Search This Blog

28.3.14

கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை




கருப்பு காங்கிரஸ்வாதி: என்னப்பா முதலியார் பட்டத்தை விட வில்லையாமே?

வெள்ளை காங்கிரஸ்வாதி: விடாவிட்டால் உனக்கென்ன இத்தனை ஆத்திரம்?

க.கா.வா: இல்லை தேசாபிமானம் வேண்டாமா?

வெ.கா.வா: என்ன தேசாபிமானம்? பட்டத்தைவிட்டால்தானா தேசாபிமானம்? பட்டத்தை விடவேண்டியது தேசாபிமான சின்னமா? இன்று காங்கிரசில் பட்டதாரிகள் யாருமில்லையா? சென்னைபட்டணத்தில் ராவ்பகதூர் பட்டம்விட்ட தோழர் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கிறாரே அது போதாதா? C.I.E. பட்டம் விட்ட தோழர் கு. சீனிவாசய்யங்கார் இருக்கிறாரே அது போதாதா? இவர்கள் தேசாபிமானத்துக்கு இன்று எவ்வளவு மதிப்பு இருக்கிறது பார்! இது உனக்கு தெரியாதா?

க.கா.வா: சரி, பழய கதை பேசாதே, முதலியார் டைடிலை விட்டுவிடுகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு இப்போது விடவில்லையே அதற்காகத்தான் சொன்னேன்.

வெ.கா.வா: எதற்காக முதலியார் டைடில் விடுகிறேன் என்று சொன்னார்? தேசாபிமானத்துக்காகவா? 4 அணா மெம்பர் பிளெஜ்ஜில் டைடிலை விடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?

க.கா.வா: 4 அணா பாரத்தில் இல்லாவிட்டால் என்ன? சட்ட சபைக்கு நிற்கிறவர்கள் டைடிலை விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்திருக்கிறதல்லவா?

வெ.கா.வா: ஆம், சட்டசபைக்கு நின்றால்தானே! அதுவும் காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நின்றால் தானே!! "நான் சேற்றில் இறங்கவுமில்லை செருப்பைக் கழட்டவும் இல்லை" என்று ஒருவன் சொன்னால் அவன் தேசத்துரோகியா? முதலியார் காங்கிரஸ் சார்பாய் சட்டசபைக்கு நிற்கா விட்டால் பட்டம் எதற்காக விடவேண்டும்? அவர்தான் "என்னை காங்கிரஸ் சார்பாய் நிறுத்தாதீர்கள்" என்று காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் எழுதி விட்டாரே? பிறகு ஏன் அதைப்பற்றி பேசுகிறாய்?

க.கா.வா: இல்லையப்பா, அவர் பட்டம் விட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எவ்வளவு கௌரவம் ஏற்படும் பார்.

வெ.கா.வா: உங்கள் கௌரவம் போதுமே, ஒ. கந்தசாமி செட்டியார் விட்டதில் எவ்வளவு கௌரவம் வந்தது? இப்பொழுது அவர் எங்கிருக்கிறார், அவர் விலாசம் என்ன உனக்கு தெரியுமா? அப்படிமீறி வருகிற கௌரவம் ராமலிங்கம் செட்டியாரால் கமிட்டிக்கு வரட்டுமே. ஒரு ஜில்லாவில் இரண்டு பேர் பட்டம் விட்டு விட்டு ஒரு மந்திரி வேலைக்கு சண்டை பிடித்துக் கொள்ளுவானேன்?

க.கா.வா: மந்திரி வேலைக்கா பட்டம் விடுவது?

வெ.கா.வா: பின்னை எதற்கப்பா? சட்டசபை மெம்பர் வேலைக்கென்றே வைத்துக்கொள்ளேன்.

க.கா.வா: என்னப்பா அப்படி சொல்லரே?

வெ.கா.வா: பின்னை எதற்கு அப்பா? தேசாபிமானத்துக்கு பட்டம் விட வேண்டும் என்று இருந்தால் 4 அணா பாரத்திலேயே அந்த நிபந்தனை இருக்கும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தீர்மானத்திலாவது இருக்கும், அப்படி இல்லாமல் சட்டசபை அபேட்சகர்கள் பாரத்தில் மாத்திரம் அதுவும் நுழை வரியாய் எழுதி வாங்குகிறார்களே அது ஏன் உனக்குத் தெரியாதா?

க.கா.வா: என்ன இருந்தாலும்...

வெ.கா.வா: என்ன இருந்தாலும் என்கின்றது ஏனப்பா? ஒருத்தர் ஏமாறமாட்டேன் என்றால் அதற்குஆக கோபமா? இத்தனை ஆத்திரமா? காங்கிரஸ்காரர்கள் முதலியாருக்கு தொகுதி இன்னது என்றும் சொல்ல முடியாது; நேமிக்கிறார்களா இல்லையா என்றும் சொல்ல முடியாது. இந்த நிலையில் முதலியார் அனாவசியமாய் பட்டத்தை மாத்திரம் விட்டுப்போட்டு வாலறுந்த நரிமாதிரி நிரந்தரமான மூளி சின்னத்தோடு இருக்க வேணுமாக்கும். அதைப்பார்த்து நீங்கள் சிரிக்கவேணுமாக்கும். வேண்டாம் வேண்டாம். உங்களையே பார்த்து நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை யானால் அழுது கொள்ளுங்கள். அவர் தலையில் கை வைக்காதீர்கள்.

க.கா.வா: அதே நிபந்தனையில் ராமலிங்கம் செட்டியார் பட்டங்கள் விடவில்லையா?

வெ.கா.வா: ராமலிங்கம் செட்டியார் சங்கதி நமக்குத்தெரியாதா? அவர் எதையும் விடுவார் சந்தையும் அவருடையது, கொள்ளையும் அவருடையது. கேட்கிறவர்கள் யார்?

க.கா.வா: அப்படி சொன்னால் எனக்கு விளங்கவில்லையே!

வெ.கா.வா: காங்கிரஸ் என்றால் என்ன? யார்? அவனாசிலிங்கம் செட்டியார் தான் கோயமுத்தூருக்கு காங்கிரசு தலைவர்; அவர் ராமலிங்கம் செட்டியாருக்கு தம்பி. இருவரும் முதலியாருக்கு ஜென்மவிரோதிகள்; முதலியாரை "முண்டச்சி" ஆக்கவே பட்டம் சங்கதி உற்பத்தி பண்ணப்பட்டது; ஆதலால் செட்டியாருக்கு எப்படியும் ஒரு ஸ்தானம் ஒதுக்குவது உறுதி. அதுவும் அவர் எது கேட்கிறாறோ அது ஒதுக்கப்படும்; (ஆனால் கிடைக்குமோ இல்லையோ அது வேறு சங்கதி.)

முதலியார் விஷயத்தில் அப்படி இல்லையே? எதுகொடுத்தாலும் முதலியாருக்கு கிடைத்துவிடலாம். அதனாலே காங்கிரசில் ஒதுக்குவதையே அல்லவா நாமம் போடப்பார்த்தார்கள். நல்ல வேளையாய் தப்பித்துக் கொண்டார். அவர் சட்டசபை மெம்பர் ஆனாலும் சரி ஆகாவிட்டாலும் சரி, சாகும் வரைக்கும் சொட்டு இருக்கும்படியான ஏமாற்றத்தில் இருந்து தப்பி கொண்டார்.

க.கா.வா: அப்படியா சங்கதி நல்ல வேளை எந்த சாமி புண்ணியமோ தப்பித்துக்கொண்டார். போகட்டும் போ. எனக்கு இந்தச் சூது தெரியாது.

வெ.கா.வா: எந்த சாமி புண்ணியம், எல்லாம் நம்ப சாமி புண்ணியம் தான்.

மற்ற சங்கதி ஒன்றும் கேட்க வேண்டாம். எல்லாம் தானாக வெளி வரும்; கொஞ்சம்பொறு. முதலியார் தப்பித்துக்கொண்டாரே என்கின்ற ஆத்திரத்தில் கண்டபடி உளறப்போகிறார்கள். அதிலிருந்து அநேக சங்கதி தெரிந்து கொள்ளலாம்.

அரசியல் பிழைப்பில் நாணயம் பேச யாருக்கு உரிமை உண்டு? தோழர் சுப்பராயனை சேர்த்துக்கொள்ளவில்லையா? அரசியல்வாத நாணயம், வக்கீல் வாத நாணயம், வியாபாரி வாத நாணயம், தாசிவாத நாணயம் இவைகளுக்கு விலக்குவிதி உண்டு உனக்குத் தெரியாதா?

அப்படியும் முதலியார் விஷயத்தில் விலக்கு விதி ஒன்றும் வேண்டியதில்லை; அவர் பொது வாழ்வில் பொதுநல காரியம் பார்த்ததில் எவ்வளவோ பணம் நட்டப்பட்டு கடன்பட்டு தனது சொத்தை விற்று கடன் கட்டினார். ஜில்லா போர்டு பிரசிடெண்டு வேலை போனபிறகே கடன் இல்லாமல் சாப்பிடுகிறார். ஏதோ லக்ஷம் ஐம்பது ஆயிரம் சம்பாதித்தார்.

காந்தியை கைது செய்யச் செய்த சீனிவாச சாஸ்திரி இன்னம் பெரிய மனிதராக இல்லையா? காந்தியை முட்டாள் என்ற சத்தியமூர்த்தி அதாவது ஆனைமலை பேச்சுக்காரர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இல்லையா? முதலியார் என்ன துரோகம் பண்ணினார்? டாக்டர் ராஜனாட்டவா? சாஸ்திரியாட்டவா வேலூர் காங்கிரஸ்காரராட்டவா தென் ஆற்காடு காங்கிரஸ்காரராட்டவா? அல்லது திருநெல்வேலிகாரராட்டவா? இன்னும் பேசப்போனால் காந்தி முதல் சத்தியமூர்த்தி வரையிலுமாட்டவா என்றுகூட கேட்பேன்.

காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் இருக்கிறார். நீ என்னை சட்ட சபைக்கு நியமிக்க வேண்டாம் நான் பட்டம் விடவில்லை என்றார். இதில் என்ன ஓட்டை சொல்லே பார்ப்போம்.

--------------------- சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் --”குடி அரசு” 15.11.1936

57 comments:

தமிழ் ஓவியா said...

எனக்குக் கொள்கைதான் முக்கியம் நன்றி மறந்தவர்கள் மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் மன்னிப்புக் கிடையாது!


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து கலைஞர் கொள்கை முழக்கம்!

சென்னை, மார்ச் 27- எனக்குக் கொள்கைதான் முக்கியம்; நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், அண்ணனாக இருந் தாலும், தம்பியாக இருந்தாலும் மன்னிப்பு கிடையாது என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

அவரது உரை வருமாறு:

தம்பி ராஜாவே கேட்டார், இதுவரையிலே என் மீது என்ன குற்றம் சுமத்தினீர்கள்? என்ன குற்றத்தை நிரூபித் தீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம் என்று. காங்கிரசார் திராவிட முன்னேற்றக் கழகத்தை பழி வாங்குகின்ற வகையிலேதான் நடந்து கொண்டார்களே அல்லாமல், யாரை பழிவாங்கலாம், யாரை பழிவாங்க லாம் என்றுதான் அலைந்தார்களே தவிர தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள என்ன தவறு செய்யலாம் என்று எண்ணினார்களே தவிர எங்களை யெல்லாம், நன்றி மறந்து, நன்றி என்றால் என்ன வென்றே தெரியாத ஒரு சூழ்நிலை யிலே வாழ்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பல நண்பர்கள்.

அதனால்தான் இன்றைக்கு தமிழகத்திலும் சரி, வேறு மாநிலத்திலேயும் சரி காங்கிரஸ் கட்சியினுடைய நிலைமை இந்த அளவிற்கு தாழ்ந்திருக்கிறது என்றால், காந்தியடிகள் தலைமையிலே இருந்த காங்கிரஸ் கட்சி, ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு தலைமையிலே இருந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு அதல பாதாளத்திலே விழுந்து கிடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? ஒரு மனிதனுக்கு அவன் நல்ல முறையிலே வாழ வேண்டு மேயானால் நன்றியுணர்வு இருக்க வேண்டும். அந்த நன்றி உணர்வு இல்லாமல் கடந்த காலத்திலே தங்களை கைதூக்கி விட்டவர்கள் யார் என்பதையெல்லாம் எண்ணி பார்க் காமல் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய தோழர்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்வீரர்களையும் அவர்கள் படுத்தியபாட்டிற்கு அனுபவிக்கிறார்கள். என்ன தான் அனுபவித்தாலும் அவர்களுக்கு ஒன்று சொல்லு வேன், இன்னமும் சொல்லுவேன், நம்பிக்கை யோடு சொல்லுவேன், இதே காங்கிரஸ் காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி நாங்கள் இந்த மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், நாங்கள் மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல் வார்களேயானால்; என்று முன் வருவார்களே யானால்; அவர்களுக்கு போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை ஆதரிக் கும். எதற்கு? ஆதரித்து ஓட்டு போட அல்ல. அவர்களுக்கு வந்த தீங்குகளை மாற்றி அமைக்க, அவர்களுக்கு வந்த தீமைகளை உடைத்து நொறுக்க, அவர்களை மன்னித்து, அவர்களை பொறுத்துக்கொண்டு இது வரையிலே அவர் கள் செய்த காரியங்களை யெல்லாம் எண்ணிப்பாராமல்; அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், நன்றி மறந்தவர்கள் என்று அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் யாராக இருந் தாலும் நன்றி மறந்தவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் மன்னிக்காது, அவர்களுடைய தவறுகளை மறவாது. என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கொள்கை தான் முக்கியம், குழந்தை குட்டிகள் அல்ல. வாழ்நாளில் எஞ்சிய காலம் முழுவதும்

தமிழ் மக்களுக்காக காரியமாற்றுவேன்!

தமிழ் ஓவியா said...

நான் அரசியலுக்கு வந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது எனக்கு வயது 90 என்றால், இன்னும் எத்தனை ஆண்டுக் காலம் வாழப் போகிறேன் என்று கவலை இல்லை. ஆனால் மிச்சம் இருக்கின்ற இந்த ஆண்டு களில் தமிழர்களுக்கு நான் என்ன செய்தேன், தமிழ் மக்களுக்கு நான் என்ன செய்தேன் என்பது தான் முக்கியம். அதைச் செய்து விட்டுத் தான் நான் கண் மூடுவேன். அதுவரையிலே காரியம் ஆற்றுவேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்கள் கட்டிக்காத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயமரியாதை தன்மை இவை களுக்காக வாழ்வேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, அத்தகைய பெரிய தலைவர்கள் வழி வந்த நான், அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றி உங்களு டைய அன்பைப் பெற்ற நான், மேலும் தொடர்ந்து வாழ நீங்கள் வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை யோடு, இந்த அரிய கூட்டத்தில், பெரிய கூட்டத்தில், அருமையான நிகழ்ச்சி யில் வேட்பாளர்களான தம்பிகள் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், இரா. கிரிராஜன் ஆகியோருக் கும், மற்ற தொகுதிகளில் ஜனநாயக முற்போக்குக் கூட் டணி வேட்பாளர் களுக்கும் உரிய சின்னங்களில் உங்களு டைய அன்பான வாக்குகளை வழங்கி அவர்களையெல் லாம் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, உங்களுடைய வாக்குத்தான் தமிழகத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்கக் கூடியது, காப்பாற்றக் கூடியது, திராவிடத்தை நல்ல முறையிலே திகழ வைக்கக் கூடியது என்பதை எடுத்துச் சொல்லி மறவாதீர் இந்தத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தை என்று எடுத்துக் கூறி, உதய சூரியன், உங்கள் சூரியன், உதயசூரியன் உங்கள் சின்னம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77654.html#ixzz2xDDZTcFd

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட உலக நாடுகளின் கவனம் - கடமை தேவை!


இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் (2008-2009) பற்றிய அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணைக்குட்படுத்தி, மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத் திடும், அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் இதுபற்றி ஒரு சர்வதேச (சுதந்திர) விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம்.

அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை என்ற போதிலும், அது நிறைவேற்றப்பட இந்திய அரசு தனது பங்களிப்பை உலகத் தமிழர்கள் பாராட்டும் அளவுக்குச் செய்யவேண்டியது அவசர அவசிய மாகும்! இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்பது தீர்மானத்தில் இடம்பெறுவதே நியாயமாகும்.

இலங்கை அரசு, எங்களை யார் - என்ன செய்துவிட முடியும்? என்று சவால் விடுகிறது; காரணம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற ஒரு குருட்டுத் தைரியம்தான் போலும்! இதை இந்திய அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.

உலக நாடுகளின் கவனம் - கடமை - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வது! இது தேவை - கட்டாயம் தேவைப்படுகிறதே!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை, 27.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77655.html#ixzz2xDDm5Ce2

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!


ஆள் தெரியாமல்...

திருநெல்வேலியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய முசுலிம் பிரமுகர் ஒரு வர் மோடி மீது தாக்குதல் தொடுத்த நிலை யில், எல்லோருக்கும் அதிர்ச்சி!

கலைவாணர் ஒரு திரைப்படத்தில் கூறியதுபோல, ஆள் தெரியாமல் கூப்பிட்டு வந்துவிட் டோமே என்று ஒருவர் முகத்தை இன் னொருவர் பார்த்துக் கொண்டனராம்.

முகத்தைக் கண்ணாடியில் பார்க்கக்கூடாதா?

ஊழல் பேர்வழிகளுக்குக் காங்கிரஸ், தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுத்துள் ளது; ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவானுக்கும், ரயில்வே ஊழலில் சிக்கிய பவன்குமார் பன்சாலுக்கும் காங்கிரஸ் வாய்ப்புக் கொடுத் துள்ளது என்று பி.ஜே.பி. யின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றம் சொல்லி இருக்கிறார்.

அது சரி, கருநாடகா வின் எடியூரப்பா வுக்கும், சுரங்க ஊழல் புகார் சிறீரா முலு வுக்கும் பி.ஜே.பி. டிக் கெட் கொடுத்துள் ளதே - அது எப்படியாம்? அம்மையார் தம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்!

ஆரம்பமாகிவிட்டது

காஞ்சிபுரத்தில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. நிற் கிறது - தே.மு.தி.க. தலைவர் காஞ்சிபுரத்துக்கு இன்று பிரச்சாரம் செய்வ தாகத் திட்டம். அதற்குள் காஞ்சிபுரம் பி.ஜே.பி.யினர் எங்கள் கட்சித் தலைமை யில் தானே கூட்டணி - எங்களிடம் அனு மதி பெற்றுதான் தொகுதிக்கு வரவேண் டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.

ஆரம்பமாகிவிட்டது, ஆரம்பத்தி லேயே கூட்டணி இடியாப்பச் சிக்கல்.

எலியும் - தவளையும் கூட்டுச் சேர்ந் தால் அப்படித்தான்!

காம்ரேடு கேட்கிறார்

மனித உரிமை மீறப் பட்ட விஷயத்தில் இலங் கைக்கும் - குஜராத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை மோடியோடு கைகோக்கும் வைகோ சொல்லவேண்டும்.

குஜராத்தில் அரசே திட்டமிட்டு கலவரத் தைத் தூண்டியது. கலவரத்தில் அப்பாவி கள் கொல்லப்பட்டனர். 32 அய்.ஏ.எஸ். அதி காரிகள் சிறையில் உள்ளனர்.

- இப்படிக்கு ஏ.சவுந்தரராசன், சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர்

காலை வாரும் பி.ஜே.பி.

பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலை வரும், சிவகங்கைத் தொகுதியில் அக் கட்சி வேட்பாளருமான எச்.ராஜா என்ப வர், மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

அந்தோ பரிதாபம்! பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்துள்ள மாநிலக் கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளுக்கு நமது அனுதாபங்கள்! தொடக்கத்திலேயே இப்படி காலை வார ஆரம்பித்துவிட்டனர் (சேம்சைடு கோல்) போகப்போக காலை வாரும் சர்க்கஸ் காட்சிகளை நாடு பார்க்கத் தானே போகிறது!

சட்டம் ஒழுங்கென்று ஒன்று இருக்கிறதா?

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் பட்டப்பக லில் வாலிபர் தமிழ்ச்செல்வன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது போலவே, சென்னை திரு.வி.க. நகரில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பவுன் நகைகளும் கொள்ளை அடிக் கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடக்கும் கொலை கொலைக்கா முந்திரிக்கா இது!

தேர்தல் நெருங்கினால் சாலை வசதிகள் குதிக்கும்

சென்னை செனாய் நகர்ப் பகுதியில் அவசர அவசரமாக சாலைகள் போடப்படு கின்றன.

சாலை போட்டு முடிந்த மறுநாளே அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க அந்தப் பகுதிக் குச் செல்கின்றனர்.

தேர்தல் வந்தால்தான் சாலை வசதி களா? தேர்தல் ஆணையத்தின் கண்கள் ஆளும் கட்சி என்றால் மூடிக் கொள்ளுமா?

பொதுமக்கள் கேட்கும் கேள்வி இது.

Read more: http://viduthalai.in/e-paper/77664.html#ixzz2xDDwa1qU

தமிழ் ஓவியா said...


பக்தி காட்டும் ஒழுக்கம்! திருப்பதி கோவிலில் உண்டியல் எண்ணும்போது நகை திருட்டு


நகரி, மார்ச்.27-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசூலாகும் உண்டியல் பணத்தை பறக்காமணி என்ற இடத்தில் தன்னார் வலர்கள் மற்றும் தேவஸ் தான ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களைப் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காணிக்கை எண்ணும் கண் காணிப்பு பணியை முடித் துக் கொண்டு சீனிவாசலு என்ற ஊழியர் வெளியே வந்தார்- அவரது ஆடை களைக் களைந்து சோதனை செய்தனர்.

அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சீனிவாசலுவை வாயை திறந்து காண்பிக் கும்படி கூறினர். அப்போது ஊழியர் சீனிவாசலுவின் 2 தாடைக்குள்ளும் இரண்டு தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந் தது.

அதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி சீனிவாசலுவிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் திருடி யதை ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த திருட்டை ஊழியர் சீனிவாசலு மட்டுமே செய் தாரா? அல்லது இந்த திருட் டில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்பது குறித்தும் எத்தனை காலமாக இந்த திருட்டு நடந்து வரு கிறது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/77660.html#ixzz2xDE6X1u3

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதா அம்மையார் குவித்த சொத்துக்களின் பட்டியல் இதோ! பெங்களூரு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் பவானிசிங் வெளியிட்டார் திமுக தலைவர் கலைஞர் எடுத்துக் காட்டினார்

சென்னை, மார்ச் 27- ஜெயலலிதா அம்மையார் குவித்த சொத்துகளின் பட்டியலை வெளியிட்டு கலைஞர் அவர்கள் நேற்று (26.3.2014) நடைபெற்ற சேப்பாக்கம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய செய்தி. சாதா ரணமானதல்ல. ஊரெல்லாம் போய் இந்த அம்மையார், என்னைப் போல உத்தமியே கிடையாது, நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவள் என்று மார் தட்டிக் கொள்கிறாரே, இந்த அம்மையாருக்கு ஒரு ரூபாய் சம்பளம் என்று ஏட்டிலே எழுதினாலும் கூட, அவர் குவித்து வைத்திருக்கும் செல்வம் எவ்வளவு? சொத்து எவ்வளவு? அந்தத் தொகையைக் கணக் கிட்டால், அந்தத் தொகை எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தால், ஏ, அப்பா! ஒரு முதலமைச்சருடைய சொத்தா இவ்வளவு என்று நினைக்கத் தோன்றும்.

உங்களுக்கு ஒரு புள்ளி விவரம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். நான் மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்று ஊரெல்லாம் சென்று புலம்பித் தீர்க்கிறாரே, பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த அம்மையார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் விவரம் என்ன? அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இந்த அம்மை யாருக்கு எதிராக வாதாட அரசினால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பவானி சிங்.

அவர் நீதிமன்றத்தாலேயே கண்டிக்கப்பட்டு, இதற்கு மேல் நீங்கள் தொடர்ந்து தவறு செய்தால் உங்களுக்கு அபராதம் விதிப்போம் என்று கூறி, 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மறுநாளும் அரசு வழக்கறிஞர் வாதாடா விட்டால், தனக்கு அன்றைக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற நிலைமையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் வழக்கு விசாரணையை நடத்தத் தொடங்கிய போது என்ன சொன்னார் தெரியுமா? உண்மைகளை யெல்லாம் போட்டு உடைத்தார்.

தமிழ் ஓவியா said...

ஆயிரம், இரண்டாயிரம், ஐந்தா யிரம், பத்தாயிரம் என்று நிலபுலங்களை, ஏக்கராக் களை, தோட்டம்துரவுகளை தவறான வழியில் சேர்த்துக் குவித்து வைத்திருக்கின்ற செயலுக்குப் பெயர்தான் சொத்துக் குவிப்பு. ஒரு ரூபாய் தான் ஊதியம் பெறுவதாகச் சொன்ன இந்த மகராசிக்கு எவ்வளவு சொத்து என்ற கணக்கை எல்லாம் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா தரப்பு சொத்து விவரங்களை பெங்களூரு நீதிமன்றத்திலே படித்துக் காட்டியிருக்கிறார்.

மக்கள் தந்த பதவியைப் பயன்படுத்தி, இத்தனை சொத்துக்களுக்கும் அதிபதியாகியுள்ள ஜெயலலிதா தான், ஏதோ புனிதவதி போலவும், ஒன்றுமில்லாத ஏழை போலவும், ஊழல் என்றால் என்னவென்று தெரியாத பச்சைக் குழந்தை போலவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது என்ன வேடம்? இது என்ன மாய் மாலம்? இது என்ன மோசடி?

ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைச் சேர்த்தவர் ஜெயலலிதா!

இந்தப் பட்டியலை பத்திரிகையாளர்கள் தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கி றேன். நம்மூர் பத்திரிகையாளர்கள் குறித்துக் கொள்ள மாட் டார்கள். அந்த அளவிற்கு பத்திரிகா தர்மம் தெரிந்தவர்கள்! இவைகள் எல்லாம் பத்திரி கைகளிலே வர வேண்டு மென்றால், முரசொலி, தினகரன், தமிழ் முரசு, விடுதலை போன்ற இந்த ஏடுகளில் தான் வெளிவரும். மற்ற ஏடுகளில் வராது.

பத்திரிகை நண்பர்கள் இந்தப் பட்டியலைக் காட் டச் சொல்லி புகைப்படும் எடுத்துக் கொள்கிறார்கள். (சிரிப்பு) ஆனால் நாளைக்குக் காலையில் ஒருசில பத்திரி கைகளைப் பிரித்துப் பார்த்தால், நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். யாரும் வெளியிட மாட் டார்கள். அவ்வளவு கண்டிப்பான உத்தரவு. அவ்வளவு மோசமான தண்டனை விதிப்பதற்கு ஒரு இலாக்காவே இன்றைக்கு தமிழ் நாட்டிலே, இந்த ஆட்சியிலே அமைக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் எந்த அளவிற்கு மறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு மறைத்து இவ்வளவு நிலங்கள், இவ் வளவு சொத்துக்கள் ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் சொத் துக்கள் வாங்கி குவித்த ஒரு அம்மையார் தமிழகத்தில் முதலமைச்ச ராக இருக்கிறார் என்றால் இதை நாளைக்கு வெளியிடு வதற்கு எந்தப் பத்திரிகையாவது, துணிச்சலோடு வெளியிடும் என்றால், நான் அந்த பத்திரிகைகாரர் களுக்கு என்னுடைய வணக்கத்தை (கைதட்டல்) முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியிடமாட்டார்கள்; ஏன் என்றால், அவர் களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. இதையெல்லாம் வெளியிட்டால், நாளைக்கு பத்திரிகையையே மூடி விடுவார்கள். நான் சொல்ல விரும்புகிறேன் தோழர்களே, திராவிட பெருங்குடி மக்களே, முற்றும் உணர்ந்த கற்றறிவாளர்களே, உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்;

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பத்திரிகைகள் எப்படி இருந்தன. எப்படி நடத்தப்பட்டன? இன்றைக்கு எந்த அளவிற்கு பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டிருக்கிறது என்பதை பத்திரிகை காரர்களே தெரிந்து கொண்டால் போதும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே எங்கே ஊழல் தென்பட்டாலும், எங்கே தவறுகள் தோன்றினாலும், அவற்றையெல்லாம் தவிர்க்கவும், அந்த ஊழல்களை கண்டிக்கவும், நான் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் சாதாரணமான வைகள் அல்ல.

ஆனால் இன்றைய தினம், எங்களைப் பற்றி சொன்னார் கள்! அருமைத் தம்பி ராஜா எத்தனையோ கோடி சொத்து சேர்த்துவிட்டார் என்று சைபர், சைபர், சைபர் என்று ஒரு ஐந்து ஆறு சைபர்களை போட்டு, இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என்று சொன்னார்கள்.

இப்போது பார்த்தால் ஒவ்வொரு சைபராக நழுவுகிறது, ஒவ்வொரு சைபராக மறைகிறது. கடைசியில் பார்த்தால் எந்தக் குற்றமும் ராஜா மீது இல்லை. யார் மீதும் இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு அவர்கள் தங்களுடைய வார்த்தைகளி லிருந்து பின்வாங்கி கொண்டிருக்கிறார்கள். எந்த இலாக்காவும் எதையும் கண்டுபிடித்ததாக சொல்ல முடியவில்லை என்று பேசினார் கலைஞர்.

Read more: http://viduthalai.in/page-8/77699.html#ixzz2xDJ0RuO1

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. தலைமையில் கூட்டணியும் - தினமணியும்!

21.3.2014 நாளிட்ட தினமணி ஏட்டில், மாற்று அல்ல, மாற்றமும்கூட! என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

1962 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்தல்வரை தமிழ்நாட்டில் தேர்தலில் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கவில்லை; இப்பொழுதுதான் தேசியக் கட்சி யான பி.ஜே.பி. தலைமையில் ஓர் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

தேசியக் கட்சி தமிழ்நாட்டில் தலைமை தாங்காததால் தான் காவிரி நீர், முல்லைப் பெரியாறு போன்ற பிரச் சினைகளில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாற்றையும் தினமணி வைத்துள்ளது.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்; தமிழ்நாட்டில் இப்பொழுதைய தேர்தலில் பி.ஜே.பி. என்ற தேசியக் கட்சி தலைமை தாங்குவதாக தினமணி கூறியிருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

ஒரு கட்சி தலைமை தாங்குகிறது என்றால், அந்தக் கட்சிதான் அதிகமான இடங்களில் போட்டிப் போடுவதாக இருக்கவேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? முதல் இடத்தில் தே.மு.தி.க. என்ற மாநிலக் கட்சிதான் இருக் கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தேசிய கட்சியான பி.ஜே.பி. என்ன பாடுபட்டது - மாநிலக் கட்சிகளின் தயவுக்காக எப்படியெல்லாம் ஊசி முனையில் தவம் இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை! இதனைத் தினமணி திரையிட்டு மறைக்கும் தந்திரத்தை ரசிக்க முடிகிறது.

தேசியக் கட்சி தலைமை தாங்கவில்லை என்று சொல் லுவதற்குமுன் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஏன் தலை யெடுக்கவில்லை என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டாமா?

தமிழ், தமிழன், தமிழ்நாட்டு உரிமை இவற்றில் பற்று வைப்பது - இவற்றுக்காகப் பாடுபடுவது - இந்தப் பிரச்சினைகளுக்குக் குந்தகம் ஏற்படும்பொழுது அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பது, போராடுவது - தேசியத்துக்கு விரோதமானது என்ற சிந்தனை இருக்குமட்டும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் மட்டுமல்ல - எந்தத் தேசியக் கட்சியும் கால் ஊன்ற முடியாது. காரணம், தமிழ் மண் தந்தை பெரி யார் அவர்களாலும், திராவிட இயக்கத்தாலும் மேலே கூறப் பட்டுள்ள உணர்வுகளால் செழுமைப்படுத்தப்பட்ட மண்!

இப்பொழுதுகூட பி.ஜே.பி. என்ற தேசிய கட்சி - தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும்கூட - இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும்.

ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ம.தி.மு.க. பொதுச்செய லாளர் ஒன்று கூறுகிறார் என்றால், மறுநாளே பி.ஜே.பி. சார்பில் உடனே மறுக்கப்படுகிறது - இந்த நிலையில் உள்ள வர்கள் எத்தனை நாள்களுக்கு கைகோத்து நிற்பார்கள்? தவளை - எலி கால்களைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்த கதைதானே!

காங்கிரசின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த தி.மு.க. ஏன் விலக நேரிட்டது? ஈழத் தமிழர்ப் பிரச்சி னையில் காங்கிரஸ் நடந்துகொள்ளும் எதிர்மறையான அணுகுமுறைதானே அதற்குக் காரணம்!

இன்னொன்றையும் இதில் கவனிக்கவேண்டிய ஒன்று; தேசியக் கட்சிகள் என்பவை மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் ஒரு அணுகுமுறை - வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் மாறுபட்ட அணுகுமுறை கொண் டவை என்பதைத் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது எந்த வகை நேர்மையைச் சார்ந்தது?

இந்தத் தன்மையில் உள்ள தேசியக் கட்சிகள் மாநிலத் தில் தலைமை தாங்கவேண்டும் என்று கூறுவது நல்லெண் ணத்தின் அடிப்படையில் இல்லை என்பது நிதர்சனமாகும்.

சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது என்பதுபோல தினமணி தலையங்கம் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைக் கூறுகிறது.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.

இப்படி ஒரு கூட்டணி அமைந்து, அது தொடர்ந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாத பி.ஜே.பி.,க்குப் பலன் கொடுக்கும் என்ற தந்திரத்தில் கூறப்பட்ட கருத்து இது.

பல நேரங்களில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்த தமிழ்நாட்டுக் கட்சிகள், அடுத்த கட்டத்தில் அதனால் பலன் இல்லை என்று கைவிடப்பட்டதுண்டு; அதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. போட்டி யிட்ட அத்தனை இடங்களிலும் கட்டிய பணத்தைக்கூட (டெபாசிட்) திரும்பப் பெறவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால், தினமணி எழுதிய தலையங்கத்தின் தந்திரமும், உள்நோக்கமும் என்ன என்பது எளிதில் விளங்கிவிடுமே!

Read more: http://viduthalai.in/page-2/77666.html#ixzz2xDJSKYZ9

தமிழ் ஓவியா said...


சொத்துக் குவிப்பு


ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் நிலங் களை வாங்கியுள்ளார்.

2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம், வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம்

7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77670.html#ixzz2xDJd8xEl

தமிழ் ஓவியா said...


நம் கடமை


நாளைய ஆட்சியாளர்களாக மாறத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறா கா(லி)விக் கும்பலின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்தாலே போதும். நாட்டை இவர்களிடம் ஒப்படைத்தால் என்ன நடக்குமென்று.

போன வாரத்தில் பீகாரில் சத்ருகன் சின்கா என்னும் இந்தித்திரைப்பட நடிகர் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற பொழுது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர்களை நையப்புடைத்து மிதிமிதியென்று மிதித்து எறிந்ததை பாஜக ஆதரவு செய்தித் தாள் கள் கூட மறைக்க முடியாமல் அந்தக் கொடுமையை நிழற்படமாக வெளியிட்டன.

இதே போல் வாரணாசியில் நரேந்திர மோ(ச)டியை எதிர்த்துபோட்டியிட முடிவு செய்து வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த கெஜ்ரிவால் அவர்களை இதே காவி ஆதரவுக்கூட்டம் அழுகிய முட்டைகளையும், கறுப்பு மய்யையும் வீசி தங்களது வழக்கமான இயல்பை வெளிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கை யில் ஈடுபடுபவர்கள், நம்முடைய கொள் கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் மதிக்க கற்றிருக்க வேண்டும்.

ஆனால் இவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்களே மசூதியை இடிப் பதற்கும் மதக்கலவரங்களை தூண்டி நடத் துவதற்கு காரணமானவர்களாக இருக்கும் பொழுது அவர்களை தலைவர்களாக ஏற்று பின்பற்றும் தொண்டர்கள் எப்படியிருப் பார்கள்?

காவி வேடதாரிகளின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்டத் தலைவர்கள் செய்தி ஊடகங் களின் விவாத அரங்குகளில் பங்கேற்கும் பொழுது மாற்றுக்கருத்து கொண்டவர்களை பேசவிடாமல் தாங்களே ஆக்கிரமித்து கொண்டு கத்துவதும் மற்றவர்கள் மதிக்கும் தலைவர்களை, சிந்தனையாளர்களைப் பற்றி தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தும் இவர்கள் ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாதவர்களோ என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

தங்களை எதிர்த்து யாரும், எதுவும் சொல்லக்கூடாது, செய்யக்கூடாது, அப்படிச் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் செய் வது கடைந்தெடுத்த பாசிசம் அல்லவா?

எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆட்சி அதிகாரத்தை இவர்களிடம் ஒப் படைத்தால் நாடு என்னென்ன அவலங் களைச் சந்திக்க நேரிடும் என்பதை வாக் காளர்கள் நன்கு உணர்ந்து தங்களின் தேர்தல் கடமையை ஆற்றிடவேண்டும். தங்களிடம் உள்ள வலிமையான வாக்குச் சீட்டை வீண் ஆடம்பரங்களுக்கும், விளம் பரங்களுக்கும், மெய்போல் தோன்றிடும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கும் மதவெறியைத் தூண்டும் வீண் உணர்ச்சி களுக்கும் மயங்கித் தவறாகப் பயன் படுத்தாமல், நாட்டின் நாளைய வளர்ச்சிக்கு உறுதுணையாக சமூகநீதியை, உண்மை யான மதச்சார்பின்மையை கட்டிக்காப் பாற்றும் அணிக்கு ஆதரவாக தவறாது பயன்படுத்துங்கள்.

- இசையின்பன்,
சென்னை

Read more: http://viduthalai.in/page-2/77669.html#ixzz2xDJwMGLI

தமிழ் ஓவியா said...

மதவெறி கூடாது - சமத்துவத்தை எடுத்துக் கூறுவோர் நாங்கள் சிந்தாதிரிப் பேட்டையில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி கலைஞர் கருத்துரை

சென்னை, மார்ச் 27- மதவெறி கூடாது, சகோதரத்துவ சமத்துவம் எங்கள் கொள்கை என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தின் தலைவர் தென் சென்னை மாவட்டக் கழகத்தின் செயலாளர் அருமைத் தம்பி ஜெ.அன்பழகன் அவர்களே, வேட்பாளர் பெருமக்களான தயாநிதி மாறன் அவர்களே, கிரிராஜன் அவர்களே, டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே (கைதட்டல்) நான் யாருடைய பெயரை உச்சரிக்கப்போகிறேன் என்பதைத் தெரிந்து கையொலி செய்கிறீர்கள் என்றால் - என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே - இது இன்று நேற்றல்ல; உங்களுக்கும் எனக்கும் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள தொடர்பு, உறவு உரிமைக் குரல். (கைதட்டல்)

இந்த சிந்தாதிரிப்பேட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களும், அவருடைய தம்பிமார்களாகிய நாங்களும், ஒன்றல்ல இரண்டல்ல, பல நேரங்களில் பல கூட்டங் களிலே கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்தித் திருக்கின்றோம். சென்னையில் திராவிட இயக்கத்தினு டைய கூட்டம்; அது தந்தை பெரியாருடைய கூட்டமாக இருந்தாலும், அவரால் உருவாக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கூட்ட மாக இருந்தாலும், அந்த அண்ணாவினால் உருவாக்கப்பட்ட நாங்கள் கலந்து கொள்கின்ற கூட்டங்களாக இருந்தா லும் எங்கே அந்தக் கூட்டத்தை நடத்தலாம் என்று மாவட்டக் கழகத்தின் செயல்வீரர்களிடம் கலந்து ஆலோசிக்கும் போது, எங்களுக்கு முதலிலே நினைவுக்கு வருகின்ற இடம் இந்த சிந்தாதிரிப் பேட்டை தான். (பலத்த கைதட்டல்)
கழகத்தின் சீரிய கருத்துக்களைச் சிதறாமல்

எடுத்துச் சொல்லக்கூடிய சிந்தாதிரிப்பேட்டை!

சிந்தாதிரிப்பேட்டையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் நடைபெறுகின்றது என்றால், தமிழ் மக்கள் இங்கே சிந்தாமல் சிதறாமல் சீரிய கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடிய தமிழறிஞர்கள், தமிழ்ச்சான் றோர், தமிழ்விரும்பிகள், நம்மையெல்லாம் பார்த்துக் களித்து, நம்முடைய முன்னேற்றத்திற்கான வழிவகை களை, நம்முடைய மொழியின் வளர்ச்சிக் கான வழிகளை எடுத்துக் கூறுவார்கள் என்ற நிறைந்த நம்பிக்கையோடு, இந்த இடத்திலே வரும் கூட்டங்களுக்கு பெருவாரியாக கூடியது உண்டு. அதுதான் இன்றைக்கும் இங்கே நடை பெற்றுக் கொண்டிருக் கின்றது.
சிந்தாதிரிப்பேட்டையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டம் என்றால் இந்த உணர்வு இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக நம்முடைய உள்ளத் திலே பதிந்த ஒன்றாகும். இங்கே தான் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக, எழுச்சிக்காக நம்மையெல்லாம் அவரு டைய அழகு தமிழின் மூலமாக தயார் படுத்தினார். அவர் வழி நின்று, இன்றைக்கு ஒரு மதச்சார்பற்ற ஒரு அரசு, மதவெறியில்லாத ஒரு இயக்கம் காண வேண்டும் என்ற துடிப்போடு நாங்கள் அவர் வழி நின்று நடத்தி வருகின்ற இந்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்.

தமிழ் ஓவியா said...


திராவிட முன்னேற்றக் கழகம் - தி.மு.க. என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்டது என்றாலும், இந்த தி.மு.க., திராவிடர்களை ஒன்றுபடுத்தி அவர்களுடைய முன் னேற்றத்திற்காக உழைத்து கண்ணியத்தோடு நடை பெறுகின்ற ஒரு இயக்கம் என்பதை தி. மு. க. என்ற இந்த மூன்று எழுத்துக்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. (பலத்த கைதட் டல்) அப்படிப்பட்ட பெருமைக்குரிய, பெயரைக் கொண்ட, இந்த இயக்கத்தின் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையிலே கூட்டம் நடைபெறுகின்றது என்றால் சென்னையைத் தெரிந்து கொண்டவர்களுக்கு, அரசியலில் அரிச்சுவடி படித்தவர்களுக்குக் கூட அது ஒரு அவசியக் கூட்ட மாகத்தான் இருக்கும். அங்கே பேசப்படுகின்ற அரசியல் தமிழ் நாட்டின் மேன்மைக்கு பயன்படுகின்ற அரசியலாக அமையும். தமிழ் நாட்டில் இருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துகின்ற, சாதி பேதமற்ற, மதபேத மற்ற, மதவெறி அல்லாத ஒரு அமைதியை விரும்புகின்ற இயக்கத்தின் கூட்டமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் நீண்ட நெடுங்காலமாக உண்டு. ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன், இந்த சிந்தாதிரிப்பேட்டை யிலே தான் இந்தியாவில் ஒரு பெரிய புரட்சியை இஸ் லாமிய மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு ஒரு தொல் லையைத் தந்து, பாபர் மசூதியை இடித்து நொறுக்கி அந்த சம்பவத்தை திருவிழாவாகக் கொண்டாடிய மதவெறியர் களுக்கு கண்டனம் தெரிவிக்கின்ற கூட்டம் நடைபெற்ற இடம், தமிழகத்திலே இந்த சிந்தாதிரிப்பேட்டைதான். அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டவன் அடியேன் தான். அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு நான் விடுத்த அறைகூவல், என் சார்பில் விடுக்கப்பட்ட அறைகூவல், இவற்றையெல்லாம் இந்த வட்டாரத்திலே வாழ்கின்ற மக்களாகிய நீங்கள் மறந்திருக்க முடியாது. மதவெறி கூடாது என்கிற
சமத்துவத்தை எடுத்துக் கூறும் கூட்டம்!

அப்படிப்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், திராவிட இயக்கத்தினுடைய அரும் பெரும் கொள்கைகளில் ஒன் றான சமத்துவத்தை மதவெறி கூடாது என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்கின்ற ஒரு கூட்டமாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முக்கியமான நோக்கம் அண்மையிலே நாமெல்லாம் சந்திக்க இருக் கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினு டைய அங்கமாக விளங்குகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர்கள் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், இரா. கிரிராஜன் ஆகிய நம்முடைய தம்பிமார்களை எல்லாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது தான் நம்முடைய குறிக் கோளாகும்.
ஏதோ மூன்று பேர், நான்கு பேர் வெற்றி பெற்று விட்டால் அது தான் தி.மு. கழகத்தின் இறுதி இலட் சியம் என்று யாரும் கருத வேண்டாம். நாம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று, நாம் கடந்து செல்ல வேண்டிய படிக்கட்டுகளில் ஒன்று, காட்டாறுகளில் ஒன்று, இன்றைக்கு தமிழகத்தைச் சுற்றி நம்மையெல்லாம் சோதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலே இருப்பதை அனைவரும் அறிவீர்கள். இந்தச் சோதனை களைக் கடந்து வேதனைகளைக் கடந்து சாதனை புரிபவர் களாக நாம் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு. கழகத்தின் சார்பில் அதன் தலைவராகிய நான் உங்களை எல்லாம் சந்திக்கின்றேன்.

ஏதோ இறுமாப்போடு சொல்லவில்லை, நான் தி.மு. கழகத்தின் தலைவன், உங்களைச் சந்திக்க வந்திருக் கின்றேன், தொண்டர்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன் என்ற இறுமாப்போடு பேச நான் ஒன்றும், தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அல்ல;

தமிழ் ஓவியா said...

இறுமாப்பு பேசு வதையோ, அல்லது யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்ற அந்தக் குரலையோ நீங்கள் என்னி டத்திலே என்றைக்கும் காண முடியாது. பணிவோடு, கனிவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நான் - தமிழ் மக்களுடைய இதயத்தை புரிந்து கொண்டிருக்கின்ற நான் அவர்களுக்கு இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். அவர்கள் யாராக இருந் தாலும், இந்து முஸ்லீம் சீக்கி சாகி என்று சொல்லப் படுகின்ற இந்த வர்க்கத்தில் இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், சீக்கியர்களாக இருந்தாலும், கிறித்துவர்களாக இருந்தாலும் என்லோரும் நம்முடைய தோழர்கள் தான். இதைத்தான் அன்றைக்கே ஒரு பாடலிலே மெய்ப்படுத்திருக்கிறார்கள்.

இந்து முஸ்லிம் சீக்கி சாகி ஆபஷ் பேகே பாயி பாயி பாயி கோ கா பாயி பேரா ஐ சா கை சா கலங்க மாறா

தமிழ் ஓவியா said...

(பலத்த கைத்தட்டல்) என்று அன்றைக்கே பழம் பெரும் பாடல் - காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர் களால், கவிஞர்களால் எடுத்து உரைக்கப்பட்ட பாடல்; அது நமது சகோதரத்துவத்தை தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்; நாம் சகோதர்களாக வாழ வேண்டும்; நாம் உடன் பிறப்புக்களாக ஒளிவிட வேண் டும் என்ற அந்தக் கருத்தை எதிரொலிக்கின்ற அந்தப் பாடலைத்தான் நான் இப்போது உங்களுக்கு நினைவு படுத்திய பாடல் ஆகும். இந்தியாவிலே திராவிடம்; திராவிடத்திலே தமிழகம்!

ஆகவே நாங்கள் தமிழ் நாட்டு மக்கள் என்று கூறுகின்ற காரணத்தால் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று கூறிக் கொள்ள விரும்புபவர்கள் அல்ல! இந்தியாவிலே திராவிடம், திராவிடத்திலே தமிழகம். அந்தத் தமிழகத் தினுடைய மக்களிடத்திலே தமிழ் உணர்வு. அந்த உணர்வு இருக்கின்ற காரணத்தினால் தான், ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே என்று பாடி, கட்டாய இந்தியை அன்றைக்கு விரட்டினோம். என்னைப் பொறுத்த வரையில் 1938 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றாத அந்தக் காலத்தில் நான் பெரியார் தலைமையில், அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் இந்தி எதிர்ப்புத் தொண்ட னாக வாழ்ந்தவன். இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமியர்க ளுடைய மாநாடு, கான்பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்கள் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற போது அந்த மாநாட்டின் தொண்டர் படைத் தலை வனாக இருந்தவன் தான் உங்கள் முன்னால் அமர்ந் திருக்கின்ற இந்தக் கருணாநிதி என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்பு கிறேன். அப்படி எல்லா மதங்களையும் எந்தவிதமான வித்தியாசமும், வேறுபாடும் இல்லாமல் நட்புறவோடு அணுகி அவர்களோடு இந்தியாவின் நன்மைக்காக, தமிழகத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பாடுபட்டு வருகிற, அதற்காக தியாகங்களைப் புரிந்து வருகின்ற ஒரு இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் தான் நான் இன்றைக்கு உங்களை இந்த இடத்தில் சந்திக் கிறேன். இன்று நடைபெறுகின்ற இந்தக் கூட்டம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழக வேட்பாளர்களை, தயாநிதி மாறனையும், டி.கே.எஸ். இளங்கோவனையும், கிரி ராஜனையும் அறிமுகப் படுத்துகின்ற கூட்டம். மூன்று பேரை மட்டும் இந்த இடத்திலே சொல்கின்ற காரணத்தால் மற்றவர்களை யெல்லாம் விட்டு விட்டேன் என்று பொருள் அல்ல. இந்தத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு அணியின் சார்பில் போட்டியிடுகின்ற நாற்பது பேரையும் அறிமுகப்படுத்துகின்ற கூட்டம் இது. இவர்களை தமிழ் நாட்டு மக்கள் முன்னால் அறிமுகப்படுத்துகின்ற கூட்டம்.

இழிவுபடுத்தப்பட்டு, எங்கோ ஒரு மூலையில் நிறுத்தப் பட்டிருக்கின்ற இந்தச் சமுதாயத்தின் இழிவு களைத் துடைத்து, இந்தச் சமுதாயத்தின் மேன் மைகள் உலகம் புகழ, பாராட்டப்படுகின்ற அளவிற்கு, உயர்த்தி வைக்கின்ற ஒரு ஆர்வத்தோடுதான் இன்றைக்கு இந்தக் கூட்டத்தை நாம் இந்த இடத்திலே ஏற்பாடு செய்து உங்களையெல் லாம் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். நான் உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற் றிருக்கிறேன். நீங்கள் என்னைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக் கிறீர்கள். (கைதட்டல்) இந்தச் சந்திப்புக்கு இடையே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை மறந்து விடக் கூடாது.

அரசியலில் நான் ஈடுபட்டு 75 ஆண்டுக் காலம் உருண்டோடிவிட்டது!

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் 1938ஆம் ஆண்டு நான் அரசியலிலே ஈடுபட்டேன். ஏறத்தாழ 75 ஆண்டுக் காலம்என்னுடைய பொது வாழ்க்கையிலே உருண்டோடி விட்டது. எனக்கு வயது 90 என்று இங்கே குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார் அவர்கள் 100 ஆண்டைத் தொடுகின்ற அளவுக்கு வாழ்ந் தார்கள். கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் முதிர்ந்த வயதிலும் வாழ்ந்து, சிறுபான்மை சமுதாயத் திற்காக, இஸ்லாமிய சமுதாயத்திற்காகப் பாடுபட்டார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களை அவருடைய அறுபதாம் ஆண்டு நிறைவடைவதற்குள்ளாகவே நாம் இழந்து விட்டோம். அண்ணா அவர்களை இழந்தாலும், அண்ணா நமக்குப் போதித்த கருத்துகளை, எடுத்துச் சொன்ன கொள்கைகளை, இலட்சியங்களை எல்லாம் விட்டு விடவில்லை. சில பேர் அண்ணா என்ற பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டார்கள். என்ன வித்தியாசம் என்றால், நாம் அண்ணாவின் பெயரையும் வைத்துக் கொண்டோம், பெயரையும் நினைத்துக் கொண்டோம், அண்ணாவின் கொள்கைகளையும் மறவாமல் இருக்கி றோம். ஆனால் அண்ணா பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு, இன்றைக்கு தமிழ்நாட்டில் கட்சி நடத்து பவர்கள், ஏதோ ஒரு ஒப்புக்காக அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அல்லாமல், அவர் களுக்கும், அண்ணாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அண்ணாவை அவர்கள் என்னைப் போல இளம் பிராயத் திலே அறிந்தவர்கள் அல்ல; என்னைப் போல அண்ணா வின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் அல்ல ; அண் ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று நான் நடத்திய ஆட்சியிலே நடந்ததைப் போல, அவர்கள் நடந்து கொண்டதும் இல்லை, இனியும் அவர்கள் நடந்து கொள்ளப் போவதும் இல்லை.

உள்ளபடியே அண்ணா பெயரில் அவர்களுக்கு விசுவாசம் இருந்தால், அண்ணா மீது அவர்களுக்கு பற்று, பாசம் இருந்தால் அண்ணா பெயரால், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்று இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு அரிய கருவூலமாக அந்த நூலகத்தை, இந்தியாவில் மும்பை யிலோ அல்லது சிங்கப்பூரிலோ இல்லாத அளவுக்கு ஈடு இணையற்ற ஒரு நூலகத்தை தி.மு. கழக ஆட்சியிலே அமைத்தோம். அந்த நூலகத்தை இன்றைய முதலமைச்சர், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக இடித்துத் தூளாக்கினார். இது அண்ணா பெயரில் உள்ள பற்று, பாசம் என்று யாராவது சொன்னால், சொல்பவர் களுக்கு புத்தி எங்கே போயிற்று என்று நாம் கேட்பதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...

அண்ணா பெயரில் கட்சி - ஆனால் அவரது கொள்கைகளை அழித்திடும் அ.தி.மு.க.!

அண்ணா பெயரால் அவருடைய கொள்கைகளை, அவருடைய கருத்துகளை, அவருடைய எண்ணங்களைப் பரப்புகின்ற வகையில் செய்யப்படுகின்ற எந்த ஒன்றும் இந்த ஆட்சியிலே இன்றைக்கு இல்லை. அவைகள் எல்லாம் சுக்கு நூறாக ஆக்கப்பட்டு விட்டன. கேட்டால் இது கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது என்கிறார்கள். ஏன் ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செயலகத்தைப் பூட்டினீர்கள் என்று கேட்டால், அது கருணாநிதி கட்டியது, ஆகவே பூட்டி விட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஞாபகத்திலே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமை மாநில முதல் அமைச்சர்களுக்கு இல்லாமல் ஒரு காலம் இருந்தது. நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரிடத்திலே வாதாடி, போராடி - ஒரு மாவட்டக் கலெக்டர் கூட சுதந்திர நாளன்று இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுகிறார், ஆனால் ஒரு முதல் அமைச்சருக்கு அந்த உரிமை கிடையாதா என்று கேட்ட போது - நீங்கள் கேட்ட கேள்வி பொருத்தமான கேள்விதான், சரியான கேள்வி தான், ஏற்கத் தக்க கேள்வி தான் என்று அம்மையார் இந்திரா காந்தி அதை ஒத்துக் கொண்டு, உடனடியாக உத்தரவிட்டார்கள். இனிமேல் அடுத்த ஆண்டு முதல், 1974ஆம் ஆண்டு முதல், தேசிய கொடியை சுதந்திர நாளன்று ஏற்றுகின்ற உரிமை, தமிழ்நாட்டின் முதல மைச்சர் கருணாநிதிக்கு மாத்திரமல்ல, அவருடைய வேண்டு கோளின்படி, இந்தியாவில் உள்ள எல்லா முதலமைச்சர் களுக்கும் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைத் தருகிறேன் என்று அறிவித்தார்கள். இன்றைக்கு ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்று கிறார்கள் என்றால், அது இந்தக் கருணாநிதியால் ஏற்பட்ட விளைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இது கருணாநிதி கட்டிய மருத்துவமனை, கருணாநிதி கட்டிய அலுவலகம், கருணாநிதி கட்டிய பாலம் என்பதற்காக அவைகளையெல்லாம் பயன்படுத்த மாட் டோம் என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாவுக்கு நான் இதைத்தான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இது கருணாநிதி உரிமை வாங்கிக் கொடுத்த கொடி ஆயிற்றே, அடுத்த ஆண்டு சுதந்திர நாளன்று நான் அதை ஏற்ற மாட்டேன் என்று ஜெயலலிதா சொல்வாரா? ஒருவேளை அந்தச் சுதந்திரக் கொடியை ஏற்றுகின்ற அளவுக்கு, அதுவரையில் ஆட்சி இருக்குமோ என்னமோ என்று உங்களில் யாராவது பதில் சொல்லக் கூடும்.
கழக ஆட்சியில் கட்டிய பாலத்தில்
செல்லாமல் இருப்பாரா ஜெயலலிதா?

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், ஒரு ஆட்சி செய்த காரியங்களை அடுத்து வருகின்ற ஆட்சி தொடர வேண்டும். அப்படிப்பட்ட தொடர்ச்சி இருந் தால் தான் மக்கள் சுகமாக, நிம்மதியாக, நலமாக வாழ முடியும். அந்த ஆட்சி செய்ததை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றால் என்ன தவறு கண்டாய்? எதற்காக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாய்? அதையாவது சொல்ல வேண்டும். திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியிலே ஆறுகளுக்கு பாலம் கட்டப்பட்டது என்றால், அந்தப் பாலங்களிலே பயணம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது என்றால், இது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே கட்டப்பட்ட பாலம், இந்தப் பாலத்திலே என்னுடைய கார் போகாது என்று இந்த அம்மையார் கூற முடியுமா? ஒவ்வொரு நாளும் அவருக்கு தமிழகத்திலே, சென்னையிலே அவர்கள் பயணம் செய்கின்ற கார், கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்றால், அவருடைய கார் எந்த வழியாகச் செல்லுகிறது? கருணாநிதி அமைத்த ராதாகிருஷ்ணன் சாலையிலே மேம்பாலத்தின் வழியாகத் தான் செல்ல வேண்டும். நான் இந்தப் பாலத்திலே போக மாட்டேன் என்று அம்மையார் கூறுவாரா? அது என்ன அவ்வளவு பாவம்? ஒரு ஆட்சி செய்கின்ற நல்ல காரியத்தை அடுத்து வருகின்ற இன்னொரு ஆட்சி, தொடரக் கூடாதா என்ன?

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரு டைய ஆட்சி முடிந்த பிறகு, நான் ஆட்சிக்கு வந்தேன். அப்போது நான், அதே சத்துணவுத் திட்டத்தை நீடித்து, எவ்வளவு பிள்ளைகள் அதற்கு முன்பு சத்துணவு சாப்பிட் டார்களோ, அவ்வளவு குழந்தைகளுக்கும் சத்துணவு அளிக் கின்ற திட்டத்தை நான் தொடர்ந்தேன். இது எம்.ஜி.ஆர். கொண்டு வந்தது, நான் அடுத்த முதலமைச்சர், அதைப் பின் பற்ற மாட்டேன் என்று முட்டாள்தனமாக நான் சொல்ல வில்லை. அதைப் போலவே எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டம், அதற்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் அறிமுகப் படுத்திய மதிய உணவுத் திட்டத்தின் தொடர்ச்சி தான் என்று தான் அவரும் ஏற்றுக் கொண்டார்.

அதற்குப் பிறகு, அந்தச் சத்துணவுத் திட்டத்தில், மேலும் சத்துள்ள உணவாக அது அமைய வேண்டுமென்பதற்காக, ஒவ்வொரு மாணவ னுக்கும் கழக ஆட்சியிலே முட்டை வழங்கினோம். அது எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், ஆகவே முட்டை கிடையாது என்றோ, அல்லது சத்துணவு திட்டமே கிடையாது என்றோ நாங்கள் சொல்ல வும் இல்லை, மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளவும் இல்லை. நல்ல காரியங்களை ஒரு ஆட்சி செய்தால், அது மக்களுக்காகச் செய்யப்பட்டால், அடுத்து வருகின்ற ஆட்சி அந்தக் காரியங்களைத் தொடர வேண்டுமே அல்லாமல், அது முந்தைய ஆட்சி கொண்டு வந்தது, இந்த ஆட்சியில் அதைத் தொடர மாட்டோம் என்று சொன்னால், அது ஜனநாயகம் ஆகாது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட் டார்கள். இன்றைக்கு என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஒன்றை மாத்திரம் இந்தக் கூட்டத்தில் சொல்ல விரும்பு கிறேன். எந்தக் காரியமானாலும், அவை களை வெளியிடு வதற்கான பத்திரிகைகள் மிக மிகக் குறைவு. ஒரு முரசொலி, ஒரு விடுதலை, ஒரு தினகரன் என்ற இந்த ஏடுகளைத் தவிர, நாளேடுகள் எதுவும் கிடையாது. இருக்கின்ற ஏடுகள் எல்லாம், எங்கள் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்ற ஏடுகளாகத்தான் இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது என்றார் கலைஞர்.

Read more: http://viduthalai.in/page-3/77678.html#ixzz2xDKCcp5G

தமிழ் ஓவியா said...


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஒருநாள்


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை பட்டியல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், அய்ந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால், பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

* காலை 6 மணி: நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். (அதாவது அய்.எஸ்.எஸ் ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும்.

* காலை 7 மணி: உடல் நலம் பேணல், காலை உணவு, பல் துலக்குதல். பற்பசையால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

* காலை 7.30 மணி: கான்பெரன்ஸ் அய்.எஸ்.எஸ் இல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக் கான கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்சி னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர் களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப் படுகின்றன.

* காலை 8 மணி: பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்சினைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள்.

இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள். இப்படி தினமும் இரவு 10 மணி வரையில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/77686.html#ixzz2xDL7az79

தமிழ் ஓவியா said...


அவசியம்

மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/77716.html#ixzz2xIzcNjzj

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துளிகள்!

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.

- தந்தை பெரியார்

கருத்து வேற்றுமை என்றால் பகைமை என்று அர்த்தமல்ல. அது பகைமை என்றால் நானும் என் மனைவியும் பெரும் பகைவர்களாகி விடுவோம். உலகத்தில் அபிப்பிராய பேதமில்லாத இரண்டு மனிதர் களைப் பார்த்ததில்லை. என்னோடு கருத்து வேற்றுமை கொண்டவர்களை என் நெருங்கிய நண்பர்களைப் போல் பாவிக்கின்றேன்; இனியும் அப்படியே செய்ய முயற்சிக் கிறேன். ஏன், அதுதானே நியாயம்!

தமிழ்நாட்டின் உண்மையான நலனைப் பாதுகாக்க நான் முயற்சிப்பேன். வடக்கத்தியவர்களை விட தென் நாட்டினர் ஒழுக்கமாகவும், அமைதியாகவும் நடந்து கொள்ளும் பண்பாடு உடையவர்கள்.

- காமராஜ் (28.8.1954இல் பொதுக் கூட்டத்தில்(மதுரை) புரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் அக்கறை இல்லை; அவர்கள் பிதற்றட்டும். ஜாதி என்பது சமூக ஏற்பாடு என்பதில் சந்தேகமே இல்லை. அந்த ஸ்தாபனம் தன்னுடைய வேலையைச் செய்த பின்னர் இப்போது அழுகி நாறுகிறது. இந்தியாவின் ஆகாய ஒளியால் அந்த நாற்றம் நாறிக்கொண்டே இருக்கிறது.

- விவேகானந்தர்

ஆலயத் திருடர்கள்!

நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

- மார்ட்டின் லூதர்

வாழ்நாள் துன்பம்

விழித்தவனுக்கு இரவு நீடித்திருக்கும்; அயர்ந்த வனுக்குப் பிரயாணம் சலிப்பாக இருக்கும். அதுபோல உண்மை உணர்ச்சி இல்லாத அறிவீனனுக்கு வாழ்நாள் துன்பமாக இருக்கும்.

- புத்தர்

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1EmYpr

தமிழ் ஓவியா said...

காண்டேகர் பேசுகிறார்!

உலகம் வெள்ளத்தோடு கூடவே ஓடிக்கொண்டு போக வேண்டியதுதான். அந்த வெள்ளம் அதை எங்கோ கொண்டு போய் விட்டாலும் சரியே. உடை, கல்வி, விவாகம், உணவு எந்த விஷயத்திலும் பார்த்தாலும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள். வெள்ளத்துக்கு எதிர் திசையில் நீந்துவதுதான் வாழ்க்கை என்ற கற்பனை அவர்களுக்குப் புரிவது கூட இல்லை.

மனிதர்கள் கிழவர்கள் ஆகி விட்டால் வேதாந்தத்தை விரும்புகிறார்கள். வேசியும், கிழவி ஆகிவிட்டால் வேதாந்தத்தைப் பற்றி பேச ஆவல் வருகிறது.

நாணயம், ஒழுக்கம், அன்பு, பக்தி, மனுஷத்தனம் இவை யாவும் புத்தகத்திலுள்ள சொற்கள். வாழ்க்கையில் இவை யாருடைய அநுபவத்திற்கும் வருவதில்லை.

Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1UMnoa

தமிழ் ஓவியா said...

கேரளாவில் ஒரு ஆணை

கேரளாவில் அச்சுத மேனன் முதல்வராக இருந்த பொழுது (அக்டோபர் 74) கீழ்க்காணும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதினால் வகுப்பு கலவரங்களுக்கு வித்திடக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.



எனவே, இந்த மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த உத்திரவு அரசாங்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும்

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1nMBZ3

தமிழ் ஓவியா said...

பூனைச் சகுனம்!

மூடநம்பிக்கைகளில் குரங்குப் பிடியாக இருப்பவர் சாம்பசிவம் அவர் வீட்டை விட்டு எங்கேனும் வெளியே புறப்பட்டு விட்டாரென்றால், பூனைச் சகுனம் பார்த்துக் கொண்டுதான் போவார்.



வீட்டு வாசலை விட்டு இறங்கும்போதோ, தெருவில் நடந்து செல்லும் போதோ பூனை குறுக்கே போய்விட்டால் போதும் - அடுத்த அடி வைக்காமல் - போகவேண்டிய காரியத்துக்குப் போகாமல் அப்படியே வீடு திரும்பி விடுவார். மறுநாள்தான் குறிப்பிட்ட காரியத்திற்குப் போவார்.

அடுத்த வாரம் தீபாவளி, நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள் ளைகளுக்கும், மகளுக்கும் புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும். சாம்பசிவத்தின் கையில் சல்லிக் காசுக் கூட இல்லை. தமது நண்பரின் ஜவுளிக்கடையில் கடன் சொல்லி, துணிமணிகள் எடுத்து வரலாமென்று கடையை நோக்கிச் செல்கிறார் சாம்பசிவம்.

கடனுக்கு ஜவுளி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதை பதைப்பு அவர் மனத்தில். இந்த லட்சணத்தில் பூனை வேறு வந்து குறுக்கே பாய்ந்து விடுகிறதோ என்ற பயமும் சேர்ந்து விட, துவண்ட நடையுடன் சென்று கொண்டி ருக்கிறார்.

சீ! சனியன்! பயந்தபடியே நடந்து விட்டது - கறுத்த பூனை - பாவம்! சாம்பசிவத்தின் காலுக்கு முன்னால் எவ்வளவு இளக்காரமாக குறுக்கே பாய்ந்து செல்கிறது.... சாம்பசிவத்துக்கு மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது!

சிலையாக நின்றவரின் கண்ணுக்கு முன்னால் - பத்தடி தூரத்தில் தெருவுக்கு நடுவே பளிச்சிட்டுத் தெரிகிறதே - அது என்ன? நூறு ரூபாய் முழுநோட்டு! யாரோ ஒரு துரதிருஷ்டக்காரன் போட்டுவிட்டுப் போனது போலிருக்கு! அவர் மனதில் ராக்கெட் வேகத்தில் ஒரு போராட்டம் ஒரு வாரத்தில் தீபாவளிப் பண்டிகை... துணிமணிப் பிரச்சினை...

அடுத்து மின்னல் போன்று மனதில் ஒரு உந்துதல் பூனை குறுக்கிட்டால் ஒரு அடிகூட எடுத்து வைக்காத சாம்பசிவம், இப்போது பல அடிகள் எடுத்து வைத்துவிட்டார் - அந்த நூறு ரூபாய் நோட்டை நோக்கி!

- எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத் - 5

Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1xnVZv

தமிழ் ஓவியா said...


எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் பொதுவுடைமை சிந்தனையாளர் தி.க.சி மறைவு


தமிழ்கூறும் நல் லுகத்தில் எழுத் தாளர் தி.க.சி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தி.க.சிவசங்கரன். தி.க.சி என இலக் கிய வட்டாரங் களில் அறியப் பட்ட இலக்கிய விமர்சகரான தி.க. சிவ சங்கரன் 25ஆம் தேதி இரவு திருநெல் வேலியில் மறைந்தார்.

அவருக்கு வயது 89. கடந்த மாத இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட் களுக்கு முன்பு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உடல்நிலை மோச மடைந்ததையடுத்து திருநெல்வேலியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் மறைந்தார்.

1945லிருந்து 64ஆம் ஆண்டுவரை வங்கி ஊழியராகப் பணியாற்றிய அவர், பிறகு சோவியத் கலாச்சார மய்யத்தில் பணியாற்றியபின்னர் ஓய்வுபெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக் கிய இதழான தாமரையின் ஆசிரியராக பணியாற்றியவர். இலக்கியச் செயல் பாடுகளில் பொதுவுடைமை, முற் போக்குக் கொள் கைகளை வெளிப்படுத்தி வந்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்புகளைப்பற்றி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்குவித்து வந்தவர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் குறித்த விமர்சனங்களையும், கருத்து களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளவர். கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு எனப் பல தளங்களில் செயல்பட்டுவந்தவர். தி.க.சியின் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் கொண்டு இவரது நூலுக்கு 2000-ஆம்ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்த திகசிக்கு கணபதி, வண்ணதாசன் என்கிற கல்யாண சுந்தரம், சேது, ஜெயலட்சுமி, பர்வத குமாரி, கவுரி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/77757.html#ixzz2xP25oTPj

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவைக் கண் திறக்க வைத்த எட்வர்ட் சுனோடன்

அமெரிக்க உளவுத்துறையில் பணி யாற்றி ரகசியத் தகவல்களை விக்கி-லீக்சுக்குக் கசியவிட்டதான புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்டவர் எட்வர்ட் சுனோடன். அரசும், அமெரிக்க அரசியல் வாதிகளும் சுனோடனை ஒரு கிரிமினல் குற்றவாளியாகவே சித்தரித்தனர். ஆனாலும், ஓயாத சுனோடன் உடனடியாக அமெரிக்க சிவில் லிபர்ட்டி யூனியன் என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின்சார்பில் அய்ம்பது ஆயிரம் அமெரிக்க மக்களின் ஆதரவைக் கோரியிருந்தார். அமெரிக்க மக்களின் தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை அமெரிக்க உளவுத்துறை கண்காணித்து பதிவு செய்துவரும் தகவல் சுனோடன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அவரை ஆதரிப்போர் பட்டியல் நீண்டு வந்தது. தற்போது சுனோடனுக்கு ஆதர வானவர் பட்டியல் 10 இலட்சத்தையும் (10,10,094) தாண்டிவிட்டது.

இந்நிலையில் உளவுத்துறை செயல் பாட்டில் மாற்றம் கொண்டுவரும் திட் டத்தை ஒபாமா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுனோடன் தற் போதைய ஒபாமாவின் சீர்திருத்த நட வடிக்கையை ஓர் திருப்புமுனையானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தொலைபேசி உரை யாடல்களை அமெரிக்க புலனாய்வு நிறு வனங்கள் பதிவுசெய்வதுகுறித்து அமெ ரிக்க அதிபர் ஒபாமா புதிதாக ஓர் உத்தர வைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அமெரிக்காவில் தேசிய அளவில் ஒட்டு மொத்த தொலைபேசி உரையாடல் களையும் பதிவு செய்வதை முடிவுக்குக் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக் காவின் உளவுத்துறையின்மீதான நம்பிக் கையை மக்கள் இழக்கும் அதிர்ச்சியான நிலை ஏற்பட்டுவிட்டதையும், தனி நபர் சுதந்திரத்துக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டி உள்ளார்.

உளவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, தனி நபரை உளவு பார்ப்பதுகுறித்த திட்டத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேறு சீர்திருத்த வரைவு, அமெரிக்காவின் சுதந்திர உரிமைச் சட்டம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டி இருக்கும் என்றனர்.

சுனோடன் கூறும்போது, தேசிய பாது காப்புச் சட்டத்தின்படி ஒட்டுமொத்த அமெரிக்கக் குடிமக்களை உளவு பார்ப் பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று நான் நம்புகிறேன். நீதிமன்றம், கட்சி மற்றும் மக்களுக்காக தனி நபர் மீதான வேவு பார்ப்பது தொடரக்கூடாது. ஒபாமாவின் உளவுத்துறை சீர்திருத்த அறிவிப்பின்மூலம் அரசமைப்புக்கு விரோதமான செயல் முடிவுக்கு வந்து சமூக நீதி வென்றுள்ளது. அமெரிக்க சுதந் திர சட்டத்தில் வரலாற்றில் சீர்திருத்தம் முழுமை அடையவில்லை என்றே காங்கிரசு கருதுகிறது. ஒபாமாவின் இந்த சீர்திருத்த அறிவிப்பின்மூலம் உளவுத் துறையின் ஒட்டு மொத்த கண்காணிப்பு முறை பொதுமக்களிடமிருந்து வெடித்த எதிர்ப்பின் காரணமாகவே, காரணமே இல்லாத, உண்மையைக் கூற வேண்டு மானால் தேவையே இல்லாத ஒட்டு மொத்த மக்கள் கண்காணிப்பு முறை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியதா யிற்று. இது ஒரு திருப்புமுனை, தேசிய உளவுத்துறையிலிருந்து உரிமைகளை மீட்டெடுக்கும் புதிய தொடக்கமாகும். இதன்மூலம், அரசிடம் பொது மக்களுக் கான சரியான இடம் மீண்டும் பெறப்பட் டுள்ளது என்று சுனோடன் தெரிவித்தார்.
சுனோடன் கருத்துக்களால் ஒபாமா வின் கண்திறந்தது. அவர் தன் தவறை உணர்ந்து, தற்போது உலகெங்கும் உள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஹேக்கில் கூடிய அனைத்து நாடுகளின் தலைவர்கள் கூடிய அணு எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுசெய்தியாளர்களுடனான பகிர்வில் ஒபாமா தெரிவித்ததாவது: வெற்றி பெற்றுள்ளோம் என்றால், முக்கியமாக சாதாரண மக்களின் உதவியால் நாம் வெற்றி பெற்றுள்ளோமே தவிர, வெறுமனே அரசால் அல்ல. அரசு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் சந்தேகப்படும் மனப்பான்மையிலிருந்து விடுபடுவது என்பது அதுவும் ஒரே இரவில் நடக்கக் கூடியது அல்ல என்றார். மேலும் அவர் கூறும்போது, தனிமனித சுதந்திரம் குறித்த பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தை நிறுத்தவும், உளவுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள சீர்திருத்தம் செயல்படுத்தக்கூடியதே என்றும் நம்பு வதாக ஒபாமா கூறினார். தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதுகுறித்தும் , அவற்றை எப்படிக் கையாள்வதுகுறித்தும் நான் உறுதியாக உள்ளேன். அதேபோல், மக்கள் கருத்து களும் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/77759.html#ixzz2xP2FYkUq

தமிழ் ஓவியா said...


சாவில் கொட்டு முழக்கம் - ஏன்?

பகுத்தறிவுக் களஞ்சியம் - பகுதியில் (விடுதலை, திருச்சிப் பதிப்பு 15.3.2014) சாவில் கொட்டு ஏன்? என்னும் செய்தியைப் படித்தேன். மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்வத ஒரு மூடநம்பிக்கையல்ல. சமண, பௌத்த சமயங்கள் சார்ந்த குருமார்கள் இறப்பு என்னும் வீடு பேறு அடைந்ததால், அவர்கள் உடலை கொட்டு முழங்கக் கொண்டு சென்று, நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது அச்சமயங்களின் மரபாகும்.

துறவறம் மேற்கொண்டவர்களுக்கான இம்மரபை, இச்சமயங்கள் சார்ந்த இல்லறத்தாரும் பின்பற்றலாயினர். இதன் அடையாளமாகவே மனிதன் இறந்தவுடன் கொட்டு முழக்கம் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இம்மரபு இளம் வயதினர் இறப்புகளிலும், அம்மை நோய் கொண்டோர் இறப்புகளிலும், பின்பற்றப்படுவதில்லை என்பது உணரத்தக்கதாகும். அம்மை நோயால் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளின்போது நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லி விடுவதில்லை. அம்மை நோய், ஒரு தொற்று நோய் என்னும் அறிவியல் அடிப்படையே இதற்குக் காரணமாகும்.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அக்காலக் கட்டத்தில், இறப்பு நிகழ்வின் அறிவிப்பாகவும், அது எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதை தொலை தூரத்தி லிருந்து வருபவர்களுக்குத் தெரிவிப்பதாகவும் அமைந்ததே இறப்பில் கொட்டு முழக்கம் செய்வதாகும். இதற்குக் கட்டி விட்ட கட்டுக் கதையே உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம் செடி கொடிகளில் ஒளிந்து இருக்கும் என்பதாகும். உயர் திணைக்குரியது இறப்பு, மரணம் இழவு என்னும் சொற்களாகும். அஃறிணைக்குரியது சாவு என்னும் சொல்லாகும். எழவு - என்பது வழூஉச் சொல், அதன் திருத்தச் சொல் இழவு என்பதாகும். - தி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page2/77760.html#ixzz2xP2i0OL6

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் மதப் பிரார்த்தனை தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு


மேரிலாண்ட் நீதிமன்றத்தில் அமெ ரிக்க மனிதநேய அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் அரசும், மதமும் தனித்தே இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் நாட்டின் அரசு வாரியக் கூட்டங்களில் இயேசு கிறிஸ்து அல்லது கர்த்தர் என்று பிரார்த்தனை இடம்பெறச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதானது நாட்டின் அரசியலமைப்பின் முதல் விதியை மீறுவதாகும் என்று வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் நீதிபதி அரசு அலுவலகங்களில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்த தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்க மனிதநேய அமைப்பின் சார்பில் அதன் வழக்கறிஞர் மோனிகா மில்லர் இதுகுறித்து கூறும்போது, அரசு அலுவலர்கள் அடிக்கடி அரசுக் கூட்டங் களில் இயேசு அல்லது கர்த்தரை அழைப் பது, சட்டத்துக்குட்பட்டு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடத்தப்படலாம் என் பதை சாதகமாகக் கொண்டு, அரசு அலு வலகக் கூட்டங்களில் பிரார்த்தனை நடத் துவது அரசியலமைப்பை மீறுவதாகும். கிறிஸ்துவர் அல்லாதவர்கள் இதுபோன்ற அயோக்கியத்தனமான பிரார்த்தனைக் கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டி உள்ளது. மதத்துக்கு வெளியே இருப்பவர்களாக நடத்தப்படுவது தம் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாக எண்ண வேண்டியுள்ளது என்றார்.

மேரிலாண்ட் மாவட்ட நீதிபதி உத்தரவில், கேரல் கவுண்டி பகுதி அலு வலர்கள் கூட்டங்கள் நடைபெறும்போது கூட்டத் தொடக்கத்தின்போது, குறிப்பிட்ட கடவுள் பெயரைச் சொல்லி அழைப்பது, மத நம்பிக்கையின்மீதான செயல்கள், நம்பிக்கை என்று சொல்லி நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதி லிருந்தும் மற்றும் அதில் பங்கேற்பதி லிருந்தும் அரசு அலுவலர்கள் தடை செய்யப்படுகிறார்கள். தொடக்க நிகழ்வு களில் வேண்டுமானால் அயோக்கித்தன மில்லாத கடவுளை அழைத்து கூட்டத் தைத் தொடரலாம் என்று உத்தரவிட் டுள்ளார்.

அப்பிக்னானி மனிதநேய சட்ட மய் யத்தின் சட்டப்பிரிவு இயக்குநர் டேவிட் நியோஸ் கூறும்போது, அரசும், மதமும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதில் இது மிகப்பெரிய வெற்றியாகும் என்றார். பொது நிறுவனக் கூட்டங்களில் அயோக் கியத்தனமான கடவுளை அழைப்பது கூடாது என்பதை நாட்டில் அப்பட்டமாக உடைத்து மீறிக்கொண்டுள்ளார்கள் என்று கூறினார்.

கேரல் கவுன்டி அலுவலர்கள் மூவர் அலுவலகக் கூட்டங்களில் பிரார்த்தனை குறித்து கொடுத்த முறையீட்டின்பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அமெரிக்க மனித நேய அமைப்பு கேரல் கவுன்டி ஆணையர்களுக்கு பிரார்த்தனை குறித்த புகார்களை கடிதம்மூலம் எழுதி அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதேபோன்ற வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கிரீஸ் நகரத் திலும் இதுபோன்ற வழக்கில் கடந்த ஆண்டில் வாதங்கள் முடிவுற்றுள்ளன. இந்த நிலையில்தான், மேரிலாண்ட் நீதிபதி உத்தரவு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

(http://americanhumanist.org/news/details/2014-03-christian-prayers-at-carroll-county-meetings-must-en)

Read more: http://viduthalai.in/page3/77762.html#ixzz2xP39IRPL

தமிழ் ஓவியா said...


73ஆம் இடத்தில் இந்தியா!



இண்டர் - நாடாளுமன்ற யூனியன் மற்றும் அய்.நா. பெண்கள் அமைப்பு ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண் கள் பங்கு குறித்த ஆய்வு மேற் கொண்டனர். அதில், இந்தியாவுக்கு 73ஆவது இடம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.கள் அல்லது அமைச்சர்களாக 9.9 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் இருந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் மத்திய அரசில் 43 கேபின்ட் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் அமைச்சர்களாக இருக் கின்றனர். தர வரிசை பட்டியலில் கெய்தி, ருவாண்டா, காங்கோ, ஜாம்பியா ஆகிய நாடுகளைவிட இந்தியா கீழ் மட்டத்தில் உள்ளது.

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தான் நாடாளுமன்றம் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 17 கேபினட் அமைச்சர்களில் பெண் ஒருவர்கூட இல்லை. அதே போன்று சவுதி அரேபியா மற்றும் லெபனானிலும் பெண் அமைச்சர்கள் கிடையாது.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் 20 சதவீதமும் அமெரிக்காவில் 40 சத வீதமும் பெண் அமைச்சர்கள் உள் ளனர்.

Read more: http://viduthalai.in/page3/77763.html#ixzz2xP3WUQbd

தமிழ் ஓவியா said...


எம் குலக் கொழுந்து நீ

நாளொன்பது ஆண்டுகட்கு முன் - அந்த
நாளென்பது எதிரிகளின் காலம் நீ அன்று
அம்மாவிடம் பெற்றது பொறுப்பு அல்ல பெரு நெருப்பு . அது
அணைந்து போகாமல் இருப்பது கொள்கையோடு நீ
இணைந்து போவதால் தான் - எதிரிகள்
அணைத்து விடாமலிருக்க
அனைத்து தமிழரையும்
ஒன்றிணைத்து அவர்தம் நலம்
ஒன்றினையே நினைக்கிறாய் !

உனக்கு
இரண்டகம் செய்தவர்களும்
இரண்டு-அகம் கொண்டவர்களும்
பிழைத்துக் கொண்டார்கள் - ஆனால்
நிலைத்து நிற்கவில்லை !

உன்னை
ஒழிக்க நினைப்பவனும் ஒலிக்கச் சொல்லுவான்
தமிழர் தலைவர்
நீதானென்று !

ஆத்திரங் கொண்டு இருப்பவர் கூட உன்
சூத்திரங் கண்டு சுருங்கி போவார்கள்
உண்மை உணர்ந்து நெருங்குவார் - பின்னர்
உன்-மை எழுதும் சாசனம் தான்
தமிழர் உயர்ந்தமரும் ஆசனம் என்றுணருவார்.

தவறுகள் நடந்தால்
இடித்துரைக்கும் உன்னிடம்
படித்துறையின் ஆனைத் தலைமுதல்
படித்த-துரையின் ஆணையர் தலை வரை
உருளுமென்பது உண்மை.

அன்று
பெஞ்சில் ஏறிநின்று பேசி - இன்றெங்கள்
நெஞ்சில் நிறைந்தவன்.

பெரியவர் முதல்
வறியவர் வரை யாரையும்
எழுந்து வணங்கும் - எம்குல
கொழுந்து நீ !

தமிழர்மேல் நீ
தொடர்-பற்று வைத்ததால்தான்
தொடர்பற்று இருந்தோரெல்லாம்
திரும்பி உன்னிடம்
விரும்பி வருகிறாரகள் !

கழகத்தின்
விலாசம் கேட்டால் - நீ
விசாலமாய் எழுப்பிய கொள்கை
வளாகங்கள் கை காட்டும் !

அதற்காக நீ பட்ட கடனை
அடைத்து விட்டாய் ! உனக்கு
நாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாது !
உன் பாதை எமக்கு பெருமை
உன் உழைப்புக்கு முன்
எல்லாமே வெறுமை !

- பொறியாளர் த.சண்முக வடிவேல் பி.இ., தஞ்சாவூர்

Read more: http://viduthalai.in/page4/77764.html#ixzz2xP3wz9jO

தமிழ் ஓவியா said...


தமிழக தேர்தல் களத்தில் இரண்டு திருநங்கைகள்

அரசியல் கட்சிகள் பெரும் பான்மையாக வசிக்கும் சாதியி னரின் ஓட்டை பெற திட்டமிட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்து நிறுத்தி வெற்றியை தங்கள் இலக்காக மாற்ற திட்டமிட்டுக் கொண்டு களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். இதற்கு மாற்றாக சமூக ஆர்வலர்கள் தேர்தலில் தங்களின் பங்கை வலியுறுத்தும் வகையில் வேட்பாளர்களாக களமிறங்கி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அய் ஏ எஸ் அதிகாரிகள், தொழில் நிறுவன தலைவர்கள் என பிரபலமான முகமாக தேர்தலில் இறங்குகின் றனர்.

இவர்களில் சிலரை தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வசம் இழுத்து தங்களின் வேட்பாளராக நிறுத்தி விடுகிறது உதாரணத்திற்கு நந்தன் நீலகேணி (காங்) வி.கே.சிங் (பாரதீய ஜனதா) போன்றவர் களைக்கூறலாம்.

இவர்களின் வரிசையில் தற்போது தமிழகத்தில் இரண்டு திருநங்கைகள் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

திருநங்கைகள் தேர்தல் களம் என்பது புதிதல்ல, 1967- முதல்முதலாக மராட்டிய மாநிலம் தானேமாவட்டத்தில் பீவண்டி சட்ட மன்றத்தொகுதியில் திருநங்கை ஒருவர் போட்டி யிட்டார். சுயேட்சையாக போட்டி இட்ட அவருக்கு அதிக ஆதரவும் இருந்தது, இருப்பினும் காங் கிரஸ்கட்சியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தார்.

அதன் பிறகு நகர்மன்ற தேர்தலில் இந்தியாமுழுவதும் துணிச்ச லுடன் பல திருநங்கைகள் களமிறங்கினர்.

முதல் முதலாக 1987-ல் மத்திய பிரதேசம் குவாலியர் நகர்மன்றத்தேர்தலில் ஒரு திருநங்கை வெற்றிபெற்று திருநங்கைகளுக்கான அரசியல் பாதையை திறந்து வைத்தார்.

இவரின் வெற்றி நாடு முழுவதிலும் திருநங்கைகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் திருநங்கைகள் மத்திய பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், மராட்டியம், ஒரிசா, கேரளா, பிகார், போன்ற மாநிலங்களில் களமிறங்கினார்கள்.

2000-த்திற்கு பிறகு தமிழகத்திலும் திருநங்கைகள் போட்டியிட முன்வந்தார்கள், ஆனால் முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் ஆதரவு தராத நிலை யிலும், திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் சரிவர சென்று சேராமையாலும், பிரச் சாரத்தின் போதே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளா னார்கள்.

கல்வி மற்றும் சமூக அக்கறையின் முன்னணியில் நிற்கும் மாநிலமான தமிழகத்தில் திருநங்கைகளுக்கு அரசியல் களத்தில் வரவேற்பு இல்லாததும், கல்வி யறிவு மற்றும் பொதுநலன் சார்ந்த பார்வையில் இன்றளவும் பிற்போக்குத் தனத்தை கடைப்பிடிக்கும் பல மாநிலங்களில் திருநங்கைகள் அரசியல் களமிறங்கி வெற்றி கரமாக செயல்படுவதும் வியப்பிற்குரிய மனநிலை மாற்றங்களாகும்.

16-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுமைக் கும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுவிட்டநிலையில், கடுமையான அரசியல் களப் போட்டிகளுக்கும் மத்தியில் தமிழகத்தில் இரண்டு திரு நங்கைகள் தேர்தல் களத்தில் போட்டியிட முடிவு செய் துள்ளனர். ஒருவர் பாரதி கண்ணம்மா, மற்றொருவர் சகோதரி என்ற சமூக தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக அனைவருக்கும் அறிமுகமான முகம் கல்கி சுப்பிர மணியன், கடந்த 7 வருடங்களாக இந்தியா முழுவதிலும் சென்று திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

இந்திய திருநங்கைகள் சார்பாக அயல்நாடுகளுக்கு சென்று பல பொது நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர். கடந்த சட்டமன்றத்தேர்தலில் தி மு க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் போட்டியிட விரும்பிய தொகுதி கூட்டணிக்கு சென்று விட்டதால் அவரால் போட்டியிட முடிய வில்லை.

இம்முறை விழுப்புரம்(தனி) தொகுதியில் சுயேட்சைவேட்பாளராக களமிறங்குகிறார்.

மதுரையில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

இவரும் திருநங் கைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்கும் பல போராட்டங்களை சமூகத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னின்று நடத்தி யுள்ளார்.

திருநங்கைகளுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பு மற்றும் அரசு உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சராம் செய்து வருகிறார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொருளா தாரத்தில் இளங்கலை முடித்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தவிர கணினி அறிவி யலில் டிப்ளமோவும் பெற்றுள்ளார்.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்தவர்; அவரது வாக்காளர் அட்டையில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் வேட்பு மனுவில் திருநங்கை என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். தனியார் வங்கியில் பகுதி நேர ஊழியராகப் பணிபுரிந்த இவர் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதி மக்களுக்கு தன் னலமற்ற சேவை செய்வேன் என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/77765.html#ixzz2xP4Hhve3

தமிழ் ஓவியா said...


நினைவுத்திறனை அதிகரிக்கும் இஞ்சி


இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page4/77766.html#ixzz2xP4SHpIo

தமிழ் ஓவியா said...


இந்த ஆண்டுக்கான மதச்சார்பின்மை விருது பெறுகிறார் மலாலா


அனைத்துப் பெண்களுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துவருபவர் பாகிஸ்தான் பள்ளிச் சிறுமியான மலாலா. இவர் பாகிஸ்தானில் பள்ளிமீது தாலிபான் தீவிரவாதிகள், மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உலகுக்கே அவர் குரல் ஒலிக்குமாறு செய்தவர். இதனால், துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்தது. மலாலா குண்டுக் காயமடைந்தபோது, அவர் மதக் கருத்துக்களுக்கு எதிராக இருந்ததால்தான் சுடப்பட்டார் என்று தாலிபான்கள் தெரிவித்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய அவர் இலண்டனில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த பின்னரும் தன் கொள்கையிலிருந்து, பெண்களுக்கு கல்வியின் அவசியத்தைக் கூறுவதி லிருந்து பின்வாங்காமல் மத அடிப்படை வாதிகளுக்கு பெரும் சவாலாக இருக் கிறார்.

இதனால், 2013ஆம் ஆண்டு மலாலாவின் 16ஆம் ஆண்டு பிறந்த நாளான சூலை மாதம் 12ஆம் நாளை அய்.நா. சபை மலாலா தினம் என்றே அறிவித்தது. உலகெங்கும் மலாலா நாள் பெண்குழந்தைகள் கல்விக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. மலாலாவைக் கவுரவிக்கும் பொருட்டு, இங்கிலாந்தை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு மலாலாவை இந்த ஆண்டுக்கான மதச் சார்பின்மை விருதுக்கு உரியவராக அறிவித்து அவ் விருதை மலாலாவுக்கு அளிக்கிறது.

இதற்கான அறிவிப்பை தேசிய மதச் சார்பின்மைக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த விருது அளிக்கப் படுவதன் மூலம் பெண்களின் கல்வி விழிப்புணர்வு, மதச் சார்பின்மைக்கான விருதின் நோக்கத்தின்படி அனைவருக் கும் கல்வி, அதிலும் குறிப்பாக பெண் களுக்கு சம அளவிலான கல்வி அளிப்பது என்பதே மதச்சார்பின்மைக்குரிய ஒன் றாகக் கூறப்பட்டு, அதன்படி அவ்விருது மலாலாவுக்கு அளிக்கப்படுகிறது. இங்கிலாந்து பணத்தில் ஏழாயிரம் பவுண் டுக்கான தொகையினை விருதுடன் வழங்குகிறது. பெண்கள் திட்ட நிதியாக இது பயன்படுத்தப்பட உள்ளது. ஏனென் றால் நான் ஒரு பெண் என்கிற தலைப்பி லான பிரச்சாரம்மூலம் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறவும், சிறப்பாக வாழ வும், கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மலாலாவுக்கு இவ்விருதைப் பரிந் துரைத்துள்ள தேசிய மதச் சார்பின்மைக் கான அமைப்பு பெண்கள் கல்விப் பிரச் சாரத்தை ஆதரித்ததால், முரட்டுத்தனமான இசுலாமிய மதவெறி அமைப்பின் வன் முறையை எதிர்கொண்டவர் மலாலா என்கிறது.

தேசிய மதச்சார்பின்மைக்கான அமைப் பின் தலைவர் டெர்ரி சாண்டர்சன் கூறும் போது, இங்கிலாந்தின் பெண்களுக்கான கல்வித் திட்டங்கள் குறித்த பிரச்சாரத்தில் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆகவே, நாங்கள் இவ்விருதை வழங்க உற்சாகத்துடன் வழங்க முடிகிறது. கல்விக்காக அனைத்து தரப்பினரையும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே விழித் தெழச் செய்துள்ளார். மலாலாவின் நம்ப முடியாத எழுச்சியால் முக்கியமாக கவுரப் படுத்த வேண்டும். மதச்சார்பின்மை என்பது எப்போதுமே மதத்தின் பேரால் ஆதிக்கம், அடக்குமுறைகளைக் கடந்த, மனித உரிமைகளுக்கானதாகும். உலகெங் கும் ஒடுக்கப்பட்ட பெண்கள், சிறு பான்மையருக்கான நம்பிக்கையை ஏற் படுத்துவதே மதச் சார்பின்மையாகும் என்றார்.

மதசார்பின்மையை ஊக்கப்படுத்த 1937ல் ஜான் என்பவரால் இவ்விருது தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இவ் விருதை அவர் மகன் டெப்பி லாங்டன் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/77767.html#ixzz2xP4rwdY8

தமிழ் ஓவியா said...


வித்தியாசமான விழா

மும்பை தாராவி பகுதியில் சினேகா என்கிற அமைப்பு பெண்கள் மற்றும் குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் துக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் பழைய சேலைகள், புதிய கலை நுட்பங் களுடன் புதுப்பிக்கப்பட்டு மறு பயன் பாட்டிற்கு வைக்கப்படுகிறது. இதற்கான விழா கலா கோடா விழா 2014 என்கிற பெயரில் நடைபெறுகிறது. டில்லி மருத்துவ மாணவி நிர்பயா 2012 நினைவாக 2013இல் பத்துப் பெண் களுடன் கூடிய அமைப்புதான் சினேகா. இதை வழிநடத்துபவர் சுசி விக்கெரி. இவர் ஆடைகள் வடிவமைப்பு நிபுணர் ஆவார். இவருடன் பேஷன் டிசைனரான நிக்கா பெல்ட்மேன் இணைந்து டிசினேகா அமைப்பை வழிநடத்துகின்றார்.

பழைய சேலைகளை சேர்த்து பெண்கள்மீதான பாலியல் வன்முறை எதிர்ப்பு சொற்களுடனும், அதற்கான சின்னங்களுடனும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆடை யும் புகழ் பெற்ற கலை, கலாச்சார, சமூக மற்றும் மத நம்பிக்கை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும்வகையிலும் வடிவமைக் கப்படுகின்றது. பெண்களை முடக்காதே, பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர் களை முடக்கு என்கிறவகையிலான சொற்களுடன் சேலைகள் வடிவமைக் கப்படுகின்றன.

இது போன்ற சொற்கள் அடங்கிய மறுபயன்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், தாராவி தெருக்களில் இருப் பதை மனசி சவந்த் நிழற் படங்கள் எடுத்து தள்ளியுள்ளார். பேஷன் ஷோக்களில் இந்த ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு சொற்கள் மட்டுமே பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் செய்கின்றனர். அமைச் சர் ஒருவர் சொன்னதுபோல் வண்ணங் களைத் தீட்டிக்கொள்ளும் பொம்மை களாக இருக்க விரும்பாமல் முகமூடிகளை அணிந்து வந்த பெண்கள், சிறுவர் பாது காப்பு குறித்த கலை நுட்பங்களுடன்கூடிய சொற்கள் அடங்கிய ஆடைகளை பிரபலப்படுத்துகின்றனர்

Read more: http://viduthalai.in/page4/77768.html#ixzz2xP51m0AY

தமிழ் ஓவியா said...




முயற்சி - வீண் முயற்சி

முயற்சி: மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடாரைச் சார்ந்த மீனவர் ஜோஸ் சல்வடோர் அல்வ ரெங்கா வயது 37 பசிபிக் கடலில் மீன் பிடிக்க சென்றபோது, வழி தவறி சுமார் 10 ஆயிரம் கி.மீ., தொலைவை சிறிய படகு மூலம் கடந்து 13 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் கரை சேர்ந்தார். இது மார்ஷல் தீவுக்கும் - மெக்ஸிகோவுக்கும் இடையே உள்ள பகுதியில் நடந்தது. வழியில் ஆமை, மீன் உள்ளிட்டவற்றை பச்சை யாகவே உண்டு தன் சிறிய படகில் மிதந்துள்ளார்.

வீண் முயற்சி: தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டம் குமாரகோவில் - சுப்பிர மணியன் சுவாமி கோயிலில் மாவட்ட பிராமணச் சங்கத்தினர் அதிமுக கூட்டணி 40 மக்களவை தொகுதி களிலும் வெற்றி பெறவும், ஜெயலலிதா நீண்ட நாள் வாழவும் ஆதித்ய ஹநதயம் ஹோமம் நடத்தினார்களாம். காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்ற இதில் ஒரு லட்சம் மந்திரங்கள் சொல்லி பிரார்த்தனை நடைபெற்ற தாம். பிராமண சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்களாம்!
- எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP5fpoe1

தமிழ் ஓவியா said...

ஓர் ஆய்வாளர் பார்வையில்....

கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டில் நுழைந்த ஆரியம் இன்று வரை தலை விரித்தாடுகின்றது.

இடையில் பெரியார் வந்தார். சீர்தி ருத்தங்கள் செய்தார். ஆரியத்திற்குத் தொய்வு. அவர் மறைந்துவிட்டார். தமிழர்கள் திருந்தவில்லை. இனி இந்தியா என்று உருப்படுமோ?

எல்லாவற்றையும் மனு அடிப்படையிலே பார்க்கின்றனர். நீதிமன்ற மாகட்டும், அரசு அலுவலகங்களா கட்டும். ஆரியக் கூத்து ஓய்ந்த பாடில்லை. என்றுதான் நல்ல காலம் விடியுமோ?

- பேரா. பிச்சை தமிழியல்துறை
காந்தி கிராமம், திண்டுக்கல்

பி.கு: முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான (26.2.2014) கலந் துரையாடலின்போது கூறக் கேட்டவர்.

Read more: http://viduthalai.in/page4/77770.html#ixzz2xP5udqzQ

தமிழ் ஓவியா said...


குறும்பா

கடவுளைத்
திட்டினால்....
மனிதனுக்கேன்
பொத்துக் கிட்டு
வருதுகோபம்?
கடவுளையே..
உருவாக்கியவன்
மனிதன் என்பதால்!
நாமனைவரும்
கடவுளின்
குழந்தைகளில்லை!
கடவுள்கள் தான்...
மனிதனின் குழந்தைகள்

***
இல்லாத தொன்றை (கடவுள்)
இருக்குன்னு சொன்னால்
ஒத்துக் கொள்வான்...
ஆன்மிகவாதி...!
அது பெரியவர் சொன்னால்
பெருமாள் சொன்ன மாதிரியாம்
சரி...!
இல்லாத ஒன்றை
இல்லையென்றே சொன்னால்...?
ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே
அதுவும் பெரியவர் (பெரியார்)
சொன்னால் பெருமாள்
சொன்ன மாதிரிதானே??!

***
மனிதனுக்கே...
வயதாக ஆக..
சக்தி குறையுது...!
கல்லுக் கடவுளுக்கு
காலங் காலமாய்
சக்தி எப்படியிருக்கும்
நிரந்தரமாய்??
- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page4/77772.html#ixzz2xP6EnLfz

தமிழ் ஓவியா said...


அய்.ஏ.எஸ். தேர்வுக்கான வயது வரம்பு தளர்வு


குடிமைப் பணி தேர்வுகள் எனப் படும் அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். தேர்வு களை முன்பு பொதுப் பிரிவினர் 30 வயது வரை தான் எழுத முடியும். அது போல் இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தால் 4 முறை மட்டுமே இவர்களால் தேர்வு எழுத முடியும்.

தற்போது மத்திய அரசு இந்த விதிகளில் தளர்வு செய்து 32 வயது வரை பொதுப் பிரிவினர் இந்தத் தேர்வுகளை எழுதலாம். தோல்வி அடைந்தால் 6 முறை தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது. இது போல் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் 33 வயது வரையிலும்? 7 முறை இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற விதி தளர்த்தப்பட்டு 35 வயது வரை இவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். தோல்வி அடைந்தால் அதிகபட்சம் 9 முறை எழுத லாம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டு மானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 42 வயது வரை 9 தடவை இந்தத் தேர்வினை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 45 வயது வரை அதிகபட்சம் 9 முறை தேர்வு எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 45 வயது வரை அதிகபட்சம் 9 முறை தேர்வு எழுதலாம். அதே சமயம் எஸ்.சி.எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 47 வயது வரை எத்தனை முறை வேண்டுமா னாலும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page4/77780.html#ixzz2xP6uRb4v

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையைப் பரப்புவதா? அமிதாப்பச்சன் படத்துக்கு எதிர்ப்பு

டில்லி, மார்ச் 29- மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புக்கான சட்டத்தின்கீழ் அமிதாப் பச்சன் நடித்துள்ள தொலைக் காட்சி விளம்பரப் படத் தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலை யத்தில் ஹேமந்த் பாட்டீல் என்பவர் புகார் கொடுத் துள்ளார்.

சிறுவர்கள் அருந்தும் ஊக்க பானத்துக்கான விளம் பரத்தில் அமிதாப்பச்சன் பேய் வேடத்தில் நடித் திருப்பதன்மீது உடனடி நடவடிக்கைக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதி பதி சீதா குல்கர்னி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அமிதாப் பச்சன் ஏற்கெ னவே பூட்நாத் என்கிற பேய் படத்தில் நல்லது செய்கிற பூதமாக நடித்தி ருப்பார். அதேபோல் மீண்டும் அடுத்த மாதத்தில் பூட்நாத் ரிடர்ன்ஸ் அதாவது மீண்டும் பூட்நாத் என்கிற படம் வெளியாக உள்ளது. இதனிடையே தொலைக் காட்சி விளம்பரப் படத்தில் பூதமாக நடித்துள்ளார். இது குறித்து, வழக்கு தொடுத் துள்ள பாட்டீல் கூறும் போது, இந்த விளம்பரம் பேய், ஆவி மற்றும் அவற் றின் அற்புதங்கள் என்பன வற்றை திணிப்பதாகும். மூட நம்பிக்கையையும், ஆதிக்க மனப்பான்மையை யும் பரப்பும் நோக்கில் உள்ளது. பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் புகாரைப் பெற மறுத்தனர். ஆகவே, நீதிமன்றத்தை நாட வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. இந்த விளம்பரம் குறித்து எவ் விதத்திலும் பொறுப்பேற்காமல் தொலைக்காட்சியில் விளம் பரத்தை வணிக நோக்கில் ஊக்க பான நிறுவனம் ஒளிபரப்பி உள்ளது என்று கூறினார். இவ்வழக்கு விசார ணையை நீதிபதி சீதா குல் கர்னி அடுத்த மாதம் 18ஆம் தேதியில் வைத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77800.html#ixzz2xP89p8XV

தமிழ் ஓவியா said...


இனமான பேராசிரியரைச் சந்தித்தார் தமிழர் தலைவர்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களை இன்று காலை 11.30 மணி அளவில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து, இயக்கம் அண்மையில் வெளியிட்ட நூல்களை அளித்தார். நூல்களைப் பெற்றுக் கொண்ட இனமானப் பேராசிரியர் அவர்கள் அடுத்து ஒரு நூற்றாண்டுக்குத் தேவையானதை நீங்கள் செய்து வருகிறீர்கள் என மனந் திறந்து பாராட்டினார். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார். (சென்னை - 29.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77806.html#ixzz2xP8YPtRm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!


ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் புறந்தள்ளி

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு

வரும் தேர்தலில் மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்!

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!


ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வாக்களிக்க மறுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் காங்கிரஸ் தொடர்ந்து, அவர்களுக்கும் அவர்களது தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கும், உலக மனிதநேய, மனித உரிமைப் போராளிகளின் உணர்வுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த 27ஆம் தேதி அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைக் குழு மூலம் விசாரணை ந;டத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக புறக்கணிக்கிறோம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இராஜபக்ஷே அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளது; காங்கிரசின் கை ரத்தக் கறை படிந்த கையாகவே ஆக்கிக் கொண்டு அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையா?

1. இதைவிட வேதனையும் வெட்கக் கேடானதுமான செய்தி நமக்கு வேறில்லை. கேட்டால் அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகுமாம்! அப்படியானால் இதற்குமுன் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டார்களே (அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் இன்றளவும் என்ற போதிலும்) அது தலையீடு அல்லவா?

2. அந்த நாட்டிற்கு அமைதிப்படை (IPKF) என்ற பெயரால் நம் நாட்டு இராணுவத்தை அங்கே அனுப்பி, இந்திரா காந்தி அம்மையாரின் கொள்கை நிலைப் பாட்டிற்கே முற்றிலும் எதிரான நிலையை எடுத்து, மிகப் பெரிய அவமானத்துடன் திரும்பியதன் மூலம் நமது பெருமைமிக்க இராணுவத்திற்கு அவப் பெயர் ஏற்பட வில்லையா?

சிங்கள இராணுவக்காரன் ராஜீவ் உயிருக்குக் குறி வைக்கவில்லையா?

இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட கையெழுத்திடச் சென்ற நம் நாட்டுப் பிரதமர் இராஜீவ்காந்தி (Guard of Honour) இலங்கை இராணுவ மரியாதையைப் பெற சென்றபோது விஜயமுனி விஜயந்த ரொஹன்ன டிசில்வா என்ற சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் பிரதமர் ராஜீவை அடித்துக் கொல்ல முயன்றபோது, அனிச்சையாக அவர் குனிந்ததால் தப்பித்தார் என்ற நிலையில், பிறகு அதே சிங்களவன் தேர்தலில் நிற்கவில்லையா?

இதைவிட இந்திய இறையாண்மையைக் கேவலப் படுத்திய அசிங்கம் வேறு உண்டா? அப்படிப்பட்ட சிங்கள அரசுக்குத் துணை போகலாமா?

இதெல்லாம் மன்மோகன்சிங் அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக மறந்து விட்டது போலும்!

ஜெனிவாவில் வாக்களிக்க மறுத்தவர்களுக்கு மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்

90,000 தமிழச்சிகள் வாழ்விழந்து, விதவை நிலைக்குத் தள்ளப்பட்டனரே! பல லட்சக்கணக்கில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நிலையை - அது (No Fire Zone) துப்பாக்கி குண்டு பொழியாத பாதுகாப்பான பகுதி என்று அப்பாவி (ஈழ) தமிழ்க்குடிகளை நம்ப வைத்து, ஒன்று திரட்டி, ஒரே முகாமுக்குள் நிறுத்தி, கொத்துக் குண்டுகளைப் போட்டு குழந்தைகள், முதலியவர்களைக் கொன்றதை போர் நடந்தால் இப்படி அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜமே என்று முன்பு தமிழ்நாடு முதல் அமைச்சர் அம்மையார் கூறியதுபோல, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்தும் வகையில்தானே ஜெனிவாவில் வாக்களிக்க மறுக்கப்பட்டது இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும் அதேநிலை தமிழகத்துத் தேர்தலில் ஏற்படப் போகிறது சில நாள்களில் - மறவாதீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



சென்னை
29.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77794.html#ixzz2xP8oFgDN

தமிழ் ஓவியா said...


அறிவு நாணயம் இல்லை

கேள்வி: அரசியல் சட்டம் 376, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க., தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே?

சோ ராமசாமி: இந்தச் சர்ச்சைக்குரிய பிரச் சினைகளைப் பற்றி பா.ஜ.க. பல முறை சொல்லி யிருக்கிறது. பா.ஜ.க., தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கை எடுப்போம் என்றும்; கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்துப் பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க. நிலைப்பாடு. (கல்கி 30.3.2014 பக்.26).

இதன்பொருள் என்ன? பெரும்பான்மை பெறுகிறதா? கூட்டணி ஆட்சி நடத்துகிறதா? என்பது அல்ல பிரச்சினை. இந்த மூன்று கொள்கைககளும் பா.ஜ.க.வின் கொள்கை என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

272 விஷன் என்று சொல்லித்தானே புறப்பட் டுள்ளனர். பெரும்பான்மை பெற வேண்டும் என்று தானே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத் தோடுதான் போட்டியிடுகிறார்களா?

பெரும்பான்மை பெற்றதாக வைத்துக் கொண்டாலும் அந்த வெற்றியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கும், சக்தியும் மிக முக்கியமானதுதானே!

இந்த மூன்றிலும் உடன்பாடு இல்லாத கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது. அந்தப் பலத்தால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது; பெற்றுக் கொண்ட பிறகு மேற்கண்ட கொள்கைகளை நிறைவேற்றுவது என்றால் இதில் அறிவு நாணயம் கொஞ்சமேனும் இருக்கிறதா? ஏமாற்றும் தந்திரம் தானே புதைந்து கிடக்கிறது!

பிஜேபி விரும்பும் இந்த மூன்றையும் கூட்டணிக் கட்சிகள் விரும்பாத நிலையில், அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு விட்டு, அவர்கள் விரும் பாதவற்றை நிறைவேற்றுவது அசல் மோசடியல்லாமல் வேறு என்னவாம்?

பா.ஜ.க.வினரின் இந்தத் திட்டம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்; இப்படிப் பதில் சொல்லும் திருவாளர் சோ ராமசாமி இது பற்றி என்ன நினைக்கிறார் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டாமா? இந்த மூன்றிலும் எங்களின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் பெரும்பான்மை பெற்றால் இவற்றை நிறைவேற்றத்தான் செய்வோம் - எனவே இந்த எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வோர்கள் மட்டும் எங்களோடு கூட்டுச் சேர வேண்டும் என்று கூட்டணி சேருமுன் நிபந்தனையாக பிஜேபி வைக்க முன் வர வேண்டாமா? அப்படி முன் வைப்பதுதானே அறிவு நாணயமானது என்று கருத முடியும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்; பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்த தே.மு.தி.க.வாக இருக்கட்டும்; பா.ம.க., மதிமுக வாகட்டும் பா.ஜ.க.வின் இந்த ஏற்பாட்டை, திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஏதாவது உறுதி மொழியைத்தான் பெற்றுள் ளார்களா? பெறவில்லை என்றால் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?

அப்படி செய்யவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

எங்களுக்குப் பதவி தான் முக்கியம்! கொள்கை யாவது மண்ணாங் கட்டியாவது, என்பதுதான் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேரும் கட்சிகளின் நிலைப்பாடு என்பது நிர்வாணமாகத் தெரிந்து விடவில்லையா?

இப்படி ஒரு கூட்டுக் களவாணி நடைபெற்று வருவதை வாக்காளர்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பி.ஜே.பி.க்கு மட்டும்தான் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்று கருத வேண்டாம்; பிஜேபியோடு கூட்டு சேரும் கட்சிகளுக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை வாக்காளர்ப் பெரு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவுப் பெரிய சதியை பி.ஜே.பி.யும் அதனோடு கைகோக்கும் கட்சிகளும் மறைத்து வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடத் திட்டமிட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால், இந்தக் கூட்டுச் சதிகாரர்களுக்குச் சரியான பாடம் புகட்டிட நடைபெறவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/77814.html#ixzz2xP9JVRSD

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை


சென்னை, மார்ச் 29- ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரி விக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்பேசிக்கு உட னுக்குடன் குறுஞ்செய்தி வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப் பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத் தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத் தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடை பெறுவதாக தெரிய வந்தால், உடனடி யாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும்.

கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெ னில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கை யாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்த வர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக் காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/77820.html#ixzz2xP9lg9mE

தமிழ் ஓவியா said...


வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டில் படத்திறப்பு விழாவின் போது ஆற்றிய உரை

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும், இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும், நான் நினைக்கவில்லை!

ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும் எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன்.

எனது தொண்டில் உள்ள இடையறாத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைபவங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும், சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.

என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.

நாம் பிரவாகமான எதிர்வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரைமறைவிலும் சூழ்ச்சி களுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலை கொடுக்கத் தயாராயிருங்கள்.

நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்தச் சமயத்தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(4,5-1-29 நாட்களில் ராயவேலூர் லட்சுமணசாமி முதலியார் நகர மண்டபத்தில் கூட்டிய மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை)

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPF1ixu5

தமிழ் ஓவியா said...

இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்-

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறித்தவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்க வேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

பகுத்தறி வால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம்.

உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன் னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கி யங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண்களும் படித் திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங்களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாத்திகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFAnlPZ

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணை யாக இனத்தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகியவர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணு கின்றவர்கள் இருக்கின்றார்கள்.

நாள் முழுதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக்கூட கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப்பார் என்றால் நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/77781.html#ixzz2xPFIn4SY

தமிழ் ஓவியா said...

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாடு

மகாநாட்டைத் திறந்து வைத்து சில வார்த்தைகள்:-

சகோதரி சகோதரர்களே, நமது நண்பரும் சகோதரரு மான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்தப் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.

எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல்நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும்.

உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந் திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதை யும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது.

எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசியத் தலைவனோ மதத்தலைவனோ பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மை யான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக் கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப் பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக் கின்றது.

கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால் தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தி யப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர் களையே மனப் பூர்வமாக நம்பி இருக்கின்றேன்.

அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும், வெகுசீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13-01-1929

Read more: http://viduthalai.in/page-7/77782.html#ixzz2xPFh1Wok

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!
மாற்று அணியல்ல, ஏமாற்று அணியே பிஜேபி!
மக்களே பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்து விடாதீர்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குத் தமிழக வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள் - இவற்றில் காங்கிரசுக்கும், பி.ஜே. பி.க்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது - உண்மைக்கு மாறான பிரச்சாரத்தைக் கேட்டு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதில் காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி ஒன்றுக்கு மற்றொன்று பெரிதும் மாறுபட் டவை அல்ல. ஒரே குட்டையில் ஊறிடும் மட்டைகளே!

கூர்த்த மதியோடும் நுண்ணிய பார்வையோடும் பார்க்கும் எவருக்கும் புரியும்.

சகோதரர் வைகோ அவர்களின் (மதிமுக) தேர்தல் அறிக்கை!


தமிழ் ஓவியா said...

பதவிப் பசியால் துவண்டு, துடித்து, பா.ஜ.க., வீசிய வலையில் சிக்கி மோடி இராகம் பாடி, ராஜாவை மிஞ்சும் இராஜவிசுவாசியராக காட்சியளிக்கும் பரிதாபத்திற்குரிய சகோதரர் வைகோ தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஏதோ பா.ஜ.க. - மோடி மத்தியில் அரியணையில் அமர்ந்த தும் சூமந்திரக்காளி! என்ற மந்திரக்கோல் மூலம், மோடி வித்தை மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர் தனி ஈழம்பற்றியெல்லாம் மதிமுக தேர்தல் அறிக்கையில் பிரலாபித்துள்ளார்.

ஆனால், அது வெளி வந்த மறுநாளே, பா.ஜ.க.வின் வெங்கய்ய நாயுடு தொடங்கி, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் உட்பட தனி ஈழத்தை ஒரு போதும் எங்கள் (பா.ஜ.க.) கட்சி ஏற்காது என்று திட்ட வட்டமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறி விட்டனரே!

பிஜேபிக்குத் திடீர் கரிசனமா?

ஈழப் பிரச்சினையில் (ஏதோ தமிழக மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மீனவர்கள் பால் திடீர் கரிசனம் பீறிட்டுள்ளது பா.ஜ.க.வுக்கு; இல்லையென்றால் நண்பர் இல. கணேசன் மோடி மீன் விற்பனை நிலையத்தை பட்டினப்பாக்கம் எஸ்டேட்டில் (Foreshore) திறந்து வைக்க முன் வருவாரா?) இந்த பா.ஜ.க. ஆட்சி முன்பு எப்படி நடந் துள்ளது என்பதை சற்று நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது.

கல்கியில் என். இராம் பேட்டி!

6.4.2014 நாளிட்ட கல்கி வார ஏட்டில் வெளி வந்துள்ள இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் என் இராம் அவர் களின் பேட்டியில்
ஒரு கேள்விக்கு பதில் கூறுகிறார்:

கேள்வி: மோடி பிரதமராக வந்தால் ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்கிறாரே வைகோ?

பதில்: நல்ல ஜோக் இது. பா.ஜ.க. ஆட்சி வந்தாலும் இலங்கையைக் குறித்த இந்திய நிலைப்பாடு மாறவே மாறாது என்பதுதான் உண்மை!

ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தீர்ப்பும் - பிஜேபியின் நிலைப்பாடும்!

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, இராஜீவ் கொலை வழக்கில் கொலைக் குற்றம் சாற்றப்பட்ட தூக்கு தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்கள் கருணை மனுவும் பல ஆண்டு கால தாமதம் மறுக்கப்பட்ட நீதி, என்பதைக் கூறி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மாநில அரசு இவர்களது 23 ஆண்டு கால சிறை தண்டனை பற்றி மனிதநேயத்துடன் சட்டப்படி சிந்திக்கலாம் என்றும் கூறியது தான் தாமதம்! உடனே அவசர அவசரமாக - எங்கே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களோ என்ற ஆவேசத்தில் தேசீயக் கட்சிகளும் பா.ஜ.க. உட்பட அதனைக் கண்டிக்கத்தானே செய்தன? இதில் காங்கிரசிலிருந்து எவ்வகையில் பி.ஜே.பி. மாறுபட்டது? நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும்.

ம.பி.க்கு வந்த ராஜபக்சேக்குச் சிகப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்தது யார்?

சகோதரர் வை.கோ மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று போர்க் குற்றவாளி இராஜபக்ஷேவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினாரே! ராஜபக்சேவை தனது மாநிலத்திலும் வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு தந்த முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் யார்?

பா.ஜ.க. முதல் அமைச்சர் (ஆட்சி) அல்லவா! ராஜபக்சேவை இந்தியாவிற்கு வர அழைப்புக் கொடுத் தவரே எதிர்க்கட்சித் தலைவரும், துணைப் பிரதமர் ஆசையில் மிதப்பவருமான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் அல்லவா?

தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் ஏமாற்று வேலை!

வாஜ்பேயி பிரதமராக இருந்த நேரத்தில் ஈழத்தில் நடைபெற்ற மோதலின் போது இராஜபக்சே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையா எடுத்தார்? நம் நாட்டில் இல்லாத புலி இயக்கத் தடை நீக்கப்பட்டதா?

காங்கிரசின் இன்றைய வெளி உறவுக் கொள்கைக்கும் பா.ஜ.க. கொள்கைக்கும் ஈழப் பிரச்சினையில் எவ்வித மாறு பாடும் இல்லையே!

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன் என்ற ஒரு பழமொழி போன்றதுதானே பி.ஜே.பி.யின் நிலைப்பாடு! தமிழின வாக்காளர்களை ஏமாற்ற ஈழப் பிரச்சினையைப் பயன்படுத்தலாமா? எனவே இது மாற்று அணி அல்ல; ஏமாற்று அணி! ஈழப் பிரச்சினையில் வாக்காளர்களே புரிந்து கொள்ளுங்கள்.

சென்னை
30.3.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77873.html#ixzz2xUqHw4Ce

தமிழ் ஓவியா said...


கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி! பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை


திருச்சி, மார்ச் 30- திராவிடர் கழக பெல் ஒப் பந்த தொழிலாளர் சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கை, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இது தொடர் பாக கழகம் தொடுத்த வழக்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்றம், திருவெ றும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களை தீர்ப்பு நகல் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவு பிறப் பித்தார். 1,189 ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண் டுமென பெல் நிர்வாகத் திற்கு மதுரை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக திருவெறும்பூர் பெல் நிறு வனத்தில் ஒப்பந்த ஊழி யர்களாக பணியாற்றி வரும் 1,189 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் நிரு வாகம் அலட்சியப்படுத்தி வந்தது.

மேலும் அவர்கள் இதுவரையில் ஒப்பந்த ஊழியர்களாகவே பணி யாற்றியும் வருகின்றனர், அவர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தி.க தொழிலாளர் சங்கம் சார் பில் பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்டு வந்த தோடு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.சேகர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கின் விசா ரணை நேற்று முன்தினம் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் களாக பணியாற்றி வரும் ஊழியர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய பெல் நிர் வாகத்திற்கு உத்தரவிட்டார்.

தி.க. தொழிலாளர் சங் கத்தின் நீண்டநாள் கோரிக் கையான இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என் றும் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண் டுமென மு.சேகர் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77869.html#ixzz2xUrAE2Jl

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் இனக்கலவரம் உருவாகும்: மாயாவதி


பக்ஸார், மார்ச் 30-பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று ஒரு கூட்டத்தில் பேசுகை யில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டி யிடும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடை பெற்ற இனக்கலவரத்தை போன்று இந்தியா முழுவ தும் கலவரம் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

மத்தியில் மோடி ஆட்சி செய்தால் இனக்கலவரத்தின் தூண்டுகோலாக அமையும். நாட்டில் மதக்கலவரங் களும் சிறுபான்மையின ருக்கு எதிரான குற்றங்களும் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே மக்கள் அனைவரும் வரும் தேர்தலில் மோடியை வெற்றி பெற விடக்கூடாது" என்றும் மாயாவதி கேட் டுக்கொண்டார்.

கறுப்பு பணம் பற்றி பேசிய மாயாவதி, ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவ தாக கூறிவரும் பா.ஜ.க., ஆறு ஆண்டு காலத்தில் இது குறித்து அக்கட்சி நடவ டிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வியெழுப் பினார்.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrIyUns

தமிழ் ஓவியா said...

மகிந்தா ராஜபக்சேவிற்கு மக்களிடையே ஆதரவு குறையத் துவங்கியது

கொழும்பு மார்ச் 30-தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் இலங்கை அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந் தோட்டையில் ஆளும் அய்க் கிய மக்கள் சுதந்திர முன் னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 இடங்களைக் கைப்பற்றிய அய்க்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிக்கு, இந்த முறையும் அதே இடங்கள் கிடைத் துள்ளன. ஆனால், ஆளும் கட்சி 174,687 (57.42%) வாக் குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது. இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்கு களை ஆளும்கட்சி இம் முறை இழந்துள்ளது.

எதிர்கட்சிகளான அய் தேக, ஜேவிபி, ஆகிய கட்சி களுக்கு செல்வாக்கு அதி கரித்துள்ளது. கடந்த தேர் தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 இடங் களை கைப்பற்றிய அய்தேக வுக்கு, இம்முறை, 4 இடங் கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகளை யும் அந்தக் கட்சி பெற் றுள்ளது. இதன்படி, அய்தேக வுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் போது அய்.நா மனித உரி மைக்குழு இலங்கை அரசு மீது சுமத்திய குற்றச்சாட் டிற்கு அரசு சரியான முறை யில் பதிலளிக்காததாலும், மனித உரிமைமீறல் பரப்பு ரைகள் பல சமூக தொண்டு ஆர்வலர்கள் முன்னெடுத் துச்செல்வதாலும் இலங்கை அதிபரின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த வாய்ப்பை தொடர்ந்து நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்டால் இலங் கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் இலங்கை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77871.html#ixzz2xUrcQEDt

தமிழ் ஓவியா said...


யார் வெட்கப்பட வேண்டும்? - திக்விஜய்சிங்

புதுடில்லி, மார்ச். 31- மகாராஷ்ட்ராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, 'ஊழல் கறை படிந்த அசோக்சவானுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது வெட்கப்பட வேண்டிய செயல்,' என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங், 'ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ள எடியூரப்பாவை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், அசோக்சவான் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் யார் வெட்கப்பட வேண்டும்? என்பதை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/77904.html#ixzz2xahy1Hra

தமிழ் ஓவியா said...

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை

16ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான கருத்துருக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினை யில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் சரியான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷேயை இனவெறி போர்க் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க. நமது இந்திய மண்ணில் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய மோடியைப் பற்றி, வாய் பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வும் மாற்றுப் பாதை காட்ட முடியாது. வெந்நீருக்குள் வெண்ணெயை வைக்க முடியாது என்று தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மிகச் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார், எந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அதன் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியைப் பற்றியோ, மருந்துக்குக்கூட ஒரே ஒரு வரி அளவிலும் கூட விமர்சனம் செய்யவில்லை என்பது மிகவும் வெளிப்படை! பல தரப்பிலிருந்தும் இத்திசையில் வினாக்கள் வெடித்துக் கிளம்பிய போதிலும்கூட கட்டுப்பாடாக பிஜே.பி.பற்றிப் பேசுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவே உள்ளார்.

இந்த மவுனத்தைச் சாமர்த்தியமாக ஜெயலலிதா அம்மையார் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை வேறு விதமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. பரவலாகப் பொது மக்கள் இதுகுறித்துக் கேலி செய்யும் போக்கைக் காண முடிகிறது. ஆனால், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப் பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு இருக்காது. இந்துத் துவா கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் இவர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் இயக்கத்தில் இருப்பதாக அவர் சொல் லிக் கொள்ளலாம். அண்ணாவின் பெயரைக்கூட உச்சரிக்கலாம். ஆனால், அவை உதட்டிலிருந்து உதிரக் கூடியவைகளே தவிர, உள்ளத்தின் வேர்களிலிருந்து வெளிவரக் கூடியவையல்ல! அண்ணா நாமம் வாழ்க! என்று அம்மையார்உச்சரிப்பது - அண்ணா கொள் கைக்கு நாமம் போடுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேர்தல் அறிக் கையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அதற்கு அவர் என்ன காரணம் சொல்லியுள்ளார்?

இராமன் பாலத்தை இடித்து ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றல்லவா உச்சநீதி மன்றத்தில் காரணம் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஹிந்துத்துவாவைக் கொண்டு வந்து திணிக்கின்றாரே! பி.ஜே.பி.யும் இதே காரணத்தைக் கூறித்தானே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.

அந்த வகையில் பி.ஜே.பி.யும். அ.இ.அ.தி.மு.க.வும் ஹிந்துத்துவா படகில் பயணம் செய்யக் கூடிய வெவ் வேறு பெயர்களில் நடமாடும் ஒரே கொள்கைக் கோட் பாட்டைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையாக - அப்பட்டமாகத் தெரியவில்லையா?

இடதுசாரிகள் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் இந்த ஹிந்துத்துவா மனப்பான்மையை மிகவும் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்கிறார்களே, அதுதான் மிகவும் ஆச்சரியமானது!

இடதுசாரிகள் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருந்தாலும்கூட செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபியைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ பேச மாட்டார்தான். இதில் இடதுசாரிகளுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம். அம்மை யாரைப் பொறுத்தவரை அவர் தெளிவாகவே இருக் கிறார். பி.ஜே.பி.யும் தெளிவாகவே இருக்கிறது. அவர் களும் அதிமுகவைப் பற்றியோ செல்வி ஜெய லலிதாவைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுவதில்லை.

பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் நாட்டுக் கட்சிகளுக்கும் இந்த நிலைமைகள் புரியும் என்றாலும், அவர்களும் இதனை வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்புபோல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வளவுக்கும் என்ன பரிதாபம் என்றால் அ.இ.அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதியிலும் இவர்களின் கூட்டணி வேட்பாளரை எதிர்த்தே நிற்கிறது.

இந்த விசித்திர நிலையைக் கண்டு நன்கு இரசிக்கத் தான் தோன்றுகிறது. வீராதி வீரராக தோள் தட்டி, தொடை தட்டி சண்டமாருதம் செய்பவர்கள் எல்லாம் கூட, பதவி என்று வந்து விட்டால் எத்தகைய பலகீனங் களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நினைத்தால் ஒரு வகையிலே பரிதாபப் பட வேண்டியுள்ளது! இன்னொரு வகையில் எல்லாவற்றையும் இழந்துதான் பதவியைப் பிடிக்க வேண்டுமா? சுயமரியாதையோடு வாழக் கூடாதா? கொள்கையைச் சொல்லித் தோற்பது - கொள்கை களைப் பலி கொடுத்து வெற்றி பெறுவதைவிட சிறந்ததல்லவா!

தமிழ் ஓவியா said...


கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்


கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது.

இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க மருத்து வர்கள் கூறிய ஆலோசனை வருமாறு: கோடை காலத்தில் சுற்றுப் புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச் சினைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும்.

வாந்தி, பேதி, வயிற்றுக் கடுப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ளவேண்டும். கருவுற்ற பெண்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவரை அணுகி, உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakbntvk

தமிழ் ஓவியா said...

சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்?

காலை வேளையில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே டைப் 2 டயபடீஸ் இருந்து, அதை சமீபத்தில்தான் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை அளவு 200அய்த் தாண்டிவிடுகிறது.

அதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு 120தான் இருந்தது. டயட், உடற்பயிற்சி எல்லா வற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நடைப்பயிற்சி செய்கிறேன்...

சரியான உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன். இருந்தும் சர்க்கரை அளவு காலை நேரத்தில் அதிகரிப்பது ஏன்? காரணம் சொல்கிறார் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் வி.மோகன்...

காலையில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உங்களுடைய நீரிழிவு பிரச்சினையின் தன்மை, வளர்ச்சிக்கு ஏற்ப இது ஏற்படும். இதைச் சரி செய்ய, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சரியான மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

அரிதாக, சிலருக்கு நடு இரவில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். பிறகு வேகமாக அதி கரித்து காலையில் அதிக அளவாகும். அதிகாலை 3 மணிக்கு உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பாருங் கள். அளவு குறைவாக இருந்தால் இரவு நேரத்தில் குறை வான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக இருந்தால், இரவில் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இதுவரை நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ளாதவராக இருந்தால், அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/77899.html#ixzz2xakxEcRD

தமிழ் ஓவியா said...


கோடையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?


கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் சிரமம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக் கானலுக்கோ மூட்டைகட்ட முடியாது.

அப்படியே போனாலும் ஒரு சில நாள்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... அனைவரும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.

காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டியதில்லை.வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

அந்த ஆடை களின் வண்ணங்கள், வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும்.

வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது. காலையில் எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

தர்பூசணி, பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முளைகட்டிய நவ தானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு களை சர்க்கரை நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ள போதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/77905.html#ixzz2xalBmXBt