Search This Blog

5.10.14

இங்கிலீஷ் பண்டிதர்களும், தமிழ்ப் பண்டிதர்களும்!ஒப்பீடு - பெரியார்


இங்கிலீஷ் பண்டிதர்களும், தமிழ்ப் பண்டிதர்களும்!

தந்தை பெரியார் ஒப்பீடு

அன்புள்ள தோழர்களே!

இன்று இங்கு பனகால் இலவச வாசக சாலையின் முதலாவது ஆண்டு விழா விற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்களித்ததற்காக இதன் நிர்வாகி களுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.

இந்த ஆண்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  இவ்வூர் பிரமுகர்கள் எல்லோரும் இங்கு விஜயமாய் இருப்பதைப் பார்க்க இவ்வாசகசாலை மிகுதியும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றே கருதுகின்றேன்.

பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும்.  பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும்.  ஆனால், வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக் கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தகசாலையும் மனிதர் களை சகல விஷயங்களிலும் ஞான பண்டி தர்களாகவும் அனுபவ ஞானமுடையவர் களாகவும் ஆக்கிவிடும்.  நம் நாட்டில் பொது உணர்ச்சியின் மீது ஏற்படுத்தப்படும் வாசக சாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.


நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4, 5 வருடமாக அறிந்து வருகிறேன்.  ஆனால், அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுயநலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத் துக்கும் பயன்பட்டு வருவதாக உணர் கிறேன்.  நம் நாட்டில் எப்படிப்பட்ட பொது நன்மையான காரியத்தையும், ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவாதீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன் படுத்திக் கொண்டு வரப்படுகிறது.  இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாததேயாகும்.


மத விஷயத்தை எடுத்துக் கொள் ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத் தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும் ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக் கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப் படுகிறதே ஒழிய, மற்றபடி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா? என்று பாருங்கள்.  அது போலவே அரசி யலை எடுத்துக் கொள்ளுங்கள்.  பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டுக் கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயர் வாழ்வு நடத்தவும் மற்ற மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது.  அது போலவேதான் கல்வியை எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும்.  கஷ்டப் பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத் தான் இருந்து வருகிறது.


உழைப்பு நமக்கு, பலன் யாருக்கு?

கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட்டத்தார் அடையும் பலனில் 4ல் ஒன்று 8ல் ஒன்று கூடப் படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது.  நம் கல்வித் திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப் பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது.  இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.


புத்தக சாலை, வாசக சாலை ஆகியவை களை வெளி நாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன்.  ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலையாட்கள் இருந்து வருவதைப் பார்த்தேன்.  3 லட்சம் 4 லட்சம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக் கிறேன்.  தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும் எழுதிக் கொண்டு போவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவதுமான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.
கிராமங்களுக்கும் மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும்.  ரயில்வே வாகன் புத்தகசாலையின் முன் வாசலில் வந்து நிற்கும்.  அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர் வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும்.  தபால் கட்டுபோல் அது டேஷன் டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும்.  அதுபோலவே வரும் போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக் கட்டாய் வாங்கிவரப்படும்.  இந்தக் காரியம் ஒரு பெரிய இலக்காவாக நடைபெறுகிறது.

பத்திரிகை அபிமானம்

அது போலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமுகத்தில் கேவலப்படுத்தப்படத் தக்கவராவர். சகல கூலிக்காரர்களும், தொழி லாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறையாவது பத்திரிகை படிப் பார்கள்.  வீடுமெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே மற்றொரு கையால் பத்திரிகை படித்துக் கொண்டே இருப்பதை நான் பார்த்தேன்.  பத்திரிகை விநியோகிக்கப் பட்ட  2 மணி 4 மணி நேரத்திற்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்துவாங்கிக் கொண்டு போய் கடைகளுக்கு விற்றுவிடுவான்.  அன்றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம்.  அரசியல் ஞானமும், மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொருவருக் கும் தெரியும்.  ஒருவரை ஒருவர் ஏமாற்ற முடியாது.  இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதே ஆகும்.
நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள்.  பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். இதனால் அதிக வாசக சாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு, ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய் விடுகிறது.  நம்மில் கொஞ்சம் பேரே படித் திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடையாது.  தமிழ்ப் புத்தக மெல்லாம் புராணங்களும், அவற்றிற்குப் புதுப்புது உரைகளும் கருப்பொருள்களும், நுண்பொருள்களுமாகத் தான் இருக்கிறதே ஒழிய, அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை.  கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான்.  அங்கொரு பெண்ணைப் பார்த்தான் காதல் கொண் டான் என்கின்ற துவக்கமும், காதலுக்கு உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டான் என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும்.  நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலைவாணர்கள் எல்லோருடைய யோக்கியதையும் இப்படித்தான் இருக்கிறது.

இங்கிலீஷின் சிறப்பு

இங்கிலீஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்பந்தமோ, பைபிள் சம்பந்தமோ கிடையாது.  இங்கிலிஷ் பண்டிதர்களுக்கு மத சம்பந்தமான விஷயம் தெரியாது.  ஆனால், தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது.  இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவ தில்லை.  ஆதிபாஷையாக இருக்கலாம்.  கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம்.  அநேக அருள் வாக்கு கொண்ட பாஷை யாக இருக்கலாம்.  அது வேறு விஷயம்.  அறிவுக்கு பயன் உண்டா? என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லத் தக்கவர்கள் மிகச் சிலரேயாவார்கள்.


ஆனால், தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை.  நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது.  அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம்.  ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டு மானால், பரப்ப வேண்டுமானால் மதத்தி லிருந்து பிரிக்க வேண்டும்.  விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும்.
பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுமாகத்தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.


பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரி கைகள் மலிந்திருக்குமானால் மதத்தினால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட் டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டி ருக்கவே மாட்டா.  ஆதலால் இந்த வாசக சாலை புத்தகசாலை நிர்வாகஸ்தர்கள் இவற்றை கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாசகசாலைக்குப் பனகால் வாசக சாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பனகால் பெருமை

பனகால் என்று பெயர் வைப்பது பனகால் ராஜாராமராய நிங்காரின் தனிப் பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவதற்கு ஆகும்.  பனகால் ஒரு புரட்சி வீரர். தியாக ராயரையும், மாதவநாயரையும் லெனினுக்கு ஒப்பிட்டால் பனகால் டாலினுக்கு ஒப்பிட லாம்.  இவர்களுடைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப் பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர் களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு சூத்திரர்களை இழிமக்களை கீழ்ஜாதியார் களை மனிதர்களாக ஆக்கிற்று.  இக்காரியம் மதங்களையும் கடவுள்களையும் ஒழிப் பதைவிட சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுப்பதை விட முக்கியமானதும் பிர யாசையானதும் என்பதை உணருங்கள்.

ஓர் உதாரணம்

இன்றைய சூத்திரர்களுக்கும் பார்ப்பன ரல்லாத மக்களுக்கும் சண்டாளர்களுக்கும் தீண்டப் படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும் பெருமையும் தெரியாது.  ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத் தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந் தரித்தவர்களுமாவார்கள்.  ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறு முன்பு அவர்கள் சமுகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரி யாது. 

 ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். 

 சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக் கட்டி வந்தவர்.  அவரை அக்காலத்தில் 12லு  ரூ 15 ரூ சம் பளம் உள்ள ஒரு முனிசிபல் பில்கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடு வான்.  அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து ராவால ராவால தேவடா வர வேணும்  வரவேணும் வாமீ என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லி விட்டு நின்று கொண்டே இருப்பார்.  அப் பார்ப்பன பில்கலெக்டர் தலை ஆட்டி விட்டு உட்கார்ந்து கொண்டு ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆஇண் டினி சூசேதானிக்கு ஏண்டா வெங்கிட்ட நாயுடு, அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான்.  என் தகப்பனார் ஆஹா! என்று சொல்லி வதிரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப் பட்டு விடுவார்.  சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம், எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா என்று சொல்லி வழியனுப்புவார் இதை நான் நேரில் பார்த்ததைச் சொல் லுகிறேன்.


பார்ப்பனத் திமிர்

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசு தாரரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான்.  இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.  இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தி யாசத்தைப் பாருங்கள்.  ஆகவே எனக்கும் என் போன்றவர்களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பனகாலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.


சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச் சியும் எப்படி இருந்தது?  இந்த 10, 15 வரு ஷத்தில் எவ்வளவு தூரம் மாற்றமடைந் திருக்கிறது?  என்பவைகளை உணர்ந்தவர் களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற் பட்ட பலனும் அதன் அவசியமும் விளங் கும்.  இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின  இயக்கங் களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும், அவற்றை ஞாபகப் படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம் மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.


ஒரு வேண்டுகோள்


இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசக சாலையை ஆதரிக்க வேண்டும்.  அங்கத் தினர் களாக வேண்டும்.  தாராளமாக பண உதவி செய்ய வேண்டும்.  பெண்களும், ஆண்களும் அங்கத்தினர்களாக வேண் டும்.  சீர்திருத்த உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்குப் புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.


இந் நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும், சுயமரி யாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது.  ஏனெ னில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோமே ஒழிய, சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறி வில்லை. எப்படி பயன்படுத்துவது?  எது சுதந்திரம்?  என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை.  சிலர் வெள் ளைக்காரனை விரட்டுவது, சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதைச் சுதந்திரம் என்கிறார், சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார்.  சிலர் தனது முட் டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திர மென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பால் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.
ஆகவே, மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அந்நியர் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்பட வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப் புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லு கிறேன். தோழர்களே!


இவ்வாசகசாலை ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைவர் முகவுரை என்கின்ற முகத்தால் இதைப் பேசினேன். மற்றவை முடிவுரையில் கூற நினைத் திருக்கிறேன்.


-----------------------01.03.1938-இல் காஞ்சிபுரம் பனகால் அரசர் வாசக சாலை ஆண்டு விழாப் பேச்சு- தந்தை பெரியார் - "குடிஅரசு" - சொற்பொழிவு - 06.03.1938

5 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/88749.html#ixzz3FK9iz1Up

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள

சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.

கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/88762.html#ixzz3FK9zDlL6

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!

பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.

தமிழ் ஓவியா said...

நாவலாசிரியரின் நகைச்சுவை

இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் சார்லஸ் டிக்கன்ஸ் குறிப்பிடத்தக்கவர். டிக்கன்ஸ், பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஓர் இளம் கவிஞர் நாரில் கோர்த்து வைத்த நன்மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி டிக்கன்சின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இளம் கவிஞரின் கவிதையைப் படித்த டிக்கன்ஸ் எழுதியவருக்கே கவிதையைத் திருப்பி அனுப்பினார். அப்பொழுது, என் அன்புக்குரிய இளம் கவிஞரே! நாரில் கோர்த்த நன்மணிகள் என்ற தங்கள் கவிதையைப் படித்தேன். நார் அதிகமாக இருக்கிறது. திருப்பி அனுப்பி இருக்கிறேன் என்று எழுதிய கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.