Search This Blog

31.3.14

மரணப் பதிவு நிலையம் தொடங்கப்படும்! ஏன்?எதற்கு? -- கி.வீரமணி

மரணப் பதிவு நிலையம் டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் படத்திறப்பில் உருவான பகுத்தறிவுக் கொள்கை முடிவு
சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு.

ஆனால், கடந்த 28ஆம் தேதி மாலை நடைபெற்ற நிகழ்ச்சி அதில் பங்கேற்றோர் எடுத்து வைத்த கருத்துகள், தகவல்கள் பல வரலாற்று மகரந்தங்களை உள்ளடக்கிக் கொண்டனவாக மணம் வீசின!

இரு நூல்கள் வெளியீட்டு விழா, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி  அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூலான அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 4) சூழியம் சூழ்வலர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் மா. நன்னன் அவர்கள் வெளியிட்டார்.

மகப்பேறு துறையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவ நிபுணரும் பி.சி. ராய் விருது பெற்றவருமான டாக்டர் பூ. பழனியப்பன் - ப. சுமங்கலி ஆகியோர்களால் எழுதப்பட்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நோய்கள் எனும் நூலை பிரபல சிறுநீரகவியல் துறை அறுவைச் சிகிச்சை மருத்துவர் அ. இராசசேகரன் வெளியிட்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு நம்மிடையே மகிழ்ச்சியோடு உறவாட இருந்த டாக்டர் பூ. பழனியப்பன் அவர் கள் எதிர்பாராத விதமாக மறைவுற்ற காரணத்தால் அவர்தம் நூல் வெளியீட்டு விழாவோடு அவரின் படத்திறப்பும் இணைக்கப்பட்டது.

அவரது இணையரும், மகன், மகள் உள்ளிட் டோர் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

டாக்டர் பூ. பழனியப்பன் அவர்கள் சுய மரியாதை இயக்க - திராவிடர் கழகக் குடும்ப வழி வந்த பெருமகன் ஆவார்; பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டியவர் - தம் குடும்பத்தவர்களை அந்தப் பாட்டையில் பீடு நடைபோடச் செய்தவர்.
அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை மதச் சடங்கின் அடிப்படையில் நடத்திட உற்றார் உறவினர் துடிதுடித்ததையும், அவற்றை டாக்டர் பூ. பழனியப்பன் அவர்களின் மகன் பொறியாளர் ப. சேரலாதன் அவர்களும், குடும்பத்தினரும் எதிர் கொண்டு புறந்தள்ளிய புரட்சியையும் சேரலாதன் அவர்கள் எடுத்துக் கூறியபோது பார்வையாளர்கள் பகுதியில் நிசப்தம் தன் ஆளுமையைச் செலுத்தியது.

இது போன்ற துக்க நிகழ்வுகளில், குடும்பத்தார் துயரத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மூடநம்பிக்கையாளர்கள், மதவழிச் சிந்தனை யாளர்கள் தலைக்குத் தலை நாட்டாண்மை செய்யும் நிலைமையெல்லாம் உண்டு.
அந்த நேரத்திலும் அயராமல் தம் வாழ்வில் வரித்துக் கொண்ட கொள்கையை நிலை நாட்டுவதுதான் நிலைத்த கொள்கையுடைய சீரிய மாந்தரின் கடமையாக இருக்க முடியும்.
அதனைத் தம் குடும்பத்தில் நிகழ்த்திக் காட்டிய சாதனையைப் பெருமிதத்தோடு குறிப்பிட்ட பொறியாளர் சேரலாதன் கழகத் தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றினை வைத்தார். கண்கொடை (Eye Bank) குருதிக் கொடை (Blood Bank) என்று வைத்திருப்பது போல மரணம் அடையும் சுயமரியாதைக்காரர் களை - பகுத்தறிவாளர்களை அடக்கம் செய்ய வழிமுறை ஒன்றை நமது கழகம் ஏற்படுத்திட வேண்டும். முன்கூட்டியே தோழர்கள் பதிவும் செய்து கொள்ளலாம் கட்டணம் கூட வைக் கலாம். மரண சாசனம் - மரண ஒப்பந்தம் என்ற ஒரு முறையை உண்டாக்கலாம்.

சுயமரியாதைக்காரர் மரணம் அடைந்தால் அந்த உடலை திராவிடர் கழகத்தினர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பகுத்தறிவுத் தன்மையில் இறுதி நிகழ்ச்சியை நடத்துவதற்கு நமது தமிழர் தலைவர் அவர்கள் ஒரு வழியைக் கண்டால் அது சிறப்பானதாக இருக்கும் என்ற ஓர் அரிய கருத்தினை எடுத்து வைத்த சேரலாதன் அவர்கள், நான் என்றும் இந்தக் கொள்கை வழியைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறவன். நமது தலைவர் அவர்கள் வழிகாட்டுதல்படி என் இயக்கப் பணி தொடரும்! என்று முத்துக்கோத் ததுபோல கருத்துக்களை எடுத்து வைத்த பாங்கு அனைவரையும் கவர்ந்தது.
ஏற்கெனவே பல கருஞ்சட்டைத் தோழர்கள் மரண சாசனம் என்ற ஒன்றை உயிரோடு இருக் கும் பொழுதே எழுதி அதனை தம்தம் வீட்டி லேயே கண்ணாடி சட்டம் போட்டு மாட்டியும் வைத்து விடுகிறார்கள்.

அண்மைக் காலமாக மரணத்திற்குப் பின் கண் கொடை என்பது சர்வ சாதாரணமாக ஆக விட்டது; அதையும் தாண்டி மருத்துவமனை களுக்கு உடற்கொடை அளிக்கும் போக்கு புதிய வேகத்தில் தொடர ஆரம்பித்துள்ளது. இதற்காக பெரியார் உடற்கொடை இயக்கம் ஒன்றையே கழகம் நடத்தியும் வருகிறது.

தென் மாவட்டங்களில் முதன் முதலாக உடற்கொடை அளித்த பெருமைக்குரியவர் கழக வீராங்கனை மானமிகு சண்முகம் வடிவு (நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு காசி அவர்களின் இணையர்) அவர்கள் ஆவார்கள்.

மனிதன் செத்தாலும் அவன் உடல் உறுப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுப் பெரிய வாய்ப்பு! செத்த பின்பு செய்யப்படும் சடங்குகளால் அவர் சொர்க்கத் திற்கும் போவார் என்ற கட்டுக் கதைகளால் மக்களைக் கட்டிப் போட்டு, மக்களின் பொரு ளைச் சுரண்டும் புரோகிதத் தொழிலின் தந்திரம் இதன் பின்னணியில் உள்ளது.
பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்று தன்மான இயக்கத் தோழர் கள் முழங்கியதுதான் நினைவிற்கு வருகிறது.
பொறியாளர் சேரலாதன் அவர்கள் சொன்ன இன்னொரு தகவல்:
தமது தந்தையார் மறைவுச் செய்தியை இந்து ஆங்கில ஏட்டில் விளம்பரமாக வெளியிடப்பட்டு, தொடர்புக்குத் தொலைப்பேசி எண்ணும் அதில் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதனைப் படித்தறிந்த மயிலாப்பூரைச் சேர்ந்த புரோகிதத்தை ஒரு தொழிலாக பணம் பறிக்கும் ஏற்பாடாகக் கொண்டிருக்கும் அமைப் பினர் பொறியாளர் சேரலாதன் அவர்களோடு தொடர்பு கொண்டு, தங்கள் தந்தையாரின் ஈமச் சடங்குகளைச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் குழுவில் இத்தனைப் பேர்கள் இருக்கி றோம் - எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தொலைப்பேசியில் தொடர்பு கொண் டதைக் குறிப்பிட்டார்.

மனிதன் செத்தாலும் பார்ப்பனீயத்தின் சுரண்டல் தொழில் மட்டும் விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

கறந்தபால் முலைப்புகா  கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா விரிந்த பூ உதிர்ந்த காய் மீண்டும் போய் மரம் புகா
உடைந்து போன சங்கின் ஓசை
உயிர்களும் உடற்புகா
இறந்தவர் பிறப்பதில்லை
இல்லை இல்லை இல்லை! என்று
சில வாக்கியச் சித்தர் பாடிச் சென்றார்.

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர் லோகம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவனை மகா மகா அயோக்கியன் என்ற விஞ்ஞான உண்மையை சமுதாய விஞ் ஞானியாம் தந்தை பெரியார் கூறியதை ஆசாபாசமின்றிச் சிந்தித்தால் இதற்குள் இதழ் விரிக்கும் உண்மையின் விரிவு புலப்படும்.

மக்களின் மடமை சார்ந்த நம்பிக்கைகளை ஊதிப் பெரிதாக்கி, அதனை இலாவகமாக தமது வருவாய்க்குரிய சாதனமாக ஆக்கிக் கொள்ளும் பித்தலாட்டத்தை என்ன சொல்ல!

உத்தர கிரியை எனும் பெயரால் செத்துப் போனவர்களுக்காகக் கருமாதி செய்யவரும் புரோகிதப் பார்ப்பான் கொடுக்கும் ஜாபிதா (பட்டியல்) இதோ:

மஞ்சள் தூள் 50 கிராம், குங்குமம் 50 கிராம், புஷ்பம் 10 முழம்; சந்தனம் 20 கிராம்; ஊதுபத்தி 1 பாக்கெட், கற்பூரம் - 20 கிராம், கதம்பப் பொடித்தூள் 50 கிராம், வெல்லம் 100 கிராம், வாழைப்பழம் 1 டஜன், வாழை இலை 15, வெற்றிலை 2 கவுளி, களிப் பாக்கு 100 கிராம், தேங்காய் 6, கொட்டைப் பாக்கு 11, எலும்பிச்சை பழம் 11, நல்லெண்ணெய் 100 கிராம், சீயக்காய்த் தூள் 1 பாக்கெட், பால், தயிர் 1 பாக்கெட், தேன் பாட்டில் 1, நெய் 100 கிராம், நெல் பொரி 5 ரூபாய், நவதானியம் 5 ரூபாய், கலசக் குடுவை 5, கலசத்துண்டு அரை மீட்டர், சோறு குடுவை நூல் உருண்டை - 2  சில்லை பனம் இலை 101, பஞ்ச வர்ணத்தூள் 2 ரூபாய், பச்சரிசி  மாவு 1 ஆழாக்கு, தீப்பெட்டி 2, வரட்டி ரூ.10, எள்ளு 50 கிராம் அய்யர் வேஷ்டி துண்டு 8 முழம் ஜதை அய்யர் கட்டணம் ரூ.1500 (ரேஷன் அரிசி வாங்கக் கூடாது)  பாய் அல்லது ஜமக்காளம், தாம்பாளத் தட்டு - 4, வீட்டில் போட்ட நவதானியம் செடி, சொம்பு 4, டம்ளர் (ஸ்டீல்) 4, மனை 2, குடம் அல்லது பக்கெட், காமாட்சி விளக்கு 1.

மேற்கண்ட பட்டியலை பார்ப்பனப் புரோகிதர் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? உண்மையைச் சொல்லப் போனால் பொருள் - புரோகித பார்ப்பானுக்குப் போய்ச் சேருவதுதான்.

இந்தப் பொருள்களுக்கும் செத்துப் போன வருக்கும் என்ன தொடர்பு - அவருக்குப் போய்ச் சேரப் போகிறதா? போய்ச் சேர போவதோ புரோகிதப் பார்ப்பான் வீட்டுக்குத்தான்! இந்தச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது - அரிசி என்கிறபோது - ரேஷன் அரிசி கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக சொல்லப்பட்டு இருப்பதை நினைத்தால் சிரிப்பு வரலாம் - ஆனால் சீரியசாகச் சிந்தித்தால் அதில் உள்ள பார்ப்பனத் தந்திரம் புலப்படாமல் போகாது.

இவற்றைப்பற்றியெல்லாம் திராவிடர் கழகத்தைத் தவிர, கவனம் செலுத்தப் போவோர் யார் இருக்கிறார்கள்? கேட்டால் இது ஓர் அற்ப விஷயம் என்று சொல்லக் கூடிய அதிமே(ல்) தாவிகள் நாட்டில் இருக்கத்தான் செய்வார்கள்.

அற்ப விஷயமல்ல! மக்களைச் சுரண்டும் மகத்தான மோசடி - பொருள் மட்டுமல்ல - மனிதனின் விலை மதிப்பில்லாத அறிவும்தான் மொட்டை அடிக்கப்படுகிறது.

எனவே இதில் கவனமும் கருத்தும் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமே!

நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்  ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இயக்க வரலாற்றில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்ட முக்கிய அறிவிப்பாக இது கருதப்படும்.

மரணப் பதிவு நிலையம் ஒன்று பெரியார் திடலில் தொடங்கப்படும். மரணத்திற்குப் பிறகு தங்கள் இறுதி நிகழ்ச்சி மூடநம்பிக்கைகளுக்கு, சடங்குகளுக்கு இடமின்றி எளிதாக நடைபெற வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த நிலை யத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்குரிய நடைமுறைகள் உருவாக்கப்படும் என்று அறி வித்தார்.

திருமணத்தில் புதிய வழிமுறையை தந்தை பெரியார் உருவாக்கிக் கொடுத்தார். அது போலவே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வான மரணத்தின் போதும் ஒரு சரியான தெளிவான பகுத்தறிவுக் கொத்த வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் சிந்தனை - கோரிக்கை சுயமரியாதைச் சிந்தனையாளர் டாக்டர் பூ. பழனியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் உருப்பெற்றது - சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படும் - பேசப்படும் என்பதில் அய்யமில்லை.

                     ---------------------------------- ”விடுதலை” 30-03-2014

43 comments:

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!
மாற்று அணியல்ல, ஏமாற்று அணியே பிஜேபி!
மக்களே பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்து விடாதீர்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குத் தமிழக வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள் - இவற்றில் காங்கிரசுக்கும், பி.ஜே. பி.க்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது - உண்மைக்கு மாறான பிரச்சாரத்தைக் கேட்டு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதில் காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி ஒன்றுக்கு மற்றொன்று பெரிதும் மாறுபட் டவை அல்ல. ஒரே குட்டையில் ஊறிடும் மட்டைகளே!

கூர்த்த மதியோடும் நுண்ணிய பார்வையோடும் பார்க்கும் எவருக்கும் புரியும்.

தமிழ் ஓவியா said...


சகோதரர் வைகோ அவர்களின் (மதிமுக) தேர்தல் அறிக்கை!

பதவிப் பசியால் துவண்டு, துடித்து, பா.ஜ.க., வீசிய வலையில் சிக்கி மோடி இராகம் பாடி, ராஜாவை மிஞ்சும் இராஜவிசுவாசியராக காட்சியளிக்கும் பரிதாபத்திற்குரிய சகோதரர் வைகோ தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஏதோ பா.ஜ.க. - மோடி மத்தியில் அரியணையில் அமர்ந்த தும் சூமந்திரக்காளி! என்ற மந்திரக்கோல் மூலம், மோடி வித்தை மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர் தனி ஈழம்பற்றியெல்லாம் மதிமுக தேர்தல் அறிக்கையில் பிரலாபித்துள்ளார்.

ஆனால், அது வெளி வந்த மறுநாளே, பா.ஜ.க.வின் வெங்கய்ய நாயுடு தொடங்கி, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் உட்பட தனி ஈழத்தை ஒரு போதும் எங்கள் (பா.ஜ.க.) கட்சி ஏற்காது என்று திட்ட வட்டமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறி விட்டனரே!

பிஜேபிக்குத் திடீர் கரிசனமா?

ஈழப் பிரச்சினையில் (ஏதோ தமிழக மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மீனவர்கள் பால் திடீர் கரிசனம் பீறிட்டுள்ளது பா.ஜ.க.வுக்கு; இல்லையென்றால் நண்பர் இல. கணேசன் மோடி மீன் விற்பனை நிலையத்தை பட்டினப்பாக்கம் எஸ்டேட்டில் (Foreshore) திறந்து வைக்க முன் வருவாரா?) இந்த பா.ஜ.க. ஆட்சி முன்பு எப்படி நடந் துள்ளது என்பதை சற்று நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது.

கல்கியில் என். இராம் பேட்டி!

6.4.2014 நாளிட்ட கல்கி வார ஏட்டில் வெளி வந்துள்ள இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் என் இராம் அவர் களின் பேட்டியில்
ஒரு கேள்விக்கு பதில் கூறுகிறார்:

கேள்வி: மோடி பிரதமராக வந்தால் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்கிறாரே வைகோ?

பதில்: நல்ல ஜோக் இது. பா.ஜ.க. ஆட்சி வந்தாலும் இலங்கையைக் குறித்த இந்திய நிலைப்பாடு மாறவே மாறாது என்பதுதான் உண்மை!

ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தீர்ப்பும் - பிஜேபியின் நிலைப்பாடும்!

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, இராஜீவ் கொலை வழக்கில் கொலைக் குற்றம் சாற்றப்பட்ட தூக்கு தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்கள் கருணை மனுவும் பல ஆண்டு கால தாமதம் மறுக்கப்பட்ட நீதி, என்பதைக் கூறி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மாநில அரசு இவர்களது 23 ஆண்டு கால சிறை தண்டனை பற்றி மனிதநேயத்துடன் சட்டப்படி சிந்திக்கலாம் என்றும் கூறியது தான் தாமதம்! உடனே அவசர அவசரமாக - எங்கே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களோ என்ற ஆவேசத்தில் தேசீயக் கட்சிகளும் பா.ஜ.க. உட்பட அதனைக் கண்டிக்கத்தானே செய்தன? இதில் காங்கிரசிலிருந்து எவ்வகையில் பி.ஜே.பி. மாறுபட்டது? நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும்.

ம.பி.க்கு வந்த ராஜபக்சேக்குச் சிகப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்தது யார்?

சகோதரர் வை.கோ மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று போர்க் குற்றவாளி இராஜபக்ஷேவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினாரே! ராஜபக்சேவை தனது மாநிலத்திலும் வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு தந்த முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் யார்?

பா.ஜ.க. முதல் அமைச்சர் (ஆட்சி) அல்லவா! ராஜபக்சேவை இந்தியாவிற்கு வர அழைப்புக் கொடுத் தவரே எதிர்க்கட்சித் தலைவரும், துணைப் பிரதமர் ஆசையில் மிதப்பவருமான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் அல்லவா?

தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் ஏமாற்று வேலை!

வாஜ்பேயி பிரதமராக இருந்த நேரத்தில் ஈழத்தில் நடைபெற்ற மோதலின் போது இராஜபக்சே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையா எடுத்தார்? நம் நாட்டில் இல்லாத புலி இயக்கத் தடை நீக்கப்பட்டதா?

காங்கிரசின் இன்றைய வெளி உறவுக் கொள்கைக்கும் பா.ஜ.க. கொள்கைக்கும் ஈழப் பிரச்சினையில் எவ்வித மாறு பாடும் இல்லையே!

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன் என்ற ஒரு பழமொழி போன்றதுதானே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு! தமிழின வாக்காளர்களை ஏமாற்ற ஈழப் பிரச்சினையைப் பயன்படுத்தலாமா? எனவே இது மாற்று அணி அல்ல; ஏமாற்று அணி! ஈழப் பிரச்சினையில் வாக்காளர்களே புரிந்து கொள்ளுங்கள்.

சென்னை
30.3.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77873.html#ixzz2xUqHw4Ce

தமிழ் ஓவியா said...


தந்தையை சிறையிலிட்ட அவுரங்கசீப்பைப் போல் செயல்படும் மோடி காங்கிரஸ் கண்டனம்!


அகமதாபாத், மார்ச் 30- பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அரசியல் அனுகுமுறைகள் மொகலாய மன்னர்கள் பாணியில் உள்ளதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது:- பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத் வானியை கையாலாகாதவர் ஆக்கி, அவர் விரும்பிய போபால் தொகுதிக்கு பதிலாக காந்திநகர் தொகுதி யில் போட்டியிடும் நிலைக்கு மோடி தள்ளிவிட்டார்.

இதேபோல், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவ தில் பிடிவாதமாக இருந்த முரளி மனோகர் ஜோஷிக்கு கான்பூர் தொகுதி தான் ஒதுக்கப்பட்டது. மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் மறுப்பு, கேசுபாய் பட்டேல், காஷிராம் ராணா, சுரேஷ் மேத்தா, ஏ.கே.பட்டேல் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியது,

சஞ்சய் ஜோஷிக்கு எதிராக 'சி.டி.' தயாரித்து அவரை ஓரம் கட்டியது உள்ளிட்ட கட்சி யின் மூத்த தலைவர்களை அடக்கி, ஒடுக்கும் வேலை களில் ஈடுபடும் மோடியின் செயல்பாடுகள், இந்திய கலாச்சாரத்துக்கு உகந்ததாக இல்லை. மொகலாயர் ஆட்சிக் காலத்து சுல்தானைப் போல் அவர் செயல் படுகிறார்.

பெற்ற தந்தையையே சிறையில் போட்ட மொகலாய மன்னர் அவுரங்கசீப்பைப் போல் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களிடம் மோடி நடந்துக் கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மோடியின் குஜராத் மாடல் முழக்கம் தோல்வி அடையும்: ராகுல்

சத்னா, மார்ச் 30- தனிநபர் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜ விரும்புகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் சிங்கை ஆதரித்து சத்னாவில் ராகுல் பேசியதாவது: மோடியின் ஜம்மு பிரச்சார பேச்சை கேட்கும் போது பாஜ தனி நபர் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது.

காங்கிரசை பொறுத்த அளவில் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சி தனி நபர் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர விரும்புகிறது. லட்சக்கணக் கான காவலாளிகள் இந்த நாட்டை காக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதுதான் எங்களுக் கும் பாஜவுக்கும் உள்ள வித்தியாசம். இவ்வாறு ராகுல் பேசினார்.குஜராத் மாநிலத்தை போல மாடல் என்ற மோடியின் முழக்கத்தையும் ராகுல் தாக்கி பேசினார். இதுகுறித்து ராகுல் கூறுகையில், கடந்த தேர்தலின் போது இந்தியா ஒளிர்கிறது என்று பேசினர். தற்போது குஜராத் மாடல் என்று பேசி வருகின்றனர்.

இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் தோல்வி அடைந் ததை போலவே குஜராத் மாடல் முழக்கமும் மக்கள் மத்தியில் எடுபடாது, தோல்வி அடையும் என்றார்.

மோடிக்கு அசோக்சவான் கேள்வி

மும்பை, மார்ச் 30- பா.ஜ., வேட்பாளர் நரேந்திர மோடி எங்கு வேண்டும் என்றாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், அவர் மகாராஷ்டிரா மாநில வளர்ச்சி குறித்து கவலைப்பட தேவை யில்லை. ஏனெனில், அதன் வளர்ச்சி நன்றாகவே உள்ளது என, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக்சவான் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.,வில் மீண்டும் எடியூரப்பாவை சேர்த்துக் கொண்டுள்ளது பற்றி, மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77872.html#ixzz2xUr16py2

தமிழ் ஓவியா said...


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி! பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை


திருச்சி, மார்ச் 30- திராவிடர் கழக பெல் ஒப் பந்த தொழிலாளர் சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கை, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இது தொடர் பாக கழகம் தொடுத்த வழக்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்றம், திருவெ றும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களை தீர்ப்பு நகல் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவு பிறப் பித்தார். 1,189 ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண் டுமென பெல் நிர்வாகத் திற்கு மதுரை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக திருவெறும்பூர் பெல் நிறு வனத்தில் ஒப்பந்த ஊழி யர்களாக பணியாற்றி வரும் 1,189 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் நிரு வாகம் அலட்சியப்படுத்தி வந்தது.

மேலும் அவர்கள் இதுவரையில் ஒப்பந்த ஊழியர்களாகவே பணி யாற்றியும் வருகின்றனர், அவர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தி.க தொழிலாளர் சங்கம் சார் பில் பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்டு வந்த தோடு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.சேகர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கின் விசா ரணை நேற்று முன்தினம் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் களாக பணியாற்றி வரும் ஊழியர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய பெல் நிர் வாகத்திற்கு உத்தரவிட்டார்.

தி.க. தொழிலாளர் சங் கத்தின் நீண்டநாள் கோரிக் கையான இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என் றும் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண் டுமென மு.சேகர் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77869.html#ixzz2xUrAE2Jl

தமிழ் ஓவியா said...

மகிந்தா ராஜபக்சேவிற்கு மக்களிடையே ஆதரவு குறையத் துவங்கியது

கொழும்பு மார்ச் 30-தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் இலங்கை அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந் தோட்டையில் ஆளும் அய்க் கிய மக்கள் சுதந்திர முன் னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 இடங்களைக் கைப்பற்றிய அய்க்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கு, இந்த முறையும் அதே இடங்கள் கிடைத் துள்ளன. ஆனால், ஆளும் கட்சி 174,687 (57.42%) வாக் குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது. இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்கு களை ஆளும்கட்சி இம் முறை இழந்துள்ளது.

எதிர்கட்சிகளான அய் தேக, ஜேவிபி, ஆகிய கட்சி களுக்கு செல்வாக்கு அதி கரித்துள்ளது. கடந்த தேர் தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 இடங் களை கைப்பற்றிய அய்தேக வுக்கு, இம்முறை, 4 இடங் கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகளை யும் அந்தக் கட்சி பெற் றுள்ளது. இதன்படி, அய்தேக வுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் போது அய்.நா மனித உரி மைக்குழு இலங்கை அரசு மீது சுமத்திய குற்றச்சாட் டிற்கு அரசு சரியான முறை யில் பதிலளிக்காததாலும், மனித உரிமைமீறல் பரப்பு ரைகள் பல சமூக தொண்டு ஆர்வலர்கள் முன்னெடுத் துச்செல்வதாலும் இலங்கை அதிபரின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த வாய்ப்பை தொடர்ந்து நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்டால் இலங் கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் இலங்கை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrcQEDt

தமிழ் ஓவியா said...


கழகத்தின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பெல் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பு


திருச்சி - திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று பெல் தொழிலாளர் சங்கத்தில் பொதுச் செயலாளர் மு.சேகர் தொடுத்த வழக்கில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஸ் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதன் முக்கிய பகுதிகள் வருமாறு:-

தொடுத்த வழக்கில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர் பொது நல வழக்கின் தீர்ப்பு மற்றும் 8.10.2013, மற்றும் ஹரித்துவார் பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் வழக்கின் தீர்ப்பு மற்றும் 10.04.2013, வழக்குகளின் தீர்ப்பை ஆராய்ந்து அளித்த உத்தரவின் படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற 29.09.2013 தேதியில் அளித்த தீர்ப்பை திருச்சி பெல் நிர்வாகம் விரைவில் அமல் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

பிரதிவாதி வழக்கின் விவரம்

திரு.சேகர் த/பெ முனியாண்டி, இந்து. வயது 49 எண் 5 தீன் காம்பளக்ஸ் முதல் தளம் திருவெறும்பூர் திருச்சி 13 ல் வசிப்பவர் தற்காலிகமாக தற்போது சென்னையில் வசித்துவருகிறார். மனுதாரர் திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் பொதுச்செயலாளர்சார்பாக அனுப்பிய வழக்கு

1. நீதிமன்றம் மனுதாரரின் தரப்பு வாதங்களை அவர்கள் சமர்ப்பித்த சான்று ஆவணங்களான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்ததொழிலாளர் பொது நல வழக்கின் தீர்ப்பு மற்றும் 08.10.2013, மற்றும் ஹரித்துவார் பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் வழக்கின் தீர்ப்பு 10.04.2013 இரண்டையும் வழக்கின் தீர்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப் படுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மேலும் கூறிய தாவது:


தமிழ் ஓவியா said...

2. பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு நிறுவனம் சீஜி பதிவு எண் பிரிவு 9(1) தமிழநாடு அரசு கூட்டுறவுசங்க பதிவு சட்டம் 1961(விதி 53-61) -5.07.1998. பெல் நிறுவனத்திற்கு இந்த கூட்டுறவு சங்க அமைப்பு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பி வருகிறது, பெல் நிறுவனம் அமைந்திருக்கும் சுற்றுவட்டார கிராமங்களான திருவெறும்பூர், துவாக்குடி நாவல்பட்டு கிருஷ்ணசமுத்திரம் கோதைப்பட்டு பாலக்காகுடி திருதெங் குளம் சேரமாதேவி மற்றும் வாழவந்தான்கோட்டை போன்ற சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து பணியாளர் களை ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வருகிறது, பெல் நிறுவனத்தில் இயங்கும் இந்த கூட்டுறவு அமைப்பு பெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வையில் இயங்கி வருகிறது, ஆனால் கூட்டுறவு நிறுவனத்தின் தொழிலாளர் நலத்தில் பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி எந்த ஒரு தொழிலாளர் நலத்திட்டத்தையும் முன்னெடுப் பதில்லை என கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

3. இது குறித்து பெல் நிறுவனக் கூட்டுறவுத் தொழிலாளர் நல அமைப்பும் திராவிடர்கழக தொழிலாளர் கூட்டுறவு சங்கமும் வழக்கு தொடுத்திருந்தன.

4. பெல் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 1189 தொழிலாளர்களை பல்வேறு பிரிவுகளில் (எரிவாயு பிரிவு, கனரக இயந்திரப்பிரிவு, உயர்வெப்ப அழுத்த ஆய்வுக்கூடம், நீரேற்றப்பிரிவு, வாகனப்பிரிவு, மற்றும் அதன் மருத்துவமனையில் செவிலியர், உதவியாளர் பொருட்களை ஏற்ற இறக்க லோடுமேன்கள், மற்றும் நிறுவனத்தின் பல்வேறு தொழிற்கூடத்தில், கடந்த 30 ஆண்டுகளாக பணியாட்களை நியமித்து வருகிறது, நியமிக்கப்பட்ட பலர் தங்களது பணிக்காலத்தை முடித்து ஓய்வு பெற்று விட்டனர். பலர் உயிரிழந்துவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

கல்வித் தகுதிகள்

5. பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அனைவரும் அதற்குரிய கல்வித்தகுதியான பட்டய மற்றும் பட்டப்படிப்புடன் தொழில் நுட்ப கல்வியையும் முழுமையாக படித்து தேர்ச்சிபெற்று தகுந்த பணி அனுபவத்துடன் உள்ளனர். மற்றும் உதவியாளர் பணிகளுக்கும் தேவையாக கல்வியைக் கற்று தொழிற் சாலையில் பணியாற்றிவருகின்றனர்.

6. தொழிலாளர் நல வாரியத்தின் சட்டதிட்டங்களான தொழிலாளர் ஓய்வு ஊதியம் மற்றும் மருத்துவ, ஊக்கத் தொகை போன்றவை அனைத்துப் பிரிவு ஒப்பந்த தொழி லாளர்களுக்கும் சரியான அளவில் வழங்கப்படவில்லை. இதற்காக எந்த ஒரு அதிகாரிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள மறுக்கின்றனர். தொழிற்சாலை நிர்வாகமும் இதற்கான உத்திரவாதம் தர மறுக்கிறது.

7. ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கூட்டுறவு ஒப்பந்த பணியாளர் அளவிலேயே பணிகாலம் முழுவதும் வேலைபார்த்து ஓய்வு பெற்றுவிட்டனர். ஒப்பந்த தொழிலாளர்களின் ஓய்வு வயதை 58-ஆக நிர்ணயம் செய்த தொழிற்சாலை அதிகாரிகள், நிரந்தர தொழிலாளர்களின் ஓய்வு வயதை மட்டும் 60-ஆக நிர்ணயம் செய்துள்ளனர். இது குறித்து மனுதாரர் பெல் நிறுவனத்தின் அதிகாரி களை அணுகிய போது சரியான பதில் கிடைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


இறுதியாக தொழிலாளர் நல வாரிய இணை ஆணை யரிடம் இந்த பிரச்சினையை எடுத்துச்சென்ற போது இதர பெல் தொழிற்சாலைகளான ரானிபர், அய்தராபாத், போபால் போன்ற அனைத்து நகரத்தில் உள்ள தொழிற் சாலைகளிலும், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஒரே மாதிரியான ஓய்வு வயது நிர்ணயம் செய்யப்பட்டது தெரியவந்தது, இதனடிப்படையில் தொழிலாளர் நல வாரியம் பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வு வயதுவரம்பை நிர்ணயம் செய்ய 29.03.2012-இல் ஆணையிட்டது.

ஓய்வு வயதில் வேறுபாடு

பெல் திருச்சி பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களின் தொழிலாளர்களுக்கு மற்ற நகரங்களில் செயல்படும் பெல் நிறுவன ஒப்பந்த ஊழியர்களுக்குமான ஓய்வு பெறும் வயது வித்தியாசம் காணப்படுகிறது, இந்த சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆகையால் ஒப்பந்த தொழிலாளர்களின் ஓய்வு வயதை நிரந்தர தொழிலாளர் களுக்கு உள்ளதைப்போல் 58-லிருந்து 60 ஆக மாற்றம் வேண்டும் என்று தொழிலாளர் நலவாரியம் திருச்சி பெல் நிறுவனத்திற்கு ஆணையிடுகிறது. 8. திருச்சி பெல் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நீண்ட ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் ஹரித்துவார் ரானிப்பூரில் இயங்கும் பெல் நிறுவனம் தனது அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கியதை தங்களின மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

9. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பெல் நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களின் முதுநிலைப்பட்டியலின்படி சீனிவாசன் தொழிலாளர் எண் 6097380- பணியில் சேர்ந்த காலம் 30.07.2008, திரு ஞானபண்டிதன் தொழிலாளர் எண்6037402 பணியில் சேர்ந்த காலம் 30.07.2008. திரு.எம் விஜயகுமார் தொழிலாளர் எண்06037321 பணியில் சேர்ந்த காலம் 30.07.2008. திரு.பிரசாத் தொழிலாளர் எண்6037224 பணியில் சேர்ந்த காலம் 30.07.2008, மற்றும் பெல் அலுவலகத்துறை தொடர்பான பணியில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், பி.மீனா தொழிலாளர் எண் 631101 நிறுவன நிதித்துறை அலுவலக பணியில்சேர்ந்த காலம் 31.07.2012, வள்ளி தொழிலாளர் எண் 6232175 நிதித்துறை பிரிவு பணியில் சேர்ந்த காலம் 03.09.2012, ஜி. தேன்மொழி தொழிலாளர் எண் 6231144 தொழிற்சாலை பிரிவு பதவி மூப்பு பட்டியல் அடிப் படையில் இவர்களை நிரந்தரமாக்க பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு அமைப்பு வேண்டுகோள் விடுத்தும் நிர்வாகம் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வில்லை.

10. ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு நலச்சங்கம் தனது சங்கத்தின் கீழ் பணிபுரியும் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டி 29.09.2013 அன்று மனுதாக்கல் செய்திருந்தது. இதற்குச் சான்றாக மத்திய அரசின் கீழ் இயங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிர்வாகம் தங்களது நீண்ட கால ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கியது குறித்த தீர்ப்பு நகலை இணைத்திருந்தது, ஹரித்துவார் பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கும் ஆணையை யும் இணைத்திருந்தது.

11. இவை அனைத்தும் நீதிமன்றத்தின் வழக்கின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 12, இதர வழக்கு களில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் கவனத்தில் கொண்டு இந்ததீர்ப்பை நீதிமன்றம் வழங்குகிறது, நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகல் எண் 1629/2011, மற்றும் ராணிப்பூர் ஹரித்துவார் பெல் நிறுவண தீர்ப்பு நகல் எண் HWCPIO 090157 தீர்ப்பு வழங்கிய தேதி 10.01.2010 ஆகிய தீர்ப்புகள் திருச்சி பெல் நிறுவன வழக்கின் தீர்ப்பிற்காக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கில் வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், ஜே.துரைசாமி மற்றும் ஆர்.இளையராஜா ஆகியோர் ஆஜரானார்கள்.

Read more: http://viduthalai.in/page-3/77837.html#ixzz2xUsNUBkl

தமிழ் ஓவியா said...


யார் வெட்கப்பட வேண்டும்? - திக்விஜய்சிங்

புதுடில்லி, மார்ச். 31- மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, 'ஊழல் கறை படிந்த அசோக்சவானுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது வெட்கப்பட வேண்டிய செயல்,' என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங், 'ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள எடியூரப்பாவை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், அசோக்சவான் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் யார் வெட்கப்பட வேண்டும்? என்பதை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77904.html#ixzz2xahy1Hra

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்

நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர். - (விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/77892.html#ixzz2xai8LLPa

தமிழ் ஓவியா said...

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை

16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான கருத்துருக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினை யில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் சரியான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷேயை இனவெறி போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க. நமது இந்திய மண்ணில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய மோடியைப் பற்றி, வாய் பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வும் மாற்றுப் பாதை காட்ட முடியாது. வெந்நீருக்குள் வெண்ணெயை வைக்க முடியாது என்று தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மிகச் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார், எந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியைப் பற்றியோ, மருந்துக்குக்கூட ஒரே ஒரு வரி அளவிலும் கூட விமர்சனம் செய்யவில்லை என்பது மிகவும் வெளிப்படை! பல தரப்பிலிருந்தும் இத்திசையில் வினாக்கள் வெடித்துக் கிளம்பிய போதிலும்கூட கட்டுப்பாடாக பிஜே.பி.பற்றிப் பேசுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

இந்த மவுனத்தைச் சாமர்த்தியமாக ஜெயலலிதா அம்மையார் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை வேறு விதமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. பரவலாகப் பொது மக்கள் இதுகுறித்துக் கேலி செய்யும் போக்கைக் காண முடிகிறது. ஆனால், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப் பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு இருக்காது. இந்துத் துவா கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் இவர்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தில் இருப்பதாக அவர் சொல் லிக் கொள்ளலாம். அண்ணாவின் பெயரைக்கூட உச்சரிக்கலாம். ஆனால், அவை உதட்டிலிருந்து உதிரக் கூடியவைகளே தவிர, உள்ளத்தின் வேர்களிலிருந்து வெளிவரக் கூடியவையல்ல! அண்ணா நாமம் வாழ்க! என்று அம்மையார்உச்சரிப்பது - அண்ணா கொள் கைக்கு நாமம் போடுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக் கையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அதற்கு அவர் என்ன காரணம் சொல்லியுள்ளார்?

இராமன் பாலத்தை இடித்து ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றல்லவா உச்சநீதி மன்றத்தில் காரணம் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஹிந்துத்துவாவைக் கொண்டு வந்து திணிக்கின்றாரே! பி.ஜே.பி.யும் இதே காரணத்தைக் கூறித்தானே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

அந்த வகையில் பி.ஜே.பி.யும். அ.இ.அ.தி.மு.க.வும் ஹிந்துத்துவா படகில் பயணம் செய்யக் கூடிய வெவ் வேறு பெயர்களில் நடமாடும் ஒரே கொள்கைக் கோட் பாட்டைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையாக - அப்பட்டமாகத் தெரியவில்லையா?

இடதுசாரிகள் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் இந்த ஹிந்துத்துவா மனப்பான்மையை மிகவும் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்கிறார்களே, அதுதான் மிகவும் ஆச்சரியமானது!

இடதுசாரிகள் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருந்தாலும்கூட செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபியைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ பேச மாட்டார்தான். இதில் இடதுசாரிகளுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம். அம்மை யாரைப் பொறுத்தவரை அவர் தெளிவாகவே இருக் கிறார். பி.ஜே.பி.யும் தெளிவாகவே இருக்கிறது. அவர் களும் அதிமுகவைப் பற்றியோ செல்வி ஜெய லலிதாவைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுவதில்லை.

பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் நாட்டுக் கட்சிகளுக்கும் இந்த நிலைமைகள் புரியும் என்றாலும், அவர்களும் இதனை வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்புபோல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வளவுக்கும் என்ன பரிதாபம் என்றால் அ.இ.அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதியிலும் இவர்களின் கூட்டணி வேட்பாளரை எதிர்த்தே நிற்கிறது.

இந்த விசித்திர நிலையைக் கண்டு நன்கு இரசிக்கத் தான் தோன்றுகிறது. வீராதி வீரராக தோள் தட்டி, தொடை தட்டி சண்டமாருதம் செய்பவர்கள் எல்லாம் கூட, பதவி என்று வந்து விட்டால் எத்தகைய பலகீனங் களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நினைத்தால் ஒரு வகையிலே பரிதாபப் பட வேண்டியுள்ளது! இன்னொரு வகையில் எல்லாவற்றையும் இழந்துதான் பதவியைப் பிடிக்க வேண்டுமா? சுயமரியாதையோடு வாழக் கூடாதா? கொள்கையைச் சொல்லித் தோற்பது - கொள்கை களைப் பலி கொடுத்து வெற்றி பெறுவதைவிட சிறந்ததல்லவா!

தமிழ் ஓவியா said...


கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்


கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது.

இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க மருத்து வர்கள் கூறிய ஆலோசனை வருமாறு: கோடை காலத்தில் சுற்றுப் புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச் சினைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும்.

வாந்தி, பேதி, வயிற்றுக் கடுப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ளவேண்டும். கருவுற்ற பெண்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவரை அணுகி, உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakbntvk

தமிழ் ஓவியா said...

சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?

காலை வேளையில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே டைப் 2 டயபடீஸ் இருந்து, அதை சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை அளவு 200அய்த் தாண்டிவிடுகிறது.

அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு 120தான் இருந்தது. டயட், உடற்பயிற்சி எல்லா வற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நடைப்பயிற்சி செய்கிறேன்...

சரியான உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன். இருந்தும் சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்? காரணம் சொல்கிறார் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் வி.மோகன்...

காலையில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உங்களுடைய நீரிழிவு பிரச்சினையின் தன்மை, வளர்ச்சிக்கு ஏற்ப இது ஏற்படும். இதைச் சரி செய்ய, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சரியான மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

அரிதாக, சிலருக்கு நடு இரவில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். பிறகு வேகமாக அதி கரித்து காலையில் அதிக அளவாகும். அதிகாலை 3 மணிக்கு உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பாருங் கள். அளவு குறைவாக இருந்தால் இரவு நேரத்தில் குறை வான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக இருந்தால், இரவில் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இதுவரை நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ளாதவராக இருந்தால், அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakxEcRD

தமிழ் ஓவியா said...

உடல் தளர்ச்சிக்கு...

வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது.

இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xal5PEp5

தமிழ் ஓவியா said...


கோடையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?


கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் சிரமம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக் கானலுக்கோ மூட்டைகட்ட முடியாது.

அப்படியே போனாலும் ஒரு சில நாள்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... அனைவரும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.

காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டியதில்லை.வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

அந்த ஆடை களின் வண்ணங்கள், வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும்.

வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது. காலையில் எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

தர்பூசணி, பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முளைகட்டிய நவ தானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு களை சர்க்கரை நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ள போதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalBmXBt

தமிழ் ஓவியா said...

சிறுநீரகக் கல் ஏற்படாமல் தவிர்க்க வழிமுறைகள்

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது.

கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடி கட்டப்படுகிறது.

கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொதிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறுநீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை உண்டாக்குகிறது.

இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.

3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

4. பிரத்தியேக உறுப்புகளின் சுத்தமும், பராமரிப்பும் முக்கியம்! தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான வாழ்க்கை முறை, அதிகமான வேலைகள், மன இறுக்கம் போன்றவை ரத்தக் கொதிப்புப் போன்ற பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக் கல்லுக்கும் ஒரு காரணம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalZc0xv

தமிழ் ஓவியா said...


எலி - தவளை - பருந்து கூட்டணி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணிக்குள் இவர் களிடையே இன்னொரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேர்தல் பிரச்சாரத்துக்குப் போக முடியாது என்று தைலாபுரம் தோட் டத்தில் உடல் நலமில்லை என்று கூறிப் படுத்துக் கொண்டு விட்டார் மருத்துவர் ராமதாசு.

வானூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா பேசும்போது, பா.ம.க.,வைப் பற்றியோ, மருத்துவர் ராமதாசைப் பற்றியே டாக்டர் அன்புமணி ராம தாசைப் பற்றியோ ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையாம். பா.ம.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூடச் சொல்ல வில்லையாம். இதனால் பா.ம.க.வினர் முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டனராம்.

தேர்தலில் ஆதரவு கோரி பா.ஜ.க. வினர் எங்களை முறைப்படி அணுக வில்லை என்று கூறி கோவை பா.ம.க. வினர் தேர்தல் பணி புறக்கணிப்பை அறி வித்தனர் என்பது இன்னொன்று இந்த செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.

மதிமுக கொடி மருந்துக்கும்கூட கிடையாதாம்! இப்படி இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA).

எலி, தவளை - பருந்து கூட்டணி என்று நாம கரணம் சூட்டலாம் இந்த அணிக்கு.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நெடி ஏறலாம். ஒருவர் காலை இன்னொ ருவர் வாருவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொள்கையில் அப்பட்டமான முரண் பாடுகள் கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் இந்தப் பரிதாப நிலைதான்!

Read more: http://viduthalai.in/e-paper/77933.html#ixzz2xgdoLdWC

தமிழ் ஓவியா said...

இலக்கிய மேடை, அரசியல் மேடையான அநாகரிகம்!

சென்னை சைதாப்பேட்டையில் ஆதாரம் அமைப்பு சார்பில் இந்தியாவைக் காக்க இலக்கியவாதிகள் என்ற இலக்கியக் கூட்டம் கடந்த ஞாயிறன்று நடை பெற் றுள்ளது.

இந்த நிகழ்வில் தென் சென்னைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளர் இல. கணேசன், இலக்கியவாதிகள் முத்துக் கண்ணன், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் அவ்வை நடராசன் முதலியோர் பங்கு கொண்டுள்ளனர்.

காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்ற தலைப்பிட்டு தினமணி (31.3.2014 பக்கம் 6) 5 பத்தியில் செய்தியை வெளியிட்டது.

அது அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியக் கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பிஜேபியைச் சேர்ந்த இல. கணேசன் வாள் என்ன பேசியிருக்கிறார்?

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் விரக்தியில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நரேந்திரமோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மோசமாக பேசியுள்ளார்.


தமிழ் ஓவியா said...


இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கும். முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு தரவில்லை என ப. சிதம்பரம் கூறியிருப்பது - மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான்; தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அப்படி வெற்றி பெற்றால் ராஜ்நாத் சிங் கூறியதுபோல, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிகவும், பா.ம.க.வும் ஒற்றுமையாகத் தான் உள்ளன. சேலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதும் அதன் வெளிப்பாடு தான்.

உடல் நலம் சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மகிழ்ச்சியாகத்தான் உள்ளார் - என்று பிஜேபியைச் சேர்ந்த திரு. இல. கணேசன் பேசியுள்ளார்.

நினைவு கொள்ளுங்கள், நடைபெற்ற நிகழ்ச்சியோ இலக்கியத் தொடர்புடையது;

அரசியலுக்கு அப்பாற்பட்டது. அத்தகு கூட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கியவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தாம் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தமேடையைப் பயன்படுத்திக் கொண்டது அரசியல் நாகரிகமா? அல்லது அருவருப்பின் அடையாளமா?

இந்தப் பிஜேபியினர் தார்மீகம், பண்பாடு பற்றி யெல்லாம் பலபட பரக்கப் பரக்கப் பேசக் கூடியவர்கள் தாம். இவை எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமாக இருக்குமே தவிர, தங்களுக்கென்று வருகிறபோது அவையெல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்.

காரணம் இவர்கள் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் ஆயிற்றே! அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்ற ஒரு பழமொழி உண்டு.

இலக்கிய வட்டத்துக்குள் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வேலை என்ன? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் வேண்டுமென்றே தான் இல. கணேசன் பெயரைத் திணித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாதா இது தேர்தல் நேரம் - அரசியல்வாதிகளை அழைத்தால் இலக்கிய வட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று?

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை பொது மக்கள் பொதுவாக என்ன நினைக்கக்கூடும்? பி.ஜே.பி.யோடு சம்பந்தப்படுத்தித் தானே பார்ப்பார்கள்?

பிஜேபியைச் சேர்ந்த (அவர் ஒரு வேட்பாளரும் கூட!) இல. கணேசனுக்கு அந்த இலக்கியவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? அப்படி பதில் சொல்ல ஆரம் பித்தால் அந்த மேடையின் நிலை என்ன? ஏற்பாட்டா ளர்களின் நிலை என்னாகும்? பார்வையாளர்கள் பகுதியும் இரண்டுப்பட்டு படுமோதல் வெடிக்காதா?

அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இலக்கிய வாதிகளுக்கு இது ஓர் அனுபவமாகக்கூட இருக்கலாம்; எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் யார்? அவர்களின் தன்மை என்ன? யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் முன்ன தாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்படி இல்லாமல் யார் கூப்பிட்டாலும் போய் விடுவது என்ற நிலைப் பாட்டைக் கொண்டால் அவர்களுக்குத்தான் தர்ம சங்கடமும், அவப் பெயரும் ஏற்படும்.

தினமணி ஏட்டுக்காவது ஓர் இங்கிதம் இருக்க வேண்டாமா? இலக்கிய விழாவில் ஓர் அரசியல் வாதியின் பேச்சை மட்டும் அய்ந்து பத்தி தலைப்புப் போட்டு, அவர் பேச்சை மட்டுமே வெளியிட்ட தன்மைக்கு புத்திக்குப் பொருள் என்ன?

தினமணி என்பது பிஜேபிக்கு அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படும் ஒரு மேடையாக ஆகிவிட்டது என்றே மற்ற கட்சி அரசியல்வாதிகளும், பொதுவாக பொது மக்களும் தெரிந்து கொள்வார்களாக!

பார்ப்பனர்கள் பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடிப்பதில் எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதில்லையே, இதனைப் பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிஜேபியின் வெற்றி என்பது பார்ப்பனர்களின் வெற்றி, அவர்களின் ஆதிக்கத்துக்கான முழு முயற்சி என்பதை வாக்காளர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வார்களா?

தமிழ் ஓவியா said...


மோடிக்கு சவால் விடும் மத்தியப் பிரதேச மோர்ச்சா

போபால், ஏப்ரல்.1- நாட்டின் இதயப் பகுதியாகிய மத்திய பிரதேசத்தில் பாஜக வுக்கு, மோடிக்கு சவாலாக மத்தியப் பிரதேச மோர்ச்சா என்கிற அமைப்பு உருவாகி உள்ளது. பாஜகவிலிருந்து அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களால் ஒருங்கிணைக்கப் பட்ட ஓர் அமைப்பாக மத்தியப் பிரதேச மோர்ச்சா உருவாகிறது. சத்தீஸ்கர் அல்லது குஜராத் போலன்றி மோடியின் எதிர்ப் பாளர்கள் அணி மத்தியப்பிரதேசத்தில் வலிமையாக உள்ளது.

மும்முறை வெற்றிபெற்ற முதல்வ ரான சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமை யிலான ஆட்சியின்மூலம் கட்சிக்கு வலிமையும் இருப்பதாக சொல்லப்பட் டாலும், கட்சியில் அதிருப்தியாளர்கள் பிரிவு உருவாவதை தவிர்க்க முடிய வில்லை. ஜான்சி தொகுதியில் போட்டி யிட்ட உமாபாரதி, பாதுகாப்பான தொகு தியாகக் கருதி போபாலில் போட்டியிட விரும்பிய அத்வானி, அவரைத் தொடர்ந்து கட்சி மூத்தத் தலைவரான சுஷ்மாசுவராஜ் ஜான்சியில் போட்டியிட விரும்புகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர்கள்நிலை குறித்து கூறும்போது, சவுகானுக்கு முழு ஆதரவாக இருப்பினும், மோடி எதிர்ப்புத் தோற்றம் தெரியாதவாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

சுஷ்மாசுவராஜ் துணைப்பிரதமர் என்று பேசி தலைப்புச்செய்திகளில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திர பட்வா அவர்மட்டுமே கட்சித் தொண்டர்களை விழிப்புணர்வுடன் ஒருங்கிணைப்பதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, விடிஷா தொகுதியில் வரலாற்றில் வாஜ்பாய், சவுகான் மற்றும் பலரும் தொடர்ந்து வெற்றிபெற்று, உயர் பதவிகளை அடைந் ததாலும், முதல்வராகவும், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்ப தால் சுஷ்மாசுவராஜ் துணைப் பிரதம ராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினேன் என்றார்.

எப்படியானாலும், கட்சியால் சுஷ்மா சுவராஜ் துணைப் பிரதமராக ஆக்கப் பட்டாலும், ஆக்கப்படா விட்டாலும், கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாத தலைவரா வார். அவர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளையும் நன்கு செய்துள்ளார். இவை யாவும் அவருக்கு சாதகமாக உள்ளன.

அம்மாநில பாஜகவின் தலைவர் ஒருவர் கூறுகையில் மோடி கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்படுவதற்கு முன்னதாக சவுகான் டிவிட்டரில் வெளியிட்ட தகவல் குறித்து தன் கருத்தை சுஷ்மாசுவராஜ் வெளியிட் டது மட்டுமே எதிராகி உள்ளது.

பாஜகவில் தங்களைத் தாங்களே தலைவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் இருக்கின்றபடியால், கட்சியைச் சேர்ந்த தொண்டர்கூட மிகவும் கவனமாகவே தேர்தலையொட்டிப் பேச வேண்டி உள்ளது. ஒன்றுபட்டு இருப்பதான தோற் றத்தையும் அளிப்பது அவசியமாகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, போபாலில் அத் வானி போட்டியிட்டிருந்தால் மகிழ்ந் திருப்போம். ஆனாலும், அத்வானி ஏன் போபாலில் போட்டியிடவில்லை என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரம் எனக்கில்லை. பாஜகவின் தேர்தல் குழு வைத்தான் இதுகுறித்து கேட்க வேண் டும் என்றார். போபால் உள்ளுர் பாஜக தலைவர் மாநிலத்தில் கட்சியினரை ஒருங்கிணைப் பதில் முனைப்பும், முயற்சியும் இல் லாததாலேயே மத்திய பிரதேச மோர்ச்சா அமைதியான வழியில் தன் பணியைத் தொடர்கிறது. அதேபோல் மோடியின் படத்தைக் காட்டிலும், போஸ்டர்களில் பெரிய அளவில் முதலமைச்சர் சவுகான், சுஷ்மா சுவராஜ் படங்கள் இடம் பெற் றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்து வதைப்போல் பிற மதங்களுக்கு எதிரான முழக்கங்கள் மத்தியப்பிரதேசத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரைப் பயன்படுத்துவதால் மாநிலத் தின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த தகவல்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய போபால் நாடாளுமன்ற உறுப்பினரான கைலாஷ் ஜோஷி மூத்த தலைவரான அத்வானிக்கு பாதுகாப்பான தொகுதி போபால் என்று மாநில பாஜகவால் உருவகம் செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மோடியிடமே மனு போட்டுக் காத்திருப்பது மகிழ்ச்சிக் குரியதல்ல என்றார். மேலும், அத்வானி யிடம் போபாலில் போட்டியிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதையே தானும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், கட்சியின் முடிவு அத்வானி காந்திநகரில் போட்டியிடவேண்டும் என்கிறது. பாஜ வின் ஒழுங்கமைந்த தொண்டர்கள் கட்சித் தலைமையை எதிர்க்க முடியுமா? என்றார்.

- தி எகனாமிக் டைம்ஸ் டில்லி பதிப்பு 29-3-2014

Read more: http://viduthalai.in/page-2/77937.html#ixzz2xgf7iUOg

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சி யோக்கியதை?


- குடந்தை கருணா



போலியோ முற்றிலுமாக இந்தி யாவில் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக செய்தி வந்துள்ளது. ஆனால், குஜராத் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தில் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடப்பட வில்லை என்கிற அதிர்ச்சித் தகவலை நவ்சர்ஜன் டிரஸ்ட் என்கிற மனித உரிமை அமைப்பு, அமெரிக்க நிறு வனமான ஈஸ்ட் வெஸ்ட் நிர்வாக நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் துகளுக்கு இந்த போலியோ தடுப்பு மருந்து தரப்படவில்லை; பெரும் பாலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும், துப்புரவு பணியிலும் இந்த வால்மீகி பிரிவினர்தான் பெரும் பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பு சக்தி மிகக் குறைந்த நிலையில் இருப்பதால், போலியோ பாதிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விழுக்காடு குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது எனும் தகவலை விக்கிபீடியா இணைய தளம், புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு, 81 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது என தகவல் தந்துள்ளது. ஆனால், வளர்ச்சி என்றால் குஜராத் தான் என ஊர்தோறும் முழங்கி வரும் மோடி ஆளும் குஜராத்தில் என்ன நிலைமை தெரியுமா? 45 விழுக்காடு மட்டுமே குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டு, 19ஆம் இடத்தில் உள்ளது என விக்கி பீடியா இணைய தளம் புள்ளி விவரம் தந்துள்ளது. போலியோ இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவு செய்து வரும் நிலையில், குஜராத்தில், தலித் குழந்தைகளுக்கு, போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் வராத மோடி அரசு தான், வளர்ச்சிக்கு உதாரணமா?

இந்த குஜராத் வளர்ச்சியைத் தான், நம்மூர் பாஜக கம்பெனியில் சேர்ந்திருக் கும் மோடி ஏஜெண்டுகளாக திகழும் வைகோ, விஜயகாந்த், ராம்தாஸ் வர வேற்கின்றனர். எப்படி? போலியோ ஒழிப்பில் முதல் மாநிலமாக திகழும் தமிழ் நாட்டை, 19-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம் போல, கீழே தள்ளுவதற்கு, இந்த அணியினர் துடிக்கின்றனர். தமிழ் நாட்டு மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, கீழே தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.

Read more: http://viduthalai.in/page-2/77940.html#ixzz2xgfSSc2w

தமிழ் ஓவியா said...


மோடியை மக்கள் ஏற்பார்களா? பேராசிரியர் க.அன்பழகன்


போச்சம்பள்ளி, ஏப். 1- கிருஷ்ணகிரி நாடாளுமன் றத் தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்ன பில்லப்பாவை ஆதரித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அரசம்பட்டி யில் பிரச்சாரத்தை தொடங் கிய அவர், வேலம்பட்டி யில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் காவேரிப்பட்ட ணம் பேருந்து நிலையம் அருகேயும் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அரு கிலும் நடந்த தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டங்களி லும் பேராசிரியர் க.அன்பழ கன் பேசினார்.

தி.மு.க. தலைவர் கலை ஞர் ஒவ்வொருமுறை ஆட் சிக்கு வரும்போதும் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கவேண்டும் என்று கலைஞர் இலவச வேட்டி-சேலை திட்டத் தைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா, வங் காளம், ஒரிசா போன்ற மாநி லங்களில் இருந்து இலவச வேட்டி-சேலைகளை வாங்குகிறார்.

இதில் கமிஷன் பெறுகி றார்கள். தி.மு.க. ஆட்சியில் நெசவாளர் மற்றும் விவ சாயிகளுக்கு சலுகையில் 500 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டது. இதை ஜெயலலிதா நிறுத்திவிட் டார். சென்னை கிண்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூல கத்தை பார்த்து வெளிநாட்டி னரே பாராட்டினர். ஆனால் அதையும் முடக்கிவிட்ட னர். செம்மொழி ஆராய்ச் சிப் பணியும் முடக்கப்பட் டுள்ளது. மதச்சார்புள்ள மோடியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டங்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் செங் குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுக வனம் எம்.பி., தொகுதி தேர் தல் பொறுப்பாளர் பனமரத் துப்பட்டி ராஜேந்திரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/77965.html#ixzz2xggMgSuP

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

- (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77934.html#ixzz2xgiV4nWv

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் மோடி மஸ்தானே!


அகமதாபாத், ஏப்.2-எங் களுடைய மாநிலத்தில் விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று குஜராத் அரசு அறிக்கை வெளி யிட்டு மாட்டிக்கொண்டது.

கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் சென்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த கெஜ்ரி வால் அந்த மாநிலத்தின் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவந்து இது வரை மோடி நடத்திக் கொண்டு இருந்த குஜராத் வளர்ச்சி என்ற பிரச்சாரம் எல்லாம் பொய் என்பதை நிருபித்தார்.

தனது பிரச்சாரத்தின் இறுதியில் மோடிக்கு எதி ராக 17 கேள்விகள் வைத் தார். இந்தக் கேள்விகளுக்கு மோடி எந்த ஒரு பிரச்சார மேடையிலும் பதில் அளிக்கவில்லை. புதன் கிழமையில் இருந்து மோடி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பிக்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவா தேவி கோவிலுக்குச் சென்றுள் ளார். இந்த நிலையில் அர விந்த கெஜ்ரிவாலின் கேள் விக்கு பதில் அளிக்காமல் சென்றால் தமது இரண்டாம் கட்டத் தேர்தல் சுற்றுப் பய ணப் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்படும் என்ற நிலையில் அவசர அவசரமாக குஜராத் அரசு மூலமாக சில விளக் கத்தை கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக குஜராத் தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் விளைநிலங் களை இழந்து புலம் பெயர்ந்தனர். புலம் பெயரவழியில் லாத விவசாயிகள் தற் கொலை செய்துகொண்ட னர். குஜராத் அரசு முன் னணி மாநிலமாக இருந்தால் இந்த நிலை ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்கான பதிலில் குஜராத் மாநிலத்தில் இது வரை விவசாயிகள் தற் கொலை செய்யவே இல்லை, சமீபத்தில் ஒரே ஒரு விவ சாயி தற்கொலை செய்து கொண்டார். அதுவும் அவ ருடைய குடும்பப் பிரச் சினை காரணமாக என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால் 2013 ஆம் ஆண்டு குஜராத் அரசின் உள்துறை அமைச் சகம் வெளியிட்ட பத்தி ரிக்கை குறிப்பிலேயே 2012-2013 வரை சுமார் 60 விவ சாயிகள் சரியான பயிர் வளர்ச்சி மற்றும் விவசாயக் கடன் கொடுக்காத காரணத் தால் தற்கொலை செய்துள் ளனர் என்று இருந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் அக மதாபாத் பதிப்பில் வெளி வந்த செய்தி குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள விவசாயிகள் வறட்சி மற்றும் விவசாயக்கடன் சுமையால் தற்கொலை செய்வது பற்றி அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேஜஸ்சிறீ குஜராத் மாநில உள்துறை அமைச்சகத்தி டம் முழு விவரம் கேட்டி ருந்தார். அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள் துறை அமைச்சகம் நடப்பு ஆண்டில் சுமார் 60 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களில் 25 பேர் விவசாயக் கடன் சுமை யால் தற்கொலை செய்து கொண்டனர். அதில் ஜூனா கட் மாவட்டத்தில் 10, அம் ரேலியில் 4, ராஜ்கோட் 7 மற்றும் ஜாம் நகரில் 2 என விவசாயக்கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளனர் என்று தகவல் தெரிவித்தி ருந்தது. மேலும் விவசாயத் தொழில் நலிவினால் கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சம் குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலிற்கு சென்று விட்டன. 2008 ,முதல் 2012 வரை முழுக்க சரியான நீர்ப்பாசன வசதியின்றியும், கால்வாய்கள் தூர்வாறாமல் சவுராஷ்டிரா பகுதியில் மட் டும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கிய மாக வறட்சிப் பகுதியில் வாணிகப் பயிர்களான பருப்புவகை பயிர்கள் முற் றிலும் பாதிக்கப்பட்டதால் அதனை நம்பி இருந்த பல குடும்பத்தினர் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என அந்த நாளிதழ் அரசு ஆவணங்களை ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட் டிருந்தது.

ஆனால், அதே அரசு இன்று அவசர அவசரமாக குஜராத்தில் விவசாயிகள் தற் கொலை செய்யவே இல்லை என்று பதில் அறிக்கை விடுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/77996.html#ixzz2xmaGQWBS

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?

தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், மாநிலங் களின் கல்வி வளர்ச்சி பற்றிய அறிக் கையினை டிசம்பர், 2013 இல் வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கல்வி குறியீட் டில், குஜராத் மாநிலம் இதற்கு முன் னர் இருந்த 9 ஆவது இடத்திலிருந்து 18 ஆவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி அளவில், 12 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கும், உயர் நிலைப்பள்ளி அளவில், 8 ஆவது இடத்திலிருந்து, 14 ஆவது இடத்திற்கும் குஜராத் பின்ன டைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டி, இரண்டையும் இணைத்து சராசரி பார்க்கையில், மாநிலங்கள் வரிசையில் 18 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளதை அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் 8 ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3 ஆவது இடத்திலும் தொடர்ந்து உள்ளதை யும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கை கூறுகிறது.

இந்த தரவரிசை, மாநிலங்கள் கல்வித்துறையில் செய்த சாதனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள் ளிக்கு வராமல், நின்றுவிடும் குழந்தை களின் எண்ணிக்கை, இவற்றின் அடிப் படையில் இந்தத் தரவரிசை தேசிய பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

முதல் இடத்தை சிறிய தீவான லட்சதீபமும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரி மாநிலமும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தமிழகம் பெற் றுள்ளது. மிகப்பெரிய மாநிலம் என எடுத்துக்கொண்டால், தமிழகம் முத லிடத்தைப் பெற்றுள்ளது என நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம்.

நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, பெரியாரின் போராட்டத்தால், தமிழ கம் கல்வி வளர்ச்சி பெற்று, கல்வி வள்ளல் காமராசர் காலத்தில், கல்வி புரட்சி ஏற்பட்டு தொடர்ந்து, தமிழ கம் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், 9 ஆவது இடத்திலிருந்து, 18 ஆவது இடத்திற்கு பின்னடைந்துள் ளது. (ஆதாரம்: Gujarat drops in educational index - DNA - 5.12.2013)

குஜராத் மாடல், மோடியின் நல் லாட்சி என தமிழ் நாட்டில் பாஜகவு டன் கூவிக் குலாவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இந்தப் புள்ளி விவரத்திற்கு, பதில் சொல்லி விட்டு, தேர்தலை சந்திக்கட்டும். பார்ப்போமே இவர்களின் நாண யத்தை?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78018.html#ixzz2xmdeKIuK

தமிழ் ஓவியா said...


இவாள் அவாள்!


முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். இவாள் எல்லாம் அதிகாரத்தில் இருந்தபோது அவாளுக்குச் சாதமகமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவராக்கப்பட்டார். இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் தேர்வுத் தாள் அவுட்டானது. தேர்வில் தமிழுக்கு என்று இருந்த மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.

இப்பொழுது அதிமுகவிலேயே சேர்ந்து விட்டார். அடுத்தடுத்துப் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுவார் அதிமுக ஆட்சியில்.

சென்னையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் விலக்கிக் கொள்ளப்பட்டு, அந்த இடத்தில் இவர் நிறுத்தப்படுவார் என்கிறது தினமலர் எதுவும் நடக்கலாம்.

அவாள் ஆயிற்றே! அண்ணா தி.மு.க. அக்ரகார தி.மு.க. தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/page-8/78012.html#ixzz2xme9Rbji

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

புள்ளிவிவரம்

தமிழ்நாட்டில் வாக்காளர் கள்பற்றிய ஒரு தகவல்:

30-39 வயதுள்ள வாக் காளர்கள் 1.34 கோடி

40-49 வயதுள்ள வாக் காளர்கள் 1.15 கோடி

50-59 வயதுள்ள வாக் காளர்கள் 83 லட்சம்

60-69 வயதுள்ள வாக் காளர்கள் 55 லட்சம்

இது தேர்தல் ஆணையம் அளித்துள்ள புள்ளி விவரம்.

இல்லை

உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வில்லை.

சீசரின் மனைவி...

தமிழக அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் சிறிய பேருந்துகள், விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் உள்ளது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய் யப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றத்திற்கு ஆளும் தரப்பில் அது எடுத்துச் செல்லப்பட் டது. நீதிமன்றத்தின் ஆணைப் படி சிறிய பேருந்துகளில் இரட்டை இலை நீக்கப்பட் டது. இப்பொழுது குடிநீர் பாட்டிலிலும் இடம்பெற் றுள்ள இரட்டை இலையை நீக்குவது குறித்துத் தலை மைத் தேர்தல் ஆணையத் திடம் ஆலோசனை கேட் டுள்ளதாக தமிழ்நாடு தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

இதில் ஆலோசனை கேட் பதற்கு என்ன இருக்கிறது? சுவரில் எழுதும் தேர்தல் சின் னத்தையே அனுமதிக்காத தமிழகத் தேர்தல் ஆணையம், அரசு விற்கும் குடிநீர் பாட்டி லில் சட்ட விரோதமாக இரட்டை இலை இடம்பெற்றி ருப்பதை நீக்குவதற்கு எண் பேராயத்தைக் கூட்டித்தான் முடிவு செய்யவேண்டுமா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

சீசரின் மனைவி சந்கேத் திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்துமே!

அ.தி.மு.க. கலக்கம்!

அவாள் ஏடான தின மலரே இன்று வெளியிட் டுள்ள கருத்தும் தகவலும் அ.தி.மு.க. அணியின் தற் போதைய நிலவரம் - கலவ ரமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பிரச்சாரத்தைத் தொடங் கும்போது இருந்த நிலை வேறு - இப்பொழுதுள்ள நிலை வேறு.

நிலைமை தலை கீழாக மாறிவிட்டதால், அ.தி. மு.க. கலக்கத்தில் இருப்பதாக தினமலர் எழுதியுள்ளது.

(அ.தி.மு.க. விழிப்போடு இருக்கவேண்டும் என்று தினமலர் அக்கறையோடு கொடுக்கும் சமிக்ஞை இது!)

கறுப்புப் பணம்

மக்களவைத் தேர்தலை யொட்டி வெளிநாடுகளில் தூங்கும் கறுப்புப் பணம் என்ற பூனைக்குட்டி (அதிகம் இல்லை ரூ.23 லட்சம் கோடி தான்) இந்தியா திரும்புகிற தாம்! வாக்குகளை விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டார்களோ! எச்சரிக்கை!!

தாவலோ, தாவல்!

கருநாடகத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கா ததால், எடியூரப்பாவின் கூட் டாளிகளான லட்சுமி நாராய ணன் மற்றும் நிருவாகிகள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். நடிகை லட்சுமி தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால், மதச் சார்பற்ற ஜனதா தளத்தி லிருந்து விலகி, பி.ஜே.பி.,க்குத் தாவினார்.

சென்னப் பட்னா தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. யோகேஷ் வர் காங்கிரசுக்குப் போனார். முன்னாள் முதல்வர் ஜே.எச். பட்டேலின் மகன் மகிமா பட்டேல் காங்கிரசு சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டதால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார்.

சீட்டுக் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் சீட்டைக் கிழித்துவிட்டு, சீட்டைத் தேடித் தாவ ஆரம்பித்து விட் டனர். இவர்கள் மேடைகளில் ஏறிக் கொள்கை முழக்கம் செய்வார்கள் பாருங்களேன்!

Read more: http://viduthalai.in/page-8/78017.html#ixzz2xmeQQ4ev

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்


ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.

அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!

தி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.

1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா?

2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா?

சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!

3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்துபோய் விட்டதா?

4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!

5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:

தமிழ் ஓவியா said...

அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?

6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!

ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்?

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?

தமிழ் ஓவியா said...

தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?

7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!

லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா?

கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.

2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா?

இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.

அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!

மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?

சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே! இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?

மேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கமலைப் பிறாண்டும் பூணூல்கள்


கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.

நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?

கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?

நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!

இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

கருத்து


தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.

- நிமல்கா பெர்னாண்டோ,
இலங்கை மனித உரிமைப் போராளி

மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.

- நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

- டாக்டர் சாந்தா,
சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?


இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!

குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.

ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.

வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.

ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.

மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:

ஆண்கள் 63..12, பெண்கள் 64.10

பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!

இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.

8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.

மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :

குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் சுளீர்

செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?

தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.

- தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது... (10.3.2014)

தமிழ் ஓவியா said...

சில்லறை யு(பு)த்தி



கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?

பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!

தமிழ் ஓவியா said...

ஜாதகம் அது பாதகம்


இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.


என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.

பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


ஆண்டவரும்
அளவுகோலும்!

நான் எப்போதும்
உன்னைக் கைவிட மாட்டேன்
என்று சொன்ன
என் ஆண்டவரே!
அனைத்தையும்
சுனாமி வந்து சுருட்டி
வாயில் போட்டுக்கொண்டுவிட
தனிமரமாய்
தன்னந்தனியே தவிக்கிறேனே!
நெஞ்சிலே நஞ்சை வைத்து
நாவிலே தேனைத் தடவி
நயவஞ்சகமாய்ப் பேசி
நம்பவைத்துக் கழுத்தறுப்பது
தனிமனித ஒழுக்கக்கேட்டின்
அடையாளம் மட்டும்தானா?
ஆண்டவராகிய உமக்கு - அந்த
அளவுகோல் கிடையாதா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா



மகாத்மா மண்ணில்
மதம் எனும் மலத்தை
தேர்தல் களமாய்
தின்னுகின்றன
நாகரிகப் பன்றிகள்

செய்திகளும் தின்பண்டங்களாக
தின்னுகின்றன மாயைகளை...
(மோடி... மோடி
ஜாடி... ஜாடி)

ஜனநாயகம் என்னும் குடிசையை
அயோத்திய அனுமான்கள்
தீவைக்கின்றன...
மீண்டும்
பதாகை ஆட்சி
வேண்டுமென்று...

நம் இராவணனின் விபீசனர்கள்
கூட்டாஞ்சோறு எனும்
தேர்தல் பந்தியில்
பாத்தி கட்டுகிறார்கள்

இந்திய வாக்காளனுக்கு
நோட்டா எனும்
வாக்குச் சீட்டில்
வாக்குச் சாவடி

ஜனநாயகமே
உனது மறுமலர்ச்சி
எப்போது?

- சின்னவெங்காயம், சென்னை

தமிழ் ஓவியா said...

நீங்களே சொல்லுங்க சார்....!


- டான் அசோக்

ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.

அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.

ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.