Search This Blog

16.3.14

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?


இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.

விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பையிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின் றானே தவிர, முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!

இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோ தம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.

உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது.

பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.

குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென் கிறோம்.

நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!

இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.

சிந்திக்காததனாலே எவன் அதை உப யோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோ,  அவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.

நாம் கடவுள் இல்லை என்று சொன்னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.

பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்பவில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!

சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே? துலுக் கன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?

1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற்காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக் கின்றார்கள்.

நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.

---------------------------------------10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).

19 comments:

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள்:


அன்னையார் பணி வெல்க வெல்கவே!

இன்று (16.3.2014) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்
நினைவு நாள்.

நம்மைப் பொறுத்தவரை நமக்கு இது ஒரு வரலாற்றுக் குறிப்பு
நாள்! அவ்வளவுதான்.

ஏனெனில் அன்னையார்தம் அரும்பணி தொண்டறம் -
தொடர நம்மை மேலும் தீவிரமாக அர்ப்பணிக்க
உறுதி - சூளுரை எடுக்க வைத்த - நாளாயிற்றே!
உலகிலேயே வசவுகளால், துவளாது,
தொய்வடையாது, தொடர்ந்து என்பணியில்
(எம் அய்யாவைக் காப்பாற்றி வாழ வைக்கும்
கடமையில்) என்றும் ஓயமாட்டேன், ஒதுங்க
மாட்டேன் என்று உறுதி மலைமீது நின்று பிரகடனம்
செய்த எம் அன்னையார் வாழ்ந்த காலம்
59 ஆண்டுகளே!

இதில் 45 ஆண்டுகளுக்குமேல் அய்யா
விடமே அன்னையார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

தனக்கு அறிவுப்பற்று, மனிதப்பற்று தவிர,
வேறு எந்தப் பற்றுமே கிடையாது என்று
முழங்கிய அறிவு ஆசான் தந்தை பெரியாரையே
பற்றிக் கொண்டு, தனக்குள்ள இளமை, வலிமை
ஆகியவற்றையெல்லாம் துறந்து, தூய
தொண்டறத்தின் உருவமாய் உயர்ந்து
தன்பணியில் தளராது இறுதி மூச்சடங்கும்வரை
கொள்கைகளாக தன்னை எரித்த
ஈடு இணையற்ற எங்கள் அன்னையே
எரிந்து எரிந்து தன்னை அழித்து
ஒளி தந்து, இன்று எரிந்த பின்பும்
மங்காத வெளிச்சமாய், எங்கள் ஒளியாய்,
வழியாய் திகழும் எம்தந்தையின் காவல்
அரணே!

அய்யாவின் இமை மூடியபின், அவர் தந்த
இயக்கத்தைக் காத்துவளர்த்த எங்கள்
அன்னையே
உனது நினைவு நாளில்
- நீங்கள் நடத்திய இராவண லீலா - இராம -
இராவணப் போர் இன்று தேர்தல் களத்தில்
நடைபெறும் கால கட்டத்தில், உங்களின்
உறுதியை நாங்கள் ஏற்று
உங்கள் பயணத்தைத் தொடருகிறோம் அன்னையே!
நீங்கள் தந்த நெஞ்சுரத்தைத் தவிர,
தந்தை அளித்தகொள்கைளைத் தவிர,
வேறு எதையும் ஏற்காது
பணி தொடருவோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77055.html#ixzz2wB5SXEKH

தமிழ் ஓவியா said...


நம்மைப் பிடித்த நோய்


- குடந்தை கருணா

மோடியை வேண்டுமென்றே ஊடகங்கள் தாங்கிப்பிடிக்கின்றன என ஊடகங்களின் ஒரு சார்பு நிலையை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் அம்பலப்படுத்தியதற்கு ஆத்திரப்படும் ஊடகங்கள், தமிழ் நாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கிலும் அதே ஒரு சார்பு அணுகுமுறையைத் தானே கையாள்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்திற்கு வழக்காடாமல் விடுப்பு எடுப்ப தற்கு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பவானி சிங்கிற்கு அவரது ஒரு நாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு அம்மையாருக்கு வருமானால், அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியாது; தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கை, வாய்தா வாங்கியே இழுத் தடித்து வரும் நிலையில், தற்போது, இறுதி வாதத் திற்கு வழக்கு வந்துள்ளது.

இந்திய அரசியலில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என மேடை தோறும் ஜெயலலிதா பேசி வரும் நிலையில் இந்த வழக்கின் இறுதி வாதத்திற்கு, அரசு வழக்கறிஞர் வராமல் தவிர்ப்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆனால், இந்த செய்தியை நம்மூர் பத்திரிகைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்தன? தினகரன், முரசொலி பத்திரிக்கைகள் தவிர்த்து, மற்ற பத்திரி கைகளான தினத்தந்தி 12-ஆம் பக்கத்திலும், தினமலர் 9-ஆம் பக்கத்திலும், தி இந்து தமிழ், 16-ஆம் பக்கத் திலும், தினமணி 11-ஆம் பக்கத்திலும், டைம்ஸ் ஆப் இந்தியா 9-ஆம் பக்கத்திலும், தி இந்து ஆங்கிலம் 4-ஆம் பக்கத்திலும் செய்தியை வெளியிட்டுள்ளன.

டெக்கான் கிரானிகல், மாலை முரசு பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிடவில்லை. அதே நேரத்தில், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ராஜ் நாத்சிங்கையும், ரஜினிகாந்தையும் சந்தித்தது, தனிப்பட்ட சந்திப்பு என அவரே சொன்னாலும், அதில் அரசியல் இருக்கிறது;

திமுகவிற்கு பாதிப்பாகுமா? என்றெல்லாம் துப்பு துலக்கி, முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் இந்த பத்திரிகைகள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதான வழக்கில், நமக்குத் தெரிந்து, அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளதை ஒரு முக்கியம் வாய்ந்த செய்தியாக கருதாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நம்மைப் பிடித்த நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சொன்னாரே, அது தான் நினைவுக்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/77058.html#ixzz2wB5uqgeZ

தமிழ் ஓவியா said...




தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/77095-2014-03-17-11-12-55.html#ixzz2wGt9TQ4h

தமிழ் ஓவியா said...

இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தாமும் உறுதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் போர்க்குற்றம்: சுதந்திரமான விசாரணை, தொடர் நடவடிக்கை தேவை!


இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!



இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் _ - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை _- சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு -_ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக் கொண்டபடி செய்திருக்க வேண்டும்;

இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!



- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஒரு சிங்களரின் உள்ளத்திலிருந்து...


சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர் நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி.

மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து...

இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக்கென்ற தனித்த சுயஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார்கள். 75 சதவீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவதுமாக மாற்றி எழுத வேண்டும். தமிழர்களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை அவர்களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.

அய்.நா. சபையின் மூன்றாவது தீர்மானம் எதையாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய். ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம். உலக நாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.

என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார்கள். தேசப் பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர்களைத்தான்; இலங்கையை அல்ல. இலங்கையில் எல்லாத் தரப்பினரும் அமைதியோடும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனது கொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடுவது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

தமிழ் ஓவியா said...


இதய அடைப்பை சரிசெய்யும் வெள்ளைப் பூண்டு

வெள்ளைப்பூண்டு உடல் வெப்பத்தை அதிகப் படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக் கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை நீங்கும்.

நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் சில உணவுப் பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த் துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும் உள்ள செலி னீயம் என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப் படுத்தும்.

நரம்பு தளர்ச்சி நீங்க: நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க: நன்றாக உறங்க வேண்டும். மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்தக் கூடாது.

தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்ற வற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.

மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கி விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2E1bPf

தமிழ் ஓவியா said...


வயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க


நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்வது நமது கடமை. அவ்வாறு இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது.

இதனை தான் சித்த மருத்து வர்கள் வலியுறுத்துகின்றனர். வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை. அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர்.

இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட் களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் மனது இலகுவாகும், நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.

இந்த பயறு வகைகளில் பி காம்பளக்ஸ், வைட்டமின் பி1, பி2, பி3, பிஎஸ், பி6, பி12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் டி, இ, சி மற்றும் கே, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.

பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத் தையும் கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத் துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது.

தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சினைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2ho41j

தமிழ் ஓவியா said...

தலைவலிக்கு கை வைத்தியம்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலை வலி குறையும்.

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றி யில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படி யென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலை வலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற் றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2qaCzU

தமிழ் ஓவியா said...

வைட்டமின் சி நிறைந்த நெல்லி!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக் கனியில் உள்ளது.

இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்ற வற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2wGzJf

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் தொழிலாளர்மீது முறையற்ற முறையில் துப்பாக்கிச் சூடு! தமிழர் தலைவர் கண்டனம்!


நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அறப் போரில், அங்குள்ள பாதுகாப் புப் படையினர், தேவை யின்றி, துப்பாக்கிச் சூடு நடத்திய தினால், ராஜா என்ற ஒரு தொழிலாளியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக் கும், மிகுந்த துயரத்திற்கும் உரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

துப்பாக்கிச் சூடு என்பதை எந்தக் கட்டத்தில் தவிர்க்க இயலாத நிலையில், நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம், காவல் படைகளுக்குப் போதிய பயிற்சியை அளிக்க மத்திய மாநில அரசுகள் தவறக் கூடாது.

அதீதமாக தமது அதிகார எல்லை தாண்டி நடந்து கொண்ட காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணை கொடுத்தவர் யார்? ஆணை யில்லாமலே தன்னிச்சையாக இப்படி நடந்து கொண்டாரா என்பது போன்ற பல கோணத்தில் அரசுகள், சுதந்தரமான நீதி விசாரணை நடத்தி, மனித உயிர்கள் விலை மதிப் பற்றவை என்பதை உணர்த்த வேண்டும்.

பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு தேவை!

டெல்லி போன்ற பெரு நகரங்களில்கூட பெருங்கூட்டத்தைக் கலைக்க, நீர்ப் பீய்ச்சி அடிப்பது, வானத்தை நோக்கி மேலே சுட்டு கூட்டத்தைக் கலைய வைப்பது போன்ற சில முறைகள் பின்பற்றப் படுகிறபோது, இங்கே இப்படி நிகழ் வுகளா? எனவே இதற்கு ஒரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க ஆய்வு நடத்தி, புதிய வழிகாட்டும் நெறி முறைகளை காவல் துறையினருக்கு உணர்த்த வேண்டும்.

உயிர் இழந்தவருக்கு சுமார் 10 லட்ச ரூபாய் இழப் பீடாகத் தர வேண்டியதும் மனிதாபிமானமாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



18.3.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/77151.html#ixzz2wMjVXLbj

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டரில் சிக்குகிறார் மோடியின் நண்பர் அமித்ஷா சி.பி.அய். அழைப்பாணை!


அகமதாபாத், மார்ச் 18- போலி என் கவுண்டர் வழக் கில் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடியின் அதி முக்கியமான நண்ப ரும், குஜராத் மாநில முன் னாள் உள்துறை அமைச் சரும், உத்தரப்பிரதேசத்தில் நடக்க இருக்கும் தேர்த லுக்கான பி.ஜே.பி.யின் மோடியின் பொறுப்பாளரு மான அமித்ஷா சிக்கியுள் ளார். சி.பி.அய். சிறப்பு நீதி மன்றம் அவருக்கு அழைப் பாணை விடுத்துள்ளது.

15-6-2004-இல் குஜராத் தில் இஷ்ராத் ஜஹான், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக் மற்றும் இரு வர் குஜராத் காவல்துறை யினரால் பொது இடத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். பிரனேஷ்பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை அளித்த முறையீட்டின்பேரில் சி.பி. அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. இரண்டு குற்றப் பத்திரிகைகள் சி.பி.அய். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டும் குஜராத் முதல்வருக்கு நெருக்க மானவரும், முன்னாள் உள் துறை அமைச்சருமாகிய அமித்ஷா மற்றும் அப் போது பணியிலிருந்த அகமதாபாத் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை. அவர்கள் இருவரையும் நீதிமன்றத் தில் நிறுத்தி குற்ற விசா ரணையைத் தொடர வேண் டும் என்று மனுதாரராகிய கோபிநாத் பிள்ளை கோரி யுள்ளார். போலி என்கவுண் டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோருக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கீதா கோபி தாக்கீது அனுப்பி உள்ளார். மேலும், இவ்வழக்கு விசாரணை மார்ச் 26ஆம்தேதி நடை பெற உள்ளது.

இவ்வழக்கில் தொடர் புடைய முன்னாள் உள் துறை அமைச்சர் அமித்ஷா குறித்து போதுமான ஆதா ரங்கள் இருப்பதாக புல னாய்வுத் தகவல்கள் கூறு கின்றன. அய்.பி.எஸ். அதிகாரி கிரிஷ் சிங்கால் மற்றும் மற்ற காவல் துறை அதிகாரிகள் பரத் பட்டேல், டி.எச்.கோஸ்வாமி ஆகி யோர் கொடுத்துள்ள வாக்கு மூலங்களில் போலி என் கவுண்டரில் அமித்ஷாவின் பங்களிப்பு குறித்து கூறி யுள்ளனர். ஜி.எல்.சிங்கால் போலி என்கவுண்டருக்கு முதல்வர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷா வும் உத்தரவிட்டனர் என் பதை தெளிவாகவே கூறி யுள்ளார். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நட வடிக்கையில் அரசு இருப்ப தாகக் கூறப்பட்டு போலி என்கவுண்டர் நடைபெற்ற தாக சிறையிலடைக்கப் பட்ட அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா எழுத்து மூலம் கூறியுள்ளார். மேலும், அவர் அதில் குறிப்பிடும் போது அதிகாரிகளும், குற்றப்பிரிவினரும் 2002 முதல் 2007வரை அரசின் தீவிரவாத ஒழிப்புக் கொள் கையின்பேரால் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுத் தப்பட்டனர் என்கிறார்.

முன்னாள் இந்திய புல னாய்வுத் துறையின் முன் னாள் இயக்குநர் ராஜிந்தர் குமார் வன்சாராவிடம் முதல்வரிடம் பேசுமாறு கூறியபோது பாதுகாப்பான தாதி, கலி தாதி எல்லோரும் அறிந்தது என்னவெனில் மாநகர குற்றப்பிரிவைச் சேர்ந்த அனைவரையும் முதல்வர் நரேந்திர மோடி யும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நன்கு தெரிந் தவர்கள்தான் என்றார். சிங் கால் கூறும்போது தன்னு டைய அழுத்தமான எதிர்ப் பையும் மீறி அந்தப் பெண்ணை தீவிரவாதி என்று முத்திரை குத்திக் கொன்றுவிட்டனர் என்றார். ராஜிந்தர் குமார், வன்சாரா, அமித்ஷா ஆகியோரிடை யேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு கள் உள்ளன. சூன் மாதத் தில் 18 தொலைபேசி அழைப்புகள் அமித் ஷா, வன்சாராவுடன் பேசுவது பதிவாகி உள்ளன. அந்த பதிவுகள் நேரிடையான சாட்சிகளாகவே உள்ளன.

மனுதாரரான கோபி நாத்பிள்ளையின் வழக் குரைஞர் ஷம்ஷாத் பதான் நீதிமன்றத்தில் தன்வாதத் தில் அமித் ஷா, ராஜிந்தர் குமார், வன்சாரா ஆகியோ ருக்கிடையே போலி என் கவுண்டர் திட்ட மிட்டது தொடங்கி செயலை முடித் ததுவரை உள்ள தொடர்பு களுக்கு ஆதாரம் உள்ளது என்று கூறினார். என்கவுண்டர் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ர வரி 5ஆம் தேதி அன்றுதான் இரண்டாம் குற்றப்பத்திரி கையை சி.பி.அய். தாக்கல் செய்து, அதில் ராஜிந்தர் முக்கியப் பங்காற்றியவர் என்று கூறி உள்ளது. துஷார் மிட்டல், எம்.கே.சின்கா, ராஜீவ் வெங்கெடே ஆகிய மூன்று அய்.பி. அதிகாரி களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. முதல் குற்றப்பத்திரிகை யில் போலி என்கவுண்டர் என்று பெயரிட்டு, குஜராத் காவல்துறை அய்.பி. அதி காரிகளுடன் இணைந்து செயல் பட்டதாகக் கூறி உள்ளது.

அய்.பி.எஸ் அதிகாரி களான டி.ஜி.வன்சாரா, பி.பி.பாண்டே, கிரிஷ் சிங் கால் ஆகியோரைப் பெய ருடன் குறிப்பிட்டுவிட்டு பின்பு பேரட், என்.கே. அமீன், ஜே.ஜி.பார்மர், அனாஜ் சவுத்ரி ஆகியோ ரையும் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77145.html#ixzz2wMjfWfHU

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.மீது குதிரை சவாரி செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இதுவரை பின்புலத்தில் இருந்து அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யை இயக்கி வந்தது - இப்பொழுது மிகவும் வெளிப்படை யாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது; தனது ஹிந் துத்துவா கொள்கையை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்குமாறு கூறி விட்டது. அதன் விளைவாகத்தான் பி.ஜே.பி.யின் மாநிலங்களவையின் தலைவர் அருண் ஜெட்லி மிக வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோயில் பற்றி எதுவும் இடம் பெறுவதில்லையே - ஏன்?

அருண்ஜெட்லி: தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது குறித்து அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். எங்களுடைய அடிப்படை நோக்கம் குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகி றீர்கள் (ணிநீஷீஸீஷீனீவீநீ ஜிவீனீமீ ஞிணீமீபீ 22.1.2014).

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னதை வழிமொழிகிற வகையில் அருண்ஜெட்லி பேட்டி கொடுத்திருக்கிறாரே!

எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். குதிரை சவாரி செய் கிறது என்பதற்கு ஒரு தகவலை நினைவூட்டினாலே போதுமே.

தமிழ் ஓவியா said...

பாகிஸ்தானுக்குச் சென்ற எல்.கே. அத்வானி அங்கு முகம்மதலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் எழுதி விட்டாராம். ஜின்னாவின் மதச் சார்பற்ற தன்மை பற்றியும் கூறி விட்டாராம். விளைவு என்ன ஆனது தெரியுமா? அத்வானியை பிஜேபியின் தலைவர் பொறுப்பிலிருந்து சீட்டுக் கிழித்துவிட்டதே! அதன்பிறகு பிரதமருக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானி இருந்தாலும், பிஜேபி தலைவர் பதவியைக் கடைசி வரை அவருக்கு அளிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்கவேயில்லை.

பிஜேபி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை விலகும்படிச் செய்த சூழ்நிலையில், 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில் அத்வானி மனம் நொந்து என்ன சொன்னார்?

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையைக் கலக் காமல் பிஜேபியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது பிஜேபிக்கோ, ஆர்.எஸ்.எசுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழி வகுக்கும் என்று ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சி வளர்ச் சிக்காக பி.ஜே.பி.க்கு அனுப்பப்பட்ட அத்வானியே ரத்தக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். நாட்டாண்மை செய்கிறது. 4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக்காட்சி அலை வரிசையில் ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி அளித்த பேட்டி கவனிக்கத்தக்கது.

கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட்கண்ட்ரோ லாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி...

சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்? ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?

கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங்களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரகர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும் திறமை யையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பி.ஜே.பி.க்கு, ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண்டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளைச் செய்வார்கள். அதே போல தமிழ்நாட்டுப் பிஜேபிக்கு எங்கள் தகுதி வாய்ந்த இல. கணேசனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி கூறினாரே!

வாஜ்பேயி தலைமையில் மத்தியில் பிஜேபி ஆட்சி யில் இருந்தபோது அரசாங்கத்தின் இரகசியங்கள் எல்லாம்கூட ஆர்.எஸ்.எசுக்கு அறிவிக்கப்பட்டன - இராணுவ இரகசியம் உட்பட!

1999 மே 11,13 ஆகிய இந்நாட்களில் மத்திய பிஜேபி கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக மிக முக்கிய மான இரகசியம் இது! குடியரசு தலைவருக்குக்கூட முதல் நாள்தான் தெரிவிக்கப்படும் என்றால் - இது எவ்வளவு உண்மையான பரமரகசியம் என்பது வெளிப்படை!

ஆனால் என்ன நடந்தது? பொக்ரானில் அணு குண்டு வெடித்த அதே நாளில் - நேரத்தில் ஆர்.எஸ். எஸின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் அணு ஆயுத இந்தியா என்ற தலைப்பில் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை முன்னிறுத்தி சிறப்புக் கட்டு ரையே வெளியிட்டது என்றால் இதன் பொருள் என்ன?

குடியரசு தலைவருக்குத் தெரிவதற்கு முன்பே ஆர்.எஸ்.எசுக்குத் தெரிகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான - இரகசியத்தை பாதுகாக்கத் தவறிய ஆட்சி பிஜேபி ஆட்சி என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, பிஜேபிக்கு வாக்களிப்பது என்பது வெளிப்படையாக ஆர்.எஸ்.எசுக்கு வாக்களிப்பதாகத் தான் பொருள்.

ஆர்.எஸ்.எஸின் குணம், மணம் எத்தகையது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனவே வாக்காளர்ப் பெரு மக்களே உஷார்! உஷார்!! கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ளாதீர்!

தமிழ் ஓவியா said...


கடவுள் - மதம்


மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண் டாக்கக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டிலோ, மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக் கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள்.

- (விடுதலை, 16.5.1968)

Read more: http://viduthalai.in/page-2/77157.html#ixzz2wMklOwLv

தமிழ் ஓவியா said...


அணியா? பிணியா?

தற்போது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, தமிழ் நாட்டில் அமைக்கப்படும் பாஜக கூட்டணி, இதுவரை நாம் பார்த்திராத விசித்திரமான கூட்டணியாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்த வரையில், கூட்டணி என்று சொல்லி, காம்ரேடுகளிடம் பூச்செண்டு வாங்கி, அவர்கள் காதில் வைத்து அனுப் பியது. திமுகவில், விடுதலை சிறுத் தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்குவதில் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், ஒரு நாளிலேயே அதனைச் சரிசெய்து, அனைத்துக் கட்சிகளுக்கும், இடம் ஒதுக்கி, வேட்பாளர்களும் அறிவிக் கப்பட்டு, பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ஆறு மாதங் களுக்கு முன்னரே, பிரதமர் வேட் பாளர் என பாஜகவால் அறிவிக்கப் பட்ட மோடி , இரண்டுமுறை தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதல், மோடி அலை என்று கூறி, எல்லாக் கட்சிகளும், பாஜக பின்னால் இருப் பது போல் ஒரு மாயையை உரு வாக்கினார்கள். தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சியாக பேச்சு வார்த்தை நடத்தியது பாஜக. வைகோவின் மதிமுக முதலில் வந்தது. ஏற்கெனவே பத்து தொகுதி களில் வேட்பாளர்களை அறிவித்த பாமகவும் கூட்டணிப் பேச்சு வார்த் தையில் ஈடுபட்டது.

அறிவிக்கப்பட்ட பத்து தொகுதி களில் வேட்பாளரையும் களத்தில் இறக்கிவிட்டு, அந்த தொகுதிகள் பற்றி எந்த பேச்சும் இருக்கக்கூடாது என்று, இதுவரை யாரும் பார்த்திராத புதிய நிபந்தனையோடு, பாமக பேச்சு வார்த்தையில் இறங்கியது. தேமுதிகவின் கேப்டன், அவர் பங்குக்கு, எல்லோரையும் சந்தித்து, இறுதியாக பாஜகவையும் சந்தித்தார். எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது என்று சொல்லிய நிலையில், கேப்டன், வேட்பாளர்களை அறிவிக் காமலே, பிரச்சாரம் தொடங்குகிறார். தொகுதிக்குச் சென்று அங்கே வேட்பாளரை அறிவிக்கிறார். அந்த தொகுதி, கூட்டணியில் இருப்பதாகக் கூறும் இன்னொரு கட்சியும் கேட் கிறது என்று தெரிந்தும், அந்த தொகு திக்கும் வேட்பாளரை அறிவிக்கிறார். புதுச்சேரிக்கு உள்ள ஒரே தொகு திக்கு, அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியான என்.ஆர். காங் கிரஸ் வேட்பாளரைத் தானாகவே அறிவித்துவிட்டது.

அந்த கட்சியும், பாஜக அணியில் உள்ளது என்கிறார் கள். பாமகவும் அங்கே வேட்பாளரை நிறுத்தும் என்று சொல்லிவிட்டது. கள்ளக்குறிச்சியில், தேமுதிக, பாமக இருவருமே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற் கொண் டுள்ளனர். பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், தினமும், காலையும், மாலையும், இன்னும் ஒரிரு நாள்களில் பேச்சு வார்த்தை முடிந்து விடும் என்று பிழையில்லாமல் சொல்லி வந்தார். இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இத்தகைய விசித்திர மான கூட்டணியை தமிழகம் முதன் முதலாக சந்திக்கிறது. அணியா, பிணியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77161.html#ixzz2wMlQRNWB

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் தொலைக்காட்சிப் பேட்டி பற்றி...


14.3.2014 அன்று கலைஞர் டி.வி.யில் நீங்கள் கூறிய செய்திகள், பெரியார் அவர்கள் சாதனைகளின் வெளிப்பாடு என்று நாங்கள் கருதுகிறோம்.

நீங்கள் கூறியபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான எனது உறவினர், வயது 55, படிக்காதவர், கை நாட்டு. ஆனால் அவர் மகன் இன்று அமெரிக்காவில். எனது உறவினருக்கு தன் மகன் என்ன வேலை செய்கிறார் என்று சொல்லத் தெரியாது. அமெரிக்க கம்பெனியின் பெயரும் சொல்லத் தெரியாது. ஆனால் இன்று வாட்ஸ் அப்பில் அமெரிக்கா வில் உள்ள மகனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

எங்களுக்கு மிக நெருக்கமான மற்றுமொரு தாழ்த்தப் பட்ட நண்பர் இன்று ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி.

ஏன் இதை சொல்கிறோம் என்றால், ஒரு வேளை ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் அமுலுக்கு வந்து இருந்தால் இன்றும் நாம் சூத்திரர்களாக இருந்து அவாளுக்கு அடி வருடிகளாக இருந்திருப்போம். எனவே எங்களுக்கு வழிகாட்டிய புகழ் தந்தை பெரியாருக்கே உரியது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப முயற்சி செய்யுங்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவாவுக்கு ஒரே பதில், பெரியாரித்துவா என்பதே.

ஆர்.எஸ்.எஸ்.இன் மத வெறி தமிழகத்தில் வளராமல் தடுக்க ஆவன செய்யுங்கள்.

உங்கள் சகோதரிகள்
(பெயரை வெளிப்படுத்தவில்லை)

Read more: http://viduthalai.in/page-2/77160.html#ixzz2wMlfnupJ

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை - 18.3.2014



பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்! நேற்றையதினம் நெய்வேலி யில் உள்நாட்டுப் போர் ஒன் றே நடைபெற்றிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தில் ஒப்பந்தத் தொழி லாளியாகப் பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்கு மார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நெய் வேலி இரண்டாவது சுரங்கத் தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இரு தரப் பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார் கள். தொழிலாளர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியதில், பல தொழி லாளர்கள் காயமடைந்துள் ளார்கள்.

தொழிலாளர்களைத் தாக்கியதோடு நிறுத்தாமல், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை யினர் அடித்து நொறுக்கிய தில், 20 மோட்டார் சைக் கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட் டிருக்கிறார். பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாக செய்தி வந்திருக்கிறது. தொழிலாளர் கள் தாக்கப்பட்டதைக் கண் டித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதாகவும், நிறு வனப் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்ற தாகவும் அவர்களுடைய கேமராக்கள் நொறுக்கப் பட்டதாகவும் பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச் சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்ததாக வோ, தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தியதாகவோ தகவல்கள் வரவில்லை.

காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி தான் சம்ப வங்கள் நடைபெற்ற பிறகு அதிரடிப்படையினரோடும், வேறு சில அதிகாரிகளோடும் அங்கே வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வன்முறைகள் ஆங் காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இதெல்லாம் தக்க உதாரணங்களாகும். துப்பாக் கிச் சூட்டில் இறந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசி னால் இதுவரை அறிவிக்கப் படவில்லை. உடனடி அரசு நிர் வாகத்தில் இருப்போர் நெய் வேலியில் அமைதி திரும்பு வதற்கும், தொழிலாளர் களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு, முதல மைச்சரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக ஆயிரக் கணக்கான காவலரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல் துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத் தைக் களையவும் முன் வர வேண்டுமென்று வற்புறுத்து கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/77170.html#ixzz2wMluJ85l

தமிழ் ஓவியா said...


காசநோயை ஒழிக்க புதிய திட்டம்


ஊட்டி, மார்ச் 18- தமிழ கம் உட்பட, 16 மாநிலங் களில், காசநோயை கட்டுப் படுத்த, அரசு மற்றும் தனி யார், கூட்டு முயற்சியில், புதிய திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலத்தில், டி.பி., அல்லது டியூபர்குளோசிஸ் என, அழைக்கப்படும், காச நோயை கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்த, இரு நாள் கருத்தரங்கு, ஊட்டியில் நடந்தது.


இதில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் டாக்டர் ராஜா ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர், காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர் களில், 30 லட்சம் பேர், உரிய சிகிச்சை எடுத்து கொள்வ தில்லை. மொத்த காசநோ யாளிகள் எண்ணிக்கையில், 5இல் 1 பங்கு பேர், இந்தி யாவில் உள்ளனர். தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் காசநோயை குணப்படுத்த முடியும். தனியார் மருத்து வர்கள், தங்களிடம் வரும் நோயாளிகள் விவரத்தை, அரசு, காசநோய் பிரிவுக்கு தெரியப்படுத்துவது இல் லை. இதனால், காச நோ யாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை எடுத்து கொண் டவர்கள் விவரம், துல்லி யமாக இல்லை. காச நோயை கண்டறிய, சளி பரிசோதனை தான் முக் கியம். ஆனால், பல தனியார் மருத்துவர்கள், எக்ஸ்ரே மூலம் கண்டறிகின்றனர். எனவே, அரசு துறையுடன், தனியார் டாக்டர்களையும் ஒருங்கிணைத்து, காசநோய் பரிசோதனை, சிகிச்சை வழங் கு வதன் மூலம், நோயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரும் திட்டம், தமி ழகம், ஆந்திரா, கருநாடகா, மகாராஷ்டிரா உட்பட, 16 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. நோ யாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு காசநோய் பிரிவினர் மூலம், இலவசமாகவே வழங்கப் படும்.
காசநோயாளிகள் குறித்த தகவலை, அரசு காசநோய் பிரிவிற்கு தெரியப்படுத்தாத மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அறிக்கை அனுப் புவது, தற்காலிக பணிநீக்கம் செய்வது, பணி நீக்கம் செய் வது போன்ற, ஒழுங்கு நட வடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்தாண்டுக்குள், புதிய காசநோயாளிகள் உருவாகக் கூடாது; 2050இல், காசநோ யாளி களே இல்லை என்ற நிலையை இலக்காக கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/77173.html#ixzz2wMmAoGzV