Search This Blog

16.3.14

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரா? நீதிமன்றத் தீர்ப்பு என்ன?

கோட்சேவை ஆர்.எஸ்.எஸ்., என்று சொல்லலாம் இதோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு!

காந்தியாரைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் - ஆர்.எஸ்.எஸ்தான் பிஜேபியை வழி நடத்துகிறது  என்று காங்கிரஸ் துணைத் தலைவர் இராகுல்காந்தி கூறி விட்டாராம்! கடந்த மார்ச்சு 9ஆம் தேதி  பாரதீய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம்  ஆர்.எஸ்.எஸ் மீது காந்தி கொலைக் குற்றத்தை சுமத்தி அதன் மூலம் ராகுல் காந்தி அரசியல் செய்ய நினைக்கிறார் என்ற புகார் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மீதான குற்றச்சாட்டை காங்கிரஸ் தன்னுடைய இணையதளத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே விரிவாக எழுதியுள்ளது,  காந்தியின் கொலைக்கு பிறகு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடைசெய்தார், மேலும் அந்த அமைப்பைச் சமூகவிரோத அமைப்பு என்றும் கூறியுள்ளார் எனஅந்த இணைய தளம் கூறுகிறது.

ஆனால் மராட்டிய மாநிலம் தானேவில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இந்த விவகாரத்தை ராகுல்காந்தி மீண்டும் பொதுவில் கொண்டுவந்து பேசினார். எந்த ஆர் எஸ் எஸ் அமைப்பு தேசத்தந்தை காந்தியை கொலை செய்ததோ அதே அமைப்பின் அரசியல் பிரிவு பிறகு இன்று தேசத்தை காக்க தங்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மக்களிடம் மன்றாடுகிறது என்றார் ராகுல்காந்தி.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும் என்று பாரதிய ஜனதா கூறியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராம் மகாதேவ் இது குறித்து சமூக வலைதளத்தில் ராகுல் காந்தியின் இப்பொறுப்பற்ற குற்றச்சாட்டு மற்றும் தேர்தல் நேரத்தில் எங்களைக் களங்கப்படுத்தும் நோக்கில் பேசியதற்கு நாங்கள் எழுத்துமூலமாக புகார் அளித்து விட்டோம். இது குறித்து தேர்தல் ஆணை யம் விசாரிப்பதாக எங்களுக்கு பதில் அளித்துள்ளது.

இந்தப் புகார் குறித்து காங்கிரஸ் கூறும்போது, காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் என்பது நாடறிந்த உண்மை, ஆர்.எஸ்.எஸின் அமைப்பு காந்தி கொலைக்கு திட்டமிட்டு அதில் ஈடுபட வேண்டியவர்கள் கூட அந்த அமைப்பின் விதிப்படி சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.   அதே நேரத்தில் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அப்போதே தடைசெய்தார், தேசத்தந்தை காந்திகொலை என்பது ஒரு தேசத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது போன்றதாகும் என்றார்.

ஆனால் பாரதீய ஜனதா எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல்  சர்தார் வல்லபாய் படேலை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் போன்ற மாயையை ஏற்படுத்தி, தங்களின் கட்சி முக்கிய தலைவர்களுள் ஒருவராக அவரை ஆக்கிவிட முயல்கிறது. சர்தார் வல்லபாய் படேல் நேருவிற்கு எழுதிய கடிதத்தில் தேசத்தின் எதிர்காலத் திற்கு மிகவும் அச்சுறுத்தலாக ஆர்.எஸ்.எஸ் விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

காந்தி கொலை செய்யப்படலாம் என்று பல முறை கூறியுள்ளார், மேலும், ஆர்.எஸ்.எஸ் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளார். இதை ஆதாரப்பூர்வமாக எங்களது (காங்கிரஸ்) இணையதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். இதை மேற்கோள் காட்டித்தான் ராகுல் காந்தி பேசியுள்ளார் என்று கூறியது.   பாரதீய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவில் ராகுல் காந்தி எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இவரது இந்த பேச்சு மக்களிடையே பாரதீய ஜனதா கட்சியின் மீதான நம்பிக்கை குலைந்துவிடும் வகையில் உள்ளது. அவர் தொடர்ந்து ஆதாரமில்லாமல் எங்கள் கட்சிமீதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதும் இவ்வாறு போலியான குற்றச் சாட்டுகளை கூறிவருவது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும். மேலும் பாரதீய ஜனதா கட்சியில் வெளியிட்ட குறிப்பில்  பாரதீய ஜனதா மற்றும் ஆர். எஸ்.எஸ் எந்த வகையிலும் காந்தி கொலைக்கு பொறுப்பேற்காது என்று கூறியுள்ளது.
உண்மைதான் என்ன? காந்தியாரைக் கொன்ற நாது ராம்கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்றால் - அவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன்? இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று சொல்லி தப்பிவிட முயல்கின்றனர்.
சரி, இந்து மகா சபைக்கும் ஆர்.எஸ். எசுக்கும் அடிப்படையில் என்னதான் வேறுபாடு?

இந்த இரண்டு அமைப்புகளும் பின்னே இணைந்து விட்டனவே - இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸையும், இந்து மகாசபையும் வேறு வேறு  என்று பெயர் அளவில் சொல் லலாமே தவிர, அடிப்படையில், சித்தாந்தத் தில், நோக்கத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?

தன்னை ஆர்.எஸ்.எஸ். என்று கோட்சே நீதிமன்றத்தில் சொல்லாததற்குக் காரணம் அந்த அமைப்பைக் காப்பாற்றத் தான் - கோட்சேயின் குருநாதரான வீடி சாவர்க்கார் அறிவுறுத்தியதன் பெயரில்தான் கோட்சே அவ்வாறு கூற நேர்ந்தது என்று கோட்சேயின் தம்பியும் - காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்தவனுமான கோபால் கோட்சே சொன்னதை பி.ஜே.பி.யினர் வசதியாக மறந்தார்களா?  மறைக் கிறார்களா?
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை என்பது கிடையாது. அடையாள அட்டையும் கிடையாது. ஏன் தெரியுமா? வன்முறையில் ஈடுபடும் அந்த அமைப்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்வ தற்காகவும், எந்த வகையிலும் அவர்கள் அடையாளம் காணப்படக் கூடாது என்ற தந்திரத்திலும்தான் இந்த நடைமுறையை வைத்துள்ளனர். கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று எளிதாகச் சொலலித் தப்பிக்க முடிவதற்கு இந்த அமைப்பு முறைதான் காரணமாகும்.

இந்த நிலையில் கோட்சே ஆர்.எஸ்.எஸ். தான் என்பதற்கு அவனது குடும்பத்தினர் குறிப்பாக அவனது தம்பியும், காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றவருமான கோபால் கோட்சேயின் சாட்சியத்தைத் தானே முதன்மையானதாக - முக்கிய மானதாகக் கருத வேண்டும்.
இந்துக் குடும்பத்தின் ஃப்ரண்ட் லைன் இதழ் (28.1.1944) கோபால் கோட்சேயிடம் பேட்டி கண்டு, உண்மையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து விட்டதே!
அந்த இதழுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? அந்த இதழ்க் குடும்பத்தின் மூத்த பிள்ளையான இந்து ஏட்டுக்கு மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்றல்லவா பெயர்? அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இதழ் கூறுவதை எந்த வகையில் எதிர் கொள்ளும் பிஜேபி?

கேள்வி: Were you a Part of RSS?

பதில்: All the brothers were in the RSS. Nathuram, Dattatreya, Myself and govind. You can say we grew in the RSS rather than in our home. It was like family to us.

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா?

கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்).

கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள்? நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை - காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லுகிறாரே. இதற்கு என்ன பதில்? தூக்குத் தண்டனை பெறாததால் கோபால் கோட்சேக்குப் போனஸ் மார்க்குக் கொடுக்கப் போகிறார்களா?

கேள்வி: Nathuram Stayed with RSS. He did not Leave it?
பதில்: Nathuram had become baudhik Karyavah (intellectual works) in the RSS. He has said in his statement that he left the RSS. He said it because Golvalkar and the RSS were in a lot of  trouble after the murder of Gandhi. But he did not leave the RSS

கேள்வி: நாதுராம் ஆர்.எஸ்.எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேற வில்லையா?

கோபால் கோட்சே பதில்: ஆர்.எஸ். எஸில் ஒரு பவுதிக் காரியவா (அறிவுப்பூர்வப் பணியாளர்) ஆக இருந்தார் நாதுராம் கோட்சே. ஆர்.எஸ்.எஸை விட்டு தான் விலகியதாக அந்த அறிக்கையில் (காந்தியார் கொலை வழக்கின்போது நாதுராம்கோட்சே அளித்த அறிக்கையில்) அவர் குறிப்பிட்டு இருந்தார். காந்தியார் கொலை செய்யப்பட்டு இருந்ததைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எசுக்கும்  கோல்வால் களுக்கும் பெரும் நெருக்கடி, பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக அவர் அப்படிக் குறிப்பிட நேர்ந்தது. ஆனால்  உண்மையில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எசை விட்டு விலகவேயில்லை)

ஆர்.எஸ்.எஸாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வக்காலத்துப் போட்டு வாதாடும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் கூடாரமான பி.ஜே.பி.யாக இருந்தாலும் சரி, சங்பரிவார் வட்டாரமாக இருந்தாலும் சரி, நாதுராம் கோட்சேயின் உடன் பிறப்பின் இந்தப் பேட்டியை மறுத்து இதுவரை கருத்துத் தெரிவித்ததுண்டா?
கோபால் கோட்சே பேட்டி வெளிவந்து 20 ஆண்டுகள் ஓடி விட்டன; அதற்கு ஒரே ஒரு வரிகூட பதில் சொல்ல வக்கில்லாத வர்கள், இன்றைக்கு ராகுல்காந்தி அதே குற்றச்சாற்றை வைக்கும்போது வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வானேன்?

இன்னொரு முக்கிய சாட்சியம் - காந்தியாரின் தனிச் செயலாளர் திரு.வி. கல்யாணம் அவர்கள். காந்தியார் சுடப்பட்ட போது சில அங்குலங்கள்தான் பின்னாலே நின்று கொண்டு இருந்தார் அவர் தெகல்கா (4.9.2004)க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளாரே!

நாட்டுப்பிரிவினைக்குப் பின் பாகிஸ் தானுக்கு இந்தியா ரூ.50 கோடி கொடுப் பதை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் விரும்ப வில்லை. அந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். 

முஸ்லீம்களை காந்தியார் தாஜா செய்வதாக ஆர்.எஸ். எஸ்.காரர்கள் குற்றஞ்சாட்டினார்கள். கோட்சே ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆர். எஸ்.எஸ்.காரர்கள்தான் ஓர் கொடுமையான கொலையைச் செய்தார்கள் - சந்தேகமே வேண்டாம் என்று கூறினாரே!

அந்தத் தகவல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வட்டாரம் பதில் கூறியதுண்டா?

ஆர்.எஸ்.எசுக்கும்; நாதுராம் கோட்சேக்கும் சம்பந்தம் இல்லை என்று அத்வானி கூறுகிறாரே என்ற கேள்விக்குக் கோபால் கோட்சே சவுக்கடி பதில் கொடுத்தார்.

இது கோழைத்தனமானது - அவரது கூற்றை நான் மறுக்கிறேன் - போ, காந்தியைக் கொல்லு! என்று ஆர்.எஸ். எஸ். தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எசுக் கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது. இந்து மகாசபை அப்படிக் கூறியது. ஆனால் ஆர்.எஸ்.எஸின் பவுதிக்காரியவா ஆக இருந்தபோது, 1944இல் இந்து மகாசபையில் நாதுராம் பணியாற்றினார் என்று அத்வானிக்கு அறிவார்ந்த முறையில் கோபால் கோட்சே பதிலடி கொடுத்தாரே.
அதற்கெல்லாம் எப்போழுதுமே பதில் சொல்ல முடியாதவர்கள்  - பரிதாபம் இப்பொழுது புலம்புகிறார்கள்.

கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லக் கூடாது  என்று வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அப்படி சொல்லலாம் - சொல்லுவதில் தவறு கிடையாது என்று  நீதிமன்ற தீர்ப்பே இருக்கிறது என்ற தகவல் தெரியுமா ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்துக்கு? (பெட்டிச் செய்தி காண்க).

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது அவமதிப்பு குற்றமல்ல: உயர்நீதிமன்றத் தீர்ப்பு
புதுடில்லி, 25-5-2007அன்று காந்தியார் கொலை செய்யப்பட்டது பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டு, ஆர்.எஸ்.எஸ் . இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலைகாரரான நாதுராம் விநாயக கோட்சே என்றும் வெளியிட்டமைக்காக இந்தியா டுடே ஏட்டின் அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி, புல்லர் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா டுடே ஏட்டின் முதன்மை ஆசிரியர், ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந்திருந்தார்.

இதனை ஏற்று மேற்கண்ட மூன்றுபேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடினார். செய்திக்கட்டுரை அவமதிப்பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை குறைகூறி எதுவும் எழுதப்பட வில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்று கொண்டார்.

கட்டுரையைப் படித்துப் பார்த்தால் நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ். எஸ்.காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்ற வர்களும் உயர்ந்து நின்றாலும் பிற்காலத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர். அந்த வகையில் கோட்சேயைப் பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்கமானதே.

அப்படி ஆராயும்போது, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தினைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப்பட்டுள்ளன என நீதிபதி குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ்.இன் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட்டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிக் கையாளர்களுக்கு வழங்கப்படட அழைப்பாணையையும் ரத்து செய்து ஆணையிட்டார்.
ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதிமன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவ தூறானது எனக் கூறுவார்கள் என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           --------------------------"மின்சாரம் அவர்கள் 15-3-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

38 comments:

தமிழ் ஓவியா said...


இந்து மதத்தில் பெண்கள் நிலை?


1. ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத்தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே - காம வேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.

3. இந்த உலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதினால்தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள். - மனு 2-213.

4. பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே. - பாரதம் அனுசான்ய பருவம்

5. பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவை எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. - பாரதம் 43-22.

6. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது - மனு 9-15

7. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ, யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். - பாகவதஸ்கந்தம் 4-14-42

Read more: http://viduthalai.in/page2/76953.html#ixzz2w55Ze23e

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஆகும். வெறும் மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல் என்பதோடு மட்டுமின்றி மற்ற பல அரிய வசதி களையும் இதில் நாம் பயன்படுத்த முடியும். எல்லாமே மின்னஞ்சலுடன் தொடர்புடையது என்ற போதிலும் மற்ற மின்னஞ்சல் சேவை தளங் களில் இவற்றை நாம் பயன்படுத்தும் வசதி இல்லை. அவற்றை பற்றி பார்ப்போம்.

1. ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?
நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம். சில நேரங் களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்கா விட்டால், கல்யாணத்துக்கு வரச் சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்). இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? அந்த வசதி பற்றிய பதிவு தான் இவை.

2. From Address மாற்றி மின்னஞ் சல் அனுப்புவது எப்படி?
மேலே உள்ள பதிவில் ஒரு மின்னஞ் சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப ண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இவை.

3. To, Cc, Bcc என்ன வித்தியாசம்?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் அய்டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc அவற்றை பற்றிய பதிவு To, Cc, Bcc – என்ன வித்தியாசம் என்பதாகும்.

4. Gmail ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

இணையத்தில் இன்று பெரும்பா லான பயனர்கள் பயன்படுத்தும் இமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை Gmail /ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts என்ற பதிவில் காணலாம்.

5. Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?
நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களி டம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படிGmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றிய பதிவு ஆகும்.

6. Attach செய்ய முடியாத File-களை Attach செய்வது எப்படி?

நண்பர்களுக்கு ஏதேனும் File -களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழி பற்றிய பதிவாகும்.

7. பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர் கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத் திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக் கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு.

இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை கிநீநீமீ செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக் கும் அல்லவா? எப்படி என்பதை சொல்லும் பதிவு தான் இது.

8. ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பல வற்றின் அர்த்தம் தெரியாமல் இருப் போம். அதே ஜிமெயில் முழுவ தையும் தமிழில் மாற்ற முடிந்தால்? இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். எப்படி செய்வது என்பதை ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவில் அறியலாம்.

9. ஜிமெயிலில் Undo Time Limit - அய் அதிகரிப்பது எப்படி?
ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படு கிறது. அதே போல ஒரு மின்னஞ் சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit – அய் எப்படி அதிகரிப் பது என்ற பதிவுதான் இது.

Read more: http://viduthalai.in/page3/76957.html#ixzz2w55mo3g6

தமிழ் ஓவியா said...


மதம் ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறியைக் கொண்டது! ஹாலிவுட் நடிகர் சாட்டை!

ஹாலிவுட் நடிகராகிய கிறிஸ் ஓடவ்ட் மதம் குறித்து கூறும்போது, மதமானது பிறரைத் தாக்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி கொண்டதாகும் என்றார்.

பிரைய்ட்ஸ்மெய்ட்ஸ் படத்தின் நாயகன் கிறிஸ் ஓடவ்ட் அவருடைய நாத் திகக் கண்ணோட்டத்தில் இவ்வாறு கூறு கிறார். ஆனாலும், அவருடைய இளமைக் காலங்களில் குறைந்த சுதந்திரத்துடன்தான் இருந்ததாகக் கூறுகிறார்.

இப்போது மதக்கோட்பாடுகள் மனிதனின் வளர்ச்சியை முடக்குகின்றன. வெள்ளை மாளிகையிலிருந்து அவர் இனத் தைச் சேர்ந்த கிறித்துவ மதவாதிகளைத் திருப்திபடுத்த எல்லைகளைக் கடந்து கிறித்துவத்தின் மீதான செயலைச் செய்வ தாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாமீது குற்றம் சாட்டுகிறார். கிறிஸ் ஓடவ்ட் மதம் சொல்லும் இயற்கைக்கு மேலானதாக சொல்லப்படும் கடவுள் மீதான நம்பிக் கையை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.

கிறிஸ் ஓடவ்ட் பிரிட்டிஷ் ஜிக்யூ என்கிற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரி வித்துள்ளதாவது: என் வாழ்நாளில் மற்ற வர் விருப்பத்தினுள் நுழைவதில்லை என்று இருந்துள்ளேன். மற்றவர் நம்பு கின்ற உரிமையை மதிக்கிறேன். கால ஓட் டத்தில் மதக்கருத்துக்களின் அழுத்தங் களால் சுதந்திர சிந்தனை குறைவதாகக் கருதுகிறேன்.

மதக்கருத்துக்கள் உலகைப் பாழ்படுத்துவதைப் பார்த்துக் கொண்டி ருக்க முடியாது, மற்றவர்களும் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதத்தால் இனவெறி ஏற்படும்போது, திருப்பு முனையாக அது தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.

இயற்கைக்கு மேலான தென்கிற மதக் கருத்துகள் பைத்தியக் காரத்தனமானவை என்று கூற அனுமதிக் கா விட்டால் அனைவரையும் பைத்தியக் காரர்களாக ஆக்குகிறார்கள் என்றுதான் பொருள். மத நம்பிக்கையாளரை, கடவுள் நம்பிக்கை உள்ளவரை அமெரிக்க அதிப ராக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆவி உல கில் மனிதன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆவி உலகிற்கே போகட்டும்! பராக் ஒபாமா கடவுள்மீது நம்பிக்கை உள்ளவ ராக எந்தவகையிலும் நான் கருதவில்லை. இவ்வாறு ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஓடவ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/76959.html#ixzz2w56P2uUM

தமிழ் ஓவியா said...

இராமாயணம், பாரதம், வடநாடு, தென்னாடுபற்றி நேரு


டில்லியில் இந்தி பாவலரும் மத்திய சட்டசபை உறுப்பினருமான திரு. ஆர்.எஸ். தினகர் என்பவர் - தாம் அண்மையிலே - தமிழ்நாட்டிலே சுற்றுப் பிரயாணம் செய்து கண்ட மெய்மைகளை விளக்கிப் பேசுகையில், தென்னாட்டிலே இந்தி எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், வடநாட்டார் தென்னாட்டாரை ஆதிக்கம் கொண்டு விடுவர் என்ற அச்சம்தான் என்றும், இத்தகைய திகிலுக்கு அவசியமே இல்லை என்றும் விளக்கலானார்.

இந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராத விதத்திலே பிரதமர் நேரு இடையிட்டு பேசினார். (இராதா) ராமாயண நாடகம் நடத்தப்படுவது பற்றி அவர் குறிப்பிடு கையில் தெற்கிலே நடக்கும் இந்த இயக் கங்கள் மொழித் துறையில் மாத்திரமல் லாது, மற்ற எல்லாத் துறைகளிலும் வட நாட்டு மக்களின் ஆதிக்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தால் தான் நடப்பதாக வும் இக்காலத்தில் மாத்திரமின்றி முற் காலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாக இருந்தே வடநாட்டார் தென்னாட்டு மக்களை ஆதிக்கம் செலுத்தி சுரண்டி வந் திருப்பதனை நினைவுறுத்தும் சின்னமாக உள்ளது. இந்த இராமாயணம் முதலியன என்றும் எடுத்துக் காட்டினார்.

மேலும், அன்றிரவு இசை அரங்கத் தின் முன்னணிக் கூட்டத்தில் மீண்டும் நேரு இடையிட்டு பேசியதாவது:-

திரு தினகர் என்ன சொன்னாரோ அவ்விஷயம் ஆழ்ந்த ஆலோசனைக்கு உரியதாகும். இத்துறையில் நாம் ஏதாவது தீயதான நடவடிக்கையை எடுத்துக் கொண்டால், நமது சங்கடங்கள் தான் அதிகரிக்கும். எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்தது.

ஆக்கிரமிப்பு ஆதிக்கமாக எண்ணம் ஏற்படச் செய்து விட்டால் அது விபரீத விளைவுகளை உண்டாகச் செய்யும். ஆங்கில ஆட்சியின்போது இந்தி வட்டாரங்கள் இருதய நாடாகவும், மற்ற பகுதிகள் உறுப்பு நாடுகளாகவுமிருந்தன; உறுப்பு நாடுகள் அதிகமாக உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டன. சுதந்திரம் ஏற்பட்ட பின்னர் நிலைமை மாறி விட்டது. இருதய நாட்டின் ஆதிக்கத்தை உறுப்பு நாடுகள் உணர்ந்து கலக்கமடைய நேரிடுவதும் இயற்கையே.

இப்படியிருந்தும் இந்த இருதய நாடு தனது செல்வாக்கை கடும் வேகமாகச் செலுத்த முற்பட்டதால் நம்மைக் கண்டு மற்றவர்கள் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

மொழித் துறையில் மாத்திரமின்றி, உத்தியோகம் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகிய பலவற்றிலும் இந்த பயம் இருப்பது தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் இராமாயண நாடகம் நடத்தப்படுகிறது. இராமாயணத்திலுள்ள குறைபாடுகளை இழிவுக் கருத்துக்களை எடுத்துக்காட்டுகின்றது அது.

இந்த நிலவரம் ஏற்பட்டதற்கு அடிப் படை என்னவென்பதை நாம் கண்டு பிடிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இவ்வித (இழிவு கருத்துக்களை எடுத் துக்காட்டும்) இராமாயணம் நடத்தப் படுவதன் நோக்கம், நாட்டு மக்கள், இந்தக் காலத்தில் மாத்திரமல்லாது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தென்னாட்டு மக்களை ஆதிக்கம் செலுத்தி வந்திருக் கின்றனர்; இப்போதும் அவர்களுக்கு (வடநாட்டார்) வாய்ப்பு ஏற்பட்டால் மறுபடியும் தென்னாட்டாரை ஆதிக்கம் கொண்டு விடுவர் என்று அந்தத் தென் னாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுவதே யாகும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நான் ஒரிசாவுக்குச் சென்றிருந்தேன்.

அப்போது ஏகலைவனைப் பற்றி ஒர சிறு நாடகம் நடத்தப்பட்டதைக் கண் டேன். இது மகாபாரதத்திலுள்ள ஒரு கதை; ஒரு ஏழை குடியானவன் க்ஷத்திரியர்களின் வில்வித்தை ஆசானான துரோணரை அணு கினான்; வில்லம்புகளை உபயோகிக்கும் முறைகளைக் கற்றுக் கொள்வதற்காக. ஆனால் அந்த துரோணரோ வில் வித்தைகளைக் கற்றுக் கொடுக்க மறுத்து விட்டார்;

அந்த ஏகலைவன் க்ஷத்திரியன் அல்ல என்ற காரணத்தால் இருந்தும் அந்தக் குடியானப் பையன் துரோணரைப் போல ஒரு சிலை செய்து வைத்துக் கொண்டு தானே வில் வித்தை களைப் பயின்றான். தன் சொந்த சீடனான அர்ஜு னனை விட இந்த ஏகலைவன் வில் வித் தையில் சிறந்தோனாகி விட்டான் என்று அந்த துரோணர் கேள்விப்பட்டதும், அவர் அவனிடம் சென்று அவன் அந்த வித்தைகளைத் தன்னுடைய (துரோண ருடைய) உருவத்தினிடத்திலிருந்து கற்றுக் கொண்டதால் தனக்கு குருதட்சணை தந்தாக வேண்டுமென்று கேட்டார்.

அவர் கேட்ட குருதட்சணை அந்த ஏகலைவனின் வலது கைக் கட்டை விரலாகும். அந்தச் சிறுவனும் தயங்காது தனது இடது கையால் தனது வலது கை கட்டை விர லைத் துண்டித்து அதை துரோண ருக்குக் கொடுத்தான்; இந்த ஏகலைவன் கதை மகாபாரதத்தில் மிகவும் காரணமான - கடினமான வரலாறாகும்.

நான் இச்சம்பவத்தைப்பற்றி அவ்வள வாக கவனம் செலுத்தவில்லை; ஆயினும் அந்த நாள் முதல் அது என் மனதை உறுத் திற்று கவலை கொள்ளச் செய்தது.

இந்த கதையைப்பற்றி என்னிடம் ஒரு விஷயம் கூறப்பட்டது. அதாவது அந்த ஒரிசாவிலுள்ள மலைவாசிகள் (பழங் குடிகள்) தங்களைப் பிறர் எவ்விதம் அடக்கி ஒடுக்கி சுரண்டி வந்துள்ளனர் என்பதற்கு இந்தக் கதையே ஒரு உதாரண மாகிறது என்று சுட்டிக் காட்டுகின் றனராம்.

இத்தகைய எழுச்சிகளின் நோக்கத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் உண்மை என்னவென்றால் முன் காலத்தில் எழுதப்பட்ட நாட்டு வரலாறு ஒரு பட்ச மாகவுள்ளது.

இக்கால மக்களும் அப் படியே தங்கள் சொந்த முறையில் நிகழ்ச் சிகளை எழுத முற்பட்டுள்ளனர்; இது மற்றவர்களால் சிருட்டிக்கப்பட்டது என்று நாம் நினைக்கக்கூடாது.

இந்தக் கதையை நான் எண்ணும்போது மற்றவர்கள் தங்களுடன் போட்டியிடுப வர்களைத் தடுக்க முற்படும் அந்த மனிதர்கள்மீது என் கோபம் கொந்தளித்து எழுகிறது.

எனவே நாம் இந்தப் பிரச்சினையில் அதிக ஜாக்கிரதையாக கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு மொழி மற்ற மொழிகளை எதிர்ப்பதால் வளமுற முடியும் என்று சிலர் நினைக்கக் கூடும்; இதுமுற்றும் தவறு. ஒரு மொழி தன் சொந்த வலி மையைக் கொண்டுதான் வளமுற முடி யும். மற்ற மொழிகளை எதிர்ப்பதுபோல எதிரிகளுக்குத்தான் உதவி புரிவதாவீர்கள் இந்தியை பிறர்மீது திணிப்பதற்கு நான் உதவியாக இருக்க மாட்டேன்.

இந்தியை வளப்படுத்த வழி அம் மொழியை (இலக்கியத்தை) வளமாக்கு வதேயாகும் - மற்ற மொழிகளையும் பாராட்டுவதேயாகும் இலக்கிய இலக் கணங்களை தன்னுள் கொண்டு விரி வடைய வேண்டும் - புதுமை இலக்கண - இலக்கியங்கள் தீட்ட வேண்டும். இதை விடுத்து திணிப்பிலும் பிறமொழி எதிர்ப் பிலும் ஈடுபடுவது கருதிய பலன் அளிக்கவேயளிக்காது

- விடுதலை 16.12.1954

Read more: http://viduthalai.in/page5/76963.html#ixzz2w56iK3u0

தமிழ் ஓவியா said...


சாக்ரட்டீஸின் பொன் மொழிகள்


தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையைப் பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடிக் கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையைப் பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடுவோமா?

ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயற்கையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது

விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களைச் செய்திருக்கிறபோது நாமும் தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடு கிறார்கள். இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது.

தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமாக செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இவை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.

Read more: http://viduthalai.in/page5/76961.html#ixzz2w56yo66H

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு என்பது

பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற வினாவிற்கு ஓரிரு சொற்களில் பொருள் கூறுவது கடினமான செயலேயாகும்.

அச்சொல்லுக்குரிய பொருளாக அகராதிகள் கூறும் பொருள்கள் சில பின்வருமாறு அமைந்துள்ளன.

பகுத்தறிவு எனப்படுவது பொருட் களின் / நிகழ்வுகளின் / கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற் றின் இயல்புகளில் இருந்து ஆதாரப்பூர்வ மான புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறைகளையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது.

பகுத்தறிவின் நோக்கம் மெய்ப் பொருளை அல்லது உண்மையைக் கண் டறிவதே... என விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.

திருவள்ளுவர் அறிவு என்பதற்கு விளக்கம் கூறும் போது,

எப்பொருள் யார் யார் வாய்க்கேட் பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 423) என்றும்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 355)
என்றும் அறிவுக்கு விளக்கம் கூறுகிறார்.

அவர் அறிவுக்குக் கூறும் இவ்விளக் கம் பகுத்தறிவுக்கும் பொருந்துவது போலவே உள்ளது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது.

அறிவு என்றாலே பகுத்தறிவு என்று தான் பொருள். அதிகப்படியான அறிவைப் பயன்படுத்துகிற செலுத்துகிற முறையே பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள் என்றதொரு விளக்கமும் காணப்படுகிறது.

நம்மால் நம்ப இயலாதவற்றை மூடநம்பிக்கை எனப் பெயரிட்டு அம்மூட நம்பிக்கைகளைப் புறம் தள்ளுவதே பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தருகிறது இன்னொரு வலைத்தளம்.

பகுத்தறிவு என்பது காரண காரியங் களை மனத்திற்கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்.

உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு என்கிறது கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதி.

பகுத்தறியும் திறன், நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் எதையும் சிந்தித்து ஏற்றுக்கொள்வதை அடிப்படை யாகக் கொண்ட முறை என்கிறது மற்றோர் அகராதி.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே பகுத்தறிவுச் சிந்தனைகளை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பகுத்தறிவு சிந்தனைகள் செவ்வியல் படைப்புகளில் (உயர்திரு இரா.தாமோதரன் (அறவேந்தன்) அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு நூலில் 96 ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57QcTdt

தமிழ் ஓவியா said...

தமிழன் யார்? பகுத்தறிவுத் திறன் இழந்ததேன்

உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல்நாட்டு மக்களும், சீன, சப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறைகண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் - தென்னாட்டுத் திராவிட மக்கள் - கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலை தாழ்ந்து கிடக்கின்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு,

அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழி கண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழின் திறன் கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் திருக்குறள் என்னும் பொது அறம் விளக்கும் நூல் வடிவு பெறக்கண்டு, பண்பாட்டின் உயர் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று உலகுகண்டு, தென்னகத்தின் கிழக்கிலும், மேற்கிலும் அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகளின் துறைமுகங்களில் தமிழர் தம் வாணிகக் கலங்களின் கொடிகள் பறக்கக்கண்டு, இணையின்றி வாழ்ந்த இனந்தான், படிப்படியாய்ச் சரிந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தும் திறன் இழந்து அல்லலுற்று நிற்கின்றது இடைக்காலம் முதலாக.

(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் நூலில் 69 ஆம் பக்கத்தில்)

Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57Wvx3j

தமிழ் ஓவியா said...


வாய்ப்பில்லாதவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!


நாகப்பட்டினம் மாவட்டத்தின் காரைமேடு கிராமத்தில், ஆடு மாடுகளின் ஓசையோடு, அவ்வப்போது ஆங்கில நர்சரிப் பாடல்களையும் நீங்கள் கேட்டுத் திகைக்கலாம். இயற்கையைப் புகழ்ந்து பாடும் இருபது குழந்தைகளின் குரல்தான் அது. எட்டுக்குப் பன்னிரண்டு அடி அறையில் சிமெண்ட் தரையில், கீற்றுக் கொட்டகையின் கீழ் அமைந்திருக்கும் அறையில் மகிழ்ச்சியாகப் பாட்டோடு சேர்த்துக் கதையும் சொல்லும் கனிமொழி, பூமி உருண்டையாக இருக்கிறது என் பதைக் காண்பிக்க, நின்ற இடத்திலிருந்தே ஒரு சுற்றுச் சுற்றிக் காண்பிக்கிறார்.

கனிமொழிதான் நான்காம் வகுப்புக்கும் அய்ந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆங் கிலம், தமிழ் மற்றும் கணிதம் கற்றுக் கொடுக்கிறார். பக்கத்திலுள்ள பஞ்சாயத்து மெட்ரிகுலேசன் பள்ளியில், தினசரி இரண்டு மணி நேரம் வகுப்புகள் எடுக் கிறார். இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பது "வித்யாரம்பம்' என்கிற அமைப்பு.

வித்யாரம்பம் தோன்றக் காரணமே, பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பயில்வது கடினமாக இருந் ததை ஒருவர் நேரடியாக உணர்ந்ததால் தான். அவர்தான் வி. ரங்கநாதன். லார்சன் அன்ட் ட்யூப்ரோ நிறுவனத்தில் பணி யாற்றிவிட்டு, பின்னர் வளைகுடா நாடொன்றில் கொஞ்ச காலம் வேலை பார்த்துவிட்டு, சம்பாதித்தது போதும், இனி தாய் நாட்டுக்குத் திரும்புவோம் என்று இந்தியாவுக்கு வந்தவர் அவர்.

அது 2002 இன் கோடைக்காலம். அவர் கன்னியாகுமரி மாவட்டம் வட்டக் கோட்டை கிராமத்தில் ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற தீர்மானத்தோடுதான் வந்தார். கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது நாலு நல்ல விஷயம் கற்றுக் கொடுப் போம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத் தார். அப்புறம்தான் அவருக்குத் தெரிந்தது - குழந்தைகளுக்குக் கொஞ்சமாவது கணக்கோ, தமிழோ, ஆங்கிலமோ தெரிய வில்லை என்பது. அவருக்கு அதிர்ச்சி.

படிப்பைப் பாதியில் நிறுத்தி விடுவ தற்கும் ஆங்கிலப் படிப்பில் குழந்தைகள் பலவீனமாக இருப்பதே காரணம் என்ப தையும், அதை மட்டும் குழந்தைகள் சமாளிக்க முடிந்துவிட்டால், உயர்கல்விப் படிப்பை அவர்கள் எளிதாக முடித்துவிட முடியும் என்று எண்ணிய ரங்கநாதன், தமக் குத் தெரிந்த ஆசியர்களை அணுகினார்.

கற்பது கடினமாகத் தெரியாமல், விளை யாட்டாக இருந்துவிட்டால் குழந்தைகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள் என்று கருதினார். எட்டாவது தேறிய மாணவி களை அழைத்துப் பயிற்சி கொடுத்தார். அவர்கள்தான் ஆசிரியைகள். குழந்தைகள் அவர்களை அக்கா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் குழந்தை களுடன் பழகும் முறை, கற்பிக்கும் முறை எல்லாம் அவர்களிடம் மாற்றத்தை உண்டாக்கின.

இப்படித்தான் வித்யாரம் பம் வித்தியாசமான கல்விக்கு வித்திட்டது. தமிழ் நாட்டின் 5000 கிராமங்களில் சத்த மில்லாமல் ஒரு சாதனைக்கு வித்திட்டுள் ளது வித்யாரம்பம். கிட்டத்தட்ட ஏழு லட்சம் குழந்தைகளின் கல்வி கற்கும் முறையையே மாற்றிவிட்டது. அந்தக் குழந்தைகள் அத்தனை பேரும் முதல் தலைமுறை மாணவிகள். படித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்களுக் குள் விதைத்துள்ளது இந்த அமைப்பு.

வீட்டுக்கே வந்து கதவைத் தட்டிக் கூப்பிட்டுக் கொடுத்த வாய்ப்புங்க இது.. இது கிடைத்திருக்கா விட்டால், நாங்கள் ஒரு வேலையும் செய்யாமல், வீட்டுக் குள்ளேயே அடைந்து கிடந்திருப்போம் என்று சொல்கிறார்கள் பவித்ராவும், கனிமொழியும். கிராமப்புறங்களில் இன்னமும் ஆசிரியர்களை மதிக்கிறார்கள்.

நான் கலெக்டர் ஆபீசில் ஒரு கூட்டத்துக்குப் போகிறேன் என்றதும், என் அப்பா என்னைப் பெருமையுடன் பார்க்கிறார் என்கிறார், கார்த்திகா. இருபது வயதில், 2005இல் வித்யாரம் பத்தில் ஆசிரியையாகச் சேர்ந்தவர் கார்த்திகா. பி.எஸ்.சி. கணித மாணவியான அவர், படிப்படியாக வளர்ந்து ஆய்வாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகி, இப்போது வித்யாரம்பத்தில் மூத்த பயிற்சியாளர்.


தமிழ் ஓவியா said...

அவர் பி.எட். முடித்ததும், அவருக்கு நிதி உதவியும், சுதந்திரமான பணி நேரமும் கொடுத்துப் பாராட்டியது வித்யாரம்பம். நான்கே வருடத்தில், அதா வது 2009இல் அவர் வித்யாரம்பத்தின் ரோடரி மாடல் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகிவிட்டார். சுனாமி வந்து தாக்கிய நாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடும்பங்களின் குழந்தை களுக்குக் கல்வி அளிப்பதே முக்கியப் பணி.

எனக்கு என் கிராமத்துக்கு வெளியே ஒரு பிடிப்பை உண்டாக்கியது இந்த அமைப்புதான் என்கிறார் கார்த் திகா. கார்த்திகா சீர்காழியில் ஒரு பால் காரரின் மகள் . அவரைப் போன்ற பயிற்சி பெற்ற பதினாறு ஆசிரியைகளுடன் அவர் தங்கியிருக்கிறார். இருபத்து நான்கு வயது சத்யாவின் கதையும் இதே மாதிரிதான். மயிலாடுதுறையிலுள்ள ஒரு விவசாயியின் குடும்பத்தில் மூன்று பெண்களில் மூத்தவர் இவர். அவர்தான் இங்கே துணைத் தலைமை ஆசிரியை.

- சாருகேசி
(தினமணி கதிர் பக்.3 9.3.2014)

Read more: http://viduthalai.in/page8/76965.html#ixzz2w58HEzxV

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் ச(சி)ங்கநாதம்! பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். முன்னணிக்கு வந்த மர்மம் என்ன?


ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்து சனாதன அமைப்பு இதுவரை பின்புலத்தில் இருந்து, அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யைப் பயன்படுத்தி வந்திருந்தாலும் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை - வெளிப்படையாக முன்னணிக்கு வந்து நிற்கிறது என்ற கருத்தை சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் எடுத்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.

12.3.2014 நாளிட்ட எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் வெளி வந்த தகவல்களை எடுத்துக்காட்டி தன் கருத்துக்கு வலு சேர்த்தார்.

அய்க்கியமுற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்திரேஷ் குமார் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் குறி வைக்கப்பட்டு இந்துப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் நடந்து விட்டன.

அதை அனுமதிக்காமல் அதிலிருந்து வெளி வர மத்திய அரசையே மோடி போன்ற ஒருவரை முன்னிறுத்தி கைப்பற்றிட தேர்தலைப் பயன்படுத்தும் வியூகம் வகுத்துள்ளார்கள் - என்று எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்த கருத்தினை எடுத்துக்காட்டினார்.

இராணுவத்தில் ஊடுருவல்

மாலேகான் குண்டு வெடிப்பில் இராணுவத்தில் பயன் படுத்தும் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டது எப்படி என்ற வினாவை அவர் எழுப்பியபோது பார்வையாளர்கள் பகுதியில் ஒரே நிசப்தம்!

இந்துத்துவா சக்திகள் இராணுவத்திலேயே ஊடுருவி இருப்பது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்து என்பதை யும் சுட்டிக் காட்டினார்.

நடக்க இருக்கும் தேர்தலை இந்தக் கண்ணோட்டத் தோடு அணுக வேண்டும் என்ற முக்கியமான கருத்தைக் கழகத் தலைவர் வலியுறுத்தினர்.

அண்மையில்கூட இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி வி.கே. சிங் பி.ஜே.பி. யில் இணைந்துள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுப்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

இந்திய இராணுவத்தில் விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் இந்திய இராணுவத்தில் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவியதை வெளிப்படுத்தியதுண்டு; ஓய்வு பெற்ற 96 இராணுவத் துறையினர் காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டதையும் வெளிப்படுத்தினார்.

அதைவிட முக்கியமான அதிர்ச்சியூட்டும் தகவல் - பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் நேரில் வந்து விளக்கங்கள் - அளித்த தெல்லாம் சாதாரணமானவை அல்லவே!

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் சென்னை பெரியார் திடலில் நேற்று திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து மிக மிக முக்கியமானது - ஆழமானது. மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கத் தக்கதுமாகும்.

காவி பயங்கரவாதம்!

சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் (23.1.2013) பங்கு கொண்ட தமிழர் தலைவர் ஒரு தகவலைப் பதிவு செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்ததை பொருத்தமாக எடுத்தாண்டார். நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற வன் முறையில் - குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எசுக்குத் தொடர்பு உண்டு என்று அந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். வட்டாரமும் பி.ஜே.பி. பிரமுகர்களும் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டனர்.


தமிழ் ஓவியா said...

அந்தச் சூழ்நிலையில் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகள் குண்டுவெடிப்பு களில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளது என்றும், அப்படி ஈடுபட்டவர்களின் பத்துப் பேர் பட்டியல் கை வசம் உள்ளது என்று போட்டு உடைத்ததும் - ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டனவே!

மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் இரயில், மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்கா எனப் பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் - சதி வேலைகளில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவாவாதிகள் ஈடுபட்டது உண்மை - அவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான அஜீமானந்தா நீதிமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே!

1969இல் அகமதாபாத்திலும் 1978இல் அய்தராபாத்திலும், 1987இல் மீரட்டிலும், மும்பை, குஜராத்தில் நடைபெற்ற வன் முறைகள் இந்துத் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்டன என்றும் அவர் நீதிமன்றத்தில் சொல்லவில்லையா?

ஹேமந்த்கர்கரேயைக் கொன்றவர்கள் யார்?

மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவாவாதிகள் தீட்டிய சதிகளை எல்லாம் அம்பலத்திற்குக் கொண்டு வந்த மகாராஷ்டிர மாநில முக்கிய காவல்துறை அதிகாரி ஹே மந்த்கர்கரே படுகொலை செய்யப்பட்டதில் ஹிந்துத்துவா வாதிகளுக்கு இருந்த அதிர்ச்சியூட்டும் தகவலை நீதிமன்றத்தில் அஜீமானந்தா ஒப்புக் கொண்டாரே!

அஜீமானந்தா யார் என்றால் ஆர்.எஸ்.எசுடன் நீண்ட காலமாக உறவு கொண்ட பிரசாரகர் மட்டுமல்ல; வனவாசி கல்யாண் என்ற ஆசிரமத்தை நடத்திவருபவர்; நரேந்திர மோடியுடன் பல்வேறு மேடைகளிலும் முழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் நேற்று ஆற்றிய உரையில் அடங்கிய உண்மைகளும், நியாயங்களும், ஆபத்துகளும் எச்சரிக்கைகளும், இவற்றின் அடிப்படையில் விடுத்த தன் அருமை புரியுமே!
பல்வேறு சதிக் குற்றச்சாற்றுகள் வன்முறைக் குற்றச் சாற்றுகளால் விழி பிதுங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளையும், அவற்றைச் சார்ந்தவர் களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் ஆர்.எஸ். எஸ். உள்ளது.

எந்த விலை கொடுத்தும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதன் மூலம்தான் அதனைச் சாதிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் மட்டுமல்ல; கடந்த மாதம் பிப்ரவரியில் (17) விடுதலையின் வாயிலாகவே திராவிடர் கழகத் தலைவர் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடு களை வெளிச் சத்துக்கும் கொண்டு வந்தார். நேற்றைய கூட்டத்தில் எக்னா மிக் டைம்ஸ் ஏட்டில் (12.3.2014) வெளி வந்த தகவல்களை வெளியிட்டுக் கருத்துத் தெரிவித்தது போலவே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (15.2.2014) ‘’RSS AIMS for Bigger Role in Electroral Duties’’ என்ற தலைப்பில் வெளி வந்த தகவல் களின் அடிப்படையில் விடுதலையில் (17.2.2014) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் தமிழர் தலைவர்.

பின்னணி முன்னணியானது

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ் என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்க முதலே தானே நேரிடையாக, சற்றும் ஒளிவு மறைவின்றி, கூச்ச நாச்சமின்றி, வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது.

நரேந்திர மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ். எஸின் கொள்கையை அப்பட்டமாகக் கடைப்பிடிப்பதில் சற்றும்கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்கான தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் இணையதளம் உள்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டாடுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (15.2.2014) அப்படி என்ன தான் தெரிவித்திருந்தது?

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர் மோகன்பகவத் அவர்கள் தலைமையில் வாரணாசியில், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடிய ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரபிரதேசத் (அதிகமான எம்.பி.களைக் கொண்ட மாநிலம்)திற்குப் பொறுப்பான பா.ஜ.க.வின் மாநில தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பேயி, அமைப்புச் செயலாளர் ராதேஷ் ஜெயின், கட்சித் தேர்தல் பொறுப்பாளர் (குஜராத்தில் மோடி யை வெற்றி பெறச் செய்த) அமித்ஷா ஆகியோர் முன் னிலையில் தனது தேர்தல் பணிக்கான திட்டங்களை முன் வைத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். ஆணையிட்டால் அவசியம் செயல்பட வேண்டும் பி.ஜே.பி.

1. பிரதமர் வேட்பாளர் எப்படி ஹிந்துத்துவா கொள்கை யில் ஊறித் திளைத்தவரான மோடியையே தேர்ந்தெடுத் துள்ளோமோ, அதே போல் அக் கொள்கையில் வேரூன் றியவர்களையே நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் களாக இந்தஅணி சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.

2. இப்படி தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் நல்ல பெயரையும், பொது மக்கள் மத்தியில் மதிப் பையும் கொண்ட கேள்விக் கேட்கப்பட முடியாத தகுதியான வேட்பாளராகவும் அமைதல் வேண்டும்.

3. பா.ஜ.க.வுக்குச் சொல்லப்பட்ட கருத்து என்ன வென்றால் ஆணைகள் ஆர்.எஸ்.எஸ்.ஆல் தரப்பட்டால் அதை அப்படியே கட்சி (பா.ஜ.க.) அமைப்பு பின்பற்றியாக வேண்டும்.

4. அவ்வமைப்புகள் கிராமாந்திரங்களிலும் இறங்கி ஆதரவாளர்களான வாக்காளர்களை ஒன்று திரட்ட ஆவன செய்ய முன்வர வேண்டும்.

5. மற்ற இடங்களில் தெரிகின்ற மோடி அலை எப்படி 2014-இல் வீசுகிறதோ, அதை உ.பி.யில் 80 இடங்கள் உள்ள மாநிலத்தில் வீச வைக்கத் தேவையான அத்தனை உத்திகளையும் கையாளத் தயங்கக் கூடாது.

என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வெளியிட்டு இருந்தது.

இந்த உண்மைகளை எல்லாம் தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் - அதன் தலைவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக.

இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையல்ல. மதவாதத் தோள் தூக்கி எழும் ஆபத்தான மனு தர்ம அமைப்பான ஹிந்துத்துவா எனும் சனாதன - வருணாசிரமத் தர்மத்தை குருதியோட்டமாகக் கொண்ட ஓர் கட்சி - இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமருமேயானால் அதிகார பலத்தோடு குஜராத் எப்படி வேட்டையாடப்பட்ட தோ, அதே நிலை இந்தியா முழுமையும் அரங்கேற்றப்படும் ஆபத்தை தேர்தலில் நிற்காத கழகத்து தலைவர் - மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தெரிவித்துள்ள கருத்தும், எச்சரிக் கையும் இந்தியா முழுமைக்குமே தேவைப்படக் கூடியது.

தமிழர் தலைவரின் உரை குறுந்தகடாக தேர்தல் களங் களில் உலா வர உள்ளது. மதச் சார்பற்ற சக்திகள், அணிகள் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வது நல்லது - திராவிடர் கழகம் சொன்னால் அது அக்மார்க் முத்திரையாயிற்றே!

(16ஆவது மக்களவைத் தேர்தலும் மக்கள் கடமையும் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று சென்னை பெரியார் திடலில் ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது)

தொகுப்பு: மின்சாரம்

Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w58bApS2

தமிழ் ஓவியா said...

இன்றைய போராட்டம் என்பது என்ன?

புறத்தோற்றமாக அரசியல் போராட்டம் போன்று காட்சிக்குத் தோன்றலாம் என்றாலும் உண்மையிலேயே நடைபெறுவது தேவாசுரப் போராட்டம்தான். மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கமே உயர் ஜாதி ஆதிக்கத்தை, அதன் வருணாசிரம - சனாதன - மனுதர்மக் கொடியை உயர்த்துவதேயாகும். 16ஆவது மக்களவைத் தேர்தல் என்பதும் இந்த அடிப்படையில்தான் நடக்கிறது என்பதை நம் மக்கள் மறந்து விடக்கூடாது.

- தமிழர் தலைவர் உரையிலிருந்து, சென்னை, பெரியார் திடல், 14.3.2014

தந்தை பெரியார் கருத்து: இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்டுகள் முதல் எல்லாக் கட்சி களுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள்தான் அடிப்படை இலட்சியமே தவிர மற்றபடி வாயால் சொல்லுவதற்குக் கூட கொள்கை கிடையாதே! அதாவது எல்லாம் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண் டதுதான் - தந்தை பெரியார் (விடுதலை, 22.5.1967)

Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w58sGqyo

தமிழ் ஓவியா said...

அங்கு ஜிலேபி இங்கு அல்வாவா?

தினமலரில் இன்று ஒரு அக்கம் பக்கம் செய்தி: மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி பி.ஜே.பி. சார்பில் நெருங்கிய பிரமுகர்களுக்கு டில்லியில் விருந்தொன்று அளிக்கப்பட்டது. அத்வானியும் அங்கு வந்தார்.

தனக்கென ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்து யாருடனும் பேசாமல் தட்டிலிருந்த இனிப்புகளை சுவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரமுகர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து அத்வானியிடம் கேட்டனர். அதற்கு அத்வானியோ ஜிலேபி சாப்பிட அழைத்தனர்! அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.

அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஜிலேபி டேஸ்ட் நன்றாக இருக்கிறதா எனக் கேளுங்கள் அதற்குப் பதில் சொல்லுகிறேன் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டாம்! (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) என்று கூறியுள்ளார் அத்வானி!

அங்கு ஜிலேபி என்றால் தமிழ்நாட்டில் என்னவென்றால் தன்னிடம் கூட்டுச் சேர வந்துள்ள சில கட்சிகளுக்கு அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு!).

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 14.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w591z98I

தமிழ் ஓவியா said...

தேர்தல் துணுக்குகள்

மோடி சேலை

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் நகராட்சி பகுதியில் குறைந்த விலையில், விற் பனையாகி கொண்டிருந்த காட்டன் சேலைகளுக்கு தேர் தல் ஆணையம் திடீர் தடை விதித்துள்ளது.

பிலிபிட் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குறைந்த விலையில், காட்டன் சேலைகள் விற்பனைக்கு வந் தன. அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் போட்டு கொடுத்து விட்டனர். உடனடியாக கடைகளுக்கு சென்று ஆராய்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, இது ஒரு கட்சிக்கு சார்பாக இருப்பதாக கூறி, இந்த சேலைகளின் விற்பனைக்கு தடை விதித்து விட்டார்.

சரி, அப்படி என்ன தான் இந்த சேலையில் இருக்கிறது என்று பார்த்தால், பார்டரில் மோடியின் படத் துடன், பா.ஜ.வின் பிரச்சார வாசகம் இருந்தது. அது சேலை வைக்கப்பட்டிருந்த அட்டை யிலும் அச்சிடப்பட்டிருந்தது. பா.ஜ.வின் பிரச்சார யுக்தி எந்தெந்த வடிவில் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணிக்க முடிய வில்லை என்று ஒரு சில அர சியல் கட்சியினர் புலம்பு கின்றனர். ஆமாம், மோடி எப்பொழுது சேலை கட்ட ஆரம்பித்தாராம்?

தமிழ் ஓவியா said...

யாருக்கு யார் கொடுத்த அல்வா?

பி.ஜே.பி. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஏற்கெனவே பல தொகுதிகளுக்கு வேட் பாளரை அறிவித்து விட்டது; அது ஒருபுறம் இருக்க; மற் றொரு கட்சியான தே.மு.தி.க. பல நாட்கள் சுமூகமாக கமுக் கமாகப் பேசிக் கொண்டிருக் கும் வேளையில், திடீரென விடுபட்டு அறுபட்டு, 5 தொகுதிகளுக்கான வேட் பாளர்களையும் அறிவித்து விட்டு, சூறாவளி - சுனாமி சுற்றுப் பயணத்தை மேற் கொண்டு விட்டார் கேப்டன்..

ஆனாலும் பேச்சு வார்த்தை சமூகமாக நடைபெற்று வருவதாக நாளொரு மேனி யும் தொலைக்காட்சிகளில் முகத்தைக் காட்டிக் கொண்டி ருக்கிறார் திருவாளர் இல. கணேசன் வாள்; இதில் யாருக்கு யார் அல்வா கொடுக்கிறார்கள் என்பது தான் புரியாத புதிர்.

அப்படிப் போடு!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விலை போன பத்திரி கையாளர்களைச் சிறையில் தள்ளுவோம் என்று கெஜ்ரி வால் கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் மேற் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர விந்த் கெஜ்ரிவால், மகாராஷ் டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த பேரணியில் பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் எல்லா ஊடகங்களும் விலை போய் விட்டன. இது மிகப்பெரிய சதியாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு ஒரு விசா ரணை கமிஷன் அமைத்து, விலை போன பத்திரிகை யாளர்களைச் சிறையில் தள் ளுவோம். பிரச்சாரத்தில் மோடியை முன்னிறுத்த மிகப் பெரிய தொகை ஊடகங் களுக்கு கொடுக்கப்பட்டுள் ளது. கடந்த ஒரு ஆண்டாக மோடி இங்கே இருக்கிறார். அங்கே இருக்கிறார். இதோ ராம ராஜ்யம் வந்துவிட்டது. ஊழல் எல்லாம் ஒழிந்து போகும் என்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.

குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 800 விவசாயி கள் தற்கொலை செய்துள்ள னர். அங்குள்ள கம்பெனி களுக்கு விவசாயிகள் ஒரு ரூபாய்க்கு கூட நிலங்களை விற்றுள்ளனர். இதையெல்லாம எந்த டிவி சானலும், பத்திரி கைகளும் வெளியிடுவதில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் பேசி னார். போட்டாலும் போட்டார் நல்ல போடு போட்டார்.

காங்கிரசிலுமா?

சிக்கிம் பாஜக தலைவர் பி.பி. சேத்ரி தன் ஆதரவாளர் களுடன் காங்கிரசில் இணைந்தார். அகில இந்திய காங்கிரசு கமிட் டியின் சிக்கிம் மாநிலப் பொறுப்பாளர் லூயி சின்கோ பெலைரோ கூறும் போது, சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசில் பல ஆண்டுகளாக உள்ள முறை கேடுகளை எதிர்த்தும், பாஜக வின் அரசியல் செயல்பாடு களால்,

சிக்கிம் மக்களுக்கு பாஜக இழைக்கும் துரோ கங்களால் அதிர்ச்சி அடைந் தும் சிக்கிம் மாநிலத்தின் பாஜக தலைவர் பி.பி.சேத்ரி காங்கிரசு கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக பெலைரோ தெரிவித்துள்ளார். காங்கிரசு கட்சியின் மாநி லத் தலைவர் டி.கியாட்சோ மற்றும் காங்கிரசு கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர் ஏ.டி. சுப்பா ஆகியோர் முன் னிலையில் பி.பி.சேத்ரி தன் ஆதரவாளர்களுடன் இன்று காங்கிரசுக் கட்சியில் இணைந் தார்.

காங்கிரசுக் கட்சியின் தலைமைமீது சோனியா மற்றும் ராகுல் காந்திமீது வைத்துள்ள உண்மையான நம்பிக்கையின் அடிப்படை யில் காங்கிரசில் இணையும் பி.பி.சேத்ரி விரைவில் சிக்கி மில் நடைபெற உள்ள கூட்டத் தில் பாஜகவிலிருந்து முன் னணியினர் பெருமளவில் காங் கிரசுக் கட்சியில் இணைய உள்ளதாகவும் பெலைரோ தெரிவிக்கிறார்.
பரவாயில்லையே - காங் கிரசிலும் சேர்கிறார்களே!

பொய்யில் புலவரோ!

மற்ற மாநிலங்களை காட்டிலும் குஜராத் அதிக மான அன்னிய நேரடி முத லீட்டை ஈர்த்துள்ளதாக மோடி பொய் கூறுகிறார் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

மோடிக்கு புவியியல், வரலாறு மற்றும் பொருளா தாரம் குறித்த அறிவு குறைவுதான் என்று எனக்கு தெரியும், ஆனால் 63அய் விட 8 தான் பெரியது என்ற அவருடைய கணக்குதான் எனக்கு வியப்பாக உள்ளது.

குஜராத் கடந்த 2000-2012இல் மற்ற மாநிலங்களை விட அதிகமாக அதாவது 8 பில்லியன் டாலர்கள் அன் னிய நேரடி முதலீட்டை ஈர்த் ததாக மோடி கூறியுள்ளார். ஆனால் அதே காலகட்டத் தில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக 63 பில்லியன் டாலர்களை அன்னிய நேரடி முதலீடாக பெற்றிருந்தது.

மோடி தன்னுடைய புகழ்ச் சிக்காக இப்படி பொய் கூறி யுள்ளார். அவருடைய கூற்றுக் கள் முற்றிலும் தவறானவை. இவ்வாறு அவர் கூறினார். மோடிக்குப் பொய்யில் புலவர் என்ற பட்டத்தைக் கொடுக்கலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/77008.html#ixzz2w59EgUpQ

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

(விடுதலை, 10.8.1961

Read more: http://viduthalai.in/page-2/77016.html#ixzz2w59cjV3P

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (4)


தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; தி.மு.க.வின் மூதாதையர்தம் அமைப்பான நீதிக்கட்சி 1918 மார்ச்சு 30,31 ஆகிய நாள்களில் நடைபெற்ற தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலேயே தீர்மானமாக நிறைவேற்றியது.

அம்மாநாட்டின் 8(அ) ஆவது தீர்மானம் வருமாறு:

எல்லாப் பழமையான மொழிகளைப் போல, பழமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல திறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழியென ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்!!

- முன்மொழிந்தவர்: ஜே.பி. நல்லுசாமிபிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை; வழி மொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர் எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஆதரித்தவர்; திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி நிறைவேற்றிய அத்தீர்மானம் - அதன்வழித் தோன்றலான திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு பின்னால் செயல்பாட்டுக்கு வந்தது.

இதனைப் பொறுக்க மாட்டாத அ.இ.அ.தி.மு.க. அரசு செம்மொழிப் பூங்காவைக் கூட சீரழித்த கீழ்மையை என்னென்று சொல்வது! புரட்சிக் கவிஞர் பெயரால் உருவாக்கப்பட்ட நூலகத்தைத் துவம்சம் செய்ததை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பகீர் என்றாகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழி மேம் பாட்டுக்கான ஆக்க ரீதியான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

தமிழ் மொழிக் கொள்கை தமிழ் ஆட்சி மொழி என்ற தலைப்பில் தன் திட்டத்தை அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்குரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் உரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழுக்கு மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் உள்ள தாய் மொழிக்கும் சேர்த்து தி.மு.க. குரல் கொடுத்திருப்பதைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. இந்தப் பகுதியிலே குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு கருத்து மிக முக்கியமானதாகும். மத்திய அரசுப் பணிகளுக்கும்; மத்திய பணியாளர் வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும் அந்தந்த மாநில ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகளையும் இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர் முகத் தேர்வு களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் அவசியமானதாகும். மத்திய பணியாளர் தேர்வில் (Staff Selection Commission) மெட்ரிக் அளவில் மட்டுமே மாநில மொழிகளில் எழுத முடியும். பட்டதாரி களுக்கான தேர்வில் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோடிட்டுக் காட்டத் தக்கதாகும்.

சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை அனைத்து முதல் அமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தது போலவே மானமிகு கலைஞர் அவர்கள் அனைத்து மாநில மொழிகளுக்குமான மொழி உரிமைக்கான கொடியை உயர்த்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

இதன் மூலம் இந்தியாவில் மொழிச் சிக்கலுக்கு நியாயமான அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய தீர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி என்னும் தலைப்பின்கீழ் இடம் பெற்றுள்ள 34ஆவது அம்சம் மிகவும் குறிப்பிட்டத்தக்க ஒன்றாகும்.

செம்மொழியான நமது தாய்மொழி தமிழ், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக (Co-Official Language) பிரகடனப்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் - நிறுவனங்கள் - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட வேண்டுமென்றும்; இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 343 ஆவது பிரிவில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றும் மத்திய அரசை தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. நமது தமிழின வரலாற்றில் நமது அன்னை மொழிக்கான அங்கீகாரம் சட்டப்படி நிலை நிறுத்தும் பான்மையதாகும்.

இது ஒன்றும் புதியதோ - நடைமுறைப்படுத்தப்பட இயலாததோ அல்ல! உலகில் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அலுவல் மொழிகள் நடைமுறையில் உள்ளனவே!

மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் அவை எந்த மாநிலத்தில் இயங்குகின்றனவோ - அந்த மாநிலத்து மக்களோடு தொடர்பு கொண்டதுதானே! அம்மாநிலத்து மக்களின் மொழியில் அவை இயங்கினால்தானே உண்மையான மக்கள் தொடர்பு கொண்டதாக இருக்க முடியும். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்பட வேண்டும் என்று திமுக மத்திய அரசை வலியுறுத்தும் என்பது இன்னொன்று.

நமது வழக்குரைஞர் நமக்காக எப்படி வாதாடுகிறார் - என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தராமல் வழக்காடிகளைப் பரிதவிக்க விடுவது எவ்வகையில் நியாயமாக இருக்க முடியும்? அது ஒரு வகையான உரிமை மறுப்பும்கூட!

நாட்டு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, நதிகள் இணைப்பு என்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு வளர்ச்சித் தொடர்பான அத்தனையும் உள்ளடக்கிய ஒரு ஆவணம் - சாசனமே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.

தமிழ்நாட்டு மக்கள் இதன் அருமைப் பெருமைகளை உணர்ந்து தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்து நாட்டில் நல்லதோர் திருப்பத்தை உருவாக்கிட உதயசூரியன் அணியை வெற்றி பெறச் செய்வார்களாக!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள நூறு அம்சங் களும் ஒரு நூற்றாண்டுக்கான வரைவுத் திட்டம் என்றால் மிகையாகாது. கரும்புத் தின்னக் கூலியா? இதனைப் பயன்படுத்திக் கொள்ள நம் தமிழர்கள் தயங்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/77020.html#ixzz2w59pnvOq

தமிழ் ஓவியா said...


அத்வானிக்கு ஜிலேபி

- குடந்தை கருணா

சமீபத்தில் புது தில்லியில் பாஜக சார்பில், முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்வானி தாமதமாக கலந்து கொண்டாலும், விவாதத்தில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்து, அங்கே வைக்கப்பட்ட ஜிலேபியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அரசியல் குறித்த கேள்விகளுக்கு, தனக்கு அது பற்றி ஒன்றும் தெரி யாது; ஜிலேபி சுவையாக இருக்கிறதா என்று வேண்டுமானால் கேளுங்கள்; சொல்கிறேன்.

என்னை ஜிலேபி சாப் பிடத்தான் வரச் சொன்னார்கள் என அத்வானி கூறியதாக நேற்றைய செய் தித்தாள் ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. யார் இந்த அத்வானி; சென்ற தேர்தல்களில், வாஜ்பாய் என்பவர் விகாஸ் புருஷர் அதாவது வளர்ச்சி மனிதர் என்றும், அத்வானி என்பவர் லோக் புருஷர் அதாவது இரும்பு மனிதர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

அத்தகைய அத்வானிக்கு, இன்றைய பாஜகவில் தரப்படும் மரியாதை இவ்வளவு தான். கர்நாடகாவில் சுரங்க ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் சீராமுலுவை மீண்டும் பாஜகவில் சேர்ப்பதற்கு, சுஸ்மா சுவராஜ், தெரி வித்த தனது கடுமையான எதிர்ப்பை யும் மீறி, சீராமுலு பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடமிருந்து வாரணாசி தொகுதியைக் கைப்பற்றி மோடிக்கு தருவதற்கு ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை சுஸ்மா சுவராஜூம், முரளி மனோகர் ஜோஷியும் தெரிவித் துள்ளனர்.

பாஜகவின் அரசியல் நடவடிக் கைகளில் ஆர்.எஸ்.எஸின் தலை யீட்டை அத்வானி விரும்பவில்லை என்கிற நிலையில் தான், அவர், கட்சி யில் முக்கியத்துவம் இழக்கக் காரண மாகி விட்டது. ஜிலேபி ருசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் தற்போதைய கருவியாக செயல்படும் மோடியை எதிர்க்கும் சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஸி, இருவரும், அத் வானியை அடுத்து, ஜிலேபி சாப் பிடும் நிலைக்கு விரைவில் தள்ளப் படலாம்.

Read more: http://viduthalai.in/page-2/77019.html#ixzz2w5A6uVIi

தமிழ் ஓவியா said...


பாஜக மீதான அதிருப்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே


மும்பை, மார்ச்.15- பாஜக மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராட் டிர நவநிர்மாண் அமைப்புடன் உற வாடுவது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமை யாகக் சாடி உள்ளார். பாஜகவின் நம்பகத் தன்மை, கூட்டணி ஒழுங்கு குறித்து மராட்டிய ஏடான சமனாவில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி எழுதி உள்ளார்.

1996இல் பால் தாக்கரே இருந்தபோது பாஜகவிலிருந்து விலகிய சங்கர்சிங் வகேலா குஜராத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவிடம் கோரிய போது பால் தாக்கரே மறுத்தார். குஜராத் தில் மோடியின் ஆட்சி அமைந்ததற்கே பால்தாக்கரே பின்பற்றிய வழிகள்தான் காரணம். அப்போதுபாஜகவுடன் கூட் டணியில் இருந்ததால் வகேலாவுடன் கூட்டணி அமைக்கவில்லை. சிவசேனா வைப் புறக்கணிக்கும் பாஜக தலைவர் கள் இந்த வரலாற்றைப் படிக்க வேண் டும் என்றார் உத்தவ் தாக்கரே.

மேலும் அவர் கூறும்போது, பாஜக மோடியைப் பிரதமராக்க விரும்புகிறது. ஆனால், பாஜக நம்பகத்தன்மைக்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. நம்முடைய கொள்கை இந்துத்துவாதான். அதிகாரத்தை நோக் கியதல்ல. அதிகாரப்பசிக்கான போர்வை அல்ல இந்துத்துவா.

இந்துத்துவாவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு இட மில்லை. யார் நம்முடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்முடைய இந்துத் துவப்பயணம் தொடரும். மோடியைப் பிரதமராக்குவதன்முலம் பாஜக மத்தி யில் ஆட்சியைப்பிடிக்க விரும்புகிறது. உங்களை ஒருவர் நம்பும்படியாக நடந்து கொண்டால் தான், அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால்தான் உங்களை மற்றவர்களும் நம்புவார்கள்.

சிவசேனா தன் காலில் நிற்கும் திறனுள்ளது. பாஜக மாற்றுப்பாதையில் நண்பனுக்கு துரோகமிழைத்தால் உன்னால் நிறுத்தப்படுபவர் யாராக இருந்தாலும், துரோகம் விரும்பத்தகாத நிலையை ஏற்படுத்திவிடும். ஊடகங் களில் வந்துள்ள தகவல்படி, பாஜக ஒரு மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, பின்வாசல் வழியே அடுத்த கட்சியுடன் தொடர்பு கொள் வதை புதிய கொள்கையாக வைத்துள் ளது என்று உத்தவ் கூறினார்.

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி காங்கிரசுக்கு வாக்குகள் ஒன்று சேராமலிருப்பதற்காக ராஜ்தாக்கரேவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஆலோசனை வழங் கினார். பாஜகவுடன் உள்ள தொடர் கூட்டணியால் சிவசேனா பல இடங் களில் வளைந்து கொடுத்ததால், சிவசே னாவின் அரசியல் வளர்ச்சி பாதித்தது. இதனால், பாஜகவில் ராஜ்நாத்சிங், மோடி தலைவர்களாக வளர்ந்தனர்.

சுவரில் தானே தலையை மோதிக் கொண்டு காயமடைவதுபோல பாஜக வின் செயல்களால் தானே தோல்வியைத் தழுவுகிறது. பாஜகவின் இறங்குமுகத் திற்கு காரணம் உட்கட்சிப் பூசல்களே யாகும். மோடி, ராஜ்நாத்சிங், ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் தலைவலி தீர தைலத்தை எங்களிடம்தான் கேட் கிறார்கள். ஆனாலும், உட்கட்சிப் பூசல் தொடராது என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.

பாஜக மாநிலக் கட்சிகளிடமிருந்து சிவசேனாவைப் போல் அடையாளங்களைப் பெறுகிறது. இந்துத்துவ அலையில் ரத யாத்திரைக் குப் பின்னும், பிரபலமான வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களிருந்தும் பாஜக தானே ஆட்சியைத் தனித்து அமைக்க முடியவில்லை.

மேலும், உத்தவ் கூறும்போது, 30, 32 கட்சிகளை அரவணைத்து சென்றவர் பிர மோத் மகாஜன். மற்ற மாநிலங்களிலும் பாஜகவுடன் உள்ள கூட்டணிக் கட்சி களிடையே சச்சரவுகள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அரியானாவில் ஓம்பிரகாஷ் சவுதாலா வின் பாரதிய லோக் தளம் கட்சியை பாஜக கூட்டணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து குல்தீப் பிஷோனியிடம் கலக்கவில்லை. அதே போல், ஆந்திராவில் காங்கிரசுக் ஆட்சி யில் மத்திய அமைச்சராக இருந்த என்.டி. ராமாராவின் மகளை கூட்டணிக்குள் சேர்க்கும்போது சந்திரபாபுநாயுடுவின் ஒப்புதலைக் கேட்கவில்லை.

இப்படியான தாக்குதல்களை வெளி யிட்டாலும், உத்தவ் பாஜகவில் உள்ள சில தலைவர்களால் பாஜக கூட்டணியில் புதிதாக சேர்பவர்கள் மூலம் பாஜக கீழே செல்லாமல் உள்ளது எனலாம் என்கிறார். மேலும் உத்தவ் கூறும்போது, ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணிக்குள் வந்ததால் பெரும்பாலான பாஜக தலை வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

எடியூரப் பாவின் மீள்வருகையால் அத்வானி மகிழ்ச்சி அடைய வில்லை. ஜெசிகா லால் கொலைவழக்கில் தண்டிக்கப் பட்ட மனு சர்மாவின் தந்தையான வினோத் சர்மாவை கூட்டணியில் இணைத்ததை சுஷ்மா சுவராஜ் விரும் பவில்லை.

இவ்வாறு மராட்டிய சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவை விமரிசித்து தனது ஏடான சமனாவில் தலையங்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/77018.html#ixzz2w5AFoIBC

தமிழ் ஓவியா said...


இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?

தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக் கையும் உபயோகப்படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள்.

இதற்குச் சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்துகொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள்.

அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.

ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே பார்ப்பனர்களு டையதும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளியில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதை யில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.

தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்து வதற்குக் கூட காங்கிரஸுக் காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது.

இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.

நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.

இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 26.08.1928

Read more: http://viduthalai.in/page-5/76986.html#ixzz2w5Cnz1zi

தமிழ் ஓவியா said...


செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!


தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டு மென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.

தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும்.

அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப்பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்து விட்டதாகத் தெரிய வருகின்றது.

மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரி யாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம்.

திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி. ரெட்டி நாயுடு, எம். கே. ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத் தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரிகின்றது.

தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும்.

பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகல் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர் களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம்.

இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது. தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928

Read more: http://viduthalai.in/page-5/76987.html#ixzz2w5CwnkrO

தமிழ் ஓவியா said...


மோகம் விடயத்தில் மோடிக்குச் சிக்கல்!


காந்திநகர், மார்ச் 15- குஜ ராத்தில் கட்டடப் பொறியியல் வல்லுநரான இளம்பெண் ணைக் கண்காணித்த புகாரில் தற்காலிக பணிநீக்கம் செய் யப்பட்டவர் அய்.பி.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா. இவர் மீதுஆறு குற்ற வழக்குகள் உள்ளன.

பயனில்லாமல் போனது

சட்டவிரோத செயலான இளம்பெண்ணைக் கண் காணித்த இவ்வழக்கில் குஜ ராத் முதலமைச்சர் மோடி யின் தொடர்பு குறித்து மோடிமீது பிரதீப் சர்மா காந்திநகர் 7ஆம் செக்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ள தாகத் தெரிகிறது. ஆனாலும், பிரதீப் சர்மா காவல்நிலை யத்தில் அளிக்கப்படும் புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறி குஜராத் மாநிலக் காவல் துறைத் தலைவர் பி.சி.தாக்கூர்,

காந்திநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷரத் சிங்கால் ஆகியோரிடம் வழக் குப்பதிவு செய்ய உத்தரவிடு மாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து, அவர் குஜராத் உயர்நீதிமன் றத்தில் மோடி மீதான வழக்கைப் பதிவு செய்ய இது குறித்து அவர் வழக் குரைஞர் கூறும்போது, பிரதீப் சர்மாவின் புகார்மீது வழக் குப்பதிவு செய்ய காவல் துறை மறுத்துள்ள தால், அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட உள்ளது என் றார்.

நவம்பர் 26 இல்

ஓர் அய்.ஏ.எஸ். அலு வலர் மோடியையும், அந்த இளம்பெண்ணை யும் நெருக்கமாக அறிந்த வர் என்பதாலேயே பாஜக அரசால் பாதிப்புக்குள்ளா னார். இளம் பெண் சட்ட விரோதமாகக் கண்காணிக் கப்பட்ட விவகாரம் குறித்து குஜராத் அரசு நவம்பர் 26 இல் இரு நபர் விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி சுக்னாபென் பட் என்பவர் தலைமையில் அமைத்தது. இன்னமும் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-5/76996.html#ixzz2w5DRVjeD

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங்


ஆன்மீகப் பிரச்சாரம் செய்து வரும் தோழர் சுகிசிவம் கொஞ்சம் வித்தி யாசமானவர். தொலைக் காட்சிகளில் தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பற்றி எல்லாம்கூட எடுத் துக்காட்டி தொலைக் காட்சிகளில் உபந்நியாசம் செய்யக் கூடியவர்.

தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட கடைசி பிறந்த நாள் கவியரங்கில்கூட (17.9.1973) (உவமைக் கவிஞர் சுரதா தலைமையில்) கலந்து கொண்டு தந்தை பெரியார் பற்றிப் பாடியவர் சிவம்.

மார்ச்சு 9 (2014) கல்கி இதழில் கடைசிப் பக்கத் தில் ஒரு தகவலைச் சொல்லி இருக்கிறார்கள் - சோதிடம் பற்றிய தகவல் அது.

ஒரு சின்ன துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு ஓர் ஆராய்ச்சி யாளரின் அக்கறையுடன் தொலைக்காட்சியை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் என் நண்பர் தலைவிரிகோல மாக ஓர் இளம் - பெண் அன்றைய ராசிப் பலன் களைப் பெரிய கவிதை போல இரசித்து, தலை யசைத்து வாசித்துக் கொண்டிருந்தார்.

கடகராசி நேயர்கள் அன்று உடுத்த வேண்டிய ராசியான நிறங் கள், நகர வேண்டிய திசை கள் போகக் கூடாத இடங் கள் பற்றித் தலைவிரிப் பெண்மணி சொன்னதும் புன்னகையுடன் பீரோவி லிருந்து தமக்கு ராசி என்று சொல்லப்பட்ட நிற பேன்ட் சட்டை (சகிக்காத கலர் மேட்ச்) தேடி எடுத்து உடுத் திக் கொண்டார் எந்தநிற உடையென்று நாள்தோறும் அந்த அம்மணி சொல் வதைத் தாம் பின்பற்றுவ தாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

எனக்குப் பயமாய்ப் போய் விட்டது. ஒரு வேளை அன்று ராசியான நிறம் அந்த அம் மணி சொல்லாமல் போய் விட்டால், நண்பர் எவ்வித ஆடையுடன் வெளியில் போவார் என்று எண்ணிக் கலங்கி விட்டேன்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி குஷ்வந்தசிங், ஒரு நிகழ்வு சொன்னார். ஒரு முறை பத்திரிகை அச் சேறும் வரை ஜோதிடப் பலன் வந்து சேரவில்லை என்பதால் பழைய பலன் களைப் பார்த்து தாறு மாறாக அவரே எழுதி அச்சேற்றி விட்டாராம். அந்த வாரம் ஜோதிடப் பகுதிக்கு ஏகப்பட்ட பாராட் டாம். பலன் துல்லியமாக இருந்தது என்று கடிதங்கள் குவிந்தனவாம்!

இந்தத் தகவலை எழுதி யுள்ள சுகிசிவம் இன் னொரு சொந்தத் தகவலை யும் குறிப்பிட்டுள்ளார். என் நண்பனும் நானும் 27.8.1953 அன்று ஒரே நாளில் பிறந்தோம். ஆனால் எங்கள் வாழ்வு பல வகையில் மாறுபட்டது. அவருக்கு ஆண் வாரிசு கள், எனக்கோ பெண் வாரிசுகள். அவர் தாய் முன்னதாக இறந்தார்.

எனக்கோ என் தகப்பனார் முன்னதாகவே மறைந்தார். இவ்வளவுக்கும் எங்கள் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் என்று போட்டு உடைத்து விட் டார் சுகிசிவம்.
சோதிடப் பிரியர்களே சொல்லுவது கருஞ் சட்டைக்காரர்கள் அல்லர் - ஆன்மீகப் பிரச்சாரகர் சுகிசிவம்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77051.html#ixzz2wB4f9SAs

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


ஏழுமலையான் வரமோ!

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட கிடைத் துள்ள வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருது கிறேன்.

- ஞானதேசிகன், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்

அந்த இறைவன் ஏழு மலையானாக இருந்தால் மூன்று கோடாக (நாமம்) முடியுமே! ஏழுமலையானைத் தவிர்த்து என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் அல்லவா! (தமிழ், தமிழர், இனவுணர்வு, இவையெல்லாம் ஒவ்வாமை என்று கருதும் காலம் வரை தமிழ்நாட்டில் காங் கிரசின் நிலைப்பாடு இதேதான்!).

மோடியும் - கோடியும்

மோடியின் தேர்தல் சுற் றுப் பயணத்துக்காக மட்டும் மோடிக்காகச் செலவிட இருப் பது 2000 கோடி ரூபாயாம்!

கார்ப்பரேட் கம்பெனி கள் சுற்றிலும் இருக்கும் போது இரண்டாயிரம் என்ன இரண்டு லட்சம் கோடி ரூபாய்கூட சும்மா தூசு மாதிரிதான்! ஆமாம், தேர்தல் ஆணையம் என்ன செய்கிறதாம்? அவா ளுக்கே வெளிச்சம்!

ஆம் என்க!

எல்லாக் அரசியல் கட்சி களையும் குப்பைத் தொட்டி யில் போட வேண்டும்.
- கெஜ்ரிவால் ஆம் ஆத்மி

அதுசரி. இவர் நடத்து வதும் அரசியல் கட்சிதானே - இவரை? தூக்கி எங்கே போடு வதாம்?

காங்...கிரஸ்

ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிடுவ தற்காக நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட முந்தி நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் என்னடா என்றால் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேர்த லில் நிற்கத் தயங்குகிறார்கள்.

இந்த நிலையில் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண் டிப்பாகப் போட்டியிடடே தீர வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் வற்புறுத்துகிறது. திராவிடக் கட்சிகளின் அரு மையை இப்பொழுதாவது தேசியக் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி....

இடது... சாரிகள்

தமிழ்நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியும், மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியும் தலா 9 இடங்களில் கூட்டணி வைத்து போட் டியிடுகின்றன. மற்ற தொகு திகளில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. தி.மு.க.வுக்கு ஆத ரவு இல்லையாம். அப்படி யானால் அணி வாரியாக ஆதரிக்காமல் தனி வாரியாக ஆதரிக்கப் போகிறார்களோ! இதனை முடிவு செய்ய எத் தனை நாள் கமிட்டியோ!

அய்.. ஜே... கே!!

இந்திய ஜனநாயகக் கட்சி - சுருக்கமாக அய். ஜே.கே. என்று பெயர். பி.ஜே.பி. கூட்ட ணியில் பிரச்சினை! (யாருக்குத் தான் அங்கு அது இல்லை?) அக் கட்சியின் பிற மாநிலங் களுக்கான அமைப்புச் செய லாளர் (ஓ, அ.இ. கட்சியோ!) சேலம் லட்சுமணன் கூறுகிறார். தமி ழகத்தில் பா.ஜ.க.வை எந்தக் கட்சியும் கண்டு கொள்ளாத நேரத்தில், நரேந்திரமோடியை அழைத்து வந்து மாபெரும் கூட்டத்தைக் கூட்டி அதை பா.ஜ.க. பெயரில் நாங்கள் நடத்தினோம் நாங்கள் சந்தர்ப் பவாதத்துக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. மாறாக அவர்களின் கொள்கைக்கா கவே கூட்டணி வைத்தோம். ஆனால் எங்களுக்குக் கேட்ட தொகுதியை ஒதுக்கவில்லை என்று ஒப்பாரி வைத்துள்ளார்.

பூனைக்குட்டி இப்பொ ழுது வெளியில் வந்துவிட்டது. திரு. பச்சை முத்து செலவில் குளிர் காய்ந்தது பா.ஜ.க. என்று தெரிய வந்துள்ளது. பி.ஜே.பி.யை நம்பினால் இதுதான் கெதி - இப்பொழுதாவது தெரிந்து கொண்டால் சரி....

அது சரி.. பா.ஜ.க.வின் கொள்கைக்காகக் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறுகிறாரே - அது என்ன அப்படிப்பட்ட கொள்கை ஒரு பிற்படுத்தப் பட்டவர் உயர் ஜாதி சூழ்ச்சி வலைக்குள் சிக்கலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/77053.html#ixzz2wB5A8IgN

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள்:


அன்னையார் பணி வெல்க வெல்கவே!

இன்று (16.3.2014) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்
நினைவு நாள்.

நம்மைப் பொறுத்தவரை நமக்கு இது ஒரு வரலாற்றுக் குறிப்பு
நாள்! அவ்வளவுதான்.

ஏனெனில் அன்னையார்தம் அரும்பணி தொண்டறம் -
தொடர நம்மை மேலும் தீவிரமாக அர்ப்பணிக்க
உறுதி - சூளுரை எடுக்க வைத்த - நாளாயிற்றே!
உலகிலேயே வசவுகளால், துவளாது,
தொய்வடையாது, தொடர்ந்து என்பணியில்
(எம் அய்யாவைக் காப்பாற்றி வாழ வைக்கும்
கடமையில்) என்றும் ஓயமாட்டேன், ஒதுங்க
மாட்டேன் என்று உறுதி மலைமீது நின்று பிரகடனம்
செய்த எம் அன்னையார் வாழ்ந்த காலம்
59 ஆண்டுகளே!

இதில் 45 ஆண்டுகளுக்குமேல் அய்யா
விடமே அன்னையார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

தனக்கு அறிவுப்பற்று, மனிதப்பற்று தவிர,
வேறு எந்தப் பற்றுமே கிடையாது என்று
முழங்கிய அறிவு ஆசான் தந்தை பெரியாரையே
பற்றிக் கொண்டு, தனக்குள்ள இளமை, வலிமை
ஆகியவற்றையெல்லாம் துறந்து, தூய
தொண்டறத்தின் உருவமாய் உயர்ந்து
தன்பணியில் தளராது இறுதி மூச்சடங்கும்வரை
கொள்கைகளாக தன்னை எரித்த
ஈடு இணையற்ற எங்கள் அன்னையே
எரிந்து எரிந்து தன்னை அழித்து
ஒளி தந்து, இன்று எரிந்த பின்பும்
மங்காத வெளிச்சமாய், எங்கள் ஒளியாய்,
வழியாய் திகழும் எம்தந்தையின் காவல்
அரணே!

அய்யாவின் இமை மூடியபின், அவர் தந்த
இயக்கத்தைக் காத்துவளர்த்த எங்கள்
அன்னையே
உனது நினைவு நாளில்
- நீங்கள் நடத்திய இராவண லீலா - இராம -
இராவணப் போர் இன்று தேர்தல் களத்தில்
நடைபெறும் கால கட்டத்தில், உங்களின்
உறுதியை நாங்கள் ஏற்று
உங்கள் பயணத்தைத் தொடருகிறோம் அன்னையே!
நீங்கள் தந்த நெஞ்சுரத்தைத் தவிர,
தந்தை அளித்தகொள்கைளைத் தவிர,
வேறு எதையும் ஏற்காது
பணி தொடருவோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77055.html#ixzz2wB5SXEKH

தமிழ் ஓவியா said...


நம்மைப் பிடித்த நோய்


- குடந்தை கருணா

மோடியை வேண்டுமென்றே ஊடகங்கள் தாங்கிப்பிடிக்கின்றன என ஊடகங்களின் ஒரு சார்பு நிலையை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் அம்பலப்படுத்தியதற்கு ஆத்திரப்படும் ஊடகங்கள், தமிழ் நாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கிலும் அதே ஒரு சார்பு அணுகுமுறையைத் தானே கையாள்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்திற்கு வழக்காடாமல் விடுப்பு எடுப்ப தற்கு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பவானி சிங்கிற்கு அவரது ஒரு நாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு அம்மையாருக்கு வருமானால், அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியாது; தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கை, வாய்தா வாங்கியே இழுத் தடித்து வரும் நிலையில், தற்போது, இறுதி வாதத் திற்கு வழக்கு வந்துள்ளது.

இந்திய அரசியலில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என மேடை தோறும் ஜெயலலிதா பேசி வரும் நிலையில் இந்த வழக்கின் இறுதி வாதத்திற்கு, அரசு வழக்கறிஞர் வராமல் தவிர்ப்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆனால், இந்த செய்தியை நம்மூர் பத்திரிகைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்தன? தினகரன், முரசொலி பத்திரிக்கைகள் தவிர்த்து, மற்ற பத்திரி கைகளான தினத்தந்தி 12-ஆம் பக்கத்திலும், தினமலர் 9-ஆம் பக்கத்திலும், தி இந்து தமிழ், 16-ஆம் பக்கத் திலும், தினமணி 11-ஆம் பக்கத்திலும், டைம்ஸ் ஆப் இந்தியா 9-ஆம் பக்கத்திலும், தி இந்து ஆங்கிலம் 4-ஆம் பக்கத்திலும் செய்தியை வெளியிட்டுள்ளன.

டெக்கான் கிரானிகல், மாலை முரசு பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிடவில்லை. அதே நேரத்தில், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ராஜ் நாத்சிங்கையும், ரஜினிகாந்தையும் சந்தித்தது, தனிப்பட்ட சந்திப்பு என அவரே சொன்னாலும், அதில் அரசியல் இருக்கிறது;

திமுகவிற்கு பாதிப்பாகுமா? என்றெல்லாம் துப்பு துலக்கி, முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் இந்த பத்திரிகைகள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதான வழக்கில், நமக்குத் தெரிந்து, அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளதை ஒரு முக்கியம் வாய்ந்த செய்தியாக கருதாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நம்மைப் பிடித்த நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சொன்னாரே, அது தான் நினைவுக்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/77058.html#ixzz2wB5uqgeZ

தமிழ் ஓவியா said...

இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தாமும் உறுதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் போர்க்குற்றம்: சுதந்திரமான விசாரணை, தொடர் நடவடிக்கை தேவை!


இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!



இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் _ - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை _- சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு -_ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக் கொண்டபடி செய்திருக்க வேண்டும்;

இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!



- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஒரு சிங்களரின் உள்ளத்திலிருந்து...


சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர் நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி.

மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து...

இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக்கென்ற தனித்த சுயஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார்கள். 75 சதவீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவதுமாக மாற்றி எழுத வேண்டும். தமிழர்களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை அவர்களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.

அய்.நா. சபையின் மூன்றாவது தீர்மானம் எதையாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய். ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம். உலக நாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.

என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார்கள். தேசப் பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர்களைத்தான்; இலங்கையை அல்ல. இலங்கையில் எல்லாத் தரப்பினரும் அமைதியோடும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனது கொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடுவது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

தமிழ் ஓவியா said...


இதய அடைப்பை சரிசெய்யும் வெள்ளைப் பூண்டு

வெள்ளைப்பூண்டு உடல் வெப்பத்தை அதிகப் படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக் கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை நீங்கும்.

நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் சில உணவுப் பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த் துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும் உள்ள செலி னீயம் என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப் படுத்தும்.

நரம்பு தளர்ச்சி நீங்க: நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க: நன்றாக உறங்க வேண்டும். மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்தக் கூடாது.

தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்ற வற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.

மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கி விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2E1bPf

தமிழ் ஓவியா said...

பாதாமை பயமில்லாமல் சாப்பிடலாம்

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு.

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளே வனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்...

இதயத் துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கெனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை அய்ந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப்போனால், பாதாம் எடுக்காத வர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமே கூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக் கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2M4zhw

தமிழ் ஓவியா said...


வயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க


நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்வது நமது கடமை. அவ்வாறு இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது.

இதனை தான் சித்த மருத்து வர்கள் வலியுறுத்துகின்றனர். வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை. அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர்.

இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட் களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் மனது இலகுவாகும், நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.

இந்த பயறு வகைகளில் பி காம்பளக்ஸ், வைட்டமின் பி1, பி2, பி3, பிஎஸ், பி6, பி12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் டி, இ, சி மற்றும் கே, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.

பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத் தையும் கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத் துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது.

தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சினைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2ho41j

தமிழ் ஓவியா said...

தலைவலிக்கு கை வைத்தியம்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலை வலி குறையும்.

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றி யில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படி யென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலை வலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற் றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2qaCzU

தமிழ் ஓவியா said...

வைட்டமின் சி நிறைந்த நெல்லி!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக் கனியில் உள்ளது.

இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்ற வற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2wGzJf