Search This Blog

19.3.14

திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்?மகாபாரதமா/ மாபாதகமா?

மகாபாரதமா/ மாபாதகமா? 

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொல்லி, தமிழ், ஆங்கில ஏடுகளுக்கெல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன. பணத்தைத் தண்ணீராக வாரி இறைப்பதுபற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அம்மையார் விடயத்தில் அதனை நேரிடையாகப் பார்க்க முடிந்தது; அது எப்படியோ போகட்டும்!

தினமணி பல பக்கங்களில் பளபளக்கும் தாளில் இணைப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு செய்தி, மக்கள் குறிப்பாக திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

எனக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். காரணம், அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு.
பண்பாடு, கலாச்சாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது _ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்தாக தினமணி வெளியிட்டு அழகு பார்க்கிறது.
எந்த வகையிலும் இந்த அம்மையார் திராவிடர் இயக்கத்துக்குத் தொடர்புடையவர் அல்லர் என்பதைவிட _ திராவிடர் இயக்கச் சிந்தனைக்கும் தத்துவத்திற்கும் நேரிடையான எதிரான நிலைப்பாடு உடையவர் என்பதற்கு இது ஒன்றுகூடப் போதுமானதுதான்.

"இராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.  மகாபாரதம், கங்கைச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன"

                                  -------------------(முன்பு கல்வி அமைச்சராகவிருந்த ஜே.வர்க்கி எம்.ஏ. எழுதிய இந்திய ஜாதிப் பாகுபாடு என்னும் நூலின் பக்கம் 15)

"பாரதத்தில் இடும்பி என்ற ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால் ராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதன் என்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனரின் மூளையில் தோன்றிய கற்பனையாகும்'

             ----------------------------------(நாகேந்திர கோஷ் பி.ஏ., பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்  எனும் நூல் _ பக்கம் 194)

வரலாற்றாளர்கள் இந்தப் பாரதத்தின் வண்டவாளத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து வண்டி வண்டியாக ஏற்றியிருக்க திராவிடத்தையும் அண்ணாவையும் கட்சியில் முத்திரையாகப் பொறித்து, அதேநேரத்தில் அவர்களின் அடிப்படைக்கே  வேட்டு வைக்கும் விபரீத வேலையில் இறங்கியுள்ளார் அம்மையார் ஜெயலலிதா என்பதை நம் மக்கள் உணரும் அந்தத் தருணத்திலேயே அவரின் அடையாளம் தெரிந்துவிடாதா?
ஆரியம் ஊடுருவினால் அதன் ஆபத்து அடிவேர்வரை சென்றுவிடும் என்பதுதான் புரியாதா?

வெறும் இலக்கியம் மட்டுமல்லவாம் மகாபாரதம். வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அருள்வாக்கு. பண்பாடும், சமூக இயலும் கொட்டிக்கிடக்கிறதாம்!

அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் குவிந்து கிடக்கிறது? பெரும்புலவர் ச.சீனிவாசன் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தெரிவித்த கருத்துதான் (20.6.2002) நினைவிற்கு வருகிறது.

திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்? அதற்கான காரணத்தையும் அவரே சொல்லி விடுகிறார்.

1. தருமன் _ சதா வேதாந்தம் படிப்பவன்

2.    பீமன் _ உடல் பெரியவன், குண்டன், சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்.

3.    அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியரை எண்ண முடியாதாம்!)

4.    நகுலன், 5. சகாதேவன் _ எனது பிள்ளைகள் மாதிரி.

எனவே கர்ணன் மீது எனக்கு ஆசை என்கிறாள் திரவுபதை.

இதுதான் பாரதத்தின் கதாநாயகி நாட்டு மக்களுக்குத் தரும் அருள்வாக்கா? வழிகாட்டும் நெறிமுறையா? அம்மையாருக்குத்தான் வெளிச்சம்.

இந்து ஏட்டில் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்று வெளிவந்தது. (17.12.1988)
அந்தக் கடிதத்தை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த வி.ஆர்.சுந்தரம். என்ன எழுதியுள்ளார்?

தர்மபுத்திர (யுத்திஸ்த்ரா), வாயுபுத்திரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள் அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

எனவே அதுபற்றியெல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக்கூடாது. பெற்றோர்களால் பதில் சொல்ல முடியாது. இப்பொழுது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, துரவுபதையைத் துகிலுரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படிப் பார்க்க முடியும்? என்கிறது அந்தக் கடிதம்.

திரவுபதை என்னவென்றால், தனக்கு 5 கணவன் போதாது; ஆறாவது கணவன் கர்ணனுக்கு கண்ணடித்தாள். பாரதத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவனாகிய அர்ச்சுனன் எப்படிப்பட்டவன் என்றால், ஆற்று மணலை எண்ணினாலும் அவனின் மனைவியர்களை எண்ண முடியாதாம்!
இத்தகு நூல்தான் சிறந்த இலக்கியமா? வாழ்வியல் நூலா? செல்வி ஜெயலலிதா அவர்கள் சீர்தூக்கிச் சொல்லட்டும் பார்க்கலாம்!

மகாபாரதத்தின் இணைப்பாகிய கீதையோ பெண்களைப் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அசிங்கப்படுத்துகிறது. (கீதை: அத்தியாயம் 9, சுலோகம் 32)
தாயைப் போற்றும் தமிழ்த் தரணியில் அந்தத் தாய்க்குலத்தை ஒரு தறுதலைபோல ஆபாசக் கண்கொண்டு அடையாளப்படுத்தும் கீதைக்கு ஒரு பெண்ணே வாழ்த்துப்பா பாடலாமா?

போர்க்களத்திலே நிற்கும் அர்ச்சுனன் தன் எதிரில் நிற்கும் உற்றார் உறவினர்களை அழிப்பதற்குத் தயங்குகிறான். அதற்கு அவன் கூறும் பதில் விசித்திரமானது.

நான் எனக்கு முன்னே எனது சகோதரர்களையும், சுற்றத்தாரையும், மாமன் மைத்துனர்களையும், சித்தப்பன் பெரியப்பன்மார்களையும் அவர்களுடைய எனது பிள்ளைகளையும், முன்னோர்களையும், பாட்டன்மார்களையும் எனது உறவின் முறையினரையும் காண்கிறேன்.

அவர்களையெல்லாம் கொல்லுவதானால் நமது குலத்தையே அழிப்பதாகும். அவ்வாறு அழிப்பது என்றால் நம்முடைய பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். இந்தத் தவறைச் செய்பவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் _என்று கூறுகிறானே அர்ச்சுனன்.

தனது சுற்றத்தாரை அழிப்பதுபற்றி ஆதங்கப்படுகிறான் _ அதுவரை சரி. அடுத்து அவன் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகள் என்ன?

நமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும் என்று அலறுகிறானே... அதன் பொருள் என்ன? போரில் ஆண்கள் கொல்லப்பட்டால், அவர்தம் மனைவிகள் விதவையாவார்கள். வேறு கல்யாணம் செய்ய நேரிடும்போது வேறு ஜாதி ஆடவர்களை மணக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அதனால் குலதர்மம், ஜாதி தர்மம் குலைந்து போய்விடும் என்ற குறிக்கோள் அல்லவா அதில் குடிகொண்டிருக்கிறது. இந்த மனுதர்மம்தான் அம்மையார் ஜெயலலிதா கூறும் அரசியல் யுத்த சாஸ்திரமா?

ஏகலைவன் கதைதான் என்ன? துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை ஏன் காணிக்கையாகக் கேட்டான்? வருண ஜாதிவெறி தானே இதன் மூலக் காரணம்?

திராவிடம் பேசினாலும் அய்யா, அண்ணா பெயர்களை உச்சரித்தாலும் அம்மையாரின் அடிமனத்தில் ஆழப் பதிந்திருக்கும் வேர் ஆரியத்தின் வர்ணாசிரமம்தானே!

ஆரிய ஊடுருவலின் ஆழத்தை நம் மக்கள் தெரிந்துகொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் திராவிட இயக்கத் தீரர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஆரியம் நடமாடும் நாசம்; திராவிடத் தோழா வேண்டாம் அதனிடம் பாசம்; அதனால் வருமே அந்தக் காசம்! _  அறிஞர் அண்ணா (நூல்: ஆரிய மாயை)



பெரியார் பார்வையில்

பாண்டவர்கள் சூரியன், யமன், வாயு, இந்திரன், அஸ்வினி, தேவர்கள் முதலியவர்களுக்குப் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்கள் எந்த உலகத்தில் இருப்பவர்கள்? பாண்டவர்கள் பிறப்புக் கதையோ, பராசரன் மகன் வியாசன்; வியாசன் பேரன்மார்கள் பாண்டவர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பராசரன் வசிஷ்டன் பேரன்; வசிஷ்டன் பிரமன் மகன், வசிஷ்டன் பறைச்சியை மணந்து (அந்தக் காலத்தில் பறைச்சி, பறை ஜாதி இருந்ததா?) கொண்டான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (விரிக்கின் பெருகும்.) இவைகளையெல்லாம் நம்பினால்தானே பாரதக் கதையை நம்ப முடியும்?

பராசரன் மகன் வியாசன் என்றால் மச்சகந்தி கதையை நம்ப வேண்டும்.
வியாசன் எழுதியது பாரதம் என்றால் வியாசன் சொல்லக் கணபதி எழுதினான் என்பதை நம்ப வேண்டும்.

கணபதியை நம்ப வேண்டுமானால் கணபதி பிறப்புக் கதையை நம்ப வேண்டும்.

இவ்வளவையும் நம்பினால்தான் பாரதம்; பாரதத்தை நம்பினால்தான் கிருஷ்ணன்; கிருஷ்ணனை நம்பினால்தான் கீதை முதலியவை மெய்யாக வேண்டும்? மற்றும், தமிழர்களின் இலக்கியங்களான குறள் முதல் எல்லா இலக்கியங்களிலும் மேற்கண்ட இராமாயணம், பாரதம் முதலிய கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றனவே!

இவை மாத்திரமல்லாமல், இன்று சைவர், வைணவர் என்று சொல்லிக் கொள்ளுகிற தமிழர் எல்லோராலும்,  தமிழ் மறை என்று பாராட்டி ஸ்தோத்திரம் செய்யப்படுகிற தேவாரம், திருவாசகம், பிரபந்தம் முதலிய யாவும் பெரிதும் மேற்கண்ட இராமாயணம், பாரதம் முதலிய கதைகளில் சம்பந்தப்பட்ட கதாநாயகர்களையும் அவர்கள் செய்கைகளையும், நடப்புகளையும் பற்றிக் குறிப்பிட்டுப் பாடப்பட்ட பாடல்களாகத்தானே இருக்கின்றன?

இந்த நிலையில் நாம் எப்படி நம்மைச் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும்?

நம் புலவர்களால் நமது சமுதாயத்திற்கு இதுவரை ஏற்பட்ட பயன் என்ன? வையாபுரி பிள்ளை, சேதுப்பிள்ளை, வரதராஜன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஏ.சி.செட்டியார் மற்றும் மறைமலை அடிகள் முதலிய எவ்வளவோ பெரும் புலவர்களும், வித்தகர்களும் இருந்தும் நம் சமுதாயத்திற்கு எந்தச் சிறு முன்னேற்றமும் நன்மையும் ஏற்படவில்லையே!

---------------------------------- (தந்தை பெரியார், விடுதலை 21.1.1969)




புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா முடிவு

மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என 90 வயது கடந்தவரும், பல வரலாற்று நூல் எழுதியவருமான பேராசிரியர் ராம் சரண் சர்மா எழுதியுள்ளார்.

இதிகாச காலம் உண்மையா?

11_ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதியவர் ராம் சரண் சர்மா (ஆர்.எஸ்.சர்மா) அந்த நூலில், கிருஷ்ணன் மகாபாரதத்தில முக்கியப் பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு.200 முதல் கி.பி.200 வரை கிடைக்கப்பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணன்பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிடவேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது.
அயோத்தி ராமன்

அயோத்தியாவைப் பற்றியும், ஆர்.எஸ்.சர்மாவின் நூல் ஓர் ஆய்வு முடிவைத் தருகிறது. புராணங்களில், மிக நீண்ட குடும்பக் கால்வழி கூறப்படுகிறது. ஆனால், அவை கூறும் குடும்பக் கால்வழியை விட அகழ்வு ஆய்வு வெளிப்படுத்தும் தடயங்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும். புராண மரபுப்படி அயோத்தியில் ராமன் கி.மு.2000_இல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அயோத்தியில் விரிவான அளவில் தோண்டிப் பார்த்து, ஆய்வு நடத்திய பின்பு, அந்தக் காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததாகவே தெரியவில்லை என்று ஆர்.எஸ்.சர்மாவின் தொன்மை வரலாறு எனும் நூல் கூறுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------

--------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “உண்மை” மார்ச் 16-31 - 2014 இதழில் எழுதிய கட்டுரை

56 comments:

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் தொழிலாளர்மீது முறையற்ற முறையில் துப்பாக்கிச் சூடு! தமிழர் தலைவர் கண்டனம்!


நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அறப் போரில், அங்குள்ள பாதுகாப் புப் படையினர், தேவை யின்றி, துப்பாக்கிச் சூடு நடத்திய தினால், ராஜா என்ற ஒரு தொழிலாளியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக் கும், மிகுந்த துயரத்திற்கும் உரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

துப்பாக்கிச் சூடு என்பதை எந்தக் கட்டத்தில் தவிர்க்க இயலாத நிலையில், நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம், காவல் படைகளுக்குப் போதிய பயிற்சியை அளிக்க மத்திய மாநில அரசுகள் தவறக் கூடாது.

அதீதமாக தமது அதிகார எல்லை தாண்டி நடந்து கொண்ட காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணை கொடுத்தவர் யார்? ஆணை யில்லாமலே தன்னிச்சையாக இப்படி நடந்து கொண்டாரா என்பது போன்ற பல கோணத்தில் அரசுகள், சுதந்தரமான நீதி விசாரணை நடத்தி, மனித உயிர்கள் விலை மதிப் பற்றவை என்பதை உணர்த்த வேண்டும்.

பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு தேவை!

டெல்லி போன்ற பெரு நகரங்களில்கூட பெருங்கூட்டத்தைக் கலைக்க, நீர்ப் பீய்ச்சி அடிப்பது, வானத்தை நோக்கி மேலே சுட்டு கூட்டத்தைக் கலைய வைப்பது போன்ற சில முறைகள் பின்பற்றப் படுகிறபோது, இங்கே இப்படி நிகழ் வுகளா? எனவே இதற்கு ஒரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க ஆய்வு நடத்தி, புதிய வழிகாட்டும் நெறி முறைகளை காவல் துறையினருக்கு உணர்த்த வேண்டும்.

உயிர் இழந்தவருக்கு சுமார் 10 லட்ச ரூபாய் இழப் பீடாகத் தர வேண்டியதும் மனிதாபிமானமாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



18.3.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/77151.html#ixzz2wMjVXLbj

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டரில் சிக்குகிறார் மோடியின் நண்பர் அமித்ஷா சி.பி.அய். அழைப்பாணை!


அகமதாபாத், மார்ச் 18- போலி என் கவுண்டர் வழக் கில் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடியின் அதி முக்கியமான நண்ப ரும், குஜராத் மாநில முன் னாள் உள்துறை அமைச் சரும், உத்தரப்பிரதேசத்தில் நடக்க இருக்கும் தேர்த லுக்கான பி.ஜே.பி.யின் மோடியின் பொறுப்பாளரு மான அமித்ஷா சிக்கியுள் ளார். சி.பி.அய். சிறப்பு நீதி மன்றம் அவருக்கு அழைப் பாணை விடுத்துள்ளது.

15-6-2004-இல் குஜராத் தில் இஷ்ராத் ஜஹான், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக் மற்றும் இரு வர் குஜராத் காவல்துறை யினரால் பொது இடத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். பிரனேஷ்பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை அளித்த முறையீட்டின்பேரில் சி.பி. அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. இரண்டு குற்றப் பத்திரிகைகள் சி.பி.அய். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டும் குஜராத் முதல்வருக்கு நெருக்க மானவரும், முன்னாள் உள் துறை அமைச்சருமாகிய அமித்ஷா மற்றும் அப் போது பணியிலிருந்த அகமதாபாத் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை. அவர்கள் இருவரையும் நீதிமன்றத் தில் நிறுத்தி குற்ற விசா ரணையைத் தொடர வேண் டும் என்று மனுதாரராகிய கோபிநாத் பிள்ளை கோரி யுள்ளார். போலி என்கவுண் டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோருக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கீதா கோபி தாக்கீது அனுப்பி உள்ளார். மேலும், இவ்வழக்கு விசாரணை மார்ச் 26ஆம்தேதி நடை பெற உள்ளது.

இவ்வழக்கில் தொடர் புடைய முன்னாள் உள் துறை அமைச்சர் அமித்ஷா குறித்து போதுமான ஆதா ரங்கள் இருப்பதாக புல னாய்வுத் தகவல்கள் கூறு கின்றன. அய்.பி.எஸ். அதிகாரி கிரிஷ் சிங்கால் மற்றும் மற்ற காவல் துறை அதிகாரிகள் பரத் பட்டேல், டி.எச்.கோஸ்வாமி ஆகி யோர் கொடுத்துள்ள வாக்கு மூலங்களில் போலி என் கவுண்டரில் அமித்ஷாவின் பங்களிப்பு குறித்து கூறி யுள்ளனர். ஜி.எல்.சிங்கால் போலி என்கவுண்டருக்கு முதல்வர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷா வும் உத்தரவிட்டனர் என் பதை தெளிவாகவே கூறி யுள்ளார். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நட வடிக்கையில் அரசு இருப்ப தாகக் கூறப்பட்டு போலி என்கவுண்டர் நடைபெற்ற தாக சிறையிலடைக்கப் பட்ட அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா எழுத்து மூலம் கூறியுள்ளார். மேலும், அவர் அதில் குறிப்பிடும் போது அதிகாரிகளும், குற்றப்பிரிவினரும் 2002 முதல் 2007வரை அரசின் தீவிரவாத ஒழிப்புக் கொள் கையின்பேரால் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுத் தப்பட்டனர் என்கிறார்.

முன்னாள் இந்திய புல னாய்வுத் துறையின் முன் னாள் இயக்குநர் ராஜிந்தர் குமார் வன்சாராவிடம் முதல்வரிடம் பேசுமாறு கூறியபோது பாதுகாப்பான தாதி, கலி தாதி எல்லோரும் அறிந்தது என்னவெனில் மாநகர குற்றப்பிரிவைச் சேர்ந்த அனைவரையும் முதல்வர் நரேந்திர மோடி யும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நன்கு தெரிந் தவர்கள்தான் என்றார். சிங் கால் கூறும்போது தன்னு டைய அழுத்தமான எதிர்ப் பையும் மீறி அந்தப் பெண்ணை தீவிரவாதி என்று முத்திரை குத்திக் கொன்றுவிட்டனர் என்றார். ராஜிந்தர் குமார், வன்சாரா, அமித்ஷா ஆகியோரிடை யேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு கள் உள்ளன. சூன் மாதத் தில் 18 தொலைபேசி அழைப்புகள் அமித் ஷா, வன்சாராவுடன் பேசுவது பதிவாகி உள்ளன. அந்த பதிவுகள் நேரிடையான சாட்சிகளாகவே உள்ளன.

மனுதாரரான கோபி நாத்பிள்ளையின் வழக் குரைஞர் ஷம்ஷாத் பதான் நீதிமன்றத்தில் தன்வாதத் தில் அமித் ஷா, ராஜிந்தர் குமார், வன்சாரா ஆகியோ ருக்கிடையே போலி என் கவுண்டர் திட்ட மிட்டது தொடங்கி செயலை முடித் ததுவரை உள்ள தொடர்பு களுக்கு ஆதாரம் உள்ளது என்று கூறினார். என்கவுண்டர் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ர வரி 5ஆம் தேதி அன்றுதான் இரண்டாம் குற்றப்பத்திரி கையை சி.பி.அய். தாக்கல் செய்து, அதில் ராஜிந்தர் முக்கியப் பங்காற்றியவர் என்று கூறி உள்ளது. துஷார் மிட்டல், எம்.கே.சின்கா, ராஜீவ் வெங்கெடே ஆகிய மூன்று அய்.பி. அதிகாரி களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. முதல் குற்றப்பத்திரிகை யில் போலி என்கவுண்டர் என்று பெயரிட்டு, குஜராத் காவல்துறை அய்.பி. அதி காரிகளுடன் இணைந்து செயல் பட்டதாகக் கூறி உள்ளது.

அய்.பி.எஸ் அதிகாரி களான டி.ஜி.வன்சாரா, பி.பி.பாண்டே, கிரிஷ் சிங் கால் ஆகியோரைப் பெய ருடன் குறிப்பிட்டுவிட்டு பின்பு பேரட், என்.கே. அமீன், ஜே.ஜி.பார்மர், அனாஜ் சவுத்ரி ஆகியோ ரையும் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77145.html#ixzz2wMjfWfHU

தமிழ் ஓவியா said...


மக்களவைத் தேர்தலில் பல்வேறு கோணல்கள்!



பிரதமரைச் சந்தித்ததுண்டா?

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழ் நாட்டுக்கு என்ன செய்தது என்று முதல் அமைச்சர் கேட்கிறார். அவர் முதல் அமைச்சராகி மூன்றாண் டுகள் ஆனதே தமிழ் நாட்டுக்குத் தேவையான திட்டங்களோடு, ஒரே ஒரு முறையாவது பிரதமரைச் சந்தித்ததுண்டா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் இந்திய யூனியன் முசுலிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்.

சபாஷ், சரியான கேள்வி தான் ஆனாலும் தன்னை விட பெரியவரா பிரதமர் என்ற மனப் பான்மை உடையவரிடம் இது போன்ற கேள் வியைக் கேட்கலாமா?

தீக்குளியல்!

பிஜேபி கூட்டணியில் சேலம் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் பா.ம.க.வுக்குத் தான் ஒதுக்கப்பட வேண் டும் என்று பா.ம.க. தொண்டர்கள் குமுறுகின் றனராம்.

உணர்ச்சி வயப்பட்ட பா.ம.க., தொண்டர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருப்பூர் தங் களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதற்காக தேமு திக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலோடு பலரும் அரசியலே வேண்டாம் என்று தீக்குளிக்கப் போவது மட்டும் உண்மை!

தா.பா. கண்டுபிடிப்பு

இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா முன்னெடுத்த நிலைக்கு மாறாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.

முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தடம் புரண் டிருக்கிறார்.

எந்த கூட்டங்களிலும், பா.ஜ.க.,வைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று சி.பி.அய். செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

அம்மையாரைத் தெரிந்து கொள்வதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக் கிறதோ!

யார் சிங்கம்? யார் நரி?

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு 99.5 சதவிகிதம் முடிந்து விட்டது என்று பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இராமாயணமோ?

13 நாள்கள் உட் கார்ந்து உட்கார்ந்து முந் திரிப் பருப்பைத் தின்று கொண்டு பேசியே தீர்த் தார்கள் - இதுவும் ஒரு கின்னஸ் சாதனையே!

தருமபுரியில் பா.ம.க. நிறுவனர் தனது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களை வேட்பாளராக அறிமுகப்படுத்திப் பேசியபோது சிங்கங்கள் நரிகளி டம் போய் பிச்சை கேட்காது என்று திரு வாய் மலர்ந்தருளியுள்ளார். இதில் யார் சிங்கம்? யார் நரி? பி.ஜே.பி.க்குத் தான் வெளிச்சம்!

திருவாளர் மன வியாதி!

காந்தியார் பெயரால் கட்சியைத் தொடங்கிய மணியான மனிதர், ஒரு கூட் டணியை உருவாக்குவதற்காக தண்டால் பஸ்கி எல்லாம் எடுத்தார்.

காந்தியின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டவர் காந்தியைக் கொன்ற - கட்சிதான் உத்தம மானது என்று கண்டுபிடித்த கொலம்பசு இவர்.

கடைவிரித்தேன் கொள்வாரில்லை - கட்டிக் கொண்டேன் என்று வள்ளலார் சொன்னது போல, மன உளைச்சல் காரணமாக பிஜேபி கூட்ட ணிக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவது இல்லை என்று முடிவு செய்து விட்டாராம்.

ஆகா, எவ்வளவுப் பெரிய நஷ்டம்! யாருக்கு?

Read more: http://viduthalai.in/e-paper/77150.html#ixzz2wMjpAoKr

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.மீது குதிரை சவாரி செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இதுவரை பின்புலத்தில் இருந்து அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யை இயக்கி வந்தது - இப்பொழுது மிகவும் வெளிப்படை யாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது; தனது ஹிந் துத்துவா கொள்கையை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்குமாறு கூறி விட்டது. அதன் விளைவாகத்தான் பி.ஜே.பி.யின் மாநிலங்களவையின் தலைவர் அருண் ஜெட்லி மிக வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோயில் பற்றி எதுவும் இடம் பெறுவதில்லையே - ஏன்?

அருண்ஜெட்லி: தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது குறித்து அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். எங்களுடைய அடிப்படை நோக்கம் குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகி றீர்கள் (ணிநீஷீஸீஷீனீவீநீ ஜிவீனீமீ ஞிணீமீபீ 22.1.2014).

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னதை வழிமொழிகிற வகையில் அருண்ஜெட்லி பேட்டி கொடுத்திருக்கிறாரே!

எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். குதிரை சவாரி செய் கிறது என்பதற்கு ஒரு தகவலை நினைவூட்டினாலே போதுமே.

பாகிஸ்தானுக்குச் சென்ற எல்.கே. அத்வானி அங்கு முகம்மதலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் எழுதி விட்டாராம். ஜின்னாவின் மதச் சார்பற்ற தன்மை பற்றியும் கூறி விட்டாராம். விளைவு என்ன ஆனது தெரியுமா? அத்வானியை பிஜேபியின் தலைவர் பொறுப்பிலிருந்து சீட்டுக் கிழித்துவிட்டதே! அதன்பிறகு பிரதமருக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானி இருந்தாலும், பிஜேபி தலைவர் பதவியைக் கடைசி வரை அவருக்கு அளிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்கவேயில்லை.

பிஜேபி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை விலகும்படிச் செய்த சூழ்நிலையில், 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில் அத்வானி மனம் நொந்து என்ன சொன்னார்?

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.மீது குதிரை சவாரி செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இதுவரை பின்புலத்தில் இருந்து அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யை இயக்கி வந்தது - இப்பொழுது மிகவும் வெளிப்படை யாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது; தனது ஹிந் துத்துவா கொள்கையை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்குமாறு கூறி விட்டது. அதன் விளைவாகத்தான் பி.ஜே.பி.யின் மாநிலங்களவையின் தலைவர் அருண் ஜெட்லி மிக வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோயில் பற்றி எதுவும் இடம் பெறுவதில்லையே - ஏன்?

அருண்ஜெட்லி: தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது குறித்து அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். எங்களுடைய அடிப்படை நோக்கம் குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகி றீர்கள் (ணிநீஷீஸீஷீனீவீநீ ஜிவீனீமீ ஞிணீமீபீ 22.1.2014).

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னதை வழிமொழிகிற வகையில் அருண்ஜெட்லி பேட்டி கொடுத்திருக்கிறாரே!

எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். குதிரை சவாரி செய் கிறது என்பதற்கு ஒரு தகவலை நினைவூட்டினாலே போதுமே.

பாகிஸ்தானுக்குச் சென்ற எல்.கே. அத்வானி அங்கு முகம்மதலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் எழுதி விட்டாராம். ஜின்னாவின் மதச் சார்பற்ற தன்மை பற்றியும் கூறி விட்டாராம். விளைவு என்ன ஆனது தெரியுமா? அத்வானியை பிஜேபியின் தலைவர் பொறுப்பிலிருந்து சீட்டுக் கிழித்துவிட்டதே! அதன்பிறகு பிரதமருக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானி இருந்தாலும், பிஜேபி தலைவர் பதவியைக் கடைசி வரை அவருக்கு அளிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்கவேயில்லை.

பிஜேபி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை விலகும்படிச் செய்த சூழ்நிலையில், 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில் அத்வானி மனம் நொந்து என்ன சொன்னார்?

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையைக் கலக் காமல் பிஜேபியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது பிஜேபிக்கோ, ஆர்.எஸ்.எசுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழி வகுக்கும் என்று ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சி வளர்ச் சிக்காக பி.ஜே.பி.க்கு அனுப்பப்பட்ட அத்வானியே ரத்தக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். நாட்டாண்மை செய்கிறது. 4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக்காட்சி அலை வரிசையில் ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி அளித்த பேட்டி கவனிக்கத்தக்கது.

கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட்கண்ட்ரோ லாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி...

சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்? ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?

கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங்களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரகர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும் திறமை யையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பி.ஜே.பி.க்கு, ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண்டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளைச் செய்வார்கள். அதே போல தமிழ்நாட்டுப் பிஜேபிக்கு எங்கள் தகுதி வாய்ந்த இல. கணேசனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி கூறினாரே!

வாஜ்பேயி தலைமையில் மத்தியில் பிஜேபி ஆட்சி யில் இருந்தபோது அரசாங்கத்தின் இரகசியங்கள் எல்லாம்கூட ஆர்.எஸ்.எசுக்கு அறிவிக்கப்பட்டன - இராணுவ இரகசியம் உட்பட!

1999 மே 11,13 ஆகிய இந்நாட்களில் மத்திய பிஜேபி கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக மிக முக்கிய மான இரகசியம் இது! குடியரசு தலைவருக்குக்கூட முதல் நாள்தான் தெரிவிக்கப்படும் என்றால் - இது எவ்வளவு உண்மையான பரமரகசியம் என்பது வெளிப்படை!

ஆனால் என்ன நடந்தது? பொக்ரானில் அணு குண்டு வெடித்த அதே நாளில் - நேரத்தில் ஆர்.எஸ். எஸின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் அணு ஆயுத இந்தியா என்ற தலைப்பில் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை முன்னிறுத்தி சிறப்புக் கட்டு ரையே வெளியிட்டது என்றால் இதன் பொருள் என்ன?

குடியரசு தலைவருக்குத் தெரிவதற்கு முன்பே ஆர்.எஸ்.எசுக்குத் தெரிகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான - இரகசியத்தை பாதுகாக்கத் தவறிய ஆட்சி பிஜேபி ஆட்சி என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, பிஜேபிக்கு வாக்களிப்பது என்பது வெளிப்படையாக ஆர்.எஸ்.எசுக்கு வாக்களிப்பதாகத் தான் பொருள்.

ஆர்.எஸ்.எஸின் குணம், மணம் எத்தகையது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனவே வாக்காளர்ப் பெரு மக்களே உஷார்! உஷார்!! கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ளாதீர்!

தமிழ் ஓவியா said...


கடவுள் - மதம்


மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண் டாக்கக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டிலோ, மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக் கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள்.

- (விடுதலை, 16.5.1968)

Read more: http://viduthalai.in/page-2/77157.html#ixzz2wMklOwLv

தமிழ் ஓவியா said...


கரும்பு விவசாயிகள் வடிக்கும் கண்ணீர்க்கதை விவசாயிகளின் விரோதி அ.தி.மு.க. அரசு


- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அமைந்த அ.தி.மு.க. அரசு உழவர்களின் நண்பனா? விரோதியா? என்றால் விரோதிதான் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் வரலாறு படிக்கும், வரலாறு போதிக்கும் நாம் எதை யும் ஆதாரத்தோடு சொல்லியே பழக்கப் பட்டவர்கள் ஆதலால் ஆதாரத்துடன் அடிப்படை உண்மைகளுடன் எடுத்துச் சொல்லுவோம்.

தமிழ்நாட்டு உழவர்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் ஒரு பக்கம் அதி முக ஆட்சியில் அவலமான விவசாயக் கொள்கையினால் அவதியுற்று இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால் கரும்பு பயிரிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டுள்ள விவசாயிகளின் கண்ணீர் அதை விடக் கவலையளிப்பதாக உள்ளது.

நாம் கரும்பு விலை குறித்து ஜெய லலிதா 2011 தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்ன? செய்தது என்ன? என்று பார்த்தால் சொன்னது எதையும் செய்யாதவர் என்பதற்கு அவருடைய அரசு கரும்பு விலையை உயர்த்தித் தராதது மட்டுமல்லாது கரும்பு விவசாயி களை ஏமாற்றி வருவதும் தெரியும்.

ஏமாற்றுவது மட்டுமல்லாது ஏழை, எளிய விவசாயிகள், மீனவர்கள் நண்பர் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கொடுமை வேறு. கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ததில் விவசாயிகளை ஜெயலலிதா எவ்வாறு ஏமாற்றமடையச் செய்துள்ளார். கரும்பு ஆலை அதிபர்களுக்கு ஆதர வாகவே செயல்பட்டுக் கரும்பு விவசாயி கள் வயிற்றில் சர்க்கரைப்பால் வார்க்கா விட்டாலும் பரவாயில்லை வயிற்றில் அடிக்காமலாவது இருக்கலாமல்லவா? 2011 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின் போது ஆட்சிக்கு வந்தால் டன் ஒன்றிற்கு 2500 ரூபாய் தருவதாகச் சொன்னவர் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக் குப் பிறகு 2014 இல் தான் 2500 ரூபாய் தருகிறார்.

பார்த்தீர்களா? வாக்குக் கொடுத்தப்படி எங்க அம்மா 2500 ரூபாய் கொடுத்து விட்டார் என்று அதிமுகவினர் பீற்றிக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர் 2500 ரூபாய் டன்னுக்குத் தருவதாகச் சொன்ன 2011 இல் டி.ஏ.பி. உரம் மூட்டை ஒன்று 700 ரூபாய் இப்போது 1300 ரூபாய் அதாவது ஒரு மடங்கு உரவிலை உயர்வு.


தமிழ் ஓவியா said...

சரி கரும்பு வெட்டுக்கூலி நிலைமை தெரியுமா? அப்போது 700 ரூபாய். இப் போது அதுவும் 1300 ஆக உயர்ந்துவிட் டது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் படி செலவு அய்ம்பது விழுக்காடு உயர்ந்து விட்டது. எனவே டன் ஒன்றுக்கு ரூ. 4000 என்று அறிவித்தால்தான் கரும்பு விவசாயிக்குக் கட்டுபடியாகும்.

ஜெயலலிதா அவர்கள் கரும்பு கொள் முதல் விலையை டன் ஒன்றுக்கு 550 ரூபாய் உயர்த்தி வழங்க ஆணையிட்டு டிசம்பரில் அறிக்கை வெளியிட்டார். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2650 ரூபாய் கிடைக்கும் என்று அறிவித்தார்.

ஜெயலலிதாவின் அறிக்கை இது: கரும்பு உற்பத்தியைப் பெருக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக் கவும், சர்க்கரை உற்பத்தியை மேம்படுத் தவும் தேவையான ஆக்க பூர்வமான நட வடிக்கை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் 8.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி மேலும் உயர்த்தும் வகையில், நுண்ணீர் பாசன முறையை அறிமுகப்படுத்த இந்த முறையை கையாளும், குறு, சிறு விவ சாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருவதோடு, நுண்ணீர் பாசன மானியம் பெறுவதற்கான ஒரு ஏக்கர் என்ற உச்ச வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பத்திட்டத்தினை மேற்கொள்தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன. நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடு பொருட்களை காலத்தே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், தோட்டக்கலைத் துறை ஆணையகத்தில் சிறப்பு நோக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சுழல் நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட் டுள்ளது. கரும்பு உற்பத்தியைப் பெருக்க இது போன்ற சலுகைகளை வழங்கிவரும் எனது தலைமையிலான அரசு, ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை மத்திய அரசு உயர்த்தும் போதெல்லாம், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில பரிந்துரை விலையைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 2011 - 2012 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 1450 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்தபோது, போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய் உயர்த்தி 2100 ரூபாயாகவும், 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றிற்கு 1700 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்தபோது போக்கு வரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய் உயர்த்தி 2350 ரூபாயாகவும் வழங்க நான் ஆணை யிட்டேன்.

தமிழ் ஓவியா said...

தற்போது 2013 - 2014 ஆம் ஆண்டிற் கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றிற்கு 2100 ரூபாய் நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு மத்திய அரசு அறிவித்த விலையைக் காட் டிலும், 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக டன் ஒன்றிற்கு போக்குவரத்துச் செலவு உட்பட 550 ரூபாய் வழங்க நான் ஆணை யிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன. இதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு 2650 ரூபாய் கிடைக்கும். எனது தலைமை யிலான அரசின் இந்த நடவடிக்கை கரும்பு சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மனமகிழ்ச்சியினை அளிக்கும்.

தமிழக முதல்வரின் இந்த அறிக்கை மேல் எழுந்த வாரியாகப் பார்க்கிறவர் களுக்கு கரும்பு விவசாயிகளுக்கு உயர்த்திக் கொடுத்து விட்டார் என்பது போல் தோன்றும். ஆனால் கரும்பு விவசாயிகள் தான் இந்த விலை உயர்வு குறித்துக் கேட்டதும் மகிழ்வு அடைவ தற்குப் பதிலாக மனம் புழுங்கியவர்கள் ஏமாற்றுகிறாரே தமிழக முதல்வர் என்று எரிச்சல் பட்டனர்.

அம்மா என்றவுடனே மேஜையைத் தட்டி ஆர்ப்பரிப்பவர்கள், 110 அறிக்கை புகழ் முதல்வர் எழுந்தாலே மேஜையைத் தட்டுபவர்கள் என்று மட்டுமல்லாது, அதிமுகவினர் விவரமில்லாதவர்கள். முதல்வரின் அறிக்கையைக் கேட்டதும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தது என்ன? ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தது என்ன? அத்தனையையும் அவர்களின் ஜெயா தொலைக்காட்சியில் காட்டி மகிழ்ச்சிப் புள காங்கிதம் அடைந்து கொண்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...

முதல்வர் உழவர்களுக்கு எவ்வாறு பேருதவி செய்துள்ளார்? எவ்வாறு பசப்பு வார்த்தைகள் கூறி இனிக்கும் கருமபு பயிரிடுவோரைக் கரும்பு கசக்கும்படி செய்துள்ளார் என்பதை இப்போது விளக்குகிறோம். நன்கு ஊன்றிப்படித்துப் பாருங்கள் இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது சென்ற ஆண்டை விட ரூ. 300 கூடுதல் என்றாலும் தமிழக அரசு கடந்த ஆண்டை விட ரூ. 100 குறைத் துள்ளதாக காவிரி டெல்டா விவசாயிகள் குமுறு கின்றனர்.

கடந்த ஆண்டில் அதாவது 2012 - 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஆதார விலை கரும்பு டன்னுக்கு ரூ. 1700 இத் துடன் தமிழக அரசு தன் ஆதரவு விலை யாக ரூ. 650 சேர்த்து டன்னுக்கு ரூ. 2350 விலையாகக் கொடுத்தது.
(தொடரும்)

Read more: http://viduthalai.in/page-2/77159.html#ixzz2wMkw6oU0

தமிழ் ஓவியா said...


அணியா? பிணியா?

தற்போது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, தமிழ் நாட்டில் அமைக்கப்படும் பாஜக கூட்டணி, இதுவரை நாம் பார்த்திராத விசித்திரமான கூட்டணியாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்த வரையில், கூட்டணி என்று சொல்லி, காம்ரேடுகளிடம் பூச்செண்டு வாங்கி, அவர்கள் காதில் வைத்து அனுப் பியது. திமுகவில், விடுதலை சிறுத் தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்குவதில் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், ஒரு நாளிலேயே அதனைச் சரிசெய்து, அனைத்துக் கட்சிகளுக்கும், இடம் ஒதுக்கி, வேட்பாளர்களும் அறிவிக் கப்பட்டு, பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ஆறு மாதங் களுக்கு முன்னரே, பிரதமர் வேட் பாளர் என பாஜகவால் அறிவிக்கப் பட்ட மோடி , இரண்டுமுறை தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதல், மோடி அலை என்று கூறி, எல்லாக் கட்சிகளும், பாஜக பின்னால் இருப் பது போல் ஒரு மாயையை உரு வாக்கினார்கள். தேர்தல் தேதி அறி விக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சியாக பேச்சு வார்த்தை நடத்தியது பாஜக. வைகோவின் மதிமுக முதலில் வந்தது. ஏற்கெனவே பத்து தொகுதி களில் வேட்பாளர்களை அறிவித்த பாமகவும் கூட்டணிப் பேச்சு வார்த் தையில் ஈடுபட்டது.

அறிவிக்கப்பட்ட பத்து தொகுதி களில் வேட்பாளரையும் களத்தில் இறக்கிவிட்டு, அந்த தொகுதிகள் பற்றி எந்த பேச்சும் இருக்கக்கூடாது என்று, இதுவரை யாரும் பார்த்திராத புதிய நிபந்தனையோடு, பாமக பேச்சு வார்த்தையில் இறங்கியது. தேமுதிகவின் கேப்டன், அவர் பங்குக்கு, எல்லோரையும் சந்தித்து, இறுதியாக பாஜகவையும் சந்தித்தார். எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது என்று சொல்லிய நிலையில், கேப்டன், வேட்பாளர்களை அறிவிக் காமலே, பிரச்சாரம் தொடங்குகிறார். தொகுதிக்குச் சென்று அங்கே வேட்பாளரை அறிவிக்கிறார். அந்த தொகுதி, கூட்டணியில் இருப்பதாகக் கூறும் இன்னொரு கட்சியும் கேட் கிறது என்று தெரிந்தும், அந்த தொகு திக்கும் வேட்பாளரை அறிவிக்கிறார். புதுச்சேரிக்கு உள்ள ஒரே தொகு திக்கு, அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியான என்.ஆர். காங் கிரஸ் வேட்பாளரைத் தானாகவே அறிவித்துவிட்டது.

அந்த கட்சியும், பாஜக அணியில் உள்ளது என்கிறார் கள். பாமகவும் அங்கே வேட்பாளரை நிறுத்தும் என்று சொல்லிவிட்டது. கள்ளக்குறிச்சியில், தேமுதிக, பாமக இருவருமே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற் கொண் டுள்ளனர். பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், தினமும், காலையும், மாலையும், இன்னும் ஒரிரு நாள்களில் பேச்சு வார்த்தை முடிந்து விடும் என்று பிழையில்லாமல் சொல்லி வந்தார். இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இத்தகைய விசித்திர மான கூட்டணியை தமிழகம் முதன் முதலாக சந்திக்கிறது. அணியா, பிணியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/77161.html#ixzz2wMlQRNWB

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் தொலைக்காட்சிப் பேட்டி பற்றி...


14.3.2014 அன்று கலைஞர் டி.வி.யில் நீங்கள் கூறிய செய்திகள், பெரியார் அவர்கள் சாதனைகளின் வெளிப்பாடு என்று நாங்கள் கருதுகிறோம்.

நீங்கள் கூறியபடி தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான எனது உறவினர், வயது 55, படிக்காதவர், கை நாட்டு. ஆனால் அவர் மகன் இன்று அமெரிக்காவில். எனது உறவினருக்கு தன் மகன் என்ன வேலை செய்கிறார் என்று சொல்லத் தெரியாது. அமெரிக்க கம்பெனியின் பெயரும் சொல்லத் தெரியாது. ஆனால் இன்று வாட்ஸ் அப்பில் அமெரிக்கா வில் உள்ள மகனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

எங்களுக்கு மிக நெருக்கமான மற்றுமொரு தாழ்த்தப் பட்ட நண்பர் இன்று ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி.

ஏன் இதை சொல்கிறோம் என்றால், ஒரு வேளை ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் அமுலுக்கு வந்து இருந்தால் இன்றும் நாம் சூத்திரர்களாக இருந்து அவாளுக்கு அடி வருடிகளாக இருந்திருப்போம். எனவே எங்களுக்கு வழிகாட்டிய புகழ் தந்தை பெரியாருக்கே உரியது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப முயற்சி செய்யுங்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவாவுக்கு ஒரே பதில், பெரியாரித்துவா என்பதே.

ஆர்.எஸ்.எஸ்.இன் மத வெறி தமிழகத்தில் வளராமல் தடுக்க ஆவன செய்யுங்கள்.

உங்கள் சகோதரிகள்
(பெயரை வெளிப்படுத்தவில்லை)

Read more: http://viduthalai.in/page-2/77160.html#ixzz2wMlfnupJ

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை - 18.3.2014



பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்! நேற்றையதினம் நெய்வேலி யில் உள்நாட்டுப் போர் ஒன் றே நடைபெற்றிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தில் ஒப்பந்தத் தொழி லாளியாகப் பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்கு மார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நெய் வேலி இரண்டாவது சுரங்கத் தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இரு தரப் பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார் கள். தொழிலாளர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியதில், பல தொழி லாளர்கள் காயமடைந்துள் ளார்கள்.

தொழிலாளர்களைத் தாக்கியதோடு நிறுத்தாமல், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை யினர் அடித்து நொறுக்கிய தில், 20 மோட்டார் சைக் கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட் டிருக்கிறார். பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாக செய்தி வந்திருக்கிறது. தொழிலாளர் கள் தாக்கப்பட்டதைக் கண் டித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதாகவும், நிறு வனப் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்ற தாகவும் அவர்களுடைய கேமராக்கள் நொறுக்கப் பட்டதாகவும் பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச் சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்ததாக வோ, தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தியதாகவோ தகவல்கள் வரவில்லை.

காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி தான் சம்ப வங்கள் நடைபெற்ற பிறகு அதிரடிப்படையினரோடும், வேறு சில அதிகாரிகளோடும் அங்கே வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வன்முறைகள் ஆங் காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இதெல்லாம் தக்க உதாரணங்களாகும். துப்பாக் கிச் சூட்டில் இறந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசி னால் இதுவரை அறிவிக்கப் படவில்லை. உடனடி அரசு நிர் வாகத்தில் இருப்போர் நெய் வேலியில் அமைதி திரும்பு வதற்கும், தொழிலாளர் களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு, முதல மைச்சரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக ஆயிரக் கணக்கான காவலரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல் துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத் தைக் களையவும் முன் வர வேண்டுமென்று வற்புறுத்து கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/77170.html#ixzz2wMluJ85l

தமிழ் ஓவியா said...


காசநோயை ஒழிக்க புதிய திட்டம்


ஊட்டி, மார்ச் 18- தமிழ கம் உட்பட, 16 மாநிலங் களில், காசநோயை கட்டுப் படுத்த, அரசு மற்றும் தனி யார், கூட்டு முயற்சியில், புதிய திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலத்தில், டி.பி., அல்லது டியூபர்குளோசிஸ் என, அழைக்கப்படும், காச நோயை கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்த, இரு நாள் கருத்தரங்கு, ஊட்டியில் நடந்தது.


இதில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் டாக்டர் ராஜா ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர், காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர் களில், 30 லட்சம் பேர், உரிய சிகிச்சை எடுத்து கொள்வ தில்லை. மொத்த காசநோ யாளிகள் எண்ணிக்கையில், 5இல் 1 பங்கு பேர், இந்தி யாவில் உள்ளனர். தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் காசநோயை குணப்படுத்த முடியும். தனியார் மருத்து வர்கள், தங்களிடம் வரும் நோயாளிகள் விவரத்தை, அரசு, காசநோய் பிரிவுக்கு தெரியப்படுத்துவது இல் லை. இதனால், காச நோ யாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை எடுத்து கொண் டவர்கள் விவரம், துல்லி யமாக இல்லை. காச நோயை கண்டறிய, சளி பரிசோதனை தான் முக் கியம். ஆனால், பல தனியார் மருத்துவர்கள், எக்ஸ்ரே மூலம் கண்டறிகின்றனர். எனவே, அரசு துறையுடன், தனியார் டாக்டர்களையும் ஒருங்கிணைத்து, காசநோய் பரிசோதனை, சிகிச்சை வழங் கு வதன் மூலம், நோயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரும் திட்டம், தமி ழகம், ஆந்திரா, கருநாடகா, மகாராஷ்டிரா உட்பட, 16 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. நோ யாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு காசநோய் பிரிவினர் மூலம், இலவசமாகவே வழங்கப் படும்.
காசநோயாளிகள் குறித்த தகவலை, அரசு காசநோய் பிரிவிற்கு தெரியப்படுத்தாத மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அறிக்கை அனுப் புவது, தற்காலிக பணிநீக்கம் செய்வது, பணி நீக்கம் செய் வது போன்ற, ஒழுங்கு நட வடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்தாண்டுக்குள், புதிய காசநோயாளிகள் உருவாகக் கூடாது; 2050இல், காசநோ யாளி களே இல்லை என்ற நிலையை இலக்காக கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/77173.html#ixzz2wMmAoGzV

தமிழ் ஓவியா said...


கல்கியின் பார்வையில் அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியோ, வளர்ச்சி!


தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி தமிழகத்தில் 2011 இல் 677 பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2013 இல் இதன் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துவிட்டது.

வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இது தொடர்பாக 2012 இல் தமிழகத்தில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2009 இல் (தி.மு.க. ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள், 2013 இல் பதினைந்தாக உயர்ந்துவிட்டது..

சரி... பொருளாதாரத்துக்கு வருவோம்.

விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாகத் திட்டக் கமிஷன் கூறுகிறது.

தொழில் வளர்ச்சியில் தி.மு.க. ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், இப்போது14 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

- கல்கி 16.3.2014, பக்கம் 11

- தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை எடுத்துக்காட்டிப் பேசினார், 16.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77179.html#ixzz2wSAdgoSO

தமிழ் ஓவியா said...


தேர்தல் கோண(ங்)ல்கள்


பயன்படுத்திக் கொள்ளலாம்!

இந்தியா முழுமையும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 1593; அதில் தமிழ்நாட்டில் மட்டும் 138 கட்சிகளாம். வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக் கிக்கொள்ள அரசியல் கட்சிகளைச் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற வழி தெரிகிறது!



வைகோவின் சரி! சரி!

சென்னையில் நடைபெற்ற மதி முக கட்சிக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் சிந்திய முத்துக்கள். பி.ஜே.பி. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது அதில் ம.தி.மு.க. வும் இடம்பெறும். (மாண்புமிகு வைகோ என்று அழைக்கப்பட்டால், மகிழ்ச்சிதான் - நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்!).

ம.தி.மு.க.வுக்கு முதலில் ஒன்பது தொகுதிகள் கேட்டோம்! அவர் களும் தருவதாகச் சொன்னார்கள். திடீரென்று எட்டு தொகுதிதான் தர முடியும் என்றார்கள். சரி! என்றேன். பின்னர் ஒரு நாள் ராம்ஜெத்மலானி போன் செய்து என்னிடம் நீங்கள் ஒரு தொகுதியை விட்டுத் தரவேண்டும் மோடியே இதை உங்களிடம் சொல் லச் சொன்னார் என்றார்.

மோடியே சொல்கிறாரா, சரி! சரி! என்றேன்.

இப்பொழுது ஏழு தொகுதிகள் உறுதியாகிவிட்டன.

சரி!, சரி! எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.

மோடியே நேராகத் தொடர்பு கொண்டு பேசினால், மேலும் இடங் களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி!

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்படி சரி என்று சொல்லியிருந் தால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கலாமே! அ.இ. அ.தி.மு.க.வு டன் சேர்ந்து அநியாயத்துக்குத் தோல்வி கண்டதுதான் மிச்சம்! சரி! சரி! என்று இப்படி 2011 தேர்தலில் தேர்தலுக்கே முழுக்குப் போடவேண்டிய நிலையும் ஏற் பட்டு இருக்காதே!
இந்துத்துவாவின் காந்தத்துக்கு வைகோவைப் பொறுத்தவரையில்

சக்தி அதிகம்தான். அது சரி, நமக்கு ஏன் வீண்வம்பு?

ரூ.50 ஆயிரம் ரூ.50 லட்சம் ஆனது!

2009 இல் நடக்கவிருந்த மக்கள வைத் தேர்தலில் கல்லக்குறிச்சிக்குப் பிரச்சாரம் செய்ய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சென்றபோது, ஹெலிகாப்டர் இறங்க ஹெலி பேடுக்கு ரூ.50 ஆயிரம் செலவாம் - இந்த முறை அதே ஊருக்கு அவர் சென்றபோது ஆகியுள்ள செலவு ரூ.50 லட்சமாம்.

வேட்பாளர் மனு தாக்கல் செய் யும்வரை ஆகும் செலவெல்லாம் கட்சியைச் சேர்ந்ததாம் - அதற்குப் பிறகு ஆகும் செலவு வேட்பாளரைச் சார்ந்ததாம்.

அதற்கு முன்பே முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை இதனால்தான் அவசர அவசரமாக அமைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சிக்கியது...

பி.ஜே.பி.யிலிருந்து விலகி காங் கிரசில் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உறவினரான கருணா சுக்லாவின் வாக்குமூலம்: மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தனி நபர் களின் பிடியில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார். எல்லோருடைய சிண்டும் ஆர்.எஸ்.எஸிடம் சிக்கி இருக்கிறது என்பது அதைவிட உண்மையாயிற்றே!

இந்தி - ஓட்டா?

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி போடுவது இந்தி மொழி பேசும் மக்களின் ஓட்டுகளைப் பெறு வதற்கே என்று கூறியுள்ளார் பி.ஜே. பி.யின் தேசிய பொதுச்செயலாளர் அனந்த்குமார்.

அப்படி என்றால், இந்தியை ஏற்றுக்கொள்ளாத தென் மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக மோடிக்கு பட்டை நாமம் சாத்து வார்கள் என்று பொருள்.

மண் சோறு மகாத்மியம்!

திருச்சிராப்பள்ளியில் அ.இ.அ.தி. மு.க. சார்பில் போட்டியிடும் வேட் பாளர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதற்குப் பிறகு, ரயில்வே ஜங்சன் வழிவிடு முருகா (டிராபிக் போலீசோ?) கோவிலுக்கு முன் மண் சோறு சாப்பிட்டுவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார்களாம் - இதற்குப் பெயர்தான் இரட்டை வேடம் என்பது!

பெரியார் சிலைக்கு மாலை போட்டதால், வழிவிடு முருகனுக்குச் சக்தியிருந்தால் அ.தி.மு.க. வேட்பா ளரைத் தோற்கடித்துவிட மாட்டாரா?

அண்ணன் என்னடா - தம்பி என்னடா?

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் சார்பில் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து அவர் தம்பி பவன்கல்யாண் (இவரும் நடிகரே!) அவசர அவசரமாக ஒரு கட்சியைத் தொடங்கி, பி.ஜே.பி. அணியுடன் கூட் டணி சேர்ந்து, அண்ணனை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அண்ணன் என்னடா - தம்பி என் னடா - இந்த அரசியல் கும்ப மேளாவில்!



பதில் இல்லையே - ஏன்?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அவர்கள் பி.ஜே.பி.யைப் பற்றி விமர்சிப்பதில்லையே, ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி. (தோழர் தா.பாண்டியன்கூட குறிப்பிட்டுள் ளார்) இதுவரை ஜெயலலிதா இதற் குப் பதில் அளிக்காதது ஏன்? மவுனம் காப்பது ஏன்?

மவுனம் சம்மதத்துக்கு அடை யாளம் - பி.ஜே.பி.யோடு ரகசிய கூட்டு இருக்கிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் ரகசியம்!

Read more: http://viduthalai.in/e-paper/77177.html#ixzz2wSApk2Bz

தமிழ் ஓவியா said...


நாத்திகம் தோன்றக் காரணம்


எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ, அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.

_ (குடிஅரசு, 21.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/77189.html#ixzz2wSB3jOrP

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தின்போது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணம், காணாமற்போனதாம்!

அகமதாபாத் மார்ச் 19- பத்தாண்டுக்கும் மேலாகிவிட்ட 2002 குஜராத் கலவரத் தின்போது மாநில அரசு நிர்வாகம் முடங்கிவிட்டதால் அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்திருந்தார். அந்த ஆவணம் மறைக்கப்பட்டுள்ள தான தகவலைத் தேசிய சிறுபான்மை யருக்கான ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையருக்கான ஆணையத்தின் செயலாளராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள சரிதா ஜே.தாஸ். குஜராத் கலவரத்தின்போது மாநில அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதால் 2002 இல் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி பரிந்துரைத்திருந்தார்.
இவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆவ ணம் மாயமாகிவிட்ட தகவலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தான் பரிந்துரை செய்த அந்த அறிக்கையினை மாற்றிவிட்டு, முக்கிய மான குற்றச்சாட்டுகளையும் நீக்கி உள்ள னர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறு பான்மை யருக்கான ஆணையம் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது. ஆணையத்தின் அறிக்கைகள், தகவல் கள் அரைகுறையாக இருப்பதாகக் கருதி, தற்போது காணாமற்போன ஆவணத்தை யும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்து தொலைக் காட்சி செய்திகளில் மோடி தன் இதயமே நொறுங்கிவிட்டதாகக் கூறியதைக் கேட்ட போது ஆச்சரியமானேன். என் கடமையை சரிவர செய்யவில்லையோ என வேதனைக் குள்ளானேன் என்று கூறினார். சரிதா ஜே.தாஸ் அளித்த குஜராத் கலவரம் குறித்த விமரிசன அறிக்கை ஆவணங்களிலிருந்து மாயமானது மீண்டும் முறையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆணை யத்தை அணுகினேன் என்றார்.

கடந்த சூலை மாதத்தில் மோராய்ட் டர் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், எந்த இடத்தில் தவறானவை நடந்தாலும், இயற்கையாகவே வருத்தம் தான் ஏற்படும். இந்திய உச்சநீதிமன்றம் இன்று உலகிலேயே நல்ல நீதிமன்றமாக உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த சிறப் புப் புலனாய்வுக்குழு மிக உயர்ந்த, மிகச் சிறப்பான அலுவலர்களைக் கொண்டு இயங்கியது. அந்தபுலனாய்வுக் குழு அறிக்கையும் வந்தது. அந்த அறிக்கையில் நான் பரிசுத்தமானவன் என்று இருந்தது. நாம் ஓட்டுநராக, அல்லது பின் இருக்கை யில் உட்கார்ந்து இருக்கும்போது, நாய்க் குட்டி சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் வருத்தப்படுவோமா இல்லையா? அது போல்தான் இதுவும். நான் முதலமைச்ச ராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் ஒரு மனிதத்தன்மை உள்ளவன். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும், இயற் கையாகவே வருத்தப்படுவேன் -இவ் வாறு ராய்ட்டர் செய்தி நிறுவனத் திடம் மோடி கூறினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அன்றைய ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபிபுல் லாஹ் முன்னிலையில் விசாரணைக்கு சரிதா ஜே.தாஸ் எழுப்பும் பிரச்சினை வந்துள்ளது. ஆவணங்கள் தொடக்கத்தில் கண்டறியப்பட வில்லை. அப்படியே கிடைத்தாலும், அதில் சரிதா ஜே.தாஸ் ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தர்லோச்சன் சிங் ஆவணம் இருந்தது. சரிதா ஜே.தாஸ் சமர்ப்பித்ததில் முழுமையாக திருத்தப்பட்டு இருந்தது. அதில் மாயமான தகவல்கள்குறித்து நான் விசாரணை நடத்த உத்தரவிட்டேன் என் கிறார் ஹபிபுல்லாஹ். தேசிய சிறுபான் மையர் ஆணையத்தில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை துணைத்தலைவராக இருந்தார். தேசிய ஜனநாயக முன்னணி 2004 இல் அதிகாரத்துக்கு வந்தபிறகு ஆணையத்தின் தலைவராக தர்லோச்சன் நியமிக்கப்ட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாஜக மற்றும் இந்திய தேசிய லோக் தளத்தின் ஆதரவுடன் அரியானாவுக்கான மாநிலங்களவை உறுப்பினரானார். இவர் கோத்ரா சம்ப வம் தானாகவே நிகழ்ந்த சம்பவமாகக் கூறுகிறார். குஜராத் அரசே தானாகவே சிறுபான்மை ஆணையத்தின்மூலம் உண்மைஅறியும் குழுவை அமைத்து, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 137பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் அகமதாபாத் நகரில் அதி காலையிலேயே வன்முறை ஏற்பட்டது என்று தர்லோச்சன் சிங் தெரிவித்தார். 2014 இல் மோடி பிரதமராக வருவார் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான இடங்களைப்பிடிக்கும் என்றும் அவர் கூறினார். காங்கிரசுக் கட்சி மத்தியில் நிலையான, மதசார்பற்ற அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது.

நன்றி: ஃபர்ஸ்ட் போஸ்ட், புதுடில்லி, 14.3.2014

Read more: http://viduthalai.in/page-2/77192.html#ixzz2wSBRHY1E

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. - தீண்டாமை!

பிகார் முசாபர்பூரில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார மேடையில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் இருப் பதா என்று நான்கு பூமி கார் உயர் ஜாதியினரும், பா.ஜ.க.வின் பார்ப்பனத் தலைவர்களும் மேடையில் ஏறாமல் புறக்கணித்துள்ளனர் என்கிற விவரம் வெளியே வந்துள்ளது. பிகார் மாநிலத்தில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட் டத்தில் மோடி பேசும்போது தாழ்த்தப்பட்ட தலைவர் களே பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கள் என்று பெருமைப்படக் கூறினர்.

ஆனால், நடை முறையில் பா.ஜ.க.வினரின் செயல்பாடுகள் ஜாதி ஆதிக்க வெறியிலிருந்து அவர்கள் மீளவில்லை என் பதையே உணர்த்துகிறது.

மோடி பங்கேற்ற முதல் கூட்டத்தில் ராம்விலாஸ் பஸ்வான் பங்கேற்கிறார் என்றதுமே ஜாதியை வைத்து இழிவுபடுத்தும் நோக்கில் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணித் துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க.வின் துணைத் தலைவர் சி.பி.தாக்கூர் கூறும்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வர முடியாமல் இருந்திருக்கலாம் என் கிறார். பிகார் மாநிலத் துணை அவைத் தலைவர் அமரேந்திர பிசாத் சிங், கிரிராஜ்சிங், அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் தெளிவாகவே பா.ஜ.க. ராம் விலாஸ் பஸ்வானு டனான கூட்டணியை எதிர்த்துப் போராடுகிறோம் என்கிறார்கள்.

ஏன் இந்த நிலை? பி.ஜே.பி. என்ற கட்சி ஓர் இந்துமதவாதக் கட்சி. அது வர்ணாசிரமத்தை ஜாதியை - தீண்டாமையை ஆதரிக் கக் கூடிய கட்சி அவர் களின் காஞ்சி பெரிய வாளான - மறைந்த சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி மிக வும் வெளிப்படையாக தீண் டாமை க்ஷேமகரமா னது என்று சொன்னவர் (ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங் கள் - இரண்டாம் பாகம்).

அதே சங்கராச்சாரியார் 16.10.1927 அன்று பாலக்காட் டில் மாட்டுக் கொட்டகை யில் காந்தியாரை வைத்துச் சந்தித்தார் அப்பொழுது அந்த மூத்த பெரியவாள் என்ன சொன்னார்? ஹரி ஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும் பழைய வழக் கங்களையும் நம்பி இருப் பவர்கள் நாட்டில் பெரும் பாலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியி ருக்கிறது என்றும் ஸ்வா மிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார் (தமிழ்நாட் டில் காந்தி - பக்கம் 575, 576).

அங்குக்கூடப் போக வேண்டாம். இதே நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத் தில் என்ன நடக்கிறது? போலியோ சொட்டு மருந்து அளிப்பதில்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்துக் குழந்தைகள் அறவே புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஒரு கிராமத்துத் தண் ணீர்த் தொட்டியில் எழுதப் பட்ட வாசகம் என்ன தெரியுமா? ஜாதிவாரியாக நேரம்.காலை 9 மணி முதல் 10 மணி வரை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதி படேல் இனத்தவர் மட்டும்.

காலை 10 மணி முதல் 12 மணி (மதியம்) வரை பர் வாதா வங்கிரிஸ் மற்றும் குறும்பர். நண்பகல் 12 (மதியம்) முதல் ஒரு மணி வரை தலித் இனத்தவர். மோடி கூறும் ஹிந்து ராஜ்யம் வந் தால் இதுதான் நிலைமை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77247.html#ixzz2wYDp6P00

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வுக்கு தடையாக உள்ள தென்னிந்தியா! டைம்ஸ் ஆஃப் இந்தியா படப்பிடிப்பு!

சென்னை.மார்ச்.20- தேசிய ஜனநாயகக் கூட் டணி வெற்றி பெறுவற்கு தென்னிந்தியாவின் பங் களிப்பு வேண்டும் என்று தடையாக உள்ள தென் னகம் என்கிற தலைப் பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் தீட்டி உள்ளது. (18.3.2014)

நாடாளுமன்றத் தேர் தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மானம் காக் கப்பட வேண்டுமானால், தென்னிந்தியாவில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பாஜக அளவுகடந்து மோடியை முன்னிறுத்தி இருந்தாலும், தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கம் ஏதும் ஏற்படவில்லை. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர் நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு 129 உறுப்பினர்கள் செல்கின்ற னர். 2009இல் கர்நாடகாவில் 19 இடங் களை பெற்றதைத் தவிர தென்னிந்தியாவில் தனக்கான இடத்தைப் பதிவு செய்யத் தவறி உள்ளது. பாஜக காலூன்ற முடியாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பில் உள்ளது.

1998, 1999 தேர்தல்களில் கர்நாடகா, ஆந்திரப்பிரதே சம், தமிழ்நாடு ஆகிய மாநி லங்களிலிருந்து மொத்த மாக 18 இடங்களையே பெற்றதை பாஜக நினை வில் கொள்ள வேண்டும். பிறகு, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரு பெரிய மாநிலங்களில் சக்தி வாய்ந்த கூட்டணி அமைத் ததால் 81 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற் றது. அதேபோல் திரும்ப வும் 2014ஆம் ஆண்டிலும் பாஜக எதிர்பார்க்கிறது. இருந்தாலும், ஆர்வத்துடன் திறனுள்ள கூட்டணியை பாஜக அண்மைக் காலத்தில் அமைத்ததாகத் தெரிய வில்லை. கேரளாவில் உறுதி யான எதிர்ப்புள்ள இரு அணிகளிடையே உடைத் துக்கொண்டு வருவது பா.ஜ.க.வால் முடியாத ஒன்றாகும். அதேபோல் தமிழக அரசியலில் போற் றிப் பின்பற்றப்படக் கூடிய மாநிலக்கட்சிகள் போல, ஆந்திராவும் அதேநிலையை அடைந்துவருகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளிடம் சில இடங்களில் போட்டி அதிகமாக இருக்கக்கூடிய அளவிலான கூட்டணியை உருவாக்க முயன்றுள்ளது எனலாம். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி யின் அங்கத்தினர்களாக வைகோவின் மதிமுக , எஸ்.ராமதாசின் பாமக முன் கூட்டியே இருந்தாலும், நடி கர் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியை கூட்டணிக்குள் பா.ஜ.க., இழுத்துவந்துள் ளது. எப்படி இருந்தாலும், பல அணிகள் மோதுவதால் தமிழ்நாட்டிலிருந்து பாஜக வுக்கு இறுதிமுடிவு பற்றி யார் வேண்டுமானாலும் கணித்துவிடலாம். எல்லைகளைக் கடந்து ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் கட்சி, டிஆர்எஸ் ஆகியோர் நேருக் குநேர் ஆந்திரப்பிரிவினைப் பிரச்சினையில் சந்தித்துக் கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். அக்கட்சியினரி டையே பாஜக தன்னை சரிப்படுத்திக்கொண்டு, கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களி லும், பாஜக தனக்கான போதிய இடங்களைப் பெற முடியாது.

பாஜக விரும்புவது என்னவென்றால், சிக்கலான நேரத்தில் அதிகமான நாடா ளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளவர்களை நண் பர்களாகக் கொள்வது என் பதுதான். தமிழ்நாட்டில் பாஜக வுக்கு பெரிய நம்பிக்கை எப்படிப்பார்த்தாலும் அதி முக தலைமையிலான ஜெய லலிதாதான்.

இடதுசாரிகளிடம் அவர் ஆடிய ஆட்டம், தற்போது அவரை மட்டுமே சார்ந்து வெற்றிபெறமுடியும் என் பதுதான். ஜெயலலிதா, தன் தேர்தல் பிரச்சாரத்தில் காங் கிரசு மற்றும் திமுகவை மட்டுமே குறிவைத்து தாக் குகிறார். ஆனால், பாஜக வையோ, பாஜகவின் மறை முக பிரதமர் வேட்பாளர் மோடியையோ விமர்சிப் பது இல்லை.

தெலுகு தேசம், டிஆர் எஸ் உடனிருந்து, தமிழகக் கூட்டணி கைக்கொடுத்தால் மட்டுமே தேசிய ஜனநாய கக் கூட்டணியால் தென்னிந் தியாவில் உள்ள அதற்கான தடைகளை அகற்ற முடியும்.

- டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் 18-3-2014

Read more: http://viduthalai.in/e-paper/77248.html#ixzz2wYE1D9x2

தமிழ் ஓவியா said...


மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!

27.2.2002 புதன் அன்று காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்!

முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார்.

நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!

கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,

ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?

இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?

இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?

சிந்தியுங்கள் வாக்காளர்களே!

- சர்ச்லைட்

Read more: http://viduthalai.in/e-paper/77249.html#ixzz2wYEBCAaq

தமிழ் ஓவியா said...


அம்மா உணவகத்தில் ஆபத்தான அம்...மாவு!


100 டன் கோதுமை மாவு அழிக்கப்படுகிறது!

சென்னை, மார்ச்.20- அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் மலிவு உணவால் ஆபத்து என்ற தகவல் வெளி வந்துள்ளது.

ஆய்வின் முடிவில் 100 டன் கோதுமை மாவு அழிக்கப் படுகிறதாம்....

தமிழக அரசின்சார்பில் நடத்தப்படும் அம்மா உண வகங்களில் சப்பாத்தி மாலை 6 மணி முதல் 9 மணிவரை ரூ.3க்கு இரு சப்பாத்திகள் பருப்புக் கடை சலுடன் வழங்கப்படு கின்றன . 203 அம்மா உண வகங்களில் ஓர் உணவ கத்தில் சப்பாத்தி விற்பனை இரண்டாயிரம் வரை ஆனது. தற்போது மளமளவென விற்பனை சரிந்துள்ளது.

திருவொற்றியூர், மாதவ ரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 30ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை யிலிருந்து 20ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை ஆகியுள்ளது.

விற்பனைக் குறைவால் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் வரும் பொதுமக்கள் சப்பாத்திகள் கசப்பது குறித்து உணவ கங்களில் பணிபுரியும் பெண்களிடம் தொடர்ச்சி யாக புகார்களைத் தெரி வித்தவண்ணம் உள்ளனர்.

கோதுமைமாவே அப்படித் தான் எங்களுக்கு வழங்கப் படுகிறது என்றுதான் ஊழி யர்களால் பொதுமக்களி டம் கூற முடிந்தது.

ஆனா லும், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சப்பாத்திகள் கசப்பதற்கான காரணம் குறித்து அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சப் பாத்தி மிகவும் கசப்பாக இருந்ததால் பொதுமக்கள் சப்பாத்திகளை வாங்குவ தில்லை என்று தெரிய வந்தது.

உணவுப்பொருள் வழங்கு துறைமூலம் பெறப்படும் கோதுமையைச் சுத்தம் செய்யாமல் அப்படியே கோதுமை மாவாக அரைத்ததால் சப்பாத்தி களில் கசப்புத்தன்மை ஏற் பட்டதாக தெரிய வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்ட அதி காரிகள் சப்பாத்திக்கு பயன் படுத்தப்பட்ட கோதுமை மாவை பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வில் அம் மாவுப்பொருள் உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற தாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் சான்று அளிக் கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்சம் கிலோ கோதுமை மாவைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள் ளனர். இதனைத்தொடர்ந்து 100 டன் கோதுமை மாவை அழிக்க உத்தர விட்டுள்ளனர்.

குறிப்பு: பல நாடு களில் மைதா தடை செய் யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77251.html#ixzz2wYEQZfOj

தமிழ் ஓவியா said...


ஆனந்தவிகடன் பார்வையில்...


நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதில் தனக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறார் எல்.கே. அத்வானி. பா.ஜ.க. ஒன் மேன் ஷோவை நடத்துகிறது என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாக கட்சிக் கூட்டத்திலே குற்றம் சுமத்தியிருக்கிறார் அத்வானி. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் ஒரு தனி மனிதரை மட்டுமே ஏன் முன்னிறுத்த வேண்டும்? மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை பிரச்சாரத் தில் ஏன் முன்னிறுத்தவில்லை? என்று சீறியிருக்கிறார். வழக்கம்போல் அத்வானியின் கேள்விகளுக்கு பாஸ் சொல்லி விட்டுக் கலைந்திருக்கிறது பா.ஜ.க. தலைவர் கள் கூட்டம். ஏன்னா, இப்போ பாஸ் அவர் இல்லையே!

- ஆனந்தவிகடன் 19.3.2014 பக்.37

Read more: http://viduthalai.in/e-paper/77260.html#ixzz2wYFXXsBM

தமிழ் ஓவியா said...


காரணம்

வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.

(விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/77261.html#ixzz2wYFkRu1B

தமிழ் ஓவியா said...


அற்பங்களா நம் வாழ்வை இழக்கச் செய்வது?


அண்மையில் செய்தி ஊடகங் களில் வெளி வந்த இரண்டு நிகழ்வுகள், நம் நெஞ்சை மிகவும் உலுக்கின. இந்த 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய நிலையில், மக்கள் அவற்றை அனுப வித்து மகிழும் வாய்ப்புள்ள ஒரு புதிய கால கட்டம்!

ஆனால் பல நேரங்களில், மனி தர்கள் தங்களுக்குள்ள ஆறாம் அறிவாகிய பகுத்தறிவைப் பயன் படுத்தி, சிந்தித்து வாழாமல், மனிதத்தை அற்பங்களுக்காக தங்களை இழந்து விடும் பரிதாபத்திற்கு ஆளாகிறார்களே என்ற வேதனை - சமூக நல் வாழ்வை விரும்பும் நம்மைப் போன்றவர்களை வேதனையடையச் செய்கிறது.
பெங்களூருவில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்துத் திருமணம்; நிச்சயிக்கப் பட்டு நடைபெற வேண்டிய முதல் நாள் ஒரு ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பெண் வீட்டுக் காரர்கள். அழைப்பாளர்கள் உட்பட பலரும் வந்திருந்த நிலையில், அவ் விருந்தில் கோழிப் புலவு - சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

உடனே மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுத்து ஆட்டுக் கறி புலவு - (மட்டன் பிரியாணி) தான் பரிமாற வேண்டும்; காரணம் இந்த கோழிப் புலவு விலை குறைந்தது - மலிவானது. என்று கூச்சலிட்டு ரகளை செய்தனர்; மணமகள் வீட்டாரோ அய்யா எங்கள் சக்திக்கு இதைத் தான் செய்ய இயலும்; அதிக செலவாகும் - மட்டன் பிரியாணியை ஆட்டிறைச்சி புலவைப் போட முடியாது என்று கெஞ்சிப் பார்த்தனராம். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் ஒப்பவில்லை; வந்த விருந்தினர் எவ்வளவோ சமாதானம் கூறி ஒரு சுமூக நிலையை ஏற்படுத்த முயன் றனராம். அது வெற்றியடையாமல் நிச்சயிக் கப்பட்ட திருமணமே நின்று போனதாம்!

அப்பெண்ணின் மன நிலை, பெற் றோர்களின் துன்பம் எப்படி இருந் திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க விடவில்லை அர்த்தமில்லா வீண் ஆடம் பர வளர்ச்சி. என்னே கொடுமை!

படாடோபம், வறட்டுக் கவுரவம் என்பதற்காக ஒரு திருமணமே நின்று போவதா? அற்பங்களாக வாழ்விணை யர்களின் வாழ்வு நீர்மேல் எழுதிய எழுத்தாகி விட்டதே!
திருமணமே நின்று போனதே!

இதுஒருபுறம், இதைவிட அற்பமான மற்றொரு நிகழ்வு; ஒரு மாணவியின் உயிரையே பறித்து விட்டது!

தேர்வு நேரத்தில் ஏனம்மா இப்படி தொலைக்காட்சி (டி.வி.) யைப் போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டுள்ளாய்? படியம்மா என்று பெற்றோர்கள் கூறினார் களாம்; தொலைக்காட்சி பெட்டியை மூடி விட்டார்களாம்!

உடனே ஆத்திரம் கொண்ட அந்த மாணவி உள்ளே சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டதாம்!

என்னே கொடுமை! என்னே அறி யாமை! மனித உயிர்களும், உறவுகளும் எவ்வளவு அற்பத்திலும் அற்பமான காரணங்களுக்காக இழக்கப்படுகின்றன.


எண்ணிப் பாருங்கள்! அறிவு ஆட்சி செய்ய வேண்டிய நேரத்தில், உணர்ச்சி கள் மேலோங்கியதன் தீய விளைவு அல்லவா இவை?

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)

ஒருவன் தன் மனத்தை அதுசெல்லக் கருதிய இடத்திற்கெல்லாம் செல்ல விடாமல், அதனைத் தீய வழியினின்றும் நீக்கி, நல் வழியின் பால் செலுத்துவதே அறிவுடைமையாகும்.

அறிவைக்கூட அது செல்லும் போக்கில் செல்ல விடாமல் கடிவாளம் போட்டு, சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்கிறபோது

வெறும் உணர்ச்சிகளின் வெள்ளத் தால் அற்பத்திலும் அற்ப - சொற்ப - காரணங்களால், உயிரும், வாழ்வில் திருப்பங்களைத் தரக் கூடிய திருமணம் போன்றவையும் நின்று போகலாமா?

படித்தால் மட்டும் போதுமா? பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? பண்புகளை வளர்க்க வேண்டாமா?

எண்ணுங்கள் மனதில் விடை எழுதுங்கள்.
--------------veramani
Read more: http://viduthalai.in/page-2/77264.html#ixzz2wYFtMJin

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரைப்போல தொண்டு செய்து பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர்: பேராசிரியர் க.அன்பழகன்


தாம்பரம், மார்ச் 20- தமிழக மக்களுக்கு தொண்டு செய்து தந்தை பெரியாரை போல பழுத்த பழமாக இருப்பவர் கலைஞர் என தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்தார்.

திருப்பெரும்புதூர் நாடா ளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

தி.மு.க தமிழக மக்க ளுக்கு வரலாற்றில் இடம் பெறும் வகையில் தொண் டாற்றி வருகிறது. அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் தலைமையிலான காலம் வரை 50 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது.

ஆட்சியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் குறை தீர்க்க, ஏழைகளின் கண்ணீரை துடைக்க, விலைவாசி ஏற் றத்தைக் குறைக்க, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண் டிய திட்டங்களை தொடங்கி நிறைவேற்றிட சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க இந்த நாட்டில் ஆட்சி நடத்தியது.

இந்தியாவிலேயே கலை ஞர் மூத்த அரசியல்வாதி. தொண்டு செய்வதற்கே பிறந் தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தந்தை பெரி யாரை சொல்வதை போல தொண்டு செய்து பழுத்த பழ மாக இருப்பவர் கலைஞர்.

தமிழகத்திற்குப் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர். ஆட்சி நிர்வாகத்தில் சிறப் பாக செயல்பட்டவர். ஆனால் ஜெயலலிதா, தமி ழக திட்டங்களை நிறை வேற்ற விடாமல் இடையூறு செய்து வருகிறார்.

தமிழ கத்தில் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற விடா மல் தடுத்து வருகிறார். சென்னை துறைமுக பறக் கும் சாலை திட்டத்தை எதிர்க் கிறார். இப்படி எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை செயல்பட விடாமல் ஆட்சி நடத்துகிறார்.

கலைஞரின் கை ஓங்க தி.மு.க வெற்றி பெற திருப் பெரும்புதூர் தொகுதியில் ஜெகத்ரட்சகனை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற செய்யுங் கள். - இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-5/77243.html#ixzz2wYH9Zwww

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

தண்ணீர் அருந்தாமல் அதிகநாள்கள் வாழும் மிருகம் எது என்றால், நமக்கு நினைவுக்கு வருவது ஒட்டகம்; ஆனால் சரியான பதில் எலி !

பண்டகா பிக்மா என்ற வகை மீன் தான் மனிதன் உலகில் கண்ட மிகச்சிறிய மீன் இனமாகும். இதன் உடல் கண்ணாடி போன்று இருக்கும். நன்கு வளர்ந்த மீன் ஒரு கட்டெறும்பு சைஸ் இருக்கும்.

ஆறு விநாடிகளுக்கு ஒரு முறை நாம் நம் கண்களை சிமிட்டுகிறோம்.மனிதனின் சராசரி வாழ் நாளில் சுமார் 25,00,00,000 முறை கண்களை சிமிட்டுகிறான்.

Read more: http://viduthalai.in/page-5/77237.html#ixzz2wYHaPqrC

தமிழ் ஓவியா said...


வந்தாரய்யா விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்றவுட னேயே அன்றாடம் நகைச்சுவைத் துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமே - வயிறு குலுங்கச் சிரிக்கலாமே என்று பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இன்று முதல் இலவசமாக அவை கிடைக்கும் என்கிற வகையில் அவரின் திருவாய் உதிர்த்த சமாச் சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டன.

பா.ஜ.க. அணி மதச்சார்புள்ளது போலவும், தி.மு.க. அணிதான் மதச்சார் பற்ற அணி போலவும் பேசி வருகின்ற னர். உண்மையில் மதச்சார்பு, மதச்சார் பற்றது என்பது குறித்தெல்லாம் எனக்குச் சரியாக விளக்கம் புரியவில்லை. இருந் தாலும், முஸ்லிம் அமைப்புகளைக் கூடவே வைத்துக்கொண்டு, தி.மு.க. எப்படி மதச் சார்புபற்றி பேசுகிறது? என்ற கேள்வியை யும் எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் அமைப்புகள் நாங்கள் ஒரு முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தை அமைக்கப் போகி றோம் என்று சொல்லவில்லை; ஆனால், விஜயகாந்த் கூட்டணி வைத்துள்ள பி.ஜே.பி. இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் (வாரணாசியில் நரேந்திர மோடி, 20.12.2013) என்று பேசியுள்ளாரே - இதற்குப் பெயர்தான் மதச்சார்பு என்று பெயர்.

ஸ்ரீராம பிரான், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகி யோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் (தினமணி, 16.10.2000) என்று பி.ஜே.பி.யின் குரு பீடமான ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசினாரே - இதற்குப் பெயர்தான் மதவாதம் என்று பெயர்.

இந்த அரிச்சுவடியைக்கூட நாம் கற்றுக் கொடுக்கவேண்டியள்ளது.

சரி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இதே விஜயகாந்த் என்ன சொன்னார்?

கேள்வி: அயோத்தியில் பாபர் மசூ தியை இடித்ததுபற்றி என்ன நினைக்கிறீங்க?

விஜயகாந்த்: காட்டுமிராண்டித்தனம் - அநாகரிகமான செயல். டாக்டர் கலைஞர் சொன்னது மாதிரி... ஆதிகாலத்துக்கு திரும்பிப் போயிட்டது போல் இருக்கு!

நம் நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சி னைகள் இருக்கு சார். அதையெல்லாம் தீர்க்கிறதை விட்டுவிட்டு, அவசர அவசர மாக தகராறு பண்ணி ராமர் கோவில் கட்டுவதுதான் முக்கியமா?

உதாரணத்துக்கு பாருங்க, வடநாட்டில் வெள்ளம், தென்னாட்டில் தண்ணீர் பஞ்சம்; இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பாரதீய ஜனதா கட்சிக்காரங்க பாடுபட்டி ருந்தா பாராட்டலாம். வடக்கே ஓடுற கங்கையை கடலில் வீணாக கலக்கிற தண்ணியை தெற்கே திருப்பி விடுறதுக்கு ஒரு கரசேவா நடத்தியிருந்தாங்கன்னா அது நியாயம்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதுக்கு ஒரு கரசேவை நடத்தியிருந்தாங் கன்னா அது நியாயம்.

எவ்வளவோ பொருளாதாரப் பிரச்சி னைகள் இருக்கு - அதுக்கு ஒரு கரசேவா செஞ்சிருந்தா உத்தமம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு ராமர் கோவில் கட்டினா, வெள்ளச் சேதத்தை தடுத்திட முடியுமா?

தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமா? இல்லே... நாட்டுக்குத்தான் சுபீட்சம் வந்திடுமா?

என்று சொன்னவர்தான் விஜயகாந்த். பி.ஜே.பி.யின் மதவாதத்தைக் கண்டித்தவர்தான்.

எந்தப் பத்திரிகையில்?

அவர் சம்பந்தப்பட்ட சினிமா இதழ்தான் - அதன் பெயர் ஹீரோ (1993, ஜனவரி).

அதில்தான் இப்படி பேட்டி கொடுத்துள் ளார். அந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் பா.ஜ.க. அணி மதச் சார்புள்ளது போல வும், தி.மு.க. அணிதான் மதச்சார்பற்ற அணி போலவும் பேசி வருகின்றன என்று குறிப் பிட்டுள்ளார்.

இதற்குப் பெயர்தான் சந்தர்ப்பவாதம் என்பது...

Read more: http://viduthalai.in/page-5/77253.html#ixzz2wYIIm3gy

தமிழ் ஓவியா said...

மோடியாவது - பிரதமராவது! மொய்லி மொத்து

பெங்களூரு, மார்ச் 20- நடைபெற இருக்கும் நாடா ளுமன்ற மக்களவைத் தேர் தலில் பா.ஜ. கட்சி பெரிதாக நம்பியிருக்கும் நரேந்திர மோடி பிரதமராக வரவே முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சிக்க பல்லாபூர் தொகுதியில் 2 ஆம் முறையாக காங்கிரஸ் சார்பாக வீரப்ப மொய்லி போட்டியிடுகிறார். பெங் களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:

நரேந்திர மோடி பிரதம ராக வருவார் என்று பா.ஜ.க. நம்புகிறதே என கேட்கிறீர்கள். நரேந்திர மோடி பிரதமராக வரவே முடியாது. வாஜ்பாய் காலத் தில் 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் பாஜக கூட் டணி வைத்திருந்தது.

அப் போது உடன் இருந்த முக்கிய கட்சிகள் தற்போது பா.ஜ.க.வை புறக்கணித்து விட்டன. அங்கு நிதிஷ் குமாரோ, மம்தா பானர் ஜியோ இல்லை. தமிழகத் திலும் பா.ஜ.க. கூட்ட ணியை ஜெயலலிதா புறக் கணித்துவிட்டார்.

ஒரு இடம் கூட கிடைக்காது

நரேந்திர மோடி ஒரு தரப்பினரின் அடையாள மாக பா.ஜ.க.வால் காட் டப்படுகிறார். அவர் வாஜ் பாயை போல் வரமுடி யாது. அவர்களுக்கு கேர ளாவில் ஒரு இடம்கூட கிடைக் கப் போவதில்லை.

ஆந்திராவில் அவர்கள் கூட் டணி அமைத்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்டம் கண் டுள்ளது. கர்நாடகாவிலோ 4 இடங்களுக்கு மேல் பெறவே முடியாது. அவர் களுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று வீரப்ப மொய்லி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-5/77250.html#ixzz2wYIWnYAv

தமிழ் ஓவியா said...


பத்திரிகையாளர்களைத் தாக்குவதா? விடுதலை ஆசிரியர் கண்டனம்!


காஞ்சிபுரத்தில் 19.3.2014 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலையை மறைத்து போக்குவரத்தையே திருப்பிவிட ஆணையிட்ட நிலையில், அதை உடனே செய்யாமல் தாமதித்த தால் ஆத்திரம் கொண்ட டாக்டர் மைத்திரேயன் எம்.பி., ஒரு நாற்காலியைப்போட்டு நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளை செய்ததை படம் எடுத்த தினமணி புகைப்படக் கலைஞர், கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்ட அ.தி.மு.க.வின்மீது புகார்கள் கொடுக்கப்பட்ட பின்பும்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் தத்தம் கடமையைச் செய்கையில், அதற்காக ஆத்திரப் படுவது, அவர்களைத் தாக்குவது என்பது ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல; சர்வாதிகாரிகள், பாசிஸ்ட் ஆட்சியில்தான் அப்படி நடைபெறும். கண்டும் காணாததுபோல் அரசோ, காவல்துறையோ இருக்கக் கூடாது.

உடனே இதற்குப் பரிகாரம் தேடிட, நடவடிக்கை எடுக்க அனைத்துப் பத்திரிகையாளர்களும், ஊடகங் களும் குரல் கொடுத்து, தவறு செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.

கி.வீரமணி
ஆசிரியர்
விடுதலை



சென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77321.html#ixzz2we3kE01Q

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!


பிரபல ஆங்கில எழுத் தாளரும் பத்திரிகையாளரு மான குஷ்வந்த்சிங் அவர்கள் தனது 99ஆம் வயதில் மறைந்தார் என்பது மிகப் பெரிய இழப்பாகும்! நிறை வாழ்வு வாழ்ந்த அவர் 100 ஆண்டை எட்டாமல் போய் விட்டாரே!

நம் நாட்டின் மிகப் பெரிய சிந்தனையாளர்; நகைச்சுவை கலந்த எழுத்தாளர். ஏராளமான ஆங்கில புத்தகங்களை 2013 வரை எழுதிக் கொண்டிருந்தவர். 2013இல் தனது சுய சரிதையை எழுதியவர். அவரே ஒரு திறந்த புத்தகம். எதையும் ஒளிவு மறைவின்றி எழுதும்திறந்த உள்ளத்தவர். மதச் சார்பற்ற அரசு (Secular) நடைபெற வேண்டும் என்று விரும்பியவர். தன்னை ஒரு கடவுளைப்பற்றிய கவலைப்படாத வன் (Agnostic) என்று பிரகடனப்படுத்தியவர்!

2003ல் - 2004 பொதுத் தேர்தலுக்குமுன்பு, குஜராத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா, மதவெறியின் ஓங்கிய குரல் - இவை கண்டு மனம் வெதும்பி, (‘The end of India’)
இனிமேல் இந்தியா இருக்காது;

இந்தியா எனும் நாட்டையே காணாமற் போகக் கூடிய அளவில் நாட்டின் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மத வெறி அமைப்புகள் செயல்பட்டன; குஜராத் 2002-இல் இன அழிப்பு சிறுபான்மை இஸ்லாமியர்கள் படுகொலை பற்றி ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் அது ஒரு சிறந்த எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

அவருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
தலைவர். திராவிடர் கழகம்

சென்னை
21.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77314.html#ixzz2we3tSsnt

தமிழ் ஓவியா said...


பரிதாபமே காரணம்

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கிற உணர்ச்சிக்கோ, பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள் மீது உள்ள பரிதாபமே!
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/77297.html#ixzz2we4KL638

தமிழ் ஓவியா said...


Time to Make a Difference? - மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?


Time to Make a Difference?

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்?

- குடந்தை கருணா

TIme to Make a Difference?

If there is so called ‘Modi wave’, why then Modi contests from two constituencies?

Modi is contesting from Vadodara of Gujarat. Fine. Only last week, BJP tipped his name for Varanasi and pushed out Murali Manohar Joshi, from that constituency against his wishes.

I have questions to Modi. But, Modi never dares to answer others’ questions so far. Hence my questions are directed to BJP.

1. You had been claiming and boasting all through these days, that there is Modi wave across the globe (not alone in India), why then you had fielded Modi for two constituencies?

2. If incidentally or accidentally, Modi wins from both constituencies, which constituency he will prefer to hold, Varanasi or Vadodara?

3. If people of these two con stituencies direct this question to Modi, what will be his honest reply?

4. Will BJP or Modi can boldly inform in advance about this?

5. Suppose, Modi prefers to hold Vadodara and resign from Varanasi, why then Joshi should be pushed to Kanpur? Joshi could have contested from Varanasi or instead Modi can contest from Kanpur also, because, even if he wins, he is going to resign?

Hope BJP will provide a honest reply. Yes, it is time to make a difference.

மாற்றத்தை உருவாக்கிடும் தருணம்? மோடி அலை என்பது உண்மையா னால், மோடி எதற்காக இரண்டு தொகு திகளில் போட்டியிட வேண்டும்?

குஜராத் வதோதரா தொகுதியிலி ருந்து மோடி போட்டியிடுவார் என பிஜேபி அறிவித்துள்ளது. நல்லது. போன வாரம், பிஜேபி வெளியிட்ட பட்டியலில் மோடி உத்தர பிரதேசம் வாரணாசியில் போட்டியிடுவார் என அறிவித்தது.

அந்தத் தொகுதியில் சென்ற முறை வெற்றி பெற்ற பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியை கான்பூருக்குத் தள்ளிவிட்டு, மோடியை அறிவித்தது. மோடிக்கு ஒரு கேள்வி. ஆனால், மோடி எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. ஆகவே பாஜகவிற்கு நமது கேள்வி.

1. மோடி அலை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வீசுவதாக இத்தனை நாள்களும் பிதற்றிக்கொண்டிருந்தீர்களே, பின் ஏன் மோடியை இரண்டு தொகுதிக ளில் வேட்பாளராக நிறுத்துகிறீர்கள்?

2. எதேச்சையாகவோ, விபரீத மாகவோ, மோடி இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்றால், எந்தத் தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்? வதோதராவா அல்லது வாரணாசியா?

3. அந்த இரண்டு தொகுதிகளின் மக்களும், மோடியிடம் இந்தக் கேள் வியைக் கேட்டால், மோடியின் நாணய மான பதில் என்னவாக இருக்கும்?

4. இதற்கான பதிலை, மக்களிடம் தைரியமாக பாஜக சொல்லுமா? அல்லது மோடிதான் சொல்வாரா?

5. தனது மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியைத் தக்க வைத் துக் கொள்ள மோடி முடிவெடுத்து, வாரணாசி தொகுதியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டால், பின் எதற்காக, ஜோஷியை ஏன் கான்பூர் தொகுதிக்கு விரட்டி விட்டு, மோடியை நிறுத்த வேண்டும்? பேசாமல், ஜோஷியை, வாரணாசி தொகுதியில் நிறுத்தி, மோடியை கான்பூர் தொகுதி யில் நிறுத்தியிருக்கலாமே? வெற்றி பெற்றால் கூட, பதவி விலகல் செய் வது என்றால் எந்த தொகுதியாக இருந்தால் என்ன?

பாஜகவிடமிருந்து நேர்மையான பதில் வரும் என எதிர்பார்ப்போம். ஆம், மாற்றத்தை உருவாக்குவ தற்கான தருணமல்லவா?

Read more: http://viduthalai.in/page-2/77311.html#ixzz2we52R5sq

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னது என்ன?

தர்மசாலா, மார்ச் 21-ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக்கம் என கூறிய படேலுக்கு, மோடி சிலை வைப்பதன் மூலம் அவர் படேலின் வரலாறு மற்றும் கருத்துக்களை படிக்கவில்லை எனத் தெரிகிறது என இமாச்சலப் பிரதேசத்தில் ராகுல் பேசினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தர்ம சாலாவில் பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ் விஷமத்தனமான இயக் கம், அது நாட்டை அழித்துவிடும் எனக் கூறினார் சர்தார் வல்லபாய் படேல். அவ ருக்கு முழுக்க, முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் வளர்ந்த பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிலை அமைப்பதுதான் வேடிக்கை. இதிலிருந்து படேலின் வரலாறு மற்றும் கருத்துகளை மோடி படிக்கவில்லை எனத் தெரிகிறது.

மத, ஜாதி மற்றும் பகுதி ரீதியாக மக்களை பிரித்து விரோத அரசியலை பா.ஜ நடத்துகிறது.

நம்நாட்டில் மக்களவைத் தேர்தல் எண்ணங்களின் போராட்டமாக உள்ளது. ஏழைகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பணக்காரர்கள், சக்தி வாய்ந்தவர் களால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என எதிர்கட்சி நினைக்கிறது. அவர்களி டம் ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை.

- இவ்வாறு ராகுல் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-8/77309.html#ixzz2we6Dobxa

தமிழ் ஓவியா said...


உதிர்ந்த மலர்கள்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

கடவுள் ஒருவர் உண்டு. அவர் உலகத்தையும் அதில் உள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி, அவற்றின் நடவடிக் கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன்னிச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன்.

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங் களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு, பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்டதாகும். புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி என்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை என்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்குப் பெரும் விரோதிகளாவார்கள்.

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.

நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து, நானும் சுயமரியாதைக்காரன்தான்; என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது;

புராணங்கள் எல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாச மென்றும் பேசி, மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்குப் புராண பிரச்சாரத்தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால், பண்டிதர்களைக் கிட்டசேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/77335.html#ixzz2we6XH5tC

தமிழ் ஓவியா said...


அண்ணாவுரை


அயல்நாட்டான் கண்டு பிடித்தான் அச்சு இயந்திரம்; அதன் உதவியால் நீ பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாய். அவன் கண்டுபிடித்தான் ரயில் வண்டி; அதில் ஏறிக் கொண்டு உனது புரட்டு அற்புதம் நடைபெற்ற ஸ்தலங்களுக்கு செல்கிறாய்!

அவன் கண்டுபிடித்தான் வானொலி; அதிலே உன் பஜனையைப் பாட வைத்து மகிழ்கிறாய்! இவ்வளவு பூஜை செய்யும் நீ எதையாவது புதிய பொருள்களைப் பயனுள்ள வகையில் கண்டுபிடித்தாயா? யோசித்து பார்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7d5FeA

தமிழ் ஓவியா said...

அய்யாவுரை

ஒரு மனிதனுக்கு தான் செய்த அயோக்கியத் தனங்களுக்குப் பரிகாரம் காணவும், தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தான் கடவுள் பக்தியும், வணக்கமும் ஏற்படுகிறதே அல்லாமல், வேறு காரணம் எதுவும் இல்லை.

பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனிதர்களுக்கு தன்னால் ஆன தொண்டு, உதவி செய்ய வேண்டும் என்பதையும் பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும்.

பக்தி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7lPyrO

தமிழ் ஓவியா said...

புத்தரின் குறிக்கோள்

மனிதர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லுவது புத்தருடைய முதல் குறிக்கோளாக இருந்தது.

அவன் உண்மையை கண்டறிய - சுதந்திர உணர்ச்சி யோடு செல்லச் செய்ய வேண்டும் என்பது அவருடைய இரண்டாவது குறிக்கோளாக இருந்தது.

எதையும் பகுத் தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சியைக் கொல்லக் கூடிய மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பது புத்தருடைய மூன்றாவது குறிக் கோளாக இருந்தது.

- புத்தா தம்மா என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர்.

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we7yzkTl

தமிழ் ஓவியா said...

ஆண்டவனைப் படைத்ததே மனிதன்தான்!

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு அப்பால் எந்தக் கருத்துக்களும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் மனிதன் தான் - மனிதன் ஒருவன்தான் - எல்லா பொருட் களையும், எல்லா கருத்துகளையும் படைப்பவன். அற்புதங் களைச் செய்பவன் மனிதன் ஒருவனே.



இயற்கையின் சக்திகளை ஆட்சி கொள்கிற எதிர்கால எஜமானன் மனிதனே. மனிதனின் உழைப்புத்தான் - மனிதனின் திறமை மிக்க கைகள் தான் - இவ்வுலகில் உள்ள அழகான பொருட்கள் அனைத்தையும் சிருஷ்டித்துள்ளன. கலையின் வரலாறும், விஞ்ஞானத்தின் வரலாறும், தொழில் நுணுக்க இயலின் வரலாறும் இதை நமக்கு மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

மனிதனின் பகுத்தறிவுக்கும், மனிதனின் கற்பனைக்கும், மனிதனின் ஊக்கத்துக்கும் உருவகமாக இருப்பவற்றைத் தவிர, வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. எனவே தான், நான் மனிதனை வணங்கு கிறேன்.

போட்டோ பிடிக்கும் கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், யதார்த்தத்தில் இருப்பதை காமரா படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆனால், கடவுள் என்பதோ சர்வ ஞானமும், சர்வ சக்தியும் பெற்று பரம நியாயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிற, சக்தி பெற்றிருக்க முடிகிற ஒரு புருஷனாக தன்னைப் பற்றி தானே புனைந்து கொண்ட ஒரு மனிதனைக் காட்டுகிற போட்டோ படமேயாகும்.

- மாக்ஸிம் கார்க்கி

Read more: http://viduthalai.in/page-7/77336.html#ixzz2we86Q7HR

தமிழ் ஓவியா said...


மூத்த பத்திரிகையாளர், பகுத்தறிவாளர் குஷ்வந்த் சிங் மறைந்தார்?


99 வயதான மூத்த எழுத்தாளரும் பகுத்தறிவாதி யுமான குஷ்வந்த் சிங் காலமானார். பத்திரிகை உலகிலும், எழுத்து உலகிலும் தனக்கென நிரந்தரமான இடத்தைப் பெற்றிருந்தவர் குஷ்வந்த் சிங் (வயது 99). டெல்லியில் வசித்து வந்த இவர் சமீப காலமாக வயோதிகத்தின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை (20.3.2014) மதியம் மரணம் அடைந்தார். இதை அவரது மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் அறிவித்தார். அவருக்கு மறைந்த குஷ்வந்த் சிங், தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹதாலி என்ற இடத்தில் 1915-ம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி பிறந்தார். டெல்லி மாடர்ன் பள்ளியில் பள்ளிப்படிப்பு, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, லாகூர் அரசு கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு படித்தார்.

ஆரம்ப காலத்தில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் செய்தார். 1947-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் பத்திரிகை துறையில் கால் பதித்தார். சொந்தமாக யோஜனா என்ற பத்திரிகை நடத்திய அவர் பின்னாளில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் ஆசிரியராக உயர்ந்தார்.

ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள் அவருக்கு பெயரைப் பெற்றுத்தந்தன. மரணத்தை தழுவுவதற்கு முன்பு கடந்த மாதம் வரை பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு, (1980-1986 ஆண்டுகளில்) பதவி வகித்தார். 1974-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆனால் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை வெளியேற்ற மத்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுத்ததை ஆட்சேபித்து, பத்மபூஷண் விருதை திரும்ப அளித்து விட்டார். 2007-ம் ஆண்டு, நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த குஷ்வந்த் சிங்கின் மனைவி கவால் மாலிக் 2001-ல் மரணம் அடைந்தார். குஷ்வந்த் சிங்குக்கு ராகுல் சிங் என்ற மகனும், மாலா என்ற மகளும் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page4/77362.html#ixzz2wjzFNM6V

தமிழ் ஓவியா said...


அரசு விடுதியிலிருந்து பைபிள் அகற்றம்


அரசு பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டிருந்த கிடியான் பைபிளை அகற்ற அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: அயோவா உட்பட 20ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மதத்திலிருந்து விடுதலை என்கிற அமைப்பு மதக்கருத்துகள் மக் களிடம் திணிக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது.
அரசு விடுதியில் பைபிளா?

அயோவா அரசு பல்கலைக்கழகம் நடத்திவரும் மெமோரியல் யூனியன் கெஸ்ட் விடுதியில் உள்ள அறைகளில் பைபிள் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது குறித்து அந்த அமைப்பின் சார்பில் பாட் ரிக் சி.எலியோட் விடுதி இயக்குநருக்கு மெயில்மூலம்எச்சரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. புகாரில் அரசியலமைப்புக்கு (முதல் ஷரத்தில் கூறப்பட்டுள்ள அரசும், மதமும் பிரிந்து இருக்க வேண்டும்) விரோதமாக அரசு விடுதியில் பைபிள் புத்தகத்தை வைத்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

அவ்விடுதியில் வாடிக்கையாளர்களாக 19 விழுக்காட்டினர் மத நம்பிக்கை அற்றவர்களாகவும், 27 விழுக்காட்டினர் கிறித்துவம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதாகவும், கிடியான் பைபிள் புத்தகத்தை அறையில் வைப்பதன்மூலம் அவர்களிடம் (கிறித்து வத்தை) மதத்தைத் திணிப்பதாகும். இதேபோல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தின் லோயல் கெஸ்ட் விடுதியிலி ருந்தும் இதேபோல் பிரச்சினை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆகவே, எழுத்து மூலம் அரசமைப்புக்கு விரோதமாக உள்ள இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை எதிர்பார்க்கிறோம் என்று மெயிலில் தெரிவித்திருந்தார்.

அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அனி லவுரி கெய்லர் அம்மையார் ஊடகங் களில் இப்பிரச்சினை குறித்த வினாக் களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விடுதி இயக்குநர் ரிச்சர்ட் எஸ். ரெனால்ட்ஸ் அவ் விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலி ருந்தும் பைபிள் புத்தகங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/77363.html#ixzz2wjzSfYgh

தமிழ் ஓவியா said...


ஏழுமலையான் கருணை

பக்தி ஸ்தலம் திருமலையில் தொடர்ந்து 6ஆம் நாளாக காட்டுத் தீயாம். செம் மரங்கள், சந்தன மரங்கள், அரிய வகை மூலிகைகள் அழிந்து விட்டனவாம். தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடுகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருப்பதி தேவஸ்தானத் தால் அரக்கோணம் அய்.என்.எஸ். இராஜாளி கடற்படை மற்றும் விசாகப் பட்டினம் கடற்படை வீரர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றனர். பக்தர்கள் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். ஆனால் நமக்கு ஒன்று புரியவில்லை. திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கும் வெங்கடாஜலபதி என்ன ஆனார்? தம் பக்தர்களுக்கு சோத னையாக உள்ள அந்த நெருப்பை அணைப் பதற்கு அவர் ஏன் முயற்சி செய்யாம லிருக்கிறார்? இந்த மாதிரி நாம் கேள்வி கேட்டால் இப்படி சொல்லி அவர்கள் சமாளிப்பார்கள். அதாவது பகவான் ஏதோ குறையைக் கண்டுபிடித்திருக்கிறார், அதனால்தான் தன் உக்கிரத்தைக் காட்ட அக்னியை ஏவி விட்டிருக்கிறார் என்று.

அப்படியானால் கடவுளின் உக்கிரம் தணியும் வரை எரியவிட வேண்டியது தானே. அதை கஷ்டப்பட்டு அணைக்கப் போய் லார்ட் வெங்கியின் கோபத்திற்கு ஆளாவானேன்? சிறிது நாட்களுக்கு முன் னால் சிறுத்தை புலியை நடமாடவிட்டு பக்தர்களை பயம் காட்டி வைத்தார். இப்பொழுது தீயை மலைப் பகுதி முழு வதும் கொழுந்து விட்டு எரியச் செய் கிறார். ஒரு வேளை பக்தர்கள் தன்னைத் தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்க வில்லையோ என்னவோ?

செம்மரங்களும், சந்தன மரங்களும் விலை மதிப்பில்லாதவை. அவை அழிந்து கொண்டிருக்கின்றன. காட்டில் உள்ள உயிரினங்கள் எல்லாம் பற்றி எரிகின்ற நெருப்புக்கு பலியாகிக் கொண்டிருக் கின்றன. ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை. ஆனால் நாம் குடும்பத்தோடு காசு பணத்தை கடன் வாங்கி சென்று மொட்டையடித்து ஏழுமலையான் நம்மை காப்பாற்றுவான் என்று நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஏழுமலையானே! உன்னை தாங்கும் மலைகள் எரிந்து கொண்டிருக் கிறது அப்பனே! பக்தர்களை மொட்டை யடிப்பது பத்தாதென்று மலைகளையும் மொட்டையாக்குகிறாயே!

ஏழுமலையானே! உன் கருணையே கருணை!

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page4/77367.html#ixzz2wk0INMKz

தமிழ் ஓவியா said...


கடவுளை வணங்குபவர்கள் யார்? காட்டுமிராண்டிகள்! - தந்தை பெரியார்


கமுதி- ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழா வில், பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி, சேத் தாண்டி வேட மணிந்து, புதன் கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர் (படம்).

அதிகாலையில் நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள சகதியை அள்ளி எடுத்து தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். பின்னர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்று வலம் வருகின்றனர். சுமார் 2 மணி நேரம் சகதி பூசிய நிலையில் வலம் வந்து இந்த விசித்திர சேத்தாண்டி வேடம் என்ற நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். அம்மை உள்ளிட்ட தோல் நோய்கள் விரைவில் குணமடைய வேண்டி பக்தர்கள் இந்த விசித்திர சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

உடம்பில் சகதி பூசி சுமார் 2 மணி நேரம் வலம் வரும்போது, உடலில் உள்ள கெட்ட நீர் உறிஞ்சப்பட்டு, உடல் நலம் பெறுவதோடு, குளிர்ச்சியும் பெறுகிறது என்பதால் ஏராளமான பக்தர்கள் சேத்தாண்டி வேட நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறப் படுகிறது.

Read more: http://viduthalai.in/page4/77368.html#ixzz2wk0Qkvi2

தமிழ் ஓவியா said...


ஏசு - மோடி


நாட்டு மக்களைக் காப்பாற்ற நரேந்திர மோடி ஏசுவால் அனுப்பி வைக் கப்பட்ட ரட்சகர் என்று பி.ஜே.பி.யின் முன்னாள் தலைவரும் அதிகாரப் பூர்வப் பேச்சாளருமான வெங்கையா நாயுடு அய்த ராபாத்தில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார். (மாலைமலர் 17.3.2014 பக்கம்7).

அடேயப்பா கிறிஸ்த வர்கள்மீதும், இயேசுவின் மீதும் இந்த பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு என்னே தீவிரமான பற்று பொத்துக் கொண்டு கிளம் பியிருக்கிறது.

இவர்களின் குருநாதர் கோல்வால்கரால் எழுதப் பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் எனும் நூலில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்ற வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எதை யும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறா மல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி இருத் தல் வேண்டும் - என்று சொல்லியுள்ளாரே - இது தானே கிறித்தவர் உள் ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான பி.ஜே.பி. ஆர். எஸ்.எஸின் நிலைப்பாடு! - கிறிஸ்தவர்களின் அந்த ஏசு வேறு - வெங்கையா நாயுடு கூறும் இந்த ஏசு வேறோ?

குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மீது தாக் குதல் தொடுக்கப்பட்டது.

ஒரு வார காலம் ஒரு படையெடுப்பே நடத்தப் பட்டது. தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. பிரதமராக இருந்த வாஜ்பேயி அங்கு பார்வையிட்டு திருவாய் மலர்ந்ததென்ன? விசா ரணை நடத்தப்பட வேண் டும் என்று சொன்னாரா? ஒரு புடலங்காயும் இல்லை.

மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் தேவை! என் றாரே பார்க்கலாம்! (மத மாற்றம் நடத்தப்பட்டதால் தான் இந்தக் கலவரம் என்று சொல்லாமல் சொன் னார் பிரதமராக இருந்த ஒருவர் -என்னே ஹிந்து யிசம் பாசிசம்!

1999 மார்ச்சு 6ஆம் நாள் மனிதம் தலை குனி யத்தக்க கேவலம் ஒன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்தது. ஹிந்து வெறியர்கள் புதைக்கப் பட்ட கிறிஸ்தவர் ஒருவரின் சடலத்தைத் தோண்டி எடுத்து வெறியாட்டம் போட்ட கேவலம்தான் அது!

வெங்கைய நாயுடு இப்பொழுது சொல்லு கிறாரே - ஏசுவால் அனுப் பப்பட்டவர் நரேந்திர மோடி என்று - அவர் தான் அப்பொழுது அம்மாநில முதல் அமைச்சர்.

அவர்கள் வட்டாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சறிந்தே வஞ்சகம் பேசும் நாகங்கள்தான் போலும்!

நன்றாகத்தான் சொன்னார் மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதி பாசு அநாகரிகமான காட்டுமிராண்டிகள்! (Uncivilised Brute Force) என்று சொன்னார்! அது தான் இப்பொழுது நினை விற்கு வந்து தொலைக்கிறது.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77378.html#ixzz2wk0g2mek

தமிழ் ஓவியா said...


கருத்துத் திணிப்புதான் - ஒப்புதல் வாக்குமூலம்


- ஊசி மிளகாய்

ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வெளி யிடும் தேர்தல் கணிப்புகள்பற்றி நாம் நீண்ட கால மாகவே, கூறி வருவது அவை உண்மையான மக்களின் கருத்துக் கணிப்புகள் அல்ல; மாறாக, கருத்துத் திணிப்புகள் தான் என்பதாகும்!

இது ஒரு நல்ல மோசடி வியாபாரமாக மாறி விட்டது! சார்பு நிலை எடுத்து வெளியிடும் ஏடுகள், தொலைக்காட்சிகளுக்குப் பணத்தைக் கொட்டித் தருகின்றன என்பதை கல்கி வார ஏட்டின் (23 மார்ச் 2014) 33-ஆம் பக்கத்தில் - கருத்துத் திணிப்புக்கள் என்ற தலைப்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவலைக் கீழே தருகிறோம்:

கருத்துக் கணிப்புகள் நம்பத் தகுந்தவையா என்று ஏற்கெனவே விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் அம்பலமாகி விட்டன. பணத்துக்காக முடிவுகளை மாற்றிக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் சொல்லுவோம் என்று பதினோரு நிறுவனங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தன.

இதில், இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் நிறுவனங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்தும் சி - ஓட்டர் நிறுவனமும் ஒன்று. இந்த சி - ஓட்டர் நிறுவனம் மூன்றிலிருந்து அய்ந்து சதவிகிதம் வரை புள்ளி விவர முடிவை மாற்றிச் சொல்லி, குறிப்பிட்ட கட்சிக்குக் கூடுதல் இடம் கிடைக்கும் என்று காட்டத் தயார் என்று ஒப்புக் கொண்டதாம். இது கருத்துக் கணிப்பா? திணிப்பா?

இதே போல் தான் 2ஜி அலைக்கற்றைப் பிரச் சினையை (திட்டமிட்டே) திமுகவுக்கு எதிராக கிளப்பின சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்; ராசா, ஏகபோக கொள்ளை லாபக் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்காமல், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைத் தொடர்பு வசதியைச் செய்ய முன் வந்த கம்பெனிகளுக்கெல்லாம் பிரித்துத் தந்து, பெரிய திமிங்கலங்களைப் பாதிப்பு அடையச் செய்தார்,

அதனால் தொலைக்காட்சியில் பயங்கர ஊழல் பலூனை ஏராளமாகக் காற்றடைத்துப் பறக்க விட்டு, இன்றளவும் தேர்தல் முதலீடாக பல கட்சிகள் கொண்டுள்ளன!

காரிருள் சூரியனை மறைத்ததுபோல் உண்மை களை மறைக்க இந்த பிரச்சார உத்தியை சுயலாபங் களுக்காகப் பயன்படுத்துகின்றன - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/77380.html#ixzz2wk168mNo

தமிழ் ஓவியா said...


பிடி - வாதம்!

பிடி - வாதம்!

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம..க.வும் இருக்கிறது - புதுச்சேரி என்.ஆர். காங் கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டது. ஆனால் பா.ம.க.வும், புதுச்சேரியில் போட்டிப் போடுகிறது. கேட்டால் பிஜேபி தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டுக்குத் தான் - புதுவைக்குச் செல் லாது என்று கறாராக - பிடிவாதமாகக் கூறி விட் டார் மருத்துவர் ராமதாசு.

தாடிக்கொரு சீயக்காய் - தலைக்கொரு சீயக்காயோ!

பிடிவாதம் என்கிறது தினமணி. பிடி எனக்கு வாதம் உனக்கு என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கே பெப்பே! கொடுத்து விட் டதே! பா.ம.க.



வாழ்க அண்ணா நாமம்!

லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆனால், வேலூர் மாநகர, மாவட்ட மாணவர் கள் 2000 பேர் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போட சபதம்! வாழ்க அண்ணா நாமம்!

ஓ, திருப்பதி ஏழுமலை யானே நாமக் கடவுள்தானே!


தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்

அதிமுக ஆட்சியில் அவதிப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலை தஞ்சை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் வருமாறு:

1) பூமிநாதன் - மயிலாடுதுறை
2) ராஜாங்கம் - கீவளூர்
3) செல்வராஜ் - கீழையூர்
4) சக்ரவர்த்தி - பூலமேடு
5) அப்துல் ரகீம் - திருத்துறைப்பூண்டி
6) சிறீதர் - அபிவிருத்தீஸ்வரம்
7) கோபாலகிருஷ்ணன் - கொற்கை
8) முருகையன் - மாப்படுகை
9) செல்வராஜ் - மஹிலி
10) சாமியப்பன் - நாகூர்
11) சக்திவேல் - கடம்பங்குடி
12) இடும்பையன் - பிராந்தியன் கரை
13) சீனிவாசன் - குரும்பல்.




வாகன சோதனை

தமிழகத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத் தும் வகையில், ரயில் மற் றும் இரு சக்கர வாகனங் களிலும் பறக்கும் படை யினர், துணை ராணுவப் படை உதவியுடன் சோதனை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கார்த்திக் கூறினார்.


அந்தமானில் நிலநடுக்கம்

புதுடில்லி, மார்ச் 22- அந்தமான் மற்றும் நிக் கோபர் தீவுகளில், நேற்று மாலை, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 6.5 ஆக பதிவானது. "இந்த நில நடுக்கத்தால், "சுனாமி' ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும், கடலோர பகுதி களில், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது' என, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77381.html#ixzz2wk1GJWpz

தமிழ் ஓவியா said...


சந்தர்ப்பவாத கூட்டணியா? கொள்கைக் கூட்டணியா?


- குடந்தை கருணா

தமிழ் நாட்டில், பாஜக அணியில், மதிமுக, பாமக, தேதிமுக, கொமுக தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, கூட்டணி அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ராஜ் நாத் சிங் அறிவித் துள்ளார். தமிழ் நாட்டில், இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் சேர்ந்துள்ள தேதி முக, பாமக இரண்டும், கூட்டணியில் சேர்வதற்கு முதல் நிமிடம் வரை, ஒருவரை ஒருவர் சேற்றை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரே அணியில் சேர்த்திடும் ஒரே புள்ளி; ஏதாவது ஒரு இடம் கிடைக்காதா என்கிற ஆசை யைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

இவையெல்லாம் மக்கள் கருத வாய்ப்பில்லை என இரு கட்சியும் நினைக்கின்றன.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அதுவும் பாஜக அணி; அதன் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் பட்டுள்ளார். பாஜக அணியில் உள்ள பாமகவும் புதுச்சேரியில் வேட் பாளரை நிறுத்த என்ன கொள்கை இதில் இருக்கிறது என்றெல்லாம் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையா?

பாஜக தனது தேர்தல் அறிக்கைக் காக மக்களின் கருத்துக்களை கேட்பதாகக்கூறி, ஒரு இணைய தளத் தையும் உருவாக்கியது. அக்டோபர் 2013-இல் பாஜக வெளியிட்ட செய்தி யில், மக்கள் கருத்துக்களையும் பரி சீலித்து, தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்திடுவோம் என அறிவித்தது. அத்துடன் இன்னொரு செய்தியும் பாஜக கூறியது. அதாவது தங்களின் அடிப்படைக் கொள்கையான, ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டுவது, காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள சிறப்பு தகுதி தரும் 370 பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் தகுதி போன்ற கொள்கைகள், எந்த சூழ் நிலையிலும் பாஜக கைவிடாது என பாஜக அறிவித்துள்ளது. (தி இந்து 19.10.2013).

இப்போது தமிழ் நாட்டில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சி களுக்கு ஏதேனும் பொதுத் திட்டம் உண்டா?

பாஜக கூறிய அவர்களின் அடிப்படைக் கொள்கையான ராமர் கோவில், 370 பிரிவு ரத்து, பொது சிவில் சட்டம் இதை ஏற்றுக் கொள் கிறார்களா?

நாணயமான பதிலை, விஜய காந்த், ராமதாஸ், வைகோ இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/77385.html#ixzz2wk1f0jcA

தமிழ் ஓவியா said...


இன்று (மார்ச்.22) உலக தண்ணீர் தினம்


அய்க்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.

நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.

கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.

நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

Read more: http://viduthalai.in/page-2/77386.html#ixzz2wk1njbd8

தமிழ் ஓவியா said...


மற்ற மக்கள்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


இந்துமத தத்துவம்

இந்துமத தத்துவம்

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக் கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப்பனர் களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகால் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண் டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல் செத்து சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம். இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3EsPv5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி யொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம். நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3MqBpO

தமிழ் ஓவியா said...


திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக்கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார். திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்கள் என்பதைப் பொருட் படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 16.09.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3Tqfus

தமிழ் ஓவியா said...

தொழிலாளர் தூது

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களைப் பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற் கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.

தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக்காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங்களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது. பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கின தைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மன வருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக்கவனத்தைச் செலுத்தி அவை களுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.

போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல போலீஸ் அதிகாரி களின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வ தாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டிருப்ப தாகவும் தெரியவருகின்றது. ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரை களும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்க மிருக்கிறதா? தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலைவர்கள் என்பவர்களும் ரயில் வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர் களாகவும் இருக்கத் தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே என்றைக் காவது தொழிலாளர் களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரி யாதையில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - கட்டுரை - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/77395.html#ixzz2wk3auQIo

தமிழ் ஓவியா said...


தேர்தல் வினோதங்கள்


சுயேச்சையாகப் போட்டியிடும் மனைவி!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் தன் கணவர் கதிர் ரானாவை எதிர்த்து அவரின் மனைவி ஷாகிதா பேகம் சுயேச்சையாகப் போட்டி யிடுகிறார்.

விசாரணை நாடகம்!

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச் சர் சம்பத் வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகச் சொல்லப்பட்ட குற்றச்சாற் றின்மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஓர் அமைச்சரை ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் உண்மையின் அடிப்படை யில் அந்த அறிக்கைதான் இருக்குமா?
இது ஒரு விசாரணை நாடகமே!

துடைப்பம்

மும்பையில் சாலையைத் துடைப்பத் தால் சுத்தப்படுத்தினார்கள். துடைப்பத் தைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மீராசன்யால்.

ஆளுநராகத் தயாராவீர்!

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமரானால், இங்குள்ள அனைவரும் ஆளுநராக பல்வேறு மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார் கள்.

- பாலகங்கா, முன்னாள் எம்.பி., அ.இ.அ.தி.மு.க.
(தினமணி, 21.3.2014, பக்கம் 7)

வெற்றிக்காக ஜோசியம் கேட்கும் வேட்பாளர்கள்

பெர்ஹாம்பூர், மார்ச் 22-வெற்றிக்காக ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்கும் வேட்பாளர்கள் ஒடிசா மாநிலத்தில் அதிகமாகிவிட்டனர். இதில் கட்சி வேறு பாடு இல்லாமல் வரிசையில் நிற்பதால், ஜோசியர்கள் அனைவரும் ஆலோசனை கூறுவதில் மிகவும் பிசியாக உள்ளனர்.

பெர்ஹாம்பூர் தொகுதி, பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சியாப்ட்நாயக் கூறும் போது, எனக்கு எப்போதும் வெள்ளிக் கிழமைதான் மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்று ஜோசியர் கூறியுள்ளார். நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்துள் ளேன். கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.

எல்லாம் ஜோசியர்களின் ஆலோசனைப் படியே செய்து வருகிறேன். இப்போதும், அவர்களது ஆலோசனைப்படி வெள்ளிக் கிழமை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல, கஞ்சம் மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவர் பாக்பன் கந்தாயத் கூறும்போது, ஜோசியரின் ஆலோசனைப்படி, அவர் குறித்துக் கொடுத்த நாளில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கோபால்பூர் தொகுதி யின் வேட்பாளராக கந்தாயத்தை காங் கிரஸ் அறிவித்துள்ளது. கோபால்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான பிப்ஹுதி ஜெனாவும், தேர்தல் தொடர் பாக ஜோசியர்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார். அவர்கள் கூறியபடி, தேர்தல் பிரச்சார வியூகத்தை வகுத்துப் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளரான அலி கிசோர் பட்நாயக் மட்டும் முற்றிலும் மாறாக உள்ளார். அவர் கூறும்போது, நான் எப்போதும் ஜோசி யத்தை நம்புவது இல்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு நல்ல நாள்தான். நான் எனது வேட்பு மனுவை பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி முன்னிலையில் தாக்கல் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். எப்படியோ தேர்தல் நேரத்தில் ஒடிசா மாநிலத்தில் ஜோசியர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/page-5/77413.html#ixzz2wk43vIyN

தமிழ் ஓவியா said...


கல்கியின் சாதுர்யம்!


கேள்வி: கூட்டணியிலிருந்து பிரிந்து விட்ட கம்யூனிஸ்டுகள்பற்றி ஜெ. ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே?

பதில்: அ.தி.மு.க. தலைமை இது குறித்து பேசாதிருப்பதே இத்தனை ஆண்டுகள் கொண்டிருந்த நட்புக்கு அழகு. காரணம், சொல்லப் புகுந்தால், வீண் வருத்தங்களே அதிகரிக்கும். கூட்டணி முறிவுபற்றி கம்யூ னிஸ்டுகளும் அதிகம் வார்த்தைகள் உதிர்க் காமல், கண்ணியம் காப்பது மெச்சத் தகுந்தது.
(கல்கி, 23.3.2014, பக்கம் 38)

கல்கியின் இந்தப் பதிலில் ஜெவைக் காப்பாற்றும் இனவாதம் இருக்கிறதே தவிர, நாணயமான அரசியல் இல்லை.

அகில இந்திய இடதுசாரித் தலைவர்கள் சென்னை வந்து ஜெ அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தும், முதல்வரைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டது எத்தகைய அரசியல் மற்றும் மனிதப் பண்பு? கல்கிக்கே வெளிச்சம்!

அந்த மூத்த தலைவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஏற்றிருக்கும் தியாகத் தழும்புகள் - அனுபவங்களுக்குமுன் செல்வி ஜெயலலிதா எம்மாத்திரம்!

இரண்டாவதாக இடதுசாரிகளின் மூத்த தலைவர்களான ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, பிரகாஷ் காரத் ஆகியோர் சென்னைக்கு வந்து முதல்வர் ஜெ அவர்களைச் சந்தித்து, கூட்டணி பற்றி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக செல்வி ஜெயலலிதா கையொப்பமிட்டு அறிவித் தாரே - அதன்படி நாணயமாக நடந்துகொண்டாரா? இவ்வளவும் நடந்த பிறகு, சி.பி.எம். அலுவல கத்துக்கு அ.இ. அ.தி.மு.க.வின் தூதராகச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நண்பர்களாகப் பிரிவோம் என்று சொன்னதும், சி.பி.அய்.க்கோ தொலைப் பேசி மூலமாக இதே கருத்தைச் சொன்னதும் தான் கல்கி கூறும் ஜெயலலிதா கடைப்பிடித்த அழகா?

கூட்டணி ஏன் வைத்தோம் - ஏன் பிரிந் தோம்? என்று வெளிப்படையாகக் கூறுவது தானே அறிவு நாணயமான அரசியல்? இது என்ன இரு நபர்களுக்கிடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளா?

ஜெயின் பக்கத்தில் எது தவறோ அதையே அழகாகக் காட்ட முயற்சிக்கும் கல்கியின் ரத்த பாசம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு மேலும் விளக்கம் தேவைப்படாது.
இடதுசாரிகளைப்பற்றி ஜெ அம்மையார் பேசாத பேச்சா? தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறும் அளவுக்குச் சென் றவர்தானே ஜெயலலிதா! இப்பொழுதென்ன அழகு வந்து குதித்துவிட்டது?

கண்ணியம் காத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கல்கி புகழாரம் சூட்டுகிறது. சூடாக அவர்கள் கிளப்பாமல் விட்டார்களே அதுவரை ஜெக்கு இலாபம் என்கிற ஆசையோடு கல்கியால் சொல்லப்பட்டது இது.

அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி யின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண் டியன் அரசியல் ரீதியாகவே ஜெமீது பாணத்தை ஏவியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குமுன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார் என்று சொல்லி வந்த முதல்வர் ஜெயலலிதா, முன் னெடுத்த நிலைக்கு மாறாக, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். முதல்வர் ஜெயலலிதா முன்பு எடுத்த நிலைப் பாட்டிலிருந்து தடம் புரண்டிருக்கிறார். எந்தக் கூட்டத்திலும் பா.ஜ.க.வைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அவர் பா.ஜ.க.வின் திசை நோக்கிச் செல்லுவதாகத் தெரிகிறது என்று தோழர் தா.பா. கூறியள்ளார்.

இதே கருத்தை வேறு சொற்களில் உச்சரித் துள்ளார் சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன்.

நமக்கு ஆச்சரியம் என்னவென்றால், இந்த இடதுசாரிகள் ஜெவைப்பற்றி இப்பொழுதுதான் புதிதாகப் புரிந்துகொண்டுள்ளார்களா?

எப்பொழுது ஜெ மதச்சார்பற்றவராக இருந் திருக்கிறார்? 1000 அ.தி.மு.க.வினர் அயோத்தி யில் முகாம் என்று, பெட்டிச் செய்தி போட்டதே தீக்கதிர் (7.12.1992) மறந்து போய்விட்டதா?

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத் தினால் இந்துக்களின் மனம் புண்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்து இருப்பதையும் இடது சாரிகள் அறியமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-5/77411.html#ixzz2wk4FOfql