Search This Blog

1.3.14

தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?-பெரியார்

நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்

வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலில் சுயமரியாதைக் காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், மேலால் நடக்க வேண்டிய பிரசாரங்களைப் பற்றியும் எனக்குப் பல கடிதங்களும், கேள்விகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் தோழர் இ.ஈ.நாயகம் அவர்களுடைய கடிதம் முக்கியமானது. சுயமரியாதைக்காரர்களுக்குத் தேர்தல் விஷயத்தில் இன்ன கட்சியைத் தான் ஆதரிப்பது என்கின்ற எவ்வித நிபந்தனையும் இது வரை ஏற்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே. தேர்தல்களில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற தன்மையை மாத்திரம் தான் இதுவரை சு.ம.காரர்கள் கவனித்து வருகிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிப்பது என்கின்ற நிலை ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற கொள்கைக்குப் பாதகமில்லாமல் நமது குறைந்த பட்சக் கொள்கையை ஒப்புக் கொள்ளக் கூடிய கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டி வரும்.

ஜஸ்டிஸ் கட்சியோ! பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளப் போகின்றது. அதற்கேற்றாப் போல் சுயமரியாதைக்காரர் பலருக்கும் காங்கிரசில் சேரலாமா என்கின்ற எண்ணம் இருந்து வருகின்றது. சுயமரியாதைக்காரர்களுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியானது பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித் திட்ட கொள்கையையும் அது வழவழா செய்துவிட்டு, பார்ப்பனரல்லாத தொழிலாளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் விஷயத்தில் தக்க மாறுதலுக்கு ஏற்பாடு செய்து அவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தக்க கொள்கையும், திட்டமும் கொண்டதாக இல்லையானால் சுயமரியாதைக்காரர்களில் பலர் காங்கிரசில் சேருவதை நாம் ஆட்ஷேபிக்க முடியாது.

காங்கிரஸ் பார்ப்பனர் ஆதிக்க ஸ்தாபனம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் ஜஸ்டிஸ் கக்ஷி இன்று பணக்காரர்கள் ஆதிக்க ஸ்தாபனம் என்று சொல்லத்தக்க நிலையில் இருப்பதை யாராவது மறுக்க முடியுமா? என்று கேட்கிறோம். "புழுத்ததின் மீது நாய் விட்டை இட்டது" என்பது போல், ஜஸ்டிஸ் கக்ஷி இந்நிலைமையில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்வது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டால் பிறகு காங்கிரசுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்பது நமக்கு விளங்கவில்லை?

ஜஸ்டிஸ் கட்சி, பார்ப்பனர்களை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும் என்றாலும் அதன் பிறகு செய்யப்போகும் காரியம் என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டாமா? என்று தான் கேட்கின்றோம்.

சமுதாய விஷயத்தில் காங்கிரஸ் பெரிதும் பிற்போக்கான புத்தியுடையது என்பதையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு முட்டுக் கட்டை போடுகின்றது என்பதையும், பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் சுயராஜ்யம் என்று சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.

அது போலவே ஜஸ்டிஸ் கட்சியும் உண்மையான வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடையூராக ஆகிக் கொண்டு வருவதுடன் சமுதாய விஷயத்திலும், பொருளாதாரத் துறையிலும் மிகவும் பிற்போக்கான தன்மையில் போய்க் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

காங்கிரஸ் ஸ்தாபனங்களில் பார்ப்பனர் எண்ணிக்கை அதிகமாய் இருப்பது போலவே, ஜஸ்டிஸ் ஸ்தாபனங்களில் பணக்காரர்களுடைய எண்ணிக்கையே அதிகமாய் இருக்கின்றது.

காங்கிரசில் எப்படி பார்ப்பனக் கூலிகளே பெரிதும் "பார்ப்பனரல்லாதாராய்" விளங்குகின்றார்களோ, அது போலவே பணக்காரர்களின் கூலிகளே பெரிதும் "ஏழை மக்களாகவும், தாழ்த்தப் பட்ட மக்களாகவும்" விளங்குகின்றார்களே ஒழிய, உண்மையான ஏழைகள், தொழிலாளிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களுக்கு அதில் இடமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது.

சுயமரியாதை இயக்கம் உண்மையான சமத்துவ நோக்கம் கொண்டது என்று ஒரு நடு நிலைமை நியாயாதிபதியின் தீர்ப்பைப் பெற வேண்டுமானால், இன்றைய ஜஸ்டிஸ் கட்சியையும் காங்கிரசையும் ஒன்று போல இல்லாவிட்டாலும், ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசம் கொண்டதல்ல என்றுதான் கருதியாக வேண்டும் என்கின்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சுயமரியாதை இயக்கமானது காங்கிரசினால் அதன் முழு பலத்தோடு எதிர்க்கப்பட்டு வந்தது உண்மை என்றாலும், அதனால் யாதொரு கெடுதியும் சு.ம. இயக்கத்திற்கு ஏற்பட்டுவிடவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதோடு சுயமரியாதை இயக்கம் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் சிறிதும் தயவு தாட்சண்யமின்றி சமய சந்தர்ப்பமின்றியும் நண்பர் நண்பரல்லாதவர்கள் என்பதையும் கவனியாமல் வெளியாக்கியும் எதிர்த்தும் வந்திருக்கின்றது.

ஆனால் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை சமய சந்தர்ப்பம் இல்லாமல் ஆதரித்தும், நல்லவர் யார், கெட்டவர் யார்? பொது நலத் தலைவர் யார், சுயநலத் தலைவர் யார்? என்பதைக் கவனிக்காமலும் எல்லாச் சமயத்திலும் அவர்களது எல்லாக் காரியத்தையும் ஆதரித்து வந்திருக்கிறது.

இவற்றின் பயன் என்னவாய் முடிந்தது என்றால் காங்கிரசினால் சுயமரியாதை இயக்கத்துக்கு எவ்வித கெடுதலும் செய்ய முடியவில்லை என்பதோடு காங்கிரஸ்காரருக்கு சுயமரியாதை இயக்கத்தை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் சில காங்கிரஸ்காரர்களிடமாவது வந்து இருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சிக்கோ பல நன்மைகள் செய்யக் கூடிய சந்தர்ப்பமிருந்தும் அது சுயமரியாதை இயக்கத்துக்கு யாதொரு நன்மையும் செய்யவில்லை என்பதோடு, சுயமரியாதை இயக்கத்தை ஒடுக்க ஜஸ்டிஸ் கட்சியார் முயற்சிக்கிறார்கள் என்று பொது ஜனங்கள் நினைக்க வேண்டிய அளவுக்கும் தைரியமாய் நடந்து கொண்டதான பலன் தான் ஏற்பட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி இருக்கிறது.

எப்படி இருந்தபோதிலும் சுயமரியாதைக்காரர்கள் சமூக வாழ்வு விஷயத்திலும், பொருளாதார விஷயத்திலும் தாழ்த்தப்பட்டு ஜீவனத்துக்குக் கஷ்டப்படும் இழி மக்களாய்க் கருதப்படும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற விஷயத்தைத் தங்களது முக்கிய நோக்கங்களில் ஒன்றாய்க் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள முடியாது.

சுயமரியாதைக்காரர்கள் பொருளாதார விஷயத்தையே முக்கியமாய் கருதுவதா? அல்லது ஜாதி, மத மூடநம்பிக்கை ஆகியவைகளின் கொடுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் வேலையையே முக்கியமாய் கருதுவதா என்பதை இப்போது ஒரு முக்கிய பிரச்சினையாக சில சு.ம. தோழர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதை சீக்கிரத்தில் முடிவு கட்டித்தான் தீர வேண்டும்.

சமுதாய விஷயத்திலேயே உழைப்பதென்றாலும் ஜாதி, மத மூட நம்பிக்கை விஷயத்தில் உழைப்பதானாலும் பொருளாதாரப் பிரச்சினை அதிலிருந்து விலகியதாகாது. எவ்விதப் பிரசாரமும், சட்டத்திற்கும், சமாதான தன்மைக்கும் கட்டுப்பட்டு செய்வதென்பதுதான் சுயமரியாதைக் காரர்கள் கொள்கை என்பதை நாம் மறுபடியும் ஒருதரம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்படும் பிரசாரம் என்பதில் ஜாதி மத பொருளாதார மூடநம்பிக்கைகளை ஒழித்தலும், உயர்வு தாழ்வை அகற்றலுமான கொள்கை சேர்ந்ததல்ல என்று அரசாங்கத்தார் கருதுவார்களானால் அது விஷயத்திலும் நாம் சுயமரியாதைக்காரர் சீக்கிரத்தில் ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

எனவே இந்த விஷயங்கள் எல்லாம் சமீபத்தில் நடைபெறப் போகும் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடும், காங்கிரஸ் மகாநாடும், மாகாண மகாநாடும் நடந்தவுடன் சுயமரியாதை மகாநாடோ, அல்லது சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் மகாநாடோ ஒன்று கூட்டி அதில் முடிவு செய்து கொள்ள வேண்டியவர்களாயிருப்பதால் அது வரையில் எல்லாத் துறையிலும் நம் தோழர்கள் பொருத்து இருக்க வேண்டும் என்றும், அதை எதிர்பார்த்தே நானும் பொருத்து இருக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சுயமரியாதைச் சங்கத் தலைவர் என்கின்ற முறையில் தோழர் கீ.ஓ.ஷண்முகம் அவர்களது அபிப்பிராயமும் இதில் கலந்து இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

--------------------------ஈ.வெ.ராமசாமி--”பகுத்தறிவு” தலையங்கம் 16.09.1934

43 comments:

தமிழ் ஓவியா said...

நாமம்! - கலைஞர் பதில்

தொகுதி நிர்ணய கமிஷன் சென்னை வருவது குறித்து தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களிடம் நிருபர்கள் சில கேள்விகளைக் எழுப்பினர். ஒரு நிருபர், வைஷ்ணவகோயில் உள்ள பகுதிகளாகப் பார்த்து தாழ்த்தப்பட்டோர் தொகுதி ஒதுக்கப்படுகிறதே என்று கேட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாமம் போட்ட பகுதிகள் அவர்களுக்குத் தொகுதிகளாக இயற்கையாகவே அமைந்து விட்டது என்று பலத்த சிரிப்புக்கிடையே முதல்வர் பதில் அளித்தார். (18.11.1974)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufWyHjzu

தமிழ் ஓவியா said...

மாயாஜாலங்கள் பற்றி
சங்கராச்சாரியார்!

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச் சாரியாரிடம் மந்திர மாயாஜாலங்கள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது:

மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையை பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகில் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத்துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டது அல்ல. (23.10.74 செய்தித்தாள்களில்)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufX69hpZ

தமிழ் ஓவியா said...

இந்தியில் ஒரு சிறுகதை

சிறீராமச்சந்திரன் அயோத்தி நகருக்கு திரும்பி வந்த போது பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் சீரும் சிறப்பு மிக்க வரவேற்பு விழாக்கள் நடத்தப்பட்டன. உள்ளூர் பத்திரிகைகளும் வெளியூர் பத்திரிகைகளும் பல நாட்கள் இது பற்றி செய்திகளை வெளியிட்டன.

ஒரு நாள் சிறீராமன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவரது தம்பி பரதன் மிகுந்த பரபரப்புடன் அவரை நோக்கி வந்து, மதிப்புக்குரிய அண்ணா; இன்றைய பத்திரிகை பார்த்தீர்களா? என்று வினவினான்.

ராமன், பார்க்கவில்லையே என்று பதிலளித்தார். பரதன் பல்வேறு பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காகிதக்கட்டை காண்பித்து விட்டு சொன்னான்; நம் நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண பிரஜையான ரஜகன் என்ற சலவைத் தொழிலாளி தங்கள் அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறான்.

மதிப்புக்குரிய சீதை அண்ணிக்கு ராவணன் விருந்தளித் தாரல்லவா; இதை மய்யமாக வைத்து உங்கள் இருவர் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவன் பத்திரிகைகளில் அறிக்கை விடுத்துள்ளான் என்றதும், சிறீராமன் பத்திரிகைச் செய்திகளைப் படித்து பார்த்தார். அவர் முகத்தில் இருட்டு ஏறியது. பரதனைப் பார்த்து அவர் சொன்னார். தம்பீ, உனக்குத் தெரியுமல்லவா இது விஷமிகளின் கற்பனை என்று. பரதன் மிகப் பணிவுடன் பதில் அளித்தான்: மதிப்புக்குரிய அண்ணா, நான் தங்களது அந்தரங்கச் செயலாளனல்லவா! எனக்கு அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது தெரியாதா? இவற்றை நாம் காரி உமிழ்ந்து புறக்கணிக்க வேண்டும். இருப்பினும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டுமல்லவா... இப்படிப்பட்ட சாதாரண பிரச்சினைகள் பெரும் குற்றச்சாட்டுகளாக மாறலாம்..

கடவுளே! அப்படியானால் நாம் என்ன செய்வது? தேர்தல் நெருங்குகிறது. எனது பப்ளிக் இமேஜ் போய் விடுமே ராமன் ஆழ்ந்த கவலையுடன் கூறினார்.

அண்ணி, அக்னி பரீட்சை நடத்தட்டும் - பரதன் ஆலோசனை வழங்கினான்.

டாம்ஃபூள்! புதிய சட்டப்படி அது தற்கொலை முயற்சி என்பது உனக்குத் தெரியாதா? ராமன் கோபத்துடன் கத்தினார். சகோதரர்கள் இருவரும் சிந்தனையில் மூழ்கினர். திடீரென்று பரதன் ஆரவாரத்துடன் அளவற்ற மகிழ்ச்சி கலந்த குரலில், ஒன்டர்ஃபுள், நானும் உலகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இதற்கு சரியான பரிகாரம் கிடைத்துவிட்டது என்று சத்தமிட்டு துள்ளிக் குதித்தான்.

அடுத்த நாள் பத்திரிகைகளில் தனது பெயரில் வெளியாகியிருந்த ஒரு அறிக்கைக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை யென்றும், தான் அப்படி ஒரு அறிக்கை விடுவது பற்றி கனவில் கூட எண்ணவில்லையென்றும் சொல்லி, தான் சிறீராமன் மீதும் அவர் துணைவியார் மீதும் வைத்திருக்கும் மதிப்பை விளக்கியும், அவர்களது ஆட்சி சிறப்பை வர்ணித்தும் ரஜகன் விடுத்திருந்த அறிக்கை முதற் பக்கங்களிலேயே வெளியாகியிருந்தது.

அதற்கு அடுத்த நாள் பத்திரிகை ஒன்றின் ஒருமூலை யில், ரஜகன் என்பவர் சர்க்கார் கணக்குப் பிள்ளையாக நியமனம் செய்யப்பட்ட செய்தி அச்சிடப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXL6NPg

தமிழ் ஓவியா said...

விதவைத் துயரம்

என்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படி என்றால், மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தா திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீ யாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்பு லோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்!

கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந் தாலும் - ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டம் இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள் காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா-இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

இப்போதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும்; மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்பந்தம் கொஞ்ச காலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண் யத்தை உத்தேசித்துப் பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்குத் தன் பெண்சாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சையைத் தணிக்க வேண்டியதும்;

மிருகங்களுக்கு ஏற்படும் தினவைத் தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொறிக்கல் நட்டு வைக்க வேண்டியதும் 32 தர்மங்களில் 2 தர்மங்களாகக் கொண்டு - கோயில்களில் தாசிகளை வைத்தும், கிராமங்கள்தோறும் நத்தங்களில் ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு - நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்ட முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது, ஜீவகாருண்யப் புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.

- (குடிஅரசு, 27.10.1929)

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXSfHBe

தமிழ் ஓவியா said...

சிந்தனைத் துணுக்குகள்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,
2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? -சித்திரபுத்திரன்

Read more: http://viduthalai.in/page-8/76123.html#ixzz2ufXaQKtS

தமிழ் ஓவியா said...


வன்முறையைப் பொது வாழ்விலிருந்து விரட்டியடிப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாடு நமக் கும், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கும் உகந்தது அல்ல; என்றாலும், அதற்காக காங்கிரசு அலுவலகத்தைத் தாக்குவது, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது சரியான அணுகுமுறை யல்ல; தமிழ்நாட்டின் பொது வாழ்விலிருந்து வன்முறைகளை விரட்டியடிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனைக்குள்ளாகி 23 ஆண்டுகளாக அவர்களது கருணை மனுவை பரிசீலிக்காமல், காலதாமதத்திற்குக் காரணமான மத்திய அரசின் செயல், நீதி கேட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அநியாயம் என்பதால், அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலை மையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. (இதற்குமுன் வீரப்பன் கூட்டாளி களான நான்கு பேருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி - வழங்கப்பட்ட நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இது) அத் தீர்ப்பில் இதற்குமேல் அவர்களது விடுதலைபற்றி சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய பொறுப்பு - உரிய அரசுகளுக்கு உண்டு என்று அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டதையொட்டி, தமிழக முதல் வர் எடுத்து அறிவித்த முடிவு மனிதநேய அடிப் படையில் விடுதலை என்ற போதிலும், மத்திய அரசுக்குக் கெடு விதித்து அறிவித்த முறை அவசர, அதீத போக்கு என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், முடிவு எடுக்கத் தகுதியுள்ள அரசு மாநில அரசு என்பதும் சிறைத் தண்டனையைக் குறைக்கும் (Remission) அதிகாரம் சட்டப்படி அதற்கு உண்டு என்பதெல்லாம் சட்டப்பூர்வ நிலைப்பாடே!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதனுள் விரிவாகச் செல்வது சட்டப் படி சரியான நிலைப்பாடாக இருக்காது என்பதால், நாம் இங்கே விளக்க விரும்பவில்லை.

காங்கிரசு நிலைப்பாடும் - வன்முறை செயல்பாடுகளும்!

காங்கிரசு கட்சியின் நிலைப்பாட்டில் நமக்கு உடன்பாடு இல்லை - மனிதநேய அடிப்படை யில், அதற்காக அதனை (காங்கிரசு கட்சியின் நிலைப்பாட்டை) எதிர்க்கும் வகையில், சில கட்சிகளோ, நண்பர்களோ, நபர்களோ, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது, காங்கிரசுக் கட்சி அலுவலகத்தைச் சென்று தாக்குவது என்பது சரியான பரிகாரமோ, முறையாகவோ இருக்காது. அது தவறான வன்முறை வெளிப்பாடாகும்.

வன்முறைகளை விரட்டியடிப்போம்!

எழுப்பப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அவற்றை உடைப்பது, ஊனப்படுத்துவது அசல் அரசியல் அநாகரிகம் ஆகும். இதை வன்மை யாகக் கண்டிக்கிறோம்.

காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மனித நேயம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்; என் றாலும், அதற்கு மாற்று- சிலைகள்மீதும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் என்பது தவறான அணுகுமுறையாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்களை முன்கூட்டியே அப்புறப்படுத்தி (Whisking Away) அதன்மூலம் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும்.

அதுபோலவே, கட்சித் தலைவர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் முறையாகாது - அதனையும் கண்டிக்கிறோம்.

வன்முறையை தமிழகத்தின் பொதுவாழ் விலிருந்து விரட்டியடிக்கவேண்டும்; காவல் துறையும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை
28.2.2014

Read more: http://viduthalai.in/e-paper/76091.html#ixzz2ufY2ieKl

தமிழ் ஓவியா said...


சுப்பிரமணியசாமிக்குத் தங்கப் பூணூலாம்!


திருப்பரங்குன்றம் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உபயமாக வந்த தங்கப் பூணூல்
(தினமணி, 27.2.2014, பக்கம் 2)

இதற்கு முன்பு காஞ்சி ஜெயேந்திரர் மூன்று கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவித்தார்.

கடவுள்களே, இந்த நாட்டில் ஒரு ஜாதியைச் சேர்ந்ததாக இருக்கிறது. உலகத்தில் இதுபோன்ற நிலை உண்டா? கடவுள் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்துவிட்டது. பார்ப்பனர்கள் கடவுளைக் காப்பாற்ற நினைப்பது தங்கள் ஜாதியின் உயர்வைக் கட்டிக் காப்பாற்றத்தான் என்று தந்தை பெரியாரும், திராவிடர் கழகத்தினரும் கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?

தேவாதீனம் ஜகத்சர்வம்
மந்திரா தீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிராமணாதீனம்
பிராமண மம தேவதா

என்பது இருக்கு வேத சுலோகம் (ரிக் வேதம், 62 ஆவது பிரிவு, 10 ஆவது சுலோகம்).

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிரா மணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே, பிராமணனே நமது கடவுள் என்பது இதன் பொருள்.

கடவுளைக் கும்பிடும் சூத்திர, பஞ்சம சகோ தரர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/76095.html#ixzz2ufYE9OxM

தமிழ் ஓவியா said...


பாரு... பாரு... மோடி வித்தை பாரு!

புதுடில்லி.பிப்.28- மோடி வித்தைகளை அரங்கேற்ற விதம்விதமாகத் திட்ட மிட்டு பிரச்சாரம் செய்கி றார்களாம். தேநீர்க் கடை களில் காணொலிக் காட்சி, மீன் கடைகளில் பிரச்சாரம் என்று பல வடிவங்களில் பிரச்சாரம் அரங்கேற்றப் படுகின்றது.

அந்த வகையில் மிகவும் திட்டமிடப்பட்டு கவிஞர் களின் சம்மேளனம் கவிஞர் களைக் கொண்டு பாடல்கள் எழுதப்பட்டு நமோ பஜனை நிகழ்ச்சிகள்மூலம் மோடியை நாட்டைக் காக் கும் இரட்சகர் என்றும், எல் லாம் செய்யவல்ல தலை வர் என்றும் வருணித்துத் துதி பாடுகிறார்களாம்.

பாஜகவின் செயல்பாடு, ஒருங்கிணைப்புக்குழு ஏற் பாட்டாளர் ஹரி ஓம் பன் வார் என்பவரின் தலைமை யில் கவி சம்மேளனம் செயல்பட உள்ளது.

30 முதல் 35 கவிஞர் களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகள் கிராமங் களை முன்னிறுத்தி மோடி பஜனை அரங்கேற்றப்பட உள்ளது. சுமார் 300 மக்கள வைத் தொகுதிகளை இலக் காகக் கொண்டு நடத்தப் படும் நிகழ்ச்சிகளில் பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கலை நிகழ்ச் சிகளில் பாஜக தலைவர்கள் யாரும் பங்கேற்க மாட் டார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக் கென்றே மோடியின் பேச்சு பதிவு செய்யப்பட்டு 3-டி பெரிய திரைகளைக் கொண்டு கிராமப்புறங் களில் திரையிடப்பட உள் ளது.

மோடி நேரில் செல்ல முடியாத பகுதிகளை அடை யாளம் கண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. தேவைப்பட்டால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர்.

மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தனி யாக 30 குழுக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வீதி நாட கங்கள் மூலம் மோடியின் செய்திகள் பிரச்சாரம் செய் யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/76093.html#ixzz2ufYSlAmE

தமிழ் ஓவியா said...


அரசியல் இலாபம்


அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே செய்யாது. - (குடிஅரசு, 31.7.1927)

Read more: http://viduthalai.in/page-2/76098.html#ixzz2ufYdshp2

தமிழ் ஓவியா said...

ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்க செய்ய வைப்பது பத்திரிகைகள்தான்

பணம் வாங்கிக்கொண்டு ஆதாய செய்திகள் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

புதுடில்லி, பிப் 28-பணம் வாங்கிக் கொண்டு ஆதாய செய்திகளை போடு வதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். இப்படி யாரோ ஒரு சிலருக்கு ஆதாயமாக செய்தி போட்டு பரபரப்பு ஏற்படுத்த கூடாது. இதைத் தடுக்க பத்திரிகைகளே சுயமாக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்திய பத்திரிகைகள் சங்கம் (அய்என்எஸ்) 75 ஆம் ஆண்டை தொட் டுள்ளது. இதையொட்டி, இதன் பவள விழாவை டில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:

பத்திரிகைகள் என்பது இப்போதெல் லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. தொலைக்காட்சி, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் பளிங்கு பந்து போன்றது. லட்சக்கணக் கான இந்தியர்கள் இதை உற்று கவனிக் கின்றனர். செய்திகளைப் பார்த்து அவர் கள் வியப்பின் உச்சியில் உள்ளனர். அதே நேரம், உடனடி தலைப்பு செய்திகள், புதிய செய்திகள் (பிரேக்கிங் நியூஸ்) என்ற அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, நாடு பல கடுமையான சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும், தகவலாக இருந்தாலும், ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி விடு கின்றன.

பணம் வாங்கிக்கொண்டோ, பணம் கொடுத்தோ எந்தவித செய்தியையும் வெளியிட்டு விட முடியும் என்று சிலர் எண்ணுகின்றனர். இந்த ஆதாயச் செய்தி கள் இன்னும் பரபரப்பை ஏற்படுத்து வதுடன், தவறான தகவல்களை உண்மை போல உலவ விடுகின்றன ஊடகங்கள். இந்தப் போக்கு தவறானது. இதை உடனே தடுக்கவேண்டும். இதற்குப் பத்திரிகை கள்தான் முயற்சி எடுக்கவேண்டும். இதற்கு அவர்களே ஒரு சுய தொழில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும். அப்போது தான் இதற்கு முடிவு கட்ட முடியும்.
தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த வழிகளை சிலர் நாடுகின் றனர். இன்னும் சிலர், விளம்பர வரு வாய்க்காக இப்படிப்பட்ட வழிகளை கையாள்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நாட்டு வளர்ச்சிக்கு, பாதுகாப்புக்கு முக்கியமாக அங்கம் வகிப்பது பத்திரிகை கள், ஊடகங்கள் தான். எந்த ஒரு முக்கிய விஷயம் பற்றிய விவாதமாக இருந்தா லும், எந்தவித மனமாச்சரியம் இன்றி, சாதக பாதகங்களை வெளிப்படையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கையாள வேண்டும். அப்படிப்பட்ட விவாதங் களால் தான் புதிய தீர்வு கிடைக்கும்; மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்; இதில் ஒளிவு மறைவு கூடவே கூடாது.

இப்படி வெளிப்படையாக நடக்கும் ஊடக விவாதங்களால், மக்களுக்கு முழு மையான தகவல்களைத் தர முடியும். அப்போது தான் ஊடகங்கள் மீது மக்களுக்கு பிடிப்பு இருக்கும். இதற்கான முக்கிய பொறுப்பு பத்திரிகைகள், ஊட கங்களைச் சார்ந்தது. இந்தப் பொறுப்பில் இருந்து ஊடகங்கள் நழுவக் கூடாது.

பொது வாழ்க்கையில் உள்ளவர்களை முறைப்படுத்தும் மிக முக்கிய பொறுப் பும் பத்திரிகைகளுக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது உண்மையான செய்தி களை மட்டும் போட வேண்டும். மக்க ளிடையே பரபரப்பை ஏற்படுத்த வேண் டும் என்பதற்காக தவறான, கற்பனை செய்திகளை போடக்கூடாது.

உண்மையான, பகுத்தாய்ந்த தகவல் களுக்கு கற்பனை, பொய்யான தகவல்கள் ஈடாகாது. மக்களிடம் எப்போது உண்மை செய்திகள்தான் எடுபடும். பத்திரிகை மீது நம்பிக்கை ஏற்படுத்தும். வதந்திகள், கிசுகிசுக்கள் எல்லாம் போகப்போக மங்கிவிடும்.

பொதுமக்களுக்கும், அவர்களுக்குப் பணிகளை செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இடையே கண்காணிப்பு பணியை மேற்கொள்வது, முக்கிய கால கட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் கடமை ஆகியவை எல்லாம் பத்திரிகைகளின் தலையாயப் பொறுப்பு கள். மொத்தத்தில் நாட்டில் அமைதி, பாதுகாப்பு, ஜனநாயக செயல்பாடு களுக்கு பத்திரிகைகள் கைகொடுப்பது மிக முக்கியமாக உள்ளது.

நலிந்த, ஏழை மக்களின், ஒடுக்கப் பட்டவர்களின் குரலை ஒலிக்கச் செய் வது, அவர்கள் வாழ்க்கை தரம் உயர, கல்வி, வேலை வாய்ப்புகள் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளை சீராக செய்ய வைப்பதும் பத்திரிகைகள் தான்.

ஆனால், பத்திரிகை செய்திகளில் இருட்டும், மங்கலான நிலையும் மட்டும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. செய்திகளில் தெளிவு தேவை; உண்மை பேச வைக்க வேண்டும். பொய் கூடாது; கற்பனை, கட்டுக்கதைகளுக்கு இடம் தரக் கூடாது.
பத்திரிகைகளின் சக்தி மகத்தானது. அதை தவறாக மதிப்பிடக்கூடாது. தனி மனித ஒழுக்கங்களை மேம்படுத்துவ தில் இருந்து நாட்டை வளர்ச்சிப் பாதை யில் கொண்டு செல்வதுவரை பத்திரிகை கள் பங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

விழாவுக்கு அய்என்எஸ் தலைவர் ரவீந்திர குமார் தலைமை தாங்கினார். இதில், அய்என்எஸ் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

அய்என்எஸ் அமைப்பு பல பெருமை களைக் கொண்டுள்ளது. பல தரப்பட்ட செய்திகளை தர பிரஸ் டிரஸ்ட் ஆப் இண்டியா (பிடிஅய்) மற்றும் பத்திரிகை கள் படிகள் எண்ணிக்கை ஆராயும் ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேசன் ஆகிய அமைப் புகளை ஏற்படுத்தியதை குறிப்பிட வேண் டும். நமது ஜனநாயகத்தின் அடிப்படையே சுதந்திரமான பத்திரிகைகள்தான். அப் படிப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை காக்க அய்என்எஸ் பல நடவடிக்கைகளை எடுத் துள்ளது பாராட்டத்தக்கது என்றும் குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப் பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-2/76101.html#ixzz2ufYmHjbz

தமிழ் ஓவியா said...

என் கருவறை பெரியார் திடல்தான்! கவிஞர் கனிமொழி எம்.பி. உரை


சென்னை.பிப். 28- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திமுக நாடாளு மன்றஉறுப்பினர் கவிஞர் கனிமொழி எழுதிய நூல்க ளுக்கான விமர்சனக் கூட்டம் நேற்று (27.2.2014) மாலை நடைபெற்றது.

கவிஞர் கனிமொழி எழு திய கட்டுரை நூல்கள், கவிதை நூல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு விமர்சனம் செய்துபேசினார்.

கவிஞர் கனிமொழி ஏற் புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவதுபெரிய விஷ யம்.கட்சிக் கூட்டங்கள் நடத் திடலாம். தமிழகத்தில் வாசிப்பு அந்த நிலையில் உள்ளது. பல நூல்விமர்சனக் கூட்டங்களுக்கு நான் சென் றுள்ளேன். பெரியார் திடல் எனக்கும் கருவறைதான். என்னுடைய எழுத்துக்களில் எந்த இடத்தில் மோதல் வரும் என்பது எனக்குத்தெரி யும். உங்களைப் போன்றவர் களிடம் பேச நேரம் கிடைக் காதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களிடம் பேசும்போது கிடைக்கும் அனுபவம் ஒரு புத்தகத்தைப் படித்தால் கூடக்கிடைக்காது. நீங்கள் ஒதுக்கித் தரும்அந்த நேரத் திற்காகக் காத்திருக்கிறேன்.

கவிதையில் பிடிபட வில்லை, பொய் இருக்கிறது என்கிறீர்கள். நான் மிகவும் உண்மையாக இருப்பது கவிதையில்தான். ஒரு கவிதை எழுதும்வரைதான் அது என் கவிதை. எழுதி முடித்தபின் அது வாசகரு டையது. வாசிப்பவர் தன் அனுபவத்தைக் கவிதையின் பின்னால் வாசகரின் அனு பவம்இருக்கும்.கவிதை ஒரு நிலைக்கண்ணாடிமாதிரி. அனுபவத்தைத் தாண்டி வந்தால்தான் புரியும்.

மொழிபெயர்ப்பில் பல விஷயங்கள் தொலைந்து விடும். ஒரு கவிதை தமிழில் எழுதப்பட்டு, நமக்கென்று இருப்பது கவிதை, அதையே நமக்கு தொடர்பில்லாத வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கப் படும் போது பல விஷயங் கள் தொலைந்து போகும்.

தமிழ் ஓவியா said...


ஆண்கள் மனதில் இல்லாத வார்த்தை பெண் விடுதலை. பிறக்கும்போதே விடுதலை உணர்வுடன் உள்ளவர்கள் ஆண்கள். ஆனால், பெண்கள் அது இல்லாமல் பிறந்தவர் கள். ஆண்களாக சொல்லி தரும் எந்த விடுதலையும் எங் களுக்கு வேண்டாம். நீங்கள் வரையறுக்க முடியாத கோடு போட முடியாத , யாரும் வழங்கி பெறுவது விடுதலை இல்லை. நாங்கள் நாங்களா கத் தேடும் விடுதலை. ஆண் கள் கீழே போட்டு மிதித்திட மெத்மெத்தென்று பெண்கள் இருந்து விட்டார்கள்.

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் என்று வரும் போது அந்தப் பெண்ணிடம் நியாயம் கேட்கும் நிலை தான் உள்ளது. அவமானம் அவளுக்கும், அவள் பெற் றோருக்கும். காவல் நிலை யத்தில் எந்த உடை என்று கேள்வி கேட்கிறார்கள். பக் கத்து வீட்டார் அந்த நேரத் தில் ஏன் போனாள் என்கி றார்கள். தனியே ஏன் சென்றாள் என்கிறார்கள். பெண்கள் தினமும் வேதனை, வலி இருப்பதை நினைக்கக் கூட ஆண்கள் தயாராக இல்லை. குறும்படம் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். ஆண் வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது மனைவி காபி கொடுப்பார். ஏன் இதை மாற்றி எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை?

ஒரு பெண் ஒரு நாளைக்கு 40 தோசைகள் சுடுகிறார் என்று வருகிறது. அவர் வாழ்க்கை அதிலேயே முடிந்து விடுகிறது. ஆயிரக்கணக் கான, இலட்சக்கணக்கான பெண்கள் சமையலறையி லேயே முடங்கிப்போய் விடு கிறார்கள். பெண்களுக்கு எல்லைகள் அற்ற விடுதலை வேண்டும். நான் கச்சேரிக்கு செல் வதைப்பற்றி சொன்னார்கள். அவரும் அங்கு வந்தவர் தானே? கச்சேரி நடக்கும் இடங்களில் 2,3 பேர் மட் டுமே பார்ப்பனர் அல்லாத வர்களாக இருப்பார்கள். நமக்கென்று இருந்ததை தாரைவார்த்துக் கொடுத்து விட வேண்டுமா? பரத நாட் டியம் என்னுடையது. இசை எனக்கும் பாத்யதையானது. ஏன் விட்டுக்கொடுக்க வேண் டும்? மல்லிகா நடன நிகழ்ச்சி வரும். பெண் கருக்கலைப் புக்கு வருவாள். பெண் மருத் துவர் கேட்பார் நீயும் பெண் தானே? ஒரு தாய்தானே இப்படி கருவைக்கலைக்க லாமா? அதற்கு அந்தத் தாய் சொல்லுவாள் உனக்கென்ன? டாக்டராகி நகரில் இருக்கிறாய். நான் 5 பிள்ளைகளோடு கணவனோடு சேர்ந்து வாழ வேண்டாமா? இந்த குழந்தையோடு சென்றால் நான் கணவனைவிட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்பாள். திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களால் பாராட்டு பெற்றதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

நான் எங்கிருந்தாலும், என் கருவறை, எனக்குரிய இடம் இந்தப் பெரியார் திடல்தான் என்றார் கவிஞர் கனிமொழி.

முன்னதாக வாசகர் வட்ட துணை செயலாளர் த.சுப்பிரமணியன் வரவேற்றார். பெரியார் பற்றிய பாடலை விஜயா தாயன்பன் பாடினார்.

தொமுச பேரவை (உழைப்பாளர் இதழாசிரியர்) நிர்வாகி அ.சி.அருணகிரி தொடங்க உரை ஆற்றினார். திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் கனிமொழி, திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயண்சிங் பயனாடை மற்றும் கேடயம் வழங்கினார். வாசகர் வட்டப் பொருளாளர் கு.மனோகரன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/76132.html#ixzz2ufa3oKEM

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் நிதியளிப்பு மனந்திறக்கிறார் ஒரு தோழர்

மயிலாடுதுறை மாவட்ட கழக சார்பில் சீர்காழி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ந.நாராயணன் தந்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், புலவர் இராவணன் உள்ளனர்.

திராவிடர் கழகத்தின் சார் பில் திருச்சியில் அமையவி ருக்கும் பெரியார் உலகத் திற்கான நன்கொடை பெற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன் ஆகியோ ரோடு சீர்காழி ஒன்றிய கழகச் செயலாளர் ந.நாராயணன் அவர்களை சந்திக்க பூம்பு கார் சென்றிருந்தோம்.

எங்களைக் கண்டதும் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்று தேநீர் விருந்த ளித்து உரையாடினார் நாராய ணன். நான் முழுமையான கடவுள் மறுப்பாளன். என்னு டைய பிள்ளைகளை அப்படி வளர்க்கத் தவறிவிட்டேன். அந்த மன உறுத்தலுக்கு அடிக் கடி ஆளாகிறேன். இதனா லேயே சில நாள் வீட்டில் கோபித்துக் கொண்டு உணவு விடுதியில் சாப்பிட்டேன். வீட்டையே திருத்த முடியாத என்னால் எப்படி ஊரை திருத்த தகுதியாவேன்? என தொடர்ந்து புலம்பிக் கொண் டிருந்தார். கழகப் பொதுச் செயலாளர், நாம் பகுத்தறி வாளர்கள், ஆத்திரப்படக் கூடாது என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தினார்.

நாராயணன் அவர்களோ, கழகப் பொதுச் செயலாள ரைப் பார்த்து நான் அந்தக் காலத்து பி.ஏ. எங்கள் பகுதி யிலேயே பள்ளிக்கூடம் சென்று படித்தவன் நான்தான். அதனாலேயே என்னை பள் ளிக்கூடத்தார் என்றுதான் கூப்பிடுவார்கள். நான் பூம்புகார் சுற்றுலாத் துறை யில் பணியாற்றி ஓய்வு பெற் றவன். பெரியார் இல்லையா னால் இந்த வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்குமா? எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும். என் பிள்ளைகள் உட்பட ஒரு அரங்கு நிறையும் அளவிற்கு இளைஞர்களைக் கலந்து கொள்ள செய்கிறேன். இதற் கான முழு செலவுத் தொகை யும் நானே ஏற்கிறேன். இது எனது சுயநலம்தான் என்றார்.

இதில் சுயநலம் ஒன்றும் இல்லை. உங்கள் வீட்டு பிள் ளைகளோடு பல தோழர்கள் பயன்பெற வாய்ப்பு ஏற் படும். அவசியம் ஏற்பாடு செய்வோம் என்றார் துரை. சந்திரசேகரன்.
நாராயணன் அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்த வர்தான். அவர் மூலம் அந்த ஊர் பிரமுகர்களை சந்தித்து நன்கொடை பெறலாம் என சென்ற எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிலைக்கு எவ்வளவு நன் கொடை? என அவர்கேட்க குறைந்தபட்சம் ஒரு பவு னுக்கான தொகை ரூ. 25 ஆயி ரம் என்று சொன்னது தான் தாம தம், உடனே ஒரு காசோலையை தந்து தன் சார் பில் ரூ.25 ஆயிரத்தை அளிப்பதாக கூறி காசோலையை பூர்த்தி செய்யச் சொன்னார். சற்றும் எதிர்பாராத நானும் மாவட் டத் தலைவரும் மிக்க நன்றி என்று கூறினோம். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக் குத்தான் நன்றி சொல்ல வேண் டும் என்று திரும்ப திரும்ப வழி நெடுகச் சொல்லி மனதை நெகிழ வைத்தார் நாராயணன்.

Read more: http://viduthalai.in/page-8/76133.html#ixzz2ufaygCR5

தமிழ் ஓவியா said...


பஸ்வான் இப்படி நடந்துகொள்ளலாமா?

லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இந்தியா அறிந்த - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, சமூகநீதிக்காக, வருணாசிரம எதிர்ப்புக்காகக் குரல் கொடுக்கும் சிறந்த போராளி - தலைசிறந்த அம்பேத்காரிஸ்டு என்று அறியப்பட்டவர்.

இளைய வயதிலேயே மக்களவையில் புகுந்த - அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் முன்னின்று நடத்திய 42 மாநாடுகளில் பெரும்பாலும் கலந்துகொண்டவர். மண்டல் காற்றின் காரணமாக நாடு தழுவிய அளவில் அறியப் பட்டவர்.

குறிப்பாக திராவிடர் கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமோடு பங்குகொண்டு சங்கநாதம் செய்த இளம் துருக்கியார்.

காரைக்குடியில் திராவிடர் கழகம் நடத்திய இராமாயண எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று எரியீட்டியாக சனாதனத்தின் மீது பாய்ந்தவர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ நடத்திய மாநாட்டிலும் பங்குகொண்டு இலங்கை சிங்கள அரசின் இனப் படுகொலைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்.

இவ்வளவு முற்போக்குச் சிந்தனையில் வளம் கொண்டவர்.

பி.ஜே.பி. தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது எளிதில் சீரணிக்கப்பட முடியாத ஒன்றே!

பதவி அரசியல் என்று வந்துவிட்டால் எந்த எதிர் முனைக்கும் தாவக் கூடியவர்களின் பட்டியலில் பஸ்வான் போன்றவர்கள் இடம்பெறுவது வருந்தத்தக்கது- கண்டிக்கத்தக்கது.

இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதற்கு மாறாக, பதவிக்காக அரசியலுக்காக, வெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான சீட்டுக்கட்டாக எதையும், யாருடனும் சமரசம் செய்து கொள்ளலாம் என்ற பிற்போக்குத்தனத்துக்கு ராஜப் பாட்டையைத் திறந்துவிடக் கூடிய ஆபத்து இதில் பதுங்கி இருக்கிறது.

பி.ஜே.பி. கூட்டணியில் அமைச்சராக இருந்தபோதே பஸ்வான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுண்டு; ஒரு கட்டத்தில் குஜராத் கலவரத்துக்குப் பிறகு, அந்த அணியிலிருந்து விலகியதன்மூலம் பொது மக்கள் மத்தியில் பஸ்வானுக்குப் பொது மன்னிப்புக் கிடைத்தது என்று சொல்லலாம்.

இப்பொழுது மீண்டும் பி.ஜே.பி.யோடு கைகோத்துக் கொண்டுள்ளாரே - இதற்கு என்ன சமாதானம் கூறப் போகிறார்?

குஜராத் கலவரத்திற்கும், மோடிக்கும் சம்பந்தமில்லை என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்ற ஒற்றை வரித் தீர்ப்பின் படுதாவுக்குள் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்.

அப்படியென்றால், குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனரா?

பி.ஜே.பி.யின் சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வர் மோடிதான் எங்களுக்கு வழிகாட்டினார்; அவரின் கட்டளைப்படித்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று பேட்டி கொடுத்ததை தெகல்கா வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டதே மறுக்க முடியுமா?

குஜராத் மாநில அரசின் உயர்காவல் துறை அதிகாரி களே மோடிக்கும், குஜராத் கலவரத்திற்கும் இடையே உள்ள இணைப்பை விலாவாரியாக எடுத்துக் கூற வில்லையா?
அதையும் தாண்டி ஒரு கேள்வி இருக்கிறது. மோடியை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு வினா உண்டு. பி.ஜே.பி.யின் அடிப்படைக் கொள்கையே இந்துத்துவாதானே. மோடியைப் பிரதமராக நிலை நிறுத்தப்பட்டது ஆர்.எஸ்.எஸின் கட்டளையின் அடிப்படையில்தானே.

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டப்படும்; தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று பி.ஜே.பி. மாநிலங் களவையின் தலைவர் அருண்ஜெட்லி கூறியதற்கு என்ன பதிலை வைத்துள்ளார் பஸ்வான்?

ஒடுக்கப்பட்ட மக்களின் - சிறுபான்மை மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டாரே பஸ்வான்!

ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்க்குரல் பஸ்வானை நோக்கிப் பாயுமா?

Read more: http://viduthalai.in/page-2/76161.html#ixzz2ulKts8FO

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் கடமை

நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)

Read more: http://viduthalai.in/page-2/76160.html#ixzz2ulL9HWd4

தமிழ் ஓவியா said...


பாஞ்சாலச் சிங்கம்


நமது பத்திரிகை முடிந்து கடைசித்தாள் அச்சுக்குப் போகுந்தறுவாயில் பாஞ்சால சிங்கம் முடிசூடா மன்னர் உண்மைத் தலைவர் லாலா லஜபதிராய் அவர்கள் திடீரென்று மாரடைப்பு வியாதியால் மரணமடைந்தா ரென்று தந்தி கிடைத்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டும் போனோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில், இருந்த - இருக்கிற - தலைவர்களில், லஜபதியவர்கள் சொல்லும் வார்த்தைக்குத் தப்பு எண்ணம் அவரது எதிரியாலும் கற்பிக்க முடியாத உத்தம வீரர் இவர் ஒருவர்தான் என்றே சொல்லவேண்டும்.

இவரது மரணத்தால் தனது மனத்திற்குப் பட்டதை தைரியமாகவும் ஒளிக்காமலும் வெளியிடக் கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் இந்தியாவில் இல்லை என்றும் சொல்லும் படியான நிலைமை உண்டாகிவிட்டது. சுயராஜ்யக் கட்சியாரைப் பார்த்து, பஞ்சாப் மாகாணத் தில் உள்ள எல்லா தொகுதிகளில் வேண்டுமானாலும் நான் ஒருவனே தேர்தலுக்கு நிற்கின்றேன்.

யாராவது வந்து என்னுடன் போட்டிபோடு வதாயிருந்தால் வாருங்கள் (ஒரு கை பார்க்கலாம் என்று சொன்ன தீரர், திரு. மோதிலால் நேருவின் வாடையே பஞ்சாப் நாட்டிற்குள் அடிக்க விடாமல் செய்த தனிவீரர். சமீபத்தில் தமிழ் நாட்டையும் மலையாளத்தையும் பார்த்து விட்டுப் போனபிறகு தமிழ் நாட்டின் நிலையை பயப்படாமல் சிறிதும் ஒளிக்காமல் வெளியிட்டவர்.

தமது ஆயுள் காலமெல்லாம் தமது உடல் பொருள் ஆவி மூன்றையும் மக்களுக்கு என ஒதுககி வைத்து விட்ட உண்மைத் தியாகி தேசத்துக்காக முதல் சீர்திருத்தத் தின் போது 20 வருஷத்திற்குமுன் நாடு கடத்தப்பட்டவர். இரண்டாவது, சீர்திருத்தத்தின் போது 15 வருஷத்திற்குமுன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வரவிடாமல் தடை செய்யப்பட்டவர். ஒத்துழையாமையின் போது இரண்டு வருடம் சிறை சென்றவர்.

3ஆவது சீர்திருத்தம் வர போவதற்கு முன் சர்க்காரால் அடியும் பட்டவர். அதாவது அதனாலேயே உயிர்விட நேர்ந்ததோ என்று எண்ணத்தக்க அளவு அடியும் பட்டவர். இப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஒரு மகான் உண்மைத் தியாகி இறந்தது ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும்.

- குடிஅரசு - தலையங்கம் - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76182.html#ixzz2ulLy2WO3

தமிழ் ஓவியா said...

அரசியலும், சத்தியமும்

திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜபதிராய் அவர்கள் பூரண சுயேச்சையே வேண்டு மென்று கேட்பவர்களான தாங்கள் ராஜ பக்திப் பிரமாணம் செய்யலாமா என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் பொய்ச் சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையான சத்தியம் செய்யவில்லை என்று சொன்னாராம்.

உடனே திரு. லாலாஜி அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசிய தாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம்.

நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர் களானவரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தி யாசங்கள் இருந்தால் இது சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல் பேசும் விஷயங்களில் எத்தனைவித வித்தியாசங்கள் இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வல்லவர்கள் யார் என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆனபோதிலும் இந்த பொய் சத்தியமுறை தற்காலத்தில் அநேக கனவான்களுக்கு மிகவும் யோக்கியமான முறையென்றேற்பட்டு திரு. அய்யங்காருக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் கொடுக்க முன் வந்திருக்கின்றார்கள்.

அதாவது திருவாளர்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலு வும் முறையே இந்தியாவின் அரசியலை நடத்த திரு. சீனிவாசய்யங்காரே தக்க பெரியாரென்றும் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களும் இந்த திரு. சீனிவாசய்யங் காரையே நம்பி இருக்கின்றார்கள் என்றும் சொல்லி அய்யங்காரை குஷால் படுத்தினார்கள்.

போதாக் குறைக்கு திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரி என்கின்ற சத்தியகீர்த்தியும், திரு. சீனிவாசய்யங்காரை விட்டால் சென்னை மாகாணத்தில் காங்கிரசை நிர்வகிக்க வேறு தக்க நபர் கிடையாது என்று பம்பாயில் சொன்னார். இவர்களே இப்படி சொல்லியிருக்க மற்றபடி இதே கூட்டத்தில் இருக்கும் திருவாளர்கள் குழந்தை குப்புசாமி அண்ணாமலை, கந்தசாமி அமித்கான் முதலான தலைவர்கள் சொல்லுவதைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டுமா என்று கேட்கின்றோம்.

எனவே அரசியல் என்பது எவ்வளவு அயோக்கியத் தனம் என்பதையும் எந்த விதத்திலும் இந்த அரசியல் ஸ்தாபனங்கள் மானம் வெட்கம் ஒழுக்கம் நாணயம் முதலியவை இல்லாதவர்களுக்கு சொந்தமாக இருக் கின்றது என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற் காகவே இதை எழுதுகின்றோமேயல்லாமல் மேற் கண்ட கனவான்களின் யோக்கியதையை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டு வதற்காக எழுதவில்லை.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76182.html#ixzz2ulM9g8Be

தமிழ் ஓவியா said...


மூடர்கள் இந்தியாவுக்கு மாத்திரந்தான் சொந்தமா?


மேல்நாட்டில் கூட இவர் சுவாமி என்றும் மோட்சம் என்றும் நரகம் என்றும் சூட்சம சரீரம் என்றும் சொல்லு கின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு சூட்சம சரீரக்காரர் தனது பத்திரிகையில் எழுதுகிறார்.

நாம் இதற்கு ஒரு பதில் தான் சொல்லக்கூடும். அது முட்டாள்களுக்கும் தம் அயோக்கியர்களுக்கும் இந்தி யாவும் சிறப்பாக தமிழ்நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான்.

கார்பொரேஷன் தலைவர்

சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சியடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும்.

மேலும் இந்த முடிவானது சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாக வோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசிய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்த வரையில் பார்ப்பனரல் லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத் தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராய பேதம் வருந்த தக்கதேயாகும். என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர் களைத் தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பரே ஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது.

சென்னை கார்ப்பொரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும் இழிவும் திரு முதலியார் காலத்தில் மாறி அதற்கு ஒரு கௌரவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

லாலா லஜபதி

திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று தியாகபூமியில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால பட்டா பிராமய்யா அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரித்து அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கி யதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக் கின்றார். எனவே வாசகர்கள தயவு செய்து பொறுமையுடன் முழுவதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMPgZLj

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

நாம் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது, மனிதன் காட்டு மிராண்டிக் காலத்தில், முட்டாளாக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டவைகளைத்தானேயொழியப் புதுமைகளை மனிதன் அறிவு பெற்றபின் செய்தவைகளை அல்ல. இதை மக்கள் நல்ல வண்ணம் உணர வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMYWYOq

தமிழ் ஓவியா said...

கோவையில் சர்வ கட்சி மாநாடு

கோயமுத்தூரில் இம்மாதம் 23ஆம் தேதி அகில இந்திய சர்வ கட்சி மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வ கட்சி மகாநாடு கூடப் போகின்றது. அதற்குக் காரியதரிசி திரு. R.K. ஷண்முகம் செட்டியார் MLA அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. C.S.இரத்தின சபாபதி முதலியாரவர்கள் MLA ஆவார்கள். மகாநாட்டு தலைவர் சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் MLC ஆவார்கள்.



எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்ப னரல்லாதார் என்பதில் நாம் எவ்வித ஆட்சேபனையும் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய் தங்கள் சமுகத் திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமுகத்திற்கும் உண்மையான யோக்கியமான பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமைகளைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்துவார்களா?

என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறை களுக்குப் பின் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று கனவான்களை யாவது உத்தேசித்து மகாநாட்டுக்கு எல்லோரும் போய் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாய்ச் சொல்வ தற்கும் வலியுறுத்துவதற்கும் முடியாமல் போனாலும் கூட சாட்சியினராகவாவது சென்று அக்கனவான்களைக் கவுரவப்படுத்த வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 18.11.1928

Read more: http://viduthalai.in/page-7/76186.html#ixzz2ulMgXBYH

தமிழ் ஓவியா said...


செயற்கை இதயம்


பிரான்சில் மருத்துவர்கள், இதயம் செயலிழந்த முதியவர் ஒருவருக்கு ஒரு கிலோ எடையுள்ள செயற்கை இதயத்தை பொருத்தியுள் ளனர். இந்த இதயம் லித்தியம் அயனிகளைக் கொண்ட மின்கலன்கள் மூலம் இயங்குகிறது. இதைப் பொருத் தியதன் மூலம் அம்முதியவர் ஐந்து ஆண்டுகள் வாழ்நாள் பாதுகாப்புடன் வாழலாம். செயற்கை இழைகள் இன்றி மாட்டின் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் இதனை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வாய்ப்புகள் குறைவு. பல உணரிகள் (ஷிமீஸீஷீக்ஷீ), நுண்செயலிகள் (Micro Processors) கொண்ட இதன் எடை ஒரு கிலோ. மருத்துவத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பிரான்சில் உள்ள கார்மட் என்ற நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள ஜார்ஜ் பொம்பிடௌ ஐரோப்பிய மருத்துவமனையில் இந்த இதயத்தை அந்த முதியவருக்குப் பொருத்த சுமார் 10 மணி நேரம் செயல்பட்டனர். இது முதல் முயற்சி என்பதால் இதயம் பொருத்தப்பட்ட முதியவர் ஒரு மாதம் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட இயலும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
- அறிவியல் ஒளி - ஜனவரி 2014 - பக்கம் 29

Read more: http://viduthalai.in/page2/76206.html#ixzz2ulNQBCMp

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் பற்றி பர்னட்


திரு. L.D பர்னட் M.A., Litt. (D. Borned) என்பவரால் எழுதப்பட்ட இந்தியா வின் இதயம்(“The Heart of Inida”) கபிலரும் பார்ப்பன எதிர்ப்பாளர் களும் என்று மகுடமிட்டு தீட்டியுள்ள பகுதி இங்கு தரப்படுகிறது. - ஆ-ர்

உலகின் கவர்ச்சியான பல பகுதிகளில் ஒன்று இந்தியாவின் தென் பகுதி. அதி லுள்ள வினோதமான பல அம்சங்களில் ஒன்று, அங்கு கலப்புப் பண்பாடு (Mixed Culture) நிலவுவது. கிறிஸ்துவுக்கு முன்னால் வட மேற்கு இந்தியாவில் நுழைந்த ஆரிய இனத்தவர்களின் இரத்தத்திற்கும், பேச்சிற் கும் முற்றிலும் வேறான திராவிடர்கள் அங்கு வாழ்கிறார்கள். அவர்களுடைய (ஆரியர்களுடைய) பண்பாடும் மொழி யும் அய்ரோப்பியர்களுடையதை ஒத்தி ருந்தது. நாளா வட்டத்தில் பார்ப்பன மதத்தின் கொள்கைகள் அந்த நாட்டிலுள்ள பழமைவாய்ந்த இறைவழிபாடுகளுடன் கலந்து அவைகளை ஒன்றாகச் சேர்த்து விட்டன. அந்தக் காலத்திலேயே திராவிடர் கள் ஆரிய நாகரிகத்திற்கு எவ்வகையிலும் குறையாத தங்கட்கென ஒரு சிறந்த நாகரி கத்தைப் பெற்றிருந்தனர். ஆரியப் படை யெடுப்பு, பார்ப்பன மதம், சமஸ்கிருத இலக்கியம் - ஆகிய இவைகளின் ஆதிக்க விளைவுகள் பழைமை வாய்ந்த திராவிடப் பண்பு, மதம் ஆகியவற்றின் அறிகுறிகளை பெரும்பாலும் இருட்டடித்த தோடல்லா மல், பல இடங்களில் முழுவதையும் அழித்தே விட்டன! அதனால் அந்தப் பழைய காலத்தின் உணர்ச்சி இன்னும் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிதும் இது தென் நாட்டின் புகழ் வாய்ந்த செய்யுள் இலக்கியங்களில் நன்றாகக் காணப்படுகிறது!

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ஆதிக்க காரர்களாக வாழ்ந்த, நார்மானியர்களைப் போலவே (Normans) தென் இந்தியாவின் பல பகுதிகளில் பார்ப்பனர்கள் இன்று செல்வாக்குப் பெற்றுள்ளனர். அரசியல், மத, படையெடுப்புகள் என்ற உரிமைகள் மூலம் அங்கே வாழ்கிறார்கள்! ஆனால் பொதுவாக இவர்கள் அங்குள்ள சூழ் நிலைகட்குத் தகுந்தாற்போல் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய மத, சமூக முறைகளை தென் இந்தியாவின் சொந்த குடிகட்கேற்ப பெருக்கிக் கொண்டு ஒன்றியுள்ளார்கள். அவர்களில் சிலர் இன்னுங்கூட அறிவாளிகளாகவும் உயர்ந்த பண்பாடு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், இன்னும் அவர்கள் (பார்ப்பனர்கள்) ஓர் விதத்தில் அன்னியர்களே! சமூகம் பல சாதிகளாகப் பகுக்கப்பட்டு பார்ப்பனர்களுடைய அரை தெய்வாம்சத் தலைமையில் (!) இருக்க வேண்டும் என்ற அவர்க ளுடைய இலட்சியத்தின் முதற்கொள்கை களை திராவிடர்கள் ஒருபோதும் முழுதும் ஏற்றுக் கொண்டதேயில்லை.

எதிர்ப்புக்கு ஆதாரம்

இரண்டு புகழ் வாய்ந்த இலக்கியங் கள் அந்த (ஆரிய) எதிர்ப்புணர்ச்சியை தெளிவாக விளக்குகின்றன. ஒன்று தமிழி லுள்ள கபிலர் அகவல்: மற்றொன்று தெலுங்கிலுள்ள வேமண்ணாவின் படைப்பு முறை ஆகும்.

வைணவ சீர்திருத்தக்காரரான ராமா னந்தரும் அவரைப் பின்பற்றிய மற்றவர் களும் மதத்துறையில் சகோதரத்துவம் வாய்ந்தது என்பதை வேகமாகப் பிர சாரம் செய்தார்கள் என்று நாம் முன்பே கண்டோம். ஆனால், சாதி முறையை எதிர்த்த திராவிடர்கள் பல நூற்றாண் டுகட்கு முன்பிருந்தே இந்தத் துறையில் பணியாற்றி வந்துள்ளனர். பவுத்தர் களையும், சமணர்களையும் போலவே அவர்களும் அஞ்சாமல் பார்ப்பனர் களுடைய சாதி முறையின் அமைப்பை மிக வன்மையாகக் கண்டித்தார்கள்.

தனிப்பட்ட முறையில் (வாதத்தில்) பதில் சொல்லும் முகத்தான் அவர்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதைப்போல் பாசாங்கு செய்யும் பார்ப்பனர்களையும் அதே நேரத்தில் தாழ்ந்த நிலையில் வாழ்ந்த அவர்களினத்தின் பெரும் பாலான பார்ப்பனர்களையும் ஒப் பிட்டுக் காட்டி நையாண்டி செய்து தங்களுடைய பல மான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவர்களுடைய சொற்கள் மக்களுடைய இதயங்களில் எதிரொலித்து வேமண்ணா வின் பெயரில் தற்போதுள்ள தெலுங்கு நாடோடிப் பாடல்கள் பெரிதும் மதிப்பு வாய்ந்தவை களாகத் திகழ்கின்றன. அக வல் முதல் தர தமிழ் நூலாகி இருக்கின்றது.

Read more: http://viduthalai.in/page3/76208.html#ixzz2ulNeiNap

தமிழ் ஓவியா said...


ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

மின்னஞ்சல் கணக்கு என்பது இணையத்தில் உலவும் அனைவருக்கும் மிக மிக அவசியமான ஒன்று.அதற்கு ஜிமெயில் நமக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பலவற்றின் அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதே ஜிமெயில் முழுவதையும் தமிழில் மாற்ற முடிந்தால்?
இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும்.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.
2. இப்போது “General” Tab இல் இருப்பீர்கள். இதன் முதல் வசதியாக “Language” என்பது இருக்கும்.
3. இப்போது அதில் “Gmail display language” என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள். அடுத்து “Would you also like to make Tamil you language for other google sites “ என்பதற்கு Yes or No கொடுத்து விட்டு Scroll செய்து கீழே வந்து Save Changes என்பதை கொடுத்து விடுங்கள்.
இனி ஜிமெயில் முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கு மாறிவிடும். ஆங்காங்கே மிகச் சில ஆங்கில சொற்கள் இருந்தால் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்துமே தமிழ் அல்லது ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வார்த்தையில் இருக்கும். என்னுடைய ஜிமெயில் பக்கம் கீழே படத்தில் உள்ளது.
இனி உங்களுக்கு எளிதாக ஜிமெயிலை நீங்கள் உபயோகிக்க முடியும்.
4. இல்லை நான் ஜிமெயிலை ஆங்கிலத்தில் பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் எனக்கு அதில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் அதற்கான வசதி உள்ளது.
5. மேலே Step – 2 இல் உள்ள படத்தில் “Show All Language Options” என்று உள்ளதல்லவா அதை கிளிக் செய்து, “Enable input tools” என்பதை கிளிக் செய்து செய்யுங்கள். இப்போது ஒரு சிறிய விண்டோ வந்து input tools என்ன இருக்கிறது என்று காட்டும். தமிழுக்கு மூன்று வகையான Tools உள்ளன.
இதில் Unicode முறை வேண்டும் என்பவர்கள் முதலாவதாக உள்ள “தமிழ்” என்பதை பயன்படுத்தவும். Inscript Keyboard பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் இரண்டாவதையும், போனெடிக் முறைக்கு மூன்றாவதையும் பயன்படுத்தலாம். முன்பு Unicode முறை மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இப்போது மற்ற இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கும் இது உதவும்.
இப்போது OK கொடுத்து பின்னர் Save Changes என்பதை கொடுத்து விடுங்கள்.
இப்போது உங்கள் புதிய மின்னஞ்சலில் தமிழில் தட்டச்சு செய்ய வலது மேல் புறம் Settings Icon க்கு அருகில் கீழே படத்தில் உள்ளது போல உள்ளத்தில் “த” என்பதை கிளிக் செய்து விட்டு தட்டச்சு செய்யலாம்.

அவ்வளவே. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
பேஸ்புக்கை தமிழில் பயன்படுத்த இதை பதிவை படிக்கவும் - Facebook- இதெல்லாம் கூட இருக்கா?
- பிரபு கிருஷ்ணா

Read more: http://viduthalai.in/page3/76207.html#ixzz2ulNoUSmy

தமிழ் ஓவியா said...


இங்கர்சால் பொன்மொழிகள்

உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம்

உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.

ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூபியாகவும் இருப்பது உண்மையே.

உண்மை ஆனந்தத்தின் தாய். உண்மை மக்களை நாகரிகப் படுத்துகிறது; உண்மை மக்கள் உள்ளத் திலே உன்னத லட்சியத்தைத் தோற்று விக்கிறது; மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.

உண்மையை அறிவதைவிட உயர்வான லட்சியம் மக்களுக்கு இல்லவே இல்லை.

நன்மை செய்வதற்கான அபார சக்தியை உண்மை மனிதனுக்குக் கொடுக்கிறது.

உண்மையே கட்கமும் (வாள்) கவசமும்.

உண்மையே ஜீவியத்தின் புனித ஒளி.

உண்மையைக் கண்டுபிடிக்கும் மனிதன் வாடா விளக்கு ஏற்று கிறான்.

பகுத்தறிவின் உதவியால் ஆராய்ச்சி செய்து, சோதனை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண் டும்.

அவரவர் ஆற்றலுக்கும், விருப் பத்துக்கும் தக்கபடி உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவருக்கும் வசதி அளிக்க வேண்டும்.

உலக இலக்கியங்களெல் லாம் மக்களுக்குப் பொது. அவற்றை எல்லோரும் படிக்க வசதியிருக்க வேண்டும்; எத்தகைய தடையும் இருத்தல் கூடாது.

சாமானிய மக்களால் அறிய முடியாதபடியான எந்த விஷயமும் அவ்வளவு உயர்வானதல்ல - புனித மானதல்ல.

நூல்களைச் சுயமாக வாசித்து அவரவருக்கு விருப்பமான முடிவுக்கு வர ஒவ்வொருவருக்கும் வசதியும் சுதந்தரமும் அளிக்க வேண்டும்.

அவனவனுக்குத் தோன்றும் உண்மையான அபிப்பிராயங்களை வெளியிடவும் தடையேற்படுத்தக் கூடாது.


Read more: http://viduthalai.in/page4/76210.html#ixzz2ulO2RNVD

தமிழ் ஓவியா said...


மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்


மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல் லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.

இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.

உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து வாக்கவில்லை.

இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம் செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து, புகுந்து தீர்ப்பை ஏற்கிறது (ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.

இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.

மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை செய்வான்?

ஆனதினாலேயே கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?

செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து விடுகின்றன.

ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி புல், பூண்டுகளுக்கும் உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.

Read more: http://viduthalai.in/page4/76212.html#ixzz2ulOMQrGH

தமிழ் ஓவியா said...


சோதிடம்பற்றி கிருபளானி

இங்கு ஜனநாயகமும் இல்லை. சோஷலிசமும் இல்லை. எனக்குத் தெரியும், ஒவ்வொரு மந்திரியும் ஜோதிடரிடம் சென்று ஆலோசிக்கத் தவறுவதே இல்லை. அவர்கள் (அமைச்சர்கள்) உடுத்தும் துணியின் நிறங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட ஜோஸ்யர்கள் தீர்மானிக்கிறார்கள்! இத்தகையவர்கள் சோஷலிசம் என்றும், ஜன நாயகம் என்றும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய உள்ளங்கள், பெரிய வார்த்தைகள் என்ற ரகத்தில்தான் இவர்கள் சேர்க்கப்பட வேண்டியவர் களாவார்கள். - ஜே.பி. கிருபளானி

Read more: http://viduthalai.in/page4/76213.html#ixzz2ulOaLXJp

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி நாகரிகம்



உலகின் பண்டைய நாகரிகங்களுள் சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இந்நாகரிகத்தின் சிறப்பு, அம்மக்கள் பிறரிடம் கொண்டிருந்த வணிகத் தொடர்பு, கட்டடக் கலையில் அவர்களின் நுண்கலையறிவு, உற்பத் தித்திறன் மற்றும் அந்நாகரிகத்தின் பரப்பு போன்ற பலவும் வியக்கத்தக்க வகையில் இருந்தன. இவற்றை அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுச் சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். இச்சிறப்பின் காரண மாக வரலாறு, தொல்லியல், மானுடவி யல், மொழியியல், கணிதவியல், புள்ளி யியல் வானவியல், கணினி அறிவியல், கட்டடக் கலை என பல்துறைசார்ந்த அறிஞர்களும் இத்துறையில் ஈடுபட் டுள்ளனர்.

இப்பெரும் நாகரிகத்தின் வீழ்ச்சிக் கான காரணம் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையில் உள்ளன. அதே போன்று சிந்துவெளி எழுத்துக் களும் முழுமையாகப் படிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இவ்விரு கார ணங்களும் ஆய்வாளர்களின் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. ஆகையால் அவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு இடங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிந்துவெளி நாகரிகம் அழியாமல் இன்றுவரை நம்மிடையே நீடித்திருக் கிறது என்பதற்குப் பல சான்றுகள் உள் ளன. உதாரணமாக அவை நடை முறை யில் தொன்மக் கதைகளாகக் குறியீட்டு வடிவில் காணப்படுகின்றன. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி, பண்டைய திராவிட மொழி என்பதற்கான நம்பத் தகுந்த சான்றுகள் உள்ளன. சிந்து வெளிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து அய்ராவதம் மகா தேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வறிஞர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளனர். மேலும் இவ் விரண்டு நிலப் பரப்பிற்குமான பண் பாட்டுத் தொடர்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இத்தொடர்புகளை அடையாளம் கண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சின்னத் தில் சிந்து வெளிக் கூறுகளை இணைத் துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பையும் பண்டைய நாகரிகங்களான திராவிட நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே உள்ள பண்பாடு மற்றும் மொழியியல் தொடர் பையும் இக்கண்காட்சி மூலம் காட்டுவ தற்கான வாய்ப்பை நல்கியுள்ளது.

Read more: http://viduthalai.in/page5/76214.html#ixzz2ulOormdp

தமிழ் ஓவியா said...


வயிறு நிரம்புமா?


மகாவிஷ்ணு மீது அளவற்ற பக்தி கொண்ட பிருகு முனிவருக்கு ஓர் ஆவல். எப்படியாவது லிங்க வடிவில் சிவ-சக்தியைத் தரிசிக்க வேண்டும். எனவே அத்திரிமலைக்கு வந்து தவம் புரிந்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவன் அவர் முன்பு தோன்றினார். சிவபெருமானை தாங்களும் அம்மையும் ஒன்றாகத் தோன்ற வேண்டும். தங்களை வணங்கும் எங்களுக்கு அஷ்டமா சித்திகளும் அருள வேண்டும்! என்று கேட்டுக் கொண்டார் பிருகு முனிவர். என்ன ஆச்சரியம் அவர் கேட்ட உடனேயே சிவபெருமானுடன் ஆறு பட்டைகள் கொண்ட லிங்கத் திருமேனியாக சிவசக்தி சொரூபமாக காட்சி அளித்தார். அய்யனே எனக்கு அருள் புரிந்தது போலவே இம்மலைக்கு வரும் அனைவருக்கும் இதே கோலத்தில் அருள் வழங்க வேண்டும் (தினகரன் வார இதழ்: 25.1.2014)

பிருகு முனிவர் மகாவிஷ்ணு மீது அள வற்ற பக்தி கொண்டவர். சிவ சக்தியை லிங்க வடிவத்தில் காண விரும்பியது ஏன்? லிங்க வடிவம் என்பது அம்மணமாக பார்க்க விழைந்தது ஏன்? கேட்டவுடன் காட்சி அளித்தார் ஆனால் எத்தனை பக்தர்கள் வேண்டுகிறார்கள்? ஏன் நாளது வரை காட்சி தரவில்லை? காட்சி தந்தாலே வயிறு நிரம்புமா? பிரச்சினைகள் தீருமா? பிருகு முனிவருக்கு பிறகு யாருக்கும் 2000 நூற்றாண்டுவரை காட்சி தரவில்லையே ஏன்? சிவபெருமான் இருக்கிறாரா இல் லையா? இதை விளம்பரம் செய்யும் முன் சற்றாவது கவனம் பெறல் வேண்டும். உண்மைத் தன்மை அறியாமல் பணத் திற்காக பதிப்பு தரலாமா?
- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page5/76215.html#ixzz2ulOyhgIj

தமிழ் ஓவியா said...


குடிஅரசு இதழிலிருந்து

சமஸ்கிருதம் உயிருள்ளதா?

இந்தி மொழி கட்டாயப் பாடமாக திராவிட நாட்டில், காங்கிரஸ் (ஆரிய) மந்திரிகளால் புகுத்தப்பட்ட காலையில், இந்தி ஆரிய வர்க்க மொழியென்றும், அம்மொழி கட்டாயப் பாடமாக சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுமேயாகில், திராவிடச் சிறுவர்கள், எதிர்காலத்தில், திராவிடக் கலை, நாகரிகம், பழக்கம் வழக்கம் ஆகியவைகளை மறந்து ஆரியத் திற்கே அடிமையாய் விடுவார்கள் என்றும், மக்களின் வாழ்க்கையைத் திருத்துவதற்கு ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு கல்வியைத் திருத்தியமைத்தால் போதும் என்றும், அதை இன்று ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கண்கூடாகப் பார்க்க லாம் என்றும் எனவே, இந்தி மொழி கட் டாயப்பாடமாக புகுத்தக்கூடாதென்று கூறி மறுத்து வந்தது எவ்வளவு உண்மை யானது என்பதை சமீப காலமாக இந் (திராவிட) நாட்டிலுள்ள ஆரிய வர்க்கத் தினர் சாஸ்திரிகளும், ஆச்சாரிகளும் பேசி வருவதும், அறிக்கைகள் விடுவதும் நன்கு விளங்கும்.

ஆரிய ஆதிக்கத்தை ஆரிய செல் வாக்கை இந்நாட்டை விட்டு விரட்டி யடிக்க, குழி தோண்டிப் புதைக்க திராவி டர்கள் விழிப்படைந்து விட்டார்கள், தூங்கினவன் தொடையில் கயிறு திரிப்பது இனி செல்லாது என்பதை உணர்ந்து தான் ஆரிய வர்க்கத்தார், அதை நிலைநிறுத்த வேறுவழி செய்தால் பலிக்காது என்று கருதி மொழியின் மூலமாக இஞ்சக்ஷன் செய்ய முனைந்திருக்கின்றனர்.

நாம் ஒன்று மிகைப்படுத்தியோ அல் லது அவர்களைப் போல் கற்பனை செய்தோ கூறுவதாக யாரும் கருத வேண்டிய தில்லை. நாம் சொல்வது எவ்வளவு ஆதார முடையதென்பது இந்நாட்டில் பத்திரி கைகள் படிப்போர்களுக்கு நன்கு தெரிய வரும்.
அவர்கள் ஒரு நாளும் நாம் சொல்வதை மறுக்க முன் வரார் என்றே கருதுகிறேன்.
(குடிஅரசு தொகுதி 29 - பக்கம் 68)

பார்ப்பனீயம் சுலபத்தில் சாகாது
தஞ்சை ஜில்லா திருவையாறு வட மொழிக் கல்லூரியில் மாணவர்களுக்கு அளிக்கும் இலவசச் சாப்பாட்டு விடுதியில் பார்ப்பனர்களுக்கு வேறு உண்ணல் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு உண்ணல் இடமும் இருந்து வந்தது.

தென் இந்திய ரயில்வே உண்டி நிலை யங்களில் இருந்து வந்த மேற் கண்டது போன்ற இடப்பிரிவு பெரியார் முயற்சியின் பயனாய் அகற்றப்பட்ட பின் தஞ்சை ஜில்லா போர்டாரும் திருவை யாற்றில் நீக்கி இரு பிரிவினரும் ஒன்றாய் இருந்து உணவருந்த வேண்டுமென்று கட்டளை இட்டனர். அதன்பின் பார்ப்பனர் கூப் பாடு போட்டனர்.

போர்டார் அதை சட்டை செய்யவே இல்லை. அதன்பின் பார்ப்பனர் மகாகனம் சாஸ்திரியார் உள்பட சர்க்காரிடமும் தூது சென்றனர்.

(குடிஅரசு தொகுதி 30 - பக்கம் 64)

தமிழர்களின் புத்தாண்டு

தமிழர்களின் புத்தாண்டு நல்ல அறி குறிகளோடு காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் தை பிறப் பதும், பொங்கல் வைப்பதும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடியனதாம் என்றா லும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரிய இருளில் சிக்கித் தவித்துத் தன்னிலை மறந்து தாசி மக்களாய் - வேசி மக்களாய் வாழ்ந்த தமிழினம், அவ்விழிவைத் துடைத் துத் தம் மானிடத் தன்மையைப் பேணி, நல் வாழ்வு வாழ்வதற்கான ஊன்று கோலைப் பெறுவதற்கு வழி பிறக்க வில்லை.

இந்தப் புத்தாண்டைக் கருவியாகக் கொண்டு தந்தை பெரியாரவர்களால் தமிழ் மக்களுக்கு ஊன்று கோல் கொடுக்கப்பட் டிருக்கிறது என்பதைத்தான் நாம் நல்ல அறிகுறி என்கிறோம்.
ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் -

ஏமாறப் பிறந்தவன் தமிழன்
என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துக் கொண்டிருப்பதை நடைமுறையில் வற் புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவை
அதாவது தமிழனுக்கு உரியது,
பெருமைதரக்கூடியது
எதெது உண்டோ,
அதெல்லாவற்றையும் உருவை மாற்றி பெயரை மாற்றிச்
சமஸ்கிருதக் கலப்பை -

ஆரியக் கலப்பையுடையது போல ஆக்கி விட்டார்கள் பார்ப்பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக் கொண்டது.

பொங்கல் சங்கராந்தியாக ஆனது. சங்கராந்தியன்று பொங்கல்தான்!

தமிழன் பெருமை கொள்ளக்கூடிய ஒரே ஒரு பெருநாள், உழைப்பை உயர்வுபடுத்தும் நாள் பொங்கல் நாள்! (குடிஅரசு தொகுதி 41 - பக்கம் 21)

- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page7/76222.html#ixzz2ulPJeIQP

தமிழ் ஓவியா said...


மூக்கின் வழி மூடநம்பிக்கை


அது ஒரு வைதீகத் திருமணம், நட்புக் காக தோழர் ஒருவருடன் சென்றிருந்தோம். நிகழ்ச்சியுடன் ஒன்றிய புகை மூட்டமும் எழுந்தது. கெட்டி மேளம் கொட்டும் வேளை வந்தது. உடன் வந்த தோழர் விர் என்று எழுந்து வெளியே சென்றார். மாங்கல்யம் கட்டி முடித்த பிறகு வந்தார். என்ன அப்படி அவசரம்? என்றேன், தும்மல் வந்தது, தாலி கட்டும் நேரத்தில் தும்மல் எற்பட்டு திருமண வீட்டார் என்னை முகம் திரிந்து நோக் குவரே என்ற அச்சத்தினால் வெளியே சென்றேன் என்றார். புகைச்சல் நெடி, என்ன செய்வது! என்றார். மூட நம்பிக்கை முகாமிட்டிருக்கும் இடத்தில் பண்போடு நடந்து கொண்ட நண்பரைப் பாராட்டினேன். இந்த தும்மலைப்பற்றி சில கருத்தோட்டம், உடலில் ஏற்படும் சளி, தூசு, காற்று போன்ற பல காரணங்களி னால் தும்மல் ஏற்படுவது இயற்கை. எங்கள் வீட்டில் எவரேனும் தும்மினால், என் பாட்டி நூறுவயது என்று உடனே சொல்வார். காரணம் பற்றி சிந்தித்த தில்லை, இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

மேலை நாட்டு மக்களிடையேகூட இதைப் போன்ற பழக்கம் இருந்து வருகிறது. அனைத்தும் பழக்கத்திலிருந்து வரும் மூட நம்பிக்கையே. மேலை நாட் டில் ஒருவர் தும்மினால் ஆசிர்வதிக் கிறேன் ஙிறீமீ சீஷீ என்று பக்கத்தில் இருப்பவர் கூறுவதுண்டு, காரணம்? ஒருவர் தும்மும் போது மூச்சின் வழியாக அவரின் ஆவி - உயிர் வெளிவந்து இறப்பை ஏற்படுத்தும். இந்த இறப்பைத் தடுக்க கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டி, மூக்கின் வழி உயிர் வெளியேறுவதைத் தடை செய்வதே நோக்கம், ஒரு மூடநம்பிக்கை.

பாட்டியின், நூறு வயது என்பது பெயரனுக்கு வாழ்த்து கூறும் வகையில் அமைவதாக உள்ளது என்பதாக எடுத்துக் கொள்வோம்.
- மு.வி. சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page7/76225.html#ixzz2ulPTx4Oy

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைச் சுடர் மொழிகள்

1. அறிவைக் கொடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப்படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
ஐயம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்.
ஔவை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.

2. கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக் காதே!
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்வி லகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்.
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதி லகற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவலமாக்கும்.

3. சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்வைக் கைக்கொள்வாயே.
சீற்ற மொழிந்தால் ஏற்றமுறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்ற றிந்து கொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கமென்பது தட்டிப் பறிப்பதே.
சோதிட மகற்றின் நீ திடம் பெறலாம்.

4. தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியில்லை
திருவிழா மனிதரைத் தெருவில் விடுவதே.
தீர்த்தமென்று நீ திரிந்தலையாதே
துக்க மென்பதை இக்கண மகற்று
தூய மனத்தால் தீயவை அகற்று
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.

Read more: http://viduthalai.in/page7/76224.html#ixzz2ulPfzstv

தமிழ் ஓவியா said...


சிவனே! உனக்கு ரோஷமுண்டா?

ஏ! சிவனே! நீ அருளிய தமிழ் என்கிறார்கள் பண் டிதர் முதல் பாமரர் ஈறாக. இன்று உன் தமிழுக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள். ஊரை ஏய்க்கும் பார்ப்பனர் கள். நீ என்ன செய்கிறாய்? எங்கோ ஓர் உலகத்தில் இருப் பதாகச் சொல் லுகிறார்கள். உன் பக்தர்கள், விலாசம் தெரிந்தாலும் இங்கு நடை பெறும் அக்கிரமத்தைக் குறித்து உனக்கு அடிக்கடிக் கடிதமாவது எழுதுவேன். பரவாயில்லை, நீ திரிகால ஞானி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இதையும் நீ அறிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையோடு இந்தப் பத்திரிகை மூலமாகவே எழுதத் தொடங்குகிறேன்.

இந்தத் தமிழ்நாட்டு மக்களிடம் எப் படியோ அக்காலத்தில் மதிப்புப் பெற்று விட்டாய்! ஆனால் பார்ப்பனர் மட்டும் உனக்குச் சிறிது மதிப்புக் கொடுத்தார்கள். வேறொரு காரணத்தை உத்தேசித்து! அப்பார்ப்பனரும், அவர் வால் பிடிக்கும் தமிழரும் இன்று உன் வார்த்தையை ஒரு செல்லாக் காசுக்குக்கூட மதிக்கவில்லை. நீ அருளிய மொழி இரண்டாம் ஒன்று ஆரியமாம்; மற்றொன்று தமிழாம். அந்தத் தமிழுக்கு வாய்த்த கதியை அறிந்தாயா? உன் ஒரு கண்ணை அடியோடு நோண்டி எடுப்பதுபோல் அத்தமிழை அடியோடு கல்லி ஏறிய முயற்சித்து விட்டார்கள். உன்னிடம் கொஞ்சமாவது மதிப்பிருந் தால் - பயபக்தி இருந்தால் அந்தத் திமிர் கொண்ட பார்ப்பனர் உன் ஒரு கண்ணை நொள்ளையாக்க முயல்வார்களா?

அவர்கள்தாம் அப்படிச் செய்தாலும் நீதான் காட்டிக் கொண்டிருக்கலாமா? எல்லாம் நீ என்கிறார்கள். ஒரு சமயம் நீ இப்பொழுது சூடு சொர் ணையற்ற எருமை மாடாக இருக்கிறாயா? அகத்தியன் தான் நீ சொனன தமிழை வளர்த்தானாம், அவனை யும் மண்ணோடு மண்ணாக மாளச் செய்து விட்டாயாம்! பிறகு சங்கங் கண்டு புல வர்கள் வளர்த்தார்களாம். அக்காலத்தில் நீயும் இடை யிடையே மாற்றுருக் கொண்டு வந்து தமிழை வளர்த்தாயாம் தமிழுக்கு ஆபத்து வந்த இச்சமயத்தில் நீ என்ன செய்து கொண்டி ருக்கிறாய்? ஒரு சமயம் கங்காதேவியின் காதலில் கட்டுண்டு கிடக் கிறாயா? அல் லது பார்வதிதேவியோடு களியாட்டம் ஆடுகின்றாயா?

எனக்கு ஒரு சந்தேகம் உனது பிரதி பிம்பம் என்று சொல்லுகிறார்களே இங் குள்ள விக்கிரகங்களை, அவை முன் னெல்லாம் பேசினவாம். இப்போது என்ன செய்தாலும் சொரணையற்றுக் கிடக் கின்றன. அதனால் நீயும் ஒரு சமயம் மாண்டு போய் விட்டாயோ? இல்லை இல்லை. நீ என்றும் அழியாதவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியா னால் நீ என்னதான் பண்ணிக் கொண்டி ருக்கிறாய்? பார்ப்பனர் செய்யும் படுமோ சத்தைக் கண்டும் நீ வாளா விருப்பதேன்? மானம், ஈனம், ரோஷம் என்கிறார்களே அவை உன்னைவிட்டு அகன்றுவிட் டனவா? அப்படிக்கின்றி உனக்கு ரோஷ மிருக்கிறதென்றால் உன் தமிழைக் காப் பாற்ற ஓடிவா! அல்லாவிட்டால் உன் எதிரில் ஆடிக் கொண்டிருக்கிறாளாமே அவளை அனுப்பி உன் தமிழை அழிக்கும் கூட்டத்தாருக்கும் ஆளுக்கு ஒரு கரண்டி எண்ணெய் கொடுத்து விட்டுப் போகச் சொல்!

- சிவப்பிழம்பு

Read more: http://viduthalai.in/page8/76227.html#ixzz2ulPs8BAq

தமிழ் ஓவியா said...


புற்றுநோய்க்கு மருந்தாகும் தாய்ப்பால்


சிசுக்களுக்கு ஊட்டச்சத்தாக விளங் கும் தாய்ப்பால் புற்றுநோய்க்கு எதிரியாக விளங்கக்கூடும் என்று ஒரு ஆய்வு கூறு கிறது. மனித முலைப்பாலில் காணப் படும் லாக்டாப்டின் என்ற புரோட்டின் புற்று நோயைக் குணப்படுத்தக்கூடும் என்று மேலாண்டின் விளாசோவ்ஸ் என்ற புரோட்டின் புற்று நோயைக் குணப்படுத் தக்கூடும் என்று வேலண்டின் விளா சோவ்ஸ் தலைமையிலான குழு நடத் திய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுகள் சைபீரியா மருத்து வக்கழகத்தில் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் லாக்டாப்பின் ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. பலவகை புற்று நோய்களில் சோதிக்கப்பட்டதில் ஈரல் மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்கு இது சிறப்பாகச் செயல்படுவதாக அறியப் பட்டுளளது. தாய்ப்பாலை ஆராய்ந்த போது ஒரு குறிப்பிட்ட புரதக்குறை கண்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. அந்த புரதக்கூறு புற்றுநோய் செல்களை பாதிக் காமல் இருப்பதையும் காணமுடிந்தது என்றும் இந்த கண்டுபிடிப்பு அனைத்து வகையான சோதனைகளுக்கும் ஆளாக் கப்படும் என்று வேலண்டைன் விளா சோவ்ஸ் கூறுகிறது. முலைப்பால் குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கூட்டுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைக்கு ஏற்படும் தொற்றுகளை எதிர்ப்பதுடன் நெடுநாள் வியாதிகள் தாக்காமலும் தாய்ப்பால் பார்த்துக் கொள்ளுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப் பால் ஊட்டுவதன் மூலம் தாயாரும் உடல்நலம் பெறுகிறார். மார்பக புற்று, கருப்பைப் புற்று ஆகியவை தாக்கும் வாய்ப்புகள் குறைகின்றன.

- அறிவியல் ஒளி - ஜனவரி 2014 - பக்கம் 18

Read more: http://viduthalai.in/page8/76228.html#ixzz2ulQ20pAX

தமிழ் ஓவியா said...


தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் சிந்திக்குமா?

இன்றைக்கு 16 ஆண்டு களுக்கு முன் குமுதம் வார இதழில் (2.7.1998) ஒரு சுவை யான அம்சம்.

ஒரு கைரேகை படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த ரேகைக்கு உரியவர் எப் படிப்பட்டவர்? என்ற கேள் வியை எழுப்பி- அடுத்த வாரம் காண்க என்ற அறிவிப்பும் இருந்தது. நான்கு பிரபலமான சோதிடர்களிடம் அந்தக் கைரேகையும் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு சோதிடரும் ஒவ்வொரு வகையில் தங்கள் கை வரிசையைக் காட்டினர்.

ஒருவர் சொன்னார். இவர் கையில் உள்ளதைக் கொடுக்கக் கூடியவர்; கைநீட்டிக் கேட்க மாட்டார் - வைராக்கியமான ஆள் என்று கூறியிருந்தார். இப்படி நான்கு சோதிடர்களும் வெவ்வேறு வகையில் ஜாதகம் கணித்தனர்.

கடைசியில் குமுதம் இதழே உண்மைக் குட்டை உடைத்து விட்டது.

அந்தக் கைரேகைக்கு உண்மையிலே சொந்தக் காரர் யார் தெரியுமா? குமுதம் தான் வெளியிட்டது.

பிச்சைக்காரர் ஒருவரின் கைரேகை அது; எந்த ஒரு சோதிடரும் அது பிச்சைக்காரரின் ரேகை என்று சொல்லவில்லை. கை நீட்டி வாங்க மாட்டார் என்றாரே ஒரு சோதிடர் - உண்மை என்னவென்றால் அதற்கு நேர் எதிராக கைநீட்டி வாங்கக் கூடிய பிச்சைக்காரர் அவர்! இப்பொழுது நினைத்தாலும் விலா நோகச் சிரிப்பை வரவழைக்க கூடியது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் சொல்லிக் கொடுக்கப் போவதாக அறிவிக் கப்பட்டுள்ளதே

அதில் கைரேகை சோதிடம், கிளிசோதிடம், தாயம் உருட்டும் சோதிடம் போன்ற வகையறாக் களும் இடம் பெறுமா?

மக்களின் வாழ்க்கைக் கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர் காலத்தைக் கணிக்க முடி யும் என்றும் கூறப்படுவ தற்கு எந்தவிதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.

சோதிடம் பொது மக்களிடையே மூடத் தனத்தை வளர்த்துப் பகுத்தறிவைப் பாழாக்கு கிறது. இந்தச் சோதிடத்தில் ஏமாற்றுக்கு எதிர் காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டு தி ஹுமனிஸ்ட் ஏட்டின் சிறப்பி தழிலே அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுள் 18 பேர் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (தினமணி 4.9.1975)

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் திருந்துமா? சோதிடப் பாடத் திட்டத்தைக் கைவிடுமா? எங்கே பார்ப்போம்!

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/76239.html#ixzz2urAjO6e0

தமிழ் ஓவியா said...


அலைப்பேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?


சென்னை.மார்ச்.2- அலைப்பேசி பயன்படுத்து வோருக்கு வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகின்றது என்பதை அறிய வேண்டும் என்றால் ஏற்கெனவே அலைப்பேசியின் தொடர் புகள் பட்டியலில் பெயர் பதிவு செய்திருந்தால் அழைப் பவர் பெயர் திரையில் தெரியும். பதிவு இல்லாமல் இருந்தால் வெறுமனே அழைப்பவரின் எண் மட்டுமே தெரியும்.

அலைபேசியைப் பயன் படுத்துவோர் ட்ரூ காலர் (True Caller) என்கிற அழைப் பவர்களின் பெயரைக் காட் டும் நவீன வசதியை தர விறக்கம் செய்துகொண் டால் வரும் அழைப்பாளர் களின் பெயர், அவர் அலைப் பேசியில் இல்லாவிட்டா லும் திரையில் அழைப்ப வர் பெயர் தெரியும்.

இது தான் ட்ரூ காலர் வசதி ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் பழக்கங்களுக்கு ஏற்ப மாற்றுப்பெயர் கொடுத்து பதிவு செய் திருப்பார்கள். அப்படி தனிப்பட்ட விஷய மாக உள்ள அனைத்தும் பொதுப் படை ஆகிவிடும் நிலை ட்ரூ காலர் மூலம் ஏற்பட்டு விடும். ஒருவர் தம்முடைய அலைப்பேசி யில் பெயர் பதிவு இல்லாத வர் அழைக் கும்போது புரிந்து கொள்ள முடியாமலும் திண் டாடும் நிலையும் ஏற்படுகிறது.

இதில், தனிப்பட்ட முறையில் உள்ளவை பொது வாகும்போது செல்லப் பெயர், புனைப்பெயர் என்று இருப்பவை பொது வாகி விடுவதால் தனிப்பட் டவர்களின் தனிமை, சுதந் திரம் அபகரித்துப் பறிபோ கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76237.html#ixzz2urBJrr6n

தமிழ் ஓவியா said...


சாக்லெட் சாப்பிடுவீர்!

லண்டன், மார்ச் 2- டார்க் சாக்லெட்டுகள் சாப் பிடுவது இதயத்தின் ஆரோக் கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந் துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றம் நுண்ணூட் டக் கழகம் மற்றும் வாகெ னிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் இது தொடர்பான ஆய்வில் ஈடு பட்டனர். அதில், டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரிய வந்தது.

டார்க் சாக்லெட்டு களைச் சாப்பிடுவது, தமனி களின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத் தத்தின் வெள்ளை அணுக் கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது,

தமனிகளின் விரைப்புத் தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும் தன் மையும் தமனி வீக்கத்துக் குக் காரணமாக அமை கின்றன. இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆய்வில் ஈடுபட்ட டைடெரிக் எஸ்ஸெர் கூறி யதாவது: டார்க் சாக்லெட் டுகளில் உள்ள பிளாவனல் கள் உணவு அருந்தும் தூண் டலை நிறுத்துகின்றன. இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கிய மானவைதான் என்றார்.

நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண் டனர். அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற் கண்ட முடிவுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/76238.html#ixzz2urBWgwIi

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவில் நாத்திகர் என்பதால் மறுப்பா!

சாண்டியாகோ, மார்ச்.2- கலிபோர்னியாவில் வசிக் கும் பெண்மணி ஒருவ ருக்கு அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்தில் சான்றளிக்கும் அலு வலர்கள் அப்பெண்மணி நாத்திகர் என்பதால் குடி உரிமைச் சான்று அளிக்க மறுத்துள்ளனர். இச்சம் பவம் மனித உரிமை அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்ரியானா ரேமிரேஸ் என்பவர் தன்னை ஒரு மத மறுப்பாளராக குடிஉரிமை கோரும் படிவத்தில் குறிப் பிட்டுள்ளார். இதனால், மதமறுப்பாளரான அவர் அமெரிக்காவின் பாதுகாப் புக்காக சட்டப்படி ஆயுதம் ஏந்த மறுத்துள்ளார் என்று கூறி, அவர் குடி உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க மனித நேய அமைப்பு தன்னை இவ்வழக்கில் இணைத்துக்கொண்டு அப் பெண்மணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளது.

அமெரிக்க குடி உரிமை சான்று கோரும் படிவத்தில் நாட்டுக்காக ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தால் அதற் கான உறுதியை அளிக்க வேண்டும் என்று உள்ளதாம். ஒரு பெண்ணாக வயது 30களின் மத்தியில்தான் ஆயுதம் ஏந்தி ஒருவரைக் கொல்வதை எதிர்த்து வந் துள்ளதாகவும், க்யூ 36-38 வரையில் படிவத்தில் வெறுமனே ஆம் என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால், நீதியை, மனி தரைக் கொல்வதை மிகக் கடுமையாக எதிர்த்து வந் துள்ளேன். அப்படி இருக் கும்போது அதுபோன்ற உறுதியை தன்னால் அளிக்க முடியாது என்று நீதிமன்றத் தில் விளக்கமாகத் தெரிவித் துள்ளார். இந்நிலையில் அமெ ரிக்க மனித நேய அமைப்பு இவ்வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்துள்ளது.

அப் பெண்மணி மதமறுப் பாளர், மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர் என்ப தால் குடி உரிமை மறுப்பது அரசமைப்புக்கு எதி ரானது என்றும் அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்திற்கு ஏ.எச்.ஏ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76235.html#ixzz2urByKjMM

தமிழ் ஓவியா said...


அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!

ஜெனிவா, மார்ச் 2- அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்குகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார, மொழி, மத ரீதியாக சம உரிமை வழங் கப்படவில்லை. ஆகவே தமிழர்கள் தனி நாடு கேட்டு போராடத் தொடங்கினார் கள். இதில், முன்னணியில் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். இவர்கள் தமிழர் களுக்காக தனியாக ஒரு அர சாங்கத்தையே நடத்தி வந்தார் கள். ஆனால், இவர்களை பயங்கரவாதிகள் என இலங்கை அரசு முத்திரை குத்தியது.

பிற நாடுகளிலும் இதைப் பரப்பியது. அதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய கண் டத்து நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தன.

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி, தகர்த்தனர். இந்த சம்பவத் திற்கு பிறகு அரசாங்கத் திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெரும்பாலான இயக்கங்களை அமெரிக் காவும், பிற மேலை நாடு களும் தீவிரவாத இயக்கங் களாக பார்க்கத் தொடங்கின. அதன் விளைவாகத்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தடை விதிக்கப் பட்டது.

நிதி திரட்டவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வேண் டும் என அய்ரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண் டுள்ளது. புலிகளுக்கு எதி ரான தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வரு கின்றது. இதுபற்றி விரை வில் உத்தரவு பிறப்பிக்கப் பட உள்ளது.

இத்தாலி நீதிமன்றமும்...

இதே போல் இத்தாலி நீதிமன்றமும் விடுதலைப் புலிகளை, ஒருவிடுதலை இயக்கத்தினராக அறிவித் துள்ளது. இத்தாலி நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நேப் போலி என்ற நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த நீதிமன்றம், கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

விடுதலைப்புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக் காகப் போராடி வந்துள் ளார்கள். அவர்கள் தனி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி ஆட்சியை நடத்தி வந்துள் ளார்கள்.

கல்வி, நிதி, நீதி, காவல் உள்ளிட்ட அனைத்துத் துறை களையும் நடத்தி வந்துள் ளனர். ஆகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாம் ஜெனிவா சாசனப்படி, ஒரு விடுதலை இயக்கமாகவே கருத வேண்டும்.

பயங்கரவாதிகளாக பார்க்க முடியாது. ஆகவே இத்தாலி தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள்மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் விசாரித்தார்கள்.

இவர்கள் நேப்போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே, இத்தாலி நாட்டி லும் விடுதலைப்புலிகளுக் கான தடை நீங்கவுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/76234.html#ixzz2urC8INbF

தமிழ் ஓவியா said...

ஆனந்த சுதந்திரம்

சென்னை மாநகரில் உள்ள 57 மாநகராட்சிப் பள்ளி களில் 25 ஆயிரம் மாண வர்களுக்குக் குடிநீர்க் குழாய் 157 மட்டுமே உள்ளனவாம். 67 ஆண்டு சுதந்திரத்தில் மாணவர்களுக்கு குடிநீர் அளிப் பதில்கூட இந்த அவலம்! இதை விட வேறு குடி நீர் தான் நாட்டில் ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறதே!

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCMHxNf

தமிழ் ஓவியா said...

பா.ம.க.வின் பரிதாபம்

மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் மத்தியில் 5 ஆண்டுக் காலம் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சாதித்தவை பற்றி (சாதனை மனிதன் அன்புமணி ராமதாஸ் - பக்கம் 28) ஒரு பிரசுரம் வெளியிடப்படுகிறதாம் - வெளி யிடுபவர் யார் தெரியுமா?

கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அடையாளங் காட்டப்படுபவரும், ஆர்.எஸ்.எஸ். ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்திதான் அவர்! பெரியாரை யும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டே ஜாதி வாதத்தையும், மதவாத ஆர். எஸ்.எசையும் இணைத்தும் இரட் டைக் குதிரையின்மீது ஒரே நேரத்தில் வேறு யாரால்தான் சவாரி செய்ய முடியும்?

Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCWYRIV

தமிழ் ஓவியா said...

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தி.க. நிலைப்பாடு?

பதில்: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பல கட்சிகள் கூட்டணி பற்றிய தெளிவே இல்லாமல் இருக்கிறார்கள். திமுக கலைஞர் அவர்களுடைய ஆற்றல்மிகு தலைமையிலே மத சார்பற்றக் கூட்டணியை முற்போக்கு சிந்தனையோடு ஒத்த கருத்து உள்ளவர்களை அழைத்து திருச்சியில் திமுக மாநாடு நடத்தினார்கள். திருச்சியிலே கூடிய மாநாடு வரலாறு படைத்தது. தலைவர்கள் கொள்கைரீதியாக இந்த கூட்டணிக்கு வந்திருக்கிறார்கள்.

இன்றைக்குத் தேவை ஜாதியவாதமோ, மதவாதமோ அல்ல. மாறாக ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் ஜாதியற்ற, மதவெறியற்ற, மனித நேயம் இருக்கக்கூடிய கூட்டணியை உருவாக்கவேண்டும் என்பதுதான். மத்தியிலே தேர்தலுக்குப்பிறகு அமையக்கூடிய ஒரு ஆட்சி என்பது உண்மையாக அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடிய சமூகநீதியை மய்யமாகக் கொண்ட,

மனித நேய ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே திமுக தலைமையிலே கூட்டணி நிச்சயமாகக் கொள்கைக் கூட்டணி, தெளிவான இலட்சியத்தோடு, நல்ல அணுகுமுறையோடு அவர்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையிலே தாய்க்கழகமாய் இருக்கும் திராவிடர் கழகம் அவர்களை ஆதரிப்பது வெறும் ஆட்சிக்காக அல்ல, ஒரு சமுதாயத்தின் மீட்சிக்காக என்ற எண்ணத்தோடு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

- கரூர் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

Read more: http://viduthalai.in/page-8/76269.html#ixzz2urDdmjA6

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

கரூர் 01-03-2014 சனிக் கிழமை அன்று உலகத்தி லேயே அதிக உயரமான தந்தை பெரியார் பேருருவ வெண்கல சிலை திருச்சி சிறுகனூரில் வைக்க திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் கரூர் சுபாஜ் திடலில் தமிழர் தலைவரிடம் நிதிய ளிப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நிதியைப் பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அவ ரது உரையில்:-

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர் தனிச் சிந்த னையாளர் தந்தை பெரி யார், அவரது ஒப்புயர்வற்ற தொண்டு எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை மனி தனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக்கூடது என் றிருந்த ஜாதிக்கொடுமையை எதிர்த்து அதனை ஒழித்தார். சரசுவதி என்ற கடவுள் இருந்த இந்த நாட்டில் யாரும் படிக்கவில்லை, சூத்திரன் படித்தால் நாக்கை அறுத் தெறி என்ற நிலையை மாற்றி அனைவரையும் படிக்க வைத்தது திராவிடர் இயக்கம் ஜாதி வெறியை, மதவெறியை ஊட்டி மக்களை ஏமாற்றி வாக்குப்பெற மதவாத, ஜாதிய சக்திகள் முயல்கின் றன, மக்கள் ஏமாறக்கூடாது,

வருகின்ற தேர்தலைப் பற்றி நினைப்பதைவிட, வரு கின்ற தலைமுறையினரைப் பற்றி கவலைப்படுகின்ற இயக்கம், நம்பிக்கை என்ற மத அடிப்படையை வைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடைபோட்டு சேது சமுத் திரம் கூடாது அது ராமன் கட் டிய பாலம் என்று வளர்ச் சிக்கு முட்டுக்கட்டை போடு கிறவர்கள் யார்? 2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்ட சேது சமுத் திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவர்கள், எம்.ஜி. ஆருக்கு எதிராக, அவரது கொள்கைக்கு எதிராக செயல் படுகிறவர்கள் யார்? என் பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மயக்க பிஸ்கட்டு களுக்கு மக்கள் ஏமாறக் கூடாது என்று தமது உரையில் தமிழர் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/76269.html#ixzz2urDuwi5A