Search This Blog

25.3.14

மதச்சார்பின்மை என்றால் என்ன?அரசுக்கு மதம் உண்டா?

அரசுக்கு மதம் உண்டா?

    கேள்வி: மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வோம் என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அப்படி ஒரு அரசியல் கட்சி உள்ளதா? அதன் பெயர் என்ன?
    பதில்: இருக்கிறதே என் கற்பனையில்! அதன் பெயர் உன்னத இந்தியர் கட்சி! எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்பைத்தான் மதச்சார்பற்ற என்கிறோம். அப்படி தாங்கள் ---இருப்பதாகத்தான் எல்லாக் கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் வோட்டு வங்கி அரசியல் இதைப் பொய்யாக்கிவிடுகிறது. பலவித நாடகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் உங்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள அறிக்கை.

                                          ---------------------------------------- (கல்கி 16.2.2014 பக்கம் 44)

    எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்புதான் மதச்சார்பின்மை - என்று கூறும் விளக்கமே தவறானது.
    மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான். செக்குலர் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்குத்தான் தமிழில் மதச்சார்பின்மை என்று கூறப்படுகிறது.
    செக்குலர் என்ற சொல் ஆங்கில மொழியிலிருந்து வந்ததுதானே _ அப்படி இருக்கும் ஆங்கில மூலச் சொல்லின் பொருளை அந்த ஆங்கில மொழியில்தானே காண வேண்டும், தேட வேண்டும்.
    இதுகுறித்துத் தந்தை பெரியார் கூறும் கருத்து விவேகமானது.
    செக்குலர் _ மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
    செக்குலர் என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்யானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்தமாக முடியுமா?
    அந்தச் சொல்லும்கூட அரசாங்கக் காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்லவில்லையே! என்றார் தந்தை பெரியார்.
    செக்குலரிசம் குறித்த தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து தனித்தன்மையானது. உண்மையின் தன்மையை ஆராதிப்பதாகும்.
    அரசுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதுதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
    ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினையில் மதத்துக்கு இடம் இல்லை.
    எந்த ஒரு மாநில அரசும் மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க _ குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.
    ஆறு நீதிபதிகள் தனித்தனியே அளித்துள்ள தீர்ப்புகளில்  அரசியலமைப்புச்  சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.
    ஓர் ஆட்சி  மதச் சகிப்புத்தன்மையை மேற்கொள்வதாலோ  ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ அந்த அரசு மதச்சார்பு ஆகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
    அரசியல் கட்சிகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.
    சில தனி மனிதர்களைக் கொண்ட அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு _ கலாச்சார மேம்பாட்டுக்குப் பிரச்சாரம் செய்யலாம்.
    அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் _ அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல. ஆனால் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு _ அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டுவிட முடியாது.
    அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகிவிடுகிறது.
    அரசியல் சட்டம் மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்கவில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காலம் வரை_ இதை யாரும் மாற்றிவிட முடியாது _ இவ்வாறு ஆறு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு திட்டவட்டமாக, தெளிவாக தீர்ப்பாகவே கூறிவிட்டது. (14.3.1994)
    உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்தை தீக்கதிர் தமிழில் வெளியிட்டு இருந்தது. (7.10.2012)
    மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக் கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்று கூறினாரே.
    மதத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் மதச்சார்பின்மை என்பதன் பொருள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
    கல்கி கூட்டங்கள், சங்பரிவார் கூட்டங்கள் அரசு என்பது எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வது என்று பாடப் பேதம் செய்வதன் விஷமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் மதச்சார்பின்மைக்குப் புது விளக்கத்தையே அருள்வாக்காகக் கூறியுள்ளார்.
    என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை என்று விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம். (சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் மோடி) _ இது மோடியின் அறியாமைக்கான முகவரியே!
    மோடியை விட்டுத் தள்ளுவோம். ஜென்டில்மேன் வாஜ்பேயி இருக்கிறாரே _ அவர் மட்டும் என்ன வாழுகிறதாம்?
    பூனாவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜியின் 325ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பேயி என்ன பேசினார்?
    MR. VAJPAYEE SAID, CHATRAPATHI WAS SECULAR TO THE TRUE SENSE AS AGAINST TODAY’S “DISTORTED SECULARISM” FOR HE PAID EQUAL RESPECT TO ALL RELIGIONS AND NEVER DISCRIMINATED ON THE GROUND OF RELIGION. - (The Hindu 27.6.1998 page 8)
    சத்ரபதி சிவாஜி இப்போதுள்ள உருக்குலைக்கப்பட்ட மதச்சார்பின்மைக் கொள்கையைப் போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்கவில்லை, எல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார் என்றவர்தானே வாஜ்பேயி. உண்மை என்னவென்றால், பார்ப்பனர்களுக்குப் பாதம் பணிந்து சொத்தையெல்லாம் இழந்து பரதேசி ஆனவர்தான் சிவாஜி. அதனால்தான் சிவாஜியை மதச்சார்பற்றவர் என்று தூக்கி உச்சி மோந்துள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
    இப்பொழுது கூறப்பட்டு வரும் மதச் சார்பின்மை என்பது உருக்குலைக்கப்பட்ட (DISTORTED) ஒன்றாம். (இந்தச் சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்துதான் பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) பிரதமராக இருக்கக்கூடியவர் உள்ளத்தில் அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனுதர்ம வேர் அல்லவா குடிகொண்டு இருக்கிறது.
    காரணம், வாஜ்பேயியாக இருந்தாலும் அவர் இந்துத்துவ மத அடிப்படைவாதி என்பதுதான்.
    மும்பையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.ஜே.பி உறுப்பினர் ராம் கட்சே.
    1991 மே 21 அன்று விசுவ ஹிந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மகாஜன், விசுவஹிந்து பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த சாத்வி ரித்தாம்ப்ரா ஆகியோர் இந்துமத அடிப்படையில் வாக்குக் கேட்டனர். அந்த மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சே இருந்தார் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. (15.4.1994). அத்தீர்ப்பை வழங்கியவர் அகர்வால் ஆவார்.
    2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுபுழா மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி (அய்.எஃப்.டி.பி.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.தாமஸ். பின்னர் இவர் காங்கிரஸ் (ஜே)உடன் தம் கட்சியை இணைத்துக் கொண்டவர். இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும்கூட. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் பி.எம்.இஸ்மாயிலைவிட வெறும் 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர்.
    இவரது வெற்றியை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளர் பி.எம்.இஸ்மாயில், ஜோஸ் கே.மணி உள்ளிட்ட சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.
    மக்களவைத் தேர்தலில் கத்தோலிக்கக் கிறித்தவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.
    இந்த வழக்கில் நீதிபதி சி.என்.இராமச்சந்திரன் தீர்ப்பை அளித்தார். (31.10.2006) அந்தத் தீர்ப்பில், மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)இன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார்; எனவே நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில்கூட போட்டியிடும் வேட்பாளர்கள் மதச் சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டியவர்கள். எந்த மதத்தைச் சார்ந்ததாகவும் கூறிப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றுள்ள நிலையில், மதச்சார்பின்மைக்கு கல்கிகளும், பி.ஜே.பி., சங்பரிவார்க் கூட்டமும் கூறும் விளக்கம் தவறானது - தந்தை பெரியார் கூறும் கருத்தே சரியானது என்பதும் விளங்கவில்லையா?



    அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது அரசின் நடவடிக்கையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) ஆணை

    ரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் (கிளை) உத்தரவிட்டுள்ளது.
    நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:
    நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வட்டார அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
    இந்தக் கோவில்களில் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
    இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரைப் புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது.
    இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே, இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
    இந்த மனு நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
    அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். - (தீர்ப்பு 17.3.2010)
    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    ---------------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்  மார்ச் 01-15 - 2014 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

    52 comments:

    தமிழ் ஓவியா said...


    ஊழலை ஒழிக்கும் இலட்சணத்தைப் பாரீர்!

    பல ஊழல் புகார்களில் சிக்கிய பாபாராம்தேவுடன் மோடி

    புதுடில்லி, மார்ச் 24- ஊழலை ஒழிக்கப் புறப் பட்டுள்ளார் மோடி என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம்; மோடி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்டியே தீருவார் என்று பல கட்சி கள் (தமிழ்நாடு உட்பட) அவ ரோடு கூட்டும் சேர்ந்துள் ளன. உண்மை நிலை என்ன? யோகா குரு பாபாராம்தேவ் என்ற சாமியாரிடம் டில்லி யிலே பிஜேபியின் பிரதம ருக்கான வேட்பாளர் நரேந் திர மோடி கொஞ்சிக் குலவு கிறார். யார் இந்த ராமதேவ் இதோ ஒரு நீண்ட பட்டியல்.

    நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்று ராம் தேவ் பாபா மும்பையில் பத்திரிக்கை யாளர் சந்திப்பில் கூறினார்.

    நரேந்திர மோடியை ஆதரிக்கும் பாபாவின் யோக்கியதை கடந்த வருடம் வந்த செய்திகள் மாத்திரம் ராம் தேவ் பாபாவின் மீது வருமான வரிஏய்ப்பு, அயல் நாடுகளில் உள்ள சொத் துக்கள் குறித்த விவரங்களை மறைத் தல், தக்க அனுமதி யின்றி பலரை வெளிநாடு கூட்டி சென்றது போன்ற வழக்குகள் உள்ளன. இவர்மீது உத்தரா கண்ட் மாநிலத்தில் பல இடங்களை ஆக்ரமித்த குற்றச்சாட்டு உள்ளது, இவரது பதஞ்சலி மருத்துவ நிறுவனத்தின் மீது மஹ ராஷ்டிரா, ஹரியானா மற் றும் உத்தராகண்ட் மாநி லத்தில் நிலங்களை அப கரித்த குற்றச்சாட்டும் உள்ளது. ஹரித்துவாரில் 2 ஏக்கர் நிலத்தை வன்முறை யாக அபகரித்து திவ்ய யோகா மந்திர் என்ற பெய ரில் போலிப்பத்திரம் தயார் செய்தது (நவம்பர் 29, 2013 பி.டி.அய்) ராம் தேவ்பாபா வின் பதஞ்சலி யோகா ஆயூர்வேதக் கல்லூரியில் தங்கி இருந்த 18 வயது மாணவி மர்மமான முறை யில் காணாமல் போனார் இது குறித்த வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நவம் பர் 23 2013) பி.டி.அய். பாபா ராம் தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு சுமார் 20 முதல் 25 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை ஆணையர் ஆர் ஆர் சிங் தெரிவித்தார் (அக்டோ பர் 4. 2013) பி.டி.அய். யோகா பயிற்சி என்ற பெயரில் நாடெங்கும் நடத் தப்பட்ட முகாம் மூலம் ரூ 5 கோடிவரை வருமானம் பெற்று அதை அரசிடம் இருந்து மறைத்து வரி ஏய்ப்பு செய்தது. ராம் தேவ்பாபாவின் சகோதரன் ராம்பரத் தேவ் மீது ஆட்கடத்தல் வழக்கு அக்டோபர் 22. 2013 (டெக் கான் குரானிகள் செய்தி)

    மேலும் சில சாதனைகள்!

    போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற வழக்கில் பாபாராம்தே வின் செயலாளர் பால கிருஷ்ணன் மீது சி.பி.அய் வழக்கு, இவர் மீது வெளி நாடுகளுக்கு ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக் கும் உள்ளது. 2009-ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டில் சுமார் 200 கோடி மதிப் புள்ள (2மில்லியன் பிரிட் டன் பவுண்ட்) உள்ள ஒரு தீவை 2009 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார் (Glasgow, யூகே டைம்ஸ் September 28, 2009.) இந்த தகவல் பத்திரிக் கையில் வெளியான உடன் 2011 ஆம் ஆண்டு இங்கி லாந்தைச் சேர்ந்த ஒரு பக்தை தனக்கு தானமாக வழங்கியதாகவும் அதை உலக நலனுக்காக மாத் திரம் பயன்படுத்துவதாக வும் தனக்கு சொந்தமான எந்த ஒரு காரியத்தையும் அந்தத் தீவில் செய்ய வில்லை என்று புளுகுமூட் டையை அவிழ்த்துவிட்டார். (June 1, 2011 ஹிந் துஸ்தான் டைம்ஸ், மும்பை பதிப்பு)

    இவ்வளவு பராக்கிர மங்கள் செய்த சாமியா ருக்கு ஆபத்பாந்தவனாக மோடி இல்லாமல் வேறு யார் இருக்கமுடியும் ஆகை யால் தான் இவருக்கு மோடி பிரதமராக வேண் டும் என்ற ஆவல் இருக் கிறது, இந்து முன்னணி செய்தி நிறுவனங்கள் பல இவரின் ஸ்பான்சரில் தான் இயங்குகிறது, ஆகையால் மோடி மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பேசி னால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சேனல் களிலும் நேரடி ஒளிபரப்பு மாத்திரமின்றி அன்றும் முழுவதும் அது பற்றிய செய்திகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள்.

    Read more: http://viduthalai.in/e-paper/77487.html#ixzz2wvpXZu00

    தமிழ் ஓவியா said...


    பரிதாபத்திற்குரிய வைகோ


    பரிதாபத்திற்குரிய வைகோ

    பி.ஜே.பியுடன் ஏன் கூட்டு என்றால் ஈழம் பெறு வதற்காக என்றார் வைகோ- பி.ஜே.பி.யின் முக்கிய தலை வரான வெங்கையா நாயு டுவோ - தனியீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னைக்கு வந்தே கூறி விட்டார்.

    மதிமுக தேர்தல் அறிக் கையில் இந்திய அய்க்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக பி.ஜே.பி. தலை வர் பொன். ராதாகிருஷ் ணன் அதனைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை. அப்படி மாற்றம் விரும்பி னால் பாரதம் என்றுதான் மாற்ற வேண்டும் என்று கூறி விட்டாரே! இதற்குப் பெயர் தான் வேற்றுமையுள் ஒற் றுமையோ!

    Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpmyHT1

    தமிழ் ஓவியா said...

    எச்சரிக்கை!

    நம் கைகளை சோப்புப் போட்டு கழுவாத காரணத் தால் ஸ்வைன் ப்ளூ போன்ற உலகமே அஞ்சும் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpyLfMp

    தமிழ் ஓவியா said...

    மோடியின் ஆட்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு

    குஜராத்தில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. 2011ஆம் ஆண்டில் 6382 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012ஆம் ஆண்டில் தற்கொலைகள் 7110 ஆக அதாவது 11.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் பதிவுகள் வாரியம் இந்தியாவில் விபத்து மரணங் களும், தற்கொலைகளும் - 2012 என்ற தலைப்பிடப் பட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அகமதாபாத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அது சுட்டிக்காட்டுகிறது. குஜராத்தின் வளர்ச்சி விகிதமும் இதுதான் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். 2011ஆம் ஆண்டில் 470 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளது. அவர் களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது கவலை தரும் விஷயமாகும். ராஜ்கோட் நகரம் தற் கொலைகளின் தலைநகரமாக திகழ்கிறது. இந்தியா வில் தற்கொலைகள் நடந்த நகரங்களின் பட்டியலில் அது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    அங்கு நடந்த மரணங்களில் 30.5 விழுக்காடு தற்கொலை மரணங்களாகும்.குஜராத்தில் தற் கொலை செய்து கொண்டவர்களில் நாற்பது விழுக் காட்டினர் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். இங்கும் அகமதாபாத் முன்னுக்கு நிற்கிறது. அங்கு 44 விழுக்காடு தற்கொலை மரணங்கள் இளை ஞர்கள் மத்தியில் நடந்தவை.

    Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvq62poi

    தமிழ் ஓவியா said...

    குஜராத் - மோடி ஆட்சியில்

    விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு!

    தானே.மார்ச்.24- குஜராத் மாநிலத்திலிருந்து 24 வயது பெண், பெற்றவர்களாலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அவளின் சகோதரர்களும் இருந்துள்ள கொடுமை குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

    தானேவை அடுத்த பிவண்டி பகுதியில் அனுமான் தேக்தி என்கிற இடத்தில் உள்ள விபச்சார விடுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பெண், விபச்சாரத் தொழிலுக்கு உடன்படாததால் தொடர்ந்து சித்தரவதைகளுக்கு உள்ளானார். விபச்சார விடுதியின் நிர்வாகி 24 வயதுள்ள அப்பெண்ணை தனி அறையில் அடைத்து சிகரெட்டால் சுட்டு துன் புறுத்தி உள்ளார். அவரிடம் தன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு அப்பெண் வேண்டியும், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளார். மேலும் இரண்டு நாளில் அப்பெண்ணின் மார்பகங்களையும் அறுத்தும் உள்ளார். அப்பெண்ணின் கதறல் அந்த தெரு வழியே சென்றவர்களுக்கு எட்டியதால் காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. காவல்துறை யினர் அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மருத் துவர்கள் உடனடியாக, தானே பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாதவராக உள்ளார். பிவண்டி காவல் நிலைய ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணமான ரூபி முன்ஷி என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் களான ஆலம், அப்சல் உட்பட மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 325,326,370 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை யும் காவல்துறை தேடி வருகிறது.

    Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvqEA8PS

    தமிழ் ஓவியா said...


    சேது சமுத்திரத் திட்டம் - ஜெயலலிதாவின் முரண்பாடு


    கலைஞர் அம்பலப்படுத்துகிறார்

    சென்னை, மார்ச் 24- திமுகவிற்கு ஒரு கொள் கையும் கிடையாது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் பேசிவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு சேது சமுத்திரத் திட்டம் என்பதில் அவர் எப்படியெல்லாம் முரண் பட்டு நிற்கிறார் என்பதை விளக்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.

    ஜெயலலிதா எவ்வாறு ஒரே கொள்கையோடும், கோட்பாட்டோடும் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகி றேன். 2001 அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில், சேது சமுத் திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடை யும். வாணிபமும் தொழி லும் பெருகும். அந்நிய முத லீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமா கும். ஏற்றுமதி, இறக்குமதி அதி கரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக் களின் வாழ்க்கைத்தரம் மேம் படும்.

    வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அள வில் விரிவடையும். சுற் றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத் தின் தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக் காகக் கூறிக் கொண்டிருக் காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத் திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதி யைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னு ரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்று சொன் னார்கள்.

    அது மாத்திரமல்ல; 10.5.2004 அன்று வெளியிடப் பட்ட அ.தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கை யில் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக் கும் சேது சமுத்திரத் திட் டத்தினை நிறைவேற்றுவ தற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற் குப் போதிய நிதியினை உட னடியாக ஒதுக்கி, ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறை வேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலி யுறுத்தும் என்று சொன் னார்கள். தற்போது வெளி யிட்டுள்ள அ.தி.மு.க. அறிக் கையிலே இந்தத் திட்டம் பற்றிய அறி விப்பு என்ன ஆயிற்று? அப்போது சிறப் பான திட்டம் என்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அந்தத் திட்டமே வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலேயே வழக் குத் தொடுத்திருக்கிறார் ஜெயலலிதா!

    அன்று செழிக்க வைக்கும் திட்ட மாக இருந்த சேதுத் திட்டம், இன்று செல்லாக் காசுத் திட்டமாக மாறிவிட்டதா? இதுதான் ஒரே கொள்கை, ஒரே கோட்பாட்டிற்கான அடையாளமா?

    Read more: http://viduthalai.in/e-paper/77488.html#ixzz2wvqMlYqD

    தமிழ் ஓவியா said...


    பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது


    பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி

    செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது

    மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுவது அவசியம்

    தமிழர் தலைவர் அறிக்கை

    மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே!

    பெண்களுக்குச் சொத்துரிமை - இந்து சாஸ்திர எதிர்ப்பு - அண்ணல் அம்பேத்கர் முயற்சி தோல்வி - 1929இல் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் மத்திய ஆட்சியில் தி.மு.க.வின் முயற்சியில் நிறைவேற்றம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    இந்துமதத் தர்மப்படி, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமல் துவக்கத்தில் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம். அவர்கள் தங்கள் தந்தையர்க்கு பிண்டம் பிடித்துப் போடும் உரிமை இல்லாதவர்கள் என்பதால்தான்!

    ஆண் பிள்ளைகள் மட்டுமே அதனை சாஸ்திர சடங்காச்சாரப்படி செய்ய முடியும் என்பது இந்து தர்மம்!

    முன் நிபந்தனையோடு அன்று ஒரு சட்டம்

    எனவே இந்துக் கூட்டுக் குடும்பத்தில் (அவிபக்த குடும்பம்) என்பதில் உள்ள பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில், மகனுக்குள்ளதைப் போல மகள் உரிமை கொண்டாட வழியில்லாமல் இருந்தது.

    ஏன் கணவன் சொத்தில், கணவன் முன்பே இறந்து மனைவி விதவையான பிறகுகூட அந்த சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லாமல் முன்பு இருந்தது;

    பிறகு சற்று மாற்றம் வந்தது - அநேகமாக 1937 வாக்கில்; ஆனால் அதற்கொரு முன் நிபந்தனை வைக்கப்பட்டு விதவைக்கு இறந்த கணவனின் சொத்துரிமை கிடைத்தது.

    அந்த முன் நிபந்தனை அந்த விதவை கற்பு இழக்காத வராக இருக்க வேண்டும்! Ramnad Case கற்பிழந்த விதவை வழக்கு Widow’s Case என்பது பிரபலமான வழக்காகும். இதுபடிப்படியாக பல கட்டங்களில் மாறுதல் அடைந்தது.

    அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் - எதிர்ப்பினால் பதவி விலகிய கொடுமை!

    இது ஒருபுறமிருக்க, மகளிருக்குச் சொத்துரிமை ஏற்படுத்த இந்து சட்டத்தை திருத்தி, ஆண்களைப் போல் (மகன்களுக்குள்ள உரிமை மகள்களுக்கும்) பெண்களுக் கும் வரவே இந்து சட்டத் திருத்த மசோதா (Hindu Code Bill) என்ற பெரும் சீர்திருத்த மசோதாவை அண்ணல் அம் பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது கொணர்ந்தார்.

    சில சில பகுதிகளைப் பிரித்து சட்டமாக்கினர்; இந்த மகளுக்கு சொத்துரிமை - ஹிந்து தர்மத்தின் அடிப் படையைக் குலைக்கிறது என்று காரணம் காட்டி, ஹிந்து சனாதனிகள் கடும் எதிர்ப்பை, முதல் குடியரசுத் தலைவ ரான பாபு இராஜேந்திர பிரசாத் மூலம் காட்டி, அம்பேத்கரின் முயற்சி வெற்றி பெறாமல் தடுத்தார்கள்.
    அதன் காரணமாகவே டாக்டர் அம்பேத்கர் பதவி விலகி வெளியேறினார். அவரது முயற்சி பிறகு தி.மு.க. பங்கு பெற்ற பிறகு நிறைவேற்றியதே!

    தி.மு.க. செய்த புரட்சி

    ஆனால் தி.மு.க. இடம் பெற்று 2004 தேர்தலுக்குப் பிறகு அமைந்த அய்க்கிய முற்போக்கு முன்னணி அமைச்சரவை 2005-இல் மகளுக்குச் சொத்துரிமைக்கு இருந்த தடையை நீக்கி ஏற்கெனவே இருந்த 1956ஆம் ஆண்டு சட்டத் திருத்தமாக நிறைவேற்றி 2006 செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அதை அமலாக்கி வைத்து வரலாறு படைத்தது.

    இதைவிட மகளிருக்கான சமூகப் புரட்சி வேறு உண்டா?

    1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட் டின் தீர்மானம் இது! கலைஞர் தலைமையில் அமைந்த இயக்கம், மத்தியில் மக்களாதரவுடன் வெற்றி பெற்ற, நிகழ்த்திய சாதனை, பன்னூறு ஆண்டானாலும் வரலாற்றில் அழிக்கப்படாத மிகப் பெரிய அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி சாதனை அல்லவா?

    மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்!

    இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, திசை திருப்புவோர் தம் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழிப்பது இப்போதைய தேவை அல்லவா?


    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்

    சென்னை 24.3.2014

    Read more: http://viduthalai.in/e-paper/77482.html#ixzz2wvqVg3WA

    தமிழ் ஓவியா said...


    உண்டியலைப் பறி கொடுத்த பெருமாள்


    சென்னை, மார்ச் 24-மாதவரம் அடுத்த மூலச் சத்திரம் பெருமாள் கோயில் தெருவில் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக நரசிம்மன் என் பவரும், துப்புரவு தொழி லாளியாக எல்லப்பன் என் பவரும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோயி லில் பூசைகள் முடிந்ததும், நரசிம்மன், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய எல்லப்பன் வந்தார்.

    கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த சில நபர்கள் 5 அடி உயர உண்டியலை பெயர்த்து கொண்டு சென் றதை கண்டு, எல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித் தார். நிர்வாகி சங்கர் மாதவரம் பால் பண்ணை காவல்துறையில் புகார் செய்தார்.

    காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கோயில் பின்பக்கம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உண்டியல் உடைந்து கிடப் பது தெரியவந்தது.

    அதில் இருந்த பணத்தை சில நபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1 லட்சம் இருக்க லாம் என்று நிர்வாகி கூறி னார்.

    இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து அந்த சில நபர்களை தேடி வருகின்ற னர். கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/77491.html#ixzz2wvqg6AZc

    தமிழ் ஓவியா said...


    கலைஞர் மாடல் என்பதே சரி!

    சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில், கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மிகவும் சாதுர்யத்தோடு, சட்டச் சிக்கலுக்கு இடமின்றி, மிகச் சரியாக நடந்து கொண்டது.

    ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் அடி வாங்கியது. அதே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிலும் நிதானமும், வைக்கும் அடியில் உறுதியும், எடுத்துக் கொண்ட பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் இருக்க வேண்டும்.

    பேருக்கு நாம் செய்ததாக இருக்கட்டும் - நீதிமன்றம் செல்லாது என்று சொன்னால், அதைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்பது சிலரின் அணுகுமுறையாகும்.

    கிராமப்புறங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர். எதிர்த்து நீதிமன்றம் சென்ற போதுகூட, செல்லுபடியானது. கலைஞரைவிட தான் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக 25 சதவீதமாக உயர்த்தினார் ஜெயலலிதா அம்மையார்; அதன் விளைவு - உள்ளதும் போச்சு என்ற நிலையில் நீதிமன்றத்தில் அடி வாங்கியது.

    நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் செல்வி ஜெயலலிதா அம்மையார்; அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் சிபார்சு அடிப்படையில் நுழைவுத் தேர்வை செயல்படுத்தினால் சட்டச் சிக்கல் வராது - நீதிமன்றமும் - ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார். நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் இருக்க வேண்டுமே. எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா விளைவு நீதிமன்றத்தில் - அடிவாங்கியது தான் மிச்சம்!

    அதே நேரத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்பொழுதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அரசு நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது

    எடுத்துக் கொண்ட பிரச்சினையின்மீது நல்லெண்ணமும், ஈடுபாடும், நிதானமும் இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். கலைஞர் அவர்கள் அப்படித்தான் நிருவாகத்தில் வெற்றி பெற்று வந்தார்! இந்தியாவிலேயே கலைஞர் மாடல் என்று சொல்லும் அளவுக்கு அவரின் நிருவாகம் கொடி கட்டிப் பறந்தது.

    சி.என்.என் - அய்.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்புப் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலத்தைத் தேர்வு செய்து வைர மாநில விருதினை வழங்கி வருகிறது; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என்று வளர்ச்சி கணக்கிடப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.

    அந்த வகையில் கலைஞர்ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற வைர விருதினைப் பெற்றதே! புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் (23.2.2011) குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றாரே, அந்த நிலை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உண்டா?

    சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்ட நிலையில் அம்மக்களின் வளர்ச்சி எந்த வகையில் சிறந்தது என்பது மிகவும் முக்கியம்.

    முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக் கல்லூரிகளில் 2006-2007இல் பெற்ற இடங்கள் வெறும் 46. தனி இடஒதுக்கீடு என்ற நிலையில் 2007-2008இல் பெற்ற இடங்கள் 57; 2008-2009 இல் பெற்ற இடங்களோ 80; 74 சதவீத இடங்கள் முஸ்லிம்கள் கூடுதலாகப் பெற்றனர் என்றால் கல்வியில் வெகு காலமாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், இந்தத் தனி இடஒதுக்கீட்டால் எத்தகைய மகத்தான வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    அதே போல பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் (2007-2008) பெற்ற இடங்கள் 2125.

    கலைஞர் ஆட்சியில் முஸ்லீம்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே (2008-2009இல்) அவர்கள் பெற்ற இடம் 3288; 2009-2010இல் அது 3655ஆக உயர்ந்தது!

    மோடி மாடல் என்பதெல்லாம் காற்றடைக்கப்பட்டு பொய்யாக வானத்தில் பறக்க விடப்பட்ட பலூன் - அப்படி சொல்ல வேண்டுமானால் கலைஞர் மாடல் என்பதுதான் மிகச் சரியானதாக இருக்க முடியும்.

    நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்; இப்பொழுது நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டதே!

    Read more: http://viduthalai.in/page-2/77498.html#ixzz2wvqpAdPR

    தமிழ் ஓவியா said...


    கலாச்சாரப்படி...

    பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
    (விடுதலை, 24.2.1954)

    Read more: http://viduthalai.in/page-2/77494.html#ixzz2wvr5Hgog

    தமிழ் ஓவியா said...


    தீய பழக்கங்களிலிருந்து விடுதலை அவசியம்



    நேற்று 23.3.2014 வெளியான தீக்கதிர் நாளேட்டின் இணைப்பாக வரும் வண்ணக்கதிரில் வெளிவந்த ஒரு சிறப்பான செய்தியை வாசக நேயர்களுக்காக அப்படியே தருகி றோம்:

    அவுரங்காபாத்தில் மகாத்மா காந்தி மிஷன் அறக்கட்டளை மருத்துவ மனையில் ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர் (41, வயது) சர்தார் சஞ்சித் சிங். 2014 பிப்ரவரி 2ஆம் தேதி, பணியில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சு வலி, மயக்கம், வியர்த்தல் ஆகியவை ஏற்பட்டது. பரிசோதித்தபோது அவ ருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மருத்துவ உதவிகளும் கொடுக்கப் பட்டன.

    அவசரப் பிரிவில் சேர்க்கப் படும்பொழுது இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், மிகவும் குறைந்திருந்தது. சிறிது நேரத்தில் இதயம் துடிப்பதும், நாடி துடிப்பும் நின்று விட்டது. இசிஜி திரையில் இதயம் செயலற்று விட்டதற்கான நேர் கோடு சமிக்ஞையே வந்தது. உடனடியாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவரது இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் முயற்சியாக பேசர் நுழைக்கப்பட்டது. அப்பொழுதும் இதயம் துடிக்காததால் செயற்கையான முறையை கையாண்டனர். மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது உறுதி செய்யப்பட்டது.

    சுமார் 100 முறைக்கு செயற்கையான முயற்சிவிட்டு விட்டு மேற்கொள்ளப்பட்டது. 11/2 மணி நேர முயற்சிக்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 4 நாள் களில் அவருக்கு முழு நினைவு திரும்பி யது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. மூளையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிசயிக்கும் வகையில் விரைவாக முழு குணம் அடைந்தார்.

    மருத்துவப்படி 90 நிமிடம் இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்தது எப்படி?

    அவருடைய இளம் வயதும் அவருக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக கருதப் படுகிறது. அதைவிடவும் மருத்துவர்கள் தங்கள் முயற்சியை தொடர்ந்து மேற் கொண்டதும் இந்த அரிய நிகழ்வுக்கு மற்றொரு காரணமாகும். உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பழக்கங்களைப் பழகாமல் இருப்பது எவ்வளவு முக்கிய மானது என்பதையும் விடா முயற்சியுள்ள மருத்துவர்கள் அமைவது எவ்வளவு அருமையானது என்பதையுமே இது காட்டுகிறது.

    இதிலிருந்து மனிதர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன அல்லவா!

    நம் வாழ்வில் நாம் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஒரு போதும் ஆளாகக் கூடாது.

    சில நல்ல நண்பர்கள்கூட நண்பர் களின் சகவாசதோஷத்தின் காரணமாக, புகைப்பிடித்தல், மது குடித்தல் - இதை ஒரு வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பழக்கம் என்று தவறான பழக்கத்தில் ஈடுபடுதல், மகளிரிடம் பண்பற்ற முறையில் நடந்து கொள்ளுதல், அதைப் பெருமையாகப் பேசி தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட் டால், பின்னால் அது நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகும்போது உதவி செய்யக்கூட வாய்ப்பிருக்காது என்ப தால் உங்கள் வாழ்வைப் பாதுகாக்கவா வது தனி மனித ஒழுக்கம் தேவை! தேவை!!

    தீய பழக்கங்களைப் புறந்தள்ளுவீர்!

    Read more: http://viduthalai.in/page-2/77501.html#ixzz2wvrEaNqP

    தமிழ் ஓவியா said...

    குஜராத்தில் உண்மை நிலை என்ன புள்ளி விவரங்கள் பேசுகின்றன தி வீக் இதழ் அம்பலப்படுத்துகிறது

    குஜராத் மாடல் என்ற பெயரில் பொய்களும், புனை சுருட்டும் எவ்வாறு விலை போகின்றன என்பதை மல்லிகா சாராபாய் என்ற எழுத்தாளர் தமது கட்டுரையில் விளக்கமாகவும், புள்ளி விவரங்களுடனும் எவ்வாறு விவரித் துள்ளார் என்பதைப் பார்ப்போம்.

    எல்லா புள்ளி விவரங்களும் அரசு தரப்பிலிருந்து பெறப்பட்டவை என்பதும், அவற்றை முழுவதுமாக அச்சேற்றினால் இடம் போதாது என்பதால் சுருக்கமாகவே விளக்கியுள்ளார். இதன் மூலம் தொலைக் காட்சிகளும், பத்திரிக்கைகளும் எவ்வாறு பெரிதாக்கி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்றன என்பதையும் சில சமயம் தமது வாசகர்களே இதை நம்பி விடுகின்றனர் என்பதையும் தோலுரித்துக் காட்டுகின்றார்.

    கடந்த பத்தாண்டுகளில் 60,000 சிறு தொழிற் கூடங்கள் குஜராத்தில் மூடப் பட்டிருக்கின்றன. சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பன்னாட்டு (அந்நிய முதலீடு) நிறுவனங் களை முதலீடு என்று எடுத்துக் கொண் டால் குஜராத் அய்ந்தாவது இடத்திலும், விவசாய உற்பத்தியில் நாட்டில் எட்டாது இடத்திலும் உள்ளது. 2005 - 2006 இலி ருந்து 2010 - 2011 வரை நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் (GSDP) 3.44 விழுக்காடு மட்டுமே என்பதும் அதை இரண்டு மடங்காக உயர்த்திக் காட்டி இருப்பது முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயலுவது மாகும். நாட்டிலேயே விவசாயப் பொருட்களும், இரசாயன உரங்களும் மிக உயர்ந்த மதிப்புக் கூட்டு வரி 5 விழுக்காடு என்பதும் உண்மையான ஒன்று.

    குஜராத்தில் 28 மாவட்டங்கள் உள்ளன அவற்றில் 225 வட்டங்கள் உள்ளன. அதில் 57 வட்டங்கள் மின்சாரமின்றி இருண்டு கிடக்கின்றன.

    தமிழ் ஓவியா said...

    2011 புள்ளி விவரங்களின்படி 4,55,885 மின்சார விண்ணப்பங்கள் நிலுவையி லுள்ளன. 1995-இல் பாரதீய ஜனதா ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன் 10,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. அது மோடி 2001-இல் பதவி ஏற்ற போது ரூ. 45,301 கோடியாக இருந்தது. 2012 டிசம்பரில் அது ரூ. 1,38,978 கோடியாக உயர்ந்தது. அது மேலும் 2015 - 2016 இல் 2,07,695/- கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்ப்பாக்கப் படுகின்றது.

    1990-1995 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு செலவிடப்பட்ட தொகை 4.25 விழுக்காடு என்றும் அது 2005-2010 இல் 0.77 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின் றன. அதாவது கீழிருந்து மேலாக இரண்டாவது இடத்திலுள்ளது குஜராத். அனிமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 பெரிய மாநிலங்களில் குஜராத்தில் தான் அதிகமுள்ளனர். அனி மியா நோயால் பாதிக்கப்பட்ட குழந் தைகள் 16-ஆவது இடத்திலும், ஊட்டச் சத்துக் குறைவாக வாடும் குழந்தைகள் வாழும் பெரிய மாநிலங்களில் 15-ஆவது இடத்திலுள்ளது. குழந்தைகள் ஊட்டச் சத்தின்றி இறப்பு விகிதம் அதிகம் நிகழ்வது குஜராத்தில் தான் என்பதும் அது கிராமங் களில் 14-ஆவது இடத்திலும், நகரங்களில் 10-ஆவது இடத்திலும் உள்ளது.

    The Global Hunger Report - பசியால் வாடுபவர்கள் 17 மாநிலங்களில் குஜராத் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநி லங்கள் வரிசையில் குஜராத்தும் மிகவும் அஞ்சத்தக்க மாநிலமாக உள்ளது.

    2001 ஆம் ஆண்டு 32 விழுக்காடு மக்கள்தான் ஏழைகள். அது பா.ஜ.க ஆட்சியில் 2011-இல் 39.5 விழுக்காடு என்பதும் ஒரு சாதனை தானே! NSSO நாட்டில் மிகக்குறைந்த அளவில் அதா வது 8.6 விழுக்காடே கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் நமோ மாநிலம் 10-ஆவது இடத்திலுள்ளது. 29 விழுக்காடு பேர் சுத்திகரிக்கப்படாத நீரை குடிக் கின்றனர். அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1.75 கோடிப் பேர் அசுத்த நீரை அருந்துகின்றனர்.

    குஜராத்தில் 3716 வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றன. இருந்தாலும் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருப்போரின் எண்ணிக்கை 10 லட்சம். பதிவு செய்துள்ள மொத்த வேலையற் றோரின் எண்ணிக்கை 30 லட்சம். 12 ஆண்டுகளில் பூஜ்ஜியம் விழுக்காடுதான் வேலை வாய்ப்புகளில் வளர்ச்சி!

    அண்மையில் CAG வெளியிட்ட அறிக்கையில் ரூ. 16,70,699/- கோடி நிதி மற்றும் நில மோசடியும் நடைபெற்றுள்ள தாகவும் அது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

    முஸ்லிம் மாணவர்கள் மற்றும் வணி கர்கள் மாநிலத்திலும், அரசு நடத்தும் கல்விக்கூடங்களிலும் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆதிவாசி களின் நிலம் பெறுவதில் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை இடம் போதாமை கருதி விட்டுவிடுகின் றேன். என்னுடைய நோக்கமெல்லாம் எங்களைப் போன்றவர்கள் எவ்வாறெல் லாம் இந்தச் செயலற்ற அரசால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை படம் பிடித்துக் காட்டுவதுதான். ஏனெனில் எங்களைப் போன்றவர்கள் ஏமாற்றப்படு கிறோம் என்பதுதான் உண்மை.

    ஆம் மோடி பெரிய வணிகர்களை, பண முதலைகளை மேலும் பணக்காரர் களாக ஆக்கி இருக்கின்றார். ஆம் அவர் சிறந்த பேச்சாளர், வெற்றிடத்தில் வீடு கட்டுபவர். குஜராத் மாடல் - மாதிரி அரசு முன்னேற்றம், டார்வின், ரகத்தைச் சார்ந்ததாகும். அதாவது மனிதன் குரங்கி லிருந்து பிறந்தான் என் சொல்லப்படும் காலத்தைச் சார்ந்ததாகும். இது எப்படி யென்றால் திறமையான மாணவர்களுக் குப் பாடம் சொல்லிக் கொடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதைப் போன்றதாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டுப் போனா லும் போகட்டும் என்ற கொள்கை. ஆகவே இதைப் படிக்கும் வாசகர்கள் இப்படிப்பட்ட புளுகு மூட்டை குஜராத் மாடல் அரசு 95 கோடி ஏழை எளிய மக்களை வாழ வைக்கும் என்று நம்பு கின்றார்களா? இந்த குஜராத் மாடல், நம் இந்திய நாட்டிற்குத் தேவையா என் பதைச் சிந்திப்பீர்!

    - தமிழ் மொழியாக்கம்: எம்.எஸ். முகம்மது ஈசா, சென்னை-1

    Read more: http://viduthalai.in/page-2/77505.html#ixzz2wvroqErR

    தமிழ் ஓவியா said...


    அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்


    சென்னை, மார்ச் 24- அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் நடைபெறவுள்ள விவாதத்தின்போது ஈழத் தமிழர் களின்பால் அக்கறையோடு சர்வதேச சுதந்திரமான விசார ணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

    ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம்.

    அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக் கல் செய்துள்ளபோதிலும், அது உலகத் தமிழர்களின் விருப் பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடுள்ளது. இதற்கிடையே அந்தத் தீர்மானத்தின்மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அல்லது 25 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு 26.3.2014 அன்றும் நடை பெற வுள்ளது.

    இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கெனவே இரண்டுமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில்தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது.

    இப்போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப் பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

    இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரு வதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர் கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின்போது, ஈழத் தமிழர்களின்பால் அக் கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Read more: http://viduthalai.in/page-8/77506.html#ixzz2wvsc3Ogm

    தமிழ் ஓவியா said...

    நீரோ மன்னன் மோடியை நோக்கி அம்புகள்


    புதுடில்லி, மார்ச் 24- நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றத்தால் வரு ணிக்கப்பட்ட பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியை நோக்கி பல முனையிலிருந்து கேள்வி கள் எழுப்பப்பட்டுள்ளன.

    அவற்றின் விவரம் வருமாறு:-

    திக்விஜய் சிங் கேள்வி

    நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்றால் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க.,வின் மூத்தத் தலைவர்களின் தொகுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன் என காங்கிரஸ் பொதுச் செயலா ளர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். ஜஸ்வந்த் சிங்கிற்கு தேர்தலில் போட் டியிட வாய்ப்பு அளிக்கா தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    பிருந்தா காரத்

    நாட்டில் நரேந்திர மோடி அலை எதுவும் வீச வில்லை. மூன்றாவது அணியை குறைத்து மதிப் பீடு செய்ய வேண்டாம். தேர்தலுக்கு பிறகு தனது சொந்த பலத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை யில் அதன் வெற்றி இருக் கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் தெரிவித்தார்.

    லூதியானாவில் செய்தி யாளர்களுக்கு பிருந்தா காரத் நேற்று பேட்டியளித் தார். அப்போது அவர் கூறிய தாவது: நாட்டில் மோடி அலை என்று எதுவும் வீச வில்லை. நாட்டில் உள்ள மண்டல கட்சிகள் ஒன்று சேர்ந்து மூன்றாவது அணியை அமைத்துள்ளன. தேர்த லுக்குப் பிறகு மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித் தார். மூன்றாவது அணியை குறைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று கூறினார்.

    சித்தராமையா

    கருநாடகத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி அலை எதுவு மில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூரு நகர மாவட்ட காங்கிரஸ் சார் பில் பெங்களூரு, அரண் மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உங்கள் இல்லத்தை நோக்கி எங்கள் சாதனைகள் என்ற நிகழ்ச்சியில் அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசு மற்றும் மாநில காங்கிரஸ் அரசின் சாதனைகள் அடங் கிய பிரச்சார கையேட்டை வெளியிட்டு அவர் பேசிய தாவது: காந்தியாரைக் கொன்ற நாதுராம்கோட் சேவின் அமைப்பைச் சேர்ந்த நரேந்திரமோடி இந்த நாட் டின் பிரதமராவது வெறும் பகல் கனவு. நாடெங்கும் நரேந்திரமோடி அலைவீசு வதாக பாஜக பொய்ப் பிரச் சாரம் செய்துவருகிறது.

    கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மக் களை குழப்பும் பொய்ப் பிரச்சாரத்தை பாஜக செய்து வருகிறது. இதனால் எந்த அரசியல் பலனும் பாஜக வுக்கு கிடைக்காது. நரேந் திர மோடி கருநாடகத்திற்கு நான்கைந்து முறை வந்து சென்றுள்ளார். ஆனாலும் கருநாடகத்தில் மோடி அலை எதுவுமில்லை.

    தமிழ் ஓவியா said...

    நாட் டின் பிரதமர் ஆகிவிட் டதை போன்ற பிரமை யில் நரேந்திரமோடி பேசி வருகிறார். என் தந்தை மீது ஆணையிட்டு கூறுகிறேன், மோடி பிரதமர் ஆவது சாத் தியமில்லை. மதச்சார்பற்ற தத்துவத்தின் மீது நம் பிக்கை வைத்துள்ள இந்திய மக்கள், எந்தகாரணத்தை முன்னிட்டும் மதவாதிக ளுக்கு ஆட்சி அதிகாரத்தை தரமாட்டார்கள். நரேந்திர மோடியின் அரசியல் ஆட் டம் கருநாடகத்தில் எடு படாது.

    ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று பிணை யில் வெளியே வந்துள்ள முன்னாள் முதல்வர் எடியூ ரப்பா, முன்னாள் அமைச் சர் கட்டாசுப்ரமணிய நாயுடு, ஹட்கோ ஊழலில் சிக்கி யுள்ள அனந்த்குமாரை அரு கில் வைத்துக்கொண்டு நரேந்திரமோடி ஊழல் பற்றி பேசுவது வேடிக்கை யானது.

    எடியூரப்பா, அனந்த் குமார், சிறீராமுலு போன்ற ஊழல் குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துவிட்டு அய்க் கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த ஊழலை பேச மோடிக்கு அருகதை யில்லை. கருநாடகத்தை 5 ஆண்டுகாலம் ஆட்சிசெய்த பாஜக, மாநில வளங் களைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளது. எனவே, கருநாடக மக்கள் ஒரு போதும் பாஜகவை ஆத ரிக்க மாட்டார்கள் என்றார் சித்தராமையா.

    கபில்சிபல்

    நரேந்திரமோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தனியார் நிறுவனங்கள் நிதி உதவி செய்வதாக மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறினார்.

    கபில் சிபல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், சில தனியார் நிறுவனங்கள் பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஆதர வாக இருப்பதாகவும், அவ ரது தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி உதவி வழங்குவதாக வும் மறைமுகமாக கூறி னார்.

    மோடியிடம் இருந்து அந்த நிறுவனங்கள் சலு கைகளை எதிர்பார்ப்பதாக வும் அதனால்தான் நிதி உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். விருந்து நிகழ்ச் சிக்கு (மோடியுடன் விருந்து உண்ண) ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ண யித்து இருப்பதில் இருந்தே இது தெரியவில்லையா என் றும் அவர் கேள்வி எழுப்பி னார். ஆனால் அவர் எந்த நிறுவனத்தையும் பெயர் குறிப்பிட்டு கூறவில்லை.

    சரத் பவார்

    பிரதமராக நினைக்கும் நரேந்திர மோடி குறுகிய புத்தி கொண்டவர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய உண வுத் துறை அமைச்சருமான சரத் பவார் குற்றம் சாட்டி யுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத் தில் கடந்த ஆண்டு வர லாறு காணாத வறட்சி ஏற் பட்டது. அம்மாநிலத்தில் கால்நடைகள் போதுமான தீவனம் இல்லாமல் பட் டினி கிடப்பதை கண்டு பரி தாபப்பட்ட குஜராத்தின் மேகசேனா மாவட்ட அதி காரிகள், மகாராஷ்டிரா மாநில அரசால் அமைக்கப் பட்ட கால்நடை பராமரிப்பு நிலையத்தில் (கோசாலை) பசியால் வாடிய கால்நடை களுக்கு தீவனம் தந்து உதவி செய்தனர்.

    இதற்காக உதவியவர் கள் மீது மேகசேனா மாவட்ட நிர்வாகம் ஊழல் தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு தொடுத்துள்ளது என்று சுட்டிக் காட்டிய சரத்பவார், ஒரு நாட்டை வழிநடத்த ஆசைப்படுபவர் அனைத்து மாநிலத்தையும் தனது சொந்த மாநிலமாகவே கருத வேண்டும்.

    ஆனால், பட்டினியாக கிடந்த கால்நடைகளுக்கு தீவனம் தந்து உதவியவர் களின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யும் இத்தகைய குறுகிய புத்தி கொண்ட ஒரு வர், எப்படி இந்த நாட்டை வழி நடத்த ஆசைப்பட லாம்? என்று கேள்வி எழுப் பியுள்ளார்.

    அஜித் பவார்

    தேசியவாத காங்கிரசின் தலைவரும், மகாராஷ்டிர மாநில துணை அமைச்சரு மான அஜித் பவார் மோடிக்கு நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு திறமை கிடையாது என்று விமர்சித் துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தானே மற்றும் கல்யாண் தொகுதி வேட் பாளர்களை அறிமுகப் படுத்தி பிரச்சார கூட்டத் தில் பேசிய அவர் கூறிய தாவது:-

    காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியும் மிக முக்கியமானது. அப் போதுதான் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வர முடி யும்.

    பா.ஜனதா கட்சி மதத்தை முன்னிறுத்தி இந்த நாட்டை இரண்டாக பிரித்தது. அதனால் பா.ஜ.க. வின் ஆட்சி அராஜகத் திற்கே வழி வகுக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டியிருக்கும் என்றார்.

    Read more: http://viduthalai.in/page-8/77504.html#ixzz2wvsmergD

    தமிழ் ஓவியா said...


    அந்தோ! டாக்டர் பூ.பழனியப்பன் மறைந்தாரே!


    நாட்டின் தலைசிறந்த மகப் பேறு மருத்துவரும், சீரிய பகுத்தறிவாளரும், சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுடையவருமான பேராசிரியர் டாக்டர் பூ.பழனி யப்பன் (வயது 84) அவர்கள் நேற்று (23.3.2014) இரவு 8 மணி யளவில் சென்னை -அண்ணா நகர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி, நம்மை மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    பரம்பரையான சுயமரியாதைக் குடும்பமான பதி வாளர் நளம்புத்தூர் (கொள்ளிடம் கரையில் உள்ள பழைய தென்னாற்காடு மாவட்டம்) பூவராகன் அவர்களது மூன்றாவது மகன் ஆவார்.

    மறைந்த நிலவு பூ.கணேசன் எம்.ஏ., என்று அறியப்பட்ட செய்தித் துறை, குடும்ப நலத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் இவரது மூத்த அண்ணன். விடுதலையில் தொண்டாற்றியவர்.

    அடுத்த சகோதரர் வேளாண்துறை அதிகாரியாக இருந்த திரு.பூ.சோலையப்பன் அவர்கள் ஆவார்கள்.

    பெரியார் பெருந்தொண்டரான பதிவாளர் பூவ ராகன் அவர்கள் வழியிலேயே இம்மூவரும் சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்தவர்கள்.

    டாக்டர் பூ.பழனியப்பன் அவர்கள், முன்பு மருத் துவப் படிப்புத் துறைக்கு தி.மு.க. அரசால் தேர்வுக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்தபோது, சமூக நீதிக் கண்ணோட்டத்தில், வாய்ப்பற்ற முதல் தலை முறைக் குடும்பத்து ஒடுக்கப்பட்ட சமூக மாணவ - மாணவிகள் பலருக்கும் வாய்ப்பு தந்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தியவர்.

    டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர் (1997). எஃப்.ஆர்.சி.எஸ். பட்டமும் பெற்று, மகப்பேறு மருத்துவத் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவராகவும் விளங்கி யவர்.

    மருத்துவ மாணவர்களாலும், சக மருத்துவர்களா லும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்; நிறைய படித்து பொதுத் தகவல் களஞ்சிய மாகத் திகழ்ந்த பண்பாளர்.

    முதுமையினால் வீட்டில் இருந்த அவரை சில மாதங்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்து, கவிஞரும், நானும் நலம் விசாரித்துத் திரும்பினோம்.

    வரும் 28 ஆம் தேதி அவர் எழுதி, முதல் பதிப்புடன் நின்று போன பல முக்கிய நோய்கள்பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு நூலை, நாம் அவரு டைய அனுமதியோடு மறுபதிப்பிட்டு, சென்னை பெரியார் திடலில் (28.3.2014), மறு அறிமுக வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து, அதில் அவரைப் பெருமைப்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்; அதற்கு அவரின் ஒப்புதலும் பெற்றோம்.

    இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள். அது இங்கே நடந்துவிட்டது.

    அவரை இழந்துவாடும் அவரது வாழ்விணையர், மகன் சேரலாதன், மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சென்னை
    24.3.2014

    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்

    கழகத் தலைவர் மரியாதை

    மறைந்த டாக்டர் பூ.பழனியப்பன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். டாக்டரின் துணைவியார், மகன் சேர லாதன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திருமகள் மற்றும் மு.ந.மதியழன், விடுதலை ராதா, சி.வெற்றிச்செல்வி, திராவிடன் நலநிதி இயக்குநர் த.க.நடராசன் ஆகியோர் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

    Read more: http://viduthalai.in/page-8/77509.html#ixzz2wvtK0C8B

    தமிழ் ஓவியா said...


    உடலைப் பாதுகாக்க சில வழிமுறைகள்


    நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான். சோற்றுக்கற்றா ழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

    தலைமுடி உதிரத் தொடங்குகிறதா.. 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது. பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

    சின்ன வயசிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள். பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு ஸ்பூன் பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது.

    சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது.

    கண்களை ஒரு நாளைக்கு இரு வேளை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி அணியாமல் பைக்கில் செல்வோர் வீட்டுக்குள் வந்ததும் கண்ணை கழுவ வேண்டும். கண்ணை திறந்து பல முறை தண்ணீரை அடித்து கழுவினால் தூசி நீங்கி விடும்.

    காய்ச்சிய பாலில் நுங்குகளை நறுக்கிப் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட சோர்வு நீங்கும். புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட களைப்பு நீங்கும். சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது.

    Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtexqvC

    தமிழ் ஓவியா said...

    மருத்துவ குணம் கொண்ட தாழம்பூ

    தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியு டையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

    தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. ரத்தம் சுத்தமடைய: உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

    பசியை தூண்ட: என்னமோ தெரியல பசியே எடுக்கமாட்டங்குது ஏதோ நேரத்திற்கு சாப்பிடுகின்றேன் என்று சிலர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். இவர் கள் உடல் நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப் படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

    வயிற்றுப் பெருமல் நீங்க: உணவின் மாறுபாட் டாலும் ரேநம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெரு மலை உண்டாக்குகிறது. இதை போக்க நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்..

    ரத்த சோகை நீங்க: ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறு சுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பி திரிவார்கள். இந்தக் குறையை போக்க தாழம்பூவை தீநீர்(சித்த மருத்துவபடி எடுக்கப்படும் நீர்) எடுத்து அருந்தினால் குணமாகும்.

    உடல்சூடு தணிய : உடல் சூடானால் வெப்ப நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

    Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtnPgLH

    தமிழ் ஓவியா said...


    வயிற்றுப்பூச்சிகளை அகற்றும் மிளகு


    அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை. சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும் போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி அத்தகைய சிறப்புடையவை மிளகு.

    அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். அல்சர் பிரச்சினை உள்ள வர்களுக்கு காரத்துக்கு மிளகு சேர்க்க அறிவுறுத்தப் படுவதன் பின்னணி இதுதான். மிளகு வீக்கத்தைக் குறைக்கும். வாய்ப்புண்களையும் ஆற்றும். அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும்.

    நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும். முன்பு குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சிகள் அழிய கை மருந்துகள் கொடுக்கும் பழக்கம் இருந்தது. இன்று அதைப் பற்றி யெல்லாம் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

    பூச்சி மருந்து கொடுப்பதை மெனக்கெட்டு செய்ய நேரமில்லா தவர்கள், மிளகு அதிகம் சேர்த்த சூப் வைத்துக் கொடுத் தாலே, வயிற்றுப்பூச்சிகள் செத்துவிடும். இதைப் பெரியவர் களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக். அடிபட்டு, ரத்தம் கசிந்தால், அந்த இடத் தில் சிறிது மிளகுப்பொடி வைத்து அழுத்தினால் கசிவு உடனே நிற்கும்.

    மிளகில் வெள்ளை மிளகு, கருப்பு மிளகு என இரண்டு வகை உண்டு. துரித உணவு போன்ற சில உணவுகளுக்கு வெள்ளை மிளகு உபயோகிக்கிறோம். உணவின் நிறம் மாறாமலிருக்க வேண்டும் என்பதே காரணம். வெள்ளை மிளகு என்பது தோல் நீக்கப்பட்டது... அவ்வளவுதான்!

    உண்மையான சுவை மற்றும் ஆரோக்கியம் எதில்? அவ்வப்போது தேவைக்கேற்ப கரகரப்பாகப் பொடித்து உபயோகிக்கிற கருப்பு மிளகில்தான்! அந்தந்த வேளைத் தேவைக்கு கொஞ்சமாக இடித்து உபயோகித்தால், அதன் மணமும் பலனும் முழுமையாகக் கிடைக்கும்.

    Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvtx21Cj

    தமிழ் ஓவியா said...

    இதய ஆரோக்கியம் மிகவும் அவசியம்

    இதயம் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி மீண்டும் எழுந்து அன்றாட பணிகளை நாம் செய்து முடிக்கிறோம்..



    நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டி ருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம்.

    இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

    மனஅழுத்தம்: உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மவுனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

    இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது.

    முறையற்ற உணவுப் பழக்கம்: முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும்.

    இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தரு கின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது.

    தோல் நீக்கிய சிக்கன் போன்ற வற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவை யான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்..

    Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvu6ghol

    தமிழ் ஓவியா said...


    ஒரே கல்லால் இரு காய்கள்!

    அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாவை நோக்கி எண்டிசையி லிருந்தும் ஓர் கணை ஏவப்படுகிறது.

    எல்லோரையும் சகட்டுமேனிக்கு, தரக் குறைவாக - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிக்கும் அம்மை யார் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அக்கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடியைப்பற்றியோ ஒரே ஒரு வரி கூட மருந்துக்காகவாவது விமர்சிக்காதது ஏன்? என்ற வினாக்கணைகள்தான் அவை.

    திராவிடர் கழகத் தலைவரோ, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களோ வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க.வுடன் கடைசி நேரம் வரை கூட்டணிக்காக அளவு கடந்த சகிப்புத் தன்மை யுடன் நடந்து கொண்ட இடதுசாரிகள் கூட்டணி இல்லை என்ற நிலையில் அவர்களும் இந்த வினாவை எழுப்பி வருகிறார்கள்!

    இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன், இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு)யின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வினாக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

    இவற்றிற்குப் பிறகும்கூட அம்மையார் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்பதன் பொருள் என்ன? மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்றுதான் பொருள்.

    இந்த நிலையைக் கணக்கில் கொண்டால் வாக்காளர் கள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை மதவாதத்தை எதிர்ப்பது என்பது மட்டும் தான். அப்படிச் சொல்லும் பொழுது ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்து வதுபோல மதவாத எதிர்ப்பு என்று சொன்னாலே அது பி.ஜே.பி. அணிக்கும் பொருந்தும் அ.இ.அ.தி.மு.க.வுக் கும் பொருந்தும்.

    ஆக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரே பிரச்சினை - எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது- மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கமே போதுமானதாகும். பி.ஜே.பி.க்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். இதில் பிரித்து பார்ப்பதற்கு இடம் இல்லை.

    தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கரசேவையை ஆதரித்து பேசியவர் (23.11.1992) தானே இவர். இந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்டுள் ளதே. ஃப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்டுள்ளதே. டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறி இருக்கிறதே!

    அப்பொழுது மறுக்காமல் இப்பொழுது மறுப்பது அசல் சந்தர்ப்பவாதம் தானே! மக்களுக்கு இதை நினை வூட்டுவதுதான் நமது கடமை.

    அதோடு விட்டாரா? அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா என்ன சொன்னார்? ஆமாம்; ஆதரிக்கிறேன் இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால், வேறு எங்கே கட்ட முடியும்? (29.7.2003) என்று பதில் சொன்னவர் தானே?

    150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர் பார்க்கும் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று ஆட்சியிலும் பங்கேற்ற திமுக முயற்சியின் காரணமாக, கப்பல் துறை அமைச்சராகவிருந்த ஆற்றல்மிகு செயல் வீரர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் இருந்த நிலையில் (ரூ.2427 கோடித்திட்டம்) அத்திட்டத்தில் பெரும் பகுதி முடிந்து , இந்நாளில் கப்பல் ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கி இருக்கிறாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா, என்ன காரணம் சொல்லித் தடுத்துள்ளார்? ராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று சொன்னாரே - இதன் பொருள் என்ன? ராமன் கோயிலை அயோத்தியில் கட்டுவோம் - ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று சொல்லும் பி.ஜே.பி.க்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு?

    இந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் (Secular State) காப்பாற்றும் வகையில் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 120 கோடி எண்ணிக் கையில் வாழும் இந்திய மக்கள் நல்லிணக்கத்துடன், சகோதரத்துவத்துடனும், அமைதியுடனும் நல்வாழ்வு வாழ வகை செய்யும் - மதச்சார்பின்மையை வீழ்த்தத் துடிக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியான பி.ஜே.பி. அணி, அ.இ.அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர் வாக்காளர்ப் பெரு மக்களே!

    Read more: http://viduthalai.in/page-2/77541.html#ixzz2x1jmbPUL

    தமிழ் ஓவியா said...


    ஒன்றுமே இல்லை

    பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

    - (விடுதலை, 17.10.1954)

    Read more: http://viduthalai.in/page-2/77540.html#ixzz2x1k3qXWA

    தமிழ் ஓவியா said...


    பி.ஜே.பி.யின் தரம் இவ்வளவுதான்!

    சிறீராம் சேனா தலைவர் முத்தலிக்கை கட்சியில் காலையில் சேர்த்து மாலையில் நீக்கிய மர்மம் என்ன?

    திடுக்கிடும் தகவல்கள்! தேர்தல் சமயத்தில் வாக் குகளைப்பெற்று வெற்றி யுடன் தங்களது கட்சி வேட் பாளர்களை நாடாளுமன் றம் செல்ல பல கட்சிகள் உள்ளூர்பிரமுகர்களை வலிய சேர்த்துக்கொள்ளும், ஆனால், தற்போது பாரதீய ஜனதா கட்சி புதிய உத்தியைக் கடைபிடித்து வருகிறது. அதாவது உள்ளூரில் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை எல்லாம் பிடித்து வந்து தன்னுடைய கட்சிபிரமுகர்களாகவும், சிலரை வேட்பாளராகவும் நிற்க வைக்கிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களுள் ஒருவரான சிறிராமுலுவை மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்ததற்குக் கடு மையாக எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கட்சிக்குப் போதுமான அளவு நிதி கொடுப்பதில் முன்னணி வகிக் கும் ரெட்டி சகோதரர்களை நீக்க தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. (ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகா ரில் சிக்கியபோது, விமர் சனம் செய்த சுஸ்மா சுவ ராஜை இந்த சிறீராமுலு ஒருமையில் திட்டியதாக கன்னட நாளிதழான விஜய வாகினி செய்தி வெளியிட் டிருந்தது. காவிகளில் கூடா ரத்தில் பெண்களுக்கு மரி யாதையை எதிர்பார்ப்பது சேற்றில் கரைத்துவிட்ட சந்தனத்தின் வாசனையைத் தேடுவது போன்றுதான்) யார் இந்த முத்தலிக்?

    அதே போல் சிறீராம் சேனா தலைவர் முத்தலிக் கின் விவகாரத்திலும் காவிக் கட்சி நடந்துகொண்டது. யார் இந்த முத்தலிக் என்று பார்க்கலாம்.

    1. இந்திய கலாச்ச ரத்தை காக்கிறோம் என்ற போர்வையில் பெண் களைத் தாக்கி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கலாச்சார காவலர்கள் ராம் சேனா அமைப்பினர் இவர் களின் தலைவன் தான் இந்த முத்தலிக் இவனைப்பற்றி சில அறிமுக உரை...

    2. பல லட்சம் தந் தால் வெற்றிகரமாக வகுப் புக் கலவரத்தை நடத்தி முடிப்பேன் என்று ஸ்ட்ரிங் ஆப்பரேசனில் கூறி சிக்கியவன்..

    3. கருநாடகாவில்20-க்கும் மேற்பட்ட தேவாலயங் களைத் தாக்கியதில் இந்த முத்தலிக்கின் தலைமையி னால் ஆன ராம் சேனாவின் பங்கு உண்டு ..

    4. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருநாடகாவின் அரசு கட்டடத்தில் பாகிஸ் தான் கொடியை இவர்களே ஏற்றி இனக்கலவரத்தை உருவாக்க முனைந்தனர்...

    இவன் மீது மொத்தம் 21 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத் திய வழக்குகள். காலையில் சேர்ப்பு மாலையில் நீக்கம்!

    கருநாடகா ஷிமோகா மற்றும் உத்தர்கன்னடா, சிக்மகளூர் உடுப்பி மாவட் டங்களில் இவருக்குப் பெரும் புகழ்??? நிலவுகிறதாம். ஆகையால் இவரை கட்சி யில் இணைத்துக் கொண் டால் அந்தப்பகுதி வாக் காளர்களை மிரட்டியே தங் களது கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நினைப் பில் இவரை ஞாயிற்றுக் கிழமை காலையில் சேர்த் துக் கொண்டார்கள். ஆனால், இவரை கட்சியில் இணைத்த உடன் மங்களூர் மற்றும் உடுப்பியில் பெண்கள் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை உருவானது.

    கருநாடகாவில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் அதிகம் பெண் களின் ஓட்டுதான் அங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது, ஆகையால் பெண்களின் எதிர்ப்பு வெளிக் கிளம்பும் முன்பு டில்லி தலைமையிடம் அறிவித்து கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்திற்குள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதிலும் ஒரு உள் ஒப் பந்தம் போடப்பட்டுள்ள தாம், அதாவது தேர்தல் முடி யும் வரை காத்திருங்கள், நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்குச் சிறப்பு கவனிப்பு உண்டு என்று கருநாடக பாரதீய ஜனதா பிரமோத் முத்தலிக் கிடம் கூறினார்களாம். ஆமாம் மோடி அதிகா ரத்திற்கு வந்த பிறகு நாட்டு நடப்பை தனது கைக்குள் வைக்க அமித்ஷா, பிரமோத் முத்தலிக் போன்ற சமூக சேவகர்கள் தேவைதானே!

    - ஹிந்துஸ்தான் டைம்ஸ் 24.3.2014

    Read more: http://viduthalai.in/e-paper/77547.html#ixzz2x1kh7wmM

    தமிழ் ஓவியா said...


    ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு


    ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு

    பாஞ்ச் ஜன்யா என்கிற அரசியல் செய்தித்தாளை, ஆர்.எஸ்.எஸ். புதுடில்லி யில் மீண்டும் துவக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். நேரிடை யாக இந்தத் தேர்தலை மோடியை வைத்து நடத்து கிறது. இங்குள்ள மாநிலக் கட்சிகள் புரிந்து கொள் ளட்டும்.


    வெற்றி யார் கையில்?

    எல்லோரும் தேர்தல் வெற்றிபற்றி பேசிக் கொண்டு இருக்கையில் சினிமா ரசிகர்களுக்கோ வேறு கவலை.

    ரஜினியின் கோச்சடையான் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர் கள் திருப்பதிக்குப் பாத யாத்திரையாம்! படத்தின் வெற்றி அதன் சிறப்புகளால் அல்ல; ஏழு மலையான் அருள் பாலித்தால்தான் வெற்றியாம்! ரஜினியின் திறமையை இப்படியா அவமதிக்க வேண்டும்?


    மூன்று வழக்குகள்

    ஆளும் அ.இ.அ.தி. மு.க.வின் மீது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்று முதல் அமைச்சர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு மின் கம்பத்திலிருந்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடியதாம்.

    Read more: http://viduthalai.in/e-paper/77546.html#ixzz2x1kpju85

    தமிழ் ஓவியா said...


    என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்!

    ராமன் கோவில் கட்டியே தீருவோம்

    கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்!

    புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

    ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது.

    பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார்.

    Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1l7Ua00

    தமிழ் ஓவியா said...


    ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் இந்து மதத்திற்கு வராதீர்கள் மாயாவதி வேண்டுகோள்


    புவனேசுவரம், மார்ச் 25 நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறு வதற்கு பதிலாக அரசை மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலை வர் மாயாவதி கூறியுள்ளார்.

    ஒடிஷா மாநிலம் புவ னேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒடிசா மாநி லத்தில் தலித் மற்றும் ஆதி வாசிகள் வசிக்கும் பகுதிக் குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வரச்சொல்லி பாத பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களின் பேச்சை நம்பி மக்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக மத்திய அரசையும் மாநில அரசையும் மாற்றவேண் டும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும், தலித் மற்றும் பழங்குடியின மக் களிடம் எந்த முன்னேற் றமும் இல்லை.

    வெளிநாட்டு வங்கி களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்டுக் கொண்டுவர தற்போதைய காங்கிரஸ் தலைமையி லான அரசும், முந்தைய பாஜக தலைமையிலான அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் இரு அரசின் பொருளா தாரக் கொள்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவற்றை வைத்து ஏழை மக்களின் பெரும்பாலான சிக்கல் களைத் தீர்த்து விடலாம்.

    வறுமையும் வேலை யில்லாத் திண்டாட்டமும் தீவிரவாதம் துளிர்ப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். அடித்தட்டு மக்களின் சிக் கல் தீர்க்கப்படும்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறையும் என்றும் மாயா வதி பேசினார்.

    - (தைனிக் ஜாகரன் 25.3.2014-இந்தி இதழ்)

    Read more: http://viduthalai.in/e-paper/77552.html#ixzz2x1lFhHfn

    தமிழ் ஓவியா said...


    நடப்பது எமர்ஜன்சியா?

    இப்பொழுது நடப்பது எமர்ஜன்சியா! அந்தக் கால கட்டத்தில்தான் தனி நபர் வழிபாடு உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்பொழுது அது பி.ஜே.பி.யில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது - நமோ வழிபாடு தொடங்கி விட்டது.

    இதுதான் இன்றைய பி.ஜே.பி. இப்படி சொல்லி இருப்பவர் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை (பிஜேபி ஆட்சியில்) அமைச்ச ராகவும் இருந்து - இன்றைக்கு மோடியின் தயவால் ஓரங் கட்டப்படும் பெரிசுகளின் பட்டியலில் உள்ள ஜஸ்வந்த்சிங்.

    ஊடகங்களின் போக்கு

    அன்னா அசாரே இயக்கத்தையும் ஆம் ஆத்மியையும் அதன் தொடக்கக் காலத்தில் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்குப் பிறகு - குறிப்பாக பா.ஜ.க. மோடி முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை (80 டிகிரி) மாற்றிக் கொண்டதைப் பார்த்தோம்; அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆம் ஆத்மி கட்சி தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள் தாக்குதலின் மய்யம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது விழித்துக் கொண்டன.

    - தி இந்து விமர்சனக் கட்டுரை (25.3.2014)

    கருப்புக்கொடி!

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத் தான் பேட்டை கிராமப் பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சற்றும் இல்லாத நிலையில் அப்பகுதிக்கு வாக்குக் கேட்க வந்த அத்தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்நாளில் அதிமுக வேட்பாள ருமான தம்பித்துரைக்கு கிராமத்தினர் கறுப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பினை, வெறுப்பினை வெளிப்படுத்தினர்.

    இனம் இனத்தோடு...

    நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க.வை ஆதரிப்போம் என்று பார்ப்பன சங்கம் அறிவித் துள்ளது. சரி தானே! இனம் இனத்தோடு சேர்கிறது..

    தயார்! தயார்!!

    தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். தேர்தல் கணிப்பின் பின்னணியில் பெரும் பணம் புரள்கிறது - எனவே தேர்தல் கணிப்பை நான் எப்பொழுதுமே பொருட்படுத்துவதில்லை என்றார் அவர்.

    Read more: http://viduthalai.in/e-paper/77549.html#ixzz2x1lP7Cuj

    தமிழ் ஓவியா said...


    பாஜகவை நோக்கிப் பாயும் அம்புகள்

    ஜஸ்வந்த்சிங் தாக்கு

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு, அவர் விரும்பிய படி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படா தது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.அதனை தொடர்ந்து இந் நிலையில் பார்மர் தொகுதியில் ஜஸ் வந்த்சிங் வேட்பு மனு தாக்கல் செய் துள்ளார்.

    பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் முன் னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங். செய்தியாளர் களிடம் கூறியதாவது;

    சித்தாந்தங்களுக்கு பெயர் போன தனது கட்சி, இப்போது போலிகளின் வசம் போய் விட்டதாக விமர்சித்தார்.இபோது பாரதீய ஜனதா இரண்டு வகையாக உள்ளது ஒன்று உண்மையானது மற்றொன்று போலியானது என்று கூறினார்.

    இது ஒரு நமோ நாடகம் என்றும் இது பாஜகவை அழிவு பாதையில் இட்டு செல்லும் என்று கூறினார்.

    பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எந்த தலைவரும் ஏன் கட்சியில் இருந்து விலகி உள்ளீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லை என்று கூறினார்.

    பாரதீய ஜனதா கட்சி மக்களிடம் தொடர்புகள் வைத்து கொள்ளவில்லை அது ஒரு பகுதியாகதான் உள்ளது என்று ஐஸ்வந்த் சிங் கூறினார்.

    பிருந்தா காரத் தொடுப்பு

    நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி, உண்மையில் தோல்வி அச்சத்தின் உச்சத்தில் நிற்கிறது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

    பாஜகவின் தோல்விபயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதன் நடவடிக்கை களில் இருந்தே பளிச்சென தெரிய வருகிறது. அக்கட்சி தனது சொந்த மூத்த தலைவர்களை ஏமாற்றி தெருவில் நிற்கச் செய்கிறது. ஆனால் முசாபர் நகரில் முஸ்லிம் மக்க ளை கொன்றுகுவிக்க காரணமான வன்முறைக் குற்றவாளி களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறது;

    குஜ ராத்தில் போலி என்கவுண்ட்டர் படு கொலை வழக்கில் குற்றவாளியான அமித் ஷாவையும், மங்களூரில் பெண் களை இழிவுபடுத்தி வெறித்தாக்குதல் நடத்திய மதவெறியன் பிரமோத் முத்தலிக் போன்றவர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்கிறது என்று பிருந்தா காரத் கடுமையாக சாடினார்.

    குறிப்பாக பாஜகவின் மதவெறி நடவடிக்கைகள் குறித்தும், குஜராத் மாநிலத்தில் மோடி முன்வைக்கும் வளர்ச்சி யாருக்கானது என்பது குறித்தும் ஏராளமான உண்மை விவரங்களோடு உருவாகியுள்ள இந்த பிரசுரங் களை திங்களன்று கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சி யின்போது கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர்களில் ஒருவரான அருண்மேத்தாவும் கலந்து கொண்டு செய்தியாளர் களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறு கையில், மோடியும் அவரது ஆதரவு ஊடகங்களும் பிரச்சாரம் செய்கிற குஜராத் மாடல் என்பது ஏழைத் தொழிலாளர்களை அப்பட்டமாகச் சுரண்டுகிற கொடூரமான மாடல்; குஜராத் உழைப்பாளி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக செலவு செய்கிற தொகை மிகமிகக்குறைவாக மாறியிருக்கிறது;

    ஊட்டச்சத்தின்மை நாட்டிலேயே அதிகமாக நிலவுகிற மாநிலம் குஜராத்; பள்ளிகளிலிருந்து குழந்தைகள் மிக அதிகமாக இடைநின்றி யிருக்கும் மாநிலமும் குஜ ராத்; நாட்டிலேயே கல்விக்கும் சுகாதாரத்திற்கும் குறைவான தொகை யை செலவழித் திருப்பதும் மோடியின் குஜராத் என்று அம்பலப்படுத் தினார்.

    முன்னதாக பிரசுரங்களை வெளியிட்டுப் பேசிய பிருந்தா காரத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இந்த சிறு நூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் புள்ளிவிபரங் களும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங் களே என்று தெளிவு படுத்தினார்.

    மோடியின் குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது மட்டுமேயன்றி எளிய மக்களுக்கானது அல்ல என்றும் பிருந்தா காரத் விமர்சித்தார்.

    ஒமர் அப்துல்லா

    பிஜேபி மேலிடம் ஜஸ்வந்த் சிங் போன்ற, ஜென்டில்மேன்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் குண்டர்கள், ஊழல் பேர்வழிகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. இது எந்த மாதிரியான அரசியல் என்று எனக்குப் புரியவில்லை.

    Read more: http://viduthalai.in/page-8/77580.html#ixzz2x1mT0BBI

    தமிழ் ஓவியா said...


    பி.ஜே.பி.,க்குள் நடக்கும் பனிப்போர் வீதிக்கு வந்த கேலிக் கூத்து!


    போபால், மார்ச் 26- பி.ஜே.பி.க்குள் நடக்கும் பனிப்போர் இப்பொழுது வீதிக்கும் வந்து சந்தி சிரிக் கிறது.

    பா.ஜ.க., பிரதமர் வேட் பாளர், நரேந்திர மோடிக் கும், கட்சியின், முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட் டுள்ளதாக வெளியாகும் தக வல்களால், பா.ஜ.க.,வினர் இடையே கலக்கம் நிலவு கிறது.

    தேர்தல் பிரச்சார கூட் டங்களில், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என, தகவல் வெளியாகியுள் ளது.

    வேட்புமனு தாக்கல்

    பா.ஜ.க.வின் மூத்த தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜஸ்வந்த் சிங்கிற்கு, ராஜஸ்தான் மாநி லம், பார்மர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜ.க., தலைவர்கள், தனக்குத் துரோகம் செய்து விட்டதாக கூறிய ஜஸ்வந்த் சிங், அந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜஸ் வந்த்சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, பா.ஜ.க., மூத்த தலைவர் களில் ஒருவரான, மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வர், சுஷ்மா சுவராஜ் கண் டனம் தெரிவித்திருந்தார். பாரதீய ஜனதாவைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ்சிங் சவு கான் தலைமையிலான, மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மக்களவைத் தொகு தியில், சுஷ்மா சுவராஜ் போட்டியிடுகிறார். இதற் காக அவர், அங்கு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார். ஆனால், அவர் பங் கேற்கும் கூட்டங்களில், மறந்தும்கூட, பா.ஜ.க., பிர தமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பெயரை, அவர் உச்சரிப்பதில்லை. கட்சி யின் மற்ற தலைவர்கள், மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் நிலை யில், சுஷ்மா, தனி ஆவர்த் தனம் செய்வது, பா.ஜ.க., வினரிடையே, அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
    கலக்கம்

    மோடிக்கும், அவருக் கும் இடையே, பனிப்போர் நிகழ்வதாகவும், இதனால், பா.ஜ.க.,வின் வெற்றி பாதிக் கப்படும் என்றும், அந்தக் கட்சியினர் கலக்கம் அடைந் துள்ளனர். மத்திய பிரதேசத் தின் 29 மக்களவைத் தொகு திகளுக்கு, மூன்று கட்டங் களாக தேர்தல் நடக்கிறது. சுஷ்மா போட்டியிடும், விதிஷா தொகுதிக்கு, அடுத்த மாதம், 24 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியின் இப்போதைய எம்.பி.,யும் அவர் தான்.

    ஜஸ்வந்த் சிங் ஏற்கெ னவே அதிருப்தியில் உள் ளார். மூத்த பி.ஜே.பி. தலை வரான அவருக்குத் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் சுயேச்சையாக நிற்க முடிவு செய்துள்ளார்.

    அத்வானிக்கும், அவர் கேட்ட தொகுதி கொடுக்கப் படாததால் சிக்கல் ஏற்பட் டது. தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக் குழுவின் தலைவரான முரளிமனோகர் ஜோஷி வழக்கமாக நிற்கும் வார ணாசி தொகுதி மறுக்கப் பட்டு, அந்தத் தொகுதியை மோடி பெற்றுக்கொண் டுள்ளார். மூத்த தலைவர் கள் பி.ஜே.பி.யில் ஒதுக்கப் படுவதாகக் குற்றச்சாற்று எழுந்து, கட்சியை ஒரு கலக்குக் கலக்குகிறது. இதற் கெல்லாம் காரணம், பின் னணியில் இருந்து பி.ஜே. பி.யை இயக்கும் ஆர்.எஸ். எஸ்.தான்.
    2014 இல்

    சுஷ்மா படம் இல்லை

    கடந்த தேர்தல் அறிக்கை யில் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவராகக் கருதப்பட்டு, அட்டைப் படத்திலும் இடம்பெற்றிருந்த சுஷ்மா சுவராஜின் படம் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் திட்ட மிட்டு நீக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் அக்கட் சியில் முன்னணியில் இருக் கும் ஒரே பெண்மணி சுஷ்மாதான்! ஏற்கெனவே உமாபாரதி ஒதுக்கப்பட்டு விட்டார் என்பது தெரிந் ததே!

    Read more: http://viduthalai.in/e-paper/77603.html#ixzz2x7Y96hEt

    தமிழ் ஓவியா said...


    பல்நோக்கு மருத்துவமனை எப்படி இருக்கிறது? கலைஞர் பதில்



    சென்னை, மார்ச் 26- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சி யில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட் டுள்ள பல்நோக்கு மருத்து வமனை எப்படி இருக்கி றது என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித் துள்ள பதில் வருமாறு:

    கேள்வி: சென்னையில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பல் நோக்கு மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது?

    கலைஞர்: ஓமந்தூரார் வளாகத்தில் எழிலோடு கட்டப்பட்ட மாளிகையில் நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்கி வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் சுற்றிப் பார்த்துவிட்டு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி னார்கள். ஆனால் முதல மைச்சர் ஜெயலலிதா மூன் றாண்டு காலம் அதனை மூடி வைத்தார்.

    தலைமைச் செயலகமும், சட்டப்பேர வையும் பழைய இடத்தி லேயே தொடர்ந்து நடை பெறும் என்று அறிவித்து, தற்போது அங்கேதான் நடைபெறுகிறது. பல பகுதிகளில் அவ்வப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இட நெருக்கடியோ கேட்க வேண்டியதே இல்லை. பல அலுவலர்கள் வராந்தாவில் தான் காலம் தள்ளுகிறார் கள். முதலமைச்சர் அறை யைத் தவிர மற்ற அமைச் சர்களுக்கும் நெருக்கடி தான். ஆனால், ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள மாளி கையில், பல்நோக்கு மருத் துவமனையை, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத் தார். 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேறொரு முதலமைச்சர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகத்தை அமைக்கப் போவதாக கூறுவார்! இப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்கும். தற்போது ஜெய லலிதா தொடங்கி வைத்த பல்நோக்கு மருத்துவம னையில் பத்து நாட்களில் வந்த நோயாளிகள் எத் தனை ஆயிரம் பேர் தெரி யுமா? பல்நோக்கு மருத்து வமனை செயல்பாட்டிற்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகு, புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் என்று பல்வேறு பிரிவுகளில் 40 பேர்தான் அனுமதிக்கப் பட்டார்களாம்!

    அறிவிப்பு ஒன்றுதான் அதிமுக ஆட்சியின் இரண்டாண்டுகால சாதனை!

    கேள்வி: தொலை நோக்குத் திட்டம் பற்றி முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறாரே?

    கலைஞர்: அதைப் பற்றி அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியைக் கூறுகிறேன். 2012-2013 இல் தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலை நோக்குத் திட்ட ஆவணத்தில் 104 அணைகளைப் புனரமைக் கப் போவதாக அறிவித் தார்கள். இந்தத் திட்டத்திற் கான மதிப்பீடு 745 கோடி ரூபாய். இதில் 80 சதவிகிதம் உலக வங்கி கடனாகவும் 20 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக் குமென உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்டப் பணிகளை 2012 இல் துவங்கி, 2018 க்குள் நிறைவேற்றப்போவதாகச் சொன்னார்கள். பணிகளில், பல்வேறு துறைகளின் பங் களிப்புகளை ஒருங்கி ணைக்க தலைமைச் செய லாளரின் தலைமையில் மாநிலத்திட்ட மேலாண் மைக்குழுவும் உருவாக்கப் பட்டது. முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்தக் குழு ஒப்புதல் அளித்த தோடு சரி மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்க வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பருவ மழை பொய்த்ததால், பெரும்பா லான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில் சுலபமாக அணை களை மேம்படுத்தி இருக்க வேண் டும். ஆனால் தற்போது வரை திட்டப் பணிகள் துவங்கவில்லை. 2012 இல் வெளியிடப்பட்ட தொலை நோக்குத்திட்ட ஆவணத் தில் இந்தத் திட்டத்திற்காக 745 கோடி ரூபாய் செல வாகும் என தெரிவிக்கப் பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண் டாவது ஆவணத்தில் 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றுதான் அதி முக ஆட்சியின் இரண் டாண்டு காலச்சாதனை!

    (முரசொலி, 26.3.2014)

    Read more: http://viduthalai.in/e-paper/77608.html#ixzz2x7YVA8W4

    தமிழ் ஓவியா said...


    தேர்தல் துணுக்குகள்!

    காப்புத் தொகை?

    2009 மக்களவைத் தேர் தலில் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 6829 (84%) பேர் காப்புத் தொகை இழந்தனர்.

    தேவை நட்சத்திர சின்னம்

    தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகம் மது யூசுப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

    விதிமீறல்

    சென்னை மாவட்டத் தில் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை 1964. பணப் பட்டுவாடா தொடர் பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம்.

    சரண்!

    கருநாடகத்தில் பிரபல சுரங்க ஊழல் புகார் பேர் வழி சிறீராமுலு மீண்டும் பி.ஜே.பி.யில் சேர்க்கப் பட்டு தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. தேர்தலில் விதி மீறல் தொடர்பாக அவர்மீது ஒரு வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரா காததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலை யில், நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளார்.

    பறிமுதல்

    தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    தலைகீழ் கட்டை விரல்

    யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர் களுக்கு தலைகீழ் கட்டை விரல் சின்னம் வழங்கிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    ராகுல் காந்தி

    காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால், மக்களின் ஆரோக்கி யத்தை அடிப்படை உரி மையாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    மீதிப் பணம் எங்கே?

    திண்டுக்கல்லில் பேசு வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நேற்று வந்தார். கூட்டம் முடிந்த தும், அ.தி. மு.க. ஒன்றிய செயலாளரி டம் பெண்கள் பிரச்சி னையை எழுப்பியுள்ளனர். 200 ரூபாய் கொடுப்பதாகக் கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள்; இப்பொழுது நூறு ரூபாய்தானே கொடுத் துள்ளீர்கள். மீதி நூறு ரூபாய் எங்கே? என்று சண்டை போட்டனர். சாப்பாடு, பிஸ் கெட், தண்ணீருக்கு நூறு ரூபாய் சரியாகி விட்டது போ என்று அ.தி. மு.க. பொறுப் பாளர் கூறியுள்ளார்.

    ஓ, கூட்டம் கூடுகிறதா? கூட்டப்படுகிறதா? கேள் விக்கு விடை கிடைத்து விட்டது.

    Read more: http://viduthalai.in/e-paper/77606.html#ixzz2x7Ye8s9k

    தமிழ் ஓவியா said...


    மேலான ஆட்சி


    தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. - (குடிஅரசு, 3.11.1929)

    Read more: http://viduthalai.in/e-paper/77595.html#ixzz2x7Z0e1If

    தமிழ் ஓவியா said...


    இதுதான் பாஜக சொல்லும் மாற்றம்?


    பாஜக சார்பில் விளம்பரம் வெளி யிட்டுள்ளார்கள். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அது பாஜகவிற் கான நேரம்; மோடிக்கான நேரம் என விளம்பரம் வந்துள்ளது.

    நாமும் ஏதோ பெரிய மாற்றம் வருகிறது எனப் பார்த்தால், மாற்றம் வந்துள்ளது. எப்படி? மோடியை வளர்த்த அத்வானிக்கு மூக்குடைப்பு; மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்குக் கல்தா; நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் கருத்தைக் கேட்காமல் புறக்கணிப்பு. சரி, இது அவர்கள் உட்கட்சி விஷயம். எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

    பிரமோத் முத்தாலிக் என்பவர் கருநாடகாவில் ராம் சேனா என்கிற அமைப்பின் செயலாளர். சங் பரி வாரத்தின் ஒரு அமைப்பு. 2009 இல் மங்களூரில், இந்து கலாச்சார பாது காப்பு என்கிற பெயரில், விடுதியில் இருந்த பெண்களை, கேளிக்கையில் ஈடுபட்டார்கள் என்று கூறி, சாலை யில் விரட்டி அடித்த கொடுமைக்குச் சொந்தக்காரர். அவர் மீது பல வழக் குகள் உள்ளன.

    அவர் பிஜேபியில் காலையில் சேர்க்கப்பட்டார். பிஜேபி ஆட்சி செய்யும் கோவா முதல்வர் மனோகர் பரிகார், முத்தாலிக் சேர்க் கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப் பைத் தெரிவித்தார். கோவாவில் பாஜகவிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக் காது எனக் கூறியதும், அன்று மாலையே, முத்தாலிக், பாஜகவி லிருந்து விலக்கப்பட்டார். பிரமோத் முத்தாலிக் போன்ற ரவுடிகளைச் சேர்க்கும் நிலையில் இன்று பாஜக இருப்பது நல்ல மாற்றம் தானே? இது மட்டுமா?

    உ.பி.யில், முசாபர்நகரில் 2013 ஆகஸ்டில் கலவரம் ஏற்பட்டு, சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட னர்; வீட்டை விட்டு விரட்டப்பட்டு, இன்றுவரை, ஏறத்தாழ 360 குடும் பங்கள் முகாம்களில் இருக்கின்றனர். அந்த கலவரத்தின் போது, பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இத்தனையும் செய்தது, சங் பரிவார் கும்பல் தான். அந்த கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சாட் டப்பட்ட பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஹீக்கும் சிங், சஞ்சீவ் பலியான் இருவரையும், பாஜக நாடா ளுமன்ற வேட்பாளராக அறிவித் துள்ளது. அதுவும், கலவரம் நடந்த முசாபர் நகர் மற்றும் கைரானா தொகுதிகளுக்கு.

    உ.பி. கலவரத்தில் ஈடுபட்ட கிரி மினல்கள், வேட்பாளர்களாக அறி விப்பு; குஜராத் கலவரத்தின்போது, முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர்.

    இதைத்தான் மாற்றம் என பாஜக கூறுகிறது.

    நம்மூரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள வைகோவும், மற்ற தலைவர்களும், மோடி தலைமை யில் இந்தியா முழுவதும் இந்த மாற் றம் கொண்டுவர ஆசைப்படுகிறார் கள்.

    ஆனால், தமிழகம் பெரியார் பிறந்த மண்; அது மட்டுமல்ல; பெரி யாரால் பண்படுத்தப்பட்ட மண். மக்கள், தகுந்த பாடத்தை பாஜகவிற் கும், அதற்குத் துணை போவோருக் கும் தருவார்கள்.

    - குடந்தை கருணா

    Read more: http://viduthalai.in/e-paper/77601.html#ixzz2x7Z97Zeh

    தமிழ் ஓவியா said...


    பாலிமர் தொலைக்காட்சியில் தலைவர் நேர்காணல்



    பாலிமர் தொலைக்காட்சியில் உங்கள் (ஆசிரியர்) நேர்காணல் ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக இருந்தது. அது பெரியார் எதிர்ப்பலைகளை தவிடு பொடியாக்கியது. இதை விட மிகச் சிறப்பாக யாரும் பதில் கூறி இருக்க முடியாது. தாங்கள் எடுத்தது, பெரியார் தந்தது என்பது மிகச் சரியான விளக்கம்.

    சிறிய கோடுக்கு முன் அதைவிட சிறிய கோடு போட்டால், சிறியது, பெரியது ஆகி விடுகிறது. அதைப்போல், ஜெயாவின் குற்றங்கள் மற்ற ஜெயாவின் குற்றங்களால் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் ஜெயாவின் குறைகளை எளிதில் மறந்து விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வரு கிறோம். எத்தனையோ குறைகள் ஜெயா மீது கூறினாலும் அடுத்தடுத்த குறை களைக் கூறி மறக்கச் செய்து விடுகிறது. எனவே நாம் மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய குறைகளைத் தேர்வு செய்து மக்களை ஜெயாவுக்கு எதிராக நிறுத்த வேண்டும். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்.

    இன்றைய சூழ்நிலையில் மின்வெட்டு ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்று. எனவே ஜெயா சொன்ன 3 மாதத் தீர்வு இன்றுவரை நடக்க வில்லை. மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தல் முடியும் வரை அதில் எந்த மாற்றமும் வராது. எனவே திரு.ஸ்டாலின் கேட்பதற்குப் பதில் - பொது மக்கள் ஜெயாவிடம் கேள்வி கேட்டு அதை தொலைக்காட்சியிலோ அல் லது பத்திரிகைகளிலோ தேர்தல் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக:

    i.e. General Public Vs Jayalalitha

    மூன்று மாதத்தில் மின்வெட்டு நீங்கும் என்று உறுதி அளித்த அம்மா அவர்களே - இன்று வரை நீங்கள் உறுதியை காற்றில் பறக்கவிட்டீர்கள், என்று தீரும் என்று தேர்தலுக்கு முன் சொல்லுங்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை உங்களை நாங்கள் விட மாட்டோம். நீங்கள் பதில் கூற இன்னும் 24 நாள்கள் உள்ளன. - பொது மக்கள் மறுநாள் 23 நாள்கள் அடுத்த நாள் 22 நாள்கள் அடுத்து 21 நாள்கள் . . . .

    என்று தேர்தல் முடியும் வரை எண்ணிக் கொண்டே, நாள்தோறும் தொலைக்காட்சி யிலும் பத்திரிகைகளிலும் கூறிக் கொண்டே வந்தால், மின் வெட்டு என்பது மக்கள் மனதில் நிலைத்து நிற்பதோடு, தேர்தலிலும் ஜெயாவுக்கு எதிராக வாக்குகள் தி.மு.க. வினருக்குக் கிடைக்கும். இதனால் ஜெயா வினால் தப்பவே முடியாது. பதில் கூறியே ஆக வேண்டும். மின்வெட்டு மாணவர் களையும், பெண்களையும், தொழிலாளர் களையும் மிகவும் பாதிப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

    முதல்வரை, பொது மக்கள்முன் கொண்டுவந்தால், வெற்றி நமதே!

    - ரம்யா சீனிவாசன்

    Read more: http://viduthalai.in/e-paper/77599.html#ixzz2x7ZSlqNi

    தமிழ் ஓவியா said...


    இரட்டை இலை நீக்கம், மு.க. அழகிரி நீக்கம் பற்றி கலைஞர்


    சென்னை, மார்ச் 26- இரட்டை இலை நீக்கம், மு.க.அழகிரி நீக்கம் பற்றி செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் (நேற்று) குறிப்பிட்டதாவது:

    செய்தியாளர் :- இரட்டைஇலை சின்னங்கள் சிறிய பேருந்துகள் போன்றவற்றில் மறைக்கப்பட வேண்டு மென்றுபொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்தவழக்கில் உயர்நீதிமன்றம் இன்றையதினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?

    கலைஞர் :- தேர்தல்ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள்கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாகதேர்தல்ஆணையம் ஜனநாயகரீதியில் நடைபெறுகிறதுஎன்பதற்குஅடையாளமாக, ஏற்கெனவே இந்த இரட்டைஇலை சின்னங்களைமறைக்க வேண்டு மென்றுகூறியிருந்தது. அந்தத் தீர்ப்பைமதித்து, கட்சிசின்னங் களை, அரசுசார்புடையஎந்தநிகழ்விலும் அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாதுஎன்பதைநானும் கண்டிப் பாகஎடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

    செய்தியாளர் :- தி.மு.கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்றகட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துகட்சியின் மீது அவதூறு கூறி வருகிறாரே?

    கலைஞர்:- அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப் பட்டதற்குப் பிறகுஉரியவிளக்கங்களை அதற்கு அளிக் காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்ப தாலும், தி.மு.கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறி வருவ தாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.கழகத் திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்துபேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவேநீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம்.

    செய்தியாளர் :- ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூருவில் நடைபெற்றசொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே?

    கலைஞர் :- இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்தி ருக்கிறது. பத்திரிகைகள்என்றால், அனைத்துப் பத்திரிகை களிலும் அல்ல. முரசொலியில்வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றபத்திரிகைகள்இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில்இருட்டடிப்பு செய் திருக்கின்றன. ஏறத்தாழநான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாகநேற்றைய தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்அரசுவழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையி லிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலைஏடுகள் என்றுதங் களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாத தின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம்தான் என்ன?

    இவ்வாறு கலைஞர் அவர்கள்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.

    (முரசொலி, 26.3.2014)

    Read more: http://viduthalai.in/e-paper/77613.html#ixzz2x7Zj2yid

    தமிழ் ஓவியா said...


    பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!


    பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்!

    வழி நெடுகிலும் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீச்சு

    வாரணாசி, மார்ச் 26- வார ணாசியில் ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட அர்விந்த் கெஜ்ரி வால் முடிவு செய்துள்ளார். தொகுதி மக்களின் கருத்தை அறிந்து, இதற்கான அறி விப்பை வெளியிடுவதற்காக அவர் வாரணாசி சென்ற போது பாஜகவினர் கேவல மாக நடந்து கொண்டனர்.

    டில்லியில் இருந்து புறப் படும் முன் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. இந்த நாடு வெற்றி பெறவேண்டும். இதற் காக மோடியுடம், ராகுலும் தோற்கடிக்கப்பட வேண் டும். மோடியை போலவே வாரணா சிக்கு நானும் வெளி ஆள்தான் என்றார்.

    டில்லியில் இருந்து தனது குடும்பத்தினருடன் சிவ கங்கா விரைவு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை காலை வாரணாசிக்கு போய் சேர்ந் தார் கெஜ்ரிவால். இவருடன் ஆம் ஆத்மியின் மூத்த தலை வர் மணீஷ் சிசோதியா, கட் சியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய்சிங் வந்தனர்.

    கங்கையில் நீராடிய கெஜ் ரிவால் அங் குள்ள காலபை ரவர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியின் புகழ்பெற்ற சிவன் கோயில், சங்கத் மோட்சன் உட்பட பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார்.

    பாஜகவினர் கேவலம்

    அவருக்கு வழிநெடுகி லும் பாஜகவினர் கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். கெஜ் ரிவால் ஒழிக,கெஜ்ரிவாலே திரும்பி போ என முழங் கினர். பலர் கறுப்புக் கொடி காட்டினர். கெஜ்ரிவால் பயணம் செய்த வாகனம் மீது கருப்பு மை வீசினர். ஒரு சமயத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இதி லிருந்து நூலிழையில் தப்பி னார் கெஜ்ரிவால். கெஜ்ரி வாலுக்கு எதிராக போராட் டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

    வாரணாசியின் முஸ்லிம் தலைவர்களையும் கெஜ்ரி வால் சந்தித்தது, அந்த சமு தாயத்தினரின் வாக்குகளை யும் அவர் குறி வைத்துள்ள தாகக் கருதப்படுகிறது. இங்கு நடந்த பொதுக்கூட் டம் ஒன்றில், கெஜ்ரிவாலுக்கு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது குல்லாவை அணிவித் தார். அதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி தொப்பியை அவருக்கு அணிவித்தார். வாரணாசியில் கெஜ்ரிவாலுடன் சேர்த்து 6 முனைப் போட்டி நிலவு கிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை.

    ராகுல், மோடியை தோற்கடிப்போம்: கெஜ்ரிவால்

    ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் தோற்கடிப்பதுதான் எங்களின் முன்னுரிமைப் பணி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப் பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.

    வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி யிடுவதை அறிவிக்கும் வகை யில், இங்குள்ள ராஜ்நாரா யண் பூங்கா மைதானத்தில் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், குஜராத் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பல தொழிலதிபர் களுக்கு மிக மலிவான விலை யில் கொடுத்து வருகிறார் மோடி.

    விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த பல மானி யங்கள் நிறுத்தப்பட்டு விட் டன. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 5,874 விவசாயி கள் தற்கொலை செய்துள்ள னர். குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக் கான சிறுதொழில் நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின் றன. இதைத்தான் வாரணாசி யிலும் செய்வார் மோடி. நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் காங் கிரசை, பாஜகவும் ஆதரிக் கிறது. எனவே, இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்றார் கெஜ்ரிவால். கெஜ்ரி வால் தனது உரையில் சமாஜ் வாதி கட்சி பற்றியோ, பகு ஜன் சமாஜ் கட்சி பற்றி எது வுமே குறிப்பிடவில்லை.

    Read more: http://viduthalai.in/e-paper/77642.html#ixzz2x7aCMH2Y

    தமிழ் ஓவியா said...


    ஈழத் தமிழர் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட உலக நாடுகளின் கவனம் - கடமை தேவை!


    இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் (2008-2009) பற்றிய அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணைக்குட்படுத்தி, மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத் திடும், அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் இதுபற்றி ஒரு சர்வதேச (சுதந்திர) விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம்.

    அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை என்ற போதிலும், அது நிறைவேற்றப்பட இந்திய அரசு தனது பங்களிப்பை உலகத் தமிழர்கள் பாராட்டும் அளவுக்குச் செய்யவேண்டியது அவசர அவசிய மாகும்! இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்பது தீர்மானத்தில் இடம்பெறுவதே நியாயமாகும்.

    இலங்கை அரசு, எங்களை யார் - என்ன செய்துவிட முடியும்? என்று சவால் விடுகிறது; காரணம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற ஒரு குருட்டுத் தைரியம்தான் போலும்! இதை இந்திய அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.

    உலக நாடுகளின் கவனம் - கடமை - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வது! இது தேவை - கட்டாயம் தேவைப்படுகிறதே!


    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்.

    சென்னை, 27.3.2014

    Read more: http://viduthalai.in/e-paper/77655.html#ixzz2xDDm5Ce2

    தமிழ் ஓவியா said...


    தேர்தல் துணுக்குகள்!


    ஆள் தெரியாமல்...

    திருநெல்வேலியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய முசுலிம் பிரமுகர் ஒரு வர் மோடி மீது தாக்குதல் தொடுத்த நிலை யில், எல்லோருக்கும் அதிர்ச்சி!

    கலைவாணர் ஒரு திரைப்படத்தில் கூறியதுபோல, ஆள் தெரியாமல் கூப்பிட்டு வந்துவிட் டோமே என்று ஒருவர் முகத்தை இன் னொருவர் பார்த்துக் கொண்டனராம்.

    முகத்தைக் கண்ணாடியில் பார்க்கக்கூடாதா?

    ஊழல் பேர்வழிகளுக்குக் காங்கிரஸ், தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுத்துள் ளது; ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவானுக்கும், ரயில்வே ஊழலில் சிக்கிய பவன்குமார் பன்சாலுக்கும் காங்கிரஸ் வாய்ப்புக் கொடுத் துள்ளது என்று பி.ஜே.பி. யின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றம் சொல்லி இருக்கிறார்.

    அது சரி, கருநாடகா வின் எடியூரப்பா வுக்கும், சுரங்க ஊழல் புகார் சிறீரா முலு வுக்கும் பி.ஜே.பி. டிக் கெட் கொடுத்துள் ளதே - அது எப்படியாம்? அம்மையார் தம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்!

    ஆரம்பமாகிவிட்டது

    காஞ்சிபுரத்தில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. நிற் கிறது - தே.மு.தி.க. தலைவர் காஞ்சிபுரத்துக்கு இன்று பிரச்சாரம் செய்வ தாகத் திட்டம். அதற்குள் காஞ்சிபுரம் பி.ஜே.பி.யினர் எங்கள் கட்சித் தலைமை யில் தானே கூட்டணி - எங்களிடம் அனு மதி பெற்றுதான் தொகுதிக்கு வரவேண் டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.

    ஆரம்பமாகிவிட்டது, ஆரம்பத்தி லேயே கூட்டணி இடியாப்பச் சிக்கல்.

    எலியும் - தவளையும் கூட்டுச் சேர்ந் தால் அப்படித்தான்!

    காம்ரேடு கேட்கிறார்

    மனித உரிமை மீறப் பட்ட விஷயத்தில் இலங் கைக்கும் - குஜராத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை மோடியோடு கைகோக்கும் வைகோ சொல்லவேண்டும்.

    குஜராத்தில் அரசே திட்டமிட்டு கலவரத் தைத் தூண்டியது. கலவரத்தில் அப்பாவி கள் கொல்லப்பட்டனர். 32 அய்.ஏ.எஸ். அதி காரிகள் சிறையில் உள்ளனர்.

    - இப்படிக்கு ஏ.சவுந்தரராசன், சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர்

    காலை வாரும் பி.ஜே.பி.

    பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலை வரும், சிவகங்கைத் தொகுதியில் அக் கட்சி வேட்பாளருமான எச்.ராஜா என்ப வர், மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

    அந்தோ பரிதாபம்! பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்துள்ள மாநிலக் கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளுக்கு நமது அனுதாபங்கள்! தொடக்கத்திலேயே இப்படி காலை வார ஆரம்பித்துவிட்டனர் (சேம்சைடு கோல்) போகப்போக காலை வாரும் சர்க்கஸ் காட்சிகளை நாடு பார்க்கத் தானே போகிறது!

    சட்டம் ஒழுங்கென்று ஒன்று இருக்கிறதா?

    சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் பட்டப்பக லில் வாலிபர் தமிழ்ச்செல்வன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது போலவே, சென்னை திரு.வி.க. நகரில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பவுன் நகைகளும் கொள்ளை அடிக் கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடக்கும் கொலை கொலைக்கா முந்திரிக்கா இது!

    தேர்தல் நெருங்கினால் சாலை வசதிகள் குதிக்கும்

    சென்னை செனாய் நகர்ப் பகுதியில் அவசர அவசரமாக சாலைகள் போடப்படு கின்றன.

    சாலை போட்டு முடிந்த மறுநாளே அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க அந்தப் பகுதிக் குச் செல்கின்றனர்.

    தேர்தல் வந்தால்தான் சாலை வசதி களா? தேர்தல் ஆணையத்தின் கண்கள் ஆளும் கட்சி என்றால் மூடிக் கொள்ளுமா?

    பொதுமக்கள் கேட்கும் கேள்வி இது.

    Read more: http://viduthalai.in/e-paper/77664.html#ixzz2xDDwa1qU

    தமிழ் ஓவியா said...


    பக்தி காட்டும் ஒழுக்கம்! திருப்பதி கோவிலில் உண்டியல் எண்ணும்போது நகை திருட்டு


    நகரி, மார்ச்.27-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசூலாகும் உண்டியல் பணத்தை பறக்காமணி என்ற இடத்தில் தன்னார் வலர்கள் மற்றும் தேவஸ் தான ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களைப் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காணிக்கை எண்ணும் கண் காணிப்பு பணியை முடித் துக் கொண்டு சீனிவாசலு என்ற ஊழியர் வெளியே வந்தார்- அவரது ஆடை களைக் களைந்து சோதனை செய்தனர்.

    அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சீனிவாசலுவை வாயை திறந்து காண்பிக் கும்படி கூறினர். அப்போது ஊழியர் சீனிவாசலுவின் 2 தாடைக்குள்ளும் இரண்டு தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந் தது.

    அதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி சீனிவாசலுவிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் திருடி யதை ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த திருட்டை ஊழியர் சீனிவாசலு மட்டுமே செய் தாரா? அல்லது இந்த திருட் டில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்பது குறித்தும் எத்தனை காலமாக இந்த திருட்டு நடந்து வரு கிறது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    Read more: http://viduthalai.in/e-paper/77660.html#ixzz2xDE6X1u3

    தமிழ் ஓவியா said...


    ஆட்சியின் சீர்திருத்தம்


    ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதி யின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான்.
    _ (விடுதலை, 24.1.1969)

    Read more: http://viduthalai.in/page-2/77665.html#ixzz2xDJIwasP

    தமிழ் ஓவியா said...


    பி.ஜே.பி. தலைமையில் கூட்டணியும் - தினமணியும்!

    21.3.2014 நாளிட்ட தினமணி ஏட்டில், மாற்று அல்ல, மாற்றமும்கூட! என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

    1962 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்தல்வரை தமிழ்நாட்டில் தேர்தலில் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கவில்லை; இப்பொழுதுதான் தேசியக் கட்சி யான பி.ஜே.பி. தலைமையில் ஓர் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

    தேசியக் கட்சி தமிழ்நாட்டில் தலைமை தாங்காததால் தான் காவிரி நீர், முல்லைப் பெரியாறு போன்ற பிரச் சினைகளில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாற்றையும் தினமணி வைத்துள்ளது.

    இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்; தமிழ்நாட்டில் இப்பொழுதைய தேர்தலில் பி.ஜே.பி. என்ற தேசியக் கட்சி தலைமை தாங்குவதாக தினமணி கூறியிருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

    ஒரு கட்சி தலைமை தாங்குகிறது என்றால், அந்தக் கட்சிதான் அதிகமான இடங்களில் போட்டிப் போடுவதாக இருக்கவேண்டும்.

    ஆனால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? முதல் இடத்தில் தே.மு.தி.க. என்ற மாநிலக் கட்சிதான் இருக் கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தேசிய கட்சியான பி.ஜே.பி. என்ன பாடுபட்டது - மாநிலக் கட்சிகளின் தயவுக்காக எப்படியெல்லாம் ஊசி முனையில் தவம் இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை! இதனைத் தினமணி திரையிட்டு மறைக்கும் தந்திரத்தை ரசிக்க முடிகிறது.

    தேசியக் கட்சி தலைமை தாங்கவில்லை என்று சொல் லுவதற்குமுன் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஏன் தலை யெடுக்கவில்லை என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டாமா?

    தமிழ், தமிழன், தமிழ்நாட்டு உரிமை இவற்றில் பற்று வைப்பது - இவற்றுக்காகப் பாடுபடுவது - இந்தப் பிரச்சினைகளுக்குக் குந்தகம் ஏற்படும்பொழுது அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பது, போராடுவது - தேசியத்துக்கு விரோதமானது என்ற சிந்தனை இருக்குமட்டும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் மட்டுமல்ல - எந்தத் தேசியக் கட்சியும் கால் ஊன்ற முடியாது. காரணம், தமிழ் மண் தந்தை பெரி யார் அவர்களாலும், திராவிட இயக்கத்தாலும் மேலே கூறப் பட்டுள்ள உணர்வுகளால் செழுமைப்படுத்தப்பட்ட மண்!

    இப்பொழுதுகூட பி.ஜே.பி. என்ற தேசிய கட்சி - தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும்கூட - இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும்.

    ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ம.தி.மு.க. பொதுச்செய லாளர் ஒன்று கூறுகிறார் என்றால், மறுநாளே பி.ஜே.பி. சார்பில் உடனே மறுக்கப்படுகிறது - இந்த நிலையில் உள்ள வர்கள் எத்தனை நாள்களுக்கு கைகோத்து நிற்பார்கள்? தவளை - எலி கால்களைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்த கதைதானே!

    காங்கிரசின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த தி.மு.க. ஏன் விலக நேரிட்டது? ஈழத் தமிழர்ப் பிரச்சி னையில் காங்கிரஸ் நடந்துகொள்ளும் எதிர்மறையான அணுகுமுறைதானே அதற்குக் காரணம்!

    இன்னொன்றையும் இதில் கவனிக்கவேண்டிய ஒன்று; தேசியக் கட்சிகள் என்பவை மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் ஒரு அணுகுமுறை - வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் மாறுபட்ட அணுகுமுறை கொண் டவை என்பதைத் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது எந்த வகை நேர்மையைச் சார்ந்தது?

    இந்தத் தன்மையில் உள்ள தேசியக் கட்சிகள் மாநிலத் தில் தலைமை தாங்கவேண்டும் என்று கூறுவது நல்லெண் ணத்தின் அடிப்படையில் இல்லை என்பது நிதர்சனமாகும்.

    சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது என்பதுபோல தினமணி தலையங்கம் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைக் கூறுகிறது.

    தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.

    இப்படி ஒரு கூட்டணி அமைந்து, அது தொடர்ந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாத பி.ஜே.பி.,க்குப் பலன் கொடுக்கும் என்ற தந்திரத்தில் கூறப்பட்ட கருத்து இது.

    பல நேரங்களில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்த தமிழ்நாட்டுக் கட்சிகள், அடுத்த கட்டத்தில் அதனால் பலன் இல்லை என்று கைவிடப்பட்டதுண்டு; அதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. போட்டி யிட்ட அத்தனை இடங்களிலும் கட்டிய பணத்தைக்கூட (டெபாசிட்) திரும்பப் பெறவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால், தினமணி எழுதிய தலையங்கத்தின் தந்திரமும், உள்நோக்கமும் என்ன என்பது எளிதில் விளங்கிவிடுமே!

    Read more: http://viduthalai.in/page-2/77666.html#ixzz2xDJSKYZ9

    தமிழ் ஓவியா said...


    சொத்துக் குவிப்பு


    ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

    ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

    1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் நிலங் களை வாங்கியுள்ளார்.

    2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

    ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

    1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

    2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

    3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

    4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

    5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம், வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

    6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம்

    7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

    8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

    9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

    10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

    25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

    அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

    சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

    - - குடந்தை கருணா

    Read more: http://viduthalai.in/page-2/77670.html#ixzz2xDJd8xEl

    தமிழ் ஓவியா said...


    நம் கடமை


    நாளைய ஆட்சியாளர்களாக மாறத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறா கா(லி)விக் கும்பலின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்தாலே போதும். நாட்டை இவர்களிடம் ஒப்படைத்தால் என்ன நடக்குமென்று.

    போன வாரத்தில் பீகாரில் சத்ருகன் சின்கா என்னும் இந்தித்திரைப்பட நடிகர் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற பொழுது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர்களை நையப்புடைத்து மிதிமிதியென்று மிதித்து எறிந்ததை பாஜக ஆதரவு செய்தித் தாள் கள் கூட மறைக்க முடியாமல் அந்தக் கொடுமையை நிழற்படமாக வெளியிட்டன.

    இதே போல் வாரணாசியில் நரேந்திர மோ(ச)டியை எதிர்த்துபோட்டியிட முடிவு செய்து வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த கெஜ்ரிவால் அவர்களை இதே காவி ஆதரவுக்கூட்டம் அழுகிய முட்டைகளையும், கறுப்பு மய்யையும் வீசி தங்களது வழக்கமான இயல்பை வெளிப்படுத்தியுள்ளன.

    ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கை யில் ஈடுபடுபவர்கள், நம்முடைய கொள் கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் மதிக்க கற்றிருக்க வேண்டும்.

    ஆனால் இவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்களே மசூதியை இடிப் பதற்கும் மதக்கலவரங்களை தூண்டி நடத் துவதற்கு காரணமானவர்களாக இருக்கும் பொழுது அவர்களை தலைவர்களாக ஏற்று பின்பற்றும் தொண்டர்கள் எப்படியிருப் பார்கள்?

    காவி வேடதாரிகளின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்டத் தலைவர்கள் செய்தி ஊடகங் களின் விவாத அரங்குகளில் பங்கேற்கும் பொழுது மாற்றுக்கருத்து கொண்டவர்களை பேசவிடாமல் தாங்களே ஆக்கிரமித்து கொண்டு கத்துவதும் மற்றவர்கள் மதிக்கும் தலைவர்களை, சிந்தனையாளர்களைப் பற்றி தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தும் இவர்கள் ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாதவர்களோ என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

    தங்களை எதிர்த்து யாரும், எதுவும் சொல்லக்கூடாது, செய்யக்கூடாது, அப்படிச் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் செய் வது கடைந்தெடுத்த பாசிசம் அல்லவா?

    எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆட்சி அதிகாரத்தை இவர்களிடம் ஒப் படைத்தால் நாடு என்னென்ன அவலங் களைச் சந்திக்க நேரிடும் என்பதை வாக் காளர்கள் நன்கு உணர்ந்து தங்களின் தேர்தல் கடமையை ஆற்றிடவேண்டும். தங்களிடம் உள்ள வலிமையான வாக்குச் சீட்டை வீண் ஆடம்பரங்களுக்கும், விளம் பரங்களுக்கும், மெய்போல் தோன்றிடும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கும் மதவெறியைத் தூண்டும் வீண் உணர்ச்சி களுக்கும் மயங்கித் தவறாகப் பயன் படுத்தாமல், நாட்டின் நாளைய வளர்ச்சிக்கு உறுதுணையாக சமூகநீதியை, உண்மை யான மதச்சார்பின்மையை கட்டிக்காப் பாற்றும் அணிக்கு ஆதரவாக தவறாது பயன்படுத்துங்கள்.

    - இசையின்பன்,
    சென்னை

    Read more: http://viduthalai.in/page-2/77669.html#ixzz2xDJwMGLI

    தமிழ் ஓவியா said...


    சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஒருநாள்


    சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை பட்டியல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், அய்ந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால், பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

    * காலை 6 மணி: நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். (அதாவது அய்.எஸ்.எஸ் ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும்.

    * காலை 7 மணி: உடல் நலம் பேணல், காலை உணவு, பல் துலக்குதல். பற்பசையால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

    * காலை 7.30 மணி: கான்பெரன்ஸ் அய்.எஸ்.எஸ் இல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக் கான கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்சி னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர் களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப் படுகின்றன.

    * காலை 8 மணி: பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்சினைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள்.

    இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள். இப்படி தினமும் இரவு 10 மணி வரையில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

    Read more: http://viduthalai.in/page-7/77686.html#ixzz2xDL7az79

    தமிழ் ஓவியா said...


    அவசியம்

    மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

    Read more: http://viduthalai.in/page-2/77716.html#ixzz2xIzcNjzj

    தமிழ் ஓவியா said...


    சிந்தனைத் துளிகள்!

    நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.

    - தந்தை பெரியார்

    கருத்து வேற்றுமை என்றால் பகைமை என்று அர்த்தமல்ல. அது பகைமை என்றால் நானும் என் மனைவியும் பெரும் பகைவர்களாகி விடுவோம். உலகத்தில் அபிப்பிராய பேதமில்லாத இரண்டு மனிதர் களைப் பார்த்ததில்லை. என்னோடு கருத்து வேற்றுமை கொண்டவர்களை என் நெருங்கிய நண்பர்களைப் போல் பாவிக்கின்றேன்; இனியும் அப்படியே செய்ய முயற்சிக் கிறேன். ஏன், அதுதானே நியாயம்!

    தமிழ்நாட்டின் உண்மையான நலனைப் பாதுகாக்க நான் முயற்சிப்பேன். வடக்கத்தியவர்களை விட தென் நாட்டினர் ஒழுக்கமாகவும், அமைதியாகவும் நடந்து கொள்ளும் பண்பாடு உடையவர்கள்.

    - காமராஜ் (28.8.1954இல் பொதுக் கூட்டத்தில்(மதுரை) புரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் அக்கறை இல்லை; அவர்கள் பிதற்றட்டும். ஜாதி என்பது சமூக ஏற்பாடு என்பதில் சந்தேகமே இல்லை. அந்த ஸ்தாபனம் தன்னுடைய வேலையைச் செய்த பின்னர் இப்போது அழுகி நாறுகிறது. இந்தியாவின் ஆகாய ஒளியால் அந்த நாற்றம் நாறிக்கொண்டே இருக்கிறது.

    - விவேகானந்தர்

    ஆலயத் திருடர்கள்!

    நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

    - மார்ட்டின் லூதர்

    வாழ்நாள் துன்பம்

    விழித்தவனுக்கு இரவு நீடித்திருக்கும்; அயர்ந்த வனுக்குப் பிரயாணம் சலிப்பாக இருக்கும். அதுபோல உண்மை உணர்ச்சி இல்லாத அறிவீனனுக்கு வாழ்நாள் துன்பமாக இருக்கும்.

    - புத்தர்

    Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1EmYpr

    தமிழ் ஓவியா said...

    மதத்தீக்கு பலியான நாத்திக வீரன் கியடானோ புருனோ

    பிப்ரவரி 17ஆம் தேதி 1600ஆம் ஆண்டு சோகம் தோய்ந்த இரவு. அன்று தான் இத்தாலியின் தலை சிறந்த தத்துவஞானியான புருனோ மதக் கிறுக்கர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். காம்ப் டீ பியோரி என்ற நாற்சந்தி வாடிகன் நகரிலுள்ளது.

    இந்த இடத்தில் புருனோ உயிரோடு துடிக்கத் துடிக்க எரித்துக் கொல்லப்பட்டான். போப்பின் ரோம் நாட்டு நீதிமன்றம் புருனோ ஒரு மத விரோதி; அவன் நாத்திகன் என்று கூறி இந்தக் கடுமையான தண்டனையை அந்த மாவீரனுக்கு வழங்கியது.

    அண்டம் நுண்ணிய பல அழிக்க முடியாத அணுக்களால் ஆனது. இதற்கு எல்லைகள் கிடையாது. கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் வெவ்வேறு புது அணுக்களாக உருவெடுக்கின்றன. பொருளும், அசைவு சக்தியும் அண்டத்தில் இருக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை அன்றே கண்டறிந்து கூறினார் புருனோ.

    பைபிளை எக்காரணத்தாலும் விஞ்ஞான நூல் என்று கருதமுடியாது. வால் நட்சத்திரங்கள் மனித இனத்தின் மேலுள்ள கோபத்தை வெளிப்படுத்த கடவுளின் ஆயுதங்களில் ஒன்று என்று கூறிய மத குருமார்களின் கருத்து மூடநம்பிக்கை என்று கூறி மக்களிடையே விளக்கினார். இயற்கையின் உண்மைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்வதால் ஏற்படுவது தான் உண்மையான அறிவு என்றார் அவர்.

    இயேசுநாதரின் உடலும் இரத்தமும் தண்ணீரிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதும் மோட்சம், நரகம் உண்டு என்பதும் பொய் என்று புருனோ கூறுகிறார். இது கடவுளுக்கு விரோதமானது என்பதுதான் அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

    மன்னிப்புக் கேட்டு கருத்தை மாற்றிக் கொள்ள மறுத்து, இறுதிவரை நாத்திகராக இருந்து, நாத்திக கொள்கை களுக்காக உயிர்த் தியாகம் செய்த புருனோவை நாத்திக உலகம் என்றும் நினைவில் கொண்டிருக்கும்.

    Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1Nb4oD

    தமிழ் ஓவியா said...

    காண்டேகர் பேசுகிறார்!

    உலகம் வெள்ளத்தோடு கூடவே ஓடிக்கொண்டு போக வேண்டியதுதான். அந்த வெள்ளம் அதை எங்கோ கொண்டு போய் விட்டாலும் சரியே. உடை, கல்வி, விவாகம், உணவு எந்த விஷயத்திலும் பார்த்தாலும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள். வெள்ளத்துக்கு எதிர் திசையில் நீந்துவதுதான் வாழ்க்கை என்ற கற்பனை அவர்களுக்குப் புரிவது கூட இல்லை.

    மனிதர்கள் கிழவர்கள் ஆகி விட்டால் வேதாந்தத்தை விரும்புகிறார்கள். வேசியும், கிழவி ஆகிவிட்டால் வேதாந்தத்தைப் பற்றி பேச ஆவல் வருகிறது.

    நாணயம், ஒழுக்கம், அன்பு, பக்தி, மனுஷத்தனம் இவை யாவும் புத்தகத்திலுள்ள சொற்கள். வாழ்க்கையில் இவை யாருடைய அநுபவத்திற்கும் வருவதில்லை.

    Read more: http://viduthalai.in/page-7/77742.html#ixzz2xJ1UMnoa

    தமிழ் ஓவியா said...


    இந்து மதம் பற்றி...!


    இந்தியாவில் ஜைன மதமும் புத்த மதமும் தோன்றிய பின்பும் கூட வேதங்களில் வேரூன்றிய புரோகித மதம் அடியோடு அழிந்து விடவில்லை. சிறிது காலத்திற்கு அது அரசர்களின் ஆதரவை இழந்த போதிலும், ஆட்சியாளரின் கவர்ச்சியை இழந்து விடவில்லை. பழைய கடவுள்களை மறப்பதும், புதிய கடவுள்களைத் தோற்றுவிப்பதும், விசித்திரமான வழிபாட்டு முறைகளை உண்டாக்குவதும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாறிக் கொண்டே வந்தன.

    ஆயினும், இந்து மதத்தின் ஜாதி அமைப்பு முறையும், புரோகிதத் தன்மையும் சிறது கூட மாறவே இல்லை. இந்து மதத்தைப் பற்றி விளக்குவது கிட்டத்தட்ட முடியாத காரியம் உண்மையில் அதை ஒரு மதம் என்று சொல்வதை விட மத - சமுதாய அமைப்பு என்று சொல்வதே பொருத் தமாகும்.

    இந்த மதத்தில் மதக் கோட்பாடுகள், தத்துவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவை மலிந்திருந்தாலும், சாதி அமைப்பு முறையே மேலோங்கி நிற்கிறது. பண்டைய மத - சமுதாயச் சட்டங்கள் கடினமாக இறுகி விட்டதால் இன்று கூட அவை அழிக்க முடியாதவைகளாக இருக்கின்றன.

    புத்த மதத்தின் செல்வாக்கு உச்ச கட்டத்தில் இருந்த போது தான் மனு தர்ம சட்டத் தொகுப்புகள் பல உண்டாக்கப்பட்டன. இந்து மத நம்பிக்கையிலிருந்து யாரும் விலகிச் செல்லாமலிருக்க சட்டமெனும் சுவர் எழுப்பப்பட்டது. இந்து மதத்தின் அடிப்படையே ஜாதி வேறுபாடுகளாக இருந்ததால், சட்டம் இயற்றியவர்கள் அந்த ஜாதி வேறுபாடுகள் அழியாமல் இருப்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

    உலகத்தின் நன்மைக்காக பார்ப்பனர்கள் உயர்ந் தவர்கள் என்றும் பாட்டாளிகள் தாழ்ந்தவர்கள் என்றும் சொர்க்கத்தின் கட்டளையாக நிலை நாட்டப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு வரை, ஒரு மனிதனுடைய சாதி அவனுடைய மூச்சைப் போல விட்டு விலகாமல் இருந்தது மரணத்திற்கு பின் மண்ணிலே புதைக்கப்படும் போது மூச்சு அவனை விட்டு விலகிய போதிலும், ஜாதி அவனை விட்டுப் பிரியவே இல்லை.

    ஆதாரம்: லூயி ஃப்ரவுன் எழுதிய திஸ் பிலீவிங் ஒர்ல்ட் (இந்த நம்பும் உலகம்)
    தகவல்: வீ.து.சச்சிதானந்தன்

    Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1cNiIC

    தமிழ் ஓவியா said...

    கேரளாவில் ஒரு ஆணை

    கேரளாவில் அச்சுத மேனன் முதல்வராக இருந்த பொழுது (அக்டோபர் 74) கீழ்க்காணும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதினால் வகுப்பு கலவரங்களுக்கு வித்திடக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.



    எனவே, இந்த மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த உத்திரவு அரசாங்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும்

    Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1nMBZ3

    தமிழ் ஓவியா said...

    பூனைச் சகுனம்!

    மூடநம்பிக்கைகளில் குரங்குப் பிடியாக இருப்பவர் சாம்பசிவம் அவர் வீட்டை விட்டு எங்கேனும் வெளியே புறப்பட்டு விட்டாரென்றால், பூனைச் சகுனம் பார்த்துக் கொண்டுதான் போவார்.



    வீட்டு வாசலை விட்டு இறங்கும்போதோ, தெருவில் நடந்து செல்லும் போதோ பூனை குறுக்கே போய்விட்டால் போதும் - அடுத்த அடி வைக்காமல் - போகவேண்டிய காரியத்துக்குப் போகாமல் அப்படியே வீடு திரும்பி விடுவார். மறுநாள்தான் குறிப்பிட்ட காரியத்திற்குப் போவார்.

    அடுத்த வாரம் தீபாவளி, நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள் ளைகளுக்கும், மகளுக்கும் புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும். சாம்பசிவத்தின் கையில் சல்லிக் காசுக் கூட இல்லை. தமது நண்பரின் ஜவுளிக்கடையில் கடன் சொல்லி, துணிமணிகள் எடுத்து வரலாமென்று கடையை நோக்கிச் செல்கிறார் சாம்பசிவம்.

    கடனுக்கு ஜவுளி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதை பதைப்பு அவர் மனத்தில். இந்த லட்சணத்தில் பூனை வேறு வந்து குறுக்கே பாய்ந்து விடுகிறதோ என்ற பயமும் சேர்ந்து விட, துவண்ட நடையுடன் சென்று கொண்டி ருக்கிறார்.

    சீ! சனியன்! பயந்தபடியே நடந்து விட்டது - கறுத்த பூனை - பாவம்! சாம்பசிவத்தின் காலுக்கு முன்னால் எவ்வளவு இளக்காரமாக குறுக்கே பாய்ந்து செல்கிறது.... சாம்பசிவத்துக்கு மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது!

    சிலையாக நின்றவரின் கண்ணுக்கு முன்னால் - பத்தடி தூரத்தில் தெருவுக்கு நடுவே பளிச்சிட்டுத் தெரிகிறதே - அது என்ன? நூறு ரூபாய் முழுநோட்டு! யாரோ ஒரு துரதிருஷ்டக்காரன் போட்டுவிட்டுப் போனது போலிருக்கு! அவர் மனதில் ராக்கெட் வேகத்தில் ஒரு போராட்டம் ஒரு வாரத்தில் தீபாவளிப் பண்டிகை... துணிமணிப் பிரச்சினை...

    அடுத்து மின்னல் போன்று மனதில் ஒரு உந்துதல் பூனை குறுக்கிட்டால் ஒரு அடிகூட எடுத்து வைக்காத சாம்பசிவம், இப்போது பல அடிகள் எடுத்து வைத்துவிட்டார் - அந்த நூறு ரூபாய் நோட்டை நோக்கி!

    - எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத் - 5

    Read more: http://viduthalai.in/page-7/77741.html#ixzz2xJ1xnVZv