Search This Blog

8.3.14

ஜாதி பற்றி பெரியார்



கடவுள் மதம் பற்றி எழுதுவது போலவே ஜாதி பற்றியும் எழுதுகிறேன். ஜாதிகள் பார்ப்பனரால் (ஆரியர்களால்) ஏற்படுத்தப்பட்டவையேயாகும். ஆரியர் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் நம் நாட்டில் ஜாதி என்பதே கிடையாது.

ஜாதி என்ற சொல் தமிழ் அல்ல; ஆரிய மொழிச் சொல்லேயாகும். ஜாதிகளின் பெயர்களான பிராமணன் - க்ஷத்திரியன் -  வைசியன் - சூத்திரன் என்ற சொற்களும் தமிழ் அல்ல; ஆரிய மொழிச் சொற்களே யாகும். ஜாதிகள் பற்றி ஏற்படுத்தப்பட்டி ருக்கிற ஆதாரங்களான சாஸ்திரம், மனுதர்மம், புராணம் முதலிய யாவும் ஆரிய மொழியில் ஆரியர்களால் ஏற்படுத் தப்பட்டவையே ஒழிய இவை எவையும் தமிழ் மூலம் அல்ல. ஜாதிக்கேற்ப உரைக்கப்பட்ட கடவுள்கள்யாவும் ஆரிய மொழிப் பெயர்களைக் கொண்டவையே ஒழிய தமிழ்ப் பெயரைக் கொண்ட கடவுள் எதுவுமே இல்லை.

ஜாதி இழிவை நிலைக்க வைக்க ஏற்படுத்திய கர்ப்ப க்ருகம் என்னும் சொல் லும், மூலஸ்தானம் என்னும் சொல்லும், ஆகமம் என்னும் சொல்லும், கும்பாபிஷே கம் என்னும் சொல்லும் யாவுமே ஆரிய மொழிச் சொற்களேயாகும். ஆகவே, ஜாதி சம்பந்தமான எந்தக் காரியம், கருத்தும் யாவும் தமிழனுக்கு தமிழுக்குச் சம்பந்தப்பட்டவை அல்லவே அல்ல. பார்ப்பான் ஆதிக்கத்திற்கு வந்தவு டன் அவன் நலத்திற்கு ஏற்ப எப்படி அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண் டான்!

இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்து ஆதிக்கம் பெற்றவுடன் மனித தர்மம் என்னும் மனுதர்ம நூல் ஏற்படுத்திக் கொண்டு அதை மனித தர்மம் என்று சொல்லாமல் மனு என்கின்ற கடவுள் தன்மை கொண்டவரால் செய்யப்பட்டது என்று கருத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றி  மனித தர்மமாக ஆக்கி விட்டான். ஆரியர் இந்தியாவுக்கு வருகிற காலத்தில் அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்திருப்பார்கள்; ஒற்றுமையும் கூட்டு வாழ்வும் இல்லாமல் தனித்தனியாய்த் திரியும் மக்களாய் இருந்திருப்பார்கள்.

இந்த நிலை, யோக்கியமும் நாணய மும் நேர்மையும் அற்ற மற்றொரு காட்டு மிராண்டி மூர்க்கக் கூட்டமான ஆரியர்கள் தங்கள் மேன்மைக்கும் நமது இழிவுக்கும் ஏற்ற எல்லாக் காரியங்களையும் செய்து கொள்ளச் சாதகமாயிருந்தது.

மனுதர்ம சாத்திரத்தைப் படித்துப் பார்த்தாலே இந்த விஷயங்கள் நல்ல வண்ணம் யாருக்கும் புலப்படும். அக்கா லத்தில் நமது அரசர்கள் என்பவர்களும் காட்டுமிராண்டிகளாய்க் கொள்ளைக் கூட்டத்தார்போல் கையில் வலுத்தவன் ஆதிக்கமாய் இருந்தபடியால் அரசர் களைப் பல வழிகளில் அடக்கி ஆண்டு  அவர்களைத் தங்களுக்கு அடிமையாக ஆக்கி அவர்களைக் கொண்டே தங்க ளுக்கு வேண்டிய எல்லாக் காரியங்களை யும் செய்து கொண்டார்கள். உதாரணமாக மனுதர்மத்தில் நமது பெண்கள் எல்லோ ருமே தங்களுக்கு போகப் பெண்களாக, வைப்பாட்டிகளாக இருக்கத்தக்கவர்கள் என்றும், நாம் எல்லோரும் அவர்களுக்கு  அவர்களது தாசி மக்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்றும் எழுதி அமுல்படுத்தியதோடு நம்மையும் அதை ஒப்புக் கொள்ளும்படிச் செய்து நம்மில்  கருதும்படிச் செய்து கொண்டார்கள் என்றால் அன்றைய நமது நிலை எப்படி இருந்தது என்பது தெளிவாய் விளங்கு கிறது. இல்லையா?

இன்றைக்கும் சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் நம்மில் தாசிகள் என்று ஒரு கூட்டமும் அந்தக் கூட்டம் பார்ப்பனருக்கு எப்போதும் தயார் என்பது போன்ற போகப் பொருளாய் இருந்து வந்ததும் அப்பெண்களின் தந்தை  சகோ தரர் ஆகியவர்களே அக்காரியத்திற்குத் தரகர்களாயிருந்ததும் நாம் நேரில் கண்ட காரியம் தானே! அது மாத்திரமா! இன் றைக்கும் மலையாள (கேரள) நாட்டில் பெருங்குடி மக்கள் பெரும்பாலோர் தாங்கள் யாரைக் காதலனாகக் கொண்டு போகித்துக் கொண்டு இருந்தாலும் தமது காதலன் பார்ப்பான் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அரசர் குடும்பங்கள் பார்ப்பானைச் சம்பளம் கொடுத்துக் கணவனாகக் கொண்டிருக்கிறார்கள். கேரள அரசர்கள் இன்று வரை பார்ப்ப னனின் மக்களாகத்தாம் இருந்து வந்திருக் கிறார்கள். எனவே, தமிழ் மக்களின் இழி தன்மைக்கு இதைவிட வேறு உதாரணம் என்ன வேண்டும்! இதை ஏன் சொல்லு கிறேன் என்றால் பார்ப்பனரின் அட்டூழி யத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் காட் டவே சொல்லுகிறேன். இவ்வளவு மாத் திரமா! இன்றும் நம்மில் எத்தனை மடை யர்கள் மானமற்றவர்கள் பார்ப்பனர் களைச் சாமி என்றும், பார்ப்பனர் என்றும், கண்டதும் வணங்க வேண்டியவர்கள் என்றும் கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே, ஜாதி என்பது அயோக்கியர் களால் மோசடிக் கருத்துடன் தோற்றுவிக் கப்பட்டது என்றும், அதற்கு விஞ்ஞான முறைப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதைத் தமிழ் மக்கள் ஆண் பெண் எல்லோருமே வெறுக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன். ஜாதியை எந்த உருவில் எந்தக் கருத்தில் எங்குக் கண்டாலும் விஷ ஜந்துக்களை அழித்து ஒழிப்பது போல் ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியமாகும். இனியும் எத்தனை நாட்களுக்கு ஜாதி, ஜாதி முறை ஜாதித் தன்மை என்பவை இந்நாட்டில் இந்த நம் சமுதாயத்தில் இருந்து வருகின் றனவோ அத்தனை நாள்களுக்கும் நம் நாடு காட்டுமிராண்டி நாடு என்பதோடு நம் சமுதாயமும் மானமற்ற காட்டு மிராண்டிச் சமுதாயமேயாகும். எனவே, தோழர்கள் ஒவ்வொருவரும் இதை மனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண் டிக் கொள்ளுகிறேன்.

                --------------------------  தந்தை பெரியார்  "உண்மை" 14.2.1970

48 comments:

தமிழ் ஓவியா said...


மோடிக்கும் பாஜகவிற்கும் வாக்களிக்காதீர்கள்! புகழ் பெற்ற குடிமக்கள் அறிக்கை

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வையும் அதன் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியையும் படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என வாக்காளர்களைப் பல்வேறு துறை களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இடதுசாரிகளும் வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யக் கூடாது எனவும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்ய வேறு ஆற்றல்மிகு வேட்பாளர் இல்லாத போது மட்டுமே மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள வெளியிட்டுள்ள அறிக்கை யில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நரேந்திர மோடியின் அரசியல் பாசிச அரசியல் ஆகும்.

எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும்கூட மோடி ஆட்சிக்கு வந்தால் பாதிப்படையும். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்காத வரை நரேந்திர மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை அடைய காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.

இந்த அறிக்கையில் கையெழுத் திட்டுள்ள பிரமுகர்கள் வருமாறு:

அனில் பாடியா (இதழியலாளர்),

அன்ஜும் ராஜாபாலி (திரைக்கதை ஆசிரியர், ஆசிரியர்),

அருணா புர்டே (பெண்ணிய செயற்பாட்டாளர்),

ஹஸீனா கான் (முஸ்லீம் பெண்களின் உரிமைகள் இயக்கம்),

இர்ஃபான் இன்ஜினியர் (அகில இந்திய மதச் சார்பற்ற ஃபோரம்),

ஜாவித் மலிக் (பல்கலைக் கழக விரிவுரையாளர்),

காமயானி பாலி மஹாபல் (பெண்ணிய, மனிதஉரிமை ஆர்வலர்),

கண்ணன் சிறீநிவாசன் (பத்திரிகையாளர், ஆய் வாளர்),

மங்ளூரா விஜய் (எழுத்தாளர், சமூக ஆர்வலர்),

மனோகர் இளவர்தி (பிரஜா ராஜகிய வேதிகே),

எம்.கே. பிரசாத் (கேரள சாஸ்திர ஸாஹித்திய பரிஷத்)

பிரதீப் எஸ்டிவ்ஸ் (ஆய்வாளர், ஆலோசகர்),

ராம்தாஸ் ராவ் (பி.யூ.சி.எல் - பெங்களூர்),

ராம் புன்யானி (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஆர். கிறிஸ்டோபர் ராஜ்குமார் (நேஷனல் கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ் இன் இண்டியா),

ரிபக்கா குரியன் (வகுப்புவாத எதிர்ப்பாளர்),

ரோஹினி ஹென்ஸ்மேன் (அறிஞர், எழுத்தாளர்),

ஷேக் உபைத் (மனித உரிமை ஆர்வலர்),

எஸ். ஜனகராஜன் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்),

சுபாஷ் கடதே (நியூ சோசியலிஸ்ட் இனிஷியேட்டிவ்),

சுமி கிருஷ்ணா (பெண்ணியவாதி, எழுத்தாளர்),

உத்ய சந்திரா (அரசியல் ஆய்வாளர்),

உமா வி. சந்துரு (பி.யூ.சி.எல் - பெங்களூரு),

ஜஹீர் அஹ்மத் சயீத் (நரம்பியல் மருத்துவர்).



- சமரசம் 1-15 மார்ச் 2014

Read more: http://viduthalai.in/page2/76584.html#ixzz2vQ1SSgfR

தமிழ் ஓவியா said...


குறும்பா



இந்தியா..
நாணயமில்லா
நாடாய் போயிற்று!
ஒரு
காசு
இரு
காசு
மூன்று
காசு
அய்ந்து
காசு
பத்து
காசு
இருபது
காசு
இருபத்தைந்து
காசு
வரையில்...
நாணயமில்லையே
புழக்கத்தில்..!!

***
நாட்டிலுள்ள
கட்சிகளெல்லாம்
மரங்கள்போல..
அந்த
மரத்துக்குமரம்
தாவுகின்ற
குரங்குகள்போல
சில
அரசியல்வாதிகள்!

***
காசு பணம்
வருமான்னு
ராசி பலன்
பார்க்காதே..!
உழை...
உழைத்து..
முன்னேறு!!

***
எளியவனை
வலியவன்
தாக்குகிறான்
இறைவன்
என்ன பண்ணிக்
கொண்டிருக்கிறான்?
இதுவும் அவன் செயலோ?



- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page2/76586.html#ixzz2vQ1ccGi5

தமிழ் ஓவியா said...


இதுதான் ஆர்.எஸ்..எஸின் ஒழுக்கம்!


பெண்ணுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்த முன்னாள் பாரதிய ஜனதா அமைச்சர் தற்கொலை முயற்சி. ஆர் எஸ் எஸ் காரன் திருமணம் செய்ய மாட்டான் என்று கூறி திருமணப்பதிவை தவிர்த்தார். பெண்ணுடன் வைத்திருந்த மறைமுக தொடர்பு அம்பலமானதால் கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் எஸ்.ஏ ராமதாஸ் மைசூரிலுள்ள விருந்தினர் மாளிகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்ட தாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 54 வயதான ராமதாசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் தனது பதவிக்காலத்தில் மைசூரில் உள்ள ஒரு அரசு அதிகாரியிடம் திருமண ஆசை காட்டி கள்ளத்தனமாக தாலிகட்டி வாழ்ந் துள்ளார். அந்தப்பெண் தனது திரும ணத்தை பதிவு செய்யக்கூறிய போது பணம் கொடுத்து தன்னை மறந்து விடும் படி கூறினார். இது குறித்து அந்த விதவைப்பெண் பிரேம் குமாரி(பெங்களூரில்) பத்திரிகை யாளர் சந்திப்பில் தனக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையேயான உறவு பற்றி கூறினார். மேலும் அவர்கள் இடையே நடந்த போன் உரையாடல்கள் போன்ற வற்றையும் சான்றாக முன்வைத்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்த மறுநாள் முன்னாள் அமைச்சர் ராமதாஸ் தற் கொலைக்கு முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்பு ஒரு ஆங்கில நாளிதழுக்கு அந்தப் பெண் (பிரேம்குமாரி) மனநிலை சரியில் லாதவர் என்றும் அந்தப்பெண் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.

இது மாத்திரமே எனக்குத்தெரியும் மற்றபடி அவர் கொடுக் கும் சான்றுகள் அனைத்தும் போலி யானவை என்று கூறினார். ராமதாசுடன் பழகிய விதவைப் பெண் ணான பிரேம்குமாரி (30) இதுபற்றி கூறு கையில், ராமதாசை எனக்கு அய்ந்து ஆண்டுகளாக தெரியும். கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தவர் கடந்த நவம்பர் மாதம் மைசூரில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மங்கள் சூத்திரம்(தாலி) கட்டினார். அதன் பிறகு நான் திருமணத்தை பதிவு செய் வோம் என்று கூறிய போது அது என்னால் முடியாது ஏனென் றால் நான் ஆர் எஸ் எஸ் காரன், என்று கூறிவிட்டார். அதன் பிறகு என்னை விலக்கி வைக்க முயற்சித்தார்.

நான் பல முறை அவரிடம் திருமணம் குறித்து வற் புறுத்தினேன். இறுதியாக அவர் ஒரு கோடியே 75 லட்சம் தருவதாகவும் தன்னை விட்டு விலகி விடுமாறும் கூறினார். மேலும் தன்னுடன் எடுத்த புகைப் படம் வீடியோ அனைத்தையும் அழித்து விடுமாறும் கூறினார். மேலும் உரையா டல்கள் அடங்கிய வீடியோ காட்சிகளை ஊடகங்களில் வெளியிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்றும், ஊடகங்களில் பேசுவதை நிறுத்தாவிட்டால் விஷம் குடித்து விடுவதாகவும் செல்போனில் மிரட்டினார் என்றார். இதற்கு முன்னதாக நான் பணிபுரியும் அரசு அலுவலக உயரதிகாரி மூலமாகவும் என்னை மிரட் டினார் என்றும் தன்னுடைய பத்திரிகை யாளர் சந்திப்பில் கூறினார். கர்நாடகாவில் முதல் பா.ஜனதா அரசின் மருத்துவத் துறை அமைச்சராக பதவி வகித்த ராமதாஸ், 2013 சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்விய டைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பெண்களுக்கான ஆசாரே சமூக சேவை மய்யம் ஒன்றை மைசூர் நகரில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/76590.html#ixzz2vQ2XNz2E

தமிழ் ஓவியா said...


இவர்கள் பார்ப்பனர்கள்!


சமுதாயத் துறையிலும், அரசியல் துறையிலும், மொழித் துறையிலும், பண்பாட்டுக் கலாச்சாரத் துறையிலும் பார்ப்பனர்தம் அட்டகாசமும் கொடுமை களுமே ஒரு காலத்தில் மிகுந்திருந்தது கண்கூடு. சாகக் கிடந்த சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டு முகத்தான் ஆரியப் பார்ப்பனப் புரட்டுப் புல்லர்கள் தமிழ் மொழிக்கு இழைத்த தீங்கினையும், கேட்டினையும், கொடுமைகளையும், தமிழ்க் கொள்கை களைக் களவாடிச் சென்ற கயமைமிகு பேடித்தனத்தையும் கண்டுணர்ந்த அறிஞர் கள் தந்தை பெரியாரின் தன்னேரில்லாப் பேருழைப்பின் விளைவால் கிளர்ந்தெ ழுந்தனர்.

தந்தை பெரியார் சொன்னால் குதிக் கின்றீர். இவர்கள் கூற்றுக்கு என்ன சொல்கிறீர்?

ஆம்! அவர்கள்தம் உள்ளத்துப் பொங் கிய உணர்ச்சி மிகு கருத்துக்களை இதோ கேளுங்கள்...

.... எனினும், அவர்தம் செல்வாக்கின் பயனாய் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் மொழி பிறந்ததென்றும், தமிழ்மொழியி லுள்ள பல சொற்கள் ஆரிய மொழியின் சொற்களிலுள்ள முதனிலைகளைக் கொண்டே பிறந்தனவென்றும், தமிழர் ஆரியரிடமிருந்தே நாகரிகம் கடவுட் கொள்கைகள் பிற எல்லாம் கடன் வாங்கிக் கொண்டனர் என்றும் பிறவாறும் கூறித் தமிழைத் தனித் தியங்க வல்ல மொழி என்பதைத் தமிழ்மொழி வல்லாரும் மறந்து விடும்படிச் செய்து விட்டனர்.

மொ.அ.துரை அரங்கசாமி எழுதிய பண்டைத் தமிழ்நெறி என்னும் நூலில் பக்கம்.3

இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத் தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர் புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற் குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப் படியோ செய்து வைப்பர்.

மறைமலை அடிகள் எழுதிய வேளாளர் நாகரிகம் என்னும் நூலில் பக்கம் 21

பிராமணர்களின் தமிழ் வெறுப்பு தமிழ்மொழி குன்றுதற்கும் தமிழ் நூல்கள் பலவற்றின் அழிவுக்கும் காரணமாயிருந் தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பிராமண ராலும், 14ஆம் நூற்றாண்டில் மகமதியரா லும் அநேக நூல்கள் அழிக்கப்பட்டன பிராமணர் தாம் அழிக்க முடியாத நூல் களைச் சிதைவுபடுத்தினர்.

தமிழ் நூல்களை எடுத்து சமஸ் கிருதத்தில் மொழி பெயர்த்து பல கேடு செய்திருக்கின்றனர்.

ந.சி. கந்தையா (பிள்ளை) எழுதிய தமிழர் சரித்திரம் என்னும் நூலில் பக்கம் 221-222.

தமிழரசர்களிடம் அமைச்சர்களென வும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

வி.கோ. சூரிய நாராயண சாஸ்த்திரி என்னும் பரிதிமால் கலைஞர் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் பக்கம் 27.

திராவிட மக்கள் பொருள்களுக்கும், கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர் கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச் சொற்களல்ல. ஆராய்ச்சியில் சமஸ்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை என்று புலப்படுதல் கூடும்.

ந.சி. கந்தையா (பிள்ளை) எழுதிய தமிழ் இந்தியா என்னும் நூலில் பக்கம் 39

- தொகுப்பு: வை.மு. கும்பலிங்கன்

Read more: http://viduthalai.in/page4/76591.html#ixzz2vQ2h3ZZE

தமிழ் ஓவியா said...


மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு புரட்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் வசிப்பவர் கவுரவ் சிறீவாஸ்தவ், தனியார் அலுவலகத் தில் பணிபுரிந்து பிறகு சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வந்தவர். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு கை கால் மற்றும் இடுப்பிற்கு கீழ் உள்ள அனைத்துப் பாகங்களும் செயலிழந்து சக்கர நாற்கா லியே வாழ்க்கையாகிப்போனது. தன்னு டைய எந்த வாழ்க்கையில் இனி திரு மணமே நடக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்த சிறீவாஸ்தவாவின் வாழ்க்கையில் தனியார் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகவும் பிஸியோ தெராபிஸ்டாகவும் பணிபுரியும் சவிதா என் பவரின் மூலம் வாழ்க்கை வசந்தமானது. சிறீவாஸ்தவாவிற்கு பிஸியோ தெராபி பயிற்சிகொடுக்க நல்ல ஒரு நபரைத் தேடிகொண்டிருந்த போது சவிதா அறிமுக மானார். ஆரம்பத்தில் நட்பு முறையில் பழகிய சவிதா இறுதியில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு சிறீவாஸ்தவாவுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவம் குறித்து மணமகன் கூறும் போது 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் என்னுடைய முதுகெலும்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு என்னுடைய முடமான வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று இருக்காது என்ற முடிவிலேயே நான் வாழ்ந்து வந்தேன். சவிதாவின் அன்பை முதலில் நான் காதலாக நினைக்கவில்லை, நட்பாகத்தான் பழகிக்கொண்டு இருந் தோம். திடீரென ஒருநாள் சவிதா தன்னு டைய காதலை என்னிடம் தெரிவித்தார். நான் முதலில் அவருக்கு என்னுடைய நிலையை சொல்லி காதலை தவிர்த்து வந்தேன் ஆனால் அவர் உறுதியாக இருந்தார். எங்கள் வீட்டில் வந்து தன்னுடைய முடிவை தெரிவிக்கும் வரை சென்றுவிட்டார். அதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது அவர்கள் எனது ஊனம் மற்றும் எங்கள் சாதி என பல்வேறு காரணங்களை கூறி எங்கள் காதலை ஏற்க வில்லை. சவிதாவும் தன்னுடைய காதலில் மிகவும் உறுதியாக இருந்தார். இந்த 12 வருடங்களில் நானே சில முறை அவரிடம் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் உங்களு டைய வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர் கள் என்று கூட கூறிவிட்டேன். ஆனால் அவர் உறுதியாக இருந்து இன்று அனைவரின் ஒப்புதலுடன் என் மனைவியாக இருக்கிறார் என்றார். சவிதா இந்த திருமணம் பற்றி கூறும் போது ஆரம்பத்தில் ஒரு செவிலியராகத்தான் நான் அவருக்கு சேவை செய்து வந்தேன். ஆனால் அவருடன் பழகப்பழக இவருக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு துணை வேண் டும் அதுவும் அவரை நன்கு புரிந்து வாழும் ஒரு துணை அது இல்லாமல் அவரால் ஒரு நாளைக்கூட கழிப்பது கடினம். இந்த ஒரு மனிதாபமான மனநிலை எனக்குள் அவர் மீதான காதலை உரு வாக்கிவிட்டது. ஆரம்பத்தில் பல கேள் விகள் எனக்குள்ளே கேட்டுக்கொண் டேன். என்னுடைய பல நண்பர்களின் வாழ்க்கை அனைத்தும் என் கண் முன் வந்தது. அதே நேரத்தில் சிறீவாஸ்தவா வின் முகமும் என் மனக்கண்ணில் தோன் றியது. இறுதியில் நான் சிறீவாஸ்தவா வையே வாழ்க்கை முழுவதும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற முடிவே என் மனதில் நின்றது. அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை, எனது வீட்டில் இது பற்றி கூறிய உடனேயே பலத்த எதிர்ப்பு உருவாகியது, அவர்கள் போட்ட தடைகள் ஒன்று இரண்டல்ல முதலில் அவரின் ஊனம் பற்றி கூறி தடைசெய்தார்கள். அடுத்து சாதி அவர்கள் வேறு சாதி நாங்கள் வேறு சாதி, அதன் பிறகு சாதகம் சிறீவாஸ்த வாவின் சாதகத்தில் செவ்வாய் தோசம். இப்படி பல விதங்களில் தடைகளா கவே இருந்தது, 12 வருடங்கள் காத்திருந் தோம், இறுதியில் எங்கள் வீட்டாரின் அனுமதியும் கிடைத்தது, இருப்பினும் எனக்கு எங்கள் வீட்டாரின் மீது நம்பிக் கையில்லை ஆகையால் அவர்கள் சம் மதம் தெரிவித்த மறுநாளே 17 பிப்ரவரி இந்தூர் நீதிமன்றத்தில் அவரது மற்றும் எனது நண்பர்கள் சூழ திருமணம் செய்து பதிவு செய்துகொண்டோம். அதன் பிறகு இன்று (22.02.14) அன்று வீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டோம் என்றார். இந்த திருமணம் குறித்து மணப் பெண்ணின் தந்தை கூறும்போது எனது மகளின் தியாக உணர்வை நான் மதிக் கிறேன், நாங்கள் அவளுக்காகவும் அவளின் நல்ல எதிர்காலத்திற்காகவும் தான் சிறீவாஸ்தவாவிற்கான திருமணத் தைத் தடுத்து வந்தோம், ஆனால் அவளின் உறுதியான முடிவின் முன்பு எங்களின் வறட்டு கவுரவம் தோற்று விட்டது. அவள் நல்ல வாழ்க்கையை அமைத்துவிட்டாள் என்ற மன நிம்மதி இப்போது ஏற்பட்டு விட்டது என்றார்.

Read more: http://viduthalai.in/page5/76592.html#ixzz2vQ2xSxX5

தமிழ் ஓவியா said...


சூரியனை நிறுத்தி விட்டு பூமியைச் சுற்ற வைத்தவர்!


சூரியன் பூமியைச் சுற்றவில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று உலகில் முதல் முதலில் சொன்ன விஞ்ஞானி கோபர் நிக்கஸ். (1473-1543) 500வது பிறந்த தின விழா கடந்த மாதம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அந்த விஞ்ஞானி எத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. என்பதை நாமிப் போது எண்ணிப் பார்க்கக் கூட கடினமாக இருக்கும். கோபர் நிக்கசை மிகவும் கடுமையாக விமர்சித்துக் கண் டனக் கணைகளை ஏவியவர் மார்ட்டின் லுத்தர். ஆம், மதவுலகில் பெரும் புரட்சிக் காரராக விளங்கினாரே அதே மார்ட்டின் லுத்தர்தான்.

லுத்தர் கேட்டார்: - விண்வெளியும் சந் திரனும் சூரியனும் சுற்றவில்லையாம்; பூமிதான் சுற்றுகிறதாம்! இப்படி நிரூபித் துக் காட்டிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் இந்தப் புதிய வான சாஸ்திரி, ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண் டியிலோ கப்பலிலோ அமர்ந்திருப்பவன் ஒருவன்தான் நிலையாக இருப்பதாகவும் பூமியும் மரங்களும்தான் தன்னை நோக்கி வந்து போகின்றன என்றும் கற்பனை செய்வது போலல்லவா இது இருக்கிறது. ஆனால் இறைவனின் புனிதக் கட்டளை என்ன கூறுகிறது? நில் என்று கூறி இறை வன் ஆணையிட்டது சூரியனை நோக்கித் தானே ஒழிய பூமியை நோக்கியல்ல!

இன்னொரு மத மவுடீகரான ஜான் கால்வின் தொடர்கிறார்: உலகம் நிலை யாக நிறுவப்பட்டது. அது எப்படி சுற்ற முடியும்? எல்லாம் வல்ல இறைவனின் அதிகாரத்துக்கு மேலாக கோபர் நிக்கசின் அதிகாரத்தைத் தூக்கி வைத்து பாராட்ட எவனுக்குத் துணிச்சல் வரும்? இவ்வாறு மதவாதிகள் கோபர் நிக்கசைக் கண்டித்த தால்தான் அவரது கொள்கையைப் பின் பற்றிய புருனோ உயிரோடு எரிக்கப்பட் டார். கலிலியோவுக்கும் அதே கதி ஏற்பட் டிருக்கும். எப்படியோ தப்பித்தார். புராட் டஸ்டாண்டுகள் கத்தோலிக்கர்கள் போன்ற மதவாதிகள் மட்டுமா கோபர் நிக்கசைக் கண்டித்தார்கள்? வெறும் தத்துவ ஞானியான பிரான்சிஸ் பேகன் கூட கோபர் நிக்கஸ்மீது கண்டனக் கணை ஏவினாரே. என்றாலும் இறுதியில் வென்றது எது? விஞ்ஞானம் அல்லவா?

Read more: http://viduthalai.in/page5/76593.html#ixzz2vQ38HUFC

தமிழ் ஓவியா said...


இன்னுமா மதி மயக்கம்?

1. ஆரியர் சூழ்ச்சி: ஆரியர்கள் என் றைக்கு இந்த நாட்டில் காலெடுத்து வைத் தார்களோ, அன்று முதல் தமிழையும் - தமிழரின் கலையையும், கலாச்சாரத்தை யும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி கடந்த 2500 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- மறைமலையடிகள் (இந்தி எதிர்ப்பு மாநாடு 17.7.1948).

2. இந்து மதம்: இந்து தர்மத்தையும் மதத்தையும் ஒதுக்கித் தள்ள வேண்டும்; இந்து மதத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அவை தாழ்த்தப்பட்டவர் களை பணக்காரர்களின் அடிமைகளாக் குகின்றன. இந்து மதமே ஓர் பிணம் போன்றது.
- பசவலிங்கப்பா (கர்நாடகம்)

3. யார் குரங்குகள்? தென் இந்தியாவில் இருந்த மக்களே தாம் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- சுவாமி விவேகானந்தர், சொற்பொழிவு - இராமாயணம் என்னும் தலைப்பில் பக்.587, 589.

4. வெட்கக்கேடானது: பகுத்தறிவுள்ள மனிதன் இந்த 20ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் - ஏற்றுக் கொண்டும் நடப்பது மனித சமுதாயத்திற்கு மிக மிக வெட்கக் கேடான காரியமாகும்.
- பெரியார் ஈ.வெ.ரா.

5. கோயில் பற்றிய கருத்து: கோயில் என்பது திருடர்கள் தங்குமிடம் (ஏசு); கோயில் என்பது விபசார விடுதி (- காந்தியார்); கடவுள், மோட்சம், நரகம் என்பவை பிள்ளை விளையாட்டு (- இராமலிங்க அடிகள்).

6. கடவுள் தேவையில்லை: உலகில் துன்பத்தையும் பாவத்தையும் ஒரு கடவுள் உண்டாக்குமானால், அப்படிப்பட்ட கடவுள் நமது வணக்கத்திற்கு உரியதன்று -புத்தர்

7. சிந்தனைக்கு: திராவிடர்கள் கீழ் நிலைக்குப் போன காரணம் பார்ப்பனர் களின் ஆதிக்கமே (சாண்டர்ஸ் விதர் ஏசியா நூல்); திராவிடத்தில் இருள் சூழக் காரணம் ஆரியமே (கால்டுவெல் - விதர் ஏசியா நூல்); இந்தியாவின் சீர்கேட்டிற் குக் காரணம் பார்ப்பனர்தான் (- காரல் மார்க்ஸ் லண்டன், நியூயார்க் டெயிலி டிரிபியூன் இதழ் 10.6.1853) வெளியீடு).

8. இராவணனைப் பற்றி. வங்க ராமாயணத்தில், லங்காவதார சூத்திரர் என்ற நூலில், இராவணன் திராவிட மன்னன் என்றும், புத்த நெறியினன் என் றும், பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற அறி வியல் தத்துவவாதி என்றும் காணப்படு கிறது. - ஈ.வெ.ரா.

9. பார்ப்பனர்கள்பற்றி.. பார்ப்பனர் களின் இழி குணங்களைப்பற்றி முழுமை யும் வர்ணிப்பதற்கு எனது பேனா மறுக்கிறது
- அபேடூபே இந்துக்களின் பழக்க வழக்கம் பக்.306

10. இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை. நாம் அனைவரும் ஆரிய மதத் தைச் சேர்ந்தவர்களல்ல. இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர், நமக்கு, அந்நியர் கொடுத்ததேயாகும். ஆரியர்கள். ஆரியப் பழக்க வழக்கத்தை அனுசரிக்கிற வர்கள் ஆரியர்களேயாவார்கள். கண்டவர்களை யெல்லாம் ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்டதானது. ஆரிய மதத்தின் பல வீனமேயாகும்.

- திவான்பகதூர் வி. பாஷியம் அய்யங்கார் (8.12.1940ல் சென்னை, திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு தலைமைப் பிரசங்கம்

11. நட்ட கல்லும் பேசுமோ! நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே - சுற்றி வந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்!

- சிவவாக்கியர்

தமிழ் ஓவியா said...


இதற்குப் பெயர் தான் திராவிடர் கழகம் என்பது...


சிவகங்கை நகர் திராவிடர் கழகத் தலைவர் அ.மகேந்திரராசன். இவர் கடந்த 6.2.2014 அன்று சிவகங்கை நகரில் உள்ள சத்திய சீமான் திருமண மண்டபத்தில் நவ நீதகுமார் - பாலசுப்புலெட்சுமி ஆகியோ ரின் திருமண விழாவிற்குச் சென்றிருந்தார். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மண்ட பத்தில் ஒரே பரபரப்பு. என்னவென்றால் மணமகனின் மைத்துனர் (மலேசியாவி லிருந்து வந்திருந்தவர்) வெங்கடேஸ்வரன் என்பர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க கைச் சங்கிலி தொலைந்து போய்விட்டது என்பதாகும். மணமகனின் தாயார் மாரியம்மாள் என்பவர் நமது நகர் கழக தலைவர் அ.மகேந்திரராசனிடம் வந்து நகை தொலைந்துவிட்ட விவரத்தை சொல்லி திருமணத்திற்கு அபசகுனமான தடைபோல வந்துவிட்டதாகவும் கூறி மிகவும் வேதனைப்பட்டுள் ளார். அ.மகேந்திரராசன் அவர்கள் 30 ஆண்டுகள் காவல்துறையில் பணி புரிந்து, அதில் 13 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த அம்மாவிற்கு ஆறுத லும், தைரியமும் கூறி திருமணத்தை முடியுங்கள் விசாரித்து நகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியுள்ளார். ஒலி பெருக்கியில் விவரம் கூறி நகையைக் கண்டெடுத் தவர்கள் திரும்ப ஒப்படைக் குமாறு கோரியும், தனிப் பட்ட முறையிலும் ஒவ் வொருவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாக நகையை எடுத்தவர் அ.மகேந்திரரா சனிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். நகையை பெற்றுக்கொண்ட நமது நகர் கழக தலைவர் நகையை தவறவிட்ட வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து நகையின் அடையாளம் கூறச்சொல்லி அது சரியாக இருந்ததை தெரிந்துகொண்டு அதன் பின் பொதுமக்களின் கரவொலி யுடன் நகையை ஒப்படைத்தார். மணமகன் வீட்டார் அவருக்கும், இந்த நிகழ்வில் உடன் இருந்த சிவகங்கை தீண்டாமை ஒழிப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டிக்கும் பயனாடைகள் அணிவித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்ட மூத்த சுயமரி யாதைச் சுடரொளிகள் சண்முகநாதன், என்.ஆர்.சாமி ஆகியோரின் வழிகாட்டு தலின்படி மாணவப் பருவத்திலேயே நமது இயக்கத்தில் தொண்டாற்றிவரும் அ.மகேந்திரராசனை சிவகங்கை நகர் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Read more: http://viduthalai.in/page7/76619.html#ixzz2vQ4Qpn9H

தமிழ் ஓவியா said...


பல்லி என்ன பன்மொழிப் புலவரா?

மாற்றுக் கருத்துடைய அறிஞர்களை மதித்து வரவேற்கும் பண்பு இக்காலத்தில் அருகி வருகின்றது. மாநகர் மன்றங்கள் இவர்களை வரவேற்க மறுக்கின்றன. பல் கலைக் கழகங்கள் பாராமுகம் காட்டு கின்றன. இவற்றையெல்லாம் மீறி எவரா வது வரவேற்புக் கொடுத்துவிட்டால் அவர் கள் மீது அடக்குமுறைகள் பாய்கின்றன.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துத் தம்முடைய புரட்சிக்கருத்துக்களைப் பரப்பி வந்த நேரத்தில் அதிகாரவர்க்கம் அதிர்ச்சிய டைந்து போயிற்று; பழைமையைப் பற்றி நின்றவர்கள், பார்ப்பனர்கள், அவர் தம் அடிவருடிகள் பெரியாரின் கருத்துக்களைக் கேட்டு உறைந்து போனார்கள். என்றாலும் தமிழ்நாட்டில் பல நகராட்சி மன்றங்கள் அவருக்கு வரவேற்பளித்து அவரைப் பெருமைப்படுத்தின. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் அக் காலத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. அவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வரவேற்பு வழங்கிய முதல் நகராட்சி மன்றம் ஈரோட்டு நகராட்சி மன்றம் தான்! எவ்வளவு பொருத்த முடையது என்பதை எண்ணி ஆசிரியர் பெருமிதம் கொள்கிறார்.

இன்று பல்கலைக் கழகங்கள் பெரி யாரைப் பாராட்டுகின்றன; ஆய்வு செய் கின்றன. தமிழர் தலைவரை அழைத்துச் சொற்பொழிவாற்றுமாறு வேண்டுகின் றன. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கின்றன. இன்று அவரே ஒரு பல்கலைக் கழகத்தின் வேந்தர்! காலம் எவ்வளவு மாறியிருக்கிறது என் பதை எண்ணி நாம் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர் களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருது வழங்கப்பட்டது. விருதினை வழங்கிய டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்கள், ஓர் அழகிய கவிதை வடிவிலான வாழ்த்து மடலை வாசித்தளித்தார். அதில் சில பகுதிகள் வருமாறு:-

மூச்சில் தமிழ்; பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை; தெளிவான பார்வை
சமூகநீதிக் காவலர்; எங்கள் அன்பு ஆசிரியர்
கடலூரின் கருத்துக்கனல்; என்றும்
அடங்காத எழுத்துப் புனல்
அதிகாரம் பேசும் பூமியில் அரிதாரம் பூசாத மனிதர்
உண்மை உரைத்துப் புதிய
உலகம் செய்யும் போராளி!
அகில உலகில் முதல்முதலாய்ப்
பாவையருக்குத் தொழில் நுட்பக் கல்லூரி
கண்ட கல்விக் காவலர்,
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம்பதித்து நடப்பவன் மாமனிதன்!

இவ்வாறு அந்த வரவேற்பிதழில் டாக்டர் பக்தவத்சலம் அவர்கள் ஆசிரி யரைப் பாராட்டி மகிழ்கின்றார். கோவை கே.ஜி அறக்கட்டளை நடத்தும் கல்லூரிக் கலையரங்கில் பாராட்டு விழா; டாக்டர் பக்த வத்சலம் மிகுந்த நகைச்சுவை உணர்வு படைத்தவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது அளவற்ற அன்பு கொண்டவர் சமூக உணர்வு கொண்ட மருத்துவர்.

கடைசியில் தமிழர் தலைவர், பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்ல வருகின்றார். தமிழறிந்த மலையாள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்று கலந்து அமர்ந்திருந்தனர். தமிழர் தலைவரின் உரையைக் கேட்க அரங்கம் நிரம்பி யிருந்தது. தமிழர் தலைவர் அவர்களுக்கு மாணவர்களிடையே பேசுவதென்றால் பெருமகிழ்ச்சியாயிற்றே!

அழகு மிகுந்த இந்த அரிய கலைக் கூடத்தில் கல்வி பயில வந்துள்ள இருபால் மாணவர்களே, உங்கள் வாழ்க்கை மூடநம்பிக்கையில்லாத வாழ்க்கையாக விளங்க வேண்டும். மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்ற சமூகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சகுனத் தடைகளும், சடங்குகளும் மக்கள் வாழ் வைச் சீரழித்துக் கொண்டுள்ளன. காலை யில் வெள்ளைச் சேலையைப் பார்த்து விட்டால், போகிற வேலை உருப்படாது என்று திரும்பிப் போய்விடுகிறான். பூனை குறுக்கே போனால் அஞ்சித் திரும்பி விடுகிறான். பல்லி சொன்னால் பயப்படு கிறான்; பல்லிக்கு எத்தனை அறிவு என்று கேட்டால் தெரியாது; ஆனால் பல்லிக்குப் பயப்படுகிறான்; பல்லி என்ன பன் மொழிப்புலவரா? என்று ஆசிரியர் கேட் டதும் மாணவர் கையொலி அடங்க நீண்ட நேரம் ஆயிற்று.

விழா முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பல்லி என்ன பன்மொழிப் புலவரா? என்று கேட்டுக் கொண்டு சிரித்தபடியே, மறக்க முடியாத வாசகம் என்று ஆசிரியரைப் பாராட்டி மகிழ்ந்தனர். டாக்டர் பக்தவத்சலம் அவர்கள், எங்கள் மாணவர்கள் இத்தகையசொற்பொழிவை அறிவார்ந்த சொற்பொழிவை - இது போன்ற சொற்பொழிவை இதுவரை கேட் டதில்லை என்றார் புன்முறுவலோடு!

Read more: http://viduthalai.in/page8/76622.html#ixzz2vQ4vqDwh

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் மார்ச் - 8 எண்ணித் துணிக! எழுச்சி பெறுக!! தமிழர் தலைவர் அறிக்கை

இன்று (8.3.2014) உலக மகளிர் தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று மார்ச் 8 - உலக மகளிர் நாள்! உலகெங்கும் உள்ள பெண்கள் தம் உரிமைகளைப்பற்றி ஆய்வு செய்து கணக்கெடுக்கும் நாள்! மகளிர் பெற்றுள்ள உரிமைகளைக் கண்டு ஆண் இனம் - மனிதநேயத்தோடு எண்ணிப் பார்க்கும் நாளாகவும் இதனை அணுகுவதும் இன்றைய தேவை!

மண்ணுக்கும் கேடாய் மதிக்கப் பட்ட பெண் ணினம் இன்று விண்ணிலும் பறக்கும் ஆற்றலைப் பெற்று உயர்ந்துள்ளது என்பது உலக அளவில் உண்மைதான்.

என்றாலும், எம் நாட்டில்... எண்ணிப் பாருங்கள்

முதலில் பிறக்குமுன்பே (பெண்) இனப் படுகொலை நிகழ்த்துவதிலிருந்து தப்பிப் பிழைத்து கருவாகியபின் உருவாகி உருள வேண்டும். பிறந்த பின்பும் இன்னமும் இரண்டாந்தர நிலையில் வாழும் அவலம். உழைப்பு! உழைப்பு! கூலி பெறாத உழைப்பு.

படித்த பெண்கள் இன்று எங்கணும்! மடமையை இடித்த பெண்கள் எங்கணும் உண் மையே, என்றாலும் அவர்களுக்குத் தனித்த அடையாளம் எளிதில் கிடைக் கிறதா?
மானிடத்தின் சரி பகுதிக்கு இதுதானா பரிசு?

ஆணின் மேற்பார்வை முகவரி தானே! இன்றும் பெண்ணுக்கு இதைவிட அவலம் வேறு உண்டா? இது என்றும் உணரா வண்ணம் அவர்களுக்கும் போதைப் பொருள்கள் நகை நட்டு; அணிமணிகள், அலங்கார பொம்மை களாக்கி உலவ விட்டுள்ள நிலை!

பிள்ளை பெறும் இயந்திரங்கள் என்ற சுமக்கும் வேதனையை அவர்கள் மறக்க அடுத்த போதைப் பொருள் தாய்மையின் தன்னிகரற்ற சிறப்பு - என்று கவிதை மாலைகள் மூலம் அவர்கள் எப்போதும் தயார் நிலையில்!

படித்தாலும் சமையல் இயந்திரங்களாகவும் அலுவலக வேலை இயந்திரங்களாகவும் இயந்திரகதியில் எப்போதும்! இவரும் சம்பாதித்து இருவர் கையிலும் நிறைய என்ற அடுத்த போதை மாத்திரை படிக்காத பெண்ணாக இருந்தால் பாதிச் சுமை; படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணோ குடும்ப பாரம் அலுவலகப் பொறுப்பு என்ற இரட்டைகளின் சுமை தாங்கி; பல இல்லங்களில் மணம் வேறு; மனம் வேறு என்றாலும் சகிப்புத் தன்மை, குமுறவும் கூடாத கட்டுப்பாட்டின் இறுக்கம்!

இவைகளுக்கிடையில், அந்த அடிமை விலங்கொடிக்க தந்தை பெரியார் கண்ட புரட்சிப் பெண் முழங்கினால் அந்த முழக்கத்தைக் கண்டு வெறுக்கும் வெகுண்டெழுந்தான் பிள்ளைகள்! எத்தனை! எத்தனை!!

பெண் ஒரு புதிர் என்ற சொல் எப்போதோ கேட்ட குரல். ஆனால் உண்மையில் நம் பெண்கள் வாழ்க்கையைப் போல புரியாத புதிர், நிமிராத வளைவு, நிறைவடையாத உரிமைப் போர் இன்னமும் இங்கே!

உரிமை பெறுவதுகூட சலுகையைப் போல் என்ற உணர்வுடன்தான்! இன்றும் வாழும் பரிதாப நிலை!

நுகத்தடியைத் தேடும் மாடுகளுக்குக் கூட முட்ட உரிமை உண்டு.

ஆனால் ஆறறிவு படைத்த மனித குல பாதி என்ற போலிப் பெருமை பெற்ற பெண், தன் குரலை உயர்த்திப் பேசக்கூட இன்னமும் போராட வேண்டிய நிலையே உள்ளது என்பதே உண்மை! பெரியாரின் சமத்துவபுரமும், சுயமரியாதை பாதையும் தான் ஒரே தீர்வுக்கான விடை எண்ணித் துணிக எம் தோழிகளே! எழுச்சியும் ஏற்றமும் பெறுக!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
8.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76631.html#ixzz2vQ5E8Nv5

தமிழ் ஓவியா said...


இது என்ன கூத்து? பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்!


ஆனைமலை அருகே சோமந்துறை சித்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெற்றோர்களுக்கான பாத பூஜை விழா நடந்தது.

தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். மாணவர்கள் பெற்றோர்களை மதிக்கவும், பெற்றோர்களிடம் அன்பு செலுத்தவும், தெய்வமாக வழிபட வேண்டியவர்கள் என்பதை உணர்த்த இவ்விழா நடந்தது.

இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களின் பாதங்களைக் கழுவி, ஆசீர்வாதம் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். பெற்றோர்களை மதிப்பது என்பது பாத பூஜை செய்வதன் மூலம் அல்ல! - மனதளவில் இருக்க வேண்டிய ஒன்று - சடங்குகள்மூலம் நிலை நிறுத்தப் பார்ப்பது போலித்தனமானது - ஒரு வகையான மூடநம்பிக்கையும்கூட!

யார் காலிலும் யாரும் விழுவது என்பதெல்லாம் அசல் பிற்போக்குத்தனமானது பிள்ளைகளுக்கு நல்ல வழியைச் சொல்லிக் கொடுப்பீர் ஆசிரியர்களே!

பாத பூஜை என்பதெல்லாம் சுகாதாரக் கேடும்கூட - இது தடுக்கப்பட வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/76640.html#ixzz2vQ5Opdmr

தமிழ் ஓவியா said...


முடியாது

மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/76643.html#ixzz2vQ5gsa1c

தமிழ் ஓவியா said...


அங்கும் - இங்கும் - எங்கும் பெண்ணுரிமைக் குரல்


ஆண் சாமியார்களை எதிர்த்து
பெண் சாமியார்கள் புதிய அமைப்பு!


அலகாபாத்.மார்ச்.8- துறவு பூண்ட பின்னரும்கூட பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்சாமியார்கள் பெண்களுக்காக அகாடா என்கிற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்.

இந்துமதம் என்றாலே ஆணுக்கு பெண் அடங்கித்தான் இருக்க வேண் டும் என்கிற நடைமுறை இயல்பாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் கோயில்களுக்கு உள்ளே வருவது என்பதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.

துறவு பூண்ட பெண்களுக்கும் இதே நிலைதான். ஆனாலும், பொறுத்தது போதும் என்கிற மனநிலைக்கு பெண் களில் துறவுபூண்ட சாமியாரிணிகள் வந்து விட்டனர் போலும்.

அலகாபாத் கங்கைக் கரையில் கூடும் ஆண் சாமியார்கள் போலவே, பெண் சாமியாரிணிகள் பூஜைகள் மற்றும் இந்து மதச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
பெண் சாது மகந்த் திரிகல் பவந்தா என்பவர் பெண்களுக்கான அகாடா என்கிற புதிய அமைப்பு குறித்து கூறும் போது:

இதுவரை சாதுக்களுக்கான குழுக்கள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்துமே ஆண்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. ஆகவே, பெண்களுக்கான அமைப்பாக அகாடா தொடங்கப் படுகிறது.

இந்துத்துவ வரலாற்றில் அனைத்துப் பெண்களையும் இணைக்கின்ற முதல் அமைப்பு அகாடா என்று நம்புகிறேன். இந்து மதத்தில் முதல் அகாடா ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது. சமயப் பாதுகாப்புக்காக எட்டாம் நூற்றாண்டில் ஏற்படுத்தினார். தற்போது பெண் களுக்காக அகாடா தொடங்கப்படுகிறது.

ஆண் சாமியார்களால் பெண் சாமி யார்களும் விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி உள்ளது. காலத்திற்கு பொருந் தாத பழக்கங்களை பெண்கள்மீது திணிக்கிறார்கள்.
இந்து சாத்திரங்களில் பெண்கள் அகாடா ஏற்படுத்தக்கூடாது என்று எங் கும் இல்லை. இப்படி ஒரு அமைப்பை தொடங்குவதன்முலம் நாங்கள் ஆண் களிடமிருந்து விமரிசனத்தை எதிர் நோக்க வேண்டி வரும். பெண் சாமி யார்கள் மடங்களின் தலைமைப் பொறுப்பை எட்டும்வகையில் எழுந்து விட்டோம். ஆதிக்கத்திலிருந்து விடு படும்வரை அகாடா தொடர்ந்து தன் பணிகளை பெண்களுக்காக செய்யும்.

ஆண்கள் மட்டுமே மடங்கள் போன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும்வரை பெண்கள் மதிப்புக்குரிய பொறுப்புக்கு வரமுடியாது. பெண்களில் சாதுவாக, குறிப்பாக விதவைப் பெண்கள் சாது வாக வரமுடியுமா என்பதே கேள்விக் குரியதுதான்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க ஏராளமான ஆண், பெண் சாதுக்கள் வருவார்கள். நாசிக்கில் அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் அகாடா பங்கேற் கிறது என்று அகாடா அமைப்பைச் சேர்ந்த மகந்த் திரிகல் பவந்தா குறிப் பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/76646.html#ixzz2vQ6HAubg

தமிழ் ஓவியா said...


கிருஷ்ணசாமிப்பிள்ளை மறைந்தார்


நமது இயக்கத்திற்கு ஆரம்ப முதல் ஆதரவளித்து வந்தவரும் இயக்கத்திற்கு பணம் காசு தாராளமாய் செலவு செய்து வந்தவரும் கோயமுத்தூர் மகாநாட்டுக்கு காரிய தரிசியாய் இருந்தவரும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் திற்கு காரியதரிசியும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இயக்கத்திற்கும் உண்மையான உள்ளன்போடு கூடிய உதவியாளருமான நமது உண்மை நண்பர் கோவை, நெய்மண்டி கிருஷ்ணசாமிபிள்ளை அவர்கள் காலம் சென்றது மிகவும் துக்கப் படத்தக்க சம்பவமாகும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாதிரியான உள்ளன்போடு உழைக்கும் மற்றொரு நண்பரை கோவை யில் காணுவது மிகக் கடுமையென்றே சொல்ல வேண்டும். அவர்களின் மனைவியாருக்கும் தாயாருக்கும் தம்பிமார் களான நமது நண்பர்கள் திருவாளர்கள் சுப்பு, பஞ்சலிங்கம் ஆகியவர்களுக்கும் நமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ7ybceY

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

- குடிஅரசு - 12.02.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8Evp6z

தமிழ் ஓவியா said...

திரு.சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்தும் நன்றியுரையும்

கனவான்களே, சில உபச்சாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி இவருக்குக் கிடைத்ததற்கு திரு. பி.டி. ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேக மில்லை.

உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு டையவன் என்றால் திரு. சௌந்திர பாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டு களையும் கெடுத்துவிடும் எனக் கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன்.

அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக வேண்டு மென்றாவது கருதிக்கொண்டு ஒரு காரியமும் செய்ய வேண்டாமென்றே சொல்லுகிறேன்.

ஏனெனில், அது முடியாத காரியம், ஒரு சமயம் முடியாத தாயிருந்தாலும் அது யோக்கியமான மனிதனின் காரிய மாகாது ஒரு சமயம் யோக்கியமான மனிதனுக்கும் சாத்தியப் படுமானாலும் அதனால் நன்மையை விட கெடுதியே அதிகமாகும். மக்களில் பலதிறமுண்டு யோக்கியனும் அயோக்கியனும் உண்டு.

இருவரையும் திருப்தி செய்யக் கருதுவது நாணயமாகாது. ஆதலால் அடியோடு கஷ்டப் படுகின்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் சுகப்படு பவர்களுடைய ஆசையும் அனுபவமும் சற்று குறைந்தாலும் குற்றமில்லை.

நான் பொதுவாக இம்மாதிரி பதவி பெறு பவர்களை பாராட்டுகிற பழக்கமில்லை - ஆனால் திரு. நாடாரைப் பாராட்டுகின்ற காரணம் எல்லாம் அவர் கொடுமைப்படுத்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிலும் அதிகமாய்க் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமாய் நமது நாட்டில் வதைக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்களுக்கு விடுதலையும் சாந்தியும் ஏற்பட கொடுமை யை அனுபவித்த ஒருவருக்கு பதவி கிடைப்பது அனு கூலமானதென்றும் அந்த வழியில் நாடார் மன உறுதியோடு உழைப்பார் என்றும் நம்பி அவர் அடைந்த பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மையை உத் தேசித்து அவர்களைப் பாராட்டும் முறையில் இவர்களைப் பாராட்டுகின்றேன்.

என்றும் திரு. நாடார் அந்தத் துறையில் உறுதியுடன் நின்று இந்தக் காரியத்தை நடத்தத் தாட்சண் யமோ பயமோ சுயநலமோ பொது ஜனங்களிடம் கீர்த்தி பெற முடியாதே என்கின்ற சந்தேகமோ தோன்றுமானால் தயவு செய்து அந்த கணமே அந்த வேலையை இராஜினாமாக் கொடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது செய்கின்ற தொண்டே செய்ய வேண்டுமென்றும் சொல்லுகின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 25.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8PF9vk

தமிழ் ஓவியா said...

பெரியார் பொன்மொழி!

தமிழனுக்கு மற்றவர்கள் போல இனஉணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமையைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின்றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?

Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBhvF7p

தமிழ் ஓவியா said...

நேரு அறிக்கையும் மகமதலியும்

மௌலானா மகமதலி இந்தியாவுக்கு வந்ததுதான் தாமதம். உடனே நேரு அறிக்கையின் மேல் வெடிகுண்டு ஒன்று போட்டுவிட்டார். நேரு அறிக்கையைப் பின்பற்றினால் இந்தியாவுக்கு வரப்போவது சுயராஜ்யமல்ல, இந்து மகாசபை இராஜ்யமேயாகும் என்று மௌலானா மகமதலி கூறுகின்றார்.

தேசியப் பத்திரிகைகள் என்ற பார்ப்பனப் பத்திரிகைகள் மவுலானா கூறுவதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் மனமுவந்து ஒப்புக் கொள்ளுகின்றோம். நேரு அறிக் கைப்படி நாளை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் கொடுத்து விடுவார்களானால், இந்தியாவிற்கு பார்ப்பன இராஜ்யம் வந்து விட்டதென்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் நேரு திட்டத்தின்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், வகுப்புவாரித் தேர்தல்கள் என்ற பாது காப்புகள் கிடையாது. ஆகையால் தாழ்த்தப்பட்ட வகுப்பார், ஒடுக்கப்பட்ட வகுப்பார், கொடுமை செய்யப்பட்ட வகுப்பார், சிறுபான்மை வகுப்பார் எல்லாம் பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியின் கீழ் நசுங்க வேண்டியதே.

பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற காலத்திலேயே சில வகுப்பார், தெருக்களில் நடக்க முடியவில்லை, குளங்களிலும், கிணறுகளிலும், தண்ணீர் எடுக்க முடியவில்லை, எங்குப் பார்த்தாலும் சாதி வித்தியாசம் தலை விரித்தாடுகிறது என்றால், பிரிட்டிஷ் அரசாங்கம் போய் நேரு அறிக்கைப்படி இந்து மகாசபையின் ராஜ்யம் வந்துவிட்டால் என்ன அக் கிரமங்கள் நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? அப் போது இராம இராஜ்யத்தில் நடந்த அக்கிரமங்கள் எல்லாம் நடக்கும்.

பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் எவரும் படிக்கக் கூடாது. அவ்வாறு படித்தால் தூக்கில் போடவேண்டும் என்ற சட்டம் மதத்தின்பெயரால் ஏற்பட்டுவிடும். அம்மட்டோ! மனுதர்ம சாத்திரங்களிலுள்ள அநீதிகளெல்லாம் கிரிமினல் சட்டங்களாகவும், சிவில் சட்டங்களாகவும் மாறிவிடும். நம் பாடோ! ஐயோ திண்டாட்டந்தான்.

நேரு திட்டத்தால் இவ்வளவு கேடுகள் நேருமென்பதை அறிந்துதான் நாம் அவ்வறிக்கையைப் பிறந்தது முதல் கண்டித்து வருகின்றோம். மகமதலியும் அதனாற்றான் கண்டிக்கின்றார்.

இந்தியா பல மதத்தார், பல சாதியார் நிரம்பிய நாடு! ஒரு மதம், ஒரு சாதி, மற்றொரு மதம், மற்றொரு சாதியை நம்புவது கிடையாது. வகுப்புத் துவேஷம் எங்கும் தாண்டவமாடு கின்றது. இந்நிலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வகுப்புவாரித் தேர்தலும் இல்லை என்று நேரு அறிக்கை சொல்லுமானால், அவ்வறிக்கையை யார் பொருட்படுத்தப் போகிறார்கள்? அதை யார் ஆதரிக்கப் போகிறார்கள்!

எத் தனை சர்வ கட்சி மகாநாடுகள் என்று நேரு மகாநாடுகளைக் கூட்டினாலும், எத்தனை காந்திகளும், பெசண்டுகளும் நேரு அறிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த போதிலும், எழுதிய போதிலும் நேரு அறிக்கையை எவரும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்பது திண்ணம்.

நாம் நேரு அறிக்கையைக் கண்டித்தமையால் நம்மைச் சர்க்கார் தாசர்க ளென்று பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர் களின் கூலிகளும் எழுதுகின்றன; இன்னும் எழுதுகின்றன. இப்போது மவுலானா மகமதலி கண்டித்துவிட்டார்! எனவே, மவுலானாவையும் நம் கட்சியில் சேர்த்து விடுவார்கள். நமக்குக் கொண்டாட்டமே.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBoz4r2

தமிழ் ஓவியா said...


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டில் ஜெயலலிதாவின் உண்மை நிலை என்ன?


கேள்வி :- முஸ்லீம்களுக்கு இட ஒதுக் கீட்டினை அதிகப்படுத்துவது குறித்து அவர் களின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திற்கு அனுப்பி வைத்திருப்பதாக முதல மைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு. கழக ஆட்சிதான்.அந்த சதவிகிதத்தை அதிகப் படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால், அந்தக் கோப்பினை உட னடியாக வரவழைத்து ஆணை பிறப் பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார். முஸ்லீம் களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஜெய லலிதா 2004ஆம் ஆண்டு என்ன சொன் னார் தெரியுமா? முஸ்லீம்களுக்கு ஆந்திராவில் 5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர் தலின்போது இவ்வாறு வாக்குறுதி கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு ஜெய லலிதா அளித்த பதில் - இல்லையே, அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே? என்பது தான்.அதுமாத்திரமல்ல; செய்தியாளர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து, சிறு பான்மை சமுதாயமான முஸ்லீம் சமு தாயத்திற்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டதற்கு, முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல.

கிறிஸ்த வர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், ஜெயின்கள் இருக் கிறார்கள், புத்த மதத்தினர் இருக் கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர் களும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். முஸ்லீம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்தவர் களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறு பான்மையினரும் கேட்பார்கள்.

எனவே இவ்வாறு செய்வது இய லாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஏற்கெ னவே பல சலுகைகளை அனுப வித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூ கத்தினர் அந்தச் சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வில்லை என்று கூறினார். இந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது. குறிப்பாக அம்மை யாரின் நம்பிக்கைக் குரிய தினத்தந்தி நாளேட்டில் 23-7-2004 அன்று பக்கம் 3இல் வெளி வந் திருக்கிறது.

- கலைஞர் பதில்கள்
(முரசொலி 7.3.2014 முதல் பக்கம்)

Read more: http://viduthalai.in/page1/76543.html#ixzz2vQCYl0EB

தமிழ் ஓவியா said...


செய்திக் கொத்துகள்

பக்தீ!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல் மலை யனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்றது. 3 லட்சம் பேர் பங்கேற்பு என்று வண்ணப் படத்தோடு வெளியிட்ட தினமணி ஒன்றைத் திட்ட மிட்டு மறைத்தது ஏனோ?

நடைபெற்ற தீ மிதியில் பக்தர்கள் விழுந்து காயப்பட் டனர் என்பதுதான் தின மணியில் மறைக்கப்பட்ட செய்தி; தொலைக்காட்சிகள் பக்தர்கள் காயம் பட்ட சேதியை ஒளிபரப்பினவே! பக்தி காயப்பட்டால் பார்ப் பான் வீட்டு அடுப்பு எரியாதே!

மூடநம்பிக்கை!

மூடநம்பிக்கைக்கு ஓர் அளவேயில்லையா? திண்டிவனம் பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் அந்த அர சியல்வாதி பிறகு சோபிக்க மாட்டார் என்கிற ஒரு மூட நம்பிக்கை இருக்கிறதாம். திண்டிவனத்தில் மேம்பா லத்தை உருவாக்கிய, மத்திய அமைச்சர் வெங்கட்ராமனும் செஞ்சி ராமச்சந்திரனும் அவ்வாறு ஜொலிக்கா மல் போய் விட்டார்களாம்.

புற்று நோயைவிட மூட நம்பிக்கை மிக மிக மோச மானது என்பதில் அய்யமில்லை. திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணியேசெய்யப்படக் கூடாதா? திண்டிவனத்தின் மீது தனிப்பட்ட முறையில் அதிருப்தி கொண்ட ஆசாமி யாரோ கிளம்பி விட்டிருக்க லாம்.

தேவைதான்!

பொது மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சி ஆட்டோ ஓட்டு நர்களுக்கு அளிக்கப்படும் என்ற தகவல் - வர வேற்கத்தக்கது - தேவை யானது! பேரம் பேசுவது - ஒருமையில் பேசுவது - இன் னோரன்ன நிகழ்வுகள் அன் றாடம் நடைபெறும் காட்சி கள். மக்களின் தோழர்கள் ஓட்டுநர்கள் என்ற நிலை உருவானால் நாட்டுக்கே பெருமை சேர்க்கக் கூடிய தாக இருக்குமே!

மோடிக்கு மொத்து!

அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்குத் தான் குஜ ராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி வளர்ச்சியின் நாய கனாக இருக்கிறார் என்கி றார் ஆம் ஆத்மியின் ஒருங் கிணைப்பாளர் கேஜ்ரிவால்.

இடதுசாரிகளுக்கு திருமா. அழைப்பு

மதவாத சக்திகள் ஆட் சிப் பீடம் வருவதைத் தடுக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிகள் திமுக கூட் டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச் சித் தமிழர் தொல் திருமா வளவன் நேற்றைய செய்தி யாளர்கள் கூட்டத்தில்...

Read more: http://viduthalai.in/page1/76538.html#ixzz2vQChQtIp

தமிழ் ஓவியா said...


கூட்டணியில் இடதுசாரிகள் கலைஞர் பேட்டி


செய்தியாளர்: இடதுசாரி கட்சிகளுக்கு கூட்டணியில் சேருவது சம்பந்தமாக தி.மு.க. சார்பில் அழைப்பு விடப்படுமா?

கலைஞர்: அழைப்பு விடுக்கக் கூடாது என்று நான் எண்ண வில்லை. அவர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம். (முரசொலி- 7.3.2014)

Read more: http://viduthalai.in/page1/76540.html#ixzz2vQCpptFL

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க நியமனம்


அவ்வை நடராசனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

மத்திய செம்மொழி நிறுவனத் தின் துணைத் தலைவராக நியமிக் கப்பட்டுள்ள அவ்வை நடராசன் அவர்களுக்குத் தொலைப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி. ஆற்றல் மிக்க தமிழ் அறிஞரான ஒருவர் தக்க பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது பொருத்த மானது - வரவேற்கத்தக்கது என்றும் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

Read more: http://viduthalai.in/page1/76541.html#ixzz2vQD3EpKK

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/page1/76544.html#ixzz2vQDHT7eS

தமிழ் ஓவியா said...

பூசாரிகளின் யோக்கியதை

இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படு கின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது. அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறி வற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறையாக படித்தவர்களாக இருக்கின்றனர்;

இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற் சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப் பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்க வில்லை என்பது வருந்துதற்குரியது.

தெய்வத்தின் கருணை யைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத் திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை..

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படு கிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தெய்வத் துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார்.

தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரிய வில்லை, எந்த வகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page1/76560.html#ixzz2vQEsvUwq

தமிழ் ஓவியா said...

பவுத்தரின் மேன்மை

பவுத்த நெறியை உருவாக்கியவர் பவுத்தரேயானாலும் அவர் தனது போதனைகளுக்கோ, அல்லது தனக்கோ, தெய்வத்தன்மையைக் கற்பிக்கவே இல்லை.

மோஸஸ் தன்னை தேவ தூதனென்று கூறிக் கொள்ளவில்லை யென்றாலும், தன்னுடைய போதனை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகும் என்றும், ஆண்டவனாகிய ஜெகோவாவின் போதனைகளைத் தான் பரப்புவதாகவும்தான் கூறினார்.

இயேசு தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவும், தானே கடவுளின் மைந்தரென்றும் மார்தட்டிக் கூறிக் கொண்டார் ஆனால் கிருஷ்ணனோ. இதற்கு மேல் ஒருபடிச் சென்று தானே கடவுளென்று கூறினான்; கீதைதான் கடவுளின் உபதேசம் என்றும் கூறினான்.

புத்தர் இதுபோன்ற தெய்வீகத்தன்மையைக் கற்பிக்க முயன்றதே இல்லை. மாறாக, தன்னை சாதாரண மனிதன் என்றும், தன்னுடைய செய்தி மனிதனுக்கு மனிதன் வழங்கும் செய்தி தான் என்றும் கூறினார்.

உலக வரலாற்றிலேயே இதுபோன்ற குறிப்பிட்ட நெறிகளை உருவாக்கியவர் தன் நெறிகளை இத்தகைய சவாலுக்கு உட்படுத்திக் கொண்டது இதுவே முதல் தடவையாகும் எனலாம்.

Read more: http://viduthalai.in/page1/76560.html#ixzz2vQEyipD5

தமிழ் ஓவியா said...


இடைவிடாத போர் நடக்க வேண்டும்!

நமது கல்விப் புரட்சி வேலைகளில், மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும். இந்தப் போர் இடைவிடாமல், அமைப்புத் திட்டத்தோடும் உறுதியாய் நடத்தப்பட வேண்டும். தொழிலாளருடைய ஆதிக்கத்தில் கோயிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது.

பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு விரோதமாகச் செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்க வேண்டும்.

ஆனால், அதே சமயத்தில் மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் நடத்துவதற்கு சாத்தியமான முயற்சிகள் எல்லாம் செய்யப்படும். கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் பெருமையும் செல்வாக் கும் ஒழிக்கப்படும்.

- 1908ஆம் ஆண்டு சர்வதேச பொதுவுடைமைக் கட்சியின் 6ஆவது உலக காங்கிரசில் லெனின் பேச்சு.

Read more: http://viduthalai.in/page1/76560.html#ixzz2vQF5YRZd

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்தி வாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது.



திராவிடர் என்போர் யார்? திராவிடர் என்றால் பிறவியிலேயே பிறக்கும் போதே ஏற்படும் இனப்பெயர்தான். திராவிடர் என்பது ஜாதியல்ல; பிறவி ஆகும்.

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFUn2Ya

தமிழ் ஓவியா said...

மந்திரம் என்றால் என்ன?

மந்திரம் மகிமைமிக்கது; தெய்வீக சக்தி வாய்ந்தது; தெய்வங்களை வசீகரிப்பது ; அவர்தம் அருளை வாங்கித் தருவது; மோட்சத்துக்கு அனுப்புவது ; மக்களை மயக்குவது ; ஆக்கலும் அழித்தலும் வல்லது என்றெல் லாம் சொல்லுகிறார்களே, இவை உண்மையா? பொய்மை என்கிறார் பார்ப்பனரான தொல்காப்பியரே!



மந்திரம் என்றால் பொருளற்ற சொல்லடுக்கு, அச்சுறுத்தல் ஒலி என்கிறார். இவர் தமது இலக்கணமான தொல்காப்பியத்தில்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழிதானே மந்திரம் என்ப

(தொல்-பொருளியல் 174)

பேச்சில் வல்லவர்கள், கட்டளையிடும் (அச்சுறுத்தும் ஒலியில்), சொல் விளைக்கும் மறைவான பொருள் கொண்ட - பொருள் விளக்கமற்ற அடுக்குச் சொற்களே மந்திரம் என்பர் என்கிறார். விளக்கவுரையாளர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டும் குறிப்பிடுகிறார்.

திரிதிர சுவாகா கன்றுகொண்டு கறவையும் வந்திக்க சுவாகா இதனை மேலளவில் நோக்கும் போது பொருள் விளக்கமில்லை.

கன்றுகொண்டு என்பதற்குப் பதில், கன்று கொன்று எனக் கொள்ள வேண்டுமா? இப்படிக் கொண்டால் இது ஒரு சாவு, இழப்பு, சாபமந்திரமாகிறது. எதிரியின் கால்நடைகளை ஒழிக்கவும் என்பதே இதன் கருப் பொருள். அதாவது, தேவதையே! கன்றைக் கொன்று பசுவும் பால் கறக்காதுவற்ற அடித்து விடு என்பதே இதன் தெளிபொருள்.

இப்படி சொன்னதால் கன்று செத்ததா, பசு வறண்டதா என்ற விளக்கம் தரப்படவில்லை. எனவே, இது வெறும் அச்சுறுத்தல் சொல்லடுக்கே. பெண்கள் சூத்திரத்தால் நாசமாகப் போக என்பது போன்று வெற்றுக் குரல் ஒலியே.

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ

என்றுதான் முறையிட்டார் பக்தப் புலவரும். தந்திரம் செய் என்றாரேயன்றி, மந்திரம் போடு என்று கேட்க வில்லை. இதிலிருந்தே மந்திரத்தின் பயனின்மை வெள்ளி டைமலை.

Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFcRhIt

தமிழ் ஓவியா said...


எல்லாமே அந்த அம்மாதானே...!


என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக்கையான வாரிசு மணியம்மை. (25.9.1949)

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன். - விடுதலை 15.10.1962



இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக _ என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் _ வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன்.

இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாக எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள். - விடுதலை 13.2.1963

(அன்னை மணியம்மையார் பற்றி தந்தை பெரியார் கூறியவை)

தமிழ் ஓவியா said...

கருத்து


மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்ட தீர்ப்பு, கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டுவதாக அர்த்தம் அல்ல. கருணை மனுக்களின் மீது முடிவு எடுப்பதில் விளக்கிக் கூற முடியாத தேவையற்ற காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம். மரண தண்டனைக் கைதிக்கும் கருணை காட்டும்படி கோருவதற்கு உரிமை உண்டு. அதைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் அரசியல் சட்டக் கடமையாகும்.

- பி.சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

தமிழ் ஓவியா said...

ஜாதி, மத, மொழி, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து புதிய பார்வை கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கையின் சுழற்சியை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு குழந்தையின் தந்தையையும் தாயையும் பிணைத்து வைத்திருக்கும் பசை என்பதைப் புரிந்துகொண்டால் அற்ப மாயைகளை நம்பி ஒரு ஆணோ பெண்ணோ தவறான வழியில் செல்ல மாட்டார்கள்.

இந்திர விழா போன்ற பெயர்களில் காதலர் தினம் தமிழ்க் கலாச்சாரத்தின் அங்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. காதலைக் கொச்சையாகப் பார்ப்பதும் அழகாக _ கம்பீர மாகப் பார்ப்பதும் நமது பார்வையில்தான் உள்ளது.

- ஷாலினி, மனநல மருத்துவர்

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புக் குற்றம், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்காக பன்னாட்டு விசாரணைக் குழுவை நிறுவ வேண்டும். அதற்கான கருத்துகளை அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டமாகவோ முன்மொழிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது குறித்து சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த 2 தீர்மானங்களை இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.

- விஸ்வநாதன் ருத்ரகுமாரன்,
நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர்



காதலிப்பவர்களைத் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறவர்கள் திருமணம் என்பதைத் தாலி கட்டிக்கொள்ளும் சடங்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று பேசுகிறவர்களுக்கு தாலி என்பது தமிழ்க் கலாச்சாரம் கிடையாது என்பது தெரிவதில்லை. - சந்தியா, எழுத்தாளர்

தமிழ் ஓவியா said...

கொடுமை ...


வீட்டு வேலை செய்பவர்களைக் கொடுமைப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள் தங்களது முதலாளிகளால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு 528 வழக்குகளுடன் தமிழகம் முதலிடத்திலும் 506 வழக்குகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும் 412 வழக்குகளுடன் கர்நாடகாவும் கேரளாவும் அடுத்த இடங்களிலும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் 2012ஆம் ஆண்டு முதலிடத்திலிருந்த ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


பெரியாரின் தொலைநோக்கு

சீனாவில் 40 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு குடும்பம் ஒரு குழந்தைத் திட்டத்தை அந்த நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று ஒரு செய்தி. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்பது நாம் அறிந்ததுதான்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றித்தான் நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் கொண்டு வந்து இது சாத்தியமாகி இருக்கிறதே, அது எப்படி? 1970களில் அரசு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று பரப்புரை செய்தார்கள். ஆனால், சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே குடும்பக் கட்டுபாடு குறித்துப் பேசிவிட்டார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வில்லை என்றால் நாடு சிக்கலில் உழலும்; வறுமை தாண்டவமாடும் என்பது பெரியாரின் தொலைநோக்கு. அதனால் அவர் திருமண வீடுகளில் பேசும்போது, மணமக்கள் உடனே பிள்ளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; 5 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்; பின்னர் ஒன்றோ, இரண்டோ பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அப்போது எல்லா மதவாதிகளும், பிள்ளைப் பேறு என்பது கடவுள் அளிப்பது. அதனைத் தடுப்பதா எனக் குதித்தனர். ஆனால், கடவுளையே கடாசி எறிந்த பெரியார், பிள்ளை கொடுக்கும் கடவுள், கூடவே அதனைக் காப்பாற்ற ரெண்டு மாட்டையும் கன்றையும் அல்லவா தந்திருக்க வேண்டும்? வசதி வாய்ப்பைத் தரவில்லையே, ஏன்? அப்படித்தராதவன் பொறுப்பானவனா? என்று கேள்வி எழுப்பினார். தன் தோழர்களுக்கு அவர் வழங்கும் முக்கியமான அறிவுரையும் இரு குழந்தைகள் போதும் என்பதுதான்.

பல்லாண்டுகள் தமிழ் மண்ணில் பெரியார் செய்த பிரச்சாரத்தால் அரசின் திட்டம் வெற்றிகரமாக நடந்தது. இரு குழந்தைகள் திட்டம் இப்போது ஒரு குழந்தைத் திட்டம் என்றாகி, நாமே குழந்தைகள்; நமக்கேன் குழந்தைகள்? என்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.

சீனாவில் கணக்கெடுத்தது போல இங்கும் கணக்கெடுத்தால் பலகோடி பிறப்புகள் தடுக்கப்பட்டது தெரியவரும்.

குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த பின்னும்கூட பசியும் பட்டினியும் வறுமையும் இருக்கும் நிலையை நாம் காண்கிறோம். இன்னும் இலவச அரிசி கொடுக்க வேண்டிய நிலை. இத்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால்...? எல்லாம் கடவுள் செயல் என்ற நிலை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே...!

- அன்பன்

தமிழ் ஓவியா said...

ஜாதியிம் பெயரால் . . .


வட மாநில கிராமங்களில் ஆண் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படும் காப் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உத்தரவை குறிப்பிட்ட ஜாதியின் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். மதிக்காதவர் தாக்கப்படுவர்.

உத்தர பிரதேசத்தில் காப் பஞ்சாயத்துக்குப் பிரபலமானவர் மகேந்திர சிங் தியாகத். இவரது சிலை முசாபர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் என்ற இடத்தில் அவரது மகன் நரேஷ் தியாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. சிலையினைத் திறந்து வைத்த நரேஷ்,

காப் பஞ்சாயத்துகளின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது. எங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும்போது மிகவும் கவனமாக நீதிமன்றம் இருக்க வேண்டும். இருக்கின்ற பிரச்சினையை அதிகப்படுத்தக் கூடாது. ஒரே கோத்திர திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காதல், கத்திரிக்காய் எல்லாம் கூடாது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய நினைக்கும் ஜோடிகள் எங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கிறோம் என்று பேசியுள்ளார்.

வடமாநில அரசாங்கங்கள் காப் பஞ்சாயத்துகளை ஆதரிக்கின்றன. அண்மையில், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கு, அரியானா மாநில முதல் அமைச்சர் பூபிந்தர் சிங், காப் பஞ்சாயத்துகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கூடாது. அவை சமூக சேவையாற்றி வருகின்றன என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.

தமிழ் ஓவியா said...

திரும்பத் திரும்ப பேசுற நீ...


அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம், சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார்.

ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன.

இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை.

குஜராத்தின் வரவு செலவுக் கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளிகளுக்கான மானிய நிதியாகவும், சிறுதொழில் செய்வோருக்கு 2.3 விழுக்காடு மானிய நிதியாகவும்தான் அளிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும்தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை.

மோடியைப் பிரதமராக்கிடுவதில் பெரு முதலாளிகள்தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவைவிட கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2,473 கோடிதான். அதாவது, நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு. அதாவது, ரூ.49,000 கோடி நேரடி அன்னிய முதலீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள்.

தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள். கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ்நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள்தான் கிடைத்தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத்துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மனித வளக் குறியீட்டில், 12ஆவது இடத்தைத்தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப். 27, 2013). கார்ப்பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்குக் காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்றுதான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை மறந்தும் சொல்லவில்லை; அவரது பேச்சிலும், செயலிலும் சமூக நீதியைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்குக் கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கும் உணர்த்த வேண்டும்.

- முகநூலில் கோ.கருணாநிதி

தமிழ் ஓவியா said...

திரும்பத் திரும்ப பேசுற நீ...


அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம், சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார்.

ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன.

இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை.

குஜராத்தின் வரவு செலவுக் கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளிகளுக்கான மானிய நிதியாகவும், சிறுதொழில் செய்வோருக்கு 2.3 விழுக்காடு மானிய நிதியாகவும்தான் அளிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும்தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை.

மோடியைப் பிரதமராக்கிடுவதில் பெரு முதலாளிகள்தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவைவிட கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2,473 கோடிதான். அதாவது, நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு. அதாவது, ரூ.49,000 கோடி நேரடி அன்னிய முதலீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள்.

தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள். கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ்நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள்தான் கிடைத்தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத்துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மனித வளக் குறியீட்டில், 12ஆவது இடத்தைத்தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப். 27, 2013). கார்ப்பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்குக் காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்றுதான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை மறந்தும் சொல்லவில்லை; அவரது பேச்சிலும், செயலிலும் சமூக நீதியைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்குக் கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கும் உணர்த்த வேண்டும்.

- முகநூலில் கோ.கருணாநிதி

தமிழ் ஓவியா said...

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை!


*புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமன்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பரத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சி.டி. தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு, என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதைப் போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)
அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும், அப்படிச் செலவு செய்வதற்கும் அழகுப்படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். அப்படி ஏதாவது பயன்உள்ள அழைப்பிதழைத் தருவார்களா என்றால் அதுவும் இல்லை.

இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் புதுக்கோட்டை நண்பா அறக்கட்டளையின் பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். இவ்வாண்டு நடைபெற்ற அவரது திருமணத்திற்கான அழைப்பிதழை, பயன் முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்புக் காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்! என்கிறார் பிரகாஷ்.

இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது, நண்பா அறக்கட்டளையில் அவருடன் இருக்கும் ராதாகிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

- ச.பிரின்சு

தமிழ் ஓவியா said...

மதத்தின் பெயரால்...

கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ் பாத்திமா, சொந்த ஊரிலிருந்து மீமிசலில்(புதுக்கோட்டை மாவட்டம்) பேருந்து ஏற தனது அண்ணன் வரமுடியாததால் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் சென்று டிராவல்ஸ் அலுவலகத்தில் அமர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் வெளியில் இருந்துள்ளார். அப்போது அனிஸ் பாத்திமாவிடம் வந்த மூன்று இளைஞர்கள், யார், எங்க போற என்று கேட்டதும், இதைக் கேட்க நீங்க யார் என கேட்டுள்ளார் பாத்திமா.

உடனே அவர்கள், இந்துப் பையன்கூட ஓடப் போறியா? உன்னை விடமாட்டோம் என்றதும் தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்லியுள்ளார் பாத்திமா. முத்துக்கிருஷ்ணன் உண்மையை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.

பேருந்து கிளம்பி 5 நிமிடத்தில் 10, 15 இருசக்கர வாகனங்களில் வந்தோர் பேருந்தை மறித்து உள்ளே ஏறி, இஸ்லாம் மார்க்கத்தைக் கெடுக்குறயா? விபச்சாரம் செய்யப் போறயா என்று மிகவும் கேவலமாகப் பேசி அவரது உடைமைகளைத் தூக்கி வெளியே போட்டுள்ளனர்.

தன் அண்ணனுக்குத் தகவல் சொன்ன பாத்திமா, பேருந்தை விட்டு இறங்காதே என ஓட்டுநர் சொல்லியதைப் பொருட்படுத்தாமல், மற்ற பயணிகள் தன்னால் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து கீழே இறங்கிவிட்டார்.

சுற்றி நின்று தகாதபடி பேசிய 50 பேரைச் சமாளித்து, காவல் துறையினர் வரும்வரை எங்கேயும் போகாதே என்று செல்பேசியில் தனது அண்ணன் சொல்லியபடி அங்கேயே இருந்து சமாளித்துள்ளார்.

காவல்துறையினர் வந்ததும், கொஞ்சம் தள்ளியிருந்த மருந்துக் கடைக்குச் சென்று புகார் எழுத ஆரம்பித்தபோது முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் வந்து மருந்துக் கடைக்காரரை மிரட்ட, காவல் நிலையத்திற்கே சென்று புகார் எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது வந்த ஜமாத் தலைவர், ஒரு முஸ்லிம் பொண்ணு காவல் நிலையத்திற்கெல்லாம் வரக்கூடாது என்றதும் ஒரு முஸ்லிம் பெண்ணை விபச்சாரினு சொல்லலாமா? கைநீட்டி அடிக்க வரலாமா என்றதும், அவங்களை மன்னிப்புக் கேட்கச் சொல்றோம், புகார் வேண்டாம் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நாள் தனது அண்ணனுடன் காவல் நிலையம் சென்றவரிடம் செருப்பால வேனும்னாலும் அடி, வழக்கு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

எதற்கும் பிடி கொடுக்காத அனிஸ் பாத்திமா, அவர் சார்ந்துள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் சார்பு இயக்கங்களும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்து அமைப்புகள்அணி திரண்டதால், மதக்கலவரம் தன்னால் வந்துவிடக் கூடாது என்று நினைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினாலும், நடந்த நிகழ்வினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் கொடுமை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட பாத்திமாவைப் போல் துணிந்து அனைவரும் வீறுகொண்டு எழவேண்டும்.

நன்றி: நக்கீரன், பிப்.19-21, 2014

தமிழ் ஓவியா said...


துணிவின் சின்னம்! அன்னை மணியம்மையார்


துணிவின் சின்னம் நீவிர் !
காமராசரையே கலங்க வைத்தீர்
கழகத்தினர் உடலுக்காக ! அரசையே அதிர வைத்தீர்

இராவண லீலை நடத்தி! மிசா வன் கொடுமை உமது இதயத்தைத் தாக்கியது

துணிவோடு செயல் பட்டீர்! கழகத்தைக் காத்திட்டீர் !

வாழிய உம் புகழ் ! வாழிய வாழியவே!

- சோம. இளங்கோவன் பெரியார் பன்னாட்டமைப்பு.

Read more: http://viduthalai.in/e-paper/76726.html#ixzz2vc7uWHH3

தமிழ் ஓவியா said...


இந்நாள்.. இந்நாள்..


சென்னை மாநிலத் தின் பிரதமராக இருந்த நீதிக் கட்சியின் முக்கிய தலைவர் பொப்பிலி ராஜா மறைந்த நாள் (1978).

Read more: http://viduthalai.in/e-paper/76717.html#ixzz2vc84h3cK

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, மார்ச்.10- அன்னை மணியம்மையார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2014) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினை விடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செய் தார் தமிழர் தலைவர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களை 95 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கொண் டாடப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையாரின் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர் - தோழியர்கள் புடை சூழ சென்று மாலை அணிவித்தனர்.

இதையடுத்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கழகத் தோழியர் - தோழர்கள் வரிசையாக சென்று அன்னை மணியம் மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்தார். அதைத் தொடர்ந்து மகளிரணி சார் பிலும், பெரியார் மணி யம்மை மருத்துவமனை சார்பிலும், திராவிடன் நல நிதி சார்பிலும், பெரியார் திடல் பணியாளர்கள் திரா விடர் தொழிலாளர் அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மணி யம்மையார் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் நினைவி டத்தில் தமிழர் தலைவர் தலைமையில் அனைவரும் ஒன்றுகூடி மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

95 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களை வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் இப்பெரு விழாவில், அய்யா தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவரின் மறைவிற்கு பிறகு 5 ஆண்டுகள் தலைவராக இருந்து கழகத்தைக் கட்டிக் காத்த அன்னை மணியம் மையாரின் இப்பிறந்த நாள் பெரு விழாவில் அய்யா அம்மா விட்டுச் சென்ற பணிகளை கட்டுப்பாட்டு டன் செய்து முடிப்போம் என உறுதி கொள்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் தோழியர் புடை சூழ உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் முன் னாள் மத்திய அமைச்சர் க. வேங்கடபதி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேக ரன், வீ. அன்புராஜ், பிரச்சார செய லாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, கழகத் தலைமைச் செயற்குழ உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற்றும் மோகனா வீரமணி முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, திரா விட மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணி யம்மை, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி. பாலு, சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல் வம், பேராசிரியர் மங்கள முருகேசன், பேராசிரியர் ராஜதுரை, தமயந்தி ராஜ துரை, கழக வழக்கறிஞர் அணி அமைப் பாளர் வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி துணைச் செயலாளர் கோ.வீ. ராக வன், பெரியார் திடல் மேலாளர் வி.சீதாராமன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் சரவணன் பெரி யார் மணியம்மை மருத் துவமனை ஒருங்கிணைப் பாளர் டாக்டர் மீனாம்பாள், மேலாளர் குணசேகரன், திராவிடன் நலநிதி தலை வர் டி.கே. நடராஜன், பொது மேலாளர் அருள் செல்வன் மற்றும் பெரியார் பணி மனை தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/76718.html#ixzz2vc8H0clF

தமிழ் ஓவியா said...

பெண் உரிமைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் சிலைக்கு அடிமைச்சின்னமான தாலியை அகற்றி தங்கம்

வேலூர் மாவட்டத் தலைவர் சட கோபனின் மகள் குடியாத்தம் மகளிர் பாசறையைச் சேர்ந்த ரம்யா - மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன் ஆகி யோர், பெண் உரிமைக்காகப் பாடுபட்ட பகுத்தறிவு பகலாவனாம் தந்தை பெரி யாரின் சிலைக்காக அடிமைச் சின்னமான தாலியினை அகற்றி, அதிலிருந்த தங்கத் தினை எடுத்து, உணர்ச்சிபொங்க தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Read more: http://viduthalai.in/page-8/76740.html#ixzz2vc971lxm

தமிழ் ஓவியா said...


பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நீர் அழுத்த நோய்


க்ளாக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்சினைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், க்ளாக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கிற இந்தப் பிரச்சினையைப் பற்றி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாக கூறுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணில் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, க்ளாக்கோமா' ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒரு வித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்சினை இது. ஆண்களைவிட, பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்சினை. இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக் கப்படுகிறார்கள். 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சினையில் இரண்டு வகைகள் உண்டு. கண் ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந் தால் விளக்கொளியைப் பார்க்கிற போது, அதைச் சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும்.

தலைவலி, கண்களில் வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம். கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பில்லாவிட்டால், அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம்.

மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச் சினை வரும் போது, எப்போதுமே கண் மருத்து வரைப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்கடையில் போய் பரி சோதித்து, நீங்களாக கண்ணாடி வாங்கிப் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் பரி சோதிக்கும் போதும், கண்களின் பிரஷர் நார்மல் எனக் காட்டலாம். என்கிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9VhNG3

தமிழ் ஓவியா said...

கோடையில் குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுங்க!

கோடை வெயிலின் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆரம்பமே அசதியை தருவதாகத் தான் இருக்கிறது. பச்சிளம் குழந் தைகள் முதல் முதியோர்கள் வரை, அனைத்து வயதின ரையும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சில வழிகள்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தின் அளவு, அளவிற்கு அதிக மாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.

இதனை தடுக்க, ஆறு மாதத்திற்கு உட்பட்ட தங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தரும் இளம் தாய்மார்கள் உள்ளிட்டோர், தினமும், 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஆறு மாதத் திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, உணவு மட்டுமின்றி, அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா, வாந்தி பேதி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, கோடை காலம் என்றாலும், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பருக வேண்டும். குளிர்பான கடைகளில், பயன்படுத்தப் படும் தண்ணீரின் தூய்மையை பொறுத்தே, வெளி யிடங்களில், ஜூஸ், குளிர்பானங்களை குடிக்க வேண்டும். குளிர்பானங்களை முடிந்தவரை, வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும்.

உடம்பின் நீர்ச் சத்தை பராமரிக்க பயன்படும், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை, கடைகளில் வாங்கும்போது, அவற்றில், ஈ மொய்க்காமல், சுகாதாரமாக விற்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

நீர்சத்து நிறைந்த, இளநீர், நுங்கு ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற சரும நோய்கள், சின்னம்மை ஆகியவற்றுக்கு இலக் காகாமல் இருக்கலாம். நாகரிகம் என்ற பெயரில், ஜீன்ஸ், டீ-ஷர்ட் போன்ற இறுக்கமான ஆடைகளை அணியாமல், வியர்வை உறிஞ்சும் தன்மைக் கொண்ட, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9ds8li

தமிழ் ஓவியா said...


வெயிலுக்கு இதமான மண்பானைத் தண்ணீர்


வெயிலோட தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கு. அடுத்த மாதம் இன்னும் அதிக மாக வெயில் கொளுத்தும். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானம், ஜூஸ், பழங்கள், நுங்கு, பதனீர், தர்பூசணி, வெள்ளரின்னு குளிர்ச்சியானதை சாப்பிட்டு கிட்டுதான் இருக்கோம்.

என்னதான் சாப்பிட்டாலும், குடிச்சாலும் இந்த வெயிலுக்கு தண்ணீர்தான் அதிகமாக குடிக்க வேண்டி யிருக்கு. இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது. வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக் கணும்தான் ஆசைப்படுவோம். அதனால பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீர், குளிர்ந்த வாட்டர் பாக்கெட் போன்றவற்றை குடிக்கிறோம்.

இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜில் வைத்து அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் சளி பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.

இதை தவிர்க்க இயற்கையாக குளிர்ந்து இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்களில் குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன. இந்த மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9nZ9Gx

தமிழ் ஓவியா said...

கண்பார்வையை மேம்படுத்தும் பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவதேவைகளுக்காக பயிரிடவும் படுகிறது.

இக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி ஆகியவற்றுக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. பின்பு இந்நோய்கள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9vj2Pc

தமிழ் ஓவியா said...


ஓய்வு வயதை உயர்த்தினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே! புள்ளி விவரங்கள் பேசுகின்றன


புதுடில்லி, மார்ச் 10- அரை க்காசு சம்பளம் என் றா லும், அது அரசாங்க சம் பளமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அந்த அரசு வேலைவாய்ப்பை எண்ணி நாள்தோறும் எதிர் பார்த்துக் கிடக்கின்ற இளை ஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

அந்த இளைஞர் களுக்கு மிகப்பெரிய ஏமாற் றத்தை அளிக்கும் வகையி லான தகவல்களில் ஒன்று தான் மத்திய அரசால் அண் மையில் வெளியிடப்பட் டது. மத்திய அரசு ஊழியர் களின் ஓய்வுபெறும் வயது 60 இல் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளது என்று செய்திதான் அது.

மத்திய அரசு ஓய்வு பெறப்போகும் லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதி யத் தொகையை தள்ளிப் போடவே இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து அறி விக்க உள்ளது என்ற கார ணம் கூறப்பட்டாலும் இது நாடு முழுவதும் படித்து வேலைவாய்ப்புக்காக காத் திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் நடவடிக்கை என்ற குரல்களும் கூடவே ஒலிக்க தொடங்கியுள்ளன.

லீவ் சரண்டர், கிராஜு விட்டி, கம்யூட்டேஷன், ஜிபிஎப் என்று ஒவ்வொரு ஓய்வு பெறுகின்ற மத்திய அரசு ஊழியருக்கும் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வரை மொத்தமாக வழங்க வேண்டிய கட்டாயம் அர சுக்கு உண்டு.

வரும் இரண் டாண்டுகளில் அதிகபட்ச அளவில் ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதால் அதற் காக பெரும் தொகை செல விட வேண்டிய நிலையில் அதனை தள்ளிப்போட இந்த வயது வரம்பு அதி கரிப்பு பயனை கொடுக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது என்கின்றனர் விபரம் அறிந் தவர்கள்.

ஆனால் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டு, நாள்தோறும் நுழைவுத் தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் எழுதி வேலைக்காக காத்திருக் கின்ற இளைஞர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். ஏற் கெனவே வேலையில்லாத் திண்டாட்டம் நாடு சந்திக் கின்ற மிகப்பெரிய பிரச்சி னையில் ஒன்றாக இருந்து வருகிறது.

படித்து பட்டம் பெற்றவர்கள் வெளிநாடு வேலைகளை தேடிச் செல் கின்றனர். பல்வேறு துறை களில் சிறப்பிடம் பிடித்த இளைஞர்களை இந்தியா முழுமையாக பயன்படுத் திக் கொள்கிறது என்பதை விட, சரியாக பயன்படுத் திக்கொள்ளவில்லை என் பதுதான் உண்மை.

இதன் வெளிப்பாடு உலக அள வில் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் முக்கிய இடங்களில் இந்தியர்களின் பங்களிப்பு வெளிப்படை யாக தெரிய தொடங்கியுள் ளது.

60 வயதுக்கு மேல் எந்த மாநிலமும் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை நிர்ணயம் செய்யவில்லை. படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளாவில் ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு 56 தான். ஜார்க்கண் டிலும் 56 ஓய்வுபெறும் ஊழியர்களின் வயது வரம் பாக உள்ளது. தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது.

குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களிலும் அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது.

அப்படியிருக்க மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை மட்டும் 62 ஆக உயர்த்து வதின்மூலம் அது பிற மாநி லங்களுக்கும் மோசமான ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.

60 வயது நிரம்பியவர் களை இரண்டாண்டுகள் பணிக்காலத்தை நீட்டிக் கும் வேளையில் அடுத்த கட்ட பதவி உயர்வுடன் பணிக்கொடை உள்ளிட்ட அவர்களுக்கான நிதி செல வினங்களும் எகிறவே செய்யும். இது மறைமுக மாக மத்திய அரசுக்கு மேலும் செலவினத்தையே கொடுக்கும்.

இந்திய நாட்டில் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் ஆக உள்ளது. பாதிக்கும்மேல் 25 வய துக்கு மேற்பட்ட இளை ஞர்கள் உள்ளனர். மத்திய அரசில் தற்போது 31 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில் சுமார் 3 லட்சம் பேர் ஆண்டுதோறும் ஓய்வுபெறுகின்றனர்.

நாட்டில் இளைஞர்களி டம் வேலைவாய்ப்பு இல் லாத நிலை கிராமங்களில் 36.6 சதவீதமும், நகரங் களில் 26.5 சதவீதம் உள்ள தாகவும், கல்வி அறிவு பெறாத இளைஞர்களில் வேலை இல்லாதவர்கள் நிலை 37 சதவீதம் உள்ள தாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஓய்வு வயது வரம்பு அதிகரிப்பின் மூலம் ஆண்டுதோறும் 3 லட்சம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வேலை வாய்ப்புகள் தள்ளிப் போகும் நிலை ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/76721.html#ixzz2vcACWf6M