Search This Blog

24.10.14

பெரியாருடைய பிறந்த நாள் விழா என்பது ஒரு பிரச்சாரம்


ராஜகோபாலாச்சாரியாரை எதிர்த்து குலக்கல்வித் திட்ட
எதிர்ப்புப் பிரச்சாரப் படை உருவான நகரம் நாகை

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 

பொதுக்கூட்டத்தில் பழைய வரலாற்றைச் சுட்டிக்காட்டித் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 

சென்னை, அக்.23- ராஜகோபாலாச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து, குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் பிரச்சார படை உருவானது நாகையில்தான் என்று பழைய வரலாற்றை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற் றினார்.

3.10.2014 அன்று நாகையில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

எனக்கு முன்னால் உரையாற்றிய வழக்குரைஞர் பூவை.புலிகேசி அவர்களும், நம்முடைய அருமை தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களும், அய்யா ராசகிரி கோ.தங்கராசு அவர்களும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இள.மேகநாதன் அவர்களும் தந்தை பெரியார் அவர்களுடைய அருந்தொண்டினைப்பற்றி இங்கே சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

அவர்கள் குறிப்பிட்டதுபோல, இந்தக் கூட்டம் சென்ற மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றிருக்கவேண்டும். நான் சிக்கல் பகுதியில், அருமை மணமக்கள் நண்பர்கள் ஏ.ஆர். நடராசன் - அங்கையற்கண்ணி ஆகியோருடைய மண விழாவினை நடத்தி வைத்துவிட்டு, இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சிறப்பாக ஏற்பாட்டினை செய்திருந் தார்கள். வருவதற்குத் தயாரானாலும், நாட்டிலுள்ள சூழ் நிலையில், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தக்கூடிய வாய்ப்பு கள் அன்றைக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்ட காரணத் தால், அன்றைக்கு தள்ளி வைக்கப்பட்ட கூட்டம், இன்றைக் குத் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் பெருவிழா என்ற இந்தப் பிரச்சார பொதுக்கூட்டம், இன் றைக்குக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 

என்றாலும், சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். இதற்கு எல்லா வகையிலும் ஒத் துழைத்த, நன்கொடை அளித்த அத்துணை இயக்கத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும், அதேபோல, அனு மதி அளித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய காவல்துறையினருக்கும், மற்ற எல் லோருக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அய்யா அவர்களின் 66 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!


அருமை நண்பர்களே, தந்தை பெரியார் அவர்களு டைய 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இன்றைக்குக் கலந்துகொண்டு, உங்கள் மத்தியில், இந்த நாகைப் பெருநகரில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நான் வரும்பொழுது, பழைய சிந்தனைகளையெல்லாம் அசை போட்டுக்கொண்டு வந்தேன். நான் 10 வயதுச் சிறுவனாக இருந்தபொழுது, இந்த ஊருக்கு முதன்முறையாக அழைக் கப்பட்டு, தனியாக வராமல், இன்னொருவரின் துணை யோடு  அனுப்பப்பட்டபொழுது, 1944 ஆம் ஆண்டு  அல்லது 1945 ஆம் ஆண்டாக இருக்கலாம்; அய்யா அவர் களின் 66 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா; இங்கே நம்மு டைய பழைய தோழர்கள் ஏராளம் இருந்தார்கள். ஆர்.வி. கோபால் அவர்கள், வழக்குரைஞர் டி.கே.வி. என்று அழைக் கப்படக்கூடிய விஜயராகவ அய்யா அவர்கள், டெய்லர் பக்கிரிசாமி அவர்கள், இன்னும் ஏராளமான தோழர்கள் அன்றைக்கு இருந்தது, எனக்கு நன்றாக நினைவில் இருக் கிறது, ஒரு பெரிய யானையின்மீது தந்தை பெரியாரின் அவர்களுடைய உருவப் படத்தினை வைத்து, ஊர்வலம் நடத்தினார்கள்.  சுயமரியாதைக் கோட்டைபோல நாகையை வைத்திருந்தார்கள்!


இன்றைக்கு 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் உங்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக் கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுமட்டுமல்ல, நண்பர்களே, அய்யா ராசகிரியார் அவர்கள் சொன்னதுபோல, அதற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து, அய்யா அவர்களை அழைத்தபோது, இந்த நாகைப் பகுதி என்பது அய்யா அவர்களுக்கு மிகப்பெரிய அள விற்குக் கைகொடுக்கக்கூடிய ஒரு கோட்டை போல, சுய மரியாதைக் கோட்டை போல ஆக்கி வைத்திருந்தார்கள்.

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவர் நம்முடைய அழகப்பன் அவர்கள்

புதிய இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நம் முடைய மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்கள்கூட இளைஞர்தான்; அவருக்கும் வரலாற்றைச் சொல்லியாகவேண்டும்.  அழகப்பன் அவர்களுக்கு எல்லா வரலாறும் தெரியும். அழகப்பன் அவர்கள் உடல்நிலை சரி யில்லாமல் இருந்தார். மறைந்தும் மறையாமல் நம் நெஞ் சங்களில் நிறைந்தவர். நான் அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து, நீங்கள் விரைவில் குணமடையவேண்டும் என்று ஆறுதல் சொல்லிவிட்டு வருகின்ற நேரத்தில், அவர்கள் எவ்வளவு தீவிரமான கொள்கை உணர்வாளர்கள் என்று சொல்லும்பொழுது, அருகிலிருந்த நெப்போலியனை என்னுடைய கையில் ஒப்படைத்து,  அய்யா, என்னுடைய மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். என்னுடைய பணிகளை அவர் தொடர்ந்து செய்வார் என்று சொன்னார்.
இந்த இயக்கத்திற்கு அதுதான் பெருமை; அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமென்றால், அது ஒரு பெரிய குறைமாதிரி சொல்வார்கள். அதை நான் குறை என்று கருதுவதில்லை. அப்பாவும் இந்தக் கொள்கையில் இருக்கிறார்; மகனும் இந்தக் கொள்கையில் இருக்கிறார் என்றால், இந்தக் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிர் என்பதுதான் இந்தக் கொள்கையினுடைய பெருமையாகும்.


அப்பா ஒரு கட்சியில் இருப்பார்; மகன் ஒரு கட்சியில் இருப்பார் என்று சொல்வது பெருமையல்ல; அப்படியிருக் கின்ற இளைஞர்களுக்கும் இந்த வரலாறு தெரியவேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே இதனை சொல்கிறேன்.


76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், 76 பவுன்!


வெளிப்பாளையத்தில், அவுரித் திடலில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது.  தந்தை பெரியார் அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், 76 பவுன் மாலையை அய்யாவிற்குப் போட்டு, பொன்னிற மேனியும், வெண்ணிற தாடியும் அசைந் தாடக்கூடிய அந்தப் புகைப்படத்தினை எடுத்திருப்பார்கள். அது மிகவும் சிறப்பான ஒளிப்படமாகும். அந்த பிறந்த நாள் விழாவினை ஒரு பெரிய மாநாடாகவே நடத்தினார்கள்.
இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், 76 பவுனைக் கொடுத்து, வரலாற்றை உருவாக்கிய ஒரு நகரம், தமிழ் நாட்டிலே தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்விலே உண்டென்றால், அது நாகை நகரம்தான்.


நாகைக்குப் பலவகையான பெருமைகள் உண்டு.   இங்கே சொன்ன மாதிரி, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் படத்தினை இங்கே வந்து திறந்து வைத்தார்.


என்னுடைய தலைவர் என்று அய்யாவை வ.உ.சி. அவர்கள் சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள், அடக்கத்தின் காரணமாக வ.உ.சி.யைப் பார்த்து, அய்யா நீங்கள் இப்படி சொல்ல லாமா? என்று சொன்னார்.

எதற்காக இதனை உங்களுக்குச் சொல்கிறேன் என்றால், இந்த நகரத்திற்கு அந்தப் பெருமை உண்டு என்பதால்தான்.

நல்லதை செய்தால் பாராட்டுவது; அல்லதை செய்தால் எதிர்ப்பது!

எல்லாவற்றையும்விட, மிகவும் ஒரு சிறப்பு என்னவென் றால், ஆச்சாரியார் முதலமைச்சராக பதவிக்கு வந்து, கொஞ்சம் காலூன்றும் வரையில், மக்களுக்குத் தேவையான செயல்களைச் செய்தார். ரேஷன் கொடுப்பது, கைத்தறி நெசவாளர்களுடைய துயரைத் துடைக்கின்ற வகையில், சில உரிமைகளை, மில்களுக்கு தனியே என்றெல்லாம் செய்து காலூன்றினார்கள்.
அதை அய்யா போன்றவர்களே பாராட்டினார்கள். ஏனென்றால், யார், எந்த ஆட்சியாக இருந்தாலும், நல்லதை செய்தால் பாராட்டுவதும்; அல்லதை செய்யும்பொழுது அந்த ஆட்சியை எதிர்ப்பது என்பது அந்தக் காலத்தி லிருந்து, இன்றுவரை, நாளையும் திராவிடர் கழகத்தி னுடைய அணுகுமுறையாகும்.
இதில், வேறு யார் மாதிரியும் நடந்துகொள்ள முடியாது. பொது நிலையில் இருந்து, ஏனென்றால், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கின்ற இயக்கம். இன்னுங்கேட்டால், நீதிமன்ற நீதிக்கும், நீதி சொன்ன தந்தை பெரியாரைப் பெற்ற இயக்கம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.


அப்படிப்பட்ட ஒரு சிறப்பான சூழ்நிலையில், ராஜ கோபாலாச்சாரியாரை பெரியார் ஆதரித்ததும், உடனே அவர் நாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து, தந்திரமாக குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார்.


குலக்கல்வித் திட்டம் என்றால் என்ன என்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. நல்ல சிமெண்ட் சாலையில் செல்கிறவர்களுக்கு, பழைய செம்மண் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள்பற்றி தெரியாது.
அதுபோல இருக்கக்கூடிய சூழ்நிலையில், குலக்கல்வித் திட்டம் என்றால், பள்ளியில் அரை நேரம் படிக்கவேண் டும்; அரை நேரம் அப்பன் தொழிலை செய்யவேண்டும்.


சிரைப்பவன் மகன் சிரைப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளவேண்டும். வெளுப்பவன் மகன் வெளுப்பது எப்படி, நீலம் போடுவது எப்படி, இஸ்திரி போடுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும். செருப்புத் தைப் பவன் மகன், செருப்பை எப்படி தைப்பது என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.


ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம்!

இப்படி குலத் தொழிலைக் கற்றுக்கொள்ளவேண்டும்; அதுதான் குலக்கல்வித் திட்டம்.

ஆண்டவன் அன்றைக்கு நம் தலையில் எழுதி விட்டான்; அதை அழித்து எழுதவே முடியாது என்று சொல்வார்கள். ஆகவே, நம்மையெல்லாம் கீழ்ஜாதியாக்கி, நம்மையெல்லாம் படிக்கக்கூடாத மக்களாக்கி, நம்மை யெல்லாம் வெறும் உழைப்பாளிகளாக்கி, மூட்டைத் தூக்குபவர்களாக ஆக்கி, சேற்றிலே இறங்கி பணி செய்வதோடு நம் வேலை முடிந்து போய்விட்டது, வயிற்று சோற்றுக்குக்கூட நமக்குக் கவலையில்லை என்ற அளவு இல்லாமல், பட்டினி கிடக்கவேண்டும் என்ற உணர்வை உருவாக்கி வைத்த அந்த சமுதாய சூழ்நிலைக்கேற்ப, இந்த ஜாதி வருணாசிரம தருமத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்காக குலதர்மக் கல்வித் திட்டம் என்ற வர்ணாசிரம தருமத் திட்டத்தை ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், அன்றைய முதலமைச்சர் செய்தார்.

தந்தை பெரியார் அவர்கள்தான் அதனைக் கடுமையாக எதிர்த்தார். சட்டமன்றத்தில் எதிர்த்துப் பார்த்தார்கள்; சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்திப் பார்த்தார்கள்.  ஆனால், ஒரே பதிலை ஆச்சாரியார் அவர்கள் சொன்னார். இது பழைய வரலாறு; நிறைய பேருக்கு இது தெரியாது. மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். இன்றைய தலை முறையினர் இணைய தளத்தைப் பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறை; அவர்களுக்கு வரலாறு தெரியாது. எல்லாமே வசதியாக பொத்தானை அழுத்தினால் வந்து நிற்கும் என்று நினைக்கிறார்கள்.


அதுமட்டுமல்ல, நாம் கோவணம் கட்டிக்கொண்டிருந்த நிலை மாறி, முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டக்கூடாது என்ற நிலையும் மாறி, அதற்குப் பிறகு குழாய் மாட்டிக் கொண்டிருக்கிறோம் எல்லோரும் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்ட ஒரு சூழல் இன்றைக்கு. எனவே, பழைய செய்திகளைப்பற்றி இன்றைக்குள்ள இளைஞர்களுக்குத் தெரியாது; ஆகவே அதனை அவர்களுக்குச் சொல்லவேண்டும்.



நட்பில் வேண்டுமானாலும் சமரசம் செய்துகொள்ளலாமே தவிர, கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாது

அரை நேரம் படிக்கவேண்டும்; அரை நேரம் அவரவர் குலத்தொழிலை செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன், அதனை தந்தை பெரியார்தான் கடுமையாக எதிர்த்தார். சாதாரணமாக எதிர்க்கவில்லை. சொல்லிச் சொல்லிப் பார்த்தார்; தந்தை பெரியார் அவர்கள்தான், கடைசியாக சொன்னார்; பெரியார் அவர்களுக்கு ஆச்சாரியார் நண்பர் தான்; நட்பு முறையில், அது வேறு. நட்பு வேறு; கொள்கை வேறு என்று தெளிவாக இருப்பவர் தந்தை பெரியார். நட்பில் வேண்டுமானாலும் சமரசம் செய்துகொள்ளலாமே தவிர, கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்தவர் தந்தை பெரியார்.

ஆச்சாரியார் அவர்களே, உங்களுக்குக் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறோம்; உங்களை யார் கேட்டார்கள், என்று சர்வாதிகாரிபோல, ஹிட்லரைப்போல பேசுகிறீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், இனிமேல் எங்களை எல்லாம் பழைய காலத்திற்குக் கொண்டு போகவேண்டும்; பழைய கருப்பனாகவே இருக்கவேண்டும்; எங்கள் பிள்ளைகள் படிக்கக்கூடாது; 6000 பள்ளிக்கூடங் களை மூடி, திறந்திருக்கின்ற பள்ளிக்கூடங்களில் குலக் கல்வித் திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறீர்களே என்று கேட்ட நேரத்தில், ஆச்சாரியார் மசியவில்லை; எதிர்ப்பை யும் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருக்கிறார் என்றவுடன்,

பெட்ரோலும், தீப்பந்தமும்
தயாராக இருக்கட்டும்!

தந்தை பெரியார் சொன்னார், நான் என்னுடைய தோழர் களுக்குச் சொல்லியிருக்கிறேன்; கத்தி வைத்துக் கொள்! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும்; ஆனால், நீ உடனே அதை செய்துவிடாதே; நான் சொல்கிற வரை காத்திருக்கவேண்டும். காத்திருந்தால், பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்களா என்று பார்ப்போம்! பிறகு, அக்கிர காரங்கள் இந்த நாட்டில் இருக்குமா என்று பார்ப்போம். பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும்; ஆனால், நீங்களாக செயல்படக்கூடாது; நான் சொல்கிறவரை காத்திருக்கவேண்டும் என்று சொன்னார்.

அப்பொழுதுதான், ஆச்சாரியாருக்கு உறைத்தது; உடல்நல குறைவு ஏற்பட்டது என்று சொல்லி, பதவியை விட்டுப் போய்விட்டார்.

ஏனென்றால், அவருக்குத் தெரியும்; திராவிடர் கழகத் துக்காரர்கள் மிகவும் குறைச்சல்; ஆனால், உயிருக்குத் துணிந்தவர்கள்; அவர்கள் உயிரைப் பற்றி கவலைப் படாதவர்கள். பெரியார் சொன்னால், எதுவும் செய்யக்கூடிய கூட்டம்தான் கருப்புச் சட்டைக் கூட்டம். தற்கொலை பட்டாளங்கள். அன்றையில் இருந்து இன்றைய வரை நிலை அதுதான்.  நாங்கள் ஏதாவது காரியத்தை செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை சட்ட விரோதமாக செய்யமாட்டோம்; சட்டத்திற்கு அப்பாற்பட்டு போகமாட் டோம்; வன்முறையில் இறங்கமாட்டோம்; ரகசிய திட்டம் கிடையாது. 

இவையெல்லாம் அய்யா அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்கள். ஆனால், ஒன்றை முடிவு செய்து விட்டால்,  அதை சொல்லி, செய்துவிட்டு, அந்த விளை விலிருந்து தப்பமாட்டோம்; தண்டனையா, கொடு! தூக்குத் தண்டனையைக்கூட கொடு! அதையும் ஏற்பதற்குத் தயாராக இருப்போம். அது எங்கள் கொள்கைக்கு, லட்சியத் திற்குக் கொடுக்கின்ற விலை என்று சொல்லக்கூடிய அந்த உணர்வைத்தான் அய்யா அவர்கள் உருவாக்கிச் சொன் னார்கள்.


பெட்ரோலும், தீப்பந்தமும் தயார் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னவுடன், ராஜகோபாலாச்சாரி யாரிடம், பெரிய, பெரிய பார்ப்பனர்கள் எல்லாம் சென்றார்கள்; எங்களுக்கு நீங்கள் நல்லது செய்தது போதும்; பெரியார் சொன்னதை, அப்படியே செய்துவிட்டால், எங்களுடைய கதி என்னாவது? என்று கேட்டார்கள்.


உடனே, ராஜகோபாலாச்சாரியார் பதவியை விட்டு கீழே இறங்கினார். இது பழைய சரித்திரம். தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக்கொண்டதன் விளைவாக, பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார்.


புதிய குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சார படை


இந்த நாகப்பட்டினத்திற்கு என்ன வரலாறு என்று சொன்னால், 76 பவுன் கொடுத்தார்கள் என்று சொல்லக் கூடிய அந்தக் கட்டத்தில், இதே நாகை அவுரித்திடலில், அந்த விழா நடத்தப்பட்ட நேரத்தில், புதிய குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படை என்று, நீடாமங்கலம், அ, ஆவன்னா என்று அழைக்கப்படக்கூடிய, ஆறுமுகம் அவர்களுடைய தலைமையில், பட்டுக்கோட்டை டேவிட் அவர்களைத் தளபதியாகக் கொண்டு, கருப்புச் சட்டைத் தோழர்கள் திருத்துறைப்பூண்டி பராசுரன் போன்றவர்கள் எல்லாம், அந்தப் படையில் மிகத் தெளிவாக, போர் வீரர் களாக இருந்து கொண்டு, நாங்கள் கோட்டை வரையில் நடந்து சென்று, பிரச்சாரத்தை வழிநெடுகிலும் செய்து கொண்டு, பெரியார் நடத்தக்கூடிய போராட்டம், அடுத்த கட்ட இறுதிப் போராட்டத்தைச் செய்வோம் என்று அந்தப் படையைத் தொடங்கினார்கள். அந்தப் படையைத் தொடங்கி வைத்த நாளும், பெரியார் பிறந்த நாளை நீங்கள் கொண்டாடினீர்களோ, இதே நாகப்பட்டினத்தில்தான்.  அந்த சிறப்பு நாகப்பட்டினத்திற்கு உண்டு.


ஆனால், இந்தப் படை அங்கே போய் சேருவதற்குள், குலக்கல்வித் திட்டம் ரத்தாகி விட்டது; ஒழிந்தது. அதுதான் மிக முக்கியம். தடை போடப்பட்டது. போரிலே வெற்றி கண்டார்கள்; போர் இல்லாமலேயே வெற்றி காணக்கூடிய சக்தி, பெரியாரின் பெரும்படைகளுக்கு உண்டு.


எனவே, இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடு இருந்தது பாருங்கள், அது தவிர்க்கப்பட்டதினாலேதான், இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, இன்றைக்கு தமிழ்நாட்டில் 575 பொறியியல் கல்லூரிகள்; பஞ்சாயத்து யூனியன் 400-க்கும் கீழேதான்; பொறியியல் கல்லூரிகள் 575; பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஏறச் சொல்வதற்காக குரல் கொடுப்பார்கள்; அதுபோல, பொறியியல் கல்லூரிகளில் சேரச் சொல்லி, இங்கே வாருங்கள்; இங்கே வாருங்கள் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இப்பொழுது ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கின்றன என்ற நிலை உள்ளது.
கொஞ்சம் அசந்தால், மறுபடியும் அதைப் பறிப்பதற்கான சக்திகள் தயாராக இருக்கின்றன!


இது எப்படி ஏற்பட்டது நண்பர்களே, ஆயுத பூஜை கொண்டாடியதினால் அல்ல நண்பர்களே; சரசுவதி பூஜை கொண்டாடியதினால் அல்ல நண்பர்களே, பெரியார் என்ற மாமனிதரும், பச்சைத் தமிழர் காமராசரும், திராவிடர் இயக்கமும் தொடர்ந்து செய்த மாபெரும் தொண்டின் விளைவு.  இந்த சமுதாயக் கொள்கை, இது வந்துவிட்டதே என்று மகிழ்ச்சியோடு நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொஞ்சம் அசந்தால், மறுபடியும் இதைப் பறிப்ப தற்கான சக்திகள் தயாராக இருக்கின்றன. அதுதான் மிக முக்கியம்.


கழுகு மேலே பறந்துகொண்டே இருக்கிறது; கையில் பண்டம் இருக்கிறது; கழுகின் பார்வை அந்தப் பண்டம் மீதே இருக்கும்; நாம் அசந்தால், அதை அடித்துவிட்டுப் போகத் தயாராக இருக்கும் அந்தக் கழுகு.
எச்சரிக்கை மணி அடிக்கக்கூடிய ஆற்றல் கருப்புச் சட்டைக்காரர்களுக்கு மட்டும்தான் உண்டு!


குழந்தை மாதிரி இருக்கின்றவர் கையில் பண்டம் இருக்கிறது; அதை சாப்பிடலாம் என்று நினைக்கிறார். ஆனால், அந்தக் கழுகுப் பார்வைபோல, இந்த நாட்டில் மதவெறி சக்திகள், ஜாதிவெறி சக்திகள் மீண்டும் குலக் கல்வித் திட்டத்தை, வருணாசிரம தருமத் திட்டத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற சக்திகள் இன்னும் வெவ்வேறு உருவத்தில் வருகின்றன.
அதைப் பார்த்து எச்சரிக்கை மணி அடிக்கக்கூடிய ஆற்றல் கருப்புச் சட்டைக்காரர்களுக்கு மட்டும்தான் உண்டு. அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.


என்னை வாழ்க என்று சொல்பவர்களைவிட, ஒழிக என்று சொல்பவர்கள்தானே அதிகம்!

எனவே, பெரியாருடைய பிறந்த நாள் விழா என்பது, நமக்குப் பெரிய விழாக்கோலம் அல்ல; அது ஒரு பிரச்சாரம். அய்யா சொன்னாரே, மிக அழகாக, வேறு எந்தத் தலைவரும் இதுபோல் சொன்னது கிடையாது. எனக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடுறீங்க; நல்லா கொண்டாடுங்க என்றுதான் நானும் வந்திருக்கிறேன். அந்த விழாவில், என்னை வாழ்க, வாழ்க என்று சொன்னால், நான் என்ன ரொம்ப வருஷம் வாழ்ந்திடுவேனா? வாழ்க என்று சொன்னால், அதற்கு சக்தி இருக்கிறது என்று நினைத்தால், என்னை வாழ்க என்று சொல்பவர்களைவிட, ஒழிக என்று சொல்பவர்கள்தானே அதிகம்; ஆகவே ஒழிக என்றுதானே அதிகமாக வரும். நான் வாழ்க என்று சொன்னாலே, அதைப்பற்றி கவலைப்படாத பகுத்தறிவுவாதி. ஒழிக என்று சொன்னாலும், அதைப்பற்றி லட்சியம் செய்யாத தொண் டன். நான் என்னுடைய பணிகளை செய்துகொண்டிருக் கிறேன். என்னுடைய கொள்கை பிரச்சாரத்திற்காகத்தான் பிறந்த நாள் விழா. இல்லாத கடவுளுக்கே விழா கொண்டாடுகிறீர்களே, இருக்கின்ற நமக்கு, பிறந்த நமக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதன்மூலமாக, இந்தக் கொள்கையை சொல்கிறோம், அதற்காகத்தான்.


கடவுள் என்று சொன்னால், கடவுளுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. பிறப்பும், இறப்பும் இல்லாத கடவுள்களுக்கு ஏன் பிறந்த நாள் விழாக்கள்?
விநாயகர் சதுர்த்தியில் விநாயகன் பிறந்தான்; ராம நவமி என்றால், ராமன் பிறந்தான்; கோகுலாஷ்டமியில் கிருஷ் ணன் பிறந்தான்.

அஷ்டமி, நவமி, சதுர்த்தி, கந்த சஷ்டி - இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தெரியும். சமஸ்கிருதம் என்கிற பெயரில், தமிழில் இல்லாத சொல் இருந்தால், தமிழருக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்பதை சுலபமான விடையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.


காபி என்ற வார்த்தையே நம்மூர் சரக்கு அல்ல; சுக்கு வேண்டுமானால் நம்மூர் சரக்காக இருக்கலாம்; காபி என்பது நம்மூர் சரக்கல்ல. வெளியிலிருந்து வந்த சரக்குதான்.


எனவே, பிறக்காத கடவுள்களுக்கு ஏன் விழா கொண்டாடுகிறார்கள். மாதத்திற்கு ஒரு விழா.


கசப்பான விஷயங்களைச் சொல்வதற்கு இந்த இயக்கத்தை விட்டால் வேறு நாதியுண்டா?


குடிக்கிறவனுக்கு போதை குறையும்போதெல்லாம், அவன் போதை குறையக்கூடாது என்று நினைத்து, மேலும் மேலும் குடியை ஊற்றி, அவன் எழுந்துவிடக் கூடாது என்று ஒருவன் செய்தால் எப்படி இருக்குமோ, அதுபோல், மாதாமாதம் கடவுள்களுக்கு விழா எடுக்கிறார்கள்..


பூமியைப் பாயாக சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்துகொண்டான் என்றும், கடலுக்குள் இருந்ததை பன்றி அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்தான் என்றும், பன்றிக்கும், பூமாதேவிக்கும் பிள்ளை பிறந்தது என்று கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாகத் தெரிந்தும்கூட, இன்னமும் தீபாவளியைக் கொண்டாடு கிறார்கள் என்றால், இவனைவிட உலகத்தில் கடைந் தெடுத்த காட்டுமிராண்டி வேறு யாராவது இருப்பானா? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


காரணம் என்ன? நம்முடைய மக்களுக்கு சிந்தனா சக்தி இல்லை. கசப்பான விஷயங்களைச் சொல்வதற்கு இந்த இயக்கத்தை விட்டால் வேறு நாதியுண்டா? என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பாருங்கள்.


உங்களிடம் இருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்க வில்லை. உங்களுடைய ஓட்டு எங்களுக்குத் தேவை யில்லை. உங்களுடைய பாராட்டு எங்களுக்குத் தேவை யில்லை. ஆனால், ஒன்றே ஒன்று எங்களுக்குத் தேவை. உங்களுடைய மான வாழ்வுக்கு மீண்டும் திரும்பவேண்டும். உங்களுடைய சூத்திரப் பட்டம், பஞ்சம பட்டம், ஜாதி ஒழிய வேண்டும். எல்லோரும் சகோதரர்களாக, மனிதர்களாக, இந்த நாட்டில் மனிதநேய மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படையாகும்.

புரட்சிக்கவிஞர் பெரியாருடைய தொண்டன், பெரியாருடைய மாணவன்!


ஆகவே, இந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, இன்றைக்கு இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள். இன் றைக்குக் காத்தான் மகன் ஸ்காட்லாந்தில் கணினிப் பொறியாளராக இருக்கிறார்; முத்தன் மகன் முனியன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். எந்த ஊரில் தன்னுடைய மகன் இருக்கிறான் என்று பெற்றோர்களுக்குக்கூட சரியாகச் சொல்லத் தெரியாது. அந்த அளவிற்கு நம்மாட்கள் படித்து வெளிநாட்டில் பணியில் உள்ளனர். இவையெல்லாம் இந்த இயக்கம் இல்லையென்றால் நடைபெற்றிருக்குமா? இதை சிந்தித்துப் பார்க்கவேண்டும், எண்ணிப் பார்க்கவேண்டும்.


சித்திரைச் சோலைகளே, உமைத் திருத்தப் இப்பாரினில், எத்தனைத் தோழர்கள்

ரத்தம் சொரிந்தனரோ,
உங்கள் வேரினிலே,
என்று புரட்சிக்கவிஞர் கேட்டார்.


அழகான பூங்காவை பார்க்கிறார்; ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மற்ற கவிஞர்கள் என்ன சொல்லி யிருப்பார்கள், காதலன், காதலி, மற்ற மற்றவை என்று சொல்லியிருப்பார்கள்.


ஆனால், புரட்சிக்கவிஞர் பெரியாருடைய தொண்டர், பெரியாருடைய மாணவர், பெரியாருடைய பயிற்சிக் களத்தில் வந்தவர். அதனால் அவர் அந்தப் பூங்காவை பார்த்தார்,

சித்திரைச் சோலைகளே, உங்களை உண்டாக்குவதற்கு எத்தனைத் தோழர்கள், எங்கள் தோழர்கள், எங்கள் விவசாய மக்கள், உழைப்பாளிகள், அவர்களுடைய உழைப்பை, ரத்தத்தை வியர்வையாக்கி, ரத்தம் சொரிந் தனரோ, உங்கள் வேரினிலே என்று கேட்டார்.

அந்த மாதிரியான ஒரு உணர்வை உண்டாக்கிய ஒரு இயக்கம்.
அதுபோல், இவைகளையெல்லாம் உருவாக்குவதற்கு இந்த இயக்கம் இல்லையானால், என்ன ஆகியிருக்கும்? எண்ணிப் பார்க்கவேண்டும்.
எனவேதான், அருமை நண்பர்களே, இந்த சமுதாய மாற்றம் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்ட பணி, இன்னமும் தொடர்கிறது. அவர்களால் நிலைமை மாறியிருக்கிறது. படிப்புப் பெருகியிருக்கிறது. பகுத்தறிவு வளர்ந்திருக்கிறதா என்பது கேள்விக்குறி.

அதுமட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கைத் தரம் உயர்ந் திருக்கிறது. ஆனால், அறிவுத் தரம் உயர்ந்திருக்கிறதா? என்பது முக்கியமான கேள்வி.

அறிவுப் போட்டிக்கு எத்தனை பெண்கள் தயாராக இருக்கிறார்கள்?


பெண்ணுரிமையை இன்றைக்குப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்களே கூட,  தங்களுக்கு அறிவு முக் கியமா? அழகு முக்கியமா? என்று வரும்பொழுது, அழகுப் போட்டிகளுக்குத் தயாராவதற்கு நிறைய பேர் இருக் கிறார்களே தவிர, அறிவுப் போட்டிக்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்துப் பார் என்று நமக்கு இடித்துரைத் தார்கள்.


ஆகவே, ஒரு பெரிய சமுதாய மாற்றத்தை சொல்லிக் கொடுப்பதற்கு, இந்த இயக்கத்தைத் தவிர வேறு கிடையாது.


நாட்டில் எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். தென் னாட்டில் எப்படி இருக்கிறது என்று.


இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களிலேயே மிகப் பெரிய மாநிலம் எதுவென்றால், ஒன்று உத்தரப்பிரதேசம்; இன்னொன்று பிகார். அந்த பிகாரில் முதலமைச்சராக வந்திருக்கிறார். ஒரு பிற்படுத்தப்பட்டவர் முதலமைச்சராக இருந்தார்; அவர் விலகிக் கொண்டு, தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைக் காரணமாகக் காட்டி, அவருடைய கட்சி யைச் சார்ந்தவரையே, ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, மலைவாழ் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரைக் கொண்டு வந்து, பிகாரில், முதலமைச்சராக ஆக்கினார்.
ஆனால், முதலமைச்சராக வைத்த அவர்களுடைய நிலையில், என்ன நடந்தது என்று சொன்னால் நண்பர்களே, அவர் கோவிலுக்குச் சென்றார் சாமி கும்பிடுவதற்காக. அப்படி அவர் சென்று வந்தவுடன், செய்தி வெளியே வந்திருக்கிறது; என்னவென்று, அந்தக் கோவில் முழுவ தையும் தண்ணீர் ஊற்றி கழுவினார்கள் என்று.


தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஒரு முதலமைச்சருக்கே அந்த நிலை!


ஒரு மாநில முதலமைச்சராக இருப்பவர் அந்தக் கோவி லுக்குச் சென்று வந்ததும், தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்கள். அந்தக் கோவிலுக்குச் சாப்பாடு உள்பட எல்லாவற்றையும் இவர் கையெழுத்துப் போட்டால்தான் நடக்கும் என்ற நிலை இருக்கிறது. இவர் கையெழுத்துப் போடவில்லை என்றால், பகவானே பட்டினிதான். அதிலொன்றும் சந்தேகமில்லை. அப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், அதிகாரம் அவரிடம் இருந்ததே தவிர, முதலமைச்சராக இருந்தாலும்,  தீண்டாமை நீங்கவில்லையே! ஜாதி எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது பாருங்கள்!


சூத்திரர் சட்டப்படி; மந்திரியானதும், மாண்புமிகு சூத்திரர்!


அதைத்தான் தந்தை பெரியார் கேட்டார், அமைச்சர் களை அருகில் வைத்துக்கொண்டு கேட்டார்; பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது பெரியார் கேட்டார், எனக்கு இவர்களெல்லாம் மந்திரி களாக  வந்திருக்கிறார்கள் என்கிறபொழுது மகிழ்ச்சிதான்; ஆனால், என்னதான் அவர்கள் மந்திரிகளாக ஆனாலும், இவருக்கு மாண்புமிகு போடுவார்கள்; முதலில் சாதாரண மானவர்; அதனால், சாதாரண சூத்திரர் சட்டப்படி; மந்திரி யானதும், மாண்புமிகு சூத்திரர். அவ்வளவுதானே தவிர வேறொன்றும் இல்லையே!


மந்திரிக்கு முன்பு மாண்புமிகு இருக்கிறது; ஆகையால், மாண்புமிகு சூத்திரர்; மந்திரிப் பட்டம் எப்பொழுது வேண் டுமானாலும் போகும்; எப்பொழுது வேண்டுமானாலும் வரும். ஆனால், சூத்திரப் பட்டம்?

வடக்கே இருக்கிறவர்கள் சொல்கிறார்கள், எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று!


பெரியாருடைய இந்த சிந்தனை நாட்டில் பரவி, ஜாதி யினுடைய கடைசி அடையாளம் மறைகின்ற வரையில், நாம் கீழ்ஜாதியாகத்தானே இருப்போம்; நம்முடைய நாட்டில் மேல் ஜாதியாக உள்ளவர்கள் எப்படி இருக் கிறார்கள்? அவர்கள் எண்ணம் மாறியிருக்கிறார்களா? இன்னும் சந்தர்ப்பம் எப்பொழுது வரும் என்பதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆகவேதான் நண்பர்களே, வடக்கே இருக்கிறவர்கள் சொல்கிறார்கள், எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே! இருந்தால், இந்த மாதிரியான சூழ்நிலை வருமா? என்று.


தென்னாட்டின் நிலை என்ன? கருநாடகத்தில் என்ன நடக்கிறது? அங்கே முதலமைச்சர் சொல்கிறாரே, அர்ச்சகர் களாகப் பெண்களை நியமிக்கபோகிறேன் என்று சொல்கிறாரே.


இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு சமூகப் புரட்சியை, அங்கே செய்யக்கூடிய நிலைக்கு வருகிறார் என்றால், தந்தை பெரியாருடைய கருத்து பல இடங்களில் சென்றிருக்கிறது.


சமூகநீதியைப் பொறுத்தவரையில், பிகாரில், உத்தரப் பிரதேசத்தில் மற்ற இடங்களில் வந்தாயிற்று. ஆனாலும், இந்து மதம் என்கிற பெயரால், பார்ப்பன மதம், வைதீக மதம், சனாதன மதம் இன்னமும் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

தீண்டாமை, அதுதானே கொடுமை; இது வடநாட்டில் காலங்காலமாக இருக்கிறதே. அதனால்தானே இன்றைக்கும் முதலமைச்சராக இருப்பவர் கோவிலுக்குள் சென்று வந்ததும், தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதிக்கே இந்த நிலை!


அதேபோல், உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அந்தப் பதவியிலிருந்து அவர் சென்றதும்,  இன்னொருவர் அந்தப் பதவிக்கு வந்தார். அவர் வந்தவுடன், அந்த நாற்காலியைத் தூக்கிப் போட்டு கழுவுங்கள்; அந்த நாற்காலி எனக்கு வேண்டாம்; அது தீட்டுப்பட்ட நாற்காலி ஆகும் என்று சொல்கிறார். இந்த சம்பவம் வடநாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவமாகும்.

அங்கே ஜாதி ஆண்டு கொண்டிருக்கிறது; சட்டம் ஆளவில்லை என்பதுதான் மிக முக்கியம்.


இந்தக் கொடுமைகள் எல்லாம் இங்கே நடைபெறுமா? அதுபற்றி நினைத்துப் பார்க்க முடியுமா?


நம்முடைய சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் இல்லாத நிலையை மாற்றி, தந்தை பெரியார் சொல்லி, கலைஞர் செய்த மகத்தான புரட்சி என்று சொன்னால், முதல் தாழ்த்தப்பட்ட சமுதாயத் தவர் ஒருவரைக் கொண்டுவந்து, நீதிபதி வரதராஜன் அவர்களை நீதிபதியாக உட்கார வைத்தார். அவர் உச்சநீதிமன்றம் வரை சென்றார்.
80 வயது பார்ப்பன வழக்குரைஞர் எழுந்து வாதம் செய்கிறார்; அப்பொழுது வழக்குரைஞராக இருப்பவர் என்ன செய்ய வேண்டும்; நீதிபதியைப் பார்த்து, மை லார்ட் என்றுதானே சொல்லவேண்டும்; கடவுளுக்குச் சமமானவரே என்று தானே அழைக்கவேண்டும்.


தாழ்த்தப்பட்டவராக ஒரு நீதிபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கிறார். இவர் உயர்ந்த ஜாதிக்காரர்; முகத்தில் பிறந்தவர். அவர் எங்கே பிறந்தார் என்று முடிவாகவில்லை. ஏனென்றால், கால் வரையில் சூத்திரன் பிடித்துக்கொண்டார்கள்.

அவன்தான், அவங்க அப்பாவிற்கும், அம்மாவிற்கும் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்திருப்பான்

பெரியாரிடம் கேட்டார்கள், என்னங்க, காலில் பிறந்த வன் சூத்திரன் என்று சொல்லியிருக்காங்க; பஞ்சமன் அய்ந் தாவது ஜாதியாயிற்றே, அவன் எங்கே பிறந்தான் என்று.

பெரியார் அவர்கள், அவன்தான், அவங்க அப்பா விற்கும், அம்மாவிற்கும் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்திருப்பான் என்று.

அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில், இன்னமும் இடம் தேடுகிறார்கள், அவன் எங்கே பிறந்தான் என்று.

அதற்கும்கீழே பெண்கள், ஜாதியினுடைய அடுக்கு முறையில்.
80 வயது பார்ப்பன வழக்குரைஞர் எழுந்து வாதம் செய்கிறார்; அப்பொழுது வழக்குரைஞராக இருப்பவர் என்ன செய்யவேண்டும்; நீதிபதியைப் பார்த்து, மை லார்ட் என்றுதானே சொல்லவேண்டும். அப்படி சொல்லும் பொழுது, அவர் மனம் எவ்வளவு எரிமலையாக எரிந்து கொண்டிருக்கும். அவர் வாதமா செய்திருப்பார்; வெளியில் இவரை மை லார்ட் என்று சொல்வார்; ஆனால், உள்ளே என்ன நினைத்துக் கொண்டிருப்பார், பெரியார் ஒழிக, கருணாநிதி ஒழிக, திராவிடர் கழகம் ஒழிய, தி.மு.க. ஒழிக, திராவிட இயக்கம் ஒழிக! இவையெல்லாம் இருப்பதால் தானே இந்த நிலை. இவைகளை ஒழித்துவிட்டால், நமக்கு இந்த நிலை ஏற்படாதே என்றுதானே நினைத்திருப்பார்.

இதுதான் சமுதாய மாற்றம்; இந்த இடத்தில் நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்ற போராட்டம்!

இவையெல்லாம் சத்ய சாய்பாபா கையைத் தூக்கியதும் பொத்தென்று விழுந்துவிடவில்லை. ஓம் என்று சொன்ன வுடன் வெளியில் வந்துவிடவில்லை.

தொடர்ந்து போராட்டம்! பொதுச்சொத்துகளுக்கு நாச மில்லாத போராட்டம்; பொது அமைதிக்குப் பங்கமில்லாத போராட்டம்; எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்ற போராட்டம். இதுதான் தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. பொது நலத்திற்கென்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.

ஆகவே, இந்த சமுதாயத்திலே, இவ்வளவு மாற்றங்கள் வந்திருக்கிறதே சமுதாயத்தில், திருமணங்களில் மாற்றம்; அதேபோல், கருமாதி என்று சொல்லக்கூடிய இழவு வீட்டில் வசூல் செய்து கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள், இன்றைக்கு அதிலும் மாற்றம். அதேபோல், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டம் நிறைவேறிவிட்டது. நீதிமன்றத்தில் போய் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், எவ்வளவுதான் நீங்கள் தடுத்து வைத்தாலும், இதை இனிமேல்  இந்த அலையை யாரும் தடுத்துவிட முடியாது. பெரியார் பிறந்த நாள் விழாவில் நாங்கள் எடுத்துக்கொள்கின்ற சூளுரை இருக்கிறதே, அந்த சூளுரையில் மிக முக்கியமான சூளுரை என்று சொல்லும்பொழுது, இதுதான் மிகவும் அடிப்படையான விஷயமாகும்.

இன்றைக்கு ஜாதி ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது!

ஜாதியை மற்ற இடங்களில் எல்லாம் பெரியார் ஒழித்தார். இன்றைக்கு ஜாதியினுடைய அடையாளம் அதிகாரப்பூர்வமாக எந்த இடத்திலும் இல்லை; ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது. அதுதான் கோவில் கருவறை; கர்ப்பக்கிரத்தில்.

செவ்வாய்க்கிரகத்திற்கே நம்மாட்கள் ராக்கெட்டை அனுப்பிவிட்டார்கள். அந்த விண்கலம் படம் எடுத்து அனுப்புகிறது.

படிப்பிற்கும், அறிவிற்கும் சம்பந்தம் உண்டா? படிப்பறி விற்கும், பகுத்தறிவிற்கும் சம்பந்தம் உண்டா? இவன் படிக் கின்ற விஞ்ஞானத்திற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா? இன்னமும் ஏன் செவ்வாய் தோஷத்தைப்பற்றி பேசு கிறார்கள். இதனால் பல பெண்களுக்கு வயதானாலும் திருமணமாகவில்லையே! செவ்வாய்க் கிரகத்திற்கே விண்கலத்தை அனுப்பிய பிறகும், இன்றும் செவ்வாய் தோஷத்தைப்பற்றி பேசுகிறார்கள்.
இவையெல்லாம் தாண்டி, நாளைக்கு செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கக் கூடிய வசதி இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அங்கே காற்று இருக்கிறதா? தண்ணீர் இருக்கிறதா? என்று பார்க்கிறார்கள்.

இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், இவனை கொண்டு போனால், என்ன செய்வான், செவ்வாய்க் கிரகத்திலும் கர்ப்பக் கிரகத்தை உண்டாக்குவான். இந்த இடத்திற்குச் சென்றால் தீட்டுப்பட்டுவிடும் என்ற சொல்லக்கூடிய நிலைக்கு வந்துவிடுவான்.

அதனால்தான், நம்முடைய அய்யா பிறந்த நாள் விழா வாகிய இந்த விழாவில், இதே நாகையில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு திட்டம் வகுத்தோமே, அதேபோல்தான் நண்பர்களே, இளைஞர்கள் நிறைய பேர் இங்கே வந்திருக்கிறீர்கள். புதிய இளைஞர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள். நாகை பழைய நிலைக்குத் திரும்புகிறது என்பதில், மிகவும் மகிழ்ச்சியடையக்கூடிய அளவிற்கு, நாகை மாவட்டம் நல்ல அளவிற்கு உணர்ச்சி பூர்வமான இளைஞர்கள், செயல்திறன்மிக்க இளைஞர்கள் வருகிறீர்கள். எந்தக் கட்சிக்காவது நெருக்கடி வந்தால், கைகொடுக்கின்ற ஒரே சட்டை கருப்புச்சட்டைதான்!


இளைஞர்களே! நீங்கள் பதவிகளைப்பற்றி கவலைப் படாதீர்கள்; கருப்புச் சட்டைதான் என்றைக்கும் கைகொடுக் கும்! நீங்கள் பார்த்திருப்பீர்களே, எல்லா கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருப்பார்கள். எந்தக் கட்சியிலும் கருப்புச் சட்டை இல்லாதவர்கள் கிடையாது. யாருக்காவது, எந்தக் கட்சிக்காவது நெருக்கடி வந்தால், கைகொடுக்கின்ற ஒரே சட்டை கருப்புச்சட்டைதான், இன்றைக்கு! இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா?


தி.மு.க, அ.தி.மு.க., எல்லாம்! கம்யூனிஸ்ட் நண்பர்களும் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், நமக்கும் பெரிய வித்தியாசமில்லை. கொள்கையில் இருவரும் ஒத்துதான் வருகிறோம்.

ஆகவே, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கின்ற ஒரு இடம் உண்டு.
ஒரு தீயணைப்புத் துறை இருக்கிறது. அது என்ன ஒரு கட்சியைச் சார்ந்தது என்று அர்த்தமா? வண்டியை ஓட்டுகிறவர் அல்லது யாராவது ஒருவர் ஒரு கட்சியை சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், அந்த அமைப்பு கட்சியை சாராதது!


அதேபோல, காவல்  நிலையம் இருக்கிறது; அது எந்தக் கட்சியை சார்ந்ததும் இல்லை. ஆட்சி போகும், வரும்; அதிகாரிகள் எப்பொழுதும் இருப்பார்கள்; அவர்கள் கடமையைச் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.


எங்களுக்கு ஜாதி, மத கண்ணோட்டம் கிடையாது!

பள்ளிக்கூடம் இருக்கிறது, அது எல்லோருக்கும் பொது வானது; இல்லை, இல்லை, ஒரு கட்சிக்காரர்களைத்தான் சேர்ப்போம் என்று சொல்லமுடியுமா?
அதுபோல, மருத்துவமனை எல்லோருக்கும் பொது வானது.


அதுபோல, நண்பர்களே, திராவிடர் கழகம் என்பது ஒரு தீயணைப்பு நிலையம்போல, எல்லோருக்கும் பொது வானது. அதேமாதிரி பள்ளிக்கூடம் போல, அது எல்லோ ரையும் சேர்க்கக்கூடியது, அறிவுறுத்தக் கூடியது. நோய்கள் வந்தால் சேர்க்கக்கூடிய மருத்துவமனை அது எல்லோ ருக்கும் பொதுவானது, அதுபோல, திராவிடர் கழகம் பொதுவானது.


இது ஒரு பொது அமைப்பு; பொதுக் கருத்து. எங்களுக்குப் பொதுநல சிந்தனைகள்தான். எங்களுக்கு ஜாதி, மத கண்ணோட்டம் கிடையாது.
தேர்தல் நேரத்தில் ஜாதி கைகொடுக்கிறது என்று ஜாதித் தீயை விசிறி விடுகிறார்கள். வேறு எந்த மூலதனமும் இல்லையென்றால், ஜாதியைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறலாம் என்று பார்க்கின்றனர் சிலர். அதைத் தவிர வேறு என்ன ஜாதிக்கு மரியாதை இருக்கிறது.


இன்றைக்கு இளைஞர்கள் எல்லாம் முன்வந்திருக் கிறார்களே, குருதிக் கொடை, விழிக்கொடை, உறுப்புகள் கொடை அளிக்கின்றனரே, மனிதநேயம் வளர்ந்து இருக்கிறதே!


இதில் கட்சியில்லை, ஜாதியில்லை; மனிதநேயம் மட்டும்தான் உள்ளது.
பெற்றோர்களேகூட நல்ல அளவிற்கு, அவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? என்பதைவிட, அவர்கள் மனிதர்கள்; அதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையில் அவர்கள் சிந்திக்கிறார்கள்.


என் மகன் மூளைச்சாவு அடைந்துவிட்டான். அவனு டைய உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத் துங்கள் என்று சொல்கிறார்கள்.
உடற்கொடை அளிக்கிறார்கள்; அந்த உடற்கொடை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுகிறது.

ஒரு புதுக் கொலையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், கவுரவக் கொலை!
ஜாதி, ஜாதி என்று அதைப் பிடித்துக்கொண்டு உயிரை விடுகிறான் பாருங்கள், என் ஜாதியில் ஏன் காதல் செய்ய வில்லை; ஏன் வேறு ஜாதியில் காதல் செய்கிறீர்கள் என்று. இதுவரையில் கருணைக் கொலை என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம்; இவர்கள் ஒரு புதுக் கொலையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், கவுரவக் கொலை என்று.

இது கவுரவக் கொலையா? இதைவிட மானக்கெடு வேறு ஏதாவது உண்டா?

இவர்கள் இலக்கியம் படிக்கிறார்கள்,

தமிழருடைய பண்பாடு என்று
யாயும் யாயும் யாராகியரோ
உங்கம்மா யாரோ, எங்கம்மா யாரோ,
பதவுரை, கருத்துரை, பொதுவுரை என்று சொல்லிக் கொண்டு, நீ வேற ஜாதி, நான் வேற ஜாதி என்று.
ஜாதிக்கு என்ன அடையாளம்? சொல்லுங்கள்.

இப்பொழுது  ரத்தம் கொடுக்கிறார்களே, இளைஞர்கள், அந்த ஜாதியைப் பற்றி சிந்திக்காத, சிந்திக்கிறவர்களுக்குச் சொல்கிறேன்; இளைஞர்கள் யாராவது இருந்தால், இளைஞர்களுக்கு அல்ல; அதை ஊட்டவேண்டும் என்று சில சக்திகள் முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்காக நான் இதைத் தெளிவாகச் சொல்கிறேன்.

உங்கள் ரத்தம் என்ன குரூப் என்று கேட்டால், அவர் என்ன ஜாதி பெயரையா சொல்கிறார்? நான் அய்யங்கார், என்னுடைய ரத்தம் அய்யங்கார் ரத்தம். என்னுடைய ரத்தம் செட்டியாரு ரத்தம்; நாடார் ரத்தம், வன்னியர் ரத்தம், அன்னியர் ரத்தம், முதலியார் ரத்தம் என்றா சொல்கிறார்கள்?

ரத்தப் பிரிவை ஏ பாசிட்டிவ், ஏ1 பாசிட்டிவ், ஒ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ் என்றுதானே பிரித்து வைத்திருக்கிறார்கள்.

எந்தப் பிரிவு ரத்தம் யாருக்குச் சேருமோ அந்தப் பிரிவு ரத்தத்தைத்தான் ஒருவருடைய உடலில் ஏற்ற முடியும்.

ஒரே பாடத்தை ஒரு ஆசிரியர் திரும்பத் திரும்ப சொல்லித்தான் தீரவேண்டும்!
நான் பல இடங்களில் சொல்லியிருக்கின்ற உதாரணத் தையே மீண்டும் சொல்கிறேன். ஏனென்றால், ஒரே பாடத்தை ஒரு ஆசிரியர் திரும்பத் திரும்ப சொல்லித்தான் தீரவேண்டும். வேறு வழியில்லை. மாணவர்கள் புதிய மாணவர்களே தவிர, பாடம் பழைய பாடம்தான். தேவையான பாடம்.
உதாரணத்திற்கு, ஒரு அய்யங்கார் அடிபட்டுவிட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ரத்தம் தேவைப்படுகிறது.  அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ்.  உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண் டும் என்றால் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்.

டாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான் தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.

உடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார், நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.

அய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்று.

டாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர் களைத் தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்களுடைய உடம்பில் ஏற்றவேண்டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும் அல்லவா? நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்கமாட்டீர்களா? என்று சொல்கிறார்.

இப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷண்ட்டான அய்யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்; நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா?


என்ன டாக்டர் நீங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று. என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள். உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத் தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.

                         -----------------------------------தொடரும்--”விடுதலை” 23-10-2014

30 comments:

தமிழ் ஓவியா said...

இலங்கையில் பார்ப்பன அர்ச்சகர் கைது!

கொழும்பு, அக்.24- இலங்கையில் உள்ள சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலின் உதவி குருக் களாக உள்ள பார்ப்பனர் இலங்கைக் காவல்துறை யினரால் கைது செய்யப் பட்டார். முன்னேஸ்வரம் கோவிலின் உட்பிரகாரத் தில் அமைந்திருந்த பூஜை மண்டபத்தை இடித்துக் கட்டியதால் கைது செய் யப்பட்டுள்ளார். முதன் மையான அர்ச்சகராக உள்ள பார்ப்பனர் தலை மறைவாகிவிட்டார்.

முன்னேஸ்வரம் கோவில் சுமார் 2300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். தற் போதுள்ள கட்டடம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பராக்கிரமபாகு என் கிற மன்னன் கட்டியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தக் கட் டடத்தின் பழமைகருதி 2009ஆம் ஆண்டு முதல் இக்கோவிலை தொல் பொருள் துறையின் தன் னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. எனவே, அங்கு எவ்வித மான மாற்றம் செய்வதாக இருந்தாலும், தொல் பொருள் துறை அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் தொல் பொருள் துறையின் முன் அனுமதியின்றி கோவில் உள்பகுதியில் இருந்த பூஜை மண்டபத்தை இடித்து, அதனைப் புதுப் பிக்க முயன்றதான குற்றச் சாட்டில் சந்தேக குற்ற வாளியாக கோவிலின் உதவி குருக்கள் சர்வேஸ் வரய்யர் பத்மநாப குருக் கள் என்கிற பார்ப்பனர் கைது செய்யப்பட்டுள் ளார். கோவிலின் பிரதம குருக்களான பார்ப்பனர் தலைமறைவாகிவிட்டார். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தொல் பொருள் துறையின் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/89858.html#ixzz3H3tEOZVW

தமிழ் ஓவியா said...

பெயர்கள் மாறுகின்றன

மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்துத்துவா சார்பில் உள்ளவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. டிசம்பர் 31 வாஜ்பேயி பிறந்த நாளாம். மத்திய ஊரக வீடு கட்டும் திட்டத்திற்கு வாஜ்பேயி பெயரும் சூட்டப்பட உள்ளதாம்.

ரூ.15 லட்சம் என்று வருமோ?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி கூறினார். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் ராஜ்நாத்சிங். நாட்கள் 150 ஓடி விட்டன. நான் உட்பட இந்தியர்கள் அனைவரும் காத்தி ருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் ரூ.15 லட்சத்தை எதிர் பார்த்து தான்.

- அஜய்மக்கான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

அடுத்த ஓர் அபாய அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த முறை பொறுப்பு ஏற்றவுடன் அவசர அவசரமாக மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வுகளை அறிவித்தது அல்லவா!
இப்பொழுது டிசம்பர் இறுதிக்குள் ஆவின்பால் விலையை 30 சதவீதம் உயர்த்திடத் திட்டமாம்.

Read more: http://viduthalai.in/e-paper/89859.html#ixzz3H3tmj7GG

தமிழ் ஓவியா said...

அக்டோபர்- 24 : அய்க்கிய நாடுகள் தினம்

பணக்கார நாட்டிற்கான அமைப்பாகிப்போன அய்.நா இரண்டு உலகப்போர் அதன் மூலம் ஏற்பட்ட மனிதப் பேரழிவு போன்ற வற்றின் காரணமாக உலக நாடுகளி டையே சுமூகமான உறவை தொடர்ந்து வலியுறுத்தி உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பொருளாதார, சட்டப்பிரச்சனை, மற்றும் விதிகளுக்குட்பட்டு 3 நாடு களுக்கு இடையே உள்ள சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் நோக்கில் பொதுவான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

முதல் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட சர்வதேசச் சபையின் தோல் வியை பற்றி ஆய்வு செய்து அடுத்து அதில் உள்ள குறைகளைக் களைந்து புதிய விதிமுறைகளுடன் ஓர் அமைப்பு உருவாகவேண்டிய சூழ்நிலை காரணம் சர்வதேச சபையின் தோல்வியின் மூலம் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது, மேலும் நவீனத்துவம் அடைந்துகொண்டு இருக்கும் உலகநாடுகளின் போட்டி களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமை வாய்ந்த ஒரு அமைப்பாக இருக்கவேண்டும் என்ற நிலையில் 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன. சர்வதேச வலிமையான அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான கூட்டம் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 1945-ஆம் ஆண்டு கூட்டப்பட்டது.

முதலாவது இச்சபையில் 51 நாடுகள் பங்கெடுத்தன. இம்மாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 அக் டோபர் 24ஆம் தேதி இந்த சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித் தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத் திட்ட பின்பே அதே தினத்தில் உத்தி யோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப் பட்டது. அய்க்கிய நாடுகள் சபை தோன்றிய 60 ஆண்டுகளில் இதுவரை 122-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அய்க்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளாக அரபி, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, ஸ்ப்பானிய ஆகியவை உள்ளன.


தமிழ் ஓவியா said...

அய்க்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்க மாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத் தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த் தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள் நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொரு ளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப் படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். அய்க்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சம மானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக் கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது.

அய்க்கிய நாடுகள் சபையின் தற் போதைய நடவடிக்கை சில வளரும் நாடுகளுக்கு அடங்கிச்செல்லும் நிலை யில் உள்ளது, பாலஸ்தீனப் பிரச்சனை, வளைகுடாநாடுகளிடையேயான உள்நாட்டுப்போர் மற்றும் அனைத்துலக நாடுகளிடையே நிலவும் எல்லைப் பிரச்சனைகள். மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் வளரும் நாடுகளின் ஆக்ரமிப்பு, ஏழை நாடுகளை தங்களின் குப்பை குவிக்கும் இடமாக பயன்படுத்தும் போக்கு, உலக வெப்பமயமாதலுக்கு முழுக்க காரனமாக இருந்த மேலை நாடுகள் தங்களின் செயலுக்கு உலக நாடுகளையும் பங்கெடுத்துக் கொள்ளச் சொல்வது, ஏழை நாடுகளை கட்டாயமாக கடன்வாங்க வற்புறுத்துதல் போன்ற பல்வேறு சிக்கல்களை அய்க்கியநாடுகள் சபை தடுக்கமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக 1990-வளைகுடாப் போருக்குப் பிறகு அய்க்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் முழு அதிகாரத் திற்குள் வந்துவிட்டது போன்ற ஒரு சூழல் உருவாகிவிட்டது. பாதுகாப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் சபை அய்க்கிய நாட்டுச்சபை யின் அதிமுக்கிய அங்கமாகும்.

ஆனால் பாதுகாப்புச்சபையில் உள்ள பணக்கார நாடுகள் மற்றும் சந்தை பொருளாதாரத்தை ஆக்கிரமித்து இருக்கும், நாடுகள் தங்களின் லாபத்திற்கு ஏற்ப மனித உரிமைச்சபையை ஆட்டு விப்பது தற்போது கண்கூடாக நடக்கிறது.

முக்கியமாக இந்தியா பாதுகாப்புச் சபையில் அங்கமில்லாத நிலையிலும் இந்தியாவின் மிகபெரிய சந்தை மூலம் லாபத்தை கொள்ளையடிக்கத் துடிக்கும் பணக்கார நாடுகள், இலங்கையின் மீதான மனித உரிமை தொடர்பான விசாரனை யில் இந்தியா மற்றும் சில ஆசியப்பிராந்தி நாடுகளின் அழுத்தததினால் போர்க் குற்றவிசாரனையில் பல்வேறு தடை களை போட்டு வருகிறது,

முக்கியமாக மனித உரிமைச்சபைக் மேற்குலக நாடுகள் முற்றிலும் நிதி ஒதுக்குவதை தவிர்த்து விசாரணை தாமதமாக்க முயல்வது குறித்து தற் போதைய மனித உரிமை ஆணையத் தலைவரே தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அய்க்கிய நாடுகள் சபையின் தற்போதைய நடவடிக்கைகள் ஏழை நாடுகளுக்கு பாதகமாகவும் பணக்கார மேற்குலக நாடுகளுக்குச் சாதகமாகவும் உள்ளது. அய்க்கிய நாடுகள் சபை தற்காலத்தில் தொடர்ந்து செய்துவரும் பிழைகளை திருத்திக்கொள்ளாவிட்டால் மூன்றாம் உலகப்போர் என்பது கட்டாயம் உருவாகிவிடும். அப்படி ஒன்று உருவா னால் 400 கோடி உயிர்ப்புள்ள பூமி மனி தன் என்னும் அறிவுள்ள விலங்கினால் விரைவில் அழிந்துவிடும். அய்க்கிய நாடுகள் தினமான இன்று அய்க்கிய நாடுகள் சபை பாரபட்சம் காட்டாமல் இருக்கவேண்டும் என்பதே மனிதநேயம் மிக்கவர்களின் பேரலா. கேட்குமா அய்.நா.

Read more: http://viduthalai.in/page-2/89844.html#ixzz3H3uFVzYg

தமிழ் ஓவியா said...



மழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?

மின் ஆய்வுத்துறை விளக்கம்


சென்னை, அக்.24: மழைக் காலத்தில் மின்சாரத்தை பாதுகாப் பாக கையாளுவது எப்படி என்பது குறித்து மின் ஆய்வுதுறை விளக்க மளித்துள்ளது. தமிழ்நாடு அரசு மின்ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், எதிர்வரும் காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்கள் சேதம், மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பு ஏற்படக்கூடும். இதுபோன்ற நேரங்களில் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும், அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தை பயன் படுத்தும் போது மேற்கொள்ள வேண் டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் பொது மக்களிடம் விழிப் புணர்வு அவசியமாகும். மின்சாரத்தை பாதுகாப்பாக கையாளும் வழி முறைகள்:

அய்எஸ்அய் முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உடைந்த மின் சாதனங்களை உடனே மாற்றிவிடுங்கள்.
வீடுகளில் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதனை குழந் தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் பராமரிக்கவும்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் ஒயரிங்குகளை சோதனை செய்து மாற்றி கொள்ள வேண்டும்.
குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சை பொருத்துவதை தவிர்க்கவும்.
சுவரில் ஒயரிங் செய்யப்பட்டுள்ள இடங்களில் ஆணி அடிக்க கூடாது.
மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. விளம்பர பலகைகள் வைக்க கூடாது.
அறுந்து விழுந்த மின் கம்பிகளின் அருகில் செல்லாதீர்கள். உடனடி யாக மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.
மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளி லும் நிற்க கூடாது.
இடி அல்லது மின்னலின் போது தொலைக்காட்சி மிக்சி, கிரைண் டர், கணிணி, தொலைப்பேசி பயன்படுத்த கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read more: http://viduthalai.in/page-2/89848.html#ixzz3H3uaeuQY

தமிழ் ஓவியா said...

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட் சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ் தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின் றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரிய வில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3vSmp8C

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்லாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாப னங்கள், சகல விதமான மத சங்கங்கள் ஆகிய அனைத் தும் தொழிலாளர் வர்க் கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவு வரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89877-2014-10-24-10-39-19.html#ixzz3H3va5462

தமிழ் ஓவியா said...

படக்காட்சியில் காமச்சுவை!

காட்சி என்ன கண்ணோடு வருகிறதா? என்று கிராமப் புரத்து மக்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் படக் காட்சியிலே பாமரர்களின் உள்ளம் படிந்துதான் கிடக்கிறது.

கடலன்ன காமங் கொண்டாலும் மடலேறா மாண்பு மங்கையொருத்திக்கு உண்டென்பான் வள்ளுவன்.

விரிந்து, பரந்து கிடக்கும் கடலைக் கண்டால் புலவர் பெருமக்கள் பழம் பனுவல்களையெல்லாம் பாழும் வயிற்றில் பதுக்கிக் கொண்டாயே என்று புழுங்கி ஏங்குவர். நீலக்கடலின் நீள்கரையில் நின்று, கடல்நீர் நீலமாக இருப்பதேன்? என்று அறிவியல் உலகம் வினா எழுப்பி விடை கண்டது.

அலைக்கும் கடல் முத்துக்களைக் கொடுத்து தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டது என பழங்கால வரலாற்றைப் பாங்குற அறிந்தோர் பகர்வர்.

பாம்பின் படங்கண்டும், விடங்கொண்ட பார்ப்பானை விரைந்து அடி, பாம்பு தப்பினாலும் பரவாயில்லை என்றார் தந்தை பெரியார்.

கடலையும், நிலத்தையும் பாம்பு தாங்குவதாக மூடத் தனத்தின் முழுமுதற்கருத்தைத் தமிழ் மண்ணில் விதைத்தனர்.

பெண்ணைப் பேரின்பப் பொருளாக்கி பேரிடியைத் தமிழர் வாழ்வில் விழ வைத்த பேதை மனிதர், மூடப் பழக்கத்தைப் புகுத்தியன்றோ தமிழர்களின் தன் மானத்தை இழக்க வைத்தனர்! ஒன்றா இரண்டா, ஓராயிரம் அன்ன உன்மத்தர் களால் உலா வந்தன பாடல் உருவிலே.

ஆண்ட இனம் ஆரியத்திற்கு அடிமைப்பட்டது அதனாலன்றோ? கோள்கள் தங்களின் ஈர்ப்புச் சக்தியால் இயங்கி வரு கின்றன என்பது அறிவியல் கண்ட கண்டுபிடிப்பு. ஆனால், ஆத்திகர்களோ கடல், நிலச்சுமையைப் பாம்பு தாங்கு வதாகப் பொய்யையே புனைந்து வைத்துத் தமிழர்களை மாய்க்க, இன்பத்தை ஊட்டினர்.

ஆயிரந்தலைப் பாம்பு படமெடுத்து மூடியதைப் போல, பெண்ணொருத்தி தன் மறைவிடத்தை மேகலை எனும் ஆபரணங் கொண்டு மறைத்தாள் என்று பிரபுலிங்க லீலையில் பேசப்படுகிறது. பெண்ணின் உறுப்பைப் பெரிதாக்கி பாம்பின் படம் அதற்கு உவமை என்பர் புலவர் பெருமக்கள்.

ஆனால், லிங்கத்தின் லீலையை பாடவந்த புலவன், மறைவிடத்தை நீள அகலங்கண்டு மீளமுடியாமல் - ஆயிரந்தலைப் பாம்பின் படங்களைக் கொண்டு மூடி அழகு பார்க்கிறான் - அளவு போடுகிறான் ஆத்திகப் புலவன். என்னே கடவுள் பக்தி! பக்திச் சுவையைப் பாட வந்தவன் பாவையின் படம் பற்றி சுவையொழுகப் பாடுகிறான்.

பக்தி வருமா? புத்தி அழியுமா? பாடலை மனப்பாடம் செய்யும் பக்தர்களே! பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது, உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறதன்றோ!

பாடலையே தருகிறோம். படித்தின்புறுங்கள்.

பாயும் வெண்திரைக் கருங்
கடல் நிலச்சுமைப் பாம்பின்
ஆயிரம் படங்களுந்திரை
யிட்டன வனைய
மீயி லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாய்
மாயை மங்கைத னல்குலி
னொருதிரு மடந்தை
(பிரபு லிங்கலீலை, பக்கம். 67)

- தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89878-2014-10-24-10-42-20.html#ixzz3H3vhytOL

தமிழ் ஓவியா said...

மனு தர்ம முரண்பாடு

சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.

(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான். (மனு, அத்தி.3, சு.17)

13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மை யினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89878-2014-10-24-10-42-20.html#ixzz3H3vs2wEr

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது.

நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wHohMC

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.

சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய்யப்பன் கோயி லுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக்கிட்டிருக்கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/89876-2014-10-24-10-35-16.html#ixzz3H3wR7vy5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகம் எதுவாக இருக்கிறது என்று கேட்ட மைத்ரேயன் கேள்விக்குப் பதிலாக,

இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவ னையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த் துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான் என்று ஓர் ஆன்மிக இதழ் கூறுகிறது.

படைத்தல் - பிரம்மா, காத்தல் - விஷ்ணு, அழித் தல் - சிவன் என்று சொல்லி வந்தது எல்லாம் என்னாயிற்று?

விஷ்ணுதான் எல்லாம் என்று அய்யங்கார் சொல்லுவதை ஸ்மார்த் தர்கள் ஏற்றுக்கொள் கிறார்களா?

அட குழப்பமே, முரண்பாடே, இதுதான் இந்து ஆன்மிகமா?

Read more: http://viduthalai.in/e-paper/89959.html#ixzz3HD4tHr9f

தமிழ் ஓவியா said...


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீண்டாமை:

திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், அக்.25_ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாடம் நடைபெறும் தீண்டாமையை எதிர்த் துப் போராட்டம் நடத் தப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலினுள் மணவாள மாமுனி சன் னதி உள்ளது. இந்த சன்ன தியினுள் பார்ப்பனர்கள் மட்டும் உள்ளே சென்று வழிபாடு செய்து வருகின் றனர். பார்ப்பனர் அல் லாதவர்களுக்கு இந்த சன் னதியினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பார்ப் பனர்களுக்கு தனி வழி. பார்ப்பனல்லாதார்க்கும், பொதுமக்களுக்கும் தனி வழி ஒதுக்கியுள்ளனர். பார்ப்பனரல்லாதவர்கள் வெளியே அமர்ந்து தான் பாடல் பாடி வழிபட வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்தத் தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து பார்ப்பனல்லாத மாதவ ராமானுஜதாசர் கடந்த 2008 -ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் அடைந்துள் ளார். உயர்நீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் உள்ளே சென்று பாடல் பாடி வழிபடலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு எண்:...25845/2008 , இந்து அறநிலைய துறை ஆணை நகல் எண்கள்:35/2003 தேதி: 23.12.2003 மற்றும் 168/2009 தேதி: 17.8.2009. இத்தீர்ப்பு மற்றும் ஆணை நகலைக் காண் பித்த பின்னரும்கூட பார்ப்பனர்கள், பார்ப்பன ரல்லாத மாதவ ராமானுஜ தாசர் உள்ளிட்டவர்களுக் குத் தொடர்ந்து வழி பாட்டு உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கின்றனர்.

ராமானுஜ தாசர் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் களுடன் தொடர்ந்து இதற்கான களப் பணி களில் ஈடுபட்டு வந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் காஞ்சி மாவட்ட ஜனநாயக அமைப்புகளைத் தொடர்பு கொள்கின்ற னர். திராவிடர் கழகத்தி னரும், விடுதலைச்சிறுத் தைகள் கட்சியினரும் களத்தில் இணைகின்ற னர்.

கடந்த 15.10.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்ட இந்து அறநிலை யத் துறை அலுவலரைச் சந்தித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரியும், 19.10.2014 முதல் 28.10.2014 நடைபெறவுள்ள உற்சவத்தை ஜாதி பாகு பாடின்றி நடத்திடக் கோரியும் மனு கொடுத்த னர்.

மீறுவோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பினைக் கட்டாயம் முழுமையாக கடைப்பிடித்திடவேண்டும். இல்லையென்றால் மீறு வோர்மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர் வாகத்திற்குக் கடிதம் கொடுக்கின்றது.

இருப்பினும் ஆதிக்க ஜாதித் திமிர்ப்பிடித்த பார்ப்பன பூசாரிகள், பார்ப்பனரல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தலைமையில் 21.10.2014 அன்று மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் மற் றும் போராட்டக் குழுவி னரும் கோவிலுனுள்ளே மணவாள மாமுனிவர் சன்னதி உள்ளே சென்ற னர்.

பார்ப்பனர்கள், மாதவ ராமானுஜ தாசர் மற்றும் செந்தில்நாதனையும் வழி மறித்து, ஆபாச வார்த் தைகளால் மிரட்டினார் கள்.

தடையை மீறி உள்ளே சென்ற பார்ப்பனரல்லாத மாதவ ராமானுஜ தாசர், செந்தில்நாதன் உள் ளிட்டவர்கள் பார்ப்பனர் களைவிட சிறப்பாகவே நாலாயிர திவ்யப் பிரபந் தம் பாடலைப் பாடி வழி பட்டனர்.

பார்ப்பனர்கள், காவல் துறையினரை அழைத்து வந்தனர். போராட்டக் குழுவினரும் உயர்நீதி மன்ற தீர்ப்பானையைக் காண்பித்து வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். காவல் துறை உதவியுடன் மாதவ ராமானுஜ தாசர் உள் ளிட்ட பார்ப்பனர் அல் லாதவர் அனைவரையும் சன்னதியை விட்டு வெளி யேற்றினார்கள்.

அடுத்தகட்ட நடவ டிக்கைபற்றி ஒத்த கருத்து கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய மக்கள் போராட் டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

பங்கேற்றோர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திராவிடர் கழகத் தோழர் கள் இளையவேல், வேலா யுதம், சக்திவேல், அர் ஜூன், ரவிந்திரன், அருண் குமார், தங்கராஜ், கோபி நாத், கோவிந்தராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பாசறை செல்வராசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தோழர் லாரன்சு மற்றும் பல தோழர்கள்
விடுதலை செய்தியாளர் இரா.சக்திவேல், காஞ்சிபுரம்.

Read more: http://viduthalai.in/e-paper/89973.html#ixzz3HD52auYN

தமிழ் ஓவியா said...

காந்திக்குப் பதிலாக நேருவைத்தான் கோட்சே கொலை செய்திருக்கவேண்டுமாம்:
சொல்வது கேரளா ஆர்.எஸ்.எஸ்.!

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததற்கு பதிலாக நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்கவேண்டும் என்று கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஊடகமாக வெளிவருவது கேசரி. கடந்த 17 ஆம் தேதியிட்ட கேசரி இதழில் பி.ஜி.கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் சாலக் குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவரும் கூட!

Read more: http://viduthalai.in/e-paper/89977.html#ixzz3HD5FqHnC

தமிழ் ஓவியா said...

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும்.
_ (குடிஅரசு, 17.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/89978.html#ixzz3HD5Y8F95

தமிழ் ஓவியா said...

அக்.25: தகவல் அறியும் உரிமை சட்ட நாள்

அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங் களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப் பட்டு, அக்.12ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப் போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/89989.html#ixzz3HD6AS8Ob

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகோரி

அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வேண்டுகோள்

டில்லி, அக்.25 புதுடில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி.அகர்வாலா உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திர மைதானிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின்மூலம் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டதாவது:

18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சி ஜெயலலிதா பிணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஃபாலி நார்மன் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தந்தி டிவி பாண்டேமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டி அது தொடர்பான உண்மைத் தகவல்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது என்பது பொருத்தமற்றதும், இழிவு படுத்தவதும் ஆகும். 18.10.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதா பிணை கோருவதில் ஃபாலி நாரிமனின் வாதுரைகளை ஒளிபரப்பி உள்ளது மாண்பமை உச்சநீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதால், மாண்பமை உச்சநீதிமன்றம் இதில் தொடர்புடைய பதிவு மற்றும் ஒளிபரப்பிய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக வழக்குரைஞர்கள் சங்கம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலிமையாக வாதிட்டாலும், நீதிமன்ற நடவடிக் கைகளை பதிவு செய்வது மற்றும் ஒளிபரப்புவது உள்பட நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. ஆகவே, இதில் தொடர்புள்ள அனைத்திலும் மிகுந்த கவலையுடன் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பைக் கண்டித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

-இவ்வாறு அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அதீஷ் சி. அகர்வாலா உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/89994.html#ixzz3HD6jMlJP

தமிழ் ஓவியா said...

பிரச்சார போதனாமுறை - பள்ளிக்கூடம்

சுயமரியாதை இயக்கத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்ய ஈரோட்டில் போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்குப் பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம்.

அந்தப்படி அவ்வப்போது தனித் தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்றுப் போனார்கள் என்றாலும், ஒரு முறையாக வைத்து அப்போதனா முறை பயிற்சி செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது இந்த ஜூன் 15ஆம் தேதியில் இருந்து முறையாகவே பள்ளிக்கூடப் பயிற்சி முறையில் ஒரு பயிற்சிசாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20,25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக்கூடும். ஆதலால் வர இஷ்டம் உள்ளவர்கள் தயவுசெய்து 8ஆம் தேதிக்குள் இவ்விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப்படுகிறார்கள்.

விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவில் உள்ள, சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும்.

குடிஅரசு - செய்திக் குறிப்பு - 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89913.html#ixzz3HD7A2g11

தமிழ் ஓவியா said...

பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம்


இப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப்படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள். இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக் குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது. பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர் களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை.

ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன் செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம். பார்ப்பனரல்லாத சமூகம் ஒரு மனிதன் தன்னை ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்?

நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப்படுவது அல்லாமல் அந்தச் சமூக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது. படித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோல வேதான் சமூக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக்கின்றது.

இந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை.

யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத்தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்துவத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய்வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடையாது.

ஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப்புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 24.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89922.html#ixzz3HD7K2oo3

தமிழ் ஓவியா said...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் திராவிடன், இந்தியா என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர் பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும்.

எப்படி இருந்த போதிலும் இவை இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு, வக்காலத்து பேசும் வகையில் நமக்கு மத எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக் கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவைகளால் ஆதரவு எதிர் பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டி யிருக்கின்றது.

ஏனெனில், நாமோ பல மதங்களையும் பல சமய பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், சமுகக் கொள்கைகளையும், அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை உயர்வு தாழ்வு வித்தியாசத்தையும் தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு தொலைத்தாகவேண்டும் என்ற முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும்.

அதோடு மாத்திரமில்லாமல் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்பந்த முண்டாக்குவதே மதம் என்றும் அல்லது கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை உணரச் செய்வதே மதம் என்றும் சொல்லும்படியான மதக் கொள்கையும் சமயக் கொள்கையையும் கண்டித்து. அவைகள் முட்டாள் தனம் என்பதற்காக நிருபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதனால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும். இல்லாவிட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின் றோம்.

அதுபோலவே சில சமுகத்தாரும் சில சமயத் தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமுகமே மேலான தென்று வஞ்சித்துஆதிக்கம் பெற்று அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்த அரசியல் என்றும் தேசியம் என்றும் காந்தியம் என்றும் சத்தியாக்கிரகம் என்றும் பல சூழ்ச்சித் துறைகளை உண்டாக்கி அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்துவரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும் அவர்களது தந்திரங்களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடன், சில சமுகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர் களாகவும் இருக்கின்றோம். இதனால் பல சண்டைகளைக் கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இதனால் தேசிய ஒற்றுமை கெடுவது மாத்திரமல்லாமல் தேசிய உணர்ச்சி கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவை தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எப்படி எனில் ஒன்று அதாவது திராவிடன் தனது முதல் இதழில் சமயத்துவேஷம், சமுகத்துவேஷம், மதத்துவேஷம், முதலியன இல்லாமல் காக்கும் என்று தன்னை விளம்பரப் படுத்தி கொண்டிருக்கின்றது.

இரண்டு. இந்தியா தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளைக் கிளப்பி தேசிய ஒற்றுமைக்கு இடர்செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சைகட்டி நின்று கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்தியா திராவிடனை விட ஒருபடி முன்னேறி இருக்கின்ற தென்றே சொல்லுவோம்.

எனவே குடிஅரசுக்கு, சுய மரியாதை இயக்கத்திற்கு முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்ட சரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்க வேண்டும். மற்றபடி காங்கிரசுக்கும் சமயத் திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்ற) சில சமுகங் களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகை களாகும் என்னும் கருத்தின் மீது அப்பத்திரி கைகளையும் ஆதரித்து, அதன் உள் எண்ண மனப்பான் மையை உணர்ந்து கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோ திடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்ப னரல்லாதவர்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாக வும் இருந்தவர்களாவார்கள். ஆதலால், அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள் ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டு விடுகின்றோம்.

விலாசம்:

திராவிடன்
14, மவுண்ட் ரோடு, சென்னை
இந்தியா
11, ஜெனரல் பாட்டர்ஸ் ரோடு,
மவுண்ட்ரோடு, சென்னை.

குடிஅரசு - கட்டுரை - 10.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89921.html#ixzz3HD7VK2kl

தமிழ் ஓவியா said...

ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!


கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப் புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.

இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145)

Read more: http://viduthalai.in/page2/89915.html#ixzz3HD8UyVKv

தமிழ் ஓவியா said...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...

அட மானங்கெட்டவனே இனியாவது பெரியாரைப் படி...
நான் பெத்த மகனே நில்லு
நான் பட்ட வேதனை கேளு...
முலைவரி கொடுக்கச்சொன்னார்கள்
மனம்நொந்து கொடுத்தோம் ...
இலவசமாய் உழைக்க சொன்னார்கள்
இடுப்பொடிய உழைத்தோம் ...
மணமகளை 'அனுப்ப' சொன்னார்கள்
அழுதுகொண்டே அனுப்பினோம் ...
"செருப்பு அணியாதே சக்கிலியா" என்றார்கள்
'சரி' என்று சொல்லி பணிந்தோம் ...
"தொட்டால் தீட்டுடா பறையா" என்றார்கள்
தயங்கியபடியே தள்ளி நின்றோம்...
"பார்த்தால் பாவமடா பஞ்சமா" என்றார்கள்
புழுங்கியபடி விலகிச் சென்றோம்...
வேசிபுத்திரன் என்றே அழைத்தார்கள்
கூசியபடியே கடந்து சென்றோம்...
சாணிப்பாலை குடிக்கத் தந்தார்கள்
நாணியபடி குடித்துத் தொலைத்தோம்...
சாட்டையால் அடித்துத் தோலுரித்தார்கள்
நாதியின்றி துடித்துக் கிடந்தோம் ..
காரிருளில் வெள்ளி முளைத்தது போல
ஈரோட்டுக்காரன் ஒருவன் வந்தான்...
"சுயமரியாதை உயிரினும் பெரியது "
தாடிக்காரன் சொல்லித் தந்தான்...
சூழ்ச்சிகரச் சடங்குகளை செருப்பால் அடித்தான்
ஏமாற்று வித்தைகளை எட்டி எட்டி மிதித்தான்.
பார்ப்பனியப் பிசாசுகள் பயந்து நடுங்கின
ஆரிய அரக்கர்கள் அஞ்சி ஒடுங்கினர்...
அடடா இனி பயமில்லை - என்
சந்ததிகள் யார்க்கும் அடிமையில்லை
என்றே மகிழ்ந்திருந்தோமடா...
அட சூழ்ச்சியறியாத் தெண்டமே
நான் பெத்த சதைப் பிண்டமே
அந்த தாடிக் கெழவன - நீ
எப்படிடா மறந்த முண்டமே
அப்போ ஓடிப்போன பாப்பான்
இப்போ வேற வடிவத்துல வந்திருக்கான் ...
வாழ ஆரம்பிச்சதும் வயிறு எரியறான்
பைக்குல போனா பதறுறான்
ஜீன்சு போட்டதுக்கு அன்னிக்கு அடிக்கறான்
ஓட்டுப் போடலைன்னு இன்னிக்கு அடிக்கறான்
உன்னோட ஆத்தா கொடுத்த முலை வரியை
உன்னோட பேத்தி கொடுக்கனுமா ...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
உன்னோட தாத்தா குடிச்ச சாணிப்பால
உன்னோட பேரன் குடிக்கனுமா...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியாரப் படி...
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"
இந்த ஒருவரி உன்ன உசுப்ப வேண்டாமா...?
நீ மானத்தோட வாழறத பாத்து - இந்த
பெத்த வயிறு குளிர வேண்டாமா...?
பெரியார் என்பது பெயரல்ல சித்தாந்தம்
பெரியார் என்பது பெயரல்ல சுயமரியாதை ...
கல்லைவிட்டு எறிஞ்சா நாய் கூட
கொல்லுனு எதிர்த்து குலைக்குதடா
கொல்லப்புறமா வந்த சாதிவெறி நாயிக
குடிசைய எரிச்சுட்டு போகும்போது
கல்லு மாறி சொரணையில்லாம இருக்கியேடா ...
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்கலன்னா
அப்புறம் என்னடா ஆம்பளை நீ....?
அட மானங்கெட்டவனே
இனியாவது பெரியாரைப் படி
இனி எவனாவது அடிச்சான்னா
அப்பவே திருப்பி அடி ....

- தோழர் சம்சுதீன் கீரா

Read more: http://viduthalai.in/page3/89917.html#ixzz3HD95lSrI

தமிழ் ஓவியா said...

உயிர்களைப் படைத்தவன் பிர்மாவா?

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) உண்டாக்கி கடவுள் நம்பிக்கையை நொறுக்கினர் விஞ்ஞானிகள்.

கலிபோர்னியா மாகாணம் சாண்டி யாகோவில் இருக்கும் ஜேகிரேய்க் வெண்டர் இன்ஸ்டிட்டிட்டில் மைக்ரோ பிளாஸ்மா லேபரேட்டோரியம் எனும் உலகின் மனிதன் படைத்த முதல் செயற்கை உயிர் என்று கருதப்படும் க்ரோமோசோமை கிரேய்க்வென் டரும் அவரது குழுவினரும் உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியின் அதிகார பூர்வ முடிவை இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளார் கிரேய்க்.

அவரது கண்டுபிடிப்பினைப்பற்றி கிரேய்க் வென்டர் கூறியது:

ஓர் உயிரை அப்படியே அச்சு அசலாகப் பிரதி எடுக்கும் க்ளோனிங் தொழில் நுட்பத்தைவிட உன்னத மானது இது! எந்த இயற்கையான பொருளின் உதவியும் இல்லாமல், பரிசோதனைக்கூட அமிலங்களின் துணை கொண்டே, க்ரோமோசோம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த உயிர்த் துளியை அடிப்படையாக வைத்து, நாம் விரும்பும் எந்தவிதமான உயிர் வடிவத்தையும் படைத்துக் கொள்ளலாம். இனி உயிர்களைப் படைப்பது கடவுளிடம் மட்டுமே உள்ள உரிமை அல்ல.

நாங்கள் கண்டுபிடித்த இந்தச் செயற்கை க்ரோமோசோம் ஓர் அஸ்திவாரம் போன்றது. இந்த அஸ்தி வாரத்தின் மேல் நாம் எந்தவிதமான உயிர் அமைப்பையும் உருவாக்கலாம். இந்தச் செயற்கை க்ரோமோசோமை ஒரு செல்லில் புகுத்தினால், அதன் செயல்பாடுகளை கண்ட்ரோல் செய்து, உயிர் கொடுக்க நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு, அந்த செல்லின் இயல்பான வளர்ச்சியை வேகப்படுத்தி, முழு உயிரினமான மாற்றி விடும். இதில் இன்னும் அதிநவீனத் தொழில் நுட்ப எல்லைகளைத் தொடும்போது தக்காளி முதல் டைனோசர் வரை நம்மால் படைக்க முடியும்!

கார்பன்டை ஆக்சைடை உட் கொண்டு அழிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், குளோபல் வார்மிங், ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். கரும்புச் சக்கைகளை நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், பியூட்டேன் அல்லது ப்ரோபேன் எரிவாயுக்களை உருவாக்கலாம். இப்படி எங்களது இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படும் என்று பெருமையாகக் கூறுகிறார் கிரேய்க் வென்டர்.

(ஆனந்தவிகடன் 17.10.2007 இதழில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது).

Read more: http://viduthalai.in/page4/89918.html#ixzz3HD9LvFcS

தமிழ் ஓவியா said...

பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம்!


விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்ட விரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 15 ஆண்டுகளில் நடந்த 218 வெடி விபத்துக்களில் 353 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாரபட்சம் காட்டா மல் அதிகாரிகள் கடுமையான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடர் உயிர்பலியை தவிர்க்க முடியும்.

விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுப்பகுதிகளில் 800க்கு மேற்பட்ட பெரிய, சிறிய பட்டாசு ஆலைகள் உள்ளன. நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெசோ) மற்றும் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று இவை இயங்குகின்றன. ஏராளமான தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக திகழ் கின்றன. விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இயங்கும் ஆலைகளினால் அடிக்கடி வெடிவிபத்து, தொழிலா ளர்கள் உயிர்பலி, படுகாயம் ஏற்படு கிறது. விதிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படாததும், தொழிலாளர் களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததுதான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.பட்டாசிற்கு தேவையான மூலப்பொருளான கருந் திரி தயாரிப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிசைத்தொழிலாகவே சட்டவிரோதமாக நடக்கிறது.

ஆலைகளில் விபத்திற்குப்பின் அடுத்த ஒரு சிலநாட்களுக்கு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளின் நட வடிக்கை கடுமையாக இருக்கும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் அந்த பரபரப்பு அடங்கிவிடும். தீபாவளி நெருங்குவதையொட்டி மாவட்டத்தில் இந்த ஆலைகளில் விறுவிறுப்பான பட்டாசு உற்பத்தி நடந்துவருகிறது. இதில் விபத்தை தவிர்க்க விதிமுறை களை முறையாக பின்பற்றுமாறு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும். விபத்தின்றி பட்டாசு தயாரிப்பதற்கான போதுமான விழிப்புணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு, நடவடிக்கையை கடு மையாக்கினால்தான் விபத்து, உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்டாசு விபத் துக்களில் கடந்த 15 ஆண்டுகளில் 218 விபத்துக்கள் நடந்துள்ளன. 353 பேர் பலி யாகி உள்ளனர். 262 பேர் காயமடைந் துள்ளனர். பட்டாசு ஆலைகளில் விதி முறை மீறல், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

விபத்தை தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி யளிக்கப்படுகிறது ,என்றார்.

Read more: http://viduthalai.in/page4/89919.html#ixzz3HD9UnjMS

தமிழ் ஓவியா said...

நிலத்தடி நீரை சேமிப்போம்


இந்திய நகரங்கள் பலவும் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக் கின்றன. தண்ணீரைத் தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்றுதான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம்.

பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் 4ல் 3 பங்கையாவது மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண் ணீர் கிடைக்கும். அதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவது மழை நீரை சேமிப் பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது. மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரை யும் நன்னீராக மாற்றும். தண்ணீரில் தாது உப்புக்களின் கூட்டுத் தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம் இருக்க வேண்டும். அது அதிகரித்தால் நீர் உவர்ப்பாக மாறும்.
இது தொடர்பான ஆய்வின் முடி வுகள் நமது நாட்டில் பெரும்பாலும் நிலத்தடியில் உவர்ப்பு நீர்தான் உள்ளதாக கூறுகிறது. இதனை மழைநீர் சேமிப்பின் மூலம் சரி செய்யலாம்.

அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது, கூழாங்கற்கள், ஆற்று மணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழி யாக நாம் பயன்படுத்திய நீரை செலுத் தினால் அது பெருமளவு கத்திகரிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக் கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.

அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பற்றாக் குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழை நீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார் கள். தேத்தான் கொட்டையின் தன்மை யினால் மழைநீர் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.

குழந்தைகளின் எதிர்காலம் கருதி பணம், பொருட்களை பலரும் சேமிக் கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீரும் தேவை என்பதை உணர மறுக்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கருத்தின்படி நிலத்தடியில் நீரை சேமிக்கா விட்டால் நமது சந்ததி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.

- தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page4/89920.html#ixzz3HD9d1GEI

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணா


நமது இலட்சியம் அரசியல் வேட் டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதா தையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப் பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

- பேரறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page4/89924.html#ixzz3HD9kfIlM

தமிழ் ஓவியா said...

ஜெவை காப்பாற்றாத யாகங்களும் பூஜைகளும்!


கடந்த காலங்களில் ஜெயலலிதா வின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் அவராலும் அவரது தோழியாலும் நடத்தப்பட்ட ஹோமங்கள் 9217

யாகங்கள் 6424 என்றும் அவர்களோடு, அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சேர்ந்து கோவில்களில் செய்த அபிசேகங்கள் 27,019 அர்ச்சனைகள் 43,672 என்றும் 86,332 மன்னார்குடி வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிகின்றன. அவர் பெங் களூருவில் உள்ளே இருந்த காலங் களில் இங்கே இருப்பவர்கள் கிடைத்த ஓய்வில் இந்தக் கணக்கு போட்டார் களோ என்னவோ!

இந்த 86,332 வேண்டுதல்களில் இவர்களின் தொண்டர்களும் அமைச் சர்களும் மண்சோறு சாப்பிட்டதும் அங்கப் பிரதட்சணமும் சேரவில்லை யாம். இத்தனையும் செய்த பிறகுதான் இவருக்கு தண்டனையும், தண்டமும், பதவிப் பறிப்பும் கிடைத்துள்ளது என்பதையும் பிணை கிடைப்பதுகூட தாமதமாகியது என்பதையும் சிந்தித் தால் பெரியார் பெரும் படையின் கடவுள் மறுப்பு எவ்வளவு தீர்க்கமானது என்பது புரியும்.

ஒவ்வொரு பரிகாரமும் பார்ப்பனர் களின் வருமானத்துக்குரியது என்பதால் இந்த 86,332 வேண்டுதல்களால் பயன் (தட்சணை) பெற்ற பார்ப்பனர்களின் எண்ணிக்கை 78,642 என்கின்றனர். இவைகளை சிந்திந்தால் பகுத்தறிவு வந்து விடுமே என்றுதான் இன்னும் கொங்கணேஸ்வரர் கோயில் யாகம், பால்குடம், அங்கப் பிரதட்சணம் என ஊருக்கு ஊர் அசத்துகின்றனர். வக்கீல் களாக, டாக்டர்களாக, முனைவர்களாக பேராசிரியர்களாக உள்ள அமைச் சர்களும் நிர்வாகிகளும் தங்கள் தொண்டர்களுக்கு அறிவு வந்து விடக் கூடாது என்பதில் கவனமாயுள்ளனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான்,தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேரறிஞர் அண்ணா 70 ஆண்டுகட்கு முன்பே ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றாரோ!

- தி. சோமசுந்தரத் தேவர், தஞ்சை வட்டம்

Read more: http://viduthalai.in/page5/89925.html#ixzz3HD9zqg2D

தமிழ் ஓவியா said...

செவ்வாய்க்குச் செல்லும் 13 வயது சிறுமி!

அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ் வாய்க் கிரகத்துக்குச் செல்லவிருக்கிறார்.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன் (13) என்ற அச்சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

சிறுமி அலிசாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கெனவே இதற்கான பயிற்சியில் இருப்பதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் தெரி வித்துள்ளது. அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளைப் படிப்பதோடு, நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம்களிலும் கலந்து கொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் முயற்சி குறித்து அலிசா கூறுகையில், இந்தப் பயணத்தின் மூலம் நான் மற்றவர்களிடம் இருந்து சிறந்தவள் என்று தனித்து விளங்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/page5/89926.html#ixzz3HDA81vFA

தமிழ் ஓவியா said...

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான உணவுகள்


கொழுப்புப் பிரச்சினையால் அவதிப் படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண் ணுதல், கொழுப்பின் அடர்த்தியைக் குறைக் கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல் களைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செயல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க் கைகளை நீக்க உதவுகிறது. பீன்ஸ் குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்கும் உண வாக விளங்குகிறது.

ஒட்ஸ் உணவு மெதுவாக, செரிமான மாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப் பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக, செரிமானமாவதால், தன்மையினால் எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும். க்ரீன் டீ எனப்படும் பச்சைத் தேயிலை யில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்ப தோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை.

Read more: http://viduthalai.in/page5/89930.html#ixzz3HDAQ54kX

தமிழ் ஓவியா said...

மாற்று கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்

மாற்றுகர்ப்பப்பை பொருத்திய சுவீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான்.

பரிசோதனை முயற்சியாக இப்பெண் ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் அந்த ஆண் குழந்தை சற்றுக் குறை மாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். ஆய்வுப் பரிசோ தனையாக கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட 9 பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரைத் தவிர வேறு இரண்டு பெண் களும் கருத்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பரிசோதனை முயற்சியின் வெற்றியின் மூலம், பிறவியிலேயே கர்ப் பப்பை இல்லாமலோ அல்லது புற்று நோய் வந்து கர்ப்பப்பை இழந்தோ இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வழி பிறந்துள்ளது.

ஆனால் தற்போதைக்கு இந்த கர்ப் பப்பை மாற்று சிகிச்சை ஓர் அறிவியல் பரிசோதனை என்ற அளவில்தான் உள்ளது.

Read more: http://viduthalai.in/page5/89929.html#ixzz3HDAYPeHq