மோசடி கும்பலைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும். வெளிநாடு, உள்நாடு ஆசிரம சொத்துக் களை அரசுடைமையாக்கி, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தவேண்டும். கருநாடக அரசும், மத்திய அரசும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

ரூ.5 ஆயிரம் கோடியில்
நித்யா சுகபோக வாழ்க்கை அம்பலம்

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற ஓர் 32 வயது இளைஞன் திடீரென நித்தியானந்தாவாக அவதாரம் எடுத்து, காவி உடை தரித்து, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆன்மிக வியாபாரம் செய்து, சுமார் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துகளைச் சேர்த்து, பல ஊர்-களிலும் மடங்கள், தியான பீடங்கள் என்று அமைத்து, அதில் சினிமா நடிகைகள், வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணவிலக்குப் பெற்ற பெண்கள், விதவைகள், குடும்பப் பெண்கள் முதலிய பலருடன் யோகா, தியானம் என்பவைகளைக் காட்டி அவர்களின் கற்பையும் சூறையாடி, சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது!

இந்த கிருஷ்ணருக்கு வந்து பணிவிடை செய்த பெண்களுக்கெல்லாம் கோபிகா என்ற அடைமொழியில் பெயர்கள்! என்னே ஆன்மிகம்! என்னே கடவுள் பக்தி!!

லீலைகள் - அசிங்கங்கள்

இளம் பையன்கள் எல்லாம் கடத்தப்பட்டும், ஓடோடி வந்து இந்த ஆசிரமத்தில் தங்கியவர்களுடன் லீலைகள் ஆத்ம போதனை என்று எழுதமுடியாத அசிங்கங்களின் அரங்கேற்றங்கள் எல்லாம் நடந்ததுபற்றி, தொலைக்காட்சிகளும், மீடியாக்களும், நக்கீரன் போன்ற ஏடுகளும் வண்டி வண்டியாக தகவல்களைத் தந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன!

தவியோ தவி என்று தவித்து!

பல படித்த பாமர முண்டங்கள் இந்த மோசடிப் பேர்வழி விரித்த ஆன்மிகப் பயிற்சி தியான, யோகா பயிற்சி வலைகளில் நன்றாக மாட்டிக்கொண்டு, அறுத்தெறியத் தெரியாது வேடனிடம் சிக்கிய புள்ளி மான்களாக ஆகி, தவியோ தவி என்று தவிக்கின்றார்கள்! அவமானத்தில் தலைகுனிவுடன் உள்ளார்கள்.

ஏதோ ஒரு குப்பையைக் கிளறினால் ஏதேதோ வருமாமே அதுபோன்று இந்த ஆசாமிபற்றி வரிசையாக அருவருப்புச் செய்திகள்.

சொகுசானந்தாவுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள்?

குறுகிய காலத்தில் இந்த சுந்தர கோஷ் சொகுசானந்தாவுக்கு இவ்வளவு சொத்துகள் சேர்ந்தது எப்படி?

இந்த மோசடிப் பேர்வழியை வளர்த்துவிட்ட குற்றவாளிகள் பெரிதும் வார ஏடுகளே!

மீடியாக்களின் எல்லை மீறல் விளம்பரங்கள் விதவிதமான போஸ்களில் அந்தப் பித்தலாட்டக்காரனின் படம், வாரந் தவறாமல் கட்டுரை அதையும் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் சி.டி., புத்தகங்கள் தமிழ், இங்கிலீஷ் மற்றும் பல மொழிகளில் எழுதிட பல கூலி போலி எழுத்தாளர்கள் , ஏஜண்டுகள், கங்காணிகள் இத்தியாதி! இத்தியாதி!!

அமைச்சர்கள், அதிகாரிகள்

இதில் ஒரு மகாவெட்கக்கேடு, நன்றாகப் படித்தவர்கள், பெருநிலை அதிகாரிகள், கருநாடக முதலமைச்சர் போன்ற பெரும் பதவியாளர்கள் எல்லாம் அவருடைய மடத்திற்கும், கூட்டங்களுக்கும் சென்றதால், அதைவிட பெரு விளம்பரம்; தொத்து நோய் போன்ற பக்திப் பரவசம்; பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டு, ஒரு கார்ப்பரேட் (வியாபாரக்) கம்பெனி போல இவரது அமைப்புகள் நடந்தன!

வெளிநாட்டில், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் இவரது லீலா வினோத திருவிளையாடல்களுக்கு தனித்தனி பாஷ் (றிஷீலீ) மாட மாளிகை, கோபுரங்கள், கோயில்கள் என்ற திரையுடன்!

சீடர்கள், சீடிகள் எல்லாம்!

இப்போது இங்குள்ள சீடர்களால், சீடிகள் எல்லாம் அம்பலத்திற்குப் பல செய்திகளை அடுக்கடுக்காகக் கொண்டு வரப்படுகின்றனவோ, அதுபோல அமெரிக்காவில் இவரது கிருஷ்ண லீலைகளை அமெரிக்கவாழ் சீட கோடிகளே, அங்குள்ள அரசு (பிராசிகியூஷன்) வழக்குரைஞருக்குப் புகார் மனுவாகக் கொடுத்துள்ளனர்.

பல இடங்களிலும் அப்ரூவர்கள் யாரும் கேட்காமலேயே சுயம்புவாகக் கிளம்புகின்றனர்!

நித்யானந்தா என்ற காவி உடை ஏமாற்றுப் பேர்வழி ஆன்மிக வேடத்தில் பல மோசடிகள் செய்து வருகிறார்.

தேசத்தின் மானம் கப்பல் கப்பலாக ஏறி!

1. கலிபோர்னியாவில் நித்யானந்தா பவுண்டேசன் 2. லைஃப் பிள்ளீஸ் பவுண்டேசன் 3. நித்திய யோகா 4. வேதிக் டெம்பிள் 5. தியான பீட பவுண்டேசன் என்று பல வகையிலும் 2003 இல் தொடங்கி அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் டக்ளஸ் மெக்கெல்லர் என்ற அமெரிக்கர் அந்த கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலுக்குப் புகார் மனுக்களை ஆதாரத்தோடு தந்து, கிரிமினல் மற்றும் சிவில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ள செய்தி, நாறடிக்கின்றது!

இந்தத் தேசத்தின் மானம், மரியாதை எல்லாம் கப்பல் கப்பலாக ஏறி வெளிச்சம் போட்டுக் காட்டி நம்மை வெட்கப்பட வைத்து வருகிறது!

நித்யானந்தா டக்ளஸ் மெக்கல்லர் என்பவர் சுவாமி நித்திய பிரபா கூறுகையில், அறையில் பெண்களுடன் இருக்கும்போது அறைக்கு வெளியே என்னைத்தான் பாதுகாவலராக நிறுத்தி வைப்பார் என்றும், நித்யானந்தா நடத்தும் யாகங்களில் யாக குண்டத்தில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு; அவங்க பேரு எனக்கு நினைப்பில்லே, ஆனா அவர்கள் திருமணம் ஆனவங்க என்பது மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தார். அந்த நடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததை நான் புரிஞ்சுகிட்டேன். அதைப் பத்தி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்த வழியாம்!

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்கிட்டே சிரிச்சுக்கிட்டே சொன்னாரு என்று கூறுகிறது அந்தக் கடிதம். அது மட்டுமா?

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை!

பிரத்தியேகமான அறை

சனாதன கோயிலில் நித்தியானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்திற்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது! ................ இதற்குமேல் எழுதி நம் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆன்மிகத்தை உலகமயமாக்கி...?

இதுபோன்ற பல்வேறு குற்றங்களை சர்வதேச ரீதியில் செய்து, ஆன்மிகத்தை உலக மயமாக்கி கோபியர் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா என்ற கலியுக புருஷன் இந்த கிரிமினல் பேர்வழி சட்டத்தின் பிடிகளிலிருந்து தப்பிட, ஆசிரமத்தை வேறு ஒரு ஆனந்தாவிடம் விட்டுவிட்டு, இவர் தனியே ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக ஒரு கபட நாடகம் போட்டுள்ளார்! இதை அரசுகள் ஏற்கப் போகின்றனவா? சட்டப் பிடியிலிருந்து தப்புவதற்குத்தானே இந்த தற்காலிக ஏற்பாடு?

மோசடி கும்பலுக்கு
சரியான தண்டனை

காலாவதியான மருந்துகள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எவ்வளவோ, அதைவிட மோசமான தேசியக் குற்றம் காலாவதியான பக்தி, மத வேடங்கள் அணிந்து பல்லாயிரக் கோடிகள் சொத்து சேர்த்த குற்றவாளி ஏதோ ராஜபோக வாழ்வு வாழ விட்டுவிடுவதாகும்.

1. இந்த மோசடிக் கும்பலைக் கைது செய்து சட்டத்-தின்முன் நிறுத்தி சரியான தண்டனை வழங்கவேண்டும்.

அரசுடைமையாக்க வேண்டும்!

2. அந்த ஆசிரமங்கள் உள்நாட்டு, வெளிநாடுகளிலும் உள்ளவைகளை அரசுடைமைகளாக்கி எடுத்துக்கொண்டு, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திடவேண்டும்.

கருநாடக அரசும், மத்திய அரசும் இதுபற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது.

அரசுகள் வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், நாட்டுக் கண்ணோட்டத்தோடு, பார்க்க முன்வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

சென்னை

31.3.2010

தலைவர்,

திராவிடர் கழகம்

0 comments: