Search This Blog

3.3.14

பேராசையும் சோம்பேறித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை


-
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படு கிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லு வதுண்டு.
இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் புத்தி யுத்தி, செல்வம்,  இன்பம், ஆயுள், புகழ் முதலியவையும், மறுமையில் மேல் உலகத் தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென் மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்து வரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபக மும், சர்வமும் அறியும் ஞானமும் உடைய வர் என்பதும், அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என் பதுமானவை தான் பிரார்த்தனைக்காரர் களின் கருத்தாயிருக்கிறது.

இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்கு வது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுற மிருக்க, பொருள்களைக் கொண்டும் கட வுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த் தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது கடவுளுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படு வனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், பேராசை என்று தான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும் புவது; வேலை செய்யாமல் கூலி பெறுவது.படித்து பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த் தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்குப் போக வேண்டும் என்கிற வன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல் லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்று சொல்லுவதும் தான் மிக பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
சற்று முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும், பிரார்த் தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி, கடவுளை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூட சொல்லி ஆக வேண்டி யிருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரி யங்கள் செய்து, தகுதியாக்கிக் கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக் கும் ஒரு அறிவற்றவர் என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக் கும், ஒரு தற்புகழ்ச்சிக்காரர் என்றும் தானே சொல்ல வேண்டும்.
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவ மானது மனிதனைச் சோம்பேறியாக்கு வதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசன்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு, தண்ணீர் பாய்ச்சாமல், அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக் கொண்டு போகிற வனுக்கும், யோக் கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர் பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி கர்மபலன் கொடுக்கக் கூடிய சர்வசத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதியிருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலை யில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணிய மாட்டான்.

ஏனென்றால், சகல காரியமும் கடவு ளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும், கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும், (அதா வது விதியின்படி தான் முடியும் என்றும் தெரிந்து இருந்த ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால்) பிரார்த்தனை செய் வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டு கிறோம்.

சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவல மான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன்; அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலே பிரார்த்தனை இருந்து வருகிறது.

இப்படியேதான், இதையே தான் பிரார்த் தனையைத் தூண்டும் ஆதாரங்களும், சாஸ்திரங்களும், கரும காண்டமும் கூறு கின்றன.
இதைப் பார்த்தால், இவர்கள் எல்லோ ரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக் காரர்கள் எல்லோரும் கடவுள் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்று தான் சொல்லி ஆக வேண்டும். சிலர் சொல்லு கிறார்கள், மனிதன் பாவி, அவன் பாவ கர்மத்தைச் செய்து தான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்கிறார்கள்.

நான் பாவம் செய்து தான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள் ளுவதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத் துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்று தான் சொல்ல வேண்டும்.
பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட் டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத் தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்து லாபம் அடைவதற்குத் தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்கு ஆக பூஜையும், பிரார்த்தனையும் ஏற்படுத் தப்படவில்லை.

குரு - (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கோ, பாதிரிக்கோ, முல்லா வுக்கோ ஏதாவது வேலை உண்டா என் பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கை யும், எண்ணமும், சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும், எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான்.

மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது, மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா? அல்லது குருவும், புரோகிதனும் பிழைக் கவா? என்பது யோசித்தால் விளங்காமற் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல, மனிதன் வீணாய் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம்.

சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது?

என்பவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமற் போகாது.
 ---------------------------------------பூசை புரட்டு குறித்து பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - "விடுதலை" 20.11.1953.

19 comments:

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் சிந்திக்குமா?

இன்றைக்கு 16 ஆண்டு களுக்கு முன் குமுதம் வார இதழில் (2.7.1998) ஒரு சுவை யான அம்சம்.

ஒரு கைரேகை படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த ரேகைக்கு உரியவர் எப் படிப்பட்டவர்? என்ற கேள் வியை எழுப்பி- அடுத்த வாரம் காண்க என்ற அறிவிப்பும் இருந்தது. நான்கு பிரபலமான சோதிடர்களிடம் அந்தக் கைரேகையும் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு சோதிடரும் ஒவ்வொரு வகையில் தங்கள் கை வரிசையைக் காட்டினர்.

ஒருவர் சொன்னார். இவர் கையில் உள்ளதைக் கொடுக்கக் கூடியவர்; கைநீட்டிக் கேட்க மாட்டார் - வைராக்கியமான ஆள் என்று கூறியிருந்தார். இப்படி நான்கு சோதிடர்களும் வெவ்வேறு வகையில் ஜாதகம் கணித்தனர்.

கடைசியில் குமுதம் இதழே உண்மைக் குட்டை உடைத்து விட்டது.

அந்தக் கைரேகைக்கு உண்மையிலே சொந்தக் காரர் யார் தெரியுமா? குமுதம் தான் வெளியிட்டது.

பிச்சைக்காரர் ஒருவரின் கைரேகை அது; எந்த ஒரு சோதிடரும் அது பிச்சைக்காரரின் ரேகை என்று சொல்லவில்லை. கை நீட்டி வாங்க மாட்டார் என்றாரே ஒரு சோதிடர் - உண்மை என்னவென்றால் அதற்கு நேர் எதிராக கைநீட்டி வாங்கக் கூடிய பிச்சைக்காரர் அவர்! இப்பொழுது நினைத்தாலும் விலா நோகச் சிரிப்பை வரவழைக்க கூடியது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் சொல்லிக் கொடுக்கப் போவதாக அறிவிக் கப்பட்டுள்ளதே

அதில் கைரேகை சோதிடம், கிளிசோதிடம், தாயம் உருட்டும் சோதிடம் போன்ற வகையறாக் களும் இடம் பெறுமா?

மக்களின் வாழ்க்கைக் கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர் காலத்தைக் கணிக்க முடி யும் என்றும் கூறப்படுவ தற்கு எந்தவிதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.

சோதிடம் பொது மக்களிடையே மூடத் தனத்தை வளர்த்துப் பகுத்தறிவைப் பாழாக்கு கிறது. இந்தச் சோதிடத்தில் ஏமாற்றுக்கு எதிர் காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டு தி ஹுமனிஸ்ட் ஏட்டின் சிறப்பி தழிலே அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுள் 18 பேர் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (தினமணி 4.9.1975)

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் திருந்துமா? சோதிடப் பாடத் திட்டத்தைக் கைவிடுமா? எங்கே பார்ப்போம்!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/76239.html#ixzz2urAjO6e0

தமிழ் ஓவியா said...


அலைப்பேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?


சென்னை.மார்ச்.2- அலைப்பேசி பயன்படுத்து வோருக்கு வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகின்றது என்பதை அறிய வேண்டும் என்றால் ஏற்கெனவே அலைப்பேசியின் தொடர் புகள் பட்டியலில் பெயர் பதிவு செய்திருந்தால் அழைப் பவர் பெயர் திரையில் தெரியும். பதிவு இல்லாமல் இருந்தால் வெறுமனே அழைப்பவரின் எண் மட்டுமே தெரியும்.

அலைபேசியைப் பயன் படுத்துவோர் ட்ரூ காலர் (True Caller) என்கிற அழைப் பவர்களின் பெயரைக் காட் டும் நவீன வசதியை தர விறக்கம் செய்துகொண் டால் வரும் அழைப்பாளர் களின் பெயர், அவர் அலைப் பேசியில் இல்லாவிட்டா லும் திரையில் அழைப்ப வர் பெயர் தெரியும்.

இது தான் ட்ரூ காலர் வசதி ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் பழக்கங்களுக்கு ஏற்ப மாற்றுப்பெயர் கொடுத்து பதிவு செய் திருப்பார்கள். அப்படி தனிப்பட்ட விஷய மாக உள்ள அனைத்தும் பொதுப் படை ஆகிவிடும் நிலை ட்ரூ காலர் மூலம் ஏற்பட்டு விடும். ஒருவர் தம்முடைய அலைப்பேசி யில் பெயர் பதிவு இல்லாத வர் அழைக் கும்போது புரிந்து கொள்ள முடியாமலும் திண் டாடும் நிலையும் ஏற்படுகிறது.

இதில், தனிப்பட்ட முறையில் உள்ளவை பொது வாகும்போது செல்லப் பெயர், புனைப்பெயர் என்று இருப்பவை பொது வாகி விடுவதால் தனிப்பட் டவர்களின் தனிமை, சுதந் திரம் அபகரித்துப் பறிபோ கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76237.html#ixzz2urBJrr6n

தமிழ் ஓவியா said...


சாக்லெட் சாப்பிடுவீர்!

லண்டன், மார்ச் 2- டார்க் சாக்லெட்டுகள் சாப் பிடுவது இதயத்தின் ஆரோக் கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந் துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றம் நுண்ணூட் டக் கழகம் மற்றும் வாகெ னிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் இது தொடர்பான ஆய்வில் ஈடு பட்டனர். அதில், டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரிய வந்தது.

டார்க் சாக்லெட்டு களைச் சாப்பிடுவது, தமனி களின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத் தத்தின் வெள்ளை அணுக் கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது,

தமனிகளின் விரைப்புத் தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும் தன் மையும் தமனி வீக்கத்துக் குக் காரணமாக அமை கின்றன. இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆய்வில் ஈடுபட்ட டைடெரிக் எஸ்ஸெர் கூறி யதாவது: டார்க் சாக்லெட் டுகளில் உள்ள பிளாவனல் கள் உணவு அருந்தும் தூண் டலை நிறுத்துகின்றன. இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கிய மானவைதான் என்றார்.

நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண் டனர். அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற் கண்ட முடிவுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/76238.html#ixzz2urBWgwIi

தமிழ் ஓவியா said...


கேலி நாயகர்!

உப்பு சத்தியாக்கிரகத்தில் வ.உ.சி. பங்கேற்றார் என்று சொல்லி, பெரும் கேலிக்கு ஆளானவர் - நரேந்திர மோடி. அலெக்சாண்டர் தட்சசீலம் வரை படையெடுத்து வந்தார் அங்கு விரட்டியடிக்கப்பட்டார்.

என்று கூறி பரிகாசத்துக்கு ஆளான வரும் அவரே! (கங்கையைத் தாண்டி வராதவர் அலெக்சாண்டர் என்பது தான் உண்மை வரலாறு) சந்திரகுப்தர் குப்தர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வசமாகச் சிக்கிக் கொண்டார். (உண்மையிலே அவர் மவுரிய வம்சத்தைச் சேர்ந்தவர்) இப் பொழுது என்னவென்றால் பகத்சிங் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறி சிரிப்பாய் சிரிக்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urBmtRc7

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவில் நாத்திகர் என்பதால் மறுப்பா!

சாண்டியாகோ, மார்ச்.2- கலிபோர்னியாவில் வசிக் கும் பெண்மணி ஒருவ ருக்கு அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்தில் சான்றளிக்கும் அலு வலர்கள் அப்பெண்மணி நாத்திகர் என்பதால் குடி உரிமைச் சான்று அளிக்க மறுத்துள்ளனர். இச்சம் பவம் மனித உரிமை அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்ரியானா ரேமிரேஸ் என்பவர் தன்னை ஒரு மத மறுப்பாளராக குடிஉரிமை கோரும் படிவத்தில் குறிப் பிட்டுள்ளார். இதனால், மதமறுப்பாளரான அவர் அமெரிக்காவின் பாதுகாப் புக்காக சட்டப்படி ஆயுதம் ஏந்த மறுத்துள்ளார் என்று கூறி, அவர் குடி உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க மனித நேய அமைப்பு தன்னை இவ்வழக்கில் இணைத்துக்கொண்டு அப் பெண்மணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளது.

அமெரிக்க குடி உரிமை சான்று கோரும் படிவத்தில் நாட்டுக்காக ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தால் அதற் கான உறுதியை அளிக்க வேண்டும் என்று உள்ளதாம். ஒரு பெண்ணாக வயது 30களின் மத்தியில்தான் ஆயுதம் ஏந்தி ஒருவரைக் கொல்வதை எதிர்த்து வந் துள்ளதாகவும், க்யூ 36-38 வரையில் படிவத்தில் வெறுமனே ஆம் என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால், நீதியை, மனி தரைக் கொல்வதை மிகக் கடுமையாக எதிர்த்து வந் துள்ளேன். அப்படி இருக் கும்போது அதுபோன்ற உறுதியை தன்னால் அளிக்க முடியாது என்று நீதிமன்றத் தில் விளக்கமாகத் தெரிவித் துள்ளார். இந்நிலையில் அமெ ரிக்க மனித நேய அமைப்பு இவ்வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்துள்ளது.

அப் பெண்மணி மதமறுப் பாளர், மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர் என்ப தால் குடி உரிமை மறுப்பது அரசமைப்புக்கு எதி ரானது என்றும் அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்திற்கு ஏ.எச்.ஏ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76235.html#ixzz2urByKjMM

தமிழ் ஓவியா said...


அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!

ஜெனிவா, மார்ச் 2- அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்குகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார, மொழி, மத ரீதியாக சம உரிமை வழங் கப்படவில்லை. ஆகவே தமிழர்கள் தனி நாடு கேட்டு போராடத் தொடங்கினார் கள். இதில், முன்னணியில் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். இவர்கள் தமிழர் களுக்காக தனியாக ஒரு அர சாங்கத்தையே நடத்தி வந்தார் கள். ஆனால், இவர்களை பயங்கரவாதிகள் என இலங்கை அரசு முத்திரை குத்தியது.

பிற நாடுகளிலும் இதைப் பரப்பியது. அதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய கண் டத்து நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தன.

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி, தகர்த்தனர். இந்த சம்பவத் திற்கு பிறகு அரசாங்கத் திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெரும்பாலான இயக்கங்களை அமெரிக் காவும், பிற மேலை நாடு களும் தீவிரவாத இயக்கங் களாக பார்க்கத் தொடங்கின. அதன் விளைவாகத்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தடை விதிக்கப் பட்டது.

நிதி திரட்டவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வேண் டும் என அய்ரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண் டுள்ளது. புலிகளுக்கு எதி ரான தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வரு கின்றது. இதுபற்றி விரை வில் உத்தரவு பிறப்பிக்கப் பட உள்ளது.

இத்தாலி நீதிமன்றமும்...

இதே போல் இத்தாலி நீதிமன்றமும் விடுதலைப் புலிகளை, ஒருவிடுதலை இயக்கத்தினராக அறிவித் துள்ளது. இத்தாலி நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நேப் போலி என்ற நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த நீதிமன்றம், கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

விடுதலைப்புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக் காகப் போராடி வந்துள் ளார்கள். அவர்கள் தனி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி ஆட்சியை நடத்தி வந்துள் ளார்கள்.

கல்வி, நிதி, நீதி, காவல் உள்ளிட்ட அனைத்துத் துறை களையும் நடத்தி வந்துள் ளனர். ஆகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாம் ஜெனிவா சாசனப்படி, ஒரு விடுதலை இயக்கமாகவே கருத வேண்டும்.

பயங்கரவாதிகளாக பார்க்க முடியாது. ஆகவே இத்தாலி தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள்மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் விசாரித்தார்கள்.

இவர்கள் நேப்போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே, இத்தாலி நாட்டி லும் விடுதலைப்புலிகளுக் கான தடை நீங்கவுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76234.html#ixzz2urC8INbF

தமிழ் ஓவியா said...

ஆனந்த சுதந்திரம்

சென்னை மாநகரில் உள்ள 57 மாநகராட்சிப் பள்ளி களில் 25 ஆயிரம் மாண வர்களுக்குக் குடிநீர்க் குழாய் 157 மட்டுமே உள்ளனவாம். 67 ஆண்டு சுதந்திரத்தில் மாணவர்களுக்கு குடிநீர் அளிப் பதில்கூட இந்த அவலம்! இதை விட வேறு குடி நீர் தான் நாட்டில் ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCMHxNf

தமிழ் ஓவியா said...

பா.ம.க.வின் பரிதாபம்

மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் மத்தியில் 5 ஆண்டுக் காலம் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சாதித்தவை பற்றி (சாதனை மனிதன் அன்புமணி ராமதாஸ் - பக்கம் 28) ஒரு பிரசுரம் வெளியிடப்படுகிறதாம் - வெளி யிடுபவர் யார் தெரியுமா?

கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அடையாளங் காட்டப்படுபவரும், ஆர்.எஸ்.எஸ். ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்திதான் அவர்! பெரியாரை யும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டே ஜாதி வாதத்தையும், மதவாத ஆர். எஸ்.எசையும் இணைத்தும் இரட் டைக் குதிரையின்மீது ஒரே நேரத்தில் வேறு யாரால்தான் சவாரி செய்ய முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCWYRIV

தமிழ் ஓவியா said...


மோடி சதிகாரர் சொல்வது நீதியரசர்


- குடந்தை கருணா

பேராசிரியர் ஹேமண்ட்குமார் ஷா எழுதிய சச்சாய் குஜராத் கி எனும் நூலில், குஜராத் வளர்ச்சி என்பது வெறும் கற்பனை என ஆதாரத்துடன் எழுதி உள்ளார். இந்த நூலை அண்மையில், அகமதாபாத் நகரில், வெளியிட்டு பேசிய மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹாஸ்பட் சுரேஷ், நரேந்திர மோடி, 2002 குஜராத் கலவரத்தின் முதன்மை சதிகாரர்;

அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என கூறி உள்ளார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.2.2014). குடிமக்கள் தீர்ப்பாயம் என்கிற அமைப்பின் சார்பில், உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.பி.சாவண்ட் ஆகியோருடன் இணைந்து 2002 குஜராத் கலவரம் பற்றிய அறிக்கையை அளித்தவர் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹாஸ்பட் சுரேஷ். குஜராத் மாஜிஸ்திரேட் கோர்ட், மோடி குற்றம் எதுவும் செய்யவில்லை என்பதை நிராகரித்த நீதிபதி சுரேஷ், இன்னும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உள்ளது.

மோடி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வில்லை; பெஸ்ட் பேக்கரி வழக்கில், கீழ் கோர்ட், விடுதலை செய்தாலும், வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார், நீதிபதி சுரேஷ். மோடி, ஹிட்லரைப் போன்றவர். ஹிட்லர் பதவிக்கு வந்ததும் என்ன நடந்தது? இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது.

அதே போன்று, மோடி பிரதம ரானால், நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார் நீதிபதி சுரேஷ். 2002-ல் குஜராத் கலவரத்தில் நடைபெற்ற நரோடியா பாட்டியா படுகொலையில் தண்டனை பெற்றுள்ள மாயா கோட்னானி யார்?, மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் தானே? எனக் கேள்வி கேட்டுள்ளார், நீதிபதி சுரேஷ். மோடி சதிகாரர் என்று நீதியரசர்கள் சொல்கிறார்கள்.

மோடி பிரதமராவது இந்திய நாட்டிற்கு நல்லது அல்ல என்று நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் சொல் கிறார், ஆனால், மறுமலர்ச்சி பேசிய வைகோவும், அம்பேத்கர் வழிவந்ததாக சொல்லும் ராம் விலாஸ் பஸ்வானும் சொல்கிறார்கள் மோடியை பிரதம ராக்கியே தீருவோம் என்று.

எதிரியை விட, சமுதாய துரோகிகள் ஆபத்தானவர்கள்.

Read more: http://viduthalai.in/page-2/76245.html#ixzz2urCm35OJ

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக துவக்குவதா?


திராவிடர் மாணவர் கழகத்தினர் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஆர்ப்பாட்ட முடிவில் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ. தங்கராசு, பொதுச் செயலாளர்கள் தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி, தஞ்சை மண்டல தலைவர் வெ. ஜெயராமன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தளபதிராஜ், தமிழ்ப் பல்கலைக் கழக தமிழ் துறைத் தலைவர் (ஓய்வு) பெரியார் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் இராமலிங்கம், ஒன்றிய அமைப்பாளர் மூர்த்தி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்அழகிரிசாமி, உரத்தநாடு நகர செயலாளர் சாமி. அரசு இளங்கோ ஆகியோர் சந்தித்து தஞ்சை பல்கலைக் கழகத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சோதிட பட்டயப் படிப்பை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது முக்கிய பிரச்சினையாக ஆக்கப்பட்டு இருக்கிறது. தங்களின் கோரிக்கை மனுவை ஆட்சி மன்றக் குழுவில் வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு அவர்களது முடிவுப்படி முடிவு செய்யப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்தார். (மனு விவரம் 4ஆம் பக்கம் காண்க).

தஞ்சை, மார்ச் 3- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைப்பதைக் கண்டித்து இன்று (3.3.2014) காலை திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கழகத்தின் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங் குன்றன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட உரையை நிகழ்த்தினார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைச் சொல்லிக் கொடுக்கும் பட்டய வகுப்பை நடத்தவிருப்பதாக ஏடு களில் விளம்பரம் வெளி வந்துள்ளது. அறிவியலுக்கு விரோதமான - மூடநம் பிக்கையின் மறுவடிவ மான சோதிடத்தை ஒரு பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்க முடி வெடுப்பது - அபத்தமா னது - கண்டிக்கத்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51ஏ (எச்) விஞ் ஞான மனப்பான்மை யைப் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கே விரோதமாக ஒரு பல் கலைக் கழகம் சோதிடத் தைக் கற்பிக்க முயற்சிக் கலாமா? என கேட்டு இச் செயலை கண்டித்து தமிழர் தலைவர் கடந்த 27.2.2014 அன்று அறிக்கை விடுத்தார்.

மேலும் இதைக் கண் டித்து 3.3.2014 அன்று திராவிடர் மாணவர் கழகத் தின் சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (3.3.2014) காலை 11 மணி யளவில் தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பாக கழகத் தோழர் - தோழியர்கள் மாணவர் அணியினர், இளைஞர் அணியினர் திரளாக பங் கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத் துக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக துவக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்ட விளக்கவுரை யாற்றினார்.

முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலை மையில் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்கள் எழுப் பப்பட் டன.

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் சோதிடப் பாடமா?

அறிவியல் வளர்ந்த

காலத்திலே பல்கலைக்கழகத்தில்

சோதிடப் பாடமா?

வெட்கம், வெட்கம்

மகா வெட்கம்! சோதிடத்தில் சொல்லப்படும் ராகுவும் கேதுவும் கிரகங்களா?

சோதிடத்தில் சொல்லப்படும் சூரியன் நட்சத்திரமா, கிரகமா?

சொல்லட்டும், சொல்லட்டும்

துணை வேந்தர் சொல்லட்டும்!

சோதிடப் பாடத்தில் கிரகமான பூமிக்கு

இடம் உண்டா? சொல்லட்டும், தமிழ்ப் பல்கலைக்கழகம் சொல்லட்டும்!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையென்று,

இந்திய அரசின் சட்டம் சொல்லுகிறது தஞ்சைப் பல்கலைக்கழகமே அரசியல் சட்டத்தை

அவமதிக்காதே!

தஞ்சைப் பல்கலைக் கழகமே வளர்க்காதே, வளர்க்காதே மூடநம்பிக்கைகளை

வளர்க்காதே - வளர்க்காதே!

ரத்து செய், ரத்து செய்

தமிழ்ப் பல்கலைக் கழகமே! ரத்துச் செய், ரத்துச் செய்!

மூடநம்பிக்கையை வளர்க்கும் சோதிடப் பாடத்தை ரத்து செய், ரத்து செய்!

போராடுவோம் போராடுவோம்

வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! போகாதே - போகாதே!

தமிழ்ப் பல்கலைக் கழகமே கற்காலத்துக்கு, போகாதே!

தற்காலத்துக்கு வந்து விடு, வந்து விடு!

Read more: http://viduthalai.in/e-paper/76301.html#ixzz2uwwWPEMd

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்

ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.

- (விடுதலை,18.1.1951

Read more: http://viduthalai.in/page-2/76302.html#ixzz2uwwqi9EB

தமிழ் ஓவியா said...


வி.கே. சிங் ஓர் எச்சரிக்கை!



வயது மோசடியில் சிக்கிய இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்த வி.கே. சிங் பி.ஜே.பி.யில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் ஓய்வுக்குப் பின் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்தார் என்றால் கடந்த காலத்தில் பெரிய பொறுப்பில் இருந்தபோது அறிவு நாணயமாக எப்படி நடந்து கொண்டு இருப்பார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல்பிஹாரி வாஜ்பேயி அவர்கள் வெளிநாட்டுத் தூதர் அலுவலகங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். காரர்களைத் தட்டிப் பார்த்து நியமித்ததுண்டு.

பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ஆளுநர்கள், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரர்களாகப் பார்த்து நியமிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டதுண்டு.

இந்திய வரலாற்றுக் கழகம் (Indian Council for Historical Research) முற்றிலும் காவிமயமாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அவர்களுள் கே.எஸ். லால், பி.பி. லால், பி.பி. சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோயில் இருந்தது என்று எழுதியவர்கள்.

பேராசிரியர் சுமித் சர்க்கார் பேராசிரியர் கே.எம். பணிக்கர் உறுப்பினர் செயலாளர் டி.கே.வி. சுப்பிரமணியம் முதலிய புகழ் பெற்ற 12 வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய் வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து (I.C.H.R.) வெளியேற்றப்பட்டனர். இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (டெல்லி) எம். சோந்தி நியமிக்கப்பட்டார். இப்படியாக ஒருநீண்ட பட்டியலே உண்டு.

இந்தியாவின் கப்பற்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அவர்களே இராணுவத்தில் நடைபெற் றுள்ள ஊடுருவலை அம்பலப்படுத்தவில்லையா?

பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் மட்ட இராணுவ தளபதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளித்த - மிக மோசமான ஆபத்தான நடை முறைகளை உருவாக்கியது வாஜ்பேயி தலைமையிலிருந்த பி.ஜே.பி. ஆட்சி. ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது அந்த மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக விருந்த (SSP) டி.பி. ராய் என்பவர் பிறகு பிஜேபியில் சேர்ந்தது மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 80 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிர்வாகப் பதவிகளில் (Executive Posts) அமர்த்தப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் கேசுபாய் முதல் அமைச்சராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் (2000 ஆண்டு பிப்ரவரியில்) என்று அறிவித்தார். அதற்கு பிரதமர் வாஜ்பேயியும் சரிதான் என்று வக்காலத்தும் வாங்கினாரே!
மாலேகான் குண்டுவெடிப்பில்கூட இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் வெடி மருந்து பயன்பட்டதாக செய்தி வரவில்லையா?

அந்தக் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான சிறீகாந்த் புரோகித் என்பவர் யார்? இராணு வத்தில் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தவராயிற்றே. மகாராட்டிர மாநிலம் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார் என்றால், இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவி நிற்கும் ஆபத்தின் எல்லை என்ன என்பது விளங்காமற் போகாது.
முன்னாள் இராணுவத் தளபதியே (வி.கே. சிங்) பி.ஜே.பி.யில் இணைந்தார் என்பதை வைத்து இந்திய இராணுவத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவாவாதிகளை வெளியேற்றும் அவசியமான வேலையில் மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/76303.html#ixzz2uwx1ayF7

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு - 5

- குடந்தை கருணா

நேற்று உ.பி. தலை நகர் லக்னோவில் பேசிய நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், குஜ ராத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என பேசினார்.

இது உண்மையா? 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் பற்றிய விவ ரத்தை, நாடாளுமன்றத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் வெளியிட்டார். குஜராத் மாநிலம், மிக அமைதி மாநிலமாக உள்ளது என மோடியும் பிஜேபியும் கூறி வந்தாலும், மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக் கையில், வகுப்பு கலவரத்தில், பீகார் மாநிலத்தையும் மிஞ்சிய நிலையில், குஜராத் அய்ந்தாவது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 2012 ஆம் ஆண்டில் 57 வகுப்பு கலவரங்கள் நடை பெற்று, அய்ந்து பேர் இறந்துள்ளனர்; 2013 ஆம் ஆண்டில் 61 வகுப்பு கலவரங்கள் நடைபெற்று ஏழு பேர் இறந்துள்ளனர்.

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரம் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப் பெரிய இன அழிப்பு என்பதை மறைத்து, மோடி யும் பிஜேபியும் பேசுவது, எத்தகைய பாசிச மனம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த கலவரங்களில் பாதிக்கப் பட்டோருக்கு, இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை; ஏறத்தாழ 20000 சிறு தொழில் செய்யும் மக்கள் கல வரம் காரணமாக இழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத் அரசு அந்த மக்களுக்கு எந்தவித இழப்பீடும் இன்றுவரை தர வில்லை.
இந்த லட்சணத்தில், மற்ற மாநிலங்களில் பேசும் மோடி, ஏதோ தனது ஆட்சியில் குஜராத்தில் தேனா றும், பாலாறும் ஓடுவது போலவும், மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழ்வது போலவும் பொய் மூட் டைகளை தினமும் அவிழ்த்து விடு கிறார்.

. இதனை கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், மக்களை தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட ஊடகங்கள், அதற்கு மாறாக, மோடி யின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்வதையும், கருத்துக் கணிப்பு என்கிற பெயரில், திட்டமிட்டு, மோடியை உயர்த்திப் பிடிப்பதை யும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது உரிமையின் விலை, விழிப்புணர்வே.

Read more: http://viduthalai.in/page-2/76308.html#ixzz2uwxCQftP

தமிழ் ஓவியா said...


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் கொடுக்கப்பட்ட கடிதம்

பெறுநர்:
துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

அன்புடையீர், வணக்கம்.

தஞ்சாவூர் - தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் தி.இந்து (தமிழ்) நாளேட்டில் (24.2.2014). ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.

அதில் பட்டயம் (ஓராண்டு) Diploma எனும் தலைப்பின் கீழ் சோதிடவியல் கற்பிக்கப்படுவது பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது.

அறிவியலுக்கு எதிரான பாடத்திட்டம் ஒரு பல்கலைக்கழக விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

சோதிடம் என்பது அறிவியல் அல்ல; அது ஒரு போலி (Pseodo Science) விஞ்ஞானமாகும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் போன்றவர்களே இவ்வாறு தெளிவாகவே கூறியுள்ளனர்.

1975 ஆம் ஆண்டில் 18 நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கீழ்க்கண்ட கூட்டறிக்கையினை கையொப்பம் இட்டு வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுள்ள கருத்து வருமாறு:

மக்களின் வாழ்க்கைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.

சோதிடம் பொதுமக்களிடையே மூடத்தனத்தை வளர்த்து பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்தச் சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப்போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று அந்த அறிக்கையி

ல் 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டிருந்தனர். (ஆதாரம்: தினமணி 4.9.1975)

மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h) எனும்பிரிவில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமைகள் என்று கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், மற்றும், ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அரசு உதவியோடு அங்கீகாரத்தோடு நடத்தப்படும் தமிழ்ப்பல்கலைக் கழகம் (தஞ்சாவூர்) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சோதிடம் என்ற விஞ்ஞானத்திற்கு எதிரான பாடத்தைப் பயிற்றுவிப்பது சரியல்ல என்று நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று கருதுகிறோம். அரசமைப்பு சட்டத்தின் ஷரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்ற முறையிலும், மக்கள் மத்தியிலே மூட நம்பிக்கை எந்த விதத்தில் இடம் பெற்றாலும் அவற்றை அறிவியல் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு எடுத்துச் சொல்லி, மக்களை அறிவார்ந்த பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை மூச்சாகக் கொண்டு செயல்படும் திராவிடர் கழகமும், அதன் அணியான திராவிடர் மாணவர் கழகமும் - இன்று தஞ்சாவூரில், ரயில் நிலையம் அருகில் - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படவுள்ள சோதிடத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறவழி முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதன் முடிவில் இந்த மனுவை தங்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும், அறிவார்ந்த முடிவுக்குமாக தங்களிடம் அளித்துள்ளோம். சோதிடப் பாடத் திட்டத்தை தமிழ்ப் பல்கலைக் கழகப் (தஞ்சாவூர்) பாடத்திட்டத்திலிருந்து அறவே நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

(கலி.பூங்குன்றன்) (பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார்) (சி.அமர்சிங்)
துணைத் தலைவர் மாநில மாணவரணி செயலாளர் திராவிடர்கழக தலைவர்
திராவிடர் கழகம் திராவிடர் கழகம் தஞ்சாவூர் மாவட்டம்

இணைப்பு:

1) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை
(விடுதலை27.2.2014)

2) விடுதலை ஏட்டின் இரண்டு நாள் தலையங்கங்கள் (26.2.2014, 27.2.2014)

3) விடுதலை ஏட்டின் முதல் பக்கக் கட்டுரை (விடுதலை 2.3.2014)

Read more: http://viduthalai.in/page-4/76332.html#ixzz2uwxYtVQ3

தமிழ் ஓவியா said...


வடலூரில் அறிவு இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

வடலூர் ஜோதி நகரில் 2.3.2014 அன்று காலை 11.15 மணிக்கு திராவிடர் கழக மகளிரணி மண்டலச் செய லாளர் இரமாபிரபா ஜோசப் பின் புதிய இல்லமான அறிவு இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் சிலை

அறிவு இல்லத்தின் வளா கத்தில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் எழுதுவது போல் உள்ள சிலையினை பலத்த ஒலி முழக்கங்களுக் கிடையே இல்லத்தினர் ரமா பிரபா ஜோசப், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் ஆகியோரின் முன்னி லையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

இல்லத்திறப்பு

ரமாபிரபா - ஜோசப் அவர்களின் புதிய இல்ல மான அறிவு இல்லத்தினை க.பார்வதி, மோகனா வீர மணி, திருமகள், வெற்றி செல்வி, கு.தங்கமணி ஆகி யோரின் முன்னிலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் கழகக் கொடியினை கழகச் செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ஏற்றி வைத்தார்.

இல்லத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் தலைமை வகித்து ரமா பிரபா ஜோசப் ஆகி யோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா நிகழ் வினையும், கடுமையான உழைப்பால் வாழ்வில் சிறிது சிறிதாக உயர்ந்து பெரி யார் கொள்கையால் வெற்றி பெற்றதையும் எடுத்து கூறி னார். அனைவரையும் வர வேற்று தலைமை செயற் குழு உறுப்பினர் க.பார்வதி உரையாற்றினார்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், நெய் வேலி செயராமன், வடலூர் பேரூராட்சி தலைவர் சந் துரு, நகர திமுக செயலாளர் ராமலிங்கம், தாய் தொண்டு நிறுவன மய்ய நிறுவனர் ராசி.ஜெகதீஸ்வரன், மனித உரிமைகள் கழக தலைவர் காமராஜ், கடலூர் தண்ட பாணி, மாவட்ட செயலாளர் தாமோதரன், கவுன்சிலர் தமிழ்செல்வன், கழக பேச் சாளர் இராவணன், மண்டல செயலாளர் இரா.பன்னீர் செல்வம், மண்டல தலைவர் சிவ.வீரமணி, திருச்சி மண் டல செயலாளர் காமராஜ், வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் நெய் வேலி ஞானசேகரன், தே. எடிசன் ராசா, கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக் குமார், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, ஏபிஜே மனோரஞ்சிதம் ஆகி யோரது வாழ்த்துரைக்குப் பின்னர் இரமாபிரபா - ஜோசப் இணையருக்கு தமி ழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணி வித்தார். திருமதி மோகனா வீரமணி அவர்கள், கழக நூல்களை வழங்கினார். நிறைவாக தமிழர் தலைவர் உரையாற்றினார்.

ஜோசப் நன்றி கூறினார். சி.மணி வேல், கருணாமூர்த்தி, இந் திரஜித், தருமலிங்கம், சிதம் பரம் செல்வரத்தினம், செல் சேகர், இரா.முத்தையன், ஏ.திருநாவுக்கரசு, க.சேகர், ச.பாஸ்கர், கடலூர் செயக் குமார் (ப.க.)

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

மக்களிடம் எளிதாக பழ கக் கூடியவர்கள், அன்புடன், பண்புடன், நடந்து கொள் ளக் கூடியவர்ள் திரா விடர் கழகத்தினர் - இரமா பிரபா அனைவரிடம் பழ கிய காரணத்தால் இங்கே ஏராளமானோர் கட்சியை கடந்து பங்கேற்றுள்ளனர். மகளிரணியில் தீவிர செயல் பாடு மிக்கவர். சீரிய கொள் கையாளர் - ரமாபிரபா ஜோசப்பை பல ஆண்டு களாக தெரியும். ரமாவைக் காட்டிலும் அவர் கணவர் ஜோசப் மிகுந்த பாராட்டுக் குரியவர். இவரின் உழைப் பின் வளர்ச்சியை இந்த இல்லம் காட்டுகிறது. அறிவு இல்லம் கழக தோழர்க ளுக்கு வரவேற்பு இல்ல மாக இருக்கும். அழகு கலை நிலையம் நடத்தினாலும் எல்லோரையும் ஈர்க்கக் கூடிய வகையிலே தொழிலை சிறப்பாக செய்து வருபவர், பெரியார் காண விரும்பிய புரட்சி பெண் வரிசையில் கழக மகளிர் உள்ளனர் என மேலும் பல்வேறு கருத்து களை எடுத்துக் கூறினார்.

வடலூர் முழுவதும் ஏராளமான கழகக் கொடி கள் கட்டப்பட்டு, விளம்பர பதாகைகளும், தமிழர் தலைவர் உருவம் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் சாலை யில் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

Read more: http://viduthalai.in/page-4/76326.html#ixzz2uwyAef8A

தமிழ் ஓவியா said...


முஸ்லீம் ராஷ்டீரிய மஞ்ச்


திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய விடுதலையில் ஒரு முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

முஸ்லீம் ராஷ்டீரிய மஞ்ச் என்ற ஓர் அமைப்பினை பிஜேபி தொடங்கியுள்ளது. இதனுடைய நோக்கம் என்ன? பின்னணியில் உள்ள தந்திரம் என்ன? என்பதைச் சரியான நேரத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தியா முழுமையும் மதச் சார்பற்ற சக்திகளும், சிறுபான்மையின மக்களும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திரமோடிக்கு எதிராகப் பெரும் அலைகளாகக் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

இந்த நிலையில், எந்தத் தந்திரத்தைச் செய்தாவது, எந்த வித்தையைக் காட்டியாவது, எந்த வேடமணிந்தாவது சிறுபான்மை மக்களை வளைத்துத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்று படாதபாடு படுகின்றனர். அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பரிதாபமாகவும் இருக்கிறது. பிஜேபியினர் குடலைக் கிழித்துக் காட்டினா லும் சரி, அதனை சிறுபான்மை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் நேரடி நடவடிக்கைகள் மூலமே இந்திய வரலாறு காணாத மதவெறிக் கலவரம் நடத்தப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்துத்துவா வெறியர்களின் தாக்குதலுக்குத் தப்பவேயில்லை.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் குத்தி, அந்தச் சிசுவை வெளியில் எடுத்து நெருப்பில் வீசி எறிந்து குதியாட்டம் போட்டனர் ஹிந்துத்துவா வெறியர்கள் மோடி ஆட்சியில்.

நரோடாபாடியா எனும் இடத்தில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்குத் தலைமை வகித்தவர் - மோடி ஆட்சியில் அமைச்சராகவிருந்த மாயாபென் கோட்னானி என்பவர்; இவர் ஒரு டாக்டராம்; மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராம். அவரின் தலைமையில் அரசுஅதிகார வலிமையோடு நடத்தப்பட்ட மிகப் பெரிய இனப்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர்கள்; அதில் 35 குழந்தைகள்.

மறுபடியும் நினைவூட்டுகிறோம் - ஒரு டாக்டர், ஒரு பெண் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவருக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை 28 ஆண்டுகள்; ஏதோ ஒரு அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகக் கருத முடியுமா? மோடிதானே முதல் அமைச்சர்; அவருக்குப் பொறுப்பே இல்லை என்று கதறுகிறார்களே ஏற்க முடியுமா?

இதில் என்ன கொடுமை என்றால், அந்தப் பெண் அமைச்சரைக் காப்பாற்றிட முதல் அமைச்சர் மோடி பலவகையான முயற்சிகளையும் மேற்கொண்டார். காப்பாற்ற முடியாத அளவுக்கு அதிக சிக்கல்கள்!

குஜராத் கலவரத்தின் போது 287 பேர் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அதில் 286 பேர் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள், மற்றொருவர் சீக்கியர். மதக் கலவரத்தை முன்னின்று நடத்திய ஒரே ஒரு ஹிந்துத்துவாவாதிகூட இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேயில்லை.

சிறுபான்மை மக்களை தாஜா செய்வதற்காக முஸ்லீம் மக்களின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த போது ஒரு முஸ்லீம் பிரமுகர் கொடுத்த தொப்பியை அணிந்து கொள்ள அப்போதுகூட மறுத்தவர்தான் நரேந்திரமோடி என்பதை நினைவூட்டுகிறோம்.

2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு டெல்லியிலே அத்வானி என்ன செய்தார்? முஸ்லீம் பெண்களின் மாநாட்டைக் கூட்டினார். அதில் என்ன பேசினார் அத்வானி, தெரியுமா?

முஸ்லீம்களில் எத்தனை சதவிகிதம்பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்க்காமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் உதவி செய்வோம் - பாதுகாப்பு அளிப்போம் (தினகரன் 14.7.2008 பக்கம்7) என்று எல்.கே. அத்வானி பேசிடவில்லையா? ஆனாலும் இஸ்லாமிய மக்கள் அத்வானி விரித்த வலையில் சிக்கவில்லை.

அத்வானி பின்பற்றிய அதே முறையைத் தான் இப்பொழுதும் மோடி செய்துள்ளார். முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் என்ற அமைப்பைத் தொடங்கியிருப்பதும் இதே அடிப்படையில்தான். இஸ்லாமிய மக்களுக்குத் தெரியாதா? குஜராத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் கூட பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படவில்லையே!

சிறுபான்மை மக்கள் ஏமாளிகள் அல்ல - நிச்சயம் மோடியின் பிரதமர் கனவைக் கருச் சிதைவு செய்யச் செய்வதில் சிறுபான்மை மக்கள் பங்கு மகத்தானதாக இருக்கப் போகிறது என்பது கல்லின் மேல் எழுத்தாகும். திராவிடர் கழகத் தலைவரின் நேற்றைய அறிக்கை மிக மிக முக்கியமானது.

Read more: http://viduthalai.in/page-2/76354.html#ixzz2v2xMclFa

தமிழ் ஓவியா said...


மோடி புளுகு - 6


- குடந்தை கருணா

தினமும், மோடி தனது சுய விளம் பரத்திற்காக, குஜராத் அரசின் பணத் தில், இந்தியாவிலுள்ள அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரங்களாக தந்து கொண்டிருக் கிறார்.

பெண்கள் முன் னேற்றம், மேம்பாடு இவற்றில் குஜராத் சிறந்து விளங்குகிறதாம்?

இன்றைய பத்திரிகையில், குஜராத் தில் சிறந்த நிர்வாகம் தரும் மோடி, நாடு முழுவதும் அதனை தர இருக்கிறாராம்.

அரசின் மதம், முதலில் இந்தியாவாம், அரசின் புனித நூல், அரசியல் சட்டமாம்;

அரசின் ஒரே ஈடுபாடு, தேச பக்தி தானாம், அரசின் ஒரே அதிகாரம், மக்கள் தானாம்;

அரசின் ஒரே வழிபாடு, 125 கோடி இந்திய மக்களின் நல்வாழ்வு தானாம்; அரசின் ஒரே கடமை, கூட்டு முயற்சியாம், அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சியாம். சொல்கிறார், மோடி, யார்?

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி தன்னை, இந்து தேசியவாதி என வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட மோடி தான் இந்தியா முதலில் என்கிறார்.

குஜராத் கலவரத்தில் ஈடுபட வைத்து, அப்பாவி பெண்களை சூறையாடுவதற்கு வழி வகை செய்த மாயா கோட்னானியை தனது அரசில் அமைச்சராக அமர்த்தி, பாதுகாத்தவர் சொல்கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

நடு ரோட்டில், கர்ப்பிணிப் பெண் ணின் வயிற்றைக் கிழித்து, உள்ளே கருவாக இருந்த உயிரைக் கொன்று, அந்த பெண்ணையும் கொன்ற, பாபு பஜ்ரங் கியை பாதுகாத்த மோடி சொல் கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

இந்து மதம் தான் இந்தியாவின் மதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்,எஸ்-இன் சேவகன் என வெளிப்படையாக கூறிக்கொள்ளும் மோடி சொல்கிறார், அரசின் மதம், இந்தியா தான் என்று.

மனு சாஸ்திரம் தான் புனித நூல் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரின் ஆத்மார்த்த ஊழியன் மோடி சொல்கிறார், அரசின் புனித நூல் அரசியலமைப்பு சட்டம் தான் என்று.

தனது மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க்ளுக்கு எந்த வித நல திட்டங்களும் செய்யாமல், அவர்களது நிலத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி சொல்கிறார், அரசின் கடமை, அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்று. ஒரு முடிவோடு, மோடி களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

எத்தகைய பொய் சொன்னாலும், ஊடகங்கள் அதனைக் கண்டு கொள்ளாது; ஆனால், மக்களும் அப்படி இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.

Read more: http://viduthalai.in/page-2/76371.html#ixzz2v2xr9uzv

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரம் பிஜேபி முதலில் மன்னிப்பு - பிறகு பல்டி!

மும்பை, மார்ச்.4- குஜராத் கலவரம் பாஜக வால் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சில நாட்களுக்குமுன்பாக தெரிவித்திருந்தார். தற்போது பாஜக தலைவர் ராஜ்நாத் மன்னிப்பை பாஜக மறுத்துள்ளது. குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்புக் கோரத் தேவை இல்லை என்றார். மேலும், பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதிகளில் காங்கிரசு மன்னிப்பு கேட் குமா? என்றார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி, குஜராத் மாநிலத்தில் பாஜக நல்ல நிர்வாகத்தை அளித்துள்ளது. இதில் மத சார்பின்மை யைக் காட்டிலும் திறமையான நிர் வாகத்தை மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக கருதுகிறது.

பாஜக நல்ல நிர்வாகத் துடன் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, தேச ஒற்றுமை ஆகிய வற்றை மற்ற எதையும்விட மதிப் புள்ளதாகக் கருதுகிறது. மற்ற கட்சிகள் நல்ல நிர்வாகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மத சார்பின்மை என்கிற பெய ரில் அரசியல் செய்து வருகின்றன.

மதசார்பின்மை என்று கூறிக் கொள்ளும் மற்ற கட்சிகள் மக்களிடையே மத சார்பின்மை என்கிற போதையை ஊட்டிவிட்டு நல்ல நிர்வாகம், வளர்ச் சிப்பணிகள் மக்களை எட்டாமல் செய்துவிட்டன.

பாஜகவுக்கு நல்ல நிர்வாகம், மத சார்பின்மையும் முக்கியமானவையே. மத சார்பின்மை பேசும் மற்ற கட்சிகள் ஆட்சியில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்று எதுவுமே இல்லை. மத சார்பின்மை என்பது எத்தனையோ கொள்கை களில் ஒன்று. அது மட்டுமே கொள்கை அல்ல என்றார். பாஜக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமே இல்லை என்ற முக்தார் அப்பாஸ் நக்வி பகல்பூர், பிவெண்டி, மீரட் ஆகிய பகுதி களில் காங்கிரசு கட்சி மன்னிப்பு கோருமா என் றும் கேட்டார்.

பாஜகவை நோக்கி மகாராட்டிரத் திலிருந்து ராம்தாஸ் அத்வாலே, பீகாரி லிருந்து ராம்விலாஸ் பஸ் வான், உத்தரப் பிரதேசத் திலிருந்து உதித் ராஜ் ஆகிய முக்கியத் தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் மூவரும் எப்படி வரமுடியும்? என்று கேட் டார். காங்கிரசார் தோல்வி பயத்தில் நிதான மிழந்து மோடியைப் பற்றிப் பேசி வருகின்றனர் என்று நக்வி கூறினார். முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டே கூறும்போது ஜாதி, மதம் என்கிற குறுகிய பாதை பாஜகவுக்கு இல்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/76356.html#ixzz2v2y3JjUT

தமிழ் ஓவியா said...


மோடிக்கு வாக்களிக்காவிட்டால்... அமைச்சர் ஆசம் கான்!



லக்னோ, மார்ச் 4- குஜராத் மாநிலத்தில் நரேந் திர மோடிக்கு ஓட்டு போட்டால்தான் முஸ்லிம் கள் வாழ முடியும் என்கிற பயங்கரவாத நிலை உரு வாக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவருமான ஆசம் கான் சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநி லத்தில் நேற்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இம்மாநிலத்தில் ஒரு ஆண்டில் 150 கல வரங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் குஜராத்தில் 10 ஆண்டுகாலத்தில் ஒரு கல வரமும் கூட நடைபெற வில்லை என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசம் கான், குஜராத்தில் எப்படி கலவ ரங்கள் வெடிக்கும்? அங்கே இருப்பவர்கள் மோடிக்கு வாக்களிக்காமல் இருந்து விட முடியுமா? அப்படி இருந்தால் அவர்கள் அமி லம் ஊற்றி எரித்துவிட மாட் டார்களா? வேறுவழி யில்லை.. அவர்கள் எங்கே போவார்கள்?

குஜராத்தில் அவர்கள் வாழ வேண்டும் எனில் நரேந்திர மோடிக்கு வாக் களித்தாக வேண்டும் அப் படி ஒரு அச்சுறுத்தலான பயங்கரவாத நிலையை மோடி உருவாக்கி வைத் திருக்கிறார் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/76350.html#ixzz2v2ybXdqj